Jump to content

கடவுள் நம்பிக்கை


Recommended Posts

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்தியாவில் 93% மக்களுக்கு கடவுள் நம்பிக்கை!

ஜனவரி 25, 2007 கீகுகு

டெல்லி: இந்தியர்களிடம் கடவுள் நம்பிக்கை மிக அதிகமாக இருப்பதும், படிக்காதவர்களை விட படித்தவர்கள் மத்தியில்தான் கடவுள் நம்பிக்கை அதிகம் இருப்பதாகவும் கருத்துக் கணிப்பு ஒன்றில் தெரிய வந்துள்ளது.

சிஎன்என் ஐபிஎன் தொலைக்காட்சி, இந்துஸ்தான் டைம்ஸ் மற்றும் சிஎஸ்டிஎஸ் அமைப்பு ஆகியவை இணைந்து நடத்திய கருத்துக் கணிப்பில் இது தெரியவந்துள்ளது.

நாடு முழுவதும் 7,670 பேரிடம் கடவுள் நம்பிக்கை குறித்து கேட்கப்பட்டது. இந்த கணிப்பில் தெரிய வந்த முடிவுகள்:

கருத்துக் கணிப்பில் கலந்து கொண்டவர்களில் பெரும்பாலானவர்கள் கடவுள் நம்பிக்கை கொண்டவர்களாக உள்ளனர். அதிலும் படித்தவர்களும், நகரங்களில் வசிப்பவர்களும்தான் அதிக அளவில் கடவுள் நம்பிக்கையோடு இருக்கிறார்கள். பெண்களும், வயதானவர்களும் ஆண்களை விட அதிக அளவில் கடவுளை நம்புகின்றனர்.

இளைஞர்கள் மத்தியில் கடவுள், மதம் குறித்த ஆர்வம் குறைவாகவே உள்ளது. இருப்பினும் இது மிகவும் குறைவாக இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துக் கணிப்பில் கலந்து கொண்டவர்களில் 93 சதவீதம் பேருக்கு கடவுள் நம்பிக்கை உள்ளது.

கோவில்கள், சர்ச்சுகள், மசூதிகளுக்கு தவறாமல் செல்வதாக 64 சதவீதம் பேர் கருத்து தெரிவித்துள்ளனர்.

தினமும் பிரார்த்தனைகளில் தவறாமல் பங்கேற்பதாக 53 சதவீதம் பேர் தெரிவித்துள்ளனர். இவர்களில் பெரும்பாலானவர்கள் படித்தவர்கள்.

பேய், பிசாசு, பில்லி சூனியம் உள்ளிட்டவற்றில் நம்பிக்கை இருப்பதாக 46 சதவீதம் பேர் தெரிவித்துள்ளனர்.

24 சதவீதம் பேருக்கு ஜோசியம் மீது நம்பிக்கை உள்ளது.

தாங்கள் சாராத அடுத்த மதம் சார்ந்த விழாக்களில் பங்கேற்போம் என 68 சதவீதம் பேர் தெரிவித்துள்ளனர்.

மற்ற மதத்தினரை விட உயர் ஜாதி இந்துக்கள்தான் வெகு விரைவில் நவீன காலத்திற்கேற்ப மாறிக் கொள்கின்றனர் என்பதும் கருத்துக் கணிப்பில் தெரிய வந்துள்ளது.

கடவுள் நம்பிக்கை மக்களிடையே அதிக அளவில் இருப்பதற்கு இப்போதைய வாழ்க்கை முறையில் நிலவும் மன அழுத்தம், ஓய்வின்றி வேலை பார்ப்பது போன்றவைதான் முக்கிய காரணம் என கருத்துக் கணிப்பை நடத்திய யோகேந்திரா தலைமையிலான ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த கணிப்பில் தெரிய வந்த இன்னொரு இன்ட்ரஸ்டிங் விஷயம், மத சடங்குகளில் ஆதிவாசி மக்களிடையே ஆர்வம் குறைவாக இருப்பது தான். ஆதிவாசிகள் என்றாலே சடங்குகள் தான் என்ற கருத்து நம்மிடையே நிலவி வரும் நிலையில் கருத்துக் கணிப்பு புதிய விஷயத்தை வெளிக் கொண்டு வந்துள்ளது.

- thatstamil.com

Link to comment
Share on other sites

கடவுள் நம்பிக்கை இல்லாமல் பிறகென்ன?

மதங்களின் பெயரைச் சொல்லி அடிபடுவதற்கும், கோயிலுகள் இடிப்பதற்கும், அரசியல் செய்வதற்கும், உண்டியல் குலுக்குவதற்கும் , லட்டு கொடுப்பதற்கும், சுவாமி தரிசனம் கொடுப்பதற்கும் 93% இந்தியர்கள் கடவுள் நம்பிக்கையுடன் இருந்தால் தானே முடியும்?

இதற்கெல்லாம் ஒரு கருத்துக்கணிப்பு தேவைதானா?

ஏமாறுபவர்கள்(93%) இருக்கும்வரை ஏமாற்றிக் கொண்டிருப்பவர்கள்(7%) இருந்துகொண்டுதான் இருப்பார்கள்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியாவில் 93% மக்களுக்கு கடவுள் நம்பிக்கை!

ஜனவரி 25, 2007 கீகுகு

டெல்லி: இந்தியர்களிடம் கடவுள் நம்பிக்கை மிக அதிகமாக இருப்பதும், படிக்காதவர்களை விட படித்தவர்கள் மத்தியில்தான் கடவுள் நம்பிக்கை அதிகம் இருப்பதாகவும் கருத்துக் கணிப்பு ஒன்றில் தெரிய வந்துள்ளது.

சிஎன்என் ஐபிஎன் தொலைக்காட்சி, இந்துஸ்தான் டைம்ஸ் மற்றும் சிஎஸ்டிஎஸ் அமைப்பு ஆகியவை இணைந்து நடத்திய கருத்துக் கணிப்பில் இது தெரியவந்துள்ளது.

நாடு முழுவதும் 7,670 பேரிடம் கடவுள் நம்பிக்கை குறித்து கேட்கப்பட்டது. இந்த கணிப்பில் தெரிய வந்த முடிவுகள்:

கருத்துக் கணிப்பில் கலந்து கொண்டவர்களில் பெரும்பாலானவர்கள் கடவுள் நம்பிக்கை கொண்டவர்களாக உள்ளனர். அதிலும் படித்தவர்களும், நகரங்களில் வசிப்பவர்களும்தான் அதிக அளவில் கடவுள் நம்பிக்கையோடு இருக்கிறார்கள். பெண்களும், வயதானவர்களும் ஆண்களை விட அதிக அளவில் கடவுளை நம்புகின்றனர்.

இளைஞர்கள் மத்தியில் கடவுள், மதம் குறித்த ஆர்வம் குறைவாகவே உள்ளது. இருப்பினும் இது மிகவும் குறைவாக இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துக் கணிப்பில் கலந்து கொண்டவர்களில் 93 சதவீதம் பேருக்கு கடவுள் நம்பிக்கை உள்ளது.

கோவில்கள், சர்ச்சுகள், மசூதிகளுக்கு தவறாமல் செல்வதாக 64 சதவீதம் பேர் கருத்து தெரிவித்துள்ளனர்.

தினமும் பிரார்த்தனைகளில் தவறாமல் பங்கேற்பதாக 53 சதவீதம் பேர் தெரிவித்துள்ளனர். இவர்களில் பெரும்பாலானவர்கள் படித்தவர்கள்.

பேய், பிசாசு, பில்லி சூனியம் உள்ளிட்டவற்றில் நம்பிக்கை இருப்பதாக 46 சதவீதம் பேர் தெரிவித்துள்ளனர்.

24 சதவீதம் பேருக்கு ஜோசியம் மீது நம்பிக்கை உள்ளது.

தாங்கள் சாராத அடுத்த மதம் சார்ந்த விழாக்களில் பங்கேற்போம் என 68 சதவீதம் பேர் தெரிவித்துள்ளனர்.

மற்ற மதத்தினரை விட உயர் ஜாதி இந்துக்கள்தான் வெகு விரைவில் நவீன காலத்திற்கேற்ப மாறிக் கொள்கின்றனர் என்பதும் கருத்துக் கணிப்பில் தெரிய வந்துள்ளது.

கடவுள் நம்பிக்கை மக்களிடையே அதிக அளவில் இருப்பதற்கு இப்போதைய வாழ்க்கை முறையில் நிலவும் மன அழுத்தம், ஓய்வின்றி வேலை பார்ப்பது போன்றவைதான் முக்கிய காரணம் என கருத்துக் கணிப்பை நடத்திய யோகேந்திரா தலைமையிலான ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த கணிப்பில் தெரிய வந்த இன்னொரு இன்ட்ரஸ்டிங் விஷயம், மத சடங்குகளில் ஆதிவாசி மக்களிடையே ஆர்வம் குறைவாக இருப்பது தான். ஆதிவாசிகள் என்றாலே சடங்குகள் தான் என்ற கருத்து நம்மிடையே நிலவி வரும் நிலையில் கருத்துக் கணிப்பு புதிய விஷயத்தை வெளிக் கொண்டு வந்துள்ளது.

- thatstamil.com

ஐயா ஆதிவாசி இஞ்சை பாரும் உம்மடை பேருக்கு ஆப்பு வைக்கிறார்கள்.இது உமக்கு அவமானம்.உமது கவுரவத்துக்கு விழுக்காடு.நாளைக்கே கொடும்பாவி எரித்து போராட்டம் செய்வோம்.நானும் ஆதரவாக வாறன்.

Link to comment
Share on other sites

கடவுள் நம்பிக்கை இல்லாமல் பிறகென்ன?

மதங்களின் பெயரைச் சொல்லி அடிபடுவதற்கும், கோயிலுகள் இடிப்பதற்கும், அரசியல் செய்வதற்கும், உண்டியல் குலுக்குவதற்கும் , லட்டு கொடுப்பதற்கும், சுவாமி தரிசனம் கொடுப்பதற்கும் 93% இந்தியர்கள் கடவுள் நம்பிக்கையுடன் இருந்தால் தானே முடியும்?

இதற்கெல்லாம் ஒரு கருத்துக்கணிப்பு தேவைதானா?

ஏமாறுபவர்கள்(93%) இருக்கும்வரை ஏமாற்றிக் கொண்டிருப்பவர்கள்(7%) இருந்துகொண்டுதான் இருப்பார்கள்!

ஆம் நண்பரே. கடவுள் இல்லாவிட்டால் கூட வேறு எதையாவது வைத்தாவது அரசியல் செய்து பணம் பார்த்துவிடுவார்கள் இந்தியாவில். அது தான் வருத்தமான விஷயம். எங்கும் அரசியல், எதிலும் அரசியல் - விளையாட்டு, பாதுகாப்பு, கல்வி, திரையுலகம், கடவுள் என்று எதையும் விட்டுவைக்கவில்லை.

ஆனால் என் கருத்து இந்திய மக்கள்தொகைக்கு அவர்கள் எடுத்து கொண்ட sampling ratio தவறு என்பது தான்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • முதலிலேயே சொல்லிவிட்டார்தானே
    • நெடுக்காலபோவான், இவை நீங்களே எடுத்த படங்கள் என்று மட்டும் சொல்லிவிடாதீர்கள்.  கேடுகெட்ட சொறிலங்காவுக்குள் உங்களைப் போன்ற மானமுள்ள வீரப் புலம்பெயர்ந்த தமிழர் யாராவது கால் வைப்பார்களா ? நினைக்கவே கால் கூசுகிறது. 😂
    • 29 MAR, 2024 | 10:23 AM   காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அவசரமாக தேவைப்படும் அத்தியாவசியபொருட்கள் மற்றும் மனிதாபிமான உதவிகளை காசாவிற்குள் அனுமதிப்பது தொடர்பில் இஸ்ரேல் உடனடியாக செயற்படவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது.   காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது. https://www.virakesari.lk/article/179954
    • தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - கிட்ணண் செல்வராஜ் Published By: VISHNU   29 MAR, 2024 | 01:56 AM 1700 ரூபா எனும் வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணண் செல்வராஜ் தெரிவித்தார். சம்பள விவகாரம் தொடர்பில் பெருந்தோட்டத்  தொழிலாளர்களை தெளிவூட்டும் வகையில் இன்று வியாழக்கிழமை (28) ஹப்புத்தளை பிட்டரத்தமலையில் துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன. அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கம் இதனை ஏற்பாடு செய்திருந்தது.  இதன்போதே அகில இலங்கைத் தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணன் செல்வராஜ் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், “சம்பள நிர்ணய சபைக்கு 2000 ரூபா அடிப்படை சம்பளத்தை வழங்குவதற்கு ஏதுவான பிரேரணை கொண்டுசெல்லப்பட வேண்டும். அவ்வாறு கொண்டு செல்லும் பொழுது அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கமாகிய நாங்கள் முழுமையான ஆதரவினை தருவோம். அதைவிடுத்து 1700 ரூபாவுக்குள் தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை வரையறுக்கக் கூடாது. நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிக்கு ஒரு நாளைக்கு 1700 ரூபாவை சம்பளமாக வழங்கினால் போதுமா? அதுப்போல அரசியல்வாதிகளுக்கு நாட்சம்பளமாக 1700 ரூபா வழங்கினால் போதுமா?  அதனால் 1700 ரூபா என்ற வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு, தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்குவதற்கு ஏதுவான நடவடிக்கைகளை அரசாங்கமும், அரசாங்கத்தோடு தூணாகவிருக்கும் மலையகத்தின் பினாமி அமைச்சரும் தொழிற்சங்கத் தலைவர்களும் உடனடியாக முன்னெடுக்க வேண்டும்.” என்று மேலும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179943
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.