Jump to content

வளம் பெற ஐந்து வழிமுறைகள்


Recommended Posts

ஒரு தொழிலகம் மற்றும் வீடு உன்னதமான நிலையை அடைவதற்கு உதவும் ஐந்து அடிப்படை செய்கைகளை உள்ளடக்கிய ஐந்து ஜப்பானிய சொற்களால் விவரிக்கப்படுவதை ஐந்து 'எஸ்' என்கிறோம்.

செய்ரி- -     அப்புறப்படுத்துதல்செய்டன் -     ஒழுங்கு படுத்துதல்செய்சோ -     துப்புரவாக்குதல்செய்கெட்சு -     நிர்ணயித்தல்சிட்சுகே -     பயிற்சியும் கட்டுப்பாடும்சேப்டி - பாதுகாப்பு

இன்றைய கால கட்டத்தில் ஒவ்வொரு வீட்டிலும் மற்றும் தொழிற்சாலையிலும் பல்வேறு மாற்றங்களை சந்திக்க வேண்டியிருக்கின்றது. ஐந்து 'எஸ்' செயல்களை செய்வதற்கு எல்லா இடமும் பொருத்தமான இடமே. வாடிக்கையாளர்கள் திருப்தி அடைந்தால் மட்டுமே தொழிற்சாலை நிரந்தரமாக இயங்க முடியும் என்ற ஒரு கட்டாயமான சூழ்நிலை உருவாகி வருகிறது.தொழிற்சாலைகள் 2000-ம் ஆண்டுக்கு முன் தற்போது உள்ள போட்டியான நிலையை சந்திக்கவில்லை. தற்போதைய கால கட்டத்தில், மிக உயர்ந்த தரமான பொருட்களை குறைந்த விலையில் உரிய நேரத்தில் கொடுத்தால் மட்டுமே வாடிக்கையாளர்கள் முழுமையான திருப்தியை அடைய முடியும் என பல தொழிற்சாலைகள் உணரத் தொடங்கியிருக்கின்றன.தொடர்ச்சியான முன்னேற்றம் அடைய வேண்டுமென்றால் தொழிற்சாலைகளிலும், அலுவலகங்களிலும் மற்றும் வீட்டிலும் ஏற்படக்கடிய அனைத்து விரயங்களையும் முறையாகவும், தொடர்ச்சியாகவும் தவிர்க்க வேண்டும். இதற்கு ஊழியர்கள் மற்றும் வீட்டின் நபர்களிடம் முழுமையான ஈடுபாடு அவசியம் தேவை. பல வகையான விரயங்கள் ஒரு தொழிற்சாலையின் அல்லது வீட்டின் அன்றாட செயல்களில் நிகழ்கின்றன.ஆனால், பலரும் அதை பற்றி தெரிந்து கொள்வதில்லை. 24 மணி நேரத்தில், கால விரயமாக தேடுவதற்கு மட்டும் நாம் சராசரியாக 2 மணி நேரம் வீணாக்குகிறோம். அவற்றை குறைப்பதற்கு நாம் முயற்சிப்பது இல்லை. நமது செயல்களில் கால தாமதம் இல்லாமலும், பிழைகள் இல்லாமலும் பல செயல்கள் நடப்பதில்லை. கால தாமதத்தினாலும், பிழையுள்ள செயல்களாலும் அதிகமான பொருள் விரயம், மனித வள விரயம், பண விரயம், கால விரயம் போன்ற பல விரயங்கள் ஏற்படுகின்றன. இவற்றை தவிர்ப்பதற்கோ அல்லது குறைப்பதற்கோ உள்ள வழிமுறைகள் தான் ஐந்து 'எஸ்.' 

ஐந்து 'எஸ்' எப்பொழுது? 

'ஒன்றே செய்யினும் அதை நன்றே செய்கநன்றே செய்யினும் அதை இன்றே செய்க'நல்ல செயல்களை தொடங்க நாம் காலத்துக்காக காத்திருக்க வேண்டியதில்லை. இருந்தாலும் தொழிற்சாலையிலோ, அலுவலகத்திலோ அல்லது வீட்டிலோ கீழ்கண்ட அறிகுறிகள் அதிகமாக தோன்றினால் உடனே ஐந்து 'எஸ்' செயல்கள் தொடங்க வேண்டிய நேரம் வந்து விட்டது என்று முடிவு செய்யலாம்.

அப்புறப்படுத்துதல் : நாம் ஆண்டுதோறும் தைப்பொங்கலுக்கு முதல்நாள் போகிப்பண்டிகை அன்று ''பழையன கழிதலும் புதியன புகுதலும்'' என்ற பழக்கத்தை இன்றும் கடைபிடிக்கிறோம். நமது முன்னோர்கள் ஒரு வீட்டின் ஆரோக்கியமான சூழ்நிலைக்கு ஆண்டுக்கு ஒரு முறையாவது பழைய தேவையற்ற குப்பைகளை களைய வேண்டும் என்று, அதற்கென ஒரு விழாவை அமைத்து நல்ல பழக்கத்தை ஏற்படுத்தினார்கள்.தேவையற்ற பொருட்களை களைவதற்கும், தேவையுள்ளவைகளை சரியாக வைத்து கொள்வதற்கும் உறுதியான குறிக்கோள் நிர்ணயம் செய்து கொள்ள வேண்டும்.

ஒழுங்குபடுத்துதல் : 
'எப்பொருள் எத்தன்மை தாயினும் அப்பொருள்மெய்ப்பொருள் காண்பது அறிவு'தேவையுள்ள பொருட்களை தேவைக்கேற்ப வகைப்படுத்துவது முக்கியம். வீடுகளிலும், தொழிற்சாலைகளிலும் பொருட்களின் உபயோகத்திற்கு தகுந்தபடி, அடிக்கடி தேவையானவை, அவ்வப்போது தேவையானவை, எப்போதாவது தேவையானவை என்று வகைப்படுத்தலாம். வீட்டில் சமையலில் அடிக்கடி தேவைப்படும் பொருட்கள் வைக்கப்பட்டுள்ள அஞ்சறை பெட்டி, ஸ்டவ் அடுப்பின் அருகாமையில் இருக்கும். அவ்வப்போது உபயோகப்படும் செருப்புகளை வைப்பதற்கு தனியாக ஓர் இடம் ஒதுக்கி வைக்கப்பட்டிருக்கும்.எப்போதாவது தேவைப்படுகிற தட்டு, முட்டு சாமான்கள் அநேகமாக பரணில் வைக்கப்பட்டிருக்கும். ஒவ்வொரு பொருளுக்கும் உரிய ஓர் இடத்தை ஏற்படுத்தி வைக்கும்போது, பொருட்களை தேடி அலைவதினால் ஏற்படும் கால தாமதம் தவிர்க்கப்படுகின்றது. சரியான பொருட்களை சரியான நேரத்தில் பயன்படுத்துவதால் பொருட்களின் தரம் உயர்த்தப்பட்டு மனித விரயம், பொருள் விரயம் தடுக்கப்படுகிறது. துப்புரவாக்குதல் வேலை பார்க்கின்ற இடமும், நாம் வேலை பார்க்கும் இயந்திரம் மற்றும் உபயோகிக்கும் கருவிகளும் மிகவும் சுத்தமாக இருக்க வேண்டும். தொழிற்சாலை மற்றும் வீட்டின் துாய்மை என்பது வெளியிலிருந்து பார்வையாளர்கள் வரும் சமயங்களில் மட்டுமே, மேற்கொண்டால், மற்ற நேரங்களில் உள் உறுப்புகளில் அதிவிரைவில் தேய்மானம் ஏற்பட்டு உற்பத்தியில் தரக்குறைவும், சேதாரமும் ஏற்படுகிறது.நமது நாட்டில் ''செய்யும் தொழிலே தெய்வம், அதில் திறமைதான் நமது செல்வம்'' என்று ஆண்டுக்கு ஒரு முறை தொழிலுக்கு வந்தனம் செய்யும் விதத்தில் 'ஆயுத பூஜை' கொண்டாடுகிறோம். இதற்கு தேவையான செய்கைகள், துலக்குதல், துடைத்தல், பெருக்குதல் கருவிகளை ஆய்வு செய்தல், பாலீஷ் மற்றும் பெயிண்ட் அடித்தல் முதலியன. அந்த காலத்து கடைகளில் மரத்திலான கதவுகளை கொண்டு வரிசையாக மூடி அடைத்து வைப்பார்கள். 1,2,3,4... வரிசை முறையாக அந்த மரப்பலகையை மாற்றி அமைத்தால் பொருத்த முடியாது. இதற்கு ஜப்பானிய முறையில் 'போகாயோக்' என்று பெயர்.ஒவ்வொரு வேலை இடத்திற்கும் ஒரு ஊழியரை ஒரு குறிப்பிட்ட கால வரம்புக்கு பொறுப்பாளராக அமைத்து அட்டவணை எழுதி வைக்க வேண்டும். தொழிற்சாலையில் இயந்திரங்கள் மற்றும் பல்வேறு கருவிகள், நடைபாதைகள், 'ஸ்டோர்ஸ்' போன்ற இடங்களில் சரியான அமைப்பை தீர்மானித்து பெயின்ட் மார்க் செய்து நிர்ணயிக்க வேண்டும். இந்த முன்னேற்ற நிலையை தொடர்ந்து கடைபிடிக்க வேண்டுமென்றால் பலரும் எளிதில் புரிந்து கொள்ள கூடிய 'விசுவல் கன்ட்ரோல்' முறையை ஏற்படுத்த வேண்டும் இதற்கு 'லிஸ்ட்' ஒன்று தயார் செய்து அவ்வப்போது நடக்கும் செயல்களை, அதிகாரி மூலம் மதிப்பெண் கொடுத்து, ஆய்வு செய்து முன்னேற்றங்களை காணலாம். சில நேரங்களில் குறைந்த மதிப்பெண்கள் பெறும் பகுதிகளில், அதற்கான பிரச்னைகளை என்ன என்று தெரிந்து, அவற்றை நிவர்த்தி செய்வதற்கு வழி காணலாம். பயிற்சியும் கட்டுப்பாடும் ஒரு நிறுவனத்தில் ஐந்து 'எஸ்' செயல்கள் சிறப்பாக நடக்க வேண்டுமென்றால் எல்லா நிலைகளிலும் போதிய பயிற்சி முக்கியம். வகுப்பறை பயிற்சி, புகைப்படங்கள், வீடியோ படங்கள் முதலியவற்றை பயன்படுத்தி பயிற்சி தரலாம். ஒரு குறிப்பிட்ட வேலை இடத்துக்கு பயிற்சி நடத்த வேண்டுமென்றால் ஐந்து 'எஸ்' செயல்கள் குறித்து விளக்கம் கூறிவிட்டு, அப்போதே அந்த வேலை இடத்தின் நிலையை வீடியோ படம் எடுத்து காண்பிக்கலாம். அவர்கள் தாங்களாகவே குறைகளை கண்டுபிடித்து நிவர்த்தி செய்ய முன்வருவார்கள்.எல்லாருக்கும் எளிதான செயல் என்பது பிறரிடம் குற்றம் கண்டு, குறை கூறுவது. அதனால்தான் ''சொல்லுதல் யார்க்கும் எளிய அறியவாம் சொல்லிய வண்ணம் செயல்'' என்று வள்ளுவர் கூறியிருக்கிறார். நாம் ஐந்து 'எஸ்' செயல்முறைகளை நடைமுறைப்படுத்தவில்லை என்றால் அதி விரைவில் நாம் சந்திக்கவிருப்பது 'ஐந்து 5 டி'. அதாவது டிலேயிஸ்! - (தாமதங்கள்), டிபெக்ட்ஸ் - (குறைபாடுகள்), டிஸ் சர்ட்டிபைஸ்டு கஸ்டமர் - (வாடிக்கையாளர்களின் அதிருப்தி), டிகிளினிங் புராபிட்ஸ் - (குறைந்து வரும் லாபங்கள்), டிமாரலைஸ்டு எம்ப்ளாயர்ஸ் - (உற்சாகம் குறைந்த ஊழியர்கள்).

தினசரி நடைமுறை : ஹவுஸ் கீப்பிங் என்பது நேர்த்தியான வழிமுறை. இதன் மூலம் காண்பது துாய்மை. துாய்மை நிலை தருவது உன்னதமான தரம். தரம் உயர்ந்தால் நாம் பெறுவது உற்பத்திக்கான உயர்வு. உற்பத்தி திறன் உயர்வதால் நாம் அடைவது வளமான வாழ்க்கை. வளமான வாழ்க்கையே நமது மகிழ்ச்சியின் எல்லை.
ஏ.குமாரவடிவேல், கல்லுாரி முதல்வர்
காரைக்குடி, 94438 50603.

Tamil_News_large_1626561_318_219.jpg

http://www.dinamalar.com/news_detail.asp?id=1626561

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அன்னை பூபதிக்கு வவுனியாவில் அஞ்சலி Published By: DIGITAL DESK 7   16 APR, 2024 | 02:42 PM   நாட்டுப்பற்றாளர் அன்னை பூபதியின் 36 ஆம் ஆண்டு நினைவு நிகழ்வு அனுஷ்டிக்கப்பட்ட நிலையில் அவரின் திருவுருவப்படம் தாங்கிய ஊர்திக்கு இன்று வவுனியாவில் அஞ்சலி செலுத்தப்பட்டது. தமிழ் தேசிய மக்கள் முண்ணனியின் ஏற்பாட்டில் வடக்கு கிழக்கில் அனைத்து மாவட்டங்களுக்கும் செல்லவுள்ள ஊர்தியானது இன்று வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களின் போராட்ட பந்தலுக்கு முன்பாக அஞ்சலிக்காக கொண்டுவரப்பட்டது. இதன்போது காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களின் சங்க தலைவி கா. ஜெயவனிதா ஈகைச்சுடரினை ஏற்றி வைத்ததுடன் மற்றும் தாயார் மலர்மாலை அணிவித்து அடுத்து மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது. https://www.virakesari.lk/article/181216
    • Published By: DIGITAL DESK 3    16 APR, 2024 | 12:07 PM யாழ்ப்பாணத்தில் இருந்து புலம்பெயர்ந்து சுவிஸ் நாட்டில் வசிக்கும் பெண்ணை திருமணம் செய்வதாக கூறி சுமார் 50 இலட்ச ரூபாயை மோசடி செய்ததாக பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் மீது முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.  யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த பெண்ணொருவர் புலம்பெயர்ந்து சுவிஸ் நாட்டில் வசித்து வருகின்றார். அவருக்கு திருமணமாகி பிள்ளைகள் உள்ள நிலையில் சுவிஸ் நாட்டில் கணவனை பிரிந்து பிள்ளைகளுடன் வாழ்ந்து வருகின்றார்.  இந்நிலையில் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் குறித்த பெண் யாழ்ப்பாணம் வந்திருந்த போது, பெண்ணின் பூர்வீக சொத்துக்கள் தொடர்பில் ஏற்பட்ட முரண்பாடுகள் தொடர்பில் பொலிஸ் நிலையத்திற்கு முறைப்பாடு செய்ய சென்று இருந்தார்.  முறைப்பாடு செய்ய சென்ற நேரத்தில் பொலிஸ் நிலையத்தில் கடமையில் இருந்த தமிழ் பொலிஸ் பொலிஸ் உத்தியோகத்தருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.  அந்த பழக்கம் பெண் வெளிநாடு சென்ற பின்னரும் தொடர்ந்து உள்ளது. ஒரு கட்டத்தில் அது காதலாக மலர்ந்துள்ளது. அதனை அடுத்து சுவிஸ் நாட்டு பெண், இங்குள்ள பொலிஸ் உத்தியோகஸ்தருக்கு பணம், நகை என்பவற்றுடன் அன்பளிப்பு பொருட்கள் என பலவற்றை வழங்கி வந்துள்ளார்.  ஒரு கட்டத்தில் பொலிஸ் பொலிஸ் உத்தியோகத்தரை சுவிஸ் நாட்டிற்கு எடுப்பதற்கான முயற்சிகளையும் அப்பெண் மேற்கொண்டுள்ளார். அதற்கு பொலிஸ் பொலிஸ் உத்தியோகத்தர் மறுப்பு தெரிவித்து, தான் நாட்டை விட்டு வர மாட்டேன் என கூறியுள்ளார்.  அதனால் அப்பெண் மீண்டும் யாழ்ப்பாணம் வந்து தன்னை திருமணம் செய்யுமாறு வற்புறுத்திய வேளை , அதற்கு அவர் உடன்படாத நிலையில், அது தொடர்பில் பொலிஸ் உயர் அதிகாரிகளிடம் முறையிட்டுள்ளார்.  அதனை அடுத்து, இப்பெண்ணிடம் இருந்து பெற்றுக்கொண்ட ஒரு தொகை நகை, பணம் என்பவற்றை மீள அளித்துள்ளார். மிகுதியை சிறு கால இடைவெளியில் மீள கையளிப்பதாக உறுதி அளித்துள்ளார்.  அதன் பிரகாரம் உரிய காலத்தில் மிகுதி பணம் நகையை மீள கையளிக்காததால், அப்பெண் குறித்த பொலிஸ் உத்தியோகத்தருக்கு எதிராக முறைப்பாடு செய்துள்ளார். https://www.virakesari.lk/article/181215
    • Published By: DIGITAL DESK 3 16 APR, 2024 | 11:19 AM   கொவிட் தொற்று பற்றிய உலக சுகாதார நிறுவனம் மற்றும் இலங்கை சுகாதார அமைச்சின் ஆலோசனைகள் தொடர்பாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தெளிவுபடுத்தியுள்ளார். யாழ் மாவட்டத்தில் நீண்ட காலத்திற்கு பின்னர் கொவிட்தொற்று காரணமாக பெண் ஒருவர் உயிரிழந்துள்ளநிலையில், மக்கள் மத்தியில் தேவையற்ற சந்தேகங்களை தீர்க்கும்வகையில் குறித்த தகவலை தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார். இதன்படி 2023 ஒக்டோபர் 10ம் திகதி முதல் கீழ்வரும் 7 விடயங்கள் சுகாதார அமைச்சினால் சுற்றறிக்கையொன்று வெளியிடப்பட்டு பின்பற்றப்படுகிறது. 1. கொவிட் தொற்று ஏற்பட்டவர்களுக்கு ஏனைய சுவாசத் தொற்று நோய்கள் ஏற்பட்டவர்களுக்கு வழங்கப்படுகின்ற அதே உரிய பாதுகாப்பும் பராமரிப்பும் வழங்கப்பட வேண்டும். பொருத்தமான சிகிச்சையும் வைத்தியசாலையில் வழங்கப்படும்.  (பொதுவாக சுவாச தொற்று வருத்தம் இன்னொருவருக்கு இலகுவாக பரவலாம். ஆகவே சுவாசத் தொற்று உடையவர்கள் உரிய அடிப்படை சுகாதார விதிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும். அவ்வாறே தொற்று உடையவருக்கு அருகில் இருப்பவர்கள் மற்றும் பராமரிப்பவர்கள் உரிய சுகாதார பழக்கவழக்கங்களைப்  பேண வேண்டும்.) 2. எதாவது நோய் ஒன்றின் சிகிச்சைக்கு முன்னர் அல்லது சத்திர சிகிச்சை ஒன்றிற்கு முன்னர்  கொவிட் தொற்றும் இருக்கின்றதா என பரிசோதனைகள் செய்யப்படுவதில்லை. 3. கொவிட் தொற்று உடையவரிற்கு அருகில் இருந்தவர்களிற்கு அல்லது அவருக்கு அருகில் சென்று சிகிச்சை அளித்தவர்களுக்கு கோவிட் தொற்று இருக்கின்றதா என பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுவதில்லை. 4. இருமல் மற்றும் தடிமன் போன்ற சுவாசத் தொற்று ஏற்பட்டவர்கள் இன்னொருவருக்கு தொற்று ஏற்படாத வகையில் உரிய நடைமுறைகளைப் பின்பற்ற வேண்டும். குறிப்பாக அதிகளவில் ஒன்றுகூடும் இடங்களில் உரிய முறையில் நடந்து கொள்ள வேண்டும். 5. கொவிட் இறப்பு ஏற்படும் போது உரிய சுகாதார விதிகளைக் கடைப்பிடித்து வீடுகளில் இறுதிச் சடங்கை செய்யமுடியும். 6. சுகாதார அமைச்சின் தொற்று நோய் தடுப்பு பிரிவின் அறிவுறுத்தலின் அடிப்படையில் சமுதாயத்தில் கொவிட் தொற்று இருக்கின்றதா என பலருக்கு பரிசோதனைகள் செய்யப்படுவதில்லை. 7. தனியார் சிகிச்சை நிலையங்களும் இந்த நடைமுறைகளைக் கடைப்பிடிக்க வேண்டும். https://www.virakesari.lk/article/181205
    • இது யாழ்ப்பாணத்தில் இல்லை.  பூந்கரிக்குத் தெற்கே, பூநகரி மன்னார் வீதியில் ஜெயபுரத்திற்கு(சந்தி ) மேற்கே 7/8 Km ல் இருக்கிறது.    https://www.aloeus.com/devils-point-veravil/
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.