Jump to content

வாகரை ஒரு பலப்பரீட்சைக்கான களமல்ல|


Recommended Posts

வாகரை ஒரு பலப்பரீட்சைக்கான களமல்ல|

-அருஸ் (வேல்ஸ்)-

வாகரையை கடந்த 19.01.2007 அன்று அரச படைகள் கைப்பற்றியதை அடுத்து படை அதிகாரிகளை பாராட்டிய ஜனாதிபதி மகிந்த தனது மகிழ்ச்சியையும் அவர்களுடன் பகிர்ந்து கொண்டார். கிழக்கு முழுவதும் மிகவிரைவில் விடுவிக்கப்படும் எனவும் அவர் தனது அரசியல் ஆதங்கத்தை தெரிவிக்கத் தவறவில்லை.

மாவிலாறு, சம்பூர், வாகரை என மகிந்தவின் வெற்றிக் கொண்டாட்டங்களுக்கு குறைவில்லை. 1995 இல் யாழ். குடாவை கைப்பற்றிய பின்னர் சந்திரிக்கா பாரிய விழா எடுத்திருந்தார். தென்னிலங்கை முழுவதும் நீலக்கொடிகள் பறந்தன, அதற்கான காரணமும் உண்டு. யாழ். குடாவானது சிறிலங்கா இராணுவத்துடனான உக்கிர மோதல்களின் பின்னர் 1984-1985 காலப்பகுதியில் புலிகளின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டிருந்தது.

எனவே மீண்டும் அதை கைப்பற்றுவதனால் தென்னிலங்கையில் மிகப்பெரும் அரசியல் செல்வாக்குகளை பெற்றுவிடலாம் என்பது ஆட்சி செய்த ஒவ்வொரு அரச தலைவர்களினதும் கருத்துக்கள். ~ஓப்பரேசன் லிபரேசன்| என்று ஜே.ஆர்.ஜெயவர்த்தனா ஒரு தடவை முயன்று தோற்றார். பின்னர் பிரேமதாசாவின் முயற்சி அராலித்துறையில் சாம்பலாகிப் போனது. இறுதியில் அதிக படைவலு, சுடுவலுவுடன் சந்திரிக்கா ஆக்கிரமித்துக் கொண்டார்.

விழாவும் பெரும் எடுப்பில் நிகழ்த்தப்பட்டது, நீலக்கொடிகள் பறந்தன சந்திரிக்காவின் அரசியல் செல்வாக்கு தென்னிலங்கையில் உயர்ந்தது. ஆனாலும் இந்த கானல் நீர் மறைந்து போக அதிக நாட்கள் எடுக்கவில்லை. 1996 ஜனவரியில் கொழும்பு மத்திய வங்கியுடன் ஆரம்பமாகி முல்லைத்தீவு என தொடர்ந்து கட்டுநாயக்காவில் வந்து நின்றது. 1995 இன் பின்னர் தென்னிலங்கையில் அதிகளவில் பறந்தவை வெள்ளைக் கொடிகளே. சந்திரிக்காவினது மட்டுமல்லாது பண்டாரநாயக்கவின் குடும்ப அரசியலே படுத்துக் கொண்டது.

தற்போது மகிந்தவின் முறை, ஆரம்பத்தில் அரசு ஆனையிறவை தான் தனது அரசியல் நலன்களுக்காக குறிவைத்தது. ஏனெனில் ஆனையிறவை கைப்பற்றுவது யாழ். குடாவை கைப்பற்றியது போன்றதொரு செல்வாக்கை தென்னிலங்கை சிங்கள மக்கள் மத்தியில் ஏற்படுத்தக்கூடியது.

ஆனால் கடந்த ஆண்டு ஒக்ரோபர் மாதம் முகமாலை கிளாலி அச்சில் நிகழ்ந்த சமர் களத்தின் உக்கிரத்தை அரசுக்கு உணர்த்தியிருக்கும். எனவேதான் தனது அரசியல் நோக்கங்களை நிறைவேற்றுவதற்காக இலகுவான இலக்குகள் மீது அரசு தனது இராணுவ நடவடிக்கைகளின் பார்வையை திருப்பியுள்ளது.

சம்பூர், மாவிலாறு, வாகரை என்பன விடுதலைப் புலிகளை பொறுத்தவரை அவர்களின் மிக இலகுவான இராணுவ கேந்திர நிலையங்கள். அங்கு மரபுவழி மோதல்களில் புலிகள் ஈடுபடுவதில்லை. ஏனெனில் அந்த பிரதேசங்களின் பூகோள நிலையமைப்பு அப்படியானது. அதாவது மரபுவழி மோதல்களில் ஈடுபடும் போராளிகளுக்கான உறுதியான பின்தள வசதி, வழங்கல் தளம், வழங்கல் வழிகள், மருத்துவத் தளங்கள், அவற்றை பாதுகாப்பதற்கான பாதுகாப்பு வசதிகள் என்பன அங்கு மட்டுப்படுத்தப்பட்டவை.

வாகரையைப் பொறுத்தவரை திருமலைக்கும் மட்டக்களப்பிற்கும் இடையேயான கடற்கரையோர பிரதேசம். இது மேற்குப்பகுதி சதுப்பு நிலக்காடுகளையும், கிழக்குப்பகுதி கடற்பிரதேசத்தையும், வடக்குப் புறமாக திருமலையும் தெற்குப்புறமாக மட்டக்களப்பையும் உள்ளடக்கியது. இந்த மேற்குப்புறத்தின் சதுப்புநில காடுகளுக்கும் வாகரைக்கும் இடையில் உப்பாறு ஊடறுத்து செல்வதால் வாகரையின் இரு நெடுக்குப்புறங்களும் பாதுகாப்பானவை அல்ல என்பதுடன் இலகுவாக முற்றுகைக்குள்ளும் சிக்கக்கூடியது.

மேலும் வாகரை மட்டுமல்லது கிழக்கின் எந்த பிரதேத்தினது பூகோள அமைப்புக்களும் அப்படியானவையே. அதாவது கிழக்கின் தளப்பிராந்தியங்களாக கருதப்படக்கூடிய பிரதேசங்கள் காடுகளும் பற்றைக்காடுகளும் வாவிகளும், களப்புக்களும், திறந்த வெளிகளும் கொண்டவையாகக் காணப்படுகின்றன. நாற்புறமும் எதிரிகளால் அல்லது மூன்று பக்கங்கள் எதிரிகளாலும் எஞ்சிய பகுதி கடலாலும் சூழப்பட்ட பகுதிகளாகும். அதற்கான முக்கிய காரணம் கிழக்கின் பெரும் பகுதிகளை சூழ உருவாக்கப்பட்ட சிங்களக் குடியேற்றங்களும் சேர்ந்து வாழும் மூவின மக்களுமாகும்.

எதிரியின் தாக்குதல் வீச்சுக்குள் இந்த பிரதேசங்கள் இருப்பதுடன், பூகோள மற்றும் உளவியல் ஆதரவுகளும் தற்போது இங்கு எதிரிக்கு சாதகமானதே. எனேவே தான் கிழக்கில் புலிகள் மரபுவழிச் சமர்களில் இறங்குவதில்லை. பொதுவாக அழித்தொழிப்புச் சமரே அங்கு நிகழ்வதுண்டு. மேலும் புலிகளின் தளப்பிரதேசங்களும் நகரும் அல்லது இடம்மாறும் தளங்களாகவே அங்கு அமைத்துள்ளன.

எந்த ஒரு விடுதலைப் போரானாலும் சரி நாடுகளுக்கிடையிலான போரானாலும் சரி அவர்கள் போரிடும் எல்லா களங்களும் ஓரே சீராக இருப்பதில்லை. அதற்காக போராட்டங்களில் இருந்து பாதகமான களங்களை தவிர்க்கவும் முடியாது. எனவே களங்களின் தன்மைக்கு ஏற்ப தாக்குதல் சமர் (ழுககநளெiஎந), தற்காப்புச் சமர் (னுநகநளெiஎந) என்பன மாறுபடுகின்றது. பாதகமான களங்களில் களங்கள் அடிக்கடி கைமாறும், படையணிகள் இடம்மாறும் ஆனாலும் அவை வெற்றி தோல்வியை தீர்மானிப்பதில்லை.

இந்த தத்துவம் உணர்ந்தவர்களுக்கு வாகரையில் இருந்து புலிகள் வெளியேறியதற்கான அர்த்தம் புரிந்திருக்கும். 1969 இல் அமெரிக்காவின் வெளிவிவகாரத்துறைச் செயலாளர் ஹென்றி கிஸின்கர் வியட்நாம் போர் தொடர்பாக கூறியதும் அதுவே 'இழப்புக்களில் இருந்து தம்மை காத்துக் கொள்ளும் போது கெரில்லாக்கள் வெற்றியீட்டுகிறார்கள் ஆனால் சமரில் வெற்றியீட்டாது போனால் மரபுவழி இராணுவம் தோல்வியை தழுவிவிடும்".

அப்படியானால் கிழக்கில் மரபுவழிச்சமர் சாத்தியமில்லையா என கேள்வி எழ வாய்ப்புள்ளது. மரபுவழிச் சமர்களோ அல்லது பெரும் எடுப்பிலான அழித்தொழிப்பு யுத்தமோ நிகழாமல் உலகில் நடைபெற்ற பெரும்பாலான போர்கள் முடிவுக்கு வந்ததில்லை.

தியான் பியான் பூ இல் வீழ்ந்த அகோர அடிதான் வியட்நாமில் இருந்து பிரான்சை வெளியேற்றியது. ரெற் படை நடவடிக்கை தான் அமெரிக்காவின் பிடியை வியட்நாமில் தளர்த்தியது. ஸ்ராலின்கிராட் சமரே சோவியத் மீதான ஜேர்மனின் ஆக்கிரமிப்பை துடைத்தெறிந்தது. இப்படி உதாரணங்கள் ஏராளம் ஆனால் இந்த எல்லா பாரிய சமர்களிலும் வெற்றிவாகை சூடியவர்களுக்கு பெரும் துணையாக இருந்தது அவர்களின் உறுதியான பின்தளம் தான்.

எனவே கிழக்கின் மீதான புலிகளின் பெரும் படை நடவடிக்கைகளுக்கு வடக்குடன் இணைந்த உறுதியான பின்தளம் தேவை என்பது உணரப்பட்ட கள யதார்த்தம். அதை உருவாக்க முடியாது என்றும் வாதிட முடியாது. புலியணிகள் மணலாற்றின் இராணுவ வேலியை உடைத்து திருமலையை ஊடறுக்கும் போது இது சாத்தியமாகும். ஆனால் இந்த படை நடவடிக்கைக்கு தேவையான மனித மற்றும் ஆயுத வலுக்கள் வடக்கில் இருந்தே நகர்த்தப்படும்.

அதற்கு முன்னேற்பாடாக வடக்கில் உள்ள சிங்கள இராணுவ வலு முற்றாக அழிக்கப்பட வேண்டும். வடக்கில் சிங்கள இராணுவ ஆதிக்கம் முடிவுக்கு வரும்போது புலிகளின் பெருமளவான பலம் எங்கு நோக்கி திருப்பப்படும் என உங்களுக்கு புரியும். மொத்தத்தில் வடக்கில் இருந்து புலியணிகள் கிழக்கு நோக்கி நகர்த்தப்படும் போது கிழக்கில் உள்ள படையணிகளுக்கு மரபுவழிச் சமராட அதிக சிரமங்கள் இருக்கப்போவதில்லை. அதுவரை வடக்கில் மரபுவழிச் சமர்களும் கிழக்கில் கெரில்லா யுத்த மூலோபாய தந்திரத்துடன் கூடிய பெரும் சமர்களும் தான் நடைபெறும்.

இனி வாகரைச் சமரை நோக்குவோம்.

வாகரை மீதான அரசின் அவசரமான ஆக்கிரமிப்பானது முழுக்க முழுக்க குறுகிய கால அரசியல் நோக்கம் கொண்டது. அதாவது ஐ.தே.க., முஸ்லிம் காங்கிரஸ், கெல உறுமய போன்ற கட்சிகளின் பாராளுமன்ற உறுப்பினர்கள் அரசுக்கு ஆதரவளிக்க முற்படும் போது அரசு ஒரு இராணுவ வெற்றியை அடைந்துவிட்டது போன்றதொரு தோற்றப்பட்டை ஏற்படுத்தினால் அரசுக்கான ஆதரவுகள் அதிகரிக்கலாம். இதை வேறுவிதமாகச் சொல்வதானால் 16 எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களின் கட்சித்தாவல் 20 ஆக அதிகரிக்காலம். இதுதான் மகிந்தவின் சிறுபிள்ளைக் கணக்கு.

ஆனால் அரசு எதிர்பார்த்தது போல வாகரைச்சமரும் இலகுவாக இருக்கவில்லை. அரசின் பல முன்னணி கொமாண்டோ படைகள் களமிறக்கப்பட்டதுடன், எறிகணை வீச்சுக்கள், பல்குழல் எறிகணை வீச்சுக்கள், விமானத்தாக்குதல்கள் என்பன மிக செறிவாக உபயோகிக்கப்பட்டுள்ளன. ஆனாலும் இந்த ஆக்கிரமிப்புக்கு அரசு செலுத்திய இராணுவ மற்றும் சர்வதேச இராஜதந்திர விலைகள் அதிகம். இங்கு சர்வதேச இராஜதந்திரம் என குறிப்பிடப்படுவது வாகரை ஆக்கிரமிப்பின் போது அரசினால் ஏற்படுத்தப்பட்ட மனித அவலங்களும், அதன் மீதான சர்வதேச மனிதாபிமான அமைப்புக்களின் பார்வைகளுமாகும்.

நான்கு மாதங்கள் நடைபெற்ற கடுமையான மோதல்களின் பின்னர். சிங்கள இராணுவத்தின் கஜபாகு விசேட படையணிகள் வாகரையின் மேற்குப்புறமுள்ள உப்பாறை கயிற்றை போட்டு கடந்து சென்று நான்காவது களத்தை திறந்த போது புலியணிகள் தந்திரமாக வெளியேறிவிட்டன. இது 14 வருடங்களுக்கு முன்பு புலிகள் பயன்படுத்திய உத்தியாகும். (தவளை நடவடிக்கையில் 1993 இல் பயன்படுத்தியது). அதாவது சிங்களப்படை தனது முற்று முழுதான படை பலத்துடன் 20 கி.மீ. தூரத்தை பிடிப்பதற்கு எடுத்த காலம் நான்கு மாதங்கள் என்பது தான் ஆச்சரியமான விடயம். வடக்கில் என்றால் இந்த நான்கு மாதச் சமர் தொடர்பாக ஆச்சரியப்படுவதற்கு எதுவுமில்லை கிழக்கில் என்பதனால் தான் ஆச்சரியம்.

கிழக்கில் இராணுவத்தால் போர் நிறுத்த காலத்தில் பெரும் விலைகளை கொடுத்து கைப்பற்றப்பட்ட எல்லாப் பிரதேசங்களும் (மாவிலாறு, சம்பூர், வாகரை) 1996-1997 காலப்பகுதிகளில் இராணுவம் கைவிட்டுப் போன பகுதிகளே. அன்று 40-க்கும் அதிகமான முகாம்களை மூடி கிழக்கில் உள்ள படைகளை வடக்கு அனுப்பியிருந்தது சந்திரிக்கா அரசு. அரசால் கைவிடப்படும் கிழக்கின் பிரதேசங்களை எதிர்காலத்தில் மீட்பதற்கு இராணுவம் அதிக இழப்புக்களை சந்திக்க வேண்டி இருக்கும் என அப்போது பல இராணுவ ஆய்வாளர்கள் தெரிவித்திருந்தனர். அது தான் தற்போது நிகழ்ந்துள்ளது.

அன்று தாரை வார்க்கப்பட்ட வாகரையை கைப்பற்ற இன்று சிங்கள அரசு தனது முழு வலுவையும் பயன்படுத்தி உள்ளது என்றால் அதன் அர்த்தம் என்ன? அரசு கடும் பிரயத்தனம் எடுத்தது என எப்படி கணிக்கப்படுகின்றது?

- வாகரையை கைப்பற்ற முனைந்த இந்த நாட்களில் அரசு, வடக்கிலோ கிழக்கிலோ வேறு எந்த பாரிய படை நடவடிக்கையையும் ஆரம்பிக்கவில்லை.

- வாகரையில் பயன்படுத்திய சுடுவலு மிக, மிக அதிகம். அதாவது தனது கையிருப்பு தீர்ந்து போகுமளவிற்கு எறிகணைகளும், பல்குழல் ஏவுகணைகளும் ஏவப்பட்டுள்ளன என்றால் களத்தின் உக்கிரத்தை அனுமானிக்கலாம். (எறிகணைகள் தீர்ந்த நிலையில் பாகிஸ்தானில் இருந்து அவசரமாக தருவிக்கப்பட்டிருந்ததும் குறிப்பிடத்தக்கது).

- முப்படையினருடன் பெரும் தொகையான சிறப்பு கொமோண்டோ படையினரும் களமிறக்கப்பட்டனர்.

- மூன்று முனைகளால் சூழந்து 20 கி.மீ. தூரத்தை கைப்பற்ற எடுத்த காலம் நான்கு மாதங்கள்.

- இராணுவ ஆக்கிரமிப்புக்கு உதவும் பொருட்டு அரசினால் அப்பாவி மக்களின் மீது ஏற்படுத்தப்பட்ட மனித அவலங்கள் மிக அதிகம்.

ஆனால் புலிகளின் எதிர்த்தாக்குதல் வாகரையில் மூர்க்கமாக இருக்கவில்லை. முன்னேறும் படையினரை இடைமறித்து தாக்கியதோடு பீரங்கி மற்றும் மோட்டார் தாக்குதல்களிலேயே பெருமளவில் ஈடுபட்டனர். முன்னேறிய இராணுவ அணிகளை ஊடறுத்து பெருமெடுப்பிலான தாக்குதல்களோ (செய் அல்லது செத்துமடி போல) அல்லது மிக மூர்க்கமான எதிர்ச்சமர்களோ அங்கு நிகழவில்லை.

அதாவது படையினரின் முழுவீச்சான இந்த தாக்குதல்களுக்கு பதிலடியாக கிழக்கில் உள்ள தமது முழுவளத்தையும் பயன்படுத்த புலிகள் முயலவில்லை. அதற்கான காரணங்களும் உண்டு. ஆனால் கிளிநொச்சியில் இருந்து ஓமந்தை வரையிலான ஏறத்தாழ 115 கி.மீ நீளமான ஏ-9 பாதையை கைப்பற்ற சிங்கள இராணுவம் மேற்கொண்ட ஜெயசுக்குறுச் சமரை போன்றதொரு சமரை வாகரையின் 20 கி.மீ நீளமான ஏ-15 பாதையை கைப்பற்ற சிங்களப் படைகள் மேற்கொண்டுள்ளன என்றால் போர் நிறுத்தத்திற்கு முன்னரும் பின்னரும் கிழக்கில் புலிகள் பரிணாமங்களை புரிந்து கொள்ளலாம்.

ஏனெனில் கிழக்கில் தனது முழுப்படைப் பலத்தையும் பயன்படுத்தி இராணுவம் தாக்குதல்களை முன்னைய காலங்களில் மேற்கொண்டதில்லை. ஒரு மேஜர் அல்லது லெப். கேணல் தர அதிகாரிகளின் தலைமையில் சில நூறு படையினர் தான் நடவடிக்கைகளை மேற்கொள்வதுண்டு.

ஆனால் தற்போதைய கிழக்கின் சமர்கள் அப்படிப்பட்டவை அல்ல பல ஆயிரம் படையினர் தமது முப்படை வளத்துடன் ஒவ்வொரு பிரதேசத்தை மீட்பதற்கும் போராட வேண்டிய நிலையில் உள்ளனர்.

மேலும் சதுப்புநிலக் காடுகளையும், வெளிகளையும், களப்புக்களையும் உடைய 20 கி.மீ நீளமான வாகரைப் பிரதேசத்தை எத்தனை இராணுவ வீரர்களை கொண்டு அரசு பாதுகாக்கப் போகின்றது? சிங்கள இராணுவத்தின் கஜபாகு விசேட படையணிகள் உப்பாறைக் கடந்தது போல புலிகளின் விசேட அணிகள் கயிற்றைப் போட்டு கடந்து சென்று சிங்களப்படையை அழித்துவிட்டு வர எத்தனை காலமெடுக்கும்?

கிழக்கையும் வடக்கையும் ஒரே சமயத்தில் தக்க வைக்கமுடியாது என்ற களயதார்த்தம் உணர்ந்ததால் தான் முன்னைய அரசு வடக்கை கைப்பற்றுவதற்காக கிழக்கை கைவிட்டது. அதற்கு அன்றைய அரசு சொன்ன காரணம், முதலில் தலையை நசுக்கிவிட்டால் வாலை இலகுவாக நசுக்கிவிடலாம் என்பதாகும். ஆனால் பிரம்மா அடி முடி தேடிய கதையாக தலை எது வால் எது என்று அறியமுயாத அதிர்ச்சியுடன் காணாமல் போனது சந்திரிக்கா அரசு.

தற்போதைய மகிந்த அரசு வாலையாவது தக்க வைப்போம் என்ற நப்பாசையுடன் தான் செயற்படுகின்றது. கிழக்கை வடக்கில் இருந்து பிரிப்பதன் மூலம் போராட்டத்தின் வீச்சிற்கு ஒரு எல்லை போட முனைவதையே அரசின் அண்மைய இராணுவ அரசியல் நடவடிக்கைகள் எதிர்வு கூறுகின்றன.

ஆனால் விடுதலைப் புலிகளின் போரியல் நுட்பங்களுக்கும் கைப்பற்றும் பிரதேசங்களுக்கும் ஒரு பெறுமதியுண்டு. அவை எப்போதும் அரசின் உத்திகளை விட பலமடங்கு உயர்ந்தவையாகத் தான் வரலாற்றில் பதிவாகியதுண்டு.

அவர்களின் இலக்குகளும் திட்டங்களும் தெளிவானவை, மோதவேண்டிய களத்தையும்;, தவிர்க்க வேண்டிய களத்தையும் நன்கு அறிந்தவர்கள். எனவே அரசு விரிக்கும் வலைகளில் அவர்களின் திட்டங்கள் சிக்கப் போவதில்லை. சுருக்கமாகச் சொன்னால் தமிழீழம் தனது இறுதிப்போருக்கு தயாராகின்றது அதற்கு முன்னால் வாகரை வெறும் சலசலப்புத்தான்.

வாகரையில் இருந்து புலிகள் ஏன் விலகிச்சென்றார்கள் என்பதில் தெளிவாக வேண்டுமானால் ஒன்றை புரிந்து கொள்ளல் அவசியம். மகிந்த ஒரு அரசியல்வாதி ஆனால் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் ஒரு போராளி. தனது அரசியல் நலன்களுக்காகவோ அல்லது தனது பெயரை உயர்த்த வேண்டும் என்பதற்காகவோ பாதகமான களங்களில் போராளிகளையும், மக்களையும் பலிகொடுக்க வேண்டிய தேவையும் ஆசையும் தலைவர் பிரபாகரனுக்கு இல்லை.

http://www.tamilnaatham.com/articles/2007/jan/arush/27.htm

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அதுதான் இளந்திரையனே சொல்லிட்டார் இல்லா. வாகரையை தற்போதைய நிலையில் தக்க வைக்க வேண்டிய தேவை இல்லை என்றும்.. நடக்கப் போறதைப் பொறுத்திருந்து பாருங்கள் என்று சொல்லிட்டார் எல்லோ. அப்புறம் எதுக்கு ஆளாளுக்கு நீட்டி முழக்கி நிமித்தி... சரிக்கட்டுறியள்.

ஒன்றைச் செய்யுங்கோ எதிர்கொள்ளவுள்ள போரில மனிதாபிமானப்பணிகள் போர்க்களப்பணிகள் செய்வது எத்துணை அளவுக்கு போரின் வெற்றியைத் துரிதப்படுத்தும் என்று எழுதுங்கள். புலம்பெயர்ந்தவர்களின் நேரடிப் பங்களிப்பை தாயகக் களம் தற்போது எதிர்பார்த்துள்ளதை ஈழவேந்தன் எம்பியும் சுட்டிக்காட்டியுள்ளார்.

இராணுவ ஆய்வுகள் புகலிடத்தில் உள்ளவர்களிடம் நம்பிகையை வளர்க்க என்றால் புலிகள் சொல்வதை மையமாக வைத்து எழுதுங்கள். நீங்களா கற்பனை பண்ணி ஊதிப் பெரிப்பிச்சு அப்புறம் அது காற்றுப் போன பலூன் மாதிரி ஆயிட்டால் சனம்..சோர்ந்து படுத்திடும்..! யதார்த்தமாகச் சொல்லக் கற்றுக் கொள்ளுங்கள்..!

போரிடுவது புலிகளின் பொறுப்பு என்பது போல ஒதுங்கி இருக்கும் வகையில் கட்டுரை எழுதாமல் மக்களை பங்காளியாக்கும் வகையில் களத் தேவைகளைச் சுட்டிக்காட்டி எழுதுங்கள். அவை எப்படிப் போரின் போக்கில் செல்வாக்குச் செய்யும் என்றும் எழுதுங்கள்..! :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வாகரையில் இருந்து புலிகள் ஏன் விலகிச்சென்றார்கள் என்பதில் தெளிவாக வேண்டுமானால் ஒன்றை புரிந்து கொள்ளல் அவசியம். மகிந்த ஒரு அரசியல்வாதி ஆனால் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் ஒரு போராளி. தனது அரசியல் நலன்களுக்காகவோ அல்லது தனது பெயரை உயர்த்த வேண்டும் என்பதற்காகவோ பாதகமான களங்களில் போராளிகளையும், மக்களையும் பலிகொடுக்க வேண்டிய தேவையும் ஆசையும் தலைவர் பிரபாகரனுக்கு இல்லை.

கட்டுரையில் எல்லாம் புரியாவிட்டாலும் இந்த பந்தி யாதார்த்தமும் உண்மையும் அடங்கி இருகிறது.

இத பந்தியை என கைஎழுத்தாக பாவிகளாம் தானே :)

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • முள்ளிவாய்க்கால் அழிவிற்கு நன்றி சொல்லி பொன்னாடை போர்த்திய நிகழ்வுகளுக்கு ஊமையாக இருந்தோர் சீமான் விடயத்தில் கதறுவது ஏன்?  தமிழை விட திராவிடம் வலிமையானது என்றா?
    • உற‌வே ஏன் சீமான் மீது இம்புட்டு வ‌ன்ம‌ம்..........2009 முள்ளிவாய்க்கால் இன‌ அழிப்புக்கு துணை போனாரா அல்ல‌து த‌லைவ‌ருக்கு எங்க‌ட‌ போராட்ட‌த்துக்கு வைக்கோ ராம‌தாஸ் திருமாள‌வ‌ன் போன்ற‌வ‌ர்க‌ள் போல் துரோக‌ம் செய்தாரா...............எல்லாம் அழிந்த‌ நிலையில் த‌மிழீழ‌ம் என்ற‌ பெய‌ரை உயிர்ப்போடு வைத்து இருப்ப‌து 30ல‌ச்ச‌த்துக்கு மேல் ப‌ட்ட‌  எம் தொப்பில் கொடி உற‌வுக‌ள்...........பிர‌பாக‌ர‌ன் என்றாலே தீவிர‌வாதி என்று இருந்த‌ த‌மிழ் நாட்டில் பிர‌பாக‌ர‌ன் எம் இன‌த்தின் த‌லைவ‌ர் என்று கோடான‌ கோடி ம‌க்க‌ள் கேட்டுக்கும் ப‌டி சொன்ன‌துக்கா சீமான் மீது இம்ம‌ட்டு வெறுப்பா சீ சீ 2009க்கு முத‌ல் ஈழ‌ம் ஈழ‌ம் என்று க‌த்தின‌ கூட்ட‌ம் இப்ப‌ சிங்க‌ள‌வ‌னுக்கு விள‌ம்ப‌ர‌ம் செய்துக‌ள் இதை விட‌ கேவ‌ல‌ம் என்ன‌ இருக்கு...............அந்த‌ க‌ரும‌த்தை நான் தொட்டு என்ர‌ ந‌ட்ப்பு வ‌ட்டார‌ம் தொட்டு ஒருத‌ரும் கேடு கெட்ட‌ செய‌ல் செய்த‌து இல்லை................சீமான் மீது விம‌ர்ச‌ன‌ம் வைக்க‌லாம் ஆனால் அவ‌ர் கொண்ட‌ கொள்கையோடு உறுதியாய் நிக்கிறார் த‌னித்து நிக்கிறார்...........சீமான் காசு மீது பேர் ஆசை பிடித்த‌வ‌ர் என்றால் இந்த‌ தேர்த‌லில் ஆதிமுக்கா கூட‌ கூட்ட‌னி வைச்சு 500 கோடியும் 8 தொகுதியும் ஜா ப‌ழ‌னிசாமி கொடுத்து இருப்பார்................ த‌மிழ‌க‌ அர‌சிய‌ல் வாதிக‌ளை பார்த்தால் கூடுத‌லான‌ ஆட்க‌ள்  பெண்க‌ளுட‌ல் க‌ள்ள‌ உற‌வு வைத்து இருந்த‌வை அந்த‌ வ‌கையில் அண்ண‌ன் சீமான் வாழ்த்துக்க‌ள் ப‌ட‌ம் எடுத்த‌ போது விஜ‌ய‌ல‌ட்சுமி கூட‌ காத‌லோ அல்ல‌து ஏதோ ஒரு உற‌வு இருந்து இருக்கு.............நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே...........ஆனால் அண்ண‌ன் சீமான் அவ‌ரின் திரும‌ண‌த்தை வெளிப்ப‌டையாய் தான் செய்தார் அப்போது ஒரு பிர‌ச்ச‌னையும் வ‌ர‌ வில்லை அர‌சிய‌லில் வ‌ள‌ந்து வ‌ரும் போது அந்த‌ பெண்ண‌ திராவிட‌ கும்ப‌ல் ஊட‌க‌ம் முன்னாள் பேச‌ விடுவ‌து ம‌னித‌ குல‌த்துக்கு அழ‌கில்லை................. சீமான் த‌வ‌று செய்தால் அதை நான் ப‌ல‌ இட‌த்தில் சுட்டி காட்டி இருக்கிறேன்.............எங்க‌ட‌ த‌மிழீழ‌ தேசிய‌ த‌லைவ‌ர் எப்ப‌டி ப‌ட்ட‌வ‌ர் என்று எம‌க்கு ந‌ன்றாக‌வே தெரியுன் அண்ண‌ன் சீமான் ஒரு ப‌டி மேல‌ போய் அள‌வுக்கு அதிக‌மாய் த‌லைவ‌ரை புக‌ழ் பாட‌ தொட‌ங்கி விட்டார்.............ஆர‌ம்ப‌ கால‌த்தில் அதிக‌ம் பேசினார் அப்போது எம‌க்கே தெரிந்த‌து அது உண்மை இல்லை என்று............இப்போது சீமானின் பேச்சில் ப‌ல‌ மாற்ற‌ம் தெரியுது.................நிஜ‌த்தில் ந‌ல்ல‌வ‌ர் அன்பான‌வ‌ர் ஆனால் அவ‌ரை சுற்றி ப‌ல‌ துரோகிய‌ல் இருக்கின‌ம் அவ‌ருட‌ன் க‌தைப்ப‌தை ரெக்கோட் ப‌ண்ணி  விஜேப்பியின் ஆட்க‌ளுக்கு போட்டு காட்டின‌து அப்ப‌டி க‌ட்சிக்குள் இருந்த‌வையே  ப‌ல‌ துரோக‌ங்க‌ள் செய்த‌வை உற‌வே 2009க்கு முத‌ல் த‌மிழீழ‌த்தில் ஒரு மாத்தையா ஒரு க‌ருணா.............த‌மிழ் நாட்டில் ப‌ல‌ நூறு க‌ருணா ப‌ல‌ நூறு மாத்தையா இதை எல்லாம் தாண்டி க‌ன‌த்த‌ வ‌லியோடு தான் க‌ட்சியை கொண்டு ந‌ட‌த்துகிறார் த‌ன‌து ம‌னைவிக்கு இந்த‌ தேர்த‌லில் சீட் த‌ர‌வில்லை என்று க‌ட்சியை விட்டு போன‌ ந‌ப‌ரும் இருக்கின‌ம்............... உங்க‌ட‌ பாதுகாப்புக்கு சொல்லுறேன் உற‌வே த‌மிழ் நாட்டுக்கு போகும் நிலை வ‌ந்தால் நாம் த‌மிழ‌ர் க‌ட்சியில் ப‌ய‌ணிக்கும் இள‌ம் பெடிய‌ங்க‌ள் கூட‌ அண்ண‌ன் சீமானை ப‌ற்றி யாழில் எழுதுவ‌து போல் நேரில் த‌ப்பா க‌தைச்சு போடாதைங்கோ.............நீயார‌ட‌ எங்க‌ள் அண்ண‌ன‌ விம‌ர்சிக்க‌ என்று ச‌ண்டைக்கும் வ‌ந்து விடுவின‌ம்.............இப்ப‌டி ப‌ல‌ ச‌ம்ப‌வ‌ங்க‌ள் இருக்கு சொல்ல‌.............இது யாழ்க‌ள் ஆனால் இதே முக‌ நூல் என்றால் நாம் த‌மிழ‌ர் க‌ட்சி ஜ‌ரிம் சீமான சீண்டி பாப்ப‌வ‌ர்க‌ளுக்கு அவேன்ட‌ பானியில் ப‌தில் அளிப்பார்க‌ள்...............6வ‌ருட‌த்துக்கு முத‌ல் என‌க்கும் திமுக்கா சொம்புக்கும் வாத‌ம் ஏற்ப‌ட்டு க‌ட‌சியில் எப்ப‌டி போய் முடிந்த‌து என்று என‌க்கு ம‌ட்டும் தான் தெரியும்............யாழில் இருக்கும் மூத்த‌வையின் சொல்லை கேட்டு யாழில் நான் இப்ப‌ யார் கூட‌வும் முர‌ன் ப‌டுவ‌தில்லை..........இது தான் கால‌ நீர் ஓட்ட‌த்தில் பெரிய‌வ‌ர்க‌ள் சொல்ல‌  என்னை நானே மாற்றி கொண்டேன்.............. வெற்றியோ தோல்வியே த‌னித்து போட்டி யார் கூட‌வும் கூட்ட‌னி இல்லை அதுக்காக‌ தான் பெரும்பாலான‌ த‌மிழ‌க‌ இளைஞ்ர்க‌ள் வ‌ய‌தான‌வ‌ர்க‌ள் அண்ண‌ன் சீமானை தொட‌ர்ந்து ஆத‌ரிக்கின‌ம்🙏🥰.................
    • மக்கள் ஏமாற்றப்படுக்கின்றார்கள் தான் ஆனால் நூறுவீதம் இல்லை.. அதே நேரம் தமிழ் அரசியல்வாதிகளும் சரியானவர்கள் இல்லை. இருப்பினும் புலம்பெயர்ந்த பலரும் அங்கிருப்பவர்களும் தமிழர் உரிமைகள் பற்றி விவாதிக்கொண்டிருக்கும் வேளையில்...... தமிழர் பகுதிகளில் ஆடம்பர உல்லாச விடுதிகளும், புலம்பெயர் மக்களின் கோடிக்கணக்கான செலவுடன் மாட மாளிகைகளும் திறந்த வெளி  அட்டகாச நிகழ்வுகளும் புலம்பெயர் மக்களின் கோடை கால கொண்டாட்ட சுற்றுலாக்களும்..... தமிழர்களுக்கு பிரச்சனை ஏதுமில்லை என்பதை சொல்லி நிற்கின்றது.   போர் மூலம் வந்த  வறுமையால் வாடுபவர்களை இனப்பிரச்சனை அட்டவணைக்குள் சேர்க்க உடன்படுமா அந்த சிங்கள இனவாத அரசுகள்? புலம்பெயர் தமிழர்களே ஊரில் வீடுகட்டிக்கொண்டு  பிற்காலத்தில்  நிம்மதியாக வாழலாம் எனும் போது.....?!  
    • சீமானுக்காக எதையும் தாங்குவார்கள் புலன்பெயர்ந்த ஈழதமிழர்கள். தேர்தலில் சீமான் வெற்றிபெறவில்லை என்றால் மெசின் மோசடி , சீமான் ஆங்கில மோகத்தால் மகனுக்கு தமிழ்நாட்டிலேயே ஆங்கில வழிக் கல்வி கற்ப்பிப்பது தமிழ் பள்ளிகள் சரியில்லை. தமிழ் தமிழ் என்று முழங்குவது அவரது அரசியல் பிழைப்பு.  இவர்  தமிழ்நாட்டு முதல் அமைச்சராக வந்தால் அரசுபாடசாலைகளிலும் தமிழை தூக்கி எறிந்துவிட்டு ஆங்கிலம் மூலம் கல்வி கற்பிப்பார் தமிழ் செய்த அதிஷ்டம் அவர் முதல் அமைச்சராகும் வாய்ப்பே  இல்லை
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.