Jump to content

அத்தை - சிறுகதை


Recommended Posts

அத்தை - சிறுகதை

சிறுகதை: அசோகமித்திரன், ஓவியங்கள்: ஸ்யாம்நட்சத்திர எழுத்தாளர்களின் சிறுகதை அணிவகுப்பு

 

செப்டம்பர் 1, 1939-ம் ஆண்டு, நாங்கள் சின்னக் கிராமம் போய்ச் சேர்ந்தோம். எனக்கு வயது எட்டு. அப்போது தான், இரண்டாம் உலக யுத்தம் தொடங்கியிருந்தது. 5-ம் தேதி, எங்கள் அத்தையின் கணவர் சுப்பைய்யருக்கு, சஷ்டியப்தபூர்த்தி. அத்தை, என் அப்பாவின் மூன்று அக்காக்களில் மூத்தவள். அவளுடைய இரண்டு தங்கைகளும் விதவைகள்.

`மெயின் லைன்' எனச் சொல்லப்படும் ரயில் மார்க்கமாகச் சென்றால், மாயவரம் தாண்டி அடுத்த ரயில் நிலையம் மல்லியம். அங்கு இருந்து ஒரு கட்டைவண்டியைப் பிடித்து எட்டு மைல் சென்றால், சின்னக் கிராமம் என்றொரு கிராமம் வரும். அங்குதான் எங்கள் அத்தை இருந்தாள்.

சின்னக் கிராமம், ஒத்தைத் தெரு அக்கிரஹாரமும், ஐந்தாறு தெருக்கள் விவசாயத் தொழிலாளர்களும் இருந்த ஒரு குடியிருப்பு. அக்கிரஹாரத்துக்கு ஒரு முனையில் ஒரு பெருமாள் கோயில். இன்னொரு முனை வீட்டுக்காரர்தான், கிராமத்துத் தபால் அதிகாரி. `தபால்காரர்' என யாரும் கிடையாது. அந்தக் கிராமத்துக்குக் கடிதம் வருவது எப்போதோ ஒருமுறை. அந்தக் கடிதத்தை அவரே உரியவரிடம் கொடுத்துவிடுவார். அவர்தான் அந்தக் கிராமத்துக்குப் பள்ளி ஆசிரியர். ஐந்தாறு பையன்களுக்கு ஒரே வகுப்பாக நடத்திவிடுவார். முறையான பள்ளி என்றால், மல்லியத்துக்குத்தான் போக வேண்டும். அப்படிப் போய்ப் படித்து, ஒரு மாணவன் சீமைக்குப் போய் ஐ.சி.எஸ் பட்டம்கூட வாங்கினான்.

அத்தைக்கு, எழுதப் படிக்கத் தெரியாது. ஆனால், அவள் வீட்டில் எப்போதும் விருந்தினர்கள். அண்ணன்மார்கள் இருவரும் நீரிழிவு நோய் கண்டு, உயிரைவிட்டாலும் அவர்கள் மகன்கள் நான்கு பேரில் யாராவது ஒருவன் அத்தை வீட்டில் பத்துப் பதினைந்து நாட்கள் இருந்துவிட்டுப் போவார்கள். அத்தைக்கு என் அப்பாவையும் சேர்த்து மூன்று தம்பிகள். அத்தையின் கணவர் சுப்பைய்யருக்கும் (நாங்கள் அத்திம்பேர் என அழைப்போம்) எழுத, படிக்கத் தெரியாது. வீட்டிலேயே இருக்க மாட்டார்.

காலையில் பழையது உண்டுவிட்டு வயலுக்குப் போய்விடுவார். பகல் ஒரு மணிக்கு வருவார். அத்தை வீட்டுக்கிணற்றுக்கு நீண்ட மூங்கில் வைத்த ஏற்றம் போன்ற ஏற்பாடு. அத்திம்பேர் வாளிவாளியாக  எடுத்துத் தலையில் கொட்டிக்கொள்வார். அப்புறம் சாப்பிடுவார். உடனே மீண்டும் வயலுக்குப் போய்விடுவார். விளைவு, வீட்டில் இரண்டு பெரிய குதிர்கள். ஒன்று, சாணம் பூசிய செங்கல் குதிர்;

p90a.jpg

மற்றொன்று மரத்தினால் ஆனது. இரண்டும் பத்து அடி உயரம் இருக்கும். மேலே அழுத்தமாக மூடும் மூடி. ஏணி போட்டுத்தான் நெல்லை குதிரில் கொட்டுவார்கள். நெல்லை எடுப்பதற்கு, குதிரின் அடிப்பாகத்தையொட்டி ஒரு சிறு துவாரத்தை ஒரு சிறு மரப்பலகையால் தடுத்திருப்பார்கள். நெல் வேண்டும்போது தரையில் ஒரு முறத்தை வைத்து, பலகையைத் தூக்குவார்கள். நெல் மளமளவென விழும். ஒரு தடவைக்கு நான்கு முறம் எடுத்த பிறகு, மரப்பலகையைக் கீழே தள்ளிவிடுவார்கள்.

நெல் விழுவது நின்றுவிடும். நெல்லைக் குத்தி அரிசி எடுத்துச் சமைப்பார்கள். இதனால் அரிசி எப்போதும் பழையதாக இருக்கும். சாப்பிடுவது வாழை இலையில். சிறுவர்களுக்கு மட்டை இலைகள். வாழைமரத்தை வெட்டியவுடன் பட்டை உரிப்பார்கள். இப்படி உரித்த பட்டைகளையும் சீராக வெட்டி இரண்டு பட்டைத்துண்டுகளை ஈர்க்குக் கொண்டு தைத்துவிடுவார்கள். அநேகமாக அது சதுரமாக இருக்கும். சதுரத் தட்டில் சாப்பாடு!

அத்தைக்கு, குழந்தை இல்லை. கடைசித் தம்பியின் குழந்தையை சுவீகாரம் எடுத்துக்கொண்டாள். ராமநாதன் என்ற பெயர் கொண்ட அந்தப் பையனுக்கும் படிப்பு வரவில்லை. அவனுக்கு உடுப்பும் பிடிக்காது. கோவணத்தைக் கட்டிக்கொண்டு வயல், குளம் எனக் கிராமத்தைச் சுற்றிச்சுற்றி வருவான். அவன் மீது அத்தையும் அத்திம்பேரும் உயிரையே வைத்திருந்தார்கள்.

 எங்கள் அக்காவுக்குத் திருமணம் நிச்சயமாகி சென்னை தியாகராய நகர் ராகவையா சாலையில் ஒரு மாளிகையை மூன்று நாட்களுக்கு வாடகைக்கு எடுத்துக்கொண்டோம். அந்த வீடு அழகப்பச் செட்டியாருடையது. `வாடகை ஒன்றும் வேண்டாம், பத்து நாட்கள் இருங்கள்' - செட்டியார் சொல்லிவிட்டார். அவருக்கு `வள்ளல்' என்ற பெயர் உண்டு. எங்கள் வரை அவர் வள்ளல்தான்.

கல்யாணத்துக்கு நான்கு நாட்கள் முன்பே அத்தை, அத்திம்பேர், ராமநாதன் மூன்று பேரும் வந்துவிட்டார்கள். பங்களாவில் இருந்த எல்லா மரங்கள் மீதும் ராமநாதன் ஏறி விளையாடினான். அடுத்த நாள் அவன் காணாமல்போய்விட்டான்.

அத்திம்பேர் பைத்தியம் பிடித்தவர்போல ஏதேதோ புலம்பினார். அத்தை, மீண்டும் மீண்டும் மாளிகைக் கிணற்றையே பார்த்தபடி இருந்தாள். எங்கள் அப்பாவும் ஊருக்குப் புதிதுதான். அக்கம்பக்கத்தில் தேடிய பிறகு, போலீஸில் மனு கொடுத்தார். அன்றிரவு யாருமே தூங்கவில்லை.

அடுத்த நாள் அதிகாலையில் ஒரு போலீஸ்காரர் வந்தார். “மவுன்ட் ரோடு போலீஸ் ஸ்டேஷனில் ஒரு பையன் கிடைத்திருக்கிறான். பெயர்கூடச் சொல்லத் தெரியவில்லை. உங்கள் பையனா எனப் பார்க்கிறீர்களா?”

அத்திம்பேர், அப்பாவை ``வா... உடனே'' என்று அதட்டினார். இருவரும் ஓட்டமும் நடையுமாக வாலாஜா சாலை சென்றார்கள்.

அது ராமநாதன்தான். எப்படி நான்கு மைல் போனான், எதற்குப் போனான் எனத் தெரியவில்லை. காவல் நிலையத்தில் அவனுக்கு பிஸ்கட் கொடுத்திருக்கிறார்கள். அப்பாவையும் அத்திம்பேரையும் பார்த்து, “நான் ஒண்ணும் வர மாட்டேன், போ!” என்றிருக்கிறான். காவல் நிலைய எழுத்தர் சந்தேகத்துடன்தான் பையனை அனுப்பினார். என் அப்பாதான் உறுதிமொழி எழுதிக் கொடுத்திருக்கிறார். கல்யாணத்துக்கு இல்லாமல் அத்திம்பேர், அத்தை, ராமநாதன் மூவரும் உடனே பகல் வண்டியில் ஊருக்குத் திரும்பிவிட்டார்கள். யாரும் அவர்களைத் தடுக்கவில்லை.
வாரம் ஒருமுறை நெல் குத்திப் பிரித்த அரிசி, தோட்டத்து வாழைக்காய், வாழைப்பூ, வாழைத்தண்டு, சேனை, கருணை, ராமநாதன் என்று இருந்த அத்தை-அத்திம்பேர் வாழ்க்கையில் மாறுதல் வரத் தொடங்கியது. சஷ்டியப்தபூர்த்திக்குத்தான் எவ்வளவு உறவினர்கள் வந்தார்கள்!

கண் பட்டதுபோல காரணமே தெரியாமல் சுப்பைய்யர் முதுகில் ஒரு சிறு புண் தோன்றியது. அது சிறிது சிறிதாகப் பெரிதாகி, சீழ் வடிய ஆரம்பித்தது. இது நடந்தபோது அத்தை வீட்டில் விருந்தினர் யாரும் இல்லை. தபால்காரர், என் அப்பாவுக்குக் கடிதம் எழுதினார்.

என் அப்பாவுக்கு ஒரு வாரம்தான் விடுப்பு கிடைத்தது. எங்கள் ஊரில் இருந்து சின்னக் கிராமம் செல்ல, இரண்டரை நாட்கள் ஆகும். அத்திம்பேர் நிலைமை சற்று மோசம்தான். ஒரு நாட்டு வைத்தியர் வாரம் இருமுறை சீழ் அகற்றி, கத்தக்காம்பும் மஞ்சளும் சேர்த்துக் குழைத்து, புண்ணை அடைத்து, கட்டு கட்டுவார். `அவர் சீழ் எடுக்கும்போது என் அப்பாவுக்கு அழுகையே வந்துவிட்டது' எனச் சொன்னார். ஒரு மெல்லிய மூங்கில் குச்சியின் நுனியில் துணியைச் சுற்றி, புண்ணில் நுழைத்துக் குடைவாராம் வைத்தியர்.

என் அப்பாவால் இரு தினங்களுக்குமேல் சின்னக் கிராமத்தில் இருக்க முடியவில்லை. திரும்பி வந்துவிட்டார். அவருடைய தம்பிகளை நான்கைந்து நாட்கள் இருந்துவிட்டு வரச் சொன்னார். அப்பாவுக்கும் அவருடைய தம்பிகளுக்கும் ஒரு பிரச்னைதான். ஒரு வாரத்துக்குமேல் விடுப்பு கிடைக்காது. ஒரு வாரத்தில் ஐந்து நாட்கள் பயணத்தில் போய்விடும்.

சுப்பைய்யர் இறந்துவிட்டார். இன்று அந்தப் புண்ணைப் புற்றுநோய் எனக் கண்டறிந்து, வைத்தியம் செய்வார்கள். எல்லாம் இன்றும் வாய்த்தான் பிழைத்தான் கதைதான். அத்திம்பேர் இறந்ததோடு, அத்தைக்கு இன்னொரு சூழ்நிலை மாற்றம். சுப்பைய்யருக்கு ஒரு தம்பி உண்டு என எங்களுக்கு எல்லாம் தெரியாது. அவர் சஷ்டியப்தபூர்த்திக்கு வரவில்லை. அந்தத் தம்பியும் இறந்துவிட்டார். அவருக்கு மனைவி, ஒரு பெண் இருந்திருக்கிறாள். பெண்ணை, கல்யாணம் செய்து கொடுத்துவிட்டார்கள். தம்பி மனைவி, சின்னக் கிராமத்துக்கு வந்து பங்கு கேட்டாள்.

அத்திம்பேருக்கு எழுதப் படிக்கத் தெரியாததால், ஒரு பத்திரமும் வைத்துக்கொள்ளவில்லை. ஆனால், கிராமத்தில் அவருக்கு மிகவும் மதிப்பு உண்டு. அவரே வயலில் இறங்கி உழுது, உரம் இட்டு, விதை விதைப்பார். அறுவடைக்கு மட்டும் ஆட்கள் அமர்த்திக்கொள்வார். கிராமத்துக் கணக்குப்பிள்ளை இரண்டு வயல்களைக் காட்டி, ``இதுதான் அவருடையது'' என்று சொன்னார்.

கிராமமே அதைத்தான் சொல்லியது. அத்தை, ஒரு வயலை தன் சகோதரன் மனைவிக்குக் கொடுத்துவிட்டாள். வீட்டில் ஓர் அறையை ஒழித்துக் கொடுத்தாள். சமையலறை பொது. இரண்டு சமையல் வேண்டாம் என்றும் சொல்லிவிட்டாள். அவளுடைய ஓரகத்திக்கு மிகுந்த வியப்பு. எழுதப் படிக்கத் தெரியாத அத்தை, உலக விவகாரங்களிலும் எவ்வளவு தெளிவாக இருக்கிறாள்!

ஓரகத்தி, சின்னக் கிராமத்தில் வந்து வசிப்பதில் அத்தைக்கு ஒரு சௌகரியம். வந்தவளை வீட்டையும் விவசாயத்தையும் பார்த்துக்கொள்ளச் சொல்லிவிட்டு, ராமநாதனை அவன் பெற்றோர் வீட்டில்விட்டாள். அது செகந்திராபாத்தில் இருந்து ஐம்பது அறுபது மைல் தூரத்தில் இருக்கும் சின்ன ரயில் நிலையம். அங்குதான் என் சித்தப்பா, ஸ்டேஷன் மாஸ்டராக இருந்தார். அத்தை எங்கள் வீட்டில் ஒரு மாதம் இருப்பதாக வந்தாள்.

எங்களுக்கு எல்லாம் மிகுந்த உற்சாகம். அத்தை சமையல் சரியான தஞ்சாவூர் சமையல். நாங்கள் எல்லாம் போட்டி போட்டுக்கொண்டு அத்தையின் சமையலை ரசித்தோம்.

ஒருநாள் அப்பாவிடம் அத்தை, “ஏன்டா சபேசா... உங்கிட்டே ஒண்ணு கேக்கணும்” என்றாள்.

“என்ன அக்கா?”

“என் ரெண்டு கை விரல்களும் என்னவோ மாதிரி இருக்கு. இங்கே நல்ல டாக்டர் யாரையாவது கேக்கலாமா?”

“சாயங்காலம் போலாமா?”

அப்பா, அத்தையை ராம்கோபால் டாக்டரிடம் அழைத்துப்போனார். நானும் உடன் சென்றேன்.

டாக்டர் வீட்டில் இல்லை. அவர் ரயில்வே ஸ்டேஷனுக்குப் பக்கத்தில் இருந்த கே.ஈ.எம் ஆஸ்பத்திரியில் காலை ஒன்பது மணியில் இருந்து மாலை ஆறு மணி வரை டியூட்டியில் இருப்பார். நிர்வாகம் அவருக்கு ஆஸ்பத்திரிக்கு மிக அருகில் வீடு கொடுத்திருந்தது. ஊரில் மிகுந்த செல்வாக்கு உடைய டாக்டர். அந்த நாளிலேயே அவர் கார் வைத்திருந்தார். அவருக்குக் கொடுத்திருந்த வீட்டில், கார் நிறுத்த இடம் இல்லை. ஆதலால், காரை ஆஸ்பத்திரி வளாகத்திலேயே நிறுத்தியிருந்தார். அப்பா அந்த இடத்துக்குப் போய்ப் பார்த்தார். கார் இல்லை.

“ஏன்டா... சகுனம் சரியில்லையே!” என்று அத்தை கேட்டாள்.

“அதெல்லாம் ஒண்ணும் இல்லை அக்கா. நாம இங்கே அவர் வீட்டிலதானே உக்காந்திருக்கோம். ஏதாவது அவசர கேஸ் இருக்கலாம். வந்துடுவார்.”

ராம்கோபால் இரவு 8:30 மணிக்கு வந்தார்.

“அஞ்சு நிமிஷம் இருங்கோ” என்று சொல்லிவிட்டு உள்ளே போனார். கால் மணி நேரம் கழித்து வந்தார். “ஸாரி, உங்களை ரொம்பக் காக்கவெச்சுட்டேன்” என்று சொல்லியபடியே, “யாரது... உங்க உறவா?” என்று கேட்டார்.

“என் அக்கா.”

“நமஸ்காரம்மா. என்ன உங்களுக்கு?”

அத்தைக்கு, சட்டென சொல்ல ஒன்றும் தோன்றவில்லை. அப்பாதான் சொன்னார், “அவ கையைப் பாருங்க. ஏதோ மாதிரி இருக்குன்னு சொல்றா.”

ராம்கோபால், அத்தையின் இரண்டு கைகளையும் மேலும் கீழுமாகப் புரட்டிப்பார்த்தார். எங்கே வைத்திருந்தார் எனத் தெரியவில்லை. ஒரு இன்ஜெக்‌ஷன் மூலம் அத்தையின் ஒரு விரலைக் குத்தினார்.
நான் “ஓ” என்று கத்திவிட்டேன். அத்தை சாதாரணமாக இருந்தாள்.

ராம்கோபால் சொன்னார், ``சபேசையர், உங்க அக்காவுக்குக் கையிலே உணர்ச்சியே இல்லை.”

“மரத்துப்போயிருக்கா?”

“இருக்கலாம் அல்லது வேறே ஏதாவது இருக்கலாம். நான் ஒண்ணு சொல்றேன், கேக்றேளா?”

“அதுக்குத்தானே வந்திருக்கோம்.”

“புருஷோத்தம் டாக்டர்கிட்டே காண்பியுங்கோ.”

“அவர் நாட்டு டாக்டர்தானே?”

“அவர் எல்.ஐ.எம் நானும் எல்.ஐ.எம்-தான். அவருக்கு இந்த மாதிரி விஷயங்களிலே அனுபவம் ஜாஸ்தி.”

புருஷோத்தம் டாக்டர் அருகில்தான், பஞ்சாபி கால்ஸா சத்திரத்துக்குப் பக்கத்துக் கடை. சாதாரணமாக 9 மணி வரை இருப்பார். அன்று 8 மணிக்கே வீட்டுக்குப் போய்விட்டார்.

அடுத்த நாளும் நான் போனேன். அத்தைக்கு ஆர்வம் போய்விட்டது. “என்னடாது! இருக்கிறவனுக்கு ஒண்ணும் தெரியலை. இன்னொருத்தன் எவ்வளவு நாழி காக்கவைப்பானோ?”

“இவரை உடனே பார்த்துடலாம் அக்கா. ராம்கோபால், வீட்டுல யாரையும் பார்க்கிறது இல்லை. அதனாலதான் லேட் ஆச்சு. புருஷோத்தம் டாக்டர் கடை வெச்சிருக்கார்.”

p90b.jpg

“கடையா?”

“யார்துனு தெரியலை. அங்கே வரிசையா ஒரே கடையா இருக்கும். ஆனா, புருஷோத்தம் டாக்டர் பக்கா டிஸ்பென்ஸரி வெச்சிருக்கிறார். என் மூத்தவ `வயத்து வலி வயத்து வலி'னு துடிச்சா.

புருஷோத்தம் டாக்டர்தான் ஒரு மருந்து எழுதிக் கொடுத்தார். உடனே சரியாச்சு.”

அத்தைக்கு நம்பிக்கை வரவில்லை. வேண்டா வெறுப்பாகத்தான் வந்தாள். அன்றும் நான் இருந்தேன்.

புருஷோத்தம் டாக்டர் அத்தையின் கைகளுடன் கால்களையும் பார்த்தார்.

“ஐயர்... கொஞ்சம் இந்தப் பக்கமா வர்றீங்களா?” என்று தனியாக அழைத்தார்.

என் அப்பாவுடன் நானும் போனேன்.

“நீங்க அக்காவுக்கு வைத்தியம் பண்ணணும்னா, டிச்பள்ளி கொண்டுபோவணும்” என்றார்.

டிச்பள்ளி, செகந்திராபாத்தில் இருந்து 90 மைல் தூரத்தில் இருந்தது. அங்கு ஜெர்மன் பாதிரிமார்கள் ஓர் ஆஸ்பத்திரி அமைத்திருந்தார்கள். அங்கு எங்கள் அப்பாவின் சிநேகிதர், எழுத்தர் வேலை பார்த்துக்கொண்டிருந்தார். அந்த ஆஸ்பத்திரி குஷ்டரோகிகளுக்கு. நான் என் அப்பாவின் சிநேகிதருடன் அதைச் சுற்றிப் பார்த்திருக்கிறேன். எல்லாருமே குஷ்டரோகிகள். பரம ஏழையில் இருந்து சிறிது வசதி படைத்தவர்களும் அங்கு இருந்தார்கள். யாரைப் பார்த்தாலும் பயமாக இருக்கும். இரண்டாம் உலக யுத்தக் காலத்தில் அங்கே பிரிட்டிஷ் ஒற்றர்கள் இருந்ததாகச் சொல்வார்கள்.

“இல்லை, வேணாம். உங்க அக்கா மடி ஆசாரம் பார்க்கிறவங்க. வயசு எழுவது இருக்குமா?”

“எழுபத்தி இரண்டு.”

“இப்போ போய் அங்கே போட வேண்டாம். இப்படியே ஜாக்கிரதையாகப் பார்த்துங்க. முக்கியமா, அவங்க தூங்குறப்போ கை கால் விரல்களை மூடிக்கணும். எலி வந்து கடிச்சிடும்.”

“எலியா?”

“ஆமாம். பின்னே ஏன் விரல்லாம் குட்டையாகிறது?”

“எலி கடிச்சா?”

“ஆமாங்க. இது ரொம்பப் பேருக்குத் தெரியறது இல்லை.”

சிறிது நேரம் நாங்கள் பேசாமல் நின்றோம். அதற்குள் டாக்டருக்கு இன்னொரு நோயாளி வந்துவிட்டார்.

நாங்கள் வீடு திரும்பினோம்.

“என்னடா, வைத்தியர் என்ன சொன்னார்?” என்று அத்தை கேட்டவண்ணமே இருந்தாள்.

“ஒண்ணும் இல்லை. நீ இனிமே நன்னாப் போத்திண்டு படுக்கணும்.”

“எனக்கு வேத்து வேத்துக் கொட்டுமே?”

``பரவாயில்லை. ஆனா, நீ நன்னாப் போத்திண்டுதான் படுத்துக்கணும்.”

எங்கள் வீட்டில் நாங்கள் பார்த்துக்கொண்டுவிடுவோம். ஆனால், சின்னக் கிராமத்தில் அத்தைக்கு யார் போத்திவிடுவார்கள்?

அத்தை ஊருக்குப் போய்விட்டாள். என் அப்பா அவருடைய மாப்பிள்ளைகளால் பல விசித்திரமான சிக்கல்கள். தாங்க முடியாத வேதனையுடன் உயிரைவிட்டார். அப்பா வம்சத்திலேயே ஓர் ஆண்கூட 55 வயதைத் தாங்கவில்லை. நான் குடும்பத்துடன் சென்னைக்கு வந்தேன். என் அப்பாவை அடுத்து அவர் தம்பிகளும் அற்பாயுளில் உயிரைவிட்டார்கள். ராமநாதன் பிறந்த குடும்பம் கும்பகோணத்துக்குப் போய்விட்டது. அத்தையும் சின்னக் கிராமத்தில் இருந்து அங்கே போய் இருந்தாள். ஆனால், ஒருநாள் படுத்தவள் எழுந்திருக்கவே இல்லை. இந்த அநாயாச மரணம் அத்திம்பேருக்குக் கிட்டவில்லை. ராமநாதன்தான் அத்தைக்குக் கொள்ளி போட்டிருக்கிறான்.

நான் அத்தையின் 10-வது நாள் கிரியைகளுக்கு கும்பகோணம் சென்றிருந்தேன்.

அத்தைக்காகத்தான் போயிருந்தேன். ஆனால், என் முன்னோர்களுக்குத்தான் எள்ளும் தண்ணீரும் விடவேண்டியிருந்தது.

சாப்பாடாகி, ஈரத்துணிகளை ஒரு பையில் போட்டுக் கொண்டிருந்தேன். ராமநாதன் வந்தான்.

“என்னையும் அழைச்சிண்டு போ” என்றான்.

எனக்குத் தூக்கிவாரிப் போட்டது.

நான் பதில் சொல்லவில்லை. முதலில் என் அம்மாவுக்கு என் அப்பாவின் இரு தம்பிகளையும் சுத்தமாகப் பிடிக்காது. ஒரு காரணம் என் அப்பா ஒரு வேலையில் அமர்ந்துவிட்டார் எனத் தெரிந்தவுடன் அவர்களும் செகந்திராபாத் வந்துவிட்டார்கள். அவர்களுக்கு வேலை கிடைக்க ஆறு மாதங்களுக்கு மேல் ஆகியிருக் கிறது. அம்மா சொல்வாள்: `ஆறு மாசம் இரண்டு தடியன்களுக்கும் சோத்தை வடிச்சு வடிச்சுக் கொட்டினேன்' என்று. ஆதலால் அவள் ராமநாதனை அத்தையின் சுவீகாரப் பிள்ளையாகப் பார்க்க மாட்டாள். அவன் அப்பாவின் பிள்ளையாகத்தான் பார்ப்பாள்.

சிறிது நாட்கள் கழித்து ராமநாதனும் செத்துப்போய்விட்டான். அவனுக்கு அத்திம்பேர் இறந்தபோதே, பாதி உயிர் போயிருக்கும்.

இதெல்லாமே எப்போதோ நடந்து முடிந்தவை. இதன் பிறகுதான் என் திருமணம் நடந்தது. ஆனால், என் வரை அத்தை நினைவுகள் எதுவுமே மறையாதுபோல் இருக்கிறது. என் எண்பத்தைந்தாவது வயதில் நான் என் முதல் மகன் வீட்டில் இருக்கிறேன். இதை தற்செயல் எனக் கூற முடியாது. அவன் வீடு சென்னை தியாகராய நகரில் இருக்கிறது. அதுவும் என் அக்கா திருமணம் நடந்த வீட்டின் எதிரிலேயே இருக்கிறது. அதாவது, அந்த வீட்டில்தான் என் அத்தையும் அவள் கணவரும் கதறிக் கதறித் தவித்தபோது, ராமநாதன் மவுன்ட் ரோடு போலீஸ் ஸ்டேஷனில் பிஸ்கட் சாப்பிட்டுக்கொண்டிருந்தான்!

http://www.vikatan.com/anandavikatan

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Similar Content

  • Topics

  • Posts

    • "பழைய சில பகிடிகள்"    1. Which is the longest word in the English dictionary? / ஆங்கில அகராதியில் மிக நீளமான சொல் எது? Smile -  Because after 'S' there is a 'mile'. 2.”மழைமேகம் [மழை may come] க்கு எதிர்சொல் என்ன?  மறுமொழி : மழை  may not come. 3.சாப்பிட  எதுவும்  சூடாக  கிடைக்காத  ஹோட்டல்  எது ?  மறுமொழி : ஆறிய  பாவன்   4. Which is the coolest alphabet in English? / ஆங்கிலத்தில் குளிரான  எழுத்து எது? மறுமொழி : ‘B’. ஏன்னா  அது  ‘A”C’ க்கு நடுவிலே  இருக்கு . 5. What is common to robbers and tennis players ? / கொள்ளையர்களுக்கும் டென்னிஸ் வீரர்களுக்கும் பொதுவானது என்ன? Ans: They both involve rackets(racquets) and courts! 6. கிண்ணத்துல  கல்லை  போட்டால்  ஏன்   மூழ்கிறது ?  மறுமொழி: அதுக்கு  நீச்சல்  தெரியாது  7. In a grocery store, a Sardarji was starring at an orange juice for couple of hours. You know why ? / ஒரு மளிகைக் கடையில், ஒரு சர்தார்ஜி இரண்டு மணி நேரம் ஆரஞ்சு ஜூஷை உற்றுப் பார்த்துக்கொண்டே  கொண்டிருந்தார். ஏன் தெரியுமா? Ans: Because it said CONCENTRATE. 8. What is the difference between a fly and a mosquito?  Ans: A MOSQUITO can FLY but a FLY cannot MOSQUITO!! 9. ஒரு  அறையிலே  ஒரு  மூலையில்  ஒரு  பூனை  இருக்கு . வலது மூலையில் ஒரு  எலி . இடது மூலையில்  ஒரு கிண்ணத்தில் பால். கேள்வி  : பூனையின்  கண்  இதில்  இருக்கும்  ?  மறுமொழி: பூனையின்  கண்  அதோட  முகத்தில்தான்  இருக்கும்   10. Which runs faster, Hot or Cold? / எது வேகமாக ஓடுகிறது? Hot or Cold?? ANS: Hot, because anyone can catch a cold
    • வீரப்பன் பையன்26 என்பதன் அர்த்தம் நீங்கள் வீரப்பனின் மகன் எனும் அர்த்தம் ஆகாதா? உங்கள் விருப்பம். 
    • "ஓடம்"   "கற்பகம் என்ற புகழ் பனையின் வளங்கள் - உந்தன்  காலடியில் களஞ்சியமாய்க் கண்ட பலன்கள்  பொற்பதியில் பஞ்சம் பசி பட்டினி தீர்க்கும் - தீராப் போரினிலும் அஞ்சேலென மக்களைக் காக்கும்!"  "கல்வி நிலையங்கள் கோயில் குளங்கள் - குதிரை  காற்றாய்ப் பறந்து செல்லும் நீண்ட வெளிகள் தொல்லை துயரம் தீர்க்கும் மருந்து மூலிகைகள் - உனைத்  தொட்டுக் கண்ணிலே ஒற்றித் தோயும் அலைகள்!"  "தென்னைமர உச்சியிலே திங்கள் தடவும் - கடல்  திசைகளெல்லாம் மணிகளை அள்ளி எறியும் வெள்ளை மணல் துறைகளை அலைகள் மெழுகும் - எங்கள் உள்ளம் அதிலே பளிங்கு மண்டபம் காணும்!" வித்துவான் எஸ் அடைக்கலமுத்து நெடுந்தீவை வர்ணித்தவாறு, நீலப் பச்சை வண்ணம் கொண்ட இரத்தினக் கல் போன்ற  நீர் இலங்கையின் கரையை முத்தமிடும் இந்தியப் பெருங்கடலின் மையத்தில், இலங்கையின் நெடுந்தீவு என்று அழைக்கப்படும் டெல்ஃப்ட் தீவு உள்ளது. இங்கே, கடல் மற்றும் கரடுமுரடான நிலப் பரப்புகளின் காலத்தால் அழியாத அழகுக்கு மத்தியில், நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் இளம் கணித ஆசிரியராக, கூர்மையான பார்வை, முறுக்கு மீசை, வாட்டசாட்டமான உடல்வாகு, வெளிப்படையான பேச்சு என கிராமத்து மனிதர்களின் அத்தனை சாயல்களையும் ஒருங்கே பெற்ற வெண்மதியன் கடமையாற்றிக் கொண்டு இருந்தான். இவர் நெடுந்தீவையே பிறப்பிடமாகவும் கொண்டவர் ஆவார்.  அதுமட்டும் அல்ல, கடல் வாழ்வுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட வரும் ஆவார். அதனால் தனக்கென ஒரு ஓடம் கூட வைத்திருந்தான். போர் சூழலால் வடமாகாணம் அல்லல்பட்டுக் கொண்டு இருந்த தருணம் அது. மகா வித்தியாலயத்தில் ஓர் சில முக்கிய பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்கள் தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள குறிக்கடுவான் ஜெட்டியில் இருந்து தான் வந்து போனார்கள். என்றாலும் படகு சேவை, பல காரணங்களால் ஒழுங்காக இருப்பதில்லை. தான் படித்த பாடசாலை இதனால் படிப்பில் பின்வாங்கக் கூடாது என்ற நல்ல எண்ணத்துடன் தன் ஓடத்திலேயே, வசதிகளை அமைத்து காலையும் மாலையும் இலவச சேவையை, தேவையான நேரங்களில் மட்டும், அவர்களுக்காக, பாடசாலைக்காக தனது ஆசிரியர் தொழிலுடன், இதையும் செய்யத் தொடங்கினான். இதனால் வெண்மதியனை 'ஓடக்கார ஆசிரியர்' என்று கூட சிலவேளை சிலர் அழைப்பார்கள். விஞ்ஞானம் கற்பிப்பதில் ஆர்வம் கொண்ட உற்சாகமான இளம் பெண் எழிற்குழலி, தனது பட்டப் படிப்பை முடித்து, முதல் முதல் ஆசிரியர் தொழிலை யாழ் / நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் பதவியேற் பதற்காக, அன்று குறிக்கடுவான் படகுத்துறைக்கு, மிகவும் நேர்த்தியாக சேலை உடுத்திக் கொண்டு வந்தார். உடையே ஒரு மொழி. அது ஒரு காலாசாரம் மட்டுமல்லாது சமூக உருவாக்கமுமாகும். உடை உடுத்துபரை மட்டுமின்றி பார்ப்பவரின் புரிதல்களையும் பாதிக்க வல்லது. அது மனிதர்களிடையே வேறுபாடுகளை ஏற்படுத்தவும் செய்கிறது. மனிதன் உடுத்தும் உடை அவன் மீது அவனுடன் உறவாடும் மற்ற மனிதர்களின் உள்மனத் தீர்ப்புகளைத் தீர்மானிக்கிறது என்பது கட்டாயம் அவளுக்கு தெரிந்து இருக்கும். அதனால்த் தான், தன் வேலைக்கான முதல்  பயணத்தில், தன்னை இயன்றவரை அழகாக வைத்திருக்க முயன்றால் போலும்!  அன்று வழமையான படகு சேவை சில காரணங்களால் நடை பெறவில்லை. என்றாலும் பாடசாலை ஏற்கனவே அவளுக்கு, தங்கள் பாடசாலை கணித ஆசிரியர், இப்படியான சந்தர்ப்பங்களில், தனது ஓடம் மூலம் உங்களுக்கு பயண ஒழுங்கு செய்வாரென அறிவுறுத்தப் பட்டு இருந்ததால், அவள் கவலையடையவில்லை.  அன்று வழமையாக வரும் மூன்று ஆசிரியர்கள் கூட வரவில்லை. அவள் அந்த கணித ஆசிரியர் ஒரு முதிர்ந்த அல்லது நடுத்தர ஆசிரியராக இருக்கலாம் என்று முடிவுகட்டி, அங்கு அப்படியான யாரும் ஓடத்துடன் நிற்கிறார்களா என தன் பார்வைக்கு எட்டிய தூரம் வரை பார்த்தாள். அவள் கண்ணுக்கு அப்படி யாரும் தெரியவில்லை. அந்த நேரம் ஜெட்டிக்கு ஒரு இளம் வாலிபன் ஓடத்தை செலுத்திக் கொண்டு வந்து, அவளுக்கு அண்மையில் அதை கரையில் உள்ள ஒரு கட்டைத்தூணுடன் [bollard] கட்டி நிறுத்தினான்.  எழிற்குழலி, இது ஒருவேளை கணித ஆசிரியாரோவென, தனது அழகிய புருவங்களை உயர்த்தி, ஒரு ஆராச்சி பார்வை பார்த்துக் கொண்டு இருந்தாள். வெண்மதியன் ஒரு சிறிய புன்னகையுடன், எந்த தயக்கமும் இன்றி, அவள் அருகில் வந்து, நீங்கள் விஞ்ஞான ஆசிரியை எழிற்குழலி தானே என்று கேட்டான். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றியது நம் தமிழ் மட்டும் அல்ல, காதல் உணர்வுகளும் தான் என்பதை அவர்கள் இருவரும் அந்த தருணம் உணரவில்லை. அவளுக்கு இது முதல் உத்தியோகம், தான் திறமையாக படிப்பித்து பெயர், புகழ் வாங்க வேண்டும் என்பதிலேயே மூழ்கி இருந்தாள். அவனோ எந்த நேரம், என்ன நடக்கும் என்ற பரபரப்பில், கெதியாக பாதுகாப்பான நெடுந்தீவு போய்விட வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தான்.  அவர்கள் இருவரும் ஓடத்தில் ஏறினார்கள், வெண்மதியன், எழிற்குழலியை பாதுகாப்பாக இருத்தி விட்டு ஓடத்தை ஜெட்டியில் இருந்து நகர்த்தினான். இது ஒரு சாதாரண பயணம் அல்ல, இருவரின் வாழ்க்கையை என்றென்றும் மாற்றும் ஒரு பயணத்தைத் ஓடத்தில் தொடங்குகிறார்கள் என்பதை அவர்கள் கண்கள், ஒருவரை ஒருவராவர் மௌனத்தில் மேய்ந்து கொண்டு இருந்தது, உண்மையில் சற்று உறக்கச் அவர்களின் இதயத்துக்கு சொல்லிக்கொண்டு இருந்தது. ஆனால் அவர்கள் இருவரும், அதை கவனிக்கும் கேட்கும் நிலையில் இருக்கவில்லை.   “நிலவைப் பிடித்துச் சிறுகறைகள் துடைத்துக் - குறு முறுவல் பதித்த முகம், நினைவைப் பதித்து - மன அலைகள் நிறைத்துச் - சிறு நளினம் தெளித்த விழி .” இந்த அழகுதான் அவனையும் கொஞ்சம் தடுமாற வைத்துக் கொண்டு இருந்தது. அவர்கள் இருவரும், தம்மை சுற்றிய சூழல் மறந்து, ஒவ்வொருவரின் இரண்டு விழிகளும் மௌனமாக பேசின. எத்தனை முறை பார்த்தாலும் விழிகளுக்கு ஏன் தாகம் தணிவதில்லை?  ஆர்பாரிக்கும் பேரலை ஒருபக்கம், அந்த இரைச்சலுக் குள்ளும் அவர்கள் தங்களை தங்களை அறிமுகம் செய்தார்கள். அனுமதியின்றி சிறுக சிறுக சிதறின இருவரினதும் உறுதியான உள்ளம். அவர்களின் உள்ளுணர்வு மிகவும் வித்தியாசமாய் இன்று இருந்தது. அவளின் கண்ணசைவுக்கு பதில் கூறிக் கொண்டிருந்த வெண்மதியன், ஏனோ அவளின் உதட்டசைவிற்கு செவிசாய்க்க முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தான். “ஹலோ” என்று மீண்டும் அவளின் குரல் கேட்க, தன் எண்ணங்களை சட்டென்று விண்ணிலிருந்து கடலிற்கு கொண்டு வந்தான்! " இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு ?", பொதுவாக ஒரு பயணம் 45 நிமிடம் எடுக்கும். இன்று சற்று கூட எடுத்து விட்டது. 15 நிமிடம் என்றான். அதன் பின்பு அவர்கள் இருவரும் மௌனமாக நெடுந்தீவு அடைந்தனர். என்றாலும் அவர்களின் எண்ணங்கள் அவர்களின் ஓடத்தை உலுக்கிய மென்மையான அலைகளைப் போல பின்னிப் பிணைந்தன. அவர்கள் அன்றில் இருந்து ஓடத்தில் பயணம் செய்த போது எல்லாம், எழிற்குழலியும் வெண்மதியனும் ஒன்றாக எதிர்காலத்தை உருவாக்குவதற்கான கனவுகளைப் பகிர்ந்து கொண்டனர். அவர்களின் உரையாடல்கள் சிரிப்பாலும், அபிலாஷைகளாலும் நிரம்பியிருந்தன, அவர்களின் இதயங்கள் கடலின் தாளத்துடன் ஒத்திசைந்து துடித்தன. என்றாலும் இன்னும் அவர்கள் வெளிப்படையாகத் தங்கள் ஆசைகளை ஒருவருக் கொருவர் சொல்ல வில்லை. எது எப்படியாகினும் அவர்களின் சொல்லாத காதலுக்கு ஓடமே சாட்சியாக இருந்தது? அவர்கள் இருவரும் ஒருவருக் கொருவர் தெரியாமல் ஓடத்துக்கு நன்றி தெரிவித்தனர்.  ஓடம் ஒவ்வொரு முறையும், இந்தியப் பெருங்கடலில் ஒரு ரத்தினமாக விவரிக்கப் படும் நெடுந்தீவுக்கு போகும் பொழுது அல்லது அங்கிருந்து திரும்பும் பொழுது, அதன் அழகு அலைகளுக்கு மத்தியில் மின்னும் விலைமதிப் பற்ற கல்லின் அழகு போல அவர்களுக்கு இப்ப இருந்தது. ஓடத்தில் இருந்து, நெடுந்தீவின் கரடு முரடான நிலப்பரப்புகள், காற்று வீசும் சமவெளிகள், நெடுந்தீவுக்கே உரித்தான கட்டைக் குதிரைகள் மற்றும் பெருக்கு மரம் எனப்படும் பாவோபாப் மரம் போன்றவற்றை, பயணித்துக் கொண்டு, அவை மறையும் மட்டும் அல்லது தெரியும் மட்டும் பார்ப்பதில் இருவரும் மகிழ்வு அடைந்தனர். அப்படியான தருணங்களில் இருவரின் நெருக்கமும் எந்த அச்சமும் வெட்கமும் இன்றித், இருவருக்கும் இடையில் உள்ள இடைவெளியை குறைத்துக் கொண்டு வந்தன. "ஓடத்தான் வந்தான் அன்று-விழி ஓரத்தால் பார்த்தான் நின்று சூடத்தான் பூவைத் தந்தான்-பூவை வாடத்தான் நோவைத் தந்தான்!" 'ஓடத்தைக் கைகள் தள்ளும்-கயல் ஓடிப்போய் நீரில் துள்ளும் நாடத்தாம் கண்கள் துள்ளும்-பெண்மை நாணத்தால் பின்னே தள்ளும்!" "வேகத்தால் ஓடஞ் செல்லும்-புனல் வேகத்தைப் பாய்ந்தே வெல்லும் வேகத்தான் வைத்தான் நெஞ்சம்-அந்த வீரத்தான் வரவோ பஞ்சம்!" கவியரசர் முடியரசனின் கவிதை அவளுக்கு ஞாபகம் அடிக்கடி வந்து, தன் வாய்க்குள் மெல்ல மெல்ல முணுமுணுப்பாள். ஒருமுறை எழிற்குழலி, தன் மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்பு எடுக்க வேண்டி இருந்தது. மற்ற மூன்று ஆசிரியர்களும் வழமையான படகு சேவையில் திரும்பி விட்டனர். மறையும் சூரியனின் தங்க நிறங்கள் ஓடத்தின் நிழலை கடல் அலையில் பிரதிபலிக்க, எழிற்குழலியும் வெண்மதியனும் ஓடத்தில் கைகோர்த்து அமர்ந்து இருந்தனர். ஓடத்தில் மோதிய அலைகளின் சத்தம் அவர்களின் அந்தரங்க தருணத்திற்கு ஒரு இனிமையான பின்னணியை வழங்கியது. எழிற்குழலி, வெண்மதியன் மார்பில் சாய்ந்தாள், அவனின் கையை வருடி முத்தமிட்டாள். அவளுடைய கண்கள் வானத்தின் எண்ணற்ற வண்ணங்களைப் பிரதிபலித்தன. "இந்த இடம் முற்றிலும் மூச்சடைக்கக் கூடியது அல்லவா?" அவள் முணுமுணுத்தாள், அவள் குரல் ஒரு கிசுகிசுவுக்கு மேல் தாண்டவில்லை. வெண்மதியன் ஓடத்தை கவனமாக பார்த்து செலுத்திக் கொண்டு, மெல்ல தலையசைத்தான், அவனது பார்வை அவளது கதிரியக்க புன்னகையில் கூடிக் குலாவியது. "இந்த தருணத்தின் அழகை ரசிக்க,  காலமே ஓடாமல் நின்று விட்டது போல் இருக்கிறது" என்று அவன் பதிலளித்தான், அவனது குரலில் ஒரு மயக்கம் நிறைந்து இருந்தது.  அவர்களின் விரல்கள் பின்னிப் பிணைந்தன, அவர்கள் நீலக்கடலின் அழகில் உலாவினர். என்றாலும் அவ்வப் போது அடிவானத்தில் சூரியன் கீழே இறங்குவதைப் பார்த்தார்கள். ஒவ்வொரு நொடியும், அவர்களின் இதயங்கள் ஒருமனதாக துடித்தன, ஒவ்வொரு கணத்திலும் அவர்களின் இணைப்பு மேலும் மேலும் வலுவடைந்தது. ஒரு வார இறுதியில், இருவரும் நெடுந்தீவில் சந்தித்தனர். அங்கே அவர்கள் ஒரு ஒதுக்குப்புற இடத்தை அடைந்ததும், வெண்மதியன் எழிற்குழலியைத் தன் கைகளுக்குள் இழுத்துக் கொண்டான், கடலின் மென்மையான தாளத்தை ரசித்தபடி, அவர்கள் ஒரு மென்மையான இதழுடன் இதழ் முத்தத்தைப் முதல் முதல் பகிர்ந்து கொண்டனர், அதன் பின், நட்சத்திரங்கள் நிரம்பிய வானத்தின் விதானத்தின் [கூரையின்] கீழ், எழிற்குழலியும் வெண்மதியனும், யாழ்பாணத்தை நோக்கி அமைதியான நீரில், நிலவொளியில் ஓடத்தில் பயணம் செய்தனர். இருள் சூழ்ந்திருந்த பரந்து விரிந்திருந்த நிலவின் மென் பிரகாசம், அவர்களின் முகங்களில் ஒளி வீசியது. ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டு, அருகருகே அமர்ந்து, தண்ணீரில் உள்ள நிலவின் மின்னும் பிரதிபலிப்பைப் பார்த்தபடி விரல்கள் பின்னிப் பிணைந்தன. அவர்களுக்கிடையேயான அமைதி, அவர்களின் காதல், சொல்லப்படாத மொழியால் நிரம்பியிருந்தது. "என் வாழ்க்கையில் உன்னைப் பெற்றதற்கு நான் எவ்வளவு உண்மையிலேயே பாக்கியவான் என்பதை இது போன்ற தருணங்கள் எனக்கு உணர்த்துகின்றன," என்று வெண்மதியன் கிசுகிசுத்தான், அவனது குரல் அலைகளின் மென்மையான தாளத்திற்கு மேலே கேட்கவில்லை. எழிற்குழலி தன் தலையை அவன் தோளில் சாய்த்துக் கொண்டாள், அவள் இதயம் உணர்ச்சியால் பொங்கி வழிந்தது. "மற்றும் நான், நீ," அவள் பதிலளித்தாள், அவளுடைய குரல் நேர்மையுடன் மென்மையாக இருந்தது. "இரவின் அழகால் சூழப்பட்ட உங்களுடன் இங்கே இருப்பது ஒரு கனவா? நனவா ?." என்றாள்.  அவர்களின் ஓடம் அலைகளின் குறுக்கே சிரமமின்றி சென்றது, இரவின் இதயத்திற்கு அது அவர்களை மேலும் கொண்டு சென்றது. கடந்து செல்லும் ஒவ்வொரு தருணத்திலும், அவர்களின் காதல் ஆழமடைந்தது, நேரத்தையும் இடத்தையும் தாண்டிய ஒரு பிணைப்பில் அவர்களை ஒன்றாக 'ஓடம்' இணைந்தது!  நன்றி  [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
    • 15/2/24  மூன்று பேர் வைத்தியசாலைக்கு போய் தாமதமானதால் கடையில் வடை மூன்று தேநீர் ஒன்று வாங்கினோம், எண்ணூற்று பத்து ரூபா எடுத்து விட்டு மிகுதி காசைத்தந்தார் ஒரு கடைக்காரர். ஒருவேளை அவர்  கணக்க்கில மட்டோ அல்லது  என்னைப்பார்த்து பரிதாபப்பட்டு தர்மம் இட்டாரோ தெரியவில்லை! இதுக்கு யாரும் நீதிமன்றம் செல்ல எத்தனிக்கக் கூடாது.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.