Jump to content

சிவசேனை : புதிய திசைகள்


Recommended Posts


தமிழ் மக்களது நீண்ட கால விடுதலைப் போராட்டத்தில் தமிழ் தலைமைகள் என அறியபட்டவர்கள், நண்பர்கள் எதிரிகளை இனங்காண்பதில் தொடர்ந்து தவறிழைத்து வருகிறார்கள். இதன் தொடர்ச்சியாவே இலங்கையில் ஏனைய மதத்தினரிடமிருந்து இந்துக்களைக் காப்பாற்றுவோம் என்ற கோசத்துடன் மறவன்புலவு சச்சிதானந்தம் அவர்கள் இந்து தீவிரவாதிகளுக்குச் செங்கம்பள வரவேற்பு கொடுக்கும் நிகழ்வும் பார்க்கப்பட வேண்டும். வடக்கிலும், கிழக்கிலும் சில பாராளுமன்ற உறுப்பினர்களும் விஷ்வ இந்து பரிஷத் போன்ற அமைப்புகளுடன் நெருங்கிய தொடர்புகளை ஏற்படுத்திக் கொண்டுள்ளனர். இதனை விட சில தமிழ் தலைவர்கள் பொது பல சேன போன்ற தீவிர பௌத்த அமைப்புகளுடன் இரகசிய வேலைத் திட்டங்களையும் ஆரம்பிக்கத் தலைப்பட்டுள்ளனர்.
 
இந்துத்துவ வெறியை மராட்டியர் மத்தியில் ஊட்டி அதை தென்னிந்தியருக்கு எதிராக அதுவும் குறிப்பாக மும்பாய் தமிழர்களுக்கு எதிரான மராட்டிய இன வெறியாக வெளிப்படுத்தியதுடன்; தென்னிந்தியர்களை மதராசிகள், லுங்கிவாலாக்கள் என்று பரிகசித்து அவர்கள் மேல் பல தாக்குதல்களை மேற்கொண்ட ஒரு இனவாத, மதவாத அமைப்பே ஷிவ் சேனவாகும். இந்தியாவின் பலபகுதிகளில் மதக் கலவரங்களில் நேரடியாகப் பங்கு பற்றிய ஆர்.எஸ்.எஸ், அதன் பினாமியான விஷ்வ இந்து பரிஷத் ஆகிய அமைப்புகளின் அனுசரணையுடனேயே இலங்கையில் சிவசேனை அமைப்பு உருவாக்கப் பட்டிருப்பதனை அதன் ஸ்தாபகர் சச்சிதானந்தம் ஊடகங்களுக்குக் கொடுத்த பேட்டிகள் மூலம் உறுதி செய்து கொள்ள முடியும். இந்தப் புதிய அமைப்பு பலரது கவனத்தை ஈர்த்தமைக்கான முக்கிய காரணங்களில் அதுவும் ஒன்று. தற்போது வவுனியாவிலும் திருகோணமலையிலும் தமது அலுவலகங்களைக் கொண்டிருக்கும் இவ்வமைப்பு 25 மாவட்டங்களிலும் உள்ள இந்துக்களைக் கலந்தாலோசித்து வருவதாகத் தெரிவித்துள்ளது.

தமிழர்கள் நீண்ட காலமாகவே பல தளங்களிலும் பாரிய சவால்களை எதிர்நோக்குகின்றனர். முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் பின் தமிழர் பகுதியெங்கும் முளைத்திருக்கும் பௌத்த விகாரைகள் அம்மக்களால் பௌத்த ஆக்கிரமிப்புச் சின்னங்களாகவே பார்க்கப் படுகின்றன; இந்த நிலை தமிழர்கள் மத்தியில் தமது இன, மத அடையாளம் குறித்த அச்ச நிலையைத் தோற்றுவித்திருக்கிறது. தமிழ் தேசத்தின் அபிலாஷைகளை ஒட்டி தமது நிகழ்ச்சி நிரலைக் கொண்டிராத கையறு நிலையிலிருக்கும் தமிழ் தலைமைகளின் ஒரு பகுதியினர் இப்போது வசதியாக மதவாதத்தைக் கையிலெடுத்திருக்கிறார்கள்.
பெளத்த மத ஆதிக்கம் தமிழ் பேசும் அனைத்து மக்கள் மீதும் ஆதிக்கம் செலுத்திக்கொண்டிருப்பதை எந்தக் காலத்திலும் எதிர்க்காதவர்கள்; முஸ்லீம் மக்கள் மத்தியில் இஸ்லாமிய தீவிரவாதம் வெளிநாட்டு சக்திகளின் உதவியுடன் திட்டமிட்டு வளர்க்கப்பட்டுக்கொண்டிருப்பதை என்றும் கண்டிக்கவோ, எதிர்க்கவோ துணியாதவர்கள்; கத்தோலிக்க சபைகளின் ஆதிக்க நாடுகளுடனான உறவுகளையும் சக தமிழ் பேசும் மக்களை நிறுவனமயப்பட்டு மதமாற்றத்திற்கு உள்ளாக்கும் முயற்சிகளையும் கண்டிக்காதவர்கள்; இன்று தமிழ் பேசும் இந்துக்களில் ஒரு பகுதியினர் அன்னிய சக்திகளான ஷிவ் சேன என்னும் இந்து மதவெறி அமைப்பை நாடிச்செல்வதை கண்டிப்பெதென்பது, வெறும் சந்தர்ப்பவாத, சுயநல பண்பு அன்றி வேறொன்றுமல்ல. பெளத்தம்,இஸ்லாம்,கிறிஸ்தவம்,இந்து அனைத்தினதும் மதவாதம் என்பது பொதுவில் ஒன்றுதான்; அது சமூகத்தை நஞ்சாக்கி,மக்களை வெறியர்களாக்கி ஒருவரையொருவர் எதிரியாக்கும் வேலையையே செய்கிறது.
 
தமிழ் பேசும் மக்கள் மீதோ, தமிழ் மக்கள் மீதோ, தமிழ் தேசத்தின் மீதோ இதில் ஏதாவது ஒன்றின் மீதோ அக்கறை கொள்ளும் சக்திகள் அனைத்துவகை மதவாதங்களையும், மத மேலாதிக்கங்களையும் எதிர்பாவர்களாக மட்டுமே இருக்க முடியும். சமூக அக்கறை என்பது எமக்கு வசதியான, எமக்கேற்ற நேரத்தில் வெளிப்படுவதல்ல. அது சமூகத்தின் மீதான அனைத்து அநியாயங்களின் மீதும் எழுவதாகும்.
 
விஷ்வ இந்து பரிஷத் போன்ற சிவசேனையின் இரட்சகர்கள் தமிழ் தேசிய போராட்ட வரலாற்றில் தமிழர்கள் பக்கம் நின்ற வரலாறே கிடையாது. குறைந்த பட்சம் தமிழர் வழிபாட்டு தலங்கள் தாக்கப்பட்ட போது கூட இவர்கள் எந்த எதிர்ப்பையும் காட்டியது கிடையாது. சித்தாந்த ரீதியில் இவர்கள் இந்து, பௌத்த, சீக்கிய மற்றும் சமண சமயங்களை (இந்திய) மண்ணின் மதங்களாக ஏற்றுக் கொண்டு ஏனைய மதங்களான இஸ்லாம், கிறிஸ்தவ சமயங்கள் மீதே காழ்ப்புணர்வுகளை உமிழ்பவர்கள். அந்த வகையில் சச்சிதானந்தம் வழங்கிய பேட்டிகளில் தவிர்க்க முடியாமல் பௌத்தத்தைச் சற்று சாடியிருந்தாலும் அவரது பிரதான இலக்காக இஸ்லாம், கிறிஸ்தவ மதமாற்றம் குறித்த கோபமே வெளிப்படுகிறது. ஆகவே சிவசேனை அமைப்பு பௌத்த அமைப்புகளுடன் புரிந்துணர்வுகளை ஏற்படுத்திக் கொண்டு ஏனைய மதங்களுக்கு எதிரான இந்திய இந்து தீவிரவாத அமைப்புகளின் நிகழ்ச்சி நிரலைக் கொண்டிருப்பதற்கான வாய்ப்புகளே அதிகம்.
 
தமிழ் மக்களிடையே இந்து உணர்வைப் புகுத்த முயன்ற முயற்சிகள் முன்னைய நாட்களில் தோல்வி கண்டிருக்கின்றன. பாராளுமன்றத் தேர்தல்களில் மதச் சார்பற்ற முறையில் தமது பிரதிநிதிகளைத் தமிழ் மக்கள் தெரிவு செய்த வரலாறுகள் நிறையவே உள்ளன. இந்துத் தீவிர வாதிகள் தமிழ் தேசத்தை வெறும் மதக் குழுக்களாகக் குறுக்கி விடும் திட்டத்துடன் காலூன்ற முனைவது தமிழ் மக்கள் எச்சரிக்கை கொள்ள வேண்டிய விடயம்.
 
புதிய திசைகள்
19/10/2016
Link to comment
Share on other sites

தமிழரின் சொத்துக்களை அழிப்பவர்களுக்கும், அபகரிப்பவர்களுக்கும், கள்ளக்காணி பிடிப்பவர்களுக்கும், அடுத்தவர் நிலங்களில் திருட்டுத்தனமாக சிலைகளை நிறுவும் ------கும்பலுக்கும், மக்கள் ஏழ்மையை பயன்படுத்தி மதத்தின் பேரால் மதவெறி கொண்டு மதமாற்ற திருட்டு வியாபாரம் செய்யும் ------சர்வதேச ---- ஈழத்தில் உதயமான சிவசேனை பாரிய அச்சுறுத்தலாக வந்துள்ளது தெரிகிறது,

புதிய திசைகள் என்ற பெயரில் இயங்கும் இத்தகைய ------ சர்வதேச ---- அவர்களின் புலம்பல்கள் மூலம் ஈழத்தில் உதயமான சிவசேனை அந்தக் ---- கும்பலுக்கு அச்சுறுத்தலாக வந்துள்ளது தெரிகிறது,

இந்துக்கள் இந்து உணர்வு பெற்றால் தமிழரின் சொத்துக்களை அழிப்பவர்களுக்கும், அபகரிப்பவர்களுக்கும், கள்ளக்காணி பிடிப்பவர்களுக்கும், அடுத்தவர் நிலங்களில் திருட்டுத்தனமாக சிலைகளை நிறுவும் ------ கும்பலுக்கும், மக்கள் ஏழ்மையை பயன்படுத்தி மதத்தின் பேரால் மதவெறி கொண்டு மதமாற்ற திருட்டு வியாபாரம் செய்யும் ------ சர்வதேச ----- ஈழத்தில் உதயமான சிவசேனையால்  அவர்களது ----- செய்ய முடியாமல் போய்விடும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது தெரிகிறது,

Link to comment
Share on other sites

1 hour ago, போல் said:

புதிய திசைகள் என்ற பெயரில் இயங்கும் இத்தகைய ------ சர்வதேச ---- அவர்களின் புலம்பல்கள் மூலம் ஈழத்தில் உதயமான சிவசேனை அந்தக் ---- கும்பலுக்கு அச்சுறுத்தலாக வந்துள்ளது தெரிகிறது,

Quote

பெளத்த மத ஆதிக்கம் தமிழ் பேசும் அனைத்து மக்கள் மீதும் ஆதிக்கம் செலுத்திக்கொண்டிருப்பதை எந்தக் காலத்திலும் எதிர்க்காதவர்கள்; முஸ்லீம் மக்கள் மத்தியில் இஸ்லாமிய தீவிரவாதம் வெளிநாட்டு சக்திகளின் உதவியுடன் திட்டமிட்டு வளர்க்கப்பட்டுக்கொண்டிருப்பதை என்றும் கண்டிக்கவோ, எதிர்க்கவோ துணியாதவர்கள்; கத்தோலிக்க சபைகளின் ஆதிக்க நாடுகளுடனான உறவுகளையும் சக தமிழ் பேசும் மக்களை நிறுவனமயப்பட்டு மதமாற்றத்திற்கு உள்ளாக்கும் முயற்சிகளையும் கண்டிக்காதவர்கள்; இன்று தமிழ் பேசும் இந்துக்களில் ஒரு பகுதியினர் அன்னிய சக்திகளான ஷிவ் சேன  என்னும் இந்து மதவெறி அமைப்பை நாடிச்செல்வதை கண்டிப்பெதென்பது, வெறும் சந்தர்ப்பவாத, சுயநல பண்பு அன்றி வேறொன்றுமல்ல.

 

Link to comment
Share on other sites

சைவர்கள் (இந்துக்கள்) தமது சமய உரிமைகளை பாதுகாக்க உருவாக்கப்பட்ட ஒரு அமைப்பை சைவர்கள் (இந்துக்கள்) ஏற்றுக்கொள்ளக் கூடாது என்ற பாணியில் எழுதும் "புதிய திசைகள்" விஷமிகளின் கூட்டமாகவே தெரிகிறது.

பல பொய்களை புனைந்து சைவர்களை / இந்துக்களை எச்சரிக்கும் "புதிய திசைகள்" நிச்சயம் விஷமிகளின் கூட்டமாகவே தெரிகிறது.

இந்த விஷமிகளுக்கு சில ஊடகவியலாளர் என்று தமக்கு தாமே தம்பட்டம் அடித்துக்கொள்ளும் விஷமப்  பேர்வழிகளின் ஆதரவும் கிடைப்பதில் ஆச்சரியம் இல்லை!  

 

Link to comment
Share on other sites

19 minutes ago, போல் said:

சைவர்கள் (இந்துக்கள்) தமது சமய உரிமைகளை பாதுகாக்க உருவாக்கப்பட்ட ஒரு அமைப்பை சைவர்கள் (இந்துக்கள்) ஏற்றுக்கொள்ளக் கூடாது என்ற பாணியில் எழுதும் "புதிய திசைகள்" விஷமிகளின் கூட்டமாகவே தெரிகிறது.

பல பொய்களை புனைந்து சைவர்களை / இந்துக்களை எச்சரிக்கும் "புதிய திசைகள்" நிச்சயம் விஷமிகளின் கூட்டமாகவே தெரிகிறது.

இந்த விஷமிகளுக்கு சில ஊடகவியலாளர் என்று தமக்கு தாமே தம்பட்டம் அடித்துக்கொள்ளும் விஷமப்  பேர்வழிகளின் ஆதரவும் கிடைப்பதில் ஆச்சரியம் இல்லை!  

 

இது முஸ்லிம்களாக தான் இருக்கும் என்று நினைக்கிறேன்...!!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
53 minutes ago, Dash said:

 

சிங்களவனோ, முஸ்லிமோ தெற்கின்  தமிழனோ - சிவசேனாவின் வருகைக்கு எந்த அலட்டலும் இல்லை.

வடக்கில் உள்ள சிலர் மட்டும் வரவேற்புத் தெரிவிக்கின்றனர்.  சிவசேனாவின் வருகை நல்லதுதான்.

அரசின் அழைப்பின்பேரில், சிவசேனை வந்திருக்கிறது என்று மக்கள் சொல்கிறார்கள்.

59 minutes ago, Dash said:

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, Alternative said:

தமிழர்கள் நீண்ட காலமாகவே பல தளங்களிலும் பாரிய சவால்களை எதிர்நோக்குகின்றனர்

தமிழர்களுக்கு சவால்கள் இருக்கு என்று நாங்கள் சொன்னால் உவையள் சொல்லிவினம், இலங்கையர் என்றுதான் நாம் பார்க்க வேண்டும் தமிழர் சிங்களவ்ர் என்று பிரித்து பார்க்க கூடாது என்பார்கள்.

இந்துக்களுக்கு சவால்கள் இருக்கு என்று நாங்கள் சொன்னால் அவையள் தமிழருக்கு சவால் இருக்கு என்பினம்...உலகத்திலயே யாழ்ப்பாணத்தானிடம் தான் பிற்போக்கு தனம் இருக்கு என்று விளக்கங்களும் வியாக்கியாணங்களும் வேற கொடுப்பினம்....

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Similar Content

  • Topics

  • Posts

    • பல்லைக் காட்டியது யார், வெள்ளைக் குடை பிடித்தது ஏன்? - தமிழ்நாடு தேர்தல் களத்தில் என்ன நடக்கிறது? பட மூலாதாரம்,X/UDHAY/ANI 28 மார்ச் 2024, 05:54 GMT தமிழகத்தில் தேர்தல் பிரச்சாரம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. நாடாளுமன்றத் தேர்தல் பரப்புரைகளை கிட்டத்தட்ட அனைத்து கட்சிகளும் தொடங்கிவிட்ட நிலையில், திமுக அதிமுக இடையிலான புது மாதிரியான போட்டோ விவாதம் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. பிரச்சாரத்தின் முக்கிய அங்கமாக சமூக ஊடகங்கள் மாறியுள்ள நிலையில், களத்தில் நடைபெறும் பரப்புரைகள் சமூக வலைதளங்களிலும், எதிரொலிக்கின்றன. தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தனது பிரச்சாரங்களில் போட்டோக்களை பயன்படுத்தி பரப்புரை செய்து வருகிறார். அதிமுகவும் பாஜகவும் ஒரே கூட்டணி என்பதை காட்ட, பிரதமர் மோதியும் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியும் பொது நிகழ்வுகளில், சந்திப்புகளில் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை கையில் கொண்டு வந்து மக்கள் மத்தியில் எடுத்துக் காட்டி பரப்புரை செய்கிறார். இதற்கு பதிலடியாக எடப்பாடி பழனிசாமி தனது பரப்புரைக் கூட்டங்களில் திமுக தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலினும் பிரதமர் மோதியும் அரசு நிகழ்வுகளில், விழாக்களில் அருகில் நின்று சிரித்து பேசிக் கொண்ட புகைப்படங்களை எடுத்துக் காட்டி, திமுகவும் பாஜகவும் கள்ளக் கூட்டணி கொண்டுள்ளனர் என்று சுட்டிக் காட்டுகிறார்.   பட மூலாதாரம்,X/UDHAY 'கல்லு பல்லு' என நீளும் விமர்சனம் அதே போன்று, உதயநிதி ஸ்டாலின், மதுரை எய்ம்ஸ் கட்டுமானப் பணிகள் பல ஆண்டுகளாக நிலுவையில் உள்ளது என்பதை சுட்டிக் காட்டும் வகையில் கடந்த தேர்தலில், ஒற்றை செங்கலைக் காட்டி பரப்புரை செய்தார். இந்த முறையும் அதே போன்ற பரப்புரையை மேற்கொண்ட போது, “ஸ்கிரிப்டை மாத்து பா” என்று எடப்பாடி தனது பிரச்சாரத்தில் பதில் கொடுத்துள்ளார். “செங்கலை தூக்கிக் கொண்டு வித்தை காட்டுகிறாயா” என்று கேள்வி எழுப்பிய எடப்பாடி பழனிசாமி, திமுகவின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மக்களவையில் அழுத்தம் கொடுத்திருந்தால் எய்ம்ஸ் கட்டுமானத்துக்கு உதவியாக இருந்திருக்கும் என்றார். இந்த விவாதங்கள் பிரச்சாரக் களத்தில் மட்டுமல்லாமல், சமூக ஊடகங்களில் இடம் பெற்றுள்ளன. “நானாவது எய்ம்ஸ் -ல் வைத்த கல்லை காட்டினேன். இவர் பல்லை காட்டுகிறார் பாருங்கள்” என எடப்பாடி மோதியுடன் எடப்பாடி பழனிசாமி சிரித்துக் கொண்டு நிற்கும் புகைப்படத்தைக் காட்டி உதயநிதி ஸ்டாலின் பேசியது சமூக ஊடகங்களில் கல்லு பல்லு என்ற புதிய ஹேஷ் டேக்கை உருவாக்கிவிட்டது. இரு தரப்பினரும் மாறி மாறி, கல்லு பல்லு என்று பல உதாரணங்களை எடுத்து விமர்சித்து கேலி செய்து வருகின்றனர்.   பட மூலாதாரம்,X/EPSTAMILNADU மேலும் உதயநிதி ஸ்டாலின் பிரதமர் நரேந்திர மோதியை சந்தித்த போது எடுத்த புகைப்படத்தை காட்டி, “இவர் சிரிச்சா தப்பு இல்ல, நான் சிரிச்சா தப்பா. சிரிச்சா என்ன தெரியுது, பல்லு தானே” என்று மீண்டும் இந்த விவகாரத்தை கையில் எடுத்தார் எடப்பாடி பழனிசாமி. அந்தப் புகைப்படம் கேலோ இந்தியா நிகழ்வுகள் குறித்து பேசும் போது எடுத்தது என்று பதிலளித்தப் உதயநிதி, எடப்பாடி பழனிசாமி சசிகலாவின் காலில் விழும் போட்டோவை காண்பித்து, “நான் இப்படி ஒருவர் காலில் விழும் புகைப்படத்தை காண்பித்தால் நான் அரசியலை விட்டு விலகிவிடுகிறேன்” என சவால் விடுத்துள்ளார்.   பட மூலாதாரம்,X/ANI பிரதமர் நரேந்திர மோதி சென்னை வந்த போது கருப்பு குடைக்கு பதிலாக வெள்ளை குடை பிடித்ததை விமர்சனம் செய்து பேசிய எடப்பாடி பழனிசாமி, “நடிகர் வடிவேலுவின் 23ம் புலிகேசி திரைப்படத்தில், எதிரி நாட்டவர்கள் படை எடுத்து வரும் போது வெள்ளை கொடி எடுத்து செல்வார். அதே போல, கருப்பு குடை பிடித்தால் பிரதமருக்கு கோபம் வரும் என்பதால், அவர் சென்னை வரும் போது, வெள்ளை குடை பிடிக்கப்பட்டது. வெள்ளை குடை ஏந்தும் பொம்மை வேந்தர் என்று முதல்வரை மக்கள் சொல்கிறார்கள்” என்று கூறியிருந்தார்.   பட மூலாதாரம்,X/ANNAMALAI_K 'கோட்டா அரசியல்' - விமர்சனத்தில் சிக்கியுள்ள அண்ணாமலை அண்ணாமலை கோவையில் செய்தியாளர் சந்திப்பில் பேசும் போது,தன்னை எதிர்த்து போட்டியிடும் அதிமுக வேட்பாளரான சிங்கை ராமச்சந்திரன், சட்டமன்ற உறுப்பினராக இருந்த அவரது தந்தை கோவிந்தராசுவின் உதவியால் தான் உயர்படிப்பு படித்தார் என்றும் விமச்சித்திருந்தார். “2002ம் ஆண்டு எம் எல் ஏ கோட்டாவின் கீழ் கல்லூரியில் இடம் பெற்றவர் அவர், வாரிசு அரசியலில் வந்தவர் அவர். ஆனால் நான், எனது தந்தையுடன் கிராமத்திலிருந்து மூன்று பேருந்துகள் மாறி, தகரப்பெட்டியுடன் இந்த நகரத்துக்குள் நுழைந்தேன். கோட்டா அரசியலில் வரவில்லை நான்.” என்று அண்ணாமலை தெரிவித்திருந்தார். பட மூலாதாரம்,X/RAMAAIADMK இதற்கு பதிலளித்த சிங்கை ராமச்சந்திரன், “எனக்கு 11 வயது இருக்கும் போதே என் தந்தை இறந்துவிட்டார். நான் பெற்ற மதிப்பெண்கள் காரணமாகவே எனக்கு பொறியியல் கல்லூரியில் இடம் கிடைத்தது. அவர்களுடைய மோதியின் குஜராத்-ல் உள்ள ஐஐஎம்-ல் மீண்டும் மதிப்பெண்கள் மூலமாகவே இடம் பெற்றிருந்தேன். அவருக்காவது தகரப்பெட்டியை உடன் தூக்கி வர அப்பா இருந்தார், ஆனால் எனக்கு அதுவும் இல்லை. இது போன்ற கஷ்டங்களை அனைவரும் தங்கள் வாழ்வில் சந்தித்திருப்பார்கள். எனவே நான் தான் துன்ப்பப்பட்டேன் என்று கூறிக் கொள்ள எதுவும் இல்லை” என்று பதில் கூறியிருந்தார். இதை அடுத்து கோட்டா அரசியல், இட ஒதுக்கீடு குறித்த விவாதம் சமூக ஊடகங்களில் பரப்பரப்பாக நடைபெற்று வருகின்றன. திருவள்ளூர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் சசிகாந்த் செந்தில், அண்ணாமலை தான் வளர்ந்து வந்த பாதையை மறந்துவிடக் கூடாது என்று கூறியுள்ளார். இதற்கிடையில், முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் விழுப்புரம் தொகுதியில் பேசும் போது அதிமுக போட்ட பிச்சை தான் தமிழகத்தில் பாஜகவுக்கு இருக்கும் நான்கு சட்டமன்ற உறுப்பினர்கள் என்று காட்டமாக கூறியிருந்தார். தேனி தொகுதியில் பாஜக கூட்டணியில் போட்டியிடும் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் டிடிவி தினகரன், பாஜகவின் சாதனைகளை குறித்தோ அல்லது காங்கிரஸ் மீதுள்ள விமர்சனங்கள் குறித்து குறிப்பிட்டு எதையும் பேசுவதில்லை. தனது கட்சியிலிருந்து விலகிச் சென்றவர்களை மறைமுகமாக தாக்கிப் பேசும் அவருக்கு, பிரதான அரசியல் பிரச்னைகள் குறித்து பேசுவதை விட தனது குக்கர் சின்னத்தை மக்களிடம் கொண்டு சேர்ப்பதே முக்கியத்துவம் பெறுகிறது.   பட மூலாதாரம்,X/DRARAMADOSS பாமக மாறி மாறி கூட்டணி வைத்துக் கொள்வதை விமர்சித்து பேசிய எடப்பாடி பழனிசாமி, “நீர் இருக்கும் இடத்தை தேடிச் செல்லும் வேடந்தாங்கல் பறவை போல் பா.ம.க.,வினர் தேவைக்கேற்ப சென்று விடுவர். பா.மக., கூட்டணி வைக்காத கட்சிகளே இல்லை” என்று கூறியிருந்தார். தருமபுரியில் வேட்பாளர் சௌம்யா அன்புமணியை அறிமுகம் செய்து பேசிய அன்புமணி ராமதாஸ் “நாங்கள் வேடந்தாங்கல் பறவை அல்ல, சரணாலயம்” என்று பதில் கூறியுள்ளார். “யார் வந்தாலும் பாதுகாப்பு கொடுப்போம். வெற்றி பெற செய்வோம். எங்களை நம்பி வருபவர்களை வாழ வைப்போம். யாருக்கும் துரோகம் செய்ய மாட்டோம்” என்று தெரிவித்திருந்தார். https://www.bbc.com/tamil/articles/cjkd7v517z2o
    • 😀..... உங்களுக்காக 'கோப்பிக் கணக்கு' என்ற தலைப்பில் ஒன்று எழுத வேண்டும்....🤣 நீங்கள் இலகுவாக கடந்து விடுகிறீர்கள்........👍
    • உங்களின் சிறுகதைப் புத்தகம் வந்தவுடன் சொல்லுங்கள், நான் வாசிப்பில் கொஞ்சம் ஆர்வம் உள்ளவன். நீங்கள் அகரமுதல்வனின் எழுத்துகளை பற்றி இன்னொரு திரியில் எழுதியிருந்ததை பார்த்தேன். எனக்கும் அவரின் எழுத்துகளை பற்றி சில அபிப்பிராயங்கள் இருக்கின்றது. ஆனால், இந்த மாதம் தான் இங்கே களத்தில் இணைந்தேன், அதனால் உடனேயே எல்லா இடமும் போய் கருத்து எழுத ஒரு சின்ன தயக்கமாக இருக்கின்றது. போகப் போக தயக்கம் போய்விடும்.........😀 கலிபோர்னியாவின் பெரும் நகரங்களில் நீங்கள் கண்ட விடயம் மிகச் சாதாரண ஒரு நிகழ்வு. அமெரிக்காவின் பல பெரு நகரங்களிலும் இதே நிலையே.  மினசோட்டாவிற்கு வந்திருக்கின்றேன். அந்த நாட்களில் Kevin Garnett அங்கு கூடைப்பந்து விளையாடும் போது, அது பிடித்த அணிகளில் ஒன்றாக இருந்தது. இந்த வருடம் மீண்டும் ஒரு நல்ல அணி மினசோட்டாவில் உருவாகியுள்ளது. Vikings அணியும் பிடித்த ஒரு அணியே.
    • நன்றி... நாங்கள் அழகிய ஏரிகள் சூழ்ந்த மினசோட்டாவில் வசிக்கின்றோம். மிகவும் பிடித்தமான மகிழ்வான வாழ்வுக்குரிய இடம். தொடக்கத்தில் பனி கொஞ்சம் சிரமமாக இருந்தாலும் குழந்தைகளுடன் குழந்தையாக அதையும் ரசித்து வாழப் பழகி விட்டோம்.  இந்த இடத்தில் இன்னொன்றும் சொல்ல வேண்டும், போன வருடம் வட அமெரிக்க பேரவையின் தமிழ் பெரு விழாவுக்காக சாக்கிரமென்டோ போயிருந்தேன். இடையில் சான்பிரான்ஸ்சிஸ்கோவில் இரண்டு நாட்களை களித்தோம், கோல்டன் கேட் பாலத்துக்கு அருகில் கார் கண்ணாடிகளை உடைத்து பட்டப்பகலில் கொள்ளையர் புரியும் அட்டகாசத்தை நேரில் கண்டு பயந்தேன். இது பற்றி "தங்க வாசல்" என்ற தலைப்பில் ஒரு சிறுகதை எழுதியுள்ளேன், இன்னும் ஓரிரு மாதங்களில் வரவுள்ள எனது சிறுகதை புத்தகத்தில் அது இடம்பெறுகிறது.   
    • நாமெல்லாம் இதற்குள் வரமாட்டோம் ராசாக்கள்.........ஏதோ கடையில் கோப்பி குடிக்கும்போது ஒரு ஈரோ டிக்கட் வாங்கி சுரண்டிபோட்டு அங்கேயே வீசிப்போட்டு போறதுதான் அதிகம்......!  😂
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.