Jump to content

கீழடி அகழாய்வும் தமிழர் நாகரீகமும் வரலாறும்


Recommended Posts

கீழடி... சூழ்ச்சிக்கு இரையாகும் வரலாறு!

 

கீழடி அகழாய்வின் மூன்றாம் கட்டம் செப்டம்பர் 30-ம் தேதியுடன் முடிவதாகக் கூறி, இந்த ஆண்டு ஆய்வைப் பற்றிய அறிக்கையை அகழாய்வுப் பொறுப்பாளர் ஸ்ரீராமன் வெளியிட்டார். மூன்றாம் கட்ட அகழாய்வு என்பது தமிழ்ச் சமூகம் போராடிப் பெற்றது.

கீழடி அகழாய்வைத் தொடர அவர்களுக்கு விருப்பமில்லை. எனவே, மூன்றாம் ஆண்டுக்கான அனுமதியைத் திட்டவட்டமாக மறுத்தார்கள். நாடாளுமன்றத்திலும், மக்கள் மன்றத்திலும் தொடர்ச்சியாகக் கேள்விகள் எழுப்பப்பட்டபோது, இரண்டு ஆண்டுகள் நடந்த அகழாய்வைப்பற்றி அதன் பொறுப்பாளர் அமர்நாத் ராமகிருஷ்ணன் அறிக்கை தரவில்லை என்று ஒரு காரணத்தைச் சொன்னார்கள்.

கீழடியோடு அகழாய்வுத் தொடங்கப்பட்ட இடம் குஜராத் - வாட்நகர் (மோடியின் சொந்த ஊர்). அதே போல, ராஜஸ்தானில் உள்ள பிஞ்ஜூர். இந்த இரண்டு இடங்களிலும் 2017-ம் ஆண்டு அகழாய்வு செய்வதற்கான உத்தரவை மத்திய தொல்லியல் துறை, 2016 டிசம்பர் மாதமே வழங்கிவிட்டது. ‘கீழடிக்கு அனுமதி வழங்காமல் இந்த இரு இடங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது எவ்வாறு? அனுமதியை மறுப்பதற்கு விதவிதமான காரணங்களைக் கண்டுபிடித்தனர்.

அதையும்மீறி கடின உழைப்பைச் செலுத்தி அமர்நாத் ராமகிருஷ்ணன் குழுவினர் இடைக்கால அறிக்கையை வழங்கினார்கள். அதன்பிறகும் அனுமதி தர மனம் வரவில்லை. தொடர்ந்து எழுப்பப்பட்ட எதிர்ப்புக் குரல்களால் வேறுவழியின்றி பிப்ரவரி 20-ம் தேதி இந்த ஆண்டுக்கான அனுமதியை வழங்கினர். ஆனால், நிதி எதுவும் வழங்கவில்லை. மார்ச் 17-ம் தேதி நிதியை வழங்கிவிட்டு மார்ச் 24-ம் தேதி அமர்நாத் ராமகிருஷ்ணனை அசாம் மாநிலத்துக்கு இடமாற்றம் செய்தனர். ஆய்வுக்கான புதிய பொறுப்பாளராக நியமிக்கப்பட்ட ஸ்ரீராமன் , ஏப்ரல் 24-ம் தேதி பொறுப்பேற்று, ஆய்வைத் தொடங்கி, இப்போது முடித்துவிட்டதாக அறிக்கை வெளியிட்டுள்ளார். தமிழகத்தில் பலரும் சந்தேகப்பட்டது போலவே, கீழடி அகழாய்வை முடக்குவதற்கான அடித்தளமிடும் வேலையை அந்த அறிக்கை செய்துள்ளது.

p18c.jpg

கடந்த இரண்டு ஆண்டுகளாக, 2,500 சதுர மீட்டர் பரப்பளவில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. ஆனால், இந்த ஆண்டு வெறும் 400 சதுர மீட்டர் பரப்பளவே ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளும், 102 அகழாய்வுக் குழிகள் தோண்டப்பட்டன. இந்த ஆண்டு தோண்டப்பட்டதோ, வெறும் எட்டுக் குழிகள் மட்டும்தான். அந்த எட்டுக்குழிகளில் ஒன்றுகூட இயற்கை மண்படிவம்    (Virgin soil) வரை தோண்டப்படவில்லை. அதாவது, ஒரு குழியைக்கூட முழுமையாகத் தோண்டவில்லை.

 கடந்த ஆண்டு கண்டறியப்பட்ட தொழிற்கூடம் போன்ற பகுதியின் கட்டட அமைப்புகளின் தொடர்ச்சி தென் திசையில் நிலத்துக்குள் அமைந்திருந்தது. அதன் தொடர் கட்டட அமைப்பைக் கண்டறிய வேண்டுமென்றால், தென் திசையில் அகழாய்வுக் குழியை அமைத்திருக்க வேண்டும். ஆனால், தென் திசையில் ஒரு குழிகூட அமைக்காமல், நேர் எதிராக வட திசையில் மட்டுமே எட்டுக் குழிகளையும் தோண்டியுள்ளனர்.

கடந்த இரண்டு ஆண்டுகளும் கீழடி தொல்லியல் மேட்டின் வெவ்வேறு இடங்களாகத் தேர்வுசெய்து மொத்தம் ஒன்பது இடங்களில் அகழாய்வுக் குழிகளை அமைத்தனர். காரணம், ஓர் இடத்தில் தடயங்கள் கிடைக்காவிட்டாலும், இன்னோர் இடத்தில் கிடைக்கும் என்பதால். இந்த ஆண்டு, ஒரே ஓர் இடத்தில் மட்டுமே எட்டுக் குழிகளையும் தோண்டியுள்ளனர். இவற்றைப் படிக்கிற ஒருவரால், இதில் நடந்துவரும் சூழ்ச்சியை எளிதில் புரிந்துகொள்ளமுடியும். ‘இவ்வளவுக் குறைவான பகுதியில் மட்டுமே அகழாய்வுப் பணியைச் செய்துள்ளீர்களே, ஏன்?’ எனக் கேட்டதற்கு, மழையைக் காரணம் சொல்கிறார் ஸ்ரீராமன். அமர்நாத் ராமகிருஷ்ணன் ஆய்வு மேற்கொண்ட இரண்டு ஆண்டுகளும் கீழடியில் மழையே பெய்யவில்லையா? அல்லது, இந்த ஆண்டு இடைவிடாமல் கீழடியில் தொடர் மழை பெய்ததா?

 p181.jpg ‘முதல் ஆண்டு (2015), அகழாய்வுப் பணியை மூன்று மாத கால தாமதத்துடன்தான் அமர்நாத் ராமகிருஷ்ணனால் தொடங்க முடிந்தது. அப்படியிருந்தும், அவரால் 43 அகழாய்வுக் குழிகளை அமைக்க முடிந்தது. ஆனால், இந்த ஆண்டு வெறும் எட்டுக் குழிகளை மட்டுமே தோண்டியதற்கு என்ன காரணம்?’ என்ற ஊடகங்களின் கேள்விக்கு, “இங்கு நடப்பது PWD வேலையல்ல” என்று பதிலளிக்கிறார் ஸ்ரீராமன். உண்மை என்னவென்றால், கடந்த இரண்டு ஆண்டுகளும் அகழாய்வுப் பணியில் ஈடுபடுத்தப்பட்ட தொழிலாளிகளின் எண்ணிக்கை நாளொன்றுக்குச் சராசரியாக 80-க்கும் மேல் இருந்தது. இந்த ஆண்டு சராசரியின் அளவு 20 கூட இல்லை. இந்த ஆண்டு கண்டறியப்பட்டதில், 1800-க்கும் மேற்பட்ட தொல்பொருள்கள் கிடைத்துள்ளன. அவற்றில், 90 விழுக்காடு கண்ணாடியால் செய்யப்பட்டவை என்று கூறும் அறிக்கை, இந்த இடத்தில் கட்டடங்கள் தொடர்ச்சியாகவோ, பரவலாகவோ கட்டப்பெறவில்லை” என்று கூறுகிறது. கீழடியின் சிறப்புமிக்க பங்களிப்பே அங்கு கிடைத்துள்ள கட்டுமானங்கள்தான். சங்ககாலத்தில் இருந்த ஒரு நகர அமைப்பு, முழுமையான கட்டட வடிவத்தில் இதுவரை நமக்குக் கிடைக்கவில்லை. மிகவிரிந்த அளவு கட்டட அமைப்புகள் முதல்முறையாக கீழடியில்தான் நமக்குக் கிடைத்துள்ளது.

 முதலாண்டு ஆய்வில் கிடைத்தவைகளெல்லாம், குடியிருப்புப் பகுதிகளாக இருந்தன. இரண்டாமாண்டு ஆய்வில், பெரும் தொழிற்கூடம் கண்டறியப்பட்டது. ஆனால், இந்த ஆண்டு அதன் தொடர்ச்சியாக எந்தக் கட்டடப் பகுதியும் கிடைக்கவில்லை என்ற முடிவை நோக்கியே இந்த ஆய்வின் போக்கு, திட்டமிட்டு அமைக்கப்பட்டுள்ளது என்பதை மேற்கூறிய விஷயங்கள் மூலம் உணரமுடிகிறது. “இந்த ஆண்டு சேகரிக்கப்பட்ட கரித்துகள் மாதிரிகள், கரிமப் பகுப்பாய்வுக்கு உள்படுத்தப்பட்டு காலநிர்ணயம் செய்யப்படும்” என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதான், அவர்கள் நினைத்ததை நடத்தப்போகும் இடம். கடந்த ஆண்டு அமர்நாத் ராமகிருஷ்ணன் குழு இருபது கரித்துகள் மாதிரிகளைச் சேகரித்து ஆய்வுக்கு அனுப்ப அனுமதி கேட்டது. ஆனால் மத்திய அரசோ, ஒரு லட்சம் ரூபாய் மட்டுமே ஒதுக்கி இரு மாதிரிகளை மட்டுமே ஆய்வுக்கு அனுப்பியது. ஆய்வு செய்யப்பட்ட இரு கரித்துகள் மாதிரிகளின் காலம் கி.மு 200 மற்றும் கி.மு 195 என்ற முடிவு வெளியானது.

p18a.jpg கடந்த ஆண்டு, நாலரை மீட்டர் தோண்டப்பட்ட அகழாய்வுக் குழியின் நடுப்பகுதியில், அதாவது இரண்டாவது மீட்டரில் சேகரிக்கப்பட்ட கரித்துகள் மாதிரிகள்தான் அவை இரண்டும். அதற்குக் கீழே இரண்டரை மீட்டர் ஆழத்தில் சேகரிக்கப்பட்ட கரித்துகள் எல்லாம் இன்னும் ஆய்வுக்கு அனுப்பப்படாமலே வைக்கப்பட்டுள்ளன. அவைகள் அனுப்பப்பட்டால் கீழடியின் காலநிர்ணயம் இன்னும் பின்னோக்கிப்போகும் என்பது யாவரும் அறிந்ததே. அவற்றை அனுப்பாமல் வைத்துள்ளனர். இந்த நிலையில் ஸ்ரீராமன் , “இந்த ஆண்டு சேகரிக்கப்பட்ட கரித்துகளைக் கரிமப் பகுப்பாய்வுக்கு அனுப்பி காலநிர்ணயம் செய்யப்படும்” என்று அறிவித்துள்ளார். ஒரு குழிகூட இயற்கை மண்படிவம் (Virgin soil)  வரை தோண்டப்படவில்லை. அப்படியிருக்க, இவர் எடுத்துள்ள கரித்துகள் மாதிரிகள் மேல்நிலை யிலிருந்து எடுக்கப் பட்டவைகளாகத்தான் இருக்கும். அவை, காலநிர்ணய ஆய்வுக்கு அனுப்பப்பட்டால் மிகவும் முன்தள்ளப்பட்ட காலத்தையே குறிக்கும். அதாவது, கீழடியின் காலத்தை முன்தள்ளிக் கொண்டுவருவதற்கான ஏற்பாடாகவே இது இருக்கும்.

 எனவே, அமர்நாத் ராமகிருஷ்ணன் குழு சேகரித்த பதினெட்டு கரிமத் துகள்களைக் கரிமப் பகுப்பாய்வுக்கு அனுப்பிய பிறகுதான், இந்த ஆண்டு கண்டுபிடிக்கப்பட்ட கரிமத்துகள்களை ஆய்வுக்கு அனுப்ப வேண்டும். இல்லையென்றால், ஸ்ரீராமனால் ஆயிரம் ஆண்டுகளை எளிதில் விழுங்க முடியும்.

இங்கு நடப்பது PWD வேலையாக இருக்குமேயானால், இதில் நிகழும் ஊழலையும் மோசடியையும் வெளிப்படையாக அறியலாம். ஆனால், அகழாய்வுப் பணியல்லவா...மோசடிகளும் சூழ்ச்சிகளும் மிகமிக நுட்பமானவை. அதே நேரத்தில், வரலாற்றின் திசைவழியையே மாற்றக்கூடிய அளவுக்கு ஆபத்தானவை.

சிந்துவெளியில் கண்டறியப்பட்ட திமிலுடைய காளையைக் குதிரையென்றும், அங்கு யாககுண்டங்கள் கிடைத்துள்ளது என்றும் சிலர் கூறிக்கொண்டிருப்பதைப் பார்க்கிறோம். சுமார் நூறு ஆண்டுகள் சர்வதேச சமூகம் உற்றுநோக்கும் சிந்துவெளி ஆய்வையே தலைகீழாக மாற்றும் முயற்சிகள் நடக்கும்போது, வெறும் இரண்டு ஆண்டுகள் மட்டுமே நிகழ்த்தப்பட்டுள்ள கீழடி ஆய்வை விழுங்கி ஏப்பம்விட இவர்களால் முடியும், தமிழ்ச்சமூகம் விழிப்பு உணர்வற்று இருந்தால்.

படங்கள்: ஈ.ஜெ. நந்தகுமார், வீ.சதீஷ்குமார்

http://www.vikatan.com/juniorvikatan/2017-oct-08/investigation/135117-su-venkatesan-discuss-about-keeladi-excavation.html

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • Replies 202
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

  • கருத்துக்கள உறவுகள்

Holes evacuated in Kizhadi for research is npw closing

கீழடியில் அகழ்வாய்வு பணிக்காக,  தோண்டப்பட்ட குழிகள் மூடல்.

கீழடியில் 3-ஆம் கட்ட அகழ்வாய்வுக்காக தோண்டப்பட்ட குழிகள் ஜேசிபி மூலம் மண் கொட்டப்பட்டு மூடப்படுகிறது. இதனால் சமூக ஆர்வலர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

சிவகங்கை மாவட்டம், திருபுவனம் வட்டம், கீழடி அருகே அமைந்துள்ள பள்ளிச் சந்தை திடலில் இந்தியத் தொல்லியல் துறையினரால் கடந்த 2 ஆண்டுகளாக (2014-15, 2015-16) அகழ்வாய்வு மேற்கொள்ளப்பட்டது.

இதன் மூலம் வரலாற்றின் தொடக்க காலத்தைச் சேர்ந்த செங்கல் கட்டுமானங்கள் மற்றும் பலவகையான தொல்பொருள்கள் வெளிக் கொணரப்பட்டன. கீழடியில் 3-ஆம் கட்ட அகழாய்வு பணிகள் தொடங்கின. இவை கடந்த 30-ஆம் தேதி முடிவடைந்தன.

எனினும் அங்கிருந்து தொல்லியல் தொடர்பான பொருள்கள் ஏதும் கிடைக்கவில்லை. இந்நிலையில் கீழடியில் 4-ஆம் கட்ட அகழ்வாராய்ச்சி பணிகளை மேற்கொள்ள கோரிக்கை வலுத்து வருகிறது. கீழடியில் 4ம் கட்டமாக அகழ்வாராய்ச்சிப் பணிகளை மேற்கொள்ள வேண்டிய தேவை இருப்பதாக சென்னை உய்ரநீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.

இந்நிலையில் கீழடியில் மூன்றாவது கட்ட ஆராய்ச்சிக்காக தோண்டப்பட்ட குழிகள் மூடப்பட்டு வருகின்றன. இதற்காக ஜேசிபி மூலம் மண் கொட்டப்பட்டு மூடப்படுகிறது. 3-ஆம் கட்ட ஆய்வு பணிகள் முடிவடைந்த நிலையில் எந்த பொருளும் கிடைக்காததால் தொல்லியல் துறை குழிகளை மூடும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது.

கீழடியில் ஆய்வை தொடர வேண்டும் என்று அரசியல் கட்சிகள், சமூக ஆர்வலர்கள் கோரிய நிலையில் குழிகள் மூடப்பட்டு வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

- தற்ஸ்  தமிழ். -

Link to comment
Share on other sites

கீழடி அகழ்வுப் பணிகள் தொடர்வதை தமிழக அரசு உறுதிசெய்யும்: அமைச்சர் பாண்டியராஜன்

கீழடி ஆழ்வாராய்ச்சி

சிவகங்கை மாவட்டத்தில் நடந்து வந்த கீழடி அகழ்வாராய்ச்சியின் மூன்றாம் கட்ட ஆய்வில் குறிப்பிடத்தக்க தொல்பொருட்கள் கிடைக்காததால் ஆய்வுக் குழிகள் மூடப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

கீழடி அகழ்வுப் பணிகள் குறித்து திங்களன்று (அக்டோபர் 9) செய்தியாளர்களிடம் பேசிய தமிழக தொல்லியல் துறை அமைச்சர் மாபா பாண்டியராஜன் கீழடியில் தொடர்ந்து அகழ்வுப் பணிகள் நடைபெறும் என்றும் மத்திய அரசின் தொல்லியல் நிறுவனத்துடன் இணைந்து தமிழக அரசு பணியாற்றும் என்றும் தெரிவித்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக தொல்லியல்துறை அமைச்சர் மாபா பாண்டியராஜன் தமிழக தொல்லியல் துறையைக் காட்டிலும் மத்திய அரசின் நிறுவனத்தில் அனுபவம் வாய்ந்த ஆய்வாளர்கள் உள்ள காரணத்தால் மட்டுமே கீழடி அகழ்வு பணிகளை தமிழக அரசு மேற்கொள்ளவில்லை என்று கூறினார்.

''மத்திய அரசின் ஆராய்ச்சி நிறுவனம் கீழடியின் வரலாற்றை மறைப்பதாக நச்சுக் கருத்துகள் பரப்பப்பட்டு வருகின்றன. ஆனால் மத்திய நிறுவனத்தில் அகழ்வுப் பணிகளை மேற்கொண்டுவரும் அதிகாரி ஒரு தமிழர்தான். கீழடியில் மேலும் ஆராய்ச்சிகள் தொடரும். அதை தமிழக அரசு உறுதிசெய்யும்,'' என்றார் பாண்டியராஜன்.

2015ல் தொடங்கப்பட்ட கீழடி அகழ்வாராய்ச்சியில் கிடைத்த தொல்பொருட்கள் சுமார் 2,200 ஆண்டுகள் பழமையானவை என்று மத்திய கலாசாரம் மற்றும் சுற்றுலாத் துறை இணை அமைச்சர் மகேஷ் சர்மா மாநிலங்களவையில் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

பிற அகழ்வுப் பணிகள் குறித்து பேசிய அமைச்சர் தமிழகத்தில் கண்டறியப்பட்ட சுமார் 27,000 தொல்பொருட்கள் மட்டுமே எழும்பூர் அருங்காட்சியகத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ள நிலையில் மேலும் 11,000 பொருட்களை காட்சிப்படுத்த தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன என்றார் .

எழும்பூர் அருங்காட்சியகத்தை உலகத்தரம் வாய்ந்த அருங்காட்சியகமாகவும், உலகின் முதல் ஐம்பது காட்சியகங்களில் ஒன்றாக மாற்றவும் முயற்சிகள் எடுத்துவருவதாக அவர் குறிப்பிட்டார்.

''இலக்கிய ஆதாரம், தொல்பொருட்கள் மற்றும் கல்வெட்டுகள் என ஒவ்வொரு பகுதியாக பிரிந்து கிடக்கும் தமிழர் வரலாற்றை ஒன்றிணைத்து காட்சிப்படுத்தவுள்ளோம்,'' என்றார் அவர்.

http://www.bbc.com/tamil/india-41549937

Link to comment
Share on other sites

On 10/16/2017 at 12:51 AM, தமிழ் சிறி said:

Bild könnte enthalten: 3 Personen, Text

தமிழர்கள் இந்து இல்லை. அவர்கள் சைவம், ஆசிவகம், கெளமாரம் போன்ற நெறிகளைப் பேணியவர்கள்.

ஆரியர்கள் மத்திய ஆசிய பகுதியில் இருந்து (இன்றைய துருக்கி, ஈரான் போன்ற இடங்கள்) நகர்ந்து வந்தபோது அவர்களிடம் இருந்தது வேதங்கள் மட்டுமே.. இன்றும் ரிக் வேதத்தின் பகுதிகள் ஈரானின் சில பகுதிகளில் நூலாக உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

நகர்ந்து வந்த ஆரியர்கள் இந்திய நிலப்பரப்பில் வாழ்ந்த நாகர்களின் வழிமுறைகளை சூறையாடி விட்டார்கள். பிற்காலத்தில் அதற்கு இந்து மதம் என்று வெள்ளையன் பெயரிட்டுவிட்டான். tw_blush:

  • Thanks 1
Link to comment
Share on other sites

3 hours ago, இசைக்கலைஞன் said:

தமிழர்கள் இந்து இல்லை. அவர்கள் சைவம், ஆசிவகம், கெளமாரம் போன்ற நெறிகளைப் பேணியவர்கள்.

ஆரியர்கள் மத்திய ஆசிய பகுதியில் இருந்து (இன்றைய துருக்கி, ஈரான் போன்ற இடங்கள்) நகர்ந்து வந்தபோது அவர்களிடம் இருந்தது வேதங்கள் மட்டுமே.. இன்றும் ரிக் வேதத்தின் பகுதிகள் ஈரானின் சில பகுதிகளில் நூலாக உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

நகர்ந்து வந்த ஆரியர்கள் இந்திய நிலப்பரப்பில் வாழ்ந்த நாகர்களின் வழிமுறைகளை சூறையாடி விட்டார்கள். பிற்காலத்தில் அதற்கு இந்து மதம் என்று வெள்ளையன் பெயரிட்டுவிட்டான். tw_blush:

'வால்காவில் இருந்து கங்கை வரை' எனும் பயண கட்டுரை நூலை வாசித்துக் கொண்டு வருகின்றேன் புனைவையும் வரலாற்றையும் தத்துவார்த்தமாக விவரித்து எழுதப்படட நூல் இது. பாரஸீகத்தில் இருந்த  ஆரியர்களின் வருகையிலிருந்து, யவனர்களின் அறிமுகம், ஆங்கிலேயர்களின் வருகை வரைக்கும் எழுதப்பட்டு இருக்கு. ஆரியர்களின் ஆக்கிரமிப்பு,
விசுவாமித்திரர் வசிஷ்டர் போன்றவர்களின் பித்தலாட்டம், அவர்கள் அரசரிடம் இருந்து பெறும்  தட்ஷனைகளுக்காக ரிக் வேதத்தில் சேர்த்த அரசனை புகழ்ந்து பாடும் பாடல்கள் என்று விரிவாக உள்ளன.

இசை, உங்களை போன்றோர் கண்டிப்பாக வாசிக்க வேண்டிய ஒரு நூல் என்று எண்ணுகின்றேன்

நூல் பற்றி :https://ta.wikipedia.org/wiki/வால்காவிலிருந்து_கங்கை_வரை

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் எந்த மதம் ரெல் மீ கிளியர்லி  ??:cool:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 19.10.2017 at 3:52 PM, இசைக்கலைஞன் said:

தமிழர்கள் இந்து இல்லை. அவர்கள் சைவம், ஆசிவகம், கெளமாரம் போன்ற நெறிகளைப் பேணியவர்கள்.

ஆரியர்கள் மத்திய ஆசிய பகுதியில் இருந்து (இன்றைய துருக்கி, ஈரான் போன்ற இடங்கள்) நகர்ந்து வந்தபோது அவர்களிடம் இருந்தது வேதங்கள் மட்டுமே.. இன்றும் ரிக் வேதத்தின் பகுதிகள் ஈரானின் சில பகுதிகளில் நூலாக உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

நகர்ந்து வந்த ஆரியர்கள் இந்திய நிலப்பரப்பில் வாழ்ந்த நாகர்களின் வழிமுறைகளை சூறையாடி விட்டார்கள். பிற்காலத்தில் அதற்கு இந்து மதம் என்று வெள்ளையன் பெயரிட்டுவிட்டான். tw_blush:

"உண்மைகள்... உறங்கும் போது, பொய்  ஊரை சுற்றி வந்து விடும்" என்ற பழமொழி உள்ளது.
அதற்கு ஏற்ற மாதிரி.... ஆரியன், உலகின் மூத்த இனமான தமிழினத்தை, ஏறக்  குறைய அழித்தது  விட்டான் என்றே  நினைக்கின்றேன்.
அதனை... கொஞ்சம், தட்டி நிமிர்த்துவம் என்று, ஈழத்தில் ஆரம்பித்த போராட்டமும்  சோகத்தில் முடிந்தது மிக வேதனை
"வந்தாரை... வாழ வைத்ததால், இருந்தவனுக்கு இடமில்லை"  என்ற நிலைமை வந்து விட்டது.

1 hour ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

நான் எந்த மதம் ரெல் மீ கிளியர்லி  ??:cool:

புரட்சி.... நீங்கள் முன்பு எழுதிய கருத்துக்களில் பார்க்கும் போது....
நீங்கள்,  யாழ்ப்பாண... "ஆறுமுக நாவலரின்"   சைவ சமயத்தை, சேர்ந்தவராக இருக்க வேண்டும். :)

  • Like 1
  • Thanks 1
Link to comment
Share on other sites

On 10/20/2017 at 2:54 PM, தமிழ் சிறி said:

"உண்மைகள்... உறங்கும் போது, பொய்  ஊரை சுற்றி வந்து விடும்" என்ற பழமொழி உள்ளது.
அதற்கு ஏற்ற மாதிரி.... ஆரியன், உலகின் மூத்த இனமான தமிழினத்தை, ஏறக்  குறைய அழித்தது  விட்டான் என்றே  நினைக்கின்றேன்.
அதனை... கொஞ்சம், தட்டி நிமிர்த்துவம் என்று, ஈழத்தில் ஆரம்பித்த போராட்டமும்  சோகத்தில் முடிந்தது மிக வேதனை
"வந்தாரை... வாழ வைத்ததால், இருந்தவனுக்கு இடமில்லை"  என்ற நிலைமை வந்து விட்டது.

புரட்சி.... நீங்கள் முன்பு எழுதிய கருத்துக்களில் பார்க்கும் போது....
நீங்கள்,  யாழ்ப்பாண... "ஆறுமுக நாவலரின்"   சைவ சமயத்தை, சேர்ந்தவராக இருக்க வேண்டும். :)

ஈரான் நாட்டின் கொடி:

irlarge.gif

********************************************************************************************

இந்திய நாட்டின் கொடி:

National-Flag-of-India-ili-59-ogimg.jpg

இது எதேச்சையாக ஒரே மாதிரியாக அமைந்துவிட்டதா? :unsure:

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, இசைக்கலைஞன் said:

 

On 20/10/2017 at 7:54 PM, தமிழ் சிறி said:

"உண்மைகள்... உறங்கும் போது, பொய்  ஊரை சுற்றி வந்து விடும்" என்ற பழமொழி உள்ளது.
அதற்கு ஏற்ற மாதிரி.... ஆரியன், உலகின் மூத்த இனமான தமிழினத்தை, ஏறக்  குறைய அழித்தது  விட்டான் என்றே  நினைக்கின்றேன்.
அதனை... கொஞ்சம், தட்டி நிமிர்த்துவம் என்று, ஈழத்தில் ஆரம்பித்த போராட்டமும்  சோகத்தில் முடிந்தது மிக வேதனை
"வந்தாரை... வாழ வைத்ததால், இருந்தவனுக்கு இடமில்லை"  என்ற நிலைமை வந்து விட்டது.

புரட்சி.... நீங்கள் முன்பு எழுதிய கருத்துக்களில் பார்க்கும் போது....
நீங்கள்,  யாழ்ப்பாண... "ஆறுமுக நாவலரின்"   சைவ சமயத்தை, சேர்ந்தவராக இருக்க வேண்டும். :)

ஈரான் நாட்டின் கொடி:

irlarge.gif

********************************************************************************************

இந்திய நாட்டின் கொடி:

National-Flag-of-India-ili-59-ogimg.jpg

இது எதேச்சையாக ஒரே மாதிரியாக அமைந்துவிட்டதா? :unsure:

 

பார்சிகளான நேரு குழாமே மவுண்ட் பேட்டனுக்கும் அவரின் மனைவி எட்வீனாவிடற்கும் பாலியல் தோழனாகவும் அதே நேரத்தில் சேவகமும் செய்து பிரித்தானியர் இடம் இருந்து, அதிகாரத்தை அபகரித்து கொண்டது.

http://www.dailymail.co.uk/femail/article-1216186/The-shocking-love-triangle-Lord-Mountbatten-wife-founder-modern-India.html

http://www.telegraph.co.uk/news/2017/03/06/nehrus-love-lady-mountbatten-not-included-new-film-amid-fear/

இதில், நேரு பாலியல் தோழனாகவோ அல்லது சேவகத்திலோ விரும்பி பங்காளராக இருந்திருப்பின், அதை ஏறெடுத்துப்பார்க்கவோ அல்லது விமர்சிக்கவோ நான் விழையவில்லை.  

பார்சிகள் இன்றய ஈரான் மற்றும் ஈராக், துருக்கி மற்றும் சிரியாவின்  பகுதிகள் (அன்றய பாரசீகத்தை) பூர்விக்கமாக கொண்டவர்கள்.  

அவர்கள் கையில், அவர்கள் கனவிலும் நினைத்திராத அதிகாரம், கனவிலேயே காணாத  ஓர் நிலப்பரப்பின் மேல் பிரயோகிப்பதத்திற்கு வந்தபோது அல்லது வரும்போதோ, உண்மையான வரலாறு, பூர்விக, மானுடவியல் தடயங்களையும் அடையாளங்களையும் அவிபத்து அல்லது மறைப்பதே, அந்த அதிகாரத்தை தக்க வைக்க உதவும் என்பது வெள்ளிடைமலை.

அதனால், பார்சி பூர்விகத்திற்கும் கிந்தியக் கொடிக்கும் அதிக வேறுபாடுகள் இல்லாமல் இருப்பதற்கு இதுவே காரணம்.

உண்மையான கிந்தியக் கொடி, கிந்தியாவின் மொஹஞ்சதாரோ மற்றும் ஹரப்பா கதைகளின் படி, வேறு விவிதமாகவே இருந்திருக்கும். இதில் வேடிக்கை என்னவென்றால், கிநதியா கூட வேறு பூர்விகமுடையோரின் கோடியை தனதாக வரித்துக் கொண்டதே.

  • Thanks 1
Link to comment
Share on other sites

நாம் தமிழர் கட்சி வீரத்தமிழர் முன்னணி என்ற ஒரு அமைப்பை சில வருடங்களுக்கு முன்பு ஆரம்பித்தது. சீமான் முதற்கொண்டு அக்கட்சியில் இருக்கும் Humayun, அப்துல் காதர் வரை வேல் ஏந்தி சென்றார்கள். அப்போது அது வேடிக்கையாக பார்க்கப்பட்டது. அதை ஏன் செய்தார்கள் என்பதற்கான விடை ஈரான் கொடியில் இருக்கிறது. tw_astonished:

இன்று பாஜக தமிழர்களை இந்துக்கள் என சொல்லி அரசியல் செய்ய வருகிறது. இல்லை.. முருகன், சிவன், கண்ணன் எல்லோரும் தமிழ் மூதாதைகளே. அவர்களை திருடிச் சென்றவர்கள் நீங்கள் என்ற கருத்தியலை நாம் தமிழர் கட்சி வலுவாக முன் வைக்கிறது. இதனால் பாஜகவின் இந்து மத அரசியல் தமிழகத்தில் அடிபட்டுப் போகிறது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

திண்டுக்கல் அருகே இன்னொரு கீழடி!!

1eb8bb.jpg

திண்டுக்கல்: தமிழகத்தின் இன்னொரு கீழடியாக பழந் தமிழர் நாகரீக சான்றுகளை திண்டுக்கல் பாடியூர் கோட்டைமேடு பகுதி தன்னுள் புதைத்து வைத்திருக்கலாம் என்கின்றனர் தொல்லியல் ஆய்வாளர்கள். எரியோடு சாலையில் குளத்தூரில் இருந்தும் திண்டுக்கல்- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் முள்ளிப்பாடியில் இருந்தும் உள்ளே பாடியூர் சென்றடையலாம். 30 அடி உயர மண்மேடுதான் இப்போதும் கோட்டைமேடு என அழைக்கப்படுகிறது. மிக பரந்துபட்ட அளவில் இந்த கோட்டை மேடு இருந்திருக்கிறது. அரசு பள்ளிக்கூடம் கட்டுவதற்காக இந்த மண்மேட்டின் பெரும்பகுதி அண்மையில்தான் இடிக்கப்பட்டிருக்கிறது.

மேலும் இக்கோட்டை மேடு பகுதியில் பிரமாண்ட பழங்கால கிணறு ஒன்று இருந்திருக்கிறது. இந்த மண்மேட்டை இடித்துதான் அந்த பிரமாண்ட கிணறையே பள்ளிக் கட்டிடத்துக்காக மூடியும் இருக்கிறார்கள்.

மண்மேடுகளில் புதையுண்ட பானைகள் மண்மேடுகளுக்குள் பழங்கால பானைகள் புதையுண்டு கிடப்பதை இப்போதும் காண முடியும். மேலும் அந்த பகுதி எங்கும் சிவப்பு நிறத்திலான பழங்கால மண்பானைகளின் சிதறல்களையும் நேரில் காண முடிகிறது

கல்லாறு கோட்டை இந்த கோட்டைமேடு பகுதி கல்லாறு என்ற ஆற்றின் கரையோரத்தில் இருக்கிறது. திருமலைக்கேணி மலைப் பகுதியில் இருந்து வெளியேறும் நீர்தான் கல்லாறாக ஓடி குளத்தூர் அருகே சந்தானவர்த்தி ஆற்றுடன் கலக்கிறது. இந்த ஆறுகள் வேடசந்தூர் குடகனாற்றில் சங்கமிக்கின்றன.

இக்கோட்டைமேடு மீது இப்போதும் பழங்கால கல் கட்டிடம் ஒன்று இருக்கிறது. முனியப்பன் கோவிலாக இப்போது சிறிய அளவில் இங்கே வழிபாடு நடத்தப்படுகிறது

இதே கல் கட்டிடத்தில் மீன்சின்னம் பொறித்த பிரம்மாண்ட கதவு இருந்ததாகவும் இக்கதவு மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும் ஊர் பெரியவர் ஒருவர் நமது ஒன் இந்தியா தமிழ் செய்தியாளரிடம் கூறினார். மேலும் பள்ளிக்கூடத்துக்காக கோட்டை மேடு இடிக்கப்பட்டபோது மிக நீண்ட பெரும் பெரும் பாறை கற்கள் வெளியே எடுக்கப்பட்டதாகவும் பாடியூர் பெரியவர்கள் கூறுகின்றனர்.

இங்கே மிக பிரமாண்ட கோட்டை ஒன்று பழந்தமிழர் காலத்தில் இருந்திருக்கலாம் என்றே கருதப்படுகிறது. சங்க காலங்களில் ஆயுதக் கிடங்குகள் இருக்கும் இடங்களுக்கு பாடி என்ற பெயர் உண்டு. பாடியூரை சுற்றிய கிராமங்கள் அனைத்தும் பாடி என்ற பெயரிலேயே அழைக்கப்படுகின்றன. சீலப்பாடி, முள்ளிப்பாடி, பாடியூர், மேல்பாடியூர், தாமரைப்பாடி என அடுத்தடுத்து பாடி என்கிற பெயர்களிலேயே இங்கு ஊர்கள் அமைந்திருக்கின்றன.

இந்த 'பாடி' பெயர்களிலான ஊர்கள் அனைத்தும் சிற்றாறுகளின் கரைகளிலேயே அமைந்திருப்பதும் குறிப்பிடத்தக்கது. பாடியூரில் எஞ்சியிருக்கும் பகுதியை முழுமையாக அகழாய்வு செய்தால் பழந்தமிழர் நாகரிகத்தின் சான்றுகள் ஏராளம் கிடைக்கும் என்றே நம்பப்படுகிறது.

பாடியூர் வேடசந்தூர் சட்டசபை தொகுதிக்குட்பட்டது. அதாவது லோக்சபா துணைசபாநாயகர் தம்பிதுரையின் கரூர் மக்களவைத் தொகுதிக்குட்பட்டது. ஆட்சியாளர்களும் மக்கள் பிரதிநிதிகளும் அக்கறையுடன் செயல்பட்டு அகழாய்வுக்குட்படுத்தினால் பாடியூர் பழந் தமிழர் நாகரிகத்தை நிறுவக் கூடிய இன்னொரு கீழடியாகவும் இருக்கக் கூடும் என்கின்றனர் தொல்லியல் ஆய்வாளர்கள்.

நன்றி : தட்ஸ்தமிழ்

டிஸ்கி :

அடுத்தது என்ன ? ஊத்தி மூட மத்திய அரசு ஓடர் ! மண் அள்ளி போட ஜெசிபி இயந்திரம் ரெடி !! :cool:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Bild könnte enthalten: eine oder mehrere Personen, Personen, die stehen und Text

 

கீழடி அகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட பொக்கிஷங்களை மத்திய தொல்லியல் துறை அதிகாரி கடத்த முயன்றதால் கீழடி ஊர்மக்கள் திரண்டு அந்த வாகனத்தையும் அதிகாரியையும் சிறை பிடித்தனர்.

சிவகங்கை மாவட்டம், கீழடி அகழாய்வு மூன்று கட்ட ஆய்வுப் பணிகள் நடந்து முடிந்திருக்கிறது. இந்நிலையில், நான்காம் கட்ட ஆய்வுப் பணி இன்னும் இரண்டு மாதங்களில் தொடங்கவுள்ளது சில தினங்களுக்கு முன்பு தமிழக தொல்லியல்துறை அமைச்சர் பாண்டியராஜன் தெரிவித்திருந்தார். இந்நிலையில் இன்று கீழடி அகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட சுமார் 7000 பொருள்களை இந்த ஊரில் உள்ள சமூதாயக்கூடத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்தது. திடீரென நேற்று மதியம் 3 மணியளவில் மதுரையில் இருந்து ராட்சதலாரி மூலம் அங்குள்ள அனைத்துப் பொருள்களையும் கடத்தியுள்ளார் தொல்லியல்துறையின் அதிகாரிகளில் ஒருவரான வீரராகவன். அவர் பொருள்களை ஆள்களை வைத்து லாரியில் ஏற்றிக்கொண்டிருந்த தகவல் ஊர் மக்களுக்கு காலதாமதமாக தெரிய வந்தது. உடனே ஊரில் இருந்த பொதுமக்கள் திரண்டு லாரியில் ஏற்றிய பொருள்களை எடுத்த இடத்திலேயே வைக்க வேண்டும் என்று முற்றுகையிட்டார்கள்.

இந்தத் தகவல் திருப்புவனம் போலீஸுக்கும் தாசில்தாருக்கும் தெரியவர அவர்களும் ஆஜராகினார்கள். எங்களுக்கு எந்தத் தகவலும் தெரிவிக்காமல் இப்படி அவசர அவசரமாக ஆய்வில் கிடைக்கப்பெற்ற பொருள்களை கொண்டு செல்லவேண்டிய அவசியம் என்ன என்று தாசில்தார் கேட்டதற்கு தொல்லியல் துறை அதிகாரியான வீரராகவன் என்னசொல்வது என்று தெரியாமல் உலற ஆரம்பித்தார். அந்த பொருள்களை பாதுகாப்பதற்காக வாசு என்கிறவர் காவலராக இருக்கிறார். அவருக்குக் கூட இது குறித்து தெரியப்படுத்தவில்லை. காவலாளியாக இருக்கும் வாசுவிடம் கேட்டபோது, ``கடத்தல் நடக்கும்போது நான் இங்கு இல்லை. எனக்கு போன் போட்டு தகவல் சொன்னார்கள். உடனடியாக வந்து பார்த்தால் பொருள்கள் அனைத்தையும் ஏற்றிவிட்டார்கள். உடனே லாரி சாவியை பிடுங்கிவிட்டேன். அதோடு எங்கள் ஊர் மக்களும் திரண்டுவிட்டார்கள். மதியம் 3 மணியில் இருந்து 7மணி வரைக்கும் பொருள்களை ஏற்றியிருக்கிறார்கள். இவர்கள் கீழடியில் அருங்காட்சியகம் அமைக்கப்படும் என்று சொல்லிவிட்டு எங்களையெல்லாம் ஏமாற்றப்பார்க்கிறார்கள். எங்கள் மண்ணில் இருந்து எடுக்கப்பட்ட எந்த பொருளும் கடத்தப்படுவதை அனுமதிக்கமாட்டோம். உடனடியாக அருங்காட்சியகம் அமைக்கப்பட வேண்டும்' என்றார் ஆவேசமாக.

http://www.vikatan.com/news/tamilnadu/106686-central-officer-tried-to-steal-excavated-things-at-keeladi.html?utm_source=vikatan.com&utm_medium=search&utm_campaign=2

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • 3 weeks later...
  • 3 weeks later...
  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

Bild könnte enthalten: 2 Personen, Personen, die lachen, Text

110 ஏக்கரையும்,  தோண்டினால்.... எ‌வ்வளவு பெரிய சாம்ராஜ்ஜியம் வெளியில் வரும்.

  • Like 1
Link to comment
Share on other sites

  • 3 weeks later...
  • 4 weeks later...
  • 1 month later...



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Similar Content

  • Topics

  • Posts

    • கல்லறையில் உடல்கள் தோண்டியெடுப்பு.. மனித எலும்பில் உருவாகும் போதைப் பொருள்.. அடிமையாகும் இளைஞர்கள்! ’போதைப் பொருட்கள் உயிருக்குக் கேடு விளைவிக்கும்’ என விளம்பரப்படுத்தப்பட்டாலும், அதன் விற்பனையும் அதற்கு அடிமையாகும் நபர்களின் எண்ணிக்கையும் நாளுக்குநாள் அதிகரித்தே வருகிறது. உலகளவில் பலர் இந்தப் போதைப் பழக்கத்துக்கு அடிமையாகி வருகின்றனர். அந்த வகையில் மேற்கு ஆப்பிரிக்க நாடான சியரா லியோனில் இதற்கு பலர் இளைஞர்கள் அடிமையாகி உள்ளனர். அதிலும், மனித உடல் எலும்புடன் தயாரிக்கப்படும் ஒருவித போதைப் பொருளுக்குத்தான் அவர்கள் அதிகமாக அடிமையாகி இருப்பதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மேற்கு ஆப்பிரிக்க நாடான சியரா லியோனில் போதைப்பொருள் பயன்பாடு அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கடந்த ஆறு ஆண்டுகளுக்கு முன்பு போதைப் பொருளுக்கு அடிமையான இந்நாட்டு மக்களின் எண்ணிக்கை தற்போது அதிகரித்துள்ளது. அதிலும், இந்நாட்டிலுள்ள பெரும்பாலான மக்கள் ’குஷ்’ என்ற ரக போதைப்பொருளுக்கு அடிமையாகியுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது. இந்த ’குஷ்’ போதைப்பொருள் மனித எலும்புகளிலிருந்து உருவாக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது. கடந்த ஆறு ஆண்டுகளாக இந்த ’குஷ்’ ரக போதைப்பொருள் சியரா லியோன் பகுதியில் பழக்கத்திலிருந்து வருகிறது. இதன் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் அதனை தயாரிப்பவர்கள் கல்லறையில் இருக்கும் புதைகுழிகளைத் தோண்டி பிணங்களை சேகரித்து அதன் எலும்புகளிலிருந்து ’குஷ்’ போதைப்பொருளைத் தயார் செய்வதகாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இந்த எலும்புகளுடன் , கஞ்சா மற்றும் சில இரசாயனங்கள் கலந்து இந்தப் போதைப் பொருள் தயாரிக்கப்படுகிறது. இதற்காக, சியரா லியோனில் இதுவரை நூற்றுக்கணக்கான புதைகுழிகள் தோண்டப்பட்டுள்ளன. இந்த போதை மருந்து கிட்டத்தட்ட பல மணி நேரம் போதை தருவதாகச் சொல்லப்படுகிறது. மேலும் இந்தப் போதைக்கு அடிமையான இளைஞர்கள் தங்களிடம் இருக்கும் பொருட்களை (புத்தகங்கள், ஆடைகள்) விற்று அந்த போதை மருந்தை வாங்குவதாகவும், அதற்குப் பிறகு வீட்டில் உள்ள பொருட்களைத் திருடிச் சென்று கொடுத்து வாங்குவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. போதைப்பொருள் மூலம் நாட்டில் குடியிருப்பதற்கும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக அந்த நாட்டின் ஜனாதிபதி கவலை தெரிவித்துள்ளார். இதன் பிடியிலிருந்து மக்களை மீட்க போதைப்பொருள் ஒழிப்பு மையங்கள் அமைக்கப்படும் எனவும் போதைப்பொருள் விற்பனையாளர்கள் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அந்த நாட்டு ஜனாதிபதி எச்சரித்துள்ளார்.   https://thinakkural.lk/article/299459
    • வடக்கு மீனவர்களின் ஓயாத போராட்டம் ஜே.ஏ.ஜோர்ஜ் “அது ஒரு சனிக்கிழமை, நான் எனது வலைகளை எடுப்பதற்காக கடலுக்கு சென்றேன். வலை நிறைய மீன்களை எதிர்பார்த்து சென்ற எனக்கு அங்கு அதிர்ச்சியே மிஞ்சியது. ஏனென்றால் நான் விரித்து வைத்திருந்த வலைகள் அங்கு இல்லை.  எனது வலைகளை இழுவை படகுகளில் வந்த இந்திய மீனவர்களை சேதப்படுத்தி விட்டனர். ஆனால் இது முதல் முறையாக நடக்கும் சம்பவம் இல்லை” -  இவ்வாறு தனது கதையை கூறும் மீனவரான ரெஜினோல்ட் தனது கடந்த கால அனுபவங்களுடன் ஒப்பிடுகையில் தற்போதைய தனது போராட்டம் தீவிரமடைந்திருப்பதாக கூறுகின்றார். 20 ஆண்டுகளாக தனது வாழ்க்கைக்காக கடல் அலைகளுடன் போராடி வரும் ரெஜினோல்ட் மட்டுமன்றி வடமாகாண மீனவர்களில் அதிகளவானவர்கள் தற்போது இவ்வாறு கடும் நெருக்கடியை எதிர்நோக்கியுள்ளனர். இலங்கை கடற்பரப்பிற்குள் இழுவை படகுகளை பயன்படுத்தி இந்திய மீனவர்கள் முன்னெடுக்கும் மீன்பிடி நடவடிக்கைகளே இந்த நெருக்கடிக்கு காரணமாக உள்ளது. நெடுந்தீவைச் சேர்ந்த ரெஜினோல்ட் தனது தந்தையுடன் இணைந்து நீண்டகாலம் மீன்பிடியில் ஈடுபட்ட நிலையில், திருமணத்துக்கு பின்னர் தற்போது தனியாக தொழில் செய்கின்றார். “நான் என் படகை மோட்டார் இல்லாமல் பயன்படுத்துகிறேன். மோட்டார் ஒன்றை வாங்க என்னிடம் போதுமான பணம் இல்லை. அதனால் என்னால் அதிக தூரம் செல்ல முடியாது. கடந்த காலங்களில் மீன்பிடிக்க பாரம்பரிய வலைகளைப் பயன்படுத்தினேன். இழுவை படகுகளில் வந்த இந்திய மீனவர்களை எனது வலைகளை சேதப்படுத்தி விட்டனர். எனவே, இப்போது மீன்பிடிக்க சிறிய வலையைப் பயன்படுத்துகிறேன். இதனால், முன்பு போல் மீன் பிடிக்க முடியவில்லை. கடலில் இரண்டு மூன்று மணி நேரம் மாத்திரமே செலவிட முடிகின்றது. எனக்கு மூன்று பிள்ளைகள் உள்ளனர்.  எனது மூத்த மகன் ஐந்தாம் வகுப்பு படிக்கிறான். அவர்களுக்காக நான் பல செலவுகளைச் செய்ய வேண்டியிருக்கிறது. பொருட்களின் விலை முன்பை விட அதிகமாக உள்ளது. குடும்பத்தினரின் தேவைகளை நிறைவேற்றுவது இப்போது மிகவும் கடினமாக உள்ளது” என்கிறார் ரெஜினோல்ட். அமெரிக்க பாதுகாப்பு பல்கலைக்கழகம் 2008ஆம் ஆண்டு துருக்கியின் இஸ்தான்புல் நகரில் ஏற்பாடு செய்திருந்த செயற்குழு கூட்டத்தில் கலாநிதி சனத் டி சில்வாவினால் முன்வைக்கப்பட்ட அறிக்கையின்படி, இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான கடல் எல்லை மூன்று கடல் பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது. வடக்கில் வங்காள விரிகுடா, நடுவில் பாக்கு நீரிணை, தெற்கில் மன்னார் விரிகுடா என இந்த கடல் எல்லைகள் உள்ள நிலையில், பாக்கு நீரிணை ஊடாக இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான சராசரி தூரம் சுமார் 32 கிலோமீற்றர்கள் என அறிக்கை கூறுகிறது. கச்சதீவில் இருந்து இந்தியாவின் ராமேஸ்வரம் வரையிலான தூரம் சுமார் 14 கடல் மைல்கள், அதாவது சுமார் 26 கிலோமீட்டர்கள். யாழ்ப்பாணத்தில் இருந்து கச்சத்தீவு வரை சுமார் 60 கிலோமீட்டர் தொலைவான கடற்பரப்பில் தனது அதிகாரத்தை கொண்டுள்ள இலங்கை கடற்படை, சர்வதேச கடல் எல்லையை தாண்டி இலங்கை கடலுக்குள் நுழையும்  இந்திய இழுவை படகுகள் குறித்து அவ்வப்போது  நடவடிக்கை எடுத்து வருகிறது. எவ்வாறாயினும், இலங்கை  கடற்பரப்புக்குள் இந்திய இழுவை படகுகள் பிரவேசிப்பது  நாளாந்தம் இடம்பெறுவதாக வடபகுதி மீனவ சங்க தலைவர்கள் கூறுகின்றனர். “இது ஒரு தீவிரமான பிரச்சினை. இந்திய மீனவர்கள் மீது இலங்கை கடற்படை உள்ளிட்டவர்கள் தேவையான நடவடிக்கை எடுக்காதமையே இந்த பிரச்சினை தொடர்வதற்கு முக்கிய காரணமாக உள்ளது.  ஏராளமான இந்திய இழுவை படகுகள் இலங்கை கடல் பகுதிக்குள் நுழையும் நிலையில், கைது செய்யப்படும் இந்திய மீனவர்கள் மற்றும் கைப்பற்றப்படும் இந்திய இலுவை படகுகளின் எண்ணிக்கை மிகக் குறைவாகவே உள்ளது. சம்பந்தப்பட்ட தரப்பினருடன் கலந்துரையாடி தேவையான நடவடிக்கை எடுத்து இந்தப் பிரச்சினைகளுக்கு தீர்வு காண மீன்பிடி அமைச்சு நடவடிக்கை எடுப்பதாகத் தெரியவில்லை. இந்திய மீனவர்கள் பயன்படுத்தும் இழுவை படகுகள் வடபகுதி மீனவர்களுக்கு சொந்தமானதை படகுகளை விட பெரியவை. அவை தினமும் வடக்கு கடல் பகுதிக்குள் நுழைவதால், ஏராளமான பிரச்னைகள் ஏற்படுகின்றன. இதனால் வடபகுதி மீனவர்களின் வருமானம் பாதிக்கப்படுவதுடன், இந்திய இழுவை படகுகளால் இலங்கை மீனவர்களின் வலைகளுக்கு சேதம் ஏற்படுகின்றது. அத்துடன், எமது மீன்பிடி வளம் பறிபோகிறது. எமது மீனவர்களுக்குச் சொந்தமான படகுகளை சேதப்படுத்திய சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன”- என யாழ்ப்பாண மாவட்ட கடற்றொழிலாளர் சமாசங்களின் சம்மேளன தலைவர் அன்னலிங்கம் அன்னராசா தெரிவித்தார். அத்துடன், இந்தியாவில் இருந்து இழுவை படகுகள் வருவதை தடுக்கும் வகையில் இலங்கையில் சட்ட அமைப்பு இருப்பதாகவும் எனினும், அவற்றால் நடைமுறையில் இலங்கை மீனவர்களால் எந்தவித பயனையும் பெற்றுக்கொள்ள முடியவில்லை என, அன்னராசா சுட்டிக்காட்டினார். 1979 ஆம் ஆண்டின் 59 ஆம் இலக்க கடற்றொழில் (வெளிநாட்டு மீன்பிடி படகுகளை ஒழுங்குபடுத்துதல்) சட்டத்தின் 04ஆவது பிரிவின்படி, அனுமதியின்றி மீன்பிடி தொடர்பான நடவடிக்கைகளுக்காக வெளிநாட்டு மீன்பிடி படகுகளை இலங்கை கடற்பரப்பில் மீன்பிடிக்க பயன்படுத்தக்கூடாது என்று கூறுகிறது. அத்துடன், இலங்கை கடற்பரப்பிற்குள் வெளிநாட்டுப் படகுகள் பிரவேசித்தால், மீன்பிடிக்கப்படுவதைத் தடுக்கும் வகையில், அந்தப் படகில் உள்ள மீன்பிடி சாதனங்களை முறையான முறையில் தடுத்து வைக்க வேண்டும் என்று சட்டத்தின் 05வது பிரிவு கூறுகிறது. வெளிநாட்டுப் படகுகளை நிறுத்தவும், சோதனைகளை நடத்தவும், பிடியாணையுடன் அல்லது இல்லாமலும் படகுகளைக் கைப்பற்றவும், தனிநபர்களைக் கைது செய்யவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.  2018 ஆம் ஆண்டில், இந்த சட்டத்தில் திருத்தங்கள் செய்யப்பட்டதுடன், இலங்கையில் உள்ள ஆயுதப்படைகளின் தளபதிகள் மற்றும் அதன் அமுலாக்கத்துக்காக கரையோரப் பாதுகாப்புத் திணைக்களத்தின் தலைவர் ஆகியோருக்கு பொறுப்பை வழங்கும் கூடுதல் சரத்துகள் அறிமுகப்படுத்தப்பட்டன. வெளிநாட்டுப் படகுகள் மூலம் இலங்கைக் கடற்பரப்பில் சட்டவிரோதமாக மீன்பிடித்தால் இரண்டு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையும் அபராதமும் விதிக்கப்படும். இந்த குற்றம் தொடர்பான நீதிமன்ற விசாரணைகள் ஒரு மாதத்துக்குள் முடிக்கப்பட வேண்டும் என்று சட்டம் கூறுகிறது. இந்த சட்டத்தை நிறைவேற்றுவதற்கு பொறுப்பான அமைச்சருக்கு விதிமுறைகளை உருவாக்கும் திறன் உட்பட விரிவான அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளன. 1981 ஆம் ஆண்டு இந்தச் சட்டத்தின் கீழ் இலங்கைக் கடற்பரப்பில் நுழைவதற்கான அனுமதியைப் பெறுவதற்கான நடைமுறைகளை கோடிட்டுக் காட்டும் விதிமுறைகள் வெளியிடப்பட்டன. இந்தச் சட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கு மீன்பிடி அமைச்சு மற்றும் கடற்றொழில் மற்றும் நீரியல் வளத் திணைக்களம் என்பன மீள தவிர்க்க முடியாத பொறுப்பைக் கொண்டுள்ளன. இந்திய மீனவர்கள் வட கடலில் மேற்கொள்ளும் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளை முற்றாக நிறுத்துவதற்கு தேவையான நடவடிக்கைகள் தொடர்பிலான கலந்துரையாடல் 2023 ஜனவரி 24 ஆம் திகதி கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் நடைபெற்றது.  மேலும், 2023ல் சட்டவிரோத வெளிநாட்டு மீன்பிடி கப்பல்கள் மற்றும் மீனவர்கள் குறித்து அந்தந்த நிறுவனங்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. எவ்வாறாயினும், இந்திய இழுவை படகுகளினால் வடபகுதி மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வு காண போதிய நடவடிக்கைகளை எடுக்க அரசாங்கம் இன்னமும் தவறியுள்ளதுடன், இதனால் பிரச்சினை தொடர்ந்து மோசமாகி வருகிறது. இவ்விடயம் தொடர்பில் வினவிய போது கடற்றொழில் அமைச்சின் செயலாளர் கே.என். குமாரி சோமரத்ன, இந்த பிரச்சினைக்கு இரு நாடுகளுக்கிடையில் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணப்பட வேண்டும் என தெரிவிக்கின்றார். “இந்த விவகாரம் தொடர்பாக இரு நாடுகளுக்கும் இடையே பல ஆண்டுகளாக விவாதங்கள் நடந்து வருகின்றன. இந்த விடயம் தொடர்பில் மீண்டும் ஒருமுறை கலந்துரையாடலை ஆரம்பிக்குமாறு வெளிவிவகார அமைச்சிடம் கோரிக்கை விடுத்துள்ளோம். வெளிவிவகார அமைச்சரும் அதற்கான முயற்சியில் ஈடுபட்டு வருவதை நாம் அறிவோம். இப்பிரச்சினை தொடர்பாக தற்போதுள்ள சட்டங்களில் திருத்தம் செய்ய தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு, தற்போது இறுதிக்கட்டத்தில் உள்ளது. தற்போது, முதல் தடவை கைதுக்கான தண்டனை மற்றும் மீண்டும் மீண்டும் கைது செய்யப்பட்டதற்கான தண்டனையை சட்டம் குறிப்பிடுகிறது, ” என்று அவர் கூறுகின்றார். இந்தச் சட்டத்தின் கீழ் கைது செய்ய கடற்படையின் அதிகாரத்தைப் பயன்படுத்துவதற்கு ஏன் பணிப்புரை வழங்கப்படவில்லை என வினவியபோது, அந்தச் சட்டம் இன்னமும் அமுலில் உள்ளதாகவும், அதன்படி தற்போது கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் செயலாளர் தெரிவித்தார். இது இவ்வாறாக இருக்கும் நிலையில், இந்த ஆண்டு இதுவரையான காலப்பகுதியில் கடற்படையினரால் கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்களின் எண்ணிக்கை 150க்கும் அதிகமாகும். இது அதிக எண்ணிக்கையாக தெரிந்தாலும், நாளாந்தம் இலங்கைக் கடற்பரப்புக்குள் நுழையும் இந்திய மீனவர்களின் வருகையுடன் ஒப்பிடுகையில் இது மிகக் குறைவு என மீனவ சங்கத் தலைவர்கள் குறிப்பிட்டுள்ளனர். இந்த நிலையில், இலங்கை கடற்பரப்பிற்குள் பிரவேசிக்கும் இந்திய மீனவர்களை கண்காணிப்பதற்காக வடக்கில் ‘கடல் காவலர்கள்’ எனப்படும் தன்னார்வ குழுவொன்றை ஸ்தாபிப்பதற்கான அமைச்சரவை பத்திரத்தை கடற்றொழில் அமைச்சர் சமர்ப்பித்துள்ளார். இதேவேளை, இந்திய மீன்பிடி பிரச்சனையால் நாளாந்தம் 350 மில்லியன் ரூபாய் பொருளாதார இழப்பு ஏற்படுவதாக அமைச்சு மதிப்பிட்டுள்ளது. இந்த நிலையில், தற்போதைய கடற்றொழில் அமைச்சர் வடக்கில் உள்ள மீனவர்களின் வாக்குகளால் பாராளுமன்றத்துக்கு தெரிவு செய்யப்பட்டதாகவும், கடற்றொழில் அமைச்சராக பதவியேற்றதன் பின்னர் இந்த பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு அவர் போதிய தலையீடுகளை மேற்கொள்ளவில்லை என வடமாகாண மீனவர் சங்க தலைவர்கள் குற்றம் சுமத்துகின்றனர். வடக்கில் உள்ள எழுவைத்தீவு, அனலைத்தீவு, நெடுந்தீவு உள்ளிட்ட, மீன் பிடி தொழிலை வாழ்வாதாரமாக கொண்டுள்ள மக்கள் வசிக்கும் தீவு பகுதிகள் இன்னும் இலங்கை கடற்படையினரின் கண்காணிப்பிலேயே உள்ளதை எம்மால் நேரடியாக காண முடிந்தது. இந்த தீவுகளின் கடற்படையினரின் சோதனை சாவடி அல்லது முகாம் இன்னும் செயற்பாட்டிலேயே உள்ளது. இவ்வாறு வடக்கின் கடற்பரப்பை சுற்றி ரோந்து நடவடிக்கையில் ஈடுபடும் இலங்கை கடற்படையினர், இந்திய மீனவர்கள் இலங்கைக்குள் பிரவேசிப்பதை தடுக்க  உரிய நடவடிக்கை எடுக்காதது குறித்து வடபகுதி மீனவர்கள் தமது அதிருப்தியை வெளிப்படுத்துகின்றனர். இலங்கை கடற்படையினர் நினைத்தால் இந்திய மீனவர்களை இலங்கை கடல் வளத்தை சுரண்டாமல் இலகுவாக தடுத்து நிறுத்த முடியும் என்பதே வடபகுதி மீனவர்கள் நம்பிக்கையாகும். ஆனால், அது இன்றுவரை நிறைவேற்றப்படவில்லை என்பது அந்த மீனவர்கள் நிலையை நேரில் பார்க்குத்போது தெளிவாக புலப்படுகின்றது.   https://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/வடக்கு-மீனவர்களின்-ஓயாத-போராட்டம்/91-336077
    • யாழ்.பல்கலையின் பொன்விழாவை முன்னிட்டு ஆய்வு மாநாடு! adminApril 18, 2024 யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் யாழ்ப்பாண வளாகம் எனும் பெயரில் இலங்கைப் பல்கலைக்கழகத்தின் ஒரு அங்கமாக ஆரம்பிக்கப்பட்டு இவ்வருடத்துடன் ஐம்பதாண்டைப் பூர்த்தி செய்து பொன்விழாக் காண்கின்றது. அதனை முன்னிட்டு முதலாவது சர்வதேச கல்வியியல் ஆய்வுமாநாட்டை யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் உயர்பட்டப்படிப்புக்கள் பீடமும் கலைப்பீடத்தைச் சேர்ந்த கல்வியியல் துறையும் இணைந்து ஒழுங்கமைத்துள்ளன. ‘நாளையை வலுப்படுத்தல் – கல்வியின் போக்குகளும் அவற்றை புரிந்துகொள்ளவும் உள்வாங்கவும் வடக்கு மாகாணத்தின் இயலுமைகள்’ எனும் கருப்பொருளில் இம்மாநாடு திட்டமிடப்பட்டுள்ளது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர்.சி.சிறிசற்குணராசா தலைமையிலும் உயர்பட்டப்படிப்புக்கள் பீடப் பீடாதிபதி பேராசிரியர்.செ.கண்ணதாசன் மற்றும் கலைப் பீடாதிபதி பேராசிரியர்.சி.ரகுராம் ஆகியோரின் இணைத்தலைமையிலும் இவ் ஆய்வுமாநாடு அரங்கேறவுள்ளது. கல்வியியல் துறைத் தலைவர் கலாநிதி.ஆ.நித்திலவர்ணண் மாநாட்டின் இணைப்பாளராகச் செயற்படுகின்றார். வட மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் ம.பற்றிக் டிரஞ்சன் மற்றும் வட மாகாணக் கல்விப் பணிப்பாளர் தி.ஜோன் குயின்ரஸ் ஆகியோர் இந்நிகழ்வில் சிறப்பு விருந்தாளர்களாகக் கலந்துகொள்கின்றனர். எதிர்வரும் 20ம் திகதி சனிக்கிழமையும் 21ம் திகதி ஞாயிற்றுக்கிழமையும் காலை மற்றும் மாலை அமர்வுகள் எனத் திட்டமிடப்பட்டுள்ள இம்மாநாட்டின் காலை அமர்வுகள் கைலாசபதி கலையரங்கிலும் மாலை அமர்வுகள் உயர்பட்டப்படிப்புக்கள் பீடத்திலும் நடைபெறவுள்ளன. சனிக்கிழமை நடைபெறவுள்ள அங்குரார்ப்பண நிகழ்வில் திறவுகோல் உரையினை கொழும்புப் பல்கலைக்கழக கல்வியியல் பீட கல்வி உளவியல் இருக்கைப் பேராசிரியர் மஞ்சுளா விதாணபத்திரண நிகழ்த்தவுள்ளார். ‘வாண்மைத்துவ விருத்திக்கான ஆய்வு மைய புத்தாக்கங்கள்: வடக்கு இலங்கையின் ஆசிரியர் கல்விக்கான தந்திரோபாய அணுகுமுறை’ எனும் தலைப்பில் இவ் உரை நிகழவிருக்கின்றது. திறவுகோல் உரையினைத் தொடர்ந்து மாநாட்டின் கருப்பொருளை மையப்படுத்திய மையக்கருத்துரைகள் இடம்பெறவுள்ளன. இக்கருத்தரங்கிற்கு உயர்பட்டப்படிப்புக்கள் பீடப் பீடாதிபதி பேராசிரியர்.செ.கண்ணதாசன் தலைமைதாங்கவுள்ளார். ‘இலங்கையின் ஆரம்ப பிள்ளைப்பருவக் கல்வியை முறைமைப்படுத்தல் – சவால்களும் பிரச்சனைகளும்’ எனும் தலைப்பில் திறந்த பல்கலைக்கழக கல்வியியல் பீடப் பேராசிரியர்.தி.முகுந்தனும், ‘வட மாகாணக் கல்வியின் சமகால உள சமூக நிலைமைகள்’ எனும் தலைப்பில் உளமருத்துவ நிபுணர் சி.சிவதாசும், ‘இலங்கையின் பாடசாலைக் கலைத்திட்டத்தின் சவால்களும் புதிய போக்குகளும்’ எனும் தலைப்பில் திறந்த பல்கலைக்கழக கல்வியியல் பீடப் பேராசிரியர் எவ்.எம்.நவாஸ்தீனும், ‘சட்டத் தீர்மானங்களை அறிவிப்பதில் கல்வியியல் ஆய்வுகளின் தேவைகள்’ எனும் தலைப்பில் களுவாஞ்சிக்குடி நீதவான் நீதிமன்ற நீதிபதி ஜே.பி.ஏ.ரஞ்சித்குமாரும் உரையாற்றவுள்ளனர். ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள இரண்டாம் நாள் நிகழ்வுகளுக்கு யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கல்வியியல் துறைப் பேராசிரியர் ஜெயலக்சுமி இராசநாயகம் தலைமை தாங்கவுள்ளார். இந் நிகழ்வில் திறவுகோல் உரையை தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழக கல்வியியல் மற்றும் மேலாண்மைத் துறைத் தலைவர் பேராசிரியர் கு.சின்னப்பன் ‘தமிழ் கற்பித்தலில் புதிய போக்குகள்’ எனும் தலைப்பில் நிகழ்த்தவுள்ளார். அதனைத் தொடர்ந்து ‘நாளையை வலுப்படுத்தல் – கல்வியின் போக்குகளும் அவற்றை புரிந்துகொள்ளவும் உள்வாங்கவும் வட மாகாணத்தின் இயலுமைகள்’ எனும் தலைப்பில் கலைப்பீடப் பீடாதிபதி பேராசிரியர் சி.ரகுராம் தலைமையில் திறந்த புலமைத்துவக் கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது. இக்கலந்துரையாடலில் ஓய்வுபெற்ற வலயக் கல்விப்பணிப்பாளரும் அதிபருமாகிய என்.தெய்வேந்திரராஜா, கல்வியியல் ஆய்வாளரும் அகவிழி மற்றும் ஆசிரியம் சஞ்சிகைகளின் ஆசிரியருமான தெ.மதுசூதனன், தேசிய கல்வி நிறுவன விரிவுரையாளர் ஐ.கைலாசபதி, கிளிநொச்சி விவேகானந்தா வித்தியாலய அதிபர் ஜெய மாணிக்கவாசகர், இலங்கை பரீட்சைகள் திணைக்களப் பணிப்பாளர் எம்.ஜீவராணி புனிதா, யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி அதிபர் இ.செந்தில்மாறன், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகக் கல்லூரியின் முன்னாள் பணிப்பாளரும் ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டத்தின் திட்ட முகாமையாளருமாகிய ஜே. ஜூட் வோல்ற்றன் மற்றும் கிளிநொச்சி வடக்கு கல்வி வலய தொழில் வழிகாட்டல் அலுவலர் சு.வீரசுதாகரன் ஆகியோர் பங்குபற்றவுள்ளனர். பார்வையாளர்களின் வினாக்களுக்கும் விடையளிக்கும் நிகழ்வாகவும் இக் கலந்துரையாடல் திட்டமிடப்பட்டுள்ளது. ‘வடக்கு மாகாணப் பாடசாலைகளின் வெற்றிகளும் பின்னடைவுகளும்’, ‘பாடசாலைகளும் சமூகமும் – எங்கு நாம் நிற்கின்றோம் – முன்னோக்கிப் போவதற்கான வழிகள்’, ‘எதிர்பார்க்கப்படும் கற்றல் பேறுகளை அளவிடுதல்’, மற்றும் ‘கல்வியும் வேலைவாய்ப்பும் – சந்தர்ப்பங்களும் சவால்களும்’ எனும் தலைப்புக்களில் இக்கலந்துரையாடல் கட்டமைக்கப்பட்டுள்ளது. கலந்துரையாடலின் கருத்துச்செறிவுகளை மாநாடு நிறைவுபெற்ற பின்னர் கொள்கை ஆவணமாக வெளியிட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இரண்டு நாள்களும் மாலை அமர்வுகள் பலாலி வீதியில் அமைந்துள்ள உயர்பட்டப்படிப்புக்கள் பீடத்தில் நடைபெறும். இரண்டு நாள் மாலை அமர்வுகளிலும் தலா நாற்பத்து நான்கு ஆய்வுக் கட்டுரைகள் பல்வேறு தலைப்புக்களிலும் சமர்ப்பிக்கப்படவுள்ளன. பல்கலைக்கழகங்களின் ஆய்வு மாணவர்கள், விரிவுரையாளர்கள், கல்வியியல் கல்லூரிகள் மற்றும் ஆசிரிய பயிற்சிக் கலாசாலை ஆசிரியக் கல்வியலாளர்கள், கல்வி நிர்வாகிகள், பாடசாலை அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள் என பன்முகப்படுத்தப்பட்ட ஆய்வாளர்களினால் பல்வேறு தலைப்புக்களில் ஆய்வுக் கட்டுரைகள் முன்வைக்கப்படவுள்ளன   https://globaltamilnews.net/2024/201875/
    • போட்டியில் கலந்துகொண்ட @kalyani யும், @கந்தப்புவும் வெற்றிபெற வாழ்த்துக்கள். இன்னும் 15 மணித்தியாலங்களே இருப்பதனால், யாழ்களப் போட்டியில் விரைவில் கலந்துகொள்ளுங்கள்😀 இதுவரை போட்டியில் இணைந்தவர்கள்: @பையன்26 @முதல்வன் @suvy @ஏராளன் @நிலாமதி @Ahasthiyan @ஈழப்பிரியன் @kalyani @கந்தப்பு  
    • அமெரிக்கா ஏதோ ஒரு விதத்தில் பங்கு எடுக்கும், எடுக்க வேண்டிய நிலை, இஸ்ரேல் ஈரானுக்கு திருப்பி அடித்தால் . (மற்ற திரியில் சொன்னனது போல , இஸ்ரேல் க்கு தெரியும், அமெரிக்கா, மேற்கு பாதுகாப்புக்கு எப்போதும் வரும் என்று. அதை மேற்கும், மீண்டும், மீண்டும் சொல்லுகின்றன. இதுவே பங்கு எடுப்பது. அமெரிக்கா செய்வது, இஸ்ரேல் ஐ பாதுகாப்பத்தற்கு ஈரானின் ஏவுகணனைகளை தடுப்பது act of  war,)   ஈரானின் தூதரகம் மீதான இஸ்ரேல் இன் தாக்குதல் , மேற்கு, குறிப்பாக US க்கு தெரிந்து (அதன் மூலம் 5 கண்கள் உளவு நாடுகளுக்கு - 5 eyes intelligence community தெரிந்து), US ஆமோதித்து, அனுமதித்து  நடத்தப்பட்ட தாக்குதல். ஏனெனில், இஸ்ரேல் இப்படியானவற்றை அமெரிக்காவிடம் சொல்லாமல் செய்வதில்லை. மேலும், France க்கும்  உச அறிவித்து இருக்கும், ஏனெனில், சிரியா பிரான்ஸ் இன் காலனித்துவம்  கீழ் இருந்தது. மற்றது, பிரச்னை வந்தால் செக்யூரிட்டி கவுன்சில் இல் பிரான்ஸ் இந்த உதவி தேவை, ஆனால், இந்த காலனி என்பதே பிரதான  காரணம். இது செக்யூரிட்டி கவுன்சில் இல் எழுதப்படாத  விதி- காலனித்துவ அரசுகளே, முனைய காலணிகளின் இப்போதைய அரசுக்கள் சார்ந்த  விடயத்தில் முன்னுரிமை உள்ளது என்பது .  எனவே, மேற்கு ஆகக்குறைந்தது மறைமுக பங்குதாரர் (கனடா தூதரகத்தை காலி செய்தது அநேகமாக இந்த 5 eyes வழியாகத் தான் இருக்கும்) இஸ்ரேல் சொல்லியது தாக்குதலுக்கு மிகச் சிறிய நேரத்துக்கு முதல் என்று (வேண்டும் என்று) அமெரிக்கா கசிய விட்டு, சில செய்திகள் காவுகின்றன. அனால், தாக்குதலை இஸ்ரேல் 2 மாதமாக திட்டமிட்டது என்று பின் செய்து வந்தது.  கேக்கிறவன் கேணையனாக இருந்தால் ... என்ற அமெரிக்காவின் கதை. (அப்படி US  இடம் சொல்லாமல் இஸ்ரேல் செய்தது, Sinnai மீதான தாக்குதல், கைப்பற்றலும்  , ஆனால், அது பெரிய யுத்தத்தின் ஒரு பகுதி, Egypt முதல் தாக்கி இருந்தது). அமெரிக்காவுக்கு முதலே (ஏற்ற காலத்தில் ) தெரியும் என்றது, newyork times வெளியிட்டு உள்ள இன்னொரு செய்தியானா, அமெரிக்கா, இஸ்ரேல் அதிகாரிகள் ஈரானின் எதிர்பபை குறைத்து மதிப்பிட்டு விட்டார்கள் என்று அதிகாரிகள் அவர்களின் வாயால் சொன்னதாக என்ற செய்தியில்   இருந்து தெரிகிறது.   இதனால் தான் மேற்கு, ஈரானை தடுக்க முனைந்தது. முடியாமல் போக, அது தடுத்தது. un இன் பகுதி charter ஐ குழிதோண்டி புதைத்தன அமெரிக்காவும், அதன் வாலுகளும்.  இதை மேற்கு rule based என்று சொல்லும் என்று நினைக்கிறன்.  
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.