Jump to content

எழுதிட மறுக்குது மனக்கோல்


Recommended Posts

எழுதிட மறுக்குது மனக்கோல்

எழுதிட எடுத்தேன் எழுதுகோல்
இயங்கிட மறுத்தது மனக்கோல்
எழுதி எழுதி என்ன பயன்
எதற்கும் தீர்வு இல்லை எனின்

நாளும் நாளும் தொடருது அவலம்
தடுத்திட வழி காண எவருமில்லா துயரம்
போதும் போதும் பேசி ஏமாற்றும் நாடகம்
முடிந்தால் மக்களைக் காப்பாற்ற வழி வேண்டும்

அல்லல்பட்டு அல்லபட்டு அழிவதுதான்
தமிழர் தலைவிதியோ என்று
எண்ணிடும் போது இதயம் துடிக்கிறது
அதனால் எழுதிட மறுக்குது மனக்கோல்

வெற்று ஆரவாரங்களோ எல்லாம் என
வெதும்புகின்றது உள்ளம்
சொத்துக்கள் சேர்ப்பவரும் அரச
இருக்கைகள் காப்பவர்களும் தான் 
அதிகமாகிவிட்டனர் என்னும்போது
அழுவதா? கொதிப்பதா? என தெரியவில்லை.

மெல்ல அரங்கேறும் இனக்கொலைக்கு
உடந்தையாளர்கள்தான் கூடுமானவர்களோ?
உண்மை உணர்வுடன் நீதி கேட்டு போராட
பக்கபலமாக மக்களுக்கு யாருமில்லையோ?

மக்களின் துயரநிகழ்வுகளில் கலந்து கொண்டு
அங்கும் அரசியல்மேடை போட நினைப்பவர்கள்
நித்தம் துயரத்துள் தள்ளாடும் மக்கள் நிலையை 
எப்படி உணர்வார் உதவிட வருவார்?

சாவையே காசாக்க துணிந்திடும் எத்தர்கள்- மக்கள்
வலிகளையே படமாக்கி விற்றிட முனையும் கொள்ளையர்கள்
போலி வாக்குறுதிகளை அள்ளிக்கொட்டி அரசியல்
ஆதாயம் தேடும் கொடியவர்கள் நடுவே மக்கள் வாழ்வு.

நச்சுப்பாம்புகள் நடுவேயும் கொடிய விலங்குகள் மத்தியிலும்
அச்சமின்றி எவரும் வாழ்ந்துவிடலாம் -பதவி மோகம்
பணவெறி பிடித்தலையும் மனிதப்பண்பில்லாதோர் நடுவே
பயமின்றி நிம்மதியாக வாழ முடிந்திடுமா? நீதிதான் கிடைத்திடுமா?


மந்தாகினி

 

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மெல்ல அரங்கேறும் இனக்கொலைக்கு
உடந்தையாளர்கள்தான் கூடுமானவர்களோ?
உண்மை உணர்வுடன் நீதி கேட்டு போராட
பக்கபலமாக மக்களுக்கு யாருமில்லையோ?

 

எம்மினத்தின் அவலங்களை மிக நன்றாகச் எழுத்தில் வடித்திருக்கின்றிர்கள்....! தொடர்ந்து எழுதுங்கள் மந்தாகினி....! tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
On 10/25/2016 at 3:08 PM, manthahini said:

நச்சுப்பாம்புகள் நடுவேயும் கொடிய விலங்குகள் மத்தியிலும்
அச்சமின்றி எவரும் வாழ்ந்துவிடலாம் -பதவி மோகம்
பணவெறி பிடித்தலையும் மனிதப்பண்பில்லாதோர் நடுவே
பயமின்றி நிம்மதியாக வாழ முடிந்திடுமா? நீதிதான் கிடைத்திடுமா?


மந்தாகினி

உண்மை.   நல்ல கவிதைப் பதிவு.

 

 

 

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.