Jump to content

சுவிஸில் தமிழரை சுட்டுக்கொன்ற சக தமிழர்


Recommended Posts

சுவிஸில் தமிழரை சுட்டுக்கொன்ற சக தமிழர்
 
 
சுவிஸில் தமிழரை சுட்டுக்கொன்ற சக தமிழர்
சுவிட்ஸர்லாந்தில் இரு தமிழர்களுக்கு இடையில் இடம்பெற்ற மோதலில் ஒருவர் துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார்.
 
இந்த சம்பவம், நேற்று முன்தினம் அந்நாட்டின் சொலத்தூண் மாநிலத்தில் இடம்பெற்றுள்ளது.
 
சுவிஸ்வாழ் இலங்கை தமிழர்களுக்கு இடையில் இடம்பெற்ற வாய்தர்க்கம்  முற்றிய நிலையில் இந்த துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
 
துப்பாக்கி சூட்டுக்கு இலக்கான தமிழர் ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில்  உயிரிழ ந்துள்ளதாக அந்நாட்டு பொலிஸார் கூறியுள்ளனர்.
 
வவுனியா குருமன்காடு பகுதியை சேர்ந்த 29 வயதான கார்த்திக் பாலேந்திரன் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளதாக சுவிட்ஸர்லாந்து பத்திரிகைகள் செய்தி வெளியிட்டுள்ளன.

http://onlineuthayan.com/news/19464

http://www.blick.ch/news/schweiz/mittelland/taeter-auf-der-flucht-mann-am-bahnhof-solothurn-erschossen-id5658079.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
சுவிஸிலும் துப்பாக்கி இவ்வளவு இலகுவாக கிடைக்குதா???
எவ்வளவு தான் சட்டங்களையும் எல்லைகளையும் அழுத்தினாலும்........??
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, விசுகு said:
சுவிஸிலும் துப்பாக்கி இவ்வளவு இலகுவாக கிடைக்குதா???
எவ்வளவு தான் சட்டங்களையும் எல்லைகளையும் அழுத்தினாலும்........??

நம்ம தமிழரல்லோ 

இருந்தாலும் என்ன பிரச்சினையென்பது தெரியவில்லையா?? இன்னும் சுடுவதற்க்கான காரணம் என்னவோ

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, விசுகு said:
சுவிஸிலும் துப்பாக்கி இவ்வளவு இலகுவாக கிடைக்குதா???
எவ்வளவு தான் சட்டங்களையும் எல்லைகளையும் அழுத்தினாலும்........??

விசுகு....
சுவிஸ்... ஐரோப்பிய ஒன்றியத்தில் இல்லை என்றாலும், 
ஐரோப்பிய ஒன்றியம் ஆரம்பித்த போது... சுவிஸ் தனது எல்லைக்குள், வரும் ஐரோப்பியர்களை கண்காணிக்கும் பணியை தளர்த்தியது.
இந்த ஒன்றியம் தொடங்கிய காலத்தில், பண்புள்ள  12 நாடுகளே இருந்தன, இன்று.... அது வீங்கிப் பெருத்து, 
மழைக்குக் கூட பள்ளிக்  கூடப் பக்கம்  ஒதுங்காத,  கிரிமினல் மக்களை கொண்ட....  28 நாடுகளும்  உள்ள போது....
துப்பாக்கி....  அந்த நாட்டுக்குள், வருவதை தவிர்க்க முடியாது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, முனிவர் ஜீ said:

நம்ம தமிழரல்லோ 

இருந்தாலும் என்ன பிரச்சினையென்பது தெரியவில்லையா?? இன்னும் சுடுவதற்க்கான காரணம் என்னவோ

முனிவர் ஜீ....
கொடுக்கல் வாங்கல், சீட்டு, மப்பு, பொம்பிளை... பிரச்சினை எண்டு ஆரம்பித்து இருக்கலாம்.
இல்லாவிட்டால்...  கமல் - ரஜனி,  அஜித் - விஜய், சிம்பு - தனுஸ்....  மாதிரியான சண்டையோ... தெரியாது.
எதுக்கும்.... மயூரன், தனது சுவிஸ்  செய்தியில்... என்ன சொல்லுகிறார் என்று, பொறுத்திருந்து பார்ப்போம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
21 minutes ago, முனிவர் ஜீ said:

நம்ம தமிழரல்லோ 

இருந்தாலும் என்ன பிரச்சினையென்பது தெரியவில்லையா?? இன்னும் சுடுவதற்க்கான காரணம் என்னவோ

சுவிசில் சிறு குற்றங்களுக்கே (ரயிலில்  டிக்கற் இல்லாமல் பயணித்தல்) 

ஊருக்கு பார்சல் செய்து விடுவார்கள்.

அது தான் கேட்டேன்

இருவருடைய வாழ்க்கையும் முடிஞ்சுது...

Link to comment
Share on other sites

28 minutes ago, முனிவர் ஜீ said:

 

இருந்தாலும் என்ன பிரச்சினையென்பது தெரியவில்லையா?? இன்னும் சுடுவதற்க்கான காரணம் என்னவோ

வியாபார போட்டி, அதனால் ஏற்பட்ட தகராறு என்று கேள்வி..:unsure:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சுட்டு வீரசகாசம் செய்தவர் எனக்கு தெரிந்தவர்தான்.
சும்மா வாய் தர்க்கம் என்றுதான் சொல்கிறார்கள்.

சுவிஸில் பழைய யுகோசிலாவிய நாட்டு கார்கள் களவாக 
கொண்டுவந்து துப்பாக்கி விட்பர்கள் ...... அப்படி வந்தது ஒன்று இரண்டு 
தமிழர்களிடம் உலாவுகின்றது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வியாபார போட்டி உயிரை குடித்துவிட்டது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
38 minutes ago, Maruthankerny said:

சுட்டு வீரசகாசம் செய்தவர் எனக்கு தெரிந்தவர்தான்.
சும்மா வாய் தர்க்கம் என்றுதான் சொல்கிறார்கள்.

சுவிஸில் பழைய யுகோசிலாவிய நாட்டு கார்கள் களவாக 
கொண்டுவந்து துப்பாக்கி விட்பர்கள் ...... அப்படி வந்தது ஒன்று இரண்டு 
தமிழர்களிடம் உலாவுகின்றது. 

உடனடிக் கருத்துக்கு  நன்றி.... மருது, 
உங்களிடமிருந்து... மேலதிக தகவல்களை,  எதிர் பார்க்கின்றோம்.
இல்லாவிட்டால்..... இதுக்கு, புலி முத்திரை குத்தி இருப்பார்கள்,

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இது போட்டி இல்லை...பொறாமை ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
29 minutes ago, MEERA said:

வியாபார போட்டி உயிரை குடித்துவிட்டது.

மரக்கறி, துணிமணி, நகை போன்ற வியாபாரமா?
அல்லது.... வேறு வியாபாரமா.. மீரா.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, நவீனன் said:

வியாபார போட்டி, அதனால் ஏற்பட்ட தகராறு என்று கேள்வி..:unsure:

நன்றி உங்கள் தகவலுக்கு நவீனன்

(தமிழ் சிறிய, விசுகர்)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தீபாளி மலிவு விறபனைக்கு கடையை வீடியோ எடுத்திருக்கிறார்கள் 

சுட்டவர் அந்த இடத்தில் பிரபல வீடியோ எடுப்பவர் (சோலோ வீடியோ)
அவர் வந்து சொல்லி இருக்கிறார் .... ஏன் வேற வீடியோ ?
நான் இருக்கிறேன் தானே இவற்றை நிறுத்த சொல்லி.

அந்த கடையும் முன்பு அவருக்கு சொந்தமானதுதான் 
பின்பு விற்று வேறு ஒருவர் வாங்கி இருக்கிறார். கடையை நடத்துபவரும் 
விற்றவரும் ஆரம்பத்தில் நன்றாக இருந்தாலும் பின்பு 
சில மன கசப்புகள் வந்திருக்கிறது.

அதன் காரணமாகவே வேறு ஒரு வீடியோ வந்து இருக்கிறது.

வாய் தர்க்கம் சற்று முத்திய போது ...

நீ ஆம்பளையாய் இருந்தால் இந்த இடத்தில் நான் இப்ப வாறன் என்று விட்டு 
சென்றவர் ..... கொடுத்த வாக்குறுத்திக்கு மாறாது 20 நிமிடத்தில் 
திரும்பி வந்திருக்கிறார்.

வந்தவர் உடனேயே சட சட என நான்கு ரவைகள் சுட்டிருக்கிறார் 
இன்னுமொருவர் இருவருக்கும் நன்பர் ..... அவர் தடுத்து இருக்கிறார் 
அவருக்கும் ஒரு ரவை பாய்ந்திருக்கிறது ..... அதிர்ஷ்டவசமாக அவருக்கு படவில்லை 
அவர் ஒரு கொணருக்குள் ஓடி இருக்கிறார் ...
மீண்டும் ஒரு ரவை சுட்டிருக்கிறார்.

பின்பு கடை கண்ணாடிகளை உடைத்துவிட்டு 
கடை நடத்துனரை உள்ளே சென்று சுட்டு இருக்கிறார் 
ரவைகள் முடிந்து விட்ட்தால் ...... அவருக்கு பாதிப்பில்லை.

பின்பு காரை எடுத்துக்கொண்டு போனவர் 
மறுநாள் போலீசில் சென்று சரண் அடைந்து விடடார். 

(ஊரில் பேச்சுவாக்கில் சொல்வார்கள் 10 பிள்ளை பெற்றவளுக்கு 1 பிள்ளை பெற்றவள் முக்கி காட்டின மாதிரி என்று. இதில் சுட்டவர் இப்போதான் முதல் பிள்ளை பெற்று இருக்கிறார். மற்றவர்கள் முள்ளிவாய்க்கால்லையும் விசுவாசம் காரணமாக இறுதிவரை உடன் இருந்து தலையை காத்தவர்கள். அடி சித்திரவதை கள் பின்பு விடுதலை ஆகி இப்போதான் கொஞ்சம் மீள்கிறார்கள் )  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ம்.ம்.ம்.......... வாள் வெட்டு முடிந்து இப்போ துப்பாக்கி...........!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 29.10.2016 at 9:30 PM, Maruthankerny said:

(ஊரில் பேச்சுவாக்கில் சொல்வார்கள் 10 பிள்ளை பெற்றவளுக்கு 1 பிள்ளை பெற்றவள் முக்கி காட்டின மாதிரி என்று. இதில் சுட்டவர் இப்போதான் முதல் பிள்ளை பெற்று இருக்கிறார். மற்றவர்கள் முள்ளிவாய்க்கால்லையும் விசுவாசம் காரணமாக இறுதிவரை உடன் இருந்து தலையை காத்தவர்கள். அடி சித்திரவதை கள் பின்பு விடுதலை ஆகி இப்போதான் கொஞ்சம் மீள்கிறார்கள் )  

ஹ்ம்ம்.... ஆ த்திரக் காரனுக்கு புத்தி மத்திமம்.
இனி.... குடும்பம், பிள்ளையை... கம்பிக்கு பின்னால் இருந்து காண வேண்டியது தான். :unsure:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தான் ஆம்பிளை எண்டதை நிரூபிச்சுப் போட்டார்... சிங்கன்.. :rolleyes:

இனி கம்பி பின்னால் இருந்து... ஆறுதலா.....நிரூபித்த தனது ஆண்மையை நினைத்து பெருமிதம் கொள்ளட்டும். 

யாருக்காவது வெடி வைக்கும் நாள் வரும் என்று துவக்கு, களவா வாங்கும் போதே, தெரிந்திருக்கிறது. :unsure:

கிடைத்த அவகாசமான 20 நிமிஷங்கள் அவருக்கு.... பின் விளைவுகள் குறித்து சிந்திக்க போதுமானதாக இருந்திருக்கும்.

இருவரது தலைவிதி.... அன்று ஒருவர் இறக்க, கொன்றவர் சிறை செல்ல வேண்டியதாகி விட்டதே. tw_dissapointed_relieved:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Nathamuni said:

தான் ஆம்பிளை எண்டதை நிரூபிச்சுப் போட்டார்... சிங்கன்.. :rolleyes:

இனி கம்பி பின்னால் இருந்து... ஆறுதலா.....நிரூபித்த தனது ஆண்மையை நினைத்து பெருமிதம் கொள்ளட்டும். 

யாருக்காவது வெடி வைக்கும் நாள் வரும் என்று துவக்கு, களவா வாங்கும் போதே, தெரிந்திருக்கிறது. :unsure:

கிடைத்த அவகாசமான 20 நிமிஷங்கள் அவருக்கு.... பின் விளைவுகள் குறித்து சிந்திக்க போதுமானதாக இருந்திருக்கும்.

இருவரது தலைவிதி.... அன்று ஒருவர் இறக்க, கொன்றவர் சிறை செல்ல வேண்டியதாகி விட்டதே. tw_dissapointed_relieved:

ம்ம்ம்

கன கால பகைமை போலும்...

திட்டமிட்டு செய்தது   போலிருக்கு..

Link to comment
Share on other sites

சும்மா  கருத்து  எழுதினாலே  ஆள் அனுப்பி  வெருட்டுரம்  போனை  போட்டு  என்ன  கேமா  என  கேட்கிறம்  இதில  வியாபார போட்டி  அதுவும்  பொருளாதார பிரச்சினை  என்றால்  சும்மா  விட  முடியுமா  சொல்லுங்க அதுதான் போட்டுட்டம் .

நாங்களே  எல்லாம்  என  வாழ்த்து  சிலருக்கு பழகிவிட்டது அதை  மீறி  இன்னொன்று  வரும்  போது  அதை  ஏற்க மனசு  தடுக்கிறது .

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நோர்வே அனுமதித்தால் அங்கும் குரானை எரிக்கலாம்.
    • கனிமொழி எப்படி ஆங்கிலம் பேசுகிறார் என கேள்விக்கு விடை இருக்கா? மேற்கூறிய காரணங்கள் அவருக்கு பொருந்தாதா? இது வரை அப்படி ஒரு முறைப்பாடு இருந்ததாக தெரியவில்லை?  
    • இந்த நியாயத்தை சொன்னவர் தான் எதை சொன்னாலும் அதை அப்படியே சாப்பிட ஆட்கள் உள்ளனர் என தெரிந்தே சொல்கிறார்🤣. பயிற்று மொழிதொகு அதிக அளவிலான தனியார் பள்ளிகள் ஆங்கிலத்தைப்பயிற்று மொழியாகக் கொண்டுள்ளன. அதே வேளையில் அரசுப் பள்ளிகள் தமிழை முதன்மைப் பயிற்று மொழியாகக் கொண்டுள்ளன. மேலும், நடுவண் அரசால் நடத்தப்படும் கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் ஆங்கிலத்தையும் இந்தியையும் பயிற்றும் மொழியாகக் கொண்டுள்ளன. https://ta.m.wikipedia.org/wiki/தமிழ்நாட்டில்_கல்வி சீமான் பள்ளி படிப்பு தமிழில்தானே? நல்லாத்தானே தமிழ் பேசுறார்? அதிலே சேர்த்திருக்கலாம். ஒட்டு மொத்த தமிழ்நாட்டில் தமிழில் படிக்க சரியான பள்ளி இல்லை என்பதை எதையும் தாங்கும் புலன்பெயர்ந்தோர் ஏற்கலாம். தமிழ்நாட்டு மக்கள்?  
    • யாழ்களத்தில் சீமான் தொடர்பாக ஆதரவு எதிர்ப்புனு இரு பிரிவுகள் உண்டு. இரண்டுக்கும் தொடர்பில் இல்லாமல் பொதுவான சில விசயங்கள். சீமான் மீதான ஆதரவு ஈழதமிழருக்காக அவர் குரல் எழுப்புவதால் அவர் எமக்கு ஏதும் செய்யக்கூடிய வலிமை உள்ளவர் என்று நம்புகிறோம். சீமான் கட்சி தமிழகத்தில் ஆட்சியமைக்கும் அவர் தமிழக முதல்வரானால் நாம்  ஈழத்தில் வலிமைபெற அது பெரிதும் உதவும் என்றும் நம்மில் சிலர் நம்புகிறோம். தமிழகம் என்பது இந்திய மத்திய அரசின் நேரடி மறைமுக ஆளுகைக்குட்பட்டயூனியன் பிரதேசங்களுட்பட்ட  36 மாநிலங்களில் ஒன்று, மாநிலங்களுக்குள்ளேயுள்ள அரசியல் காவல்துறை நீதி பொது போக்குவரத்தில் மத்திய அரசு ஒருபோதும் தலையிடாது. ஆனால் மாநிலத்தை கடந்து இன்னொரு விஷயத்தில் அங்கு ஆட்சியிலிருப்பவர்கள் இருக்கபோகிறவர்கள் எது செய்வதென்றாலும் மத்திய அரசின் அனுமதியின்றி எதுவுமே செய்ய முடியாது, செய்வதென்றால் மத்திய அரசின் அனுமதி பெற்றே ஆகவேண்டும், அதையும்மீறி எதுவும் செய்தால் சட்ட ஒழுங்கை மீறியவர்கள் இந்திய ஒருமைப்பாட்டை துஷ்பிரயோகம் செய்தவர்கள் என்று காரணம் சொல்லி ஆட்சியை கலைக்கும் அதிகாரம் மத்திய அரசிடம் உண்டு. அது எவர் முதல்வராக இருந்தாலும் அதுதான் நிலமை. எம் விஷயத்தில் யாரும் உதவுவதென்றாலும் இந்திய வெளியுறவுதுறையின் அனுமதி இன்றி இம்மியளவும் எம் பக்கம் திரும்ப முடியாது, எம் விடயத்தில் தலையிடுமாறு கடிதங்கள் மட்டும் வேண்டுமென்றால் மத்திய அரசுக்கு எழுதிவிட்டு காத்துக்கொண்டிருக்கலாம். காலம் காலமாக நடப்பதும் அதுதான்  நடக்க போவதும் அதுதான். மத்திய அரசை அழுத்தம் கொடுத்து வேண்டுமென்றால் எதாவது செய்ய பார்க்கலாம், அப்படி எம் விஷயத்தில் அழுத்தம் கொடுக்க மாநிலத்தில் ஆட்சி கலைக்கப்பட்டாலும் மீண்டும் படுத்தபடியே ஆட்சியை பிடிக்கும் வல்லமை அந்த கட்சிக்கு இருக்கவேண்டும் , அந்த வலிமை இருந்த ஒரேயொரு முதல்வர் எம்ஜிஆர் மட்டுமே  அவரால்கூட எம் விஷயத்தில் மத்திய அரசை அழுத்ததிற்குள் கொண்டுவந்து எமக்கு எதுவும் செய்யவைக்க முடியவில்லை, இதுவரை ஓரு சில தொகுதிகள்கூட ஜெயித்திராத சீமான் இனிமேல் அதிமுக, திமுக, இப்போ விஜய் என்று பாரம்பரிய மற்றும் திடீர் செல்வாக்கு பெற்ற கட்சிகள் என்று அனைத்தையும் துளைத்து முன்னேறி தமிழக ஆட்சியை பிடித்து அரியணையேறுவது சாத்தியமா? சீமான் தமிழக முதல்வராக வேண்டுமென்பது தமிழீழ தமிழரின் ஆசையா இருந்து எந்த காலமும் எதுவும் ஆகபோவதில்லை, சீமான் தமிழக முதல்வராக வேண்டுமென்பது தமிழக மக்களில் பெரும்பான்மையினரின் ஆசையா இருக்கவேண்டும், அந்த ஆசை அங்கே நிலவுகிறதா? யதார்த்தங்களை புரியாது வெறும் உணர்ச்சி அடிப்படையில் ஆதரவு எதிர்ப்பு என்று நிற்பது எம்மிடையே பிளவுகளை வேண்டுமென்றால் அதிகரிக்கலாம், சீமானின் வாக்கு வங்கியை ஒருபோதும் அதிகரிக்காது. உணர்ச்சி பேச்சுக்களால் எதுவும் ஆகபோவதில்லை என்று உறுதியாக நம்பியதால்தான் எமது தலைமைகள் ஆயுதம் ஏந்தின, அவர்கள் போன பின்னர் மீண்டும் உணர்ச்சி பேச்சுக்களை நம்பி எமக்குள் நாமே முட்டிக்கிறோமே,  நாம் எமது தலைமையை அவர்கள் சொல்லிபோன  வழியை/வலியை அவமதிக்கிறோமா?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.