Jump to content

மோகனின் கற்பனை பேட்டிகள்


Recommended Posts

கௌண்டமணி செந்தில் ஒரு கலந்துரையாடல்

--------------------------------------------------------------------------------

டேய் பச்சை மிளகாய் தலையா எங்கடா போயிட்டு வர்றே.

ஓட்டு போட்டுட்டு வந்தண்ணே.

ஏன்டா அந்த கருமத்தை போட்டே.

ஒரு சந்தேகம் அண்ணே.

எதை வேண்ணாலும் கேளு ஆனா கொழந்த எங்கேர்ந்து வந்துதன்னு மட்டும் கேக்காதே.

இல்லை அண்ணே எலெக்ஷன்னா என்ன அண்ணே.

அப்படி வாடி. இந்த ஆல்-இன்-ஆல் அழகுராஜாவோட அறிவைப்பத்தி தெரிஞ்ச ஒரே ஆள் நீதான்டா.

சொல்லுங்கண்ணே.

அது எலெக்ஷன் இல்லை கலெக்ஷன். காசு பண்ற வேலைடா லக்ஷ்மி வெடி வாயா.

அப்ப ஏன்ணே கையில கறுப்பு புள்ளி வெக்கறாங்க.

அப்படி கேளுடா. டேய் எத்தனை பேரை முட்டாள் பண்ணோம்னு ஒரு கணக்கு வேண்டாமா அதுக்கு தான்.

அப்ப 5 வருஷதுக்கு ஒரு தடவை ஆட்சி ஏன்ணே மாறுது.

டேய் நம்ம தமிழ் மக்களுக்கு அறிவே இல்லைடா. ஒரு கட்சியையே 20 வருஷம் ஆட்சி செய்யவுட்டா அவன் சொத்தை சுருட்டி சோர்ந்து போய் ஒரு வேளை நாட்டுக்கு நல்லது பண்ணுவான்டா. ஆனா நம்ம தமிழ் மக்கள் என்ன பண்றாங்க – 5 வருஷதுக்கு ஆட்சி மாத்தி விடறாங்க. அவன் 5 வருஷம் சம்பாதிச்ச காசை 5 வருஷம் செலவு பண்ணிட்டு மறுபடியும் வந்துடறான் கொள்ளை அடிக்க.

அதுக்கு என்ன பண்றது அண்ணே.

அதுக்கு நான் மதுரை வீரனுக்கு கெடா வெட்டி கூழு ஊத்தப் போறேன்.

கெடா வாங்கிட்டீங்களா.

டேய் நாட்டுக்காக சொந்த காசு போட்டு கெடா வாங்கறதுக்கு நான் என்ன உன்னை மாதிரி பேறிக்கா மண்டையனா.

அப்புறம்.

நான் கெடான்னு சொன்னது உன்னைத் தான்டா ஜார்ஜ் புஷ் வாயா.

கற்பனை கேள்வி பதில்கள்

--------------------------------------------------------------------------------

ஒரு நாள் ஆசிரியர் என்னை அழைத்து நம் பத்திரிக்கையில் கேள்வி பதில் பகுதி தொடங்கினால் என்ன என்று கேட்டார். நானும் என்னுடைய வழக்கமான குறும்புடன் ஐயா அதற்கு யாராவது கேள்வி கேட்க வேண்டும். அப்போது தான் நாம் பதில் எழுத முடியும் என்றேன்.

ஏம்ப்பா நீ தான் கற்பனை பேட்டியெல்லாம் எடுக்கிறாயே. கற்பனை கேள்வி பதில் தொடங்கேன் என்றார்.

அவர் சொன்னது நியாயமாக படவே இந்த கேள்வி பதில்.

கே: த்ரிஷாவின் இடையளவு என்ன? மன்னார்குடி கலியபெருமாள்.

ப: மன்னிக்கவும் நீங்கள் தவறான முகவரிக்கு இந்த கேள்வியை அனுப்பிவிட்டீர்கள். சற்று பொரும் குமுதத்தின் முகவரியை தருகிறேன்.

கே: சன் டிவி ஃபளாஷ்நியூஸில் சென்னையில் பயங்கரம் என்று படித்து பதறிவிட்டேன். என்னாச்சு?

திருகழுகுன்றம் செந்தில்.

ப: அதுவா ஒரு சைக்கிளும் ஒரு ரிக்ஷாவும் மோதி கொண்டுவிட்டது. இப்படியெல்லாம் செய்தால் தானே நீங்கள் 2 ரூபாய் கொடுத்து தமிழ் முரசு வாங்கி படிப்பீர்கள்.

கே: ஐயா ஒரு ஜோக்?

சென்னை சொக்கலிங்கம்.

ப: ஏம்ப்பா மெனக்கெட்டு தபால் நிலையம் போய் தபால் அட்டை வாங்கி இந்த மாதிரி கேள்விகளுக்கெல்லாம் காசை வீணடிக்கிறீர். போய் வேலையை பாருமய்யா.

கே: சமீபத்தில் நடந்த எம் எல் ஏ கொலையை பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? சேத்தியாதோப்பு சேகர்.

ப: கொலை என்பது நிஜம். அதைப்பற்றி நினைத்து நான் எழுதினால் அது கற்பனை. என்ன நினைக்கிறார்கள் என்பதை படிக்க வேண்டுமானால் ஜூனியர் விகடன் வாங்கி படியுங்களேன்.

கே: தனுஷின் வீட்டில் ஏதாவது நல்ல செய்தியா?

திருப்பூர் தினகரன்.

ப: யோவ். இந்த மாதிரி விசயத்துக்குதான் விகடன்-ற ஒரு மாபெரும் பழைய பத்திரிக்கை இருக்கே என்னை ஏய்யா தொந்தரவு பண்றே!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நன்றாக உள்ளது, இரசித்தேன். :D

Link to comment
Share on other sites

நன்றாக உள்ளது, இரசித்தேன். <_<

நன்றி இரும்பொறை.

நான் றுசித்தேன்

நன்றி கவிதா. என் கதைகளும் படித்து தங்கள் கருத்துக்களை இடுங்கள்.

உங்கள் கற்பனை நன்றாக உள்ளது. சிரிக்கும்படியாக இருந்தது.

நன்றி விஜிவெங்கி.

Link to comment
Share on other sites

தனுஷூடன் ஒரு கற்பனை பேட்டி

--------------------------------------------------------------------------------

லியோ - வணக்கம்

தனு - ....

லியோ - வணக்கம்

துனு - நான் ரொம்ப அடக்கமானவங்க. நான் அதிகமா பேசமாட்டேன். எனக்கு பந்தாவெல்லாம் கிடையாது. நான் பேசவே மாட்டேங்க.

லியோ - சரி அதுக்கு வணக்கம் சொல்லலாமே.

தனு - நான் 14 வயசிலே வணக்கம் சொல்லனும்னு முடிவ பண்ணிட்டேங்க. எங்க அப்பா அப்பவே ஒரு நாள் நீ பெரிய வணக்கம் சொல்ற ஆளா வரப்போறாருன்னு சொல்லிட்டாரு. என் அண்ணன் தான் எனக்கு வணக்கம் சொல்ல கத்து கொடுத்தாரு. அப்பவெல்லாம் அவரோட சண்டை போடுவேன்.

லியோ - சரிங்க வணக்கம் சொல்லுங்க.

தனு - எனக்கு ரஜினி சாரை தெரியாதுங்க. ஆனா நான் வணக்கம் சொல்ற ஸ்டைலு ரஜினி சார் மாதிரி இருக்குன்னு சொல்றாங்க. இப்ப நான் அவர் பொண்ணை கல்யாணம் பண்ணிக்கிட்டதாலே அவரு மாதிரி வணக்கம் சொல்லலை. நான் எப்பவுமே ரஜினி சார் மாதிரி தான் வணக்கம் சொல்றேன்.

லியோ - சரிங்க இப்பவாவது வணக்கம் சொல்லுங்க.

தனு - சரி. வணக்கம். கேள்வி கேளுங்க.

லியோ - என்ன கேள்வி கேட்கறது. இருந்தது 30 நிமிஷம். அதுல வணக்கம் சொல்றதுக்கே இத்தனை நேரம் ஆயிடுச்சு. போய்யா.

சிம்புவிடம் கற்பனை பேட்டி

--------------------------------------------------------------------------------

லியோ - வணக்கம்.

சிம்பு - சொல்லமாட்டேன் வணக்கம். ஏன்னா நிருபருக்கும் எனக்கும் பிணக்கம்.

லியோ - ஐயோ என்னங்க நீங்க உங்க அப்பா மாதிரி ஆரம்பிச்சிட்டீங்க.

சிம்பு - உன் கண்ணு நொள்ளை. எங்க அப்பாவுக்கு நான் புள்ளை. கேளுடா கேள்விய இல்லாட்டா இடத்தை பண்ணு காலிய.

லியோ - உங்கள் அடுத்தப்படம்?

சிம்பு - லூசுப்பையா

லியோ - என்னங்க படம் பெயர் கேட்டா திட்டறீங்க.

சிம்பு - அதான்டா அடுத்த படம். புரிஞ்சுக்கடா நீ ஜடம்.

லியோ - உங்களுக்கு தனுஷூக்கும் ஆக மாட்டேங்குதாமே எதக்கு.

சிம்பு - அவன் கட்டிக்கிட்டா ஒரு பொண்ணே, அவ தான்டா என் கண்ணே

லியோ - அப்ப நயன்தாரா

சிம்பு - அது யாருடா நயன்தாரா, அவ தான் என் கால வார்ரா

லியோ - நீங்க படம் எடுக்கிற அளவுக்கு மெச்சூரிட்டி வர்லைன்னு பேசிக்கறாங்களே.

சிம்பு - எனக்கு தேவையில்லை மெச்சூரிட்டி, என் படம் பார்க்க வர்றவங்க லூஸு மெஜாரிட்டி

லியோ - இந்த வயசுல உங்கப்பா டூயட் பாடி ஆடினது சகிக்கலைன்னு சொல்றாங்களே. இதை தடுத்து தமிழ் திரை உலகத்தை காப்பத்தக் கூடாதா.

சிம்பு - அவர் தான்டா என் அப்பா, ஆடுவாருடா டான்சு டப்பா, இதெல்லாம் என்ன தப்பா, விஜயகாந்து ஆடினா பாக்குறியே நீ சுப்பா

லியோ - ஐயா ஆளை விடப்பா.

சிம்பு - போடங் ................... நீ என்ன பெரிய பிஸ்தா. நான் போய் சாப்பிடுவேன் பாஸ்தா.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • உங்க‌ட‌ அறிவுக்கு நீங்க‌ள் இப்ப‌டி எழுதுறீங்க‌ள் அவ‌ர்க‌ள் ஜ‌ன‌நாய‌க‌த்தின் மீது ந‌ம்பிக்கை இருந்த‌ ப‌டியால் தான் அர‌சிய‌லில் இற‌ங்கின‌வை இந்தியாவில் ஜ‌ன‌நாய‌க‌ம் என்ற‌து சொல் அள‌வில் தான் இருக்கு செய‌லில் இல்லை................ 2023 டெல்லிக்கு உள‌வுத்துறை கொடுத்த‌ த‌க‌வ‌ல் உங்க‌ளுக்கு வேணும் என்றால் தெரியாம‌ இருக்க‌லாம் இது ப‌ல‌ருக்கு போன‌ வ‌ருட‌மே தெரிந்த‌ விடைய‌ம்.........................நீங்க‌ள் யாழில் கிறுக்கி விளையாட‌ தான் ச‌ரியான‌ ந‌ப‌ர்.............................என‌க்கும் த‌மிழ‌க‌ அர‌சிய‌ல் அமெரிக்கா அர‌சிய‌ல் டென்மார்க் அர‌சிய‌ல் ப‌ற்றி ந‌ங்கு தெரியும் ஆனால் நான் பெரிதாக‌ அல‌ட்டி கொள்வ‌து கிடையாது.................   ந‌ண்ப‌ர் எப்போதும் த‌மிழ‌ன் ம‌ற்றும் விவ‌சாயிவிக் அண்ணா இவ‌ர்க‌ள் இருவ‌ரும் 2020ம் ஆண்டு ர‌ம் தான் மீண்டும் ஆட்சிக்கு வ‌ருவார் என்று சொன்ன‌வை  நான் அதை ம‌றுத்து பைட‌ன் தான் ஆட்சிக்கு வ‌ருவார் என்று சொன்னேன் அதே போல் நான் சொன்ன‌ பைட‌ன் அமெரிக்கன் ஜனாதிபதி ஆனார்😏............................ ஆர‌ம்ப‌த்தில் தாங்க‌ளும் வீர‌ர்க‌ள் தான் என்று வார்த்தைய‌ வீடுவின‌ம் ஒரு சில‌ர் அடிக்கும் போது  அடிக்கு மேல் அடி விழுந்தால் ப‌தில் இல்லாம‌ கோழை போல் த‌ங்க‌ளை தாங்க‌ளே சித்த‌ரிப்பின‌ம்🤣😁😂..............................
    • இந்த மாத முடிவில் சில நாடுகளின் நரித்தனத்தாலும், சுயநலத்தாலும் இரு நாடுகள் அணு ஆயுதங்களால் பலமாக தாக்கபட போகின்றன. ஜீசசும் வருகின்றார் என்ற செய்தும் உலாவுகிறது.
    • நான் யாழில் எழுத தொடங்கியது 2013. அதுதான் உளவுதுறை பிஜேபி கைப்பாவை ஆச்சே? அதேபோல் இப்படி சொன்ன தேர்தல் ஆணையம் மீது ஏன் சீமான் வழக்கு போடவில்லை? நம்ப வேண்டிய தேவை இல்லை. என் கருத்து அது. ஆனால் தேர்தல் ஆணையம் இப்படி ஒரு விடயத்தை சீமானிடம் சொல்லாது. எந்த அதிகாரியாவது மேலிட பிரசரால் இப்படி செய்கிறோம் என சீமானிடமே வெளிப்படையாக சொல்வாரா? மிகவும் சின்னபிள்ளைதனமாக சீமான் கதை பின்னுகிறார். நம்ப ஆள் இருக்கு என்ற தைரியத்தில். சீமான் சொல்வது உண்மை எனில் சீமான் வழக்கு போட்டிருக்க வேண்டும்.  போடமாட்டார் ஏன் என்றால் இது சும்மா….லுலுலுலா கதை. இந்த 😎 இமோஜியை பாவிக்காமலாவது விட்டிருக்கலாம். திருடப்போகும் இடத்தில் சிக்னேச்சர் வைத்தது போல் உள்ளது. 🤣🤣🙏
    • நான் எப்போதும் என்னை தேர்தல் விற்பனர் என்றோ - என் கணிப்புகள் திறம் என்றோ சொன்னதில்லை.  நான் என்ன லயலா கொலிஜா அல்லது இந்தியா டுடேயா? சர்வே எடுக்க. அல்லது சாத்திரக்காரனா🤣 நான் கணிக்கிறேன் என நீங்கள் எழுதுவதே சுத்த பைத்தியக்காரத்தனம். எல்லாரையும் போல் நான் என் கருத்தை எதிர்வுகூறலாக எழுதுகிறேன். அது என் கருத்து மட்டுமே. Pure speculation. அது சரி வரும், பிழைக்கும் - I don’t give a monkey’s.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.