Jump to content

"சுயஇன்பம்" காண்பதால், தலைமுடி உதிருமா?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

பக்கவிளைவுகள்

சுயஇன்பம் காண்பதால் தலைமுடி உதிருமா?

தலைமுடி உதிர்வதற்கு சுயஇன்பம் ஓர் காரணம் என்று சொன்னால் நம்புவீர்களா? இது உண்மை தானா என்று பலமுறை கேட்பீர்கள். ஆனால் அது உண்மை தான். ஆண்கள் தங்களுக்கு சுயஇன்பம் பற்றி அனைத்து விஷயமும் தெரியும் என்று நினைத்திருப்பார்கள். ஆனால் சுயஇன்பம் குறித்து ஏராளமான அதிர வைக்கும் விஷயங்கள் உள்ளன.

நல்ல சுகமான உணர்வை அனுபவிக்க உதவும் இச்செயலால் நன்மைகளையும், அதே சமயம் தீமைகளையும் பெறக்கூடும். ஆனால் அதுவெல்லாம் எவ்வளவு முறை செய்கிறோம் என்பதைப் பொறுத்தது. அதில் சுய இன்பத்தால் பெறும் ஓர் பக்கவிளைவு தான் தலைமுடி உதிர்வது.

பொதுவாக ஆண்கள் தங்களது தலைமுடி மீது அதிக அக்கறை கொண்டிருப்பார்கள். சமீப காலமாக உங்களுக்கு தலைமுடி அதிகமாக உதிர்கிறது என்றால், அதற்கு சுயஇன்பமும் ஓர் காரணமாக இருக்கலாம் என்பதை மறவாதீர்கள். ஆயுர்வேதம் நிறைய நிபுணர்கள் சுயஇன்பத்திற்கும், தலைமுடி உதிர்வதற்கும் சம்பந்தம் இல்லை என்று சொல்கிறார்கள். ஆனால் ஆயுர்வேதம் அதை மறுக்கிறது. சுய இன்பத்திற்கும் தலைமுடி உதிர்வதற்கு நெருங்கிய தொடர்பு உள்ளது என்று ஆயுர்வேதம் கூறுகிறது. விந்து ஆயுர்வேதத்தின் படி, விந்து நிறைய ஊட்டச்சத்துக்கள் நிறைந்த ஒன்றாகும்.

ஒருவர் அளவுக்கு அதிகமாக சுயஇன்பம் காணும் போது, சத்துக்கள் வெளியேற்றப்பட்டு, உடலில் உள்ள ஆற்றல் முழுவதும் வெளியேறிவிடும். பக்கவிளைவுகள் அதிகமாக சுயஇன்பம் காணும் போது, உடலில் இருந்து சத்துக்கள் வெளியேறி, உடல் பலவீனமாவதுடன், தலைமுடி உதிர்வு, முதுகு வலி, இடுப்புப்பகுதியில் வலி, வளைந்த ஆண்குறி போன்ற பக்கவிளைவுகளை சந்திக்க நேரிடும். அதுமட்டுமின்றி, இது ஆண்களுக்கு மலட்டுத்தன்மையைக் கூட ஏற்படுத்தும்.

சுயஇன்பத்திற்கு பின், உடலில் உள்ள ஆண் ஹார்மோனான டெஸ்டோஸ்டிரோன் ஆண் விதைப்பையில் DTH ஆக மாற்றப்படும். பலமுறை சுயஇன்பம் கண்டால், அதனால் ஆண் விதைப்பையில் DTH அளவு அதிகமாகி, அந்த DTH ஸ்கால்ப்பில் உள்ள மயிர்கால்களைத் தாக்கி, மயிர்கால்களுக்கு ஊட்டச்சத்துக்கள் கிடைக்கப் பெறாமல் செய்யும். எண்ணெய் பசை ஸ்கால்ப் DTH தலையில் உள்ள எண்ணெய் சுரப்பியைத் தூண்டி, தலையை எண்ணெய் பசையுடன் வைத்துக் கொள்ளும். மேலும் DTH கார்டிசோல் உற்பத்தியைத் தூண்டி, புரோலாக்டின் அளவை அதிகரித்து, டெஸ்டோஸ்டிரோன் உற்பத்தியைக் குறைக்கும்.

சுயஇன்பத்தால் தலைமுடி உதிர்வதற்கு மற்றொரு காரணமும் உள்ளது. அது அதிக சுயஇன்பம் காணும் போது, விந்து அதிகமாக வெளியேற்றப்பட்டு, உடலில் புரோட்டீன் குறைபாடு ஏற்பட்டு, அதன் காரணமாக தலைமுடி உதிர ஆரம்பிக்கும். தீர்வு சுயஇன்பத்தால் தலைமுடி உதிராமல் இருக்க வேண்டுமானால், கட்டுப்பாடு அவசியம். இது சற்று கடினமானது தான். இருந்தாலும், சுயஇன்பம் காண்பதைக் கட்டுப்படுத்த யோகா, தியானம் போன்றவற்றை தினமும் பின்பற்ற வேண்டும். மேலும் பாலுணர்வைத் தூண்டும் அனைத்து விஷயத்தையும் முற்றிலும் தவிர்க்க வேண்டும்.

நன்றி  தற்ஸ் தமிழ்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Afficher l'image d'origine

20 வருசத்துக்கு முன் இது தெரியாமல் போச்சே....!  tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, suvy said:

Afficher l'image d'origine

20 வருசத்துக்கு முன் இது தெரியாமல் போச்சே....!  tw_blush:

20 வருசமா....:unsure:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நாங்க பள்ளிக்கு போற காலத்தில் சுய இன்பம் காண்பவர்கள் உள்ளங்கையில் சிறிது மயிர் முழைத்திருக்கும் என்று சொன்னா கையைப் பார்க்காதவர்களே இருக்க மாட்டார்கள்.

Link to comment
Share on other sites

தற்ஸ்  தமிழ் போடும் வழக்கமான  அரை குறை மருத்துவ குறிப்புகளில் இதுவும் ஒன்று. சுய இன்பத்துக்கும் தலை முடி உதிர்வுக்கு தொடர்பு இல்லை என்றும் , தொடர்பு உள்ளது என விஞ்ஞ்சான பூர்வமாக நிரூபிக்கப்படவில்லை என்றும் பல நம்பிக்கைக்குரிய மருத்துவ தளங்கள் தெரிவிக்கின்றன.

 

http://www.belgraviacentre.com/blog/the-truth-about-sex-masturbation-and-hair-loss-134/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அப்படி பார்த்தால் யாழ்கள வாசகர்கள் எல்லோரும் மொட்டைத்தலையர்களாக இருப்பர்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, புங்கையூரன் said:

Are you sure.....மிஸ்ரர் தமிழ் சிறி? :cool:

"பொல்லைக் குடுத்து.... அடி வாங்கிறது"  என்று இதைத்தான்... சொல்வார்கள். புங்கை.....  4.gif :grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, தமிழ் சிறி said:

சுயஇன்பம் காண்பதால் தலைமுடி உதிருமா?

உப்பிடி பார்க்கப்போனால் உங்கை கன பேருக்கு 16,17,18,19திலையே    தலையிலை உள்ள முடியெல்லாம் கொட்டி வனாந்தரமாயிருக்கோணுமெல்லோ..:22_stuck_out_tongue_winking_eye:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, புங்கையூரன் said:

Are you sure.....மிஸ்ரர் தமிழ் சிறி? :cool:

121.jpg?v=495715250316

sure.. sure.. !!!!

Image result

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
30 minutes ago, Nathamuni said:

sure.. sure.. !!!!

Image result

 

சூப்பர்....  ரஜனி அண்ணையின், "சொண்டு"   நெளிப்பையும், கையையும்....  பார்த்து,
சிரித்து, விக்கல்... வந்து விட்டது. :grin:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.