Jump to content

ஹேரத் தலைமையில் தொடரை வெல்லுமா இலங்கை ? ; இலங்கை - சிம்பாப்வே இரண்டாவது டெஸ்ட் போட்டி


Recommended Posts

ஹேரத் தலைமையில் தொடரை வெல்லுமா இலங்கை ? ; இலங்கை - சிம்­பாப்வே இரண்­டா­வது டெஸ்ட் போட்டி

 

 

இலங்கை கிரிக்கெட் அணி மற்றும் சிம்­பாப்வே கிரிக்கெட் அணி பங்கு­கொள்ளும் இரண்­டா­வதும் இறு­தி­யு­மான டெஸ்ட் போட்டி இன்று நடை­பெ­ற­வுள்­ளது. அந்­நாட்டின் தலை நக­ரான ஹரா­ரேவின் ஹராரே விளை­யாட்டுக் கழக மைதா­னத்தில் இலங்கை நேரப்­படி பிற்­பகல் 1.30 மணிக்கு  ஆரம்­ப­மா­க­வுள்­ளது.

முத­லா­வது டெஸ்ட் போட்­டியை ரங்­கன ஹேரத் தலை­மை­யி­லான இலங்கை கிரிக்கெட் அணி 5 ஆவது நாளின்  7.3 ஓவர்கள் மாத்­தி­ரமே எஞ்­சிய நிலையில் அவ்­வ­ணியின் சகல விக்­கெட்­டு­க­ளையும் கைப்­பற்றி 225 ஓட்­டங்கள் வித்­தி­யா­சத்தில் வெற்றி ஈட்­டி­யது. இப்­போட்டி ரங்­கன ஹேரத் தலைமை வகித்த முத­லா­வது போட்­டி­யா­கவும் அமைந்­தது. இதனால் சிம்­பாப்வே அணிக்­கெ­தி­ராக இன்று ஆரம்­ப­மாகும் இரண்­டா­வது டெஸ்ட் போட்­டியிலும் இலங்கை அணி வெற்றி பெறும் என எதிர்­பார்­கப்­ப­டு­கி­றது. துடுப்­பாட்­டத்தில் இலங்­கையின் ஆரம்பத் துடுப்­பாட்ட வீரர்­க­ளான திமுத் கரு­ணா­ரத்ன மற்றும் கௌஷால் சில்வா ஆகியோர் சிறப்­பான ஆட்டத் திறனை வெளிப்­ப­டுத்­தி­யி­ருந்­தனர். 

உப்புல் தரங்க 2005 ஆம் ஆண்டு சர்­வ­தேச  டெஸ்ட் அரங்கில் காலடி எடுத்து வைத்­தி­ருந்­தாலும் அணியில் அவ­ருக்கு நிலை­யான இடம் கிடைக்­க­வில்லை. எனினும், நீண்ட இடை­வெ­ளிக்குப் பின்னர் அணியில் இணைக்­கப்­பட்ட அவர் , இப்­போட்­டியில் சதம் விளா­சி­யமை அவ­ரது இரண்­டா­வது சத­மாக அமைந்­தது.  இது சர்­வ­தேச டெஸ்ட் அரங்கில் 10 வரு­டங்­க­ளுக்கு பின்னர் அவரால் அடிக்­கப்­பட்ட சத­மாகும். 

Sri-Lanka-vs-Zimbabwe.png

குசல் பெரேரா தனது அதி­ரடித் துடுப்­பாட்­டத்தை டெஸ்ட் போட்­டி­க­ளிலும் தொடர்ந்து வரு­கின்­றமை இலங்கை அணியின் துடுப்­பாட்­டத்­திற்கு பல­மாகும். மேலும், துடுப்­பாட்­டத்தில் பெரிதும் எதிர்­பார்த்த குசல் மெண்டிஸ் பிர­கா­சிக்க தவ­றி­யி­ருந்தார்.  

பந்­து­வீச்சில் சுரங்க லக்மால், அறி­முக வீரர் லஹிரு குமார ஆகி­யோரின் ஆற்றல் வெளிப்­பா­டுகள் திருப்­தி­ய­ளிக்­கும் வித­மாக அமைந்­தன. முதல் போட்­டியில் ஆடு­களம் ரங்­கன ஹேரத்­திற்கு சாதகத் தன்­மையை ஏற்­ப­டுத்­திக்­கொ­டுக்­க­வில்லை. எனினும் 6 விக்­கெட்­டு­களை வீழ்த்தி அதிக விக்­கெட்­டு­களை கைப்­பற்­றி­ய­வ­ராக இவரே காணப்­ப­டு­கிறார்.  மற்­றொரு சுழற் பந்து வீச்­சா­ள­ரான தில்­ருவன் பெரே­ராவும் தன்­பங்­கிற்கு 5 விக்­கெட்­டு­களை வீழ்த்­தி­யுள்ளார். 

254337.3.jpg

சிம்­பாப்வே அணியைப் பொறுத்­த­மட்டில் இலங்கை அணிக்கு சவால் அளிக்­கும் வீர­ராக அவ்­வ­ணியின் தலை­வ­ரான கரேம் கிறீமர் விளங்­கு­கிறார். இவர் அப்­போட்­டியில்  ஒரு சதம் உட்­பட 145 ஓட்­டங்­களை குவித்­துள்­ள­துடன் 4 விக்­கெட்­டு­களை கைப்­பற்றி சகல துறை­க­ளிலும் பிர­கா­சித்து வரு­கிறார். அதேபோல் அறி­முக பந்­து­வீச்­சா­ள­ரான கார்ல் மும்­பாவின் பந்­து­வீச்சை எதிர்­கொள்­வதில் இலங்கை துடுப்­பாட்ட வீரர்கள் சற்று சிர­மத்தை எதிர்­கொள்­கின்­றனர். 

254475.jpg

இலங்கை அணியைப் பொறுத்­த­மட்டில் பெரும்­பாலும் இன்றைய போட்­டி­யிலும் முத­லா­வது போட்­டியில் விளை­யா­டிய அதே அணியே கள­மி­றங்­கு­வ­தற்­கான வாய்ப்­பு­களே அதி­க­மாக காணப்­ப­டு­கி­றது. இப்­போட்­டி­யிலும் இலங்கை வெற்றி பெற்றால் சர்­வ­தேச டெஸ்ட் தரவரிசையில் மேலதிகமாக ஒரு புள்ளியை பெற்றுக்கொள்ளும்.

டெஸ்ட் தொடரை அடுத்து இலங்கை, சிம்­பாப்வே மற்றும் மேற்கிந்தியத் தீவுகள் பங்குகொள்ளும் முத்தரப்பு சர்வதேச ஒரு நாள் தொடர்  எதிர்வரும் 14 ஆம் திகதி முதல் 27 ஆம் திகதி வரை நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

254449.3.jpg

http://www.virakesari.lk/article/13197

Link to comment
Share on other sites

தனஞ்சய டி சில்வாவின் சதத்தினால் சரிவிலிருந்து மீண்டது இலங்கை

 

 

இலங்கை- சிம்பாப்வே அணிகள் மோதும் 2 ஆவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி இன்று ஹாராரேவில் தொடங்கியது.நாணய சுழற்சியில் வென்ற சிம்பாப்வே அணித்தலைவர் கிரிமர் முதலில் களத்தடுப்பை தெரிவு செய்தார்.

254622.jpg

முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி ஆரம்பத்தில் தடுமாற ஆரம்பித்தது.தொடக்க வீரர்களாக களமிறங்கிய கருணாரத்னே (26), கெளஷால் சில்வா (37) ஓட்டங்களுடன் வெளியேற அடுத்து களமிறங்கிய குஷால் பெரேராவும் 4 ஓட்டங்களில் ஆட்டமிழந்து இலங்கை அணி ரசிகர்களுக்கு அதிர்ச்சியளித்தார்.

254628.jpg

அதன்பின்னர் களமிறங்கிய குஷால் மெண்டிஸ் நிதானமாக ஆடி வந்த நிலையில் 26 ஓட்டங்களில் வெளியேறினார்.

இலங்கை அணி 112 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்த நிலையில், ஜோடி சேர்ந்த உபுல் தரங்க, தனஞ்சய டி சில்வா அணியை சரிவில் இருந்து மீட்டனர்.இருவரும் சிறப்பாக விளையாடி வந்த நிலையில் உபுல் தரங்க 79 ஓட்டங்களில் ஆட்டமிழந்து சதத்தை பெறும் வாய்ப்பினை தவறவிட்டார்.

254631.jpg

மறுமுனையில் தொடர்ந்து அசத்திய தனஞ்சய டி சில்வா சதம் விளாசினார்.இன்றைய முதல் நாள் ஆட்டநேர முடிவில் இலங்கை அணி 5 விக்கெட்டுக்கு 290 ஓட்டங்களை பெற்றுள்ளது.தனஞ்சய டி சில்வா 100 ஓட்டங்களுடனும், குணரத்னே 13 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காமல் களத்தில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

254632.jpg

http://www.virakesari.lk/article/13226

Link to comment
Share on other sites

அசேல குணரட்னவும் சதம் குவித்தார்: இரண்டாவது டெஸ்டில் பலமான நிலையில் இலங்கை அணி
2016-11-07 21:45:29

ஸிம்பாப்வேக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் மத்திய வரிசை துடுப்பாட்டக்காரர்களான தனஞ்செய டி சில்வா, அசேல குணரட்ன ஆகியோரின் அபார சதங்களின் உதவியுடன் இலங்கை அணி முதல் இன்னிங்ஸில் 500 ஓட்டங்களைக் கடந்தது.

 

20469Asela-Gunaratne-%28L%29-captain-Ran

அசேல குணரட்ன, அணித் தலைவர் ரங்கன ஹேரத்



ஸிம்பாப்வேயின் ஹராரே நகரில் நடைபெற்றுவரும் இப்போட்டியின் முதலாம் நாளான ஞாயிறன்று தனஞ்செய டி சில்வா சதத்தைப் பூர்த்தி செய்ய, இரண்டாம் நாளான இன்று அசேல குணரட்ன சதம் குவித்தார். தனஞ்செய 25 பந்துகளை எதிர்கொண்டு 14 பவுண்ட்றிகளையும் அசேல 193 பந்துகைள எதிர்கொண்டு ஒரு சிக்ஸருடன் 15 பவுண்ட்றிகளையும் விளாசினர்.


தனது ஐந்தாவது டெஸ்ட் போட்டியில் விளையாடும் தனஞ்செய டி சில்வா, இரண்டாவது சதத்தைப் பூர்த்தி செய்ததுடன் உப்புல் தரங்கவுடன் ஐந்தாவது விக்கெட்டில் 143 ஓட்டங்களையும் அசேல குணரட்னவுடன் ஆறாவது விக்கெட்டில் 87 ஓட்டங்களையும் பகிர்ந்தார்.


தனது இரண்டாவது போட்டியில் கன்னி சதத்தைப் பெற்ற அசேல ஏழாவது விக்கட்டில் டில்ருவன் பெரேராவுடன் 54 ஓட்டங்களையும் அணித் தலைவர் ரங்கன ஹேரத்துடன் எட்டாவது விக்கெட்டில் 75 ஓட்டங்களையும் பகிர்ந்தார்.


இப்போட்டியில் பதிலுக்கு துடுப்பெடுத்தாடும் ஸிம்பாப்வே இன்றைய ஆட்டமுடிவின்போது அதன் முதல் இன்னிங்ஸில் 2 விக்கெட்களை இழந்து 126 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.

- See more at: http://www.metronews.lk/article.php?category=sports&news=20472#sthash.QEgLphbe.dpuf
Link to comment
Share on other sites

ஹேரத் அபாரம் ; 272 ஓட்டங்களுக்குள் சுருண்டது சிம்பாப்வே

 

 

இலங்கை மற்றும் சிம்பாப்வே அணிகளுக்கிடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் சிம்பாப்வே அணி 272 ஓட்டங்களுக்கு சகல விக்கட்டுகளையும் இழந்துள்ளது.

254724.jpg

சிம்பாப்வே அணியின் சார்பில் செரி 80 ஓட்டங்களையும், எர்வின் 64 ஒட்டங்களையும் அதிகபட்சமாக பெற்றுக்கொண்டனர். பந்துவீச்சில்  ரங்கன ஹேரத் 5 விக்கட்டுகளையும், டில்ருவான் பெரேரா 3 விக்கட்டுகளையும் கைப்பற்றினர்.

இதேவேளை இலங்கை அணி முதல் இன்னிங்ஸில் 504 ஓட்டங்களை பெற்றுக்கொண்டதுடன், 232 ஓட்டங்கள் முன்னிலைப்பெற்று, தனது இரண்டாவது இன்னிங்ஸை ஆரம்பித்துள்ளது.

http://www.virakesari.lk/article/13312

Link to comment
Share on other sites

491 ஓட்டங்களை வெற்றியிலக்காக நிர்ணயித்தது இலங்கை  

 

 

இலங்கை மற்றும் சிம்பாப்வே அணிக்களுக்கிடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இரண்டாவது இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 9 விக்கட்டுகளை இழந்து 258  ஒட்டங்களை பெற்றிருந்த போது ஆட்டத்தை இடைநிறுத்திக்கொண்டுள்ளது.

254759.jpg

இலங்கை அணிசார்பில் கருணாரத்ன 88 ஓட்டங்களை பெற்றதுடன், குசல் பெரேரா 62 ஓட்டங்களை பெற்றுக்கொண்டார்.

இலங்கை அணி 258 ஓட்டங்களை பெற்றதனூடாக  சிம்பாப்வே அணியின் வெற்றியிலக்காக 491 ஓட்டங்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை இலங்கை அணி முதல் இன்னிங்ஸில் 504 ஓட்டங்களை பெற்றதுடன், சிம்பாப்வே அணி 272 ஓட்டங்களை பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

http://www.virakesari.lk/article/13351

Link to comment
Share on other sites


ஹேரத்துக்கு 13 விக்கெட்டுகள்; இலங்கைக்கு 2-0
 
 

article_1478785898-In254783.jpg

சிம்பாப்வே,இலங்கை அணிகளுக்கு இடையிலான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் 2ஆவது போட்டியில், அணித்தலைவர் ரங்கன ஹேரத் கைப்பற்றிய 13 விக்கெட்டுகளின் துணையோடு, இலங்கை அணிக்குச் சிறப்பான வெற்றி கிடைத்தது.

போட்டியின் 5ஆவது நாளான இன்று, 7 விக்கெட்டுகளை இழந்து 180 ஓட்டங்களுடன் களமிறங்கிய சிம்பாப்வே அணி, 233 ஓட்டங்களுக்கே சகல விக்கெட்டுகளையும் இழந்து, 257 ஓட்டங்களால் தோல்வியடைந்தது. வீழ்த்தப்பட்ட 3 விக்கெட்டுகளையும், ரங்கன ஹேரத் வீழ்த்தி, இனிங்ஸில் தனது 8ஆவது விக்கெட்டையும் போட்டியில் 13ஆவது விக்கெட்டையும் கைப்பற்றினார்.

இப்போட்டியின் நாயகனாக ரங்கன ஹேரத் தெரிவானதோடு, தொடரின் நாயகனாக திமுத் கருணாரத்ன தெரிவானார்.

ஸ்கோர் விவரம்:

இலங்கை: 504/10 (துடுப்பாட்டம்: தனஞ்சய டி சில்வா 127, அசேல குணரத்ன 116, உபுல் தரங்க 79 ஓட்டங்கள். பந்துவீச்சு: டொனால்ட் ட்ரிபானோ 3/91, கிறேம் கிறீமர் 3/136, ஹமில்டன் மஸகட்ஸா 2/34)

சிம்பாப்வே: 272/10 (துடுப்பாட்டம்: பிரையன் சாரி 80, கிறெய்க் ஏர்வின் 64, ஷோன் வில்லியம்ஸ் 58 ஓட்டங்கள். பந்துவீச்சு: ரங்கன ஹேரத் 5/89, டில்ருவான் பெரேரா 3/51, சுரங்க லக்மால் 2/55)

இலங்கை: 258/9 (துடுப்பாட்டம்: திமுத் கருணாரத்ன 88, குசல் பெரேரா 62, அசேல குணரத்ன 39 ஓட்டங்கள். பந்துவீச்சு: கிறேம் கிறீமர் 4/91, கார்ள் மும்பா 3/67)

சிம்பாப்வே: 233/10 (துடுப்பாட்டம்: கிறெய்ன் ஏர்வின் 72, ஷோன் வில்லியம்ஸ் 45 ஓட்டங்கள்.  பந்துவீச்சு: ரங்கன ஹேரத் 8/63.)

- See more at: http://www.tamilmirror.lk/185814#sthash.ouy5Ujyy.dpuf
Link to comment
Share on other sites

ஹேரத் அபாரம் ; சிம்பாப்வே அணியை வீழ்த்தியது இலங்கை

 

 

சிம்பாப்வே அணிக்கெதிரான டெஸ்ட் போட்டியில் ரங்கன ஹேரத்தின் அபார பந்துவீச்சின் காரணமாக இலங்கை அணி 257 ஓட்டங்களால் வெற்றிபெற்றது.

254811__1_.jpg

491 ஓட்டங்கள் என்ற இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய சிம்பாப்வே அணி 233 ஓட்டங்களுக்கு சகலவிக்கட்டுகளையும் இழந்து டெஸ்ட் தொடரை கைநழுவவிட்டது.

சிம்பாப்வே அணி சார்பில் எர்வின் 72 ஓட்டங்களை பெற்றுக்கொண்டார்.

254810.jpg

பந்துவீச்சில் ரங்கன ஹேரத் 8 விக்கட்டுகளை கைப்பற்றியதுடன், போட்டியின் ஆட்டநாயகனாக தெரிவுசெய்யப்பட்டார்.

இதேவேளை தொடர் ஆட்டநாயகனாக இலங்கை அணியின் திமுத் கருணாரத்ன தெரிவுசெய்யப்பட்டார்.

254809.jpg

 

254807.jpg

http://www.virakesari.lk/article/13380

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.