Jump to content

எலிப்பொறி - சிறுகதை


Recommended Posts

எலிப்பொறி - சிறுகதை

வாஸந்தி - ஓவியங்கள்: ஸ்யாம்

 

90p1.jpg

ஷீலுவுக்குச் சிரிப்புப் பொத்துக்கொண்டு வந்தது. கடகடவென்று சிரிக்க வேண்டும்போல் இருந்தது. இந்த அடுக்குமாடி வளாகத்தில் வசிக்கும் மேடம்கள் சரியான தொடைநடுங்கிகள் என அவளுக்கு இப்போதுதான் புரிந்தது. உண்மையில் அவர்களை முதன்முதலில் பார்த்தபோது, அவளுக்குப் பிரமிப்பாக இருந்தது. அவர்களது குட்டை முடியும் கால்சராயும் அங்ரேஜி மொழியும்... அவர்கள் ஏதோ வேற்றுக் கிரகக்காரர்கள் எனத் தோன்றும். அவர்கள் வீட்டு ஆண்கள் வெளியில் கிளம்புவதற்கு முன்னர், இவர்கள் தங்கள் வண்டியை ஓட்டிக்கொண்டு கிளம்பிவிடுவார்கள். ‘நா கிளம்புறதுக்குள்ள வேலையை முடிச்சுடணும்’ எனக் கண்டிப்புடன் சொல்வார்கள். அவர்கள் சொல்வதை மீறுவது தெய்வக் குற்றம்போல், மாமியார் கமலா பதைப்பாள். `இப்படிப் பட்ட சர்வவல்லமை படைத்த பெண்களும் இருக்கிறார்களா?’ என ஷீலுவுக்குப் பிரமிப்பு ஏற்படும். 

p90.jpgஷீலு அநேகமாக முன்பு, மாமியார் வேலை செய்யும் வீடுகளுக்குச் சின்னச் சின்ன உதவி செய்யக்கூடச் செல்வாள். இப்போது மாமியார்  அவளையே முழு வேலையையும் செய்யச் சொல்கிறாள் . பறந்து பறந்து செய்தாலும்,  எந்த மேடமிடம் இருந்தாவது திட்டு கிடைக்கும். இன்று 203 மேடம்செய்த அமர்களத்தால் எல்லாமே தாமதமாயிற்று.

அதை நினைத்து அவளுக்கு மீண்டும் சிரிப்பு வந்தது. லிஃப்டில் அவள் தனக்குத்தானே சிரிப்பதைக் கண்டு, அங்கு இருந்த இரண்டு ஆண்கள் அவளை விநோதமாகப் பார்த்தார்கள். அவள் அதைக் கவனிக்காததுபோல் நின்றாள். சிரிப்பதற்குக்கூடவா சுதந்திரம் இல்லை?

தோள்பட்டையில் அந்த மேடமின் சென்ட் வாசனை இருந்தது. நடக்கும்போது கூடவே வந்தது. அங்குதான் அந்த ஒப்பனைசெய்த முகம் கலவரத்துடன் பதிந்திருந்தது. சமையலறையில் ஷீலு வேலைசெய்யும்போது, அலமாரியைத் திறக்கவந்த மேடம் திடீரென்று கத்தினாள். அடுத்த விநாடி ஷீலுவைக் கெட்டியாகப் பிடித்துக்கொண்டாள். அவள் தோள்பட்டையில் முகத்தைப் பதித்தாள். ஒரு விநாடி ஷீலு அரண்டுபோனாள்.

``என்ன ஆச்சு?’’

`‘எலி... எலி...’’ என்று மேடம் அலறினாள். ‘`இப்பத்தான் இப்படி ஓடிப்போச்சு.’’

அவளுடைய அலறலைக் கேட்டு வீட்டில் இருந்தவர்கள் எல்லாம் கூடிவிட்டார்கள்.

‘`எலி எப்படி வந்தது வீட்டுக்குள்ளே?’’ என்று சாஹப் கத்தினார்.

அது ஒரு மிகப் பெரிய அவமானம்போல், அத்துமீறல்போல் ஆளுக்கு ஆள் பேசினார்கள். வீட்டில் எங்கேயாவது ஓட்டை இருக்கும். அதை முதலில் அடைக்கவேண்டும் எனத் திட்டம் போட்டார்கள்.
`‘வாசல் கதவைத் திறந்துவைத்தாளா ஷீலு?’’ என்று யாரோ கேட்டார்கள்.

90p2.jpg

எல்லோருடைய ஆங்கிலம் கலந்த ஆவேசப் பேச்சுகளையும் கேட்டபடி நின்றாள் ஷீலு. ஓர் எலிக்காக இப்படி அரண்டுபோவார்களா என்று இருந்தது. மேடமின் பயம் இன்னும் விலகவில்லை எனத் தோன்றிற்று.

`‘மேடம்... நா எலிப்பொறி கொண்டுவர்றேன். பயப்படாதீங்க’’ என்றாள் ஷீலு.

`‘எலி பிடிபடுமா?’’ என்றாள் மேடம் சந்தேகத்துடன்.

ஷீலுவுக்குச் சிரிப்பு வந்தது. 

“அப்படித்தான் நாங்க பிடிப்போம். எலி அதுல அகப்பட்டுக்கிட்டு முழிக்கிறதைப் பார்க்கணுமே... தமாஷா இருக்கும்.”

மேடம் முகத்தைச் சுளித்தாள்...

`‘இதுல தமாஷ் வேறா? நீயே எலிப்பொறியை வெச்சுட்டுப்போ. கொண்டுவர மறந்துடாதே!’’

லிஃப்ட் ஐந்தாம் தளத்தில் நின்று திறந்ததும், அவள் அவசரமாக 503 வீட்டின் அழைப்பு மணியை அழுத்தினாள். அதரங்களில் புன்னகை இன்னும் இருந்தது.

``வா... வா... என்ன இத்தனை லேட்? சீக்கிரம் செய். நா வெளியிலே போகணும்’’ என்று வழக்கம்போல மேடமிடம் இருந்து அதட்டல் வந்தது.

ஷீலு சிரித்தபடியே, எலியால் நேர்ந்த கூத்தைச் சொல்லிக்கொண்டு பாத்திரம் கழுவச் சென்றாள். 

“ஐயய்யோ எலி வந்ததா?’’ என்றாள் மேடம்.

சே... என்ன பெண்கள் என்று ஷீலுவுக்கு ஏமாற்றம் ஏற்பட்டது. ஒரு சின்ன ஜந்துவைக் கண்டு என்ன பயம்?

வேலை எல்லாம் முடிந்து வீட்டை நோக்கி நடக்கும்போது, சுரீரென மதிய வெயில் தலையில் அடித்தது. அவள் துப்பட்டாவை விரித்து, தலையில் சுற்றிக்கொண்டாள்... பசித்தது.

வழி முழுவதும் அங்கங்கே ஆலூ டிக்கி, சமோசா என்று விற்பனை நடந்தது. எண்ணெய் காயும் வாசனையும், சமோசாவின் மணமும் நாசிக்குள் புகுந்து நாவில் நீர் ஊறிற்று. ஆனால், அவள் கையில் என்றும் ஒரு நயா பைசா இருக்காது. இல்லாதபடி கமலா பார்த்துக்கொண்டாள். அவள் வேலைபார்க்கும் வீடுகளில் எல்லாம் ஷீலு வேலை செய்யவேண்டும். ஆனால், சம்பளம் வாங்கும் தினம் கறாராக கமலா ஆஜராகி, பணத்தை எடுத்துக்கொண்டு போய்விடுவாள். ஷீலு அதில் `எனக்கும் பங்கு வேண்டும்’ என்று கேட்டது இல்லை. வீட்டுச் செலவுக்குத்தானே உழைக்கிறோம் என்று மனசு சமாதானம் சொல்லும்.

எங்கோ மணி ஓசை கேட்டது. கடைகளுக்கு இடையே யாரோ ஒரு சின்ன மண்டபம் கட்டி ஒரு சாமி படத்தை வைத்திருந்தார்கள்.

ஜெய் ஹனுமான்ஜி படம். கையில் மலையைத் தூக்கிக்கொண்டு குரங்கு உருவம். எல்லாம் நமக்கு சாமி. `எலிகூட கணேஷ்ஜிக்கு வாகனம்’ என்பாள் கமலா. அதனால் எலியைக் கொல்லக் கூடாது.  அது குட்டை முடி மேடமுக்குத் தெரியாதுபோல் இருக்கு. ஒரு பூசாரி ஹனுமான்ஜிக்குத் தீபம்காட்டி மணியை ஆட்டிக்கொண்டிருந்தார். இரண்டு மூன்று பேர் அவருடைய தட்டில் காசை வைத்துவிட்டுப் போனார்கள். அவள் அந்தப் பக்கம் திரும்புவதே இல்லை.

கிராமத்தைவிட்டுக் கிளம்பும் வரை கோயில் திருவிழாவுடன் சம்பந்தம் இருந்தது.   சிநேகிதிகளுடன் பண்டிகைக் காலங்களில் கையில் டிசைன் டிசைனாக மருதாணி இட்டுக்கொண்டு, கோயில் வளாகத்தில் ஆடவும் பாடவும் பிடிக்கும். ஓ... அப்போது நிறைய விஷயங்கள் பிடிக்கும். வளையல் அணிய, கொலுசு போட, பாட்டு பாட, மற்றவர்களுடன்  சன்னிதியைச் சுற்றி நமஸ்கரிப்பாள். சாமியிடம் எதுவும் கேட்க வேண்டும் என்றுகூடத் தோன்றாது.  திருவிழா நடத்த மட்டுமே கோயில் என்று தோன்றும். உள்ளே ஜிகினா ஜரிகைச் சுற்ற அமர்ந்திருக்கும் சாமிக்கும் அவளுக்கும் சம்பந்தம் இருக்குமா? சம்பந்தம் இருந்தால், அந்த ஆளுக்கு மகாத் தொல்லை பாவம். எத்தனை பேரைச் சமாளிப்பார்? அவர் எங்கோ காணாமல் போயிருக்க வேண்டும். நீங்களே சமாளிச்சுக்குங்க. எலியையோ, பசியையோ, புருஷனுடைய அடியையோ, மாமியாரையோ.

அவளுக்குச் சிரிப்பு வந்தது. வழியில் படுத்திருந்த  நாய் ஒன்று உசுப்பப்பட்டதுபோல அவளை நிமிர்ந்து பார்த்தது. அதன் எதிரில் ஒரு குத்துக்கல் இருந்தது. ஷீலு அதன் மேல் அமர்ந்து அதன் முதுகை வருடினாள். அது கண்களை மூடிக்கொண்டு வாலை ஆட்டிற்று.

``பின்னே என்ன, சிரிச்சுத்தான் சமாளிக்கணும்.அழுதா, வந்து அணைக்க யாரு இருக்கா?’’ என்றாள் அதனிடம். ``பெத்தவ பெத்துப்போட்டு கண்ணை மூடிட்டாளாம். தீராத வியாதினு தெரிஞ்சதும், அவசர அவசரமா கிடைச்ச ஆளுக்குக் கட்டிக்கொடுத்த அடுத்த மாசம், அப்பா கண்ணை மூடியாச்சு.’’

நாய் கண்களைத் திறந்து அவள் கையை நக்கியது.

செத்தவர்கள்  சிலசமயம் ஆவியாக வருவதாக அவளுடைய சிநேகிதி ரமா சொல்வாள். அப்பா அவளுடைய கனவில்கூட வந்தது இல்லை. வந்தால்கூட என்ன சொல்லிவிட முடியும்?
ஒரே ஒரு கேள்விதான் குடைகிறது.

`நீ ஏன் செத்துப்போனே?’

அவள் நாயைச் சற்று நேரம் பார்த்தாள். அப்பாவின் ஜாடை அதற்கு இருப்பதுபோல் தோன்றியது.  

“ஷீலு...”

அவள் விருக்கென்று எழுந்தாள். மாமியாரின் குரல் எட்டு ஊருக்குக் கேட்கும். அவளுடைய குரலோ இல்லை அவளது பிரமையோ முதுகின் பின்னால் விரட்டியது. அவள் திரும்பிப் பார்க்காமல் வேகமாக வீடு நோக்கி நடந்தாள்.  அவள் போய்தான் அடுப்பைப் பற்றவைத்து, சமையல் செய்தாக வேண்டும். ஒரு நயா பைசாவுக்குப் பிரயோஜனம் இல்லாவிட்டாலும், ஒரு மணி அடித்ததும் கூப்பிட்டு அழைத்ததுபோல சாப்பிட மதன் வந்துவிடுவான்.

`ஆச்சா... ஆச்சா... இன்னுமா ஆகலை?  எங்கே போய் சதிராடிட்டு வந்தே?’ என்பான்.

ஒரு நாள் அவன் அப்படிக் கேட்டுக்கொண்டு நின்றபோது, அவள் அடுப்படியில் இருந்து எழுந்தாள். கையை விரித்து சிநேகிதிகளுடன் ஆடிய நாட்டியத்தை நினைவுபடுத்திச் சுழன்று ஆடிக் காண்பித்தாள்.
‘ஆமாம்... இப்படித்தான் சதிராடிட்டு வந்தேன். பாரு நூறு ரூபா கிடைச்சுது’ என துப்பட்டா நுனியில் இருந்த முடிச்சைக் காண்பித்தாள். பிறகு கடகடவெனச் சிரித்தாள்.

அவன் பளார் என்று கன்னத்தில் அடித்தான். துப்பட்டாவை உருவி  முடிச்சை அவிழ்த்தான். அது வெறும் முடிச்சு. துப்பட்டா பறக்காமல் இருக்க அவள் போடும் முடிச்சு.  அவள் மீண்டும் சிரித்தாள். அவன் மீண்டும் அடித்தான். அவள் சுரணையற்றவள் போல அடுப்படிக்கு நகர்ந்தாள். கண்ணில் ஒரு பொட்டு நீர் வரவில்லை.

`நா எதுக்கு அழணும்? என்ன தப்பு செஞ்சேன்? இதோ பார்... இப்படி அடிச்சியானா இன்னைக்கு உனக்கும் சோறு இல்லை... எனக்கும் இல்லை. எனக்குப் பசிக்குது’ என்று அமைதியாக அமர்ந்து சமையலைத் தொடர்ந்தாள்.

90p3.jpg

அவன் தோற்றுப்போனவன்போல மூலையில் சென்று அமர்ந்தான்.

எப்படி ஒருத்தன் இத்தனை உதவாக்கரை யாகவும் அதேசமயம் சர்வாதிகாரியாகவும் இருப்பது  சாத்தியம் என்று, அவள் பல நாள் யோசித்திருக்கிறாள். அவளிடம்தான் அவனுடைய பௌருஷம்; வெளியில் பெட்டிப்பாம்பு.
`காசு குடு... காசு இல்லே? இந்தா வாங்கிக்க. இந்தா... இந்தா... உன்னைக் கொல்வேன் ஒருநாள்.’
அவள் சிரிப்பாள்.
‘கொன்னியானா உனக்குக் காசு எங்கே இருந்து கிடைக்கும்?’

அதற்கும் அவன் அடிப்பான்.  அவன் மனிதனே இல்லை என அவளுக்கு நிச்சயமாகிப் போனது. அந்த நினைப்பு அவளுக்குச் சமாதானமாகிக்கூடப் போனது. மனுஷனே இல்லாதவனிடம் இருந்து எப்படி மனுஷத்தனத்தை எதிர்பார்க்க முடியும்?  கல்யாணம் நடந்தபோது அவனுடைய சிவந்த மேனியைப் பார்த்து அவளுடைய தோழிகள் அவளைக் கேலி செய்தார்கள்.

‘ஏய்... சல்மான் கான் கணக்கா இருக்கார்டீ!’ என்றார்கள். அவளும் திருட்டுத்தனமாகப் பார்த்தாள். பார்க்க நன்றாகத்தான் இருந்தான்.  ஆனால், அது பொய் பிம்பம் என்று ஒரே நாளில் தெரிந்துபோயிற்று.  மாமியார் வீடு போய் சேர்ந்த அன்றே அவளுடைய நகைகளைத் திருடிக் கொண்டு காணாமல்போனான் மதன்... அவள் புருஷன். பல நாட்கள் கழித்துதான் வந்தான். இடையில் அவளுடைய அப்பா இறந்துவிட்டார்... ‘எப்படி ஷீலு இருக்கே?’ என்று ஒரு கேள்வி கேட்கக்கூடப் பயந்தவர்போல.

மாமியார் பிள்ளையைப் பற்றி வாயே திறக்கமாட்டாள். ‘என் தலைவிதி’ என்று சிலசமயம் மண்டையில் அடித்துக்கொள்வாள்.

`அடிச்சுக்கோ... பிள்ளையைக் கண்டிச்சு வளர்க்கத்தெரியலே, பள்ளிக்கூடத்துக்கு அனுப்பலே, யாரோடு பழகுறான்னு கவனிக்கலே. ஊர் மேல மேயவிட்டுப்பிட்டு, என் ‘தலைவிதி’னு சொல்லு’ என்று ஷீலு தனியாக இருக்கும் சமயத்தில், சமைக்கும்போது அடுப்பிடம் சொல்வாள்.  

குடி மட்டும் இல்லை, என்னென்னவோ வாங்கிச் சாப்பிடுவான். போதை மருந்தாம். என்ன இழவோ. வீட்டில் இருக்கும் சாமான் எல்லாம் காணாமல்போகும். கொஞ்ச நாள் வீட்டுக்கே வராமல் இருப்பான். வந்தால் இரவு அவளைத் துவம்சம்செய்துவிட்டு, மறுநாள் முழுவதும்  வீட்டு  மூலையில் முடங்கிக் கிடப்பான். இரவில் அவனுடைய இம்சை பொறுக்க முடியாமல்,  அவள் பல நாள்  எழுந்து கொல்லையில் முடங்குவாள்.

`‘கல்யாணமானா சரியாகிடுவான்’னு சொன்னாங்க. உனக்குத்தான் அவன்கிட்ட இணக்கமா நடந்துக்கத் தெரியலே’ என்கிறாள் மாமியார்.

‘நீ பண்ணின தப்புக்கு என்மேல குத்தம் சொல்றியா? இப்படி என்கிட்ட சொல்ல உனக்குக் கூச்சமா இல்லே?’ என்று ஒருநாள் கமலாவிடம் கேட்டாள். ‘உன் பிள்ளை மனுஷன் இல்லை... மிருகம்!’
மாமியார் குய்யோமுய்யோ என ஊரைக் கூட்டிவிட்டாள். 

‘உனக்கு இங்க இருக்க இஷ்டம் இல்லைன்னா எங்கேயாவது போ!’ என்றாள்.

அவளுக்குப் புசுபுசுவெனக் கோபம் வந்தது. ஆனால், கூடவே சிரிப்பும் வந்தது.

‘எங்கே போகட்டும் சொல்லு? நா என்ன ஓடிவந்தேனா உன் மகனைக் கட்டிக்க? நீ என் அப்பாவை ஏமாத்தி என்னை அழைச்சுட்டு வந்திருக்கே? என் மகன் இந்திரன் சந்திரன்னு சொன்னே? அவன் யமன்!’ - அவளுக்கு உற்சாகம் கரைபுரண்டுபோயிற்று.

`போ... போ... போயிடு’ என்று கமலா அனத்தியபடியே இருந்தாள்.

‘நா போயிடறேன்னே வெச்சுக்க. இத்தனை பேர் வீட்டுவேலைகளும் என்ன ஆகும்? ஒண்டியா செஞ்சு சம்பாதிப்பியா? இல்லே உன் அழகான மகன் சம்பாதிச்சுட்டு வருவனா?’

`இல்லே... உன் குடிகாரப் புருஷன்தான் கொண்டுவருவாங்களா?’ என்று மேற்கொண்டு  அவள் கேட்கவில்லை. அது ஊருக்கு எல்லாம் தெரிந்த ரகசியம்.

கடகடவென்று அவள் சிரிப்பதைப் பார்த்து கமலா வாயை மூடிக்கொண்டாள்.

பக்கத்து வீட்டுக்காரியிடம் அவள் சொல்வது கேட்கும்... ‘பிள்ளை ஒரு உதவாக்கரைன்னா மருமகள் ஒரு கிறுக்கு.’

ஷீலுவுக்கு இப்போது எல்லாம் பழகிவிட்டது. பசியை மட்டும் பொறுத்துக்கொள்ள முடியாது.  கிடுகிடுவென்று சமைத்து, பகபகவென்று வயிற்றை நிரப்பி, ஒரு லோட்டா நீரைக் குடித்தால் அதுவே சொர்க்கம்.

போயிடு... போயிடு...

எங்கே போவது? மாமியார் மனசில் என்னதான் இருக்கிறது என்று புரியவில்லை.  ஒருநாள் திடுதிப்பென்று சொன்னாள்...

‘யாராவது ஆள் கிடைச்சா கல்யாணம் பண்ணிக்கோ. இங்கே இருந்து போயிடு.’

ஷீலுவுக்குத் தூக்கிவாரிப்போட்டது. எத்தனை அபத்தமான பேச்சு எனத் தோன்றியது.

‘ஆளா... எந்தக் கடையிலே கிடைப்பான்?’ என கண்களை அகலவிரித்துப் பெரிதாகச் சிரித்தாள்.

மாமியாருக்குத்தான் கிறுக்குப் பிடிச்சுப்போச்சு எனத் தோன்றிற்று. நீ என்னைப் பிடிச்சுத் தள்ளினாலும் நா இங்கு இருந்து போகமாட்டேன் எனக் கருவிக்கொண்டாள்.

‘என்னை எதுக்குப் போகச் சொல்றே? உனக்காக உழைக்கிறேன். ஒரு காசு கேட்கலை. வீட்டு வேலை எல்லாம் செய்றேன். நா இருக்கிறது உனக்குத் தொல்லையா இருக்கா?’

கமலா தலையைக் குனிந்துகொண்டாள்.

‘இதோ பாரு... நா ஒண்ணும் இங்கே பிரியப்பட்டு வரலை. நீதான் என்னை இட்டுட்டு வந்தே. என்னை வெச்சுக் காப்பாத்துறது உன் பொறுப்பு.’

கமலா அதற்குப் பிறகு அதைப் பற்றி பேசுவது இல்லை. ஷீலுவுக்கு நல்லவேளை யாருடைய கோபமும் நினைவில் தங்காது. நாள் முழுக்க உழைத்த பின் அக்கடா என்று படுக்க வேண்டும் போல் இருக்கும். இதில் இல்லாததையும் பொல்லாததையும் மனசில் போட்டுவைத்தால் வரும் தூக்கம்கூடக் கெட்டுப்போகும். அட... சொல்லிட்டுத்தான் போகட்டுமே!

மையல் முடிந்தது. இன்று மதன் வரக் காணோம். நல்லதாய்ப் போயிற்று என்று அவள் தனது சாப்பாட்டை முடித்துக்கொண்டாள். கமலாவையும் காணோம். வேலைசெய்யும் இடத்திலேயே அவளுக்குச் சாப்பாடு கிடைக்கும். ஷீலு அவளுடைய பல வீடுகளைக் கவனிப்பதால், அவள் புதிதுபுதிதாக வீடு பிடிக்கிறாள். இருவருமாக மாதம் இருபது ஆயிரம் சம்பாதிக்கிறார்கள்... ஆண்கள் உதவாக்கரைகள் என்பதால். மாமனார் கிஷோர் லால் இரவுதான் வருவார்... அதுவும் குடிபோதையில். ஷீலு மாமனாரின் எதிரில் நிற்பதுகூடக் கிடையாது.    அவர்களை அல்லவா வீட்டில் இருந்து கமலா விரட்ட வேண்டும்?

 ‘போ... போ... போயிடு...’ - கமலா புருஷனையும் மகனையும் துடைப்பக்கட்டையால் விரட்டுவதுபோல கற்பனைசெய்வது தமாஷாக இருந்தது. சிரிப்பு வந்தது.

மாலை வேலைக்குக் கிளம்புவதற்கு முன்னர் நினைவாக எலிப்பொறியை எடுத்து பையில் வைத்துக்கொண்டாள். 

வெளியில் கால்வைத்ததும் ஓர் உற்சாகம் அவளுள் புகுந்தது. உலகம் வண்ணம்மிகுந்த ராட்டினம்போல் இருந்தது. கடைத்தெருக்கள் அவளுக்கு  மகா நெருக்கம். காய்கறிக் கடைக்காரர்கள், பழம் விற்பவர்கள், துணிக்கடைக்காரர்கள், பெண்கள், ஆண்கள் அவளைப் பார்த்துத் தலையசைத்துச் சிரிப்பார்கள். ‘கைஸீ ஹோ?’ எப்படி இருக்கே? என்னவோ தினம் தினம் அவள் புதிதாகப் பிறந்தவள்போல. உண்மையிலேயே தினமும் எல்லாமே புது அழகோடு தெரிவதுபோலதான் இருக்கும் அவளுக்கு. எல்லோருடைய கேள்விக்கும் அவள் உற்சாகமாகக் கையை அசைத்துச் சிரிப்பாள். ‘ஃபஸ்ட் க்ளாஸ்!’ அது அங்ரேஜி பாஷை. மேடம்களிடம் இருந்து கற்றது. கடைகளில் இன்று பூவும் பழங்களும் அதிகமாகத் தெரிந்தன. ஜரிகை மாலைகளும் முகம்பார்க்கும் கண்ணாடிகளும் இருந்தன. பண்டிகைக் காலம்போல.
அவள் லேசான துள்ளல் நடையுடன் நடந்து அடுக்கு மாடி வளாகத்துக்குள் நுழைந்தாள். அங்கே கமலா அவளை எதிர்பார்த்துக் காத்திருந்தாள் .

`‘ஷீலு... மறந்தேபோச்சு. நாளைக்கு கர்வா சௌத். விரதம் இருக்கணும். நாளைக்கு வேலைக்கு வரமுடியாதுனு எல்லார்கிட்டவும் சொல்லிடு” என்றாள்.

`‘ஓ... அதானா. சரி” என்றபடி அவள் நகர்ந்தாள்.

90p41.jpg

அவளுக்குப் பண்டிகைகள் பிடிக்கும். இன்று இரவே மருதாணி இட்டுக்கொண்டால், காலை ரத்தச் சிவப்பாக விரல்கள், நகங்கள், பாதங்கள் ஜொலிக்கும். அன்று நல்ல உடை உடுத்திக்கொண்டு  இரவு சந்திரன் உதயமாகும் வரை விரதம் இருக்க வேண்டும்.  அன்று அதிசயமாகப் பசி எடுக்காது. புருஷனுக்காக விரதம். அவளுக்கு அதை நினைத்துச் சிரிப்பு வந்தது. ஐந்து வருடங்களாக அவள் விரதம் இருக்கிறாள். அதனால், எந்த மாற்றமும் ஏற்படவில்லை. அவள் எதிர்பார்க்கவும் இல்லை. அவளுக்குப் பண்டிகை ஒரு தமாஷ். 

இன்று கமலா கடையில் இருந்து இரண்டு அரைத்த மருதாணிச் சுருளை வாங்கி வருவாள். பத்து ரூபாய்க்கு ஒன்று. மாமியாரும் மருமகளும் சாப்பாடு முடிந்த பிறகு இட்டுக்கொள் வார்கள். இருவரும் மகிழ்ச்சியுடன் பகிர்ந்துகொள்ளும் நேரம். 

மேடம் எலிப்பொறியை அதிசயத்துடன் பார்த்தாள். ஷீலு அதற்குள் ரொட்டித்துண்டு வைத்து, எலி எப்படி உள்ளே மாட்டிக்கொள்ளும் என்று நடித்துக்காண்பித்தாள். மேடம்கூடச் சிரித்தாள். ‘பார்க்கலாம்... இன்னைக்கு ராத்திரி பிடிபட்டுச்சுன்னா நீதான் அதை வெளியே கொண்டுபோய் கொல்லணும்” என்றாள்.

‘`எலி எல்லாம் கொல்லக் கூடாது மேடம்’’ என்றாள் ஷீலு தலையசைத்து. ‘`அப்புறம் கணேஷ்ஜி நம்மைத் தண்டிப்பார்”.

`‘நீ ஒரு கிறுக்கு’’ என்றாள் மேடம். `‘எங்கேயாவது கொண்டு போய் போடு. மெட்ரோவைத் தாண்டி. மறுபடி இங்கே வரக் கூடாது.’’

`‘ஓ... மறந்துபோனேன் மேடம். நாளைக்கு நா வர முடியாது. கர்வா சௌத் விரதம்  இருக்கணும். நாளன்னைக்குப் பொறி வையுங்க.’’

மேடம் அவளை வியப்புடன் பார்த்தாள்.

``நல்ல கூத்து... இதெல்லாம் அந்தப் புருஷனுக்கா செய்ற?’’

“ஆமாம்... பின்னே? எனக்கு இருக்கிறது ஒரு புருஷன்தானே?” - கடகடவென்று அவள் சிரிப்பதை மேடம் விநோதமாகப் பார்த்தாள்.

எல்லோருடைய வீட்டுவேலைகளையும் முடித்துக் கிளம்புவதற்குள் இருட்டிவிட்டது.
 
ன்று மதன் அதிசயமாக வீட்டில் இருந்தான். கமலா காலையில் சமைத்த பதார்த்தங்களைச் சூடாக்கி, புதிதாக ரொட்டி சுட்டிருந்தாள். மாமனாரைக் காணோம் வழக்கம்போல்.  அவருக்கு என்று கமலா தனியாக மூடிவைத்தாள்.

மூவரும் சாப்பிட்டு முடித்ததும், இருவரும் முற்றத்தில் உட்கார்ந்தபடி கையிலும் பாதத்திலும் மருதாணி வைத்துக்கொண்டார்கள். ஷீலுவுக்கு ஊர் நினைவு வந்தது. தோழிகளுடன் பாடிய பாட்டு நாவில் வந்தது. கமலாவின் அதரங்களில்கூடப் புன்னகை மலர்ந்தது.  மதன் தூங்கிப்போயிருந்தான். மருதாணி கலையாமல் இருக்க முன்ஜாக்கிரதையாக  அவள் பாயையும் தலையணையையும் எடுத்துக்கொண்டு, கொல்லைத் திண்ணையில் விரித்திருந்தாள். படுக்கப்போகையில்,  இன்று காலையில் அவள் தடவிக்கொடுத்த நாய் மண்தரையில் படுத்திருந்தது. அவளை நிமிர்ந்துபார்த்து வாலை ஆட்டியது. அது அவளுக்கு வேடிக்கையாக இருந்தது. ஒரு முறை முதுகைத் தடவிக்கொடுத்த வுடன் சொந்தம் கொண்டாட வந்ததா என்று இருந்தது. அதற்கு அப்பாவின் ஜாடை இருந்ததாகத் தனக்குத் தோன்றியது நினைவுக்கு வந்தது. மேடம் சொன்னது சரிதான். `நா ஒரு கிறுக்கு’என்று திண்ணையில் படுத்துக் கொண்டாள்.

படுத்த சில நொடிகளில் சுகமாகத் தூக்கம் வந்தது. கனவில் தோழிகள் வந்தார்கள். கோயில் வளாகத்தில் மருதாணியில் சிவந்த கைகளைப் பிடித்தபடி நாட்டியம் ஆடினார்கள். `சல்மான் கானுக்காக விரதம் இருக்கப்போறியா?’ என்றார்கள். கண்ணாடியிலே சந்திரனைப் பாரு. சந்திரனா... சல்மான் கானா? அவள் புரண்டு படுத்தாள். யாரோ அவளது சுடிதாரை அவிழ்ப்பதுபோல் இருந்தது. மார்பைத் தொடுவதுபோல் இருந்தது.  அவள் விருக்கென்று விழித்துக்கொண்டாள். பயத்தில் நாக்குக் குழறிற்று.

`‘யாரு... யாரு...’’ - அவள் வாயை யாரோ இரும்புக் கையால் பொத்தினார்கள். அவள் திமிறினாள். நாய் குரைக்க ஆரம்பித்தது. இரும்புக் கை ஒன்று அவள் கம்மீஸுக்குள் நுழைந்து மார்பைப் பிசைந்தது. நாய் குரைத்த வண்ணம் இருந்தது. திமுதிமுவென உள்ளே இருந்து யாரோ ஓடிவந்தார்கள். உள்ளே இருந்து வந்தது யார் என்று அவளுக்குத் தெரியவில்லை. அவளைப் பிடித்திருந்த கை சட்டெனத் தளர்ந்தது. மரங்களுக்கு ஊடே தெரிந்த நிலா வெளிச்சத்தில் அவள் பார்த்தாள். எதிரில் கமலாவும் மதனும் நின்றிருந்தார்கள்... கையில் தடியுடன். மதன் அத்தனை ஆக்ரோஷமாக  நின்று அவள் பார்த்தது இல்லை. இருவரும் அந்த ஆளை மாற்றி மாற்றி அடித்தார்கள். `யார் அது?’ அவளுக்குத் தூக்கிவாரிப்போட்டது.

`‘உனக்கு அத்தனை திமிரா, அத்தனை திமிரா, கமீனே... பத்மாஷ்!’ (அயோக்கியனே... போக்கிரி!) என்று மதன் திட்டியபடி அடித்தான். எங்கு இருந்து வந்தது அந்தப் பலம்?

அவளுடைய மாமனார் மண்டையில் காயத்துடன் கீழே கிடந்தார். தலையில் இருந்து ரத்தம் பீறிட்டபடி இருந்தது. நாய் பயந்து எங்கோ ஓடிவிட்டது. ஷீலு கண்கள் விரிய பார்த்தாள். கமலா மூச்சுவாங்க நின்றிருந்தாள்.  மதன் வேலை முடிந்தது என்பதுபோல உள்ளே செல்லத் திரும்பினான்.

‘`நா போலீஸுக்குப் போறேன்” என்றான் கமலாவிடம்.

‘`நா போறேன் நீ இரு” என்றாள் கமலா.

‘`சே... அசட்டுத்தனமா பேசாதே. நீ இருக்கணும். ஷீலு உன் பொறுப்பு” - ஷீலுவின் பக்கம் திரும்பாமலே அவன் வெளியேறினான்.

கமலா தரையில் அமர்ந்திருந்த அவளைக் கூர்ந்து பார்த்தபடி, கையில் காய்ந்திருந்த மருதாணியை நிதானமாக உதறினாள். உள்ளங்கையும் விரல்நுனியும் ரத்தச் சிவப்பாகியிருந்தது.
ஷீலுவுக்குத் திடீரென அழுகை வந்தது. அது அடி வயிற்றில் இருந்து சுருண்டு பொங்கிப் பொங்கி வந்தது! 

http://www.vikatan.com

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பெண்களே பாவப்பட்ட ஜென்மங்கள் தான்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Similar Content

  • Topics

  • Posts

    • பல்லைக் காட்டியது யார், வெள்ளைக் குடை பிடித்தது ஏன்? - தமிழ்நாடு தேர்தல் களத்தில் என்ன நடக்கிறது? பட மூலாதாரம்,X/UDHAY/ANI 28 மார்ச் 2024, 05:54 GMT தமிழகத்தில் தேர்தல் பிரச்சாரம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. நாடாளுமன்றத் தேர்தல் பரப்புரைகளை கிட்டத்தட்ட அனைத்து கட்சிகளும் தொடங்கிவிட்ட நிலையில், திமுக அதிமுக இடையிலான புது மாதிரியான போட்டோ விவாதம் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. பிரச்சாரத்தின் முக்கிய அங்கமாக சமூக ஊடகங்கள் மாறியுள்ள நிலையில், களத்தில் நடைபெறும் பரப்புரைகள் சமூக வலைதளங்களிலும், எதிரொலிக்கின்றன. தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தனது பிரச்சாரங்களில் போட்டோக்களை பயன்படுத்தி பரப்புரை செய்து வருகிறார். அதிமுகவும் பாஜகவும் ஒரே கூட்டணி என்பதை காட்ட, பிரதமர் மோதியும் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியும் பொது நிகழ்வுகளில், சந்திப்புகளில் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை கையில் கொண்டு வந்து மக்கள் மத்தியில் எடுத்துக் காட்டி பரப்புரை செய்கிறார். இதற்கு பதிலடியாக எடப்பாடி பழனிசாமி தனது பரப்புரைக் கூட்டங்களில் திமுக தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலினும் பிரதமர் மோதியும் அரசு நிகழ்வுகளில், விழாக்களில் அருகில் நின்று சிரித்து பேசிக் கொண்ட புகைப்படங்களை எடுத்துக் காட்டி, திமுகவும் பாஜகவும் கள்ளக் கூட்டணி கொண்டுள்ளனர் என்று சுட்டிக் காட்டுகிறார்.   பட மூலாதாரம்,X/UDHAY 'கல்லு பல்லு' என நீளும் விமர்சனம் அதே போன்று, உதயநிதி ஸ்டாலின், மதுரை எய்ம்ஸ் கட்டுமானப் பணிகள் பல ஆண்டுகளாக நிலுவையில் உள்ளது என்பதை சுட்டிக் காட்டும் வகையில் கடந்த தேர்தலில், ஒற்றை செங்கலைக் காட்டி பரப்புரை செய்தார். இந்த முறையும் அதே போன்ற பரப்புரையை மேற்கொண்ட போது, “ஸ்கிரிப்டை மாத்து பா” என்று எடப்பாடி தனது பிரச்சாரத்தில் பதில் கொடுத்துள்ளார். “செங்கலை தூக்கிக் கொண்டு வித்தை காட்டுகிறாயா” என்று கேள்வி எழுப்பிய எடப்பாடி பழனிசாமி, திமுகவின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மக்களவையில் அழுத்தம் கொடுத்திருந்தால் எய்ம்ஸ் கட்டுமானத்துக்கு உதவியாக இருந்திருக்கும் என்றார். இந்த விவாதங்கள் பிரச்சாரக் களத்தில் மட்டுமல்லாமல், சமூக ஊடகங்களில் இடம் பெற்றுள்ளன. “நானாவது எய்ம்ஸ் -ல் வைத்த கல்லை காட்டினேன். இவர் பல்லை காட்டுகிறார் பாருங்கள்” என எடப்பாடி மோதியுடன் எடப்பாடி பழனிசாமி சிரித்துக் கொண்டு நிற்கும் புகைப்படத்தைக் காட்டி உதயநிதி ஸ்டாலின் பேசியது சமூக ஊடகங்களில் கல்லு பல்லு என்ற புதிய ஹேஷ் டேக்கை உருவாக்கிவிட்டது. இரு தரப்பினரும் மாறி மாறி, கல்லு பல்லு என்று பல உதாரணங்களை எடுத்து விமர்சித்து கேலி செய்து வருகின்றனர்.   பட மூலாதாரம்,X/EPSTAMILNADU மேலும் உதயநிதி ஸ்டாலின் பிரதமர் நரேந்திர மோதியை சந்தித்த போது எடுத்த புகைப்படத்தை காட்டி, “இவர் சிரிச்சா தப்பு இல்ல, நான் சிரிச்சா தப்பா. சிரிச்சா என்ன தெரியுது, பல்லு தானே” என்று மீண்டும் இந்த விவகாரத்தை கையில் எடுத்தார் எடப்பாடி பழனிசாமி. அந்தப் புகைப்படம் கேலோ இந்தியா நிகழ்வுகள் குறித்து பேசும் போது எடுத்தது என்று பதிலளித்தப் உதயநிதி, எடப்பாடி பழனிசாமி சசிகலாவின் காலில் விழும் போட்டோவை காண்பித்து, “நான் இப்படி ஒருவர் காலில் விழும் புகைப்படத்தை காண்பித்தால் நான் அரசியலை விட்டு விலகிவிடுகிறேன்” என சவால் விடுத்துள்ளார்.   பட மூலாதாரம்,X/ANI பிரதமர் நரேந்திர மோதி சென்னை வந்த போது கருப்பு குடைக்கு பதிலாக வெள்ளை குடை பிடித்ததை விமர்சனம் செய்து பேசிய எடப்பாடி பழனிசாமி, “நடிகர் வடிவேலுவின் 23ம் புலிகேசி திரைப்படத்தில், எதிரி நாட்டவர்கள் படை எடுத்து வரும் போது வெள்ளை கொடி எடுத்து செல்வார். அதே போல, கருப்பு குடை பிடித்தால் பிரதமருக்கு கோபம் வரும் என்பதால், அவர் சென்னை வரும் போது, வெள்ளை குடை பிடிக்கப்பட்டது. வெள்ளை குடை ஏந்தும் பொம்மை வேந்தர் என்று முதல்வரை மக்கள் சொல்கிறார்கள்” என்று கூறியிருந்தார்.   பட மூலாதாரம்,X/ANNAMALAI_K 'கோட்டா அரசியல்' - விமர்சனத்தில் சிக்கியுள்ள அண்ணாமலை அண்ணாமலை கோவையில் செய்தியாளர் சந்திப்பில் பேசும் போது,தன்னை எதிர்த்து போட்டியிடும் அதிமுக வேட்பாளரான சிங்கை ராமச்சந்திரன், சட்டமன்ற உறுப்பினராக இருந்த அவரது தந்தை கோவிந்தராசுவின் உதவியால் தான் உயர்படிப்பு படித்தார் என்றும் விமச்சித்திருந்தார். “2002ம் ஆண்டு எம் எல் ஏ கோட்டாவின் கீழ் கல்லூரியில் இடம் பெற்றவர் அவர், வாரிசு அரசியலில் வந்தவர் அவர். ஆனால் நான், எனது தந்தையுடன் கிராமத்திலிருந்து மூன்று பேருந்துகள் மாறி, தகரப்பெட்டியுடன் இந்த நகரத்துக்குள் நுழைந்தேன். கோட்டா அரசியலில் வரவில்லை நான்.” என்று அண்ணாமலை தெரிவித்திருந்தார். பட மூலாதாரம்,X/RAMAAIADMK இதற்கு பதிலளித்த சிங்கை ராமச்சந்திரன், “எனக்கு 11 வயது இருக்கும் போதே என் தந்தை இறந்துவிட்டார். நான் பெற்ற மதிப்பெண்கள் காரணமாகவே எனக்கு பொறியியல் கல்லூரியில் இடம் கிடைத்தது. அவர்களுடைய மோதியின் குஜராத்-ல் உள்ள ஐஐஎம்-ல் மீண்டும் மதிப்பெண்கள் மூலமாகவே இடம் பெற்றிருந்தேன். அவருக்காவது தகரப்பெட்டியை உடன் தூக்கி வர அப்பா இருந்தார், ஆனால் எனக்கு அதுவும் இல்லை. இது போன்ற கஷ்டங்களை அனைவரும் தங்கள் வாழ்வில் சந்தித்திருப்பார்கள். எனவே நான் தான் துன்ப்பப்பட்டேன் என்று கூறிக் கொள்ள எதுவும் இல்லை” என்று பதில் கூறியிருந்தார். இதை அடுத்து கோட்டா அரசியல், இட ஒதுக்கீடு குறித்த விவாதம் சமூக ஊடகங்களில் பரப்பரப்பாக நடைபெற்று வருகின்றன. திருவள்ளூர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் சசிகாந்த் செந்தில், அண்ணாமலை தான் வளர்ந்து வந்த பாதையை மறந்துவிடக் கூடாது என்று கூறியுள்ளார். இதற்கிடையில், முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் விழுப்புரம் தொகுதியில் பேசும் போது அதிமுக போட்ட பிச்சை தான் தமிழகத்தில் பாஜகவுக்கு இருக்கும் நான்கு சட்டமன்ற உறுப்பினர்கள் என்று காட்டமாக கூறியிருந்தார். தேனி தொகுதியில் பாஜக கூட்டணியில் போட்டியிடும் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் டிடிவி தினகரன், பாஜகவின் சாதனைகளை குறித்தோ அல்லது காங்கிரஸ் மீதுள்ள விமர்சனங்கள் குறித்து குறிப்பிட்டு எதையும் பேசுவதில்லை. தனது கட்சியிலிருந்து விலகிச் சென்றவர்களை மறைமுகமாக தாக்கிப் பேசும் அவருக்கு, பிரதான அரசியல் பிரச்னைகள் குறித்து பேசுவதை விட தனது குக்கர் சின்னத்தை மக்களிடம் கொண்டு சேர்ப்பதே முக்கியத்துவம் பெறுகிறது.   பட மூலாதாரம்,X/DRARAMADOSS பாமக மாறி மாறி கூட்டணி வைத்துக் கொள்வதை விமர்சித்து பேசிய எடப்பாடி பழனிசாமி, “நீர் இருக்கும் இடத்தை தேடிச் செல்லும் வேடந்தாங்கல் பறவை போல் பா.ம.க.,வினர் தேவைக்கேற்ப சென்று விடுவர். பா.மக., கூட்டணி வைக்காத கட்சிகளே இல்லை” என்று கூறியிருந்தார். தருமபுரியில் வேட்பாளர் சௌம்யா அன்புமணியை அறிமுகம் செய்து பேசிய அன்புமணி ராமதாஸ் “நாங்கள் வேடந்தாங்கல் பறவை அல்ல, சரணாலயம்” என்று பதில் கூறியுள்ளார். “யார் வந்தாலும் பாதுகாப்பு கொடுப்போம். வெற்றி பெற செய்வோம். எங்களை நம்பி வருபவர்களை வாழ வைப்போம். யாருக்கும் துரோகம் செய்ய மாட்டோம்” என்று தெரிவித்திருந்தார். https://www.bbc.com/tamil/articles/cjkd7v517z2o
    • 😀..... உங்களுக்காக 'கோப்பிக் கணக்கு' என்ற தலைப்பில் ஒன்று எழுத வேண்டும்....🤣 நீங்கள் இலகுவாக கடந்து விடுகிறீர்கள்........👍
    • உங்களின் சிறுகதைப் புத்தகம் வந்தவுடன் சொல்லுங்கள், நான் வாசிப்பில் கொஞ்சம் ஆர்வம் உள்ளவன். நீங்கள் அகரமுதல்வனின் எழுத்துகளை பற்றி இன்னொரு திரியில் எழுதியிருந்ததை பார்த்தேன். எனக்கும் அவரின் எழுத்துகளை பற்றி சில அபிப்பிராயங்கள் இருக்கின்றது. ஆனால், இந்த மாதம் தான் இங்கே களத்தில் இணைந்தேன், அதனால் உடனேயே எல்லா இடமும் போய் கருத்து எழுத ஒரு சின்ன தயக்கமாக இருக்கின்றது. போகப் போக தயக்கம் போய்விடும்.........😀 கலிபோர்னியாவின் பெரும் நகரங்களில் நீங்கள் கண்ட விடயம் மிகச் சாதாரண ஒரு நிகழ்வு. அமெரிக்காவின் பல பெரு நகரங்களிலும் இதே நிலையே.  மினசோட்டாவிற்கு வந்திருக்கின்றேன். அந்த நாட்களில் Kevin Garnett அங்கு கூடைப்பந்து விளையாடும் போது, அது பிடித்த அணிகளில் ஒன்றாக இருந்தது. இந்த வருடம் மீண்டும் ஒரு நல்ல அணி மினசோட்டாவில் உருவாகியுள்ளது. Vikings அணியும் பிடித்த ஒரு அணியே.
    • நன்றி... நாங்கள் அழகிய ஏரிகள் சூழ்ந்த மினசோட்டாவில் வசிக்கின்றோம். மிகவும் பிடித்தமான மகிழ்வான வாழ்வுக்குரிய இடம். தொடக்கத்தில் பனி கொஞ்சம் சிரமமாக இருந்தாலும் குழந்தைகளுடன் குழந்தையாக அதையும் ரசித்து வாழப் பழகி விட்டோம்.  இந்த இடத்தில் இன்னொன்றும் சொல்ல வேண்டும், போன வருடம் வட அமெரிக்க பேரவையின் தமிழ் பெரு விழாவுக்காக சாக்கிரமென்டோ போயிருந்தேன். இடையில் சான்பிரான்ஸ்சிஸ்கோவில் இரண்டு நாட்களை களித்தோம், கோல்டன் கேட் பாலத்துக்கு அருகில் கார் கண்ணாடிகளை உடைத்து பட்டப்பகலில் கொள்ளையர் புரியும் அட்டகாசத்தை நேரில் கண்டு பயந்தேன். இது பற்றி "தங்க வாசல்" என்ற தலைப்பில் ஒரு சிறுகதை எழுதியுள்ளேன், இன்னும் ஓரிரு மாதங்களில் வரவுள்ள எனது சிறுகதை புத்தகத்தில் அது இடம்பெறுகிறது.   
    • நாமெல்லாம் இதற்குள் வரமாட்டோம் ராசாக்கள்.........ஏதோ கடையில் கோப்பி குடிக்கும்போது ஒரு ஈரோ டிக்கட் வாங்கி சுரண்டிபோட்டு அங்கேயே வீசிப்போட்டு போறதுதான் அதிகம்......!  😂
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.