Jump to content

நலம் நல்லது!


Recommended Posts

தினசரி மூன்று பேரீச்சம் பழம்... தித்திப்பான பலன்கள்!

 

`நேர்மையாளர் பேரீச்சை மரமெனச் செழித்தோங்குவர்' - கிறிஸ்தவர்களின் மத நூலான பைபிளில் பேரீச்சையை இவ்வாறு உயர்வாகக் கூறப்பட்டுள்ளது. அதுமட்டுமல்ல, ஒயிலாக வளர்ந்து நிற்கும் பேரீச்சம் பழ மரங்கள் அவற்றின் அழகுக்கும் தித்திப்பான பழங்களுக்கும் பேர்போனவை என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

பேரீச்சம்

பேரீச்சை... பனை வகையைச் சேர்ந்த இந்த மரத்தை அதன் இனிப்பான பழங்களுக்காக வளர்க்கப்படுகிறது. குறைந்த மூலதனத்தில் நிறைவான பலன் தரக்கூடிய இந்த பழத்தை சாப்பிடுவதற்கென நேரம் ஒதுக்கத் தேவையில்லை. ஸ்நாக்ஸ் சாப்பிடுவதுபோலச் சாப்பிடலாம். ஃப்ரெஷ்ஷாகவோ, உலர்த்தியோ எப்படிச் சாப்பிட்டாலும் ஏராளமான பலன்களை அள்ளித்தருகின்றது. உண்ணத்தகுந்தது மட்டுமல்ல பல்வேறு நோய்களைக் குணப்படுத்தக்கூடியது.
 
மலச்சிக்கல் தீர்க்கும்!

'பேரீச்சை மலச்சிக்கலை உண்டாக்கும்' என்ற கருத்து நிலவி வருகிறது. ஆனால், உண்மையில் பேரீச்சை ஒரு சிறந்த மலமிளக்கியாகச் செயல்படுகிறது. மலச்சிக்கலைச் சரிசெய்ய, முதல்நாள் இரவே மூன்று பேரீச்சையை நீரில் ஊறவைக்க வேண்டும். காலையில் அவற்றின் சாற்றைக் குடிக்கலாம். பேரீச்சையில் அதிக அளவு நார்ச்சத்து நிறைந்துள்ளது; கரையக்கூடியது. இது செரிமான மண்டலப் பாதையில் உள்ள நீரை வெளியேற்ற உதவுகிறது. குடல் இயக்கங்களை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது. வயிற்றுப்போக்குக்குச் சிறந்த மருந்தாகும் இது செரிமானச் சக்தியை அதிகரிக்கும்.
 
இரும்புச்சத்து அதிகரிக்கும்! 

பேரீச்சையில் நிறைந்துள்ள அதிக அளவிலான இரும்புச்சத்து, ரத்தச்சோகையை சரிசெய்கிறது. உடலுக்குத் தேவையான எனர்ஜி மற்றும் ஆரோக்கியத்தைத் தரும். ரத்த உற்பத்திக்கு வழிவகுக்கிறது. ரத்தம் சம்பந்தமான நோய்களைக் குணப்படுத்த உதவுகிறது. 

இதயத்தை இதமாக்கும்


 
இதயத்தை இதமாக்கும்!

இதில் நிறைந்துள்ள பொட்டாசியம், இதய நோய்களில் இருந்து நம்மைக் காக்கிறது. பலவீனமான இதயத்துக்கு பலம் தரும். இதயத்துக்கு இம்சை தரக்கூடிய கெட்ட கொழுப்பைக் குறைக்கப் பெரிதும் உதவுகிறது. மாரடைப்பு மற்றும் பக்கவாதம் ஏற்படுவதற்கான வாய்ப்பைக் குறைக்கிறது. 

இன்ஸ்டன்ட் எனர்ஜி!

பேரீச்சையில் இயற்கையாகவே இனிப்பு அதிகம். சுக்ரோஸ், ஃப்ரெக்டோஸ் மற்றும் குளூக்கோஸ் நிறைந்துள்ளன. மதிய நேரங்களில் ஏற்படும் மந்தநிலையை சீர்செய்து உடலுக்குத் தேவையான உடனடி எனர்ஜியைத் தரும். மேலும், இதில் நிறைந்துள்ள மாவுச்சத்து உடல் ஆரோக்கியத்துக்கு உதவும். 

எலும்பை வலுவக்கும்

எலும்பை வலுவாக்கும்!

இதில் உள்ள மாங்கனீசு, மக்னீசியம் மற்றும் செலினியம் போன்ற நுண் சத்துகள் எலும்பை வலுவாக்கும். பேரீச்சையை உணவுடனும் சேர்த்துக் கொள்ளலாம். எலும்பின் வளர்ச்சிக்கு உதவும். மேலும், ஆஸ்டியோபோரோசிஸ் போன்ற எலும்பு நோயில் இருந்து நம்மைக் காக்கிறது. குறிப்பாக, பெண்கள் பேரீச்சையை உணவுடன் சேர்த்துக்கொள்ளவேண்டும். பெண்களுக்கு ஏற்படும் எலும்புறுக்கி நோயைக் குணப்படுத்தும். வயதானவர்களுக்கு ஏற்படும் எலும்புத் தேய்மானத்தால் ஏற்படும் வலியைக் குறைக்க உதவுகிறது. 

நினைவாற்றல் பெருக்கும்!

இதில் உள்ள வைட்டமின் மற்றும் பொட்டாசியம் சத்துகள் மூளை சுறுசுறுப்பாக இயங்க உதவுகிறது. நரம்பு மண்டலச் செயல்பாட்டை அதிகரிக்கவும் ஆரோக்கியமாகவும் வைத்திருக்கவும் உதவும். ஞாபக மறதியால் பாதிக்கப்பட்டோருக்கு ஏற்படும் நினைவாற்றல் இழப்பைத் தடுக்கிறது.  

பேரீச்சம்

கூடுதல் பலன்கள்!

* தினமும் ஆறு பழங்களைச் சாப்பிட்டுவர உடல் எடை அதிகரிக்கும்.

* தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் மாலைக்கண் நோய் குணமடையும். 

* பேரீச்சையில் உள்ள கரிம சல்ஃபர், உடலில் ஏற்படும் அலர்ஜிகள் மற்றும் ஒவ்வாமையைச் சரிசெய்யும்.

* பெண்களுக்குச் சீரான மாதவிடாய்ச் சுழற்சியை ஏற்படுத்தும். 

* வயிற்றுப் புற்றுநோயைக் குணப்படுத்தக்கூடியது.

பேரீச்சம்

உண்ணும் முறை

* உலர்ந்ததாக அல்லது ஃப்ரெஷ்ஷாக இருந்தாலும், அவற்றை நன்குக் கழுவி சுத்தம் செய்து உண்ண வேண்டும். 

* உணவுகளுடனோ அல்லது அப்படியேவும் சாப்பிடலாம்.

* பாதாம், வால்நட், உலர் திராட்சை, முந்திரி போன்றவற்றுடன் சேர்த்து ஜூஸாகவும் பருகலாம்.

* பேரீச்சை விதையை வறுத்துப் பொடி செய்து பனங்கற்கண்டுச் சேர்த்துக் காபியாகவும் குடிக்கலாம்.

* தினசரி இரண்டுவேளை பேரீச்சையை நட்ஸ்களுடன் சேர்த்துச் சாப்பிட்டுவர, உடலின் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

http://www.vikatan.com/news/health/91617-eat-3-dates-daily-for-these-benefits.html

Link to comment
Share on other sites

  • Replies 475
  • Created
  • Last Reply

உடலுக்கு வலு, நோய் எதிர்ப்பாற்றல் அள்ளித்தரும் எண்ணெய், அடுப்பில்லா முளைகட்டிய பயறு!

 

பயறு... இதை 'ஏழைகளின் இறைச்சி' என்றால் உங்களால் நம்பமுடிகிறதா? ஆம்... அத்தனை அற்புதமான ஓர் உணவுப் பொருள் பயறு. இதை ஏழைகளின் இறைச்சி என்று சொல்வதற்குக் காரணம், இறைச்சி உண்பதால், எவ்வளவு புரதச்சத்து கிடைக்குமோ அந்த அளவுக்கு புரதச்சத்து பயறு வகைகளை உண்ணும்போதும் நமக்குக் கிடைக்கும்.

முளைகட்டிய பயறு

பயறு வகைகள் 'லெக்யூம்' என்னும் குடும்பத்தைச் சேர்ந்தவை. மற்ற தாவரங்களைவிட அதிகமான சத்துகள் நிறைந்தவை. குறைவான ஈரப்பதம் கொண்டவை. பல நாள்கள் பத்திரப்படுத்தி உண்ணும் உணவாக பயறு வகைகள் இருக்கின்றன. நன்கு முதிர்வடைந்த பயறுகளில் அதிகமான புரதச்சத்துகள் உள்ளன. முதிர்ந்த பயறுகளில் கிட்டத்தட்ட 20 - 30 சதவிகிதம் புரதச்சத்துகள் நிறைந்துள்ளன.படையல் சிவக்குமார்

சாதாரண பயறுகளைவிட முளைகட்டிய பயறுகள் இரட்டிப்பு பலன்களைத் தருபவை. பயறுகளைச் சாதாரணமாக உட்கொள்ளும்போது உண்டாகும் வாய்வுத்தொல்லை முளைகட்டிய பயறை உண்ணும்போது உண்டாவதில்லை. மிக விரைவாக செரிமானமடையும் தன்மை கொண்டது. இதற்குக் காரணம் செரிமானப் பிரச்னைகளை உண்டாக்கும் 'பைரேட்ஸ்' என்ற எதிர் ஊட்டச்சத்துகள் முளைகட்டிய தானியங்களில் குறைக்கப்பட்டுவிடுவதுதான்.

பச்சைக் காய்கறிகள் மற்றும் பழங்களில் இருக்கும் என்சைம்களைவிட முளைகட்டிய தானியங்களில் அதிகமாக உள்ளன. எனினும், முளைகட்டிய பயறுகளை பச்சையாக உண்பது சுவையாக இருக்காது என்ற கருத்து பெரும்பாலும் நிலவிவருகிறது. ஆனால், “முளைகட்டிய பயறுகளைச் சுவையூட்டப்பட்டப் பயறுகளாக மாற்றி உண்ணலாம்’’ என்கிறார் இயற்கை உணவியல் நிபுணர் படையல் சிவக்குமார்.

எண்ணெயில்லாமல், அடுப்பில்லாமல் எப்படி முளைகட்டியப் பயறுகளைச் சுவை நிறைந்த உணவாக மாற்றலாம் என்பது குறித்து அவர் தரும் விளக்கத்தைப் பார்ப்போம்.

பயறு முளைகட்டும் முறை :

* பச்சைப் பயறை நன்கு சுத்தம்செய்து அலசி 8 மணி நேரம் தண்ணீரில் ஊறவைக்கவும்.

* 8 மணி நேரம் கழிந்ததும் நீரை நன்றாக வடித்து ஒரு பருத்தித் துணியால் கட்டிவைக்கவும்.

* அடுத்த 8 மணி நேரத்தில் பச்சைப் பயறு நன்கு முளைவிட்டிருக்கும்.

முளைகட்டிய பச்சைப் பயறு

சுவையூட்டப்பட்ட முளைகட்டிய பயறு (இனிப்பு) செய்வது எப்படி?

தேவையான பொருட்கள்:

* முளைகட்டிய பச்சைப் பயறு - 100 கிராம்

* கேரட் - 2

* தேங்காய் - 1

* கரும்புச் சர்க்கரை - 100 கிராம்

* உலர் திராட்சை - 50 கிராம்

* முந்திரி - 50 கிராம்

* வெள்ளரி விதை - 50 கிராம்

* மாதுளை - 1

* ஏலக்காய்த் தூள் - ஒரு டீஸ்பூன்.

சுவையூட்டப்பட்ட முளைப் பயறு இனிப்பு

செய்முறை:

* கேரட்டைத் தோல் நீக்கி துருவிக்கொள்ளவும்.

* தேங்காயைத் துருவிக்கொள்ளவும்.

* மாதுளையை முத்துக்களாக உதிர்த்துக்கொள்ளவும்.

* இப்போது முளைகட்டிய பயறை ஒரு வாயகன்ற பேசினில் வைத்து துருவிய கேரட், தேங்காய், வெள்ளரி விதை, உலர் திராட்சை, ஏலக்காய்த் தூள், கரும்புச் சர்க்கரை ஆகியவற்றைச் சேர்த்துக் கலக்கவும்.

* பிறகு முளைகட்டிய பயறு கலவையில் மாதுளை முத்துகளைத் தூவவும்.

இப்போது சுவையான, ஆரோக்கியமான, ஆற்றல் மிகுந்த சுவையூட்டப்பட்ட முளைகட்டிய பயறு தயார் என்கிறார் படையல் சிவக்குமார். அதோடு, அதன் நன்மைகளையும் பட்டியலிடுகிறார்.

நோய் எதிர்ப்புச் சக்தி

சுவையூட்டப்பட்ட முளைகட்டிய பயறு உண்பதால் ஏற்படும் பயன்கள்:

* பஞ்ச சக்திகள் நிறைந்த உணவு.

* அதிக பிராண சக்தி வாய்ந்த உணவு.

* அதிக புரதச்சத்து கொண்டது.

* வைட்டமின் பி 12 நிறைந்த உணவு.

* நோய் எதிர்ப்பாற்றல் அதிகரிக்கும்.

 

* உடலுக்கு வலுவும் ஆற்றலும் தரவல்லது.

http://www.vikatan.com/news/health/91706-health-benefits-of-sprouts.html

Link to comment
Share on other sites

மலச்சிக்கல், மாதவிடாய்க்கோளாறு நீக்கும், தாம்பத்ய உறவை பலப்படுத்தும் கற்றாழை!⁠⁠

 
 

கற்றாழை... `Aloe Vera' என்ற தாவரவியல் பெயரைக்கொண்டது. சோற்றுக் கற்றாழை, சிறு கற்றாழை, பெரும் கற்றாழை, பேய்க் கற்றாழை, கருங்கற்றாழை, செங்கற்றாழை, ரயில் கற்றாழை... என இதில் பல வகைகள் உள்ளன. இவற்றில் சில துணைப் பிரிவுகளும் உள்ளன.

பொதுவாக அலோயின் (Aloin), அலோசோன் போன்ற வேதிப்பொருள்கள் இருக்கின்றன. இலைச்சாறுகளில் ஆந்த்ரோகுயினோன்கள் (Anthraquinones) ரெசின்கள் (Resins), பாலிசாச்சரைடு (Polysaccharide) போன்ற வேதிப்பொருள்கள் உள்ளன.

கற்றாழை

தளிர் பச்சை, இளம் பச்சை மற்றும் கரும் பச்சை எனப் பலவிதமாக இருந்தாலும் முதிர்ந்தவையே மருத்துவத்தன்மை நிறைந்தவை. இதில் இருந்து வடிக்கப்படும் மஞ்சள் நிற திரவத்தை `மூசாம்பரம்’ என்பார்கள். இதற்கு `கரியபோளம்’, `கரியபவளம்’, `காசுக்கட்டி’ எனப் பல பெயர்கள் உள்ளன.

அழகுப் பொருள்கள், மருந்துப் பொருள்கள் தயாரிக்கப் பெரிதும் பயன்படும் இவற்றின் உள்ளே இருக்கும் சதைப் பகுதியான ஜெல்லை எடுத்து, அதைத் தண்ணீரில் ஏழு முதல் பத்து தடவை நன்றாகக் கழுவி பயன்படுத்த வேண்டும்.

இந்த ஜெல், சூரிய ஒளியுடன் கலந்து வரக்கூடிய கடுமையான வெப்பத்தை ஏற்படுத்தும் காமா மற்றும் எக்ஸ்ரே கதிர் வீச்சுகளின் பாதிப்பிலிருந்து சருமத்தைக் காக்கும். அத்துடன் சருமத்தின் நிறத்தையும் மேம்படுத்தும்.

கற்றாழை ஜூஸ்

கற்றாழை ஜூஸ் நிறைய நோய்களுக்கு நிவாரணம் தரக்கூடியது. தினமும் காலை வேளையில் வெறும் வயிற்றில் இந்த ஜூஸைக் குடித்துவந்தால் உடலில் உள்ள நச்சுகள் முழுமையாக வெளியேற்றப்படும். இதனால் உடலில் மெட்டபாலிசம் அதிகரித்து, உடல் எடை வேகமாகக் குறையத் தொடங்கும். அதே வேளையில் உடல் ஆரோக்கியம் மேம்படவும் உதவும். மாதவிடாய்க் கோளாறுகள் சரியாவதோடு, மலச்சிக்கல், உடல் உஷ்ணம், வயிற்றுக் கோளாறுகள் சரியாகும்.

உடலுக்கு பல்வேறு நன்மைகளை அள்ளித்தரும் இந்த ஜூஸை எப்படிச் செய்வதென்று அறிந்துகொள்வோம். இதன் ஜெல்லைத் தனியாக எடுத்து, அதன் கசப்புத் தன்மை போகுமளவுக்குத் தண்ணீரில் நன்றாகக் கழுவி வைத்துக்கொள்ள வேண்டும். தோல் நீக்கிய இஞ்சி, தேன், எலுமிச்சைச் சாறு, உப்பு அனைத்தையும் தேவையான அளவுக்கு சேர்த்து மிக்ஸியில் அரைத்து வடிகட்டி, அதனுடன் கற்றாழை ஜெல், ஒரு டம்ளர் தண்ணீர்விட்டு மீண்டும் மிக்ஸியில் அரைத்தால் ஜூஸ் தயார்.

கற்றாழை

 சதைப்பிடிப்புள்ள 3 கற்றாழைகளின் சதைப் பகுதியைச் சேகரித்து ஒரு பாத்திரத்தில் வைத்து, அதன் மீது படிகாரத்தூளை தூவிவைக்க வேண்டும். அப்போது சதைப்பகுதியில் இருந்து நீர் பிரிந்துவரும்.  இந்த நீருடன் வெண்ணெய், கற்கண்டு, வால்மிளகு சேர்த்துச் சாப்பிட்டால், சிறுநீர்க் கழிப்பதில் ஏற்படும் வலி, உடல் அரிப்பு போன்றவை சரியாகும். இதிலிருந்து எடுக்கப்பட்ட நீருடன் அதற்குச் சமமாக நல்லெண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெய் சேர்த்து நீர் சுண்டுமளவுக்குக் காய்ச்ச வேண்டும். இதை தினமும் தலையில் தடவிவந்தால், கூந்தல் நன்றாக வளர்வதுடன் நிம்மதியான தூக்கத்தையும் வரவழைக்கும்; வெப்பத்தைத் தணிக்கும்.

ஆறு டீஸ்பூன் ஜெல்லுடன் ஒரு சிட்டிகை பொரித்த பெருங்காயம், தேவையான அளவு பனைவெல்லம் சேர்த்து இடித்து வைத்துக்கொள்ள வேண்டும். இதில் அரை கிராம் அளவுக்கு தினமும் இரண்டு தடவை சாப்பிட்டு, வெந்நீர் குடித்து வந்தால் மாதவிடாயின்போது ஏற்படும் வயிற்றுவலி குறையும்.

கற்றாழை

மூலக்கோளாறால் பாதிக்கப்படுபவர்களுக்கு கற்றாழை நல்ல மருந்து.  இதன்  சதைப் பகுதியை நன்றாகக் கழுவி, அதனுடன் இரண்டு கைப்பிடி முருங்கைப்பூ சேர்த்து அம்மியில் அரைக்க வேண்டும். அதனுடன் சிறிது வெண்ணெய் சேர்த்து, எலுமிச்சை அளவுக்கு தினமும் காலையில் ஒரு வாரம் வரை சாப்பிட்டுவந்தால், மூலத் தொந்தரவில் இருந்து நிவாரணம் கிடைக்கும். இதைச் சாப்பிடும்போது உப்பு, காரம் சேர்க்கக் கூடாது.

கற்றாழையின் ஜெல்லை தினமும் வெண்படைகளின்மீது பூசி வந்தால் நாளடைவில் குணமாகும்.

இட்லிப் பானையில் தண்ணீருக்குப் பதில் பால் ஊற்றி, கற்றாழை வேரை  சிறு துண்டுகளாக நறுக்கி, இட்லித்தட்டில்வைத்து வேக வைக்க வேண்டும். பிறகு அதை உலரவைத்துப் பொடியாக்கி, தினமும் ஒரு டீஸ்பூன் பாலில் கலந்து சாப்பிட்டுவந்தால், தாம்பத்ய உறவு மேம்படும்.

 

குழந்தை பெற்ற பெண்களுக்கு தோள்பட்டை, தொடை, வயிறு, மார்பு போன்ற பகுதிகளில் வரிவரியாகத் தழும்புகள் ஏற்படும். இதைப் போக்க தினமும் இதன் சதையை எடுத்துத் தடவி, அரை மணி நேரம் கழித்துக் குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும். இதைத் தொடர்ந்து செய்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.

http://www.vikatan.com/news/health/91950-aloe-vera-cures-constipation-removal-of-menstrual-periods.html

Link to comment
Share on other sites

புற்றுநோய் ஏன், எப்படி..? தவிர்க்கும் வழிமுறைகள்!

 
 

செல்களின் கூட்டமைப்பில் உருவானதே மனித உடல். நவரசங்களையும் எண் சுவைகளையும், ஆயற் கலைகளையும் அனுமதிப்பது செல்கள். இந்தக் கூட்டமைப்பில் சிக்கல் இல்லாதவரைதான் ஊரை அடித்து உலையில் போடுவதும், ஏறி மிதித்து முன்னேறிச் செல்வதெல்லாம் நிகழும். உடலில் உருவாகும் செல்களுக்கு பிறப்பு, இறப்பு என வளர்ச்சியின் காலகட்டங்கள் இருக்கின்றன. அது தவறும்போது நோய் ஏற்படுகிறது. அதிலும் பல ஆண்டுகளாக மனித உயிர்களை காவு வாங்கிக் கொண்டிருக்கிறது புற்றுநோய் (Cancer). புற்றுநோய் என்பது தொற்றுநோய் அல்ல. ஆரம்பக்கால நோயை முற்றிலுமாக குணப்படுத்தலாம் என்கின்றனர் புற்றுநோய் சிகிச்சை மருத்துவர்கள். மாறிவரும் ரசாயன உலகில் புதிது புதிதாக நோய்கள் வரத்தான் செய்கின்றன. அதேநேரத்தில் அதைப் பற்றிய விழிப்புணர்வும், அடிப்படைத் தெளிவும், தற்காப்பு அக்கறையும் இல்லாமல் அதிலிருந்து தப்பிக்க முடியாது. குறைந்தபட்சம் கேன்சர் எனப்படும் புற்றுநோய் என்றால் என்ன? என்பதையாவது நாம் தெரிந்து கொள்ள வேண்டியது காலத்தின் கட்டாயம்.

புற்றுநோய்

 

ஆரோக்கியமான செல், உடல் இயக்கத்துக்கான செம்மையான பணியை முடித்து, பின் இறந்து, அடுத்த செல் வளர வேண்டும். இதுதான் செல்களின் இயல்பான வேலை. அப்படி அல்லாமல், புதிது புதிதாக அதீத வளர்ச்சியில் கட்டுப்பாடற்று செல்கள் உருவாகி பிறகு கட்டிகளாகும். இப்படியாக கட்டுப்பாடில்லாமல் பிரிந்து பிரிந்து வளர்ச்சியடையும் செல்கள் திசுக்கட்டிகளாக ( Lumbs or Masses) மாறுகின்றன. ஒன்று தீமை விளைவிக்காத கட்டி (Benign Tumor) மற்றொன்று புற்றாக மாறக்கூடிய கட்டி (Malignant tumor) உடலில் தோன்றும் எல்லாக் கட்டிகளையும் புற்றுநோயாக கருத்தில் கொள்ள வேண்டியதில்லை. ஆனால், பினைன் கட்டிகள், மெலிங்னென்ட்டாக மாற வாய்ப்பிருக்கிறது.

புற்றுநோய்கள் நூற்றுக்கணக்கில் இருக்கின்றன. உடல் உறுப்புகளில் எந்தெந்த இடங்களில் இவை தோன்றுகிறதோ அதற்குத் தகுந்தாற்போல வகைப்படுத்தப்பட்டுள்ளன. கேன்சர் செல்களானது, ஜீரண மண்டலம், ரத்தஓட்டம் மற்றும் நரம்பு மண்டலங்களில் தீமை செய்யும் ஹார்மோன்களை விடுவித்து உடல் இயக்கத்தில் மாற்றம் செய்துவிடும். புற்றுநோய் செல்கள் இரண்டு வகையில் தனக்கான இடத்தை தக்கவைக்கின்றன. முதலில் இந்த செல்கள் தங்களை பெருக்கிக் கொண்டு ஆக்டோபஸ்போல தன் கொடிய கரங்களால் ரத்தம் மற்றும் நிணநீர் பாதைகளில் உள்ள ஆரோக்கியமான திசுக்களை அழித்துக்கொண்டே அதிவேகமாக உள்ளே பரவும். இதற்கு ஆங்கிலத்தில் இன்வேசன் (Invasion) என்று பெயர். அடுத்ததாக, இந்த அரக்க செல்கள் பலமடங்கு பிரிந்து, வளர்ந்து தனக்கென புதிய ரத்தநாளங்களை உருவாக்கிக் கொண்டு வளர்ச்சிக்கான சத்துகளைப் பெற்று சுயாட்சி நடத்தும். இதை ஆஞ்சியோஜெனிசிஸ் (Angiogenesis) என்கிறார்கள். இந்த நிலைக்கு தன்னை நிலைப்படுத்திக்கொண்ட தீய செல்கள் ஒருகட்டத்தில் எந்த மருந்து மாத்திரைகளுக்கும் அடங்காமல் பசைபோல் ஒட்டிக்கொள்ளும். கண்ணாமூச்சி ஆட்டம் போல் அங்கும் இங்குமாக ஓடிக்கொண்டிருக்கும். அதேநேரம் அதற்குச் சாதகமாக, நன்மை தரக்கூடிய செல்களை அழிக்கும்.

நினைவாற்றலில் குழப்பம் ஏற்பட்டு ஐயோ… என பதைபதைத்து எம்ஆர்ஐ (MRI) ஸ்கேன் எடுக்கப்பட்டதன் முடிவில் மூளையில் புற்றுக் கட்டி இருப்பது தெரியவரலாம். அதன்பிறகு `கேன்சரா' என மரண பயத்தில் சிகிச்சை எடுக்க முடிவு எடுப்பீர்கள். `எனக்கு அப்பப்போ இருமும்போது ரத்தம் வருது...' என்று சோதனை செய்தால் நுரையீரலில் புற்று இருப்பது தெரியவரும். இதைப் பரிசோதனையின்போது கண்டுபிடிப்பார்கள். முதலில் நுரையீரலில் இருந்த செல்கள் ஓடிப்போய் மூளையையும் பாதித்துவிட்டது என்பது தெரியவரும். இதைத்தான் `செகண்டரிஸ்' என்பார்கள். இந்த நிலைக்கு மெட்டாஸ்டாசிஸ் (Metastasis) என்று பெயர். இந்தநிலையில் கேன்சர் செல்களை அழிப்பது என்பது கடினமான வேலை என்கிறது மருத்துவம்.

புற்றுநோய்

உலக அளவில் புற்றுநோய் மனித இறப்புக்கான இரண்டாவது இடத்தில் இருப்பதாக அமெரிக்கப் புற்றுநோய் கழகம் (American cancer Sociiety) தெரிவிக்கிறது. 2012-ம் ஆண்டில் புதிதாக பாதிக்கப்பட்ட புற்று நோயாளிகள் 14 மில்லியன் பேர் இருப்பதாகவும் அவர்களில் 8.2 மில்லியன் நோயாளிகள் இறந்து போனதாகவும் உலகச் சுகாதார நிறுவனம் (world Health Organaisation) கணித்துள்ளது. அடுத்த 20 ஆண்டுகளில் இன்னும் 70 சதவிகிதம் அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும் அச்சுறுத்துகிறது.

பொதுவாக என்னதான் காரணம் என்று பல்வேறு ஆய்வுகளை உற்றுநோக்கினால் இதுதான் என உறுதியாகச் சொல்ல முடியவில்லை. ஆனால், ஒருசிலவற்றை கண்டுபிடித்திருக்கிறார்கள். முதலாவதாகப் பரம்பரை. அதாவது மரபு வழி. (Genes – The DNA type) உங்கள் குடும்பத்தில் தாய், தந்தை வழி இந்த நோய் இருந்தால் நிச்சயம் அலட்சியப்படுத்தாமல் சோதனை செய்துகொள்வது மிக அவசியம். புகையிலை, கூரையாக வேயப்படும் ஆஸ்பெஸ்டாஸ், ஆர்சனிக் உலோகம், கதிர்வீச்சு (Gamma and X Rays), மித மிஞ்சிய சூரியக் கதிர் வீச்சு, வாகனங்களில் இருந்து வெளிப்படும் புகை போன்ற பல வேதியியல் காரணிகளாலும் (carcinogens) இந்நோய் பரவுகிறது. உதாரணமாக, பெரிய எண்ணெய் சட்டிகளில் லிட்டர் கணக்கில் எண்ணெய் ஊற்றி, பாக்கெட் மசாலாக்களில் ஊறவைத்து சிவக்க, மணக்க பொரித்துத் தரப்படும் சிக்கனை ரசித்து சாப்பிடுகிறோமே, அது எந்த வகையான எண்ணெய் என்பதைவிட, புது எண்ணெயா என யோசிப்பதில்லை. ஒருமுறை கொதிக்க வைத்ததை மீண்டும் கொதிக்க வைத்தால் ஏன் கேன்சர் வரும்? வேதியியல் மாற்றம்தான். அதிகப்படியான கொதிநிலையில் ஒவ்வாத மூலக்கூறுகள் (Free oxygen Radicals) உருவாகின்றன. அவை நம் உடலில் உள்ள நன்மைதரும் எலெக்ட்ரான்களை உட்கிரகித்து நோய் உருவாக்குகிறது. நாள்பட்ட பல்வேறு நோய்களுக்கு இதுவும் காரணம். இதன் வீரியத்தை குறைக்கும் சக்தி ஆன்டி-ஆக்ஸிடென்ட்டுக்கு உண்டு. அதற்குத்தான் சத்துள்ள இயற்கையான காய்கறிகளையும் பழவகைகளையும் உண்ணச் சொல்கிறார்கள்.

வைரஸ் தொற்று தாக்குதலினாலும் புற்றுநோய் உருவாகிறது என மருத்துவ ஆய்வுகள் முன்வைக்கின்றன. அதில் முக்கியமானது, HPV (Human pappiloma virus) (பெண்களுக்கான கருப்பைவாய் புற்று உருவாகிறது), ஹெபடைட்டிஸ் பி மற்றும் சி (Hepatitis), கல்லீரல் புற்றுநோய்க்கு காரணமாகிறது. எப்ஸ்ட்டீயின் பார் வைரஸ் (Epstein – Barr virus) குழந்தைகளின் பல்வேறு புற்றுநோய்களுக்கு இந்த வைரஸ் காரணம். எந்த வைரஸ் தொற்றாக இருந்தாலும், உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை வலுவிழக்கச் செய்கிறது. நோய்களை எதிர்த்து போராடும் ஆற்றல் இல்லாமல் போகிறது. இதனால் புற்றுநோய் உருவாவதற்கான சாத்தியங்கள் அதிகம் ஏற்படுகின்றன.

புற்றுநோயில் முதல் நான்கு இடங்களில் இருப்பது மார்பகப் புற்று (Breast cancer), கருப்பை வாய் புற்று (Cervical cancer), வாய்ப்புற்று (Oral cancer), மலக்குடல் ஆசனவாய்ப் புற்று (Colorectal cancer). புகையிலை, புகைப்பிடித்தல், மது அருந்துதல், பான்பராக் போன்ற போதைப்பொருட்கள், வெற்றிலை பழக்கம் உள்ளவர்களுக்கு வாய்ப்புற்றுக்கான வாய்ப்புகள் இருக்கின்றன. வெறும் வெற்றிலையில் மருத்துவக் குணங்கள் இருக்கலாம். ஆனால், புகையிலையுடன் உண்பவர்களுக்கு பாதிப்பு ஏற்படும். இந்தியாவில்தான் வாய்ப்புற்றுக்கான சதவிகிதம் அதிகம் இருப்பதாகச் சொல்கிறார்கள். மனக்கவலை என்று குபுகுபுவென சிகரெட் புகையை வீடு முழுக்க நிரப்புகிறீர்கள். உங்களைவிட, மடியில் அமர்ந்து நிக்கோடினை சுவாசிக்கும் குழந்தைகளுக்கு நுரையீரல் புற்று வரும் தெரியுமா உங்களுக்கு? புற்றுநோயைப் பொறுத்தவரை வருமுன் காப்பதுதான் புத்திசாலித்தனம். சுகாதாரக் கல்விதான் முதல் தடுப்பு முறையாக இருக்கும். புகைப்படங்கள், சினிமாக்கள், விளம்பரங்களால் ஓரளவு விழிப்புணர்வை ஏற்படுத்த முடியும். புகையிலைக்கு எதிரான விளக்கக் கூட்டங்களினால் (Anti tobacco Community Programme) கர்நாடகாவில் ஆண்களில் 26.5 சதவிகிதம், பெண்களில் 36.7 சதவிகிதம் நோய்க்கான சதவிகிதம் குறைந்து நல்ல பலனைத் தந்திருக்கின்றன.

நுரையீரல் புற்றுநோய்

மார்பகப் புற்றுநோயினால் பெண்கள் அதிகம் பாதிக்கப்படுகின்றர். உலக அளவில் ஒரு லட்சம் மக்கள் தொகையில் 43 சதவிகிதம் பெண்களுக்கு இந்நோயின் தாக்கம் உள்ளது. இந்தியாவில், குறிப்பாக பெங்களூரில் அதிகமாக 36.6 சதவிகிதம் பெண்கள் அவதிப்படுகின்றனர். கேன்சர் மருத்துவமனைகளும் நோயாளிகளும் அங்கொன்றும் இங்கொன்றுமாய் இருந்த காலம் போய், சாதாரணக் காய்ச்சல்போல தற்பொழுது எல்லா தரப்பிலும் புற்றுநோய் பரவிவிட்டது. அதன் பின் விளைவுகள்தான் கிரகிக்க முடியாத நிலையில் உள்ளன. குக்கிராமங்களில் இந்நோய் பற்றிய தெளிவு இல்லை. ஆரம்ப மற்றும் மாவட்ட சுகாதார நிலையங்களில் முகாம்கள், வசதி வாய்ப்புகள் வேண்டும். மத்திய, மாநில அரசுகள் கல்வி அறிவு குன்றிய ஏழைப் பெண்களிடம் நோய் குறித்த புரிதலுக்கு வகை செய்ய வேண்டும்.

பெரும்பாலும் இன்றைய வாழ்வியல் முறையில் ஏற்பட்ட மாற்றங்களைத்தான் பாதிக்கப்பட்டவர்கள் குறையாக முன்வைக்கிறார்கள். உண்ணும் உணவுகள் எல்லாமும் மரபணு மாற்றம். ரசாயனக் கலப்படங்கள், மாடுலர் கிச்சன் என்கிற பெயரில் பல வண்ணங்களில் தீங்குதரும் பிளாஸ்டிக் டப்பாக்கள், ஓவனில் தயாரிக்கப்படும் உணவுகள், ஒட்டாமல் தோசை வரும் டெஃப்லான் கோட்டிங் தொடங்கி குடிக்கும் பால் வரை சகலத்திலும் புற்றுநோய் வருவதற்கான அபாயம் இருக்கிறது. அழகுக்கான முகப்பூச்சுகள், ஹேர்டை, பவுடர்கள், சன்ஸ்கிரீன் லோஷன்கள்... இன்னும் சொல்லப்போனால் கெமிக்கல் கலந்து உருவாகும் செயற்கை இழைகளால்ஆன ஆடைகள்கூட ஆபத்தானதுதான். நோய்களை உருவாக்கும் பொருட்களை விற்பனை செய்து, அதைத் தடுக்கும் மாத்திரைகளையும் தயாரிக்கும் கார்ப்பரேட் தொழில் தந்திரங்களில் சிக்கித் தவிப்பது ஏதுமறியாத மக்கள்தான். நம் முன்னோர் வகுத்துவைத்த உணவே மருந்துக்குள் சொல்லப்படாத விஞ்ஞான அணுகுமுறை இருக்கிறது. யார் அவற்றை மதித்தார்கள். வெந்ததைத் தின்று வேகாததை பாக்கெட்டில் அடைத்து, ஃபிரீசரில் பாதுகாக்கும் நமக்கு, புதிய நோய்களின் வரவு ஒன்றும் ஆச்சர்யப்படும் விஷயமில்லை.

முற்காலத்தில் குழந்தைக்கு ஓராண்டுவரை தாய்ப்பால் புகட்ட வேண்டும் என வயதானப் பாட்டிகள் அறிவுரை சொன்னார்கள். ஓரிரு நாள்களில் தாய்ப்பால் கொடுப்பதை நிறுத்துவது மார்பகப் புற்றுக்கு காரணமாக இன்று சொல்லப்படுகிறது. வளர்ச்சி ஊக்கி ஹார்மோன்களை செலுத்திய இறைச்சிகளைத் தின்று இளம் வயதிலேயே பூப்பெய்துதல் (Early puberty) அல்லது காலம் கடந்து பூப்பெய்துதல் (Delayed puberty) மாதவிலக்கு நிற்கும் வயதில் நிற்காமல் நீட்டிப்பது, இளமையைத் தக்கவைக்க தொடர்ச்சியாக எடுக்கப்படும் ஹார்மோன்கள், பொறித்த கொழுப்பு வகையான உணவுகளை சாப்பிடுதல், உடல் உழைப்பு இல்லாமை, உடல் பருமன் என பட்டியல் நீண்டுகொண்டே போகிறது.

குடும்பம், வேலை என பெண்கள் தங்கள் உடல் நலனில் எப்போதுமே அக்கறை செலுத்துவதில்லை. மார்பகத்தில் ஏதேனும் கட்டிகள் இருக்கிறதா அல்லது அக்குளில் நெறி கட்டியிருக்கிறதா என சுய பரிசோதனை செய்ய வேண்டும். மார்பகத்தில் ஏற்படும் வலி, ரத்தம் கலந்த திரவக் கசிவு, முலைக்காம்பில் வலி, எரிச்சல், தோல் சிவந்து போதல், செதில் செதிலாக உரிதல், உள்பக்கமாக திரும்பியிருத்தல், மச்சம் அல்லது மருவில் மாற்றங்கள் ஏற்பட்டால் உதாசீனப்படுத்தாமல் முறையாக சோதனை செய்து சிகிச்சை எடுப்பது நல்லது. மார்பகப் புற்றுநோயை ஆரம்பத்திலேயே கண்டுபிடிப்பது அரிது. எனவேதான், இந்த அறிகுறிகள் இல்லாமல் இருந்தாலும் 30 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் அடிக்கடி மருத்துவப் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். மேமோகிராபி, ஸ்கேன் போன்ற முறைகளால் மார்பகப் புற்று இருப்பதை கண்டுபிடிக்க இயலும்.

கருப்பைவாய்ப் புற்று (cervical cancer). எதிர்பார்க்க இயலாத அளவுக்கு பெண்களின் மனதில் அச்சத்தை உருவாக்கி இருக்கிறது. HPV வைரஸ் 16,18 வகை மிக முக்கியக் காரணமாக பார்க்கப்படுகிறது. ஒரு பெண் வயதுக்கு வந்தபிறகு அவரின் அனுமதியோடு இந்தத் தடுப்பூசியை போட்டுக்கொள்வதால் கருப்பைவாய்ப் புற்றினை ஓரளவு தடுக்கலாம் என்கிறார்கள் மருத்துவர்கள். கிட்டத்தட்ட 80 நாடுகளில் இந்தத் தடுப்பூசி போடப்படுகிறது. அதிக விலை என்பதால் இந்தியாவில் நடைமுறைப்படுத்தாமல் இருக்கிறார்கள். இளம் வயதிலேயே திருமணம் செய்து கொள்வது, பாதுகாப்பற்ற உடலுறவு, சுகாதாரமின்மை, பால்வினை நோய், கர்ப்பத்தடை மாத்திரைகள் உட்கொள்வது, ஊட்டச்சத்து பற்றாக்குறை, நோய் குறித்த அறியாமை போன்றவற்றால் இந்நோய் உருவாகிறது. பிறப்புறுப்பின் உள்ளேயும், வெளியேயும் தோன்றும் மருக்கள் (Wart) கவனிக்கப்பட வேண்டியவை. சைடாலஜி (Cytology,) கண்களுக்கு புலப்படும் அறிகுறிகளை ஆராய்தல் (Visual screening), திசுத் திரவ பரிசோதனை (POP Smear), சி.டி. (CT - Computed tomography), எம்.ஆர்.ஐ. (MRI – Magnetic resonance imaging), பெட் ஸ்கேன் (PET – Positron emission tomography) போன்றவற்றின்மூலம் நோயைக் கண்டுபிடிக்கலாம். பலவீனம், நோக்கமற்ற எடை குறைவு, சினைப்பை, கருப்பை நீர்க்கட்டிகள் (Pcod), முறையற்ற மாதவிலக்கு, அதிக உதிரப்போக்கு உள்ள பெண்கள் கண்டிப்பாக ஆரம்பத்திலேயே மருத்துவ சிகிச்சை மேற்கொள்ள வேண்டும்.

புற்றுநோய்

சீரற்ற ஹார்மோனால் கருப்பையின் உள்ளே அதிகமாக வளரத் தொடங்கும் (Endometriosis) எண்டோமெட்ரியம் புற்றாக (Endometrial cancer) மாறக் கூடும். குழந்தையின்மைக்காக செலுத்தப்படும் அளவுக்கதிகமான ஹார்மோன் மருந்துகளும் நோய்க்கான காரணங்களாகும். புற்றுநோய் தாக்கிய பின்பு மருந்துகளை ரத்தக் குழாய்களில் செலுத்தும் கீமோதெரபி (Chemotherapy), உறுப்புகளின் வெளியே (Radiation) மற்றும் உள்ளே கொடுக்கும் கதிர் வீச்சுகள் (Brachy therapy), அறுவை சிகிச்சைகள் என முத்தரப்பு சிகிச்சை முறைகளால் (Tumor board Treatment) நோயைக் குணப்படுத்துகிறார்கள். தேசிய மற்றும் மாநில அளவில் நோய் கண்டுபிடிக்கவும் தடுக்கவும் பல்வேறு விளக்கக் கூட்டங்கள் நடைபெறுகின்றன. நோயின் தாக்கம் பெருமளவில் இருப்பதால் கிராமங்களில் இருக்கும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் கிராம சுகாதார செவிலியர்களைப் பயிற்றுவித்து ஆரம்பகால நோய் தாக்கத்தை கண்டறியலாம் என்ற கருத்தையும் ஆராய்ச்சியாளர்கள் வலியுறுத்துகிறார்கள்.

ஆரம்பத்தில் இருந்தே மருந்துகள் தெளிக்கப்படாத காய்கறிகள், மரபணு மாற்றம் இல்லாத பழங்கள், தானியங்கள், பருப்பு வகைகளை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். கோதுமைப்புல் சாறு, வில்வத் துகையல், முள் சீதாப்பழம் , கறுப்பு திராட்சையின் விதைகள், புரோக்கோலி போன்றவற்றில் புற்றுச் செல்களை அழிக்கும் பலம் இருப்பதாக இயற்கை வைத்திய ஆர்வலர்கள் கூறுகிறார்கள். பக்க விளைவு இல்லாத நம் உணவுகளை எடுத்துக் கொண்டு நோய் சீற்றத்தை தவிர்க்கலாம். தமிழர்களின் பாரம்பர்யம் என்பது பட்டு வேட்டி சட்டையிலும் புடவையிலும் மட்டுமல்ல உணவில்தான் தொடங்குகிறது. கிராமத்து வீடுகளின் மேல்தளத்திலும் செல்போன் கோபுரங்கள் முளைத்து விட்டன. 24 மணிநேரமும் புற்றுநோய் பரப்பும் மொபைலின் கதிர்வீச்சில் வாழப்பழகி வரும் மக்களுக்குத் தேவையானது, விழிப்பு உணர்வும் இயற்கை சார்ந்த வாழ்க்கையும்தான்.

 

பெற்ற தாய்க்கு கருப்பை புற்று வந்ததும் நோய் தொற்றிக் கொள்ளும் என அறியாமையால் பயந்து ஓடிய மகனையும் மகளையும் கண்கூடாக பார்த்திருக்கிறேன். பாதிக்கப்பட்டவர்களுக்கான ஆறுதலை, மனவலிமையை குடும்பத்தில் உள்ளவர்கள் கொடுக்கவேண்டும். மன அமைதி, நல்ல எண்ணங்கள், உடற்பயிற்சிகள், நடைப்பயிற்சி, தியானம், மருத்துவ தொடர் ஆலோசனைகள் மற்றும் அன்பு வழியில் மனதை பலப்படுத்த வேண்டும். எதிர்காலத்துக்கான நம்பிக்கையை நண்பர்களும் உறவுகளும் உருவாக்கினால் மட்டுமே அவர்களால் மீண்டு வர முடியும். நோய்களை வென்று தன்னம்பிக்கையோடு பயணப்படுவதுதான் முன்மாதிரியான வாழ்க்கை. புற்றுநோய்க்கான சிகிச்சை என்பது வெறும் உடல் வலி அல்ல. ஃபீனிக்ஸ் பறவைபோல கங்குகளை உதறி, உயிர்த்தெழும் வேலை. காலத்தின் மீதான விரக்தியின் வலி. ஆனபோதும் கேன்சரை வென்றிடுவோம்.

http://www.vikatan.com/news/health/92309-how-to-avoid-cancer.html

Link to comment
Share on other sites

உயிரணுக்கள் வீரியமுடன் இருக்க...!

எம்மில் பலரும் தற்போது சந்தித்து வரும் ஆரோக்கிய சவால்களில் குழந்தைபேறின்மையும் ஒன்று. இதற்காக முன்னர் பெண்கள் தான் காரணம் என்று சொல்லிவந்தனர். தற்போது பெண்களைக் காட்டிலும் ஆண்களே இத்தகைய பாதிப்பிற்கு காரணம் என்பதை கண்டறிந்திருக்கிறார்கள்.

health_news_image_36.jpg

ஆண்களிடமுள்ள உயிரணுக்கள் எண்ணிக்கையில் குறைபாடு, குறைந்த எண்ணிக்கையில் இருக்கும் உயிரணுக்களும் வீரியமில்லாமலும், நீந்திச் செல்லும் தன்மை குறைவாகவும் இருக்கிறது. இதற்கு எத்தனையோ மருத்துவ சிகிச்சை முறைகள் கண்டறியப்பட்டு நிவாரணமளிக்கப்பட்டு வருகின்றன. இருப்பினும் ஆண்கள் தங்களிம் உயிரணுக்களை ஆரோக்கியமாகவும், வீரியமுடனும் வைத்திருக்கவேண்டும் என்றால் தினமும் இரவு 8 மணிக்குள் உறங்க செல்லவேண்டும். அத்துடன் 8 மணித்தியாலம் வரையிலான தூக்கத்தையும் கொண்டிருக்கவேண்டும். உடலில் உள்ள ஒவ்வொரு பாகங்களும் ஒரு குறிப்பிட்ட 2 மணித்தியாலங்களில் ஆரோக்கியமாக இயங்கும் என்பதும், அந்த வகையில் இரவு 8 மணியிலிருந்து 10 மணி வரையில் ஆண்களிடமுள்ள உயிரணுக்கள் உயிர்ப்புடன் இயங்குகிறது என்பதும் தான் இதன் மருத்துவ பின்னணி. 

இரவு நெடுநேரம் விழித்திருந்தும், குறைவான உறக்கத்தைக் கொண்டிருக்கும் ஆண்கள் தான் உயிரணுக்கள் தொடர்பான பாதிப்பிற்கு ஆளாகிறார்கள் என்பதையும் கண்டறிந்திருக்கிறார்கள். எனவே மருத்துவர்கள் ஏற்கனவே பரிந்துரைத்திருக்கும் விடயங்களை பின்பற்றுவதுடன் இந்த 8 மணிக்குள் தூங்கச் செல்வதையும், 8 மணித்தியாலம் வரை தூங்குவதையும் தொடர்ந்தால் உங்களின் உயிரணுக்கள் ஆரோக்கியமாக இருக்கும். ஆரோக்கியமான உயிரணுக்கள் இருந்தால் மக்கட்பேறு உறுதியாக கிட்டும் என்பது அனைவரும் அறிந்ததே.

Dr. தோமஸ்

தொகுப்பு அனுஷா.

தகவல் : சென்னை அலுவலகம்

http://www.virakesari.lk/article/20902

Link to comment
Share on other sites

யாரெல்லாம் இஞ்சி சாப்பிடக் கூடாது? #HealthAlert

ஞ்சி... செரிமானத்துக்கு உதவும் ஒரு மருத்துவ மூலிகை. அதே நேரத்தில் வயிறு சார்ந்த பிரச்னைகளுக்கு நல்லதொரு மருந்தாகச் செயல்படும். என்றாலும், சில நேரங்களில் இதைத் தவிர்ப்பது நல்லது. பொதுவாக, எல்லா மருந்துகளுக்குமே பக்கவிளைவுகள் இருப்பதுபோல, இஞ்சிக்கும் உண்டு. உண்மை... இஞ்சியை ஒருவர் அதிகம் உட்கொண்டால், இஞ்சியின் உறைதல் எதிர்ப்பின் காரணமாக வீக்கம், வயிற்றுப் பிரச்னைகள், இதயப் பகுதியில் எரிச்சல் போன்றவை ஏற்படும். ஒரு நாளைக்கு 4 கிராமுக்குமேல் சேர்க்கக்கூடாது என்றுகூட மருத்துவர்களால் பரிந்துரைக்கப்படுகிறது. ``பின்வரும் சில பாதிப்புகள் உள்ளவர்கள், உணவில் இஞ்சியைச் சேர்த்துக்கொள்ளாமல் இருப்பது உடல்நலனுக்கு நல்லது’’ என்கிறார் ஊட்டச்சத்து நிபுணர், பத்மினி.

இஞ்சி

கர்ப்பிணிகள்:

இஞ்சியிலிருக்கும் செரிமானத்துக்கு உதவும் சில சத்துகள் கர்ப்பிணிப் பெண்களுக்கு உகந்தது அல்ல. வயிறு சுருங்குதல் அல்லது குழந்தை குறைப்பிரசவத்தில் பிறக்க அது வழிவகை செய்யும். குறிப்பாக, பிரசவத் தேதி அருகிலிருக்கும் பெண்கள், இதைப் பயன்படுத்தவே கூடாது. காலைக் கடனில் சிக்கல் இருப்பவர்கள் மட்டும், மிகக் குறைந்த அளவில் சேர்த்துக்கொள்ளலாம்.ஊட்டச்சத்து நிபுணர் பத்மினி

ரத்தக் கோளாறு உடையவர்கள்:

இது ரத்த ஓட்டத்துக்கு உதவி செய்யும் என்பதால், பிளட் டிஸ்ஆர்டர் (Blood Disorder) எனப்படும் ரத்தக்கோளாறு இருப்பவர்கள், இதைப் பயன்படுத்துவதை முற்றிலுமாகத் தவிர்ப்பது நல்லது. உதாரணமாக, சர்க்கரைநோய், உடல்பருமன், இதயக்கோளாறு, ரத்த ஒழுக்கு (Hemophilia) இருப்பவர்கள், ரத்தம் உறைதல் (Blood clotting) பிரச்னை உள்ளவர்கள் இதைத் தவிர்ப்பது நல்லது.

கர்பிணிப் பெண்

சிகிச்சை ஏதேனும் எடுப்பவர்கள்:

சர்க்கரைநோய், உயர் ரத்த அழுத்தம், பீட்டா - பிளாக்கர், இன்சுலின் எடுத்துக்கொள்பவர்கள், இதயக்கோளாறுகளுக்கு சிகிச்சை எடுப்பவர்கள், ரத்தம் உறைதல் போன்றவற்றுக்கான மருந்து எடுத்துக்கொள்பவர்கள், இதை முற்றிலுமாகத் தவிர்க்க வேண்டும். (பொதுவாக இது ரத்த அழுத்தத்தைக் குறைக்கும் என்றாலும், உயர் ரத்த அழுத்தத்துக்காக மருந்து உட்கொள்பவர்கள் சேர்த்தால், சீரற்ற நிலை ஏற்படும்.) மூலிகை சிகிச்சை எடுத்துக்கொண்ட ஒருவர் இஞ்சியைச் சேர்த்துக்கொண்டால், இஞ்சியின் தன்மை அதிகரிக்கத் தொடங்கும். அதனால், ரத்த ஓட்டம் அதிகரிக்கும். இந்த நிலை, ரத்தம் உறைவதை முற்றிலுமாகத் தடுத்து, ரத்தப்போக்கை ஏற்படுத்தும்.

பித்தப்பைக் கல், குடல் பிரச்னை இருப்பவர்கள்:

பித்த நீர் சுரப்பதற்கு ஏதுவாக இருக்கும் என்பதால், பித்தப்பையில் கல் இருப்பவர்கள் இதைத் தவிர்க்க வேண்டும். முழுதாக இஞ்சியை இடிக்காமல்/ நசுக்காமல் சேர்த்துக்கொள்வது, குடலில் அடைப்பை ஏற்படுத்தும். அதனால் அல்சர் இருப்பவர்கள், இஞ்சியைத் தவிர்ப்பது நல்லது.

சர்க்கரை நோய்

ஆபரேஷன் செய்யப் போகிறவர்கள்:

ஏதாவது ஒரு நோய்க்கான சிகிச்சைக்காக ஆபரேஷன் செய்யத் தயாராகும் நபர்கள், இஞ்சியை உணவில் சேர்க்கக் கூடாது. ஏனெனில், இஞ்சி அதிக ரத்தப்போக்கை ஏற்படுத்தக்கூடும். ஆகவே, ஆபரேஷனுக்கு இரண்டு வாரங்களுக்கு முன்பிருந்தே இஞ்சியைத் தவிர்க்க வேண்டும்.

எடை குறைவாக இருப்பவர்கள்:

 

இஞ்சியில் இருக்கும் நார்ச்சத்துகள், வயிற்றில் பி.எச் நிலையை அதிகரிக்கும். மேலும், செரிமானத்துக்குத் தேவையான என்சைம்களை தூண்டியபடி இருக்கும். வயிற்றில் எரிச்சலை ஏற்படுத்தும். இது, விரைவாக உணவை செரித்துவிடும். இந்த நிலை தொடர்ந்தால், எடை இன்னமும் குறையத் தொடங்கும். கூடுதலாக, முடி உதிர்தல், மாதவிடாய்க் கோளாறுகள், தசைகளில் சத்துக் குறைதல் போன்றவை ஏற்படும்.

http://www.vikatan.com/news/health/92200-why-should-you-consider-not-eating-ginger-healthalert.html

Link to comment
Share on other sites

கண்களுக்குக் கீழ் வீக்கம்... தடுக்க 7 எளிய வழிமுறைகள்!

 

பொலிவாக இருப்பது, மிளிர்வது இவையெல்லாம் முக அழகுக்கு அவசியமானவை. ஆனால், முகத்துக்கே மிக முக்கியமான அம்சம் நம் கண்கள்தான். நம்மை யார் பார்த்தாலும் முதலில் கண்களைத்தான் பார்க்கிறார்கள். சிலருக்கு கண்களுக்குக் கீழ் சிறியதாகவோ, சற்று பெரியதாகவோ வீக்கம் இருக்கும். சமயத்தில் அந்த வீக்கம் நம்மைச் சோர்வானவராகவும் கவர்ச்சியற்றவராகவும், சோகமாக இருப்பவராகவும் பிறருக்குக் காட்டிவிடும். சரி... கண்ணுக்குக் கீழ் ஏன் வீக்கம் ஏற்படுகிறது, அதை எளிய முறையில் தடுப்பதற்கும் தீர்ப்பதற்குமான வழிமுறைகள் என்னென்ன... பார்க்கலாமா?

கண்களுக்குக் கீழ் வீக்கம்

பரம்பரை வழியில் சிலருக்கு கண்ணுக்குக் கீழ் வீக்கம் ஏற்படும். பெற்றோருக்கு அப்படி இருந்தால், பிள்ளைகளுக்கும் ஒரு குறிப்பிட்ட வயதில் அப்படி ஏற்படக்கூடும். இன்னும் சிலருக்கு

முதுமையை அடையும்போது தோல் சுருங்கி, கொழுப்புகள் எல்லாம் பைகள்போல் தேங்கி, கண்ணுக்குக் கீழ் வீக்கத்தை உண்டாக்கும். கண்ணுக்குக் கீழ் இருக்கும் செல்கள் தண்ணீரைத் தேக்கிவைக்கக்கூடியவை. எனவே, உப்பு அதிகமுள்ள உணவு அல்லது அலர்ஜியால் நீர் சேர்வது அதிகரித்து, அதன் காரணமாகவும் கண்ணில் வீக்கம் அதிகரிக்கும்.

சில நேரங்களில் வீக்கமான கண்கள், சிறுநீரகக் கோளாறுகளுக்கு அறிகுறியாகவும் இருக்கலாம். எனவே, சிறுநீரகக் கோளாறு ஏற்பட்டதற்கான அடிக்கடி சிறுநீர் கழிப்பது, அரிப்பு, வறண்ட சருமம், வீங்கிய கால்கள் மற்றும் பாதங்கள் போன்ற அறிகுறிகள் தென்பட்டால், உடனே மருத்துவரைத் தொடர்புகொள்வது நல்லது. கல்லீரல் நோய்களும் சிலருக்குக் கண்ணுக்குக் கீழ் வீக்கத்தை ஏற்படுத்தும். மேலும் கண் வீக்கத்தோடு தூக்கமின்மை, வறண்ட வாய், கண்கள், வயிற்று வலி, கிறுகிறுப்பு ஆகிய அறிகுறிகள் தென்பட்டால், உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும்.

ஆழ்ந்த உறக்கம்

பொதுவாக, கண்களுக்குக் கீழ் வீக்கம் வராமல் பாதுகாத்துக்கொள்ள சில வழிமுறைகளைப் பின்பற்றினாலே போதும். அவை...

ஆழ்ந்த உறக்கம் அவசியம்!

ஆழ்ந்த தூக்கம்தான் கண் வீக்கத்தில் இருந்து விடுதலை கொடுக்கும். தூங்கும் நேரம் ஒவ்வொருவருக்கும் அவரவர் பணிச்சூழல், வாழ்க்கை முறைக்கேற்ப மாறுபடும். ஆனால், ஒருவர் நாள் ஒன்றுக்கு ஏழிலிருந்து ஒன்பது மணி நேரம் வரை தூங்க வேண்டியது அவசியம். தினமும் தூங்குவதற்கான நேரத்தைத் திட்டமிட்டுக்கொண்டு அந்த குறிப்பிட்ட நேரத்திலேயே தூங்க முயற்சிக்க வேண்டும். தூங்குவதற்கு முன்னர் ஒரு குளியல் போடுவது, புத்தகம் படிப்பது போன்றவை நல்ல தூக்கத்தைக் கொடுக்கும்.

உப்பில் கவனம்!

உடலில் சேரும் அதிக உப்பு, கண்ணில் நீரைத் தேக்கி வைக்கக்கூடும். பொதுவாகவே நம் உணவு முறையில் அதிக உப்பு சேர்த்துக்கொள்வது பழக்கமாகிவிட்டது. ஆனால், ஒருவர் ஒரு நாளைக்கு ஐந்து அல்லது ஆறு கிராம் உப்பை மட்டும்தான் உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். இதுவும் கண்ணின் வீக்கம் ஏற்படாமல் தடுக்கும்.

உப்பு

ஈரத்துணி உதவும்!

கண்ணுக்குக் கீழ் குளிர்ச்சியான ஈரத்துணியை பத்தில் இருந்து இருபது நிமிடங்கள் வைத்திருக்கலாம். குளிர்ச்சியான தட்பவெப்பநிலை வீக்கத்தைக் குறைக்கச் செய்யும். ஐஸ் கட்டிகளை ஒரு துணியில் கட்டி, கண்ணுக்கு கீழ் வைக்கலாம்.

வெள்ளரிக்காய் துண்டு மகிமை!கண்களில் வெள்ளரி

வெள்ளரிக்காய்த் துண்டுகளை கண்ணின் வீக்கத்துக்குப் பயன்படுத்தலாம். வெள்ளரிக்காயை ஃபிரிட்ஜில் வைத்து அதை எடுத்து சிறு துண்டுகளாக நறுக்கிக்கொள்ளவும். பிறகு, கண்களை மூடிக்கொண்டு, இமைகளின் மேல் வெள்ளரிக்காய் துண்டுகளை சில நிமிடங்களுக்கு வைத்திருக்க வேண்டும். வெள்ளாரிக்காயில் இருக்கும் கேஃபிக் அமிலம் (Caffeic acid) மற்றும் ஆஸ்கார்பிக் அமிலம் (Ascorbic acid) கண்ணின் கீழ் சேரும் நீர்த் தேக்கத்தைக் குறைக்கும், வறண்ட சருமத்தைப் போக்கும். கண்ணுக்குக் கீழ் கருவளையம் இருந்தாலும் சரியாகிவிடும்.

தேநீர் பை காக்கும்!

தேநீரில் இருக்கும் டேனின்ஸ் (Tannins) இயற்கையாகவே சுருங்கும் தன்மைகொண்டது. கண்ணின் மேல் குளிர்ச்சியான தேநீர் பைகளை சில நிமிடங்கள் வைத்திருந்தாலும் வீக்கம் கொஞ்சம் கொஞ்சமாக சில நாள்களில் போய்விடும்.

வீக்கத்தை விரட்டுமே உயரமான தலையணை!

தலையை நேராக வைத்துப் படுப்பதால், புவி ஈர்ப்பு விசையில் அதிகத் தண்ணீர் கண்ணில் தேங்கிவிடும். அதனால், தலையை சற்று உயரமாக வைத்துக்கொண்டு தூங்குவது நல்லது. உயரமான தலையணை வைத்துத் தூங்கினால், காலையில் வீங்கிய கண்களுடன் கண்விழிக்க வேண்டியது இருக்காது.

உயரமான தலையணை

அலர்ஜி

அலர்ஜிகளும் கண் வீக்கத்துக்கு முக்கியமான காரணங்கள். முடிந்த வரை அலர்ஜிகள் ஏற்படுத்தும் தூசு, மகரந்தம், பூஞ்சை ஆகிய பொருள்களைத் தவிர்ப்பது நல்லது. மருத்துவர்கள் அலர்ஜிக்கு மருந்துகளும் கொடுப்பார்கள். அவற்றையும் பயன்படுத்தலாம்.

அழகான கண்கள்

இந்த வழிகளைக் கடைபிடித்தால், கண்ணின் வீக்கம் குறைந்து அழகான, பளிச்சிடும் கண்களைப் பெறலாம். முகமும் மலர்ச்சியோடு காணப்படும்.

http://www.vikatan.com/news/health/92391-7-simple-ways-to-prevent-puffy-eyes.html

Link to comment
Share on other sites

டீன் ஏஜ் பருவத்தினர் அவசியம் தவிர்க்கவேண்டிய 7 உணவுகள்!

 
 

இன்றைய இளைய தலைமுறையினரிடம், மூன்று வேளையும் சரிவிகித உணவு சாப்பிடும் பழக்கம் குறைந்து போய்விட்டது. காரணம், பசிக்கிற நேரத்தில்கூட, எண்ணெயில் வறுத்த உணவு, கண்ட நேரத்தில் நொறுக்குத்தீனி... என இஷ்டத்துக்கு எதையாவது உள்ளே தள்ளுவதுதான். ஃபாஸ்ட் ஃபுட் கலாசாரம் பரவலாகிவிட்ட, இந்த நாள்களில் பதப்படுத்தப்பட்ட, பேக் செய்த உணவுகளையே விரும்பிச் சாப்பிடுகிறார்கள் இளைஞர்கள்... அவை அவர்கள் உடல்நலத்துக்கு என்னென்ன கோளாறுகளை அள்ளித் தரப்போகின்றன என்பதை அறியாமல்!

டீன் ஏஜ் வயதினர் தவிர்க்க வேண்டிய உணவுகள் 

பொதுவாக, டீன் ஏஜ் என்னும் பருவ வயது, உடலின் வளர்ச்சிப் பருவம். இந்த வயதில், ஹார்மோன் சுரப்புகள் தொடங்கி, உடலின் அனைத்து வளர்ச்சிகளும் அதிகமாக இருக்கும். இதனால்தான் இந்தப் பருவத்தை `வளரிளம் பருவம்’ என்கிறோம்.

 

 

 

`இந்த வயதில், சிகரெட், மதுப்பழக்கம் போன்றவை மட்டுமே உடலுக்கு தீங்கு விளைவிக்கக்கூடிய பழக்கங்கள் அல்ல. ஆரோக்கியம் கெடுக்கும் உணவுகளைச் சாப்பிடுவதும் உடலுக்குத் தேவையான சத்துகளைக் கிடைக்காமல் செய்துவிடும். எதிர்காலத்தில் மிகப்பெரிய பாதிப்புகளையும் ஏற்படுத்தக்கூடும். குறிப்பாக, செரிமானப் பிரச்னைகள், உடல்பருமன், இதய நோய்கள் என உயிருக்கே உலைவைக்கக்கூடிய நோய்கள் உண்டாகக் காரணமாகிவிடும்’ என்று எச்சரிக்கிறார்கள் மருத்துவர்கள்.

இன்றைய தலைமுறையினர் ஆரோக்கிய உணவு என நம்பிச் சாப்பிடும் பலவற்றில் சர்க்கரை, சோடியம், நிறைவுற்ற கொழுப்பு என்னும் சாச்சுரேட்டட் (Saturated fat) போன்றவையே அதிகம் உள்ளன. `இவற்றைச் சாப்பிடுவதால், இளம் வயதிலேயே உயர் ரத்த அழுத்தம், சர்க்கரைநோய், இதய நோய்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கின்றன' என்கிறார்கள் மருத்துவர்கள். எனவே, தவிர்க்கவேண்டிய ஆரோக்கியத்தைக் கெடுக்கும் உணவுகள் எவை என்பதைப் பார்ப்போம்.

ஜங்க் புட் 
 

ஃப்ரெஞ்ச் ஃபிரைஸ்

ஃப்ரெஞ்ச் ஃபிரைஸ் செய்வதற்கு முதலில் உருளைக்கிழங்கின் தோலை சீவிவிடுவார்கள். அதனால், அதன் தோலில் உள்ள நார்ச்சத்துகள் நீங்கிவிடும். அதிக நேரம் எண்ணெயைக் கொதிக்கவைக்கும்போது, எண்ணெய் தன்னிடம் உள்ள நற்குணங்களை இழந்துவிடும். ஒரே எண்ணெயைப் பல முறை காய்ச்சி உணவுகளைத் தயாரிக்கப் பயன்படுத்தும்போது, இதன் தீமை பலமடங்கு உயரும். மேலும், இந்த முறையில் தயாராகும் ஃபிரெஞ்ச் ஃபிரைஸை அதிக அளவு சாப்பிட்டால், ரத்தத்தில் கெட்ட கொரஸ்ட்ரால் கூடி, நல்ல கொலஸ்ட்ரால் குறைந்து, ரத்தக் குழாய்களில் அடைப்பு ஏற்படுத்தி, இதய நோய் பாதிப்புக்கான அபாயத்தை அதிகரிக்கும்.

பிரெட் 

வெள்ளை பிரெட்

வெள்ளை பிரெட்டில் ஊட்டச்சத்துக்கள் மிகவும் குறைவு. அதே சமயம் இதில் சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரை உள்ளது. இது, உடலுக்குத் தீங்கானது. மேலும், வெள்ளை பிரெட் மைதாவால் தயாரிக்கப்படுவதால், இதை உட்கொண்டால் செரிமான பிரச்னைகள், புற்றுநோய் ஆபத்தும் ஏற்பட வாய்ப்புள்ளது.

குளிர்பானங்கள்

குளிர்பானங்கள்

இளைஞர்களுக்கு குளிர்பானங்கள் குடிப்பது ஸ்டைல், ஃபேஷன்! ஆனால், எத்தனையோ பேரின் வரவேற்பைப் பெற்றிருக்கும் குளிர்பானங்களால் துளி அளவுகூட உடலுக்கு ஆரோக்கியப் பலன் இல்லை என்பதே கசப்பான உண்மை. இதில் சேர்க்கப்பட்டுள்ள செயற்கையான சுவையூட்டிகளும், அளவுக்கு அதிகமான சர்க்கரையும் பற்களைப் பதம் பார்ப்பதுடன், உடலின் செரிமான உறுப்புகளையும் பாதித்துவிடும்.

டின்

டின் சூப்

வீட்டில் தயாராகும் சூப் மிகவும் நல்லது. அதேநேரத்தில், டின்னில் அடைத்து விற்கப்படும் சூப்பில் அதிகளவு சோடியம் சேர்க்கப்பட்டிருக்கும். குறிப்பாக, ஒரு சிறிய கேன் சிக்கன் சூப்பில் ஒரு நாளுக்குத் தேவையான சோடியத்தைவிட அதிகளவு சோடியம் இருக்கும். இதனால் உயர் ரத்த அழுத்தம் ஏற்படலாம். அதேபோல தெருவோரக் கடைகளில் விற்கப்படும் சூப்களைத் தவிர்த்துவிடுவதே நல்லது.

பரோட்டா 

பரோட்டா

 பரோட்டாக்கள் பெரும்பாலும் மைதாவில்தான் தயாரிக்கப்படுகின்றன. கோதுமைக் கழிவுகள்தான் மைதா உற்பத்தியின் மூலப்பொருள்கள். மைதாவை வெள்ளை நிறமாக மாற்ற, அதிக அளவில் வேதிப்பொருள்கள் சேர்க்கப்படுகின்றன. குறிப்பாக, மைதாவில் இருக்கும் அல்லோக்ஸான், பென்சாயில் பெராக்ஸைடோடு இணைந்து நம் உடலுக்குக் கேடு விளைவிக்கிறது. இது பென்சுலின் சுரப்பைப் பாதித்து, சர்க்கரைநோய் ஏற்பட வழிவகுக்கும். மேலும், செரிமானம் உள்பட உடல்நலப் பிரச்னைகள் ஏற்படவும் காரணமாகிவிடும்.

பேக்கரி உணவுகள் 

நொறுக்குத்தீனிகள், பேக்கரி உணவுகள்

உருளைக்கிழங்கு சிப்ஸ் போன்ற எண்ணெயில் வறுத்த உணவுகளிலும், சீஸ் பப்ஸ் போன்ற பேக்கரி உணவுகளிலும் நம் உடல் செரிமானத்துக்கு உதவும் நார்ச்சத்தோ, உடல் ஆரோக்கியத்துக்குத் தேவையான ஊட்டச்சத்துகளோ கிடையாது. இவை கொழுப்புகள் நிறைந்தவை. இவற்றை அதிகமாகச் சாப்பிடுவதால், செரிமானப் பிரச்னைகளும் வயிற்றுக்கோளாறுகளும் உண்டாகும். இவை, பசியை மட்டுப்படுத்துவதால், சத்துள்ள உணவுகளைச் சாப்பிடுவதில் நாட்டம் குறைந்து போகும்.

பால் 

அதிகக் கொழுப்பு உள்ள பால் பொருள்கள்

பால் பொருள்களில் அதிகளவு கால்சியம் உள்ளதால், இவை எலும்புகளுக்கு நல்லது என்பதை அறிவோம். அதேநேரத்தில், வெண்ணெய், கொழுப்பு நீக்கப்படாத பால், ஐஸ் க்ரீம், சீஸ் போன்றவற்றில் உள்ள அதிகப்படியான நிறைவுற்ற கொழுப்புகள் என்னும் சாச்சுரேட்டட் கொழுப்புகள் (saturated fats) இதய நோய்கள் ஏற்பட காரணமாகின்றன. இவற்றையும் தவிர்க்கலாம்.

ஆரோக்கிய நெறுக்குத் தீனிகள்

இந்த உணவுகளை எப்படித் தவிர்ப்பது?

ஆரோக்கியமான சரிவிகித உணவு கலந்த உணவுப்பழக்கம், காலை உணவைத் தவிர்க்காமல் சாப்பிட்டுவிடுவது, நேரத்துக்கு உணவை உண்பது போன்றவை நொறுக்குத்தீனியைத் தேடிப் போவதற்கான தேவையைக் குறைக்கும். மாலை வேளைகளில் சுண்டல், பயறு வகைகள் போன்றவற்றைச் சாப்பிடலாம்.

இரண்டு உணவு வேளைக்கு இடைப்பட்ட நேரத்தில், பழச் சாறு, இளநீர், மோர் போன்று ஏதாவது ஓர் இயற்கை பானத்தை அருந்தலாம். இந்தப் பழக்கம், நொறுக்குத்தீனி சாப்பிட வேண்டும், குளிர்ப்பானங்கள் அருந்த வேண்டும் என்ற உணர்வைக் குறைக்க உதவும்.

பாதாம் முந்தரி 

 

நூடுல்ஸ், பாப்கார்ன், கோலா பானங்கள், ஃபிரெஞ்ச் ஃபிரைஸ், சிப்ஸ் போன்றவற்றைத் தவிர்த்துவிட்டு, பொரி உருண்டை, வேர்க்கடலை, கடலை மிட்டாய், எள்ளு மிட்டாய் போன்றவற்றை வாங்கிச் சாப்பிடலாம். பேரீச்சம்பழம், திராட்சை, வாழைப்பழம், ஃப்ரூட் சாலட், பாதாம், முந்திரி போன்ற நட்ஸ் வகைகள் போன்றவற்றைச் சாப்பிடுவதையும் வழக்கமாக்கிக்கொள்ளலாம்.

http://www.vikatan.com/news/health/92447-teens-should-avoid-these-7-foods.html

Link to comment
Share on other sites

கர்ப்பகாலத்தில் தாம்பத்யம், அசைவம் சரியா? - ஆயுஸ் கையேட்டுக்கு மருத்துவரின் விளக்கம்

 
 

கர்ப்பிணி

த்திய யோகா மற்றும் நேச்ரோபதி கவுன்சில் (ஆயுஷ்) கர்ப்பிணிகள் பின்பற்றவேண்டிய வழிகாட்டுதல் நெறிமுறைகள் அடங்கிய கையேட்டை வெளியிட்டுள்ளது. அதில், `கர்ப்பிணிகள் அசைவம் சாப்பிடக் கூடாது. கோபப்படக் கூடாது. ஆசைப்படக் கூடாது. கர்ப்பக் காலத்தில் கணவன் - மனைவி தாம்பத்தியம் வைத்துக்கொள்ளக் கூடாது. பெட்ரூமில் அழகான படங்களை மாட்டி வைத்துக்கொண்டு, பார்த்துக்கொண்டு இருக்க வேண்டும். நல்ல புத்தகங்கள் படிக்க வேண்டும். பிரார்த்தனை பண்ண வேண்டும். நல்ல இசை கேட்க வேண்டும்' என்பது உட்பட பல்வேறு வழிமுறைகள் வழங்கப்பட்டுள்ளன. இந்த வழிமுறைகளைப் பின்பற்றினால் அழகான, ஆரோக்கியமான குழந்தை பிறக்கும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதே போல் கடந்த மாதம் ஆரோக்கிய பாரதி (ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் மருத்துவ அணி) சார்பாக ஒரு பயிற்சிப் பட்டறை நடத்தப்பட்டது. அதில் அழகான, உயரமான, அறிவான குழந்தைகளைப் பெற ஜெர்மனியின் ஆயுர்வேதா முறையை பின்பற்ற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. அதன்படி, குறிப்பிட்ட கிரகங்கள் ஒன்று சேரும் நேரத்தில் மட்டும் கணவன் - மனைவி தொடர்ந்து 3 மாதங்கள் தாம்பத்திய உறவில் ஈடுபட வேண்டும். இதனால் உடனே கருத்தரித்து, அழகான, உயரமான ஆரோக்கியமான குழந்தையைப் பெற முடியும். கருத்தரித்ததில் இருந்து குழந்தை பிறக்கும் வரை தாம்பத்திய உறவு வைத்துக்கொள்ளக் கூடாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
சமூகம் தழைத்தோங்க ஆண் - பெண் உறவு என்பது அவசியமான ஒன்று. பசி, தாகம் போல் தாம்பத்தியம் என்பது ஆணுக்கும், பெண்ணுக்கும் ஏற்படும் அத்தியாவசியமான உணர்வு. நம் முன்னோர்கள் கர்ப்ப காலத்தில் தாம்பத்திய உறவு அவசியம்; அதன் மூலம் சுகப்பிரசவம் ஆகும் என வலியுறுத்தியுள்ளனர். `இந்த நேரத்தில்தான் உறவுகொள்ள வேண்டும். கர்ப்ப காலத்தில் உறவுகொள்ளக் கூடாது' என்று சொல்வதும், கர்ப்ப காலத்தில் பெண்களுக்கு தாம்பத்திய ஆசை ஏற்படுவதை தண்டனைக்குரிய குற்றம் போல் சித்திரிப்பதும்... விந்தையாக உள்ளது. ஏற்கெனவே மனைவியுடன் கணவன் பலவந்தமாக உடலுறவுகொள்வது குற்றமாகப் பார்க்கப்படுவது இல்லை. இச்சூழலில் கருத்தரித்த நாளில் இருந்து பெண் உறவுகொள்ளக் கூடாது என்பது தனி மனித உரிமைக்கு விரோதமாகவும், பெண்களுக்கு எதிராகவும் உள்ளது. 


தாம்பத்தியம்``கர்ப்ப காலத்தில் பெண்கள் கண்டிப்பாக மாமிசம் சாப்பிடக் கூடாது; தாம்பத்தியம் கூடாது என்பது சொல்வது முற்றிலும் பிற்போக்குத்தனம்'' என்று கூறுகிறார், மதுரை மகப்பேறு மருத்துவர் மற்றும் இந்திய மருத்துவ கவுன்சில் மாநில உறுப்பினர் மீனாம்பாள்....

‘‘கர்ப்ப காலத்தில் தாய்க்கும், குழந்தைக்கும் தேவையான ஊட்டச்சத்துக்கள் எல்லாம் சாப்பிடுகிற உணவு மூலமாகவேத்தான் கிடைக்கின்றன. இந்தச் சமயத்துல கர்ப்பிணிகள் அதிகளவுல இரும்புச்சத்து, கால்சியம் நிறைந்த உணவு சாப்பிட வேண்டும். காய்கறிகளைவிட மாமிசத்துல அதிக அளவில் இந்தச் சத்துகள்  இருக்கின்றன. காய்கறிகளில் கிடைக்காத நிறைய சத்துகள் மாமிசத்துல மட்டும்தான் இருக்கின்றன. அதனால கர்ப்பிணிகளை  புரோட்டீன், இரும்புச்சத்து அதிகமுள்ள மாமிச உணவுகளைச் சாப்பிடச் சொல்வோம். காய்கறிகளைவிட மாமிசம் சாப்பிடறப்ப எளிதாக சத்துக்களை உடல் உறிஞ்சும். அதனால கர்ப்ப காலத்தில் பெண்கள் காய்கறிகளோட இறைச்சி, மீன், முட்டை, பால் எல்லாம் கண்டிப்பா சேத்துக்கிறது அவசியம்’’ என்றவர் கர்ப்ப காலத்தில் தாம்பத்திய உறவின் அவசியம் பற்றியும் விவரித்தார்... 

‘‘கர்ப்ப காலத்துல தாம்பத்திய உறவே கூடாதுனு சொல்றதை ஏத்துக்க முடியாது. கர்ப்பம் உறுதியானதும் ஒரு மாசம் ரொம்ப ஹார்ஷா வேணாம்னு கொஞ்சம் அவாய்ட் பண்ண சொல்வோம். அதுக்கப்பறம் பொண்ணுக்கு எந்த காம்ப்ளிகேஷனும் இல்லேனா எப்பவும் போல கம்ஃபர்டபிளா தாம்பத்திய உறவு வெச்சுக்கலாம். தாம்பத்திய உறவால குழந்தைக்கு எந்தப் பாதிப்பும் வராது. குழந்தை நல்ல பாதுகாப்பா அம்மாவோட பனிக்குடத்துலதான் வளருது. கர்ப்பமா இருக்குற பொண்ணு உடல் அளவுல சௌகரியமா பீல் பண்ணினா அதுக்கேத்தமாதிரி இரண்டு பேரும் ஃபாலோ பண்ணிக்கணும். 

சில பெண்களுக்கு அடிக்கடி அபார்ஷன் ஆகியிருக்கும். சிலருக்கு நச்சுக்கொடி கீழ் நோக்கி இறங்கி இருக்கும், சிலருக்கு கர்ப்பவாய் பிரசவிக்கிற காலத்துக்கு முன்னாடியே திறந்திருக்கும். இந்த மாதிரி சில உடலளவுல பிரச்னை இருக்கறவங்களை சில குறிப்பிட்ட காலம் மட்டும் தாம்பத்திய உறவை தவிர்க்கச் சொல்லுவோம். இது தவிர எச்.ஐ.வி நோயாளிகள் கண்டிப்பாக தாம்பத்திய உறவை தவிர்க்கணும். சில இன்ஃபெக்‌ஷன் இருக்கிறவங்களும் குறிப்பிட்ட காலம் தாம்பத்திய உறவை  தவிர்க்கணும். கர்ப்ப காலத்துல பெண்கள் ஆரோக்கியமான சாப்பாட்டோடு, மன அழுத்தம் இல்லாம, கணவன் - மனைவி ஒருத்தருக்கு ஒருத்தர் அன்பா, அனுசரணையா இருக்குறது அவசியம். கணவன் - மனைவிக்கு இடையே தாம்பத்தியம் அதிகளவுல பாசப்பிணைப்பை ஏற்படுத்தும். கர்ப்ப காலத்துல அரசோட இந்த நெறிமுறைகளை தவிர்த்துட்டு ஒவ்வொருத்தரும் அவங்க செக்கப் போற டாக்டர்கள் என்ன சொல்றாங்களோ அதை ஃபாலோ பண்ணினாலே நல்ல ஆரோக்கியமான குழந்தையைப் பெத்தெடுக்கலாம்...'' 

என நம்பிக்கை ஊட்டுகிறார் டாக்டர் மீனாம்பாள். 

http://www.vikatan.com/news/health/92610-ayush-booklet-saying-not-to-have-meat-and-sex-during-pregnancy-is-it-correct.html

Link to comment
Share on other sites

வாரத்தில் ஒரு முறையாவது அவசியம் தவிர்க்கக் கூடாத 10 உணவுகள்!

 

மனிதனின் அடிப்படைத் தேவைகளில் ஒன்று உணவு. அதே நேரத்தில், நோய் இல்லாமல், ஆரோக்கியமாக வாழ உணவுகள் சத்துள்ளதாக இருக்கவேண்டியதும் அவசியம். ஆனால், நாகரிகம் என்ற பெயரில் மேற்கத்திய மோகம், சத்துகளை மறந்து சுவைக்கு முக்கியத்துவம் கொடுக்கவைத்துவிட்டது. அதனால், உடலுக்கு அத்தியாவசியமாகக் கிடைக்கவேண்டிய சத்துகள் கிடைக்காமல் போய்விடுகின்றன. இதனால், சத்துக் குறைபாடு, உடல்நலக் குறைபாடுகள் தொடங்கி, ஆரோக்கியமும் பாதிக்கப்படுகிறது.

உணவுகள் 

இது ஒருபக்கம் இருக்க, உடலுக்குத் தேவையான சத்துகள் கிடைக்க வேண்டும் என்று அதிக உணவைச் சாப்பிடுவதும், சரிவிகித உணவுகளைச் சாப்பிடும் பழக்கம் இல்லாததும் உடற்பருமன், சர்க்கரைநோய் எனப் பல்வேறு நோய்கள் உண்டாகக் காரணமாகி விடுகின்றன. `இதற்குக் காரணம், எந்த உணவில் என்னென்ன சத்துகள் உள்ளன, உடலுக்கு அத்தியாவசியமான சத்துகள் எவை என்பது குறித்த விழிப்புஉணர்வு இல்லாமல் இருப்பதுதான்’ என்கிறார்கள் மருத்துவர்கள். எனவே, குறிப்பிட்ட சில உணவுகளைக் குறைந்தபட்சம் வாரம் ஒருமுறையாவது அவசியம் சாப்பிட வேண்டும். அதன் மூலம் உடலுக்குத் தேவையான சத்துகளைப் பெறமுடியும். அவை எந்தெந்த உணவுகள் என்பதைப் பார்ப்போம். 

யோகர்ட் 

யோகர்ட்
எலும்பு, பற்கள் வலிமை பெற கால்சியம் சத்து அவசியம். பால் பொருள்களில்தான் இது அதிகளவு உள்ளது. சிலருக்கு பால் பொருள்களில் கொழுப்பு நீக்கப்பட்ட யோகர்ட் அனைவருக்கும் ஏற்றது. அதேபோல் தயிரைத் தினமும் சேர்த்துக்கொள்ளக் கூடாது. எனவே, கால்சியம் கிடைக்க தினமும் ஒரு கப் யோகர்ட் சாப்பிடலாம். மேலும், உடலுக்கு அத்தியாவசியமான பாஸ்பரஸ், பொட்டாசியம், துத்தநாகம், ரிபோஃப்ளாவின், வைட்டமின் பி12 மற்றும் புரதச்சத்தும் உள்ளன. காலை, மாலை என யோகர்ட்டை பகல் நேரத்தில் எப்போது வேண்டுமானலும் உட்கொள்ளலாம். யோகார்ட் மூலமாக 100 கலோரிகள் கிடைக்கும்; கால்சியம், வைட்டமின் டி நிறைவாக உள்ள சிறந்த உணவு இது.

ஆளி விதைகள் 

ஆளி விதைகள்
இந்தச் சிறிய விதையில் பெரிய பலன்கள் உள்ளன. ஆளி விதைகளில் ஒமேகா 3 ஃபேட்டி அமிலம் உள்ளது. இதில் பாலிஅன்சாச்சுரேட்டடு கொழுப்புகள் உள்ளன. இதில் நார்ச்சத்து நிறைவாக உள்ளது. நாம் சாப்பிடும் உணவு அல்லது நொறுக்குத்தீனிகளில் இதை உடன் சேர்த்துக்கொண்டால் எளிதில் செரிமானமாகும். குறிப்பாக, குழந்தைகள் இதைத் தனியாகச் சாப்பிட விரும்ப மாட்டார்கள். எனவே, அவர்கள் விரும்பிச் சாப்பிடும் ஓட்ஸ், தயிர், சாலட், சாண்ட்விச் போன்றவற்றில் இந்த விதைகளைக் கலந்து கொடுக்கலாம்.

முட்டை 

முட்டை
புரதச்சத்துதான் ஆரோக்கியத்துக்கும் உடல் வளர்ச்சிக்கும் அடிப்படையானது. முட்டை மிகச் சிறந்த புரதச்சத்துள்ள உணவு. இதை அடிக்கடி உணவிலோ அவித்தோ, பொரியல், ஆம்லெட் என எந்த வகையிலாவது சாப்பிட்டுவருவது நல்லது. தினமும் காலையில் ஒரு முட்டை சாப்பிட்டால், அதில் உள்ள அதிகப்படியான புரோட்டீன் மற்றும் ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட் நாள் முழுவதும் உடலை ஆரோக்கியத்துடன் வைத்துக்கொள்ளும்.

பீன்ஸ்
பீன்ஸில் ஆன்டிஆக்ஸிடன்ட்டுகள், புரோட்டீன், நார்ச்சத்து, பி காம்ப்ளக்ஸ், கார்போஹைட்ரேட், வைட்டமின்கள் உள்ளன. மேலும், இரும்புச்சத்து, மாங்கனீஸ், பாஸ்பரஸ் மற்றும் மக்னீசியம், தாமிரம் போன்ற தாதுச்சத்துகளும் நிறைவாக இருப்பதால், இது உடலில் ஊட்டச்சத்துக் குறைபாடு ஏற்படுவதை‌த் தடுத்து, ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள உதவும். 

நட்ஸ் 

நட்ஸ்
நட்ஸ் அனைத்திலுமே வைட்டமின்களும் கனிமச்சத்துகளும் நிறைந்த உணவு. இதில் மோனோ அன்சாச்சுரேட்டடு கொழுப்பு அமிலம் உள்ளது. இது நல்ல கொழுப்பான ஹெச்.டி.எல் அளவை அதிகரிக்க உதவுகிறது. இதனால் இதய நோய்கள் மற்றும் ரத்தக் குழாய் அடைப்பால் ஏற்படக்கூடிய பக்கவாதம் வருவதற்கான வாய்ப்புகள் குறைகிறது. அன்றாடம் 10 கிராம் என்ற அளவிலாவது சாப்பிடுவது நல்லது. 

ஆரஞ்சு 

பூசணி விதைகள்
பூசணிக்காயில் உள்ள சத்துகளைப் போலவே பூசணிக்காய் விதையிலும் ஏராளமான சத்துகள் நிறைந்துள்ளன. குறிப்பாக, நார்ச்சத்து, வைட்டமின்கள், தாதுப்பொருள்கள் மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உள்ளன. எனவே, நாம் பூசணிக்காய் விதையைக் காயவைத்து, பொடியாகவோ அப்படியேவோ நமது அன்றாட உணவில் சேர்த்துக்கொள்ளலாம்.

ஆரஞ்சு
ஆரஞ்சு பழத்தில் வைட்டமின் சி அதிகம் உள்ளது. ஆரஞ்சு போன்ற சிட்ரஸ் பழங்களைச் சாப்பிட்டால், அது எண்ணிலடங்கா ஆற்றலை உடலுக்குக் கொடுக்கும். மேலும், இந்தப் பழங்கள் செரிமானத்துக்குச் சிறந்தது. அதோடு, இதில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உடலில் உள்ள நச்சுகளை வெளியேற்றும். தினசரி ஒரு ஆரஞ்சை பழமாகவோ ஜூஸாகவோ சாப்பிட்டுவருவது நல்லது. ஒரு கிளாஸ் ஆரஞ்சு பழச் சாற்றுடன் அன்றைய நாளைத் தொடங்குவது கூடுதல் பலன்.

சர்க்கரை வள்ளிக் கிழங்கு 

சர்க்கரைவள்ளிக்கிழங்கு
சர்க்கரைவள்ளிக்கிழங்கில் உள்ள வைட்டமின் ஏ சத்திலிருந்து கிடைக்ககூடிய ஆல்பா மற்றும் பீட்டா கரோட்டீன் கண்கள், எலும்பு ஆரோக்கியத்துக்கு அவசியமானவை. இந்தக் கிழங்கை அப்படியே அல்லது வேகவைத்துச் சாப்பிடலாம்.

பெர்ரி பழங்கள்
ஸ்ட்ராபெரி போன்ற அனைத்து வகை பெர்ரி பழங்களிலும் அதிகளவு நார்ச்சத்து உள்ளன. டயட்டில் இருப்பவர்களின் செரிமானத்தை ஊக்குவிக்க மிகச் சிறந்த உணவு. ஒரு காலை உணவின் ஆரோக்கியம் அதிகரிக்க, அதில் சில செர்ரி பழங்களைச் சேர்த்துக்கொள்ளலாம். 

கீரைகள் 

 

கீரை வகைகள்
கீரை வகைகளில் குறைந்த அளவு வைட்டமின் ஏ-யும் வைட்டமின் சி மற்றும் கே அதிக அளவிலும் உள்ளன. உடலுக்குத் தேவையான தாதுசத்துகளான இரும்புச்சத்து, கால்சியம், பொட்டாசியம், மக்னீசியம், வைட்டமின் இ ஆகியவையும் உள்ளன. தினமும் ஒரு கீரையை உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். முடியாத பட்சத்தில் வாரம் இரு முறையாவது கீரையைச் சாப்பிடவேண்டியது அவசியம். கீரையுடன் பூண்டு சேர்த்துகொள்வது சுவையைக்கூட்டும். கூடுதல் மருத்துவப் பலன்களையும் தரும்.

http://www.vikatan.com/news/health/93084-every-man-should-eat-these-foods-at-least-once-a-week.html

Link to comment
Share on other sites

முகத்துக்கு அழகு, பொலிவு, களை அள்ளித்தரும் ஸ்பூன் மசாஜ்!

 

யில் மசாஜ் கேள்விப்பட்டிருப்பீங்க... காபி மசாஜ் கேள்விப்பட்டிருப்பீங்க... ஏன் பாம்பு மசாஜ்கூட கேள்விப்பட்டிருப்பீங்க... ஆனா ஸ்பூன் மசாஜ் கேள்விப்பட்டிருக்கீங்களா? இது நம்ம ஊர் கண்டுபிடிப்பில்லை. ஜெர்மன்ல உள்ள ஆராய்ச்சியாளர்கள் இந்த ஸ்பூன் மசாஜைக் கண்டுபிடிச்சிருக்காங்க. முகம் பொலிவு பெற, அழகாக இந்த மசாஜ் உதவும். அதைப் பற்றிப் பார்ப்போமா..?

ஸ்பூன் மசாஜ்

ஸ்பூன் மசாஜ் செய்யும் முறை

* முதலில் இரண்டு ஸ்டீல் கரண்டி, இளஞ்சூடான ஆலிவ் அல்லது சூரியகாந்தி எண்ணெய், ஒரு டம்ளர் குளிர்ந்த நீர் மற்றும் சிறிதளவு ஐஸ் கட்டியை எடுத்துக்கொள்ள வேண்டும்.

* மசாஜ் செய்வதற்கு முன்னர் முகத்தை நன்றாகக் கழுவிக்கொள்ள வேண்டும். பிறகு மாய்ஸ்ச்சரைசர் க்ரீமை சருமத்தில் பூச வேண்டும். இப்படி சருமத்தில் அழுத்தும்போது ஸ்பூனில் ஒட்டாமல் இருக்கும்.

* ஸ்பூனை எத்தனாலில் நனைத்து, ஐஸ்கட்டி சேர்த்து குளிர்ந்த நீரில் மூழ்கவைக்க வேண்டும்.

* எப்போது ஸ்பூன் குளிர்ந்தநிலையை, அடைகிறதோ அப்போது அதை எடுத்து மேற்புறக் கண்ணிமையின் மேல் சில நிமிடங்கள் வைக்க வேண்டும். இதேபோன்று இரு கண்களிலும் ஐந்து முறை செய்ய வேண்டும். ஒருவேளை ஸ்பூன் சூடானநிலைக்கு வந்துவிட்டது என்றால், மறுமுறை குளிர்ந்த நீரில் நனைத்துக்கொள்ள வேண்டும். இது கண்ணில் ஏற்படுகின்ற பிரச்னைகளுக்குத் தீர்வாக அமையும்.

* அதன் பின்னர் ஸ்பூனை எண்ணெயில் மூழ்க வைத்துக்கொள்ள வேண்டும். பின்னர் முகச் சுருக்கங்களில் ஸ்பூனை வைத்து மெதுவாக அழுத்த வேண்டும்.

* தலையிலிருந்து கழுத்து வரை மெதுவாக ஸ்பூனைக் கொண்டு மசாஜ் செய்ய வேண்டும்.

* கண்களின் மேற்புறத்திலும் கீழ்புறத்திலும் ஸ்பூனை வைத்து வட்டமாக அழுத்த வேண்டும்.

* இதேபோல் மூக்கிலிருந்து கன்னம் வரையும், கன்னத்திலிருந்து கழுத்து வரையும் பின்னர் மீண்டும் கழுத்திலிருந்து கன்னம் வரையும் மசாஜ் செய்ய வேண்டும்.

முகம் கழுவுதல்

மசாஜ் செய்யும்போது கடைப்பிடிக்க வேண்டிய விஷயங்கள்...

* ஸ்பூன் மசாஜ் செய்யும்போது ஒவ்வொரு பயிற்சியையும் குறைந்தது பத்து நிமிடங்களாவது செய்ய வேண்டும்.

* எப்போது உங்கள் ஸ்பூன் குழைவாக வழுக்கும்படி இல்லை என்று தெரிகிறதோ, அப்போது ஸ்பூனை எண்ணெயில் நனைத்துக்கொள்ள வேண்டும்.

* மசாஜ் செய்து முடித்தவுடன் சுத்தமான நீரில் முகத்தை நன்கு கழுவ வேண்டும்.

* முதல் நாள் மசாஜ் செய்யும்போது, ஒன்று அல்லது இரண்டு நிமிடங்கள் வரை செய்ய வேண்டும். பிறகு, கொஞ்சம் கொஞ்சமாக பயிற்சி நேரத்தை அதிகப்படுத்திக்கொள்ள வேண்டும்.

பத்து முதல் பன்னிரண்டு நிமிடங்களில் பயிற்சியை நிறுத்திக்கொள்ள வேண்டும்.

பளபளப்பான முகம்

ஸ்பூன் மசாஜ் செய்வதால் ஏற்படும் நன்மைகள்...

* ரத்த ஓட்டத்தை அதிகரிக்க உதவும்.

* தோல் சுருக்கத்தை நீக்கும்.

* முகம் மிருதுவாகவும் பளபளப்பாகவும் இருக்கும்.

 

* பன்னிரண்டு நாள்களிலேயே இது நல்ல பலனைக் கொடுக்கும்.

http://www.vikatan.com/news/health/92429-benefits-of-spoon-massage.html

Link to comment
Share on other sites

அல்சர் உள்ளவர்கள் அவசியம் தவிர்க்கவேண்டிய உணவுகள், பானங்கள்!

மாறிவரும் உணவு முறை நமக்கு நல்லதைச் செய்கிறதோ இல்லையோ, விதவிதமான நோய்களைக் கரம்பிடித்து அழைத்து வந்து நம்மிடம் சேர்க்கிறது. அவற்றில் முக்கியமான ஒன்று, `பெப்டிக் அல்சர்’ எனச் சொல்லப்படும் வயிற்றுப்புண்.

அல்சர்

‘அனுபவித்தவர்களுக்குத்தான் அல்சரின் வேதனை புரியும்’. சாப்பிட வேண்டும் என ஆசை இருந்தாலும், சரியாகச் சாப்பிட முடியாது. வலி படுத்தி எடுத்துவிடும். இது உணவுக்குழாய், இரைப்பை மற்றும் சிறுகுடலின் உட்சுவரில் உருவாகும் ஒருவகைப் புண். இது பாதிக்கப்பட்டவரைப் பலவிதத் தொந்தரவுகளுக்கு ஆளாக்கும். ஆன்டாசிட்கள் (Antacids) அல்லது ஆன்டிபயாட்டிக்ஸ்களைப் (Antibiotics) பயன்படுத்தி இதன் வீரியத்தைக் குறைக்கலாம்; அல்சர் வருவதற்கான அறிகுறிகள் தெரியும்போதே தடுக்கலாம்.

அல்சரால் பாதிக்கப்பட்டவர்கள் எந்த வகை உணவுகளைச் சாப்பிடலாம், எவற்றைச் சாப்பிடக் கூடாது என்பதைத் தெரிந்துவைத்திருக்க வேண்டும். உணவுப் பழக்கத்தில் கவனமாக இருந்தாலே அல்சர் பிரச்னையில் இருந்து எளிதாக விடுபட்டுவிடலாம். உணவுகளில் கவனமாக இருந்தால், செரிமானமின்மை, வாயுத்தொல்லை, வாந்தி எடுத்தல், உணவைப் பார்த்தாலே அருவருப்பாக உணர்தல் ஆகியவை தவிர்க்கப்படும். வயிற்றில் ஏற்படும் கடுமையான எரிச்சல் உணர்வையும் இதனால் தடுத்துவிடலாம். அல்சர் உள்ளவர்கள் அவசியம் தவிர்க்கவேண்டிய உணவுகள், பானங்கள் என்னென்ன?

ஆல்கஹால்

‘குடி குடியைக் கெடுக்கும்’ என்பது குழந்தைக்குக்கூடத் தெரியும். இன்றைக்கு அந்த அளவுக்கு நம்மிடையே குடிப்பழக்கம் குறித்த விழிப்பு உணர்வு ஏற்பட்டிருக்கிறது. தொடர்ந்து மதுப்பழக்கம் உள்ள ஒருவருக்கு, பலவகை நோய்களுடன் அல்சரும் வந்து சேரும். ஏற்கெனவே அல்சர் இருப்பவர்கள் மது இருக்கும் பக்கம் திரும்பிப் பார்க்கவே கூடாது. குடிப்பழக்கத்தால் நம் வயிற்றில் அமிலம் மேலும் மேலும் அதிகரிக்கத்தான் செய்யும்.

காரமான உணவுகள்

அல்சருக்கு ஆகவே ஆகாதது காரம். காரமான உணவுகளும் அதிக மசாலா சேர்த்த உணவுகளும் அமிலத்தின் அளவை அதிகரிக்கும். எதுக்களிப்பை ஏற்படுத்தும். அதனால் வயிற்றின் ஓரங்கள் எல்லாம் பாழாகும். ஏற்கெனவே அல்சர் இருப்பவர்களின் நிலை இன்னும் மோசமாக மாறிவிடும். எனவே, அதிகம் மிளகாய்த்தூள், மிளகாய் சேர்த்த உணவுகளைத் தவிர்ப்பது நல்லது. 

காபி 

காபி

நீங்கள் ஒரு காபி பிரியரா? கண்டிப்பாக நீங்கள் இதைத் தெரிந்துகொள்ள வேண்டும். ‘தொடர்ந்து காபி குடிப்பதாலும் பெப்டிக் அல்சர் ஏற்படும்’ என்கிறது நவீன மருத்துவம். காபிக்குப் பதிலாக, வயிற்றுக்கு இதம் தரும் மாதுளை ஜூஸ், ஆப்பிள் ஜூஸ் போன்ற வேறு ஏதேனும் பானங்களை அருந்தலாம். இவற்றால் வயிற்றுப் புண் ஆறவும் வாய்ப்புள்ளது. 

சிவப்பு இறைச்சி

சிவப்பு இறைச்சி வயிற்றுப் புண்ணுக்கு பெரிய காரணமாக இருக்காது என்று பலரும் நினைக்கிறார்கள். அது தவறு. இந்த இறைச்சி, வயிற்று ஓரங்களைப் பழுதடையச் செய்யும். இதில் உள்ள அதிக அளவிலான புரதச்சத்தும் கொழுப்புச்சத்தும் செரிமானமாவதற்கு அதிக நேரம் எடுத்துக்கொள்ளும். அதனால் வயிற்றிலேயே அதிக நேரம் இறைச்சி உணவு தங்கிவிடும். இதனாலும் வயிற்றில் அமிலம் அதிகம் சுரக்க நேரிடும். இதுவும் அல்சரை அதிகரிக்கச் செய்யும்.

குளிர்பானங்கள் 

சோடா, குளிர்பானங்கள்

காபி குடிப்பவராய் இல்லாமல் இருந்தாலும், அதற்குப் பதிலாக விதவிதமான குளிர்பானங்கள் குடிப்பவராக இருந்தாலும் அதுவும் பிரச்னையே. சோடாவிலும் குளிர்பானங்களிலும் இருக்கும் சிட்ரிக் அமிலம், வயிற்றின் அமிலத் தன்மையை அதிகரிக்கக்கூடியது. இது செரிமானத்திலும் பிரச்னையை ஏற்படுத்தும். அல்சர் இருப்பவர்கள் சோடாவையோ, குளிர்பானங்களையோ அருந்துவதைத் தவிர்க்க வேண்டும். 

பால்

பால்

அல்சர் உள்ளவர்கள் பால் மற்றும் பால் உணவுகளைத் தவிர்ப்பது நல்லது. சிலர் பாலைக் குடித்தால் அல்சர் குணமாகும் என நினைக்கிறார்கள். ஆனால், பாலில் இருக்கும் புரதச்சத்தும் கொழுப்புச்சத்தும் வயிற்றுப் புண்ணுக்கு ஆபத்தைத்தான் ஏற்படுத்தும். பால், வயிற்றின் அமிலத் தன்மையை அதிகரிக்கச் செய்யும். 

 

எவற்றை எல்லாம் சாப்பிடக் கூடாது என்று பார்க்கும்போதே, எந்த உணவையெல்லாம் அதிகமாக உட்கொள்ளலாம் என்பதையும் பார்க்க வேண்டும். முதலில் அல்சர் உள்ளவர்கள் நேரத்துக்குச் சாப்பிடவேண்டியது அவசியம். நார்ச்சத்துள்ள காய்கறிகள், பழங்கள் செரிமானத்தை சீராக வைத்திருந்து, அல்சரில் இருந்து காக்கும். முட்டை, தயிர், மீன், பீன்ஸ் ஆகியவற்றை அதிகமாக உட்கொள்ளலாம். உணவில் புதினாவைச் சேர்த்துக்கொள்ளலாம். தேங்காய்ப்பால், மணத்தக்காளிக்கீரை ஆகியவை வயிற்றுப் புண்ணை ஆற்றும். தானியங்கள், பழங்கள், காய்கறிகள் ஆகியவற்றைச் சேர்த்துக்கொள்ளலாம். தேவையற்ற உணவுகளைத் தவிர்ப்பது விரைவில் அல்சர் பிரச்னையிலிருந்து மீள உதவும்.

http://www.vikatan.com/news/health/92853-what-foods-to-avoid-when-you-have-an-ulcer.html

 

 

 

முகக் கரும்புள்ளிகள் போக்கும் 5 எளிய வழிமுறைகள்!

 
 

மாசு மருவற்ற முகம்... பளிங்கு போன்ற முகம்... என பெருமையாகச் சொல்லிக்கொள்வதில்தான் எத்தனை ஆனந்தம். முகத்தை அழகாகவும், ஆரோக்கியமாகவும் பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்பது பெரும்பாலானவர்களின் எண்ணம். நமது முகத்தில் சிறிதாக பரு வந்தாலே அதை கிள்ளி அறுவடை செய்து விடுவோம்.. ஆனால், முகத்தில் ஏற்படும் கரும்புள்ளிகளை அவ்வளவு சுலபமாகப் போக்க முடியாமல் கவலைப்படுகிறீர்களா..? எளிதாக வீட்டில் இருந்தபடியே கரும்புள்ளிகளைப் போக்கலாம்.. பார்ப்போமா...

கரும்புள்ளி

பெண்ட்டோனைட் கிளே:

பெண்ட்டோனைட் கிளே என்பது எரிமலை சாம்பலில் இருந்து உருவாக்கப்படும் ஒருவகைக் களிமண் ஆகும். அந்தக் களிமண்ணில் அதிகப்படியான மினரல்ஸ் இருப்பதால் முகத்துக்கு எனர்ஜியைக் கொடுக்கும். இந்த வகைக் களிமண்ணுடன் சிறிதளவு தண்ணீரும், ஆப்பிள் சிடர் வினிகரும் ஊற்றிக் கலக்க வேண்டும். அந்தக் கலவையை முகத்தில் பூசி பத்து முதல் பதினைந்து நிமிடங்கள் வரை காய வைக்க வேண்டும். பின்னர் இளஞ்சூடான நீரில் முகத்தைக் கழுவ வேண்டும்.

முட்டை வெள்ளைக்கரு:முட்டை வெள்ளைக்கரு

முட்டையில் உள்ள வெள்ளைக்கரு சருமத்துக்கு பல்வேறு நன்மைகளை செய்யக் கூடியவை. இவை இதற்கு முன்னால் ஏற்பட்டுள்ள கரும்புள்ளிகளைக் குணமாக்குவதோடு அடுத்து இவ்வகைக் கரும்புள்ளிகள் ஏற்படாமல் இருக்கவும் உதவியாக இருக்கும். முதலில் முட்டையிலிருந்து வெள்ளைக்கருவை தனியாகப் பிரித்துக் கொள்ள வேண்டும். பின்னர் அதனைக் கெட்டியாக கலக்கிக் கொண்டு முகத்தில் இரண்டு அல்லது மூன்று முறை பூச வேண்டும். பின்னர் சுத்தமான நீரில் முகத்தைக் கழுவிக் கொள்ள வேண்டும்.

பாலும் தேனும் கலந்த கலவை:

பாலும், தேனும் முகத்துக்குப் பொலிவு தரக்கூடியவை. தேனில் ஆன்டிபாக்டீரியலும், பாலில் லாக்டிக் அமிலமும் உள்ளது. ஒரு டீஸ்பூன் தேனுடன் ஒரு டீஸ்பூன் பாலைச் சேர்த்துக் கலந்து ஐந்து முதல் பத்து நிமிடங்கள்வரை சூடுபடுத்த வேண்டும். அதை கரும்புள்ளிகளின் மேல் பூச வேண்டும். அது காய்ந்ததும் காட்டன் துணிகளை வைத்து துடைக்க வேண்டும். பிறகு குளிர்ந்த நீரில் கழுவ கரும்புள்ளிகள் எளிதில் மறையும்.

பாலும் தேனும்

பேக்கிங் சோடா - தண்ணீர் கலந்த கலவை:

கரும்புள்ளிகளை குணமாக்குவதில் பேக்கிங் சோடாவுக்கு முக்கிய பங்கு உண்டு. பேக்கிங் சோடாவை சிறிதளவு தண்ணீருடன் கெட்டியாக பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும். சருமத்தில் அந்த பேஸ்டை வைத்து மசாஜ் செய்து கொள்ள வேண்டும். காய்ந்த பின்னர் முகத்தை கழுவிக் கொள்ள வேண்டும்.

நீராவிக் குளியல்

நீராவி:

நீராவி நேரடியாக கரும்புள்ளிளை நீக்காது. ஆனால் கரும்புள்ளிகள் தோன்றுவதைத் தடுக்கும் ஆற்றல் நீராவிக்கு உண்டு. பாத்திரத்தில் சிறிதளவு நீரை ஊற்றிக் கொதிக்க வைக்க வேண்டும். சிறிது நேரத்துக்குப் பிறகு ஐந்து முதல் பத்து நிமிடங்கள் வரை முகத்தில் ஆவி பிடிக்க வேண்டும். ஆனால் முகத்தில் எரிச்சல் ஏற்படும் அளவுக்கு ஆவி பிடிக்கக் கூடாது. இறுதியாக வெதுவெதுப்பான நீரில் முகத்தை கழுவி வட்டு சுத்தமான துண்டில் முகத்தை துடைக்க வேண்டும்.

http://www.vikatan.com/news/health/92791-5-simple-ways-to-avoid-black-marks.html

 

 

வயிற்றுக்கோளாறுகள் நீக்கும், புற்றுநோய் தடுக்கும், கண் ஆரோக்கியம் காக்கும்... கறிவேப்பிலை ஒதுக்காதீர்!

 

குழம்பு, கூட்டு, பொரியல், ரசம், நீர் மோர்... என நம் சமையல் முறையில் கறிவேப்பிலை இடம்பெறாத உணவைப் பார்ப்பதே கடினம். `உணவே மருந்து’ என்பதற்கு மிகச் சிறந்த உதாரணம் கறிவேப்பிலை. இதனால்தான், நம் முன்னோர்கள் பரம்பரை பரம்பரையாக உணவில் கறிவேப்பிலையைப் பயன்படுத்தினார்கள். ஆனால், பலருக்கும் கறிவேப்பிலை என்பது சமைக்கும்போது பயன்படுத்தப்பட்டு, சாப்பிடும்போது இலையின் ஓரத்தில் ஒதுக்கிவைக்கும் ஒரு பொருள்.

லெமன் சாதம் 

தேர்தலில் வெற்றிபெற்றதும் கூட்டணிக் கட்சிகளான சிறு கட்சிகளை பெரிய கட்சி கண்டுகொள்ளாதபோது, `எங்களைத் தேர்தலுக்காக கறிவேப்பிலையாகப் பயன்படுத்திக்கொண்டார்கள்’ என அந்தக் கட்சிகள் நொந்துகொள்வதுண்டு. அதாவது, ஒதுக்கிவைத்து விடுதல், தூக்கி எறிதல் என்பதற்கு உதாரணமாக, கறிவேப்பிலையைப் புரிந்துவைத்திருக்கிறோம் நாம். ஆனால், `இது மணம், சுவை மட்டும் கொண்டதல்ல, பல்வேறு மருத்துவக் குணங்களும் கொண்டது; தாதுஉப்புகள், வைட்டமின்கள் நிறைந்தது’ என்கிறார்கள் மருத்துவர்கள். கறிவேப்பிலையில் உள்ள சத்துகளையும் அதன் மருத்துவக் குணங்களையும் இங்கு பார்க்கலாம்.

கறிவேப்பிலை 

சத்துகள்

இதில் கார்போஹைட்ரேட், நார்ச்சத்து, வைட்டமின் ஏ, பி, சி, இ மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட், அமினோ அமிலங்கள், கிளோக்கோஸைடுகள் (Glycosides), ஃபிளேவனாய்டுகள் போன்றவை உள்ளன. மேலும், உடலுக்குத் தேவையான இரும்புச்சத்து, மக்னீசியம், தாமிரம், கால்சியம், பாஸ்பரஸ் போன்ற அத்தியாவசியத் தாதுச்சத்துகளும் உள்ளன. கொழுப்புச்சத்து 100 கிராமுக்கே 0.1 கிராம் என்ற அளவில்தான் உள்ளது.

வயிற்றுப்போக்கைக் கட்டுப்படுத்தும்

`இதில் உள்ள கார்பாசோல் அல்கலாய்டு (Carbazole Alkaloids) வயிற்றுப்போக்கைத் தடுக்கக்கூடிய ஆன்டி- டயாரியல் (Anti-Diarrheal properties) பண்பைக்கொண்டுள்ளது’ எனப் பல ஆய்வுகளில் சொல்லப்படுகிறது. இதனால், கறிவேப்பிலையை ஒரு கைப்பிடியளவு எடுத்து, அதை பேஸ்ட் பதத்துக்கு வரும் வரை மைய அரைத்துச் சாப்பிடலாம் அல்லது ஜூஸாகவும் அருந்தலாம்.

வயிற்றுக்கோளாறுகள் நீக்கும்

ஆயுர்வேதத்தில் இது, வயிற்றுக்கோளாறுகளை நீக்கும் மருந்தாகப் பயன்படுகிறது. ஒரு கைப்பிடியளவு கறிவேப்பிலையை ஜூஸாக மிக்ஸியில் அடித்து, அதனுடன் எலுமிச்சைப்பழச் சாற்றைக் கலந்து குடிக்கலாம் அல்லது அரைத்த கறிவேப்பிலையை மோருடன் கலந்து வெறும் வயிற்றில் பருகலாம். இது செரிமானத்தை அதிகரிப்பதுடன், வயிற்றுக்கோளாறுகளை நீக்கும். அஜீரணம், பசியின்மையையும் போக்கும்.

பொடி 

சர்க்கரைநோயைக் கட்டுக்குள் வைத்திருக்கும்

கறிவேப்பிலை ஆன்டி-கிளைசிமிக் வகை உணவு என்பதால், ரத்தத்தில் உள்ள குளூக்கோஸ் அளவைச் சீராக வைத்திருக்க உதவும். இதனால், சர்க்கரைநோயாளிகள் சர்க்கரையின் அளவைக் கட்டுக்குள் வைத்திருக்க கறிவேப்பிலையை உணவில் சேர்த்துக்கொள்ளலாம்.

புற்றுநோய் தடுக்கும்

கறிவேப்பிலையில் லுகேமியா (Leukemia), புரோஸ்டேட் மற்றும் குடல் புற்றுநோய் தடுக்கும் பீனால் என்னும் வேதிப்பொருள் உள்ளது. மேலும், புற்றுநோய் செல்களை எதிர்த்துப் போராடக்கூடிய கார்பாஸோல் ஆல்கலாய்டுகள் (Carbazole Alkaloids) நிறைந்துள்ளன.

நல்ல கொழுப்பு அதிகரிக்க

உடலில் உள்ள கெட்ட கொலஸ்டராலை ( LDL-low density lipoprotein) குறைத்து, நல்ல கொலஸ்ட்ராலான ஹெச்.டி.எல்-ஐ (HDL - High Density Lipoprotien) உயர்த்த உதவுகிறது.

முடி வளர்ச்சிக்கு உதவும்

கறிவேப்பிலையை எலுமிச்சைச் சாறுவிட்டு அரைத்து, தலைக்குத் தேய்த்து அரை மணி நேரம் கழித்துக் குளித்துவர பொடுகு, பேன் தொல்லைகள் போகும். தலைமுடி நன்றாக வளரும். கருமையாக வளரும். கறிவேப்பிலைச் சாற்றை தேங்காய் எண்ணெயில் காய்ச்சி, தலைமுடித் தைலமாகப் பயன்படுத்தலாம்.

கறிவேப்பிலை 

ரத்தச்சோகையைக் குணமாக்கும்

கறிவேப்பிலையில் அதிகளவு இரும்புச்சத்து உள்ளதால், இது அனீமியா எனப்படும் ரத்தச்சோகை நோய் ஏற்படாமல் தடுக்கும்.

கல்லீரல் காக்கும்

இதில் உள்ள வைட்டமின் ஏ மற்றும் சி சத்துகள் கல்லீரல் செல்கள் அழிவைக் கட்டுப்படுத்தி, கல்லீரல் பாதிப்பைக் குறைக்கும். மேலும், கல்லீரல் செயல்பாட்டை அதிகரிக்கும்.

ரத்த ஓட்டத்தைச் சீராக்கும்

இது ரத்த நாளங்களில் கெட்ட கொழுப்புகள் படிவதைக் குறைப்பதால், ரத்தம் ஓட்டம் தங்கு தடையின்றி சீராக இருக்கும்.

கண் ஆரோக்கியம் காக்கும்

 

இதில் உள்ள வைட்டமின் ஏ, கரோட்டினாய்டுகள் (Carotenoids) கார்னீயா பாதிப்பைக் கட்டுப்படுத்தும். பார்வை இழப்பு, மாலைக்கண் நோய்கள் ஏற்படாமல் பாதுகாக்கும். பார்வைத்திறனை மேம்படுத்தும்.

http://www.vikatan.com/news/health/92983-10-amazing-health-benefits-of-curry-leaves.html

Link to comment
Share on other sites

இதயம் காக்கும், புற்றுநோய் தடுக்கும், ஆயுள் கூட்டும்... நார்ச்சத்து உணவுகள்!

 
 

இன்றைய உணவுப் பழக்கமும் வாழ்க்கை முறையும் வெகுவாக மாறிவிட்டன. `நாகரிகம்’ என்ற பெயரில் வெந்தும் வேகாத உணவுகளை உண்டுவருகிறது இறைய இளைய சமுதாயம். குறிப்பாக, நகரங்களில் வாழும் இளைய தலைமுறையினர் எந்த உணவில், என்ன சத்து உள்ளது என்பதைக்கூடப் பொருட்படுத்துவதில்லை. ஜங்க் ஃபுட், ஃபாஸ்ட் ஃபுட் கலாசாரம் செழித்து ஓங்கி நிற்கிறது. நாம் உண்ணும் உணவு சத்தானதா, சரிவிகிதச் சத்துள்ள உணவைத்தான் நாம் உட்கொள்கிறோமா என்ற கேள்வியை ஒவ்வொருவருமே கேட்டுக்கொள்ளவேண்டியது அவசியம். அந்த வகையில், நம் ஆரோக்கியம் காப்பதில் நார்ச்சத்துள்ள உணவுகள் எப்போதுமே முக்கிய இடம் வகிக்கின்றன. பல நோய்களைப் போக்கவும், வராமல் காக்கவும் உதவுபவை நார்ச்சத்து நிறைந்த உணவுகளே! அவை தரும் நன்மைகளைப் பற்றி சற்று விரிவாகப் பார்ப்போமா?

நார்ச்சத்து உணவுகள்

எடை குறைக்க உதவும்

நார்ச்சத்துள்ள உணவுப் பொருள்களை தினமும் நம் உணவில் சேர்த்துக்கொண்டால், உடல் எடையைக் குறைக்கலாம். `ஒரு நாளைக்கு 30 கிராம் நார்ச்சத்து கிடைக்கும்படியான உணவை உண்டுவந்தால், எடையைக் குறைக்க வேறு எந்த டயட்டையும் பின்பற்றத் தேவையில்லை’ என்கிறது ஓர் ஆய்வு. இவை நம் வயிற்றை வேகமாக நிரம்பச் செய்யும். அது, அடிக்கடி பசி எடுக்கும் உணர்வைத் தடுக்கும். நார்ச்சத்து, கொழுப்புடனும் சர்க்கரையுடனும் சேர்ந்து உணவுக்குழாயில் பயணம் செய்து, உடலில் உள்ள கலோரிகளைக் குறைத்து, உடல்நலனைப் பாதுகாக்கும்.

சர்க்கரைநோயைக் கட்டுப்படுத்தும்

ஒருவர் தினமும் குறைந்த பட்சம் 25 கிராம் நார்ச்சத்தை உட்கொண்டால், சர்க்கரைநோயைக் கட்டுப்படுத்தலாம். இது, உடலில் இன்சுலினை சீராகச் சுரக்கச்செய்து, சர்க்கரையை சரியான அளவில் வைத்துக்கொள்ளவும் உடல் எடை அதிகரிக்காமல் பாதுகாக்கவும் உதவும்.

இதயம் காக்க

இதயத்தைப் பாதுகாக்கும்

தினமும் நம் உணவில் 10 கிராம் நார்ச்சத்து இடம்பெறுமாறு பார்த்துக்கொண்டால், இதயம் தொடர்பான நோய்களை 10 சதவிகிதம் தவிர்க்கலாம். இது, உடலில் உள்ள கொழுப்பைக் குறைத்து, இதயம் தொடர்பான பிரச்னைகளை நீக்கும். ரத்த ஓட்டமும் சீராக இருக்கும்.

புற்றுநோய்க்கு `நோ’ சொல்லலாம்!

ஒரு நாளைக்கு 10 கிராம் நார்ச்சத்து உணவில் இடம் பெற்றால், வயிற்றுப் புற்றுநோயை 10 சதவிகிதமும் மார்பகப் புற்றுநோயை 5 சதவிகிதமும் தவிர்க்கலாம். இந்தச் சத்துள்ள உணவுகளில் புற்றுநோயைத் தடுக்க உதவும் ஆன்டிஆக்ஸிடன்ட்களும் வேதியல் பொருள்களும் (Phytochemical) உள்ளதால், புற்றுநோயைத் தவிர்க்கலாம்.

ஆயுள் அதிகரிக்கும்

நாம் அன்றாடம் உட்கொள்ளும் உணவுகளில் 19 சதவிகிதம் நார்ச்சத்து நிறைந்த தானியங்களையும், 17 சதவிகிதம் பருப்பு வகைகளையும் சேர்த்துவந்தால், பல நோய்களைத் தவிர்த்து, உடலை ஆரோக்கியத்துடன் பாதுகாத்துக்கொள்ளலாம். இதனால் ஆயுள் காலமும் அதிகரிக்கும்.

மலச்சிக்கல்

மலச்சிக்கலுக்கு மருந்து

நார்ச்சத்து அடங்கிய உணவு, குடலுக்கு வலிமை சேர்க்கும். மலச்சிக்கலை வருமுன் காக்க இது மிகவும் முக்கியமானது. இதில் உள்ள `செல்லுலோஸ்’ (Cellulose) எனும் வேதிப் பொருள், உணவுடன் செல்லும் நீரை ஈர்த்துக்கொள்ளும். இதனால், மலம் இளகி, குடலில் தங்காமல் அவ்வப்போது வெளியேறிவிடும். நார்ச்சத்து உடலுக்குப் போதுமான அளவுக்குக் கிடைக்காதபோதுதான், மலம் இறுக்கமடைந்து மலச்சிக்கல் ஏற்பட வாய்ப்புகள் உண்டாகும்.

கிருமிகளை அழிக்கும்!

இது, உணவு மண்டலத்தில் உள்ள கிருமிகளை அழித்து, குடல் சார்ந்த பிரச்னைகளில் இருந்து நம்மை விடுவிக்கக்கூடியது. இதில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உடலுக்குள் வரும் தீய வேதிப் பொருள்களிடமிருந்து நம்மைப் பாதுகாக்கும். மேலும், எலும்புகளையும் வலுவாக்கும்.

எந்த உணவில் எவ்வளவு நார்ச்சத்து?

(ஒரு சிறிய கப் அளவு உணவில்)

பயறு வகைகள் – 7.5 – 9 கிராம்

ராஜ்மா (அ) கிட்னி பீன்ஸ் – 8.2 கிராம்

பச்சை பட்டாணி – 6.7 கிராம்

பார்லி மற்றும் கொள்ளு – 4 கிராம்

பசலைக்கீரை – 3.5 கிராம்

அவகேடோ – 11 கிராம்

உலர்ந்த திராட்சை

 

உலர்ந்த திராட்சை – 5.4 கிராம்

அத்தி – 3.6 கிராம்

கோதுமை ரவை – 4.1 கிராம்

ஆப்பிள் – 3.5 கிராம்

ஆரஞ்சு – 3.1 கிராம்

பேரிக்காய் – 4.4 கிராம்

மஞ்சள் பூசணி – 2.7 கிராம்

நார்ச்சத்தின் நன்மைகளை உணர்வோம். அதைப் போதுமான அளவு உணவில் சேர்த்துக்கொண்டு நலமாக வாழ்வோம்.

http://www.vikatan.com/news/health/93484-health-benefits-of-fibre-foods.html

Link to comment
Share on other sites

உங்கள் சமையலறை பாத்திரங்கள் ஆரோக்கியமானவையா!? அவசிய பராமரிப்புக் குறிப்புகள்

 

ப்போதெல்லாம் எதைச் சாப்பிடவும் பயமாக இருக்கிறது. `இதில் கலப்படம்’, `அதில் போலி’ என்று நம்பகத்தன்மை இல்லாத உணவுகள் அருகிவிட்டன. உணவுப் பொருட்கள் மட்டும் இல்லை; உணவு தயாராகும் சமையலறையேகூட இப்போது மிக ஆபத்தானதாகத்தான் இருக்கிறது. நம் சமையல் அறையில், குறிப்பாக நாம் பயன்படுத்தும் பாத்திரங்கள் உணவை விஷமாக்கும் பல காரணிகள் இருப்பது நம்மில் பலரும் அறியாதது. சரி... நாம் பயன்படுத்தும் சமையலறைப் பாத்திரங்கள் எப்படிப்பட்டவை, என்னென்ன பாதிப்புகளை நமக்கு உண்டாக்கும் எனப் பார்க்கலாமா? 

பிளாஸ்டிக் 

முன்னரெல்லாம் செப்பு, பித்தளை பாத்திரங்களை சமையலறையில் பயன்படுத்தினோம். பிறகு அலுமினியம், எவர்சில்வர் பாத்திரங்கள் அந்த இடத்தைப் பிடித்தன. இப்போது பிளாஸ்டிக் பாத்திரங்கள் சமையலறையை ஆக்கிரமித்துக்கொண்டன. மைக்ரோவேவ் ஓவனில் வைத்து சூடுபடுத்தும் சமையலறை பாத்திரங்கள் தொடங்கி, சாதாரண எலெக்ட்ரிக் அடுப்பில் வைத்துச் சமைக்கும் அளவுக்கு பிளாஸ்டிக் பாத்திரங்கள் நிறைய இருக்கின்றன. இவற்றில் தரமில்லாத, விலை குறைவானவை ஆபத்தை விளைவிக்கக்கூடியவை. தரமற்ற பிளாஸ்டிக் பொருளைச் சூடாக்கினால் டையாக்ஸின், ஹைட்ரஜன் குளோரைடு போன்ற நச்சுத் தன்மை கொண்ட ரசாயனங்கள் வெளியாகி, உடல்நலத்தைப் பாதிப்புக்கு உள்ளாக்கும். டையாக்ஸின் புற்றுநோயை உண்டாக்கக்கூடியது. இது இனப்பெருக்க ஆற்றலையும் பாதிக்கும் தன்மைகொண்டது. பொதுவாக, பிளாஸ்டிக்கால் செய்யப்பட்ட பொருள்கள் உடலின் ஆரோக்கியத்தை பாதிப்பவை. குறிப்பாக பெண்களுக்கு மார்பகப் புற்றுநோய், கர்ப்பப்பையை புற்றுநோயை எளிதாக உருவாக்கிவிடும்.

பாத்திரங்கள்

நான்-ஸ்டிக்

எண்ணெய் ஊற்றாமல், பாத்திரத்தோடு ஒட்டாமல் சமைத்துத் தரும் நான் ஸ்டிக் பாத்திரங்களைப் பலரும் பயன்படுத்துகிறோம். இவற்றின் அடிப்பகுதி முழுக்க ரசாயன பூச்சு படிந்துள்ளது. ஒவ்வொரு முறை பாத்திரம் சூடாகும்போதும் அதில் நச்சு வாயுக்கள் உருவாகி, உடலுக்கு பல உபாதைகளை உருவாக்குகின்றன. ஜீரண பிரச்னை தொடங்கி கணையம், கல்லீரல் முதலியவைகூட இதனால் பாதிக்கப்படலாம். இது மெல்ல மெல்ல உடல்நலத்தைக் கெடுத்துவிடும். பல நோய்கள் உருவாகவும் காரணமாகிவிடும்.

பீங்கான் 

பீங்கான் பொருட்கள் அழகு. ஆனால், அதில் கலந்து இருக்கும் காரீயம் ஓர் ஆட்கொல்லி. பீங்கான் பாத்திரத்தை சூடுபடுத்தினாலோ அல்லது அதில் சூடான உணவுப் பொருளைப் போட்டாலோ அதில் உள்ள காரீயம் உணவில் கலந்துவிடும். இதனால் சிறுநீரகத்தில் கல் பிரச்னை தொடங்கி, இதயநோய் வரை ஏற்பட வாய்ப்பிருக்கின்றன... கவனம்!

அலுமினியம் மற்றும் இரும்பு 

`தரமற்ற அலுமினியப் பாத்திரங்களில் சமைக்கப்படும் அல்லது வைக்கப்படும் உணவால் அல்சைமர் நோய் வரக்கூடும்’ என்று எச்சரிக்கிறது மருத்துவம். அதேபோல `இரும்புப் பாத்திரங்களை உபயோகப்படுத்துவது வலிப்பு, மறதி போன்ற நோய்களைக் கொண்டு வரும்’ என்கிறார்கள் மருத்துவர்கள்.

பாத்திரங்கள்

சில குறிப்புகள்...

* தரமில்லாத செயற்கை ரசாயனச் சோப்புகள் மற்றும் கரைசல்களைக் கொண்டு கழுவப்படும் பாத்திரங்கள், முறையாகச் சுத்தப்படுத்தி, துடைக்கப்படாமல் பயன்படுத்தப்படுமானால், அது செரிமானப் பிரச்னை, வாந்தி, பேதி, தலைசுற்றல், மயக்கம் போன்றவற்றை உண்டாக்கிவிடும்.

* விரிசல்கொண்ட, துருப்பிடித்த, உடைந்து, நெளிந்துபோன பாத்திரங்கள் எதையும் பயன்படுத்தவே கூடாது. தூரத் தூக்கிப் போட்டுவிடுவது நல்லது. இவற்றைச் சமைக்கப் பயன்படுத்தினால் உணவைக் கெடுத்துவிடும்; உடல்நலத்துக்கும் நல்லதல்ல.

சமையல் பாத்திரங்கள்

 

* சுத்தமில்லாத பாத்திரம் பாலை திரிக்கச் செய்துவிடும். இப்படி சுத்தமில்லாத பாத்திரங்கள் நம் கண்ணுக்கே தெரியாமல் பல மோசமான விளைவுகளை நம் உடலுக்கு வழங்கிவிடும். தலைவலி தொடங்கி புற்றுநோய் வரை பாதிப்பு ஏற்படலாம். எனவே, பாத்திரங்களில் கவனமாக இருப்போம்; நோய் வராமல் தடுப்போம்; ஆரோக்கியம் காப்போம். 

http://www.vikatan.com/news/health/92906-are-your-kitchen-vessels-healthy---essential-maintenance-tips.html

Link to comment
Share on other sites

வெரிகோஸ் வெயின் குறைபாட்டை களையும் நவீன சத்திர சிகிச்சை

 

 

தொழிற்சாலை மற்றும் தனியார்நிறுவனங்களில் நின்று கொண்டே பணியாற்றுபவர்கள்,சாலை போக்குவரத்தை ஒழுங்குப்படுத்தும் காவலர்கள் என தங்களது பணியை இயல்பை விட அதிகமான நேரத்திற்கு நின்று கொண்டு செய்பவர்களுக்கு அவர்களின் ஊட்டச்சத்து குறைபாடு மற்றும் ஏனைய கோளாறுகளால் கால் பகுதிகளில் வெரிகோஸிஸி வெயின் எனப்படும் பாதிப்பு ஏற்படும்.

health_news_image_206.jpg

காலில் திடீரென்று அரிப்பு, கால் வலி, கணுக்கால் அல்லது கால் பகுதியில் வீக்கம் போன்ற அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக மருத்துவர்களை சந்தித்து பரிசோதனை செய்து கொள்ளவேண்டும். டாப்ளர் என்ற கருவியின் மூலம் இதன் பாதிப்பின் தன்மை மற்றும் வீரியத்தை கணக்கிடுவர். தொடக்க நிலையில் இருந்தால் மருந்து மற்றும் மாத்திரைகளாலும், விசேட காலுறையாலும் முழுமையான நிவாரணமும், குணமும் பெறலாம்.

ஒரு சிலருக்கு இந்த பாதிப்பிற்காக அறிமுகமாகியிருக்கும் ரேடியோ ப்ரீக்வென்ஸி அப்ளேசன் லேசர் என்ற நவீன சத்திர சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதன்போது கால் பகுதிகளில் தேங்கியிருக்கும் அசுத்தமான இரத்தங்கள் சுத்தரிக்கப்படுகின்றன அல்லது அதனை அங்கிருந்து அகற்றப்பட்டு மேல்நோக்கி செலுத்தப்படுகின்றன.இதன் காரணமாக 48 மணி தியாலத்திற்குள் இந்த வெரிகோஸிஸ் வெயின் என்ற பாதிப்பு குறையத் தொடங்குகிறது. இந்த சிகிச்சையை மேற்கொள்பவர்கள் அதன் பிறகு தங்களின் நாளாந்த பணிகளில் மகிழ்ச்சியுடன் ஈடுபட இயலும்.

Dr. சங்கர்

தொகுப்பு அனுஷா.

தகவல் : சென்னை அலுவலகம்

http://www.virakesari.lk/article/21361

Link to comment
Share on other sites

வயிற்றுக்கோளாறுகள் நீக்கும், புற்றுநோய் தடுக்கும், கண் ஆரோக்கியம் காக்கும்... கறிவேப்பிலை ஒதுக்காதீர்!

 
 

குழம்பு, கூட்டு, பொரியல், ரசம், நீர் மோர்... என நம் சமையல் முறையில் கறிவேப்பிலை இடம்பெறாத உணவைப் பார்ப்பதே கடினம். `உணவே மருந்து’ என்பதற்கு மிகச் சிறந்த உதாரணம் கறிவேப்பிலை. இதனால்தான், நம் முன்னோர்கள் பரம்பரை பரம்பரையாக உணவில் கறிவேப்பிலையைப் பயன்படுத்தினார்கள். ஆனால், பலருக்கும் கறிவேப்பிலை என்பது சமைக்கும்போது பயன்படுத்தப்பட்டு, சாப்பிடும்போது இலையின் ஓரத்தில் ஒதுக்கிவைக்கும் ஒரு பொருள்.

லெமன் சாதம் 

தேர்தலில் வெற்றிபெற்றதும் கூட்டணிக் கட்சிகளான சிறு கட்சிகளை பெரிய கட்சி கண்டுகொள்ளாதபோது, `எங்களைத் தேர்தலுக்காக கறிவேப்பிலையாகப் பயன்படுத்திக்கொண்டார்கள்’ என அந்தக் கட்சிகள் நொந்துகொள்வதுண்டு. அதாவது, ஒதுக்கிவைத்து விடுதல், தூக்கி எறிதல் என்பதற்கு உதாரணமாக, கறிவேப்பிலையைப் புரிந்துவைத்திருக்கிறோம் நாம். ஆனால், `இது மணம், சுவை மட்டும் கொண்டதல்ல, பல்வேறு மருத்துவக் குணங்களும் கொண்டது; தாதுஉப்புகள், வைட்டமின்கள் நிறைந்தது’ என்கிறார்கள் மருத்துவர்கள். கறிவேப்பிலையில் உள்ள சத்துகளையும் அதன் மருத்துவக் குணங்களையும் இங்கு பார்க்கலாம்.

கறிவேப்பிலை 

சத்துகள்

இதில் கார்போஹைட்ரேட், நார்ச்சத்து, வைட்டமின் ஏ, பி, சி, இ மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட், அமினோ அமிலங்கள், கிளோக்கோஸைடுகள் (Glycosides), ஃபிளேவனாய்டுகள் போன்றவை உள்ளன. மேலும், உடலுக்குத் தேவையான இரும்புச்சத்து, மக்னீசியம், தாமிரம், கால்சியம், பாஸ்பரஸ் போன்ற அத்தியாவசியத் தாதுச்சத்துகளும் உள்ளன. கொழுப்புச்சத்து 100 கிராமுக்கே 0.1 கிராம் என்ற அளவில்தான் உள்ளது.

வயிற்றுப்போக்கைக் கட்டுப்படுத்தும்

`இதில் உள்ள கார்பாசோல் அல்கலாய்டு (Carbazole Alkaloids) வயிற்றுப்போக்கைத் தடுக்கக்கூடிய ஆன்டி- டயாரியல் (Anti-Diarrheal properties) பண்பைக்கொண்டுள்ளது’ எனப் பல ஆய்வுகளில் சொல்லப்படுகிறது. இதனால், கறிவேப்பிலையை ஒரு கைப்பிடியளவு எடுத்து, அதை பேஸ்ட் பதத்துக்கு வரும் வரை மைய அரைத்துச் சாப்பிடலாம் அல்லது ஜூஸாகவும் அருந்தலாம்.

வயிற்றுக்கோளாறுகள் நீக்கும்

ஆயுர்வேதத்தில் இது, வயிற்றுக்கோளாறுகளை நீக்கும் மருந்தாகப் பயன்படுகிறது. ஒரு கைப்பிடியளவு கறிவேப்பிலையை ஜூஸாக மிக்ஸியில் அடித்து, அதனுடன் எலுமிச்சைப்பழச் சாற்றைக் கலந்து குடிக்கலாம் அல்லது அரைத்த கறிவேப்பிலையை மோருடன் கலந்து வெறும் வயிற்றில் பருகலாம். இது செரிமானத்தை அதிகரிப்பதுடன், வயிற்றுக்கோளாறுகளை நீக்கும். அஜீரணம், பசியின்மையையும் போக்கும்.

பொடி 

சர்க்கரைநோயைக் கட்டுக்குள் வைத்திருக்கும்

கறிவேப்பிலை ஆன்டி-கிளைசிமிக் வகை உணவு என்பதால், ரத்தத்தில் உள்ள குளூக்கோஸ் அளவைச் சீராக வைத்திருக்க உதவும். இதனால், சர்க்கரைநோயாளிகள் சர்க்கரையின் அளவைக் கட்டுக்குள் வைத்திருக்க கறிவேப்பிலையை உணவில் சேர்த்துக்கொள்ளலாம்.

புற்றுநோய் தடுக்கும்

கறிவேப்பிலையில் லுகேமியா (Leukemia), புரோஸ்டேட் மற்றும் குடல் புற்றுநோய் தடுக்கும் பீனால் என்னும் வேதிப்பொருள் உள்ளது. மேலும், புற்றுநோய் செல்களை எதிர்த்துப் போராடக்கூடிய கார்பாஸோல் ஆல்கலாய்டுகள் (Carbazole Alkaloids) நிறைந்துள்ளன.

நல்ல கொழுப்பு அதிகரிக்க

உடலில் உள்ள கெட்ட கொலஸ்டராலை ( LDL-low density lipoprotein) குறைத்து, நல்ல கொலஸ்ட்ராலான ஹெச்.டி.எல்-ஐ (HDL - High Density Lipoprotien) உயர்த்த உதவுகிறது.

முடி வளர்ச்சிக்கு உதவும்

கறிவேப்பிலையை எலுமிச்சைச் சாறுவிட்டு அரைத்து, தலைக்குத் தேய்த்து அரை மணி நேரம் கழித்துக் குளித்துவர பொடுகு, பேன் தொல்லைகள் போகும். தலைமுடி நன்றாக வளரும். கருமையாக வளரும். கறிவேப்பிலைச் சாற்றை தேங்காய் எண்ணெயில் காய்ச்சி, தலைமுடித் தைலமாகப் பயன்படுத்தலாம்.

கறிவேப்பிலை 

ரத்தச்சோகையைக் குணமாக்கும்

கறிவேப்பிலையில் அதிகளவு இரும்புச்சத்து உள்ளதால், இது அனீமியா எனப்படும் ரத்தச்சோகை நோய் ஏற்படாமல் தடுக்கும்.

கல்லீரல் காக்கும்

இதில் உள்ள வைட்டமின் ஏ மற்றும் சி சத்துகள் கல்லீரல் செல்கள் அழிவைக் கட்டுப்படுத்தி, கல்லீரல் பாதிப்பைக் குறைக்கும். மேலும், கல்லீரல் செயல்பாட்டை அதிகரிக்கும்.

ரத்த ஓட்டத்தைச் சீராக்கும்

இது ரத்த நாளங்களில் கெட்ட கொழுப்புகள் படிவதைக் குறைப்பதால், ரத்தம் ஓட்டம் தங்கு தடையின்றி சீராக இருக்கும்.

கண் ஆரோக்கியம் காக்கும்

 

இதில் உள்ள வைட்டமின் ஏ, கரோட்டினாய்டுகள் (Carotenoids) கார்னீயா பாதிப்பைக் கட்டுப்படுத்தும். பார்வை இழப்பு, மாலைக்கண் நோய்கள் ஏற்படாமல் பாதுகாக்கும். பார்வைத்திறனை மேம்படுத்தும்.

http://www.vikatan.com/news/health/92983-10-amazing-health-benefits-of-curry-leaves.html

Link to comment
Share on other sites

பெண்களின் இனவிருத்தி தொகுதியில் கட்டிகள் ஏற்படாமல் தடுக்க முடியுமா ?

 

 

பெண்­களின் கர்ப்­பப்­பை­யிலும் சினைப்­பை­யிலும் கட்­டிகள் ஏற்­ப­டு­வதை அறி­வீர்கள். பெண்கள் பரு­வ­ம­டைந்த பின் மாத­வி­லக்கு முழு­மை­யாக நின்­று­போகும் மெனப்போஸ் காலம் வரை கணி­ச­மான பெண்­களில் இவ்­வா­றான கட்­டிகள் ஏற்­ப­டு­கின்­றது. கர்ப்­பப்­பையில் ஏற்­படும் கட்­டி­களை FIBROIDS பைப்­ரோயிட் கட்­டிகள் என்றும் சினைப்­பையில் ஏற்­படும் கட்­டி­களை OVABIAN TUMOURS என்றும் அழைப்பர். இவ்­வா­றான கட்­டிகள் ஏற்­ப­டாமல் தடுக்க முடி­யுமா-?

Reproduction_of_women.jpg

இந்த வினா­வுக்கு விடை­ய­ளிக்­கு­முன்னர் பைப்­ரோயிட் கட்­டிகள் தோன்­று­வ­தற்­கான காரணம் என்ன என்­பதைப் பற்றி பார்ப்­போ­மானால் இதற்­கான காரணம் எதையும் அறு­தி­யிட்டு கூற­மு­டி­யா­துள்­ளது. பெரும்­பாலும் குறிப்­பிட்­ட­வர்­களின் பரம்­பரை தொடர்பே கார­ண­மாக இருக்­கின்­றது. எனினும் இவற்றின் தோற்­றத்­திற்கு பால் ஓமோன்கள் எந்­த­ளவு பங்­காற்­று­கின்­றன என்­ப­தைப்­பற்றி நிறுவ முடி­ய­வில்லை. எனினும் பைப்­ரோயிட் கட்­டிகள் மணம் முடிக்க தாம­த­மா­கின்­ற­வர்­க­ளிலும் மணம் முடித்தும் குழந்தைப் பாக்­கியம் இல்­லா­த­வர்­க­ளிலும் ஏற்­ப­டு­வது அவ­தா­னிக்­கப்­ப­டு­கின்­றது. இதி­லி­ருந்து இவ்­வா­றான கட்­டிகள் தோன்­று­வ­தற்கும் ஓமோன்­களின் தூண்­டு­த­லுக்கும் தொடர்பு இருக்­கலாம் என்று தோன்­று­கின்­றது.

பெண்­களின் இன­வி­ருத்தி தொகு­தியில் பைப்­ரோயிட் கட்­டி­களோ சூல­கக்­கட்­டி­களோ தோன்­று­வதைத் தடுப்­ப­தற்கு இன்­று­வரை மருத்­துவ உலகம் எதையும் கண்­ட­றி­ய­வில்லை. இதனால் இற்­றை­வரை இக்­கட்­டிகள் தோன்­று­வதை தடுக்க முடி­ய­வில்லை. எனவே ஒழுங்­கான பரி­சோ­த­னைகள் மூலம் கட்­டிகள் தோற்றம் பெறு­வதைக் கண்­ட­றிந்து அவ­சி­ய­மெனின் உரிய சிகிச்சை பெற­வேண்டும்.

இந்த கட்­டி­களை மருந்­து­களால் குண­மாக்க முடி­யா­துள்­ளது. அவ­சியம் ஏற்­படின் சத்­திர சிகிச்சை மூலமே அகற்ற வேண்டும். கட்­டி­களை சுருங்­க­வைக்கும் மருந்­துகள் முன்னர் பாவிக்­கப்­பட்ட போதிலும் சுருங்­கிய கட்­டிகள் மீண்டும் வேக­மாக வளர்­வது தெரிய வந்­த­மையால் மருந்­து­மூ­ல­மான சிகிச்சை மேற்­கொள்­ளப்­ப­டு­வ­தில்லை.

சத்­திர சிகிச்­சையே தீர்வு, எனினும் அவ­ச­ரப்­பட்டு மேற்­கொள்­ளப்­ப­டு­வ­தில்லை. பெரும்­பா­லான பைப்­ரோயிட் கட்டிகள் மெனப்போஸுடன் சுருங்கிவிடும்.மிகப்பெரிய கட்டிகளை அவசியமெனின் அகற்றலாம். சினைப்பை கட்டிகளைப் பொறுத்தவரை சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்படுகின்றது. மோசமாக பரவினால் கருப்பை சினைப்பையுடன் சேர்த்து அகற்றப்படுகின்றது.

http://www.virakesari.lk/article/21411

Link to comment
Share on other sites

MCI (Mild Cognitive Impairment) சிக்கலுக்கான சிகிச்சை

எம்முடைய இல்லங்களில் வாழும் முதிய வயதினர் அல்லது அறுபது வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு MCI  எனப்படும் அறிவாற்றல் குறைபாடு அதாவது நினைவுத்திறன் குறைவது அதிகரித்து வருகிறது.

news_image_health_27_6.jpg

இதனை தொடக்கநிலையிலேயே கண்டறிந்துவிட்டால் வாழ்க்கை முறையில் சில மாற்றங்கள், நினைவுத் திறன் மேம்படுவதற்கான சில எளிய பயிற்சிகள், சில உணவு வகைகளை கூடுதலாக சேர்த்துக்கொள்வது போன்றவற்றை மேற்கொள்வதால் குணமடையலாம். ஆனால் இதனை கண்டறியாமலோ அல்லது தெரிந்தும் புறகணித்தாலோ நரம்பியல் தொடர்பான கோளாறுகளாகவும், அல்சைமர் போன்ற நினைவுத்திறன் குறைவு பிரச்சினையாகவும் மாறிவிடக்கூடிய அபாயம் உண்டு.

பொதுவாக இந்த வயதினர் தங்களது பிள்ளைகளின் எதிர்காலம், அவர்களின் படிப்பு, அவர்களின் போக்கு ஆகியவற்றால் ஏற்படும் மன உளைச்சலால் தான் இத்தகைய குறைபாட்டினை எதிர்கொள்கிறார்கள். அத்துடன் இவர்களுக்கு ஏற்கனவே உடலில் ஏற்பட்டுள்ள முதுமையை எதிர்கொள்வதில் காரணமற்ற பயம் கூடுதலாக இருக்கும். அவர்களுக்கு இந்த பயமும் சேர்வதால் அவர்களுக்கு பதற்றத்திற்கு ஆளாகிறார்கள். இந்த பதற்றம் தான் அவர்களுக்கு ஞாபக மறதியை உண்டாக்குகிறது.

அதனால் இவர்கள் MCI யால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்று கண்டறிந்தவுடன் சிலவற்றை பட்டியலிட்டு, அதனை நாளாந்த பணியாக பின்பற்றினால் இதற்கு முழுமையான நிவாரணம் கிடைக்கும். அந்த பட்டியலில் உள்ளரங்க விளையாட்டுகளான சதுரங்கம், கேரம், குறுக்கெழுத்து புதிர், புதிய மொழிக்கான பயிற்சி,நவீன தொழில்நுட்பத்தை கையாளுதல் போன்றவையும் அடங்கும்.

அத்துடன் போதிய அளவிலான ஆரோக்கியமான தூக்கம் கிடைக்கவேண்டும். மனக்கவலை, மன உளைச்சல், மன அழுத்தம் போன்றவை இருந்தால் அவை தூக்கத்தைப் பாதிக்கும். வயதானவர்களுக்கு தூக்கம் கெட்டால் அவர்களுக்கு இப்பிரச்சனை விரிவடையும். அதனால் தூக்கத்திற்கு அதாவது ஆரோக்கியமான தூக்கத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

Dr. மருதுபாண்டியன்

தொகுப்பு அனுஷா.

தகவல் : சென்னை அலுவலகம்

http://www.virakesari.lk/article/21563

Link to comment
Share on other sites

இரசாயன சிகிச்சையை வழங்குவதால் புற்றுநோய் மேலும் அபாயகரமானதாக மாறுவதற்கு வாய்ப்பு : மருத்துவ ஆய்வாளர்கள் எச்சரிக்கை

 

 

புற்­று­நோய்க்கு அளிக்­கப்­படும் இர­சா­யன சிகிச்­சை­யா­னது அந்நோய் தீவி­ர­மாக பரவி மேலும் அபா­ய­க­ர­மாக மாறு­வ­தற்கு வழி­வ­குக்­கலாம் என புதிய ஆய்­வொன்று உரிமை கோரு­கி­றது. 

cancer.jpg

மேற்­படி இர­சா­யன சிகிச்­சை­யா­னது புற்­றுநோய் வளர்ச்­சியை கட்­டுப்­ப­டுத்­து­வ­தற்­கான முத­லா­வது சிகிச்சைத் தெரி­வா­க­வுள்­ளது.

ஆனால்  அமெ­ரிக்க நியூயோர்க் நக­ரி­லுள்ள அல்பேர்ட் அயன்ஸ்டீன்  மருத்­துவக் கல்­லூ­ரியைச் சேர்ந்த ஆய்­வா­ளர்கள் மேற்­கொண்ட புதிய ஆய்வில் அந்த சிகிச்சை புற்­று­நோ­யா­ளர்­க­ளுக்கு குறு­கிய கால அளவில் மட்­டுமே பயன் அளிப்­ப­தாக உள்­ள­மைக்­கான சான்று  கண்­ட­றி­யப்­பட்­டுள்­ள­தாக  தெரி­விக்­கப்­ப­டு­கி­றது.

இந்த இர­சா­யன சிகிச்சை புற்­றுநோய் கட்­டிகள் குருதிச் சுற்­றோட்ட முறை­மை­யி­னூ­டாக திரும்­பவும்  பலம் பெற்று வேக­மாகப் பர­வு­வ­தற்கு வழி­வகை செய்­வ­தாக இந்த ஆய்­வுக்கு தலைமை தாங்­கிய மருத்­துவ கலா­நிதி ஜோர்ஜ் கரா­கி­யன்னிஸ் தெரி­வித்தார்.

மேற்­படி ஆய்வின் முடி­வுகள் நேற்று முன்­தினம் புதன்­கி­ழமை  வெளி­யி­டப்­பட்­டுள்­ளன.

புற்­று­நோ­யா­னது சிகிச்­சை­ய­ளிப்­ப­தற்கு கடி­ன­மான நோயா­க­வுள்­ளது.  அது ஏனைய உடல் உறுப்­பு­க­ளுக்குள் பர­வு­கையில் நான்காம் கட்ட அபாய நிலையை அடைந்து சிகிச்சை அளிக்க முடி­யாத சூழ்­நிலை உரு­வா­கி­றது எனத் தெரி­வித்த கலா­நிதி ஜோர்ஜ் கரா­கி­யன்னிஸ்,  தமது ஆய்வின் பெறு­பே­று­களின் பிர­காரம்  புற்­று­நோ­யா­ளர்­க­ளுக்கு இர­சா­யன சிகிச்­சையை வழங்­கு­வதை நிறுத்­து­வ­தற்கு தாம் சிபா­ரிசு செய்­ய­வில்லை எனவும் ஆனால் அந்த சிகிச்­சையை வழங்கும் போது நோயா­ளியின் உடலில்  புற்­றுநோய் கட்­டிகள் அடையும் மாற்­றங்கள் குறித்து தீவிர கண்­கா­ணிப்பை மேற்­கொள்­வது அவ­சி­ய­மா­க­வுள்­ளது எனவும்  கூறினார்.

புற்­றுநோய்க் கட்­டி­களை முழு­மை­யாக அழிப்­ப­தற்கு வழங்­க­வேண்­டிய இர­சா­யன மருந்தின் செறி­வா­னது  நோயா­ளியின் உயி­ருக்கு ஆபத்து விளை­விக்கக் கூடி­யது என்­பதால்  மருத்­து­வர்கள் குறைந்த செறி­வி­லேயே அந்த மருந்தை வழங்­கு­கின்­றனர் எனவும் இது அந்தப் புற்­றுநோய்க் கலங்கள் வேக­மாக பரவவும், இந்த அரை­குறை சிகிச்­சையில் உயிர் பிழைத்திருக்கும் புற்றுநோய்க் கலங்கள் இர சாயன சிகிச்சைகளுக்கு ஈடுகொடுத்து  உயிர் பிழைத்திருக்கக் கூடிய  நிலையை அடைந்து ஏனைய உடல் உறுப்புகளுக்கு பரவும் அபாயமிக்க நிலையை அடையவும் வழிவகை செய்வதாக அவர் தெரிவித்தார்.

http://www.virakesari.lk/article/21603

Link to comment
Share on other sites

முள்ளந்தண்டு, மூட்டுப்பிரச்சினைகளுக்கு ஒஸ்டியோபதி  முறையில் சிகிச்சை 

 

 

முள்ளந்தண்டு மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் ஏற்படும் பிரச்சினைகள், மூட்டுப்பிரச்சினை உள்ளிட்ட சகலவிதமான நோய்களுக்கும் மருந்து மாத்திரைகளின்றியும் சத்திரசிகிச்சையின்றியும் இயற்கையான ஒஸ்டியோபதி வைத்திய முறையில் சிகிச்சையளிக்க முடியுமென மாலபே சுவசந்த ஆயுர்வேத வைத்தியசாலையின் பணிப்பாளரும் வைத்தியருமான கலாநிதி சாகர கருணாதிலக்க தெரிவித்தார். 

ostiyopathi.jpg

வீரகேசரி இணையத்தளத்திற்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அச்செவ்வியில் அவர் மேலும் தெரிவித்ததாவது;

கேள்வி: ஒஸ்டியோபதி சிசிக்சை முறையைப் பற்றி சற்று தெளிவுபடுத்த முடியுமா? 

பதில்: நிச்சயமாக, உண்மையில் மருந்து மாத்திரைகள் மற்றும் சத்திரசிகிச்சை இன்றி இயற்கையான முறையில் நோய்களை குணப்படுத்தும் ஒரு சிகிச்சை முறையே இந்த ஓஸ்டியே சிகிச்சை முறையாகும். 

இந்த சிகிச்சை முறையானது மேற்கத்தேய நாடுகளில் மிகவும் பிரபல்யமிக்க ஒன்றாகக் காணப்படுகிறது. இலங்கையில் இன்னும் பிரபல்யமடையவில்லை. இந்த சிகிச்சை முறையில்காணப்படுகின்ற விசேட அம்சம் என்னவென்றால் மருந்து மாத்திரை மற்றும் சத்திர சிகிச்சையின்றி நோய்களை குணப்படுத்துவதாகும். 

unnamed__5_.jpg

கேள்வி: இத்துறையில் எத்தனை வருடங்களாக இருக்கின்றீர்கள்? 

பதில்: 18 வருடங்களாக இங்கிலாந்தில் பணியாற்றினேன். அங்கு ஒஸ்டியோபதி மூலம் சிறந்த சேவையாற்றியதுடன் பலரது பாராட்டுகளையும் விருதுகளையும் பெற்றுக் கொண்டேன். அதன் பின்னர் எனது இந்த அனுபவத்தினை எமது தாய் நாட்டிற்கு வழங்க வேண்டுமென்று எண்ணினேன். அதனடிப்படையில் கடந்த நான்கு வருடங்களுக்கு முன்னர் ஒஸ்டியோ முறையிலான சிகிச்சையளிக்கும் நிலையத்தை இலங்கையில் ஆரம்பித்தேன். 

இன்று நாள் ஒன்றுக்கு சுமார் ஐம்பது வரையிலான நோயாளர்கள் எமது வைத்தியசாலைக்கு வருகின்றார்கள். எமது மாலபே வைத்தியசாலையில் சிகிச்சை வழங்குவது போல ரத்தினபுரியிலும் சிகிச்சை முகாம் ஒன்றினை நடத்தி வருகின்றோம். 

கேள்வி: முள்ளந்தண்டு மற்றும் மூட்டுவலி போன்ற வருத்தங்களுக்கு அப்பால் எவ்வாறான நோய்களை ஒஸ்டியோபதி முறையில் குணப்படுத்தலாம். 

 

பதில்: விசேடமாக முள்ளந்தண்டு மற்றும் மூட்டு சம்பந்தமான நோய்களுக்கு சிகிச்சை வழங்கினாலும் தலைவலி (மிக்ரேன்) மரத்துப் போதல், இடுப்புவலி போன்ற பல்வேறு நோய்களை இயற்கை முறையிலான ஒஸ்டியோ முறையில் குணப்படுத்தலாம். இந்த சிசிக்சை முறையில் எவ்வித பக்கவிளைவுகளும் இல்லை. ஆகையால் அச்சமின்றி இந்த சிசிக்சை முறையினை நாடலாம். 

கேள்வி: முள்ளந்தண்டு மற்றும் மூட்டு தேய்மானம் போன்ற பிரச்சினைகள் எந்த தரப்பினரைப் பெரிதும் தாக்குகிறது?

பதில்: ஆண், பெண் பேதமின்றி பலரையும் இந்த பிரச்சினை ஆட்கொள்கிறது. இளையோர் முதல் முதியவர் வரை இந்த நோய்களுக்கு ஆளாகின்றனர். 

உணவு பழக்கங்கள், மாசடைந்து வரும் சூழல் உள்ளிட்ட பல்வேறு காரணிகள் இதில் செல்வாக்குச் செலுத்துகின்றன. 

சாதாரணமாக மூட்டு தேய்மானம் அல்லது கூன் விழுதல் போன்றவற்றுக்கு அப்பால் விபத்துக்களால் கூட மூட்டுக்களில் பாதிப்புகள் ஏற்படுகிறது. எனவே அதன் தன்மைக்கு ஏற்ப சிகிச்சையளிக்க வேண்டும். 

சாதாரணமாக ஆர்த்தரைட்டீஸ் போன்ற நோய்கள் எல்லா வயதினருக்கும் வரக்கூடிய சந்தர்ப்பம் உள்ளது. உதாரணமாக மூட்டுவலி, வீக்கம் மற்றும் மூட்டுக்களை அசைக்கும் போது சத்தம் கேட்டல் போன்றன அதன் அறிகுறிகளாகும்.எனவே இவ்வாறான காரணிகளை அவதானிக்கும் போது உடனே வைத்தியரின ஆலோசனையுடன் சிகிச்சை பெறுவது அவசியமாகும். 

 

கேள்வி: மருந்து மாத்திரைகள் இன்றி சிகிச்சையளிப்பது என்பது சவாலான ஒரு காரியமல்லவா?

 

பதில்: இல்லை எமது பாரம்பரிய வைத்தியத்தை எடுத்துப் பாருங்கள். மருந்து மாத்திரைகளின்றி சத்திரசிகிச்சையின்றி எவ்வளவு பாரிய நோய்களை எல்லாம் குணப்படுத்தியிருக்கிறார்கள். 

இது ஒரு நுட்பமான முறையில் மேற்கொள்ளப்படும் சிகிச்சை முறையாகும். இதற்கு முறையான பயிற்சியளிக்கப்படும். உணவு முறையிலிருந்து உடற் பயிற்சி வரை நாம் வழங்குவோம். அது தொடர்பான தெளிவூட்டல்கள் எமது வைத்தியசாலையில் வழங்கப்படுகிறது. 

சத்திர சிகிச்சை வரை சென்று திரும்பியவர்கள் அல்லது அந்த கட்டத்தை அடைந்தவர்களுக்குக் கூட நாம் ஒஸ்டியோ முறைப்படி சிகிச்சையளித்து குணப்படுத்தியுள்ளோம்.எமது சேவை தொடர்பான மேலதிக தகவல்களை அறிந்துகொள்ள 011 2054433, 011 2054499 என்ற தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்பு கொள்ளலாம் என்றார்.

http://www.virakesari.lk/article/21630

Link to comment
Share on other sites

பூப்பெய்துதல் முதல் மெனோபாஸ் வரை... பெண்கள் எதிர்கொள்ளும் உடல்நலச் சவால்கள்!

 
 

பெண் வலிமையானவள். பல்வேறு பண்பாட்டுத் தொய்வுகளால் தந்தைவழிச் சமூகமாக இன்றைக்குக் காட்சிப்படுத்தப்பட்டாலும், தாய்வழிச் சமூகம்தான் நம் ஆதி என்பதில் எவ்வித ஐயமும் இல்லை. அதற்கானக் கூறுகளை நிலை நிறுத்திக்கொள்ள இன்றளவும் போராட்டம் தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறது. இயற்கையிலேயே உடலாலும் மனதாலும் பெண்கள் மிகப்பெரிய சவால்களைச் சந்திக்கவேண்டியிருக்கிறது. அதை எதிர்கொள்ளும் பக்குவமும், சரியான நேரத்தில் எடுக்கும் தீர்மானமும்தான் பெண்களின் அடுத்தகட்ட உயரிய லட்சியத்துக்கு வழிவகுக்கும். அதற்கான முதல் கட்டமாக, பெண்கள் தங்களின் உடல் மற்றும் மனம் சார்ந்த மாற்றங்களைப் புரிந்துகொள்ள வேண்டும். நம்மை நாம் கையாளக் கற்றுக் கொண்டாலே முறையற்ற பாலின ஈர்ப்பு குறித்த வளர்பருவ தவறுகளில் இருந்து தற்காத்துக்கொள்ளலாம்.

பெண்கள் பிரச்னைகள் 

இன்றைக்கும் பெண் சிசுக்கொலையை முற்றிலுமாக ஒழித்துவிட்டோமா என்றால், `நிச்சயம் இல்லை' என்றுதான் சொல்ல வேண்டும். `பெண்ணாகப் பிறத்தல் சாபம்’ என்கிற பழைய வழக்குநிலைக்குக் காரணம், வரதட்சணை. என்றாலும், பெண் கருவில் தோன்றுவது முதல் வளர்ந்து பூப்பெய்தி, மாதவிடாய்ச் சிக்கல்களை எதிர்கொண்டு, குழந்தைப்பேறு அடைந்து, மாதவிடாய் காலம் நின்று மெனோபாஸ் தன்மைக்கான அடுத்த முதுமைநிலையில் நின்று நிதானிப்பதன் வல்லமையில் இருக்கிறது பெண் எனும் சக்தி.

பாலின உருவாக்கம் கருவிலேயே தொடங்கிவிடுகிறது. அது வளர்பருவ நிலையை அடைந்து, பாலின முதிர்ச்சி பெற்று இனப்பெருக்கத்துக்கான தகுதியை அடைந்து முழுமையடைகிறது. மிக இயல்பான ஒரு சில வேதியியல் மாற்றங்களுக்கு உட்பட்டு தாய்மைக்கான பக்குவநிலையைப் பெண் அடைகிறாள். சந்ததிப் பெருக்கம் என்பது எத்தகைய வரம். அதைக் கைவரப்பெறும் ஆற்றலை இயற்கை பெண்களுக்குக் கொடுத்திருக்கிறது. ஆண், பெண் என்கிற பாலின உருவாக்கத்தில் மூன்று முக்கியக் கூறுகள் இருக்கின்றன. மருத்துவம் சார்ந்த விஷயங்கள் என நம்மை நாமே ஒதுக்கிவைக்க இயலாது. எப்படித்தான் உருவாகிறோம் எனத் தெரிந்துகொள்ள வேண்டாமா? இதை குரோமோசோமல் (chromosomal sex), கொனாடல் (gonadal sex - sex determination), பீனோடைபிக் (phenotypic sex- sex differentiation) என மூன்றாக வகைப்படுத்தியிருக்கிறார்கள்.

குரோமோசோமல் செக்ஸ் என்பது x மற்றும் y என வரையறுத்திருக்கிறார்கள். XX என்பது பெண்களுக்குரியது. XY என்பது ஆண்களுக்குரியது. பிறப்பில் ஆண், பெண் என்கிற உரிமைப் போராட்டம் எல்லாம் கிடையாது. தாயிடம் இருந்து 23 குரோமோசோம்களும், தந்தையிடமிருந்து 23 குரோமோசோம்களும் என மொத்தம் 46 (46,xx: 46,xy) எனச் சரிநிகரில்தான் கரு உருவாகிறது. இரண்டாவதான கொனாடல் செக்ஸில் சினைப்பையின் உருவாக்கம் தொடங்குகிறது. கருவுற்று 46 நாள்களில் இதன் செயல்பாடுகள் தொடங்குகின்றன. கருவுற்ற தாயின் இரண்டாம் பருவநிலையில் (Second trimester - 3 to 6 weeks) வயிற்றில் வளரும் பெண் சிசுவின் சினைப்பையில் தோராயமாக 3 - 7 மில்லியன் ஜெர்ம் செல்ஸ் (ovum) இருக்கக்கூடும். கரு வளர்ந்து பிறக்கிறபோது 1 மில்லியனாகக் குறையும். இறுதியாக `பெண்ணின் இனப்பெருக்கக் காலத்தில் 400 கருமுட்டைகள் மட்டுமே வெளிவரும்' என மருத்துவ ஆராய்ச்சி கூறுகிறது.

மூன்றாவதான பீனோடைபிக் செக்ஸில்தான் உள் மற்றும் வெளிப்புற இனப்பெருக்க உறுப்புகள் கூடவே இரண்டாம் பாலின (Secondary sex) தன்மையும் தீர்மானிக்கப்படுகிறது. இதிலிருந்துதான் தொடங்குகிறது பெண் என்பவளின் உடல்மொழி. பெண் இனப்பெருக்க மண்டலத்தை வழிநடத்துவது, ஒட்டுமொத்தமாக ஹார்மோன்களின் வேலைதான். எந்தவிதக் குளறுபடிகளும் இல்லாத பட்சத்தில், மூளையில் இருக்கக்கூடிய ஹைபோதாலமஸ், பிட்யூட்டரி போன்ற சுரப்பிகளில் இருந்து வரக்கூடிய ஹார்மோன்களின் தகவல்கள்தான் ஒரு பெண் பூப்படைதல் (Puberty), கருமுட்டை வளர்ச்சி (Follicle development), அண்ட அணு வெளியேற்றம் (Ovulation), கரு உருவாகி, கர்ப்பப்பையில் ஒட்டி வளர்வதற்கான திசு உருவாக்கம் (Endometrial lining) போன்ற பணிகள் சிறப்பாக நடந்தேறுகின்றன.

வயிற்று பிரச்னை

முதன்முறையாகப் பெண் இனப்பெருக்க உறுப்பு வழியாக வரக்கூடிய மாதவிலக்கை, `பூப்படைதல்' (Puberty or menarche) என்கின்றனர். அண்டச் சுரப்பிகள் ஈஸ்ட்ரோஜன், புரோஜெஸ்ட்ரோன் எனும் பெண்பால் ஹார்மோன்களைச் சுரக்கின்றன. இந்தக் காலகட்டத்தில் ஹைபோதாலமஸ் எனும் சுரப்பி கொனடோட்ராபின் (Gonadotropin - GnRH) ஹார்மோனைச் சுரக்கிறது. இந்த GnRH, பிட்யூட்டரி சுரப்பிக்குப் பயணப்படுகிறது. அங்கிருந்து பூப்பெய்துதலை ஊக்குவிக்கக்கூடிய லியூட்டினைசிங் (LH) மற்றும் பாலிக்கிள் ஸ்டிமுலேட்டிங் ஹார்மோன் (FSH) போன்றவை சுரக்கின்றன. இவைதான் கர்ப்பப்பையின் இரண்டு பக்கமும் இருக்கக்கூடிய சினைப்பைகளையும் அதில் இருக்கக்கூடிய கருமுட்டைகளையும் வளர்ச்சி அடையத் தூண்டுகின்றன. மாற்றி மாற்றி வாயில் நுழையாத ஹார்மோன்களா நம்மை ஆட்டிப் படைக்கின்றன என அங்கலாய்த்தால், வேறுவழியில்லை. ஆட்டிப்படைக்கவில்லை. பெண்மையை அழகுபடுத்துவதே இந்த ஹார்மோன்கள்தான். இதைத் தெரிந்துகொண்டால் நமக்குள் ஏற்படும் மாற்றங்களைப் புரிந்துகொண்டு அதற்கேற்ப உடலையும் மனதையும் பேணிக்காக்க முடியும்.

பூப்பெய்தும் காலம் என்பது 10 முதல் 16 வயது வரை நிர்ணயிக்கப்படுகிறது. இப்போதெல்லாம் 6 வயது 7 வயது என தலைசுற்ற வைக்கிறார்கள் பெண் பிள்ளைகள். எல்லாவற்றுக்கும் காரணம் ஹார்மோன் ஏற்றப்பட்ட கோழி இறைச்சியும், பால் உணவுகளும், நொறுக்குத்தீனிகளுமே. அத்துடன் மனஅழுத்தத்தை உருவாக்கக்கூடிய சுற்றுச்சூழலும் முக்கியக் காரணமாக அமைகிறது.

பூப்பெய்தும் காலத்துக்கு முன்னதாகவே மார்பக வளர்ச்சி தொடங்கி, காம்புகளில் வலி உணர்வு தோன்றும். இப்படி உடல் தன்னை தயார்படுத்துவதுபோல், பெண் பிள்ளைகள் மனதளவில் இதை ஏற்றுக்கொள்ள ஆயத்தமாக வேண்டும். மேலும், அக்குள் மற்றும் பிறப்பு உறுப்புகளில் மெல்லிய ரோமங்கள் வளரத் தொடங்கும். அவ்வப்போது கெண்டைக்கால் வலி ஏற்படும். இடுப்பு, கை, கால் எலும்புகள் வளர்ச்சி பெறும். உடல் எடை அதிகரித்து, உயரமாக வளரத் தொடங்குவார்கள். எண்ணெய்ப்பசை அதிகமுள்ள தோல் உடைய பெண்களுக்கு அதிகப்படியான பருக்கள் உருவாகும். ஈஸ்ட்ரோஜன் சுரப்பால் எதிர்ப் பாலின ஈர்ப்பு அதிகரிக்கும்.

குழந்தை பிறந்தது முதல் எவ்வித எதிர்பார்ப்பும் அச்சமும் இன்றி விளையாடித் திரிந்த சிறுமிகள் உடலில் ஏற்படும் இத்தகைய திடீர் மாற்றங்களால் நடுங்கிப் போகின்றனர். `நமக்கு என்னவோ ஆகிவிட்டது’ என மனதளவில் மிகப்பெரிய குழப்பமும் கோபமும் உருவாகிறது. தன்னம்பிக்கையைச் சிதைக்கிற வேலைதான். இல்லையென்று சொல்வதற்கில்லை. இருந்தபோதும், அந்த நேரத்தில் பெற்றோர்களும் வீட்டில் உள்ள பெரியவர்களும் ஆறுதலாக இருக்க வேண்டும். மாதவிடாய் காலத்திய சுகாதாரத்தைக் கற்றுக்கொடுப்பது அவசியம். தன் உள் உணர்வுகளை வெளியில் சொல்ல முடியாத குழந்தைகள், தனக்கு மட்டும்தான் இப்படி நடக்கிறதோ எனத் தவறாகப் புரிந்துகொண்டு உளவியல் சிக்கலுக்கு ஆளாகின்றனர். இந்தச் சூழலை அலங்கரிக்கத்தான், `மஞ்சள் நீராட்டு விழா’ எனக் கிராமங்களில் கொண்டாடுகின்றனர். சுற்றம் சூழச் செய்யும் இந்தச் சடங்கினால் பெண் தன்னை மங்கலகரமாக உணர்கிறாள். பெண்ணாகப் பிறந்த அத்தனை பேரும் கடக்கவேண்டிய பூக்கள் நிரப்பிய பாதை இது.

இதன் தொடர்ச்சியாக மாதம் ஒருமுறை 28 அல்லது 35 நாள்கள் கொண்ட காலச் சுழற்சியாக மாதவிலக்கு நடைபெறும். ஒருசில பெண்களுக்குப் பூப்பெய்திய ஓரிரு ஆண்டுகள் கழித்து இச்சுழற்சி முறைப்படுத்தப்படலாம். ஒவ்வொரு சுழற்சியின்போதும் மாற்றங்கள் ஏற்பட்டு, பெண் உடல் கருத்தரிக்கத் தயாராகிறது. மாதம் ஒருமுறை நிகழும் மாதவிடாய் நிலையை நான்கு வகைகளாகப் பிரித்துப் பார்க்கலாம்.

மெனோபாஸ் 

மாதவிடாய்நிலை (Menstrual phase)

மாதவிலக்கு தொடங்கிய முதல் நாளில் இருந்து, ஐந்தாவது நாள் வரை கணக்கிடப்படுகிறது. கரு வளர்வதற்கு ஏதுவான கருச் திசு (Endometrium) கர்ப்பப்பையில் வளர்ச்சி அடைகிறது. கரு பதிந்து தாய்மையடையாத நிலையில், கருத்திசு உதிரத்தோடு வெளியேறிவிடுகிறது. இதைத்தான் மாதவிலக்கு என்கிறோம். 10 முதல் 80 மி.லி அளவு ரத்தம் வெளியேறுகிறது. மாதவிடாய்ச் சுழற்சியின் நீட்டிப்புத் தன்மை சினைப்பையில் இருந்து முட்டை வெளியேறும் நாள்களை வைத்து நிர்ணயம் ஆகிறது. வளர்பருவத்தில் தொடங்கும் சுழற்சி, ஏறக்குறைய 50 வயது வரை நடைபெறுகிறது. மாதவிடைவு நிலையை (Menopause) நெருங்குகிறபோது இச்சுழற்சி நீண்டு பின் முற்றிலுமாக நின்றுவிடும்.

பெருக்க நிலை (Follicular phase)

மாதவிடாய் முதல் நாளில் தொடங்கி 13 நாள்கள் வரை ஃபாலிக்குலர் நிலை கணக்கில் கொள்ளப்படுகிறது. இந்த முதல் 13 நாள்களில் ஹார்மோன்களின் தூண்டுதலால் ஃபாலிக்கிள் முதிர்ச்சி அடைந்து, முட்டை வெடித்து வெளியேறக் காத்திருக்கும்.

அண்ட அணு வெளியேற்ற நிலை (Ovulation phase)

மாதவிடாய் ஆரம்பித்த 14-ம் நாள் பிட்யூட்டரி சுரக்கும் ஹார்மோன்களின் விளைவால், அண்டச் சுரப்பியில் முதிர்ந்த கருமுட்டையானது கர்ப்பப்பை நாளத்தின் (Fallopian tube) வழியாக அதன் ஆம்புல்லாப் பகுதியினை வந்தடையும். ஒற்றை விந்தணு துளைத்து உள்நுழையும் பட்சத்தில் இங்குதான் கருவுறுதல் நடைபெறுகிறது.

முன் மாதவிடாய் நிலை (Luteal phase)

மாதவிடாய்க் காலத்தின் 15-ம் நாளில் இருந்து 28-ம் நாள் வரை இந்த நிலையைக் குறிப்பிடலாம். ஓவுலேஷன் நிலையில் கருத்தரிப்பு நிகழவில்லையெனில், 12 முதல் 24 மணி நேரத்துக்குள் அண்டம் இறந்துவிடும். ஈஸ்ட்ரோஜன் மற்றும் புரொஜெஸ்ட்ரான் ஹார்மோன்களால் கருத்திசு கர்ப்பப்பையில் இருந்து விடுபடும் தருவாயில் இருக்கும். அத்துடன் செயலிழந்த அண்டமும் உதிரத்தோடு வெளியேறக் காத்திருக்கும். அடுத்து வரும் மாதவிடாய் நிலை, அதாவது 28-ம் நாள் மாதவிலக்கு ஏற்பட்டு எண்டோமெட்ரியமும் கருவுறாத முட்டையும் வெளியேறி விடும்.

பெண்களுக்கான பிரச்னைகள்

முன் மாதவிடாய்க் காலத்தில் (Pre menstrual syndrome) ஏற்படும் சிரமங்கள்தான் பெண்களால் சமாளிக்க முடியாத நிலையை உருவாக்குகின்றன. மனதளவில் கடுமையான கோபமும் எரிச்சலும் ஏற்படலாம். உடலளவில் முதுகுத் தண்டுவடத்தில் வலி, தலைவலி, அடிவயிறு பெரிதாகுதல், வாந்தி வருவது போன்ற உணர்வு, மார்பக வலி போன்றவை தோன்றும். ஈஸ்ட்ரோஜன் அதிகரிக்கும்போது ஆத்திரமும் புரோஜெஸ்ட்ரோன் அதிகரிக்கும்போது மனச்சோர்வும் ஏற்படலாம். சில நேரங்களில் தற்கொலைக்கான மனநிலைகூட உருவாகும் என்கிறார்கள். மாதவிலக்கு அடைந்தவுடன் அத்தனை அறிகுறிகளும் மறைந்து மன அமைதி பெறும்.

இது குறித்து சேலத்தைச்சேர்ந்த மகப்பேறு மருத்துவர் சரஸ்வதி கூறுகிறார்...

``பெண் என்பவள் பொதுவாக அமைதியானவள். கோபம் குறைவானவள். சகிப்புத் தன்மையும் பொறுமையும் நிறைந்தவள். இந்த அற்புதக் குணங்கள் இருப்பதனாலேயே பெண்ணால் ஒரு குழந்தையைப் பெற்று வளர்க்கும் சிரமங்களைத் தாங்கி, இந்த உலகத்தை தழைக்கச்செய்ய முடிகிறது. சூழ்நிலைக் காரணிகள் ஒருபக்கம் இருந்தாலும், அறிவியலின்படி அமைதி, ஆனந்தம், ஆத்திரம், கோபம், தாபம் ஆகிய இந்த உணர்வுகள் அனைத்தும் நமது மூளையில் ஏற்படும் ரசாயன மாற்றங்களே. இதை ஒரு பெண்ணிடம் சரியான அளவுக்கு இருக்கச் செய்வது ஈஸ்ட்ரோஜன் மற்றும் புரோஜெஸ்ட்ரோன் ஹார்மோன்கள்தான். 

பருவம் எய்தும்போதும் பருவத்தின்போதும் பருவம் முடியும்போதும் இந்த ஹார்மோன்களின் அளவுகளில் ஏற்றத்தாழ்வுகள் உருவாகின்றன. இதனால் அடிக்கடி எரிச்சலும் அழுகையும் ஏற்படும். உடலில் ஏற்படும் வலியோடு உள்மனதில் ஏற்படும் டாக்டர் சரஸ்வதிமாற்றங்களையும் ஒரு பெண்ணுக்கு இயற்கை அளித்திருப்பது அதன் குற்றம் அல்லாமல் வேறென்ன?’’

எனவேதான், புரிதலுக்கான முன்னெடுப்புகளைத் திரும்பத் திரும்ப வலியுறுத்தவேண்டியிருக்கிறது. அவற்றில் மிக முக்கியமானது, நிரந்தரமாக மாதவிடாய் நிற்கும் காலம். இதைத்தான் ‘மெனோபாஸ்’ எனக் கூறுகிறார்கள். தொடர்ச்சியாக 12 மாதங்கள் மாதவிடாய் வரவில்லை என்றால், அதை மெனோபாஸ் எனக் கருத்தில்கொள்ளலாம். 45 முதல் 55 வயதில் இவை ஏற்படலாம். இது ஒரே நாளில் ஏற்படக்கூடியது அல்ல. நீடித்த செயல்பாடு. காரணம். ஹார்மோன்கள் மாற்றமும் சினைப்பையில் உள்ள ஃபாலிக்கிள் உற்பத்திச் செயல்பாடுகள் குறைவதுமே. முதல் மாதவிலக்கை கணக்கில்கொண்டு, மெனோபாஸ் ஏற்படுவதில்லை. மாதவிலக்கு நிற்பதற்கான தன்மைகள் நான்கு வருட இடைவெளிகளுக்கு முன்னரே ஆரம்பிக்கின்றன. இதை ‘பெரிமெனோபாஸ் (Perimenopause) நிலை’ என்கிறார்கள். இச்சமயத்தில் குழந்தை பிறப்புக்கான ரசாயன மாற்றங்கள் குறைந்துவிடுகின்றன. முறையற்ற சுழற்சி. குறிப்பாக சில நேரங்களில் அதிகமாகவும் பின்னர் குறைவாகவும் உதிரப்போக்கு ஏற்படும். 30 செகண்ட்டில் இருந்து 10 நிமிடங்கள் வரை சூடான உதிரப்போக்கு உண்டாகும். இதனால் இனம் புரியாத நடுக்கம், தோல்கள் சிவப்பாதல், பதற்றத்துடன்கூடிய அதிக வியர்வை உருவாகலாம். பிறப்பு உறுப்பில் வறட்சி, உடலுறவில் நாட்டமின்மை, சிறுநீரகச் செயல்பாட்டில் மாற்றம் போன்றவை ஏற்படும். இவை எல்லாம் மெனோபாஸ் ஆகப்போகும் பெண்கள் அத்தனைப் பேருக்கும் கண்டிப்பாக நிகழும் எனச் சொல்ல முடியாது. பரம்பரைத்தன்மை, வாழ்க்கைத் தரம் போன்றவற்றால் மாறுபடக்கூடும்.

மெனோபாஸ் நிலையின் பக்கவிளைவுகளுக்கும் பெண் முதுமைத் தன்மையின் நோய்க் கூறுகளுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. உடலில் ஏற்படக்கூடிய ரசாயன ஏற்ற இறக்கங்களும், புதிய செல்கள் உருவாகும் பலமிழப்பதும். நோய் எதிர்ப்பு சக்தியைக் குறைத்து, பெண்கள் பிரச்னைஒன்றன் தொடர்ச்சியாக அடுத்தடுத்த நோய்கள் வரவும் காரணமாகின்றன. எலும்பின் கடினத்தன்மை குறைதல் (osteoporosis), இதய மற்றும் சிறுநீரகக் கோளாறுகள் குறிப்பாக LDL எனப்படும் கெட்ட கொழுப்புகள் அதிகரித்தல், உடல் எடை கூடுதல், நினைவாற்றல் மங்குதல், உளச்சோர்வு போன்றவை ஏற்படலாம். பெண் இனப்பெருக்க மண்டலம் என்பது மகப்பேறு மட்டும் சார்ந்ததல்ல. சைக்யாட்ரிஸ்ட் மற்றும் எண்டோகிரைனாலஜிஸ்ட் மருத்துவர்களையும் உள்ளடக்கியது. எந்தவிதக் கோளாறுகளும் இல்லாமல் பெண் இனப்பெருக்கச் செயல்பாடுகள் நடக்கின்றன என்றால் மகிழ்ச்சி. ஆனால், இதில் ஏதேனும் சந்தேகத்துக்குள்ளான சிறிய அறிகுறிகள் தோன்றினாலும், தாமதிக்காமல் மருத்துவ சிகிச்சை மேற்கொள்ள வேண்டும்.

 

மருத்துவ வார்த்தைகளால் மிரட்டுவதற்காக அல்ல மேற்சொன்ன அத்தனை விளக்கங்களும். இவையெல்லாம் நாம் வாழ்கிற வாழ்க்கையை எப்படி தகவமைக்கிறோம் என்பதைப் பொறுத்து மாற்றியமைக்கலாம். இயல்பாக நடக்கக்கூடிய உடல்மொழியின் அடுத்தடுத்த மாற்றங்களை தன்னம்பிக்கையோடு எதிர்கொள்ள வேண்டும். வளர் பருவ பெண்களின் புரிதல் மிகவும் அவசியமானது. உங்கள் பாடத் திட்டங்களில் உள்ள `பெண் இனப்பெருக்க மண்டலம்’ என்பது, தேர்வுக்கான சாய்ஸில் விடுவதற்கு அல்ல. நாம் யார் என்பதை உணர்வுபூர்வமாக என்பதோடு அறிவியல்ரீதியாகவும் உணர வேண்டும். செயற்கை உரமில்லாத இயற்கை உணவுகள், பழங்கள், காய்கறிகள், தானிய வகைகளை உட்கொள்ளுங்கள். மனதுக்குப் பிடித்த இசை, விளையாட்டு, கலைகள், இயற்கைக் காட்சிகள், சமூக சேவை என மனதைக் குதூகலமாக வைத்திருங்கள். அந்தந்த வயதுக்கான மாற்றங்களை எளிமையாகக் கையாண்டு, இந்தச் சமூகத்தை திடத்தோடு எதிர்கொள்ளுங்கள். சிறு குழந்தைகளை, பெண்களை, தாய்மார்களை, மூதாட்டிகளை அரவணைத்து போற்றிப் பாதுகாக்க வேண்டும். பெண்களே பெண்களைக் கொண்டாடும் நிலை முதலில் வர வேண்டும். இயற்கை தரும் இத்தகையச் சவால்களை வென்று சாதிக்கும் பெண்கள் நிச்சயம் வலிமையானவர்களே!

http://www.vikatan.com/news/health/94615-common-girls-health-problems-and-their-solutions.html

Link to comment
Share on other sites

தூக்கக் குறைபாடு எப்படி மூளையைப் பாதிக்கும்?

 

போதிய தூக்கம் இல்லாமையால் மூளையில் ஏற்படும் விளைவுகள் குறித்த மிகப் பெரிய ஆய்வு ஒன்றை கனடாவில் உள்ள விஞ்ஞானிகள் மேற்கொண்டுள்ளனர்.

தூக்கக் குறைபாடு எப்படி மூளையைப் பாதிக்கும்?படத்தின் காப்புரிமைELENATHEWISE

இந்த ஆய்வுக்காக தாங்கள் நடத்தும் இணைய வழி அறிவுத் திறன் பரிசோதனைகளில் பங்கேற்கும்படி உலகெங்கும் உள்ள மக்களை ஒன்டாரியோவில் உள்ள வெஸ்டர்ன் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் குழு கேட்டுக்கொண்டுள்ளது.

பகுத்தறியும் திறன், மொழியைப் புரிந்துகொள்ளும் ஆற்றல், முடிவெடுத்தல் ஆகிய திறன்களை இந்த ஆய்வுக்கென சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ள கணினி வழி விளையாட்டுகள் பரிசோதிக்கின்றன.

பி.பி.சி. மருத்துவச் செய்தியாளர் ஃபெர்கஸ் வால்ஷ் இந்தப் பரிசோதனையில் தாமாக முன்வந்து கலந்துகொண்டார்.

வெஸ்டர்ன் பல்கலைக்கழகத்தை சேர்ந்த நரம்பியல் விஞ்ஞானி, பேராசிரியர் ஆட்ரியன் ஓவென் இந்த ஆய்வை நடத்துகிறார்.

"போதிய தூக்கம் இல்லாவிட்டால் எப்படி இருக்கும் என்று நமக்குத் தெரியும். ஆனால், அது மூளையில் ஏற்படுத்தும் விளைவுகள் குறித்து நமக்கு குறைவாகவே தெரியும். அறிவாற்றல், நினைவுத் திறன், கவனம் குவித்தல் ஆகியவற்றை தூக்கமின்மை எப்படிப் பாதிக்கிறது என்பதை நாம் பார்க்கவேண்டும்" என்கிறார் பேரா. ஓவென்.

பரிசோதனையில் தங்களை ஈடுபடுத்திக்கொள்வோர் ஒவ்வொருவரும் இவ் விளையாட்டுகளில் பெறும் புள்ளிகளை ஆய்வுக் குழு தொகுக்கும். ஒவ்வொருவரும் தூங்கிய நேரத்தின் அடிப்படையில் அவர்கள் பெற்ற புள்ளிகளின் வேறுபாடுகளை ஆய்வு செய்யும்.

ஒவ்வொருவருக்கும் வெவ்வேறு அளவு உறக்கம் தேவைப்படும். ஆனால், போதிய அளவு மக்கள் இந்தப் பரிசோதனையில் பங்கேற்க முன்வந்தால். நல்லமுறையில் மூளை செயல்படத் தேவையான சராசரித் தூக்க நேரம் குறித்துத் தீர்மானிக்க அது விஞ்ஞானிகளுக்கு உதவக்கூடும்.

பரிசோதனையில் தங்களை ஈடுபடுத்திக்கொள்ள தன்னார்வலர்களாக முன்வந்த வேறு நான்கு பேருடன் ஃபெர்கஸ் வால்ஷும் பரிசோதனையில் பங்கேற்றார். போதுமான உறக்கமின்மை எப்படி அறிவாற்றலைப் பாதிக்கிறது என்பதை அவர்கள் விளையாடிய கணினி சார்ந்த விளையாட்டுகள் காட்டின.

தூக்கக் குறைபாடு எப்படி மூளையைப் பாதிக்கும்?படத்தின் காப்புரிமைFERGUS WALSH

வால்ஷுடன் பங்கேற்ற தன்னார்வலர்கள்:

1.ஹூமன் கஞ்ஜாவி, வயது 42, உளவியல் மருத்துவர்.

வழக்கமாக நோயாளிகளைப் பார்ப்பதற்காக இரவு நேரங்களில் அழைக்கப்படுபவர். "சாதாரணமாக ஓர் இரவில் 4-5 மணி நேரம் தூங்குவேன். போதிய உறக்கமின்மையால் இருதய நோயும், முடக்குவாதமும் ஏற்படும் ஆபத்து அதிகம் என்பது எனக்குத் தெரியும். ஆனால், பல டாக்டர்களைப் போலவே நானும் அந்த ஆபத்தை எனக்குப் பொருத்திப் பார்ப்பதில்லை," என்கிறார் அவர்.

2.ஐந்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் இருவரின் தாயான சில்வி சலேவ்ஸ்கி, வயது 31.

"நல்ல இரவு என்பது, குழந்தைகள் என்னை இரண்டு மூன்று தடவைகள் மட்டுமே எழுப்பும் இரவுதான். இரவு முழுவதும் தொந்தரவு இல்லாமல் தூங்குவது எப்படி இருக்கும் என்றே எனக்கு மறந்து போனது. பெரும்பாலும் தூக்கமில்லாத இரவின் மறுநாள் பகல் பொழுது தூக்கக் கலக்கமாகவே இருக்கும்," என்கிறார் அவர்.

3.இவான் ஆக்னியூ, 75 வயது.

"ஒரே நேரத்தில் எட்டுமணி நேரம் தூங்கவேண்டும் என்பதில்லை எனக்கு. என் வயதில் எனக்கு ஒரு நேரத்தில் நான்கு மணி நேரத் தூக்கம் போதுமானது. அதன் பிறகு ஓரிரு முறை குட்டித்தூக்கம் போட்டுக்கொள்ளலாம்," என்கிறார்.

4.இரவில் நடமாடும் எலிகள் குறித்து ஆய்வு செய்யும் நரம்பியல் விஞ்ஞானி சிசிலியா க்ராமர், வயது 31.

இவர் இரவில் நீண்ட நேரம் ஆய்வகத்தில் இருப்பவர். "போதிய உறக்கமில்லை எனில், ஆய்வுக்கட்டுரை படிப்பது போன்ற சிக்கலான விஷயங்களை மறுநாள் செய்ய முடிவதில்லை," என்றார் அவர்.

தூக்கக் குறைபாடு எப்படி மூளையைப் பாதிக்கும்?படத்தின் காப்புரிமைOWEN LAB, WESTERN

பரிசோதனைகள்

இந்தப் பரிசோதனைகளுக்காக வடிவமைக்கப்பட்ட விளையாட்டுகளை கணினி, வரைப்பட்டிகை, திறன்பேசிகள் ஆகிய எதிலும் விளையாடலாம்.

'டபுள் டிரபிள்' என்னும் விளையாட்டில் நிறங்களின் பெயர்கள் வேறு நிறங்களில் எழுதப்பட்டிருக்கும். அதன் கீழே அளிக்கப்பட்டுள்ள பதில்களில் அந்த நிறங்களின் பெயர்கள் எந்த நிறத்தில் எழுதப்பட்டுள்ளதோ அந்த நிறத்தில் எழுதப்பட்ட சொல்லை செய்யவேண்டும். எடுத்துக்காட்டாக ஊதா என்ற நிறத்தின் பெயர் சிவப்பு வண்ணத்தில் எழுதப்பட்டிருந்தால், நீங்கள் சிவப்பு வண்ணத்தில் எழுதப்பட்ட சொல்லைக் கிளிக் செய்யவேண்டும். அந்த சொல் ஊதா என்பதாகக்கூட எழுதப்பட்டிருக்கலாம். குழப்புகிறதா இல்லையா!

'ஆட் ஒன் அவுட்' என்ற விளையாட்டு எளிதுபோலத் தோன்றும். ஆனால், மற்றதில் இருந்து மாறுபடும் ஓர் உருவத்தைத் தேர்வு செய்யும்போது அது சிக்கலாக மாறும். 'இலக்கண அறிவுச் சோதனை', 'தூர அளவுத் திட்டமிடல்' ஆகிய விளையாட்டுகளும் சவாலானவையே.

தூக்கக் குறைபாடு எப்படி மூளையைப் பாதிக்கும்?படத்தின் காப்புரிமைOWEN LAB, WESTERN

எப்படி பரிசோதனை நடந்தது?

இரவில் ஒருமுறையும், அதிகாலை 4 மணி வரை விழித்திருந்து, பிறகு நான்கு மணி நேரம் மட்டுமே தூங்கி எழுந்தபிறகு ஒருமுறையும் இந்த விளையாட்டுகளை இவர்கள் விளையாடினார்கள். இவான், சிசிலியா மற்றும் வால்ஷ் ஆகியோர் மறுநாள் காலை மிக மோசமாகவே விளையாடினர். சில்வியா மட்டுமே இரவைவிட அதிக புள்ளிகள் பெற்றிருந்தார். ஹூமன் பெற்ற புள்ளிகளில் பெரிய வீழ்ச்சி இல்லை. காலையில் கொஞ்சம் தூக்கக் கலக்கமாக இருந்தாலும், குழந்தைகள் எழுந்த உடனே எழுந்து அவர்களுக்குத் தேவையானதை செய்வது தமக்குப் பழக்கம் என்பதால் தூக்கமில்லாத இரவுக்குப் பிந்திய நாளில் வேலை செய்வது தமக்குப் புதிதில்லை என்றார் அவர்.

தமது மூளையில் என்ன நடக்கிறது என்பதை அறியும் ஆர்வத்தால், எம்.ஆர்.ஐ. ஸ்கேன் அறையில் இருக்கும்போது ஃபெர்குஸ் வால்ஷ் அறிவுத் திறன் சோதனைகளை செய்து பார்த்தார். வழக்கப்படி தூங்கிய இரவுக்குப் பிறகு ஒருமுறையும், போதிய உறக்கமில்லாத இரவுக்குப் பிறகு ஒருமுறையும் அறிவுத் திறன் சோதனைகளைச் செய்யும்போது எம்.ஆர்.ஐ. ஸ்கேன் எடுத்துக்கொண்டார். மூளையின் ரத்த ஓட்டத்தை அடையாளம் காணும் வகையில் எடுக்கப்பட்ட ஸ்கேன் அது. கூடுதலாக செயல்பட்டுக்கொண்டிருந்த மூளையின் பகுதிகளை ஆரஞ்சு வண்ணத் திட்டுகளாக ஸ்கேன் அடையாளம் காட்டியது.

தூக்கக் குறைபாடு எப்படி மூளையைப் பாதிக்கும்?படத்தின் காப்புரிமைOWEN LAB, WESTERN

நல்ல உறக்கத்துக்குப் பின்னும், போதிய தூக்கமில்லாத நிலையிலும் எடுக்கப்பட்ட ஸ்கேன்கள் பளீரென வேறுபாடுகளைக் காட்டின. தூக்கமின்மைக்குப் பிறகு தமது மூளையின் செயல்பாடு வெகுவாகக் குறைந்திருந்ததை ஃபெர்குஸ் வால்ஷின் கவனித்தார்.

ஏன் தூக்கம் முக்கியமானது?

நாம் நம் வாழ்வின் மூன்றில் ஒரு பங்கினை தூக்கத்திலேயே செலவிடுகிறோம். உணவும் சுவாசிக்க நல்ல காற்றும் நமக்கு எவ்வளவு முக்கியமோ அவ்வளவு தூரம் தூக்கமும் முக்கியம்.

ஆனால், '24-மணி நேரப் பண்பாடு' காரணமாக நாம் முன்னெப்போதையும் விட மிகக் குறைவாகவே தூங்குகிறோம்.

தூக்கக் குறைபாடு எப்படி மூளையைப் பாதிக்கும்?படத்தின் காப்புரிமைFERGUS WALSH

நாள்பட்ட தூக்கமின்மை நிலையால் மூளையில் ஏற்படும் விளைவுகள் குறித்து நாம் மிகமிகக் குறைவாகவே புரிதலைக் கொண்டிருக்கிறோம் என்கிறது 'நேச்சர் ரிவ்யூஸ் நியூரோசயின்ஸ்' சஞ்சிகையில் கடந்த மாதம் வெளியான ஒரு கட்டுரை. தொழில் மயமான நாடுகள் அனைத்திலும் தூக்க நேரம் மிகவும் குறைந்திருப்பதை சுட்டிக்காட்டி இது குறித்த மேலதிக ஆய்வுகள் அவசரத் தேவை என்று குறிப்பிட்டுள்ளது அக்கட்டுரை.

வெஸ்டர்ன் பல்கலைக்கழகத்தின் உறக்க ஆராய்ச்சிக்கான இப் பரிசோதனைகளில் தன்னார்வமாகப் பங்கேற்போர் இந்தப் பிரச்சினையில் சமூகத்துக்கும், அறிவியலுக்கும் தேவையான விடைகளைக் கண்டறிய உதவமுடியும்.

http://www.bbc.com/tamil/global-40545479

Link to comment
Share on other sites

சர்க்கரை நோயாளிகள் வெந்தயம் சாப்பிடுவது எதற்காக?

வெந்தயம் உடலுக்கு குளிர்ச்சியைத் தருவதோடு மட்டுமல்லாமல் சர்க்கரை நோய் மற்றும் கொலஸ்ட்ரால் பிரச்சனைகளுக்கும் மருந்தாக பயன்படுகிறது.

 
 
சர்க்கரை நோயாளிகள் வெந்தயம் சாப்பிடுவது எதற்காக?
 

வெந்தயம் உடலுக்கு குளிர்ச்சியைத் தருவதோடு மட்டுமல்லாமல் சர்க்கரை நோய் மற்றும் கொலஸ்ட்ரால் பிரச்சனைகளுக்கும் மருந்தாக பயன்படுகிறது.

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை எல்லோருக்கும் ஏற்றது வெந்தயம். வெந்தயம் உடலுக்கு குளிர்ச்சியைத் தருவதோடு மட்டுமல்லாமல் சர்க்கரை நோய் மற்றும் கொலஸ்ட்ரால் பிரச்சனைகளுக்கும் மருந்தாக பயன்படுகிறது.

வெந்தயத்தில் உள்ள சத்துக்கள் :

புரதச்சத்து
சுண்ணாம்புச் சத்து
பாஸ்பரஸ்
பொட்டாசியம்
சோடியம்
இரும்புச் சத்து
விட்டமின் ஏ
தையாமின்
நிக்கோடினிக் அமிலம்

ஆகிய சத்துப் பொருட்கள் கணிசமாக அடங்கியுள்ளன.

சர்க்கரை நோயாளிகளுக்கு எதற்காக நல்லது?

சாதாரணமாக நமது ரத்தத்தில் சர்க்கரையின் அளவு 80 - 110 மி.லி வரை இருக்கலாம். நாம் எடுத்துக் கொள்கிற உணவு, அதன் கலோரி போன்றவற்றைப் பொறுத்து இந்த சர்க்கரையின் அளவு வேறுபடும்.

அதிக கலோரி உணவு உட்கொள்கிற போது, சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்துவதுதான் இன்சுலினின் வேலை. நீரிழிவுக்காரர்களுக்கு இந்த இன்சுலின் சுரப்பு சரியாக இருக்காது. அந்த இன்சுலின் சுரப்பை ஊக்கப்படுத்தி, கிரியா ஊக்கியாக செயல்படுகிற வேலையைத் தான் வெந்தயம் செய்கிறது.

தினமும் இரவில் 1 டீஸ்பூன் வெந்தயத்தை தண்ணீரில் ஊற வைத்துவிட்டு, மறுநாள் காலையில் அந்தத் தண்ணீரோடு, வெந்தயத்தையும் சேர்த்து எடுத்துக் கொண்டால், ரத்தத்தில் சர்க்கரையின் அளவு கட்டுக்குள் வரும். கொலஸ்ட்ராலை கட்டுப்படுத்துவதிலும் வெந்தயத்துக்கு மிகப்பெரிய பங்குண்டு.
 

http://www.maalaimalar.com/Health/GeneralMedicine/2017/07/09152910/1095425/Diabetes-patient-why-eating-Fenugreek.vpf

Link to comment
Share on other sites

நீங்கள் பீர் பிரியரா? சிறுநீரகக் கற்கள் கவனம் பாஸ்!

``ரொம்ப ஹீட்டா ஆகிடுச்சுடா உடம்பு’’ எனச் சொல்லப்போக, ``ஜில்லுனு ஒரு பீர் அடி... சரியாப் போயிடும்’’ என்கிற நண்பர்களின் பேச்சைக் கேட்டு பீர் குடிக்க ஆரம்பித்தவர்கள் அதிகம்.

பீர்

``என்னடா நாளுக்கு நாள் ஒல்லியாகிட்டே போறே... வாரத்துக்கு ரெண்டு பீர் குடி... உடம்பு வெயிட் போட்டுடும்’’ என்று நம்மைவிட மூத்தவர்கள் சிலர் சொல்லும் பேச்சைக்கேட்டு குடிக்க ஆரம்பித்தவர்கள் பலர்.

இதில், ``பீர் ஒண்ணும் பிரச்னை பண்ணாது. உடம்புக்கு ரொம்ப நல்லது. விஸ்கி, பிராந்திதான் கெடுதல்’’ என்று  அட்வைஸ் வேறு.

``மற்ற மதுவகைகளைவிட பீர் உடலுக்கு நல்லது'' என ஆந்திர அமைச்சர் கொத்தபலி சாமுவேல் ஜவஹர் வேறு வெடி பற்றவைத்திருக்கிறார். 

பீரைப் பற்றி பல்வேறு சந்தர்ப்பங்களில் பல்வேறு கருத்துகள் மாறி மாறி சொல்லப்பட்டு வந்திருக்கின்றன.

சிறுநீரகக் கல் பாதிப்பு

இந்த நிலையில் போன வாரம் அலுவலக நண்பர் ஒருவர் திடீரென்று இரண்டு நாள்கள் விடுமுறை எடுத்திருந்தார். என்ன காரணம் என்று விசாரித்தபோது 'சிறுநீரகக் கல் பாதிப்பு' என்றார். மேலும், அதற்கு அவர் சொன்ன காரணம் அதிர்ச்சியாக இருந்தது.

`` 'சிறுநீரகக் கல்லின் அளவு சிறியதாக இருக்கும்போது  பீர் குடித்தால் சரி ஆகிவிடும்' என்று நண்பர்கள் சிலர் தவறாக அறிவுரை கூறியுள்ளனர். அவர்களின் பேச்சைக் கேட்டு, தொடர்ச்சியாகக் குடித்ததால் இன்று கல்லின் அளவு பெரியதாகியிருக்கிறது,மருத்துவர் மீனாட்சி பஜாஜ்

மாத்திரைகளாலேயே கரைத்துவிடலாம் என்று சொன்ன மருத்துவர், இன்று அறுவைசிகிச்சை செய்தால்தான் கரைக்கமுடியும் என்று கைவிரித்திருக்கிறார்" என்றார்.

பீர் பற்றி நிலவும் கருத்துகளில் எது உண்மை? ஊட்டச்சத்து நிபுணர் மீனாட்சி பஜாஜிடம் கேட்டோம்.

"பீரில் அதிகமாக ஆக்ஸிலேட் மற்றும் யூரிக் ஆஸிட் அமிலங்கள் உள்ளன. சிறுநீரக பாதிப்புகள் உள்ள ஒருவர் பீர் குடிக்கும்போது இவை அதிகமாவதற்கான வாய்ப்புகள் உள்ளன. இதனால், மிகப்பெரிய பாதிப்புகள் உண்டாகும். 'வயிறு தொடர்பான தொந்தரவு உள்ளவர்கள்  பீர் குடித்தால் சரியாகிவிடும்' என்று தவறான கருத்துகள் பரப்பப்பட்டுவருகின்றன. குடல் தொடர்பான பிரச்னை உள்ளவர்கள் கண்டிப்பாக பீர் அருந்தவே கூடாது. மேலும், உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்கள், இதய நோய்கள் உள்ளவர்கள், கேன்சர் நோயால் பாதிக்கப்பட்டவர்கள், எப்போதும் சூடான சூழலில் வேலை செய்யும் டிரைவர்கள், மெஷினில் வேலை பார்ப்பவர்கள், அல்சர் பாதிப்பு உள்ளவர்கள், கல்லீரல் பாதிப்புகள் உள்ளவர்கள் அனைவருமே பீரைக் கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும்" என்றார்.

மருத்துவர் சேகர் பீர் குடித்தால் சிறுநீரகக் கற்கள் கரையும் என்று செய்திகள் பரப்பப்பட்டு வருகிறதே என்று சிறுநீரக சிறப்பு மருத்துவர் சேகரிடம் கேட்டோம். 

"பீரை தொடர்ச்சியாக குடித்து வருபவர்களுக்கு யூரிக் ஆசிட் கற்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் நிச்சயம் உண்டு. ஏற்கெனவே கல் இருப்பவர்களுக்கு, அதிகமாகவும் வாய்ப்புண்டு.  'பீர் குடித்தால் சிறுநீரகக் கற்கள் கரைந்துவிடும்' என்பது  தவறான தகவல். சிறுநீரகக் கற்களால் பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவரை அணுகி சிகிச்சை பெறுவதே நல்லது" என்றார்.

பீர், பல பிரச்னைகளுக்கு தீர்வு என்றும், பல நோய்களைத் தீர்க்கும் என்றும் தவறான தகவல்கள் பரப்பப்பட்டு வருகின்றன. பீர் மதுவே அல்ல என்ற பிம்பமும் ஏற்படுத்தப்படுகிறது. உண்மையில், பீர் குடிப்பதால் உடலுக்கு பல்வேறு தீமைகளே உண்டாகின்றன.

சிறுநீரகக் கல் அடைப்பு

 

 

தொடர்ந்து குடித்து வருபவர்களுக்கு கல்லீரல் பாதிப்பு ஏற்படவும்  வாய்ப்புண்டு. மது ஒருபோதும் எந்த நோய்க்கும் மருந்தாகாது. அது தனிமனிதனுக்கும் சமுதாயத்துக்கும் கேடுவிளைவிப்பதாக மட்டுமே இருக்கும். 

http://www.vikatan.com/news/health/94950-drinking-beer-may-cause-kidney-stones.html

Link to comment
Share on other sites

சூலகப் புற்றுநோய்க்கான அறிகுறிகள்

 

பெண் நோயி­யலில் பல நோய்கள் உள்­ளன. அவற்றில் சில மிகவும் பார­தூ­ர­மான கடு­மை­யான நோய்­க­ளாக உள்­ளன. அவற்றில் புற்­று­நோய்கள் என்­றாலே எவரும் அஞ்ச வேண்­டிய விடயம். பெண்­களில் சூல­கத்தில் ஏற்­படும் சூலகப் புற்­று­நோய்கள் மிகவும் கொடூ­ர­மான நோயா­கவே இருந்த வண்ணம் உள்­ளது. பெண் நோயி­யலில் எனது கடந்த பல வரு­ட­கால சேவையின் அனு­ப­வத்தில் இருந்து உணர்ந்த விட­யங்­களை உங்­க­ளிடம் பகிர்ந்து கொள்­கின்றேன்.

Image result for சூலகப் புற்­று­நோய்கள்

நோய்கள் ஏற்­ப­டும்­போது நோய் அறி­கு­றி­களும் தெரி­வது வழக்கம். ஆனால் சூலகப் புற்­றுநோய் என்­பது நோய் அறி­கு­றிகள் எதுவும் வெளிக்­காட்­டாமல் குறு­கிய காலத்­தி­லேயே வளர்ந்து, படர்ந்து நோயாகத் தீவி­ர­ம­டைந்து ஆபத்­தான நிலைக்கு பெண்­களை இட்­டுச் ­செல்­வது மிகவும் வருந்­தத்­தக்க விட­ய­மாக உள்­ளது. கடந்த சில வரு­டங்­க­ளி­லேயே நடுத்­தர வய­து­டைய 35– 40 வயதுப் பெண்கள் கூட இவ்­வாறு சூலகப் புற்­று­நோயால் பாதிக்­கப்­பட்டு திடீர் என வந்து நிற்­கும்­போது மிகவும் கவ­லை­யாக உள்­ளது. இவர்­களில் பெரும்­பா­லா­ன­வர்கள் தமக்கு நோய் அறி­கு­றிகள் எதுவும் இருக்­க­வில்­லையே எனத்தான் கூறு­கி­றார்கள். இவ்­வாறு பாதிக்­கப்­பட்­ட­வர்கள் இவ்­வா­றான சூலகப் புற்­று­நோய்­களை ஆரம்­பத்­தி­லேயே கண்­ட­றிய பரி­சோ­த­னைகள்  இல்­லையா? என்ற கேள்­வி­யைத்தான் எழுப்­பு­வார்கள். இதற்­கான பதில் என்­ன­வென்றால் மற்­றைய நோய்­களைப் போல் நோய் ஆரம்­பிக்கும் போதே சரி­யாக கண்­ட­றியக் கூடிய பரி­சோ­த­னைகள் இல்லை என்று தான் சொல்ல வேண்டும். எனவே ஆரம்­பத்தில் சரி­யான நோய் அறி­கு­றி­களும் சரி­யான ஆரம்ப பரி­சோ­த­னை­களும் இல்­லாமல் குறு­கிய காலத்­தி­லேயே ஆபத்­தான நோயாக உரு­வெ­டுக்கும் சூலகப் புற்றுநோய் பற்றி பெண்கள் நன்கு அறிந்­தி­ருப்­பது அவ­சியம்.

சூலகப் புற்­று­நோய்கள் பெண்­களின் சூல­கத்தில் இருந்து ஆரம்­பிக்­கின்­றது. ஒவ்­வொரு பெண்­ணிலும் இரண்டு சூல­கங்கள் கர்ப்பப்பையின் அருகில் உள்­ளன. சூலகப் புற்­றுநோய் சூல­கத்தில் சிறிய கட்­டி­யாக ஆரம்­பித்து பின்னர் மிக­வி­ரைவில் அருகிலுள்ள இழை­யங்­க­ளுக்கும் பரவத் தொடங்­கு­கின்­றது. கறையான் புற்­றெ­டுப்­ப­துபோல் புற்­று­நோயும் புற்று புற்­றாக பரந்து படர்­கின்­றது. இத்­த­கைய சூலகப் புற்­றுநோய் பர­வும்­போது பெண்ணின் அடி வயிற்றில் உள்ள உள் உறுப்­புகள் யாவும் ஒன்­றுடன் ஒன்று ஒட்­டப்­பட்டு நோய்த் தாக்­கத்­துக்கு உள்­ளா­கின்­றன. இதனால் தான் சூலகப் புற்­றுநோய் மற்­றைய உறுப்­பு­க­ளுக்கும் பர­விய பின்னர் அறுவைச் சிகிச்சை செய்து அகற்­று­வதும் கடி­ன­மாக உள்­ளது. சில வேளை­களில் அறுவைச் சிகிச்சை செய்ய முடி­யாத நிலை­மையும் ஏற்­படும். இவ்­வாறான நிலை­மை­யி­ருந்தால் இந்­நோயை குண­மாக்­கு­வதும் கடி­ன­மா­கத்தான் இருக்கும்.

எனவே சூலகப் புற்­று­நோய்கள் மிக ஆரம்­பத்­தி­லேயே கண்­ட­றி­யப்­பட வேண்­டிய நோயாக உள்­ளது. ஏனெனில் ஆரம்­பத்தில் கண்­ட­றி­யப்­ப­டும்­போது சிகிச்சை அளிப்­பதற்கு சுக­மா­கவே இருக்கும். சிகிச்சை மூலம் நோயை குண­மாக்­கு­வதும் சுல­ப­மாக இருக்கும். 

சூலகப் புற்­றுநோய் ஏற்­பட பரம்­ப­ரைக்­கா­ர­ணி­களும் முக்­கிய பங்கு வகிக்­கின்­றன. குடும்ப பரம்­பரை, தாய்­வழி உற­வு­களின் நிற­மூர்த்­தங்­களும் இதற்கு பொறுப்­பாக உள்­ளன. எனவே பரம்­ப­ரையில் இது போன்ற சூலகப் புற்­றுநோய் உள்­ள­வர்கள் கூடுதல் கவ­ன­மெ­டுத்து தகுந்த  பரி­சோ­த­னைகள் செய்ய வேண்டும். எனினும் இது போன்ற சூலகப் புற்­று­நோயை நோய் அறி­கு­றிகள் வரும்­வரை காத்­தி­ருக்க முடி­யாது. இதற்கும் மேலே நாம் நோயை முளை அரும்­பி­லேயே கிள்ளி எறிய வேண்டும் என்றால் சில பரி­சோ­த­னை­களை நடுத்­தர வய­து­டைய பெண்­களில் வருடம் ஒரு­முறை செய்­து­வர வேண்டும். அதா­வது 35 வயது பெண்­களிலிருந்து இதனை ஆரம்­பிக்க வேண்டும். இதற்கு சாதா­ரண ஸ்கேன் பரி­சோ­தனை மற்றும் இரத்­தத்தில் செய்­யப்­படும் Ca 125 என்ற பரி­சோ­தனை பெரிதும் உதவியளிக்­கின்­றது.

இவ்­வா­றான பரி­சோ­த­னையில் சந்­தே­கங்கள் இருக்­கும்­போது அல்­லது சூல­கத்தில் கட்டி ஆரம்­பிக்­கும்­போது மேலும் தொடர்ந்து தாம­திக்­காமல் உரிய நட­வ­டிக்கை எடுக்க வேண்டும். இதற்கு சில வேளை­களில் CT ஸ்கேன் பரி­சோ­தனை அல்­லது லப்­பி­ரஸ்­கோப்பி பரி­சோ­தனை பெரிதும் உதவி தரும். இதன் மூலம் சரி­யான நோயைக் கண்­ட­றிந்து அதன்­போது புற்­று­நோ­யாக இருந்தால் பாதிக்­கப்­பட்ட சூல­கத்­தையோ அல்­லது சூல­கத்­துடன் சேர்த்து கர்ப்­பப்­பை­யையோ அகற்ற வேண்டும். இதன் மூலம் நோயிலிருந்து விடுபட முடியும்.

எனவே சூலகப் புற்றுநோய் என்பது குறிப்பான நோய் அறிகுறிகள் இல்லாது திடீரென சூலகத்தில் கட்டியாக வளரும் ஒரு நோயாகும். நோய் குறுகிய காலத்தில் அருகிலுள்ள உறுப்புகளுக்கு பரவக்கூடும். எனவே ஒழுங்கான பரிசோதனைகள், வைத்திய ஆலோசனைகள், ஸ்கேன் பரிசோதனைகள், இரத்தப் பரிசோதனைகள் கிரமமாக மேற்கொள்வதன் மூலம் நோய்கள் வருமுன் கண்டறியலாம்.

http://www.virakesari.lk/article/21711

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • காசிக்குப் போறவை திரும்ப வந்து அதிக காலம் உயிரோடு இருப்பதில்லை என்று சொல்வார்கள். உண்மையா என்று தெரியவில்லை. ஆனால் என நபர் ஒருவர் அங்கு சென்றுவந்து 3 ஆண்டுகளில் இறந்துவிட்டார்.
    • கடந்த மாவீரர் தினத்திலும் ஐயா வந்து சிறிய சொற்பொழிவாற்றி இருந்தார்.
    • 'உரையாடலின் அறுவடை' என்னும் இரா. இராகுலனின் இந்தக் கவிதையை 'அகழ்' இதழில் இன்று பார்த்தேன். பல வருடங்களின் முன்னர் ஒரு அயலவர் இருந்தார். இந்தியாவில் ஒரு காலத்தில் ஐஐடி ஒன்று மட்டுமே இருந்தது. அந்தக் காலத்தில் அவர் அந்த ஐஐடியில் படித்தவர் என்று சொன்னார். அவரிடம் அபாரமான நினைவாற்றலும், தர்க்க அறிவும் இருந்தன. இங்கு அவர் எவருடனும் பழகியதாகவோ, அவருடன் எவரும் பழகியதாகவோ தெரியவில்லை. அவருடன் கதைப்பது சிரமமான ஒரு விடயம் தான். அவர் சொல்லும் பல விடயங்கள் என் தலைக்கு மேலாலேயே போய்க் கொண்டிருந்தன. அதனாலேயே அவரை எல்லோரும் தவிர்த்தனர் போலும்.     நான் எப்போதும் அவருடன் ஏதாவது கதைக்க முற்படுவேன். அவர் அடிக்கடி சலித்துக் கொள்வார், நான் ஒரு போதும் அவரிடம் ஒரு கேள்வியும் கேட்பதில்லை என்று. அவர் சொல்லும் விடயங்கள் சுத்தமாகப் புரியாமல் இருக்கும் போது, நான் என்ன கேள்வியை கேட்பது? அவர் இப்பொழுது இங்கில்லை. இந்தப் பூமியிலேயே இல்லை. இன்று இந்தக் கவிதையை பார்த்த பொழுது அவரின் நினைவு வந்தது.  '....கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது....'  என்ற வரிகளில் அவர் தெரிந்தார். *************    உரையாடலின் அறுவடை (இரா. இராகுலன்) ------------------------- கேட்கும் கேள்விகளிலிருந்தும் அளிக்கும் பதில்களிலிருந்தும் கடைபிடிக்கும் மௌனத்திலிருந்தும் நமக்கிடையேயான தூரத்தை நாம் நிர்ணயித்துக்கொள்கிறோம் தொடர்ந்து எழுப்பும் கேள்விகள் உடைத்து உடைத்து உள் பார்க்கிறது தொடர்ந்து அளிக்கும் பதில்கள் உள் திறந்து திறந்து காண்பிக்கிறது தொடரும் மௌனம் இருவரிடமும் திறவுகோலை அளிக்கிறது பூட்டினால் திறக்கவும் திறந்தால் பூட்டவும் கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது https://akazhonline.com/?p=6797  
    • அவர் சிங்களத்துக்கு பஞ்சு துக்குபவர் இன்னும் அவருக்கு பெல் அடி கேட்கவில்லை போல் உள்ளது 😆
    • இருக்க‌லாம் பெருமாள் அண்ணா ஜெய‌ல‌லிதாவுக்கு க‌ருணாநிதிக்கு கோடி காசு அவ‌ங்க‌ட‌ கால் தூசுக்கு ச‌ம‌ம்..............ஜெய‌ல‌லிதா சொத்து குவிப்பு வ‌ழ‌க்கில் எத்த‌னை ஆயிர‌ம் கோடி  2ஜீ ஊழ‌லில் அக்கா க‌ணிமொழி அடிச்ச‌து எவ‌ள‌வு...............இப்ப‌ இருக்கும் முத‌ல‌மைச்ச‌ருக்கு தேர்த‌லுக்காக‌ 600 கோடி எங்கு இருந்து வ‌ந்த‌து என்ர‌  ம‌ன‌சில் வீர‌ப்ப‌ன் எப்ப‌வும்  என் குல‌சாமி🙏🙏🙏...................................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.