Jump to content

நலம் நல்லது!


Recommended Posts

மூளையில் ஏற்படும் நீரோட்ட பாதிப்பிற்கான சிகிச்சை.!

 

உடம்பில் வலியிருந்தால் அதனை மூளை உணரும். ஆனால் மூளையில் வலியிருந்தால்.. அதனை எப்படி குணப்படுத்தலாம், தற்போதைய சூழலில் இளம் வயதிலேயே பலர் பக்கவாதத்திற்கு ஆளாகிறார்கள். அதேபோல் மது மற்றும் போதைக்கும் அடிமையாகி விடுகிறார்கள்.

health_image_1_5_18.jpg

இந்நிலையில் இதற்குரிய சிகிச்சை அறிமுகமாகியிருக்கிறது என்கிறார் டொக்டர் சைமன் .

மது மற்றும் போதை பழக்கத்திலிருந்து மீளவே முடியவில்லை என்ற நிலையில் இருப்பவர்களுக்கு அவர்களின் மூளையினை பரிசோதித்து, பாதுகாப்புடன் எலக்ட்ரோ மைக்றோசிப்பைப் பொருத்தி அவர்களை அப்பழக்கத்திலிருந்து கட்டுப்படுத்தலாம். ஆனால் இது நோயாளிகளைப் பொறுத்து மாறுபடும். 

அதேபோல் மூளையில் இருக்கும் obstructive hydrocephalus என்று சொல்லப்படும் நீரோட்டத்தில் பாதிப்பு ஏற்பட்டால் அதற்கும் தற்போது நவீன சத்திர சிகிச்சை அறிமுகமாகியிருக்கிறது. இதன் போது நோயாளிகளின் மூளையில் உள்ள நீரோட்டம் பாதிக்கப்பட்டிருப்பதுடன், அதன் காரணமாக நரம்புகளும் பாதிக்கப்பட்டிருந்தால், அதனை நியுரோ எண்டாஸ்கோப்பிக் மூலம் துல்லியமாக கண்டறிந்து சிகிச்சையளிக்க இயலும். இதற்கு முன் இப்பிரச்சினைக்கு v.p shunt surgery என்ற சத்திர சிகிச்சையை மேற்கொண்டோம். இதன்போது தலையில் ஒரு துளையைப் போட்டு, அதன் வழியாக ஒரு குழாயைச் செலுத்தி அங்குள்ள நீரை வேறு வகையில்தான்  இரத்தகுழாய் மூலம் அங்கிருந்து வெளியேற்றுவோம். ஆனால் நவீன நியுரோ எண்டாஸ்கோப்பிக் சத்திர சிகிச்சை மூலம் அந்த நீரை (obstructive hydrocephalus) அங்கிருந்து பை பாஸ் செய்து வெளியேற்றுகிறோம்.

தொகுப்பு அனுஷா.

http://www.virakesari.lk/article/33004

Link to comment
Share on other sites

  • Replies 475
  • Created
  • Last Reply

வேண்டவே வேண்டாம்! இனி ஒருபோதும் சொல்லாதீர்கள் அந்த வார்த்தையை!

 

 
cb78fb952f877560290aef99370515bd-700

 

அப்படி என்ன வார்த்தை அது?

சமீப காலத்தில் ‘ஸ்ட்ரெஸ்’, ‘டென்ஷன்’ என்று சொல்வது ஒரு ஃபாஷன்  வார்த்தையாக மாறிவிட்டது. அதுவும், ஒரு வயது வரம்பு இல்லாமல், இப்பொழுது எல்லா வயதினரும் தங்கள் நிலையை வர்ணிப்பதே ஸ்ட்ரெஸ், டென்ஷன் என்ற வார்த்தையால்தான். ஸ்ட்ரெஸ் என்பது மன அழுத்தம், இதைப் புரிந்து கொள்வது அவசியமாகும்.

ஸ்ட்ரெஸ் நன்மையும் அளித்து, ஊக்கப் படுத்தவும் செய்கிறது. ஒரு வேலையை குறிப்பிட்ட கால வரையறைக்கும் செய்து முடித்தாக வேண்டும் எனும் போது நம்மில் பலருக்கு மன அழுத்தம் உருவாகிறது. எதிர்பார்த்த ஒன்று நடக்காத போது ஏமாற்றம் விளைகிறது. அதுவும் கூட ஸ்ட்ரெஸ்ஸுக்குக் காரணம். ஸ்ட்ரெஸ் ஏற்பட ஒவ்வொருவருக்கும் வெவ்வேறு காரணங்கள் உள்ளன. மென்மையான மனது உடையவர்களுக்கு வசைச் சொற்கள் கூட ஸ்ட்ரெஸ் ஏற்படுத்தும். சிலருக்கு இந்த சமூகத்தைப் பார்த்தும், சுற்றியிருக்கும் விஷயங்களை அவதானிக்கும் போதும் கடுமையான மன பாதிப்புக்கள் ஏற்படலாம். அல்லது வாழ்க்கை சூழல், குடும்பப் பிரச்னை, உடல் உபாதை என பல்வேறு வகையாக துயர்களாலும் அழுத்தங்களாலும், ஒருவரால் சமாளிக்க முடியாத அளவுக்கு ஒரு விஷயம் கைமீறிப் போகும் போதெல்லாம் ஸ்ட்ரெஸ் எனச் சொல்லப்படும் இந்த மன அழுத்தம் ஏற்படுகிறது.

086f1a69d5e026a337cf54c67c5c3e8f.jpg

சில சமயம் ஸ்ட்ரெஸ் நல்லதாகவும் பாசிட்டிவாகவும் இருக்கும். இதில், ‘நாம் செய்யப் போகிறோம்’ என்பது முன்னே நிற்பதால், ஸ்ட்ரெஸ் நன்மையைச் செய்யும். பரீட்சைக்கு நன்றாகத் தயாராக இருக்க, எழுதத் துடிக்கையிலும் நாம் அனுபவிப்பது ஸ்ட்ரெஸ் தான். இப்படி, செய்யத் தயார் படுத்தி வழிகளை அமைத்துக் கொடுப்பது, ‘யூஸ்ட்ரெஸ்’ (Eustress), அதாவது நலம் தரும் ஸ்ட்ரெஸ்!

அதற்கு நேர்மாறாக, ஸ்ட்ரெஸினால், நம்முடைய மனோபலம், உறவுகள், உணர்வுகள் பாதிக்கப்படும்போது, அந்த ஸ்ட்ரெஸ் மன அழுத்தம் தரும். மனநலத்தில் இதைத் தான் ‘ஸ்ட்ரெஸ்’ என்று கூறப்படுகிறது. ஸ்ட்ரெஸ் ஏற்படுத்தும் மன நிலையில் தொடர்ந்து நாம் இருந்து கொண்டே இருந்தால், உடலும், மனமும் கடுமையாக பாதிக்கப்படும்.

ஸ்ட்ரெஸின் அறிகுறிகளைப் புரிந்து செயல்பட்டால், அதிலிருந்து வெளியேறி நம்மை பாதுகாத்துக் கொள்ளலாம். அறிதலும், அதற்கு ஏற்றாற் போல் பாதை அமைத்துக் கொள்வதும், உடல்-மனநல பாதுகாப்பின் முதல் படி!

ஸ்ட்ரெஸ் எதைக் குறிக்கிறது? ஸ்ட்ரெஸ் என்றால் என்ன?

ஏதோ அவசரம் மற்றும் அபாயமான நேரங்களில், நம் உடலும் மனமும் பரபரப்பாக இருக்கும். இந்த நிலையே ஸ்ட்ரெஸ். பெரும்பாலும் ஸ்ட்ரெஸ் தரும் சூழ்நிலைகளை சந்திக்கக் கையாளும் முறைகளை ‘ஸ்ட்ரெஸ் ரெஸ்பான்ஸ்’ (Stress response) என்போம். இவை மூன்று வகையாகப் பிரிக்கப் படுகிறது. போராடுவது (Fight): சூழ்நிலையில் வெற்றி பெற முயற்சிப்பது. அடுத்தது, சூழ்நிலையை விட்டு ஓடி விடுவது (Flight): வெற்றி பெற முடியாது என்று எண்ணி விட்டு விடுவது. மூன்றாவது, உறைந்து நிற்பது (Freeze): சண்டையும் போடாமல், விட்டும் விடாமல், என்ன செய்வது என்று புரியாததால், ஒன்றுமே செய்யாமல் திகைத்திருப்பதும் நேரலாம்.

எதற்கோ பயந்தோ, ஆர்வப்பட்டாலோ, உடனே ஸ்ட்ரெஸை சமாளிக்க, நமது உடலில் ஸ்ட்ரெஸ் ஹார்மோன் (stress hormone) ஆட்ரினலினும், (adrenaline), கார்ட்டீஸால் (cortisol) உற்பத்தியாகும். இந்தப் போராளிகள், நம்மைச் சவாலுக்கு தயார்படுத்தும்.

அதன் உடல் அறிகுறிகள்: இதயம் வேகமாகத் துடிப்பது, மூச்சு வேகமாக விடுவது, நம் மற்ற உறுப்புகள் தயார் நிலையில் இருப்பது. இப்படி ஆனதும், ஆட்ரினலின், கார்டிஸால் சுரப்பதால் இன்னும் தெம்பு கூடுவது போல் தோன்றும். உடல், மூளை சுருசுருப்பாக வேலை செய்யும். இதைப் பல முறை கவனித்து இருப்போம், தேவை என்றால் அசதி கூடத் தெரியாமல் வேலை செய்வோம். பின்பே அசதி தெரியும்.

அதே சமயம் நம் மனது இதை உணர்ந்து, நம் உடலின் செய்கைகளுக்கு ஏற்றாற் போல் பயம், தைரியம் என்ற உணர்வுகளைக் காட்டும். ஸ்ட்ரெஸை, ஆட்கொள்ளவா, ஓடிப்போய் விடவா என்று அலசிக் கொண்டிருப்போம்.

செயல் முடிந்த பின் நம் மனம் அதிலிருந்து விலகவில்லை என்றால், உடலும், மனமும் ஸ்ட்ரெஸ் நிலையிலேயே இருக்கும், ஸ்ட்ரெஸ் அறிகுறிகள் இருந்து கொண்டே இருக்கும்.

images_(6).jpg

ஸ்ட்ரெஸ் ஏற்படுத்தும் விளைவுகள்

உடலும் மனமும் அதிவேகத்தில் செயல்படுவதால், சதா சர்வகாலமும் ஸ்ட்ரெஸுடன் இருந்தால், நம் மன நலனை அது பாதிக்கும். சில சமயங்களில் இருக்கும் வலிகள், நோய்கள் ஸ்ட்ரெஸினால் இன்னும் அதிகரித்தது போலவும் கூடத் தோன்றும். நீடித்த ஸ்ட்ரெஸ் நம்முடைய ஒவ்வொரு அங்கத்தையும் பாதிக்கக்கூடும். பதற்றம், படபடப்பு, வலிகள், சோம்பல், அதிகப்படியான தூக்கம் அல்லது தூக்கமின்மை, தோல் பிரச்னைகள், மறதி, நினைவாற்றலில் தடுமாற்றம் உள்ளிட்ட பல பிரச்னைகள் ஏற்படலாம்.

 ஸ்ட்ரெஸ் ஆட்கொண்டால்

ஸ்ட்ரெஸ் ஒரு முறை நிலைக்கச் செய்து விட்டால், அது ஒரு பழக்கம் போல் ஆகி, திரும்பத் திரும்ப அப்படியே செயல் படுவோம். இப்படித் தான் இருக்கும், இதிலிருந்து விடுதலை இல்லை என்று ஏற்றுக் கொண்டால், ஸ்ட்ரெஸ் நம்முள் வளர்ந்து, நம்மை ஆக்கிரமிப்பு செய்து கொள்கிறது.

நம் அறிவுணர்வியலில் (Cognitive) அதாவது, யோசித்து, புரிந்து கொள்வதில் ஸ்ட்ரெஸ் உட்புகுந்து கொண்டால் மறதி ஏற்படும். ‘ஞாபகம் இருப்பதில்லை’ என்று சொல்லி கொண்டே இருந்தால், இதை மாற்ற மாட்டோம். இப்படி நமக்குளே சொல்லி நிலை நாட்டுவதை ‘ஆடோ ஸஜஷன்’ (Auto suggestion) என்பார்கள். ஸ்ட்ரெஸினால் மறதி - மறதியால் ஸ்ட்ரெஸ் என்ற ஜோடி சேர்ந்துவிடும். முடிவுகள் எடுப்பதில் தடுமாற்றம் ஏற்படும். எப்பொழுதும் கவலையான எண்ணங்கள் ஓடும், அதிகமாகக் குறை கூறுவோம், கவனம் சிதறும்.

நம்முடைய உணர்வுகள்: ஸ்ட்ரெஸ் இருந்து கொண்டே இருந்தால், அதிகமான நேரம் பதற்றம், சோகம் இருந்து, ஒருவிதமான வெலவெலத்துப் போதலான உணர்வு தோன்றும். சலிப்பு, எரிச்சல் தோன்றி, வெறுப்பு தட்டும். ஸ்ட்ரெஸ் இருக்கையில், எல்லோருடன் இருந்தாலும், தனிமையாக இருப்பது போலவே உணருவோம்.

நம் உடல் ஸ்ட்ரெஸை பற்றி தெரிவிக்கும் விதம்: உடல் வலி, தலை சுற்றல், அடிக்கடி சளி, ஜுரம், மார்பில் வலி, வாந்தி பேதி, என்று ஏதோ ஒரு பாகத்தில் பாதிப்பு இருக்கலாம்.

 

blue.jpg

ஸ்ட்ரெஸினால், ஒரு சிலருக்கு சாப்பிட்டுக் கொண்டே இருக்கத் தோன்றும், சிலருக்கு சுத்தமாகப் பசி எடுக்காது. அதே போல், தூக்கமும் அதிகம், குறைச்சல் ஆகலாம். செய்ய வேண்டிய வேலைகள் தாமதமாகும். இதைச் சமாளிக்க, நகத்தைக் கடிப்பது, புகை பிடித்தல், மது அருந்துவது, போதைக்கு  அடிமையாவது என்ற பழக்கங்கள் ஆரம்பமாகும். 

இவையெல்லாம் அதிகமான ஸ்ட்ரெஸ் தொடர்ந்து ஏற்படும் போது தலை தூக்கும். சூழ்நிலைகளை நன்றாக சமாளிக்கக் கற்றுக் கொண்டால், ஸ்ட்ரெஸ் அதிகமாவதைத் தவிர்க்கலாம்.

images_(4).jpg

ஸ்ட்ரெஸின் காரணிகள்

நம் வாழ்வில் நடக்கும் நல்ல விஷயங்களும், நெருக்கடிகளும், கட்டாயங்களும், ஸ்ட்ரெஸின் காரணிகள் ஆகலாம். வாழ்க்கையில் திடீர் மாற்றங்கள், இழப்பு, உறவுமுறை மாறுதல் இவையும் காரணியாகலாம். வாழ்வில் தினந்தோறும் நேரிடும் நிகழ்வுகள்: காலை நேரத்திற்குள் வேலையை முடிப்பது / வேலைக்குப் பயணம் செய்வது இதுபோல் ‘தினசரி தொந்தரவுகள்’ (daily hassles) என்பதும் காரணிகளாகலாம். இவற்றைச் சமாளிக்கும் திறன், அல்லது வலு இல்லாமல் போனால் ஸ்ட்ரெஸ் உண்டாகிறது. இதைத் தவிர, நம்முடைய கண்ணோட்டங்கள், சிந்தனைகள் ஒன்றுக்கொன்று எதிர்மறையாக இருந்தாலும் ஸ்ட்ரெஸ் நிலவும்.

எந்த ஸ்ட்ரெஸ் வகைகள், நலம் குறைக்கக் கூடும் என்பதை ஹோம்ஸ், ராஹே (Holmes and Rahe) ஸ்ட்ரெஸ் பட்டியல் இட்டிருக்கிறார்கள். அவற்றில் முதல் பத்து : வாழ்க்கைத் துணையின் மரணம், விவாகரத்து, கல்யாண வாழ்க்கையில் பிரிவு, சிறைத் தண்டனை, நெருங்கிய குடும்பத்தினரின் மரணம், உடல் நலக் குறைவு, திருமணம், வேலை இழப்பது, திருமண வாழ்க்கையில் இணக்கமின்மை, வேலையிலிருந்து ஓய்வு பெறுவது.

images_(5).jpg

ஸ்ட்ரெஸ் பாதிக்காமல் இருக்க

வலுவான, நம்பகமான, ஆதரவான உறவினர், நண்பர்கள் கூட்டமைப்பு (network) இருந்தால், ஸ்ட்ரெஸ் உணரும் போது மற்றவர்கள் இருக்கிறார்கள் என்கிற மனதிடம் பாதிப்பு வராமல் காக்கும். இதற்கு மாறாக, தனிமை சூழ்ந்திருந்தால், ஸ்ட்ரெஸின் தாக்கம் தெரியும்.

என் கட்டுக்குள் இருக்கிறது’ என்ற எண்ணம் இருந்தால் ஸ்ட்ரெஸை எதிர் கொள்ள வழிகளை அமைப்போம். ‘எதுவும் என் கையில் இல்லை’ என்ற மனப்பான்மை இருந்தால், எதையும் செய்ய முயல மாட்டோம். ஸ்ட்ரெஸ் தன் ராஜ்யத்தை நிலை நாட்டி நம்மை அதற்கு அடிமையாக்கும்.

மனப்பாங்கு, மனப்பான்மையின் பங்கு உண்டு! பாதிப்புகளை வாய்ப்பாகப் பார்க்கிறவர்கள், நன்மையை யோசிக்கும் பக்குவம் உள்ளவர், தன் வாழ்வின் அர்த்தத்தைப் புரிந்து செயல்படுபவர், வாழ்க்கை என்றால் சுக-துக்கத்துக்குச் சம பங்கு என்று நினைப்பவர், இவர்கள் நம்பிக்கை உள்ளவர்கள் எனலாம். இந்தப் பட்டியலில், ஏதேனும் இரண்டு இருந்தாலும் ஸ்ட்ரெஸ் நெருங்காது.

உணர்வுகளை கையாளத் தெரிவதும் உதவும்! உணர்வுகளைப் புரிந்து, அவைற்றைக் கண்டு கொண்டு, உணர்வைச் சமாதானம் படுத்தத் தெரிவது உதவும். இதனால், உடல்-மனநலம் பாதிக்காமல் இருக்கும், உடலும் பாதிப்பு இல்லாமல், ஸ்ட்ரெஸை சமாதானப் படுத்தி அனுப்பி விடும். ஸ்ட்ரெஸ் ஏற்பட்டாலும் உணர்வைப் புரிவதனால், முடிந்த பிறகு உணர்வைப் புரிந்து கொள்வோம், அதுவே நம்மை நல்ல நிலைக்கு வரச் செய்ய உதவும்.

உங்களின் ஸ்ட்ரெஸ் அடையாளம் காணுங்கள்

ஸ்ட்ரெஸ் எப்பொழுது தோன்றுகிறது என்பதைத் தெரிந்து கொள்வது அவசியமானது. அதற்கு ஏற்றவாறு எப்படி அணுக வேண்டும் என்பது புரிய வரும்.

is_ts_1200-e1511442640230.jpg

ஸ்ட்ரெஸ், என்னவெல்லாம் செய்யலாம்?

உடற் பயிற்சி

தினசரி விடாமல், உடல் பயிற்சி செய்வது. அது நடப்பதோ, நீச்சலோ, ஓடுவதோ, ஏதேனும் விளையாட்டு என்று தினம் 30-40 நிமிடத்திற்குச் செய்வதால் வலு அதிகரிக்கும். பயிற்சிகள் நம் மனநலத்தை மேம்படுத்த, அதன் விளைவு, செய்வதை அருமையாகச் செய்வோம்.

உணர்வாற்றல்

நம் ஐந்து புலன்கள் (sensory organs): நமக்கு நேர்ந்த ஸ்ட்ரெஸ் சரி செய்ய, பார்வை, சத்தம், ஸ்பரிசம், சுவை, மணம் உபயோகமாகலாம். இவற்றில் எந்த உறுப்பு ஸ்ட்ரெஸை குறைக்கிறது என்று நாம் அறிய வேண்டும்: பாட்டுக் கேட்பதா, மணல், புல் மேல் நடப்பதா, நற்மணம் சுவாசிப்பதா என்று.

மற்றவர்களுடன் சந்திப்பு

சிறிது நேரம் மற்றவர்களுடன் நேரம் கழிப்பது என்ற பழக்கத்தை வளர்த்துக்கொள்ள வேண்டும். இப்படித்தான் என்று இல்லாமல், நண்பர்கள், மற்றவருக்கு உதவி செய்வதற்காக என்று ஏதோ ஒரு விதத்தில் குறிக்கோளற்ற நேருக்கு நேர் சந்திப்புகள் வளர்த்துக் கொள்ளலாம். இப்படி இருப்பது, நம் மனதுக்கு இதமாக இருக்கும். மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள வாய்ப்பு தரும். உடல்-மனதுக்கு ரிலாக்ஸ் செய்யவும் உதவும்.

உணவு வகைகள்

 

 

சாப்பாட்டில், காய்கறிகள், பழங்கள், நிறைய உட்கொள்ள வேண்டும். சிப்ஸ், எண்ணெய்யில் பொறித்த பண்டங்களை தவிர்த்து இயற்கை உணவு, 2-3 லிட்டர் தண்ணீர் என்று எடுத்துக் கொள்ளலாம்.

stress-s21.jpg

ஓய்வு

நன்றாகத் தூங்குங்கள் நேக பிரச்னைகளுக்கு அதுவே தீர்வாகும். தினந்தோறும் அதே நேரத்திற்குத் தூங்க வேண்டும். கைப்பேசி, லேப்டாப் படுக்கை அறையில் இல்லாமல் பழகிக் கொள்ள வேண்டும்.

மொத்தத்தில், ஸ்ட்ரெஸ் என்பது நாம் கையாளும் விதத்தில் அடங்கி உள்ளது. மேற்சொன்ன விஷயங்களைப் புரிந்து செயல்பட்டால், ஸ்ட்ரெஸ் நமக்கு ஊக்கம் தரும் கருவியாக உபயோகிக்க முடியும். ஸ்ட்ரெஸ், டென்ஷன் மன அழுத்தம் எல்லாம் நம்மை ஆக்கிரமிக்க நாம் ஏன் விட வேண்டும்?

http://www.dinamani.com/health/mental-health/2018/may/03/live-a-happy-and-stress-free-life-2912582--3.html

Link to comment
Share on other sites

நீங்கள் சாப்பிடும் உணவுக்கும் மாதவிடாய் நிற்கும் வயதுக்கும் தொடர்புண்டா?

கார்போஹைட்ரேட் எனப்படும் மாவுச்சத்து அதிகம் உள்ள உணவுகளை சாப்பிடுவது மாதவிடாயை முன் கூட்டி நிறுத்தலாம் என ஒரு ஆய்வு தெரிவித்துள்ளது.

உணவுபடத்தின் காப்புரிமைGETTY IMAGES

பாஸ்தா மற்றும் அரிசியை அதிகளவு உட்கொள்ளுவது பிரிட்டனில் பெண்களுக்கு மாதவிடாய் நின்றுபோகும் சராசரி வயதான 51ஐ விட ஒன்றரை வருடம் முன்கூட்டி நின்றுபோவதுடன் தொடர்புடையதாக உள்ளது.

914 பிரிட்டன் பெண்மணிகளை சோதித்த லீட்ஸ் பல்கலைகழகம், எண்ணெய் மீன்கள், பட்டாணி, பீன்ஸ் போன்றவற்றை பிரதானமாக உட்கொள்ளுபவர்களுக்கு இயற்கையான மாதவிடாய் நிறுத்தம் தள்ளிப்போவதாக கண்டறிந்துள்ளது.

ஆனால், ஜீன்கள் உள்ளிட்ட வேறு பல காரணிகளும் மாதவிடாய் நிறுத்த நேரத்தை முடிவு செய்வதில் ஆதிக்கம் செலுத்துகின்றன என நிபுணர்கள் கூறுகின்றனர்.

உணவு இதில் எவ்வளவு தூரம் பங்களிக்கிறது என தெளிவாக தெரியவில்லை ஆகவே தற்போதைய கண்டுபிடிப்புகள் அடிப்படையில் பெண்கள் தற்போதைய உணவு பழக்கத்தை முற்றிலுமாக மாற்ற வேண்டுமா என கவலைகொள்ளத் தேவையில்லை என அவர்கள் தெரிவித்துள்ளனர்.

உணவு கண்டுபிடிப்புகள்

இந்த ஆராய்ச்சிகள் கொள்ளை நோயியல் மற்றும் சமூக ஆரோக்கியத்துக்கான ஆய்விதழில் வெளியிடப்பட்டுள்ளது. பெண்களிடம் அவர்கள் பொதுவாக என்னவிதமான உணவுகளை உட்கொள்ளுவார்கள் என கேட்கப்பட்டிருந்தன.

பருப்பு வகைகளான பட்டாணி, பீன்ஸ், பயறு வகைகள், சுண்டல் ஆகியாயவை மாதவிடாய் நிறுத்தத்தை சராசரசியாக ஒன்றரை வருடம் தள்ளிப்போடுகின்றன.

சுத்திகரிக்கப்பட்ட கார்போஹைட்ரேட் உணவுகளில், குறிப்பாக அரிசி மற்றும் பாஸ்தா அதிகம் உண்ணுபவர்களுக்கு சராசரியாக ஒன்றரை வருடம் முன் கூட்டியே மாதவிடாய் நிறுத்தம் நடைபெறுகிறது.

மாதவிடாய் நிறுத்தத்தில் பங்கு வகிக்கும் மற்ற காரணிகளான பெண்களின் எடை, இனப்பெருக்க வரலாறு, ஹார்மோன் மாற்று தெரப்பி போன்ற விஷயங்களையும் ஆராய்ச்சியாளர்கள் கணக்கில் எடுத்துக்கொண்டனர். ஆனால் மரபியல் காரணங்களை அவர்களால் கருத்தில் கொள்ளமுடியவில்லை.

உணவுபடத்தின் காப்புரிமைGETTY IMAGES

இந்த ஆய்வு கவனத்தில் எடுத்துக்கொள்ளவே செய்யப்பட்டது. எந்த காரணத்தை கொண்டும் தற்போது நிரூபிக்க இயலாது. ஆனால் தங்களின் கண்டுபிடிப்புகளுக்கு பின்னுள்ள சில சாத்தியமான விளக்கங்களை வழங்கியுள்ளனர்.

உதாரணமாக, பருப்பு வகைககளில் ஆன்டி ஆக்சிடன்ட்கள் உள்ளன. இவை மாதவிடாயை நீண்டகாலத்துக்கு தக்கவைக்கும்.

ஒமேகா-3 ஃபேட்டி அமிலங்கள் எண்ணெய் மீன்களில் மட்டுமே உள்ளன. இவை உடலில் ஆன்டி ஆக்சிடன்ட் சேகரிக்கும் அளவை தூண்டுவிடுகின்றது.

சுத்தீகரிக்கப்பட்ட கார்போஹைட்ரேட் இன்சுலின் எதிர்ப்புக்கான வாய்ப்பை அதிகரிக்கிறது. இவை செக்ஸ் ஹார்மோனின் செயல்பாட்டில் தலையிடுகிறது மேலும் ஈஸ்ட்ரோஜென் அளவுகளையும் அதிகரிக்கின்றன. இதனால் மாதவிடாய் சுழற்சி அதிகரித்து முட்டை வெளியிடுதல் விரைவாக நடக்கிறது.

உடல்நல தாக்கங்கள்

ஊட்டச்சத்து கொள்ளை நோயியல் பேராசிரியரும் துணை ஆய்வாளருமான ஜேனட் கேட், மாதவிடாய் நின்று போகத் துவங்கும் நேரத்தில் சில பெண்களுக்கு கடுமையாக ஆரோக்கியம் பாதிக்கப்படும் என்கிறார்.

''ஏற்கனவே ஆபத்தில் இருப்பவர்களுக்கும், மாதவிடாய் நிறுத்தம் தொடர்பாக சில சிக்கல்களை சந்தித்திருக்கும் குடும்ப வரலாற்றை கொண்டிருக்கும் நபர்களுக்கும் உணவு எப்படி இயற்கையான மாதவிடாய் நிறுத்தத்தில் பங்கு வகிக்கிறது என்பது பற்றிய தெளிவான புரிதல் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்'' என்கிறார்.

மாதவிடாய் நிறுத்தம் விரைவில் நடக்கும் பெண்களுக்கு ஆஸ்டியோபோரோசிஸ் என்னும் எலும்புப்புரை மற்றும் இதய நோய்களால் பாதிக்கப்படுவதற்கான வாய்ப்பை அதிகரிக்கிறது. மாதவிடாய் நிறுத்தம் தள்ளிப்போனால் மார்பகம், கருப்பை மற்றும் சினைப்பை புற்றுநோய் ஏற்படுவதற்கான வாய்ப்புகளை அதிகரிக்கிறது.

மாதவிடாய் சிறப்பு செவிலியர் மற்றும் பிரிட்டிஷ் மாதவிடாய் அமைப்பின் தலைவி கேதி அபர்நெதி கூறுகையில் '' உணவுகளுடன் இருக்கும் தொடர்பு குறித்து இந்த ஆய்வு எதுவும் நிரூபிக்கப்படவில்லை. ஆனால் நமக்கு ஏன் சில பெண்களுக்கு மாதவிடாய் நிறுத்தம் முன்கூட்டியும், தள்ளிப்போயும் நடக்கிறது என்பதை பற்றி சற்று புரிந்துகொள்ள இந்த ஆய்வு பங்களிக்கிறது'' என்றார்.

உணவுபடத்தின் காப்புரிமைGETTY IMAGES

ஓய்வுபெற்ற உட்சுரப்பியல் பேராசிரியர் சாஃபிரான் வொயிட்ஹெட் '' மாதவிடாய் நிறுத்தகாலத்துக்கான காரணம் குறித்து அறியமுற்படும் சுவாரஸ்யமான ஒரு அணுகுமுறை இது. ஆனால் மாதவிடாய் நிறுத்தத்திற்கு உணவு மட்டும் காரணம் என முழுமையாக நான் நம்பவில்லை. வெறும் சில காரணிகளும் இதில் தொடர்புடையது'' என்றார்

''உடலின் வளர்சிதை மாற்றமானது முட்டை வெளியிடுதல் மற்றும் மாதவிடாயை ஒழுங்குபடுத்துவது ஆகியவற்றில் முக்கியமான பங்கு வகிக்கிறது'' என்றார் இம்பீரியல் கல்லூரியின் ஆண் உறுப்பு நோயியல் மற்றும் இனப்பெருக்க உட்சுரப்பியில் ஆலோசகரும், மூத்த பேராசிரியருமான டாக்டர் சன்னா ஜயசேனா.

'' இது போன்ற 'கவனிக்கும்' ஆய்வுகளில் மாதவிடாய் நிறுத்தம் முன்கூட்டி முடிவதற்கான காரணங்களை முழுமையாக நிரூபிக்கமுடியாமையே மிகப்பெரிய துரதிர்ஷ்டம். ஆகவே முழுமையாக நிரூபிக்கப்படும் வகையில் மக்கள் அவர்களது உணவு முறையை மாற்றத் தேவைப்படுவதற்கான எந்த காரணத்தையும் நான் பார்க்கவில்லை '' என்கிறார் சன்னா ஜயசேனா.

https://www.bbc.com/tamil/science-43994129

Link to comment
Share on other sites

பர்க்கின்சன்ஸ் என்ற பாதிப்பிற்குரிய நவீன சிகிச்சை

 

 
 

பர்க்கின்சன்ஸ் நோய் எனப்படும் உடல் இயக்க கோளாறுகளுக்கு தற்போது டீப் ப்ரைய்ன் ஸ்டிமுலேசன் என்ற நவீன சத்திர சிகிச்சை மூலம் தீர்வு காணப்பட்டு வருகிறது.

மூளையில் ஏற்படும் நரம்பியல் மற்றும் நரம்பு மண்டலத்தின் செயற்பாட்டில் ஏற்படும் சிக்கல்களுக்கு தான் பர்க்கின்சன்ஸ் பாதிப்பு என்கிறோம். இதன் காரணமாக கை, கால், மூட்டு மற்றும் சில பகுதிகளை அசைக்க இயலாத நிலை ஏற்படும். மூளை சார்ந்த பாதிப்பு என்பதால் உடல் இயக்கமும் சீராக இருக்காது.

இத்தகைய பாதிப்புடன் இருப்பவர்களுக்கு மருத்துவர்கள் மருந்து மாத்திரைகளின் மூலம் உடல் இயக்கக் குறைபாட்டை ஒரு கட்டுக்குள் வைத்திருப்பார்கள். ஒரு சிலருக்கு இந்த மருந்துகள் ஒரு கட்டத்தில் பலனளிக்காத போது, அதாவது கை கால்களில் கடுமையான நடுக்கம் ஏற்பட்டிருந்தாலோ அல்லது மூட்டுகள் மிருதுவாக இல்லாமல் கடினப்பட்டு இருந்தாலோ அவர்களை இந்த நவீன சத்திர சிகிச்சை மூலம் குணப்படுத்த பரிந்துரைப்பார்கள்.

டீப் ப்ரைய்ன் ஸ்டிமூலேசன் எனப்படும் இந்த சிகிச்சையின் போது,மூளையின் ஆழ் பகுதிக்குள் சிறிய அளவிலான மின்கருவிகள் பொருத்தப்படும். இதற்காக மூளையில் தெரிவு செய்யப்பட்ட இரண்டு பகுதிகளில் சிறிய அளவில் துளையிடப்பட்டு இந்த மின் கருவிகளை பொருத்துவார்கள். இந்த கருவிகள் இயங்குவதற்குரிய பற்றரிகளை நெஞ்சுப்பகுதியில் பொருத்துவர். இத்தகைய சிகிச்சைக்கு பின்னர் அவர்களின் கை, கால் நடுக்கம் குறைந்துவிடும். இருப்பினும் அவர்கள் தொடர்ந்து மருத்துவர்களின் கண்காணிப்பிலும், வழிகாட்டலிலும் இருக்கவேண்டும். 

http://www.virakesari.lk/article/33082

பாத எரிச்சலைக் கண்டறியும் பயோதிசியோமெட்ரி பரிசோதனை

 

 
 

 சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் அதிகளவில் இருக்கிறார்கள். இவர்களுக்கு வைத்தியர்கள் இரத்தத்தில் சர்க்கரையின் அளவை கட்டுக்குள் வைத்திருக்கவேண்டும் என எச்சரித்து, அதற்குரிய மருந்து மாத்திரை மற்றும் உணவு பழக்க வழக்கங்களைப் பற்றி விரிவாக எடுத்துரைக்கிறார்கள்.

ஆனால் நாம் மறதி மற்றும் பணிப்பளு காரணமாக இதனை சரியாக கடைபிடிப்பதில்லை. இதன் விளைவு கால்களில் எரிச்சல், பாதங்களில் எரிச்சல், பாதங்களில் உணர்வு குறைதல் போன்ற பாதிப்பு ஏற்படுகிறது.

இரத்த சர்க்கரையின் அளவில் ஏற்படும் மாற்றங்களால் தான் கால்களில் எரிச்சல், கால்களில் இரவு நேரத்தில் அரிப்பு, கால்கள் மரத்து போதல், கால்கள் மதமதவென இருத்தல் போன்றவை நிகழும். இதற்கு இரத்த சர்க்கரையின் அளவில் ஏற்படும் மாறுபாடுகளால் கால்களில் உள்ள நரம்புகள் தங்களின் இயல்பான வலிமையை இழக்கத் தொடங்குகின்றன.

இந்நிலையில் மருத்துவர்கள் இரத்த சர்க்கரையின் அளவின் குறைபாடுகளால் கால் நரம்பு எவ்வளவு தூரம் பாதிக்கப்பட்டிருக்கிறது என்பதை துல்லியமாக அறிந்து கொள்ள இவ்வகையான பரிசோதனையை மேற்கொள்கிறார்கள்.

கால்களின் தொடு உணர்வு, அதிர்வு உணர்வு, வெப்ப உணர்வு, குளிர் உணர்வு போன்றவற்றின் நிலை எவ்வாறு இருக்கிறது என்பதையும், கால்களில் எந்த நரம்பு எந்தளவிற்கு பாதிக்கப்பட்டிருக்கின்றன என்பதையும் கண்டறிகிறார்கள்.

அதன் பின் இதற்குரிய சிகிச்சையை அளிக்கிறார்கள். அத்துடன் இரத்த சர்க்கரையின் அளவை ஹெச் பி.ஏ.1.சி. என்ற பரிசோதனை மூலம் துல்லியமாக கண்டறிந்த பின்னரும் இத்தகைய பரிசோதனையை மேற்கொள்ளலாம்.

http://www.virakesari.lk/article/33116

ஊட்டச்சத்து குறைபாட்டை களையும் விட்டமின் "டி"

 

 
 

இன்றைய காலகட்டத்தில் உலகம் முழுவதும் ஊட்டச்சத்து குறைபாட்டால் 20 மில்லியன் குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவிக்கிறது. ஒவ்வொரு குழந்தையும் அதன் மொழியை கற்பதற்கு  விட்டமின் "டி" பெரிய அளவில் உதவி புரிவதாக அண்மைய ஆய்வுகளின் மூலம் கண்டறியப்பட்டிருக்கிறது.

விட்டமின் "டி" யை சூரிய ஒளி விட்டமின் என்று சொல்வதையும் கேட்டிருக்கிறோம். பிறந்த குழந்தைகளின் எலும்பு மற்றும் தசை வளர்ச்சிக்கு இன்றியமையாத சத்தாக விட்டமின் "டி" இருக்கிறது. அதனால் ஒவ்வொரு குழந்தைகளையும் சூரிய ஒளியில் சிறிது நேரம் படும் படி வைத்திருக்கவேண்டும்.

அண்மைய ஆய்வின் படி காலை 11 மணி முதல் மதியம் 2 மணி தியாலம் வரையிலான நேரத்தில் சூரிய ஒளியை எம்மீதும், குழந்தைகளின் மீதும் படும்படி பார்த்துக் கொண்டால், சூரிய ஒளியிலிருந்து விட்டமின் "டி" சத்தினை எம்முடைய உடல் கிரகித்துக் கொள்ளும். தேவைக்கும் குறைவான விட்டமின் "டி" சத்தினைப் பெற்றிருப்பவர்களுக்கு நாளடைவில் இதய நோய் வருவதற்கான வாய்ப்பு அதிகம் என்று எச்சரிக்கிறார்கள் மருத்துவர்கள்.

health_news.jpg

அதே போல் தற்போது வாரத்திற்கு இரண்டு முறை, 5 நிமிடம் முதல் 30 நிமிடங்கள் வரை ஒவ்வொரு மனிதனும் தங்களின் முகம், தோள்பட்டை, கால்கள், முதுகு ஆகிய பகுதிகளில் சூரிய ஒளி படும்படி பார்த்துக் கொள்ளவேண்டும். இப்படி செய்வதன் மூலம் சூரிய ஒளியிலிருந்து கிடைக்கும் விட்டமின் "டி" யை தோல் பகுதிகள் கிரகித்துக் கொள்ளும். இந்த தருணத்தில் தோலில் புற்றுநோய் தாக்கியிருந்தால் அவை கூட குணமாகிவிடுமாம்.

விட்டமின் "டி" சத்து போதிய அளவிற்கு பெறாதவர்களின் எலும்புகள் எளிதாக உடையக்கூடியதாகவும், வலுவற்றதாகவும், ஒழுங்கற்ற வடிவமைப்புடனும் இருக்கும். இதனால் இவர்களின் இதயம், மூளை மற்றும் நேயெதிர்ப்பு சக்தி ஆகியவை முற்றிலும் பாதிக்கப்படும். அதனால் இவர்கள் சூரிய உதயம் மற்றும் சூரியனின் அஸ்தமனத்திற்கு முன்னர் 40 நிமிடங்கள் வரை எம்முடைய உடலில் 40% பகுதியில் சூரிய ஒளி படரவேண்டும். இப்படி செய்தால் எலும்புகள் வலுவடையும். உடலுக்கும் போதிய அளவு விட்டமின் "டி" சத்து கிடைக்கும்.

வைத்தியர் அகர்வால்,

தொகுப்பு அனுஷா.

http://www.virakesari.lk/article/33162

Link to comment
Share on other sites

எடை அதிகரிப்பு: ஆய்வு கூறும் அதிசய காரணங்கள்

 

உடல் எடையைக் குறைக்க வேண்டும் என்ற மனஉறுதியுடன் செயல்பட்டால் உடல் எடையைக் குறைக்கலாம் என்பது பொதுவாக நிலவும் கருத்து. ஆனால் இதுதொடர்பான ஆராய்ச்சிகள், வேறு சில ஆச்சரியத் தகவல்களை வெளிப்படுத்தியிருக்கின்றன.

 
 
எடை அதிகரிப்பு: ஆய்வு கூறும் அதிசய காரணங்கள்
 
உடல் எடையைக் குறைக்க வேண்டும் என்ற மனஉறுதியுடன் செயல்பட்டால் உடல் எடையைக் குறைக்கலாம் என்பது பொதுவாக நிலவும் கருத்து. ஆனால் இதுதொடர்பான ஆராய்ச்சிகள், வேறு சில ஆச்சரியத் தகவல்களை வெளிப்படுத்தியிருக்கின்றன.

அவை பற்றி...

இங்கிலாந்தைச் சேர்ந்த இரட்டையர்களான கில்லியன்- ஜாக்கி ஆகியோரில் ஒருவர் அடுத்தவரைவிட 41 கிலோ எடை கூடுதலாக உள்ளார். பேராசிரியர் டிம் ஸ்பெக்டன் தனது ஆய்வின் ஒருபகுதியாக, இவர்களின் உடல்நிலை முன்னேற்றம் குறித்து 25 வருடங்களாக கண்காணித்து வருகிறார்.

அவர்களின் உடல் எடைக்கான பெரும் வேறுபாட்டுக்கு, குடலில் வாழும் மிகச்சிறிய நுண்ணுயிரிகள் முக்கியக் காரணம் என நம்புகிறார் அவர்.

‘‘ஒவ்வொருமுறை நீங்கள் ஏதாவது சாப்பிடும்போதும் நீங்கள் உங்கள் உடலில் உள்ள கோடிக்கணக்கான நுண்ணுயிரிகளுக்கும் உணவளிக்கிறீர்கள். நீங்கள் தனியாக சாப்பிடுவதில்லை’’ என்கிறார் அவர்.

இருவரின் மலத்தையும் ஆராய்ந்தபோது, மெலிந்தவரின் மலத்தில் வெவ்வேறு வகையான நுண்ணுயிரிகள் இருந்தன. ஆனால் ஜாக்கியின் குடலில் வெகு சில நுண்ணுயிரி இனங்களே காணப்பட்டன.

‘‘பன்முகத்தன்மையே சிறப்பானது. அது மெலிந்தவரிடம் உள்ளது. நீங்கள் அதிக எடையைக் கொண்டிருந்தால் உங்களது உடலிலுள்ள நுண்ணுயிரிகள் வெவ்வேறு இனத்தில் இருக்காது’’ என்கிறார் ஸ்பெக்டர். இதே போன்ற தன்மையை தான் ஆராய்ந்த ஐயாயிரம் பேரிடமும் கண்டிருக்கிறார் இப் பேராசிரியர்.

ஆரோக்கியமான மற்றும் பலதரப்பட்ட உணவுமுறையை கடைப்பிடிக்கலாம். நார்ச்சத்து மிக்க உணவை உட்கொள்ளும்போது அவை குடலில் பல்வேறு வகைப்பட்ட நுண்ணியிரிகளை உருவாக்கும் எனத் தெரியவந்திருக்கிறது.

மக்களில் சிலர் கவனமாக உணவுக் கட்டுப்பாட்டைப் பின்பற்றுகிறார்கள், அத்துடன் உடற்பயிற்சியும் செய்கிறார்கள். ஆனால் அவர்களுக்கு சரியான பலன் கிடைப்பதில்லை. அதேவேளையில் சிலர் குறைவாக உடற்பயிற்சிகளை மேற்கொண்டு, விரும்பிய உணவையும் சாப்பிடுகிறார்கள். ஆனால் அவர்களுக்கு உடல் எடை கூடுவதில்லையே, அது ஏன்?

கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக விஞ்ஞானிகள், உடல் எடை விவகாரத்தில் 40 முதல் 70 சதவீதம், பாரம்பரியமாக நாம் பெற்ற மரபணுவுடன் தொடர்புடையது எனக் கருதுகின்றனர்.

‘‘மரபணுக்கள் நமது எடையுடன் தொடர்புடையவை என்பது தெளிவாகிறது. உங்களுக்கு சில குறிப்பிட்ட மரபணுக்களில் குறைபாடுகள் இருந்தால் அவை உடல்பருமனை ஏற்படுத்த போதுமானதாக இருக்கலாம்’’ என்கிறார், பேராசிரியர் சதாப் பரூக்கி.

குறிப்பிட்ட சில மரபணுக்கள் ஒரு மனிதனின் பசியுணர்வைப் பாதிக்கலாம். எவ்வளவு உணவை அவர் உண்ண விரும்புகிறார், என்ன விதமான உணவுக்கு முன்னுரிமை கொடுக்கிறார் என்பதில் மரபணுக்களின் பங்கு இருக்கிறது. நாம் எப்படி கலோரியை எரிக்கிறோம், எப்படி நமது உடல் கொழுப்பைக் கையாளுகிறது என்பன போன்ற விஷயங்களிலும் மரபணுக்கள் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன.

குறைந்தபட்சம் 100 மரபணுக்கள் உடல் எடையை பாதிக்கலாம். அதில் எம்சி4ஆர் மரபணு முக்கியமான ஒன்று.

ஆயிரம் பேரில் ஒருவருக்கு இந்த மரபணு, குறைபாடு உடையதாக இருக்கிறது. இந்த மரபணுதான் பசி மற்றும் பசி ஆர்வத்தை நமது மூளை கட்டுப்படுத்துவதுடன் தொடர்புடையது. இந்த மரபணுவில் குறைபாடு உடையவர்கள் அதிக பசி கொண்டவர்களாகவும் அதிக கொழுப்பு உடைய உணவுகளின் மீது அடங்கா ஆசை உடையவர்களாகவும் இருக்கிறார்கள்.

‘‘நீங்கள் உங்களது மரபணுவை ஒன்றும் செய்யமுடியாது. ஆனால் சிலர் மரபணு அவர்களுக்கு எடை அதிகரிப்பதற்கு தொடர்புடையதாய் இருப்பதை அறிந்தால் சம்பந்தப்பட்டவர்கள் டயட் மற்றும் உடற்பயிற்சி போன்றவற்றில் மாறுதல்களைச் செய்துகொள்ள உதவலாம்’’ என்கிறார் பேராசிரியர் பரூக்கி.

உடல் எடைக்கும் சாப்பிடும் நேரத்துக்கும் தொடர்பு இருக்கிறது என்றும் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

‘‘எவ்வளவு தாமதமாகச் சாப்பிடுகிறோமோ அதைப் பொறுத்து உடல் எடையும் கூடும். நாம் இரவில் குறைவாக வேலை செய்கிறோம் என்பதால் குறைவாகச் சாப்பிட வேண்டும் என்பதல்ல. நமது உடல் கடிகாரத்தின் செயல்பாட்டின் அடிப்படையிலேயே நாம் அவ்வாறு சாப்பிட வேண்டியிருக்கிறது. பகல் நேரத்தில் உடல் நிறைய கலோரிகளை திறமையாக கையாளுவதற்கும் இரவு நேரத்தில் சற்று குறைவாக கையாளுவதற்கும் ஏற்றவகையில் உடல் வடிவமைக்கப்பட்டுள்ளது’’

இக்காரணத்தினால், ஒழுங்கற்ற வேலை நேரம் கொண்டவர்களுக்கு உடல் எடை கூடும் பிரச்சினை அதிகளவில் இருக்கிறது. இரவு நேரங்களில் நமது உடல் கொழுப்பு மற்றும் சர்க்கரையை செரிக்க சிரமப்படும். ஆகவே இரவு 7 மணிக்கு மேல் நிறைய கலோரி உள்ள உணவுகளைத் தவிர்ப்பதே நாம் உடல் எடையை குறைக்கவோ அல்லது உடல் எடை கூடுவதை தவிர்க்கவோ உதவக்கூடிய முதல் விஷயம்.

காலை உணவைத் தவிர்ப்பது அல்லது குறைவாக உண்பது சரியல்ல என்கிறார் பிரவுன்.

அதாவது, காலைவேளையில் புரதச்சத்து மற்றும் சில கொழுப்புச் சத்து, மாவுச்சத்து உள்ள உணவுகளை எடுத்துக்கொள்வது உங்களுக்கு திருப்தியையும் நீண்ட நேரத்துக்கான சக்தியையும் தரும்.

அதைத்தொடர்ந்து, ஊட்டச்சத்துமிக்க மதிய உணவையும், சற்று இலகுவான இரவு உணவும் எடுத்துக்கொள்ள வேண்டும்.

எப்போதும் கலோரியை கணக்கிட்டு உணவுகளை உட்கொள்வதைவிட, உணவு உண்ணும் நடத்தையில் மாறுதல்களை கொண்டு வருவது நல்லது என்றும் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

உணவு தொடர்பான காட்சித் தூண்டு தலைத் தவிர்க்க வேண்டும் என்பது அவர் களின் அறிவுரை. ஆகவே ஆரோக்கியமற்ற நொறுக்குத்தீனிகளை நமது சமையலறையில் வைத்திராமல், பழம் அல்லது ஆரோக்கியமான நொறுக்குத்தீனிகளை வைத்திருக்க வேண்டும்.

ஒட்டுமொத்தமாக உணவைத் தவிர்க்க முயற்சி செய்வதை விட குறைவான கலோரி உள்ள உணவுகளை மாற்றாக எடுத்துக் கொள்வதை மருத்துவர் ஹார்ப்பர் ஊக்குவிக்கிறார்.

உடல்பருமனைக் கட்டுப்படுத்துவதற்கான பேரியாட்ரிக் அறுவை சிகிச்சை வெறுமனே இரைப்பையின் அளவைக் குறைப்பது மட்டுமல்ல, ஹார்மோன்கள் உருவாக்கத்திலும் மாற்றத்தை ஏற்படுத்துகிறது.

நமது பசியுணர்வு ஹார்மோன் களால் கட்டுப்படுத்தப்படுகிறது. நமது உடலில் பசியுணர்வை கட்டுப் படுத்தவும் தூண்டவும் இருவேறு ஹார்மோன்கள் முக்கியப் பங்கு வகிக்கின்றன.

லண்டனில் உள்ள இம்பீரியல் கல்லூரி ஆராய்ச்சியாளர்கள் பேரியாட்ரிக் அறுவை சிகிச்சைக்குப் பின்னர் பசியார்வத்தில் மாறுதல்களை உண்டாக்கும் குடல் நாள ஹார்மோன்களை மீள்உருவாக்கம் செய்துள்ளனர். தற்போது இது புதிய மருத்துவ பரிசோதனையில் உள்ளது.

மூன்று ஹார்மோன்களின் கலவையானது ஊசி வழியே தினமும், எடை அதிகமானோருக்கு சுமார் நான்கு வாரங்கள் வரை போடப்பட்டது.

‘‘அவர்கள் தற்போது குறைவான பசி உணர்வு கொண்டிருக்கிறார்கள். குறைவாக உண்ணுகிறார்கள். 28 நாட்களில் 28 கிலோ வரை குறைத்திருக்கிறார்கள். இந்த மருந்து பாதுகாப்பானது என நிரூபிக்கப்பட்டால் ஒருவர் ஆரோக்கியமான எடையை எட்டும் வரை இதைப் பயன்படுத்த முடியும்’’ என ஆய்வாளர்கள் கூறுகின்றனர். 

https://www.maalaimalar.com/Health/GeneralMedicine/2018/05/12081722/1162429/Weight-Increase-reasons.vpf

Link to comment
Share on other sites

பெண்களைப் பாதிக்கும் ஃபைப்ரோமையால்ஜியா... அறிகுறிகள், தீர்வுகள்! #FibromyalgiaAwarenessDay

 
 

``காலையிலிருந்து ஒரே உடம்பு வலி.. இந்த இடம்தான்னு இல்ல. கால்லருந்து தலை வரைக்கும் பல இடங்கள்ல, பின்னியெடுக்குது.. மாத்திரை சாப்பிட்டும், ஒன்னும் பிரயோசனம் இல்ல. என்னங்க... உங்ககிட்டதான் சொல்லிக்கிட்டு இருக்கேன்..” என்று சொல்லும் மனைவியின் பேச்சை, இனி உதாசீனப்படுத்தாதீர்கள். அது ஒருவேளை 'ஃபைப்ரோமையால்ஜியா' (Fibromyalgia)நோயாக இருக்கக்கூடும். இது பெண்களை அதிகமாகத் தாக்கக் கூடிய நோய்களில் ஒன்று. இதை, 1990-ம் ஆண்டுக்குப் பிறகுதான் கண்டுபிடித்தார்கள். ‘உலக அளவில் 3 முதல் 6 சதவிகிதம் பேர் ஃபைப்ரோமையால்ஜியா நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்’ என்று கூறுகிறது அமெரிக்க மூட்டுவலிக் கழகம். 

ஃபைப்ரோமையால்ஜியா

 

அதென்ன ஃபைப்ரோமையால்ஜியா? 

 வலி நிவாரண மருத்துவர் பிரபு திலக்கிடம் கேட்டோம்..

``கிரேக்க வார்த்தையில் 'ஃபைப்ரோமையால்ஜியா' என்றால் `தீராத தசைவலி’, `நாள்பட்ட வலி’ என்பது பொருள். இதனை டாக்டர் பிரபு திலக்‘ஃபைப்ரோமையோசைட்டிஸ்’ அல்லது `ஃபைப்ரோசைட்டிஸ்’ என்றும் சொல்வார்கள். ஊசியால் குத்துவதுபோலவோ, தேள்கடிப்பது போலவோ வலி எடுக்கும். உடலில் 18 இடங்கள் வரை வலி ஏற்படலாம். தலையின் பின்பகுதி, கழுத்தின் மேற்பகுதி, தோள்பட்டை, நடு நெஞ்சின் மேற்பகுதி, முழங்கை, இடுப்பு, முழங்காலின் பின்பகுதி உள்ளிட்ட இடங்களில் உள்ள தசைகளை இயக்கும்போது வலியோடு தசை இறுக்கம் ஏற்படும். இந்த இடங்களில் எல்லாம் வலியை உணர முடியும். இந்த இடங்களை `டெண்டர் புள்ளிகள்' (Tender points) என்கிறோம். வலி பாதிப்புள்ளவர்களுக்கு, அந்த இடங்களில் லேசான அழுத்தம் கொடுப்போம். குறைந்தபட்சம் 7 இடங்களில் அதிக வலி ஏற்பட்டால், அது `ஃபைப்ரோமையால்ஜியா' தான் என உறுதி செய்வோம். 

வலி ஏன் ?

உணர்ச்சிகளை மூளையிலிருந்து நரம்புகளின் வழியாக உடலின் மற்ற பாகங்களுக்குக் கொண்டுசெல்வது `நியூரோடிரான் ஸ்மீட்டர்ஸ்' என்கிற நரம்பியக் கடத்திகள்தாம். செரட்டோனின் (serotonin) மற்றும் சப்ஸ்டன்ஸ் பி (substance p) என்ற வேதிப்பொருள்கள்தாம் வலியைக் கடத்துவதில் முக்கியமானவை. சப்ஸ்டன்ஸ் பி, வலியை அதிகளவில் உணரச் செய்யவும் செரட்டோனின், வலியுணர்ச்சியைக் குறைக்கவும் பயன்படுகிறது. ஃபைப்ரோமையால்ஜியா நோயாளிகளுக்குச் செரட்டோனின் சுரப்பு குறைந்துவிடும் அல்லது செரட்டோனின் போதுமான நேரத்துக்கு உடலில் தங்காது. இதனால், சப்ஸ்டன்ஸ் பி அளவு அதிகமாகி, கடுமையான வலியை உண்டாக்குகிறது. 

எக்ஸ்ரே

கண்டறிவது எப்படி? 

இந்நோயை ரத்தப் பரிசோதனைகள், எக்ஸ்ரே, ஸ்கேன் பரிசோதனைகளால் கண்டறிய முடியாது. ஆர்த்ரைட்டிஸ், நரம்பியல் கோளாறுகள், எலும்பு தொடர்பான பிரச்னைகள் என வேறு எந்தப் பாதிப்புகளாலும் வலி ஏற்படவில்லை என்பதை உறுதிப்படுத்த மட்டும்தான் முடியும். வலி தொடர்ந்தால், வலி நிவாரண மருத்துவர்களைச் சந்திக்க வேண்டும். அவர்களால், மட்டுமே இந்நோயைக் கண்டறிய முடியும். அவர்களது ஆலோசனையின்பேரில் உடற்பயிற்சி மற்றும் தினசரி வாழ்க்கை முறையில் சில மாற்றங்களைக் கொண்டுவர வேண்டும். அத்துடன் செரட்டோனின் சுரப்பைத் தூண்டும் மாத்திரைகள், தசைவலியைக் குறைக்கும் மாத்திரைகளை மருத்துவரின் பரிந்துரைப்படி எடுத்துக்கொள்ளலாம். மேலும், `டிரிகர் பாயின்ட்ஸ் ஊசிகள்' (Trigger Point Injections) மூலமாகவும் முழங்கால் வலிநிவாரணம் பெறலாம்.  

யாரைத் தாக்கும்?

இந்நோய் 20 முதல் 60 வயதுள்ள பெண்களுக்கு அதிகம் ஏற்படும். நோய்க்கான காரணங்கள் இன்னமும் கண்டறியப்படவில்லை. இருந்தாலும், சப்ஸ்டன்ஸ் பி வேதிப்பொருளின் அளவு அதிகரிப்பு, தூக்கமின்மை, உடலுழைப்பு குறைந்துபோதல், அதிகப்படியான சோகம் போன்றவற்றால் ஏற்படலாம் என நம்பப்படுகிறது. இதுபற்றிய ஆய்வுகள் தொடர்ந்துகொண்டுதான் இருக்கின்றன.  

விழிப்புஉணர்வு தேவை!

ஃபைப்ரோமையால்ஜியா நோய் பாதிப்புள்ளவர்கள் மட்டுமல்லாது, நோய் பாதிப்பில்லாதவர்களும் இந்நோய் பற்றி தெரிந்துகொள்ள வேண்டும். ஏனெனில், அனைத்துப் பரிசோதனை முடிவுகளும் ‘எந்த நோயும் இல்லை’ என்றுதான் காட்டும். நோயாளி, வலியால் துடிக்கும்போது, அவரின் குடும்பத்தினரே “ஒண்ணுமேயில்ல.. எதுக்கு இப்படி சீன் போடுறே..?”  எனக் கேட்கும் நிலைதான் இருக்கிறது. இது நோயாளிகளுக்கு மன உளைச்சலை ஏற்படுத்திவிடும்.

அரவணைக்கலாமே!

தற்போது வரை இந்நோய்க்கான மருந்து கண்டறியப்படவில்லை. ஆயுள் முழுக்க வலியோடு வாழும் ஃபைப்ரோமையால்ஜியா நோயாளர்களை நாம் புறக்கணிக்கக் கூடாது. அவர்களுக்கு ஆதரவாக இருக்க வேண்டும்; புரிந்துகொள்ள வேண்டும்;  சிகிச்சை அளிக்க வேண்டும்" என்கிறார் மருத்துவர் பிரபு திலக்.  

https://www.vikatan.com/news/health/124822-fibromyalgia-treatment-tests-causes-symptoms-diagnosis.html

Link to comment
Share on other sites

இந்த உணவுகளை சாப்பிட்டால் மலச்சிக்கல் ஏற்படும்

 

அன்றாடம் நாம் சாப்பிட்டு வரும் சில உணவுகளின் மூலம் மலச்சிக்கல் ஏற்படும் வாய்ப்புள்ளது. இங்கு அப்படி எந்த உணவுகள் எல்லாம் மலச்சிக்கலை ஏற்படுத்தும் என்று பார்க்கலாம்.

 
இந்த உணவுகளை சாப்பிட்டால் மலச்சிக்கல் ஏற்படும்
 
மலச்சிக்கல் ஏற்படுவதற்கு தண்ணீர் குறைவாக குடிப்பது, உட்கார்ந்தே பணியாற்றுகின்ற வாழ்க்கை மற்றும் எடுத்துக் கொள்ளும் சில மருந்துகளின் பக்க விளைவுகள் தான் காரணமாகும். அதே சமயம் அன்றாடம் சாப்பிட்டு வரும் சில உணவுகளின் மூலமும் மலச்சிக்கல் ஏற்படும் வாய்ப்புள்ளது. அதுவும் நாம் எதிர்பாராத சில உணவுகள் நமக்கு மலச்சிக்கல் தொல்லையை ஏற்படுத்தவும் செய்யும். இங்கு அப்படி எந்த உணவுகள் எல்லாம் மலச்சிக்கலை ஏற்படுத்தும் என்று பட்டியலிடப்பட்டுள்ளது.

* அதிகப்படியான அலுவலக வேலையால் எளிதில் சமைத்து சாப்பிடுவதற்கு ஏற்றவாறு கடைகளில் உறைய வைக்கப்பட்ட உணவுகள் விற்கப்படுகின்றன. ஆனால் அந்த உணவுப் பொருட்களில் நார்ச்சத்து குறைவாக இருப்பதோடு, கொழுப்புக்களும் அதிகம் உள்ளது. அதுமட்டுமின்றி, அவற்றை அடிக்கடி எடுத்து வருவதன் மூலம், செரிமானம் சீராக நடைபெறாமல், மலச்சிக்கல் ஏற்படுகிறது.

* வாழைப்பழங்கள் கூட மலச்சிக்கலை உண்டாக்கும். அதுவும் அது கனிந்திருக்கும் நிலையைப் பொருத்தது. வாழைப்பழமானது ஓரளவு காயாக இருந்தால், அது மலம் வெளியேறுவதற்கு தடையை ஏற்படுத்தும். அதுவே நன்கு கனிந்திருந்தால் மலச்சிக்கலில் இருந்து விடுதலை தரும். ஏனெனில் பச்சை மற்றும் கனியாக வாழைப்பழங்களில் ஸ்டார்ச் அதிகம் உள்ளதால், அது எளிதில் செரிமானமாகாமல், மலச்சிக்கலை ஏற்படுத்துகிறது.

* சிப்ஸ் மற்றும் வறுத்த நொறுக்குத்தீனிகளை சிலர் எப்போதும் தின்றவாறே இருப்பார்கள். உண்மையில் அத்தகைய உணவுப் பொருட்களில் கொழுப்புக்கள் அதிகமாகவும், நார்ச்சத்து குறைவாகவும் இருப்பதோடு, சீக்கிரம் செரிமானமாகாமல், மலச்சிக்கலை ஏற்படுத்தும்.

201805111315110777_1_constipation-occurs._L_styvpf.jpg

* மாட்டிறைச்சி கூட செரிமானமாக தாமதமாகும். இதற்கு அதில் உள்ள அதிகளவிலான கொழுப்புக்கள் மற்றும் புரோட்டீன்கள் தான். இவை செரிமான மண்டலத்தினால் எளிதில் உடைக்கப்படுவதில்லை. அதுமட்டுமின்றி, இரும்புச்சத்து அதிகம் உள்ளது. இச்சத்தை அதிகம் எடுத்தாலும், மலச்சிக்கல் ஏற்படும்.

* உங்களுக்கு பிரெஞ்சு பிரைஸ், பஜ்ஜி, பக்கோடா போன்ற வறுத்த உணவுகள் ரொம்ப பிடிக்குமா? அவற்றை அடிக்கடி சாப்பிடுபவரா? அப்படியெனில் உங்களுக்கு மலச்சிக்கல் ஏற்படுவதற்கு அது ஒன்றே போதும். அவற்றில் கொழுப்பு அதிகம் இருப்பதோடு, அவை உணவுகளை குடலினுள் மெதுவாக நகர்த்துவதோடு, வாய்வு தொல்லையுடன் மலச்சிக்கலையும் ஏற்படுத்தும்.

* பலரும் பிஸ்கட், கேக் போன்றவை ஆரோக்கியமானது என்று நினைக்கின்றனர். ஆனால் உண்மையில் அவை ஆரோக்கியமற்றது மட்டுமின்றி, உடல் எடை அதிகரிக்கக்கூடியது. மேலும் இவற்றில் நார்ச்சத்து மிகவும் குறைவு மற்றும் கொழுப்புக்கள் அதிகமாகவும் உள்ளது. இதனால் செரிமானமாவதில் தாமதமாகி, மலச்சிக்கல் ஏற்படும்.

* வாழைப்பழங்களைப் போலவே, காபி சில நேரங்களில் குடலியக்கத்தை சீராக தூண்டி, மலச்சிக்கலில் இருந்து விடுதலை தரும். இல்லாவிட்டால், அதிகப்படியான காபியை குடிக்கும் போது, அதில் உள்ள காப்ஃபைன் உடல் வறட்சியை ஏற்படுத்தி, மலச்சிக்கலை ஏற்படுத்தும். 

https://www.maalaimalar.com/Health/GeneralMedicine/2018/05/11131511/1162290/If-you-eat-these-foods-then-constipation-occurs.vpf

Link to comment
Share on other sites

உடற்பயிற்சிக்கு முன்னரும் பின்னரும் சாப்பிடவேண்டியவை, கூடாதவை!

 
 

ஊட்டச்சத்து நிபுணர் சுதர்சனா'க்சர்சைஸ் செஞ்சுட்டு வந்தவுடனே, சர்க்கரைப் பொருள்கள், கேக், ஜூஸ் போன்றவற்றை உட்கொண்டால், செய்த உடற்பயிற்சிக்கான பலன் கிடைக்காது' என ஒரு கருத்து இருக்கிறது. `இது உண்மைதான்’ என்கிறது மருத்துவம். தவிர்க்கவேண்டிய பொருள்களின் பட்டியலில், சர்க்கரையைப்போலவே வேறு சில உணவுப் பொருள்களும் இருக்கின்றன. அந்த வகையில், உடற்பயிற்சிக்கு முன்னரும் பின்னரும் சாப்பிடக் கூடாதவை, சாப்பிடவேண்டியவை, எவ்வளவு தண்ணீர் குடிக்க வேண்டும், உணவுக்கும் உடற்பயிற்சிக்குமான இடைவெளி எவ்வளவு நேரம் இருக்க வேண்டும் என்பது பற்றியெல்லாம் விரிவாகப் பேசுகிறார் ஊட்டச்சத்து நிபுணர் சுதர்சனா.

``வீட்டிலேயே உடற்பயிற்சி செய்பவர்கள், ஜிம்முக்குப் போய் பயிற்சி செய்பவர்கள் என இரண்டு வகையினர் இருக்கிறார்கள். வீட்டிலேயே பயிற்சி மேற்கொள்கிறவர்களில் சிலர், சாப்பிட்டவுடனேயே உடற்பயிற்சியை ஆரம்பித்துவிடுவார்கள். ஜிம்மில் வொர்க்-அவுட் செய்பவர்கள் சிலர் காலை எழுந்ததுமே ஜிம்முக்குக் கிளம்பிவிடுவார்கள். இவர்களெல்லாம் உடற்பயிற்சிக்கு முன்னர் சாப்பிடவேண்டிய உணவில் அக்கறை காட்டுவதில்லை. உடம்பில் எனர்ஜி இல்லாமல், உடற்பயிற்சிகளைச் செய்யக் கூடாது. உண்மையில் தசை, தொடை போன்ற பகுதிகளுக்கான பயிற்சி செய்பவர்களிலிருந்து, மன அமைதிக்காக மெடிடேஷன் செய்பவர்கள் வரை அனைவருக்கும் அவரவர் செய்யும் பயிற்சிக்கேற்ப எனர்ஜி தேவை. 

 

உடற்பயிற்சி

உடற்பயிற்சிக்கு முன்னர்...

சாப்பிடும் உணவுகள், ரத்த சர்க்கரை அளவை கணிசமாக உயர்த்துவதாக இருக்க வேண்டும். காரணம், ரத்த சர்க்கரை அளவு அதிகமாகும்போது அடுத்த சில மணி நேரங்களுக்கு உடல் எனர்ஜெட்டிக்காக இருக்கும். அந்த வகையில், வொர்க்-அவுட் செய்வதற்கு முன்னர் சாப்பிடவேண்டிய உணவுகளின் பட்டியல் இங்கே... 

* ஆப்பிள்
* ஆரஞ்சு
* பேரிக்காய்
* பப்பாளி
* பீனட் பட்டர் தடவிய முழு தானிய ரொட்டி
* ஓட்ஸ்
* தயிர்
*கிரீன் டீ
* நட்ஸ்.

உடற்பயிற்சிக்குப் பின்னர்...

உடற்பயிற்சி செய்யும்போது, உடலிலிருக்கும் சக்தி அனைத்தும் பயன்படுத்தப்பட்டிருக்கும். எனவே, உடற்பயிற்சிக்குப் பின்னர் உட்கொள்ளும் உணவுகள் அனைத்தும் எளிதில் விழுங்கக்கூடிய, அதிகம் மென்று சாப்பிட அவசியமில்லாத உணவுகளாக இருக்க வேண்டும். பொதுவாக, உடற்பயிற்சி செய்து முடித்ததும் பலரும் எனர்ஜிக்காக எலெக்ட்ரோலைட்ஸ், புரோட்டீன் டிரிங்ஸ் போன்றவற்றை உட்கொள்வார்கள். அவர்கள், அவற்றுக்குப் பதிலாக

* தண்ணீர்
* இளநீர்
* வாழைப்பழம் போன்றவற்றை உட்கொள்ளலாம்.
* வொர்க்-அவுட் செய்யும்போது, உடலிலிருக்கும் அமினோ அமிலம் அனைத்தும் நீங்கிவிடும் என்பதால், அமினோ அமிலம் அதிகமிருக்கும் உணவுகளை உட்கொள்ளலாம். தசைக்கான வலிமையை அதிகரிப்பதில் அமினோ அமிலத்துக்கு முக்கியப் பங்கு இருக்கிறது. அந்த வகையில், அவித்த முட்டை, தயிர், மோர், பால் போன்றவற்றை உட்கொள்வது மிக நல்லது. கொழுப்புச்சத்து அதிகமுள்ள உணவுகளை முழுமையாக தவிர்த்துவிட வேண்டும்.

உடற்பயிற்சி

நேரத்தில் கவனம்!

* செரிமானத்துக்குப் பிறகுதான், தேவையான சக்தி உடலுக்குக் கிடைக்கும் என்பதால், 20 - 30 நிமிடங்களுக்குள் செரிமானம் ஆகக்கூடிய வாழைப்பழம், பேரீச்சம்பழம் போன்றவற்றை உட்கொள்ளவும். 

* உடற்பயிற்சி செய்யப் போவதற்கு, 40 முதல் 60 நிமிடங்களுக்கு முன்னர் சாப்பிட்டுவிட வேண்டும். 

* உடற்பயிற்சி செய்து முடித்த அடுத்த ஒரு மணி நேரம், மிகவும் மதிப்புவாய்ந்தது. காரணம், அந்த நேரத்தில்தான் தசைகள் சத்துக்காகக் காத்திருக்கும். அப்போது சாப்பிடும் உணவு, நீங்கள் செய்த உடற்பயிற்சியை முழுமையாக்கி, உடல் வலிமைக்கு வலுசேர்க்கும். 

* உடற்பயிற்சி செய்து முடித்த 20 நிமிடங்களுக்குள் ஏதாவதொரு ஹெல்த்தி ஸ்நாக்ஸைச் சாப்பிட வேண்டும். அதிகபட்சம் 3 முதல் 4 மணி நேரத்துக்குப் பிறகு, உணவு உட்கொள்ளலாம். 

தண்ணீர் அவசியம்! 

* உடற்பயிற்சிக்கு முன்னரும் பின்னரும், 2 முதல் 3 டம்ளர் தண்ணீர் குடிக்க வேண்டும்.

* உடற்பயிற்சியின்போது, ஒவ்வொரு 15 - 20 நிமிடங்களுக்கும் சிறிது தண்ணீர் குடிக்கவும். பெரும்பாலும் பயிற்சி செய்யும்போது அதிகமாக தண்ணீர் தாகம் எடுக்கும். தாகம் எடுத்தவுடன் வேக வேகமாக தண்ணீர் அருந்திவிடாமல், கொஞ்சம் கொஞ்சமாகக் குடிக்கவும்.

தண்ணீர்

ஃபிட்னெஸுக்கான பொது அறிவுரைகள்...

* சர்க்கரைப் பொருள்களையும், கொழுப்புச்சத்துள்ள உணவுகளையும் அன்றாட உணவிலிருந்து முழுமையாகத் தவிர்த்துவிடுங்கள்.

* முழுதானிய உணவுகள், பழங்கள், காய்கறிகளை உணவில் அதிகம் சேர்த்துக்கொள்ளவும். உடலில் நீர் வறட்சி ஏற்படாத அளவுக்குத் தண்ணீர் குடிக்கவும்.

* அத்லெட்ஸ், பாடி-பில்டர்ஸ் போன்ற அதிகமாக உடற்பயிற்சி செய்பவர்கள், பயிற்சியாளர்களின் பரிந்துரைப்படி தண்ணீரோடு சேர்த்து ஸ்போர்ட்ஸ் டிரிங்ஸ், எலெக்ட்ரோலைட்ஸ் போன்றவற்றை அருந்தலாம்.

* தினசரி உணவில், 55-60 சதவிகிதம் கார்போஹைட்ரேட்ஸ் (ஓட்ஸ், பீன்ஸ், பழங்கள், காய்கறிகள், கோதுமை, பாஸ்தா போன்றவை), 15-20 சதவிகிதம் கொழுப்புச்சத்து (மீன், நட்ஸ்), 15-20 சதவிகிதம் புரதம் (மீன், சிக்கன், குறைந்த கொழுப்புச்சத்துள்ள பால் பொருள்கள்) உட்கொள்ளலாம்.

 ஃபிட்னெஸ்

* முழு உணவாக ஒரே நேரத்தில் உட்கொள்வதற்குப் பதிலாக, உணவைப் பிரித்து 5 முதல் 7 தடவையாகச் சாப்பிடுங்கள்.

 

* முதன்முறையாக உடற்பயிற்சி செய்யும் சிலர், வார்ம்-அப் செய்யாமல் நேரடியாகப் பயிற்சிகளை மேற்கொள்வதுண்டு. வார்ம்-அப் செய்யாமல், பயிற்சியைத் தொடங்கவேண்டாம். புதிதாக ஜிம் போகும் சிலர், ஆர்வத்தில் அளவுக்கதிகமாக பயிற்சி செய்துவிடுவதுமுண்டு. கொஞ்சம் கொஞ்சமாக உங்கள் பயிற்சி நேரத்தையும், பயிற்சி முறைகளையும் அதிகப்படுத்துங்கள். அதுதான் உடலுக்கும் ஆரோக்கியத்துக்கும் நல்லது’’ என்கிறார் சுதர்சனா. 

https://www.vikatan.com/news/health/125046-foods-to-eat-before-and-after-exercise.html

Link to comment
Share on other sites

இரவில் நன்றாக தூங்கவேண்டுமா? - இந்த 6 வழிகளை பின்பற்றுங்கள்

நிம்மதியான தூக்கம்படத்தின் காப்புரிமைGETTY IMAGES

நமது உடல் கடிகாரத்தை பாதிக்கும் வகையில் இரவில் நாம் சரியாக உறங்காதிருப்பது, மன அழுத்தம் மற்றும் பை போலார் டிஸார்டர் எனும் மனநிலை சீர்கேடு போன்றவற்றுக்கு வழிவகுக்கும் என்பதற்கான நிறைய ஆதாரங்களை நிபுணர்கள் கண்டுபிடித்துள்ளார்கள்.

இயற்கையாக உடலில் நடக்கும் இயக்கத்தை பாதிக்கும் வகையில் நடந்து கொள்வதால் நாம் தூங்கி வழிவது மட்டுமின்றி உடலில் சில பிரச்சனைகளையும் சந்திக்க வேண்டியிருக்கும் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

ஆகவே, இரவில் நீங்கள் நிம்மதியாக தூங்க என்ன செய்ய வேண்டும்?

1. மாலைநேர வெளிச்சத்தில் கவனம் தேவை

உங்களால் செல்பேசி, திறன்பேசி, மடிக்கணினி ஆகியவற்றை பிரியமுடியாமல் தவிக்கிறீர்களா? நள்ளிரவு தாண்டியும் சமூக வலைதளத்தில் மேய்ந்து கொண்டிருக்கிறீர்களா?

இதற்கு உங்கள் விடை ஆம் எனில், உங்கள் தூக்கத்தை நீங்களே பாதித்தவராக இருக்கக்கூடும்.

ஏனெனில், இந்த சாதனங்கள் வலிமையான நீல நிற வெளிச்சத்தை உமிழ்கின்றன. இரவு நேரங்களில் இவற்றை பயன்படுத்தும்போது நமக்கு தூக்கம் வருவதுபோல உணரும் சமயங்களில் நமது உடலுக்குள் வெளியாகும் மெலட்டோனினுக்கு இந்நீல நிற வெளிச்சம் தடைபோடுகிறது.

எப்போது நமது உடலுக்குள் மெலட்டோனின் சுரக்கத் துவங்குகிறதோ, அது நாம் தூங்குவதற்கான நேரம் என்பதற்கான சைகை.

லேப்டாப்பில் வேலை செய்யும் பெண்படத்தின் காப்புரிமைGETTY IMAGES

சர்ரே பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் மால்கம் வான் ஸ்கான்ட்ச், இரவு நேரங்களில் தூங்கச் செல்வதற்கு ஒன்றரை மணி நேரத்துக்கு முன்பாக நீல நிற ஒளியை உமிழும் டிஜிட்டல் சாதனங்களை பயன்படுத்துவது நல்லது என்கிறார்.

இல்லையெனில், நீல நிற வெளிச்சத்தை தடை செய்யும் பிரத்யேக கண்ணாடிகள் அணிவது அல்லது இவ்வெளிச்சத்தை குறைக்கும் செயலிகளை பயன்படுத்துவது ஆகியவை உங்களுக்கு உதவக்கூடும்.

நமது தூக்கத்திற்கு எதிரியான டிஜிட்டல் சாதனங்களில் உமிழப்படும் நீல நிற வெளிச்சத்தை கட்டுப்படுத்துவது மட்டுமின்றி. மாலை சூரியன் மறைந்த பிறகு வேறு எந்தவித மின்சார வெளிச்சத்தையும் பயன்படுத்துவதையும் குறைப்பது அதிக பலன் தரும்.

படுக்கையறையை முடிந்தவரை இருட்டறையாக வைத்துக்கொள்ள வேண்டும். மிகக்குறைவான வெளிச்சம் தரும் விளக்குகள் மற்றும் திரைச்சீலைகளை முறையாக பயன்படுத்தவது ஆகியவற்றின் மூலம் இதைச் சாதிக்கமுடியும்.

2. தூங்கும் நேரத்தை முறைப்படுத்துங்கள்

வார இறுதிகளில் அதாவது வெள்ளிக்கிழமை அல்லது சனிக்கிழமைகளில் நீண்ட நேரம் இரவில் விழித்திருக்க நாம் தூண்டப்படலாம். ஆனால் நாம் வாரம் முழுவதும் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் படுக்கைக்குச் செல்வதே சிறந்தது.

ஏனெனில் இவை வார இறுதி மற்றும் வார நாட்களில் நமது தூக்கத்தில் ஏற்படும் மாறுபாடுகளை களைந்து ஒரே மாதிரியான ஓய்வு நேரத்தை அடைந்து உடலானது புத்துணர்ச்சியாக இருக்க உதவும்.

தூங்கும் நேரத்தில் வார இறுதி மற்றும் வார நாட்களில் எவ்வளவு தூரம் மாறுபாடு இருக்கிறதோ அதே அளவுக்கு நமது உடல் பாதிக்கப்படுவதற்கும் வாய்ப்பு இருக்கிறது. வளர்சிதை மாற்ற கோளாறு மற்றும் இதய நோய் உள்ளிட்ட பாதிப்புகள் வருவதற்கான வாய்ப்பை இவை அதிகரிக்கின்றன.

வார இறுதியில் தூங்காமல் படுக்கையில் மட்டும் அதிக நேரம் படுத்திருப்பது உங்களது உடலுக்கு மேலும் தூக்கம் தேவை என்பதற்கான ஓர் அறிகுறி என்கிறார் பேராசிரியர் வான் ஸ்கான்ட்ச்.

3. படுக்கையறையை ஓய்வுக்கான இடமாக்குங்கள்

மடிக்கணினிகள் மற்றும் மொபைல் சாதனங்கள் நமது படுக்கையறையை பொழுதுபோக்குக்கான அறையாக மாற்றிவிட்டன.

உங்களது தூக்கத்தை மேம்படுத்த நீங்கள் விரும்பினால் இந்த சாதனங்களை பயன்படுத்துவதில் சில மாற்றங்களைச் செய்ய வேண்டும் என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

செல்பேசிகள், மடிக்கணினிகள் மற்றும் கணினி ஆகியவற்றை பிற அறைகளில் வைக்க வேண்டும். மேலும் அலாரம் வைப்பதற்கு பிரத்யேக கடிகாரங்களை பயன்படுத்துவதன் மூலம் உங்களது படுக்கைக்கு அருகே மொபைலின் தேவையை தவிர்க்கமுடியும்.

படுக்கையறையை குளிர்ச்சியாக வைத்திருப்பது நல்லது.ஏனெனில் குளிர்ந்த வெப்பநிலையில் நமது உடலுக்கு தூக்கம் கிடைக்க எளிதாக இருக்கும்.

பால்கனியில் இருக்கும் பெண்படத்தின் காப்புரிமைGETTY IMAGES

4. 'காலை' சூரிய வெளிச்சம் அவசியம் :-

சூரிய உதயம் மற்றும் மறைவுக்கு ஏற்றபடியே நமது உடல் கடிகாரங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன. ஆனால் நம்மில் பலருக்கு போதுமான காலை வெளிச்சம் கிடைப்பதில்லை அல்லது சூரிய அஸ்தமனத்துக்கு பிந்தைய வெளிச்சத்தை அதிகளவில் பெறுகிறோம்.

தினமும் குறிப்பிட்ட அளவு காலை நேர சூரிய வெளிச்சம் உடலுக்கு கிடைப்பதற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். உதாரணமாக காலை நேரத்தில் திரைசீலைகளை விலக்கி வைப்பது அல்லது அதி காலையில் சூரிய வெளிச்சம் உடலில் படுமாறு ஓடுவது போன்றவை நமக்கு மாலை வேளையில் எளிதில் தூக்க உணர்வு வர உதவும்.

உங்களுக்கு காலை வெளிச்சம் கிடைக்கவில்லை என்றாலோ அல்லது நீங்கள் வசிக்கும் பகுதி அதிக குளிர்காலத்தை கொண்டிருப்பதாக இருந்தால் பருவகால பாதிப்பு குறைபாடு போன்ற உடல் பாதிப்புகளுக்கு சிகிச்சையாக பயன்படுத்தப்படக்கூடிய வெளிச்சப் பெட்டிகளை இச்சயமங்களில் பயன்படுத்துவது பலன் தரும்.

5. படுக்கைக்கு செல்வதற்குமுன் செய்யும் வேலைகளை ஒழுங்குபடுத்துங்கள்

இது தூங்குவதற்கான நேரம் என உடலை தயார்படுத்தும் விதமாக அதற்கு சைகைகளை தரும்வகையில் சில வேலைகளை செய்வது நல்ல தூக்கம் பெற உதவும் என்கிறார் லண்டனின் கிங்ஸ் கல்லூரியைச் சேர்ந்த மருத்துவர் பென் கார்ட்டர்.

புத்தகம் படிப்பது, ரேடியோ அல்லது இசை கேட்பது, குளிப்பது ஆகியவை மனதை தூக்கத்துக்கு தயார்படுத்தவும் நாம் படுக்கைக்குச் செல்ல தயாராகவும் உதவும்.

''பொதுவாக பெற்றோர்கள் குழந்தைகளை தூக்கத்துக்கு தயார்படுத்த இவற்றைச் செய்கிறார்கள்'' என்கிறார் மருத்துவர் கார்ட்டர்.

'' உணவு ஊட்டுவது, குழந்தைகளை குளிப்பாட்டுவது அதன் பின்னர் படுக்க வைத்து கதை சொல்லி தூங்க வைக்கின்றனர் பெற்றோர்கள். அது சரியான நடைமுறை.

தூக்கத்துக்கு முந்தைய நேரத்தை வழக்கப்படுத்தாமல் இருப்பது உங்களுக்கு தூக்கம் வர உதவாது'' என குறிப்பிடுகிறார் மருத்துவர்.

இரவு உணவை குறிப்பிட்ட நேரத்துக்கு முடிப்பது, அதாவது படுக்கைக்குச் செல்லும் சில மணி நேரங்களுக்கு முன் முடித்துவிடுவது போன்றவை இரவுத்தூக்கத்தை மேம்படுத்தும்.

தூக்கம்படத்தின் காப்புரிமைKEVIN FRAYER

6. கஃபைனை தவிருங்கள்

இரவு காபி அருந்தினால் தூக்கம் வருவது தடைபடுவதை நம்மில் பலர் உணர்ந்திருக்கலாம்.

ஆனால், உங்களுக்கு தெரிந்திருக்காமல் போயிருக்ககூடிய ஒரு விஷயம் என்னவெனில், கஃபைன் சேர்க்கப்பட்ட பானங்களான டீ, கார்பனேட்டட் குளிர்பானங்கள் ஆகியவற்றை மாலை வேளையில் அருந்தியிருந்தால், அவை உங்களுக்கு தூக்கம் வருவதை கடினப்படுத்தலாம்.

ஏனெனில், நமது உடலின் இயக்கத்தில் கஃபைன் தாக்கம் ஐந்து முதல் ஒன்பது மணி நேரம் வரை இருக்கும்.

மது அருந்துவது?

ஆம். இது மற்றொரு முக்கியமான விஷயம்.

ஒன்று அல்லது இரண்டு கோப்பை மது அல்லது பிராந்தி ஆகியவற்றை இரவு படுக்கைக்குச் செல்லும் முன் குடிப்பதை பலர் வாடிக்கையாக வைத்திருக்கிறார்கள்.

மது குடிப்பது தூக்கத்தை மேம்படுத்த எவ்வகையிலும் உதவாது என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

''ஆல்கஹால் ஒரு விசித்திரமான விளைவை ஏற்படுத்தும். இது நீங்கள் எளிதில் தூக்கத்தில் விழ உதவும். ஆனால் உங்களுக்கு ஆழ்ந்த தூக்கம் கிடைப்பதிலும், தூக்கத்தின் தரத்திலும் பாதிப்பை ஏற்படுத்தும்'' என்கிறார் பேராசிரியர் ஸ்கான்ட்ச்.

https://www.bbc.com/tamil/science-44158036

Link to comment
Share on other sites

முதுகு வலியை குறைப்பது எப்படி?

 

எம்மில் பலரும் இன்று அலுவலகத்தில் பணியாற்றும் போதும் அல்லது வீட்டில் வேலை செய்யும் போதும் உடலுக்கு ஏற்ற வகையில் அமர்ந்து பணியாற்றுவதில்லை. குறிப்பாக முதுகு தண்டு வளையாமல் நேராக அமர்ந்து பணியாற்றுவதில்லை. அதனால் முதுகு வலி ஏற்படுகிறது.

முதுகு வலி என்றவுடன் பலரும் முதுகு வலி என்றால் அது சாதாரண முதுகு வலி என்று தான் நினைக்கிறார்கள். ஒன்றரை மாத முதுகு வலி, இரண்டரை மாத முதுகு வலி, ஐந்தாண்டுகளுக்கு மேலான முதுகு வலி என முதுகு வலி மூன்று வகைகளாக ஏற்படுகிறது. டிஸ்க் கம்ப்ரஷன் எனப்படும் முதுகு தண்டில் ஏற்படும் இறுக்கமான நிலையே அல்லது இயல்பற்ற நிலையே முதுகு வலிக்கு மூல காரணமாக அமைகிறது.

health_news.jpg

வெந்நீர் ஒத்தடம், ஐஸ் கியூப்பால் ஒத்தடம், வலி நிவாரணிகளை பயன்படுத்துவது, பெயின் ரிலீவர் களிம்புகளை தடவிக் கொள்வது அல்லது ஸ்பிரே அடித்துக் கொள்வது என முதுகு வலிக்கான தற்காலிக நிவாரணத்தைத்தான் நாம் முதலில் தெரிவு செய்கிறோம்.

ஆனால் முதுகு வலி வந்தால் பூரணமாக ஒய்வு எடுத்தால் விரைவில் இயல்பான நிலைக்கு திரும்பவிடலாம். அது போல ஒய்வு எடுக்கும் போதும் மருத்துவர்களின் அறிவுரையை பின்பற்றவேண்டும். மருத்துவர்கள் படுக்கை, தலையணை ஆகியவற்றைக் குறித்தும், பின் எப்படி படுக்கவேண்டும்? எப்படி எழுந்திருக்கவேண்டும்? எப்படி உட்காரவேண்டும்? என்பது குறித்தும் ஒவ்வொருவருக்கும் அவர்களுடைய உடல் அமைப்பிற்கேற்ப வழிகாட்டுவர். அதனை உறுதியாக பின்பற்றவேண்டும். அதே போல் இயன்முறை மருத்துவர்கள் சொல்லும் உடற்பயிற்சியையும் இணைந்து மேற்கொண்டால் முதுகு வலியிலிருந்து குணமடையலாம்.

வைத்தியர் ராஜ்கண்ணா

தொகுப்பு அனுஷா

http://www.virakesari.lk/article/33629

 

 

 

அதிகரித்து வரும் கௌட் எனும் மூட்டு வலி

 

இன்றைய திகதியில் முப்பது வயது முதல் நாற்பது வயது வரையுள்ள தெற்காசிய நாட்டவர்கள் கௌட் எனப்படும் மூட்டு வலியினால் பாதிக்கப்படுவது அதிகரித்து வருகிறது. உலகளவில் கடந்த ஐம்பதாண்டுகளில் இத்தகைய மூட்டு வலியால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை ஐம்பது சதவீத அளவிற்கு அதிகரித்திருக்கிறது. ஆனாலும் மக்களிடம் இது குறித்த விழிப்புணர்வு போதிய அளவிற்கு ஏற்படவில்லை.

இரத்தத்தில் யூரிக் அமில படிகங்களின் எண்ணிக்கை குறிப்பிட்ட அளவை விட அதிகமாக இருந்தால் இந்த பாதிப்பு ஏற்படும். இதற்கு மருத்துவர்கள் ஹைப்பர்யூரிக்கேமியா என்று குறிப்பிடுவார்கள். இந்த பாதிப்பு கால் விரல்கள், பெருவிரல் இணைப்பு, கைவிரல்கள், கணுக்கால், கால் மூட்டு என உடலில் எந்த மூட்டுகளிலும் ஏற்படலாம். 

knee_pain.jpg

பொதுவாக உடலில் சேரும் யூரிக் அமிலங்கள் மற்றும் அதன் கூறுகள் சிறுநீரகத்தால் வெளியேற்றப்படும். அப்படி வெளியேற்றப்படாத யூரிக் அமில கூறுகள் சிறுசிறு கற்களாகி சிறுநீரகத்தில் தங்கி விடும். ஒரு சிலருக்கு இந்த பாதிப்பு பாரம்பரிய மரபணு கோளாறுகளாலும் ஏற்படலாம்.

இதற்கு மருத்துவர்கள் அதிகளவு தண்ணீரை அருந்துவது தான் சரியான நிவாரணம் என்று அறிவுறுத்துகிறார்கள். தண்ணீர் தான் இந்த யூரிக் அமில கூறுகளை சிறுநீரகத்தின் வழியாக வெளியேற்றுகின்றன. அதே சமயத்தில் புரதச்சத்து அதிகமுள்ள உணவுவகைகள், துரித உணவுகள், மது ஆகியவற்றை முற்றாக தவிர்க்கவேண்டும்.

அதே போல் செர்ரி பழங்களையும், செர்ரி பழச்சாறுகளையும் அருந்துவதால் யூரிக் அமில கூறுகளால் ஏற்படும் பாதிப்பு குறையும். அத்துடன் உடலில் சர்க்கரையின் அளவையும் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ளவேண்டும். இவற்றை பராமரித்தால் கௌட் எனப்படும் மூட்டு வலிகளிலிருந்து விடுபடலாம்.

வைத்தியர்  ராஜ்கண்ணா,

தொகுப்பு அனுஷா.

http://www.virakesari.lk/article/33575

 

 

உணவுக்குழாய் பாதையில் ஏற்படும் புற்றுநோயை தடுக்க...

 

இன்னும் பத்து ஆண்டுகளில் உலகளவில் புற்று நோயால் பாதிக்கப்பட்டு மரணமடைபவர்களின் எண்ணிக்கை தான் அதிகமாக இருக்கும் என்று உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. அதே போல் ஆண்டுதோறும் புற்றுநோயால் பாதிக்கப்படும் புதிய நோயாளிகளின் எண்ணிக்கை லட்சக்கணக்கில் உருவாகி வருகிறது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புற்று நோயைப் பொறுத்தவரை அதன் அறிகுறிகள் என்பது தொடக்க நிலையில் தெரிவதில்லை. இருபது முதல் முப்பது சதவீதம் பாதிக்கப்பட்டவுடன் தெரியவருகிறது. அதே போல் உணவுக்குழாய் பாதையில் ஏற்படும் புற்று நோயால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும் உயர்ந்து வருகிறது.

health_news.jpg

எமது உடலில் உணவுக்குழாய் பாதை அல்லது செரிமான பாதை என்பது உணவுக்குழாயிலிருந்து தொடங்கி மலத்துவாரம் வரை அமைந்துள்ளது. இதில் கல்லீரல், கணையம், மண்ணீரல் போன்ற உறுப்புகளும் இடம் பெறுகிறது. செரிமான பாதையில் ஏற்படும் புற்றுநோய்க்கு பிரத்யேக அறிகுறிகள் எதுவும் கிடையாது. கணையப்புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தீராத முதுகு வலி காணப்படும். மதுப் பழக்கமுடையவர்களையே இது அதிகம் பாதிக்கும். 

செரிமான புற்றுநோய் வராமலிருக்கவேண்டுமானால் புளிப்புத்தன்மையுள்ள எலுமிச்சை, ஓரஞ்சு பழங்களை அதிக அளவில் உட்கொள்ளவேண்டும்.  நார்ச்சத்துள்ள உணவுகளையும் காலை மாலை என இரண்டு வேளைகளிலும் உட்கொள்ளவேண்டும். புகைப்பிடித்தல், மது அருந்துதல், பொரித்த உணவுகள், துரித உணவுகள், உப்பு அதிகமுள்ள உணவுகள் ஆகியவற்றைத் தவிர்க்கவேண்டும். 

வைத்தியர் அஸ்மா

தொகுப்பு அனுஷா.

http://www.virakesari.lk/article/33534

Link to comment
Share on other sites

உணவு உண்ணும் நேரத்திற்கும், உடல் எடை கூடுவதற்கும் என்ன தொடர்பு?

 
நாம் சரியான நேரத்தில் உணவு உண்கிறோமா?படத்தின் காப்புரிமைGETTY IMAGES

உடல் உபாதைகள் குறித்து பேசும் போதெல்லாம் சரியான நேரத்தில் உணவு உண்ணுதல் குறித்தும் அறிவுருத்தப்படுகிறது. நாம் அனைவரும் சரியான நேரத்தில் உணவு உண்கிறோமா ? உணவு பழக்கத்திற்கும் நமது உடல் எடை கூடுவதற்கும் ஏதேனும் தொடர்பு உள்ளதா?

அதை பற்றி விவாதிக்கிறது இந்த கட்டுரை.

அரசனை போல காலை உணவை உண்ணுங்கள்

ஒரு நாளின் தொடக்கத்தில் அதிகமான கலோரிகளை எடுத்துக் கொள்வது உடல் நலத்திற்கு நல்லது என்று இன்னும் பல ஆய்வாளர்கள் நம்புகிறார்கள்.

உடல் எடையை குறைக்க விரும்பும், முயற்சிக்கும் பெண்கள், மதிய உணவை முன்னதாக எடுத்துக் கொள்ளும் போது அதிக எடையை இழக்கிறார்கள். ஆனால், அதே நேரம் காலை உணவை தள்ளிப்போடும் பெண்களுக்கு உடல் நிறை குறியீடு மோசமாக இருக்கிறது அதாவது உடல் உயரத்திற்கு ஏற்ற எடை இருப்பதில்லை என்கிறது ஓர் ஆய்வு.

நாம் சரியான நேரத்தில் உணவு உண்கிறோமா?படத்தின் காப்புரிமைGETTY IMAGES

லண்டன் கிங்ஸ் கல்லூரியின் ஊட்டசத்து அறிவியல் துறையின் வரிவுரையாளர் கெர்டா ஒரு பழைய சொல்லாடலை மேற்கோள் காட்டுகிறார். "காலை உணவை அரசனை போல உண்ணுங்கள், மதிய உணவை இளவரசனை போலவும், இரவு உணவுவை ஏழையை போலவும் உண்ணுங்கள் என்கிறது ஒரு பழமொழி. இதில் ஓரளவு உண்மை இருப்பதாகவே நான் கருதுகிறேன்" என்கிறார் அவர்.

நாம் என்ன உண்கிறோம் என்பதைவிட எப்போது உண்கிறோம் என்பதும் மிக முக்கியம் என்கிறார்கள் ஆய்வாளர்கள். சர்ரே பல்கலைக்கழகத்தை சேர்ந்த ஆய்வாளர் ஜொனாதன் ஜான்ஸ்டன், உணவு உண்ணும் நேரத்தை தள்ளிபோடுவது உடல் இயக்கத்தில் பெரிய மாறுதலை ஏற்படுத்தும் என்கிறார்.

பத்து ஆண்களிடம் மேற்கொண்ட ஓர் ஆய்வில், உணவு உண்ணும் நேரத்தை ஐந்து மணி நேரம் தள்ளிப்போடுவது, அவர்களின் உடல் கடிகாரத்தின் உயிரியல் குறியீட்டை தெளிவாக மாற்றியதை ஜொனாதன் கண்டறிந்துள்ளார்.

உணவு உண்பது குறித்து பல கேள்விகள் உள்ளன

அந்த கேள்விகளில் முதன்மையானது எப்போது உண்ண வேண்டும்? எப்போது உண்ண கூடாது? என்பதுதான்.

க்ரோனோ ஊட்டசத்து குறித்து ஆய்வு மேற்கொள்ள இருக்கும் பேராசிரியர் அலெக்சாண்ட்ரா ஜான்ஸ்டோன், உணவு உண்ணும் நேரத்தை முன்னதாக மாற்றுவது உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது என்கிறார். ஆனால், எதனால் இது ஏற்படுகிறது, எப்போது உண்ணுவது நலம் போன்ற கேள்விகளுக்கு இனி வரும் ஆய்வுகள்தான் தெளிவான விடை தரும் என்கிறார்.

https://www.bbc.com/tamil/global-44189546

Link to comment
Share on other sites

தொப்பை மறைப்பதா குறைப்பதா?

 
 

ஹெல்த்

 

`ஜிம்முக்குப் போகாமல் ஒரே வாரத்தில் தொப்பையைக் குறைக்கலாம்’, இந்த ஜூஸைக் குடிங்க, கொஞ்சம் கொஞ்சமா தொப்பை கரைஞ்சுடும்...’, `இந்த பெல்ட்டை தினமும் அரை மணிநேரம் வயித்துல கட்டிக்கிட்டா மூணே வாரத்துல அழகான இடுப்புக்கு உத்தரவாதம்’ - இதுபோன்ற விதவிதமான விளம்பரங்களைச் செய்து வருகின்றன பல டெலிமார்க்கெட்டிங் நிறுவனங்கள். ஒரு காலத்தில் முக அழகு, சருமப் பராமரிப்பு எனச் சுற்றிச் சுழன்று படையெடுத்த விளம்பர நிறுவனங்கள், இன்றைக்கு வயிற்றை அழகாகக் காண்பிக்க இப்படியெல்லாம் மெனக்கெடுகின்றன. அழகான உடலமைப்பு லிஸ்ட்டில் தொப்பை இல்லாத வயிறும் சேர்ந்துவிட்டதுதான் இதற்குக் காரணம்.

`தொப்பை ஏற்படப் பல காரணங்கள் இருந்தாலும், அதிகமாக உணவு உட்கொள்வதும், உடல் உழைப்பு இல்லாததும்தான் இதற்கு அடிப்படைக் காரணங்கள்’ என்கிறார்கள் மருத்துவர்கள். ஆனால் அவற்றைக் கடைப்பிடிக்காமல் கண்டவற்றையும் வயிற்றில் கொட்டிக்கொண்டு, தொப்பை விழுந்த பிறகு ஜிம்மே கதியெனக் கிடக்கிறார்கள் இன்றைய இளைஞர்கள். சிலரோ தொப்பையைப் பற்றிக் கவலைப்படாமல், சற்று பெரிய சட்டையைப் போட்டு அட்ஜஸ்ட் செய்துகொள்வது அல்லது பெல்ட்டை போட்டுக்கொள்வது எனச் சமாளிக்கிறார்கள். ஆனால், தொப்பை (Central Obesity) வெறும் அழகுப் பிரச்னை மட்டுமல்ல, அதை மறைத்துக்கொண்டு தப்பிப்பதற்கு. `இது நீங்கள் வயிற்றில் சேமித்துவைக்கும் தேவையற்ற கொழுப்பு. தொப்பை, இதயநோய் முதல் புற்றுநோய் வரை பல நோய்களுக்குக் காரணமாகி, உயிருக்கே உலை வைக்கலாம்’ என்று எச்சரிக்கிறார்கள் மருத்துவர்கள்.  தவறான உணவுப் பழக்கங்களும், உடல் உழைப்பு குறைந்துபோவதும் சேர்ந்து நவீன இந்தியர்களை, `தொந்தியர்’களாக மாற்றிக்கொண்டிருக்கின்றன. மரபணுரீதியாக பிற நாட்டினரைவிட, இந்தியர்களுக்கே தொப்பை ஏற்படும் வாய்ப்பு அதிகம் இருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

4p1_1526281187.jpg

`தொப்பை ஏற்படக் காரணம் என்ன... யாருக்குத் தொப்பை வரும்... அதனால் ஏற்படும் ஆபத்துகள் என்னென்ன... இதற்குத் தீர்வுகள் உண்டா?’ என்று இரைப்பை, குடல் அறுவைசிகிச்சை நிபுணர் ஆர்.கண்ணனிடம் கேட்டோம்.

 ``நம் உடலில் தோல்புறக் கொழுப்பு (Subcutaneous Fat), உட்புறக் கொழுப்பு (Visceral Fat) என இரண்டு வகைகள் உள்ளன. தோலின் அடியில் உள்ள கொழுப்புப் படலம்தான் தோல்புறக் கொழுப்பு. குடலின் வெளிப்புறம் ஒட்டிக்கொண்டிருப்பது உட்புறக் கொழுப்பு. பொதுவாக வயிற்றுப் பகுதியில் கொழுப்பு தேங்குவதைத்தான், `தொப்பை’ என்கிறோம்.

தொப்பை எப்படி உருவாகிறது?4p3_1526281277.jpg

உடல் என்னும் உயிர் இயந்திரம் இயங்க, ‘கலோரி’ என்ற எரிபொருள் (ஆற்றல்) தேவை. கலோரியை, நாம் உண்ணும் உணவின் வழியாக உடல் பெற்றுக்கொள்கிறது. நாள் முழுவதும் உடல் இயங்குவதற்குத் தேவையான அளவையும் தாண்டி கலோரிகள் கிடைக்கும்போது அவற்றை மூளை வீணடிக்க விரும்பாது. அவசரக் காலத்தில் பயன்படுத்திக்கொள்வதற்காக அவற்றைக் கொழுப்பாக மாற்றி, உடலின் ஒரு பகுதியில் சேமித்து வைக்க உத்தரவிடும்.

பெரும்பாலும், நம் உடலிலுள்ள மரபணுக்களே (Genes), நமது உடலில் எந்த இடத்தில் கொழுப்பு செல்கள் படிய வேண்டும் என்பதைத் தீர்மானிக்கின்றன. இதனால்தான் மரபுரீதியாக பலருக்குத் தொப்பை தொடர்கிறது. அத்துடன் கொழுப்புப் படிவதற்கு ஆண்களுக்கு ‘டெஸ்டோஸ்டீரான்’ (Testosterone) என்ற ஹார்மோனும் பெண்களுக்கு ஈஸ்ட்ரோஜென் (Estrogen) ஹார்மோனும் காரணமாகின்றன. ஆண்களுக்கு வயிற்றிலும், பெண்களுக்கு இடுப்பிலும் இடுப்புக்குக் கீழேயும் அதிகமான கொழுப்புப் படியும். பெண்களுக்கு மாதவிலக்கு நின்ற பிறகு இந்த ஹார்மோன் சுரப்பு குறைந்து விடுவதால், அவர்களுக்கு வயிற்றிலும் கொழுப்பு படிய ஆரம்பிக்கிறது.

4p4_1526281221.jpg

தொப்பையால் என்னென்ன பிரச்னைகள் ஏற்படலாம்?

உடல்பருமன், உயர் ரத்த அழுத்தம், சர்க்கரைநோய், இதயநோய், பக்கவாதம், புற்றுநோய் உள்படப் பல்வேறு பிரச்னைகளுக்கும் தொப்பை நுழைவாயிலாக மாறிவிடுகிறது. இதைத் தவிர பித்தப்பைக் கற்கள், மூட்டுவலி, அதீத மன அழுத்தம், கல்லீரல் பாதிப்பு போன்ற பிரச்னைகள் வருவதற்கான வாய்ப்புகளும் அதிகம். பெண்களுக்கு மாதவிடாய்ப் பிரச்னை, தைராய்டு மற்றும் மார்பகப் புற்றுநோய் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம்.

ஆப்பிளா, பேரிக்காயா?

இந்தியர்களில் பலருக்கு உடல் எடை சரியாக இருந்தாலும், தொப்பை காணப்படும். இப்படித் தொப்பை இருப்பதையும் உடல் பருமன் என்றுதான் கூறுகிறார்கள். வயிற்றுப் பகுதியில் சேரும் கொழுப்பை `ஆப்பிள் மாடல்’ என்றும் இடுப்பு மற்றும் பின்புறத்தில் கொழுப்பு சேர்வதை `பேரிக்காய் மாடல்’ என்றும் கூறுகிறார்கள். இரண்டுமே மோசமானவை என்றாலும், `ஆப்பிள் மாடல்’ உள்ளவர்களுக்கு இதய நோய் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்பதால், அவர்கள்தான் அதிக எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். முக்கியமாக ஆண்களுக்குச் சரியான இடுப்புச் சுற்றளவு 88 செ.மீ என்பது பெண்களுக்கு 80 செ.மீ ஆக இருக்க வேண்டும். இந்த அளவுக்கு மேல் அதிகமாக இருப்பவர்களையும் உடல் பருமன் உள்ளவர்களாகவே கருத வேண்டும்.

4p2_1526281238.jpg

தீர்வுகள் என்ன?

மரபுவழி, கட்டுப்பாடில்லாத உணவுப் பழக்கம், உடலுழைப்பின்மை, ஹார்மோன் குறைபாடு எனத் தொப்பை வர நிறைய காரணங்கள் இருக்கின்றன. அவற்றைச் சரிசெய்தால் மட்டுமே தொப்பையைக் கட்டுப்படுத்த முடியும். ஆனால், மரபிலேயே தொப்பை இருப்பவர்களுக்கு வாழ்க்கைமுறை மாற்றத்தால் தொப்பை மற்றும் உடல் பருமனை ஓரளவுக்குத்தான் கட்டுப்படுத்த முடியும். சிலருக்கு மரபியல்ரீதியாக ஹார்மோன் கோளாறு இருக்கும். அவர்கள் அதிக உடல் பருமனாக இருப்பார்கள். அவர்களுக்கு வாழ்க்கை முறை மாற்றம் மட்டுமே போதாது. இதற்கு வளர்சிதை மாற்றங்களைத் தூண்டும் மாத்திரைகளும் பசியைக் கட்டுப்படுத்தும் மாத்திரைகளும் இருக்கின்றன.

குறிப்பாக, பிஎம்ஐ அளவு 35-க்கு மேல் இருந்தால் லைப்போசக்‌ஷன் (Liposuction) என்னும் கொழுப்பு நீக்கு சிகிச்சை செய்துகொள்ளலாம். ஆனால், தொடர்ந்து உடல் எடை அதிகமாகாமலிருக்க ஆரோக்கியமான உணவு, உடற்பயிற்சி போன்றவை மிகவும் அவசியம். வாக்கிங், ஜாகிங், சைக்கிளிங், நீச்சல், ஸ்கிப்பிங் போன்ற பயிற்சிகள் சிறந்த பலன் தரும். உடற்பயிற்சி செய்வதும் முந்தைய தினத்தின் கொழுப்பை எரிக்க உதவும். ஆனால், இந்தச் சிகிச்சைகள் அனைவருக்கும் ஏற்றவை அல்ல. உணவு, உடற்பயிற்சி, வாழ்க்கை முறை மாற்றங்களால் உடல் எடையைக் குறைக்க முடியாதவர்கள் மட்டுமே மருத்துவரின் ஆலோசனைப்படி இந்தச் சிகிச்சைகளை மேற்கொள்ள வேண்டும்”என்கிறார் ஆர். கண்ணன்.

உணவுகளும் உதவும்

தொப்பையைக் குறைப்பதில் முறையான உணவுப் பழக்கங்களும் பின்பற்றப்பட வேண்டும்.

* முதலில் அதிக அளவு தண்ணீர் குடிக்கப் பழக வேண்டும். இது உடலின் நீர்ச்சத்தைத் தக்கவைப்பதுடன் பசி உணர்வைக் கட்டுப்படுத்தும். மேலும், தண்ணீரானது வயிற்றில் உள்ள தேவையற்ற கழிவுகளை வெளியேற்றும்.

* தொப்பை  இருக்கிறது என்று உணவு உண்ணாமல் தவிர்ப்பது ஆபத்து. அது நொறுக்குத்தீனிகளை உண்ண வழிவகுத்துவிடும். சரியான நேரத்துக்கு, சரிவிகித உணவுகளை உண்ண வேண்டும்.

* காலை உணவைத் தவிர்க்கக் கூடாது. காலை உணவுக்கு முன் ஏதாவது ஒரு பழம் சாப்பிட்டால் உண்ணும் உணவின் அளவு குறையும்.

* காபி, டீ போன்ற பானங்களை அருந்தக் கூடாது. இதிலுள்ள கஃபைன், இன்சுலின் அளவை அதிகரித்து செரிமானத்தைத் தாமதமாக்கும். அதற்குப் பதிலாக ஹெர்பல் டீ, லெமன் டீ, கிரீன் டீ ஆகியவற்றில் குறைந்த அளவு சர்க்கரை சேர்த்துக் குடிக்கலாம். வெந்நீரில் தேன் கலந்து குடிக்கலாம்.

* வெள்ளைச் சர்க்கரைக்குப் பதிலாகப் பனைவெல்லம், தேன் போன்றவற்றை அளவாகச்  சேர்த்துக்கொள்ளலாம்.

* சாப்பிட்டவுடன் தூங்கச் செல்வதைத் தவிர்க்க வேண்டும். பகல் தூக்கம் கூடாது. சாப்பிட்ட பிறகு சிறிது தூரம் குறுநடை போடலாம்.

* அரிசி, கிழங்கு போன்ற கார்போஹைட்ரேட் உணவுகளைக் குறைத்துக்கொள்ள வேண்டும். கைக்குத்தல் அரிசி, கேழ்வரகு, சம்பா ரவை, ஓட்ஸ், பார்லி கஞ்சி போன்றவற்றை அதிகம் சேர்த்துக்கொள்ளலாம்.

* தொலைக்காட்சி பார்த்தபடியோ, செல்போனில் பேசியபடியோ உணவு உண்பதைத் தவிர்க்க வேண்டும். இதனால், சாப்பிடும் உணவின் அளவு அதிகரிக்கும். சாப்பிடும் உணவில் கவனம் செலுத்திச் சாப்பிட வேண்டும்.

* பால் பொருள்களில் கலோரிகளை அதிகரிக்கும் தயிர், வெண்ணெய், நெய் போன்றவற்றைத் தவிர்த்து மோர், யோகர்ட் (கொழுப்பு நீக்கப்பட்ட தயிர்) போன்றவற்றை அதிகம் சேர்த்துக்கொள்ளலாம்.

* வெங்காயம், பூண்டு, இஞ்சி, கொள்ளு, பயறு வகைகளை உணவில் அதிகம் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

* சாப்பிடும் உணவில் உப்பு, எண்ணெயின் அளவைக் குறைத்துக்கொள்ள வேண்டும். ஒரு நாளைக்கு ஒருவருக்கு 15 மி.லி எண்ணெய் போதுமானது. சிப்ஸ் போன்ற எண்ணெயில் பொரித்த உணவுகளைச் சாப்பிடக் கூடாது.

* கேக், வெள்ளை பிரெட் போன்ற பேக்கரி வகை உணவுகள், மைதா, ஜங்க் ஃபுட், ஃபாஸ்ட் ஃபுட் உணவுகளை அறவே தவிர்க்க வேண்டும். 

* நமது அன்றாட உணவில், பழங்கள், பச்சை நிறக் காய்கறிகளுக்கு முக்கியத்துவம் தர வேண்டும். அவற்றிலுள்ள நார்ச்சத்து ஜீரணமண்டல இயக்கத்தைச் சீராக்கும்.

* செயற்கைக் குளிர்பானங்கள், ஜூஸ், சோடா போன்றவற்றில் அதிக அளவு சர்க்கரை இருக்கிறது. இது, உடலில் கலோரியை அதிகரித்துத் தொப்பையை உருவாக்கும்.

* தொப்பை குறைய, தினசரி அரைமணி நேரம் நடைப்பயிற்சி செய்ய வேண்டும். அதேபோல் நீச்சல், சைக்கிள் பயிற்சியும் நல்லது. இதனால் உடலில் உள்ள தேவையற்ற கலோரிகள் எரிக்கப்படும்.

* மதுப்பழக்கத்தைக் கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும்.
4p5_1526281256.jpg
தொப்பைக்கும் இதயத்துக்கும் தொடர்புண்டு!

தொப்பை போட்டவர்களுக்கு இதய பாதிப்புகள் வரும் வாய்ப்புகள் அதிகம் என்று எச்சரிக்கிற இதயநோய் மருத்துவர் சொக்கலிங்கம், அதன் பின்னணி விளக்குகிறார்.

``அதிகக் கொழுப்பு உடலில் எங்கே இருந்தாலும் ஆபத்துதான். உடலில் உள்ள கெட்டக் கொழுப்பு உடல் ஆரோக்கியத்தைப் பாதிப்பதுடன், இதயத்தில் உள்ள ரத்தக் குழாய்களில் அடைப்பை உண்டாக்கலாம். தொப்பை இருந்தால் உடல் எடையைக் கட்டுக்குள் வைத்திருக்க முடியாது. குண்டாக இருப்பவர்களுக்குத் தொப்பை காரணமாக மாரடைப்பு உள்பட என்னென்ன பாதிப்புகள் ஏற்படுகின்றனவோ, அதுபோன்ற பாதிப்புகள் தொப்பை அதிகமாக இருந்து, ஒல்லியான உடல்வாகு கொண்டவர்களுக்கும் வரும். அதேபோல, உடல் பருமனாக இருப்பவர்களைவிட தொப்பை இருப்பவர்களுக்கே இதயநோய்கள் வரும் வாய்ப்பு அதிகம். மேலும், மது மற்றும் புகைப்பழக்கம் காரணமாக ரத்த நாளங்கள் மிகவும் பாதிப்புக்குள்ளாகும். மது, புகைப்பழக்கம் உள்ளவர்களுக்குத் தொப்பை இருந்தால், அவர்களுக்கு மாரடைப்புக்கான வாய்ப்புகள் அதிகரிக்கும்” என்கிறார் டாக்டர் சொக்கலிங்கம்.

- ஜி.லட்சுமணன்


ஆண்களுக்கு அதிகம் ஏன்?

உடலில் மெல்லிய உறுப்புகள் இருக்கும் பகுதியில்தான் கொழுப்பு படியும். ஆண்களின் உடலில் மென்மையான பகுதி மற்றும்  அதிக வேலையின்றியிருக்கும் இடம் அடிவயிறுதான். அதனால்தான் அங்கு கொழுப்பு  சேர ஆரம்பிக்கிறது. பெண்களுக்கு அடிவயிற்றில் கர்ப்பப்பை இருப்பதால் அதன் செயல்பாடுகள் பாதிக்காதவாறு பிற இடங்களில் சேமிக்கப்படுகிறது. ஆண்களுக்கு வயிற்றிலும் பெண்களுக்குத் தொடை மற்றும் பின்புறத்திலும் கொழுப்பு சேர்கிறது. பெண்களைவிட ஆண்களுக்குத்தான் பெரும்பாலும் அதிகப்படியான தொப்பை ஏற்படுகிறது என்பதற்கு இதுவும் ஒரு முக்கியமான காரணம்.

https://www.vikatan.com

Link to comment
Share on other sites

எத்தனை மணி நேரம் விழித்திருக்கலாம்?

 
 

ஹெல்த்

 

‘அலாரம் அடிக்கிற சத்தம் கேட்டும் தூங்கிட்டிருக்கியே... நானெல்லாம் சின்ன சத்தம் கேட்டாக்கூட கண் முழிச்சிடுவேன்...’ என்பார்கள் சிலர். இரவுத் தூக்கத்தில் சிறு சத்தம் கேட்டாலும் விழித்துக்கொள்வது நல்லதுதான் என்றாலும், இதில் ஒரு பிரச்னை இருக்கிறது. தூக்கத்திலிருந்து பாதியில் எழுந்தால், மீண்டும் அவ்வளவு எளிதில் தூக்கம் வராது.

தூக்கமே வராமல் தவிப்பவர்களின் எண்ணிக்கை ஒருபுறம் இருக்க, தூக்கத்தின் நடுவே கண் விழித்துவிட்டு மீண்டும் தூங்கமுடியாமல் தவிப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. இதற்கு என்னதான் தீர்வு? நுரையீரல் மற்றும் தூக்கவியல் சிறப்பு நிபுணர் ஜெயராமனிடம் கேட்டோம். 

32p1_1526034090.jpg

“தூக்கத்தைத் தொலைப்பவர்களில் இரண்டு வகையினர் உள்ளனர். ஒருவர், தூக்கமே வராமல் தவிப்பவர். மற்றொரு பிரிவினர் தூக்கத்தின் நடுவே கண்விழித்துவிட்டு மீண்டும் தூங்கமுடியாமல் தவிப்பவர். இவை தூக்கமின்மைப் பிரச்னைக்கு உட்பட்டவை. தூக்கமின்மையில், இரண்டு நிலைகள் உள்ளன (Primary and Secondary Insomnia). முதல்நிலை பாதிப்புக்கு, வாழ்வியல் முறையில் ஏற்படும் மாற்றங்கள் காரணமாக இருக்கும். இரண்டாம்நிலை பாதிப்புக்கு, உடல் சார்ந்த பாதிப்புகள் காரணமாக இருக்கும். உதாரணமாக, கை கால் மூட்டுகளில் வலி, மனஅழுத்தம், மனஉளைச்சல், செரிமானக் கோளாறுகள் போன்றவை.

இந்த இரண்டுநிலை பாதிப்புகளில், முதல்நிலை பாதிப்பை, வாழ்வியல் முறைகளை ஒழுங்குப் படுத்துவதன்மூலம் சரிசெய்யலாம். இரண்டாம்நிலை பாதிப்பை, சம்பந்தப்பட்டப் பிரச்னையைக் கண்டறிந்து சரிசெய்வதன்மூலம் தீர்க்கலாம். 32p3_1526034182.jpg

முதல் நிலை பாதிப்புக்குத் தேவைப்படும் சில வாழ்வியல் மாற்றங்கள்

* படுக்கை அறையில் டி.வி, செல்போன் போன்ற எந்த கேட்ஜெட்டும் இருக்கக்கூடாது.

* படுக்கை அறை இருட்டாக, ஒளி குறைவாக இருக்கும்படிப் பார்த்துக் கொள்ளவும். சுற்றிலும் அமைதியாக, லேசான குளிருள்ள பகுதியாக இருப்பது கூடுதல் சிறப்பு.

* தூங்கப்போவதற்கு இரண்டு, மூன்று மணி நேரத்துக்கு முன்பே சாப்பிட்டு விடவும். இரவில், அதிக எண்ணெய் சேர்த்த உணவுகள், அதிகச் சர்க்கரை சேர்த்த உணவுகள், துரித உணவுகளை முழுமையாகத் தவிர்க்கவும்.

* இரவு உணவுடன் சேர்த்து வாழைப்பழம், பால் உட்கொள்ளவும். டீ, காபி, சோடா போன்றவற்றைத் தவிர்க்கவும்.

32p2_1526034160.jpg

* மது, புகை போன்ற பழக்கங்களில் இருந்து முழுமையாக வெளியே வரவேண்டும்.

* ஒரு நாளில், ஆறு முதல் எட்டு மணி நேரம் தூங்க வேண்டியது அவசியம். ‘எந்த நேரத்தில் படுக்கைக்குச் செல்ல வேண்டும்’, ‘எப்போது கண்விழிக்க வேண்டும்’ என்பதை முடிவு செய்து, அதைப் பழக்கப்படுத்திக் கொள்ள வேண்டும். தூங்குவதற்கு மிகச் சிறந்த நேரம், இரவு 10 மணி முதல் காலை 6 மணி.

* பகலில் அதிகபட்சம் 20 முதல் 45 நிமிடங்கள் வரை தூங்கலாம். அதற்குமேல் கூடாது. சிலர் பகலில் இரண்டு, மூன்று மணி நேரம் தூங்குவார்கள். இப்படிப்பட்டவர்கள், தூக்கத்துக்கான நேரத்தைக் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைத்துக்கொள்ள வேண்டும்.

* Sleep Schedule - சரியான நேரத்துக்குப் படுக்கைக்குப் போவதும் சரியான நேரத்துக்குக் கண்விழிப்பதும் அவசியம். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நேரத்தில் படுக்கையைவிட்டு எழுந்திருக்கக் கூடாது. குறிப்பாக விடுமுறை நாள்களில் சிலர் அதிக நேரம் தூங்குவார்கள். அப்படியில்லாமல், எப்போதும் சரியான நேரத்தைப் பின்பற்ற வேண்டும். ‘சரியான நேரம்’ என்பது நபரைப் பொறுத்து மாறுபடலாம். அதிகபட்சம் 10 மணி வரை தூங்காமலிருக்கலாம். அதற்குமேலும் தூக்கத்தைத் தள்ளிப்போட வேண்டாம்.

* யோகா, உடற்பயிற்சி, மனதுக்குப் பிடித்த பாடல்கள் கேட்பது, தியானம், பிராணாயாமம் (மூச்சுப் பயிற்சி), புத்தகம் வாசிப்பது என ஏதாவது ஒன்றைத் தினமும் 20 நிமிடங்கள் செய்யவேண்டும்.

* 20 நிமிடங்களுக்கு மேலாகத் தூங்காமல் விழித்திருந்தால், படுக்கையிலிருந்து எழுந்து ஏதாவதொரு செயலைச் செய்துவிட்டுச் சிறிதுநேரம் கழித்துப் படுக்கைக்கு வரவும். அப்படியும் தூக்கம் வரவில்லை, பிரச்னை தொடர்கிறது என்றால் மனநல ஆலோசகரை அணுகி ஆலோசனை பெறவும்.

https://www.vikatan.com

Link to comment
Share on other sites

மைக்ரேன் தலைவலிக்கு குட்பை சொல்லலாம்... வராமல் தடுக்க புதிய மருந்து! #Migraine

 
 

`காலையிலிருந்து ஒரே தலைவலி, வேலையே செய்ய முடியலை’, `தலையே வெடிச்சிடும்போலருக்கு... அப்பிடி ஒரு தலைவலிப்பா’... என்றெல்லாம் புலம்புபவர்களை நாம் பார்த்திருப்போம். நம்மில் பலரையும் கிறுகிறுக்கச் செய்வதில் தலைவலிக்கு முக்கிய இடமுண்டு. `உலகில், ஏறக்குறைய 50 சதவிகிதம் பேர் பல்வேறு தலைவலி சார்ந்த பிரச்னைகளால் அவதிப்படுகிறார்கள்’ என்கிறது உலக சுகாதார நிறுவனத்தின் புள்ளிவிவரம். தலைவலிகளிலும் மிகப்பெரிய தொல்லையாக இருப்பது, `மைக்ரேன்’ (Migraine) எனப்படும் ஒற்றைத்தலைவலி. இது ஒரு வகை நரம்பு தொடர்பான நோய்.

தலைவலி

 

பொதுவாக, பருவமடையும் வயதில் தொடங்கும் இந்த மைக்ரேன் தலைவலிப் பிரச்னை, 35 வயதிலிருந்து 45 வயதுக்குள் இருப்பவர்களைத்தான் அதிகம் பாதிக்கும். ஆண்களைவிட பெண்களையே இது அதிகம் பாதிக்கிறது. சாதாரண தலைவலியைப்போல இல்லாமல், குறிப்பிட்ட கால இடைவெளிகளில் மைக்ரேன் மீண்டும் மீண்டும் வரும். ஒற்றைத் தலைவலி வர முக்கியக் காரணமாக இருப்பது சி.ஜி.ஆர்.பி (CGRP- Calcitonin Gene Related Peptide) எனும் ஒரு புரதக்கூறு. இந்த புரதக்கூற்றை முடக்குவதற்கான மருந்தைப் பல ஆய்வுகளுக்குப் பின்னர் கண்டுபிடித்திருக்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள். `எரினுமாப்’ (Erenumab) என்கிற இந்த மருந்து அமெரிக்காவின் எஃப்.டி.ஏ-வின் (FDA - US Food and Drug Administration) அனுமதியுடன், இப்போது சந்தைக்கு விற்பனைக்கு வந்திருக்கிறது. இது குறித்து விளக்கமாகப் பேசுகிறார் ரத்தநாள அறுவைசிகிச்சை நிபுணர், மருத்துவர் ராஜ்குமார்...

“மைக்ரேன் அல்லது ஒற்றைத்தலைவலி என்பது ஒரு வகை க்ளஸ்டர் தலைவலி (Cluster Headache). இது நரம்பியல் கோளாறால் ஏற்படுவது. பெரும்பாலானவர்களுக்கு ஒரு பக்கம் மட்டுமே இந்த வலி இருக்கும். ஆனால், சிலருக்குத் தலையின் இரண்டு பக்கமும் வலி இருக்கும். இந்த வலியின்போது தலைசுற்றல், குமட்டல், வாந்தி, கண் இருட்டிக்கொள்வது போன்றவையெல்லாம் ஏற்படும். இந்த ஒற்றைத்தலைவலி வருவதற்கு முன்னரே இது குறித்து ஒரு முன்னுணர்வு (Premonition) ஏற்படும். இது, `ஆரா’ (Aura) எனப்படும்.

ஒற்றைத் தலைவலி

மைக்ரேனுக்கு மன அழுத்தம், கஃபைன் (Caffiene), சாக்லேட் (Chocolate), மாதவிடாய் ஆகியவைதான் பொதுவான காரணங்கள். மைக்ரேன் ஏற்படும்போது மூளையில் சி.ஜி.ஆர்.பி எனும் புரதக்கூறு சுரக்கும். இது அதிகரிக்கும்போது வலி அதிகரிக்கும். இது குறைந்து இயல்புநிலைக்கு வரும்போது தலைவலி நின்றுவிடும். இந்த சி.ஜி.ஆர்.பி-யை முடக்க கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் மருந்துதான் `எரினுமாப்’ (Erenumab). இது ஒரு மாலிக்யூலர் மருந்து (Molecular Medicine).ராஜ்குமார்

இது இப்போது ஊசி வடிவில் வந்திருக்கிறது. மாதத்துக்கு ஒரு முறை இந்த 70 அல்லது 140 மில்லிகிராம் மருந்தை ஊசி மூலம் செலுத்திக்கொண்டால் ஒற்றைத் தலைவலியால் அவதிப்படவேண்டிய அவசியம் இருக்காது. இது `கால்சிடோனின்’ என்ற புரதத்தைத் தடுத்து, தலைவலி வராமல் தடுக்கும். தலைவலி வந்த பிறகு அதைக் குறைக்கவும் கட்டுப்படுத்தவும் ஸ்டெமெட்டில் (Stemetil), கிரெனில் (Grenil), ஃப்லூனாரிஸின் (Flunarizine) போன்ற பல மருந்துகள் இருந்தாலும், இதுதான் தலைவலியை வராமல் தடுக்கக் கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் முதல் மருந்து. இது சி.ஜி.ஆர்.பி-ஐ மட்டும் குறிவைத்து தாக்கும் மாலிக்யூலர் மருந்து என்பதால், இதனால் எந்தப் பக்கவிளைவுகளும் ஏற்படாது. ஒற்றைத்தலைவலியால் அவதிப்படுபவர்களுக்கு இது ஒரு சிறந்த தீர்வு. ஆனால், இந்த மருந்து நம் நாட்டில் தயாரிக்கப்படாததால், இங்கே இதை வாங்க பல லட்ச ரூபாய் செலவாகும். எனவே, முடிந்தவரை காபி, சாக்லேட் போன்றவற்றையும் மன அழுத்தத்தையும் தவிர்த்துவிட்டாலே, இந்த தலைவலித் தொல்லையையும் தவிர்த்துவிடலாம்” என்கிறார் ராஜ்குமார்.

மைக்ரேன் ஊசி

மைக்ரேனால் உடலுக்கு பெரிய பாதிப்புகள் எதுவும் இல்லை என்றாலும், அன்றாட வாழ்க்கையில் இதன் தாக்கம் கடுமையானதாக இருக்கும். எனவே, இந்த மருந்து ஒரு சிறந்த கண்டுபிடிப்புதான். இது அனைவருக்கும் கிடைக்கும் நாள் வெகுவிரைவில் வரட்டும். ஒற்றைத் தலைவலியை ஓரம்கட்டுவோம்!

https://www.vikatan.com/news/health/126051-new-medicine-for-migraine-headache.html

Link to comment
Share on other sites

செருப்பை கழற்றி விட்டு வீட்டுக்குள் நுழைந்தால் உடல் எடை குறையும், புதிய ஆய்வு முடிவு வெளியீடு!

0000000_remove_ur_shoes

 

வீட்டுக்குள் நுழையும் போது செருப்பு மற்றும் ஷூக்களை வெளியில் கழற்றி விட்டு நுழைந்தீர்கள் எனில் உங்களது உடல் எடை குறைய அதிகபட்ச வாய்ப்புகள் இருப்பதாக சமீபத்திய பிரிட்டிஷ் மருத்துவ ஆய்வொன்று தெரிவித்துள்ளது. ஏனெனில் சுற்றுப்புறத்தில் நிலவும் ரசாயனங்கள் வீட்டுக்குள் நுழைந்து கண்ட, கண்ட இடங்களிலும் தங்காதிருக்க இந்த அருமையான பழக்கம் உதவுவதாகக் கண்டறிந்துள்ளனர். (இதைத் தானே நாம் இந்தியாவில் தொன்று தொட்டு செய்து வருகிறோம்... வெள்ளைக்காரர்கள் எல்லாவற்றிலுமே அட்வான்ஸ் திங்கிங் என்கிறார்கள், ஆனால் பாருங்கள் இந்த சின்ன விஷயத்தைக்  கூட அவர்கள் பலகோடி ரூபாய் செலவிட்டு செய்த ஆராய்ச்சியின் முடிவில் தான் கண்டுபிடித்திருக்கிறார்கள்) 

சமீபத்தில் பார்சிலோனாவில் செயல்பட்டு வரும் ஐரோப்பியன் சொஸைட்டி ஆஃப் என்டோகிரைனாலஜி மேற்கொண்ட ஒரு ஆய்வின் மூலம் இது நிரூபணம் ஆகியுள்ளது. அனைத்துப் பொருட்களிலும் தேங்கி இருக்கக் கூடிய உடல் எடையைக் கூட்டத்தக்க ஒபிஸொஜென்கள் மனித உடலில் சுரக்கும் ஹார்மோன்களின் செயல்பாடுகளில் தலையிட்டு உடலில் கொழுப்பு தேங்கும் படியான நிலையை உருவாக்குவதில் பெரும்பங்கு வகிக்கிறது. இந்த மகத்தான உண்மையை போர்ச்சுகலில் இருக்கும் அவியோரா மற்றும் பெய்ரா பல்கலைக் கழக ஆராய்ச்சியாளர்கள் தங்களது தொடர் ஆராய்ச்சி மற்றும் ஆய்வின் முடிவாகக் கண்டறிந்து வெளியிட்டுள்ளனர்.

நமது உணவுப்பழக்கம், வீட்டில் தேங்கும் தூசு தும்புகள், வீட்டைச் சுத்தப்படுத்த நாம் நாள்தோறும் பயன்படுத்தும் ரசாயனப் பொருட்கள், சமயலறையில் பயன்படுத்தும் உபகரணங்கள், அழகு சாதனப் பொருட்கள் உள்ளிட்ட அத்தனையிலுமே இந்த ஒபிஸோஜென்களின் தாக்கம் இருக்கிறதாம். இவற்றால் தான் மனிதர்கள் விரைவில் ஒபிஸிட்டிக்கு அடிமையாகிறார்கள் எனக் கண்டறியப்பட்டுள்ளது.

இந்த ஆராய்ச்சியில் ஈடுபட்ட மருத்துவக் குழுவினர்,  மனித உடலில் ஒபிசோஜென்களின் வளர்ச்சியைத் தவிர்க்க 7 விதமான வழிமுறைகளைப் பரிந்துரைக்கிறார்கள். 

அவற்றில் முதலாவது, இப்படி விரைவில் அசுத்தமடையக் கூடியனவும், உடல் எடையைக் கூட்டத்தக்க ஒபிஸோஜென்களை மனித உடலில் ஊடுருவ அனுமதிப்பதுமான பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்களை புறக்கணித்து விட்டு  இனிமேல் சுத்தமான, ஃப்ரெஷ் ஆர்கானிக் காய்கறிகள் மற்றும் பழங்களை மட்டுமே தேர்ந்தெடுத்து உண்ணும் பழக்கத்தை வளர்த்துக் கொள்வது கூட ஒபிஸோஜென்களைத் தவிர்ப்பதற்கான ஒருவழிமுறை தான் என்கிறார்கள்.

இரண்டாவதாக வெளியில் இருந்து வீட்டுக்குள் நுழையும் போது நமது கால்களில் அணிந்திருக்கும் ஷூக்கள் மற்றும் செருப்புகளை சினிமாக்களிலும், மெகா சீரியல்களிலும் காட்டுவதைப் போல வீட்டின் உட்புறம் வரை அணிந்து கொண்டு புழங்கி ஃபிலிம் காட்டாமல் முறையாக வீட்டு முகப்பில் அதற்குரிய இடங்களில் கழற்றி வைத்து விட்டு வீட்டுக்குள் நுழைந்தாலும் போதும் அனாவசியமாக ஷூக்கள் மற்றும் செருப்புகளின் வாயிலாக வீட்டுக்குள் நுழையவிருக்கும் அசுத்தங்களை நம்மால் தவிர்த்து விடமுடியும் என்கிறார்கள். 

அதுமட்டுமல்ல மூன்றாவதாக அவர்கள் அளிக்கும் டிப்ஸ்... அது வீடாக இருக்கட்டும் அல்லது அலுவலகமாக இருக்கட்டும் எங்கே என்றாலும் சரி மனிதர்கள் புழங்கக் கூடிய இடங்கள் அனைத்தும் அடிக்கடி சுத்தப்படுத்தப் பட வேண்டும். அது வாக்குவம் கிளீனராலோ அல்லது மனிதக் கரங்களாலோ இருக்கலாம். ஆனால் சுத்தம் செய்யப்பட வேண்டும் என்கிறார்கள். மரத்தரை என்றால் அவற்றின் மீது போடப்பட்டுள்ள கார்பெட்டுகளை குறிப்பிட்ட இடைவெளியில் வாரம் ஒருமுறையாவது சுத்தம் செய்ய வேண்டும் என்கிறது இந்த ஆய்வு முடிவு.

அதோடு, வீட்டில் பருப்பு வகைகள், மளிகைச் சாமான்களை நிரப்பி வைக்க பிளாஸ்டிக் கண்டெயினர்களைத் தவிர்த்து விட்டு அலுமினியம் அல்லது கண்ணாடி ஜார்களைப் பயன்படுத்தத் தொடங்கலாம். இதன்மூலம் மளிகைப் பொருட்களை நிரப்பி வைக்க சிந்தெட்டிக் பொருட்களை தொடர்ந்து பயன்படுத்துவதால் ஏற்படக்கூடிய ரசாயனத் தொற்றையும் நம்மால் தவிர்த்து விட முடியும் என்கின்றனர் இந்த மருத்துவ ஆராய்ச்சிக் குழுவினர்.

ஆராய்ச்சிக் குழுவின் தலைமை மருத்துவர் ஆனா காத்தரீனா செளசா இது குறித்து விளக்கமளிக்கையில்,  ஒபிஸோஜென் ஃப்ரீ லைஃப்ஸ்டைலைக் கட்டமைப்பதில் இது ஒரு துவக்க முயற்சி தான். ஆனாலும் இதையொரு நல்ல தொடக்கமென்றே சொல்ல வேண்டும் என்கிறார். 

அதற்கான முதல் ஸ்டெப்பாக தினந்தோறும் நமது உணவுப் பழக்கம் மற்றும் வீட்டுச் சுத்தம் இரண்டிலும் முக்கியமாகக் கவனம் செலுத்துவோம் என ஒவ்வொருவரும் உறுதியேற்க வேண்டும்.

வயது வந்தோர் நாளொன்றுக்கு 50 மில்லிகிராம் தூசுகளை உட்கொள்கிறார்கள்... சிறுவர்கள் மற்றும் குழந்தைகளைப் பற்றிச் சொல்வதென்றால் அவர்களை பெரியவர்களோடு ஒப்பிடும் போது மேலும் இரு மடங்கு தூசுகளை உட்கொள்கிறார்கள். எனவே வீட்டைச் சுத்தமாக வைத்துக் கொள்வதென்பதை நமது முதல் கடமையாகக் கருத வேண்டும். அதோடு வீட்டின் ஃபர்னிச்சர்களைத் துடைக்க எப்போதும் ரசாயன திரவங்களைப் பயன்படுத்துவதைக் காட்டிலும் பெரும்பாலும் ஈரத்துணிகளை மாத்திரமே பயன்படுத்தப் பழகுங்கள். ஏனெனில் ரசாயனங்கள் கலந்த சுத்தப்படுத்தும் திரவங்கள் ஒபிசோஜென்களை தூண்டிப் பெருகச் செய்யும் காரணிகளில் ஒன்று என்பதை எப்போதும் மறந்து விட வேண்டாம்.

பிரிட்டனின் ஒபிசிட்டி விகிதாச்சாரம் கடந்த இருபதாண்டுகளில் இரு மடங்காகப் பெருகியிருக்கிறது.. அங்கு சமீபத்தில் எடுக்கப்பட்ட ஆய்வொன்றில் வயது வந்தோரில் 63% பேர் அதிக எடை கொண்டவர்களாகவே கணிக்கப்பட்டுள்ளனர். இந்த விகிதாச்சாரம் 2025 ல் மும்மடங்காகவும் வாய்ப்பிருப்பதாகத் தகவல்.

முந்தைய ஆய்வுகளில் கண்டறிந்து தெரிவிக்கப்பட்டுள்ளபடி ஹார்மோன் செயல்பாடுகளைத் தூண்டக்கூடிய இந்த ஒபிசோஜென்கள் பூச்சிக்கொல்லி மருந்துகள், பிளாஸ்டிக் உள்ளிட்ட சிந்தெடிக் பொருட்கள்,  தீயணைப்பான்கள், கொசு மற்றும் பூச்சித் தடுப்பான்கள், சமையலறைப் பாத்திரங்கள் மற்றும் துணிகள், செயற்கை இனிப்பூட்டிகள் என எல்லாவிதமான வீட்டு உபயோகப் பொருட்களிலும் இருக்கின்றன. நாம் தான் அத்தகைய பொருட்களை அடையாளம் கண்டு தவிர்க்க வேண்டும்.

இந்த ஒபிசோஜென்களின் பாதிப்பு அதிகரிக்கும் முன் அவற்றைத் தவிர்க்கும் படியான ஆரோக்யமான லைஃப்ஸ்டைல் ஒன்றை ஏற்படுத்திக் கொள்ளவேண்டியது மனிதர்களான நமது கடமை என்கிறார்கள் பிரிட்டிஷ் ஆய்வாளர்கள்.

http://www.dinamani.com/health/health-news/2018/may/22/removing-shoes-outside-house-is-an-indian-habit-but-it-may-cut-obesity-is-a-new-scientific-invention-2924745.html

Link to comment
Share on other sites

ரத்தச்சோகையைப் போக்க, அதிக ரத்தம் சுரக்க அவசியம் சாப்பிடவேண்டிய உணவுகள்! #DataStory

 
 

`உடம்பை வளர்த்தேன். உயிர் வளர்த்தேனே...’ என்பது திருமூலர் வாக்கு. நம் உடல் உயிர்ப்போடு இருக்க ரத்தம் அவசியம். ரத்தம்தான், நாம் உயிர் வாழத் தேவையான ஆக்சிஜனை உடல் உறுப்புகளுக்குக் கொண்டு சேர்க்கிறது. அதைச் செய்வது சிவப்பு ரத்த அணுக்கள். அதேபோல, நோய்த்தொற்றிலிருந்து நம்மைக் காப்பது வெள்ளை ரத்த அணுக்கள். இவை இரண்டும் மிக முக்கியமானவை. தேவையைவிடக் குறைவாக சிவப்பு ரத்த அணுக்கள் இருந்தால், நமக்கு ‘ரத்தச்சோகை’ பாதிப்பு ஏற்படும். அதனால் உடல் பலவீனம், தலைச்சுற்றல், மூச்சுத்திணறல், தலைவலி ஆகியவை ஏற்படும். எனவே, ரத்தச்சோகையைப் போக்க, நம் அன்றாட உணவு சரிவிகிதமாக இருக்கவேண்டியது அவசியம்.

ரத்தம் அதிகரிக்கும் உணவுகள்

 

ரத்தச்சோகையைப் போக்கவும் உடலில் ரத்தத்தை அதிகம் சுரக்கவும் எந்தெந்த உணவுகளைச் சாப்பிட வேண்டும்... அப்படிச் சாப்பிடுவதால் கிடைக்கும் பயன்கள் என்னென்ன என்று விளக்குகிறார் ஊட்டச்சத்து நிபுணர் ஷைனி...  

``நம் உடம்பில் 70 சதவிகித இரும்புச்சத்து 'ஹீமோகுளோபினில்'தான் (haemoglobin ) இருக்கிறது. இதன் அளவை அதிகரிக்க உடலுக்கு இரும்புச்சத்து அவசியம். இரும்புச்சத்து நிறைந்த உணவுகளைச் சாப்பிட்டால் ரத்தச்சோகையைத் தவிர்க்கலாம். வயதுக்கேற்ப ஆணுக்கும் பெண்ணுக்கும் இரும்புச்சத்தின் அளவு மாறுபடும். எனவே, அவரவருக்கு ஏற்றபடி உணவுகளை உட்கொள்ள வேண்டும்.

உடலுக்குக் காய்கறிகள் மூலமாகச் சேரும் இரும்புச்சத்தைவிட, இறைச்சியால் கிடைக்கும் அளவு அதிகம். எனவே, உணவில் சிக்கன், மட்டன், மீன், மட்டி (Shell fish)யைச் சேர்த்துக்கொள்வது நல்லது. அசைவம் சாப்பிடாதவர்கள் பீன்ஸ், சோயா, ப்ரூன்ஸ் (Prunes), கருணைக்கிழங்கை சேர்த்துக்கொள்ளலாம். காப்பரும் சிவப்பு ரத்த அணுக்கள் உற்பத்திக்கு உதவும். காப்பர், நம் உடல் இரும்புச்சத்தை உணவிலிருந்து எடுத்துக்கொள்ளவும் உதவும். நம் உடலில் ஒரு நாளைக்கு 900 மைக்ரோகிராம் காப்பர் இருந்தால், ரத்தக் குறைபாடு தொடர்பான அபாயங்களைக் குறைக்கலாம். முழு தானியங்கள், உருளைக்கிழங்கு, பீன்ஸ், கல்லீரல் இறைச்சி, நத்தை, சிப்பி மீன் ஆகியவற்றில் காப்பர் நிறைந்திருக்கிறது.  

ரத்தச்சோகை

உணவகங்களில் மீன் வறுவல் அல்லது சிக்கனுடன் ஒரு சிலைஸ் எலுமிச்சைப் பழத்தை வைப்பார்கள். இது சுவைக்காக வைக்கப்படுவது என்றாலும், இதன் பின்னே மருத்துவக் காரணமும் இருக்கிறது. உடலில் இரும்புச்சத்து சேர்வதற்கு வைட்டமின் சி மிகவும் அவசியம். எலுமிச்சையில் இது நிறைவாக இருக்கிறது. ‘வைட்டமின் சி’ குறைந்தால் நமக்கு இரும்புச்சத்து குறைபாடு ஏற்படலாம். ஒரு நாளைக்கு ஆண்களுக்கு 90 மில்லிகிராமும் பெண்களுக்கு 75 மில்லிகிராமும் வைட்டமின் சி தேவைப்படுகிறது. இதன் அளவை அதிகரிக்க உணவில் திராட்சை, ஆரஞ்சு, எலுமிச்சை, கிவி, ஸ்ட்ராபெர்ரி, தக்காளி, பசலைக்கீரை ஆகியவற்றைச் சேர்த்துக்கொள்ளலாம்.

ஃபோலேட் ( Folate)  என்பது ஒரு வகையான ‘வைட்டமின் பி’. இதை `வைட்டமின் பி 9’ என்றும் குறிப்பிடுவார்கள். இது வெள்ளை, சிவப்பு ரத்த அணுக்கள் உற்பத்திக்கு உதவுவது. பொதுவாக, ஒரு நாளைக்கு நடுத்தர வயதினருக்கு 400 மைக்ரோகிராம் ஃபோலேட் தேவைப்படும். ஆனால், கர்ப்பிணிப் பெண்களுக்கு மட்டும் 600 மைக்ரோகிராம் தேவைப்படும். எனவே, அவர்கள் சில உணவுகளைச் சேர்த்துக்கொள்ள வேண்டும். கீரைகள், உலர்ந்த பீன்ஸ், கல்லீரல் இறைச்சி, முட்டை, ஆரஞ்சு, வாழைப்பழம் ஆகியவற்றைச் சேர்த்துக்கொள்வதால் ஃபோலிக் ஆசிட் குறைபாட்டைத் தவிர்க்கலாம். பிரெட், அரிசி ஆகியவற்றிலும் ஃபோலேட் இருக்கிறது.

bloodincreasdata1_13497.jpg

 

நமக்கு ஒரு நாளைக்கு 2.4 மைக்ரோகிராம் வைட்டமின் பி 12 தேவைப்படுகிறது. உடலில் தேவையான அளவுக்கு இது இல்லையென்றால், சிவப்பு ரத்த அணுக்கள் உற்பத்தி தடைப்படும். உணவிலிருந்து வைட்டமின் பி12-ஐ உடலால் எடுத்துக்கொள்ள முடியாதபோது 'பெரினிஷியஸ் அனீமியா' (Perinicious Anemia) எனும் ரத்தச்சோகைக் குறைபாடு ஏற்படும். இதற்கு வயிற்றில் போதுமான அளவு ஆசிட் இல்லாததும், 'இன்டரின்சிக் ஃபேக்டர்' (Intrinsic Factor) என்ற புரதச்சத்து குறைபாடுமே காரணம். வைட்டமின் பி 12 குறைவாக இருந்தால் மீன், சிக்கன், பால் பொருள்கள், முட்டை ஆகியவற்றை அதிகம் உட்கொள்ள வேண்டும்.ஊட்டச்சத்து நிபுணர் ஷைனி

தோட்டங்களிலும், தெருவோரங்களிலும் காணப்படும் குப்பைமேனி உடலில் ரத்த அளவை அதிகரிக்க உதவும். ஓர் ஆய்வில் ‘குப்பைமேனிச் சாறு ஹீமோகுளோபின் அளவை அதிகரிப்பதோடு, தசைகளுக்கும் உடல் உறுப்புகளுக்கும் ஆக்சிஜன் சென்று சேர்வதை மேம்படுத்துகிறது’ எனத் தெரியவந்திருக்கிறது. அதற்கு இரும்புச்சத்தும் வைட்டமின் சியும்தான் காரணம். குப்பைமேனி இலையைக் உலரவைத்து தேநீர் வைத்துக் குடிக்கலாம். குப்பைமேனி, கடைகளில் மாத்திரைகளாகவும் கிடைக்கிறது.  கர்ப்பிணிகள் இந்த மாத்திரைகளைத் தவிர்க்க வேண்டும்.

நம் உடலில் இரும்புச்சத்தைச் சேரவிடாமல் தடுக்கும் சில வேதிப்பொருள்கள் இருக்கின்றன. காபியில் இருக்கும் `கஃபைன்' (Caffeine) 39 சதவிகித இரும்புச்சத்து சேர்வதைத் தடுக்கும். அதேபோல் தேநீரில் இருக்கும் 'டான்னின்' (Tannin) 64 சதவிகித இரும்புச்சத்து உடலில் சேராமல் தடுத்துவிடும். நம்மில் பலர் காலை உணவுடன் காபி, பால் ஆகியவற்றை குடிப்பதைப் பழக்கமாகவே வைத்திருக்கிறோம். இவற்றுக்குப் பதிலாக, ஆரஞ்சு சாறு குடிக்கலாம்; இது, உடலில் இரும்புச்சத்து சேர்வதை அதிகரிக்கும். இதையெல்லாம் தொடர்ந்து கடைப்பிடித்தாலே போதும்... உடலில் ஏற்பட்டிருக்கும் ரத்தக் குறைபாட்டை சரிசெய்துவிடலாம்" என்கிறார் ஷைனி.

‘உணவே மருந்து’ என்றார்கள் முன்னோர்கள். அது நூறு சதவிகிதம் சரிதானே!

https://www.vikatan.com/news/health/125973-how-to-improve-blood-levels-in-our-body.html

Link to comment
Share on other sites

இடுப்பு நரம்புகளை வலுவாக்கும் சலபாசனம்

 
அ-அ+

இந்த ஆசனத்தை தொடர்ந்து செய்து வந்தால் இடுப்பு நரம்புகள் வலுப்பெறும். பிறப்புறுப்புகள் ஆரோக்கியத்தோடு இருக்கும். இந்த ஆசனம் செய்முறையை பார்க்கலாம்.

 
 
 
 
இடுப்பு நரம்புகளை வலுவாக்கும் சலபாசனம்
 
பெயர் விளக்கம்: “சலப” என்றால் வெட்டுக்கிளி என்று பொருள். இந்த ஆசன நிலை வெட்டுக்கிளி போன்று தோற்றம் அளிப்பதால் சலபாசனம் என்ற பெயரில் அழைக்கப்படுகிறது.

செய்முறை: முதலில் அத்வாசனம் செய்ய வேண்டும். தலையை மேலே தூக்கி தாடையை தரைவிரிப்பின் மேல் வைக்கவும். கைகளை உடலுக்கு பக்கவாட்டில் நேராக நீட்டி வைத்து, பிறகு இடுப்பை தூக்கி இரண்டு கைகளையும் உடலுக்கு அடியில் வைக்கவும். உள்ளங்கைகள் மேல் நோக்கியபடி இருக்கட்டும். கைவிரல்களை மடக்கியோ, நீட்டியோ வைக்கவும்.

மூச்சை உள்ளுக்கு இழுத்து நிறுத்தி, கைகளை அழுத்தி இரண்டு கால்களையும் இணைத்தவாறு மேலே 45 டிகிரி அளவு வரை உயர்த்தி நிறுத்த வேண்டும். தொப்புளுக்கு கீழே இருந்து பாதம் வரைக்கும் உள்ள உடல் பகுதி அந்தரத்தில் இருக்க வேண்டும். முழங்கால்களை மடக்கக் கூடாது. இந்த ஆசன நிலையில் 10 முதல் 30 வினாடி இருந்து பிறகு, நிதானமாக கால்களை கீழே இறக்கவும். மூச்சை வெளியே விடவும். கால்கள் தரையில் படியும் வரைக்கும் முழங்காலை மடக்கக் கூடாது. இந்த ஆசனத்தை மேற்கண்ட முறைப்படி 2 முதல் 3 முறை பயிற்சி செய்யலாம்.

கவனம் செலுத்த வேண்டிய இடம்: கீழ் முதுகு, அடிவயிறு, இடுப்பு, கைகள் மற்றும் தாடையின் மீதும், விசுத்தி சக்கரத்தின் மீதும் கவனம் செலுத்தவும்.

பயிற்சிக் குறிப்பு: சிலருக்கு கால்களை மேலே உயர்த்தும் போது தலையும் சேர்ந்து மேலே தூக்கும். ஒரு சிலருக்கு இருகால்களையும் சேர்த்து மேலே தூக்க முடிவதில்லை. முயற்சி செய்யும்பொழுது முழங்கால்கள் மடங்கி கோணலாக அகன்று விடும். குதிகால்கள் ஒன்றாக சேராது. இருந்தாலும் தொடர்ந்து பயிற்சி செய்து வந்தால் சரியான ஆசன நிலை வந்து விடும்.

தடைக்குறிப்பு: இருதய பலஹீனம், உயர் ரத்த அழுத்தம், இருதய கோளாறு, குடல் புண், குடல் பிதுக்கம் உள்ளவர்கள் இந்த ஆசனத்தை செய்யக் கூடாது.

பயன்கள்: ஜீரண கருவிகள் நன்கு செயல்படும். இடுப்பு நரம்புகள் வலுப்பெறும். பிறப்புறுப்புகள் ஆரோக்கியத்தோடு இருக்கும். நீரிழிவு, சிறுநீரகக் கோளாறு, மூத்திரம் கழிப்பதில் சிரமம் உள்ளவர்களுக்கு நன்மை அளிக்கிறது.

https://www.maalaimalar.com/Health/Fitness/2018/06/01083738/1167026/hip-problem-control-salabhasana.vpf

 

 

மைக்ரேன் தலைவலி வருவதற்கான காரணங்கள்

 
அ-அ+

இப்போதைய கடும் வெயிலின் மைக்ரேன் தலைவலியினால் அவதிப்படுபவர்கள் எண்ணிக்கையும் கூடியுள்ளது. மேலும் சில தகவல்களையும் அறிந்தால் மைக்ரேன் தலைவலியினை முடிந்தவரை தவிர்த்து விடலாம்.

 
 
 
 
மைக்ரேன் தலைவலி வருவதற்கான காரணங்கள்
 
இப்போதைய கடும் வெயிலின் மைக்ரேன் தலைவலியினால் அவதிப்படுபவர்கள் எண்ணிக்கையும் கூடியுள்ளது. பொதுவில் அதிக பளீர் வெளிச்சம், தூக்கமின்மை, காபி, கேபின், சாக்லெட் இவையெல்லாம் மைக்ரேன் தலைவலியினை தூண்டிவிடும் என்பது பலரின் அனுபவம். ஆயினும் மேலும் சில தகவல்களையும் அறிந்தால் மைக்ரேன் தலைவலியினை முடிந்தவரை தவிர்த்து விடலாம்.

தூக்கமின்மை மைக்ரேன் தலைவலியினைத் தூண்டும் குறைந்தது அன்றாடம் 8 மணிநேர தூக்கம் என்பது அவசியம். முறையான குறிப்பிட்ட நேரத்திற்கு தூங்க சென்று குறைவான குறிப்பிட்ட நேரத்திற்கு எழுவதும் மைக்ரேன் தலைவலியினைத் தவிர்க்க மிக அவசியம். சனி, ஞாயிறு போன்ற விடுமுறை நாட்களில் பகலில் தூங்குவது, இரவில் வெகுநேரம் விழித்து காலையில் வெகுநேரம் சென்று எழுவது போன்றவற்றினைச் சொல்வார்கள். மைக்ரேன் பாதிப்பு ஏற்கனவே உடையவர்கள் மேற்கூறியவாறு செய்யும் பொழுது மைக்ரேன் பாதிப்பு உடனடி அதிகமாக ஏற்படுகிறது.

* பலரும் ஸ்மார்ட் போன், லேப்டாப், டேப்ளெட் போன்றவை இல்லாது வாழ்வே இல்லை என்று நினைக்கின்றார்கள் தூங்கச் செல்வதற்கு முன்கூட அல்லது படுத்துக் கொண்டே தூங்கும் வரை நீல ஒளி உபயோகிப்பவருக்கு மைக்ரேன் பாதிப்பினை ஏற்படுத்தும் வாய்ப்புகள் அதிகம்.

* சிலருக்கு சில வகை சோபாக்கள், உடைகள், போர்வைகள் அதிலுள்ள டிசைன்கள், வரிகள், வட்டங்கள் போன்றவை மூளையிலுள்ள கார்டெக்ஸ் பகுதியினைக் தூண்டி மைக்ரேன் வலியினை உருவாக்குகின்றன என ஆய்வுகள் நிரூபித்துள்ளன. எனவே எளிமையான டிசைன் கொண்ட உடைகள், சோபாக்கள், படுக்கை விரிப்புகளை உபயோகிப்பது நல்லது.

* திடீரென தட்பவெட்ப நிலையில் ஏற்படும் மாற்றம் மைக்ரேன் பாதிப்பினை ஏற்படுத்தும். ஆக மேற்கூறிய குறிப்புகளை அறிந்து மைக்ரேன் தலைவலி தாக்குதலை தவிர்ப்போம்.

அதிக வியர்வை: வெய்யில் கொளுத்தும் நேரத்தில் மிக அதிக வியர்வை என்பது சாதாரணமாக ஏற்படும் நிகழ்வுதான். அடிக்கடி சிறிதளவு தண்ணீர் குடித்துக் கொண்டே இருங்கள். என்பதுதான் அறிவுரையாக இருக்கும். இதனால் உடலின் நீர் சத்து சீராய் இருக்கும். பல பாதிப்புகள் இதனால் தவிர்க்கலாம்.

201806010832232126_1_Micron-headache._L_styvpf.jpg

வியர்வை இயற்கையான ஒன்று. தேவையான ஒன்று. உங்கள் உடலை குளுமை செல்கிறது. உடலில் அதிக  உஷ்ணம் ஏற்படும் பொழுது நரம்பு மண்டலம் வியர்வை சுரப்பிகளை தூண்டி வியர்வை மூலம் உடல் உஷ்ணத்தினை வெளியேற்றுகிறது. 99 சதவீதம் வியர்வை நீர் தான் சிரிதளவு உப்பும். தாது உப்புகளும் வெளியேறுகின்றன. அதிக நச்சு (அ) கழிவுகள் கல்லீரல், நுரையீரல், சிறு நீரகம் மூலமாகவே வெளியேறுகின்றன.

இது சாதாரண சூழ்நிலையில் நிகழும் ஒன்று. ஆனால்  மிக அதிக அளவில் வியர்வை வெளியேறும் பொழுது உடலில் உள்ள சத்து குறைந்து தாது உப்புகள், உள்ள இவற்றிலும் குறைபாடு ஏற்படுகிறது.

உஷ்ணம், கோடை, ஸ்ட்ரெஸ் போன்ற நேரங்களில் அதிக வியர்வை ஏற்படும். கை மடிப்பு, கால்கள், கைகள், முகம் இந்த இடங்களில் வியர்வை அதிகம் ஏற்படும்.

*  பரம்பரை
*  உடல் அளவு
*  தொடர் உடற்பயிற்சி இவையும் அதிக வியர்வைக்கு காரணம் ஆகின்றன.
*  காபி, ஆல்கஹால் இவை உடலின் உஷ்ணத்தினை உயர்த்தி வியர்வையினை உருவாக்கும்.
*  காரசாரமான உணவுகளில் வியர்வை கொட்டும்  ஆயினும் அதிக வியர்வை கொட்டுவதனை நீங்கள் உணர்ந்தால் மருத்துவ ஆலோசனை பெறவும்.
*  சிறிது நேரம் ஷவரில் இருப்பது.
*  டீ, காபி, மது இவற்றினைத் தவிர்ப்பது.
*  கார, சார மசாலா உணவுகளைத் தவிர்ப்பது ஆகியவை சங்கடமான அதிக வியர்வையினைத் தவிர்க்கும்.
*  அதிக எடையினைக் குறைத்தல் நீரிழிவு நோயாளிகள்  சர்க்கரையினை  கட்டுப்பாட்டில் வைத்திருத்தல்.
*  கொழுப்பு உணவுகளைத் தவிர்த்தல்.
*  மருத்துவ உதவியோடு மட்டுமே மருந்துகளை எடுத்துக் கொள்ளுதல் போன்றவை பல விதங்களில் உடல் நலனை பாதுகாக்கும்.

https://www.maalaimalar.com/Health/GeneralMedicine/2018/06/01083223/1167025/Micron-headache.vpf

பக்க விளைவுகள் இல்லாத எளிமையான கருத்தடை முறைகள்

 
அ-அ+

திருமணமான புதிதில் ஒரு சில மாதங்களுக்கு வேண்டுமானால் கரு உருவாவதைத் தள்ளிப் போடலாம். அதற்கு அதிக பக்க விளைவுகள் இல்லாத எளிமையான கருத்தடை முறைகளைப் பின்பற்றலாம்.

 
 
 
 
பக்க விளைவுகள் இல்லாத எளிமையான கருத்தடை முறைகள்
 
மாதவிலக்கு முடிந்த 10-வது நாளில் இருந்து 20 நாட்களில் ஏதாவது ஒரு நாளில் கரு முட்டை வெளியாகும். மாதவிலக்கு சுழற்சி சரியாக இருக்கும் பெண்களுக்கு மட்டுமே இந்த இடைவெளி சரியாக இருக்கும். மாதவிலக்கு சுழற்சி நாட்கள் மாறும்போது கருமுட்டை வெளியாகும் நாள் கணக்கு மாறும்.

மாதவிலக்கு முடிந்ததும் முதல் ஐந்து நாட்கள், மாதவிலக்கு நாளுக்கு முன் ஐந்து நாட்களிலும் உடலுறவு கொள்வதால் குழந்தை உருவாக வாய்ப்பில்லை. மாதவிலக்கு நாட்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப பாதுகாப்பான நாட்கள் எவை என்பதை உங்கள் மருத்துவரின் ஆலோசனைப்படி தெரிந்து கொள்ளலாம். இந்த நாட்களில் எந்தத் தயக்கமும் இன்றி தாம்பத்தியம் வைத்துக் கொள்ளலாம்.

உடலுறவின்போது குழந்தை உருவாவதைத் தடுக்க காண்டம் பயன்படுத்துவதே பெரும்பாலானவர்களின் தேர்வாக உள்ளது. இது பாதுகாப்பானதும் பக்க விளைவுகள் இல்லாததும் ஆகும். உடலுறவின்போது காண்டம் கிழிந்து விடாமல் இருக்க ஆணுறுப்பில் சரியாகப் பொருத்த வேண்டும். காண்டம் போட்ட பிறகு காற்றுப் புகுவதற்கான வாய்ப்பிருந்தால்தான் உடலுறவின்போது கிழியும் வாய்ப்பு ஏற்படும். எனவே, ஆணுறையை சரியாக, இறுக்கமாகப் போட்டுக் கொண்டால் பயமின்றி உறவை அனுபவிக்கலாம்.

உடலுறவின்போது பாதுகாப்பு இன்றி இருந்தாலோ, காண்டம் கிழிந்து விட்டாலோ கூடக் கவலைப்படத் தேவையில்லை. இந்த நேரங்களில் மருத்துவரின் ஆலோசனையுடன் எமர்ஜென்சி கான்ட்ராசெப்ஷன் மாத்திரை எடுத்து கருஉருவாகாமல் தடுத்திட முடியும். உடலுறவுக்குப் பின் 48 மணி நேரத்துக்குள் இந்த மாத்திரையை எடுத்துக் கொள்ளலாம்.

கரு உருவாவதைத் தடுக்க பெண்கள் மருத்துவர்கள் பரிந்துரைக்கும் ஹார்மோன் மாத்திரைகள் எடுத்துக் கொள்கின்றனர். உடலுறவின் போது பெண்ணின் பிறப்புறுப்பில் மாத்திரை வைத்தும் கரு உருவாவதைத் தடுக்க முடியும். ஆனால், கரு உருவாவதைத் தடுக்க ஹார்மோன் மாத்திரைகள் பயன்படுத்துவது பக்க விளைவுகளை ஏற்படுத்த வாய்ப்புள்ளது. நீண்ட நாட்கள் இதுபோன்ற மாத்திரைகளைத் தொடர்ந்து பெண்கள் பயன்படுத்தக் கூடாது.

201805311304403338_1_Contraceptive-methods._L_styvpf.jpg

பெண்ணுக்கான கருத்தடை சாதனமாக டயாப்ரம்(Diaphragm) பயன்படுத்தலாம். இந்த சாதனம் 2 முதல் 4 இன்ச் வரை வட்ட வடிவில் ரிங் இணைக்கப்பட்டிருக்கும். இந்த கருத்தடை சாதனத்தை துவக்கத்தில் மருத்துவரின் ஆலோசனையுடன் பொருத்திக் கொள்ளலாம். பின்னர் பெண் சுயமாக தனது பிறப்புறுப்பில் பொருத்திக் கொள்ளலாம். இதை அணிந்து கொள்வதால் விந்தணு கரு முட்டையுடன் இணைவதைத் தடுக்கலாம்.

IUD என்கிற Intrauterine device என்ற சிறிய பிளாஸ்டிக் சாதன வடிவிலான கருத்தடை சாதனமும் உண்டு. இதனைப் பொருத்திக் கொள்வதன் மூலமும் கரு உருவாவதைத் தடுக்க முடியும். காப்பர் டி கருத்தடை சாதனமும் கருத்தடைக்கு பொதுவாகப் பயன்படுத்தப்படுகிறது.

இதனைப் பொருத்திக் கொள்வதால் வலி, அதிக ரத்தப்போக்கு போன்ற பக்க விளைவுகள் ஏற்படும். இதேபோல கரு உருவாவதைத் தடுக்க எடுக்கப்படும் ஹார்மோன் மாத்திரைகளின் பக்க விளைவுகளும் மோசமானவை.

திருமணமான புதிதில் ஒரு சில மாதங்களுக்கு வேண்டுமானால் கரு உருவாவதைத் தள்ளிப் போடலாம். அதற்கு அதிக பக்க விளைவுகள் இல்லாத எளிமையான கருத்தடை முறைகளைப் பின்பற்றலாம். ஆண்டுக்கணக்கில் குழந்தைப் பிறப்பைத் தள்ளிப் போடுவது நல்லதல்ல. இதனால் பின்னாளில் குழந்தைப் பேற்றில் பிரச்னை வரலாம். எனவே, தாம்பத்யம் இனிக்க பாதுகாப்பான உடலுறவில் கவனம் செலுத்துவதைப் போலவே நீண்ட நாட்கள் தள்ளிப் போடாமலும் இருங்கள்.

தாம்பத்யம் இனிப்பதோடு இணையின் உடல்நலத்திலும் அக்கறை கொள்ள வேண்டிய பொறுப்பு இருக்கிறது. ஒவ்வாத கருத்தடை முறைகளாக இருந்தால் அவற்றால் உடல்நலக் குறைபாடுகள் உண்டாகி கண்டிப்பாக தாம்பத்ய இன்பத்தைக் குறைத்திடும். 
 

https://www.maalaimalar.com/Health/WomenMedicine/2018/05/31130440/1166862/Simple-methods-of-contraception-without-side-effects.vpf

Link to comment
Share on other sites

ட்ரெட்மில் பயிற்சி மேற்கொள்பவர்கள் செய்ய வேண்டியவை, கூடாதவை! #TreadmillTips

 
 

ப்போதெல்லாம் வாக்கிங் செல்பவர்களைவிட, ட்ரெட்மில்லில் ஓடுபவர்கள்தாம் அதிகம். பலரும் இதை வரப்பிரசாதமாகவே பார்க்க ஆரம்பித்துவிட்டார்கள். ஜிம்முக்குச் சென்று ட்ரெட்மில் பயிற்சி செய்வதெல்லாம் அந்தக் காலம். இப்போது வீட்டிலேயே வாங்கிவைத்துப் பயிற்சி செய்பவர்கள் அதிகமாகிவிட்டார்கள். இதில் பயிற்சி செய்வதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்பதை விளக்குகிறார் உடற்பயிற்சி ஆலோசகர் கோதண்டன்...

ட்ரெட்மில்

 


``சுற்றுச்சூழல் மற்றும் வானிலை மாற்றங்கள் காரணமாக, நடைப்பயிற்சி மேற்கொள்ள முடியாமல் இருப்பவர்களுக்கும், தினமும் வெளியில் சென்று பயிற்சி செய்ய முடியாதவர்களுக்கும் ட்ரெட்மில் சிறந்த தீர்வு. ஆனால், இதைச் சரியாக, முறையாகப் பயன்படுத்தினால்தான் அதன் நன்மைகளைப் பெற முடியும்.கோதண்டன்

நன்மைகள்...
* உடல் எடையைக் குறைக்க விரும்புபவர்கள், ட்ரெட்மில்லில் தாராளமாகப் பயிற்சி மேற்கொள்ளலாம். 6 mph (Miles per Hour) என்ற வேகத்தில், 20 நிமிடங்கள் நடந்தால் உடலிலுள்ள 229 கலோரிகளைக் குறைக்கலாம். 8 mph (Miles per Hour) என்றால், 300 கலோரிகளைக் குறைக்கலாம். இந்தப் பயிற்சிகளோடு சேர்த்து ஊட்டச்சத்திலும் கவனம் எடுத்துக்கொண்டால், விரைவில் உடல் எடையைக் குறைக்கலாம். 

* இதயச் செயல்பாடுகள் சீராகும். ரத்த அழுத்தம் குறைவாக இருப்பவர்களுக்கு, அந்தப் பிரச்னை தீரும். 

* ட்ரெட்மில்லில் ஓடும்போது, உடலின் அனைத்துத் தசைகளும் இயங்குவதால், தசைகள்  வலுப்பெறும். முக்கியமாக, கால் மற்றும் தொடைப் பகுதி தசைகளுக்கு அதிக நன்மைகள் கிடைக்கும். மூட்டுவலிப் பிரச்னை சரியாகும்.

* ஃப்ளாட்டான பகுதியில் நடைப்பயிற்சி மேற்கொண்டால், அதிகக் கலோரிகளைக் குறைக்கலாம். அந்த வகையில், வெளியில் சென்று பயிற்சி செய்வதைவிட, ட்ரெட்மில்லில் பயிற்சி செய்வது நல்லது.

* ட்ரெட்மில் பயன்படுத்துவதால், உடல் மட்டுமல்ல... உள்ளமும் புத்துணர்ச்சி பெறும்.


கவனம்!

* பின் முதுகில் வலி இருப்பவர்கள், ட்ரெட்மில்லில் பயிற்சி செய்யக் கூடாது. 

* ட்ரெட்மில்லில் பயிற்சி செய்யும்போது, அதற்குத் தேவையான ஷூ வகைகளை வாங்கி வைத்துக்கொள்ள வேண்டும். இல்லையென்றால் மூட்டுவலி, குதிகால்வலி, ப்ளான்டர்ஸ் ஃபேஸிடிஸ் (Plantars fasciitis) போன்ற பிரச்னைகள் ஏற்படும்.

* சிலருக்குக் கால் பாதம் தட்டையாக இருக்கும். அவர்கள், மீடியம் லார்ஜ் இன்சோல் (Insole) வாங்கி, அதை ஷூவில் வைத்துப் பயன்படுத்த வேண்டும்.

நடைப்பயிற்சி

* ட்ரெட்மில்லில் பயிற்சி செய்ய ஆரம்பித்த முதல் சில நாள்களுக்கு மூட்டுவலி, கால்வலி போன்றவை ஏற்படும். அவற்றைப் பொருட்படுத்தாமல், அன்றாடம் பயிற்சி மேற்கொண்டால், போகப் போக பிரச்னை சரியாகிவிடும்.

* மற்ற நேரத்தைவிட, காலை நேரத்தில் ட்ரெட்மில் பயிற்சி செய்வது நல்லது. உடலுக்குப் புத்துணர்ச்சியும் கிடைக்கும். 

* வெகு நாள்கள் கழித்து ட்ரெட்மில் பயன்படுத்துபவர்கள், புதிதாக உபயோகிப்பவர்கள், நேர விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும். ஆரம்பத்திலேயே அதிக நேரம் ஓடக் கூடாது. அரை கிலோமீட்டரிலிருந்து தொடங்கலாம். ஒவ்வோர் ஐந்து அல்லது ஆறு நாள் இடைவெளியில் இந்த நேரத்தை அரை மணி நேரம் அதிகரித்துக்கொள்ளலாம்’’ என்கிறார் கோதண்டன்.


``ட்ரெட்மில்லில் பயிற்சி செய்பவர்கள் என்னவெல்லாம் செய்யலாம், செய்யக் கூடாது?’’ என்று பிசியோதெரபிஸ்ட் பிருந்தா ஆனந்திடம் கேட்டோம்.பிருந்தா ஆனந்த், பிசியோதெரபிஸ்ட்

``ட்ரெட்மில் பயன்படுத்தும்போது, டிரெஸ்ஸிங் சரியாக இருக்க வேண்டும். வெறுங்காலுடன் நடக்கக் கூடாது. சரியான ஷூ, ஷாக்ஸ், டி-ஷர்ட், ட்ராக்ஸ் அணிந்திருக்க வேண்டும்.  பயிற்சி செய்யும்போது, உடலும் மனதும் ரிலாக்ஸாக இருக்கவேண்டியது அவசியம்.

* ட்ரெட்மில்லில் நடக்கும்போது, வியர்வையைத் துடைத்துக்கொள்ள பக்கத்திலேயே ஒரு துண்டு வைத்துக்கொள்வது நல்லது. ஜிம் சென்று பயிற்சி மேற்கொள்பவர்கள், இதைக் கண்டிப்பாகப் பின்பற்றவும்.

* முதன்முதலாக ட்ரெட்மில் உபயோகிப்பவர்கள், வேகத்தை எப்படிக் கூட்டிக்கொள்வது அல்லது குறைப்பது, எமெர்ஜென்சி ஸ்டாப் எப்படிச் செய்வது, பாடல் கேட்பது அல்லது வீடியோக்கள் பார்ப்பது எப்படி என்பதையெல்லாம் பயிற்சியாளரிடம் கேட்டுத் தெரிந்துகொள்ளவும்.

* ட்ரெட்மில்லின்  ப்ளஸ், அதன் டிஜிட்டல் திரை. ஒருநாளைக்கு எவ்வளவு நேரம் பயிற்சி செய்திருக்கிறீர்கள், எவ்வளவு தூரம் நடந்திருக்கிறீர்கள், பயிற்சியால் உடலில் எவ்வளவு கலோரிகள் கரைந்திருக்கின்றன, இதயத்துடிப்பின் வேகம் எவ்வளவு இருக்கிறது போன்றவற்றைத் தெரிந்துகொள்ள முடியும். 

* உடல் பருமனாக இருப்பவர்கள், ஜிம்முக்குச் சென்று ட்ரெட்மில் பயிற்சியை ஆரம்பிப்பதுச் சிறப்பு. காரணம், அங்கு வைக்கப்பட்டிருக்கும் இயந்திரங்கள், மிக உறுதியாக இருக்கும்.

* பயிற்சி செய்யும்போது வெளியேறும் வியர்வை, பயிற்சியை முடிக்கும்போது டீஹைட்ரேஷன் பிரச்னையை ஏற்படுத்தலாம். எனவே, பயிற்சியைத் தொடங்குவதற்கு முன்னர், நிறையத் தண்ணீர் குடிக்க வேண்டும்’’ என்கிறார் பிருந்தா ஆனந்த்.

 

https://www.vikatan.com/news/health/126744-dos-and-donts-on-treadmill.html

Link to comment
Share on other sites

தாழ்நிலை சர்க்கரை (Low Blood Sugar)

 
 

ஏன், எதற்கு, எப்படி?தகவல் உதவி: சி.பி.ராஜ்குமார், சர்க்கரை நோய் மருத்துவர்

 

ர்க்கரை நோயாளிகளுக்கு ரத்தச் சர்க்கரை அளவு குறைவதை `ஹைப்போகிளைசீமியா’ (Hypoglycemia) என்பார்கள். ரத்தத்தில் சர்க்கரையின் அளவு 70 மி.கி./டெ.லி.க்குக் கீழ் குறையும் நிலையே ‘தாழ்நிலை சர்க்கரை’ அல்லது ஹைப்போகிளைசீமியா (Hypoglycemia). 

10p2_1527682475.jpg

10p1_1527682499.jpg

தவிர்க்க தடுக்க

10p3_1527682980.jpg

* வழக்கத்திற்கு மாறான அதிக உடலுழைப்பு இருக்கும் என்று தோன்றினால், சிற்றுண்டி சாப்பிட்டுவிட்டுத் தொடங்கலாம்.

10p4_1527682995.jpg

* சர்க்கரை நோயாளிகள் அதிகமாகப் பசியெடுக்கும்வரை காத்திருக்கக் கூடாது. நேரத்துக்குச் சாப்பிட்டுவிட வேண்டும்.

10p5_1527683009.jpg

* மயக்கமின்றி ஓரளவு சாப்பிடும் நிலையில் இருக்கிறார் என்றால் மட்டும் குளுக்கோஸ் அல்லது சர்க்கரை நிறைந்த பானங்களைக் கொடுக்கலாம். மயக்கமடைந்த நிலையில் இருந்தால், எந்த உணவுப்பொருளும் கொடுக்கக் கூடாது, ஏனெனில், உணவு மூச்சுக்குழாயில் நுழைந்து உயிருக்கே பாதிப்பு ஏற்படலாம்.

10p6_1527683029.jpg

* சுயநினைவு இல்லாமல் மயங்கி விழுந்தால், அவருக்குச் சர்க்கரை  அளவு குறைந்திருக்கக்கூடும். அதை குளுக்கோமீட்டரில் கண்டுபிடித்து உறுதி செய்துகொண்ட பின் உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு சென்று குளுக்கோஸ் (Glucose 25%)  என்னும் ஊசியை ரத்தக்குழாய் வழியாகச் செலுத்த வேண்டும்.

https://www.vikatan.com/

Link to comment
Share on other sites

  • 3 weeks later...

உடல் எடையைக் கட்டுக்குள் வைக்க என்ன செய்ய வேண்டும்?

 
உடல் எடையைக் கட்டுக்குள் வைக்க என்ன செய்ய வேண்டும்?
 

'ஒரு மனிதனின் உயரத்துக்கு ஏற்றவாறு, உடல் எடை இருக்க வேண்டும்' என்பது மருத்துவ விதி. அதற்குமாறாக எடை கூடவோ, குறையவோ செய்தால் நோய்கள் தாக்கும் அபாயம் அதிகம். உடல் பருமன் அதிகரித்தவர்கள் வீடுகள், அலுவலகங்கள் மற்றும் ஷாப்பிங் மால்களில் படிக்கட்டுகளில் ஏறி இறங்குவது முதல்  இயல்பான வேலைகளைச் செய்வது வரை எதிர்கொள்ளும் பிரச்னைகள் ஏராளம். 
`உடல் எடை எதனால் கூடுகிறது, எடை குறைக்க என்ன செய்ய வேண்டும், உடல் பருமனைப் பராமரிப்பது எப்படி...' என்பதுபோன்ற கேள்விகளை உடல்பருமன் அறுவை சிகிச்சை நிபுணர்  அனிருத் ராஜ்குமாரின் முன் வைத்தோம். 
விரிவாகப் பேசினார் அவர். 

டாக்டர் அனிருத் ராஜ்குமார்

“ஒருவர் சாப்பிடும் உணவு,  அவரது உடல் வளர்ச்சிக்கு எந்தளவுக்கு உதவுகிறது என்பதைக் குறிப்பது வளர்சிதை மாற்றம் எனப்படும் மெட்டபாலிசம் (Metabolism). இந்த வளர்சிதை மாற்றம் குறைவாக உள்ளவர்கள் குறைவான உணவைச் சாப்பிட்டாலும் அவர்களது உடல் பருமன் கூடிவிடும். மெட்டபாலிசம் சரியாக இல்லையென்றால், உடலில் தேவையற்றக் கொழுப்பு அதிகமாகத் தேங்கி, உடல் பருமன் அதிகரிக்கும். மரபணு காரணங்களாலும் ஆரோக்கியமற்ற உணவுகளை உண்பதாலும்கூட உடல் எடை கூடும். 

 

 

அலுவலகத்தில் வேலை பார்க்கும் சிலர் சரியான நேரத்தில் சாப்பிட மாட்டார்கள். நேரம் தவறிச் சாப்பிடுவது, காலை உணவைக் குறைவாக உண்பது, மதிய வேளையில் அளவுக்கதிகமாகச் சாப்பிடுவது, இரவில் வயிறுமுட்டச் சாப்பிடுவது என உணவு விஷயத்தில் ஒழுங்கற்று இருப்பார்கள்.  சிலர் காலை உணவைத் தவிர்த்துவிட்டு மதியம் தேவைக்கு அதிகமாகச் சாப்பிடுவார்கள். இதனாலும் எடை அதிகரிக்கும். இரவில் அதிகமாகச் சாப்பிடுவதை உடல் ஏற்றுக்கொள்ளாது. இதை ‘அன் ஹெல்த்தி’, ‘அன் டைம்லி டயட்’ என்கிறோம். ஃபாஸ்ட்ஃபுட் உணவகங்களில் சாப்பிடுவது, கூல்டிரிங்ஸ், எனர்ஜி டிரிங்ஸ், பியர் போன்ற மது வகைகள், சோடா, பர்கர், பீட்ஸா போன்றவற்றாலும் உடல் பருமன் கூடும். 

 

 

உடல் எடையைப் பராமரிப்பதற்கான வழிமுறைகள்! 

*  'பேலியோ டயட்', 'கீட்டோ டயட்' என நிறைய டயட் முறைகள் உள்ளன. இவற்றில் புரோட்டின், கொழுப்புச்சத்து அதிகமாகவும் மாவுச்சத்தைக் குறைவாகவும் கொடுப்பார்கள். உங்கள் உடல்நிலைக்கு ஏற்ற ஏதேனும் ஒன்றை தேர்ந்தெடுத்துக் கடைப்பிடிக்கலாம்.

*  குறித்த நேரத்தில் சாப்பிட வேண்டும். 

* மாவுச்சத்து, புரோட்டின் உணவுகளைத் தேவையான அளவு மட்டுமே எடுத்துக்கொள்ள வேண்டும்.

*  அதிகமான உடலுழைப்பு இல்லாதவர்களுக்கு உடல் எடை கூடும். அவர்கள் தினசரி 30 நிமிடமாவது உடற்பயிற்சி செய்ய வேண்டும். முறையாக உடற்பயிற்சி செய்தால், சாப்பிட்ட உணவு எளிதாக ஜீரணமாகிவிடும். அன்றாடம் சிறிது தூரமாவது நடப்பதையோ, ஓடுவதையோ  பழக்கமாக்கிக்கொள்ள வேண்டும்.

உடல் எடை குறைக்கும் கருவி

*  அரிசி, சர்க்கரை மற்றும் சப்பாத்தி, பிரெட் போன்றவற்றை அளவுக்கதிமாக எடுத்துக்கொள்ளக்கூடாது.  

*  ஒவ்வொரு உணவு வேளைக்கும் இடையே நான்கு மணி நேர இடைவெளி தேவை.

*  குறைந்தது  8 மணி நேர உறக்கம் அவசியம். அப்போதுதான் உடலிலுள்ள குரோத் ஹார்மோன் (Growth hormone) அதிகமாகும். இது உடல் எடை கூடுவதைத் தடுக்கும். அதேபோன்று, இரவு உணவுக்கும் உறக்கத்துக்கும் இடையே ஒன்றரை மணிநேர இடைவெளி இருக்க வேண்டும்.  

உறக்கம்


*  ‘கிரேசிங் டைப் டயட்’ (Grazing Diet) மேற்கொள்வதாலும் உடல் பருமனைப் பராமரிக்கலாம். இத்தகைய டயட் சீனாவில் அதிகம் பயன்படுத்தப்படுகிறது.

மேற்கண்ட வழிமுறைகளைக் கடைப்பிடித்தும் எடையைக் கட்டுப்பாட்டில் வைக்க முடியவில்லை என்றால், மருத்துவரின் அறிவுரைப்படி ‘எண்டோஸ்கோபி' (Endoscopy) முறையைப் பயன்படுத்தலாம். இதில் இரைப்பை வரை சென்று, அங்கே சிறிய பலூன் வைக்கப்படும்.  இதனால் எப்போதும் சாப்பிட்டது போன்ற உணர்வு இருக்கும். அதனால், அதிகமாக உணவு உண்ண முடியாது.  இதை 6 மாதங்கள் வரை வைத்திருந்து, பிறகு, பலூனை எடுத்துவிட வேண்டும். இந்தமுறையால் உடல் எடையை சுமார் 15 கிலோ வரை குறைக்கலாம். அறுவை சிகிச்சையில்லாத புதிய வழிமுறை இது. 

 

 

உடல் பருமனைக் குறைக்க முடியாதவர்களுக்கு நுண்துளை அறுவை சிகிச்சை மூலம் தீர்வு காணலாம். மேலும், சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் ரத்தஅழுத்தம் உள்ளவர்களுக்கும் இந்த சிகிச்சை பயன்படும். ஒருவரது உயரத்துக்கு ஏற்ப அவர் எவ்வளவு எடை இருக்க வேண்டும் என்பதை அளவிடும்முறையே பி.எம்.ஐ. (B.M.I). சிகிச்சை எடுப்பவருக்கு பி.எம்.ஐ., 35-க்கு மேல் இருக்க வேண்டும். அப்போதுதான் பிரச்னையின்றி சிகிச்சை தர முடியும்” என்கிறார்  அனிருத் ராஜ்குமார். 

https://www.vikatan.com/news/health/128303-how-do-you-manage-your-weight.html

Link to comment
Share on other sites

காதுகளை பாதுகாக்கும் வழிமுறைகள்

 
அ-அ+

காதுகளின் ஆரோக்கியம் எவ்வாறு பாதிக்கப்படுகிறது? எதனால் செவித்திறன் குறைகிறது? இத்தகைய பாதிப்பில் இருந்து காதுகளை எவ்விதம் பாதுகாப்பது என்பது குறித்து காண்போம்.

 
 
 
 
காதுகளை பாதுகாக்கும் வழிமுறைகள்
 
செல்வங்களில் எல்லாம் சிறந்த செல்வம் செவிச்செல்வம் என்றார் திருவள்ளுவர். அதற்கு முக்கிய காரணம் இருக்கிறது. பொதுவாக, கேட்கும் திறனுக்கும், பேச்சுத் திறனுக்கும் ஒரு நெருங்கிய தொடர்பு உண்டு. பிறக்கும் போதே குழந்தைகளின் காதுகள், கேட்கும் சக்தியை இழந்து விட்டால் அவர்களுக்கு பேச்சு வராது. அதிலிருந்தே தெரிந்து கொள்ளலாம் கேட்கும் திறன் எவ்வளவு முக்கியம் என்று.

கேட்கும் திறனால் மட்டுமே மொழித்திறன் உருவாகி குழந்தை பேச தொடங்குகிறது. இத்தகைய கேட்கும் திறன் கொண்ட காதுகளின் ஆரோக்கியம் எவ்வாறு பாதிக்கப்படுகிறது? எதனால் செவித்திறன் குறைகிறது? இத்தகைய பாதிப்பில் இருந்து காதுகளை எவ்விதம் பாதுகாப்பது என்பது குறித்து காண்போம். இதுகுறித்து திண்டுக்கல் அரசு மருத்துவமனையின் காது, மூக்கு, தொண்டை அறுவை சிகிச்சை நிபுணர் சுபாஷினி கூறியதாவது:-

மனித உடலில் காதுகள் ஒரு இன்றியமையாத உறுப்பு என்று சொன்னால் அது மிகையில்லை. காதுகளுக்கு கேட்கும் திறன் மட்டுமல்லாது இன்னும் சில திறன்களும் இருக்கிறது. அவைகள், உடலின் சமநிலையை பாதுகாத்தல், கட்டுப்படுத்துதல் போன்ற முக்கிய பணிகளையும் செய்கின்றன.

உடலின் சமநிலை மாறுபடும்போது, தள்ளாட்டம், தலைச்சுற்றல், கிறுகிறுப்பு ஆகியவை வந்துவிடும். அதுமட்டுமின்றி தூங்கி எழும்போதும், ஒரு பக்கம் சாய்வதாலும் உடலின் சமநிலை மாறுபட்டு கிறுகிறுப்பு வர வாய்ப்புள்ளது. குறிப்பாக சொல்வதென்றால், நாம் நேராக நிற்கவும், தள்ளாடாமல் நடப்பதற்கும் காதுகள் மிக அவசியமாகிறது.

பொதுவாக காதுகளின் அமைப்பு 3 பிரிவுகளாக உள்ளது. ஒன்று, வெளிக் காது. 2-வது நடுக்காது. 3-வது உள்காது. வெளிக்காது என்பது, செவி மடலில் இருந்து காது சவ்வு பகுதி வரை இருக்கும். நடுக்காது, ஜவ்வு பகுதியில் இருந்து காது நரம்பு தொடங்கும் பகுதி வரை இருக்கும். உள்காது, காது நரம்பில் இருந்து மூளை நரம்பு மண்டலம் வரை இருக்கும். இதில் செவிப்பறை என்பது நடுக்காதில் இருக்கும்.

இத்தகைய முக்கியத்துவம் பெற்ற காதுகளுக்குள் புகும் ஒலி அலைகளின் சத்தம் 20 முதல் 20 ஆயிரம் ஹெட்ஸ் (அளவீடு) வரை தான் இருக்க வேண்டும். இந்த அளவீடு ஒலி அலைகளுக்கு சத்தம் குறைவாக இருந்தால் கேட்காது.

காதுகளின் ஆரோக்கியத்தை பாதிக்கும் விஷயங்கள் நிறைய உள்ளன. அடிக்கடி சளிப்பிடித்தல், தொண்டை வலி, விபத்து போன்ற காரணங்களால் காதுகள் பாதிக்கப்படும். பொதுவாக நடுக்காதுக்கும், மூக்குக்கும் இடையே ஒரு துளை இருக்கும். அதன்வழியே கிருமிகள் எளிதாக நடுக்காதை சென்றடைந்து விடும். அந்தக்கிருமிகள் நடுக்காதில் உள்ள செவிப்பறையை தாக்கி பாதிப்பை ஏற்படுத்தும். அதனால் கேட்கும் திறன் குறையும். இதுபோன்ற பாதிப்புகள் குழந்தைகளுக்கு அதிகம் வரும்.

பெரியவர்களை பொறுத்தவரை, அடிக்கடி சளிப்பிடித்தல், மூக்கு தண்டு வளைதல், மூக்கில் கட்டி, சைனஸ் தொந்தரவு, பிற கட்டிகள், கிருமி தொற்று போன்ற காரணங்களால் கேட்கும் திறன் பாதிக்கும். காது வலியுடன் சீழ் வடியும், சிலருக்கு நரம்புகள் பாதிக்கப்பட்டு முகவாதம் வரலாம். கண் இமைகள் மூடாமல் போகும் வாய்ப்பும் உள்ளது. அப்போதும் சரிவர கவனிக்காமல் போனால் மூளையில் சீழ் கட்டிகள் தோன்றலாம். அதனால் மூளைக்காய்ச்சல் ஏற்பட்டு கோமா நிலைக்கு தள்ளப்படலாம்.

201806251309394393_1_ear-care-tips._L_styvpf.jpg

பொதுவாக காதுகள் பாதிக்கப்படும் போது, முதலில் தலைவலி, காது வலி ஏற்படும். காதுக்குள் கொப்பளங்கள் தோன்றும். அதற்கடுத்த நிலையில் சீழ் வடியும். இதுபோன்று அறிகுறிகள் தோன்றினால் தாமதிக்காமல் சிகிச்சை மேற்கொள்ள வேண்டும். பொதுவாக காதுகளை பொறுத்தவரை பாதுகாப்பு என்பது முக்கியமானது.

அதிக சத்தத்தை கேட்கக் கூடாது. அவ்வாறு சத்தத்தை கேட்க நேர்ந்தால் காதில் முன்னெச்சரிக்கையாக பஞ்சை வைத்துக்கொள்ள வேண்டும். அதேபோல் வாகனங்களில் உள்ள காற்று ஒலிப்பான் (ஏர்ஹாரன்) மற்றும் கூம்புவடிவ ஒலி பெருக்கி சத்தமும் ஆகாது. காதை சுத்தப்படுத்த குச்சி, பட்ஸ் உபயோகிக்க கூடாது. சாதாரணமாக, விபத்தில் காதில் அடிபடாமல் பார்த்து கொள்ள வேண்டும். அடிக்கடி சளிப்பிடிக்க விடாமல் எச்சரிக்கையாக இருப்பதும் நல்லது.

வாகனங்களில் போகும்போது காற்றின் வேகத்தில் பூச்சிகள் காதுக்குள் செல்ல வாய்ப்பிருக்கிறது. மேலும் தூங்கும் போது காதில் எறும்பு, சிறு பூச்சிகள் நுழைய வாய்ப்புள்ளது. அதனால் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். அதேபோல் சர்க்கரை நோய், ரத்தக்கொதிப்பு இவற்றை கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ள வேண்டும்.

அவ்வாறு இல்லையென்றால் தலையின் அடிப்பகுதி பாதிக்கப்படுவதுடன், மத்திய நரம்பு மண்டலமும் பாதிக்கப்படும். இதுதவிர வயதானவர்களுக்கு காதில் புற்றுநோய்க்கிருமி தொற்றும் ஏற்படலாம்.

பொதுவாக குழந்தைகள் பிறந்த சில மாதங்களில் ஒன்றிரண்டு வார்த்தைகள் பேசினாலும் 1½ வயதில் சரளமாக பேச ஆரம்பிக்கும். 2 வயதில் அதற்கு சிந்திக்கும் திறன் வளரும். பரம்பரை வழியாக, சொந்தத்தில் திருமணம் செய்வதால் பிறவிக்குறைபாடாக காதுகேளாமை ஏற்பட வாய்ப்பிருக்கிறது. அவ்வாறு பிறவிக்குறைபாடுகளுடன் பிறந்த குழந்தையை 3 மாதங்களில் கண்டறிந்து விடலாம்.

அதன்பிறகு ஒரு வருடத்தில் ஆடியோகிராம், பெரா ஆகிய 2 பரிசோதனைகள் மூலம் காதின் எந்தப்பகுதி பாதிக்கப்பட்டுள்ளது என்பதை கண்டறியலாம். பொதுவாக பிறவிக்குறைபாடுள்ள குழந்தைகளுக்கு உள்காதில் மற்றும் நரம்பில் தான் பிரச்சினைகள் இருக்கும்.

பொதுவாக காதுகளை பாதுகாக்க மற்ற சிறப்பு பயிற்சிகள் ஏதும் கிடையாது. ஆனால் தலைசுற்று, கிறுகிறுப்பில் இருந்து பாதுகாத்து கொள்ள சிறப்பு பயிற்சிகள் இருக்கிறது. கண்களுக்கு ஓய்வு கொடுப்பதை போன்று காதுகளுக்கு ஓய்வு கொடுக்க முடியாது. அதற்கு ஓய்வே கிடையாது. 24 மணி நேரமும் வேலை செய்து கொண்டு தான் இருக்கும். அதனால் தான் தூங்கும் போது கூட ஏதாவது ஒரு சத்தம் கேட்டால் விழித்து கொள்கிறோம்.

ஹெட்போனில் தொடர்ந்து பாட்டு கேட்டுக்கொண்டே தூங்குவதாலும், அதிக சத்தமாக வைத்து பாட்டு கேட்பதாலும், குறிப்பிட்ட மருந்து, மாத்திரையை தொடர்ந்து சாப்பிடுவதாலும் காது நரம்புகள் வலுவிழந்து போகிறது. இதனால் காதுகளின் செவித்திறன் குறைந்து போகும். இதற்கு ஓட்டோடாக்சிசிட்டி என்று பெயர்.

201806251309394393_2_ear-care-tips1._L_styvpf.jpg

தலையில் மூளைக்கு அருகில் கண், காது, மூக்கு போன்ற உறுப்புகள் உள்ளது. அதனால் மிகுந்த எச்சரிக்கையாக இந்த உறுப்புகளை பாதுகாக்க வேண்டியது அவசியம். அதனால் ஒரு உறுப்பு பாதிக்கப்பட்டாலும் அதனருகில் இருக்கும் மற்ற உறுப்பும் பாதிக்கப்படும் வாய்ப்பு உள்ளது. குறிப்பாக பல்வலி வந்தால் தலைவலி வரும். கழுத்து வலி வந்தால் காது வலி வரும். இந்த பாதிப்பை ரெபர்டு ஆட்டாலாஜியா என்று மருத்துவம் கூறுகிறது.

காதுகள் எப்போதும் உலர்வாக இருக்க வேண்டிய பகுதி என்பதை தெரிந்து கொள்ளுங்கள். அதனால் குளிர் காற்று, குளிர்ந்தநீர் காதுக்குள் போகக்கூடாது. அது காதின் ஆரோக்கியத்தை கெடுத்து பாதிப்பை உண்டாக்கும். அம்மை நோயை அலட்சியப்படுத்தக்கூடாது. அதனாலும் காதுகளுக்கு பாதிப்பு ஏற்படும். உள்காதில் நீர் கோர்த்தால் காது கேட்காது. அப்போது இரைச்சல், தலைச்சுற்றல், கிறுகிறுப்பு ஆகிய பாதிப்புகள் ஏற்படும்.

காது தன்னைத்தானே சுத்தப்படுத்திக்கொள்ளும் திறன் கொண்டது. அதற்காக காதுக்குள் ‘செரூமன்‘ என்னும் ஒருவகை திரவம் சுரக்கிறது. அந்த திரவம் காதை சுத்தப்படுத்தும். ஒரு சிலருக்கு ‘செரூமன்‘ திரவத்தால் அழுக்கு சேருவதுண்டு. அதனை அகற்ற மருத்துவரின் துணையோடு காதுக்குள் ஊசி மூலம் தண்ணீரை பீய்ச்சி அடித்து சுத்தம் செய்ய வழி இருக்கிறது.

‘ரூபெல்லா‘ எனும் வைரஸ் கிருமி பாதிப்பு ஏற்பட்ட கர்ப்பிணிகளுக்கு பிறக்கும் குழந்தைகளுக்கு காது கேட்காமல் போகும். அதற்காக முன்னெச்சரிக்கையாக வளர்இளம் பெண்களுக்கு ரூபெல்லா தடுப்பு ஊசி போடுவது நடைமுறையில் உள்ளது. இதனால் காது கேளாமை என்னும் பிறவிக்குறைபாட்டை தடுத்து விடலாம்.

அதிக சத்தமான இடி மற்றும் பட்டாசு வெடிப்பதை கேட்டால் காது சவ்வு கிழிந்து விடும். சில தொழிற்சாலைகளில் உள்ள எந்திரங்களில் இருந்து அதிக சத்தம் வரும். இதுபோன்ற அதிக சத்தத்தை தொடர்ந்து கேட்பதால் காதின் செவித்திறன் பாதிக்கப்படும். அதனால் அங்கு பணியாளர்கள் உள்பட அனைவரும் வருடம் ஒரு முறை செவித்திறன் குறித்த பரிசோதனை செய்து கொள்வது நல்லது.

அதேபோல் குழந்தைகள் விளையாட்டாக சிறு பொருட்களை காதுக்குள் போட்டுக்கொள்வார்கள். அதனை வெளியில் சொல்லவும் தெரியாது. அதுபோன்ற சமயத்தில் பெரியவர்கள் அதனை கண்டறிந்து டாக்டரிடம் சென்று அதற்கு உரிய முறையில் சிகிச்சை எடுத்து அதனை அகற்ற வேண்டும். கையில் கிடைத்த சிறு பொருட்களை கொண்டு காதை குடையக்கூடாது. அதிக நேரம் ஒரே காதில் வைத்து செல்போன் பேசக்கூடாது. இவ்வாறு காதுகள் விஷயத்தில் அக்கறை செலுத்தினால் காதுகளை பாதுகாக்கலாம்.

இவ்வாறு அவர் தெரிவித்தார். 

https://www.maalaimalar.com/Health/GeneralMedicine/2018/06/25130939/1172483/ear-problem.vpf

Link to comment
Share on other sites

கழுத்து, முதுகு, இடுப்புக்கு வலிமை தரும் புஜங்காசனம்

 
அ-அ+

இந்த ஆசனத்தை தொடர்ந்து செய்து வந்தால் கைகள், கழுத்து, மார்பு, வயிறு, அடிவயிறு, முதுகு, இடுப்பு வலிமையடையும். இந்த ஆசனம் செய்முறையை பார்க்கலாம்.

 
 
 
 
கழுத்து, முதுகு, இடுப்புக்கு வலிமை தரும் புஜங்காசனம்
 
பெயர் விளக்கம்: ‘புஜங்க்’ என்றால் பாம்பு என்று பொருள். பாம்பு படம் எடுத்து நிற்பது போல் இந்த ஆசனம் அமைந்துள்ளதால் புஜங்காசனம் என்று அழைக்கப்படுகிறது.

செய்முறை: கால்விரல்களையும், உள்ளங்கைகளையும், முழங்கால்களையும் ஆறாம் நிலையில் உள்ளபடியே வைத்துக் கொண்டு கைகளை நிமிர்த்தி மார்பை மேலே உயர்த்தவும். அதே சமயம் மூச்சை உள்ளுக்குள் இழுத்தபடி முதுகை வளைத்து தலையையும் முடிந்த அளவு பின்நோக்கி வளைக்கவும். கண்களால் புருவ நடுவை பார்க்கவும்.

மந்திரத்தைக் கூறி சக்கரத்தை நினைக்கவும்.

கவனம் செலுத்த வேண்டிய இடம்: அடி வயிறு மற்றும் தண்டுவடத்தின் மீதும், சுவாதிஷ்டான சக்கரத்தின் மீதும் கவனம் செலுத்தவும்..

பயிற்சிக்குறிப்பு: ஆரம்பத்தில் சிலருக்கு கழுத்து வலியும், கைகளில் நடுக்கமும் உண்டாகலாம். ஆனாலும் தொடர்ந்து செய்து வந்தால் இந்தக் குறைபாடுகள் நீங்கிவிடும்.

தடை குறிப்புகள்: வயிறு, குடல் புண், குடல் பிதுக்கம் உள்ளவர்கள் இந்த ஆசனத்தை செய்யக்கூடாது.

பயன்கள்: கைகள், கழுத்து, மார்பு, வயிறு, அடிவயிறு, முதுகு, இடுப்பு வலிமையடையும்.

https://www.maalaimalar.com/Health/Fitness/2018/06/27083213/1172838/bhujangasana.vpf

Link to comment
Share on other sites

ஆரோக்கியத்தை கெடுக்கும் இரைச்சல்

 
 அ-அ+

தொடர்ந்து 60 முதல் 70 டெசிபல் அளவுக்கு அதிகமான சத்தத்தைக் கேட்கும்போது, நமது செவிப்பறை கொஞ்சம்கொஞ்சமாகச் செயலிழக்கிறது.

 
 
 
 
ஆரோக்கியத்தை கெடுக்கும் இரைச்சல்
 
மக்கள் வசிக் கும் குடியிருப்பு பகுதிகளில் 50 முதல் 60 டெசிபல் சத்த அளவுதான் அனுமதிக்கப்பட்டு உள்ளது. ஆனால் நம் நகரங்களில் சராசரியாக 90 முதல் 95 டெசிபலும், திருமணம், அரசியல் கூட்டம், கோவில் திருவிழா நேரங்களில் 110 முதல் 120 டெசிபலும், தீபாவளி நேரத்தில் 130 முதல் 140 டெசிபல் வரையிலும் அதிகரிக்கும் இரைச்சல், நமக்கு ஏற்படுத்தும் தீய விளைவுகளை இனிமேலாவது புரிந்து கொள்ள வேண்டும்.

தொடர்ந்து 60 முதல் 70 டெசிபல் அளவுக்கு அதிகமான சத்தத்தைக் கேட்கும்போது, நமது செவிப்பறை கொஞ்சம்கொஞ்சமாகச் செயலிழக்கிறது. இதனால் நம் மூளைக்கு கொண்டு செல்லப்படும் ஒலியின் வேகமும், தொனியும் குறைவதால், அதற்கு மறுமொழி சொல்லும் நம் குரலின் தொனியின் அளவும் அதிகமாகிறது. இதனால்தான், அதிக சத்தம் உள்ள இடங்களில் பேசும் மனிதர்கள், தேவையைவிட அதிக சத்தமாக பேசுவது அனிச்சையாக நடைபெறுகிறது.

நமது இருதயத்தில் இருந்து உடலெங்கும் ரத்தத்தை எடுத்துச் செல்லும் தமனிகள் என்ற மெல்லிய நரம்புகள் அதிக சத்தம் மூலம் தளர்வடைந்து விரிகின்றன. இந்த தளர்ச்சி இருதயத்தின் வேலைகளை கடினமாக்கி, நாளடைவில் அதன் செயல்திறனை பாதிக்கிறது. இருதயம் பழுதடைவதால், அதைச் சார்ந்துள்ள நுரையீரல், மூளை, சிறுநீரகம் ஆகிய முக்கிய உறுப்புகள் அனைத்துக்கும் மறைமுகமாக கேடு ஏற்படுவதை சமீபத்திய ஆய்வுகள் உறுதி செய்கின்றன.

201806280819291490_1_Noise-is-bad-for-hestyle=

லொபார்டி என்ற பெயரில் இந்த ஆய்வு நடத்தப்பட்டது. ஒலி மாசுபாட்டால் உயர் ரத்தஅழுத்தம், படபடப்பு, காது கேட்கும் தன்மை குறைவது போன்ற எல்லோரும் அறிந்த உடனடி பாதிப்புகள் மட்டுமில்லாமல் இன்சோம்னியா என்ற தூக்கமின்மை, குடல் அழற்சி, சிறுநீரகக் கோளாறுகள் போன்ற நீண்ட கால உடல் உபாதைகளும் நமக்கு ஏற்படலாம்.

நாட்டிலேயே அதிக சத்தம் உள்ள நகரம் என்று முன்பு கருதப்பட்ட மும்பை இப்போது மாறியிருக்கிறது. கடந்த 3 வருடங்களாக அங்கு கடைபிடிக்கப்படும் ஒலி மாசு கட்டுப்பாடுகள் தினசரி ஒலி அளவை மட்டுமின்றி, இரைச்சல் மிகுந்த விநாயகர் சதுர்த்தி விழா, தாண்டியா என்ற கோலாட்ட விழா ஆகியவற்றின் சத்த அளவுகளையும் குறைத்திருக்கிறது. 5 வருட சிறைவாசம் அல்லது ஒரு லட்சம் ரூபாய் அபராதம் அல்லது இரண்டும் என்ற அளவுக்கு ஒலி மாசுக்கு எதிரான சட்டங்கள் அங்கு உள்ளன. இதே நடைமுறைகள் தமிழகத்துக்கு என்றைக்கு வருமோ?

https://www.maalaimalar.com/Health/GeneralMedicine/2018/06/28081929/1173084/Noise-is-bad-for-health.vpf

Link to comment
Share on other sites

வலிகளைத் தவிர்க்க காலணிகளில் கவனம் செலுத்துங்கள்!

 

பாதங்கள்தான் ஒட்டுமொத்த உடலையும் தாங்கும் அஸ்திவாரம்.  பாதங்களில் பிரச்னை வந்தால் உடல் ஆட்டம் கண்டுவிடும். நிற்கவோ, நடக்கவோ முடியாமல் ஒரே இடத்தில் முடங்கி விடுவோம்.  பாதங்களில் பாதிப்பு ஏற்பட நாம் அணியும் காலணிகளும்கூடக் காரணமாக இருக்கலாம் என்கிறார்கள் மருத்துவர்கள். ‘‘பொருத்தமற்ற காலணிகளை அணிவதால், கால்கள் மட்டுமல்லாமல் பாதங்களில் உள்ள நரம்புகளும் பாதிக்கப்படும். முக்கியமாக முதுகுவலிப் பிரச்னைக்கும் வழிவகுக்கும்’’ என்கிறார் நியூரோ பிசியோதெரபிஸ்ட் ஃபமிதா.  விரிவாகப் பார்ப்போம்.

46p1_1530178733.jpg

சியாட்டிகா (Sciatica)

சியாட்டிகா என்பது ஒருவித அடிப்புற இடுப்புவலி. குதிகால் உயர்ந்த காலணிகளை அணிவதே இதற்கு முக்கியக் காரணம். இந்தப் பிரச்னை  பாதம் முதல் தொடை, இடுப்பு மற்றும் பின்புறம் வரைக் கடுமையான வலியை ஏற்படுத்தும்; கால்கள் மரத்துப்போகும். நடக்கும் போதும் குனியும்போதும் வலி அதிகமாக உணரப்படும்.

தட்டைப்பாதங்கள் (Flat Feet)46p3_1530178768.jpg

முன் பாதத்துக்கும் குதிகாலுக்கும் இடையே ‘ஆர்ச்’ (Arch) போன்ற இடைவெளி இல்லாமல் தட்டையாக இருப்பதைத் `தட்டைப் பாதம்’ என்பார்கள். இது பெரும்பாலும், குழந்தைப் பருவத்திலேயே ஏற்படுகிறது. அதற்கேற்ப ஷூ அணியாவிட்டால் சிலருக்குப் பாதத்தின் `ஆர்ச்’ பகுதியிலும் குதிகால்களிலும் வலி ஏற்படும். நாளடைவில் நிற்பது, நடப்பது போன்ற நிலைகளிலும் மாற்றம்  ஏற்பட்டு, அது கால் மூட்டு, இடுப்பு, பின்புறப்பகுதி, முதுகு ஆகியவற்றிலும் வலியை உண்டாக்கும். பாதங்களின் `ஆர்ச்’ எப்படி இருக்கிறதோ அதற்கேற்ற காலணிகளை அணிய வேண்டும்.

குதிகால் வலி (Achilles Tendinopathy)

குதித்து விளையாடும் வகையிலான செயல்பாடுகளால் சிலருக்குக் குதிகால் மற்றும் கெண்டைக்கால் தசையில் வலி, வீக்கம், கணுக்காலில் தசை இறுக்கம் உண்டாகும்.  பெரும்பாலும் நடனக்கலைஞர்கள், டென்னிஸ் விளையாட்டு வீரர்களுக்கு இந்த வகைப் பிரச்னைகள் ஏற்பட்டாலும், பொருத்தமற்ற காலணிகளை அணிவதே முக்கியக் காரணமாகும். வலியை உணர்பவர்கள் குதிகால்களுக்கு அழுத்தம் கொடுக்கும் செயல்பாட்டினை நிறுத்த வேண்டும். கால்களுக்கு ஓய்வு கொடுக்க வேண்டும். மருத்துவரின் ஆலோசனைப்படி வலிநிவாரண மருந்துகளை எடுத்துக்கொண்டு நிவாரணம் பெறலாம்.

46p2_1530178792.jpg

பி.டி.டி.டி என்னும் ‘போஸ்டீரியர் டிபியல் டெண்டன் டிஸ்ஃபங்ஷன்’ (Posterior Tibial Tendon Dysfunction)

கடினமான உடற்பயிற்சி மேற்கொள்வது, விளையாட்டுகளால் பாதங்களில் காயம் ஏற்படுவது, தட்டைப்பாதங்கள் இருப்பது போன்றவை பி.டி.டி.டி என்னும் பிரச்னைக்கு வழிவகுக்கும். இத்தகைய சூழலில் கால்களை அசைக்க முடியாது. ஆரம்பத்தில் பாதத்தில் வலி, சிவந்துபோதல், வீக்கம் காணப்பட்டுக் கடைசியில் அது தட்டைப்பாதமாக மாறிவிடும். இதை ஆரம்பத்திலேயே கண்டறிந்தால் மாத்திரை, மருந்துகள், சிலவகை தெரபி மற்றும் பாதங்களின் `ஆர்ச்’சுக்கேற்ற காலணிகளை அணிவதன்மூலம் தீர்வு காணலாம். இப்பிரச்னை தொடர்ந்தால், அறுவைசிகிச்சை செய்ய வேண்டியிருக்கும்.

காலணிகள் தேர்வில் கவனம் இருக்கட்டும்

* காலணிகளின் உள்பகுதி பஞ்சு போன்று மிருதுவாக இருக்க வேண்டும். அதிக எடையும் அழுத்தமும் இல்லாமல் இருக்க வேண்டும்.

* இரண்டு அங்குலத்துக்கு மேல் அதிக உயரமுள்ள காலணிகளை (ஹை ஹீல்ஸ்) அணியக் கூடாது.

* குறுகலான அளவுள்ள (Narrow Shoes) ஷூக்களை அணியக்கூடாது.

* தரையில் வழுக்காத  செருப்புகளையே பயன்படுத்த வேண்டும்.

* தோல் செருப்புகளும் ஷூக்களுமே சிறந்தவை.  பிளாஸ்டிக் செருப்புகளைத் தவிர்க்க வேண்டும்.

* சர்க்கரைநோய் இருந்தால் மருத்துவரின் ஆலோசனைப்படி காலணிகளைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.

- ஜி.லட்சுமணன்

https://www.vikatan.com

Link to comment
Share on other sites

இருதயத்தினை பாதுகாப்பதற்கான எளிய வழிமுறைகள்

 
அ-அ+

இருதய பாதிப்பு என்பது இருதயம் வேலை செய்ய வேண்டிய அளவு வேலை செய்யாமல் இருப்பதாகும். உயர் ரத்த அழுத்தம், அதிக எடை இரண்டுமே இருதயத்திற்கு சுமைதான்.

 
 
 
 
இருதயத்தினை பாதுகாப்பதற்கான எளிய வழிமுறைகள்
 
இருதய பாதிப்பு என்பது இருதயம் வேலை செய்ய வேண்டிய அளவு வேலை செய்யாமல் இருப்பதாகும். மருந்தின் உதவியோடு அதனை வேலை செய்ய வைக்க முடியும் என்பது மருத்துவ முன்னேற்றம். சிறுநீரகங்களுக்கு தேவையான அளவு ரத்தம் கிடைக்காத பொழுது சிறுநீரகங்கள் உப்பு, நீர் இவற்றினைத் தேங்க வைத்து விடுகின்றன.

இந்த அதிக நீர் கணுக்கால், பாதம், கால் சில சமயம் வயிறு பகுதிகளில் வீக்கத்தினை ஏற்படுத்தி விடுகின்றன. இதனால் திடீரென எடையும் கூடலாம். இந்த நீர் தேக்கம் மூச்சுத் திணறலினை உருவாக்கலாம். இது நீண்ட கால தொடர் மருத்துவம் தேவைப்படும் பாதிப்பு. மருத்துவம் இருக்கும் பாதிப்பினை மேலும் அதிகமாகாமல் கட்டுப்படுத்தும். மருத்துவத்துடன் உணவு முறை, வாழ்க்கை முறை இவற்றினை மாற்றிக் கொள்ளும் பொழுது நல்ல பலன் கிடைக்கின்றது.
உயர் ரத்த அழுத்தம், அதிக எடை இரண்டுமே இருதயத்திற்கு சுமைதான். ஆகவே

* உங்கள் எடையினை அடிக்கடி சோதித்துக் கொள்ளுங்கள்.
* நீங்கள் எடுத்துக் கொள்ளும் தண்ணீர், டீ, காபி, மோர், ஜூஸ் என எந்த திரவ உணவாயின் அளவினை கணக்கில் கொள்ளுங்கள்.
* ரத்தக் கொதிப்பினை நல்ல கட்டுப்பாட்டில் கொண்டு வாருங்கள்.
* உப்பின் அளவினை குறைத்துக் கொள்ளுங்கள்.
* மது வேண்டாமே

* புகை பழக்கம் இருந்தால் உடனடியாக நிறுத்தி விட வேண்டும்.
* தினமும் சுறுசுறுப்பாய் இருங்கள்.
* மருந்து எடுத்துக் கொள்வது நல்ல பலனை அளிக்கும்.
* இருதய வால்வினால் நோய் பாதிப்பு ஏற்பட்டிருந்தால் அறுவை சிகிச்சை தேவைபடலாம்.

* மாரடைப்பு, உயர் ரத்த அழுத்தம், இருதய வால்வு பிரச்சினை இவைகள் இருதய பாதிப்பிற்கு பொதுவான காரணங்கள்.
* வாழ்க்கையே போய் விட்டது போல் கருத வேண்டாம். சிறிது கவனம் உங்கள் வாழ்வை நன்றாக வைக்கும். அதிக வெய்யில், அதிக குளிர் காலங்களில் வெளியில் செல்ல வேண்டாம்.
நீண்ட நேரம் வேலை செய்யாமல் நேரத்தினை குறைத்துக் கொள்ளுங்கள்.

இருதயத்தினை பாதுகாப்பதற்கான டிப்ஸ்:

* அவ்வப்போது இருதயத்திற்கும் சற்று வேக தூண்டுதல் நல்லதே. நல்ல புத்தகம், பாசமானவர்களுடன் இருத்தல், இவை இருதயத்தினை சற்று சுறுசுறுப்பாக இருக்கச் செய்யும்.

* வெய்யில் காலத்தில் அதிக தூசு இருக்கும் நேரங்களில் வெட்ட வெளியில் உடற் பயிற்சி செய்யக் கூடாது. இது உங்களுக்கு கிடைக்கும் ஆக்ஸிஜன் அளவினைக் குறைத்து இருதய பிரச்சினைகளை கூட்டி விடும்.

* புகை பிடிக்கவும் வேண்டாம். புகை பிடிப்போர் அருகில் இருக்கவும் வேண்டாம்.

201807030818423537_1_Heart-care-tips._L_styvpf.jpg

* நீச்சல் போன்ற பயிற்சியினை ஆரம்ப காலத்தில் இருந்தே பழகி விடுவது நல்லது. இது 60 சதவிகிதம் இருதய பாதிப்பு ஏற்படுவதினைக் குறைத்து விடுகின்றதாம்.
* மனஉளைச்சல் ஒன்றே போதும். உங்கள் இருதயத்தினை அதிக பாதிப்பிற்கு உள்ளாக்க. ஆக முனைந்து கவலைகளை அடித்து துரத்தி விடுங்கள்.
* அன்றாடம் 20 நிமிட தியானம் அவசியம் என்று வலியுறுத்தாத மருத்துவர்கள் உலகில் இல்லை எனலாம்.

* punching bag ஒரு தலையணையாவது வைத்துக் கொள்ளுங்கள். கோபம் ஏற்பட்டால் அதனை வலுவாக boxing போல் குத்துங்கள். ஏனெனில் கோபம் உங்களுள் இருந்தால் உங்களை பாதிக்கும். வெளி வந்தால் மற்றவரை பாதிக்கும்.

* உங்கள் மருத்துவரிடம் உங்களுக்கு ஆஸ்பிரீன் மாத்திரை அவசியமா என கேட்டறியுங்கள். உங்கள் வயது, உடல் நலம், வேலை பளு இவற்றுக்கேற்ப அவரே உங்களுக்கு சரியான அளவினை தேவையெனின் பரிந்துரை செய்வார்.

* காலை உணவினை தவறாது உண்பவர்களுக்கு 44 சதவிகிதம் இருதய பாதிப்பின் அபாயம் குறைந்தே இருப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன. அது மட்டுமா? 41 சதவிகித சர்க்கரை நோய் பாதிப்பும் குறைவதாக ஆய்வுகள் கூறுகின்றன.

* பி வைட்டமின் சத்துக்கள் குறிப்பாக பபோலிக் ஆசிட் சத்து மாத்திரையாக எடுத்துக் கொள்வது இருதய நோய் பாதிப்பினை குறைத்து விடுகின்றதாம்.

* 5000 அடிகள் வீதம் தினம் நடப்பவருக்கு உயர் ரத்த அழுத்த அபாயம் வெகுவாய் குறைகின்றது.

* முழு தானியம், காய்கறி சாலட் இவை மாபெரும் உதவியாய் இருதய நோயிலிருந்து மனிதனை காக்கின்றது.

* டீ குடிக்க ஆய்வுகள் பரிந்துரைக்கின்றன. அதிலும் கிரீன் டீ, லெமன் டீ, கறுப்பு டீ இவற்றினை நல்லது என்கின்றனர். இதிலுள்ள ப்ளேவனாய்ட் ரத்த நாளங்கள் உறுதியாய் வைப்பதுடன் ரத்தத்தினையும் இறுகாமல் வைக்கின்றது. இதனால் சிறு ரத்த கட்டிகள் உருவாகி அடைப்புகள் ஏற்படுவது வெகுவாய் தடுக்கப்படுகின்றது.

* காபி இருதய பாதிப்பு உருவாகும் நிலையில் இருப்பவர்களுக்கு கூடுதல் பாதிப்பினை ஏற்படுத்தலாம்.
* அடர்ந்த சாக்லேட் ஓரிரு துண்டுகள் தினமும் சாப்பிடலாம்.
* அதிக சோடியம் அதாவது உப்பினை தவிர்ப்பது இருதய பாதிப்பினை வெகுவாய் குறைக்கின்றது.
* குடும்ப உறவுகளுடன் தினமும் சிறிது நேரம் பேசுங்கள். நேரம் செலவழியுங்கள்.

* ஓமேகா-3, இதனைப் பற்றி உங்கள் மருத்துவர் ஆலோசனைப் பெற்று எடுத்துக் கொள்ளுங்கள். 

https://www.maalaimalar.com/Health/GeneralMedicine/2018/07/03081842/1174056/Heart-care-tips.vpf

 

 

கர்ப்பிணிகளுக்கு மார்பக வலி ஏற்பட என்ன காரணம்?

 
அ-அ+

கர்ப்பக் காலத்தில் உண்டாகும் சில ஹார்மோன் மாற்றங்கள் பெண்களின் மார்பக வடிவத்தில் இருந்து, அதன் தன்மை வரை பல மாற்றங்களை ஏற்படுத்துகிறது.

 
 
 
 
கர்ப்பிணிகளுக்கு மார்பக வலி ஏற்பட என்ன காரணம்?
 
கர்ப்பக் காலத்தில் பெண்களுக்கு உடல் மற்றும் மனம் ரீதியாக பல்வேறு மாற்றங்கள் ஏற்படுவது இயற்கை. எனினும், ஹார்மோன்களினால் ஏற்படும் மாற்றங்கள் வித்தியாசமாக இருக்கும்.

இந்த மாற்றங்களில் முக்கியம் வாய்ந்ததாக கருதக்கூடியது செரிமானம், குடல் இயக்கங்களிலும் மார்பக பகுதிகளிலும் மாற்றங்கள் அதிகமாக காணப்படும்.

கர்ப்பக் காலத்தில் உண்டாகும் சில ஹார்மோன் மாற்றங்கள் பெண்களின் மார்பக வடிவத்தில் இருந்து, அதன் தன்மை வரை பல மாற்றங்களை ஏற்படுத்துகிறது.

கர்ப்பிணிகளின் உடலில் கர்ப்பம் சார்ந்த ஹார்மோன் அதிகரிப்பதால், வேறு சில சுரப்பிகளும் அதிகரிக்கும். இந்த சுரப்பிகள் அவர்களின் மார்பகத்தின் அளவை பெரியதாக்குகிறது. இதனால் கர்ப்பக் காலத்தில் பெண்கள் தங்களது மார்பகங்களை சற்று பாரமாக உணர்வார்கள்.

கருவுற்று இருக்கும் பெண்களுக்கு மார்பக பகுதியில் ரத்த ஓட்டம் அதிகமாக இருக்கும். எனவே ஹார்மோன்கள் மாற்றம் அடைந்து திசுக்கள் உப்பியது போல இருப்பதால், அவர்களின் மார்பகம் பாரமாக இருப்பதுடன் கொஞ்சம் வலி மிகுந்ததாகவும் உணர்கிறார்கள்.

மேலும் கர்ப்பிணி பெண்களின் மார்பக பகுதியில் நீல நிறத்தில் நரம்புகள் வெளிப்படையாக தெரியும். இதற்கு காரணமும் மார்பகத்தில் ஏற்படும் அதிகப்படியான ரத்த ஓட்டம் தான். அதற்காக பயப்பட தேவையில்லை என மகப்பேறு நிபுணர்கள் கூறுகின்றனர்

https://www.maalaimalar.com/Health/WomenMedicine/2018/07/02123333/1173873/pregnancy-problem-breast-pain.vpf

 

 

கெட்ட கொலஸ்ட்ராலை தடுக்கும் மீன் எண்ணெய்

 
அ-அ+

மீன் எண்ணெயில் நிறைய நல்ல கொலஸ்ட்ரால் இருக்கிறது. மற்ற எண்ணெய்களை விட, மீன் எண்ணெயை சாப்பிட்டால், உடலில் கெட்ட கொலஸ்ட்ரால் தேங்காமல் இருக்கும்.

 
 
 
 
கெட்ட கொலஸ்ட்ராலை தடுக்கும் மீன் எண்ணெய்
 
உடல் ஆரோக்கியத்திலேயே மிகவும் சிறந்த உணவுப் பொருள் என்று சொன்னால், அது மீன் எண்ணெய் தான் என்று சுகாதார நிபுணர்கள் கூறுகின்றனர்.

மீன் எண்ணெயில் நிறைய நல்ல கொலஸ்ட்ரால் இருக்கிறது. மற்ற எண்ணெய்களை விட, மீன் எண்ணெயை சாப்பிட்டால், உடலில் கெட்ட கொலஸ்ட்ரால் தேங்காமல் இருக்கும். நிறைய மக்களுக்கு இந்த எண்ணெய் பற்றிய சரியான உண்மைகள் மற்றும் பலன்களைப் பற்றி அதிகம் தெரியாது.

மீன் எண்ணெய் என்றால் என்ன?

இந்த எண்ணெய் மீனிலிருந்து எடுக்கப்படுகிறது. அதுவும் அதிகமான அளவு கொழுப்புக்கள் உள்ள மீனிலிருந்து மட்டும் தான் எடுக்க முடியும் என்பதில்லை.

இந்த எண்ணெய் பெரியதாக இருக்கும் மீனான திமிங்கலம் போன்றவற்றிலிருந்து எடுக்கப்படும். இத்தகைய மீனை சமைத்து சாப்பிடமாட்டாமல். இதில் இருந்து தான் வைட்டமின் மாத்திரைகள் தயாரிக்கப்படுகின்றன.

இதனை சாப்பிடுவதால், இரத்தத்தில் இருக்கும் கொலஸ்ட்ராலின் அளவை ஸ்கேன் செய்யும். அதிலும் சிலசமயம் இரத்தத்தில் ட்ரைகிளிசரைடு என்னும் கொலஸ்ட்ரால் இருந்தால், அது இதயத்திற்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். ஆகவே இதை சாப்பிட்டால், இதில் உள்ள ஒமேகா ஃபேட்டி ஆசிட் அந்த ட்ரைகிளிசரைடை குறைத்துவிடும்.

201807021411026674_1_cholesterol._L_styvpf.jpg

எண்ணெய்களை குடித்தால், குண்டாவார்கள் என்று தான் தெரியும். ஆனால் இந்த எண்ணெயை சமையலில் பயன்படுத்தினால், உடல் அதிக எடை போடாமல் பார்த்துக் கொள்ளும்.

இந்த எண்ணெயை சாப்பிட்டால், மனம் சற்று ரிலாக்ஸ் ஆக இருக்கும். ஏனெனில் இதில் உள்ள EPA என்னும் நோய் எதிர்ப்புப் பொருள், மூளையை நன்கு சுறுசுறுப்போடு, எந்த ஒரு மன அழுத்தமும் ஏற்படாமல் பார்த்துக் கொள்ளும்.

இந்த எண்ணெயில் உள்ள EPA, உடலில் ஏற்படும் மூட்டு வலிகளை சரிசெய்யும். மேலும் பெண்களுக்கு உடலில் கால்சியம் குறைபாட்டால் ஏற்படும் வலிகளை குறைக்கும். பெண்களின் இடுப்பு எலும்புகள் நன்கு வலுவடையும்.

ஆஸ்துமாவால் பாதிக்கப்பட்டவர்கள் இந்த எண்ணெயை சாப்பிட்டால், எந்த ஒரு சுவாசக் கோளாறு பிரச்சனையும் ஏற்படாது. இந்த எண்ணெயில் ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட் இருப்பதால், புற்றுநோயை எதிர்த்துப் போராடும் தன்மை கொண்டது.

முக்கியமாக இந்த எண்ணெயை கர்ப்பமாக இருக்கும் பெண்கள் சாப்பிட்டால், வயிற்றில் உள்ள குழந்தைக்கு கண்பார்வை நன்கு தெரிவதோடு, மூளை வளர்ச்சியும் நன்கு இருக்கும்.

மேற்கூறியவாறு உடலுக்கு மட்டும் ஆரோக்கியத்தை தருவதோடு, சருமம் நன்கு மென்மையாக அழகாக பொலிவோடு இருப்பதோடு, கூந்தலும் பட்டுப் போன்று இருக்கும்.

https://www.maalaimalar.com/Health/GeneralMedicine/2018/07/02141102/1173901/Fish-oils-that-prevent-bad-cholesterol.vpf

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அப்ப வருசக் கணக்கா தமிழர்களை.. தமிழர் வழிபாட்டிடங்களை திட்டித் தீர்த்து ஆக்கிரமிக்கத் தூண்டியதற்கு ஏன் தண்டனை இல்லை..??! அதுக்கும் தண்டனை வழங்கினால்.. ஆள் ஆயுள் காலம் பூரா உள்ள தான்.  அதே நிலையில்.. விமல்.. வீரசேகர..கம்பன்பில.. போன்ற வில்லங்கங்களுக்கு எதிராக ஏன் இன்னும் சட்ட நடவடிக்கை இல்லை. தமிழர்களை.. இந்துக்களை (சைவர்களை) திட்டினால்.. சமாளிச்சுக் கொண்டு போவது எழுதாத சட்டமோ. 
    • இது தான் சொறீலங்கா கடற்படை ஆக்கிரமிப்பில் இருக்கும்.. காங்கேசந்துறை நோக்கிய கடற்கரை. அண்ணர் ஆலாபனையோடு சொன்னது.  இது தான் கடலட்டை வாடிகளோடு அமைந்த.. அழுகி நாறும் பண்ணைக் கடற்கரை நோக்கிய தோற்றம். குத்தியரின் சீன ஏற்றுமதி வருவாய். அண்ணர் இதனை பற்றி மூச்சும் விடேல்ல.. ஆனால் பண்ணைக் கடற்கரை காதல் காட்சிகளை மட்டும் வர்ணிச்சிட்டு போயிட்டார். இது தான் கொழும்பின் தாமரைத் தடாகம் இரவுக் காட்சி. அண்ணர் சொன்ன மாதிரி தடாகம் ஒளிந்தாலும் சுற்றயல் ஒளிரவில்லை. இன்னும் பல பகுதி காலு வீதியில் இரவில் வீதி விளக்குகள் எரிவதில்லை.  அதே நேரம் யாழ்ப்பாண நெடுந்தூர பயணிகள் பேரூந்து தரிப்பிடத்திற்கு அருகில் உள்ள புல்லுக் குளத்தின் இரவுக் காட்சி. சுற்றயல் எங்கும் ஒளிரோ ஒளிரெண்டு ஒளிருது. யாழ் மணிக்கூட்டுக் கோபுரமும் தான். அண்ணர் அதை பற்றி மூச்.  ஆக அவை அவை பார்க்கிற பார்வையில தான் இங்கு களத்தில் இருந்தான காட்சிகளுக்கு ஆலாபனைகள் வருகின்றன. 
    • நீங்கள், அரச இரகசியங்களை கசிய விடுவதால்.... நாலாம் மாடியில் வைத்து,  கசையடி விழ வாய்ப்புகள் உண்டு. 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.