Jump to content

நலம் நல்லது!


Recommended Posts

முளைகட்டிய பச்சைப்பயறு, கம்பு, கொள்ளு, எள்... எளிய பயறுகள், ஏராளமான நன்மைகள்!

ம் பாரம்பர்யம் சுட்டிக்காட்டிய ஆரோக்கிய உணவு வகைகளில் முக்கியமானவை முளைகட்டிய பயறுகள். இன்றைய மாடர்ன் உலகிலும் அனிதா பாலமுரளிஆரோக்கிய விரும்பிகள் இவற்றைத் தேடிச் சென்று வாங்குகிறார்கள். `சாதாரண பயறுகளைவிட முளைவிட்ட பயறுகள் அப்படி என்ன ஸ்பெஷல்?’ இந்த ஒற்றைக் கேள்வியைக் கேட்டால், அதிலிருக்கும் சத்துக்கள், கிடைக்கும் பலன்கள், அவற்றை எப்படிச் சாப்பிட வேண்டும் என ஒரு பட்டியலையே தருகிறார் டயட்டீஷியன் அனிதா பாலமுரளி... 

உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள நாம் தினசரி எடுத்துக்கொள்ளும் உணவுகள் விதவிதமானவை. அவற்றில், எப்போதும் முதல் இடம் முளைகட்டிய பயறுகளுக்கே! விளையாட்டு வீரர்கள், குழந்தைகள் தொடங்கி பெரியவர்கள் வரை என அனைவரும் சாப்பிட ஏற்ற அற்புதமான உணவுப் பொருள் இது. சாதாரணப் பயறுகளைவிட இவற்றில் ஊட்டச்சத்துகள் அதிகம். வைட்டமின் ஏ, சி, பி மற்றும் கே புரோட்டீன்கள், நியாசின், தயாமின், அதிக அளவு ஆன்டிஆக்ஸிடன்ட்கள், ஒமேகா அமிலம், இரும்புச்சத்து, ஜிங்க் போன்ற சத்துக்கள் நிறைந்து உள்ளன.

பலன்கள்:

* முளைகட்டிய பயறுகள் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து, உடலுக்குத் தேவையான எனர்ஜியைத் தருபவை. உடல் எடையைக் குறைக்கவும் உதவும்.

* வைட்டமின் ஏ நிறைந்திருக்கிறது. கண்களுக்கு குளிர்ச்சி தருகிறது; பார்வைத் திறனை மேம்படுத்தும்.

* இவற்றில் ஒமேகா அமிலம் அதிகமாக இருப்பதால், முடி வளர்ச்சிக்கும் உதவுகின்றன.

* அதிக அளவில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் இருப்பதால், ஹார்மோன்கள் சீராகச் சுரக்க வழிவகுக்கின்றன. புற்றுநோயை எதிர்க்கும் ஆற்றலைத் தருகின்றன..

* முளைகட்டிய பயறுகளில் உள்ள வைட்டமின் பி, மென்மையான சருமத்தைத் தருகிறது. தோல் புற்றுநோயைத் தடுக்கும். சருமம் புத்துணர்வு பெற உதவும்..  

* இவற்றில் இருக்கும் சிலிக்கா நியூட்ரியன்கள் (Silica Nutrients), சருமத்தில் ஏற்படும் செல் இழப்பைத் தடுத்து, செல் பாதிப்பைத் தடுத்து, செல் மறுசீரமைப்புக்குத் துணைபுரிகிறது. 

* அதிகப்படியான ஆன்டிஆக்ஸிடன்ட் இவற்றில் உள்ளதால், நம் உடலில் ஏற்படும் டிஎன்ஏ மாற்றத்தை கட்டுப்படுத்துகிறது. பெண்கள் சிறுவயதிலேயே பூப்பெய்துதலைத் தடுக்கிறது. 

* இவற்றில் உள்ள பொட்டாசியம் உடலில் ரத்த ஓட்டம் சீராக உதவுகிறது; ரத்த விருத்திக்கும் உதவுகிறது. உயர் ரத்த அழுத்தம் மற்றும் இதயத்தில் ரத்தக்குழாய் அடைப்பு ஏற்படுவது போன்றவற்றைத் தடுக்கிறது. `அனீமியா’ என்னும் ரத்தசோகை நோயைத் தடுக்கிறது. உடலின் நரம்பு மண்டலத்தைக் கட்டுப்படுத்தி, நடுக்கத்தைச் சரிசெய்கிறது.

ரத்த சோகையை சரிசெய்யும்

முளைகட்டிய பச்சைப்பயறு

முளைகட்டிய பச்சைப்பயறை நீர் சேர்த்து அரைத்து, அதில் வெல்லம், தேன், தேங்காய்த் துருவல், உலர் திராட்சை சேர்த்து காலை டிபனாகச் சாப்பிடலாம். இதில் கிடைக்கும் பலன்கள்...

* அதிகப் புரதச்சத்து இருப்பதால், வளரும் குழந்தைகளுக்கு நல்ல ஊட்டச்சத்தைக் கொடுக்கும். அல்சரைக் கட்டுப்படுத்தும். சருமப் பளபளப்புக்கு உதவும். நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.

முளைகட்டிய வெந்தயம்

சர்க்கரையின் அளவு அதிகம் உள்ள சர்க்கரை நோயாளிகள், தினமும் இதை ஒரு கப் சாப்பிட்டு வர, சர்க்கரையின் அளவு கட்டுப்படும். வயிற்றுப்புண், பெண்களின் கர்ப்பப்பை தொடர்பான நோய்கள், வெள்ளைப்படுதல் மற்றும் அல்சரை குணப்படுத்தும்.

முளைகட்டிய பயறு

முளைகட்டிய கொள்ளு

இது, உடல் உஷ்ணம், தொப்பை, உடல்பருமனை குறைக்கிறது. 

முளைகட்டிய எள், வேர்க்கடலை

மெலிந்த உடல் இருப்பவர்கள் தினமும் 100 கிராம் முளைகட்டிய எள், வேர்க்கடலை சாப்பிட்டு வர, உடல் எடை கூடும்; உடல் வலுப்பெறும். அதிகப் பசியை போக்கி, உடலுக்கு ஊட்டத்தைத் தரும். அதிக உடல் உழைப்பு உள்ளவர்கள் மற்றும் குழந்தைகள் இதை எடுத்துக்கொள்வது நல்லது.

முளைகட்டிய கம்பு

கப்பை எட்டு மணி நேரம் ஊறவைத்து ஈரத்துணியில் கட்டி முளைகட்ட வைக்கலாம். அப்படியே பச்சையாகவும் சாப்பிடலாம். அரைத்துப் பாலாகவும், கூழாகவும், கஞ்சியாகவும் சாப்பிடலாம். இது, உடலுக்கு பலம் கூட்டும். ஊட்டச்சத்துக் குறைபாடு உள்ளவர்கள் தினமும் சாப்பிட்டு வர உடல் உறுதியாகும்.

சில முக்கியக் குறிப்புகள்...

* இவற்றை வேகவைத்து சாப்பிடக் கூடாது. எண்ணெயில் பொரித்துச் சாப்பிடக் கூடாது.

* முளைகட்டிய பயறைச் சாப்பிட்ட பிறகு, உடலுக்கு வேலை கொடுக்க வேண்டும். ஏனென்றால், இவை செரிமானம் ஆவதற்கு அதிக நேரம் எடுத்துக்கொள்ளும். உணவு, செரிமானம் ஆகாமல் இருக்கும்போது வயிற்றில் அமிலத்தன்மை அதிகமாகச் சுரப்பதால் அல்சர் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம்.

* வயது முதிர்ந்தவர்கள் முளைகட்டிய பயறுகளை அதிகமாகச் சாப்பிடாமல் இருப்பது நல்லது. 

http://www.vikatan.com/news/health/86434-amazing-benefits-and-uses-of-sprouts-for-skin-hair-and-health.html

Link to comment
Share on other sites

  • Replies 475
  • Created
  • Last Reply

வெரிகோஸ் வெயின் பிரச்சினைக்குரிய தீர்வு

 

 

எம்முடைய இளைய தலைமுறையினர் தற்போது அலுவலகமோ அல்லது வீடோ வேலை செய்யும் போது நீண்ட நேரம் அமர்ந்தபடியே பணியாற்றுகிறார்கள் அல்லது நீண்ட நேரம் நின்ற படியே வேலை செய்கிறார்கள். இதன் காரணமாக ஒரு சிலருக்கு கால்களில் கறுப்பு புள்ளிகள் அல்லது கால் நரம்புகளில் முடிச்சுகள் தோன்றுகின்றன. மாதவிடாய் நின்றுவிடும் காலகட்டங்களில் பெரும்பாலான பெண்கள் இத்தகைய பாதிப்புக்கு ஆளாகிறார்கள்.

health_news_image_124.jpg

ஒரே இடத்தில் நீண்ட நேரம் நிற்பவர்களுக்கு, இரத்த ஓட்டம் சீராக நடைபெறாததே இதற்கு காரணம். கால் நரம்புகளில் முடிச்சுகள் ஏற்படுவதற்கு ஒரு சிலருக்கு மரபியல் காரணங்களாலும் வரக்கூடும். பலரும் நினைப்பது போல, இது உயிருக்கு ஆபத்தான நோய் அல்ல. ஆனால் உரிய முறையில் சிகிச்சை எடுக்காமல் தொடர்ந்து அலட்சியப்படுத்தினால் .1 சதவீதத்தினருக்கு இவை புற்றுநோயாக மாறக்கூடும். 

ஒரு சிலருக்கு காலில் கறுப்பு கறுப்பாக புள்ளிகள் தோன்றலாம் அல்லது இரத்தக் கசிவு ஏற்படலாம். இதுபோன்ற சமயங்களில் கால்களை தரையில் படாமல், உயர தூக்கி வைத்திருந்தால் இரத்தக் கசிவு நின்றுவிடும். 

இந்நிலையில் இத்தகைய வெரிகோஸிஸ் வெயின் பிரச்சினை, காரணமே இல்லாமலும், காரணங்களுடன் என இருவகைகளிலும் வரக்கூடும். இதற்குரிய சோதனைகள் மேற்கொள்வதன் மூலம் உரிய சிகிச்சையையோ, பராமரிப்புடன் கூடிய நிவாரணத்தையோ மருத்துவர்கள் பரிந்துரைக்கிறார்கள். ஒரு சிலருக்கு இதன் காரணமாக காலில் கறுப்பு புள்ளிகள் அதிகம் இருந்து, அதனால் பிரச்சினை ஏற்படுகிறது என்றால் மட்டுமே மருத்துவர்கள் சத்திர சிகிச்சை செய்து கொள்ள பரிந்துரைப்பார்கள். தற்போது இது போன்றவர்களுக்காகவே விசேடமான காலுறைகள் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கின்றன. இவைகளை அணிந்து கொண்டும், மருத்துவர்களின் அறிவுரையையும் கேட்டால் இதிலிருந்து குணமடையலாம்.

Dr.S M பிரபு.

தொகுப்பு அனுஷா. 

தகவல் : சென்னை அலுவலகம்

http://www.virakesari.lk/article/19061

Link to comment
Share on other sites

தசைகளுக்கு வலிமை தரும் 10 இயற்கை உணவுகள்!

 
 

டலை வலிமையாகவும் கவர்ச்சியாகவும் கட்டுக்கோப்பாகவும் வைத்திருக்க வேண்டும் என்பது இளைஞர்கள் பலரின் ஆசை, கனவாக இருக்கிறது. இதற்காகவே உடற்பயிற்சிக்கூடங்களை நோக்கி படையெடுக்கின்றனர். சிலர் நேரம் காலம் பார்க்காமல் வியர்க்க விறுவிறுக்க... கடும் சிரத்தையோடு உடற்பயிற்சி செய்கிறார்கள். உடற்பயிற்சிகள் ஒருபுறமிருக்க உடல் வலிமையாக வேண்டுமென்றால், உடல் தசைகள் மேம்படுத்தப்பட வேண்டியது மிகவும் அவசியம். ஆனால், இங்கே நடப்பதே வேறு. அதாவது, இயற்கை உணவில் கிடைக்கும் ஊட்டச்சத்துகள் நிறைய இருக்க, டப்பாக்களில் அடைத்து வைக்கப்பட்ட புரோட்டின் பவுடர், எனர்ஜி ஃபுட் போன்ற செயற்கை ஊட்டச்சத்துகளைத்தான் நம்மில் பலர் விரும்பிச் சாப்பிடுகின்றனர்.இவற்றையெல்லாம் கருத்தில்கொண்டு, ` தசைகளுக்கு வலிமை சேர்க்க, `நாம் சாப்பிடும் உணவுகள் வலிமையான  தசைகளைப் பெற துணைப்புரிகின்றது அதுவே ஆரோக்கியமானதும் கூட', என்கிறார்கள் ஊட்டச்சத்து நிபுணர்கள். 

உடல் தசைகள்

மேலும், `இயற்கையாகக் கிடைக்கும் உணவைச் சாப்பிடும்போது, புரதச் சத்துடன் உடலுக்குத் தேவையான நார்ச்சத்து, வைட்டமின், தாதுக்கள், ஆன்டிஆக்ஸிடன்ட் போன்ற மற்ற சத்துகளும் கிடைத்துவிடும். இவை உடல் ஆரோக்கியத்துக்கு இன்னும் வலு சேர்க்கும். ஆனால், செயற்கை உணவை உட்கொள்ளும்போது, அதிலுள்ள புரதம் மட்டுமே உடலில் சேரும். மற்ற சத்துகள் முழுமையாக கிடைக்காது' என்கிறார்கள். 

செயற்கை உணவுகளில் உள்ள ஊட்டச்சத்துகள் செரிமானமாக, அதிக நேரம் எடுத்துக்கொள்ளும். இதனால், உடனடியாக வேறு உணவுகளை நாம் சாப்பிட முடியாது. எனவே, உடலை வலிமையாக்க விரும்புவர்களும், கடின உடற்பயிற்சி மேற்கொள்பவர்களும்  எந்தெந்த உணவுகளை அதிகம் சேர்த்துக்கொள்ளலாம் என்று பார்ப்போம்...

முட்டை

உணவுகள்

நாம் சாப்பிடும் ஒவ்வொரு முட்டையிலிருந்தும் 6-ல் இருந்து 8 கிராம் வரையிலான புரதச் சத்து (புரோட்டின்) கிடைக்கிறது. 9-க்கும் மேற்பட்ட அமினோ அமிலங்கள் உள்ளன. மேலும் முட்டையில் வைட்டமின்கள், இரும்புச்சத்து மற்றும் கால்சியம், துத்தநாகம் போன்ற தாதுசத்துகளும் நிறைவாக உள்ளன. இவை அனைத்தும் உடல் வலுப்பெற உதவுகிறது. 

இறைச்சி

100 கிராம் கோழி இறைச்சியில் (கோழியின் நெஞ்சுப்பகுதி) 30 கிராம் புரதச்சத்து உள்ளது. இவை செல்களின் தேய்மானத்தைக் குறைத்து புதுப்பிக்க உதவுவதோடு, இது உடல் தசைகளுக்கு வலு சேர்க்கிறது. 

தண்ணீர்

நம் உடலில் 70 சதவிகிதம் தண்ணீர் உள்ளது. அதேபோல, தசை திசுக்கள் 75 சதவிகிதம் தண்ணீரால் ஆனதாகும். எனவே தினமும் சரியான அளவு தண்ணீர் குடிக்க வேண்டியது தசையின் வலிமைக்கும், வளர்ச்சிக்கும் இன்றியமையாதது. இல்லையென்றால் நீர்வறட்சி ஏற்படும். இதனால் உடலின்  வளர்ச்சிதை மாற்றத்தில் ஏற்படும் பாதிப்பால் தசை வலிமை குறைய வாய்ப்பு உள்ளது. எனவே போதுமான அளவு தண்ணீர் குடிப்பது தசையின் வலிமைக்கு உதவும்.

மீன் எண்ணெய்

மீன் எண்ணெயில் தசை வளர்ச்சிக்குத் தேவையான ஆன்டி-இன்ப்ளாமிட்டரி (anti-inflammatory)  அதிக அளவில் உள்ளது. இவை உடலின் வளர்ச்சிதை மாற்றத்தை (Metabolism) ஊக்குவிக்கும். இதனால் உடலின் தேவையில்லாத கொழுப்புகள் குறைவதோடு, வலிமையான தசைகள் உருவாக உதவும்.

ஓட்ஸ்

ஓட்ஸ்

இதில் கார்போஹைட்ரேட், நார்ச்சத்து, புரதச்சத்து, தாதுப்பொருட்கள் மற்றும் வைட்டமின்கள் நிறைவாக உள்ளதால் தசை வளர்ச்சிக்கு பெரிதும் உதவும். உடற்பயிற்சி செய்ததும் எடுத்துக் கொள்ள வேண்டிய சிறந்த உணவாகும் இது.

பசலைக்கீரை

பசலைக்கீரையில் உள்ள  பைட்டோசிடை ஸ்டீராய்டு (Phytoecdysteroids) என்ற வேதிப்பொருள் 20 சதவிகித தசை வளர்ச்சிக்கு உதவுவதாக, அமெரிக்காவில் உள்ள ரட்கர்ஸ் பல்கலைக்கழகம் மேற்கொண்ட ஆய்வில் தெரியவந்துள்ளது. 

அன்னாசிப்பழம்

அன்னாசிப்பழத்தில் (Pineapple) ப்ரோமெலைன் (Bromelein) என்னும் என்சைம் உள்ளது. இது தசைகளில் ஏற்படும் வீக்கத்தை குறைப்பதுடன், தசை வளர்ச்சியை ஊக்குவிக்கிறது. உடற்பயிற்சிக்குப் பிறகு இதைச் சாப்பிடுவது நல்லது.

வாழைப்பழம்

வாழைப் பழம்

வாழைப்பழத்தில் உள்ள ப்ரோமெலைன் (Bromelein) ஆண்களின் டெஸ்டோஸ்டிரோன் அளவை அதிகரிக்க உதவும். உடலில் டெஸ்டோஸ்டிரோன் அளவு அதிகமானால், அது தசை வளர்ச்சிக்கு உதவும்.

புரோக்கோலி

புரோக்கோலியுடன் தக்காளி, மக்காச்சோளம், மிளகு சேர்த்து சாலட்டாகச் சாப்பிடலாம். இதில் உள்ள வைட்டமின்-சி தசை திசுக்களின் ஆயுளை கூட்டும். நார்ச்சத்து, தாதுச்சத்துகளும் இதில் அதிகளவு உள்ளன. இவை தசை வளர்ச்சிக்கு உதவும். 

பாதாம்

பாதாம்பருப்பில் கொழுப்புச்சத்து, புரதம், வைட்டமின்-இ, ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைவாக உள்ளன. இவை தசை வளர்ச்சிக்கு ஊட்டமளிப்பதோடு, வலிமைபெறவும் பெரிதும் உதவுகின்றன.  

http://www.vikatan.com/news/health/86686-10-best-foods-for-muscle-strength.html

Link to comment
Share on other sites

தக்காளி, வெஜிடபுள், ஆட்டுக்கால்... சூப் மிக நல்லது! #HealthTips

 
 

‘அண்ணாச்சி ஒரு டொமெட்டோ சூப்!’ இப்படிக் கேட்கும் குரலை அநேகமாக தமிழ்நாட்டின் அத்தனை சிறுநகரங்களிலும் நாம் கேட்க முடியும். சென்னை, மதுரை, கோயம்புத்தூர், திருச்சி... உள்ளிட்ட பெருநகரங்களிலோ கொடிகட்டிப் பறக்கிறது இந்தத் தெருவோர வியாபாரம். இரண்டு தெருக்களுக்கு ஒரு சூப் கடை நிச்சயம் இருக்கும். ஒரு மர ஸ்டேண்ட்; கேஸ் ஸ்டவ்; மேலே மூடிவைக்கப்பட்ட மூன்று சில்வர் பானைகள்; கரண்டிகள், 10, 15 கிண்ணங்கள் அல்லது கப்கள், எடுத்துக் குடிக்கப் பொருத்தமான பெரிய சைஸ் ஸ்பூன்கள், மேலும் சில பாத்திரங்கள்... இவை போதும் ஒரு சிறு கடையை ஆரம்பிக்க! டீ, காபி, குளிர்பானங்களைவிட சூப் சிறந்தது; உடலுக்குச் சிக்கல் ஏற்படுத்தாதது; ஆரோக்கியத்துக்கு உதவுவது என்கிற எண்ணம் மக்களுக்குப் பரவலாக இருக்கிறது. உண்மை நிலவரம் என்ன? 

சூப்

அது தெருவோரக் கடையோ, நட்சத்திர உணவு விடுதியோ எங்கு கிடைத்தாலும், சூப் ஆரோக்கியமானது என்பதில் மாற்றுக் கருத்தில்லை. ஆனால், அதைத் தயாரிக்கப் பயன்படுத்தப்படும் பொருட்கள், அவற்றின் தரம் இவை மட்டும்தான் பிரச்னை. இன்றைய தலைமுறையின் கூகுள் தேடல் விரிவாக்கம் செய்த தொழில்களில் நிச்சயம் சூப் கடைகளுக்கும் முக்கிய இடம் உண்டு. ஆட்டுக்கால் சூப் தொடங்கி, மூலிகைகள், காய்கறிகள், மஷ்ரூம், கீரை, தக்காளி... என மலைக்கவைக்கும் வகைகள். தெருவோரக் கடைகள் மட்டுமில்லாமல், இதற்கான பிரத்யேகக் கடைகளும் சென்னை உள்ளிட்ட பெருநகரங்களில் இருக்கின்றன. மாலை 4 மணிக்குத் தொடங்கும் வியாபாரம் அதிகபட்சம் இரவு 9 மணி வரைக்கும் நடக்கும். குறைந்த முதலீடு, நிறைவான லாபம் என்கிற அடிப்படையிலும் இந்தக் கடைகள் பெருகிக்கொண்டே போகின்றன. உலகம் முழுக்க விதவிதமான ஃப்ளேவர்களில் பட்டையைக் கிளப்பி, தன் ரசிகர்களை ஈர்த்துக்கொண்டிருக்கிறது இந்த அட்டகாச திரவம்!

சூப்பைக் கண்டுபிடித்தது யார்? இந்தக் கேள்வியைக் கேட்டால், `கி.மு 20,000க்கு முன்னாலேயே இது இருந்தது’ என்று அழுத்தமாகச் சொல்கிறார்கள் உணவு வரலாற்று ஆசிரியர்கள். களிமண் பாத்திரங்கள் இருந்த காலத்திலேயே இது இருந்திருக்கிறது. எப்படி? ஒரு கைப்பிடி தானியம் உங்களிடம் இருக்கிறதா? நீங்கள் மட்டும் அதைச் சமைத்து சாப்பிடலாம். ஆனால், அதனுடன் சில பொருட்களைச் சேர்த்து, தண்ணீர் ஊற்றி, காய்கறிகளைப் போட்டு வேகவைத்து ரசம்போல ஆக்கினால், இன்னும் அதிகமான பேர் இதைச் சாப்பிட்டுப் பசியாறலாமே!  இதுதான் சூப்புக்கு அடிப்படை. நம் முன்னோர் இப்படியெல்லாம் கூட்டாகப் பசியாறியிருக்கிறார்கள். இந்த `கஞ்சி’ பாரம்பர்யம்தான் இன்றைக்கு, `சூப் டயட்’ வரை உருவாகி முன்னேற வழிகாட்டியிருக்கிறது. 

கேரட்-காலிஃப்ளவர்சூப்

வெதுவெதுப்பாக அல்லது இளஞ்சூட்டில் பரிமாறப்படுகிறது இந்த திரவ வகை உணவு. இறைச்சி, காய்கறிகள்... என சைவம், அசைவம் இரண்டு வகையிலும் தயாரிக்கலாம். சைவத்தில் காய்கறிகளைக் கழுவிய தண்ணீரை (Stock) அப்படியே வைத்திருந்து, அதை சூப் தயாரிக்கப் பயன்படுத்துவார்கள். மேற்கத்திய நாடுகளில் இதை `க்ளியர் சூப்’, `திக் சூப்’ என இரண்டு வகையாகப் பிரித்துவைத்திருக்கிறார்கள். ஃப்ரான்ஸில் பௌவில்லோன் (Bouillon), கான்சோம் (Consomme) என வகைப்படுத்துகிறார்கள். அதாவது, க்ரீம், முட்டை, வெண்ணெய் சேர்த்துக் கெட்டியாக்குவது அல்லது நீர்க்கக் கொடுப்பது எனப் பிரிக்கிறார்கள். 

இன்றைக்குப் புழக்கத்தில் இருப்பது `Soup' என்கிற ஆங்கில வார்த்தை. இது ஃப்ரெஞ்சின் `Soupe' என்ற வார்த்தையில் இருந்து வந்திருக்கலாம்; `Soupen' என்கிற ஆங்கில வார்த்தைக்கு, `சப்பிச் சாப்பிடுதல்’ `To sip' என்று பொருள்.. எனவே, இதிலிருந்து வந்திருக்கலாம்; அல்லது லத்தீன் வார்த்தையான `Suppa' (பிரெட் ஊறவைத்த சாறு)... இதிலிருந்து வந்திருக்கலாம்; அதெபோல ஜெர்மன் மொழியில் `Sop' என்றால், குழம்பு எனப் பொருள் இதன் காரணமாகவும் இருக்கலாம் என்கிறார்கள். மெக்ஸிகன், வியட்நாமீஸ், பிரேசிலியன், கொரியன், இங்கிலாந்து, சிசிலியன், சிங்கப்பூர், ஜப்பானீஸ்... என சூப்களில் பல வகைகள்! இன்னும் ரஷ்யா, இத்தாலி, ஸ்பானிஷ்... என உலகின் அறியப்பட்ட பெரிய நாடுகள் தொடங்கி, மூலை முடுக்குகளில் எல்லாம் மூக்கை நுழைத்து சொக்கவைத்துக்கொண்டிருக்கிறது அதிருசி திரவ உணவு. 

வெஜிடபுள் சூப்

தெருவோரக் கடைகளோ, நட்சத்திர விடுதியோ சூப்பை அருந்துவது ஆரோக்கியம்தானா? டயட்டீஷியன் சௌமியாவிடம் கேட்டோம்... “இன்றைக்கு பெரும்பாலான உணவகங்களில் சாப்பிடுவதற்கு முன்னர் சூப் பரிமாறப்படுவது வழக்கமாகிவிட்டது. சைவம், அசைவம் என இரு பிரிவிலும் இது இப்போது கிடைக்கிறது. கீரை, தக்காளி, மஷ்ரூம், வெஜிடபுள், சிக்கன், ஆட்டுக்கால்... என நீள்கிறது சூப்களின் வகைகள். உதாரணமாக, வெஜிடபுள் சூப்பில் நம் உடலுக்குத் தேவையான சில தாதுக்களும் வைட்டமின்களும் கிடைக்கும். அதோடு கார்போஹைட்ரேட், கொழுப்பு, புரோட்டீனும் நிறைந்திருக்கும். 

ஒரு கப் வெஜிடபுள் சூப்பில் 50-ல் இருந்து 100 கலோரிகள் இருக்கும். இதில் இருக்கும் கார்போஹைட்ரேட்கள் காய்கறிகளில் இருந்து கிடைப்பவை. இதில் உள்ள நார்ச்சத்து, செரிமானத்துக்கு உதவும். நன்கு காய்ச்சப்ப்ட்ட சூப்பில் கார்போஹைட்ரேட் 15 கிராம், நார்ச்சத்து 3 கிராம், சர்க்கரை 5 கிராம் இருக்கும். கொலஸ்ட்ரால் குறைவாகவே இருக்கும். சூப்பில் நாம் சேர்க்கும் காய்கறிகளுக்கு ஏற்ப வைட்டமின் சத்துகள் கிடைக்கும். வைட்டமின் இ, தயாமின், நியாசின், வைட்டமின் பி 6, பொட்டாசியம், காப்பர், மாங்கனீஸ் மற்றும் வைட்டமின் ஏ ஆகியவை இருக்கும். இது ஒரு லோ கிளைசமிக் தன்மைகொண்ட திரவ உணவு. ஒரு கப் குடித்தால், பசியைத் தூண்டும். ஆரோக்கியத்துக்கு நல்லது. எளிய செய்முறை. உடல் எடை குறைய உதவும். அது மட்டுமல்ல... புற்றுநோய் வராமல் காக்கும்; உயர் ரத்த அழுத்தத்தைக் குறைக்கும்; உடல்பருமன் வராமல் பார்த்துக்கொள்ளும்; இதயநோயில் இருந்து காக்கும். டைப் 2 சர்க்கரை நோயாளிகள்கூட குறைந்த அளவில் எடுத்துக்கொள்வது நல்லது. டயட்டீஷியன் சௌமியா

சிக்கன், ஆட்டுக்கால் போன்றவற்றில் செய்த சூப்களை கடைகளில் வாங்கிச் சாப்பிடாமல் வீட்டிலேயே செய்து சாப்பிடுவது நல்லது. ஏனென்றால் அவை ஃப்ரெஷ்ஷாக தயாரிக்கப்பட்டவை என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை. ஒருவேளை பழைய இறைச்சி, எலும்பில் தயாரிக்கப்பட்டதாக இருந்தால் நம் உடலுக்குக் கெடுதி விளைவிக்கலாம். இன்றைக்கு பல சூப்களை ரெடிமேடு மிக்ஸாகத் தயாரிக்கிறார்கள். ரோட்டோரக் கடைகளில் கிடைப்பவற்றில் பெரும்பாலானவை இந்த ரகங்களே. நம் கண் முன்னால் சில காய்கறி நகரங்களைச் சேர்த்துத் தயாரிப்பார்கள் அவ்வளவுதான். எனவே, இவை நமக்கு சக்தியைத் தருவதற்கு பதிலாக எதிர்மறை விளைவுகளையும் ஏற்படுத்திவிடலாம். மற்ற உணவுகளுடன் ஒப்பிடும்போது சூப் நமக்குப் பலவழிகளில் நலம் தருவது. கிராமங்களில் உடல் பலவீனமானவர்களுக்கு, எலும்பில் அடிபட்டவர்களுக்கு நாட்டுக்கோழியில் ரசம் வைத்துக்கொடுப்பார்கள். ஆட்டுக்கால் சூப்பைச் சாப்பிட்டால் எலும்புகள் பலம் பெறும்; மூட்டுவலி தீரும். எனவே, சூப் நமக்கு பல நன்மைகளைத் தருவது. ஆரோக்கியமான முறையில் தயாரித்து சாப்பிட்டால் அதிக நன்மைகள் கிடைக்கும்’’ என்கிறார் சௌமியா. 

கற்றுக்கொள்வதும் தயாரிப்பதும் எளிது. எனவே, நம்மால் வீட்டிலேயேகூட சூப்பைச் செய்ய முடியும். ஆரோக்கியதுக்கு உத்தரவாதம் தரும் சூப்பைக் கொண்டாடுவோம்! 

http://www.vikatan.com/news/health/86580-health-benefits-of-soup.html

Link to comment
Share on other sites

உலகின் முதல் டெங்கு தடுப்பூசிக்கு உலக சுகாதார அமைப்பு அங்கீகாரம்!

 
 

உலகின் முதல் டெங்கு தடுப்பூசிக்கு, உலக சுகாதார அமைப்பு (WHO) அங்கீகாரம் வழங்கி உள்ளது.  ’Dengvaxia’ என்னும் இந்தத் தடுப்பூசி, ஒன்பது வயதைக் கடந்தவர்களுக்கு வருடத்துக்கு மூன்று  முறை அளிக்க முடியும் எனப் பரிந்துரை செய்துள்ளது. 20 வருடங்களாக மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் பயனாக ’Dengvaxia’  தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

dengvaxia

கொசு மூலமாகப் பரவும் டெங்கு காய்ச்சலால் ஓர் ஆண்டுக்கு 390 மில்லியன் பேர் பாதிக்கப்படுகிறார்கள் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.  முக்கியமாக, தென்கிழக்கு ஆசியப் பகுதிகளில் மக்கள் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள்.

இந்த நிலையில், பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த சனோஃபி என்ற நிறுவனம், டெங்கு நோய்க்கான  தடுப்பூசியைத் தயாரிக்கும் முயற்சியை மேற்கொண்டது.

கடந்த  20 வருடங்களாக மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் பயனாக ’Dengvaxia’  தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்தத் தடுப்பூசிக்கு, உலக சுகாதார அமைப்பு ஒப்புதல் வழங்கி உள்ளதால், உலகம் முழுவதும் இது பயன்பாட்டுக்கு வரக்கூடும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

http://www.vikatan.com/news/world/86993-who-approves-worlds-first-dengue-vaccine-dengvaxia.html

Link to comment
Share on other sites

அசைவ உணவுடன் எதைச் சாப்பிடலாம்... எவற்றைத் தவிர்க்கலாம்? #HealthTips

 
 

புலால், அசைவம்... பழந்தமிழர்களின் விருந்தோம்பலில் முக்கிய இடம்பிடிக்கும். இன்றைக்கும்கூட விருந்து என்றால் அது ஊரைக்கூட்டும் அசைவ உணவாகவே இருக்கிறது. வாய்க்கு ருசியாக உண்ணும் அசைவ உணவுடன் சுவைக்காக ஏதேதோ உணவுகளைச் சேர்த்து உண்பது இன்றைக்கு வழக்கமாகி விட்டது. அசைவ உணவுடன் எதைச் சேர்த்துச் சாப்பிடலாம்? எதைச் சேர்க்கக்கூடாது? என்ற ஒரு நியதி உள்ளது. அதுபற்றி ஆயுர்வேத மருத்துவர் ஆர்.பாலமுருகன் கூறுவதை இங்கே பார்ப்போம்.

அசைவ உணவு 

பொதுவாகவே அசைவ உணவுகள் செரிமானமாக நேரம் ஆகும். ஆகவே, இறைச்சியோடு சேர்த்துச் சாப்பிடும் உணவுகள் இறைச்சிக்கு எதிர்மறையான உணவாக இருக்க வேண்டும். எளிதில் செரிமானமாகாத உணவுடன் சேர்த்துச் சாப்பிடக்கூடிய உணவுகள் கடினமான டாக்டர் பாலமுருகன்உணவை எளிதாக ஜீரணிக்கும் சக்தி கொண்டதாக இருக்க வேண்டும். 

1. தேன் vs இறைச்சி: சுத்தமான தேனுடன் இறைச்சியைச் சேர்த்து சாப்பிடக்கூடாது. இப்படி சாப்பிடுவதால் தேன் உணவை நச்சுத்தன்மை கொண்டதாக மாற்றிவிடும். இந்த காம்பினேஷனை ஆயுர்வேதத்தில் 'ஆம விஷம்' என்று கூறுவர். இது மூளையின் செயல்பாட்டிலும் பாதிப்பை ஏற்படுத்தும். 

தேன்

2. முள்ளங்கி vs இறைச்சி: வேகவைத்த முள்ளங்கியோடு அசைவ உணவை சேர்த்து சாப்பிடக்கூடாது. முள்ளங்கி மற்றும் இறைச்சியில் உள்ள புரத ஊட்டச்சத்து அதிகரிப்பதால், உற்பத்தியாகும் ரத்தம் நச்சுத்தன்மை உடையதாக மாற வாய்ப்பு உண்டு.

 3. கிழங்கு வகைகள் vs இறைச்சி: பொதுவாகவே, மண்ணுக்கு அடியில் விளையும் உணவுப்பொருட்கள் உண்பதை பெரும்பாலும் தவிர்ப்போம். கிழங்குகள் மற்றும் இறைச்சி செரிமானம் ஆக அதிக நேரம் எடுத்துக்கொள்வதுடன், அது உடல் எடையை அதிகரிக்கச்செய்யும். மேலும் இந்த காம்பினேஷன் நெஞ்செரிச்சல், செரிமானக் கோளாறு, வாயுத்தொல்லையை உண்டாக்கும். 

கிழங்குகள்

4. மைதா உணவுகள் vs அசைவ உணவு: பொதுவாகவே மைதாவுக்கு செரிமான சக்தி குறைவு. இவை எளிதில் மலச்சிக்கலை ஏற்படுத்துவதோடு, மலச்சிக்கல் பிரச்னை உள்ளவர்களுக்கு பிரச்னையை அதிகப்படுத்தும்.
 
5. உளுந்து vs இறைச்சி: கறுப்பு உளுந்துடன் இறைச்சியைச் சேர்த்துச் சாப்பிட்டால் உடல் எடை அதிகரிக்கும். செரிமானத்தில் சிரமத்தை ஏற்படுத்துவதோடு வயிற்றுக்கோளாறு, குமட்டல், வாந்தி, படபடப்பு உண்டாக்கும்.

பயறு

6. பயறு vs இறைச்சி: முளைகட்டிய பயறு மற்றும் இறைச்சியில் புரதம் அதிக அளவு உள்ளது. உடல் இயக்கத்துக்குத் தேவையான முக்கிய ஊட்டச்சத்து புரதம் என்றபோதிலும் அதை அதிகமாக எடுத்துக்கொள்வதால் மூட்டுவலி ஏற்படும். இது உடலில் மதமதப்பை ஏற்படுத்தி உற்சாகத்தை இழக்கச்செய்யும்.  

7. தானியங்கள் vs அசைவ உணவு: தானியங்களோடு சேர்த்துச் சாப்பிடுவதால், நம் உடலின் தேவைக்கும் அதிகமான எனர்ஜி கிடைக்கும். இதனால் வெயிலில் செல்ல முடியாமல் போவதோடு காலையில் எழுந்திருக்கவும் முடியாது. இதனால் யூரிக் ஆசிட் அதிகரிப்பதால் சிறுநீரகக் கல் வருவதற்கான வாய்ப்பு உண்டாகும்.

தானியங்கள்

8. கீரை vs இறைச்சி: இறைச்சியுடன் கீரை சேர்த்துச் சாப்பிடுவதால் செரிமானக்கோளாறு ஏற்படும். இதனால் கல்லீரல் நோய் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம்.  

9. தயிர் vs அசைவ உணவு: அசைவ உணவுடன் தயிர் சேர்க்கக்கூடாது. மேலும், பாலில் இருந்து தயாரிக்கப்படும் எந்த பொருளுடனும் இறைச்சி சேர்த்து சாப்பிடக் கூடாது. தயிருடன் இறைச்சி சேர்த்துச் சாப்பிடுவதால் உருவாகும் ரத்தம் சுத்தமாக இருக்காது. அது தோல் நோய்கள் பலவற்றுக்கு வழிவகுக்கும். 
(குறிப்பு: கடல் வாழ் உயிரினங்கள் மற்றும் மீனுடன் தயிர் சேர்த்து சாப்பிடவே கூடாது.)

எண்ணெய்

10. எண்ணெய் vs இறைச்சி: கடலை எண்ணெய், கடுகு எண்ணெய் போன்றவற்றை இறைச்சி சமைக்கப் பயன்படுத்தக்கூடாது. மேலும், இவை பருவகால மாற்றங்களைப் பொறுத்து மாறும். உடல் உஷ்ணம் அதிகரிக்கும். தேங்காய் எண்ணெயால் சமைக்கப்படும் இறைச்சி செரிமானமாக அதிக நேரம் எடுத்துக்கொள்ளும். 

11. குளிர்பானங்கள் vs அசைவ உணவு: அசைவ உணவு உண்டதும் ஐஸ்கிரீம் மற்றும் குளிர்பானங்கள் சாப்பிட்டால் உடல் உஷ்ணத்தை அதிகரிக்கும். மேலும், செரிமானக் கோளாறுகளை ஏற்படுத்தி, தூக்கமின்மை, உடல் அசதியை உண்டாக்கும். 

 

எதனுடன் சேர்த்து சாப்பிடலாம்... 

* இறைச்சியை நல்ல எண்ணெயில் சமைத்துச் சாப்பிடலாம்.  

* இறைச்சியை பப்பாளிக்காயுடன் சேர்த்துச் சாப்பிடலாம். இறைச்சியை மிருதுவாக மாற்றும் தன்மை பப்பாளிக்கு உண்டு.

* அசைவ உணவுக்குப் பின் எலுமிச்சைப் பழச்சாறு அருந்தலாம். செரிமானத்துக்கு உதவும்.

எலுமிச்சைச் சாறு

* அசைவ உணவு உண்பதற்கு முன்னரோ பின்னரோ அஷ்ட சூரணம் சாப்பிடலாம். இது இறைச்சி எளிதில் செரிமானமாக உதவும்.

* அசைவ உணவுக்குப் பின் பெருஞ்சீரகம் அல்லது பெருஞ்சீரகத் தண்ணீர் குடிக்கலாம். உணவை செரிமானமாக்குவதில் மிகச் சிறந்த பணியாற்றக்கூடியது. கெட்ட கொழுப்பு உடலில் சேராமல் தடுக்கும் சக்தி பெருஞ்சீரகத்துக்கு உண்டு. 

* இறைச்சியை உணவாக எடுத்துக்கொண்டதும், சுடுதண்ணீர் குடிக்கலாம். இது ரத்தக் குழாயை சுத்தம் செய்து சிறந்த நச்சு நீக்கியாக செயல்படுகிறது.

*  பால் சேர்க்காத சுக்கு மல்லி காபி அருந்தலாம். இது வயிற்று உபாதைகளில் இருந்து நம்மைக் காக்கும்

இறைச்சி

* இறைச்சியுடன் வெறும் வெங்காயம் சேர்த்துச் சாப்பிடலாம். தயிரோடு கலந்து ராய்தா போல் சாப்பிடக்கூடாது. வெங்காயம் உயர் ரத்த அழுத்தம் மற்றும் கொழுப்பின் அளவை கட்டுக்குள் வைக்க உதவுகிறது. 

* இறைச்சி உணவுகளுடன் சேர்த்து எடுத்துக்கொள்ளப்படும் இஞ்சி மற்றும் இந்துப்பு, நொதிகளின் சுரப்பை அதிகரிப்பதோடு, செரிமானத்தன்மையை அதிகரிக்கும். நச்சுத்தன்மையைக் குறைக்கும்.  

இறைச்சியின் பலன்கள்:

உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்துகள் நேரடியாக கிடைக்க உதவும். மனித உடலின் எலும்பு மற்றும் தசைகள் வலுப்பெற இவை உதவும். 

யாருக்கு... எப்போது... இறைச்சி கூடாது..!

* அனைவருமே இரவு வேளைகளில் இறைச்சி உணவைத் தவிர்க்க வேண்டும். 

* இதய நோயாளிகள், சர்க்கரை நோயாளிகள், உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்கள் இறைச்சியை அளவாக எடுத்துக்கொள்ள வேண்டும். 

* முதல் நாள் செய்த இறைச்சியை ப்ரிட்ஜில் வைத்து மறுநாள் பயன்படுத்தக்கூடாது. முதல் நாள் செய்த அசைவ உணவை மறுநாள் சூடு செய்து சாப்பிடக் கூடாது. 

http://www.vikatan.com/news/health/87050-dos-and-donts-of-non-veg-food-combinations.html

Link to comment
Share on other sites

‘சிப்ஸ் சுவைக்கத் தூண்டும்தான்... ஆனால், உடல்நலம்?!’ மருத்துவம் விவரிக்கும் உண்மை

 
 

சிப்ஸ்... அமெரிக்காவின் முதல் 10 இடங்களில் இருக்கும் ஸ்நாக்ஸ் பட்டியலில் இதற்குத்தான் முதல் இடம். நம் ஊரில், பலகாரக்கடை தொடங்கி மளிகைக்கடை வரை நீக்கமற நிறைந்திருக்கும் சிப்ஸ் பாக்கெட்களைப் பார்த்தால், போகிற போக்கில் இந்தியாவே முதல் இடம் பிடித்துவிடுமோ என்று தோன்றுகிறது. மொறு மொறு சுவை... அதிலும் இதைச் சாப்பிடும்போது பெரியவர்களே குழந்தைகளாகிவிடும் அதிசயம்! மொத்தத்தில் நம் வாழ்க்கையில் தவிர்க்கவே முடியாத, முக்கியமான ஸ்நாக்ஸ் ஆகிவிட்டது சிப்ஸ்! 

சிப்ஸ்

சபரிமலைக்கு மாலை போட்டுப் போனவர்கள் திரும்பி வந்ததும், நம்மவர்கள் `சுவாமி தரிசனம் நல்லபடியா முடிஞ்சுதா?’ என்று கேட்பது இருக்கட்டும்; `கேரளாவுல இருந்து சிப்ஸ் வாங்கிட்டு வந்தீங்களா?’ என்பதுதான் முக்கியமான கேள்வியாக இருக்கும். நேந்திரம் சிப்ஸுக்கு அபார ரசிகர்கள் நம்மவர்கள். இன்றைக்கும் தமிழகத்தின் பல ஊர்களில், சுடச்சுட போட்டுத்தரும் சிப்ஸ் கடைகளில் கூட்டம் அள்ளுகிறது. `பன்சிலால் லாலா கடை’, `முருகன் ஸ்வீட்ஸ்’, `அருந்ததி ஸ்வீட் ஸ்டால்’... மாதிரி `சிப்ஸ்’ கடைகளும் இன்றைக்குப் பரவலாகிவிட்டன. வீட்டில் சாப்பிடும்போதுகூட தொட்டுக்கொள்ள அப்பளமோ, வடகமோ இல்லையா? `கண்ணு... பக்கத்து கடையில போய் ஒரு சிப்ஸ் பாக்கெட் வாங்கிட்டு வா!’ என்று பிள்ளைகளை அனுப்பும் அளவுக்கு இது நம்மோடு கலந்துவிட்டது; திருமணப் பந்திகளில் பரிமாறப்படும் பொருளாகிவிட்டது; மதுப் பிரியர்களுக்கு பிரதானமான `சைடு டிஷ்’ என்ற பெயரையும் எடுத்துவிட்டது. 

நேந்திரங்காய், வாழைக்காய், பாகற்காய், வெண்டைக்காய், சேனை... என சிப்ஸுகளில் பல வகைகள் இருந்தாலும், உருளைக்கிழங்கு சிப்ஸ்தான் எக்கச்சக்கமானவர்களின் ஃபேவரைட். அமெரிக்காவில் இதை `பொட்டெடோ சிப்’ என்கிறார்கள்; இங்கிலாந்தில், `க்ரிஸ்ப்’ (Crisp) என்கிறார்கள். கொத்தவரங்காய் வற்றல், இலை வடாம், ஜவ்வரிசி வடாம், சோற்று வடாம்... என்று விதவிதமான பொரித்துச் சாப்பிடும் நொறுக்குத்தீனிகளைக் கண்டுபிடித்தது நம் பாரம்பர்யம். அது உருளைக்கிழங்கையும் விட்டுவைத்திருக்காது என்றே நம்பலாம். ஆனால், ஆங்கிலேயரின் வருகைக்குப் பிறகுதான் உருளைக்கிழங்கு இந்தியாவில் பிரபலமாகத் தொடங்கியது என்பதையும் கவனத்தில் கொள்ளவேண்டியிருக்கிறது. அதனால்தான், `1853-ம் ஆண்டு, உருளைக்கிழங்கு சிப்ஸை ஜார்ஜ் க்ரம் (George Crum) என்ற அமெரிக்கர் கண்டுபிடித்தார்’ என்பதையும் ஏற்றுக்கொள்ள வேண்டியிருக்கிறது. 

உருளைக்கிழங்கு-சிப்ஸ்

ஜார்ஜ் க்ரம் கறுப்பினத்தைச் சேர்ந்தவர். நியூயார்க்கில், சாராடோகோ ஸ்ப்ரிங் ரிசார்ட்டில் ( Saratoga Springs) உள்ள மூன் லேக் லாட்ஜின் சமையல்கலை நிபுணர். அந்த ஹோட்டலுக்கு வந்த ஒரு வாடிக்கையாளர், கொஞ்ச நாட்களாக ஒரு புகார் கொடுப்பதை வழக்கமாக வைத்திருந்தார்... ``என்னப்பா நீங்க வறுத்துக் குடுக்குற உருளைக்கிழங்கு கெட்டியா, தடிமனா இருக்கு, மெத்து மெத்துனு இருக்கு. சாப்பிடுற மாதிரி செஞ்சு தர மாட்டீங்களா?’’ இந்தப் புகார் ஜார்ஜை ஒருகட்டத்தில் எரிச்சலின் உச்சிக்கே கொண்டுபோனது. `இந்த ஆள் அடங்கவே மாட்டானா?’ என யோசித்தவர், அந்த வாடிக்கையாளருக்கு பாடம் கற்றுத்தர முடிவு செய்தார். 

அன்றைக்கு அந்த வாடிக்கையாளர் மூன் லேக் லாட்ஜுக்கு வந்திருந்தார். ஜார்ஜ், உருளைக்கிழங்கை எடுத்து எவ்வளவு மெல்லியதாக முடியுமோ, அவ்வளவு மெலிதான ஸ்லைஸ்களாகச் சீவினார். வழக்கமாகச் செய்வதுபோல உருளைக்கிழங்கை வறுக்காமல், வேண்டுமென்றே அப்பளம் மாதிரி உடைகிற பதத்துக்கு உருளைக்கிழங்கை பொரித்தெடுத்தார். அதில் உப்பைத் தூவினார். வாடிக்கையாளருக்குப் பரிமாறச் சொன்னார். அன்றைக்கு ஜார்ஜ் எதிர்பார்க்காதது நடந்தது. புது உருளைக்கிழங்கு வறுவல் அந்த வாடிக்கையாளருக்குப் பிடித்துப்போனது. புதுவகை ஸ்நாக்ஸாகப் பிறந்தது சிப்ஸ். அதன் பிறகு, 1860-ம் ஆண்டில், `க்ரம்ப்ஸ் ஹவுஸ்’ என்ற சொந்த ரெஸ்டாரன்ட்டை உருவாக்கும் அளவுக்கு ஜார்ஜ் சிப்ஸால் வளர்ந்தார். 

க்ரிஸ்ப்

ஜார்ஜ் சிப்ஸைக் கண்டுபிடிப்பதற்கு முன்னரே மேற்கத்திய நாடுகளில் அது இருந்ததற்கான ஆதாரங்கள் உள்ளன. 1817-ம் ஆண்டு வெளியான சமையல் புத்தகம், `தி குக்ஸ் ஆரகிள்’ (The Cook's Oracle). இதை வில்லியம் கிச்சனர் (William Kitchiner) என்பவர் எழுதியிருந்தார். இங்கிலாந்திலும் அமெரிக்காவிலும் `பெஸ்ட் செல்லர்’ புத்தகம் வேறு. அந்தப் புத்தகத்திலேயே உருளைக்கிழங்கு சிப்ஸ் இருந்ததற்கான குறிப்பு இருக்கிறது. ஆனாலும், ஆதாரபூர்வமாக ஜார்ஜ் க்ரம்தான் சிப்ஸைக் கண்டுபிடித்தவர் என்கிறார்கள். 

அமெரிக்காவைச் சேர்ந்த ஹெர்மேன் லே என்பவர், சிப்ஸை விற்பதற்கு புதிதாக ஒரு வழியைக் கண்டுபிடித்தார். சிப்ஸ்களை பாக்கெட்டுகளில் போட்டார். அதைத் தன் காரில் எடுத்துக்கொண்டுபோய் அவர் சுற்றுவட்டாரத்தில் உள்ள கடைக்காரர்களுக்குப் போட ஆரம்பித்தார். வியாபாரம் சூடுபிடித்தது. அது பிரபலமாகி அமெரிக்காவின் முதல் வெற்றிகரமான உருளைக்கிழங்கு சிப்ஸ் கம்பெனியாக லேய்’ஸ் (Lay's) உருவானது. இது ஆரம்பிக்கப்பட்ட வருடம் 1932. இப்போது அமெரிக்காவில் `நேஷனல் பொட்டெட்டோ சிப்ஸ் டே’ எல்லாம் கொண்டாடுகிறார்கள். 

மொறு மொறு-சிப்ஸ்

இன்று உலகெங்கும் கொடிகட்டிப் பறக்கிறது சிப்ஸ் வியாபாரம். கலர்கள் சேர்க்கப்பட்டு, பல பிராண்டுகளாக, லாபம் கொழிக்கும் தொழிலாகப்  பரந்துவிரிந்திருக்கிறது. இன்று எண்ணற்ற பிராண்டுகள், விதவிதமான சுவைகள், ஒரு நாளைக்கு ஒன்று என குழந்தைகளைக் கவர்ந்திழுக்கும் சிப்ஸுக்கான விளம்பரங்கள். எல்லாம் சரி... இதன் மொறு மொறு சுவைக்கு ஈடில்லைதான். உடல்நலத்துக்கு? 

டயட்டீஷியன் பத்மினி சொல்கிறார்... ``கடைகளில் விற்கப்படும் ஒரு சிறிய உருளைக்கிழங்கு சிப்ஸ் பாக்கெட்டில் (5 ரூபாய் பாக்கெட்) 160 கலோரிகள் உள்ளன. 10 கிராம் கொழுப்பு உள்ளது. சோடியம் 170 மி.கி., பொட்டாசியம் 350 மி.கி., கார்போஹைட்ரேட் 15 கிராம், சர்க்கரை 1 கிராம், புரோட்டீன் 2 கிராம், நார்ச்சத்து 1 கிராம் உள்ளன. வாரத்துக்கு ஒன்று அல்லது இரண்டு முறை குழந்தைகள் சிப்ஸை குறைந்த அளவில் சாப்பிடுவது தவறில்லை. ஓடி விளையாடும் குழந்தைகளுக்கு இதில் உள்ள கலோரிகள் பயன் தருபவை. அதேபோல இதில் வைட்டமின் இ, சி, இரும்புச்சத்து, மக்னீசியம், நியாசின்,  வைட்டமின் பி 6 மற்றும் பொட்டாசியம் வளரும் குழந்தைகளுக்கு சக்தி அளிப்பவை. இது, நாவறட்சியை ஏற்படுத்தும் என்பதால், இதைச் சாப்பிடும்போது, குழந்தைகளுக்கு அதிகமாகத் தண்ணீர் தரவேண்டியது அவசியம். டயட்டீஷியன் பத்மினி

சாதாரண மளிகைக்கடையிலேயே எளிதாகக் கிடைக்கக்கூடியது சிப்ஸ்; விலையும் அதிகம் இல்லை. ஆனால், இது நம் உடம்புக்கு ஆரோக்கியமானது அல்ல என்பதே உண்மை. அடிக்கடி அல்லது தினமும் சிப்ஸ் சாப்பிடுவது உடல்நலத்தை பாதிக்கும். இதில் இருக்கும் அதிக கலோரியும் கொழுப்பும் உடல் எடையை அதிகரிக்கச் செய்யும். `ஒபிசிட்டி’ என்ற உடல்பருமனுக்கு வழிவகுக்கும். உடல்பருமன் ஏற்பட்டால் சர்க்கரைநோய், இதயநோய்கள், புற்றுநோய் ஏற்படக்கூட வாய்ப்பு உண்டு. அதிக அளவில் சிப்ஸைச் சாப்பிடும்போது, நம்மால் மற்ற ஊட்டச்சத்து உணவுகளைச் சாப்பிட முடியாமல் போகும். அதனால் மற்ற உணவுகளில் இருந்து கிடைக்கும் வைட்டமின்களும், கனிமங்களும் நமக்குக் கிடைக்காமலேயே போய்விடும். இதில் இருக்கும் சோடியம் நம் இதய ஆரோக்கியத்தைப் பாதிக்கக்கூடியது. அதிக அளவில் சோடியம் நிறைந்த உணவுப் பொருள்களைச் சாப்பிடுவது, உயர் ரத்த அழுத்தத்துக்கு வழிவகுக்கும். எனவே, இது பிற்காலத்தில் நமக்கு பக்கவாதம், சிறுநீரகக் கோளாறுகள், மாரடைப்பு ஆகியவற்றை ஏற்படுத்தவும் வாய்ப்பு உண்டு. 

இதில் உள்ள கொழுப்பு, நம் உடலில் உள்ள கொலஸ்ட்ரால் அளவை அதிகரிக்கக்கூடியது. எண்ணெயில் பொரித்து எடுக்கும் சிப்ஸுகளுக்கு இந்தத் தன்மை அதிகம் உண்டு. அதோடு இதைப் பொரிக்கப் பயன்படுத்தும் எண்ணெய் எந்த வகை என்று நமக்குத் தெரியாது. திரும்பத் திரும்ப ஒரே எண்ணெயில் பொரித்து எடுத்த சிப்ஸைச் சாப்பிடுவது கொழுப்பைக்கூட்டும்; உடல்நலனுக்கு உகந்ததல்ல. குழந்தைகளோ, பெரியவர்களோ சிப்ஸுக்கு மாற்றாக வெஜிடபுள் சாலட், ஃப்ரூட் சாலட், சுண்டல் என ஸ்நாக்ஸ் பழக்கத்தை ஏற்படுத்திக்கொள்வது நல்லது. எப்போதாவது சிப்ஸ் சாப்பிடுவது நம் உணவுப் பழக்கத்தை பாதிக்காது. தினமும் அல்லது தொடர்ந்து சாப்பிடுவது கூடாது. சிப்ஸில் இருந்து விலகியிருப்பதே நம் ஆரோக்கியத்துக்கு பலம் தரும்’’ - அக்கறையோடு சொல்கிறார் பத்மினி. 

http://www.vikatan.com/news/health/86963-disadvantages-of-potato-chips.html

Link to comment
Share on other sites

சாம்பல், வெளிர் மஞ்சள், வெள்ளை... காது அழுக்கின் நிறங்கள் அறிவுறுத்தும் உடல்நலம்!

 

காதுக்குரும்பி... இதை காதில் சேரும் அழுக்கு என்கிறார்கள். இது, வெறும் அழுக்கு அல்ல. நமது காதுகளுக்குள் பாக்டீரியா மற்றும் அழுக்குகள் சேர்ந்துவிடாமல் அவற்றை உடல் இயற்கையாக வெளித்தள்ளுவதுதான் காதுக்குரும்பியாக வெளிவருகிறது. இது `செருமென்’ (Cerumen) என்றும் அழைக்கப்படுகிறது. காதைச் சுத்தமாக்குவதோடு, காது அரிப்பிலிருந்தும் இது நம்மைக் காக்கும். வியர்வை வெளியேற்றம், மனஅழுத்தம் போன்றவை காதில் உள்ள அழுக்கில் மாற்றங்களை ஏற்படுத்துகின்றன. இவை வெளியேறும்போது, பெரும்பாலும் நாம் அதன் நிறத்தை கவனிப்பதில்லை. ஒருவிதமான அருவருப்போடு புறக்கணித்துவிடுவோம். ஆனால், நிறத்தை கவனிக்கவேண்டியது அவசியம். காது அழுக்கின் நிறங்கள் வைத்து உடலில் என்ன பிரச்னை, காது சம்பந்தமான நோய்கள் ஏதாவது இருக்கிறதா என்பதை எப்படி கண்டறிவது என்பதை காது, மூக்கு, தொண்டை மருத்துவர் சூரிய பிரகாஷ் விவரிக்கிறார்.

காது 

ஈரமான மஞ்சள்

இது பொதுவாக அனைவரிடமும் காணப்படுகிற நிறம். இதனால் பாதிப்புகள் ஒன்றுமில்லை. இது, வறண்டுவிடாமலும், அரிப்பு ஏற்படாமலும் இருக்க உதவும்.

சாம்பல்

காது தன்னைச் சுத்தம் செய்துகொள்ளும்போது இது சாம்பல் நிறத்தில் இருக்கும். இதனால் பாதிப்புகள் ஏதுமில்லை. ஆனால் இது வறண்டுமருத்துவர் சூரியகுமார் காணப்பட்டு, அரிப்பும் ஏற்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும். அது `எக்ஸீமா’ (Eczema) என்ற தோல் நோயின் அறிகுறியாக இருக்கலாம்.

வெளிர் மஞ்சள்

இந்த வகை குழந்தைகளிடம் அதிகமாகக் காணப்படும். குழந்தைகளுக்குப் பெரியவர்களைவிட அதிகமாக இது சேரும். அவர்கள் வளர வளர இதன் அளவு குறையும்.

பிசுபிசுப்பான அடர் மஞ்சள்

அடர் மஞ்சள் நிறத்தில் பிசுபிசுப்பாக இருந்தால், உங்கள் உடல் அதிகமாக வியர்ப்பதாகப் பொருள். இது உடல் துர்நாற்றத்துக்கும் காரணமாக அமையலாம். மற்றபடி எந்தப் பாதிப்புகளும் இல்லை.

தடித்த அடர் மஞ்சள்

இது அடர் மஞ்சள் நிறத்தில் தடித்துக் காணப்படும். ஒரு பரப்பரப்பான சூழலில் நாம் பயத்தோடு இருக்கும்போதும் இந்த வகைக் குரும்பி அதிகமாகச் சுரக்கும். இது தற்காலிக காது கேளாமை பாதிப்பை ஏற்படுத்தும். உடனடியாக மருத்துவரை அணுகி சிகிச்சை பெற வேண்டும்.

வறண்ட வெள்ளை

வறண்ட வெள்ளை நிறத்தில் இருக்கும் காதுக்குரும்பியால் ஒரு பிரச்னையும் இல்லை. இவர்கள் உடலில் துர்நாற்றம் ஏற்படுவதற்கான வாய்ப்புகளும் குறைவு.

கறுப்பு அல்லது அடர் பழுப்பு

இதில் அதிக நாள்கள் வெளியேறாமல் தங்கிவிடும்போது, இது கறுப்பு நிறமாக மாறிவிடும். இதனால் எந்த பாதிப்புகளும் இல்லை.

நீர்போல வழிதல்

செவி வழியாக நீர்போல வழிய ஆரம்பித்தால், உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும். இது செவிப்பறைகளில் ஏற்பட்டுள்ள பாதிப்பைக் குறிக்கும்.

ரத்தத்துடன் கூடிய காதுக்குரும்பி

செவிப்பறைகளில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளைக் குறிக்கும். உடனடியாக சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும்.

குடைதல்

என்ன செய்யலாம்?

காதுக்குரும்பி சார்ந்த சில பிரச்னைகளை சில வழிமுறைகளைப் பின்பற்றுவதன் மூலமே தடுத்துவிட முடியும். அவை...காதில் அழுக்கின் நிறங்கள்

* குளிக்கும்போது தண்ணீர், சோப், ஷாம்பூ ஆகியவற்றை செவிப்பறைக்கு அருகே கொண்டுசெல்வதைத் தடுக்கவும்.

* எப்போதும் காதுகளை ஈரப்பதமின்றி வறண்டநிலையில் வைத்திருக்க வேண்டும்.

* குளித்து முடித்தவுடன் துண்டின் நுனிப்பகுதியால், காதில் படிந்திருக்கும் தண்ணீரை நீக்கவும்.

* காதிலுள்ள அழுக்கை நீக்கும் பஞ்சுக் குச்சிகளை (Ear cleaning buds) தேவையில்லாமல், அடிக்கடி பயன்படுத்துவதைத் தவிர்க்கவும். காதுகள் பாதிக்கப்படும் வாய்ப்புகள் உண்டு என்பதால்தான் மருத்துவர்கள் இதைப் பயன்படுத்துவதைத் தவிர்க்குமாறு அறிவுறுத்துகிறார்கள்.

செவிகளில் சீழ் வடிதல், ரத்தம் வருதல், வித்தியாசமாக சத்தம் எழுதல், காது அடைப்பது போன்ற உணர்வு ஆகியவை இருந்தால் பஞ்சுக் குச்சிகளைத் தேடிப் போகாமல், மருத்துவரை அணுகுவதுதான் காதுகளுக்கு நல்லது.

டிப்ஸ்

 

காதுகளில் உள்ள அழுக்குகளை அவ்வப்போது வெளியேற்றுவது நல்லது. அதற்காக காதில் பஞ்சுக் குச்சிகளை உபயோகப்படுத்திதான் அதை செய்யவேண்டும் என்பதில்லை. அதற்கு ஓர் எளிய வழி உள்ளது. காதுகளுக்குள் சுண்டு விரல்களை வைத்துக்கொண்டு, வெறும் வாயை மெல்வதுபோல் செய்தால் காதுகளிலில் இருந்து அழுக்குகள் தானாக வெளியேறும். எனவே, உணவை உண்ணும் போதும் நன்றாக மென்று சாப்பிட்டால் காதுகளில் இருந்து அழுக்குகள் தானாக வெளியாகுமாம்.

http://www.vikatan.com/news/health/87203-the-color-of-earwax-indicates-health-problems.html

Link to comment
Share on other sites

தினமும் அதிகம் சேர்த்துக்கொள்ளக் கூடாத 5 உணவுகள்! #HealthAlert

 
 

ம்மில் சிலர் ஏதாவது பிரச்னை என்றால், `சாப்பிட்டா மூட் சரியாகிடும்’ என்று நினைப்பார்கள். சில வேளைகளில் அந்த முயற்சி பலன் தரவும்கூடும். ஆனால் ஆசைப்பட்டுச் சாப்பிடும் உணவிலேயே பிரச்னை என்றால் என்ன செய்வது? சரியான உணவை , சரியான அளவில், சரியான இடைவெளியில் சாப்பிடுவதுதான் ஆரோக்கியம். நாம் சாப்பிடுவது ஆரோக்கியமானதா, சத்தானதா என யோசிக்க ஆரம்பித்தால், நம் உணவுப்பட்டியலில் பல உணவுகள் இருக்காது. அப்படி அன்றாடப் பட்டியலில் அதிகம் சேர்த்துக்கொளக் கூடாத 5 உணவுகள் இருக்கின்றன. அவை...

உணவுகள் - அரிசி

பாலீஷ் செய்யப்பட்ட வெள்ளை அரிசி 

ஒரு வேளை சாதம் அமிர்தம். இரண்டு வேளை அரிசி சார்ந்த உணவுகள் உடலில் நோயை உண்டாக்கும். அதுவே மூன்று வேளைகளானால், உடலில் கழிவுகளை அதிகரிக்கும். பாலீஷ் செய்த அரிசி உணவுகளைச் சாப்பிடுவதால் பசி அதிகமாக எடுக்காது; அத்துடன் அன்றைய நாள் முழுவதற்கும் தேவைப்படும் ஆற்றலும் கிடைக்கலாம். ஆனால், ஒரு கப் அரிசி உணவில் இரும்புச்சத்து, பாஸ்பரஸ், பொட்டாசியம், தயாமின் மற்றும் ஃபோலேட் போன்றச் சத்துக்கள் குறைந்த அளவிலேயே இருக்கின்றன.

உங்கள் சாப்பாட்டு மெனுவில் பெரும்பாலும் வெள்ளை அரிசியால் ஆன உணவுகளாக இருந்தால், உங்களுக்கு நுண் ஊட்டச்சத்துக் குறைபாடு ஏற்படும் வாய்ப்புகள் உள்ளன. மூன்று வேளையும் இதைச் சாப்பிட்டால், உடல்பருமன் மற்றும் டைப் 2 சர்க்கரைநோய் உண்டாகும். சாதம் மட்டுமல்ல, வெள்ளை அரிசியால் தயாரிக்கப்பட்ட நூடுல்ஸ், பாஸ்தா, பிரெட் போன்றவற்றையும் தவிர்ப்பதே நல்லது.

அசைவ உணவு

இறைச்சி

நமது நாடு வெப்பநாடு. எனவே, நமது ஆரோக்கியத்துக்கு தாவர உணவுகள்தான் சரியான சாய்ஸ். புலால் மற்றும் இறைச்சி உணவுகள் அதிக அமிலத்தன்மைகொண்டவை. சமீபத்தில் உலக சுகாதார அமைப்பு ஓர் அறிக்கையை வெளியிட்டது. அதில், `159 வகையான நோய்கள் அசைவ உணவுகளைச் சாப்பிடுவதால்தான் ஏற்படுகின்றன’ என்பதைத் தெளிவுபடுத்தியிருக்கிறது அந்த அமைப்பு.குறிப்பாக, பதப்படுத்தப்பட்ட இறைச்சிகளில் உப்பின் அளவு அதிகமாக இருப்பதால், உயர் ரத்த அழுத்தம் மற்றும்  இதய நோய் வருவதற்கான ஆபத்து உள்ளது.

அசைவ உணவுகளில் இருக்கும் புரதம் சரியாகச் செரிமானம் ஆகாமல் நச்சுக்களாக மாறுகிறது. அவை நம் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியைப் பாதித்து, நம்மைப் பலவீனமாக மாற்றுகிறது. அசைவ உணவுகளுடன், நார்ச்சத்து நிறைந்த உணவுகளையும் சேர்த்து உண்டால், எளிதாகச் செரிமானமாகிவிடும். 

காபி

காபி, டீ

காபியும் டீயும் நம் மூளையைச் சுறுசுறுப்பாக வைத்திருக்க உதவுகின்றன. அதுமட்டுமல்ல, பார்கின்சன் நோய் (Parkinson's disease) மற்றும் அதிரோஸ்கிளிரோசிஸ் (Atherosclerosis)  போன்றவை வராமல் தடுக்கின்றன. ஆனால், அதிக அளவில் காபி, டீ அருந்துவது நமது  இதயத்துடிப்பையும், ரத்த அழுத்தத்தையும் அதிகரிக்கச் செய்யும். மனஅழுத்தத்தை உருவாக்கக்கூடிய அட்ரினலின் மற்றும் கார்டிசோல் எனப்படும் ஹார்மோன்களின் உற்பத்தியைத் தூண்டும்.இதனால் மனஅழுத்தம், பதற்றம், சோர்வு, கவனமின்மை ஆகியவை உண்டாகும். 
உணவுகளில் இருந்து கிரகிக்கப்படும் கால்சியத்தை காபியில் உள்ள `காஃபின்’ தடுப்பதால், `ஆஸ்டியோபொரோசிஸ்’ எனப்படும் எலும்பு சம்பந்தமான நோய்களும் உண்டாகும். அதே நேரத்தில் பால் உணவுகளும் சளி, இருமல், சுவாசப் பிரச்னைகள், ஆஸ்துமா ஆகியவற்றை அதிகப்படுத்தும். இரவில் பால், தயிர், மோர் போன்றவற்றைத் தவிர்க்க வேண்டும். அவற்றுக்குப் பதில் சுக்கு காபி, மூலிகைச் சாறு, காய்கறி சூப், சத்துமாவு கஞ்சி போன்றவற்றை அருந்தலாம்.

வெள்ளை சர்க்கரை

வெள்ளைச் சர்க்கரை

வெள்ளைச் சர்க்கரை சேர்க்காத இனிப்பு உணவுகளே இல்லை என்கிற அளவுக்கு அதன் ஆதிக்கம் இன்றைக்கு அதிகமாகிவிட்டது. பெரும்பாலான பெண்களுக்கு வரும் ஆஸ்டியோபொரோசிஸ் நோய்க்கும், பல புற்றுநோய்கள் வளர்வதற்கும், சர்க்கரைநோய்க்கும் சர்க்கரைதான் காரணம். உற்பத்தியான நாளிலிருந்து ஆறு மாத காலத்துக்கு மேற்பட்ட சர்க்கரையைச் சாப்பிடக் கூடாது. காரணம், அதில் உள்ள ரசாயனம் நஞ்சாக மாறிவிடும்.

பல் வலி, பல் சொத்தை, குடற்புண், சளித்தொல்லை, உடல்பருமன், இதய நோய், ரத்த அழுத்தம், சர்க்கரைநோய் போன்ற பெரிய வியாதிகள் அனைத்துக்கும் இதுதான் முக்கியக் காரணமாக இருக்கிறது.பேரீச்சை, உலர் திராட்சை, பனைவெல்லம், நாட்டு வெல்லம் ஆகியவற்றை வெள்ளைச் சர்க்கரைக்கு மாற்றாகப் பயன்படுத்தலாம்.

நொறுக்குத்தீனிகள்

நொறுக்குத்தீனிகள்

இன்று 18 வயது   இளைஞர்கள் சிலரே 80 கிலோ எடை வரை இருப்பதற்கு முக்கியக் காரணம் நொறுக்குத்தீனிகள்தான். எண்ணெயில் பொரித்த உணவுகளில் அதிகமான கொழுப்பு மற்றும் கலோரிகள் உள்ளன. உதாரணமாக 10 கிராம் சிப்ஸில் 10கிராம் கொழுப்பு மற்றும் 154 கலோரிகள் அடங்கியுள்ளன. சிப்ஸ்களில் சேர்க்கப்படும் உப்பு உடல் உறுதியைக் கெடுக்கக்கூடியது; ரத்த அழுத்தத்தை அதிகரிக்கச் செய்வது. அடிக்கடி எண்ணெயில் பொரித்த உணவுகளைச் சாப்பிட்டால், ரத்தத்தில் கொழுப்பின் அளவு அதிகரிக்கும். 

 

வீட்டில் நாம் பயன்படுத்தும் உணவுகளில்கூட சாதாரண உப்புக்குப் பதிலாக இந்துப்பு, எலுமிச்சை, புளி, தக்காளி ஆகியவற்றைச் சேர்த்துக்கொள்ளலாம். வடை, பஜ்ஜி, சிப்ஸ்,  துரித உணவுகளுக்குப் பதிலாக பாதாம், முந்திரி, வேர்க்கடலை, சுண்டல் போன்ற சத்தான ஸ்நாக்ஸ்களைச் சாப்பிடலாம்.

http://www.vikatan.com/news/health/87268-5-foods-you-should-never-eat-daily.html

Link to comment
Share on other sites

சிறுநீர் பிரச்னை, தாகம், வயிற்றுக் கடுப்பு... விரட்டியடிக்கும் வெள்ளரி!

 
 

`வெள்ளரிக்கா பிஞ்சு வெள்ளரிக்கா! என்னைப் பார்க்காமப் போறாளே சந்திரிக்கா' 

`வெள்ளரிக்காய் பிளந்ததுபோல் வெண்ணிலவே நீ சிரிக்காயோ...' - திரைப்படங்களில் இடம்பெறும் பாடல்வரிகள் இவை. 

தாத்தா தோட்டத்து வெள்ளரிக்காய்... இது எழுத்தாளர் இராய.செல்லப்பாவின் சிறுகதைத்தொகுதி. இன்னும் பல சிறப்புகளைக்கொண்ட வெள்ளரிக்காயின் தாவரவியல் பெயர் Cucumis Sativus. படரும் கொடி வகையைச்சேர்ந்த வெள்ளரியின் தாயகம் இந்தியா. 3 ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட தாவரமான இது உலக அளவில் பல இடங்களில் விளைவிக்கப்படுகிறது. இமயமலைப்பகுதியில் விளையக்கூடிய சிக்கிம் வெள்ளரி 15 அங்குலம் நீளமும், 6 அங்குலம் அகலும் உள்ளது. ஜமைக்கா நாட்டில் விளையக்கூடிய வெள்ளரி எலுமிச்சம்பழ அளவே காணப்படும். தென் தமிழகத்தில் குறிப்பாக விருதுநகர், திருநெல்வேலி மாவட்டங்களில் கிடைக்கும் வெள்ளரிப்பிஞ்சு சாப்பிடச் சுவையாக இருக்கும். அதிலும் சாத்தூர் வெள்ளரிப்பிஞ்சு இன்னும் சிறப்பு.

வெள்ளரி

ஆந்திரச் சமையலில் காரம் அதிகமாகச் சேர்ப்பார்கள். ஆகவே அவர்களின் சமையலில் வெள்ளரிக்காய், பாசிப்பருப்பு சேர்ந்த பச்சடி நிச்சயம் இடம்பிடிக்கும். இந்த பச்சடியைச் சாப்பிடுவதால் அது காரத்தைக் கட்டுப்படுத்துவதோடு சாப்பாட்டின்போது அதிகமாக தண்ணீர் குடிக்க வேண்டிய தேவையைக் குறைத்துவிடுகிறது.

வெள்ளரியின் கொழுந்து, பிஞ்சு, காய், பழம், வேர் போன்றவை மருந்தாகப் பயன்படுகிறது. நீர்ச்சத்து நிறைந்த வெள்ளரியைச் சாப்பிடுவதால் தாகம் தணிப்பதோடு, நாவறட்சியைப் போக்கி பசியை உண்டாக்கக்கூடியது. மேலும் சிறுநீர் பிரிவைத் தூண்டுவதோடு இரைப்பையில் ஏற்படும் புண், மலச்சிக்கலைக் குணப்படுத்துகிறது. மலச்சிக்கலுக்காக ஏதேதோ மருந்து சாப்பிடுகிறவர்கள் தினமும் இரண்டு வெள்ளரிக்காய்களை சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் பிரச்னை இல்லாமல் குடல் சுத்தமாகி விடும். உடலுக்குக் குளிர்ச்சியை உண்டாக்கக்கூடியது என்பதால் வயிற்றுப்புண் உள்ளவர்களுக்கு இது அருமருந்தாகிறது. வயிற்றுப்புண்ணால் அவதிப்படுபவர்கள் இரண்டு மணி நேரத்துக்கு ஒருமுறை வெள்ளரிச்சாறு அருந்தி வந்தால் நாளடைவில் குணம் தெரியும். 

வெள்ளரி

வெள்ளரியில் சோடியம், கால்சியம், மெக்னீசியம், இரும்பு, பாஸ்பரஸ், கந்தகம், சிலிக்கான், குளோரின் போன்ற சத்துகள் உள்ளன. மேலும் ரத்த சிவப்பணுக்களை உற்பத்தி செய்யும் பொட்டாசியம் அதிக அளவில் உள்ளது. பொட்டாசியம் மட்டுமல்லாமல் மெக்னீசியம் மற்றும் நார்ச்சத்துகள் நிறைந்த வெள்ளரி ரத்த அழுத்தத்தை சீராக வைத்திருப்பதோடு வாய் துர்நாற்றத்தைப் போக்கக்கூடியது. கூடவே பல் ஈறுகளைப் பாதுகாக்கும் திறன் கொண்டது. இன்சுலினை சுரக்கச்செய்யும் கணைய செல்களுக்கு தேவைப்படும் வளர்ச்சி ஊக்கியை (ஹார்மோன்) கொண்டுள்ளதால் சர்க்கரை நோயாளிகளுக்கு வெள்ளரி சிறந்த மருந்தாகிறது.

நீர்வறட்சியை குறைக்கும்

கோடைக் காலங்களில் வெயிலின் தாக்கத்தால் சிறுநீர் துவாரங்களில் ஏற்படக்கூடிய அரிப்பு, வலி போன்றவற்றைக் குணப்படுத்தக்கூடியது வெள்ளரிப்பிஞ்சு. வாதம், பித்தம், கபம் எனப்படும் மூன்றையும் போக்கக்கூடியது வெள்ளரிப்பிஞ்சு. சமீபத்திய ஆராய்ச்சி ஒன்றில் கீல்வாதம் தொடர்பான கோளாறுகளை குணமாக்குவதில் வெள்ளரி சிறப்பாக பணியாற்றுவது கண்டறியப்பட்டுள்ளது. வீக்கம், நீர்த்தாரை நோய்களை குணமாக்க வெள்ளரிக்காய் பயன்படுகிறது. வெள்ளரி இலைகளை காய வைத்து சீரகம் சேர்த்து வறுத்துப் பொடியாக்கி ஒரு சிட்டிகை அளவு சாப்பிட்டு வந்தால் தொண்டை தொடர்பான நோய்கள் விலகும். வெள்ளரி விதையை அரைத்து 5 பங்கு நீர் சேர்த்து வடிகட்டி பனங்கற்கண்டு அல்லது நாட்டுச் சர்க்கரை சேர்த்து குடித்து வந்தால் நீர் எரிச்சல், நீரடைப்பு, கல் அடைப்பு, சதை அடைப்பு, வெள்ளைப்படுதல் போன்றவை குணமாகும். ஆண்மைக்குறையைப் போக்க வெள்ளரி விதை மருந்தாகிறது. பாதாம், பிஸ்தா, அக்ரோட் உள்ளிட்ட பருப்புகளுடன் வெள்ளரி விதை சேர்த்து தயாரிக்கப்படும் பொடி ஆண்மைப்பிரச்னைக்கு தீர்வு தரும். குழந்தைகள் சிறுநீர் கழிக்க சிரமப்படும்போது வெள்ளரி விதையை மையாக அரைத்து தொப்புள் மற்றும் அடிவயிற்றில் பூசுவதன்மூலம் நிவாரணம் கிடைக்கும். 

வெள்ளரிக்காயைப்போல வெள்ளரிப்பழமும் மருந்தாக அமைகிறது. கோடையில் ஏற்படும் நோய்களை சரிசெய்வதோடு கர்ப்பப்பை பிரச்னை, அடிவயிற்றில் ஏற்படும் சூடு,  மாதவிடாய்க்கோளாறுகள் போன்றவற்றை சரி செய்யும். பிறப்புறுப்பில் ஏற்படும் எரிச்சலையும் போக்கக்கூடியது.

http://www.vikatan.com/news/health/87269-amazing-health-benefits-of-cucumber.html

Link to comment
Share on other sites

உடல்நலன் காக்கும் மருத்துவகுணங்கள் அடங்கிய பாப்கார்ன்!

 
 

திரையரங்கம்... அருகில் அமர்ந்திருப்பவரின் முகம் தெரியாத இருள்... திகில் படம். அந்தக் கணத்தில் நமக்கு உற்ற துணையாக பாப்கார்ன்! முக்கியமான காட்சிகள் கடந்த பிறகுதான், கையில் வைத்திருக்கும் கவரில் இருக்கும் பாப்கார்ன் முழுவதும் தீர்ந்துபோனது தெரியவரும். இந்த அட்டகாசமான நொறுக்குத்தீனியை நம்மில் பெரும்பாலானவர்களுக்கு அறிமுகப்படுத்திய பெருமை சினிமா தியேட்டர்களையே சாரும்.  சுவாரஸ்யமாகப் படம் பார்த்துக்கொண்டிருக்கும்போது அழுது, அடம்பிடிக்கும் குழந்தையைக்கூட இதைக் கொடுத்து அமைதிப்படுத்திவிடலாம். இன்றைக்கு பெரிய டிபார்ட்மென்ட் ஸ்டோர்கள் தொடங்கி, பொரிகடலைக்கடை வரை எங்கும் கிடைக்கிறது பாப்கார்ன்.

பாப்கார்ன்

பாப்கார்னை, `மக்காச்சோளப் பொரி’ என்று தமிழில் சொல்லலாம். கிட்டத்தட்ட நம்மூரில் பொரி செய்வதுபோலத்தான் இதன் செய்முறையும். கேழ்வரகு, சோளம், கம்பு, மக்காச்சோளம் போன்ற தானியங்கள் ஈரப்பதம்கொண்டவை. மக்காச்சோளத்தை சூடுபடுத்தும்போது, அது வெடித்து (Popping) மொறு மொறுவென்ற பதத்துக்கு வந்து பாப்கார்ன் ஆகிறது. பாப்கார்னைத் தயாரிப்பதற்கு பல்வேறு தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படுகின்றன. மைக்ரோவேவ் அவனில்தான் அதிகம் தயாரிக்கப்படுகிறது. வீடுகளில் நாமே தயாரிக்க மார்கெட்களில் சின்னச் சின்ன சாதனங்களும் கிடைக்கின்றன. திருவிழாக்கள், சினிமா தியேட்டர்களில் விற்பனைக்குப் பயன்படுத்தப்படுவது பெரிய இயந்திரம். 

பாப்கார்னை நாம் இன்றைக்கும் ஆச்சர்யத்தோடு புதுசாகப் பார்த்துக்கொண்டிருக்க, `இது கண்டுபிடிக்கப்பட்டு ஆயிரக்கணக்கான ஆண்டுகள் ஆகின்றன’ என ஒரு போடு போடுகிறார்கள் தொல்லியலாளர்கள். மெக்ஸிகோவில் கி.மு. 3600-க்கு முந்தைய காலத்தில் தயாரிக்கப்பட்ட பாப்கார்னின் மிச்சம் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. ஆக, அந்தக் காலத்திலிருந்தவர்களிடம் மெஷின் இல்லையென்றாலும், மக்காச்சோளத்தைப் பொரிக்கத் தெரிந்திருக்கிறது. 

மொறுமொறு-பாப்கார்ன்

19-ம் நூற்றாண்டில்தான் முதன்முதலில் பாப்கார்ன் மெஷின் கண்டுபிடிக்கப்பட்டது. அமெரிக்காவின் இல்லினாய்ஸைச் சேர்ந்தவர் சார்லஸ் க்ரீட்டர்ஸ் (Charles Cretors). ஒரு பேக்கரி வைத்திருந்தார். அவர் வேர்க்கடலை வைக்கும் இயந்திரம் ஒன்றை வைத்திருந்தார். ஃப்ரெஷ்ஷாக வறுத்த வேர்க்கடலை வேண்டும் என்கிறவர்களுக்கு, சுடச் சுட அந்த இயந்திரத்தில் வறுத்துக் கொடுப்பார். ஆனால், அந்த இயந்திரத்தின் மேல் அவருக்கு திருப்தி இல்லை. தானாகவே அதில் சில மாற்றங்களைச் செய்தார். பிறகு, அவரே சில இயந்திரங்களை வடிவமைத்தார். அது அவர் சிகாகோவுக்கு குடும்பத்தோடு இடம்பெயர்ந்திருந்த நேரம். ஒருநாள் அவர் கண்டுபிடித்த மெஷின்களில் ஒன்றில் மக்காச்சோளத்தைப் பொரித்துப் பார்க்க, பாப்கார்ன் உருவானது. உலகமெங்கும் உலாவரும் அட்டகாசமான நொறுக்குத்தீனியாகவும் ஆகிவிட்டது. அமெரிக்காவில் `தேசிய பாப்கார்ன் தினம்’, `தேசிய பாப்கார்ன் மாதம்’ எல்லாம் கொண்டாடும் அளவுக்கு வளர்ந்து நிற்கிறது. 

1930. உலக அளவில் பொருளாதார வீழ்ச்சி தலைவிரித்து ஆடிய காலகட்டம். அந்தச் சமயத்தில் குறைந்த விலையில் கிடைத்த நொறுக்குத்தீனி, பாப்கார்ன் மட்டுமே. இதற்கு இருக்கும் அபாரமான வரவேற்பைப் பார்த்து, அமெரிக்காவில் பல விவசாயக் குடும்பங்களேகூட இதன் தயாரிப்பில் ஈடுபட்டன. இதற்காகவே மக்காச்சோளத்தை அதிகம் பயிரிட்டார்கள். இன்றைக்கு உலகம் முழுக்க எக்கச்சக்க பிராண்டுகள். அதிலும். அமெரிக்காவில் உள்ள மத்திய மேற்குப்பகுதி, `உலகின் பாப்கார்ன் தலைநகரம்’ என்றே அழைக்கப்படுகிறது. உலகிலேயே பாப்கார்னை அதிகம் விரும்புகிறவர்கள் அமெரிக்கர்கள்தான். பாப்கார்னை கிறிஸ்துமஸ் மரத்தை வடிவமைக்கவெல்லாம் பயன்படுத்திப் பார்த்துவிட்டார்கள் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். 

பாப்கார்ன்

டயட்டீஷியன் சௌமியா, பாப்கார்னில் இருக்கும் சத்துக்கள் குறித்துச் சொல்கிறார். ``100 கிராம் பாப்கார்னில் 375 கலோரிகள் உள்ளன. கார்போஹைட்ரேட் 74 கிராம், கொழுப்பு 4.3 கிராம், சோடியம் 7 மி.கி., பொட்டாசியம் 274 மி.கி., புரோட்டீன் 11 கிராம் இருக்கின்றன. அதோடு வைட்டமின் பி6, மக்னீசியம், இரும்புச்சத்து, நார்ச்சத்து ஆகியவையும் இதில் உண்டு. பாப்கார்ன் ஆரோக்கியமானதுதானா என்பது, இது எப்படி தயாரிக்கப்படுகிறது என்பதைப் பொறுத்தது. மேலை நாடுகளில் ஆலிவ் ஆயில் சேர்த்து தயாரிக்கும் பழக்கம் உண்டு. எவ்வளவு சுத்தமானதாக இருந்தாலும், எண்ணெய் சேர்த்து பாப்கார்னைத் தயாரிப்பது சரியான வழிமுறை அல்ல. மைக்ரோவேவ் அவன் கொண்டு தயாரிக்கப்படுவதுதான் ஆபத்தில்லாதது. சௌமியா

சோளத்தால் தயாரிக்க்கப்படுவது பாப்கார்ன். சோளத்தில் பி காப்ளெக்ஸ் வைட்டமின்கள், வைட்டமின் இ ஆகியவை நிறைவாக உள்ளன. எனவே இது செரிமானத்தை எளிதாக்கும்; மலச்சிக்கலைத் தவிர்க்கும். பாப்கார்னில் இருக்கும் நார்ச்சத்து ரத்தத்தில் சேரும் கொலஸ்ட்ராலின் அளவைக் குறைக்க உதவும். இதன் மூலம் இதயநோய்கள், பக்கவாதம் ஆகியவை வராமல் தடுக்கலாம். இது, ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவையும் இன்சுலின் சுரப்பையும் சீராக வைத்திருப்பதால், சர்க்கரைநோய் உள்ளவர்கள் இனிப்பு சேர்க்காத பாப்கார்னைச் சாப்பிடலாம். `இதில் உள்ள பாலிஃபினாலிக் கூட்டுப் பொருள்கள் புற்றுநோயைத் தடுக்கக்கூடியவை’ என்கின்றன சமீபத்திய ஆய்வுகள். முதுமையில் ஏற்படும் பார்வைக்குறைபாடு, தசைகள் வலுவிழத்தல், ஆஸ்டியோபொரோசிஸ், முடி உதிர்வு, ஞாபகமறதி ஆகியவற்றின் தீவிரத்தையும் இது கட்டுப்படுத்தும். இதில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்களுக்கு அந்த ஆற்றல் உண்டு. உருளைக்கிழங்கு சிப்ஸோடு ஒப்பிடும்போது, அதைவிட பாப்கார்னில் கலோரி குறைவு. இதில் உள்ள நார்ச்சத்து, நன்கு சாப்பிட்ட திருப்தியைத் தந்துவிடும்; எனவே, இது பசியைத் தூண்டும் ஹார்மோனைக் கட்டுப்படுத்தி, பசியுணர்வைக் குறைக்கும். எனவே, உடல் எடையைக் குறைக்க விரும்புபவர்கள் இதைச் சாப்பிட்டால், அதிக உணவு சாப்பிடவேண்டிய அவசியம் ஏற்படாது. 

பாப்கார்னில் உடலுக்கு நல்ல பலன்களைத் தரும் ஏராளமான அம்சங்கள் இருக்கின்றன. ஆனாலும், கடைகளிலும், சினிமா தியேட்டரிலும் கிடைக்கும் வகைகளில் கவனமாக இருப்பது நல்லது. இதில் தூவப்படும் உப்பு, வெண்ணெய், சில மசாலா சமாசாரங்கள் நம் உடலுக்கு ஒவ்வாதவை. இவை பாப்கார்னில் உள்ள பாலிஃபினாலிக் கூட்டுப் பொருள்களின் தன்மையை பாதித்துவிடும். அதனால் இவையெல்லாம் கலந்த பாப்கார்னைத் தவிர்க்கலாம். மற்றபடி பாப்கார்ன் சாப்பிடுவது நமக்குப் பலவழிகளில் நன்மை செய்யக்கூடியது’’என்கிறார் சௌமியா. 

சோளப்பொரி

 

http://www.vikatan.com/news/health/87322-health-benefits-of-popcorn.html

Link to comment
Share on other sites

துவைத்தல், பெருக்குதல், பாத்திரம் கழுவுதல்... இப்படியும் குறைக்கலாம் உடல் எடை!

 
 

டல்பருமன், சர்க்கரைநோய், இதயக்கோளாறுகள் எனப் பல நோய்கள் இன்று வரிசைகட்டி நிற்பதற்குக் காரணம் உடல் உழைப்பு இல்லாத, உட்கார்ந்தே பார்க்கும் பணிச்சூழல். எடை குறைப்பதின் அடிப்படை உடலில் உள்ள கலோரிகளை எரிப்பது. இதற்காக வீட்டிலேயே ஃபிட்னெஸ் கருவிகளை வாங்கி கடுமையான பயிற்சிகளில் ஈடுபடுகிறார்கள் பலர். வேறு சிலரோ, தொலைக்காட்சியில் விளம்பரமாக வருகிறது என்று அதிர்வை ஏற்படுத்தும் கருவிகளை எல்லாம் வாங்கி, வயிற்றில் கட்டிக்கொண்டு அலைகிறார்கள்.

உடல் எடை   

‘இதுபோல செயற்கை முறையில் எடை குறைக்க முயற்சிப்பது பக்கவிளைவுகளையே ஏற்படுத்தும்’ என மருத்துவர்கள் எச்சரித்தாலும், அவர்கள் கேட்பதில்லை. உடல் எடையைக் குறைக்க, பக்கவிளைவுகள் ஏற்படுத்தாத எளிய வழிமுறைகளும் இருக்கின்றன. ஒன்றும் வேண்டாம், துவைத்தல், பெருக்குதல், பாத்திரம் கழுவுதல்... ... என நம் வேலையை நாமே இழுத்துப்போட்டு செய்தும்கூட குறைக்கலாம் உடல் எடை! அதாவது, உடலில் உள்ள கலோரிகளை எரிக்க முடியும். உண்மை... வீட்டு வேலைகளில் எந்த வேலையைச் செய்தால், எவ்வளவு கலோரிகள் குறையும்... பார்க்கலாமா? 

பெருக்கல்... குறைக்கும்!

வீட்டைப் பெருக்கி சுத்தம்செய்வது எல்லா வீடுகளிலும் அன்றாடம் நடக்கும் எளிய வேலை; அவசியமான வேலை. இதுகூட கணிசமாக நம் உடல் எடையைக் குறைக்க உதவும். சுமார் 30 நிமிடங்கள் வீட்டைப் பெருக்கி சுத்தம் செய்தால், உடலில்  87 முதல் 102 கலோரிகள் எரிக்கப்படும். இது டிரெட்மில்லில் 15 நிமிடங்கள் கடுமையாக நடைப்பயிற்சி செய்வதற்குச் சமம். 

டிரெட்மில்லில் நடைப்பயிற்சி 

வேக்வம் க்ளீனர் வேல்யூவபிள்

வாக்யூம் க்ளீனரால் வீட்டில் உள்ள தூசிகளைச் சுத்தம் செய்வது மற்றோர் எளிய வழி. இந்த வேலையை 30 நிமிடங்கள் செய்தால், உடலில் 90 முதல் 111 கலோரிகள் வரை எரிக்கலாம். இதன் மூலம் உடல் எடை குறையும்; வீடும் சுத்தமாகும். இது, 15 நிமிடங்கள் குத்துச்சண்டைப் பயிற்சி செய்வதற்குச் சமமானது.  

அறை ஒழுங்கு ஃபிட்னெஸுக்கு விதை!

நம் படுக்கை அறையை சுத்தம் செய்து, அறையை நமக்குப் பிடித்த முறையில் மாற்றியமைப்பது நம் எல்லோருக்குமே பிடித்த வேலையாகத்தான் இருக்கும். இதைச் செய்வதால், 30 நிமிடங்களில் 189-ல் இருந்து 223 கலோரிகளை விரட்டலாம்.

சுத்தமான வீடு 

ஃபர்னிச்சர் சுத்தம் பலன் தரும்!

டி.வி., கம்ப்யூட்டர், ஃபேன், ஃபர்னிச்சர் போன்றவற்றை 30 நிமிடங்கள் சுத்தம் செய்தால், 57 முதல் 66 கலோரிகள் வரை எரிக்க முடியும். தூசி அலர்ஜி உள்ளவர்கள், சைனஸ் பிரச்னை உள்ளவர்களுக்கு இந்த வேலை ஏற்றதல்ல. 

பாத்திரம் கழுவினால்  பலே பலன்!

எல்லோராலும் எளிதாகச் செய்யக்கூடிய வேலை பாத்திரம் கழுவுவது. சுமார் 30 நிமிடங்களுக்கு இந்த வேலையைச் செய்தால், 49 முதல் 58 கலோரிகளை காணாமல் அடிக்கலாம். இதுவும் சாதாரண வேலை கிடையாது. 300 மீட்டர் நீச்சல் பயிற்சி செய்ததற்குச் சமம்.

பாத் ரூம் 

குளியல் அறை சுத்தம்... குறைக்குமே கலோரி!

குளியலறை, கழிப்பறை, வாஷ் பேசின் ஆகியவற்றை சுத்தம் செய்தால், 106 முதல் 124 கலோரிகளை அடித்து விரட்டலாம். இது, 30 முறை துணி துவைக்கும் இல்லதரசிஸ்கிப்பிங் செய்வதற்குச் சமமானது.

காரைக் கழுவுவது நல்லது!

கார் அல்லது வீட்டின் ஜன்னல் கண்ணாடிகளைக் கழுவி சுத்தம் செய்தல் போன்ற வேலைகளை அரை மணி நேரம் செய்யலாம். இது, நம் உடலில் இருந்து 126 முதல் 149 வரையிலான கலோரிகளை குறைக்க உதவும். இது, 40 முறை புஷ்-அப் செய்வதற்குச் சமம்.

அயர்ன் செய்வதும் ஜும்பா நடனமும்!

வயிற்றுப் பகுதியில் உள்ள கொழுப்பு கரைய, ஆடைகளை அயர்ன் செய்வது சிறப்பான பயிற்சி. சுமார் 3 மணி நேரம் அயர்ன் செய்யும் பணியைச் செய்தால், 420 கலோரிகள் எரிக்கப்படும். இது, அதே அளவு நேரம் ஜும்பா (Zumba) நடனப் பயிற்சி செய்வதற்குச் சமமானது. 

கலோரிகளைக் குறைக்க துவைக்கலாம்!

சாதாரணமாகத் தரையில் அமர்ந்து துவைக்கும் வேலையைச் செய்வதன் மூலமே 78 கலோரிகளைக் குறைக்கலாம். இது 100 முறை உட்கார்ந்து எழும் பயிற்சிக்குச் சமமானது.  

இந்த வேலைகள் அத்தனைக்கும் நம் சுற்றுசூழலோடும் தொடர்புண்டு. நாமும் நமக்கு நெருக்கமானவர்களும் வாழும் வீட்டைச் சுத்தமாக வைத்திருப்பதுகூட நம் எடையைக் குறைக்கும் என்பது நல்ல விஷயம்தானே! சுத்தத்துக்கு சுத்தம், எடையும் குறையும். ஆக, இரட்டிப்புப் பலன்! 

http://www.vikatan.com/news/health/87448-common-household-work-that-burn-calorie.html

Link to comment
Share on other sites

உடல்பருமன் குறைக்க உதவும் குறைந்த கலோரியுள்ள 8 உணவுகள்!

உடல்பருமன் இன்று எல்லா வயதினருக்குமே மிகவும் சவாலான பிரச்னை. திரும்பிய பக்கமெல்லாம் உடற்பயிற்சிக் கூடங்கள், உடல்பருமனைக் குறைக்க தொலைக்காட்சி தொடங்கி பத்திரிகைகள் வரை விழிப்புஉணர்வு நிகழ்ச்சிகள், கட்டுரைகள், செய்திகள், துணுக்குகள்... ஆனாலும் இது குறைவதாக இல்லை. `கடுமையாக உடற்பயிற்சி செய்தும் பலருக்கும் எடையோ, பருமனோ குறையாமல் இருப்பதற்குக் காரணம் உணவுப் பழக்கம். குறைந்த அளவு கலோரிகள் கொண்ட உணவுகளைச் சாப்பிடுவதுதான் உடல் எடையைக் குறைக்க உதவும் உண்மையான ரகசியம்’ என்கிறார்கள் மருத்துவர்கள். `சரியான நேரத்துக்குச் சாப்பிடாதது, ஒரே நேரத்தில் அதிக அளவில் உணவைச் சாப்பிடுவது, இரவில் பீட்சா, பர்கர் போன்ற கொழுப்பு நிறைந்த ஜங்க் ஃபுட்களைச் சாப்பிடுவது, குளிர்ப்பானங்களைக் குடிப்பது போன்றவை உடல் எடை அதிகரிக்கக் காரணம்’ என்றும் எச்சரிக்கிறார்கள் மருத்துவர்கள். இந்தப் பிரச்னைக்குத் தீர்வு தரும் குறைந்த அளவு கலோரி கொண்ட உணவுகளும் இருக்கின்றன. அவை எவை... பார்க்கலாமா?

உடல்பருமன் குறைக்கும் ராகி தோசை 

ராகி தோசை

கேழ்வரகு, தினை வகையைச் சேர்ந்தது. இதில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள், நார்ச்சத்துகள் நிறைவாக உள்ளன. வழக்கமான தோசையைவிட கொஞ்சம் வித்தியாசமான சுவையாக இருப்பதோடு, கலோரிகள் குறைவாகவும் உள்ள உணவு. எனவே, காலை, மாலை உணவாக இதைச் சாப்பிடலாம்.

ஓட்ஸ் சிறுதானிய இட்லி 

ஓட்ஸ் இட்லி

உளுத்தம் பருப்பையும் அரிசியையும் கொண்டு செய்யப்படும் இட்லி, உலக அளவில் மிகச் சிறப்பான காலை உணவு. இருந்தாலும், இதில் கலோரிகள் அதிகம் உள்ளது. ஆனால், ஓட்ஸில் குறைவான கலோரிகளே உள்ளன. மேலும், ஆன்டிஆக்ஸிடின்ட்கள் அதிக அளவில் உள்ளன. எனவே, உடல் எடையைக் குறைக்க நினைப்போருக்கு ஏற்ற காலை உணவு ஓட்ஸ் இட்லி. இதன் மூலம் சர்க்கரைநோய், உடல்பருமன் போன்றவற்றையும் கட்டுப்படுத்த முடியும்.

பருப்பு 

பருப்பு

இந்தியாவில் கிராமம் முதல் நகரம் வரை அனைத்து வீட்டுச் சமையலிலும் பருப்பு இடம்பெறாமல் இருக்காது. பருப்பு, புரோட்டீன் சத்து நிறைந்தது. குறைந்த அளவே கலோரிகள் இருந்தாலும், சாப்பிட்ட பிறகு நிறைவாகச் சாப்பிட்ட திருப்தி கிடைக்கும். அதேநேரத்தில் ஆரோக்கியமானதும்கூட.

சிவப்பு கிட்னி பீன்ஸ்

இதில் அதிக அளவில் புரோட்டீன்கள் உள்ளன. கொழுப்புச் சத்து இல்லை. அதேநேரத்தில் தக்காளிக் குழம்பு போன்றவற்றுடன் சேர்த்துச் சாப்பிட்டால், அதிகப் பலன்கள் கிடைக்கும். இதில் அதிக அளவில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள், நார்ச்சத்துகள் உள்ளன. உடல் எடை குறைக்கச் சிறந்த உணவு.

 

 

 

ரொட்டி 

ரொட்டி

ரத்த சர்க்கரையை அதிகரிக்காத குறைந்த கிளைசெமிக் உள்ள (நாம் உண்ணும் உணவில் உள்ள சர்க்கரையின் அளவைக் கணக்கிடும் அளவுகோல் 'கிளைசெமிக் இண்டெக்ஸ்'. இந்த அளவீடு அதிகமாகும்போது, ரத்தத்தில் உள்ள குளூக்கோஸ் அளவு அதிகரிக்கும்.) உணவுகளில் ஒன்று. எனவே, உடல் எடை குறைக்க உதவும்; உடலுக்கு ஆரோக்கியமானதும்கூட. வெள்ளை ரொட்டியைவிட, பழுப்பு ரொட்டியே சிறந்தது.

கூழ் 

கூழ்

கேழ்வரகு கூழை காலை வேளையில் சாப்பிட்டு வந்தால், செரிமான பிரச்னைகள் தீரும். குறிப்பாக ராகி கூழ், உடல் கொழுப்பை கரைத்து, உடல் எடையையும் குறைக்க உதவும்.

தோக்ளா

குஜராத் மாநிலத்தின் பிரபலமான சிற்றுண்டி தோக்ளா (Dhoklas). பொட்டுக்கடலை மாவுடன் 4 மடங்கு அரிசி மாவு கலந்து இது தயாரிக்கப்படுகிறது. தமிழகத்தில் இது ஸ்வீட் ஸ்டால், பேக்கரிகளில் கிடைக்கும். இதுவும் குறைந்த அளவு கலோரி உள்ள உணவு. உடல்பருமனைக் குறைக்க ஏற்றது.

 

 

ரெய்த்தா

 

ரெய்த்தா

பொதுவாக ரெய்த்தா, சப்பாத்தி, பிரியாணி போன்றவற்றுக்கு சைடுடிஷ்ஷாகப் பயன்படுவது. ஆனால், இதுவே ஒரு சிற்றுண்டி போன்றதுதான். யோகர்ட் (Yogurt) உணவுக்கு சிறந்த மாற்று இது. இதனுடன் நறுக்கிய வெள்ளரிக்காய் மற்றும் கீரைகளைச் சேர்த்துச் சாப்பிடலாம். கூடுதல் சத்துகள் கிடைக்கும். உடல் எடை குறைக்கவும் உதவும்.

http://www.vikatan.com/news/health/87717-try-these-8-low-calorie-foods-for-weight-loss.html

Link to comment
Share on other sites

பார்வையிழப்பைத் தடுக்கும் ஆராய்ச்சியில் முக்கிய வெற்றி; 10 ஆண்டுக்கு முன்பே கண்டுபிடிக்கலாம்!

 

நிரந்தரமாக பார்வையிழப்பு ஏற்படுவதற்குக் காரணமாக இருக்கும் குளுகோமா என்ற கண் நீர் அழுத்த நோயினால் ஏற்படும் தாக்கத்தால் கண் பார்வை குறையத் தொடங்கும் முன்னதாகவே, அதைக் கண்டுபிடித்து சிகிச்சையளிப்பதற்கான சாத்தியக் கூறுகள் ஏற்பட்டுள்ளன.

விழியின் பின்புறம் தெரியும் வெள்ளைப்புள்ளிகள், குளுகோமாவால் பாதிக்கப்பட்ட விழித்திரை நரம்பு மண்டலங்கள்படத்தின் காப்புரிமைUNIVERSITY COLLEGE LONDON Image captionவிழியின் பின்புறம் தெரியும் வெள்ளைப்புள்ளிகள், குளுகோமாவால் பாதிக்கப்பட்ட விழித்திரை நரம்பு மண்டலங்கள்
 

இதுதொடர்பான ஆராய்ச்சியில் புதிய பரிசோதனை முறையை உருவாக்கியிருப்பதாக லண்டன் பல்கலைக்கழக கல்லூரி ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்திருக்கிறார்கள்.

அவர்கள் உருவாக்கியிருக்கும் புதிய கண் பரிசோதனை முற மூலம், கண்பார்வை குறைபாடு தெரிய ஆரம்பிப்பதற்கு பத்து ஆண்டுகளுக்கு முன்பே குளுகோமா இருப்பதைக் கண்டுபிடித்துவிட முடியும்.

செயலிழந்து வரும் விழித்திரையில் உள்ள செல்களில் ஒட்டிக்கொள்ளும் வகையிலான ஒளிரும் வண்ண திரவத்தை பயன்படுத்தி இந்த சோதனை மேற்கொள்ளப்படும்.

கண் விழிபடத்தின் காப்புரிமைTHINKSTOCK

 

பாதுகாப்பு பரிசோதனைகளில், இது 16 நபர்களுக்கு சோதித்துப் பார்க்கப்பட்டது. இன்னும் ஆழமான ஆய்வுகள் தேவைப்படுவதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

குளுகோமாவால் உலகம் முழுவதும் 60 மில்லியன் மக்கள் பாதிப்புக்கு உள்ளாகிறார்கள். அவர்களில் பெரும்பாலானோர், மூன்றில் ஒரு பகுதி பார்வையிழந்த நிலையிலேயே தங்களுக்கு பாதிப்பு இருப்பதைக் கண்டுபிடிக்கிறார்கள்.

குளுகோமா ஆய்வுபடத்தின் காப்புரிமைAFP

கண்ணுக்குள் ஏற்படும் அழுத்தம் காரணமாக ஏற்படும் மாற்றங்களால் இந்த நோய் ஏற்படுகிறது. இதனால், விழித்திரையில் உள்ள நரம்பு மண்டலங்கள் சேதமடைந்துவிடுகின்றன.

அழுத்தம் காரணமாக அந்த செல்களில் மாற்றங்கள் ஏற்பட்டு, தடிமனாகி அது எந்த வரையறைக்குள் இருக்க வேண்டுமோ அதை விட்டு வெளியே வரத் துவங்கிவிடுகின்றன.

ஒளிரும் சாயத்திரவங்கள் அவற்றைத்தான் ஒட்டிப்பிடித்துக் கொள்கின்றன. அவை, விழியின் ரத்த நாளங்களுக்குள் செலுத்தப்படுகின்றன.

பரிசோதனை முறைகள்

அதன்பிறகு, கண் சிகிச்சை நிபுணர் செய்ய வேண்டிய பணி என்னவென்றால், கண்களின் பின்பக்கத்தைப் பரிசோதிக்க வேண்டும். விழித்திரை, வெள்ளைப் புள்ளிகளுடன் ஒளிர்ந்தால், அந்த நோயாளிக்கு பிரச்சனை இருப்பதாக உறுதிப்படுத்தக் கொள்ள முடியும்.

பார்வை குறைபாடுபடத்தின் காப்புரிமைAFP

புதிய சிகிச்சை முறைகள் பாதுகாப்பானவையா என்பதை உறுதிப்படுத்திக் கொள்வதற்காக நடத்தப்பட்ட முதல்கட்ட பரிசோதனை முறைகளில், ஆரோக்கியமான கண்ணுக்கும் குளுகோமாவால் பாதிக்கப்பட்ட கண்ணுக்கும் உள்ள வேறுபாட்டை அறிந்துகொள்ள வாய்ப்புக் கிடைத்திருக்கிறது.

 

குளுகோமா பாதிப்பு ஏற்படுவதற்கு முன்பே அதன் தாக்கம் குறித்து அறிந்து கொள்ளும் வகையில், மனிதர்களுக்குப் பயன்படுத்தக்கூடிய சோதனையை முதல் முறையாக உருவாக்கியிருக்கிறோம் என்று யுசிஎல் கண் மருத்துவ நிறுவனத்தின் பேராசிரியர் ஃபிரான்செஸ்கா கார்டெய்ரோ, பிபிசியிடம் தெரிவித்தார்.

"குறிப்பாக, இந்த நோய் கண்டறிவதற்கு ஐந்து முதல் 10 ஆண்டுகளுக்கு முன்னதாக அடையாளம் காண்கிறோம்" என்றார்.

நினைவாற்றல் திறன் குறைவு சோதனை?

கண் நீர் அழுத்த நோயினால் ஏற்படும் பிரச்சனைக்கு தற்போதைய சிகிச்சை முறை என்பது, அதன் பாதிப்பு மேலும் ஏற்படாமல் தடுக்கவோ அல்லது வேகத்தைக் கட்டுப்படுத்தவோ முடியும். ஏற்கெனவே கண்ணுக்கு ஏற்பட்ட பாதிப்பை சீர் செய்ய முடியாது.

"பார்வைக் குறைபாடு குறைவாக இருக்கும் கட்டத்திலேயே சிகிச்சை அளிக்கத் துவங்கினால், அதிகபட்ச வெற்றி கிடைக்கும்" என்கிறார் லண்டனில் உள்ள வெஸ்டர்ன் கண் மருத்துவமனையின் பேராசிரியர் ஃபிலிப் ப்ளூம்.

பிரைன் என்ற விஞ்ஞான இதழில் வெளியிடப்பட்டுள்ள ஆய்வு முடிவுகளில், இன்னும் கூடுதலான ஆய்வு தேவைப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கண்கள் என்பது ஆன்மாவுக்கான ஜன்னலாக மட்டுமன்றி, மூளைக்கான ஜன்னலாகவும் கருதப்படுகிறது.

கண் விழிபடத்தின் காப்புரிமைALAMY

நரம்பு ரீதியாக ஏற்படும் கோளாறுகள், நரம்பு மண்டலங்களின் மூலம் தெரியவருகிறது. மனித உடல் ரீதியாகப் பார்க்கும்போது, அது மூளையின் நீட்சியாகவே கூற வேண்டும்.

நினைவுத் திறன் குறைதல், உடல் தளர்ச்சி நோய், பல்முனை விழி வெண்படல நோய் போன்றவை எந்த அளவுக்கு பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது என்பதை அறிய, மூளையை ஸ்கேன் செய்வதை விட, கண் பரிசோதனையே குறைந்த செலவிலான பரிசோதனை முறையாக இருக்கும்.

இந்த ஆய்வின் முடிவுகள் குளுகோமாவால் பார்வையிழப்பு ஏற்பட்டவர்களுக்கு புதிய நம்பிக்கையை அளிக்கவும், பிற நரம்பு ரீதியான நோய்களால் பாதிக்கப்படுவோருக்கு ஆரம்ப கட்டத்திலேயே கண்டறிந்து உரிய சிகிச்சை அளிக்கவும் வழி ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறது என்று இந்த ஆய்வுக்கு நிதியுதவி அளித்த வெல்கம் அறக்கட்டளையின் பெதன் ஹக்ஸ் தெரிவித்துள்ளார்.

"பார்வையிழப்பு என்பது, கடுமையான குறைபாடு. அது வாழ்க்கையின் தரத்தையும் சுதந்திரத்தையும் பாதிக்கும்."

http://www.bbc.com/tamil/science-39758152

Link to comment
Share on other sites

மாரடைப்பு, பக்கவாதம் ஏற்பட வாய்ப்பை அதிகரிக்கும் ரத்த வகை

 

சில குறிப்பிட்ட இரத்த வகை கொண்டவர்களுக்கு மாரடைப்பு மற்றும் பக்கவாதம் ஏற்படும் வாய்ப்புகள் சற்றே அதிகமாக இருப்பதாக ஓர் அறிவியல் ஆய்வு கூறுகிறது.

பெண்படத்தின் காப்புரிமைSCIENCE PHOTO LIBRARY

உயர் இரத்த அழுத்தம் கொண்ட புரதத்தின் அளவைக் கொண்டிருக்கும் A, B மற்றும் AB ரத்த வகைகளை கொண்ட நபர்களுக்கு, இந்த வாய்ப்புகள் அதிகமாக இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

சிறு இதய வடிவங்கள்படத்தின் காப்புரிமைSCIENCE PHOTO LIBRARY

இருதய நோய் தொடர்பான அபாயத்தை மருத்துவர்கள் சுலபமாக புரிந்துக் கொள்வதற்கு, இந்த ஆய்வு உதவியாக இருக்கும் என்று நெதர்லாந்தின் க்ரோனின்கென் மருத்துவ மைய பல்கலைக்கழகத்தை சேர்ந்த ஆய்வாளர்கள் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.

http://www.bbc.com/tamil/science-39766578

Link to comment
Share on other sites

சுண்டல், கஞ்சி, பஞ்சாமிர்தம்... உடல் எடை அதிகரிக்கும் 5 உணவுகள்!

 

டல்பருமனுக்குச் சற்றும் குறைவில்லாதது, உடல் எடை குறைவாக இருப்பது. இந்தப் பிரச்னையால் அவதிப்படுபவர்கள் இன்று ஏராளம். நம் வயதுக்கும் உயரத்துக்கும் பொருத்தமான அளவில் உடை எடை இருக்கவேண்டியது மிக அவசியம். அதிக எடை, குறைந்த எடை இரண்டுமே ஆபத்துதான் என்பதை முதலில் புரிந்துகொள்வோம். கல்லும் கரையவேண்டிய முப்பது வயதில் சிலருக்கு பசியின்மை பிரச்னை... இதனால் சுறுசுறுப்பின்மை, நீண்ட நேரம் உறக்கமில்லாமை, மெலிந்த உடல்வாகு போன்ற பல சிக்கல்களை அவர்கள் எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.

உடல் எடைக் குறைவு பிரச்னை இன்றைய இளைஞர்களிடம்கூட அதிகமாக உள்ளது. அதிலும், விடுதியில் தங்கிப் படிப்பவர்கள், தனியாக அறை எடுத்துக்கொண்டு வேலைக்குச் சென்று வருபவர்கள், நண்பர்களுடன் அறையில் சமைத்துச் சாப்பிடுபவர்களிடம் அதிகமாகக் காணப்படுகிறது. இதற்காகக் கவலைப்படத் தேவையில்லை. சில எளிய உணவுப் பழக்கங்களைக் கடைப்பிடித்தால், ஓரிரு மாதங்களிலேயே நல்ல மாற்றம் தெரியும்; உடல் எடை மெள்ள மெள்ள அதிகரிக்கத் தொடங்கும்.

உடல் எடை

ஏலக்காய்-சுக்கு-வெல்லம் பானம்!

முதல் நாள் இரவு ஒரு டம்ளர் தண்ணீரில், 20 முதல் 50 கிராம் வெல்லத்தைக் கரைத்து வைத்துக்கொள்ள வேண்டும். மறுநாள் காலை, துணியால் இந்த நீரை வடிகட்டி அதில் சிறிது ஏலக்காய்த்தூளையும் சுக்குத்தூளையும் கலந்து வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும். இந்த பானத்தில் இரும்புச்சத்து, வைட்டமின் ஏ மற்றும் புரதம் நிறைந்துள்ளதால், ரத்த விருத்தி ஏற்படும். இதன் காரணமாக, ஹீமோகுளோபினின் அளவும் அதிகரிக்கும். ஹீமோகுளோபின்தான் சிவப்பு ரத்த அணுக்களுக்கும், பல்வேறு உறுப்புகளுக்கும் ஆக்ஸிஜனை எடுத்துச்செல்கிறது.

பலம் தருமே பஞ்சாமிர்தம்!

பஞ்சாமிர்தம்

இந்த பானத்தைக் குடித்து முடித்ததும், இரண்டு டீஸ்பூன் பஞ்சாமிர்தத்தைச் சாப்பிடலாம். பஞ்சாமிர்தத்தில் தேன், பால், நெய், பழ வகைககள் சேர்ந்துள்ளதால், உடலுக்குப் பல வகையான போஷாக்கை அள்ளித்தரும். பாலில் உள்ள கால்சியம் மற்றும் புரதம் எலும்புகளுக்கு வலு சேர்க்கும். தேன், உடலுக்கு அதிக ஆற்றலைத் தரும். நெய்யில் உள்ள கொழுப்புச்சத்து, உடலுக்கு சக்தியளிக்கும். பழங்களில் வைட்டமின் சி நிறைந்துள்ளது. பஞ்சாமிர்தம் செரிப்பதற்கு சற்றுக் கடினமான ஒன்று. அதனால், இதைச் சாப்பிட்டதும் அரை மணி நேரத்தில் இருந்து, ஒரு மணி நேரம் வரை நடைப்பயிற்சி செய்யலாம். இதனால் பஞ்சாமிர்தத்தின் போஷாக்கு உடலின் பல உறுப்புகளுக்குச் சென்றடைவது எளிதாகும்.

உடல் வலுவுக்கு உதவும் கஞ்சி!

கஞ்சி

இட்லி, தோசை போன்ற காலை உணவுக்குப் பதிலாக புழுங்கலரிசிக் கஞ்சி தயாரித்து உட்கொள்ளலாம். கஞ்சியில் உப்புக்குப் பதிலாக, இந்துப்பைச் சேர்த்துச் சாப்பிடுவது நல்ல பலன் தரும். (இந்துப்பில் சோடியத்துக்குப் பதிலாக, பொட்டாசியத்தின் அளவு அதிகமாக இருக்கிறது. அதனால், உடல் ஆரோக்கியத்துக்கு இது பெரிதும் உதவும்.) கஞ்சியில் நான்கு முதல் ஐந்து சொட்டு நெய்விட்டுச் சாப்பிட்டால், உணவைச் செரிக்கச் செய்யும் திரவங்கள் சுறுசுறுப்புடன் வேலை செய்யத் தொடங்குகின்றன. இதனால் செரிமானம் தொடர்பான அனைத்து உபாதைகளும் விலகிவிடும்.

சீரக ரசம் சிறப்பு!

மதியம் பச்சரிசி சாதத்தில் சூடான சீரக ரசத்தைச் சேர்த்துச் சாப்பிட்டால், செரிமான மண்டலம் சிறப்பாக இயங்கும். அதனால் அதிகப் பசி எடுக்கும். இது, உணவை அதிகம் சாப்பிடத் தூண்டி, உடல் எடையை அதிகரிக்கச் செய்யும்.

சுண்டல் நல்லது!

மாலை வேளையில், ஒரு சிறிய கப் கொண்டைக்கடலை அல்லது வேகவைத்த பச்சைப்பயறுடன் இஞ்சி, தேங்காய், மாங்காய் சேர்த்து சாப்பிடலாம். இதில் புரதச்சத்து அதிகமாக உள்ளதால், உடலுக்கு அதிகமான சக்தி கிடைக்கும். இரவு உணவுக்கு முன்னதாக அரிசியும் வெல்லமும் கலந்த உணவைச் சாப்பிட்டால் உடலுக்கு போஷாக்கு கிடைக்கும். சிறிது நேரம் கழித்து, புழுங்கல் அரிசிக் கஞ்சியைக் குடிக்கலாம்.

 

இந்த உணவு முறைகளைத் தொடர்ந்து கடைப்பிடித்தால் நன்கு பசி எடுக்கும்; பத்தே நாட்களில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டு, உடல் எடை கூட ஆரம்பித்துவிடும். உடற்பயிற்சி என்பது பருமனாக இருப்பவர்களுக்கு மட்டுமல்ல, எல்லோருக்குமே அவசியமானது. சீரான ரத்த ஓட்டம் கிடைப்பதற்கு கண்டிப்பாக உடற்பயிற்சி அவசியம். எனவே, உடல் எடையை அதிகரிக்க விரும்புபவர்களும், உடற்பயிற்சியை தாராளமாகச் செய்யலாம்.

http://www.vikatan.com/news/health/88003-amazing-foods-for-weight-gain.html

Link to comment
Share on other sites

Cerebral Venous Thrombosis எனப்படும் நோயிற்கான தீர்வு

 

 

news_image_21_4.jpg

எம்மில் ஒரு சிலருக்கு அலுவலகத்தில் அதிகமாக பணியாற்றுவதாலோ அல்லது வீட்டில் ஓய்வில்லாமல் பணியாற்றுவதாலோ ஒற்றைத்தலைவலி எனப்படும் தலைவலி ஏற்படும். இதனை சாதாரண ஒற்றைத்தலைவலி என்று நாமே இதற்கான அறிகுறிகளை வைத்து சுயமருத்துவமோ அல்லது மருத்துவர்களை சந்தித்து எமக்கு ஒற்றைத்தலைவலி இருக்கிறது என்று உறுதியாக கூறி, அதற்கான நிவாரணத்தை கேட்டு பெறுவோம்.

ஆனால் மைக்ரேன் எனப்படும் ஒற்றைத்தலைவலிக்குரிய அனைத்து அறிகுறிகளும் cerebral venous thrombosis எனப்படும் மூளையிலுள்ள இரத்த குழாய்களில் இரத்தம் இயல்பை விட அதிகமாக இரத்த உறைவதால் ஏற்படும் பிரச்சினைக்கான அறிகுறிகளும் ஒன்றாக இருக்கின்றன. இதனால் ஒற்றைத்தலைவலி என்றால் உடனே மருத்துவர்கள் சொல்லும் பரிசோதனைகளை செய்துகொள்ளவேண்டும்.

unnamed.jpg

இதனால் ஒரு சிலருக்கு தாங்கமுடியாத ஒற்றைத்தலைவலி வந்தால் அவர்களுக்கு எம் ஆர் ஐ ஸ்கேன் என்ற பாசோதனையை மேற்கொள்ள மருத்துவ நிபுணர்கள் பரிந்துரைப்பார்கள். இதன் மூலம், மூளையிலிருந்து இதயத்திற்கு இரத்தத்தை எடுத்து வரும் இரத்த நாளங்களில் இரத்த ஓட்டம் சிராக இருக்கிறதா என்பதையும், இதில் ஏதேனும் அடைப்பு இருக்கிறதா என்பதையும் கண்டறிய இயலும். ஒரு சிலருக்கு இத்தகைய அடைப்பு ஏதேனும் இருந்தால் அதனை மருத்துவர்கள் cerebral venous thrombosis என்று குறிப்பிடுகிறார்கள். cerebral venous thrombosis என்றால் இரத்த அதிகளவில் உறைகிறது என்று பொருள். அதாவது ஆன்ட்டி திராம்பின் என்ற புரத சத்து தேவையான அளவிற்கு இல்லாமல், அதற்கு கீழே இருக்கிறது என்று பொருள் கொள்ளலாம். இவர்களுக்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு, இரத்தம் அதிகளவில் உறைவதை தடுக்கும் சிகிச்சை வழங்கப்படுகிறது.

இந்த சிகிச்சை பெறுபவர்களில் பலருக்கு இது ஆயுள் முழுவதும் தேவைப்படலாம். 3 மாதத்திற்கொரு முறை மருத்துவர்களை சந்திக்கவேண்டியதிருக்கும். தொடர்ந்து 5 ஆண்டுகள் சிகிச்சை எடுத்த பின் பலர் இயல்பு நிலைக்கு திரும்பியிருக்கிறார்கள். இதன் பின் அவர்களுக்கு முன்னர் வந்தது போன்ற கடுமையான ஒற்றைத்தலைவலி வருவதில்லை.

Dr. ரவி

தொகுப்பு அனுஷா.

தகவல் : சென்னை அலுவலகம்

http://www.virakesari.lk/article/19341

Link to comment
Share on other sites

தொடையில் உள்ள கொழுப்பை குறைக்கும் எளிய வழிமுறைகள்! #30DaysChallenge

 
 

மாறிவரும் உலகில் நாம் உண்ணும் உணவு மற்றும் பழக்கவழக்கங்களால் சிறுவயதிலேயே உடல் பருமன் ஏற்பட்டு பெரும்பிரச்னை ஏற்படுகிறது. இதனால் இடுப்பு மற்றும் தொடைப் பகுதிகளில் கொழுப்பு சேர்ந்து பாடாய்ப்படுத்துகிறது. மேலும், விருப்பப்பட்ட உடைகளை அணிந்துகொள்வதில் சிரமம் ஏற்படுகிறது. இதுபோன்ற பிரச்னைகள் ஏற்படாமலிருக்க 5 வழிமுறைகளை 30 நாள்கள் தொடர்ந்து கடைபிடித்தால், உங்கள் கால் வடிவமைப்பு ஃபிட் ஆகிவிடும்! எல்லாம் சும்மா கிடைச்சிடாது, கொஞ்சம் மெனக்கெடல்கள் வேண்டும்தானே...

தொடை கொழுப்பு

ஸ்டெப் 1 

* உங்கள் டயட் சார்ட்டை மாற்றி அமைத்துக் கொள்வது நல்லது. கொழுப்பு நிறைந்த உணவுகளை முற்றிலும் தவிர்க்காமல், சற்று குறைத்துக்கொள்ளலாம். 

கால் கொழுப்பு குறைக்கும் உணவுகள்

* ஃப்ரஷ்ஷான பச்சைக் காய்கறிகள் மற்றும் பழங்களை உணவாக எடுத்துக்கொள்ளலாம். முழுதானியங்கள் மற்றும் முட்டை, மீன், பால் போன்ற புரதம் நிறைந்த உணவுகளை அதிகமாக சேர்த்துக் கொள்ளவேண்டும். உணவுக் கட்டுப்பாட்டினால் உடலில் ஏற்படும் மாற்றத்தைக் கூட உங்களால் உணர முடியும்.

ஸ்டெப் 2

தினசரி 30 முதல் 60 நிமிடங்கள் வரை இதயத்தை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள உதவும் உடற்பயிற்சிகளைச் செய்யவேண்டும். குறைந்தபட்சம் வாரம் ஐந்து நாள் வீதம் செய்யலாம். இந்த உடற்பயிற்சிகள் உடல் எடையைக் கட்டுக்குள் கொண்டுவர உதவும். மேலும், கால்களுக்கு எனப் பிரத்யேகப் பயிற்சிகளான நடைப்பயிற்சி, ரன்னிங், சைக்ளிங், ஸ்கேட்டிங், ஹைக்கிங் (Hiking) எனப்படும் நீண்டதூர நடைப்பயணம் மேற்கொள்ளலாம்.

கால் கொழுப்பு குறைக்க உதவும் பயிற்சிகள்

ஸ்டெப் 3

ஸ்குவாடிங் (Squating) பயிற்சியை வாரத்துக்கு இரண்டு அல்லது மூன்று நாள் செய்யலாம். ஸ்குவாட்டிங் மற்றும் லஞ்சஸ் பயிற்சியையும் சேர்த்துச் செய்யலாம். 

* பயிற்சி: விரிப்பில் நேராக நிற்க வேண்டும். கைகளை முன்புறமாக நீட்ட வேண்டும். இப்போது, பாதி அமர்ந்த நிலையில் நிற்க வேண்டும். இதேநிலையில் 10 நொடிகள் இருக்கலாம். பின்பு, பழைய நிலைக்கு வந்து மீண்டும் இந்தப் பயிற்சியைச் செய்யலாம். இதேபோல் தொடர்ந்து 5 முறை செய்யலாம்.

கால் கொழுப்பு குறைக்க உதவும் பயிற்சி - ஸ்குவாடிங்
 

* இது கீழ் உடலுக்கான சிறந்த பயிற்சி. இந்தப் பயிற்சியானது காலின் வடிவமைப்பை மேம்படுத்தும். உடல் சமநிலைத்தன்மை பெற உதவும். தொடையில் உள்ள கொழுப்பைக் குறைக்க உதவும். கால் தசைகள் வலுப்பெறும். இதயத் துடிப்பைச் சீராக்க உதவும். உடல் எடையைக் கட்டுக்குள் வைக்க உதவுகிறது.

ஸ்டெப் 4

லஞ்சஸ் (Lunges) பயிற்சியை 30 நாள்கள் தொடர்ந்து செய்யலாம்.

* பயிற்சி: விரிப்பில், நேராக நிற்க வேண்டும். பின், முட்டிபோட வேண்டும். இப்போது வலது காலை முன்புறமாக மடக்கியபடி வைக்க வேண்டும். முதுகுத்தண்டு நேராக இருக்கும்படி வைக்க வேண்டும். இதேநிலையில் 30 முதல் 40 விநாடிகள் நிற்கலாம். இந்தப் பயிற்சியை 5 முறை செய்யலாம்.

கால் கொழுப்பைக் குறைக்கும் பயிற்சி - லஞ்சஸ்

* இது கால் முட்டிகள் வலுப்பெற உதவும். கூன் போடுவதைத் தடுத்து, முதுகுத்தண்டு நேராக உதவும். காலில் ரத்த ஓட்டம் சீராகப் பாய உதவும்.

படிகளில் ஏறலாம்

ஸ்டெப் 5

 

எஸ்கலேட்டர், லிஃப்ட் போன்றவற்றைத் தவிர்த்து, படிக்கட்டுகளைப் பயன்படுத்தலாம். தினசரி நாம் பயன்படுத்தும் படிக்கட்டுகளின் எண்ணிக்கை 50 ஆகக் கொண்டால், 1000 கலோரிகளைக் குறைக்கலாம். இவை, நம் உடலில் உள்ள கொழுப்பைக் குறைக்க உதவும்; ஆரோக்கியப் பழக்கமும் கூட! 

http://www.vikatan.com/news/health/88163-easy-steps-to-lose-leg-fat.html

Link to comment
Share on other sites

ரத்த ஓட்டம் சீராக உதவும் 10 வழிமுறைகள்! #HealthTips

 
 

இடைவிடாமல் இயங்கும் ஒரு தொழிற்சாலை நம் உடல். உடல் உறுப்புகள் ஒவ்வொன்றுக்கும் அவை செயல்படுவதற்கான  ஆற்றல் இருந்தால்தான் மொத்த உடலாலும் சீராக இயங்க முடியும்.  நம் உடல் உறுப்புகளுக்குத்தேவையான ஆற்றல் ரத்தம் மூலமாகத்தான் கிடைக்கிறது. உடலின் ஒவ்வோர் உறுப்புக்கும் தேவையான ஊட்டச்சத்துக்களையும், ஆக்ஸிஜனையும் ரத்தம் சரியாக வழங்காதபோது உடலில் பிரச்னை தொடங்குகிறது.

ரத்த ஓட்டம்  

உடலில் ரத்த ஓட்டம் சீராக இல்லையெனில், சிறுநீரகப் பிரச்னை, உயர் ரத்த அழுத்தம், நரம்பு வீக்கம் போன்ற தீவிரமான பிரச்னைகளை நாம் சந்திக்க நேரிடும். இவற்றைத் தவிர்க்க, ரத்த ஓட்டத்தைச் சீராக வைத்திருக்கவேண்டியது அவசியம். `சில நல்ல உணவுகளை உணவுப் பட்டியலில் சேர்த்துக்கொள்வது, உடற்பயிற்சி செய்வது போன்ற சில வழிமுறைகளைப் பின்பற்றினால், ரத்த ஓட்டத்தை அதிகரிக்கலாம்’ என்கிறார்கள் மருத்துவர்கள். அவற்றில் 10 வழிமுறைகள் இங்கே...

கிரீன் டீ 

கிரீன் டீ 

இதில் ப்ளேவனாய்டு, பாலிபீனால்ஸ் மற்றும் கேட்டச்சின் போன்றவை உள்ளன. இவை ரத்த நாளங்களை விரிவடையச் செய்து, ரத்த ஓட்டம் தங்கு தடையின்றி ஓட உதவுபவை. இதனால் ரத்த ஓட்டம் சீராக்கும். எனவே, தினமும் ஒரு கப் கிரீன் டீ குடிப்பதை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள்.

பூண்டு 

பூண்டு 

பூண்டை `ரத்தத்தைச் சுத்திகரிக்கக்கூடிய டானிக்’ என்றே சொல்லலாம்.  இதைச் சமையலில் சேர்த்துக்கொண்டால், உணவுக்கு நறுமணத்தையும் சுவையையும் கூட்டும். அதோடு, கூடுதல் பலனாக ரத்த ஓட்டத்தை அதிகரிக்கவும் உதவும்.

இரும்புச்சத்துள்ள உணவுகள்

இரும்புச்சத்துள்ள உணவுகளை சாப்பிட்டால், ரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபின் அளவு அதிகரிக்கும்.  உடல் உறுப்புகளுக்குத் தேவையான ஆக்ஸிஜனை வழங்கக்கூடியது ஹீமோகுளோபின். எனவே, உடல் உறுப்புகளுக்கு ஆற்றல் கிடைக்கும். தானியங்கள், கீரைகள், பருப்புகள், இறைச்சி (Red Meat)  மற்றும் கிட்னி பீன்ஸ் (Kidney beans) போன்ற இரும்புச்சத்து நிறைந்தவற்றை உணவில் சேர்த்துக்கொள்வது நல்லது.

மிளகு 

மிளகு 

உணவுப் பொருள்களில் காரச் சுவைக்கு சேர்க்கப்படும் மிளகு, உடலில் ரத்த ஓட்டத்தை அதிகரிக்கக்கூடியது. இதை அன்றாடம் ஏதேனும் ஓர் உணவுடன் சேர்த்துச் சாப்பிட்டால், ரத்த நாளங்கள் விரிவடைந்து, ரத்த ஓட்டம் உடல் முழுவதற்கும் செல்லும்.

தக்காளி 

உடலில் ரத்த ஓட்டத்தை அதிகரிக்க, லைகோபைன் நிறைந்த தக்காளியை உணவில் அன்றாடம் சேர்த்துக்கொள்ளலாம். இதில் உள்ள 'லைகோபைன்' ரத்த ஓட்டத்தை சீராக்கும். 

நட்ஸ் 

நட்ஸ் 

பாதாம், முந்திரி, பிஸ்தா போன்றவற்றில் வைட்டமின் பி3  என்னும் ரத்த ஓட்டத்தை அதிகரிக்கும் சத்துகள் நிறைவாக உள்ளன. 

டார்க் சாக்லேட்

`டார்க் சாக்லேட்டில் உள்ள கோகோ, ரத்த ஓட்டத்தை அதிகரிக்கச்செய்யும்’ என்று பல்வேறு ஆய்வுகள் சொல்கின்றன. டார்க் சாக்லெட்டுகளை சாப்பிடுவதும், ரத்த ஓட்டம் சிறக்க நல்லது.

 

புகைபிடிக்காதீர்கள் 

புகைபிடிக்காதீர்கள்

புகைபிடிக்கும்போது சிகரெட்டின் புகையிலையில் இருந்து வெளியாகும் கார்பன் மோனாக்ஸைடு, ரத்த அழுத்தை அதிகரிக்கச் செய்வது. எனவே, நீண்ட நாள் புகைப் பழக்கம் தொடரும்போது, அது ரத்த ஓட்டத்தை பாதிக்கும். 

மது பழக்கம்

அதிக அளவில் மது குடிப்பது, ஆரோக்கியமான ரத்த ஓட்டத்தைப் பாதிக்கும். குறிப்பாக, தமனிகள் கடினமாக ஆவதற்கு வழிவகுக்கும். இதனால், ரத்த ஓட்டம் தடைப்படும். மேலும்  ஆல்கஹால் பயன்பாடு  டிஹைட்ரேஷனை (Dehydration) ஏற்படுத்தும்; ரத்த அழுத்தம் ஏற்பட வழி வகுக்கும்.

சைக்கிளிங் 

உடற்பயிற்சி

சைக்கிளிங், ரன்னிங், வாக்கிங், எக்சர்சைஸ் போன்ற ஏதாவது ஒரு உடற்பயிற்சியைச் செய்வது ரத்த ஓட்டத்தை அதிகரிக்கச் செய்யும்.  

 

இவை தவிர,  உருளை வடிவில் உள்ள சீப்பால் (Round comb) தலைவாருதல், நாற்காலியில் அமர்ந்துகொண்டு தண்ணீர் பாட்டிலை காலால் உருட்டுதல், ஆரஞ்சுத் தோலை உள்ளங்கையில் வைத்து அழுத்தமாகத் தேய்த்தல், அதிகாலையில்  படுக்கையைவிட்டு எழுந்தவுடன் உள்ளங்கையை  சில முறை தேய்த்துக்கொள்வது, மசாஜ் செய்வது...  போன்ற சாதாரண நடவடிக்கைகள்கூட தற்காலிகமாக ரத்த ஓட்டத்தை அதிகரிக்க உதவும்.

http://www.vikatan.com/news/health/88225-tips-for-boost-blood-circulation.html

Link to comment
Share on other sites

பிரா அணிவது மார்பகப் புற்றுநோயைத் தூண்டுமா? மருத்துவம் என்ன சொல்கிறது?! #MustKnowFact

 
 

பெண்களை அதிகம் பாதிப்பது மார்பகப் புற்றுநோய். இதற்கு முக்கியக் காரணம் வியர்வை நாற்றம் போக்க அக்குள் பகுதியில் ஸ்ப்ரே செய்துகொள்ளும் டியோடரன்ட்கள் (Deodorants), முகப்பூச்சுகள், அழகுசாதனப் பொருள்கள்.. போன்றவைதான் என்று எத்தனையோ ஆய்வுகள் சொல்லிவிட்டன. `இதற்கெல்லாம் ஆதாரம் இல்லை’ என்றுதான் நம் ஊர்க்காரர்கள் தொடங்கி அமெரிக்காவின் ஃபுட் அண்ட் டிரக் அட்மினிஸ்ட்ரேஷன் (US Food and Drug Administration) வரைக்கும் அழுத்தமாகச் சொல்கிறார்கள். இவற்றால் பாதிப்பில்லை என்கிற வாசகத்துக்குப் பின்னணியில் இருப்பது, முகப்பூச்சு, டியோடரன்ட், அழகுசாதனப் பொருள்களுக்கு இருக்கும் உலகளாவிய சந்தை. சந்தேகப்படும் நிலையில் ஒன்று இருந்தால், அதைத் தவிர்ப்பதுதான் ஆரோக்கியத்துக்கு அழகு. அதேபோல, பிரா அணிவது மார்பகப் புற்றுநோயைத் தூண்டுமா என்பது பலருக்கும் ஏற்படும் முக்கியமான சந்தேகம்! இது குறித்து கிளினிக்கல் ஆன்காலஜிஸ்ட் (Clinical Oncologist) சதீஷிடம் பேசினோம்... 

பிரா

“உண்மையில் மார்பகப் புற்றுநோய் என்பது மோசமான ஒரு நோய்தான். அது ஏற்பட என்னென்னவோ காரணங்கள் இருக்கின்றன. பிரா அணிவதால் மார்பகப் புற்றுநோய் வரும் என்பது கட்டுக்கதை. அதிலும், ‘அண்டர்வொயர் பிரா’ (Underwire Bra) என்கிற வகைதான் மார்பகப் புற்றுநோய்க்குக் காரணமாகிறது என்று சொல்கிறார்கள். இந்த வகை பிராவின் அடிப்பகுதியில் பொருத்தப்படும் வொயர் உலோகம், பிளாஸ்டிக், ஒருவகையான பிசினால் செய்யப்படுகின்றன. மார்பகங்களுக்கு உள்ளே இருக்கும் நிணநீர் சுரப்பியை (Lymph Fluid) அடைத்துவிடும் என்று சொல்லப்படுகிறது. இதனால் புற்றுநோய் ஏற்படலாமாம். பெண்களுக்கு இது உண்மையிலேயே கவலையை அளிக்கக்கூடிய விஷயம்தான். பிரா என்பது உள்ளாடை. அது பெண்களுக்கான பிரத்யேகமான ஒன்று. பிரா அணிவதால் மார்பகப் புற்றுநோய் வருமா... நிச்சயம் வராது. ஆனால், மார்பகப் புற்றுநோய் ஏற்படுவதற்கு முக்கியமான ஐந்து காரணங்கள் உள்ளன. அவை... 

சதீஷ்பாலினம் 

மார்பகப் புற்றுநோய் ஏற்படுபவர்களில் பெண்கள் 99 சதவிகிதத்துக்கும் மேல் என்றால், ஆண்கள் 1 சதவிகிதத்துக்கும் கீழ். ஆண்களுக்கு ஈஸ்ட்ரோஜென் ஹார்மோன்களின் அளவு மிக மிகக் குறைவு. எனவே, அவர்களின் மார்பகத்தில் உள்ள செல்கள் செயலற்றவையாக இருக்கும். பெண்களுக்கு ஈஸ்ட்ரோஜென் ஹார்மோன்கள் அதிகம்; இவைதான் அவர்களின் குழந்தைப்பேறுக்கு ஆதாரம். எனவே, இவர்களின் மார்பகங்களில் இருக்கும் செல்கள் எப்போதும் தூண்டப்படக்கூடியவையாக, செயலாற்றக்கூடியவையாக இருக்கும். அதனால், பெண்களுக்கு மார்பகப் புற்றுநோய் வருவதற்கான அபாயம் அதிகம். 

வயது 

பெண்கள் 14-17 வயதுக்கு இடைப்பட்ட, பூப்பெய்தும் பருவத்தில்தான் பிரா அணிய ஆரம்பிக்கிறார்கள். மார்பகப் புற்றுநோய் வருவதற்கான அபாயங்களில் வயதும் ஒன்று. ஆனால், அதற்கும் பிராவுக்கும் சம்பந்தமில்லை. சமீபத்தில் அமெரிக்காவின் நேஷனல் இன்ஸ்டிட்யூட் ஆஃப் கேன்சர் (National Institute of Cancer) வெளியிட்ட ஆய்வு முடிவு இப்படிச் சொல்கிறது... `40 வயது நிரம்பிய 68 பெண்களில் ஒருவருக்கு மார்பகப் புற்றுநோய் ஏற்பட்டிருக்கிறது; 50 வயதுள்ள 42 பெண்களில் ஒருவருக்கு மார்பகப் புற்றுநோய்; 60 வயதுள்ள 28 பெண்களில் ஒருவருக்கு மார்பகப் புற்றுநோய். பெண்களின் மாதவிடாய் நிற்கும் காலத்துக்குப் பிறகு (Menopause) உடலில் ஏற்படும் ஹார்மோன் மாற்றங்கள் இந்தப் புற்றுநோய் வருவதற்குக் காரணமாகின்றன. 60 வயதுக்குப் பிறகு பெண்களுக்கு மார்பகப் புற்றுநோய் வருவதற்கான அபாயம் வெகுவாகக் குறையும்.

மார்பகப் புற்றுநோய்

பரம்பரைக் காரணங்கள் 

பரம்பரையில் யாருக்காவது மார்பகப் புற்றுநோய் இருந்தாலும், இது வரக்கூடும். அதிலும் நெருங்கிய சொந்தமான சகோதரி, அம்மா போன்றவர்களுக்கு இந்தப் புற்றுநோய் இருந்தால், அந்தக் குடும்பத்தில் உள்ள மற்ற பெண்களுக்கு புற்றுநோய் வரும் வாய்ப்புகள் அதிகம். அதிலும் அம்மாவுக்கு இந்தப் பிரச்னை இருந்தால், மகளுக்கு வருவதற்கு வாய்ப்பு அதிகம்; அதாவது, பொதுவானவர்களுக்கு வருவதைவிட 10 மடங்கு அபாயம் அதிகம். இரு மார்பகங்களையும்கூட புற்றுநோய் பாதிக்கலாம். பொதுவாக பெண்களுக்கு 30 வயதைத் தாண்டிய பின்னர்தான் இது பாதிக்கும். 

கர்ப்ப காலம்

கர்ப்ப காலத்தில் பெண்களை மார்பகப் புற்றுநோய் பாதிப்பது அரிதானது. இந்தக் காலத்தில் மார்பகச் செல்களை முதிர்ச்சி அடைந்து, புற்றுநோய் வராமல் பாதுகாக்கவும் உதவும். தாமதமாகத் திருமணம் செய்துகொண்டவர்கள், தாமதமாக கருவுற்றவர்கள், குழந்தைக்கு அதிகம் பால் கொடுக்காதவர்களுக்கு இது ஏற்படலாம்.

பிரா

அதிக எடை மற்றும் உடல்பருமன் 

உடல்பருமனும் உடல் எடை அதிகமாகவும் உள்ள பெண்களுக்கு மார்பகப் புற்றுநோய் வருவதற்கான வாய்ப்பு அதிகம். கொழுப்பு செல்கள்தான் ஈஸ்ட்ரோஜென் ஹார்மோன்களை உருவாக்குகின்றன. அதிகக் கொழுப்பு உள்ளவர்களுக்கு ஈஸ்ட்ரோஜெனில் பாதிப்பு ஏற்பட்டு புற்றுநோய் ஏற்படும் அபாயம் அதிகம். அதிலும் கொழுப்பு இடுப்புப் பகுதியில் அதிகமாக இருந்தால், இந்த அபாயம் மிக அதிகம். 

 

ஆக, பிரா அணிவதற்கும் பெண்களுக்கு மார்பகப் புற்றுநோய் ஏற்படுவதற்கும் சம்பந்தம் இல்லை. மேலே சொல்லப்பட்ட காரணங்களை மட்டும் மனதில் கொண்டு, இந்த அபாயங்கள் அணுகாமல் பார்த்துக்கொள்ளுங்கள். அதிகக் கொழுப்புள்ள உணவுகள், உடல் உழைப்பு அதிகம் இல்லாத வாழ்க்கை ஆகியவையும் பெண்களுக்கு இந்தப் பிரச்னை ஏற்படுவதற்கான வாய்ப்பை அதிகரிக்கும். ஆரோக்கியமான உணவுகள், சீரான வாழ்க்கை முறை இவையெல்லாமே மார்பகப் புற்றுநோய் வராமல் உங்களைக் காப்பாற்றும்.’’ என்கிறார் மருத்துவர் சதீஷ்.

http://www.vikatan.com/news/health/88370-can-wearing-a-bra-cause-breast-cancer.html

Link to comment
Share on other sites

மனஅழுத்தம் குறைக்க... மகிழ்ச்சி பெருக்க உதவும் 8 எளிய வழிகள்!

``ஒரு நாளைக்கு 20 நிமிடங்களை உங்களால் ஒதுக்க முடியுமா? அந்த 20 நிமிடங்களுக்கு சில பயிற்சிகளைச் செய்தால் போதும்... சில வாரங்களிலேயே மனஅழுத்தம் கட்டுக்குள் வந்துவிடும். அதோடு, அதைத் தூண்டும் ஹார்மோன்களின் எண்ணிக்கையும் படிப்படியாகக் குறைந்துவிடும்’’ என்கிறார்கள்  மனநல மருத்துவர்கள். அந்த அளவுக்கு மனஅழுத்தத்தின் தாக்கம் மூலை, முடுக்குகளில் இருப்பவர்களைக்கூட விடாமல் இறுகப் பற்றிக்கொண்டிருக்கிறது. `என்னை ஏம்மா இப்பிடி காலையிலயே டென்ஷன் பண்றே?’ என்று சின்னஞ்சிறு குழந்தைகூடக் கேட்கிறது. இதன் தாக்கம் அதிகமானதற்குக் காரணம், இன்றைய வாழ்க்கை முறை. ஆனால், சின்னச் சின்ன பயிற்சிகள், சில முறையான பழக்கங்களைக் கடைப்பிடித்தால் எப்பேர்ப்பட்ட மனஅழுத்தத்தையும் தகர்த்து எறிந்துவிடலாம். அப்படி மனஅழுத்தம் விரட்டும் 8 எளிய வழிமுறைகளைப் பார்ப்போம். 

மனஅழுத்தம் 

அதற்கு முன்னால் ஒரு விஷயம்..! மனஅழுத்தம் நம்மை என்ன செய்யும்? என்ன வேண்டுமானாலும் செய்யும். தூக்கமின்மையில் தொடங்கி, உயர் ரத்த அழுத்தம், உடல்பருமன் என ஒவ்வொன்றாக பல பிரச்னைகளை அள்ளி அள்ளிக் கொடுத்து, இதய நோய்கள் வரை கொண்டு வந்து நிறுத்திவிடும். இது உடல்ரீதியான பிரச்னை என்றால், மனம் நொறுங்கிப்போய் மனநல பாதிப்புகள் ஏற்பட்டு உயிர் துறக்கக்கூட காரணமாகிவிடும். தீவிர மனஅழுத்தப் பிரச்னைக்கு சிகிச்சையைத் தவிர வேறு வழி இல்லை. எனவே, அவ்வப்போது, இந்தப் பிரச்னையை அடையாளம் கண்டுகொண்டு அதிலிருந்து மீண்டு வர முயற்சிக்க வேண்டும். அப்படித்தான் இதிலிருந்து நம்மைப் பாதுகாத்துக்கொள்ள முடியும். அதற்கு நம் சிந்தனையை வேறு பக்கம் திசை திருப்ப வேண்டும். அப்படி சிந்தனை திசை திரும்பும் நேரத்தில் நாம் செய்கிற பயிற்சிகள் நமக்குப் பிடித்ததாக, நம் கவலைகளை மறக்கச் செய்வதாக இருக்க வேண்டும். 
மனஅழுத்தம் விரட்டும் 8 எளிய வழிமுறைகள்!

 
முதன்மையானது மூச்சுப்பயிற்சி!
பதற்றத்தோடும் பரபரப்பாகவும் இருக்கும் நேரத்தில் நாம் எப்படி மூச்சுவிடுவோம்... கவனித்திருக்கிறீர்களா? மேலோட்டமாக விடுவோம் அல்லது மூச்சை இழுத்து நிறுத்துவோம். இப்படி மூச்சை ஆழமாகவிடாமல் இருப்பது உடலுக்குப் பல பிரச்னைகளை ஏற்படுத்திவிடும். இதற்கான மூச்சுப்பயிற்சியை எப்படிச் செய்வது? அதிகாலையில் மூச்சுப்பயிற்சி செய்வது சிறந்தது. நேராக நிமிர்ந்து உட்கார்ந்து, கண்களை முடிக்கொள்ளவும். கைகளை அடி வயிற்றில்படும்படி வைத்துக்கொண்டு, ஆழமாக மூச்சை இழுத்து, மெதுவாக வெளியேவிடவும். இப்படிச் செய்யும்போது அடிவயிற்றின் அசைவுகளை உணர முடியும். இதனால், கவனம் முழுவதும் அதில் குவிக்கப்பட்டு, உடலும் மனமும் தளர்வடைந்து இயல்புநிலையை அடையும்.  மேலும், இதய துடிப்பு சீராக இருப்பதால், ரத்த அழுத்தம் குறையும்; மனஅழுத்தம் நீங்கும். இந்தப் பயிற்சியை 5-ல் இருந்து 10 நிமிடங்களுக்குச் செய்யலாம்.

ரசியுங்கள்

இந்த பூமியோடு தொடர்பில் இருங்கள்!
வீட்டில் இருந்து விலகி சற்று தூரம் எந்தச் சிந்தனையும் இல்லாமல் நடந்து செல்வதும் ஒரு பயிற்சியே. செருப்பு வேண்டாம். வெறும் கால்களால் நடந்து தெருவுக்கு வாருங்கள். சற்று தூரம் மெள்ள நடந்து செல்லுங்கள். காலை, மாலை வேளையில் வீசும் இதமான காற்று உங்கள் முகத்தில் மென்மையாகப் படட்டும். உங்கள் பாதங்கள் தரையில் படும்போது, `இந்த பூமியில் இருக்கிறோம், பூமியோடு தொடர்பில் இருக்கிறோம், நெருக்கமாக இருக்கிறோம்’ என பூமி என்கிற கிரகத்தின் உச்சியில் நிற்பதாக, நடப்பதாக கற்பனை செய்துகொள்ளுங்கள். ஐந்து நிமிட நடை போதும்; இதை உணர்ந்து செய்யுங்கள். உங்களிடம் உள்ள டென்ஷன் படிப்படியாகக் குறைய ஆரம்பிக்கும்.

புன்னகை மருந்து!
இது ஓர் எளிய அறிவியல்! மனஅழுத்தத்தில் இருக்கிறீர்களா? மனஅழுத்தத்துக்குக் காரணமாகும் கார்ட்டிசால் (cortisol) ஹார்மோன் உங்கள் உடலில் அதிகமாகச் சுரக்கும். வயிறு குலுங்கச் சிரிக்கிறீர்களா? கார்ட்டிசால் சுரப்பு குறைந்து, மூளையைத் தூண்டுவதற்கு உதவும் எண்டார்பின் ஹார்மோன் சுரப்பு அதிகமாகும். எனவே, புன்னகை மிகச் சிறந்த மருந்து என்பதைப் புரிந்துகொள்ளுக்கள். இதற்காக நகைச்சுவை சினிமாக்கள், வீடியோக்களைப் பார்க்கலாம்; உங்களுக்கு வயிறு வலிக்கும் அளவுக்கு சிரிப்பு மூட்டுபவர்களுடன் உரையாடலாம். மொத்தத்தில் நீங்கள் சிரிக்க வேண்டும். அவ்வளவுதான்.  சிரித்து சிரித்தே மன உளைச்சலை அகற்றிவிட முடியும். 

சமூக வலைதளம் 

சமூக வலைதளங்கள் சகஜநிலைக்குக் கொண்டுவரும்!
சமூக வலைதளங்கள் மீது ஒருபக்கம் மோசமான பிம்பம் கட்டமைக்கப்பட்டு வருகிறது. ஆனால், சமூக வலைதளங்களும் மனஅழுத்தத்தைக் குறைக்க உதவும் மிகச்சிறந்த ஒன்று என்பதை நினைவில்கொள்ளுங்கள். ஃபேஸ்புக், வாட்ஸ்அப் போன்றவற்றில் உங்களுக்குப் பிடித்தவர்களுடன் உரையாடுங்கள்; இசை, நகைச்சுவை செய்திகள், மீம்ஸ், தத்துவங்கள்... என நீங்கள் ரசித்ததை நெருக்கமானவர்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள். உங்களுக்கு வரும் அத்தனை ஸ்டேட்டஸ்களுக்கும் குறைந்த பட்சம் ஒரு லைக்காவது போடுவது என பழக்கப்படுத்திக்கொள்ளுங்கள். இணைய வசதி இல்லாதவர்களுடன் தொலைபேசியிலாவது பேசலாம். மன இறுக்கம் மெள்ள மெள்ள அகல ஆரம்பிக்கும். 

இசை... இனிமையான வரம்!
`இசையால் வசமாக இதயம் எது?’ வெறும் பாடல் வரி அல்ல; மனதுக்கு உதவக்கூடிய மருத்துவ உண்மை. நாம் ரசித்துக் கேட்கும் மெல்லிய இசை, ரத்த அழுத்தத்தைக் குறைக்கும்; இதயத் துடிப்பைச் சீராக்கும்; பதற்றம், கவலைகளைக் குறைக்கும். இதை பல ஆய்வு முடிவுகளே சொல்லியிருக்கின்றன. எப்பேர்ப்பட்ட பதற்றத்தையும் தணித்து, மனதை அமைதிப்படுத்தும் சக்தி இசைக்கு உண்டு. நீங்கள் சாதாரண பாத்ரூம் சிங்கராகக்கூட இருக்கலாம். வீட்டுக்குள்ளேயே அறைக்குள் உங்களுக்குப் பிடித்த பாடல்களைப் பாடிப் பார்க்கலாம். மனம் லேசாகும்.  

சாக்லேட் 

சாக்லேட் நல்லது!
அளவாக இனிப்பு சாப்பிடுவது மனதுக்கு இதம் தரும். `இரண்டு வாரங்களுக்கு ஒருமுறை டார்க் சாக்லேட் (1.4 அவுன்ஸ்) சாப்பிடுவது, மன அழுத்தத்தைத் தூண்டும் ஹார்மோன்களைக் குறைக்க உதவும்’ என்கிறது ஓர் ஆய்வு. சாக்லேட்டைச் சாப்பிடும்போது வேறு எதைப் பற்றியும் சிந்திக்காதீர்கள்; அதன் ருசியை, இனிமையை அனுபவித்து ருசியுங்கள். இதுகூட ஒரு மனப்பயிற்சிதான். மன ஆரோக்கியம் காக்க சாக்லேட்டும் உதவும்.  

கிரீன் டீ தி கிரேட்!
கிரீன் டீயில் உள்ள அமினோ அமிலம், தியானின் (Thianine) ஆகியவை மூளையை அமைதிப்படுத்தும் வல்லமை கொண்டவை; ரிலாக்ஸைத் தருபவை. கிரீன் டீ அதிகம் குடித்தாலும் பல்வேறு பிரச்னைகள் உருவாகலாம். எனவே, ஒரு நாளைக்கு நான்கு கப்புக்கு மிகாமல் பார்த்துக்கொள்வது நல்லது. இப்படி ஆறு வாரங்களுக்குத் தொடர்ந்து கிரீன் டீ குடித்தால், அது மனஅழுத்தத்துக்குக் காரணமாகும் கார்ட்டிசால் ஹார்மோன் சுரப்பை குறைக்கும் என்கிறது ஓர் ஆய்வு. 

கிரீன் டீ 

 

மந்திர வாசகம் முக்கியம்!
நம்மை நாமே உற்சாகப்படுத்திக்கொள்ள உதவும் சில பாசிட்டிவ் வாசகங்களை உங்களுக்கு நீங்களே உருவாக்கிக்கொள்ளுங்கள். அல்லது உங்களுக்குப் பிடித்த சிறந்த மேற்கோள்களை எழுதிவைத்துக்கொள்ளுங்கள். அதை உங்களுக்குள்ளேயே அடிக்கடி சொல்லிப் பாருங்கள். உதாரணமாக, `என்னால் முடியும் ’, `நடப்பதெல்லாம் நன்மைக்கே’ போன்ற எப்படிப்பட்ட வாசகமாகவும் அது இருக்கலாம். இந்த வாசகங்களைத் திரும்பத் திரும்பச் சொல்லும்போது, மனதுக்கு சக்திதரும் மந்திரங்களாக அவை மாறும். விரைவில் நல்ல மாற்றம் தெரியும்.

http://www.vikatan.com/news/health/88491-eight-simple-ways-to-relieve-stress.html

Link to comment
Share on other sites

வெங்காயம், முள்ளங்கி, இஞ்சி... வியக்கவைக்கும் பலன்களைத் தரும் வேர் காய்கறிகள்!

வேர், தண்டு, இலைகள், விதைகள், பூக்கள்... என்று ஒரு செடிக்குப் பல பாகங்கள். சில செடிகளின் அத்தனை பாகங்களும் உணவுப்பொருள்களாகப்  பயன்படுத்தப்படுகின்றன. பொதுவாக, இவற்றை `காய்கறிகள்’ என்கிறோம். பூமிக்கு அடியில் புதைந்திருக்கும் வேரிலிருந்து முளைக்கும் காய்கறிகளும் உண்டு. அவை, `வேர்க் காய்கறிகள்’ எனப்படுகின்றன. முள்ளங்கி, கேரட், பீட்ரூட்... போன்றவை வேர்க் காய்கறிகளுக்கான சில உதாரணங்கள். இந்த வகைகளை அடிக்கடி உணவில் சேர்த்துக்கொள்ளவேண்டியது மிக அவசியம். ஏன்... இவை நம் ஆரோக்கியத்துக்கு எப்படி உதவுகின்றன? பார்ப்போம்...

வேர்க் காய்கறிகள் 

ஏன் சேர்த்துக்கொள்ள வேண்டும்?

தானியங்களுக்கு மாற்று

வேர்க் காய்கறிகள் தானியங்களுக்கு மாற்றாகப் பரிந்துரைக்கப்படுகின்றன. கோதுமை, பார்லி போன்ற தானியங்களில் `குளூட்டன்’ (Gluten) என்ற புரதம் உள்ளது. இது செரிமானப் பிரச்னைகளை உண்டாக்கும். வேர்க் காய்கறிகளில் குளூட்டன் புரதம் இருப்பதில்லை ஆனால், தானியங்கள் தருகிற அதே பயன்களைத் தருகின்றன. 

ஓர் உணவைச் சாப்பிட்டவுடன், அது ரத்த சர்க்கரையில் ஏற்படுத்தும் மாற்றம் கிளைசெமிக் இண்டெக்ஸால் (Glycemic index) அளவிடப்படும். தானியங்களைவிட, வேர்க் காய்கறிகளில் கிளைசெமிக் இண்டெக்ஸின் அளவு குறைவாக உள்ளது. 

நார்ச்சத்து

வேர்க் காய்கறிகளைச் சாப்பிடுவதால், குறைவான அளவில்தான் கார்போஹைட்ரேட் உடலில் சேரும். அதேபோல் இவற்றில் நார்ச்சத்தும் அதிகம். இது, மலச்சிக்கல் பிரச்னையைத் தீர்க்கும். கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்கும். இதனால் இதயநோய் ஏற்படுவதற்கான வாய்ப்புகளும் குறையும்.

இவற்றில் `பாலிசாச்சரைட்ஸ்’ (Polysaccharides) என்ற கார்போஹைட்ரேட் உள்ளது. இது புற்றுநோய், ரத்தம் உறைந்து கெட்டியாதல் போன்றவற்றைத் தடுக்கும். நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.

வைட்டமின்

வேர்க் காய்கறிகளில் வைட்டமின் ஏ, வைட்டமின் சி மற்றும் கரோட்டினாய்டு நிறமிகள் காணப்படுகின்றன. இவை கண் மற்றும் தோலுக்கு நன்மை செய்வது. இவை கட்டி மற்றும் வீக்கங்கள் ஏற்படுவதைத் தடுக்கின்றன. இதனால் இதயநோய் மற்றும் புற்றுநோய் வருவதற்கான வாய்ப்புகள் குறைகின்றன.

எடை குறைக்கும்

வேர்க் காய்கறிகளில் கிளைசெமிக் எண்ணின் அளவு தானியங்களைவிடக் குறைவாக இருக்கிறது. அதோடு, இவற்றிலிருந்து கிடைக்கும் கலோரியும் குறைவு. இதனால் ரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகமாகாது. வேர்க் காய்கறிகளை சரிவிகித சத்துள்ள உணவுப்பொருட்களுடன் எடுத்துக்கொள்ளும்போது பசியைக் கட்டுப்படுத்தும். இதனால் எடை குறையும்.

ஃபோலேட்

வேர்க் காய்கறிகளில் `ஃபோலேட்’ (Folate) என்ற வைட்டமின் நம் உடலுக்குத் தேவையான அளவில் உள்ளது. இது கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்களுக்கு தேவைப்படும் மிக முக்கியமான சத்துகளில் ஒன்று.

வேர்க் காய்கறிகள்... ஏன் தவிர்க்கக் கூடாது?

பீட்ரூட் 

பீட்ரூட்

பீட்ரூட்டில் `பீட்டாலெய்ன்ஸ்’ (Betalains) என்ற நிறமி உள்ளது. இது கல்லீரலைப் பாதுகாக்கும். உடலில் உள்ள நச்சுகளை வெளியேற்ற உதவும். 

கேரட்

கேரட்டில் உள்ள வைட்டமின் ஏ கண்களுக்கு நன்மை செய்வது. தொடர்ச்சியாக கேரட் சாப்பிடால், அது நுரையீரலை நலமாக வைத்துக்கொள்ள உதவும்.

நூல்கோல்

இது ரத்தச்சோகை வராமல் தடுக்க உதவும். இதிலுள்ள வைட்டமின் சி நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். 

மரவள்ளிக்கிழங்கு

உடலுக்கு சக்தி தரும் கார்போஹைட்ரேட் மற்றும் நார்ச்சத்து இதில் உள்ளது. 

முள்ளங்கி 

முள்ளங்கி

இது புற்றுநோய்க்கு எதிராகச் செயல்படும். இதில் நீர்ச்சத்து நிறைந்த காய். இதைத் தொடர்ந்து சாப்பிடுவதால், உடலில் நீர் குறைவு (Dehydration) பிரச்னைகள் ஏற்படாது. 

சர்க்கரைவள்ளிக்கிழங்கு

சர்க்கரைவள்ளிக்கிழங்கில் வைட்டமின் ஏ, சி, ஈ போன்றவற்றோடு பொட்டாசியம், மக்னீசியம் போன்றவையும் உள்ளன. 

இஞ்சி 

இஞ்சி

செரிமானப் பிரச்னைகள், குமட்டல், சளி, தலைவலி போன்றவற்றைப் போக்க இஞ்சி சிறந்த மருந்து.

வெங்காயம்

வெங்காயத்தில் உள்ள ஃபிளேவனாய்டு (Flavonoids) பாக்டீரியாவுக்கு எதிராகச் செயல்படும் தன்மை கொண்டது. வெங்காயம், நடுத்தர வயதுப் பெண்களின் எலும்புகளை வலுப்படுத்த உதவும். வாய் புற்றுநோய் வருவதற்கான வாய்ப்புகளைக் குறைக்கும். 

சேனைக்கிழங்கு

இதிலுள்ள பொட்டாசியம் ரத்த அழுத்தத்தைக் குறைக்க உதவும். மூளை, நரம்புகள் மற்றும் ரத்தக்குழாய்கள் சிறப்பாகச் செயல்பட இதிலுள்ள வைட்டமின் பி6 உதவும்.  

பூண்டு 

பூண்டு

 

புற்றுநோய்க்கு எதிராகச் செயல்படக்கூடியது, வளர்சிதை மாற்றத்துக்கு உதவக்கூடியது எனப் பல்வேறு பயன்களை உடைய பூண்டும் தவிர்க்கக் கூடாத வேர்க் காய்கறிதான். 

http://www.vikatan.com/news/health/88534-health-benefits-of-root-vegetables.html

Link to comment
Share on other sites

எண்டோகேமி (Endogamy) எச்சரிக்கை..!

 

எம்முடைய தமிழ் சமுதாய மரபில் இன்றும் ஒரு சில இடங்களில் சொந்தங்களுக்குள் திருமணம் செய்து கொள்ளும் பழக்கம் நடைமுறையில் இருந்து வருகிறது. இது சமுதாய அமைப்பு மற்றும் பாரம்பரிய முறையில் தவறில்லை என்று கருதினாலும், இதன் பின்விளைவாக இல்லறத்தில் இணையும் தம்பதிகளின் வாரிசுகளுக்கு பல நிரந்தரமான உடலியல் சிக்கல்கள் எழுகின்றன என்பதை ஒப்புக்கொள்ளவேண்டும். 

health_news_image_35.jpg

இது போல் உறவுகளுக்குள் திருமணம் செய்து கொண்டால் உறவின் போது இவ்விருவரின் மரபணுக்கள் இணைகின்றன்.இதன் போது தம்பதியர்களிடத்தில் இருக்கும் குறைபாடுள்ள குரோம்சோம்களும் இணைகின்றன. ஆதிக்க குணமுடைய குறைபாடுள்ள மரபணுக்கள் தான் மருத்துவத்துறையால் குணப்படுத்த இயலாத நோய்களையும், நிரந்தரமன ஊனங்களையும் உருவாக்குகின்றன. இந்நிலையில் மரபணு குறைபாடால் இது வரை மூவாயிரத்திற்கும் மேற்பட்ட குணப்படுத்த இயலாத நோய்கள் உருவாகின்றன என்றும், இதற்கான தீர்வைத் தேடி மருத்துவ உலகம் தொடர்ச்சியாக பயணிக்கிறது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிலும் ஒரு சில குழந்தைகளுக்கு தாலசீமியா (thalassemia) எனப்படும் பிறவியிலேயே இரத்த சோகை நோய் ஏற்படும். இவர்களுக்கு குருதியில் ஹீமோகுளோபின் அளவு குறைந்துவிடும். நுரையீரல் பகுதியிலிருந்து வேறு பகுதிகளுக்கு ஓக்ஸிஜன் செல்வதை பெரும் தடையே நிலவும். இவர்களுக்கு தற்போது மாதந்தோறும் குருதியை குளுககோஸ் போல் ஏற்றுவார்கள். இதன் காரணமாகவும் கூட சில பக்க விளைவுகள் ஏற்படக்கூடும். ஒரு சிலருக்கு இதன் காரணமாகவே நாளாந்த வாழ்க்கை பாதிக்கப்படக்கூடும். 

அதனால் உறவு முறைக்குள் திருமணம் என்றால் ஒன்றிற்கு இரண்டு முறை மருத்துவ பரிசோதனை செய்து. Endogamy பாதிப்பு இல்லை என்று உறுதி செய்து கொண்ட பிறகு மேற்கொள்வது சிறந்தது என்கிறார்கள் மருத்துவ நிபுணர்கள்.

டொக்டர் A. ராமநாதன்

தொகுப்பு அனுஷா.

தகவல் : சென்னை அலுவலகம்

http://www.virakesari.lk/article/19713

Link to comment
Share on other sites

டிஸ்லெக்சியா குறைபாட்டிற்குரிய நிவாரணம்

 

 

எம்முடைய பெற்றோர்கள் தங்களுடைய பிள்ளைகள் பாடசாலையில் புத்திசாலியாக படித்து முதலிடத்தில் சித்தியெய்துகிறார் என்றால் அவர்களின் சந்தோஷமே வேறு. ஆனால் அதற்கு மாற்றாக தம்முடைய பிள்ளைகளுக்கு கற்றல் குறைபாடு அதாவது டிஸ்லெக்சியா என்பதன் அறிகுறியிருந்தால் உடனே சோர்ந்து போய்விடுகின்றனர். ஆனால் பெற்றோர்கள் இது குறித்து கவலையடையத் தேவையில்லை. ஏனெனில் இதற்காகவே தற்போது தனியாக ஆசிரியர்கள் உருவாகிவிட்டனர். மருத்துவர்கள் மற்றும் இத்தகைய தனி ஆசிரியர்களின் கண்காணிப்பில் இந்த குறைபாட்டினை முழுமையாக களையமுடியும்.

Dyslexia.png

டிஸ்லெக்சியா என்பது 3வயது முதல் 12 வயதுக்குட்பட்ட பெரும்பான்மையான ஆண் குழந்தைகளுக்கு ஏற்படும் கற்றல் குறைபாடு. அதாவது இவர்களின் இடது பக்க மூளையின் செயல்திறன் முழுமையாக இயங்குவதில்லை. இதனால் இவர்கள் வகுப்பறையில் படிப்பதற்கும் எழுதுவதற்கும் கடும் சிரமத்திற்கு ஆளாகின்றனர். இவர்களுக்கு சரியான வழிகாட்டுதலும், கடினமான உழைப்பும் இருந்தால் இதனை முற்றாக களைய முடியும்.

உலகம் முழுவதும் 2 முதல் 7 சதவீத குழந்தைகள் அதிலும் அதிகமாக ஆண் குழந்தைகள் இத்தகைய பாதிப்பிற்கு ஆளாகின்றனர். மரபியல் காரணங்கள் மற்றும் சுற்றுப்புற காரணங்களால் தான் இவர்கள் இத்தகைய பாதிப்பிற்கு ஆளாகின்றனர் என்று கண்டறியப்பட்டிருக்கிறது. இருப்பினும் இது தொடர்பான ஆய்வுகள் இன்றும் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. தற்போது traumatic dyslexia, primary dyslexia, secondary dyslexia என்று 3 வகையான டிஸ்லெக்சியா பாதிப்பினை கண்டறிந்திருக்கிறார்கள்.

இவர்களுக்கு எழுத்துகள் கண்ணாடியில் தெரிவது போன்று தலைகீழாகத்தான் தெரியும் என்பார்கள். சமீபத்திய ஆய்வின் படி இவர்கள் ஆங்கிலம், பிரெஞ்சு மற்றும் சீன மொழிகளைக் கற்பதைக் காட்டிலும் இத்தாலி, ஸ்பானீஷ் போன்ற மொழிகளை கற்கத் தொடங்கும் போது எளிதாக கற்பதாகவும் கண்டறியப்பட்டிருக்கிறது. அத்துடன் தற்போது இவர்களுக்காகவே தனி பயிற்சி முறை கையேடுகளும் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கின்றன. அதனால் டிஸ்லெக்சியாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அவர்களுக்கு பிடித்த மொழியில் கற்க அனுமதிப்பதும் ஒரு வகையான நிவாரணமாகப் பரிந்துரைக்கப்படுகிறது. ஆனால் இவையெல்லாம் 12 வயது வரைக்கும் மட்டும் தான். இவர்கள் காலப்போக்கில் இத்தகைய குறைபாட்டிலிருந்து மீண்டு விடுகிறார்கள். ஆனால் கற்கும் பருவத்தில் கற்றல் குறைபாடு இல்லாமல் பார்த்துக் கொள்ளவேண்டியது பெற்றோர்களின் கடமை என்பதையும் நினைவில் கொள்ளவேண்டும்.

Dr. லட்சுமி V.

தொகுப்பு அனுஷா

http://www.virakesari.lk/article/19837

Link to comment
Share on other sites

நோய் எதிர்ப்பு சக்தி வலுப்பட உதவும் 12 வழிமுறைகள்!

'நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்'. நிறைவான வாழ்க்கை வாழ உடல் ஆரோக்கியம் மிகவும் இன்றியமையாதது என்பதை உணர்த்தும் உன்னதப் பொன்மொழி இது. ஏனென்றால், சகல வசதிகளும் செல்வங்களும் நிறைவாக இருந்தாலும் உடல் ஆரோக்கியம் இல்லை என்றால் ஒரு மனிதனின் வாழ்க்கையில் மகிழ்ச்சி என்பது இராது. 

நோய் எதிர்ப்பு சக்தி 

இன்றைய நவீன வாழ்க்கையில் விஞ்ஞானமும் தொழில்நுட்ப வளர்ச்சியும் நம்மை முன்னேற்றத்துக்குக் கொண்டுசென்றுள்ளன. அதேநேரத்தில், நோய்களால் ஏற்படும் பாதிப்புகள் குறைந்ததாகத் தெரியவில்லை என்பதே மறுக்க முடியாத உண்மை. இதற்கு உணவுப் பழக்கம், வாழ்க்கைமுறை, சுற்றுச்சூழல் பாதிப்பு என பல்வேறு காரணங்கள் கூறப்பட்டாலும், முக்கியமாக மருத்துவர்கள் முன்வைக்கும் காரணங்களில் ஒன்று நோய் எதிர்ப்புச் சக்தி. உடலை பாதிக்கக்கூடிய கிருமிகளிலிருந்து காத்துக்கொள்ள நம் உடம்பின் நோய் எதிர்ப்புச் சக்தி வலிமையாக இருக்க வேண்டியது அவசியமாகும். 

நோய் எதிர்ப்புச் சக்தியை இரண்டு வகையில் பெறுகிறோம். ஒன்று பிறவியிலேயே அமைந்த சக்தி. மற்றொன்று உணவுப் பழக்கம். ஆம்... சில ஆரோக்கிய பழக்கவழக்கங்களைப் பின்பற்றினாலே உடலின் நோய் எதிர்ப்புத் தன்மையை அதிகரிக்க முடியும். முதல் வகையை மரபு வழியே தீர்மானிக்கும் என்பதால் இரண்டாவது வழிமுறையான ஆரோக்கியப் பழக்க வழக்கங்களால் எப்படி நோய் எதிர்ப்புச் சக்தியை வலுப்படுத்துவது என்று பார்ப்போம்.

தூக்கம்

தூக்கம் அவசியம் 

உடலில் வளர்ச்சிதை மாற்றங்கள் சிறப்பாக நடைபெற தூக்கம் மிகவும் அவசியமாகும். மேலும், தூக்கமின்மையால் ஏற்படும் மனஅழுத்தத்தால், உடலில் கார்டிசோல் (Cortisol) என்னும் ஹார்மோன் அதிகரிக்கிறது. இது நோய் எதிர்ப்புச் செயல்பாட்டைப் பாதிக்கிறது. எனவே, நோய் எதிர்ப்புச் சக்தியைப் பெற, ஆழ்ந்த தூக்கமும் மனஅழுத்தத்தைத் தவிர்ப்பதும் அவசியமானது.

தண்ணீர் 

தண்ணீர் குடிக்க மறக்காதீர்கள்

தண்ணீர் உடலின் கழிவுகளை வெளியேற்றி, உடலுக்குத் தேவையான ஆற்றலைத் தருகிறது. மேலும் உடல் வெப்பத்தை சீராகப் பராமரிக்கிறது. மெட்டபாலிசத்தை அதிகரித்து, எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கவும் உதவுகிறது.

தயிர் 

பால் உணவுகளைச் சாப்பிடுங்கள்

தயிர் உள்ளிட்ட பால் பொருள்களில் காணப்படும் நன்மை செய்யும் பாக்டீரியாக்களுக்கு 'ப்ரோபயாட்டிக்' என்று பெயர். இவை நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும் என்சைமான இம்யுனோகுளோபுலின் (Immunoglobulin) அதிகளவு சுரக்க உதவுகிறது. மேலும், இவை நன்மை செய்யும் பாக்டீரியாக்களின் எண்ணிக்கையை அதிகரித்து, நோய்த் தொற்றை எதிர்த்துப் போராட உதவுகிறது. இதனால் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கும்.

காய்கறிகள் 

காய்கறிகள் அவசியம்

நமது அன்றாட உணவில் அவசியம் இடம்பெற வேண்டியவை காய்கறிகள். முக்கியமாக, பீட்ரூட், கத்திரிக்காய் போன்ற அடர் நிறம் உள்ள காய்கறிகள், கேரட், பீன்ஸ், முட்டைகோஸ் மற்றும் குடமிளகாய் போன்றவை அவசியம் வேண்டும். 

கீரைகள் 

கீரைகள் சேர்த்துக்கொள்ளுங்கள்

வாரத்தில் குறைந்தது இரண்டு நாள்களாவது கீரையை உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது. இதில் அதிகளவில் வைட்டமின்கள், இரும்புச்சத்து உள்ளிட்ட அத்தியாவசியச் சத்துகள் நிறைவாக உள்ளன. இவை நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்க உதவும்.

பூண்டு

பூண்டு அருமருந்து

ஆயுர்வேத மருத்துவத்தில், தலைவலி முதல் புற்றுநோய் வரை பல நோய்களையும் குணமாக்க வெள்ளைப் பூண்டு பயன்படுத்தப்படுகிறது. இது உடலுக்குக் கெடுதல் செய்யும் வைரஸ் மற்றும் பாக்டீரியாக்களை எதிர்க்கும் திறன் கொண்டது. அதனால் தினசரி உணவில் பூண்டு இருக்குமாறு பார்த்துக்கொள்வது நல்லது.

மஞ்சள்

மஞ்சளின் மகிமை

மஞ்சள் ஒரு இயற்கையான ஆன்டிபயாட்டிக் என்பதால், நோய் எதிர்ப்புச் சக்தி அதிரிக்க உதவும். ரத்தத்தைச் சுத்தகரிக்கும். காய்ச்சல், சளி, இருமல் போன்ற நோய்களில் இருந்து காக்கும்.

 வெங்காயம்

வெங்காயம் வேண்டும்

வெங்காயத்தில் உள்ள செலினியம் ( Selenium) தாதுச்சத்து நோய் எதிர்ப்பு செயல்பாடு தூண்டும் தன்மையுடையது. இதில் உள்ள 'அலிலின்' என்னும் வேதிப்பொருள்தான் பாக்டீரியாக்கள், நச்சுகள், காளான் போன்றவை உடலில் சேராமல் தடுக்கின்றன. இத்துடன் புற்றுநோய்க் கட்டிகள் வளராமலும் தடுக்கின்றன. 

நட்ஸ்

நட்ஸ் விரும்புவோம்

பாதாம் பருப்பு போன்ற நட்ஸ் வகை உணவுகளில் மாங்கனீஸ் (manganese), வைட்டமின் ஈ சத்துகள் நோய் எதிர்ப்புச் சக்திக்குக் காரணமான வெள்ளை அணுக்களின் செயல்பாட்டைத் தூண்டிவிடுகின்றன. இதனால் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கிறது. 

கிரீன் டீ 

டீ குடியுங்கள்

க்ரீன் டீயில் உள்ள கேட்டச்சின் (Catechins) போன்ற ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உடலின் நோய் எதிர்ப்பு மண்டலத்துக்கு வலு சேர்க்கும். புற்றுநோய், இதய பாதிப்புகளிலிருந்தும் காக்கிறது. அதேநேரத்தில், இரண்டு தடவைக்கு மேல் குடிப்பதைத் தவிர்ப்பது நல்லது.  

 சிகரெட்

புகைப் பிடிக்காதீர்கள்

சிகரெட்டில் உள்ள புகையிலை (Tobacco) உடலில் உள்ள ஆன்டி ஆக்ஸிடன்டுகளை அழித்து, நோய் எதிர்ப்புச் சக்தியை குறைக்கிறது. மேலும், நுரையீரலில் உள்ள திசுக்களை அழிக்கவல்லது. இதனால், மூச்சுக்குழாய் அழற்சி மற்றும் நிமோனியாவின் ஆபத்தை அதிகரிக்கிறது, 

மது 

மதுப்பழக்கம் வேண்டாம்

 

அதிகளவு மது குடிப்பதால் அதில் உள்ள ஆல்கஹால், வைட்டமின் மற்றும் கனிமச் சத்துகளை உடல் உறிஞ்சிக்கொள்வதை தடுக்கிறது. மேலும், வெள்ளையணுக்களை அழித்து நோய் எதிர்ப்புச் சக்தி குறைய காரணமாகிறது

http://www.vikatan.com/news/health/88856-strengthen-your-immune-system-naturally-by-following-these-12-steps.html

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • போட்டியில் கலந்துகொண்ட @nunavilan உம், இறுதி நிமிடத்தில் கலந்துகொண்ட @புலவர் ஐயாவும் வெற்றிபெற வாழ்த்துக்கள்😀      போட்டியில் இணைந்தவர்கள்: @பையன்26 @முதல்வன் @suvy @ஏராளன் @நிலாமதி @Ahasthiyan @ஈழப்பிரியன் @kalyani @கந்தப்பு @கறுப்பி @Eppothum Thamizhan @வாதவூரான் @கிருபன் @நீர்வேலியான் @goshan_che @nunavilan @புலவர்
    • இந்தப்பாட்டி காலத்தில் இணைய, முகநூல் வசதியிருந்திருந்தால் எப்படியிருந்திருக்கும்..... கற்பனை பண்ணிப்பார்க்கிறேன். சிறியர்... உங்களுக்கும்  கற்பனை பொறி தட்டியிருக்குமே..... அதை பகிருங்கள் காண ஆவலாக இருக்கிறேன்!
    • மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள். . .
    • இவர்களும் அவ்வப்போது நித்திரையால் எழும்பி கனவு கண்டவர்கள் போல்  குரலெழுப்பி விட்டு மறுபடியும் உறங்கு நிலைக்கு போய் விடுவார்கள். சேர்வதேச விசாரணை இல்லையென்று அடித்துக்கூறிவிட்டார் மாத்தையா, இவர்கள் காதுக்கு இன்னும் எட்டவில்லையோ செய்தி அலறித்துடிக்கிறார்கள். தேர்தலுக்காக இவர்களை யாராவது இயக்குகிறார்களா எனும் சந்தேகமாய் இருக்கு.
    • LSG vs CSK: லக்னௌ விரித்த வலையில் விழுந்த சிஎஸ்கே - ஆட்டத்தை முடித்த 3 விக்கெட் கீப்பர்கள் பட மூலாதாரம்,SPORTZPICS 2 மணி நேரங்களுக்கு முன்னர் வலிமையான பேட்டிங் வரிசை, பந்துவீச்சு பலம் இருந்தும் லக்னௌவின் தொடக்க வரிசையை அசைக்கக்கூட சிஎஸ்கே அணியால் முடியவில்லை. அதேநேரம், சிஎஸ்கே பேட்டர்கள் ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக வியூகம் அமைத்து களத்தில் செட்டில் ஆகவிடாமல் லக்னெள அணி திட்டமிட்டுக் காலி செய்துள்ளது. சிஎஸ்கே அணியை கடினமாகப் போராடி லக்னெள அணி வீழ்த்தவில்லை. கனகச்சிதமான திட்டங்களை முன்கூட்டியே வகுத்து, எந்த பேட்டரை எப்படி வீழ்த்த வேண்டுமெனத் தீர்மானித்து தங்கள் திட்டங்களை வெற்றிகரமாகச் செயல்படுத்தி வெற்றி கண்டுள்ளது. ஆட்டத்தைப் பார்த்தபோது, லக்னெள அணியின் பந்துவீச்சு, ஃபீல்டிங், பேட்டிங்கில் இருந்த ஒழுக்கம், கட்டுக்கோப்பு அனைத்தும் சிஎஸ்கே அணியில் மிஸ்ஸிங். தொடக்க வரிசை பேட்டர்களைகூட வீழ்த்துவதற்கு சிரமப்பட்டது, அதன்பின்பும் நெருக்கடி கொடுக்க முடியாமல் தோல்வியை ஒப்புக்கொண்டுள்ளது. லக்னெள அணியின் 3 விக்கெட் கீப்பர்களான கேப்டன் கே.எல்.ராகுல், குயின்டன் டீ காக், நிகோலஸ் பூரன் ஆகிய 3 பேரும் சேர்ந்து ஒட்டுமொத்த சிஎஸ்கே அணியின் ஆட்டத்தை முடித்துவிட்டனர். லக்னெளவில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 34வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்தது லக்னெள சூப்பர் ஜெயின்ட்ஸ் அணி.   பட மூலாதாரம்,SPORTZPICS முதலில் பேட் செய்த சிஎஸ்கே அணி 6 விக்கெட் இழப்புக்கு 176 ரன்கள் சேர்த்தது. 177 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய லக்னெள அணி 6 பந்துகள் மீதமிருக்கையில் 2 விக்கெட்டுகளை இழந்து 180 ரன்கள் சேர்த்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம், லக்னெள அணி 7 போட்டிகளில் 4 வெற்றி, 3 தோல்வி என 8 புள்ளிகளுடன் 5வது இடத்தில் இருக்கிறது. 8 புள்ளிகள் பெற்றாலும் நிகர ரன்ரேட்டில் 0.123 என்று குறைவாகவே இருக்கிறது. அடுத்தடுத்த போட்டிகளில் பெறும் வெற்றி நிகர ரன்ரேட்டை உயர்த்தும். அதேநேரம், சிஎஸ்கே அணி 7 போட்டிகளில் 4 வெற்றி, 3 தோல்விகள் என 8 புள்ளிகளுடன் 3வது இடத்தில் நீடிக்கிறது. சிஎஸ்கே அணியின் நிகர ரன்ரேட் வலுவாக இருப்பதால், 0.529 எனத் தொடர்ந்து 3வது இடத்தைத் தக்க வைத்துள்ளது. லக்னெள அணியின் வெற்றிக்கு கேப்டன் கே.எல்.ராகுல்(82), டீகாக்(54) முதல் விக்கெட்டுக்கு 134 ரன்கள் சேர்த்து வலுவான அடித்தளம் அமைத்து, இதுதவிர கேப்டனுக்குரிய பொறுப்புடன் கே.எல்.ராகுல் பேட் செய்து 82 ரன்கள் சேர்த்தது முக்கியக் காரணங்களில் ஒன்று. இரு பேட்டர்களும், சிஎஸ்கே பந்துவீச்சாளர்கள் செட்டில் ஆவதை அனுமதிக்காமல் ஷாட்களை அடித்து அழுத்தம் கொடுத்து வந்தனர். நடுப்பகுதி ஓவர்களில் சிஎஸ்கே எப்போதுமே நன்றாகப் பந்துவீசக் கூடியது. இதைத் தெரிந்து கொண்டு ராகுல், டீகாக் நடுப்பகுதி ஓவர்கள் யார் வீசினாலும் அந்த ஓவர்களை குறிவைத்து அடித்ததால், சிஎஸ்கேவின் அந்த உத்தியும் காலியானது. லக்னெள ரன்ரேட்டை குறையவிடாமல் கொண்டு சென்ற ராகுல், டீகாக் ஒரு கட்டத்தில் கவனக் குறைவால் விக்கெட்டை வீழ்த்தினர் என்றுதான் சொல்ல வேண்டும். சிஎஸ்கே பந்துவீச்சு சிறப்பாக இருந்தது எனக் கூறுவது சரியானதாக இருக்க முடியாது. குறிப்பிடப்பட வேண்டிய அம்சமாக, சிஎஸ்கே அணிக்காக லக்னெள அணி “ஹோம் ஓர்க்” செய்து முன்கூட்டியே திட்டமிட்டுக் களமிறங்கியது. அந்தத் திட்டங்களை வெற்றிகரமாகச் செயல்படுத்தியது வெற்றிக்கு முக்கியக் காரணம். ஏனென்றால், லக்னெள அணியின் சரியான திட்டமிடலால்தான், 90 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து சிஎஸ்கே அணி தடுமாறியது. கடைசி 4 ஓவர்களில் லக்னெள பந்துவீச்சாளர்கள் துல்லியமாகப் பந்துவீசியிருந்தால், சிஎஸ்கே அணி 120 ரன்களில் சுருண்டிருக்கும். மொயீன் அலியை ஹாட்ரிக் சிக்ஸ் அடிக்க அனுமதித்தது, தோனியின் கடைசி நேர கேமியோ ஆகியவை சிஎஸ்கே ஸ்கோரை உயர்த்தியது. ஒட்டுமொத்தத்தில் சிஎஸ்கேவுக்கு எதிராக லக்னெள அணி செயல்படுத்திய திட்டங்களை சிஎஸ்கே பேட்டர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை.   பதிலடி கொடுத்த ராகுல்-டீகாக் பட மூலாதாரம்,SPORTZPICS இந்த ஐபிஎல் சீசனில் லக்னெள தொடக்க ஆட்டக்காரர்கள், டீ காக், கே.எல்.ராகுல் இருவரும் பவர்ப்ளே ஓவர்களை சரியாகப் பயன்படுத்தவில்லை, பவர்ப்ளே ஓவர்களுக்குள் ஆட்டமிழந்து விடுகிறார்கள், விரைவாக ரன்களை சேர்ப்பதில்லை என்ற விமர்சனங்கள் எழுந்தன. கடந்த 6 ஆட்டங்களில் பெரும்பாலும் நிகோலஸ் பூரனின் அதிரடியால்தான் பெரிய ஸ்கோர் கிடைத்தது என்று கிரிக்கெட் விமர்சகர்கள் விமர்சித்தனர். ஆனால், நேற்றைய ஆட்டத்தில் கே.எல்.ராகுல், டீகாக் இருவரும் அந்த விமர்சனங்களுக்குப் பதிலடி கொடுத்தனர். முதல் விக்கெட்டுக்கு 134 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். 10.5 ஓவர்களில் இருவரால் லக்னெள அணி 100 ரன்களை தொட்டது. கே.எல்.ராகுல் அதிரடியாக பேட் செய்ய, டீகாக் வழக்கத்துக்கு மாறாக மிகவும் நிதானமாக தேவையான ஷாட்களை மட்டும் ஆடினார். ராகுல் ஷார்ட் பால் வீசப்பட்டால் நம்பிக்கையுடன் பிக்-அப் ஷாட்களை ஆடி சிஎஸ்கே பந்துவீச்சை வெளுத்து வாங்கினார். குறிப்பாக பதீராணா பலமுறை யார்கர் வீச முயன்றும் ராகுல் அவர் பந்துவீச்சை நொறுக்கினார். தீபக் சஹர் வீசிய 2வது ஓவரிலிருந்தே ராகுல் பவுண்டரிகளாக விளாசத் தொடங்கி, மிட்விக்கெட்டில் சிக்ஸரும் அடித்து சிஎஸ்கேவுக்கு அதிர்ச்சி அளித்தார். முஸ்தபிசுர் ரஹ்மான் பந்துவீச வந்தபோதும் அவரையும் ராகுல் விட்டு வைக்கவாமல் பவுண்டரிகளாக விளாசினார். பட மூலாதாரம்,SPORTZPICS பவர்ப்ளேவில் 5வது, 6வது ஓவரில் ராகுல், டீகாக் இருவரும் இணைந்து சிஸ்கர், பவுண்டர்களாக விளாசியதால் விக்கெட் இழப்பின்றி பவர்ப்ளேவில் லக்னெள 54 ரன்கள் சேர்த்தது. ஜடேஜா வீசிய 9வது ஓவரில் டீ காக் அடித்த ஷாட்டை ஷார்ட் தேர்டு திசையில் இருந்த பதீராணா எளிமையான கேட்சை பிடிக்கத் தவறவிட்டார். இந்த கேட்ச் தவறவிட்டதற்கான விலையை கடைசியில் சிஎஸ்கே கொடுக்க நேர்ந்ததது. ஜடேஜாவின் அடுத்த ஓவரில் டீகாக் பவுண்டரியும், ராகுல் பவுண்டரியும் விளாசி, ராகுல் 31 பந்துகளில் அரைசதத்தை எட்டினார். நிதானாமாக ஆடிய டீகாக் 41 பந்துகளில் அரைசதம் அடித்தார். இருவரையும் பிரிக்க முடியாமல் கேப்டன் கெய்க்வாட், தோனி இருவரும் பல பந்துவீச்சாளர்களை மாற்றிப் பயன்படுத்தியும் ஒன்றும் நடக்கவில்லை. முஸ்தபிசுர் வீசிய 15வது ஓவரின் கடைசிப் பந்தில் ஸ்லோ பவுன்ஸரை அடிக்க முற்பட்டு, டீகாக் தேவையின்றி தனது விக்கெட்டை இழந்தார். அடுத்ததாக, பதீராணா பந்துவீச்சில் ராகுல் அடித்த ஷாட்டில் பேக்வேர்ட் பாயின்ட் திசையில் ஜடேஜா அற்புதமான கேட்சை பிடித்தார். இரு விக்கெட்டுகள் விழுந்ததால் சிஎஸ்கே ஏதேனும் மாயம் செய்யும் என ரசிகர்கள் நினைத்தனர். ஆனால், நிகோலஸ் பூரன், ஸ்டாய்னிஷ் ஜோடி அதற்கு இடம் அளிக்கவில்லை. அதிலும் நிகோலஸ் பூரன் ஒரு சிக்ஸர், 3 பவுண்டரிகள் அடித்து சிஎஸ்கே திட்டத்தை உடைத்தெறிந்தார். பூரன் 22 ரன்களிலும், ஸ்டாய்னிஷ் 7 ரன்களிலும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தனர்.   கட்டுக்கோப்பான பந்துவீச்சு பட மூலாதாரம்,SPORTZPICS லக்னெள அணியின் பந்துவீச்சு நேற்றைய ஆட்டத்தில் நேர்த்தியாகவும், கட்டுக்கோப்பாகவும் இருந்தது. யாஷ் தாக்கூர், மோசின்கான், ரவி பிஸ்னோய் 3 பேரும் கடைசி 4 ஓவர்களில்தான் ரன்களை வழங்கினர். மற்ற வகையில் தொடக்கத்தில் சிஎஸ்கே பேட்டர்களுக்கு கொடுத்த நெருக்கடியை விடாமல் பிடித்துச் சென்றனர். நடுப்பகுதி ஓவர்களில் சிஎஸ்கே பேட்டர்கள் விஸ்வரூபம் எடுக்கலாம் என்பதைக் கருதி, குர்ணல் பாண்டியா, ரவி பிஸ்னோய், ஸ்டாய்னிஷ், மாட் ஹென்றி, என வேகப்பந்துவீச்சு, சுழற்பந்துவீச்சு எனக் கலவையாக பந்துவீசி பேட்டர்களை செட்டில் ஆகவிடாமல் தடுத்தனர். இந்த சீசனில் நடுப்பகுதி ஓவர்களில் சிறப்பாக பேட் செய்து வரும் ஷிவம் துபே விக்கெட்டை ஸ்டாய்னிஷ் எடுத்துக் கொடுத்தார். ரூ.8 கோடிக்கு வாங்கப்பட்ட உ.பி. வீரர் சமீர் ரிஸ்வியை பிஸ்னோய் பந்துவீச்சில் ராகுல் ஸ்டெம்பிங் செய்து வெளியேற்றி கட்டுக்கோப்பாகக் கொண்டு சென்றனர். இதனால் பவர்ப்ளே ஓவர்களில் சிஎஸ்கே அணி விக்கெட்டுகளை இழந்து 51 ரன்கள் சேர்த்த நிலையில், அடுத்த 10 ஓவர்களில் 62 ரன்கள் மட்டுமே சேர்த்தது. 7வது ஓவரிலிருந்து 13வது ஓவர் வரை சிஎஸ்கே அணி 36 ரன்கள் மட்டுமே சேர்த்தது. அதில் ஒரு பவுண்டரிகூட அடிக்கவிடாமல் லக்னெள பந்துவீச்சாளர்கள் துல்லியமாகவும், நெருக்கடி தரும் விதத்திலும் பந்துவீசினர். நடுப்பகுதி 10 ஓவர்களில் 5 ஓவர்களை ரவி பிஸ்னோய், குர்ணல் பாண்டியா இருவரும் பந்துவீசி 29 ரன்கள் மட்டுமே கொடுத்தனர். அதிலும் செட்டில் ஆன பேட்டர் ரஹானே விக்கெட்டையும் குர்ணல் பாண்டியா வீழ்த்தினார்.   ஹோம் ஓர்க் செய்ததன் பலன் பட மூலாதாரம்,SPORTZPICS லக்னெள பந்துவீச்சு குறித்து கேப்டன் ராகுல் கூறுகையில், “சிஎஸ்கே போன்ற வலிமையான அணியை எதிர்கொள்ள நாங்கள் திட்டமிட்டுக் களமிறங்கினோம். எங்கள் திட்டங்களைச் சிறிதுகூட தவறுசெய்யாமல் செயல்படுத்தினோம். எந்த பேட்டரையும் செட்டில் ஆகவிடாத வகையில் பந்துவீச வேண்டும் என முடிவு செய்தோம். அதற்கு ஏற்றார்போல் நடுப்பகுதியில் சுழற்பந்துவீச்சு, வேகப்பந்துவீச்சு என மாறி, மாறி பந்துவீசி, ஒரு பந்துவீச்சுக்கு பேட்டர் செட்டில் ஆகாமல் தடுத்தோம். எங்கள் திட்டங்களுக்குத் தக்க வகையில் ஆடுகளம் இருந்தது, சிஎஸ்கே பேட்டர்களும் அதற்கேற்ப எதிர்வினையாற்றியதால் எளிமையாக முடிந்தது. என்ன விதமான உத்திகளைக் கையாள்வது, பந்துவீசுவது, எவ்வாறு பேட் செய்வது, என்பதை முன்கூட்டியே ஆலோசித்து, ஹோம் ஓர்க் செய்துதான் களமிறங்கினோம். வேகப்பந்துவீச்சு, சுழற்பந்துவீச்சு எனக் கலந்து பயன்படுத்த வேண்டும், குறிப்பாக சிஎஸ்கேவின் எந்த பேட்டரையும் செட்டில் ஆகவிடாமல் பந்துவீச முடிவு செய்தோம். ஒவ்வொரு வீரரும் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட பணியை சிறப்பாகச் செய்தனர். குறிப்பாக பந்துவீச்சாளர்கள் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட பணியை சிறப்பாகச் செய்தனர். இல்லாவிட்டால், அணி ஒட்டுமொத்தமாக வீணாகியிருக்கும். திட்டங்களைச் சிறப்பாகச் செயல்படுத்தினோம், தீவிரமாகப் பயிற்சி எடுத்ததன் பலன் கிடைத்தது,” எனத் தெரிவி்த்தார்.   சிஎஸ்கே சறுக்கியது எங்கே? பட மூலாதாரம்,SPORTZPICS சிஎஸ்கே அணியின் மோசமான தொடக்க பேட்டர்கள், நடுப்பகுதி பேட்டர்களின் சொதப்பல், பல் இல்லாத பந்துவீச்சு, மோசமான ஃபீல்டிங் ஆகியவை தோல்விக்கான காரணங்கள். ரச்சின் ரவீந்திரா முதல் இரு போட்டிகளைத் தவிர வேறு எந்த ஆட்டத்திலும் ஜொலிக்கவில்லை. கான்வே இல்லாத வெற்றிடத்தை சிஎஸ்கே நன்கு உணர்கிறது. ரஹானே இதுவரை தொடக்க ஆட்டக்காரராக களமிறங்காத நிலையில் இப்போது வழங்கப்பட்டிருக்கும் பணியால் புதிய பந்தில் பேட் செய்ய முடியாமல் திணறுவது தெரிகிறது. புதிய பந்து நன்றாக ஸ்விங் ஆகும்போது, அதை டிபெண்ட் செய்து ஆடுவதற்கே ரஹானே முயல்கிறாரே தவிர, பவர்ப்ளேவுக்கு ஏற்றார்போல் அடித்து ஆட முடியவில்லை. ஆக சிஎஸ்கே அணியின் தொடக்க வரிசை சிக்கலில் இருக்கிறது. கேப்டன் கெய்க்வாட் நேற்றைய ஆட்டத்தில் ஆங்கர் ரோல் எடுக்காமல் 17 ரன்னில் யாஷ் தாக்கூர் பந்துவீச்சில் அவுட்ஸ்விங்கில் எட்ஜ் எடுத்து ஆட்டமிழந்தது பெரிய பின்னடைவு. பவர்ப்ளே ஓவர்களுக்குள் 51 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்தது, அடுத்த 31 ரன்கள் சேர்ப்பதற்குள் 3 விக்கெட்டுகளை இழந்தது என சிஎஸ்கே பேட்டர்கள் ஒட்டுமொத்தமாகத் தவறு செய்தனர். பட மூலாதாரம்,SPORTZPICS ஜடேஜா 4வது வீரராக களமிறக்கப்பட்டாலும், அவர் சிங்கில், 2 ரன்கள் எடுக்கத்தான் முக்கியத்துவம் அளித்தாரே தவிர, பவுண்டரி, சிக்ஸருக்கு பெரிதாக முயலவில்லை. டி20 போட்டிகளில் பவுண்டரி, சிக்ஸர்தான் அணியின் ஸ்கோரை பெரிதாக உயர்த்தும், ரன்ரேட்டை குறையவிடாமல் கொண்டு செல்லும். அதைச் செய்ய ஜடேஜா, மொயீன் அலி தவறிவிட்டனர். நடுப்பகுதி ஓவர்களில் மொயீன் ஜடேஜா களத்தில் இருந்தபோதிலும் 7வது ஓவரில் இருந்து 13வது ஓவர்கள் வரை ஒருபவுண்டரிகூட சிஎஸ்கே அடிக்காதது ரன்ரேட்டை கடுமையாக இறுக்கிப் பிடித்தது. ஜடேஜா ஆங்கர் ரோல் எடுத்து 34 பந்துகளில் அரைசதம் அடித்தாலும், அவரிடம் இருந்து தேவையான பவுண்டரிகள், சிக்ஸர்கள் அரிதாகவே வந்தன. மொயீன் அலி தொடக்கத்தில் நிதானமாக ஆடி கடைசி நேரத்தில் பிஸ்னோய் ஓவரில் ஹாட்ரிக் சிக்ஸர்கள் அடித்து 30 ரன்களில் ஆட்டமிழந்தார். சிஎஸ்கே அணியில் நேற்று ஜடேஜா, மொசின் அலி என இரு சுழற்பந்துவீச்சாளர்கள் இருந்தும் ஜடேஜாவுக்கு மட்டுமே வாய்ப்பு கிடைத்தது. மொசின் அலி ஒரு ஓவர் வீசி 5 ரன்கள் என சிறப்பாகப் பந்துவீசியும் தொடர்ந்து வாய்ப்பு வழங்கவில்லை. ஆனால், சுமாராகப் பந்துவீசிய தேஷ்பாண்டே, முஸ்தபிசுர் இருவருக்கும் தொடர்ந்து வாய்ப்புகள் வழங்கப்பட்டன. மொசின் அலிக்கு கூடுதலாக சில ஓவர்கள் வழங்கி இருக்கலாம்.   பல் இல்லாத பந்துவீச்சு பட மூலாதாரம்,SPORTZPICS சிஎஸ்கே அணியில் முஸ்தபிசுர் ரஹ்மானை தவிர மற்ற பந்துவீச்சாளர்கள் அனைவரும் பேட்டர்களுக்கு நெருக்கடி தரும் அளவுக்கு அனைத்து ஆடுகளங்களிலும் துல்லியமாகப் பந்துவீசுவோர் அல்ல. பந்துவீச்சில் வேரியேஷன், ஸ்லோ பவுன்ஸர்கள், நக்குல் பால், ஷார்ட் பால், பவுன்ஸர் என வேரியேஷன்களை வெளிப்படுத்தி பேட்டர்களுக்கு நெருக்கடி கொடுக்கும் அளவுக்கு பந்துவீச்சு இல்லை என்பதுதான் நிதர்சனம். சிஎஸ்கே அணி தனது வெற்றியை பந்துவீச்சிலும் சரி, பேட்டிங்கிலும் சரி நடுப்பகுதி ஓவர்களில்தான் எதிரணியிடம் இருந்து கபளீகரம் செய்கிறதே தவிர டெத் ஓவர்களிலோ அல்லது பவர்ப்ளே ஓவர்களிலோ அல்ல. அதிலும் மே 1ஆம் தேதிக்குப் பின் முஸ்தபிசுர் ரஹ்மான் சொந்த நாட்டுக்குத் திரும்புகிறார் என்பதால், சிஎஸ்கே பந்துவீச்சு இன்னும் பலவீனமாகும். கான்வே தொடரிலிருந்து முழுமையாக விலகிவிட்டது பேட்டிங்கில் சிஎஸ்கேவுக்கு பெரிய அடி. அவருக்குப் பதிலாக இங்கிலாந்து வேகப்பந்துவீச்சாளர் ரிச்சார்ட் கிளீசனை சிஎஸ்கே வாங்கியுள்ளது. மே 1ஆம் தேதிக்குப் பின் முஸ்தபிசுர் சென்றபின் அவருக்குப் பதிலாக பந்துவீச்சாளரை வாங்க முக்கியத்துவம் அளிக்குமா அல்லது பேட்டருக்கு முக்கியத்துவம அளிக்குமா என்பது எதிர்பார்ப்பாக இருக்கிறது. பட மூலாதாரம்,SPORTZPICS சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கூறுகையில், “நாங்கள் பேட்டிங்கை நன்றாக ஃபினிஷ் செய்தோம். இன்னும் கூடுதலாக 15 முதல் 20 ரன்கள் சேர்த்திருக்க வேண்டும். பவர்ப்ளேவில் விக்கெட்டுகள் வீழ்த்த முடியாமல் இருக்கும் சிக்கலைத் தீர்க்க வேண்டும். அதற்கு விரைவாகத் தீர்வும் காண்போம். பவர்ப்ளேவில் விக்கெட் வீழ்த்தினால் நிச்சயமாக எதிரணி கவனமாக ஆடுவார்கள், ரன் சேர்ப்பும் குறையும். இந்த ஆட்டத்தில் தொடக்கத்தில் சரியாக பேட்டிங் செய்ய முடியால் திணறியது, 15வது ஓவர் வரை சிரமம் நீடித்தது. சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தோம். இதுபோன்ற ஆடுகளங்களில், இரவு நேர பனிப்பொழிவு இருப்பதால், 190 ரன்களாவது சேர்ப்பது பாதுகாப்பானது,” எனத் தெரிவித்தார். தோனியின் 101 மீட்டர் சிக்ஸர் சிஎஸ்கே அணியின் முன்னாள் கேப்டன் தோனி, இந்த சீசன் முழுவதும் கலக்கி வருகிறார். லக்னௌ ரசிகர்களும் தோனியின் ஆட்டத்தைக் கண்டு ரசித்தனர். 9 பந்துகளைச் சந்தித்த தோனி 2 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகள் என 28 ரன்கள் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்தார். அதிலும் யாஷ் தாக்கூர் வீசிய கடைசி ஓவரில் லாங்-ஆன் திசையில் இமாலய சிக்ஸர் விளாசினார் இந்த சிக்ஸர் 101 மீட்டர் உயரம் சென்றது. இந்த ஐபிஎல் சீசனிலேயே அதிக உயரத்துக்கு அடிக்கப்பட்ட, மிகப்பெரிய சிக்ஸர் இதுதான். தோனியின் கடைசி நேர கேமியோவில் 28 ரன்கள், பிஸ்னோய் ஓவரில் மொயீன் அலி ஹாட்ரிக் சிக்ஸர் உள்பட 30 ரன்களும் இல்லாவிட்டால் சிஎஸ்கே ஸ்கோர் 125 ரன்கள்தான் என்பது குறிப்பிடத்தக்கது. https://www.bbc.com/tamil/articles/cx03y922278o
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.