Jump to content

கிளிநொச்சியில் சிறப்பாக நடைபெற்ற அரசியல் கைதியின் விடியலைத் தேடும் இரவுகள் நூல் வெளியீடு


Recommended Posts

கிளிநொச்சியில் சிறப்பாக நடைபெற்ற அரசியல் கைதியின் விடியலைத் தேடும் இரவுகள் நூல் வெளியீடு

img_8889
 
இன்று  14-11-2016  திங்கள்  கிளிநொச்சியில்  சிறப்பாக  நடைபெற்ற அரசியல் கைதி  விவேகானதனூர் சதீசின் விடியலைத் தேடும் இரவுகள்  நூல் வெளியீடு  பிற்பகல்  மூன்றுமணியளவில்  கிளிநொச்சி கூட்டுறவாளர் மண்டபத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில்  விருந்தினர்களாக  யாழ் போதனா வைத்திய சாலையின் பணிப்பாளர் வைத்தியக்கலாநிதி  சத்தியமூர்த்தி ,பாராளுமன்ற உறுப்பினர் எம் ஏ சுமந்திரன் ,வடமாகாண போக்குவரத்து மீன்பிடித்துறை அமைச்சர் டெனீஸ்வரன் ,வடமாகாண சபை உறுப்பினர்களான பசுபதிப்பிள்ளை ,அரியரத்தினம் ,சயந்தன் ,சுகிர்தன் அஸ்மின் ,கிளிநொச்சி மாவட்ட தமிழ்ச்சங்கத் தலைவர் ,மன்னார் மாவட்ட பொதுஜன அமைப்புக்களின் ஒன்றியத்தலைவர் எஸ் .சிவகரன் ஆகியோர் கலந்து கொண்டனர்
 
வள்ளுவர் புரம்  புரட்சி தலைமையில் அகவணக்கம் மற்றும் மங்கள விளக்கேற்றலுடன் ஆரம்பமாகிய இன்  நிகழ்வில்  விவேகானதனூர் சதீசின் விடியலைத் தேடும் இரவுகள் முதற் பிரதியினை பாராளுமன்ற உறுப்பினர் எம் ஏ சுமந்திரன் வழங்க வடமாகாண போக்குவரத்து மீன்பிடித்துறை அமைச்சர் டெனீஸ்வரன் பெற்றுக்கொண்டார்  மற்றும் சிறப்புப் பிரதியினை வடமாகாண போக்குவரத்து மீன்பிடித்துறை அமைச்சர் டெனீஸ்வரன்  வழங்க பாராளுமன்ற உறுப்பினர் எம் ஏ சுமந்திரன் பெற்றுக்கொண்டார்.
img_8901
 
 சிறப்புரைகளின்  வரிசையில் யாழ் போதனா வைத்திய சாலையின் பணிப்பாளர் வைத்தியக்கலாநிதி  சத்தியமூர்த்தி, வடமாகாண போக்குவரத்து மீன்பிடித்துறை அமைச்சர் டெனீஸ்வரன்,  மன்னார் மாவட்ட பொதுஜன அமைப்புக்களின் ஒன்றியத்தலைவர் எஸ் .சிவகரன் ஆகியோர் உரை நிகழ்த்தினர்  நூலின் விமர்சன உரையினை  கிளிநொச்சி மத்திய மகாவித்தியாலய ஆசிரியர் சத்தியானந்தம்  நிகழ்த்தினார்
 
மன்னார் மாவட்ட பொதுஜன அமைப்புக்களின் ஒன்றியத்தலைவர் எஸ் .சிவகரன் தனது உரையில் மிகப்பெரிய நீதியரசரை  வடக்குமாகாண சபையிலே கொண்டுவந்து வைக்கப்பட்டது .அங்கு இருப்பவர்கள் எல்லாம் மிகுந்த கல்வியலாளர்கள் , நடந்தது என்ன  ,  ஒன்றும் செய்யவில்லை  வடக்கு மாகாண சபையில் ஆளுங்கட்சிக்குள்  எதிர்க்கட்சி என  வடக்கு மாகாண சபை பற்றி விமர்சனம்  செய்த போது வடமாகாண சபை உறுப்பினர்     ப.அரியரட்னம்  உரையினை நிறுத்துமாறு கோரி குழப்ப  நிலையில்  மேடையினை விட்டு வெளியேற  முயன்ற போது ஏற்பாட்டளர்களினால்  சமரசம் செய்யப்பட்டு நிகழ்வு  மீண்டும்  நடத்திச் செல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது
 
இன் நிகழ்வில் யாழ் போதனா வைத்திய சாலையின் பணிப்பாளர் வைத்தியக்கலாநிதி  சத்தியமூர்த்தி ,பாராளுமன்ற உறுப்பினர் எம் ஏ சுமந்திரன் ,வடமாகாண போக்குவரத்து மீன்பிடித்துறை அமைச்சர் டெனீஸ்வரன் ,வடமாகாண சபை உறுப்பினர்களான பசுபதிப்பிள்ளை ,அரியரத்தினம் ,சயந்தன் ,சுகிர்தன் அஸ்மின் ,கிளிநொச்சி மாவட்ட தமிழ்ச்சங்கத் தலைவர் ,மன்னார் மாவட்ட பொதுஜன அமைப்புக்களின் ஒன்றியத்தலைவர் எஸ் .சிவகரன் கல்வியலாளர்கள் , அரசியல் கைதி  விவேகானதனூர் சதீசின், கவிஞர்கள் ,மக்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர் .
img_8903img_8908img_8913
img_8919img_8933img_8937img_8942img_8953
 
 
 

http://globaltamilnews.net/archives/7013

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.