Jump to content

யாழ் சோழியன் அண்ணா காலமானார்


Recommended Posts

ஆழ்ந்த அனுதாபங்கள். சோழியன் அண்ணாவின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கின்றேன்.

Link to comment
Share on other sites

  • Replies 120
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

யாழின் மூத்த உறுப்பினர் சோழியானின் மறைவு அவரது குடும்பத்திற்கு மட்டமல்ல யாழுக்கும் பெரியதொரு இழப்பே.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய வேண்டுகிறேன்.

Link to comment
Share on other sites

காலையில் மிகவும் அதிர்ச்சியை தந்த செய்தி.  குடும்ப உறவை இழந்தது போன்று மனது மிகவும் பாரமாகவும் கவலையாகவும் இருக்கின்றது :(:( .

சோழியன் அண்ணாவின் ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகின்றேன் அத்தோடு அவரை இழந்து நிக்கும் அவரது குடும்பத்தவர்களுக்கும், உற்றார் உறவினர்கள் நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கின்றேன்!

zoom_FWSW7003frenchfloristlasympathyflow

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்களக் குடும்பம் ஓா் உறவை இழந்து விட்ட சோகத்தை இன்று காலையில் அறிந்து மிகவும் அதிா்ச்சியாக உள்ளது. சோழியானின் ஆன்ம சாந்திக்காகப் பிராத்திக்கும் இவ் வேளையில் அவாின் குடும்பத்தினருக்கு எம் ஆழ்ந்த அனுதாபங்களையும் தொிவித்துக் கொள்ளுகின்றோம்.

Link to comment
Share on other sites

காலையில் யாழை திறந்தவுடன் இப்படி ஒரு அதிர்ச்சி கிடைக்கும் என நினைக்கவில்லை. யாழின் மூத்த உறுப்பினரான சோழியன் அண்ணாவின் மறைவுச் செய்தி மிகவும் அதிர்ச்சியையும் வேதனையையும் தருகின்றது.

சோழியன் அண்ணாவின் இழப்பால்  துயருறும் அவர் குடும்பத்தினரதும் உறவினர்களினதும் நண்பர்களினதும் துயரத்தில் பங்கு கொள்கின்றேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, AJeevan said:

இராஜன் முருகவேல் (சோழியன்) மறைந்தார்!

நண்பனே உனக்காக மௌனமாக நிற்பதை தவிர 
ஒன்றும் செய்ய தெரியவில்லை!

இலங்கை சுழிபுரத்தை பிறப்பிடமாகவும் , ஜேர்மனியை வசிப்பிடமாகவும் கொண்ட கொழும்பு றோயல் கல்லூரி பழைய மாணவன் , இராஜன் முருகவேல் (சோழியன்) மறைவு ஓர் அதிர்ச்சியாக தம்பி பரணி மூலம் முகப் புத்தகம் வாயிலாக அறிய முடிந்தது.

சில காலமாக உடல் நலமில்லாமல் இருந்தார். நான் இடையிடையே தொலைபேசி வழி பேசுவேன். பெட்டி செய்தி ஊடாக கருத்து பரிமாற்றம் செய்து கொள்வோம். யாழ் இணையம் மூலம் ஏற்பட்ட நட்பு. அன்று முதல் தொடர்ந்து வந்தது.

ஆரம்ப காலம் தொட்டு யாழ் இணைய உறவாக இருந்தவர். அரசியல் ரீதியாக நாங்கள் இருவரும் முரண்பட்டவர்கள். இருந்தாலும் நட்பு ரீதியாக அது எம்மை பிரித்ததில்லை. காயப்படுத்தியதும் இல்லை. அப்படியான ஒரு குண நலன் கொண்டவரை பார்ப்பது மிக அரிது. நான் பல முறை அவர் வீட்டுக்கு போய் தங்கி மகிழ்வாய் கழித்துள்ளோம். உண்மைகளை அஞ்சாமல் பேசும் ஒரு அன்பர். அதை நகைச்சுவையாக சொல்வதில் கை தேர்ந்தவர். கடினமான எதையும் சிரித்துக் கொண்டே சொல்வார். அதனால் அவரை எனக்கு நன்கு பிடிக்கும்.

புலி ஆதரவாளர்களில் எனக்கு மிகவும் பிடித்த நண்பர்களில் இவரும் ஒருவர். இதைவிட அதிகம் தேவையில்லை.

செய்தி கேட்டதும் வீட்டுக்கு தொடர்பு கொண்டேன். மகனோடு பேசினேன். அனைவரோடும் எனக்கு நல்ல உறவு. இராஜனுக்கு கொலொஸ்ரோல் இருந்து வந்தது. அதற்காக சிகிச்சை எடுத்து வந்தார். அண்மையில் இலங்கைக்கும் போய் வந்தார். முகப் புத்தகத்தில் படங்களை போட்டு , ஊரின் நிலை குறித்து உண்மையை பதிவு செய்து கொண்டிருந்தார்.

உடல் நலமில்லாமல் எதுவும் செய்யாமல் சில நாட்களாக கட்டிலிலேயே இருந்துள்ளார். நேற்று தூங்கியவரை எழுப்பிய போது அவர் எழுந்திருக்கவில்லை.

நண்பர்கள் அழைப்பதற்காக அவரது வீட்டு தொலைபேசி எண் : 0049 421 55 37 27

 

 

வணக்கம் அஜீவன் நீண்ட நாட்களின் பின் உங்களை களத்தில் கண்டது ரொம்ப மகிழ்ச்சி. பழைய மாதிரி யாழ் களத்துடன் இணைந்து இருங்களேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்லவர்கள் விரைவில் போய்விடுவார்கள் என்பார்கள். அதேபோல நல்லவர்களுக்கு தூக்கத்தில் சாவு வரும் என்பார்கள்.

இந்த இரண்டையும் மெய்பித்துப் போயுள்ளார் சோழியன் அண்ணா.

ஒரு உண்மையான, பகட்டு இல்லாத இன உணர்வாளர்.

தம் தரப்பு நியாயத்தை மட்டுமில்லாமல், அநியாயத்தையும் ஏற்றுக் கொள்ளக்கூடிய பண்பாளர்.

சக்கரை நோய் இருப்பதாயும் அநேகம் ஆஸ்பத்திரி போய் வருவதாயும் சில ஆண்டுகளுக்கு முதல் திண்ணையில் பேசும் போது சொன்னார்.

சக்கரை நோயாளருக்கு கொலஸ்டிரோல் குழப்படியும் கூடவே வரும் என்றும் கதைத்திருந்தோம்.

இவ்வளவுதான் உலகம். ???

அண்ணாவின் குடும்பத்தாருக்கு என் இரங்கல்கள்.

Link to comment
Share on other sites

அண்ணாரின் ஆத்மா சாந்தியடையட்டும். அவரின் குடும்பத்தாரின் துயரிலும் பங்கு கொள்கின்றோம்....!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இனிய மனிதர், அவரின் மறைவு நம்ப முடியவில்லை..!

 

roses-beautiful-bouquet-cool-elegantly-f

ஆழ்ந்த இரங்கல்கள்..

 

Link to comment
Share on other sites

யாழின் ஆரம்பகாலத்தில் யாழுடன் இணைந்து  பயணித்த சோழியன் அவர்களுக்கு அஞ்சலிகள். அவரது இழப்பால் துயருற்றிருக்கும் அனைவரின் துயரங்களிலும் பங்கு கொள்கின்றோம்.

Link to comment
Share on other sites

அன்பு ஈழபிரியன்


இராஜன் முருகவேல் (சோழியன்)  மறைந்த நேரத்தில்  என் தாய் வீடான யாழ் இணையம்தான் கண்ணில் தெரிந்தது.

ஒரு சகோதரனின் மறைவின் போது குடும்பமாக இணைய வேண்டிய தருணம்!
தூர தேசங்களில் நாம் வாழ்ந்தாலும் - அவர் எம்மோடு இணைந்து இருந்த காலத்தை மறக்க முடியாது.

அன்னாருக்கு அஞ்சலி செலுத்தும் அதே சமயம் - அவர் குடும்பத்தோடு நம் துயரத்தை பகிர்ந்து கொள்வோம்.

அவர்களுக்கு வார்த்தைகளால் ஆவது ஆதரவாக நிற்போம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

funeral_flower_posy_pad.jpg

சோழியான் அண்ணா அவர்களின் இழப்பு அவரது குடும்பத்தாருக்கும் யாழுக்கும்  எழுத்துலகுக்கும் பேரிழப்பாகும். அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திப்பதோடு அன்னாரின் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தார் உறவுகள் நண்பர்கள் அனைவரோடும் ஆழ்ந்த இரங்கலைப் பகிர்ந்துகொள்கின்றேன். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த அனுதாபங்கள். அன்னாரின் ஆத்ம சாந்திக்கு பிரார்த்திக்கின்றேன்.

Link to comment
Share on other sites

சோழியன் அண்ணாவின் குடும்பத்தாருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாழ் இணையம், தமிழ் உணர்வு, அதனால் வந்த ஸ்நேகம்   
அந்தி வரும் பொழுதில் திண்ணை சாயும்  நேரம் 
நலம் விசாரித்து ....நட்பாய் பேசி... சினிமா கதைத்து... 
கால இடைவெளியில் சில பொழுது காணாமல் போனவரை 
பலமுறை தேடியும் பதிலெதுவும் வரவில்லை...
உன் பிரிவறிந்தோம், இது நிரந்தரமாம்!!!  
சோழியன் இல்லா திண்ணை... சோபை இழந்த மண்ணாய் 
மனசெல்லாம் வெறுமை மண்ட...தூரத்தில் ஒரு உறவு...
இல்லை ... என் கணக்கில் பிழை  ...

பல உறவு உனக்காக கண் கலங்கும்...
நீ கொண்ட தமிழ் உணர்வு உன் ஆத்மாவுக்கு சாந்தி தரட்டும்...
போய்வா அண்ணா ... tw_cry:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மிகவும் அதிர்ச்சியான செய்தி. சோழியன் அண்ணா மறைந்தார் என்பதை இன்னமும் நம்பமுடியாமல் உள்ளது.

சோழியன் அண்ணாவின் திடீர் மறைவினால் துயருற்றிருக்கும் அவர் குடும்பத்தாருக்கும் நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த கவலைகளையும் இரங்கல்களையும் தெரிவித்துக்கொள்கின்றேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மிகவும் கவலையான செய்தி. சோழியன் அண்ணாவின் குடும்பத்தாருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்.

Link to comment
Share on other sites

ஆழ்ந்த அனுதாபங்கள். அவரின் இழப்பை ஏற்க முடியவில்லை. பல இனிமையான திரிகள் யாழ் களத்தில் உண்டு. திண்ணையில் காரசாரமான விவாதங்களில் கூட தனது கருத்துக்களை தயங்காமல் அதே நேரம் யாரையும் நோகடிக்காமல் கருத்து வைப்பதில் அவருக்கு நிகர் அவரே தான். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அண்ணா; சோழியனின் இனிய மற்றும் நகைச் சுவைப் பதிவுகளை ரசித்தவன் என்ற முறையில் என்னை அவரின் மறைவுசட செய்தி வெகுவாகப் பாதிக்கிறது.அண்ணாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேn

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நம்ப முடியாத திடீர் இழப்பு.சோழியன் அண்ணாவின் ஆத்மா சாந்தியடையட்டும்...அன்னாரின் குடும்பத்தினருக்கு எனது அஞ்சலிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.நல்லதொரு பல்கலை கலைஞனை சமூகம் இழந்து விட்டது...வசம்புவின் இழப்பினை தொடர்ந்து மற்ற ஒரு யாழ் கள உறவின் இழப்பு இது.

Link to comment
Share on other sites

யாழ் இணையம் இணைத்து வைத்த உறவுகளில் ஓன்று சோழியன்.முன்னர் யாழிலும் பின்னர் முகநூலிலும் அடிக்கடி விவாதங்களால் முரண்பட்டிருக்கிறோம்.கோபித்துக்கொண்டதில்லை.அருமையானதொரு உறவு அஞ்சலிகள் .

Link to comment
Share on other sites

மிகவும் கவலையான செய்தி. சோழியன் அண்ணாவின் குடும்பத்தாருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மிகவும் மனவருத்தம் தருகிறது சோழியன் அண்ணாவின் இழப்பு. அவரின் ஆன்மா நின்மதியடையட்டும்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • Published By: DIGITAL DESK 3   19 APR, 2024 | 03:55 PM   ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பணிப்புரைக்கமைய பாடசாலை மாணவர்களுக்கு போசாக்குள்ள உணவு வழங்கும் நிகழ்ச்சித் திட்டத்திற்காக உலக உணவுத் திட்டத்தின் மூலம் பாடசாலைகளுக்கு வழங்கப்படும் செறிவூட்டப்பட்ட அரிசி (Fortified Rice) விநியோகம் இன்று வெள்ளிக்கிழமை (19) வெயங்கொட உணவு களஞ்சிய வளாகத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. பாடசாலை மாணவர்களிடையே இரும்புச் சத்து குறைபாட்டைக் குறைக்கும் நோக்கில், பாடசாலை உணவுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி (Fortified Rice)  வழங்கப்படுவதுடன், ஜனாதிபதி செயலகத்தின் கீழுள்ள உலக உணவுத் திட்டத்திற்கான கூட்டுச் செயலகத்தின் பணிப்பாளர் நாயகம் எம்.எச்.ஏ.எம்.ரிப்லானின் மேற்பார்வையில் இந்த விநியோக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதன்படி, முதற்கட்டமாக மாகாண மட்டத்தில் உள்ள பாடசாலைகளுக்கு 735 மெற்றிக் தொன் அரிசி வழங்கும் நடவடிக்கை இன்று ஆரம்பமானதுடன் நாளையும் (20) இந்தப் பணிகள் தொடரும். சம்பந்தப்பட்ட மாகாண கல்வித் திணைக்கள அதிகாரிகள் மற்றும் பொது சுகாதார பரிசோதகர்களின்  கண்காணிப்பின் கீழ்  பாடசாலைகளுக்கு அரிசி விநியோகிக்கப்படுகிறது. இதேவேளை, மே 19ஆம் திகதி பாடசாலை புதிய  தவணை ஆரம்பிக்கப்பட்டதன் பின்னர், 378.835 மெற்றிக் தொன் பருப்பு, 412.08 மெற்றிக் தொன் சூரியகாந்தி சமையல் எண்ணெய், 300 மெற்றிக் தொன் பேரீச்சம்பழங்கள் பாடசாலைகளுக்கு விநியோகிக்கப்படும் என உலகக் உணவுத் திட்டத்திற்கான கூட்டுச் செயலகத்தின் பணிப்பாளர் நாயகம்  எம்.எச்.ஏ.எம்.ரிப்லான் தெரிவித்தார். நாட்டிலுள்ள தரம் 1-5 வரை உள்ள அனைத்து பாடசாலை மாணவர்களுக்கு பாடசாலையில் ஒருவேளை உணவு வழங்குவதற்கு கல்வி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. போசாக்கு நிபுணர்களின் பரிந்துரைகளை கருத்தில் கொண்டு, மாணவர்கள் கல்வி நடவடிக்கைகளில் ஈடுபடும் முன்னர், தினமும் காலை 7.30 மணி முதல் 8.30 மணி வரை  காலை உணவு வழங்கப்படுகிறது. இந்தத் திட்டத்தின் ஊடாக"ஆரோக்கியமான சுறுசுறுப்பான  மாணவர் தலைமுறை" என்ற கருப்பொருளின் கீழ், 2024 ஆம் ஆண்டிற்கான பாடசாலை உணவுத் திட்டம், பாடசாலை மாணவர்களிடையே போசாக்குப் பிரச்சினைகளைக் குறைத்தல், மாணவர்களின் தினசரி பாடசாலை வருகையை அதிகரித்தல், நல்ல உணவுப் பழக்கம் மற்றும் சுகாதாரப் பழக்கங்களை மேம்படுத்துதல், கல்வி மேம்பாட்டு மட்டத்தை உ யர்த்த பங்களித்தல்,  மற்றும் உள்நாட்டு உணவு கலாசாரத்தை கட்டியெழுப்புதல் ஆகிய அடிப்படை நோக்கங்களை  நிறைவேற்ற எதிர்பார்க்கப்படுகிறது. 9134 அரச பாடசாலைகளிலும், 100 இற்கும் குறைவான மாணவர்களைக் கொண்ட அனைத்துப் பாடசாலைகளிலும் உள்ள அனைத்து ஆரம்ப வகுப்பு மாணவர்களையும் உள்ளடக்கிய இந்த ஆண்டு பாடசாலை உணவுத் திட்டத்தின் மூலம் 1.6 மில்லியன் மாணவர்கள் பயனடைந்துள்ளனர். இதற்காக ஒன்பது மாகாண சபைகளுக்கு அரசாங்கம் நேரடியாக 16,600 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கியுள்ளதுடன், உலக உணவுத் திட்டம் மற்றும் அமெரிக்க விவசாயத் திணைக்களம் (USDA) உட்பட பல அமைப்புகளும் அனுசரணை வழங்குகின்றன. https://www.virakesari.lk/article/181467
    • செம்மணியில் முன்னர் உப்பளம் இருந்த பகுதியில் சர்வதேசத் துடுப்பாட்ட மைதானம் ஒன்றை அமைப்பதற்கான பகீரத முயற்சியில் நகர அபிவிருத்தி அதிகாரசபை ஈடுபட்டுள்ளது. ஏற்கனவே செம்மணியில் கட்டுமானங்களை மேற்கொள்வதற்குப் பல்வேறு தரப்பினராலும் முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டபோது வடக்கு மாகாணசபை அவற்றை நிராகரித்திருந்தது. தற்போது  வடக்கு மாகாணசபையில் மக்கள் பிரதிநிதித்துவம் இல்லாத நிலையில் செம்மணியில் சர்வதேசத்தரத்தில் துடுப்பாட்ட மைதானம் ஒன்றை அமைப்பதற்கான முயற்சிகள் சாதக பாதகங்களை ஆராயாது முடுக்கிவிடப்பட்டுள்ளன. செம்மணியில் இத் துடுப்பாட்ட மைதானம் அமைந்தால் அயற்பிரதேசங்கள் மாரியில் வெள்ளத்தில் மூழ்கும் அபாயமும், கோடையில் கடும் நீர்ப்பஞ்சத்துக்கு ஆளாகும் அபாயமும் நேரிடும் என்று தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ. ஐங்கரநேசன் எச்சரித்துள்ளார். செம்மணி உப்பளப்பகுதி குடா நாட்டின் பிரதான கடல் நீரேரிகளில் ஒன்றான உப்பாற்றுக் கடல் நீரேரியை அண்டிய தாழ்வான ஈரநிலம் ஆகும். வெளிப்பார்வைக்கு முக்கியத்துவமற்ற வெட்டவெளியாகத் தென்படும் இப் பகுதி  சூழலியல்ரீதியாக இன்றிமையாத பங்களிப்புகளை வழங்கி வருகிறது. மாரியில் சுற்றயல் கிராமங்களில் இருந்து வரும் வெள்ள நீரைத்தேக்கி வைத்து  நிலத்தடி நீர் மட்டத்தைப் பேணுவதோடு, நிலம் உவராவதையும் தடுக்கிறது. கூடவே, மேலதிகநீரைக் குடாநாட்டின் இன்னுமொரு கடல்நீரேரியான யாழ்ப்பாணக் கடல் நீரேரிவழியாகக் கடலுக்குள் அனுப்புவதன் மூலம் குடியிருப்புகளையும் வயல் நிலங்களையும் வெள்ளத்தில் மூழ்காமல் பாதுகாக்கவும் செய்கிறது. https://yarl.com/forum3/topic/291011-செம்மணியில்-துடுப்பாட்ட-மைதானம்-அமையின்-அயற்கிராமங்கள்-வெள்ளத்தில்-மூழ்கும்-கோடையில்-கடும்-நீர்ப்பஞ்சமும்-ஏற்படும்/#comment-1709825
    • இவர்கள் student visaவில் இருக்கிறார்கள் என்று நினைக்கிறேன், நீதிமன்றத்துக்கு போனால் இவர்களின் விசாவிற்கு பிரச்சனை வரலாம், record இல் வந்தால் பிற்காலத்தில் green card எடுக்கும்போது பிரச்சனை வரும், தேவையற்ற சில்லறைக்கு ஆசைப்பட்டு பெரிய பிரச்சனையை சந்திக்கிறார்கள் 
    • அண்ணை சத்திர சிகிச்சை அறைக்கு வெளியில் இருந்திருப்பார்கள் என நினைக்கிறேன். அடுத்த சிகிச்சையாளரைக் கூட தயார்படுத்தல் அறையில் தான் இருக்க விடுவார்கள் என நினைக்கிறேன்.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.