Jump to content

யாழ் சோழியன் அண்ணா காலமானார்


Recommended Posts

மிகவும் துயரமான செய்தி. பல்கலை ஆற்றல்கள் கொண்டவர்.

சோழியன் அண்ணாவின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கின்றேன்!

குடும்பத்தினரின் துயரில் யாழ் குடும்பத்துடன் இணைந்து பங்குகொள்கின்றேன்.  

+++

மோகன், முகப்பில் சோழியன் அண்ணாவின் அஞ்சலியை இணைத்தமைக்கு நன்றி!

Link to comment
Share on other sites

  • Replies 120
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

முதல் வேலையாக விடிகாலையில்...யாழைத் திறப்பது தான் எனது வழக்கம்!

இன்றைய செய்தி இடியைப் போல இறங்கியது!

முகநூல் மூலமும், யாழ் மூலமும் மிகவும் நெருங்கியவர்!

அண்மையில் கூட ஊருக்குப் போய் வந்து..திருவிழாப் படங்களைப் பெருமையுடன் இணைத்திருந்தார்!

 

கோஷான் கூறியது போன்று...இந்த உலகம் நல்லவர்களை நீண்ட காலம் விட்டு வைப்பதில்லை!

 

அன்னாரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்களும், நண்பனுக்கு எனது ஆழ்ந்த அஞ்சலிகளும்!

 

Link to comment
Share on other sites

அன்னாரின் பிரிவால் துயருற்றிருக்கும் அவரின் குடும்பத்தினரின் துயரில் பங்கு கொள்கிறோம். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சோழியன் குடும்பத்தாருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்

Link to comment
Share on other sites

அன்னாரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்களும், நண்பனுக்கு எனது ஆழ்ந்த அஞ்சலிகளும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

 

ஆழ்ந்த அனுதாபஙகள்

Link to comment
Share on other sites

எழுத்துலகில் தனக்கான இருக்கையையும் தன்னோடு சார்ந்தவர்களிற்கான இருக்கையையும் உருவாக்கி தந்த வழிகாட்டி சோழியன் அண்ணா.  என்னை எனக்கே அறிமுகம் செய்து வைத்த ஆசான். இழப்பறிந்து துடிக்கிறது மனது. வயது வித்தியாசமின்றி பழகிய அன்பான நண்பன்.

வாழ்க்கையில் எத்தனையோ நபர்களை காலம் காட்டி சென்றாலும் ஒரு சிலரே மனதோடு நெருக்கமாகின்றனர். என் எழுத்தை இணையத்தில் ஏற்ற தொடங்கிய காலம் தொடக்கம் நேற்றுவரை கரம் கொடுத்து தூக்கிய அன்பு நண்பர் இன்று எம்மோடு இல்லை.

எழுத்துக்கள் வாழும் காலம் வரை உன் பெயர் நிலைக்கும் அண்ணா. 

ஆழ்ந்த அனுதாபஙகள்

என்றும் உங்கள் ஆசியோடு

கரவை பரணீ



 

Link to comment
Share on other sites

மிகவும் கவலையான செய்தி. சோழியன் குடும்பத்தாருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

பிரபல தமிழ் எழுத்தாளரும்,
சோழியான் என்ற புனைபெயரில்
தமிழ் இலக்கிய உலகில் அறியப்படுபவரும்,
கொழும்பு றோயல் கல்லூரியின் பழைய மாணவரும்,
பாறாளை வீதி, யாழ்.சுழிபுரம்-கிழக்கைப்
பிறப்பிடமாகக் கொண்டவரும்
ஜேர்மனி பிறேமன் நகரை வதிவிடமாகக் கொண்டவருமான
திரு. இராஜன் முருகவேல் அவர்கள்
15.11.2016 திங்களன்று இறைவனடி சேர்ந்தார்

அன்னாரது இறுதிக்கிரியைகள்
30.11.2016 புதன்கிழமை நடைபெறும்.

கிரியைகள் நடைபெறும் இடம்:
GE BE IN Bestattungsinstitut,
Korn Strasse. 217,
28201 Bremen

நேரம்: முற்பகல் 10.00 மணிமுதல் பிற்பகல் 13.00 மணிவரை

உற்றார் உறவினர் நண்பர்கள் இத்தகவலை ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

தொடர்புகளுக்கு:
செல்லிடப் பேசி.
மகன் - 0049 176 20102799

'பிரபல தமிழ் எழுத்தாளரும், சோழியான் என்ற புனைபெயரில் தமிழ் இலக்கிய உலகில் அறியப்படுபவரும், கொழும்பு றோயல் கல்லூரியின் பழைய மாணவரும், பாறாளை வீதி, யாழ்.சுழிபுரம்-கிழக்கைப் பிறப்பிடமாகக் கொண்டவரும் ஜேர்மனி பிறேமன் நகரை வதிவிடமாகக் கொண்டவருமான திரு. இராஜன் முருகவேல் அவர்கள் 15.11.2016 திங்களன்று இறைவனடி சேர்ந்தார்  அன்னாரது இறுதிக்கிரியைகள் 30.11.2016 புதன்கிழமை நடைபெறும்.  கிரியைகள் நடைபெறும் இடம்: GE BE IN Bestattungsinstitut, Korn Strasse. 217, 28201 Bremen  நேரம்: முற்பகல் 10.00 மணிமுதல் பிற்பகல் 13.00 மணிவரை  உற்றார் உறவினர் நண்பர்கள் இத்தகவலை ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.  தொடர்புகளுக்கு: செல்லிடப் பேசி. மகன்    -    0049 176 20102799'
Link to comment
Share on other sites

சோழியன் அண்ணாவின் மறைவை  மறுக்கிறது மனது. பழக இனிமையானவர். எனது யாழ் பயணத் திரியின் பின்னர் எப்படியோ எனது முகப் புத்தகத்தை மோப்பம் பிடித்து நண்பராக இணைத்திருந்தார். எனது முகப்புத்தகம் கடும் கட்டுப்பாடுகளுடன் இருந்ததால் அந்த நட்பு அழைப்பை அப்படியே விட்டுவிட்டேன்.

அண்ணா,  உங்கள் ஆன்மா சாந்தி அடைவதாக, அத்துடன் அவரின் மனைவி, பிள்ளைகள் நண்பர்களின் துயரில் நானும் பங்கு கொள்ளுகிறேன்.

Link to comment
Share on other sites

மிகவும் துக்கம் தரும் செய்தி.

சோழியன் அண்ணாவின் ஆத்மா சாந்தியடைவதாக.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சோழியன் அண்ணாவின் குடும்பத்தாருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கண்ணீர் அஞ்சலிகள். சோழியன் அண்ணாவின் குடும்பத்தாருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கின்றேன்

Link to comment
Share on other sites

அனைவருடனும் இனிமையகநட்பாக பழகும் சோழியன் அண்ணாவின் இழப்பு கவலையை தருகிறது.

அவருடைய குடும்பத்தினருக்கும் உறவினருக்கும் ஆழ்ந்த அனுதாபங்கள்

Link to comment
Share on other sites

சோழியன் அண்ணாவின் குடும்பத்தாருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சோழியன் அண்ணாவின் மரணத்தை என்னால் ஜீரணிக்க முடியவில்லை. மனம் நம்ம மறுக்கின்றது. எங்கோ பிறந்து எங்கோ வளர்ந்து எங்கெல்லாமோ அலைந்து ...யாழ்களம் எனும் வீட்டில் முகமறியாமலே சகோதரபாசத்துடன் பழகிய எம் சோழியன் அண்ணாவின் இழப்பை தாங்கிக்கொள்ள முடியவில்லை..இது பொய்யாக இருக்கக்கூடாதா என் மனம் தத்தளிக்கின்றது.
சோழியன் அண்ணாவின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டி....அவரின் பிரிவின் துயரால் மூழ்கியிருக்கும் உற்றார் உறவினர்களுக்கு என் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கின்றேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நினைச்சுப் பார்க்கவே முடியல்ல. மிகவும் அதிர்ச்சியான செய்தி மட்டுமன்றி ஒரு அன்பான குடும்ப உறவை இழந்த சோகம். இப்போது தான் இந்தச் செய்தியே கிட்டியது.

மாள முடியாத சோகம். இன்னும் எவ்வளவோ சாதிப்பார் என்று எதிர்பார்த்திருந்த போதில்......................................

வெறும் கண்ணீரஞ்சலியால் அடங்கிவிட முடியாது.. இந்தச் சோகத்தை. 

நம்பவே கஸ்டமா உள்ளது. 

Link to comment
Share on other sites

சோழியன் அண்ணா,

மிகவும் துயரமாக இருக்கிறது 

எத்தனை எத்தனை  தடவைகள் அன்பும் ஆறுதலும் பாராட்டும்,

சந்திக்ககூடிய ஒரு சந்தர்ப்பம் கிடைத்தும் சந்திக்காமல் போனதை இப்ப நினைத்து வருந்துகிறேன்... 

நீங்கள் நேசித்த இறைவனிடத்தில் அமைதி கொள்ளுங்கள் அண்ணா.

நீங்கள் எனக்கு அனுப்பிய கதைகளையும் வில்லிசை நிகழ்வுகளையும் இனியாவது பார்த்துவிடுகிறேன்... tw_cold_sweat:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்று மதியம்  இந்த செய்தியை பார்த்தபோது மிகவும் அதிர்ச்சியாகவும் கவைலையாகவும் இருந்தது.  நம்ப முடியவில்லை :( யாழில் இணைந்த காலத்தில் இருந்து மிகவும் நடப்பாகவும் இனிமையாகவும் பழகிய நண்பர்.  பின்னர் முகப்புத்தகத்தில் நண்பர்களாகி farmville இல் இருவரும் நேரம் கழித்தோம்.  அவரது ஆக்கங்கள் வில்லுபாட்டுகளை பகிர்வார்.  பின்னர் சில காலங்கள் தொடர்பற்று போக, முகப்புத்தகத்தில் சில கட்டுப்பாடுகளை செய்தபோது அவர் முகப்புத்தக நடப்பு அறுந்து விட்ட்து. :(
சோழியான் அண்ணாவின் குடும்பத்தினருக்கு எங்கள் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்து கொள்கின்றோம்.

Link to comment
Share on other sites

எங்கள் அன்பிற்கும் மதிப்புக்கும் உரிய சோழியன் அண்ணாவின் திடீர் மறைவு நீங்க முடியாத சோகத்தையும் வேதனை அளிக்கிறது. இந்த வேளையில் அவரின் மறைவால் துயரிற்றிருக்கும் அவர் தம் குடும்பம் மற்றும் உற்றார் உறவினர்கள் யாழ் கள மற்றும் முகநூல் நண்பர்கள் உட்பட எல்லோரோடும் எங்களின் ஆழ்ந்த அனுதாபங்களைப் பகிர்ந்து கொள்கிறோம்.

குருவிகள் மற்றும் நண்பர்கள். 

Link to comment
Share on other sites

யாழின் ஆரம்ப கால உறுப்பினராக இருந்து களத்திற்கு தனது படைப்புகளால் மெருகேற்றி ஏனைய அங்கத்தவர்களையும் எழுதுவதற்கு உற்சாகப்படுத்திய கள உறவான சோழியான் அண்ணாவின் மறைவுச் செய்தி கவலை தருகிறது. 

அவரின் மறைவினால் துயருற்றிருக்கும் குடும்பத்தவர் உறவினர் நண்பர்கள்  அனைவருக்கும் ஆழ்ந்த  அனுதாபங்களைப் பதிவு செய்கிறேன்.

Link to comment
Share on other sites

செத்தும் கொடுத்தான் சீதக்காதி !


மறைந்தும் கொடுத்தார் எங்கள் யாழுறவு சோழியன் !!


தான் மறைந்துவிட்டபோதும், மறைந்திருந்த பல யாழ் உறவுகளை மீண்டும் களத்தில் காணவைத்த பெருமை சோழியன் அவர்களையே சாரும்.
 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • இந்த நியாயத்தை சொன்னவர் தான் எதை சொன்னாலும் அதை அப்படியே சாப்பிட ஆட்கள் உள்ளனர் என தெரிந்தே சொல்கிறார்🤣. பயிற்று மொழிதொகு அதிக அளவிலான தனியார் பள்ளிகள் ஆங்கிலத்தைப்பயிற்று மொழியாகக் கொண்டுள்ளன. அதே வேளையில் அரசுப் பள்ளிகள் தமிழை முதன்மைப் பயிற்று மொழியாகக் கொண்டுள்ளன. மேலும், நடுவண் அரசால் நடத்தப்படும் கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் ஆங்கிலத்தையும் இந்தியையும் பயிற்றும் மொழியாகக் கொண்டுள்ளன. https://ta.m.wikipedia.org/wiki/தமிழ்நாட்டில்_கல்வி சீமான் பள்ளி படிப்பு தமிழில்தானே? நல்லாத்தானே தமிழ் பேசுறார்? அதிலே சேர்த்திருக்கலாம். ஒட்டு மொத்த தமிழ்நாட்டில் தமிழில் படிக்க சரியான பள்ளி இல்லை என்பதை எதையும் தாங்கும் புலன்பெயர்ந்தோர் ஏற்கலாம். தமிழ்நாட்டு மக்கள்?  
    • யாழ்களத்தில் சீமான் தொடர்பாக ஆதரவு எதிர்ப்புனு இரு பிரிவுகள் உண்டு. இரண்டுக்கும் தொடர்பில் இல்லாமல் பொதுவான சில விசயங்கள். சீமான் மீதான ஆதரவு ஈழதமிழருக்காக அவர் குரல் எழுப்புவதால் அவர் எமக்கு ஏதும் செய்யக்கூடிய வலிமை உள்ளவர் என்று நம்புகிறோம். சீமான் கட்சி தமிழகத்தில் ஆட்சியமைக்கும் அவர் தமிழக முதல்வரானால் நாம்  ஈழத்தில் வலிமைபெற அது பெரிதும் உதவும் என்றும் நம்மில் சிலர் நம்புகிறோம். தமிழகம் என்பது இந்திய மத்திய அரசின் நேரடி மறைமுக ஆளுகைக்குட்பட்டயூனியன் பிரதேசங்களுட்பட்ட  36 மாநிலங்களில் ஒன்று, மாநிலங்களுக்குள்ளேயுள்ள அரசியல் காவல்துறை நீதி பொது போக்குவரத்தில் மத்திய அரசு ஒருபோதும் தலையிடாது. ஆனால் மாநிலத்தை கடந்து இன்னொரு விஷயத்தில் அங்கு ஆட்சியிலிருப்பவர்கள் இருக்கபோகிறவர்கள் எது செய்வதென்றாலும் மத்திய அரசின் அனுமதியின்றி எதுவுமே செய்ய முடியாது, செய்வதென்றால் மத்திய அரசின் அனுமதி பெற்றே ஆகவேண்டும், அதையும்மீறி எதுவும் செய்தால் சட்ட ஒழுங்கை மீறியவர்கள் இந்திய ஒருமைப்பாட்டை துஷ்பிரயோகம் செய்தவர்கள் என்று காரணம் சொல்லி ஆட்சியை கலைக்கும் அதிகாரம் மத்திய அரசிடம் உண்டு. அது எவர் முதல்வராக இருந்தாலும் அதுதான் நிலமை. எம் விஷயத்தில் யாரும் உதவுவதென்றாலும் இந்திய வெளியுறவுதுறையின் அனுமதி இன்றி இம்மியளவும் எம் பக்கம் திரும்ப முடியாது, எம் விடயத்தில் தலையிடுமாறு கடிதங்கள் மட்டும் வேண்டுமென்றால் மத்திய அரசுக்கு எழுதிவிட்டு காத்துக்கொண்டிருக்கலாம். காலம் காலமாக நடப்பதும் அதுதான்  நடக்க போவதும் அதுதான். மத்திய அரசை அழுத்தம் கொடுத்து வேண்டுமென்றால் எதாவது செய்ய பார்க்கலாம், அப்படி எம் விஷயத்தில் அழுத்தம் கொடுக்க மாநிலத்தில் ஆட்சி கலைக்கப்பட்டாலும் மீண்டும் படுத்தபடியே ஆட்சியை பிடிக்கும் வல்லமை அந்த கட்சிக்கு இருக்கவேண்டும் , அந்த வலிமை இருந்த ஒரேயொரு முதல்வர் எம்ஜிஆர் மட்டுமே  அவரால்கூட எம் விஷயத்தில் மத்திய அரசை அழுத்ததிற்குள் கொண்டுவந்து எமக்கு எதுவும் செய்யவைக்க முடியவில்லை, இதுவரை ஓரு சில தொகுதிகள்கூட ஜெயித்திராத சீமான் இனிமேல் அதிமுக, திமுக, இப்போ விஜய் என்று பாரம்பரிய மற்றும் திடீர் செல்வாக்கு பெற்ற கட்சிகள் என்று அனைத்தையும் துளைத்து முன்னேறி தமிழக ஆட்சியை பிடித்து அரியணையேறுவது சாத்தியமா? சீமான் தமிழக முதல்வராக வேண்டுமென்பது தமிழீழ தமிழரின் ஆசையா இருந்து எந்த காலமும் எதுவும் ஆகபோவதில்லை, சீமான் தமிழக முதல்வராக வேண்டுமென்பது தமிழக மக்களில் பெரும்பான்மையினரின் ஆசையா இருக்கவேண்டும், அந்த ஆசை அங்கே நிலவுகிறதா? யதார்த்தங்களை புரியாது வெறும் உணர்ச்சி அடிப்படையில் ஆதரவு எதிர்ப்பு என்று நிற்பது எம்மிடையே பிளவுகளை வேண்டுமென்றால் அதிகரிக்கலாம், சீமானின் வாக்கு வங்கியை ஒருபோதும் அதிகரிக்காது. உணர்ச்சி பேச்சுக்களால் எதுவும் ஆகபோவதில்லை என்று உறுதியாக நம்பியதால்தான் எமது தலைமைகள் ஆயுதம் ஏந்தின, அவர்கள் போன பின்னர் மீண்டும் உணர்ச்சி பேச்சுக்களை நம்பி எமக்குள் நாமே முட்டிக்கிறோமே,  நாம் எமது தலைமையை அவர்கள் சொல்லிபோன  வழியை/வலியை அவமதிக்கிறோமா?
    • என்னுடைய மகன்கள் இருவரும் (வளர்ப்பு மகன் உட்பட) ஆங்கில வழிக் கல்வியில்தான் படிக்கின்றனர். இதற்காக நான் அவமானப்படுகிறேன். என் பிள்ளைகள் தமிழ்ப் படிக்க தமிழ்நாட்டில் பள்ளிகளே இல்லை. நாங்கள்தான் வீட்டில் அவர்களுக்கு தமிழைச் சொல்லிக் கொடுக்கிறோம். இவ்வாறு சீமான் கூறினார்.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.