Jump to content

யாழ் சோழியன் அண்ணா காலமானார்


Recommended Posts

சபேஸ்,  நானும் சோழியன் அண்ணாவுடன் பேஸ்புக்கில் தோட்டம் செய்து விளையாடினேன். என்னய்யா உலகம் இது? எங்களுடன் எப்படியெல்லாம் உறவாடிய மனிதர் சில நாட்களின்முன் போய்விட்டார், ஆனால் ஒன்றுமே நடந்ததுபோல் காட்டிக்கொள்ளாமல் எல்லாம் வழமை போலவே நடக்கின்றது.

Link to comment
Share on other sites

  • Replies 120
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

மிகவும் மனவருத்தமான செய்தி.. தீவிரமான கடவுள் பக்தர்... மதம் பற்றிய விமர்சனப்பதிவொன்றிற்காக என்னுடன் முரண்பட்டு முகநூலில் இருந்து நீக்குவதாக சொல்லிவிட்டு நீக்கி இருந்தார்.. அன்னாரின் ஆத்மா சாந்தி அடையட்டும்...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

15027805_10154220717804891_199258905311715037092_10154220717869891_530533692590915079016_10154220717864891_2365051551384

மனவருத்தமாக இருக்கிறது அவர் மனதை புண்படுத்திவிட்டோமோ என்று இப்பொழுது நினைக்க. கருத்துகூறுகிறோம் என்று சில மனித மனங்களை கூறுபோட்டிருக்கிறோமே.. என்று...

Link to comment
Share on other sites

ஆழ்ந்த அனுதாபங்கள்.

சோழியன் அண்ணாவின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கின்றேன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சோழியன் அண்ணாவின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கின்றேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
திரு இராஜன் முருகவேல்
(சுந்தரராஜன்)
தோற்றம் : 15 ஏப்ரல் 1960 — மறைவு : 15 நவம்பர் 2016
117051.jpg

யாழ். சுழிபுரம் பறாளாய் வீதியைப் பிறப்பிடமாகவும், ஜெர்மனி Bremen ஐ வசிப்பிடமாகவும் கொண்ட இராஜன் முருகவேல் அவர்கள் 15-11-2016 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், முருகவேல் சரோஜினி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற சிவலிங்கம், மங்கையற்கரசி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சிவபுஷ்பா அவர்களின் நேசமிகு கணவரும்,

சரோன், சந்தோஷ் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

காலஞ்சென்றவர்களான மார்க்கண்டு அன்னப்பிள்ளை, இராமச்சந்திரன் மற்றும் கோவிந்தம்மா, அருணாசலம் இராஜேஸ்வரி, காலஞ்சென்றவர்களான இரத்தினவேல் சரஸ்வதி, மற்றும் இராசலட்சுமி ஆகியோரின் அன்புப் பெறாமகனும்,

காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் பொன்னம்மா, இராஜபட்சம் மற்றும் மீனாம்பாள்(கனடா), காலஞ்சென்றவர்களான இலகுப்பிள்ளை(மலேசியா) இலட்சுமிப்பிள்ளை, மற்றும் வேதநாயகம், காலஞ்சென்ற முத்தாச்சி, நாகேஸ்வரி(இலங்கை), காலஞ்சென்றவர்களான சிவாநந்தன், பரமானந்தன் ஆகியோரின் அன்பு மருமகனும்,

ஆனந்தி, ஆனந்தன்(பிரான்ஸ்), குமார்(பிரான்ஸ்), காலஞ்சென்ற சீராளன், சந்திரா(பிரான்ஸ்), குணாளன்(இலங்கை), யோகராணி(நோர்வே), ஜெயாளன்(பிரான்ஸ்), தயாளன்(நோர்வே), காலஞ்சென்ற விக்னேஷா, வினோதினி(இலங்கை), பாலம்பிகை(கனடா), முகுந்தன்(அவுஸ்திரேலியா), சேந்தன்(இலங்கை), காந்தன்(ஓமான்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

புஸ்பராணி, புஸ்பநாதன்(செல்வன்), செல்வராஜா, சிவராஜா, தேவி, பரமகுரு, இராசமோகன், சிவதுரை, சிவகங்கா, சிவமணி ஜெகதீஸ்வரன், சிவயமுனா நரேந்திரன், மனோகரன்(பிரான்ஸ்), முருகமூர்த்தி(நோர்வே), ரதி(பிரான்ஸ்), கலைவாணி(நோர்வே), நிவேதா(அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.                  

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
கிரியை
திகதி: புதன்கிழமை 30/11/2016, 09:00 மு.ப — 01:00 பி.ப
முகவரி: GE·BE·IN Bestattungsinstitut, Kornstraße 217, 28201 Bremen, Germany navigator.png
தொடர்புகளுக்கு
சரோன்(மகன்) — ஜெர்மனி
தொலைபேசி: +4917620102799
ஜெகதீஸ்வரன்(சகலன்) — ஜெர்மனி
தொலைபேசி: +4915752375310
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு கள உறவுக்கு,,,எனது கண்ணீர் அஞ்சலி!

 

புகையிரதத்  தரிப்பிடங்களில்,,

ஏறி இறங்கும் பயணிகளைப் போன்றே,

பிறப்புக்களும்...இறப்புக்களும் என..,

இது வரை நினைத்திருந்தேன்!

 

ஆயினும்...,

விடை பெறக்கூட விடாமல்,

உன்னை அழைத்துக் கொண்ட ...,

விதியின் மீது ஏனோ..,

கோபம் தான் வருகின்றது!

 

என்னைப் போலவே...,

எந்த முதலும் இல்லாமல் தான்,,,.

நீயும் பயணித்திருப்பாய்!

உன்னுடன் கொண்டு வந்த,,,.,

பயணக் காசோலைகளைக் கூட,

நிச்சயமாய்த் திருப்பி அனுப்பியிருப்பாய்!

இதுகளெல்லாம் ...,

வெளிநாட்டுக்கு வருகுதுகள்...என்று,,

எமது மூத்தவர்களின்...,

ஏளனப் பார்வைகளில் வெந்திருப்பாய்!

எங்கள் மண்ணுக்கு,

விசாவில்லாமல் வந்தவர்கள்...,

அதனைத் தின்று ஏப்பமிட்ட்டவர்கள்,

எம் மண்ணிலேயே,

எம்மை ஏதிலியாக்கியவர்களின்,

எக்காளங்களைப் பொறுத்திருப்பாய்!

 

அம்மா, அப்பா, தம்பிகள், தங்கைகள் என..,

இரவும்.. பகலும் ..,

உறவுகளின் நினைவில் வாழ்ந்திருப்பாய்!

இரவுகளைப் பகல்களாக்கிச்...

சேர்த்த பணம் அனைத்தையும்,,,,

உறவுகளின்க னவுகள் நிச்சயம் தின்றிருக்கும்!

 

உனக்காக ஒதுக்கப்பட்ட...,

இரவுகளும்,,பகல்களும்,

ஈழ தேசத்தின்,,,,

செய்தி தேடுவதிலேயே,

கழிந்து போயிருக்கும்!

அதன் விடுதலைக்கான ஏக்கத்தில்,

உனது பொழுதுகள் கரைந்து போயிருக்கும்!

 

இருப்பினும் நண்ப,,,

நீ எவ்வளவோ ...,

எங்களுக்காக விட்டுச்செல்கிறாய்!

 

சென்று வா ..நண்பனே!

எமது இறங்குமிடம் வரும் வரைக்கும்,

நாங்களும் பயணிக்கின்றோம்!

 

எமது இனத்துக்காக..,

இருப்பதை விடவும்..,.

ஒளி மிகுந்த உலகமொன்றை,,,.

விட்டுச் செல்லும் நம்பிக்கையுடன்..,

நாங்களும் பயணிக்கிறோம்!

 

 

 

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்று சோழியன் அண்ணாவின் இறுதிக்கிரிகைகள் நடைபெறுகின்றன.

அமைதியாக இருப்போம் உறவுகளே....

அவரது ஆத்ம சாந்திக்கு பிரார்த்திப்போம் உறவுகளே....

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சோழியான் மாவீரர்களை மிகவும் நேசித்தார்.

அவரின் மனதுக்கு இதமாக மாவீரர் வாரத்திலேயே இயற்கையெய்தியிருக்கிறார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சென்ற மாவீரர் தினத்தில் மாவீரர்களுக்காக ஒரு பாட்டை நீங்கள் எழுதித்தர அதை இசையாக உங்களுக்கு தந்தபோது உங்கள் உள்ளத்தில் இருந்த மகிழ்ச்சியை ,உற்சாகத்தை பார்த்து மகிழ்ந்தேன் அண்ணா ..............

இந்த மாவீரர் தினத்திலும் மாவீரர்களுக்காக ஒரு பாடலின் பல்லவியை தந்துவிட்டு சேகர் இதற்கு முதலில் மெட்டை போடுங்கள் .சரணம் விரைவில் தருகிறேன் என்று கூறி விடை பெற்றீர்கள் .ஆனால் நிரந்தரமாக விடைபெறுவீர்கள் என்று கனவிலும் நினைக்கவில்லை அண்ணா . உங்கள் இறுதி வரிகளை உங்களுக்காக இங்கே சமர்ப்பிக்கிறேன் .
விரைவில் இசையாகவும் சமர்ப்பணம் செய்வேன் .இறைவனுள் நித்தியமாய் இளைப்பாறுங்கள் அண்ணா

Photo de இரா சேகர்.
Photo de இரா சேகர்.

https://www.facebook.com/profile.php?id=100007345609043&fref=ts

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்களத்தின் மூத்த உறுப்பினரின் இழப்பு அதிர்சியளிக்கிறது. ஆழ்ந்த இரங்கல்கள்!!!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கவலையான செய்தி. ஆழ்ந்த அனுதாபங்கள்,

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அன்பு நண்பர் ,அண்ணன் ,சிறந்த படைப்பாளி, நல்ல சமூக சிந்தனையாளர் என்று பல்வகையிலும் அறியப்பெற்ற சோழியன் அண்ணாவின் இழப்பு அறிந்து மனம் கனக்கிறது. ஆழ்ந்த அனுதாபங்கள். 

Link to comment
Share on other sites

  • 1 year later...
  • கருத்துக்கள உறவுகள்

சமீபத்தில்தான் யாழினைக் கண்டெடுத்தேன்.. வெகு சமீபத்தில்தான்  பிறந்த நாள் வாழ்த்துப் பகுதியைக் கண்டேன். அப்பகுதிக்குக் காரணமான  படைப்பாளியை ஏற்கெனவே (சுமார் ஒன்றரை வருடம் முன்னர்) தொலைத்துவிட்டோம் என நினைக்கவில்லை. அவருக்கு  அப்பகுதியில் ஒரு பிறந்தநாள் வாழ்த்து கூட  நான் சொல்லவில்லை. யாழ் சொந்தம் ஒவ்வொருவரையும் ஏதோ ஒரு நாள் சந்திப்போம் என்ற கற்பனையும் நம்பிக்கையும் உண்டு. சோழியன் அவர்கள் விடயத்தில் இனி அதுவுமில்லை.  இன்பியல் துன்பியல் என அத்தனை உணர்ச்சிகளும் யாழில் இவ்வளவு விரைவிலா ? 

         ' புதிய பதிவுகள் ' பகுதியில் இப்பழைய சோகம் மீண்டும் தோன்றாமலே இருந்திருக்கலாமோ ?

 

Link to comment
Share on other sites

  • 4 months later...
  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த இரங்கல்கள் சோழியன் அண்ணா  வருடங்கள் கடந்தாலும் நினைவுகள் மட்டும் நிழலாடுகிறது tw_cold_sweat:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அண்ணனுக்கு என் நினைவஞ்சலிகள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்றும் நீங்காத நினைவுகளுடன் ..!

நினைவு நாள் வணக்கங்கள்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த நினைவஞ்சலிகள்.....!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நினைவஞ்சலிகள்.

யாழுக்கு ஒரு மாபெரும் தூணாக இருந்தார்.சகலகலாவல்லவன்.

Link to comment
Share on other sites

நினைவஞ்சலிகள் சோழின் மாமாவுக்கு! (நான் அவரை அண்ணா, மாமா என அழைப்பது). காலச்சக்கரத்தின் ஓட்டத்தில் நடைபெறும் மாற்றங்கள் எங்களை ஆட்டம் காணத்தான் செய்கின்றன.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அண்ணனுக்கு என் நினைவஞ்சலிகள்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • போட்டியில் கலந்துகொண்ட @kalyani யும், @கந்தப்புவும் வெற்றிபெற வாழ்த்துக்கள். இன்னும் 15 மணித்தியாலங்களே இருப்பதனால், யாழ்களப் போட்டியில் விரைவில் கலந்துகொள்ளுங்கள்😀 இதுவரை போட்டியில் இணைந்தவர்கள்: @பையன்26 @முதல்வன் @suvy @ஏராளன் @நிலாமதி @Ahasthiyan @ஈழப்பிரியன் @kalyani @கந்தப்பு  
    • அமெரிக்கா ஏதோ ஒரு விதத்தில் பங்கு எடுக்கும், எடுக்க வேண்டிய நிலை, இஸ்ரேல் ஈரானுக்கு திருப்பி அடித்தால் . (மற்ற திரியில் சொன்னனது போல , இஸ்ரேல் க்கு தெரியும், அமெரிக்கா, மேற்கு பாதுகாப்புக்கு எப்போதும் வரும் என்று. அதை மேற்கும், மீண்டும், மீண்டும் சொல்லுகின்றன. இதுவே பங்கு எடுப்பது. அமெரிக்கா செய்வது, இஸ்ரேல் ஐ பாதுகாப்பத்தற்கு ஈரானின் ஏவுகணனைகளை தடுப்பது act of  war,)   ஈரானின் தூதரகம் மீதான இஸ்ரேல் இன் தாக்குதல் , மேற்கு, குறிப்பாக US க்கு தெரிந்து (அதன் மூலம் 5 கண்கள் உளவு நாடுகளுக்கு - 5 eyes intelligence community தெரிந்து), US ஆமோதித்து, அனுமதித்து  நடத்தப்பட்ட தாக்குதல். ஏனெனில், இஸ்ரேல் இப்படியானவற்றை அமெரிக்காவிடம் சொல்லாமல் செய்வதில்லை. மேலும், France க்கும்  உச அறிவித்து இருக்கும், ஏனெனில், சிரியா பிரான்ஸ் இன் காலனித்துவம்  கீழ் இருந்தது. மற்றது, பிரச்னை வந்தால் செக்யூரிட்டி கவுன்சில் இல் பிரான்ஸ் இந்த உதவி தேவை, ஆனால், இந்த காலனி என்பதே பிரதான  காரணம். இது செக்யூரிட்டி கவுன்சில் இல் எழுதப்படாத  விதி- காலனித்துவ அரசுகளே, முனைய காலணிகளின் இப்போதைய அரசுக்கள் சார்ந்த  விடயத்தில் முன்னுரிமை உள்ளது என்பது .  எனவே, மேற்கு ஆகக்குறைந்தது மறைமுக பங்குதாரர் (கனடா தூதரகத்தை காலி செய்தது அநேகமாக இந்த 5 eyes வழியாகத் தான் இருக்கும்) இஸ்ரேல் சொல்லியது தாக்குதலுக்கு மிகச் சிறிய நேரத்துக்கு முதல் என்று (வேண்டும் என்று) அமெரிக்கா கசிய விட்டு, சில செய்திகள் காவுகின்றன. அனால், தாக்குதலை இஸ்ரேல் 2 மாதமாக திட்டமிட்டது என்று பின் செய்து வந்தது.  கேக்கிறவன் கேணையனாக இருந்தால் ... என்ற அமெரிக்காவின் கதை. (அப்படி US  இடம் சொல்லாமல் இஸ்ரேல் செய்தது, Sinnai மீதான தாக்குதல், கைப்பற்றலும்  , ஆனால், அது பெரிய யுத்தத்தின் ஒரு பகுதி, Egypt முதல் தாக்கி இருந்தது). அமெரிக்காவுக்கு முதலே (ஏற்ற காலத்தில் ) தெரியும் என்றது, newyork times வெளியிட்டு உள்ள இன்னொரு செய்தியானா, அமெரிக்கா, இஸ்ரேல் அதிகாரிகள் ஈரானின் எதிர்பபை குறைத்து மதிப்பிட்டு விட்டார்கள் என்று அதிகாரிகள் அவர்களின் வாயால் சொன்னதாக என்ற செய்தியில்   இருந்து தெரிகிறது.   இதனால் தான் மேற்கு, ஈரானை தடுக்க முனைந்தது. முடியாமல் போக, அது தடுத்தது. un இன் பகுதி charter ஐ குழிதோண்டி புதைத்தன அமெரிக்காவும், அதன் வாலுகளும்.  இதை மேற்கு rule based என்று சொல்லும் என்று நினைக்கிறன்.  
    • மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள். . .
    • Published By: VISHNU   19 APR, 2024 | 02:01 AM (எம்.ஆர்.எம்.வசீம்) இலங்கைக்கு சொந்தமான கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை நாடுவதாக இந்திய பிரதமர் தெரிவித்திருக்கிறார். அவ்வாறானதொரு நிலை ஏற்பட்டால் அதற்கு முகம்கொடுப்பதற்கு நாங்களும் தயார். கச்சதீவு இலங்கைக்கு சொந்தமானது என்பதற்கு போதுமான ஆதாரங்கள் எம்மிடமிருக்கின்றன என இலங்கை மனித நேய கட்சியின் தலைவியும் பேராசிரியருமான சந்திமா விஜேகுணவர்த்தன தெரிவித்தார். இலங்கை மனிதநேய கட்சி தலைமையகத்தில் வியாழக்கிழமை (18) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார். இதுதொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், இந்தியாவில் தேர்தல் சூடுபிடித்துள்ள நிலையில், தமிழ் நாட்டு மீனவர்களின் வாக்குகளை பெற்றுக்கொள்ளும் நோக்கில் அங்குள்ள அரசியல்வாதிகள் கச்சதீவு விவகாரத்தை கையில் எடுத்துக்கொண்டு பல்வேறு கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். தேர்தல் காலம் வரும்போது இந்தியாவை பாெறுத்தவரை இது வழமையான விடயமாகும். இந்திய பிரதமரும் கச்சதீவு விடயமாக மிகவும் தீவிரமாக தேர்தல் மேடையில் உரையாற்றி இருக்கிறார். குறிப்பாக கச்சதீவு இந்தியாவுக்கு சொந்தமானது. அதனை இலங்கைக்கு வழங்கியது வரலாற்று தவறு. அதனால் கச்சதீவை இந்தியாவுக்கு மீண்டும் பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுப்போம். முடியாவிட்டால் நெதர்லாந்தில் இருக்கும் சர்வதேச நீதிமன்றத்தை நாடுவோம் எனவும் இந்திய பிரதமர் தெரிவித்திருக்கிறார். 285 ஏக்கர் பரப்பளவைக்கொண்ட  கச்சதீவு இலங்கை,, இந்திய மீனவர்கள் கடற்றொழில் செய்வதற்கு அப்பால், இந்த பூமிக்குள் பல பெருமதிவாந்த வேறு விடயங்கள் இருக்கின்றன. அதனால்தான் இந்திய அரசியல்வாதிகள் கச்சதீவை எப்படியாவது தங்களுக்கு சொந்தமாக்கிக்கொள்ள முயற்சித்து வருகின்றனர். கச்சதீவு இலங்கைக்கு சொந்தமானது என்பதற்கு  தேவையான வரலாற்று ஆதாரங்கள் எம்மிடம் இருக்கின்றன.  அதனால் கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்ற்ததை நாடுமாக இருந்தால், அதற்கு முகம்கொடுக்க நாங்களும் தயாராக வேண்டும். கச்சதீவு இலங்கைக்கு சொந்தமானது என்பதற்கான ஆதாரங்களை சர்வதேச நீதிமன்றத்துக்கு சமர்ப்பிக்க நடவடிக்கை எடுப்போம். கச்சதீவு விவகாரத்தால் இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இருந்துவரும் உறவில் பாதிப்பு ஏற்படக்கூடாது.இந்த விடயத்தில் இந்தியாவுடன் முரண்பட்டுக்கொள்ள நாங்கள் தயார் இல்லை. இந்தியா அயல் நாடாக இருந்துகொண்டு எமக்கு பாரிய உதவிகளை செய்துவருகிறது. குறிப்பாக கொவிட் காலத்தில் இந்திய அரசாங்கத்தின் உதவிகளை எங்களால் ஒருபோதும் மறந்துவிட முடியாது. அந்த நன்றி எப்போதும் எங்களிடம் இருக்கிறது. இருந்தாலும் கச்சதீவு விவகாரம் என்பது எமது உரிமை சார்ந்த விடயம். அதனை எங்களால் விட்டுக்கொடுக்க முடியாது. இந்திய அரசியல்வாதிகள் தங்களின் தேர்தல் பிரசாரத்திற்கே இந்த விடயத்தை கையில் எடுத்துக்கொள்கின்றனர். தேர்தல் முடிவடைந்த பின்னர் அந்த விடயத்தை மறந்துவிடுவார்கள் என்றார். https://www.virakesari.lk/article/181410
    • பட மூலாதாரம்,GETTY IMAGES 2 மணி நேரங்களுக்கு முன்னர் உலக அளவில் 840 மில்லியன் மக்கள் நாள்பட்ட சிறுநீரக கோளாறுகளால் பாதிக்கப்பட்டுள்ளதாக சமீபத்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றன என இந்தியன் சொசைட்டி ஆப் நெஃப்ராலஜி வெளியிட்டுள்ள இதழில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் அர்த்தம் 10இல் ஒருவருக்கு சிறுநீரக நோய்கள் இருக்கின்றன. மேலும் சமீப காலங்களில் உயிர்களை கொள்ளும் 10 முக்கிய நோய்களில் 7வது இடத்தை பிடித்துள்ளது நாள்பட்ட சிறுநீரக நோய். இந்தியாவில் மட்டும் ஆண்டொன்றுக்கு 2 - 2.5 லட்சம் மக்கள் புதிதாக சிறுநீரக நோய்களால் பாதிக்கப்படுவதாக இந்தியன் சொசைட்டி ஆப் நெஃப்ராலஜி வெளியிட்டுள்ள இதழில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதேபோல் இந்தியாவில் உள்ள வயது வந்தோர் மக்கள்தொகையில் 8-10% பேர் நாள்பட்ட சிறுநீரக நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்த அமைப்பு கூறுகிறது. இதற்கு மிக முக்கிய காரணம் சிறுநீரகம் சார்நத நோய்களை ஆரம்ப கட்டத்தில் கண்டுபிடிக்க முடியாமல் போவதும், இவை அமைதியாக இருந்து தீவிர பிரச்னை ஏற்படும்போதே வெளியே தெரியவரும் என்பதுமே ஆகும் என்று கூறுகிறார் எம்ஜிஎம் ஹெல்த்கேர் மருத்துவமனையின் மூத்த சிறுநீரகவியல் மருத்துவர் மில்லி மேத்யூ.   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,பொதுவாகவே சிறுநீரகம் சார்ந்த பிரச்னைகளில் ஆரம்ப கட்டத்தில் அறிகுறிகள் தெரியாது என்கிறார் மருத்துவர் மில்லி மேத்யூ. சிறுநீரகத்தின் செயல்பாடு என்னென்ன? உடலின் மிக முக்கியமான உறுப்புகளில் வயிற்றுப்பகுதியில் அமைந்திருக்கும் சிறுநீரகமும் ஒன்று. சிறுநீரின் வழியாக கழிவுகளை வெளியேற்றுவதே இதன் பிரதான பணி. ரத்தத்தில் காணப்படும் கழிவுப்பொருட்கள், உடலுக்கு தேவையற்ற அளவுக்கு அதிகமான தாதுக்களை சிறுநீரின் வழியாக வெளியேற்றி தூய ரத்தத்தை உடல் முழுவதும் பரவ செய்கிறது சிறுநீரகம். ஆனால், நமது வாழ்க்கை முறை, உணவுமுறை, பழக்கவழக்கங்கள், மரபுவழி பிரச்னைகள், தேவையற்ற மாத்திரைகளை உட்கொள்வது, இதர உடல்நல கோளாறுகள் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் இந்த உறுப்பு செயல்படுவதில் தடை ஏற்படுகிறது. அப்படி சிறுநீரகத்தின் பணியில் இடையூறு ஏற்பட்டு அதன் வழக்கமான கழிவகற்றல் பணியை சரியாக செய்யமுடியாமல் போகும்போதுதான் பல்வேறு சிறுநீரக கோளாறுகள் ஏற்படுகின்றன. இதில் மேலுமொரு அபாயம் என்னவெனில் இந்த கோளாறுகள் ஆரம்ப கட்டத்தில் எந்த விதமான அறிகுறியும் காட்டாமல் உங்களுக்குள் வந்து விடும். நாளாக நாளாக அதன் வீரியம் அதிகரிக்கும்போதே உங்களுக்கு அறிகுறிகள் தெரிய தொடங்கி, அதிலிருந்து மருத்துவ பரிசோதனைகள் மூலம், நீங்கள் எந்தளவுக்கு, எந்த விதமான நோயால் பாதிக்கப்பட்டுள்ளீர்கள் என்பதை கண்டறிய முடியும் என்று கூறுகிறார் மருத்துவர் மில்லி மேத்யூ. அப்படி என்ன மாதிரியான சிறுநீரகம் சார்ந்த நோய்கள் உங்களுக்கு ஏற்படலாம்? அதில் என்ன மாதிரியான அறிகுறிகள் தென்பட வாய்ப்புள்ளது? என்பதை அறிந்துக் கொள்ளலாம்.   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,நாள்பட்ட சிறுநீரக நோய்களை குணப்படுத்த முடியாவிட்டாலும், அவை தீவிரமடையாமல் தடுக்க முடியும். நாள்பட்ட சிறுநீரக நோய் (Chronic Kidney Disease) நாள்பட்ட சிறுநீரக நோய் என்பது நீண்ட நாட்களாக தொடர்ந்து வரும் சிறுநீரக கோளாறு ஆகும். இது அதிகம் சர்க்கரை நோய் மற்றும் உயர்ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கே ஏற்படும். இதன் ஆரம்ப கட்டங்களில் எந்த விதமான அறிகுறிகளும் இருக்காது. இந்த வகை சிறுநீரக கோளாறுகள் சரி செய்ய முடியாதவை. முறையான மருத்துவ சிகிச்சை மூலம் இவை தீவிரமடையாமல் பார்த்துக் கொள்ள முடியும். அறிகுறிகள் குமட்டல் மற்றும் வாந்தி பசியின்மை கால் மற்றும் கணுக்கால் வீக்கம் மூச்சுத்திணறல் தூங்குவதில் சிரமம் அதிகமாக அல்லது குறைவாக சிறுநீர் கழித்தல்   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சிறுநீரக கல் ஒன்றிரண்டு இருக்கும்போது அதன் அறிகுறிகள் வெளியே தெரியாது. சிறுநீரகத்தில் கல் சிறுநீரகத்தில் தேங்கும் உப்பு அல்லது தாதுக்களின் படிகங்களே சிறுநீரக கல் என்று அழைக்கப்படுகிறது. பொதுவாக ஓரிரண்டு கற்கள் உருவாகும்போது அறிகுறியோ அல்லது தீவிர பிரச்னையோ ஏற்படாது என்று குறிப்பிடும் மருத்துவர், அது தீவிரமடையவும் வாய்ப்புகள் உள்ளது என்று கூறுகிறார். தண்ணீர் குறைவாக குடித்தால், உடல் பருமன், மோசமான வாழ்க்கை முறை, உணவுமுறை உள்ளிட்டவற்றால் இந்த பிரச்னை ஏற்படுகிறது. அறிகுறிகள் சிறுநீர் கழிக்கும் போது வலி சிறுநீரில் ரத்தம் வெளியேறுதல் சிறுநீர் பாதையில் அடைப்பு ஏற்படுதல் கல் உள்ள இடத்தில் வலி   நீரிழிவு சிறுநீரக நோய் (Diabetes Nephropathy) பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,உலகில் மூன்றில் ஒரு சர்க்கரை நோயாளிகள் சிறுநீரக கோளாறால் பாதிக்கப்படுகின்றனர். ஆய்வுத்தரவுகளின் படி சர்க்கரை நோய் உள்ள 3 பேரில் ஒருவருக்கு சிறுநீரக கோளாறு ஏற்படுகிறது. உலக அளவில் சிறுநீரக நோய்க்கான காரணிகளில் சர்க்கரை நோய் முதன்மையானதாக இருக்கிறது. அப்படி சர்க்கரை நோய் கட்டுப்பாட்டிற்குள் இல்லாதவர்களுக்கு இந்த நீரிழிவு சிறுநீரக நோய் ஏற்படுகிறது. அறிகுறிகள் கால்கள் வீக்கம் நுரையுடன் சிறுநீர் வெளியேறுதல் உடல் சோர்வு எடை குறைதல் உடல் அரிப்பு குமட்டல் மற்றும் வாந்தி   ஹைப்பர்டென்சிவ் நெஃப்ரோஸ்க்ளிரோசிஸ் (Hypertensive Nephrosclerosis) பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு சிறுநீரகம் பாதிக்கும் அபாயம் அதிகம் சர்க்கரை நோய்க்கு இணையாக சிறுநீரகத்தை பாதிக்கும் மற்றுமொரு பிரச்னை உயர் ரத்த அழுத்தம். உயர் ரத்த அழுத்தம் சிறுநீரகத்தில் உள்ள ரத்த குழாய்களை சேதமடைய செய்வதால் சிறுநீரகத்தின் செயல்பாடு பாதிக்கப்படுகிறது. இதனால் ரத்தத்தில் உள்ள தேவையற்ற கழிவுகளை வெளியேற்றுதல் மற்றும் கூடுதல் தாதுக்களை வெளியேற்றுதல் ஆகியவை பாதிப்படைகிறது. இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் சிறுநீரகத்தின் செயல் பாதித்து தேவையற்ற திரவங்கள் ரத்த குழாய்களில் படிவதால், ரத்த அழுத்தம் மேலும் உயர்கிறது. அறிகுறிகள் குமட்டல் மற்றும் வாந்தி தலை சுற்றல் உடல் மந்தம் தலை வலி கழுத்து வலி   சிறுநீர் பாதைத் தொற்று பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சிறுநீர் பாதையில் ஏற்படும் தோற்று சிறுநீரகத்தையும் பாதிக்கும் அபாயம் உள்ளது. சிறுநீர் பாதைத் தொற்று என்பது சிறுநீரக கோளாறு இல்லை என்றாலும் கூட, அது சிறுநீரகத்தை பாதிக்கவும் வாய்ப்புள்ளது. சிறுநீர் பாதைத் தொற்று என்பது சிறுநீர் பாதையில் ஒட்டிக்கொள்ளும் நுண்ணுயிரிகள் பெருகி பாதிப்பை ஏற்படுத்துவது. இது கீழ்நிலையில் உள்ள சிறுநீர் பாதையிலேயே தங்கி விட்டால் சிறுநீரகத்திற்கு பாதிப்பு ஏற்பட வாய்ப்பு குறைவு. ஆனால், பெருகி மேல்நிலை பகுதிக்கு வந்துவிட்டால் சிறுநீரகத்திற்கு பாதிப்பு ஏற்படலாம். அறிகுறிகள் முதுகுப் பக்கத்தில் வலி காய்ச்சல் சிறுநீர் கழிக்கும்போது வலி அடிவயிற்றில் வலி சிறுநீரில் ரத்தம் குமட்டல் மற்றும் வாந்தி   பாலிசிஸ்டிக் சிறுநீரக நோய் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சிறுநீரகத்தில் அதிகரிக்கும் நீர்க்கட்டிகள் அதை செயலிழக்க செய்யுமளவு ஆபத்தானது. பாலிசிஸ்டிக் சிறுநீரக நோய் என்பது உங்களது சிறுநீரகத்தில் ஏற்படும் நீர்க்கட்டிகளை குறிப்பது. நாளடைவில் இவை வளர்ந்து உங்களது சிறுநீரகத்தை செயலிழக்கும் நிலைக்கும் கொண்டு செல்லலாம். இவை பெரும்பாலும் மரபணு ரீதியாக ஏற்படக்கூடிய சிறுநீரக கோளாறாகும். அறிகுறிகள் மேல்வயிற்றில் வலி அடிவயிற்றின் பக்கவாட்டில் வலி முதுகில் வலி சிறுநீரில் ரத்தம் வெளியேறுதல் சிறுநீர் பாதையில் அடிக்கடி தொற்று ஏற்படுதல்   ஐஜிஏ நெஃப்ரோபதி (IgA Nephropathy) பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,இந்த சிறுநீரக பிரச்சனையில் சிறுநீரில் ரத்தம் வெளியேறுவது நமக்கே தெரியாது. ஐஜிஏ நெஃப்ரோபதி என்பது பெரும்பாலும் சிறுவயதில் இளம்பருவத்தில் வரக்கூடிய ஒரு சிறுநீரக கோளாறு என்று கூறுகிறார் மருத்துவர் மில்லி மேத்யூ. இதில் சிறுநீர் வெளியேறும்போது ரத்தமும் இணைந்து வெளியாகும். இதை நாம் நேரடியாக பார்த்தால் கண்டறிவது கடினம். ஆனால், பரிசோதனையில் இதை கண்டறிய முடியும்.   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சிறுநீரகத்தின் செயல்பாடு 100இலிருந்து 10% என்ற நிலைக்கு வரும்போது தான் சிறுநீரக செயலிழப்பின் அறிகுறிகள் தெரியும் சிறுநீரக செயலிழப்பு சிறுநீரக செயலிழப்பு ஏற்படுபவர்களுக்கு அதன் முற்றிய நிலையில் மட்டுமே அறிகுறிகள் தெரியும். குறிப்பாக அதில் 5 நிலைகள் உள்ளது. இதில் நான்காவது நிலை வரையிலும் கூட அறிகுறிகள் தென்படாமல் ஒருவர் நன்றாக இருப்பார். சிறுநீரகத்தின் செயல்பாடு 100இலிருந்து 10% என்ற நிலைக்கு வரும்போது தான் அறிகுறிகள் தெரியும். அந்த நிலையில் ஒரு சில பொதுவான அறிகுறிகள் தென்படும். அறிகுறிகள் பசியின்மை வாந்தி கடுமையான உடல் சோர்வு உடல் வீக்கம் தூக்கமின்மை உப்பசம் https://www.bbc.com/tamil/articles/c2e01gql070o
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.