Jump to content

உங்களுக்கு எது தேவை? முடிவு செய்யும் ஃபேஸ்புக்! #FacebookTimeline


Recommended Posts

உங்களுக்கு எது தேவை? முடிவு செய்யும் ஃபேஸ்புக்! #FacebookTimeline

 

ஃபேஸ்புக்


மோடி 500,1000 ரூபாய தடை பண்ணா,விராட் கோலி செஞ்சுரி அடிச்சா, புதுசா விஜய் பட ட்ரெய்லர் ரிலீஸ் ஆனா உடனே நம்ம ஃபேஸ்புக் டைம்லைன்ல தெரியுதே எப்படினு என்னிக்காவது யோசிச்சிருக்கீங்களா? ஃபேஸ்புக் உங்க டைம்லைன வைச்சு மிகப்பெரிய வேலைய பாத்துக்கிட்டு இருக்கு. இதுல வியாபாரம், மக்களை இணைப்பதுனு பல விஷயங்களை தெறிக்க விடுவது தான் மார்க் உத்தி....

ஃபேஸ்புக் டைம்லைன்ல முன்னாடியெல்லாம் நம்ம ஃப்ரெண்ட்ஸ் போடுற ஸ்டேட்டஸ், சம்பந்தமே இல்லாம ஒரு நியூஸ் இது தான் டைம்லைன்ல இருக்கும். இதையெல்லாம் மாத்த ஃபேஸ்புக் புதிய உத்தியை கையில் எடுத்தது. அதுனால தான் இன்னிக்கு எந்த செய்தியையும் நம்ம டைம்லைன்ல மிஸ் பண்ணாம பார்க்க முடியுது. இந்த ஐடியா எப்படி வந்ததுனு சமீபத்துல ஒரு பேட்டில பதில் சொன்ன மார்க் ''உறவினர் ஒருவருக்கு குழந்தை பிறந்த செய்தியை அவர் பதிவிட்டு இருக்கிறார்'' அந்த செய்தியை ஐந்து மணி நேரம் கழித்து ஃபேஸ்புக்கிற்குள் நுழைந்த என்னால் பார்க்க முடியவில்லை. பல செய்திகள் அதனை முந்தி சென்று விட்டன. அப்போது தான் டைம்லைனில் சில முக்கியமான விஷயங்களை அறிமுகம் செய்ய விரும்பினோம் என்றார்

உங்களோட நட்பு வட்டாரத்துல இருக்குற நண்பர்கள் யாரோட பதிவு வந்தாலும் அது உங்களுக்கு முதல்ல தெரியுற மாதிரி ''See First'' ஆப்ஷனா தேர்ந்தெடுத்து வைச்சுக்கலாம்.  அதுமட்டுல்லாம சில ஃபேவரைட் பக்கங்கள நம்மளோட நோட்டிஃபிகேஷன் வர்ற மாதிரி செட் செஞ்சு வைச்சுக்கலாம். ஆனா இது எல்லாமே ஒருவரோட விருப்பத்தின் அடிப்படைல  இருக்கறது இத தாண்டி தான் ஃபேஸ்புக் ஒவ்வொருத்தரோட டைம்லைனையும் வடிவமைக்குது. 

நியூஸ் ஃபீடில் வரும் செய்திகள் அதனை லைக் செய்பவர்கள், கமெண்ட் செய்பவர்கள், ஷேர் செய்பவர்கள் இவற்றின் அளவை பொருத்து அதன் ரீச் இருக்கும். அதிக பேர் விரும்பும் செய்திகளை உங்கள் டைம்லைனில் முக்கியமான செய்தியாகவும், வேறு ஒரு தளத்தில் உங்கள் நண்பரால் லைக், கமெண்ட் செய்யப்பட்ட செய்திக்கு முக்கியத்துவம் அளித்தும் டைம்லைனை வடிவமைக்கிறது.

அதன் பின்பு ஒருவரது தேடுதல் பேட்டர்னை வைத்து நிர்ணயிக்கிறது. அதாவது ஒருவர் உணவு தொடர்பான பக்கங்களை அதிகமாக தேடுகிறார் என்றால் அவருக்கு அது தொடர்பான செய்திகளை முன்னிலை படுத்தி காட்டுவது. ஒருவர் சினிமா தொடர்பான செய்திகளுக்கு முக்கியத்துவம் அளிக்கிறார் என்றால் அவரது விருப்ப பக்கங்கள் சினிமா தொடர்பாக பகிரும் செய்திகள் அவருக்கு முதலில் வருவது போன்றும் டைம்லைனை வடிவமைக்கிறது ஃபேஸ்புக். 

 


 

 


ஃபேஸ்புக் தனது நியூஸ் ஃபீடில் பதியப்படும் நம்பகத்தன்மையற்ற பதிவுகளை அதிகப்பேருக்கு டைம்லைனில் காட்டமலும், சில மோசமான பதிவுகளை நீக்கியும் தனது டைம்லைனின் சுவாரஸ்யத்தை கூட்டுகிறது. மிகவும் பழைய செய்திகளை நண்பர்கள் விரும்பும் போது அதனை நீண்ட நேரம் டைம்லைன் ஃபீடில் அனுமதிகாமல் இருப்பதிலும் உயிர்ப்புத்தன்மை குறையாமல் பார்த்து கொள்கிறது ஃபேஸ்புக்.

ஒருவரது விருப்பம் என்பதை தாண்டி அவர் எந்த மாதிரியான பதிவை விரும்புகிறார் ஆடியோ, வீடியோ, இணையதள லின்க்குகள் என அவர் விரும்பும் பதிவை விரும்பும் வடிவத்திலும் தருகிறது ஃபேஸ்புக். ஒருவேளை நீங்கள் ஒரு வீடியோ விரும்பியாக இருந்தால் உங்கள் டைம்லைனில் பெரும்பாலான பதிவுகளை வீடியோவாக தர ஃபேஸ்புக் முயற்சிக்கும். நீங்கள் பயன்படுத்தும் டேட்டா மீது அதிக கவனம் செலுத்துபவராக இருந்தால் அதிமகாக ''ஃபேஸ்புக்கின் இன்ஸ்டன்ட் ஆர்ட்டிகிள்'' களை படிப்பவராக இருந்தால் அந்த பதிவுகளை அவருக்கு அதிகமாக வழங்குகிறது ஃபேஸ்புக். 

facebook1_09488.jpg

இப்படி ஒவ்வோரு நொடியும், ஒவ்வோரு நபருக்கு தகுந்தவாறு ஃபேஸ்புக் டைம்லைனை மாற்றியமைக்கிறது ஃபேஸ்புக்.  2 பில்லியன் பயன்பாட்டாளர்களை கொண்டுள்ள இந்த சமூக வலைதளம் ஒவ்வோரு நொடியும் டைம்லைனை அனைவருக்கும் ஏற்றவாறு மாற்றியமைக்கிறது என்றால் அதன் அல்காரிதம் எழுதப்பட்டுள்ளது. அனைத்து செய்திகளையும், புகைப்படங்களையும், வீடியோக்களையும் நபருக்கு ஏற்றவாறு வழங்கும் ஃபேஸ்புக் விளம்பரங்களையும் இடம், விருப்பம், தேடல் அடிப்படையில் வழங்குகிறது.

உலகில் மிக நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டிருக்கும் இணைய சேவைகளில் ஃபேஸ்புக்கும் ஒன்று. சில சறுக்கல்கள் இருந்தாலும் டைம்லைனை கில்லியாக வைத்திருக்க ஃபேஸ்புக் நிறைய மெனக்கெடுகிறது. அதனால் நிறைய வருமானமும் ஈட்டுகிறது. ஆர்ட்டிஃபீஷியல் இன்டெலிஜென்ஸ், ஃபேஸ்புக் லைவ், புகைப்படங்களுக்கான புதிய டூல், மக்களின் ரீயாக் ஷன் என டம்லைன் வடிவமைப்பில் பெரிய உத்தியுடன் களமிறங்கும் ஃபேஸ்புக் விரைவில் அனைத்து இணையதளங்களுக்கும் மாற்றான ஒற்றை இணையதளமானாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை. 

http://www.vikatan.com/news/information-technology/72542-how-facebook-news-feed-works.art

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அற்புதனின் தொடரில் பல ஊகங்களும் இருந்தன,  உண்மைகளும் இருந்தன.  ஈழப்போராட்ட உண்மைகளை அறிய வேண்டுமானால் பக்க சார்பற்ற முறையில் வெளிவந்த  பல நூல்களையும் அந்த கால பத்திரிகை  செய்திகளையும்வாசிப்பதன் மூலமே அதனை அறிந்து கொள்ளலாம்.  உதாரணமாக தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் களப்பலியான முதல் பெண்போராளி ஈபிஆர்எல் ஐ சேர்ந்த சோபா என்பதை அண் மையில் தான் அறிந்தேன். அதுவரை மாலதி என்றே தவறான தகவலை நம்பியிருந்தேன்.  
    • ஹிந்திக் கார‌ன் த‌மிழ் நாட்டுக்கை வ‌ந்து ஹிந்தி க‌தைக்க‌ த‌மிழ் நாட்டுக் கார‌ன் ஹிந்தி தெரியாது என்று சொல்ல‌ நீ இந்திய‌னே இல்லை என்று சொல்லுறான் என்றால் வ‌ட‌ நாட்டு கோமாளிக‌ளுக்கு எவ‌ள‌வு தினா வெட்டு   ஏதோ ஹிந்தி உல‌க‌ம்  முழுதும் பேசும் மொழி மாதிரி ஹா ஹா..................மான‌த் த‌மிழ் பிள்ளைக‌ள் வீறு கொண்டு எழுந்தால் ஒரு சில‌ வார‌த்தில் த‌மிழை த‌விற‌ வேறு மொழிக்கு இட‌ம் இல்லை என்ற‌ நிலையை உருவாக்க‌லாம்................ஹிந்தி என்றால் அதை மிதி என்ற‌ கோவ‌ம் த‌மிழ‌ர்க‌ளின் ர‌த்த‌த்தோடு க‌ல‌ந்து இருக்க‌னும்................எழுத்து பிழை விட்டு என் தாய் மொழிய‌ நான் எழுதினாலும் என‌க்கு எல்லாமே த‌மிழ் தான்...............................
    • 👍... நீங்கள் சொல்வது உண்மையே. இவர்கள் எப்படித்தான் எங்களை இப்படித் துல்லியமாக அறிந்து வைத்திருக்கின்றார்களோ என்று ஒரு 'பயம்' கூட சில நேரங்களில் வருவதுண்டு.....😀
    • Macroeconomics இல் மனம் மலத்தை மனிதன் கையால் அள்ளுவதை வளர்ச்சி என்று வரையறுக்கிறார்களா?போலியான தரவுகளைக் கொடுத்தால் போலியான முடிவுகள்தான் கிடைக்கும்.இந்தியாவில் மனித மலத்தை மனிதர்கள் அள்ளுவது பொய்யென்று சொல்கிறீர்களா?எத்தனையோ மனிதர்கள் நச்சு வாயுவைச் சுவாசித்து மரணித்து இருக்கிறார்கள்.அதெல்லாம் உங்கள் கணக்கீட்டில் வருகிறதா?
    • விற்றுப் போடுவார்கள் என்பதால்த் தான் பூட்டுக்கு மேல் பூட்டைப் போட்டு பூட்டிவிட்டு இருக்கிறார்களோ?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.