நவம்பர் மாத கணையாழி இதழில் வெளியாகியுள்ள எனது கவிதை "ஒரு வழிப் போக்குவரத்து"
-
Tell a friend
-
Similar Content
-
By seyon yazhvaendhan
ஆனந்த விகடன் (15.2.17) இதழில் வெளியான எனது "நகரத்தின் புதிய தந்தை" கவிதையை யாழ் களத் தோழர்களுடன் பகிர்ந்துகொள்வதில் மகிழ்ச்சி.... யாழ் களத்தோழர்கள் எனக்குத் தரும் உற்சாகத்துக்கு நன்றி!
நகரத்தின் புதிய தந்தை
எல்லாவற்றையும் மாற்றப்போவதாக வாக்களித்து
நாற்காலியைக் கைப்பற்றிய
நகரத்தின் புதிய தந்தைக்கு
அவர் பராமரிக்கவேண்டிய
பிள்ளைகளின் கணக்கு கொடுக்கப்பட்டது.
சாதுவானவர்கள், அடங்காதவர்கள்,
ஊதாரிகள், அயோக்கியர்களென
அனைவரின் புள்ளிவிவரம் அவரிடமிருந்தது.
அடங்காதவர்களை அவர் கலாச்சாரக் காவலர்களாக்கினார்.
ஊதாரிகளுக்கு வெகுமதிகள் கொடுத்தார்.
சாதுவானவர்களுக்கு வேலைகளைப் பகிர்ந்தளித்தார்.
அயோக்கியர்களைத் துணைக்கு வைத்துக்கொண்டார்
நகரம் முன்பைவிட நரகமானதைப் பற்றி
ஒருவரும் வாய்திறக்கவில்லை
-சேயோன் யாழ்வேந்தன்
(ஆனந்த விகடன் 15.2.17)
(எனது பதிவுகளில் படங்களை இணைக்க முடியவில்லை. யாழ் தளத்தின்நெறியாளர் அல்லது தோழர்கள் அதற்கான வழிமுறையைக் கூறவும்)
(அல்லது நான் இணைக்க முயன்ற படத்தை இப்பதிவில்இணைத்துவிடவும்)
-
By seyon yazhvaendhan
இந்த வார ஆனந்த விகடன் (18.1.17) இதழில் தனிப்பக்கத்தில் வெளியாகியுள்ள எனது இரண்டு கவிதைகளை யாழ் களத் தோழர்களுடன் பகிர்ந்துகொள்வதில் மகிழ்ச்சி.... யாழ் களத்தோழர்கள் எனக்குத் தரும் உற்சாகத்துக்கு நன்றி!
நள்ளிரவில் சூரியன் உதிக்கும் வீடு
இரண்டு ஷிப்ட் வேலைக்குப் பின்
நள்ளிரவில் வீடு சேர்பவன்
சூரியனை குண்டு பல்புக்குள் உதிக்கவிடுகிறான்.
தன்னை மலடாக்கிய உணவை
இல்லாளுடன் கதை பேசியபடி உண்கிறான்.
ஆடு மாடுகளின் மேவு
ஆத்தா அப்பனின் அன்றைய பிரச்சனைகளை
அலைக்கற்றைவழி விசாரித்து அறிகிறான்.
டிஜிட்டல் இந்தியாவின் வல்லசுரக் கனவோடு
போட்டியிட முடியாமல் பின்தங்கும் கனவோடு
உறங்கப் போகிறான் சூரியனை அணைத்துவிட்டு.
தலைமுறை இடைவேளை
“கோழி கூப்புட நாலுமணிக்கு
நாலு தூத்தல் போட்டுச்சு
மண்வாசமும் வெக்கையும் கிளம்ப
வெளிய வந்து பார்த்தா
கீகாத்து மழையக் கலச்சுடுச்சு”
என்று சொன்ன அப்பத்தாதான்,
இன்று பிற்பகல் நாலுமணிக்கு
விளம்பர இடைவேளையில் வெளியே வந்து
“மழையா பேஞ்சுச்சு?” என்கிறாள்
ஈரவாசல் பார்த்து.
-சேயோன் யாழ்வேந்தன்
(ஆனந்த விகடன் 18.1.17)
(எனது பதிவுகளில் படங்களை இணைக்க முடியவில்லை. யாழ் தளத்தின் நெறியாளர் அல்லது தோழர்கள் அதற்கான வழிமுறையைக் கூறவும்)
(அல்லது வழக்கம்போல் நான் இணைக்க முயன்ற படத்தை இப்பதிவில் இணைத்துவிடவும்)
-
By seyon yazhvaendhan
30.11.16 ஆனந்த விகடன் இதழில் தனிப்பக்கத்தில் வெளியாகியுள்ள எனது "மாநகரத்தின் அகதிகள்" கவிதையை யாழ் களத் தோழர்களுடன் பகிர்ந்துகொள்வதில் மகிழ்ச்சி.... யாழ் களத்தோழர்கள் எனக்குத் தரும் உற்சாகத்துக்கு நன்றி!
மாநகரத்தின் அகதிகள்
தேசத்தின் வல்லசுரக் கனவினால்
தம் வாழிடங்களை விட்டுத் துரத்தப்பட்ட
ஒரு மாநகரத்தின் அகதிகள்
அவர்களுக்கென ஒதுக்கப்பட்ட
தனித்த பகுதிகளில் வசிக்கிறார்கள்
வாக்குரிமையும் ரேஷன் அட்டையும்கூட
சொந்த நிலத்தில் மட்டுமே அவர்களுக்குண்டு.
அங்குள்ள வங்கிக் கணக்கையும்
அவர்கள் இங்கிருந்தே பராமரிக்கிறார்கள்.
கால்வயிறு அரைவயிற்றுக் கஞ்சியோடு
அங்கே சில கால்நடைகளும் மனிதர்களும்
அதில் ஜீவிக்கிறார்கள்
பண்டிகைகள் நிமித்தம் தம் சொந்தநிலங்களுக்கு
பிதுங்கி வழியும் பேருந்துகளிலும்
ரயில்களின் கழிவறை அருகிலும்
பயணிக்க முடியும் என்பது
இம்மாநகரத்தின் அகதிகளுக்கு
இம்மாபெரும் தேசம் வழங்கியிருக்கும் சகாயம்.
-சேயோன் யாழ்வேந்தன்
(ஆனந்த விகடன் 30.11.16)
(எனது பதிவுகளில் படங்களை இணைக்க முடியவில்லை. யாழ் தளத்தின் நெறியாளர் அல்லது தோழர்கள் அதற்கான வழிமுறையைக் கூறவும்)
(அல்லது வழக்கம்போல் நான் இணைக்க முயன்ற படத்தை இப்பதிவில் இணைத்துவிடவும்)
-
By seyon yazhvaendhan
2.11.16 ஆனந்த விகடன் தீபாவளிச் சிறப்பிதழில் தனிப்பக்கத்தில் வெளியாகியுள்ள எனது கவிதையை யாழ் களத் தோழர்களுடன் பகிர்ந்துகொள்வதில் மகிழ்ச்சி.... யாழ் களத் தோழர்கள் எனக்குத் தரும் உற்சாகத்துக்கு நன்றி!
நானிலம் போற்றும் நீதி
காடு இருந்த இடத்தில்
அமைந்திருக்கும் முல்லை நகரில்
கழனி இருந்த இடத்தில்
வீடுகட்டிக் கொண்டவர்கள்
கால்வாய் இருந்த இடத்தில்
சாலை அமைப்பதை எதிர்த்து
வழக்குத் தொடுத்திருக்கிறார்கள்.
குளம் இருந்த இடத்தில்
அமைந்திருக்கும் உயர்மன்றத்தில்
நீதி இன்னும் நிலுவையில் இருக்கிறது!
-சேயோன் யாழ்வேந்தன்
(ஆனந்த விகடன் 2.11.16)
(எனது பதிவுகளில் படங்களை இணைக்க முடியவில்லை. யாழ் தளத்தின் நெறியாளர் அல்லது தோழர்கள் அதற்கான வழிமுறையைக் கூறவும்)
-
By seyon yazhvaendhan
“திணை” செப்டம்பர் 2016 இதழில் வெளியாகியுள்ள எனது மூன்று கவிதைகளை, யாழ் களத் தோழர்களுடன் பகிர்ந்துகொள்வதில் மகிழ்கிறேன். யாழ் தோழர்களின் வாசிப்பும், கருத்துகளும் கவிதைத் தளத்தில் என்னைத் தொடர்ந்து இயங்கவைக்கின்றன.
ஸ்டிக்கர்
---------------
மாபெரும் தீர்க்கதரிசிகள்
மறைந்துவிட்டார்களென்று
நினைத்துக்கொண்டிருக்கிறீர்கள்
உங்கள் கண்முன் உலவும்
தீர்க்கதரிசிகளைத் தவறவிடுகிறீர்கள்!
இப்போதெல்லாம் தீர்க்கதரிசிகள்
வெளிப்படையான நீதிபோதனைகளை வழங்குவதில்லை.
நவீன உலகுக்கேற்ப நீதிகளை
மறைபொருளாக வழங்குகிறார்கள்.
மதுக்கோப்பைகளில் நீங்கள் ஒட்டிக்கொள்ளும்
இஷ்ட தேவதையின் ஸ்டிக்கர்
குடிநோயாளி ஆவதிலிருந்து காக்கும்.
குறைந்தபட்சம் கோபத்தில்
கோப்பை உடைபடுவதையாவது தடுக்கும்.
சிகரெட் பெட்டிகளின் மீது
நீங்கள் ஒட்டி வைக்கும் உங்கள்
குழந்தைகளின் ஸ்டிக்கர்
கொஞ்சமேனும் புகைப்பழக்கத்தைக் குறைக்கும்
தலை நசுங்கிய ஒருவனின் படத்தை
ஸ்பீடா மீட்டரில் ஒட்டிக்கொள்வது
சாலையில் கவனமாக இருக்கவைக்கும்.
சக்தி மிக்க கடவுள்களின் ஸ்டிக்கர்களை
முதியவர்கள் மீது நிரந்தரமாக ஒட்டிவிடுவது
பூஜையறையில் இடம் கிடைக்கும்வரை
புழக்கடையிலாவது இருப்பை உறுதி செய்யும்!
சூத்திரனின் பிறப்பு
-----------------------------------------
வழக்கம் போல் நகர் உலாச் சென்ற கடவுள்
ஒரு வேசியின் வீட்டுக் கதவைத் தட்டிவிட்டார்
ஏதுமறியா வேசிக்கு
வந்திருப்பது கடவுளென்று தெரியாவிட்டாலும்
யாவுமறிந்த கடவுளுக்கு
அவள் வேசியென்பது தெரிந்தே இருந்தது.
உள்ளே அழைத்தாள் வேசி.
“இல்லை, நான் அதற்காக வரவில்லை”,
கடவுள் தயங்கினார்.
வேசி சிரித்தாள்,
“நேற்றும்தான் ஒருவன்
கவிதை எழுதத்தான் வந்தேன் என்று
காகிதம் பேனாவோடு வந்தான்
காகிதத்தில் ஒரு வரியும் எழுதவில்லை
காலையில் தான் போனான்” என்றாள்.
“நான் அப்.....“ கடவுள் திக்கினார்.
அதற்கு மேல் கடவுளைப் பேசவிடவில்லை வேசி.
ஆட்கொல்லி ஆண்டவன்
ஆட்கொள்வதற்கு
வேசிகள் ஒன்றும் விலக்கல்லவே!
சூத்திரனின் பிறப்பை
வேதங்கள் அறிவித்தன,
பிரபஞ்சம் கொண்டாடியது!
இறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்
-----------------------------------------------------------------------------
சிறுநீர் கழிக்கும் பீங்கான் தொட்டியில்
சிற்றெறும்பைக் கண்டதும்
சட்டென்று அடக்கி
அப்படியே நகர்ந்தேன்
அடுத்த பீங்கானுக்கு,
அப்படியே அடுத்ததற்கு…
ஞாயிற்றுக்கிழமைகளில்
பலியிடும் நாட்டுக்கோழிகளை
இப்படியாகத்தான்
சமன் செய்துகொள்கிறேன்.
-
-
Topics
-
Posts
-
By சுகந்தமாறன் · Posted
உங்கள் பாராட்டுதலுக்கு மிக்க நன்றி சுவி. புதிய உறுப்பினர் என்பதால் அரிச்சுவடி பகுதியில் இணைத்திருந்தேன். தற்போது கதைக்களம் என்ற பகுதிக்கு நகர்த்தியிருக்கிறார்கள். நிர்வாகத்திற்க்கும் நன்றி. -
கிணற்றடி வாழை என்றும் பசுமை மாறாது ஈரலிப்பாகவே இருக்கும் அதுபோல் உங்களின் கவிதையும்......! 👍 பகிர்வுக்கு நன்றிகள் ......!
-
இப்பொழுதுதான் பார்த்தேன், படித்தேன் .....ஒரு அருமையான நகைச்சுவையுடன் கூடிய துப்பறியும் கதை.....நீங்கள் தொடர்ந்து இங்கு எழுதுங்கள்....மேலும் இந்தக் கதையைக்கூட "யாழ் அகவை 23 க்கு" நகர்த்தும்படி நிர்வாகத்திடம் கோரலாம்.....நிறையபேர் வாசித்து கருத்து சொல்வார்கள்......! 🌹 👍 உங்கள் வரவு நல்வரவாகுக.......!
-
By புங்கையூரன் · Posted
காலங்கள் கடந்திடினும், ஆழப் புதைந்த.நினைவுகளைக்.. கிழறிப் பார்க்கின்றது, கவிதை ! கற்றாளை இதயங்கள்..., சொரிந்திடும் கண்ணீர், வற்றாத.நதியாகி...,, குறைப் பிரசவக் காதல்களின், கல்லறைகளை.நனைக்கட்டும்! -
17) ஏப்ரல் 23rd, 2021, வெள்ளி, 07:30 PM: பஞ்சாப் கிங்ஸ் vs மும்பை இந்தியன்ஸ் - சென்னை PBKS vs MI 4 பேர் பஞ்சாப் கிங்ஸ் வெல்வதாகவும் 10 பேர் மும்பை இந்தியன்ஸ் வெல்வதாகவும் கணித்துளனர். பஞ்சாப் கிங்ஸ் ஈழப்பிரியன் கல்யாணி நந்தன் கிருபன் மும்பை இந்தியன்ஸ் சுவி குமாரசாமி வாதவூரான் அஹஸ்தியன் சுவைப்பிரியன் எப்போதும் தமிழன் வாத்தியார் பையன்26 நுணாவிலான் கறுப்பி இன்று நடக்கும் போட்டியில் யார் புள்ளிகள் எடுப்பார்கள்?🤾♂️🤸♂️
-
Recommended Posts
Archived
This topic is now archived and is closed to further replies.