Jump to content

Recommended Posts

வார்த்தைகள் யாவும்
வலுவிழந்து போகின்றன
கார்த்திகை வானம் போல
மனம் கனத்துக் கிடக்கின்றது
நேற்று வரை எம்மோடு இருந்த நீ
இல்லை என்ற சொற்கேட்டு
இடி விழுந்த கோபுரம் போல
இதயம் நொருங்கிக் கிடக்கின்றது
ஆற்றல் மிகுந்த பேராசானே! நீ
ஆக்கி வைத்த இலக்கியங்கள்
இன்னும் நூறு தலைமுறைக்கு
ஈழத் தமிழர் கதை சொல்லி வாழும்
பழகிட இனித்திடும் வெல்லமே
பார்வையாலே பேசும் பெருமகனே
ஈழத்தமிழர் பெயர் சொல்லி எவர்
இரந்து கேட்டாலும் இல்லை எனாமல் 
நிறைந்து வளங்கும் வள்ளலே
உன்னால் உயர்ந்தவர் பலர் - எம்
உள்ளத்தில் என்றும் நீ 
இருப்பாய் பெரும் கனலாய்
வருகின்ற எம் படைப்புக்களின்
இனியும் நீ வாழ்ந்து கொண்டேய் இருப்பாய்...

#ஈழத்துப்பித்தன்

 

2002 காலப்பகுதிகளில் நாம் யாழ் களத்தில் நுழைந்த போது எம்மை தட்டிக் கொடுத்து வயது இடைவெளி பாராது சக நண்பனாய் எம்மோடு பழகியவரும் பல்துறைக் கலைஞனுமான "இராஜன் முருகவேள்" (சோழியான்) அவர்களின் நினைவு சுமந்து...

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.