Jump to content

மட்டக்களப்பு புலிகள் தலைவர்கள் கருணாவுடன் இரகசியத் தொடர்பு---லங்காதீப


Recommended Posts

மட்டக்களப்பு பிரதேசத்தில் செயற்பட்டுவரும் புலிகள் இயக்கத்தின் முன்னணித் தலைவர்கள் கருணாவுடன் தொடர்பு வைத்திருப்பது பற்றிய தகவல்கள் அண்மையில் வெளியாகியுள்ளதாகவும், இந்த வகையிலேயே அம்பாறை, மட்டக்களப்பு பிரதேசங்களில் புலிகள் அமைப்பின் அரசியல் செயற்பாடுகளுக்குப் பொறுப்பாக இருக்கும் அரசியல்பிரிவுத் தலைவர் தயாமோகன் கருணாவுடன் தொடர்புகளை வைத்திருந்தார் என்ற சந்தேகத்திலும் குற்றச்சாட்டிலும் புலிகள் இயக்கத் தலைமைத்துவத்தின் உத்தரவின் பேரில் அண்மையில் கைது செய்யப்பட்டு கடந்த ஒரு மாதகாலமாக வன்னிப் பிரதேசத்திலுள்ள குறித்த ஒரு முகாமில் சிறை வைக்கப்பட்டிருப்பதாகவும் பாதுகாப்பு புலனாய்வுப் பிரிவு தெரிவித்துள்ளது.

இவ்வாறு தயாமோகன் புலிகளால் கைது செய்யப்பட்டது பற்றி மேலும் தெரிவிக்கப்படும் தகவல்களுக்கேற்ப, கிழக்கு மாகாண பிரதேசத்திலுள்ள பாதுகாப்பு நிலைமை பற்றி பேச்சுவார்த்தை நடத்துவதற்கு வரும்படி கூறியே அவரை புலிகள் இயக்கத் தலைவர்கள் வன்னிக்குக் கூட்டிவரச் செய்துள்ளார்கள் எனவும், ஆயினும், அங்கு வைத்து அவரைக் கைதுசெய்து, சிறையில் அடைத்துவிட்டார்கள் எனவும் பாதுகாப்பு புலனாய்வுப்பிரிவு கூறியுள்ளது. தயாமோகன் இவ்வாறு கருணா குழுவினருடனும் தலைவர் கருணாவுடனும் நெருங்கிய இரகசியத் தொடர்புகளை வைத்திருப்பதாக புலிகள் இயக்கத் தலைவர்களுக்கு அண்மைக்காலமாக தகவல்களை குறித்த கிழக்கு மாகாண புலிகள் தரப்பினர் ஏற்கனவே அறிவித்திருந்ததைத் தொடர்ந்தே, இவ்வாறு பேச்சுவார்த்தை என்ற போலிக்காரணத்தைக் காட்டி வஞ்சகமாக தயாமோகனை புலிகள் இயக்கத்தலைவர்கள் வன்னிக்குக் கொண்டு சென்றதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு கைது செய்யப்பட்டு வன்னியில் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் தயாமோகனுக்கு மோசமான சித்திரவதைகளைப் புலிகள் இயக்கத்தினர் செய்து வருவதாகவும் அவருக்கும் கருணாவுக்கும் இடையிலான தொடர்பு பற்றி இரகசியங்களைப் பெறுவதற்காகவே தயாமோகளை தொடர்ந்தும் அடித்து, துன்புறுத்தி சித்திரவதை செய்யது வருவதாகவும் பாதுகாப்புப் புலனாய்வுப் பிரிவினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

-லங்காதீப: 25.01.2007-

thinakkural_logo.gif

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இல்லை இது முற்றிலும் உண்மை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இல்லை இது முற்றிலும் உண்மை.

ஏன் உங்களுக்கு இயக்கம் உத்தியோக பூர்வமாக அறிவித்தவையோ.. போய் வேறை வேலை இருந்தால் பாருங்கோ...

சும்மா வீண் வதந்திகளை பரப்பாதீர்கள்..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஏன் உங்களுக்கு இயக்கம் உத்தியோக பூர்வமாக அறிவித்தவையோ.. போய் வேறை வேலை இருந்தால் பாருங்கோ...

சும்மா வீண் வதந்திகளை பரப்பாதீர்கள்..

யோவ் என்ன மப்பா? :) எந்த தலைப்புக்கு கீழ் இருந்து கதைகின்றோம் தெரியுமா?

Link to comment
Share on other sites

யோவ் என்ன மப்பா? :) எந்த தலைப்புக்கு கீழ் இருந்து கதைகின்றோம் தெரியுமா?

யார் யாருக்கு மப்பு எண்டு கேக்கிர நிலமை :P என்ன குமாரசாமி தாத்தா :P நகைச்சுவை பகுதி கிஸான் அதால மப்பில தாத்தா உளறீட்டார் மன்னியுங்கோ :D:lol: :P

Link to comment
Share on other sites

இரகசியத் தொடர்பு? சொல்லவே இல்லை. லங்காதீப கருனாவின் இடத்திலும் காரியாழயம் வைத்திருக்குது போல

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 5 எள்ளு பாகுகள் பாக்கெட்டில் அடைத்து லேபல் ஒட்டி - வீட்டில் போய் வாங்கினால் ரூ 200 ( 50 பென்ஸ்). இலண்டனில் தமிழ் கடையில் குறைந்தது £3.50? ஏற்றுமதி செலவை கழித்து பார்த்தாலும்? பிகு எள்ளை இடித்து மாவாக்கி பிசையும் உருண்டை. எள்ளுருண்டை அல்ல.
    • அவள் ஒருநாள் வீதியோரம் கூடை நிறைந்த கடவுளர்களை கூவிக் கூவி விற்றுக்கொண்டிருந்தாள்   போவோர் வருவோரிடம் 'கடவுள் விற்பனைக்கு' என்று கத்திச் சொன்னாள்   அவள் சொன்னதை யாரும் கவனித்ததாகத் தெரியவில்லை   பிள்ளை பாலுக்கு அழுதது கடவுளர்களின் சுமை அவளின் தலையை அழுத்தியது   'கடவுள் விற்பனைக்கு' அவள் முகம் நிறைந்த புன்னகையுடன் மீண்டும் கூவினாள்   கடவுள் மீது விருப்புற்ற பலரால் கடவுள் அன்று பேரம் பேசப்பட்டார்   அந்நாளின் முடிவில் அவளின் வேண்டுதலை ஏற்றுக் கடவுளர்கள் அனைவரும் விலை போயினர்     தியா - காண்டீபன் மார்ச் 29, 2024 காலை 7:20
    • வருகை, கருத்துக்கு நன்றி. இரெண்டு வாரம் இல்லை. மாதம். ஆனால் இதை வைத்தும் கணிக்க முடியாதுதான். ஒரு ஊக கணிப்புத்தான். பேசிய பலரும் யாருக்கும் வாக்களிக்காத மனநிலையில், ஒதுங்கி போவதாகவே இருந்தார்கள். இவர்கள் வீட்டில் இருக்க, சலுகை அரசியலை விரும்புவோர் வாக்களித்தால் யாழில் தமிழ் தேசிய எம்பிகள் அளவு குறையும் என நினைக்கிறேன்.  ஜேவிபி க்கு முன்னர் இல்லாத ஆதரவு யாழில் உள்ளது. பிள்ளையார் இன்னில் அண்மையில் கூட்டம் வைத்து, உள்ளூர் பிரமுகர்கள் பலரும் சமூகமாகி இருந்தனர்.
    • சிறப்பான கவிதை... மகிழ்ச்சியாக இருங்கள் 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.