நவீனன் பதியப்பட்டது November 19, 2016 Share பதியப்பட்டது November 19, 2016 அரசியலமைப்பு திருத்தம்: 6 குழுக்களின் அறிக்கை சமர்ப்பிப்பு அரசியலமைப்பில் திருத்தங்களை மேற்கொள்வதற்கான அரசியலமைப்பு பேரவை, சபாநாயகர் கருஜயசூரிய தலைமையில், இன்று சனிக்கிழமை (19) காலை 9 மணிக்குக் கூடியது. இதன்போது, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, அரசியமைப்பு பேரவை வழிநடத்தல் குழுவின் கீழான ஆறு குழுக்களின் அறிக்கைகளை சமர்ப்பித்தார். - See more at: http://www.tamilmirror.lk/186399/அரச-யலம-ப-ப-த-ர-த-தம-க-ழ-க-கள-ன-அற-க-க-சமர-ப-ப-ப-ப-#sthash.dj6YG2DB.dpuf Link to comment Share on other sites More sharing options...
நவீனன் Posted November 19, 2016 தொடங்கியவர் Share Posted November 19, 2016 புதிய அரசியல் யாப்பைத் தயாரிப்பதற்கான அறிக்கைகள் அரசியல் சாசன சபையிடம் கையளிப்பு புதிய அரசியல் யாப்பைத் தயாரிப்பதற்கான அரசியல் சாசன பேரவையினால் நியமிக்கப்பட்ட ஆறு உப குழுக்களினால் தயாரிக்கப்பட்ட ஆறு அறிக்கைகளும் இன்று அரசியல் சாசன சபையிடம் கையளிக்கப்ப ட்டுள்ளன. அரசியல் சாசன பேரவையின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவினால் இந்த உப குழுக்களினால் தயாரிக்க ப்பட்ட அறிக்கைகள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. அரசியல் சாசன பேரவை சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் இன்று காலை நாடாளுமன்றக் கட்டடத் தொகுதியில் கூடிய போதே, அரசியல் சாசன உப குழுக்களினால் தயாரிக்கப்பட்ட ஆறு அறிக்கைகளும் பிரதமரினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. அடிப்படை உரிமைகள் தொடர்பான உப குழு, நீதித்துறை தொடர்பான உபகுழு, நிதி தொடர்பான உப குழு, பொது மக்கள் பாதுகாப்பு, காவல்துறை, சட்டம் ஆகியவற்றை நடைமுறைப்படுத்துவது தொடர்பான உப குழு,அரச சேவையில் மறுசீரமைப்பை ஏற்படுத்துவதற்கான உப குழு மற்றும் மத்திய அரசுக்கும் – மாகா ணங்களுக்கும் இடையிலான உறவுகளை கட்டியெழுப்புவதற்கான உப குழு ஆகியவற்றின் அறிக்கைகளே இன்று சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. இந்த விடயங்கள் தொடர்பில் ஆராய்வதற்காக நியமிக்கப்பட்டுள்ள உப குழுக்களுக்கு ஒவ்வொரு அரசியல் கட்சியையும் சேர்ந்த தலா உறுப்பினர் வீதம் நியமிக்கப்பட்டுள்ளனர். அதேவேளை அந்த உப குழுக்களுக்கு தலைவர் ஒருவரும் நியமிக்கப்பட்டிருக்கின்றனர். உப குழுக்களின் அறிக்கைகள் சமர்ப்பிக்கப்பட்டதன் பின்னர் கருத்துத் தெரிவித்த எதிர்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன், புதிய அரசியல் யாப்பை தயாரிப்பதற்கான உத்தேச அறிக்கை முன்வைக்கப்பட்டதும், அந்த அறிக்கை நாடாளுமன்றில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட வேண்டும் என தெரிவித்தார். அதேவேளை சர்வஜன வாக்கெடுப்பின் ஊடாகவும் உத்தேச அரசியல் யாப்பு அங்கீகரிக்கப்பட வேண்டும் என்றும் எதிர்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். எதிர்கட்சித் தலைவரின் இந்த கருத்து க்களை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அங்கீகரித்துள்ளார். http://www.onlineuthayan.com/news/20387 Link to comment Share on other sites More sharing options...
நவீனன் Posted November 20, 2016 தொடங்கியவர் Share Posted November 20, 2016 புதிய அரசியலமைப்பின் மீது சர்வஜன வாக்கெடுப்பு ஆறு உபகுழுக்களின் அறிக்கைகள் சமர்ப்பிப்பு: எதிர்த்தரப்பினர் சபையில் வலியுறுத்துஆர்.ராம், எம்.எம்.மின்ஹாஜ் புதிய அரசியலமைப்பிற்கு பாராளுமன்றத்தில் மூன்றிலிரண்டு பெரும்பான்மை பெறப்பட்டாலும் நாட்டு மக்களின் இறைமையை நிலைநாட்டும் பொருட்டு சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்படவேண்டும் என ஆளும், எதிர்த்தரப்புக்கள் சபையில் வலியுறுத்தின. அரசியலமைப்பு சபை நேற்று சனிக்கிழமை அரசியலமைப்பின் தலைவர் சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் காலை 9மணிக்கு கூடியது. அதன்போது பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவினால் அரசியலமைப்பு சபையின் வழிநடத்தும் குழுக்களினால் நியமிக்கப்பட்ட ஆறு உபகுழுக்களின் அறிக்கைகள் சமர்ப்பிக்கப்பட்டன. அடிப்படை உரிமைகள், நீதிமன்றம், நிதி, தேசிய மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பொலிஸ் சட்டத்தை நிலைநாட்டுதல், அரசசேவையை மறுசீரமைத்தல், மத்தியும், சுற்றயல் உறவுகள் ஆகிய ஆறு உபகுழுக்களின் அறிக்கை களே சபையில் சமர்ப்பிக்கப்பட்டன. தொடர்ந்து பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உபகுழு அறிக்கைகளை சமர்ப்பித்து உரையை ஆரம்பித்து வைத்தார். தொடர்ந்து ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் ஒன்றிணைந்த எதிரணியின் ஆதரவு பாராளுமன்ற உறுப்பினரான தினேஸ் குணவர்த்தன, எதிர்க் கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன், அமைச்சர் சுசில் பிரேம் ஜெயந், எதிர்க்கட்சி பிரதம கொரடாவும் ஜே.வி.பி தலைவருமான அநுரகுமார திஸநாயக்க எம்.பி ஆகியோர் உரையாற்றினர். அவை வருமாறு, பிரதமர் ரணில் விக்ரமசிங்க அரசியலமைப்பு சபை நியமித்த வழிநடத்தல் குழுவினால் நியமிக்கப்பட்ட ஆறு உபகுழுக்களின் அறிக்கைகள் சபையில் சமர்ப்பிக்கப்படுகின்றமை விசேடமானது. அடிப்படை உரிமைகள், நீதிமன்றம், நிதி, தேசிய மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பொலிஸ் சட்டத்தை நிலைநாட்டுதல், அரசசேவையை மறுசீரமைத்தல், மத்தியும், சுற்றயல் உறவுகள் ஆகிய ஆறு உபகுழுக்களின் அறிக்கைகளும் வழிநடத்தல் குழுவுக்கு வழங்கப்பட்ட பின்னர் அதனை அரசியலமைப்பு சபையில் சமர்ப்பிக்கத் தீர்மானித்தோம். இந்த உபகுழுக்களின் அறிக்கைகள் தொடர்பில் அரசியலமைப்பு சபையில் விவாதித்து அதன் அடிப்படையிலேயே வழிநடத்தல் குழு இவை பற்றிய தீர்மானத்துக்கு வரும். இவ்வாறு செயற்பாடுகளை மேலும் ஜனநாயகப்படுத்துவதானது அரசியலமைப்பை தயாரிப்பதற்கான சிறந்த பின்புலத்தை ஏற்படுத்தும். இந்த உபகுழுக்களின் அறிக்கைகளில் உள்ள சகல விடயங்களும் அரசியலமைப்பில் உள்ளடக்கப்படாது. இவற்றின் அடிப்படையிலான பின்புலத்துடன் விடயங்களை கலந்துரையாடியே வழிநடத்தல் குழுவின் அறிக்கையைத் தயாரிக்க எதிர்பார்த்துள்ளோம். இந்த உபகுழுக்கள் பல்வேறு நபர்கள், அமைப்புக்கள், அரசியல் கட்சிகள், சிவில் சமூகப் பிரதிநிதிகள் என பலரைச் சந்தித்ததுடன், அவர்களின் கருத்துக்களை முன்வைப்பதற்கும் அவகாசம் வழங்கியிருந்தன. இந்த அறிக்கைகளை தயாரித்திருக்கும் உபகுழுக்களுக்கும், அக்குழுக்களுக்கு ஆலோசனை வழங்கிய விசேட நிபுணர்களுக்கும் அரசியலமைப்பு சார்பில் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். அரசியலமைப்புத் தொடர்பான வழிநடத்தல் குழு இதுவரை 40 சந்திப்புக்களை நடத்தி, பல்வேறு விடயங்கள் பற்றி ஆராய்ந்துள்ளது. தற்பொழுது அரசியலமைப்பில் உள்ள அரசாங்கத்தின் தன்மை, மதத்துக்கான முன்னுரிமை என்பவற்றை நீக்குவது எமது நோக்கம் அல்ல. ஏற்றுக் கொள்ளக் கூடிய வகையில் அவற்றை பலப்படுத்துவதே வழிநடத்தல் குழுவின் எதிர்பார்ப்பாகும். நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை ஒழித்து அதற்கு மாற்றீடாக மூன்று முறைகளை தெரிவுசெய்துள்ளோம். இவை குறித்து அரசியலமைப்பு சபையில் விவாதித்து பொருத்தமான முறை எது என்பதை முடிவுசெய்ய முடியும். தேர்தல் முறை மறுசீரமைப்பில் கலப்பு முறையொன்றுக்கான விருப்பம் உள்ளது. உலக நாடுகளில் பின்பற்றப்படும் கலப்பு முறைகளை ஆராய்ந்து மாற்றீடுகள் சிலவற்றை முன்மொழிந்துள்ளோம். இதில் இரண்டு விடயங்கள் உள்ளன. வாக்காளர்கள் வழங்கிய வாக்குகளின் வீதத்துக்கு சமமான பிரதிநிதித்துவத்தை கட்சிகளுக்கு வழங்கமுடியும். மறுபக்கத்தில் ஐந்து வருடங்கள் உறுதியான அரசாங்கமொன்றை அமைக்க முடியும். இதுபோன்ற விடயங்களே கலந்துரையாடப்படவேண்டியுள்ளது. நிறைவேற்று அதிகார முறையின் கீழ் ஜனாதிபதி நியமிக்கப்படுவதால் பாரிய குறைபாடு காணப்படுகிறது. அதிகாரங்களை பகிர்வது குறித்து கலந்துரையாடியுள்ளோம். சில அறிக்கையில் உள்ளடக்கப்பட்டுள்ளன. குறிப்பாக இடம் தொடர்பான பிரச்சினை தொடர்பில் ஆராயந்துள்ளதோடு, உபகுழுவின் அறிக்கையில் இதுபற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த விடயங்கள் தொடர்பில் ஆரம்ப விவாதத்தை ஜனவரி மாதத்தில் நடத்தமுடியும். இதற்காக ஜனவரி 9, 10 மற்றும் 11ஆம் திகதிகளில் விவாதித்து முடிவுக்கு வரமுடியும். இல்லாவிட்டால் மேலும் காலம் எடுக்க முடியும். இது குறித்து கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் தீர்மானிக்கலாம். அடுத்த அரசியலமைப்பு சபை எதிர்வரும் டிசம்பர் மாதம் 10ஆம் திகதி கூடவுள்ளது. வழிநடத்தல் குழுவின் அறிக்கை தயாராக இருந்தால் அதனை அரசியலமைப்பு சபையில் சமர்ப்பிப்பதற்காகவே டிசம்பர் மாதம் கூடவுள்ளோம். பாராளுமன்ற உறுப்பினர் தினேஸ் குணவர்த்தன ஜனவரி மாதத்திலேயே அரசியலமைப்பு சபையின் அடுத்த அமர்வை நடத்துவது என கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டது. எனினும், அவசர அவசரமாக கூடி அறிக்கைகளை சமர்ப்பிக்கும் செயற்பாட்டுடன் நாம் இணங்கவில்லை. இது மோசமான நிலைப்பாடாக இருக்கும் என்றார். எதிர்க்கட்சி பிரதமகொரடா அநுரகுமார திசாநாயக்க எம்.பி. 1978ஆம் ஆண்டு அரசியலமைப்பு 19 தடவைகள் திருத்தப்பட்டுள்ளன. இவற்றில் 17 தடவைகள் ஆட்சியிலிருக்கும் தரப்பினரின் அதிகாரங்களை தக்கவைத்துக் கொள்வதற்காக மேற்கொள்ளப்பட்ட திருத்தங்கள். எனவே புதிய அரசியலமைப்புக்கான தேவையை நாம் ஏற்றுக் கொள்கின்றோம். தேர்தல்முறை மாற்றமானது நாட்டிலுள்ள மக்களின் தெரிவுகளின் ஊடான பிரதிநிதித்துவம் சரியான முறையில் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டில் இருந்தே இதனை நோக்குகின்றோம். மனித சமூக சமூக உருவாக்கம் மற்றும் அதன் பின்பற்றல்களுக்கு முழு மாற்றான வகையிலேயே நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறை காணப்படுகிறது. அதாவது ஒருவருக்கு தனியான ஏகாதிபத்திய அதிகாரத்தை வழங்கும் முறையாகும். முழுமையாக ஒழிக்கப்பட வேண்டும். இதனை நிறைவேற்றக் கூடியவகையிலான அரசியலமைப்பு உருவாக்கப்பட வேண்டும். இதற்கு மாற்றாக செயற்படக்கூடாது என்பதே எமது நிலைப்பாடாகும். அரசியலமைப்புக்கு பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை வழங்கப்படுவதுடன், சர்வஜன வாக்கெடுப்பில் மக்களின் விருப்பமும் பெற்றுக் கொள்ளப்பட வேண்டும் என்றார். பாராளுமன்ற உறுப்பினர் தினேஸ் குணவர்த்தன ஒன்றிணைந்த எதிர்க்கட்சி என்ற ரீதியில் 14 அடிப்படை விடயங்கள் தொடர்பில் நாம் முன்மொழிவுகளை சமர்ப்பித்துள்ளோம். வழிநடத்தல் குழுவில் முன்வைக்கப்பட்டுள்ள இந்த அடிப்படைகளுக்கு வெளியே எந்தவொரு விடயத்துக்கும் நாம் ஒத்துழைப்பு வழங்கப்போவதில்லை. இதற்கமைய நிறைவேற்று அதிகாரத்தை ஒழிக்கும்போது, தற்பொழுது அவருக்குக் காணப்படும் அதிகாரங்களுக்கு என்ன நடைபெறும்? நாட்டின் ஒற்றுமைத்தன்மை பாதிக்கப்பட்டு, வேறு வேறு நாடுகள் உருவாகுமா? இது பாரியதொரு பிரச்சினையாகும். எனவே இது நிறைவேற்று அதிகார முறை தொடர்பில் ஆழமான கலந்துரையாடல்கள் நடத்தப்பட வில்லை. நாடு முழுவதற்கும் சட்டங்களை தயாரிப்பதற்கு பாராளுமன்றத்துக்கு காணப்படும் அதிகாரம், விசேடமாக உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பானது ஒற்றையாட்சியின் இறுதிக்குச் சென்றதாக நீதியரசர் சர்வானந்தா கூறியிருந்தார். சட்டங்களை உருவாக்கும் அதிகாரம் பாராளுமன்றத்துக்கு இருந்தாலும், மக்களின் ஆட்புல ஒருமைப்பாட்டை அபகரிக்க முடியாது. நாட்டின் ஐக்கியம் மாத்திரமன்றி பாராளுமன்றத்திற்கு காணப்படும் உரிமைகள் என்பன அரசியலமைப்பில் இல்லாமல் செய்யப்படக் கூடாது. இந்நாட்டில் மாகாண சபைகளை ஒன்றிணைக்கும் பிழையான செயற்பாட்டுகளால் நாட்டை மோசமான நிலைக்குக் கொண்டு செல்லும் முயற்சிகள் தொடர்பில் நாம் எமது கருத்துக்களை தெளிவாகக் கூறியுள்ளோம். இவ்வாறான கருத்துக்களுக்கு அமைய அரசியலமைப்பு சபை எந்தவித அவசரமும் இன்றி செயற்படுவது அவசியமானது. அவசர அவசரமான ‘புல்டோசர்’ முறையை நிறுத்தி, மக்கள் மத்தியில் கலந்துரையாடல்களை ஏற்படுத்துவதற்கான வழிகள் ஏற்படுத்துக் கொடுக்கப்பட வேண்டும். மக்கள் மத்தியில் சிறந்ததொரு தெளிவு இல்லை. மக்கள் என்ன நடக்கிறது எனக் கேட்கின்றனர் என்றார். அமைச்சர் சுசில் பிரேம்ஜெயந் உபகுழுக்களின் அறிக்கைகளை ஆராய்ந்து, தாம் பிரதிநிதித்துவப் படுத்தும் கட்சியின் பிரதிநிதிகள் ஊடாக வழிநடத்தல் குழுவுக்கு நிலைப்பாடுகளை வழங்க முடியும். 1978ஆம் ஆண்டு அரசியலமைப்பு 19 தடவைகள் திருத்தப்பட்டுள்ளன. இதில் உள்ள சில திருத்தக்கள் அரசியலமைப்பின் அடிப்படை நோக்கத்துக்கு முரணாக இருப்பதைக் காணமுடிகிறது. இந்த நிலைமை மாற்றப்பட வேண்டும். அரசியலமைப்பு சபையின் செயற்பாடு அரசியலமைப்பை தயாரிப்பதாகும். அரசசேவைகளை மறுசீரமைக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டில் சகலரும் இருக்கின்றனர். இவ்வாறான நிலையில் அரசாங்கத்தின் தன்மை, தேர்தல் மறுசீரமைப்பு, அதிகாரப்பரவலாக்கல் ஆகிய மூன்று விடயங்கள் தொடர்பில் இன்னமும் இறுதி முடிவுக்கு வரவில்லை. இருந்தபோதும் இவற்றுக்கு சமமான விடயங்களைக் கொண்ட உபகுழு அறிக்கைகள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன என்றார். எதிர்க்கட்சித்தலைவர் இரா.சம்பந்தன் அரசியலமைப்பை தயாரிக்கும் செயற்பாட்டில் நாம் பங்களிப்புச் செலுத்தியுள்ளோம். இதனை தயாரிக்கும் கடமை அரசியலமைப்பு சபைக்கு வழங்கப்பட்டுள்ளது. அரசியலமைப்புத் தொடர்பான வழிநடத்தல் குழுவால் நியமிக்கப்பட்ட ஆறு உபகுழுக்களின் அறிக்கைகள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. அரசியலமைப்பு தயாரிப்பில் பல்வேறு மாற்றீடுகள் குறித்து ஆராயும் நோக்கத்திலேயே நாம் இந்த விடயங்களில் ஈடுபாட்டை செலுத்தியுள்ளோம். வழிநடத்தல் குழுவில் ஆராயப்படும் விடயங்கள் அரசியலமைப்பு சபையில் கலந்துரையாடப்பட்டு, அது அமைச்சரவைக்கு அனுப்பிவைக்கப்படும். அங்கு அனுமதி வங்கப்பட்டதும் மீண்டும் பாராளுமன்றத்தில் அரசியலமைப்பு முன்வைக்கப்படும். பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட்டாலும், சர்வஜன வாக்கெடுப்பின் ஊடாக மக்களின் அனுமதியை பெற்றுக்கொள்வது மிகவும் அவசியமானது. புதிய அரசியலமைப்பு பாராளுமன்றத்தால் அனுமதிக்கப்பட்டாலும் அதனை மக்களே இறுதியில் தீர்மானிக்க முடியும். அதற்கான இறைமை நாட்டு மக்களுக்கே உள்ளது என்றார். பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பாராளுமன்றத்தில் எந்தவொரு கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காமையானது, அரசியலமைப்பை தயாரிக்கும் செயற்பாடுகளுக்கு பலமாக அமைந்துள்ளது. சகலரின் கருத்துக்களை செவிமடுப்பதற்கே சந்தர்ப்பம் கிடைத்துள்ளது. விவாதம் 9,10,11ஆம் திகதிகளில் ஆரம்பிக்கின்றோம். இந்த மூன்று தினங்களில் விவாதத்தை பூர்த்திசெய்ய வேண்டுமென்ற தேவை இல்லை. அதன் பின்னர் நாட்டில் இது பற்றிய கலந்துரையாடல்களை ஏற்படுத்த இடமளித்து மீண்டும் பெப்ரவரி மாதம் கூடி ஆராய முடியும். உபகுழுக்களின் அறிக்கைகள் சகலவற்றையும் மக்களைச் சென்றடையும் வகையில் மதஸ்தலங்கள் உள்ளிட்ட பொது இடங்களுக்குச் செல்லும் வகையில் விநியோகிக்குமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்குப் பணிப்புரை விடுத்துள்ளேன். இணையத்தளத்தில் தரவேற்றினால் சகலரும் இதனைப்பார்வையிட முடியும். நாம் தயாரிப்பது எமது அரசியலமைப்பு அல்ல. விசேடமாக விடயங்கள் தொடர்பில் ஜனாதிபதி அதிகாரங்கள் எங்கு செல்வது என்பதை மக்கள் இறுதியில் தீர்மானிக்க முடியும். 13, சர்வானந்தன் வழக்கு முடிவுகளிலிருந்து விலகப்போவதில்லை. அரசியலமைப்பானது நாட்டின் பெரும்பான்மை மக்களும், சிங்கள மக்களும் அனுமதிக்க வேண்டும் என்றார். அரசியலமைப்பு பேரவையின் வழி நடத்தும் குழுவினால் நியமிக்கப்பட்ட ஆறு உபகுழுக்களினதும் அறிக்கைகைள் ஆராயப்பட்டு எதிர்வரும் டிசம்பர் மாதம் 10ஆம் திகதி அரசியலமைப்பு மீண்டும் கூடவுள்ளதோடு வழிநடத்தும் குழுவின் இடைக்கால அறிக்கை வெளியிடப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது. http://content.epaper.virakesari.lk/newspaper/Weekly/weekly-main/2016-11-20#page-1 Link to comment Share on other sites More sharing options...
Recommended Posts
Archived
This topic is now archived and is closed to further replies.