Jump to content

பைபிள் கதைகள்


Recommended Posts

பைபிள் கதைகள் 1: தோட்டத்தை இழந்த தோழர்கள்

 
bible_2804494f.jpg
 
 

இத்தனை அழகான பூமியை கடவுள் எதற்காகப் படைத்திருப்பார்? சந்தேகமே வேண்டாம்; மனிதர்களுக்காகவே அவர் பூமியைப் படைத்தார்.

மனிதர்களைப் படைக்கும் முன் கடவுள் வானதூதர்களை உண்டாக்கினார். அவர்கள் சர்வ வல்லமைகொண்ட கடவுளுக்கு கீழ்படிந்து நடக்கும் அவரது ஊழியர்கள். அவர்கள் கடவுளைப்போல் ஆவித்தன்மை கொண்டவர்கள். ஆனால் அவரைப்போல் தலைமைப் பண்பு கொண்டவர்கள் அல்ல. இந்த ஊழியர்களில் ஒருவன் கடவுளைப்போல் இந்த பிரபஞ்சத்தை ஆள விரும்பினான்.

அவருக்கு எதிரியாக மாறினான். எனவே கடவுள் அவனுக்குத் தந்திருந்த புனிதத்தன்மையை இழந்தான். சாத்தானாக போகும்படி கடவுளால் சபிக்கப்பட்டான். கோபம்கொண்ட சாத்தான், “ நீர் படைத்த பூமியின் மீதும் அதில் வாழும் மனிதர்கள் மீதும் நான் ஆட்சிசெலுத்துவேன்” என்று கடவுளிடம் சவால் விட்டான். ‘உன்னால் அது முடியாது’ என்று கடவுள் புன்னகை புரிந்தார்.

அழகிய தோட்டம்

பூமியையும் மனிதர்களை சாத்தான் ஏன் ஆள விரும்பினான்? ஏனென்றால் கடவுளின் கைவண்ணத்தில் படைப்பின் உச்சமாக பூமியே இருந்தது. எனவே அது பூலோக சொர்க்கம் எனப்பட்டது. அப்படிப்பட்ட பூமியை மேலும் அர்த்தமுள்ளதாகவும் அழகானதாகவும் மாற்றிட விரும்பிய கடவுள் முதல் மனிதனை உண்டாக்கினார்.

மண்ணை எடுத்து, தன் சாயலில் ஒரு மனித உடலை உருவாக்கினார். பின்பு அந்த உடலின் மூக்கிற்குள் காற்றை ஊதினார், அப்போது அந்த உடலுக்கு உயிர் வந்தது. அவன் சுவாசிக்க ஆரம்பித்தான். ஆதாம் என அவனுக்குப் பெயரிட்டார். அக்கணமே அவனுக்கு சிந்திக்கும் ஆற்றலையும் பசியையும் அளித்தார். கடவுளாகிய தன் தந்தையைக் கண்டு அவருக்குக் கீழ்படிந்தான் ஆதாம். அவனது கீழ்படிதலைக் கண்ட கடவுள் அகமகிழ்ந்தார். அவன் வசிக்க அழகிய தோட்டம் ஒன்றை உருவாக்கினார்.

அதுவே ஏதேன் தோட்டம். அழகின் உச்சமாக இருந்த அத்தோட்டத்தில் வசிக்கத் தொடங்கிய ஆதாமுக்கு கடவுளாகிய யகோவா தேவன் ஒரு வேலையைக் கொடுத்தார். அத்தோட்டத்தில் அன்புடன் வாழும் எல்லா விலங்குகள், பறவைகளுக்கு பெயர் சூட்டும்படிக் கூறினார். தனக்களிக்கப்பட்ட வேலையை சரியாகச் செய்து தந்தையை மகிழ்விக்க விரும்பினான் ஆதாம். அதனால் அவகாசம் எடுத்துக்கொண்டான். பொருத்தமான பெயர்களைச் சூட்ட, விலங்குகள், பறப்பன, ஊர்வன ஆகிய அனைத்து உயிர்களையும் கூர்ந்து கவனிக்க ஆரம்பித்தான்.

அப்போது அங்கிருந்த எல்லா உயிர்களும் ஜோடி ஜோடியாக இருந்தன. ஆனால் தனக்கு மட்டும் ஏற்ற ஒரு ஜோடி இல்லையே என ஏங்கினான். அவனது ஏக்கத்தைப் போக்கவிரும்பினார் யகோவா. ஆதாமை நன்றாகத் தூங்க வைத்து, அவனுடைய விலா எலும்புகளில் ஒன்றை எடுத்தார். அந்த விலா எலும்பினால் ஆதாமுக்காக ஒரு பெண்ணை உண்டாக்கினார். அந்தப் பெண்ணை அவனுக்குத் தோழியாக்கினார். ஏதேன் தோட்டத்தின் மலர்களோடு பூமியின் முதல் நட்பு மலர்ந்தது.

தீயவனின் பொறாமை

ஆதாமும் ஏவாளும் மட்டற்ற மகிழ்ச்சியுடன் தோட்டத்தை வலம் வந்தார்கள். இதே மகிழ்ச்சியும் அமைதியும் அவர்கள் உள்ளத்தில் என்றும் தங்கியிருக்க வேண்டுமென கடவுள் விரும்பினார். ஏதேன் தோட்டத்தின் அழகையும் ஆதாம் ஏவாளின் மகிழ்வையும் கண்ட சாத்தான் பொறாமையால் புழுங்கினான். கடவுளின் படைப்புகள் மீது அவனால் நேரடியாக கைவைக்கமுடியாது. எனவே அவற்றின் உள்ளத்துள் ஊடுருவ தக்க தருணத்தை எதிர்பார்த்து ஒவ்வொரு நொடியும் காத்திருந்தான்.

ஏதேன் தோட்டத்தின் மரங்கள் தருகிற பழங்களை சாப்பிடலாம் என்று ஆதாம் ஏவாளிடம் கடவுள் சொல்லியிருந்தார். “ஆனால் ஒரேயொரு மரம் உங்களுக்குரியதல்ல; அதிலிருந்து கிடைக்கும் பழங்களை மட்டும் நீங்கள் உண்ணக் கூடாது. இதை அறிந்திருந்தும் அதை மீறினால் அதன் சம்பளமாக மரணம் நேரும்” என்று எச்சரிக்கை செய்திருந்தார்.

தோட்டத்தை இழந்தார்கள்

ஒருநாள் ஆதாம் பழங்களைப் பரித்துவரச் சென்றிருந்தான். ஏவாள் தனியாக இருந்தாள். அவளது தனிமையை சாத்தான் பயன்படுத்திக் கொண்டான். ஏவாளை நெருங்கிய ஒரு பாம்பு அவளிடம் பேசியது. எந்த மரத்தின் பழத்தைச் சாப்பிடக் கூடாது என்று கடவுள் சொன்னாரோ அந்த மரத்திலிருந்த பழத்தைப் பறித்துச் சாப்பிடும்படி ஏவாளிடம் சொன்னது. பாம்புகளை கடவுளாகிய யகோவா தேவன் உண்டாக்கியபோது அவற்றுக்கு பேசும் திறனை அவர் உண்டாக்கவில்லை. அப்படிப்பட்ட பாம்பிற்குள் ஊருருவிய சாத்தான் அதற்குள்ளிருந்து பேசினான். “விலக்கப்பட்ட மரத்தின் அந்தப் பழத்தைச் சாப்பிட்டால் கடவுளைப் போல் ஆக முடியும்!” என்று ஏவாளை ஏமாற்றினான்.

ஒருகணம் சிந்திக்கத் தவறிய ஏவாள், அதை உண்மையென்று நம்பினாள். பழத்தைப் பறித்துச் சாப்பிட்டாள். அங்கே வந்த ஆதாமுக்கும் அதைச் சாப்பிடக் கொடுத்தாள். “ நான் கடவுளின் வார்த்தைகளைத் தட்டமாட்டேன்” என்று மறுத்திருக்கவேண்டிய ஆதாம் தோழியின் வார்த்தைகளை நம்பினான். பழத்தை உண்டு முடித்தபோது வெட்கமும் பயமும் அவர்களை ஆட்கொண்டது.

தற்காலிக வெற்றியைப்பெற்றுவிட்ட சந்தோஷத்தில் கடவுள் அங்கே பிரசன்னமாகும்முன் பாம்பிலிருந்து வெளியேறி ஓடினான் சாத்தான். ஆதாம் ஏவாளைக் குறை கூறினான். ஏவாள் பாம்பை குறை கூறினாள். ஆனால் அவர்களது விளக்கத்தை ஏற்றுக்கொள்ளாத கடவுள் அவர்களை ஏதேன் தோட்டத்தை விட்டு வெளியே அனுப்பினார். “ ஆதாம்! நீ கீழ்படிதலை மறந்து, பாவம் செய்தபடியால் இனி பூமியில் நீ வியர்வை சிந்தி உழைத்து உன் உணவைப் பெறுவாய்” என்றார்.

தங்கள் அழகிய தோட்ட வீட்டை இழந்து வெளியே வந்த ஆதாமும் ஏவாளும் நிறைய பிரச்சினைகளைச் சந்தித்தார்கள். ஏதேன் தோட்டத்தில் திரும்பிய பக்கமெல்லாம் பழ மரங்களைக் கண்ட அவர்கள் பூமியில் முள் செடிகளையும் புதர்களையும் கண்டார்கள். கடவுளுக்குக் கீழ்ப்படியாமல், அவருடனிருந்த தங்கள் அன்பை முறித்துக்கொண்டதால் வாழ்க்கை வாழ்வது ஒரு தினசரி போராட்டமாக மாறியது. ஆனால் கடவுள் இந்த முழு பூமியையும் ஒரு நாள் ஏதேன் தோட்டத்தைப் போல் அழகாக மாற்றப் போவதாக வாக்குத் தந்தார்.

 

தொடரும்

http://tamil.thehindu.com/society/spirituality/பைபிள்-கதைகள்-1-தோட்டத்தை-இழந்த-தோழர்கள்/article8445759.ece

Link to comment
Share on other sites

  • Replies 66
  • Created
  • Last Reply

பைபிள் கதைகள் 2: பூமியில் சிந்திய முதல் ரத்தம்!

 

 
8isbs_BIBLE_GQH_8I_2813665h.jpg
 
 

கடவுளின் அன்பை எண்ணிப்பார்க்காமல் எளிதில் சாத்தானிடம் ஏமாந்துபோனார்கள் ஆதாமும் ஏவாளும். எனவே, ஏதேன் தோட்டத்தை விட்டு வெளியேற்றப்பட்டனர். பட்ட பிறகு புத்தி தெளிந்ததால் தந்தையை நோக்கி அழ ஆரம்பித்தனர். உணவு குறித்த பயம் அவர்களைப் பெரிதும் வாட்டியது.

அப்போது கடவுள், “உனது முகம் வேர்வையால் நிறையும்படி நீ கஷ்டப்பட்டு உழைத்து உனது உணவை உண்பாய். உன்னை மண்ணால் உருவாக்கினேன். நீ இறக்கும்போது மீண்டும் மண்ணுக்கே திரும்புவாய்”என்றார். ஏதேன் தோட்டத்துக்கு வெளியே கடும் முட்செடிகள், பாறைகள் மற்றும் புதர்கள் சூழ்ந்த நிலமாய் பூமி இருந்ததைப் பார்த்தார்கள்.

ஒருபுறம் தனது வாழ்க்கைத் துணையான ஏவாளுடன் அன்பான வாழ்க்கையைத் தொடங்கினாலும் இன்னொரு பக்கம் நிலத்தைச் சீர்திருத்த ஆதாம் கடும் உழைப்பைத் தர வேண்டியிருந்தது. சீர்திருத்திய நிலத்தில் பயிர்த் தொழில் செய்யத் தொடங்கினான் ஆதாம். ஏவாள் கர்ப்பமுற்று முதல் குழந்தையைப் பெற்றாள். அவனுக்கு காயீன் என்று பெயர் வைத்தார்கள். இரண்டாவதாகவும் ஆண் மகவைப் பெற்றாள். அவனுக்கு ஆபேல் என்று பெயர் வைத்தார்கள். அதன் பிறகு அந்த ஆதிப் பெற்றோருக்குப் பெண் பிள்ளைகளும் பிறந்தார்கள். காயீனும் ஆபேலும் வளர்ந்து ஆதாமுக்குப் பயிர்த் தொழிலில் உறுதுணையாய் இருந்தார்கள். மூத்தவனாகிய காயீன் தன் தந்தையைப் போல் பயிர்களையும் பழங்களையும் விளைவித்தான். ஆனால் ஆபேல், அப்பாவுக்கும் அண்ணனுக்கும் தன் தாய்க்கும் உதவிக்கொண்டே ஆடுகளை மேய்த்து அவற்றை மந்தைகளாகப் பெருக்கினான். ஆடுகளைத் தன் குழந்தைகள் போல் பாவித்து அவற்றின்மீதும் அன்பு செலுத்தினான். எனவே அவை ஆபேலின் குரலுக்குச் செவிமடுத்து அவனைப் பின்தொடர்ந்தன. இவ்வாறாகத் தலைமைப் பண்பு மிக்கவனாக ஆபேல் உருவானான். இருவரும் தங்கள் பெற்றோர் மூலம் பரலோகத் தந்தையைப் பற்றித் தெரிந்துகொண்டு அவரை வணங்கிவந்தார்கள்.

பொறாமையும் முதல் கொலையும்

தம் தந்தை ஆதாமைப் போல் கடவுளாகிய யகோவா தேவனுக்குத் தங்கள் காணிக்கைகளைச் செலுத்த காயினும் ஆபேலும் முன்வந்தனர். காயீன் தான் பயிர் செய்த உணவுப் பொருட்களைக் கொண்டுவந்தான். ஆபேல் தன்னிடமிருந்த மிகச் சிறந்த ஒரு ஆட்டைக் கொண்டுவந்தான். ஆபேலையும் அவனுடைய காணிக்கையையும் பார்த்துக் கடவுள் சந்தோஷப்படுகிறார். ஆனால், காயீனுடைய காணிக்கைகளைப் பார்த்து அவர் சந்தோஷப்படவில்லை.

காயீனுடைய காணிக்கை, ஆபேலின் காணிக்கையைவிடக் குறைவாக இருந்தது காரணமல்ல. மாறாக, ஆபேல் நல்ல குணமுடையவனாக இருந்தான். அதனால் கடவுள் சந்தோஷத்துடன் அவனது காணிக்கையை ஏற்றுக்கொண்டார். காயீனோ கெட்ட புத்தி உள்ளவனாக இருந்தான். தனது தம்பியை நேசிக்கவில்லை. இதனால் காயீன் மீது கடவுள் வருத்தம் கொண்டிருந்தார். இதை உணராத காயீன் தன்னைவிட தன் தம்பி ஆபேலைக் கடவுள் அதிகமாக விரும்புவதாகக் கற்பனை செய்துகொண்டு பொறாமை உணர்ச்சியை வளர்த்துக்கொண்டான். கடவுள் தன் காணிக்கையை ஏற்காமல்போன தருணத்தில் தம்பியின் மீது மேலும் அவனுக்குக் கோபம் பெருகியது. அந்தக் கோபம் கொலைவெறியாக மாறியது.

ஒருநாள் ‘ தம்பி… வா, நாம் வயலுக்குப் போய்வருவோம்’ என்று அழைத்துச் சென்றான். அண்ணனின் வார்த்தைகளைத் தட்டாமல் கிளம்பினான் ஆபேல். அங்கே அண்ணன் சொன்னபடி வேலைகளைச் செய்துகொண்டிருந்த ஆபேலை. எதிர்பாராத தருணத்தில் தாக்கிக் கொன்றான் காயீன். பூமியில் முதல்முறையாய் மனித ரத்தம் சிந்தியது. தம்பியின் உடலிலிருந்து பெருகிய ரத்தத்தைக் கண்டு அச்சமடைந்த காயீன் அங்கிருந்து ஓடிப்போனான். தனது பெற்றோரின் முகத்தைப் பார்க்கவே அவனுக்குப் பிடிக்கவில்லை. குற்றவுணர்ச்சி அவனைச் சித்திரவதை செய்தது.

மறைக்க நினைத்த காயீன்

தான் செய்த கொலை கடவுளுக்குத் தெரியாது என்று நினைத்தான். அதனால் “உன் தம்பி ஆபேல் எங்கே?” எனக் கேட்ட கடவுளிடம், “எனக்குத் தெரியாது. என் தம்பியைக் காவல் செய்வது என் வேலையில்லை” என்று பொய் கூறி மறைத்தான். கடவுளோ, “ நீ என்ன காரியம் செய்தாய்? நீ உன் சகோதரனைக் கொன்றுவிட்டாய். பூமியிலிருந்து அவனது ரத்தம் என்னைக் கூப்பிடுகிறதே. உன் கைகளிலிருந்து வழியும் ஆபேலின் ரத்தத்தை வாங்கிக்கொண்ட இந்த பூமியில் நிலையில்லாமல் ஒவ்வொரு இடமாக நீ அலைந்துகொண்டிருப்பாய்” என்று தண்டித்தார்.

கடவுள் தனக்களித்த தண்டனையைக் கண்டு நடுங்கினான் காயீன். எனவே, கடவுளிடம் அவன் கெஞ்ச ஆரம்பித்தான்.

அப்போது மனமிரங்கிய கடவுள், “உன்னை யாரும் கொல்லாதவாறு உன்மேல் நான் ஒரு அடையாளம் வரைவேன்” என்று சொல்லிவிட்டு அவனை அந்த இடத்திலிருந்து அனுப்பினார். வேறு வழியின்றித் தன் குடும்பத்தை விட்டுப் பிரிந்து தூரமாகக் கிளம்பினான். அப்போது தன்னோடு வரும்படி தன் சகோதரிகளில் ஒருத்தியை அழைத்துச் சென்றான். பூமியில் அவர்கள் தேர்ந்துகொண்ட புதிய இடத்தில் தம்பதியாய் வாழத் தொடங்கினார்கள்.

காலப்போக்கில் காயீனுக்கும் அவன் மனைவிக்கும் பிள்ளைகள் பிறந்தனர். வெகு சீக்கிரத்திலேயே பூமியிலே மனிதர்கள் பெருகினார்கள். அவர்களில் கடவுள் தனக்கு உகந்த மனிதர்களைத் தேர்வுசெய்து அவர்களை மனித இனத்துக்கான வழிகாட்டிகளாய் வழிநடத்த ஆரம்பித்தார். அந்த மனிதர்களைப் பற்றி அடுத்த கதையில் பார்ப்போம்.

http://tamil.thehindu.com/society/spirituality/பைபிள்-கதைகள்-2-பூமியில்-சிந்திய-முதல்-ரத்தம்/article8474377.ece

Link to comment
Share on other sites

பைபிள் கதைகள் 3: பெருவெள்ளமும் நோவா கப்பலும்

 
nova_2822480f.jpg
 
 

பூமியை உருவாக்கிய கடவுள், அதை மேலும் அர்த்தமுள்ளதாக்க விரும்பினார். எனவே ஆதாம் ஏவாள் வழியாக மனித இனத்தைப் படைத்தார். ஆனால் சாத்தான் காட்டிய பேராசைக்கு அடிமையானதால் அவர்கள் கடவுளுக்குக் கீழ்ப்படியாமல் போனார்கள். இதனால் கடவுள் பூமியில் வழங்கிய சொர்க்கமாகிய ஏதேன் தோட்டத்தை விட்டு வெளியேற்றப்பட்டார்கள். கடும் உழைப்பைக் கொடுத்து உணவைத் தேடித் தங்கள் உயிரைக் காத்துக்கொள்ள வேண்டியிருந்தது. ஆதாம் ஏவாளின் மகன்களில் இளையவனான ஆபேலை அவனது அண்ணன் காயீன் பொறாமையால் கொலைசெய்துபோட்டான். பூமியில் வன்முறைக்கு வித்திட்ட காயீனை அவன் வாழ்ந்த இடத்திலிருந்து கடவுள் வெளியேறச் செய்தார்.

மனித இனத்தில் கலப்படம்

ஆதாமின் பிள்ளைகள் மூலமும் அவர்களது வழித்தோன்றல்கள் வழியாகவும் மனித இனம் பெருகி நின்றது. இதைச் சாத்தானால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. எனவே மனித இனத்தைக் குறுக்கு வழியில் வீழ்த்த நினைத்தான். எல்லோரையும் கெட்டவர்களாக்க அவன் முயற்சி செய்தான். வானுலகில் கடவுளின் ஊழியர்களாக இருந்த தேவதூதர்களிடம் ‘பூமியில் கடவுள் படைத்த மனித இனத்தில் அழகிய பெண்கள் இருக்கிறார்கள். அவர்களை மணந்துகொள்ளுங்கள்’ என்று ஆசை வார்த்தைகள் காட்டினான்.

பல தூதர்கள் அவனது தூண்டிலில் சிக்கி பூமிக்கு வந்தார்கள். பெண்களைக் கட்டாயப்படுத்தி மணந்து கொண்டார்கள். இதனால் மனித இனத்தில் கலப்படம் நிகழ்ந்தது. சாத்தானுக்கு அடிமையான தேவதூதர்களுக்கும் மனிதப் பெண்களுக்கும் பிறந்த பிள்ளைகள் முரட்டு மனிதர்களாகவும் அதிக உடல்பலம் கொண்டவர்களாகவும் சாகசங்கள் செய்பவர்களாகவும் இருந்தார்கள். இதனால் மற்றவர்களைப் பயமுறுத்தி அடக்கி ஒடுக்கினார்கள். மற்றவர்களைப் பயமுறுத்தி கெட்ட காரியங்களைச் செய்யும்படி வற்புறுத்தினார்கள். எதிர்த்தவர்களைக் கொன்று போட்டார்கள். இதனால் பூமி பாவப்பட மனிதர்களின் இருப்பிடமாய் மாறியது. இப்படிப்பட்ட நிலையிலும் மனித இனத்தில் பரலோகத் தந்தைக்கு கீழ்ப்படிந்து தெய்வபயத்துடன் ஒரேயொரு குடும்பம் மட்டும் வாழ்ந்து வந்தது. அது நோவாவின் குடும்பம்.

நோவாவைத் தேர்வு செய்த கடவுள்

ஆதாமின் வழித்தோன்றலான லாமேக்கிற்கு 182 வயதானபோது அவனுக்குப் பிறந்த மகனே நோவா. நோவாவுக்குப் பெயர் சூட்டியபோது “ நாம் விவசாயிகளாகப் பாடுபடுகிறோம். ஏனென்றால் தேவன் பூமியைச் சபித்திருக்கிறார். ஆனால் நோவா, நமக்கு இளைப்பாறுதலை அளிப்பான்” என்று லாமேக் கூறினார். அது உண்மையாயிற்று. நோவா தன் தந்தையைப்போலவே நேர்மையான மனிதனாக இருந்தார். எனவே நோவாவைக் கடவுள் தேர்ந்துகொண்டார்.

நோவாவுக்கு 500 வயதானபின் அவருக்கு சேம், காம், யாப்பேத் ஆகிய மகன்கள் பிறந்தனர். நோவானின் குடும்பம் கடவுளுக்கு உகந்த குடும்பமாக வாழ்ந்துவந்தது. நோவா குடும்பத்தைத் தவிர மொத்த மனித இனமும் சாத்தான் காட்டிய தீய வழியில் வாழ்ந்துகொண்டிருந்தது. எங்கும் வன்முறை பரவியிருந்தது. மக்கள் கொடூரமானவர்களாக மாறியிருந்தனர். இதனால் மனிதர்களைப் பூமியில் படைத்ததற்காகக் கடவுள் மிகவும் வருத்தப்பட்டார். தீய மனிதக் கூட்டத்தையும், மிருகங்கள், ஊர்வன, பறப்பன ஆகியவற்றையும் அழிக்க முடிவு செய்தார்.

எனவே பரலோகத் தந்தை நோவாவை அழைத்தார். “கொப்பேர் மரத்தைப் பயன்படுத்தி மூன்று தளங்கள் கொண்ட ஒரு பெரிய கப்பலைச் செய். கப்பல் 450 அடி நீளமும், 75 அடி அகலமும், 45 அடி உயரமும் கொண்டதாக இருக்கட்டும். அதில் பல அறைகளை ஏற்படுத்து. உள்ளும் புறம்புமாகத் தார் பூசி செம்மைப்படுத்து. தேவையான உணவைக் கப்பலில் சேமித்து வை. கவனமாகக் கேள். நான் பூமியில் ஒரு பெரிய வெள்ளப் பெருக்கை ஏற்படுத்தி வானத்துக்குக் கீழேயுள்ள அனைத்து உயிர்களையும் அழிப்பேன். எனவே நீயும் உன் மனைவியும் உன் மகன்களும், மகன்களின் மனைவிமார்களும் கப்பலுக்குள் போய்விடுங்கள். பூமியிலுள்ள அனைத்து உயிர்களிலும் ஆண், பெண் என இணையாகத் தேர்ந்தெடுத்துக்கொள். கப்பலில் அவை உயிரோடு இருக்கட்டும்” என்றார்.

நோவா கடவுள் சொன்னபடியே எல்லாவற்றையும் சரியாகச் செய்து முடித்தான். கடவுள் சொன்னபடியே விலங்குகள், பறவைகள் அனைத்தையும் கப்பலில் ஏற்றித் தன் குடும்பத்துடன் கப்பலில் ஏறி அமர்ந்துகொண்டான்.

பெருவெள்ளமும் புதிய வாழ்க்கையும்

கடவுள் பெருமழையை வரவழைத்தார். 40 இரவுகளும் 40 பகல் பொழுதுகளுமாகத் தொடர்ந்து மழை கொட்டித்தீர்த்தது. மழையைத் தொடர்ந்து வெள்ளம் பெருகியது. அவ்வெள்ளம் கப்பலைத் தரையிலிருந்து மேல் நோக்கிக் கிளப்பியது. தீய மனிதர்கள் உட்பட உலகில் உள்ள அனைத்து உயிர்களும் மடிந்தன. நோவாவும் அவனது குடும்பத்தினரும் உயிர் பிழைத்தனர். வெள்ளமானது தொடர்ந்து 150 நாட்கள் பூமியில் பரவியிருந்தது. பிறகு கடவுள் தண்ணீரை வற்றச் செய்து, நோவாவின் கப்பலை அரராத் என்ற உயரமான மலையின் மீது தரை தட்டச் செய்தார். நோவா கப்பலின் ஜன்னலைத் திறந்து, ஒரு புறாவை வெளியே அனுப்பினார். ஆனால் தண்ணீர் இன்னும் பூமியில் பரவியிருந்தது. எனவே புறா மீண்டும் கப்பலுக்கே திரும்பி வந்தது.

மேலும் பல நாட்களுக்குப் பிறகு நோவா மீண்டும் புறாவை அனுப்பினார். அன்று மாலையில் திரும்பி வந்த அப்புறா தனது வாயில் ஒலிவ மரத்தின் துளிர்த்த சிறு கிளை ஒன்றை கவ்விப்பிடித்தபடி வந்தது. இதன் மூலம் பூமியில் தண்ணீர் வற்றிவிட்டது என்பதை அறிந்துக்கொண்டார். மேலும் பல நாட்கள் கழித்து புறாவை வெளியே அனுப்பியபோது. அது திரும்ப வரவே இல்லை. எனவே அதன் ஜோடிப் புறாவையும் மற்ற விலங்குகள் பறவைகளையும் பூமியில் இறங்க நோவா அனுமதித்தார். அதுவே புதுப்பிக்கப்பட்ட பூமியில் முதல் ஆண்டின் முதல் மாதத்தின் முதல் நாளாக ஆயிற்று.

உடன்படிக்கையின் அடையாளம்

தனக்கு கீழ்ப்படிந்து நடந்த நோவாவுடனும் அவனது வாரிசுகள் மற்றும் மீட்கப்பட்ட உயிர்களோடும் கடவுள் ஒரு உடன்படிக்கையைச் செய்துகொண்டார். “ பூமியை இனியொரு முறை நான் வெள்ளப் பெருக்கால் அழிக்க மாட்டேன். இதற்கு அடையாளச் சின்னமாக மேகங்களுக்கு இடையே வானவில்லை உருவாக்கியிருக்கிறேன். எனக்கும் பூமிக்குமான உடன்படிக்கைக்கு இதுவே அத்தாட்சி” என்றார். அப்போது பூமியில் முதல் வானவில் தோன்றியது.

http://tamil.thehindu.com/society/spirituality/பைபிள்-கதைகள்-3-பெருவெள்ளமும்-நோவா-கப்பலும்/article8503521.ece

Link to comment
Share on other sites

பைபிள் கதைகள் 4: தனிமனித வழிபாடும் சிலை வழிபாடும்

 

 
bible_2831704f.jpg
 
 

பெருவெள்ளத்திலிருந்து பரலோகத் தந்தையாகிய கடவுள் தன்னையும் தம் குடும்பத்தார் அனைவரையும் உயிர்களையும் காப்பாற்றியது குறித்து நோவா நன்றியுடையவராக இருந்தார். கடவுள் மீது அவருக்கு இருந்த விசுவாசம் பெருகியது. கடவுளுக்கு கீழ்ப்படிந்து அவருக்கு நன்றி செலுத்தும் விதமாக தம் விளைச்சலிலிருந்தும் மந்தைகளிலிருந்தும் சிறந்ததை கடவுளுக்குப் பலியாகச்செலுத்தி நன்றி தெரிவிக்கும் வழிபாட்டை நோவா கடைப்பிடித்து வந்தார். அதையே தமது பிள்ளைகளுக்கும் கற்றுத்தந்தார். இவ்வாறாகப் பெருவெள்ளத்துக்குப்பின் நோவா 350 ஆண்டுகள் உயிர் வாழ்ந்தார் என்று விவிலியம் கூறுகிறது.

தனிமனித வழிபாடு

நோவாவுக்கு சேம், காம், யாப்பேத் ஆகிய மூன்று மகன்கள் இருந்தனர். இவர்களது சந்ததியினர் வழிவழியாகப் பெருகி பெரிய மக்கள் கூட்டமாக மாறினர். மக்கள் கிழக்கே இருந்து பயணம் செய்து சிநெயார் நாட்டில் ஒரு பெரிய நதிக்கரைச் சமவெளியைக் கண்டு அங்கேயே தங்கினர். மக்கள் அனைவரும் ஒரே மொழியைப் பேசினர். நோவாவின் சந்ததியில் வீரமும், தலைமைப் பண்பும் மிக்கவனாக வந்தவன் நிம்ரோது. இவன் பயிர்த்தொழில் செய்வதை விடுத்து, தனது உடல்பலத்தால் மிருகங்களை வேட்டையாடினான். தன்னை எதிர்த்து நின்ற சக மனிதர்களையும் கொன்றொழித்தான்.

இதனால் உயிருக்குப் பயந்து நிம்ரோதுவைக் கண்டு மக்கள் தலை வணங்கினர். கடவுளாகிய பரலோகத் தந்தைக்கு தலை வணங்கிய மக்கள், முதல் முறையாக பூமியில் சக மனிதன் ஒருவனுக்கு வணக்கம் செலுத்தினர். பூமியில் தனிமனித வழிபாடு நிம்ரோதுவிலிருந்து தொடங்கியது. தனக்குப் பயந்து மற்றவர்கள் தன்னை வணங்குவதைக் கண்டு கர்வம் கொண்ட நிம்ரோது தன்னை ஒரு அரசனாக அறிவித்துக்கொண்டான். கடவுளோ மனிதர்களோ தேர்ந்தெடுக்காமல் தனக்குத்தானே முடிசூட்டிக்கொண்ட முதல் மனிதனாகிய நிம்ரோதுவின் தான்தோன்றித்தனம் கடவுளுக்குப் பிடிக்கவில்லை.

கடவுளுக்கே சவால்

நிம்ரோது தன்னை அரசனாக அறிவித்துக்கொண்டதோடு நிற்கவில்லை. தான் அடிமைப்படுத்திய மக்கள் அனைவரையும் தனது குடையின் கீழ் ஆட்சிசெய்ய ஒரு நகரத்தையும் அதில் ஒரு பெரிய கோபுரத்தையும் கட்ட முடிவு செய்தான். இதன்மூலம் தனது குடிமக்கள் பூமியில் வேறு எங்கும் சிதறிப்போய்விடாமல் தனது ஆளுகையில் இருக்க அது வழிவகை செய்யும் என்று திட்டமிட்டான். இதனால் தனது மக்களிடம் “அனைவரும் வாருங்கள்! நமக்காக ஒரு நகரத்தைக் கட்டுவோம்! அந்த நகரத்தின் நடுவே வானத்தை முட்டும் அளவுக்கு ஓர் உயரமான கோபுரத்தையும் கட்டுவோம்; அப்போது நமக்குப் பெயரையும் புகழையும் கொண்டுவரும்.” என்று ஆசைகாட்டினான்.

புகழ் என்பது கடவுளுக்கு மட்டுமே உரியது என்று அதுவரை நினைத்திருந்த மக்கள், ஒரு செயலைச் செய்வதன் மூலம் மனிதர்களாகிய தங்களுக்கும் அது வந்து சேரும் என்று நம்பத்தொடங்கினார்கள். நிம்ரோதுவால் மனிதர்களின் மனங்களில் சுயநல அழுக்கு படியத்தொடங்கியது. தான் படைத்த மனித இனம் தனக்கே சவால் விடுவதாக நினைத்தார் கடவுள். இதனால் கெட்ட அரசனாகிய நிம்ரோதுவும் அவனது மக்களுக்கும் தற்பெருமைக்காக கோபுரம் கட்டுவது கடவுளாகிய யகோவா தேவனுக்குப் பிடிக்கவில்லை. ஏனெனில் மக்கள் பூமி முழுவதும் பரவிச் சென்று வாழ வேண்டும் என்று அவர் விரும்பினார். அதற்காகக் கடவுள் ஒரு அற்புதத்தை நிகழ்த்தினார்.

பலமொழி பேசிய மக்கள்

நோவாவின் வழித்தோன்றல்களான மக்கள் கூட்டத்தை திடீரென பலமொழிகள் பேசும்படியான அற்புதத்தைக் கடவுள் நிகழ்த்தினார். ஒரேமொழியில் பேசிக்கொண்டிருந்த நிம்ரோதுவின் கீழ் வாழ்ந்த மக்கள் திடீரென வேறு வேறு மொழிகள் பேசியதால் ஒருவர் சொல்வது மற்றொருவருக்குப் புரியாமல் எல்லோரும் குழம்பிப் போனார்கள். இதனால்தான் அந்த நகரத்துக்கு பாபேல் என்று பெயர் வந்தது. அதுதான் பின்னாட்களில் பாபிலோன் என்று பெயர் பெற்றது என்கிறது விவிலியம். பபேல் என்பதன் பொருள் ‘குழப்பம்’ என்பதாகும். இந்த மொழிக் குழப்பத்தால் திகைத்த மக்கள் அந்த நகரைவிட்டு வெளியேற ஆரம்பித்தனர். அந்தந்த மொழி பேசியவர்கள் ஒன்றிணைந்து தனித்தனி இனக்குழுக்குழுக்களாக மாறிய அவர்கள் பூமியின் மற்ற பகுதிகளுக்கு புலம்பெயர்ந்து சென்று குடியேறி வாழத்தொடங்கினார்கள். எனினும் நிம்ரோதுபேசிய மொழியைப் பேசிய மக்கள் மட்டும் அவனோடு அங்கேயே தங்கினார்கள். மக்கள் வெளியேறியதால் கோபுரம் கட்டும் பணி அப்படியே நின்றுபோனது.

ஊரில் நகரில் ஒருவர்

பபேல் நகரத்திலிருந்து மொழிக் குழப்பத்தால் வெளியேறிய மக்கள் சென்று குடியேறிய இடங்களில் ஒன்றுதான் ‘ஊர்’ என்ற நகரம். மிகவும் அழகிய நகரமாக உருப்பெற்ற அந்த ஊரில் வாழ்ந்த மக்கள், கடவுளாகிய பரலோகத் தந்தையை மறந்துபோனார்கள். அவர்கள் விதவிதமான சிலைகளை கடவுள் என்று நினைத்து வணங்க ஆரம்பித்தார்கள். தன்னை மறந்துபோன மக்கள் மீது கடவுள் இரக்கம் கொண்டார். அவர்களை மீட்க, இந்த ஊரில் தனக்கென ஒரு பக்திமிக்க ஒரு மனிதனைக் கடவுள் தேர்ந்துகொண்டார். அவர்தான்

ஆபிரகாம். இவர் ஊர் நகரத்தில் குடும்பத்துடன் வாழ்ந்து வந்தார். அவரிடம் கடவுள் பேசினார். என்ன பேசியிருப்பார்? அடுத்தக் கதையில் பார்ப்போம்.

http://tamil.thehindu.com/society/spirituality/பைபிள்-கதைகள்-4-தனிமனித-வழிபாடும்-சிலை-வழிபாடும்/article8531873.ece

Link to comment
Share on other sites

பைபிள் கதைகள் 5: மனிதனைப் பலி கேட்ட கடவுள்!

 

 
7_2840708h.jpg
 

பெருவெள்ளத்துக்குப் பிறகு பூமியில் பெருகி வாழ்ந்த மக்கள் அனைவரும் ஒரே மொழியைப் பேசினர். அவர்கள் மீது அதிகாரம் செலுத்திய நிம்ரோது, தன்னைத் தானே அரசனாக அறிவித்துக்கொண்டான். மக்கள் அவனுக்கு அடிபணிந்து நடந்தனர். அவனையே ரட்சகனாக ஏற்றதால் கடவுளை மறந்தனர். நிம்ரோது ஒரு நகரை உருவாக்கி, அதன் நடுவே விண்ணை முட்டும் கோபுரம் கட்டுப்படி தனது மக்களைக் கட்டாயப்படுத்தினான். இதனால் நமக்குப் புகழ் வந்து சேரும் என்று ஆசை காட்டினான். நிம்ரோதுவின் சுயநலப் பேச்சைக் கேட்டு, மக்கள் அனைவரும் புகழ் விரும்பிகளாக ஒரே இடத்தில் தேங்கிப்போவது கடவுளாகிய யொகேவா தேவனுக்குப் பிடிக்கவில்லை.

எனவே அந்த நகரில் வாழ்ந்த மக்களை திடீரென பல மொழிகள் பேசும்படி கடவுள் அற்புதம் ஒன்றை நிகழச் செய்தார். இதனால் மொழிக் குழப்பம் ஏற்பட்டது. எனவே அவரவர்க்குப் புரிந்த புதிய மொழிகள் பேசி மக்கள் பல இனக் குழுக்களாகப் பிரிந்து பூமியின் வேறு பகுதிகளுக்குச் சென்று குடியேறினர். அப்படி அவர்கள் சென்று குடியேறிய ஒன்றாக ‘ஊர்’ என்ற நகரம் விளங்கியது. ஊர் நகரிலும் மக்கள் கடவுளை மறந்து விதவிதமான சிலைகளை வழிபட ஆரம்பித்தனர். இதனால் அந்த ஊரில் வசித்துவந்த ஆபிரகாமைக் கடவுள் தனக்காகத் தேர்வு செய்தார்.

சொந்த ஊரை விட்டுச் செல்

ஆபிரகாம் தனிமையில் இருக்கும்போது அவரிடம் கடவுள் பேசினார். “நீ உனது ஜனங்களையும், நாட்டையும் விட்டு வெளியேறி நான் காட்டும் வேறொரு நாட்டுக்குப் போ. உன் மூலமாக நான் ஒரு பெரிய தேசத்தை உருவாக்குவேன். நான் உன்னை ஆசீர்வதிப்பேன். உனது பெயரைப் புகழ்பெறச் செய்வேன். மக்கள் மற்றவர்களை ஆசீர்வதிக்க உன் பெயரைப் பயன்படுத்துவார்கள். நான் உன் மூலம் பூமியிலுள்ள அனைத்து இன மக்களையும் ஆசீர்வதிப்பேன். அவர்கள் உன்னைத் தகப்பன் என்று கொண்டாடுவார்கள்” என்றார்.

புதிதாக நாம் குடியேறி வாழச் செல்லும் ஊர் எத்தனை சிறந்த ஊராக இருந்தாலும் சொந்த ஊரில் வாழ்வதுபோன்ற நிம்மதி எங்கும் கிடைக்காது. ஆனால் கடவுளுக்குக் கீழ்ப்படிந்த மனிதரான ஆபிரகாம், ஊர் நகரில் தனக்கிருந்த வீடு, சொத்துக்கள், அமைதியான வாழ்க்கை ஆகிய அனைத்தையும் விட்டுவிட்டுத் தன் தந்தை தேராகு, மனைவி சாராள், அண்ணன் மகன் லோத்து ஆகியோருடன் கிளம்பினார். அவர்களோடு இன்னும் சிலரும் இணைந்துகொண்டனர். அவர்கள் அனைவரும் ஊர் நகரிலிருந்து வெகு தொலைவில் இருந்த ஆரான் என்ற நகருக்கு வந்து சேர்ந்தார்கள். அங்கே அபிரகாமின் தந்தையாகிய தேராகு இறந்துபோனார். ஆரானில் சில காலம் வசித்த பின்னர், அந்த நகரையும் விட்டு வெளியேறிய ஆபிரகாம், தன் குடும்பத்தாருடன் கானான் என்ற தேசத்தை வந்தடைந்தார்.

அங்கே கடவுள் ஆபிரகாமிடம் மீண்டும் பேசினார். “ நீ வந்தடைந்திருக்கும் இந்தத் நாட்டையே நான் உன் பிள்ளைகளுக்குக் கொடுப்பேன்” என்றார். கடவுள் கூறியபடியே ஆபிரகாமை செல்வந்தர் ஆக்கினார். கால்நடைகள் மேய்ப்பதையே தொழிலாகக் கொண்ட ஆபிரகாமின் செம்மறியாட்டு மந்தையைப் பெருகச் செய்தார். ஆடுகள் பெருகப் பெருக நூற்றுக்கும் அதிகமான வேலைக்காரர்களைப் பணிக்கு அமர்த்தினார்.

இப்படியாகச் செல்வாக்கு மிக்க மனிதராக மாறிய ஆபிரகாமுக்கு எல்லாம் இருந்தும் குழந்தைச் செல்வம் இல்லையே என்ற கவலை முதுமை கூடக்கூட வாட்டியது. தானொரு மலடி என்பதில் சாராள் மிகுந்த துயரம் அடைந்தாள். அவர்களது துயரத்தைக் கண்ட கடவுள் ஆபிரகாமை அழைத்தார். “வானத்தில் நிறைந்திருக்கும் ஏராளமான நட்சத்திரங்களைப் பார். அவற்றை உன்னால் எண்ண முடியாது, வருங்காலத்தில் உன் சந்ததியும் இவ்வாறே இருக்கும். உனக்கொரு மகன் பிறப்பான். அவனே உனக்குரியவற்றைப் பெற்றுக்கொள்வான்” என்று வாக்களித்தார்.

ஆனால் ஆபிரகாம் 100 வயதையும் சாராள் 90 வயதையும் எட்டியிருந்தனர். இருப்பினும் இத்தனை முதுமையில் மகப்பேறு எப்படிச் சாத்தியம் என்று அந்தத் தம்பதியர் அவநம்பிக்கை கொள்ளவில்லை.

கடவுள் வாக்குக் கொடுத்தது போலவே அவர்களுக்கு ஓர் ஆண் குழந்தை பிறந்தான். அவனுக்கு ஈசாக்கு எனப் பெயரிட்டனர். ஆபிரகாமும் சாராளும் மிகுந்த கண்ணும் கருத்துமாக அவனைக் கடவுளுக்குள் விசுவாசம் மிக்கவனாக வளர்த்து வந்தனர்.

மகனைக் கேட்ட கடவுள்

ஈசாக்கு பெரியவனாக வளர்ந்து நின்றபோது ஆபிரகாமின் விசுவாசத்தைக் கடவுள் சோதிக்க விரும்பினார். ஆபிரகாமை அழைத்த கடவுள், “உன்னுடைய அன்புக்குரிய ஒரே மகனான ஈசாக்கை அழைத்துக்கொண்டு மோரியா தேசத்தில் நான் உனக்கு அடையாளம் காட்டும் மலைப் பகுதிக்குப் போ. அங்கே உன் மகனைக் கொன்று எனக்குத் தகன பலியாகக் கொடு” என்றார்.

கடவுள் இப்படிக் கேட்டதும் மகன் மீதுகொண்ட பாசத்தால் ஆபிரகாம் மனதுக்குள் வேதனையால் துடித்தார். இருப்பினும் கடவுளின் விருப்பத்தை நிறைவேற்றத் தயாரானார். மகனை அழைத்துக்கொண்டு மூன்று நாள் பயணப்பட்டு, கடவுள் குறிப்பிட்ட இடத்தை அடைந்தார். அந்த மலையில் ஒரு பலி பீடத்தைத் தயார் செய்து விறகுகளை அடுக்கினார். மகன் ஈசாக்கை பலி பீடத்தில் படுக்க வைத்து அவனைக் கட்டிப்போட்டார். பிறகு பலியை நிறைவேற்றத் தன் கத்தியை வெளியே எடுத்து அவனை வெட்டுவதற்குத் தயாரானார்.

அந்த மின்னல் நேரத்தில் கடவுள் தனது தூதன் வழியாக ஆபிரகாமைத் தடுத்தார். “ஆபிரகாமே! ஆபிரகாமே! உனது மகனைக் கொல்ல வேண்டாம். அவனை எவ்விதத்திலும் காயப்படுத்த வேண்டாம். நீ என்னை மதிப்பவன் என்பதையும், எந்தச் சூழ்நிலையிலும் எனக்குக் கீழ்ப்படிபவன் என்பதையும் தெரிந்துகொண்டேன். நீ எனக்காக உன் ஒரே ஒரு மகனையும் கொல்லத் தயாராக இருக்கிறாய் என்பதையும் தெரிந்துகொண்டேன்” என்று கடவுள் கூறினார்.

கடவுள் மீது ஆபிரகாமுக்கு இருந்த விசுவாசமும் கீழ்ப்படிதலும் அவர் ‘கடவுளின் நண்பர்’ என்று அழைக்கப்படக் காரணமாயிற்று. அப்படிப்பட்ட ஆபிரகாமைக் கொண்டு கடவுள் அடுத்து என்ன செய்தார் என்று அடுத்த வாரம் பார்ப்போம்.

http://tamil.thehindu.com/society/spirituality/பைபிள்-கதைகள்-5-மனிதனைப்-பலி-கேட்ட-கடவுள்/article8560386.ece

Link to comment
Share on other sites

பைபிள் கதைகள் 6: அழிக்கப்பட்ட நகரங்கள்!

 

 
2_2849641f.jpg
 
 
 

உலகின் முதல் மனிதனாகிய ஆதாமிடம் கடவுளாகிய யகோவா நேரடியாகப் பேசி வந்ததுபோலவே ‘விசுவாசத்தின் தந்தை’ என்று புகழப்படும் ஆபிரகாமிடமும் கடவுள் அடிக்கடி பேசிவந்தார். ஆபிரகாமின் மகனாகிய ஈசாக்கைத் தனக்குப் பலியாகக் கேட்டு அவரது விசுவாசத்தைக் கடவுள் சோதித்தார். கொஞ்சமும் யோசிக்காமல் தனது மகனை பலிமேடையில் ஏற்றி, அவனைக் கொன்று பலி கொடுக்கக் கத்தியை உருவியபோது, கடவுள் தடுத்தார். இதனால் ஆபிரகாம் கடவுளிடமிருந்து வாழ்த்துகளைப் பெற்றுக்கொள்ளும் மனிதனாக இருந்தார்.

கடவுள் வழிகாட்டலின்படி கானான் நாட்டில் தனது அண்ணன் மகன் லோத்துவுடன் வசித்து வந்த அவருக்குக் கால்நடை வளர்ப்பே முக்கியத் தொழிலாக இருந்தது. ஆபிரகாம், லோத்து இருவருக்குமே கால்நடைச் செல்வங்கள் பல்கிப் பெருகின. வேலைக்காரர்களின் எண்ணிக்கையும் உயர்ந்தது.

நல்ல நோக்கத்துக்காகப் பிரிவு

இதனால் இருவரது கால்நடைக் கூட்டங்களும் வயிறார உண்ணும் அளவுக்குக் கானானின் இருந்த மேய்ச்சல் நிலம் போதுமானதாக இல்லை. மேலும் ஆபிரகாம் - லோத்து இருவரிடமும் கானானியர்களும் பெரிசியரும் மேய்ப்பர்களாக வேலையில் இருந்தனர். இதனால் இனம்சார்ந்து இவர்கள் தங்களுக்குள் கைகலப்பில் ஈடுபட்டனர். இதைக்கண்டு ஆபிரகாம் - லோத்து இருவருமே மனம் வருந்தினர்.

ஆபிராம் லோத்துவிடம், “சகோதரா... நம்மிருவருக்கும் இடையில் எவ்வித வாக்குவாதமும் வேண்டாம். உனது ஆட்களுக்கும் எனது ஆட்களுக்கும் இடையில் விரோதம் உருவாக நாமே காரணமாக இருக்க வேண்டாம். நல்ல நோக்கத்துக்காக நாம் பிரிந்து செல்வோம். உனக்கு விருப்பமான எந்த இடத்தையும் நீ தேர்ந்தெடுத்துக்கொள். நீ இடது பக்கமாகப் போனால் நான் வலது பக்கமாகப் போகிறேன். நீ வலது பக்கமாகப் போனால் நான் இடது பக்கமாகப் போகிறேன்” என்றார். லோத்து கண்ணீர் மல்க இதை ஏற்றுக்கொண்டார்.

யோர்தான் நதி பாய்ந்து வளங்கொழித்த சமவெளியைத் தனக்காகக் தேர்ந்தெடுத்தார் லோத்து. தனது சுற்றமும் கால்நடைகளும் சூழ அங்கே குடியேறினார். ஆபிரகாம் கானான் நாட்டிலேயே தங்கினார். காலப்போக்கில் யோர்தான் சமவெளியின் தெற்கு நோக்கி நகர்ந்த லோத்து, அங்கிருந்த சோதோம் நகரில் நிரந்தரமாகக் குடியேறினார். அதன் அருகிலேயே மற்றொரு பள்ளத்தாக்கு நகரமாக கொமோரா விளங்கியது.

காலம் உருண்டோடியது. அந்த இரட்டை நகரங்களில் வாழ்ந்த மக்கள் மிக இழிவான வாழ்வை வாழத் தொடங்கினார்கள். பாலியல் ஒழுக்கக் கேடுகள் மலிந்துபோயின. ஆபிரகாமைப் போலவே கடவுளுக்கு உகந்த மனிதராக வாழ்ந்துவந்த லோத்து இதைக் கண்டு மிகுந்த மன வேதனை அடைந்தார்.

தப்பிச் சென்ற குடும்பம்

பாவத்தின் உற்பத்திக் கேந்திரங்களாக மாறிவிட்டிருந்த சோதோம் கொமோரா ஆகிய நகரங்களை அழிக்க, கடவுள் முடிவுசெய்தார். எனவே இரண்டு தேவதூதர்களை லோத்துவிடம் அனுப்பி, சோதோம் நகரை விட்டுக் குடும்பத்துடன் வெளியேறும்படி எச்சரித்தார். கடவுளின் கருணையில் நெகிழ்ந்த லோத்து, அங்கிருந்து வெளியேறி உயிர் பிழைத்துக்கொள்ள நினைத்தாலும் தனது மனைவியால் காலம் தாழ்த்திக்கொண்டே இருந்தார்.

இத்தனை ஆண்டுகள் வாழ்ந்த நகரில் தனக்குச் சேர்ந்த செல்வங்கள், வீடு என அனைத்தையும் துறந்து செல்லவேண்டுமே என லோத்துவின் மனைவி கலங்கினாள். தேவ தூதர்கள், லோத்து, அவரது மனைவி, மகள்கள் ஆகியோரின் கைகளைப் பிடித்து இழுத்துக்கொண்டுபோய் சோதோம் நகரத்துக்கு வெளியே விட்டுவிட்டுக் கிளம்பிப் போனார்கள். போகும்போது “இங்கிருந்து ஓடிப்போங்கள்; எக்காரணம் கொண்டும் திரும்பிப் பார்த்துவிடாதீர்கள்” என்று எச்சரித்துவிட்டுச் சென்றார்கள்.

கடவுளுக்குக் கீழ்ப்படிந்து லோத்துவும் அவருடைய மகள்களும் சோதோமை விட்டு ஓட்டமும் நடையுமாகத் திரும்பிப் பார்க்காமல் வெளியேறினார்கள். பின்னால் வந்துகொண்டிருந்த லோத்துவின் மனைவியோ சோதோமை விட்டுச் சிறிது தூரம் வந்ததும், ஏக்கத்தோடு திரும்பிப் பார்த்தாள். கடவுளுக்குக் கீழ்ப்படியாமல் போன அந்தக் கணமே அவள் உப்புத் தூணாக மாறினாள்.

இரவு முழுவதும் நடந்து, சோதோம் நகரை நீங்கி, சோவார் என்ற சிறிய நகரமொன்றின் எல்லைக்குள் லோத்துவும் அவரது மகள்களும் நுழைந்தபோது சூரியன் உதயமாகியிருந்தது. அப்போது கடவுளாகிய யகோவா, வானத்திலிருந்து நெருப்பையும் கந்தகத்தையும் சோதோம் - கொமோரா ஆகிய நகரங்களின் மேல் விழுமாறு செய்தார். அவற்றின் முழு சமவெளியையும், அங்கிருந்த மரங்கள், செடிகொடிகள், கால்நடைகள், மக்கள் ஆகியோரையும் முற்றாக அழித்துவிட்டார்.

இவ்வாறு பாவத்தில் ஊறித் திளைத்த மக்களை அவர்கள் வாழ்ந்த நகரங்களோடு அழித்த கடவுள், கீழ்ப்படியாமல் போன லோத்துவின் மனைவியை ஊப்புத் தூண் ஆக்கினார். கீழ்ப்படிந்து நடந்த லோத்துவையும் அவரது மகள்களையும் காப்பாற்றினார்.

http://tamil.thehindu.com/society/spirituality/பைபிள்-கதைகள்-6-அழிக்கப்பட்ட-நகரங்கள்/article8589218.ece

Link to comment
Share on other sites

பைபிள் கதைகள் 7: சந்தோஷமாய் மாறிய துக்கம்!

 
1_2859213f.jpg
 
 
 

நதித் தீரத்தின் தெற்குப்பகுதியில் இருந்த சோதோம் நகரில் குடியேறி வாழ்ந்துவந்தார் ஆபிரகாமின் அண்ணன் மகனாகிய லோத்து. சோதோம் நகரின் அருகிலேயே கொமோரா நகரமும் இருந்தது. இந்த இரு நகரங்களிலும் சிலைகளை வணங்கி வந்த மக்கள், பாலியல் குற்றங்கள் உட்பட பெரும் பாவங்களைச் செய்து மிக இழிவான வாழ்க்கை வாழ்ந்துகொண்டிருந்தார்கள். இதனால் பரலோகத் தந்தையாகிய யகோவா, லோத்துவையும் அவனது குடும்பத்தாரையும் சோதோம் நகரிலிருந்து வெளியேறச் செய்துவிட்டு, அந்த நகரங்களை முற்றாக அழித்தார்.

யோர்தான்

கானான் நாட்டில் வசித்துவந்த ஆபிரகாம் தனது சகோதரனாகிய லோத்து, சாவிலிருந்து தப்பித்துக்கொண்டதை அறிந்து நிம்மதியடைந்தார். ஆனால் கானான் நகரமும் கடவுளின் சாபத்துக்கு ஆளாகுமோ என்று அஞ்சினார். காரணம் உலகையும் மனித இனத்தையும் படைத்த உண்மைக் கடவுள், தன்னுடன் பேசிக்கொண்டிருப்பதையும் வாழும் முறைமையையும் வாழ்க்கை நெறிகளையும் கொடைகளாக தன் வழியாக மனித இனத்துக்குத் தருவதையும் அதைப் பெற்று தீங்கற்ற வாழ்வை வாழ்ந்து வருவதையும் கானானியர்கள் நன்கு அறிந்திருந்தார்கள். அப்படியிருந்தும் அவர்கள் பொய்க் கடவுளர்களையே சிலைகளாக வணங்கி வந்தனர். இதனால் தனது மகன் ஈசாக்கு எக்காரணம்கொண்டும் கானான் பெண்ணொருத்தியை மணந்துகொள்ளக்கூடாது என்பதில் உறுதியாக இருந்தார் ஆபிரகாம். எனவே தனது மந்தைகளையும் சொத்துக்களையும் நிர்வகித்துவந்த தனது மூத்த வேலைக்காரரை அழைத்தார். தனது தந்தையின் தேசமும் தற்போது தமது உறவினர்கள் வசித்துவரும் நகரமுமாகிய ஆரானுச்சென்று தன் மகனுக்குப் பொருத்தமான மணமகளைத் தேடி அழைத்து வரும்படி அவரை அனுப்பினார்.

வேலைக்காரரின் பிரார்த்தனை

வயோதிகனாய் இருந்த எஜமானனுக்கு மிகவும் விசுவாசமாய் இருந்த தலைமை வேலைக்காரரும் அவரது விருப்பத்தை ஏற்று அதிகாலையில் புறப்பட்டார். தொலைதூரத்திலிருந்த ஆரான் நகரத்தைச் சென்றடையத் தேவையான உணவு, மணமகள் வீட்டாருக்கான பரிசுப்பொருட்கள் ஆகியவற்றை பத்து ஒட்டகங்களில் ஏற்றிக்கொண்டு புறப்பட்டான். நீண்ட பயணத்துக்குப்பின்பு ஆரான் நகரின் எல்லையை அடைந்தான். அது மாலை நேரம். அந்த இடத்தில் ஒரு சமுதாயக் கிணறு இருந்தது. தங்கள் வீட்டுத்தேவையான குடிநீரை சேகரித்துச் செல்ல மாலைநேரத்தில் இளம்பெண்கள் கிணற்றடிக்கு வருவது சமூக மரபாக இருந்தது. எனவே இந்தக் கிணற்றுக்கு நீர் எடுத்துச் செல்லவரும் ஆரான் நகரின் பெண்களில் ஒருத்தியை ஈசாக்கிற்கும் மணமகளாகத் தேர்ந்தெடுக்க தனக்கு வழிகாட்டும்படி கடவுளாகிய யகோவாவிடம் அந்த வேலைக்காரர் பிரார்த்தனை செய்தார். “ கடவுளே...எனக்கும் என்னுடைய இந்த ஒட்டகங்களுக்கும் இரங்கி, இங்குவரும் எந்தப் பெண் தண்ணீர் இறைத்துத் தருகிறாளோ... அவளே ஈசாக்கிற்கு ஏற்ற மணமகளாக நீர் தேர்ந்தெடுத்து இருக்கிறீர் என்று அறிந்துகொள்வேன்” என்று பிரார்த்தனை செய்தார். அவரது பிரார்த்தனை கடவுள் கேட்டார்.

மனமிறங்கிய பெண்

வேலைக்காரர் எதிர்பார்த்தைப்போலவே ஒரு இளம்பெண் தண்ணீர் எடுக்க வந்தாள். முழுமையான முக்காடிட்டு, அடக்கமே வடிவாக, அழகின் மொத்த உருவமாக கையில் தண்ணீர் குடுவை ஏந்தி அங்கே வந்த அந்தப் பெண்ணின் பெயர் ரெபெக்கா. வேலைக்காரர் அந்நிய தேசத்தின் ஆண்மகனாக இருந்தும் தன் எதிரில் நின்றுகொண்டிருந்த காரணத்தால் அவனுக்குப் வணக்கம் சொன்னாள். அவளது பணிவில் குளிர்ந்த வேலைக்காரர் “பெண்னே.. எனக்குக் குடிக்க கொஞ்சம் தண்ணீர் தருவாயா?” என்றார். உடனடியாக கிணற்றிலிருந்து அவருக்குத் தண்ணீர் கொடுத்தாள்.

ஆனால் வேலைக்காரர் கேட்காமலேயே நீண்டதூரம் பயணித்துக் களைப்படைந்திருந்த அவரது எல்லா ஒட்டகங்களைக் கண்டு, அவை குடிக்கக்குடிக்க தண்ணீரை இறைத்து சளைக்காமல் ஊற்றிக்கொண்டே இருந்தாள். வயிறுமுட்ட தண்ணீர் குடித்த ஒட்டங்களின் உற்சாகம் கண்டு மகிழ்ச்சியடைந்தாள். விலங்குகளுக்கும் இரங்கிய அவளிடம் “ பெண்ணே உனது தந்தையின் பெயரென்ன?” என்று கேட்டார் வேலைக்காரர். மேலும் “இன்றிரவு உங்கள் வீட்டில் தங்கிச் செல்ல எனக்கும் எனது ஒட்டங்களுக்கும் இடமிருக்கிறதா?” என்று கேட்டார். ரெபேக்கா விருந்தோம்பல் பண்பினை பெற்றோரிடமிருந்து கற்றுக்கொண்டவள். எனவே மறுப்பேதும் கூறாமல் “என் தந்தையின் பெயர் பெத்துவேல். எனக்கொரு சகோதரர் இருக்கிறார். அவரது பெயர் லாபான். எங்கள் வீட்டில் போதுமான இடமிருக்கிறது. தாராளமாக எங்கள் வீட்டில் நீங்கள் தங்கிச் செல்லலாம்”என்றாள். ஆபிரகாமின் அண்ணன் நாகோரின் மகன்தான் பெத்துவேல். இது தலைமை வேலைக்காரருக்கு நன்கு தெரிந்திருந்தது. இவ்வாறு ஆபிரகாமின் உறவினர் வீட்டுக்கே தன்னை வழிநடத்திச்சென்ற கடவுளாகிய யகோவாவுக்கு அவன் மண்டியிட்டு நன்றி சொன்னார்.

துக்கம் சந்தோஷமாய் மாறியது

அன்றிரவு பெத்துவேலின் இல்லத்தில் தங்கி அவர்களது விருந்தோம்பலை ஏற்றுக்கொண்டார் ஆபிரகாமின் தலைமை வேலைக்காரர். தாம் ஈசாக்கிற்கு மணமகள் தேடி வந்த காரணத்தையும், கடவுள் எவ்வாறு ரெபேக்காளை அடையாளம் காட்டினார் என்பது பற்றியும் எடுத்துக் கூறினார்.

இது கடவுளின் ஏற்பாடு என்பதை அறிந்த பெத்துவேலும் அவரது மகனும் ரெபேக்காள் ஈசாக்கை திருமணம் செய்துகொள்ளச் சம்மதித்தார்கள். இருப்பினும் ரெபெக்காளின் மனதை அறிய விரும்பி அவளது விருப்பத்தைக் கேட்டனர். அப்போது அவள் “சம்மதம்”என்று சொன்னாள். அதுவரைத் தன் மணமகனைக் கண்களால் பார்த்திராத தங்கள் மகள், கடவுளின் ஏற்பாட்டை ஏற்றுக்கொண்டாளே என்று அந்தக் குடும்பம் மகிழ்ச்சியால் குதூகலித்தது. மறுநாளே ரேபேக்காளை ஒட்டகத்தில் ஏற்றிக்கொண்டு கானான் தேசத்துக்குப் புறப்பட்டார் ஆபிரகாமின் வேலைக்காரர்.

அவர்கள் கானான் தேசத்தின் எல்லைக்குள் இருந்த வயல்வெளியில் பிரவேசித்தபோது பொழுது சாய்ந்திருந்தது. அப்போது மந்தைகளை மேய்த்துக்கொண்டு அங்கே அன்பே உருவாய் ஒருவர் நின்று கொண்டிருந்தார். அவர் ஈசாக்கேதான். ரெபெக்காவை நேருக்கு நேராய்ச் சந்தித்தார். இதனால் அவரது மனதுக்குள் மகிழ்ச்சி பொங்கியது. ரெபேக்காவுக்கும் மகிழ்ச்சியும் வெட்கமும் ஆட்கொள்ள கண்களைத் தாழ்த்திக்கொண்டாள்.

தனக்காகக் கடவுள் நிச்சயித்த பெண்ணை கண்டுகொண்ட சந்தோஷம் ஈசாக்கை நிறைத்தது. தனது தாய் சாராள் இறந்துபோனதிலிருந்து தம்மை வாட்டிவந்த துக்கத்தால் உற்சாகம் இழந்திருந்த ஈசாக் ரெபக்காவைக் கண்டதும் தனது துக்கம் சந்தோஷமாய் மாறிப்போனதைை உணர்ந்துகொண்டார். ஈசாக்கும் ரேபேக்காளும் திருமண பந்தத்தில் இணைந்தனர். கடவுளால் ஆசீர்வதிக்கப்பட்ட அந்தத் தம்பதிக்கு இரட்டைக் குழந்தைகள் பிறந்தனர். அவர்களுக்கு ஏசா என்றும் யாக்கோபு என்றும் பெயரிட்டனர். அவர்கள் எப்படிப்பட்டச் சகோதரர்களாக உருவானார்கள்..

அடுத்த கதையில் காண்போம்...

http://tamil.thehindu.com/society/spirituality/பைபிள்-கதைகள்-7-சந்தோஷமாய்-மாறிய-துக்கம்/article8619354.ece

Link to comment
Share on other sites

பைபிள் கதைகள் 8 - இரட்டைச் சகோதரர்கள்

 

 
  • 3_2869062g.jpg
     
  • 4_2869061g.jpg
     
 

ஈசாக்-ரெபேக்கா தம்பதிக்கு இரட்டை ஆண் பிள்ளைகள் பிறந்தனர். முதலில் பிறந்தவனுக்கு ஏசா என்றும், இரண்டாவதாகப் பிறந்தவனுக்கு யாக்கோபு என்றும் பெயரிட்டனர்.

பிள்ளைகள் வளர்ந்தார்கள். ஏசா வேட்டையாடுவதில் கைதேர்ந்தவனாக இருந்தான். யாக்கோபுவோ தனது தந்தையின் ஆட்டு மந்தைகளை மேய்த்து அவற்றைப் பெருக்கினான். தனது தந்தையைப்போலவே நல்ல மேய்ப்பனாக இருந்தான்.

ஆடுகள், மாடுகள், நாய்கள் ஆகிய சாந்தமான விலங்குகளோடு பழகி வந்த காரணத்தால் யாக்கோபு அமைதியானவனாக இருந்தான். எதையும் ஒன்றுக்கு இரண்டுமுறை யோசித்து, பெற்றோரின் முகம் கோணாத வண்ணம் பக்குவமாக நடந்துகொண்டான். இதனால் அவனுடைய தாய் “ யாக்கோபு புத்திமான்” என்று அவனைப் புகழ்ந்து உச்சிமுகர்ந்தாள்.

ரெபேக்காளுக்கு யோக்கோபுவை அதிகம் பிடித்ததுபோலவே ஈசாக்குக்கு ஏசாவை அதிமாகப் பிடித்தது. காரணம், ஒரே இடத்தில் முடங்கிக் கிடக்காமல் வெகுதூரம்வரை சென்று வேட்டையாடித் திரும்பினான். வேட்டையாடுவதில் அவனது திறமையைக் கண்டு ஈசாக் மகிழ்ந்தார். காரணம் கொடிய விலங்குகளைத் தன் வீரத்தால் வேட்டையாடி வீழ்த்திவிடுவான். ஏசாவால் வீட்டில் எப்போதும் இறைச்சியும் காட்டுத் தேனும், பழங்களும் நிறைந்திருந்தன.

உரிமையை இழந்த ஏசா

ஏசாவும் யாக்கோபுவும் தங்களது தாத்தாவாகிய ஆபிரகாம் வழியாகக் கடவுளாகிய யகோவான் தேவனைக் குறித்துத் தெரிந்துகொண்டு அவரைப் பக்தியுடன் வணங்கிவந்தார்கள்.

ஒருமுறை ஏசா வேட்டை முடித்து திரும்பிக்கொண்டிருந்தான். அம்முறை அவனுக்குச் சிறு முயலும்கூட வேட்டையில் சிக்கவில்லை. கடும் மழையால் பழங்களோ, காய்களோ கூட அவனுக்குக் கிட்டவில்லை. இதனால் வெறுங்கையுடனும் வெறும் வயிற்றுடனும் அவன் வீடு திரும்பினான். குளிரால் நடுங்கிக்கொண்டிருந்தான். சோர்வாகவும் பலவீனமாகவும் இருந்தான். அப்போது வீட்டில் யாக்கோபு ஒரு பாத்திரத்தில் கூழ் சமைத்துக்கொண்டிருந்தான்.

ஏசா, “நான் பலவீனமாகவும் பசியாகவும் இருக்கிறேன். எனக்குக் கொஞ்சம் கூழ் கொடு” என்று யாக்கோபுவிடம் கேட்டான். ஆனால் யாக்கோபுவோ, அதற்குப் பதிலாக, “முதல் மகன் என்ற உரிமையை இன்று எனக்கு விற்றுவிட வேண்டும். அப்போதுதான் நான் உன்னைப் பசியாற்றுவேன்” என்று கூறினான்.

ஏசாவோ, “நான் பசியால் இறந்துகொண்டிருக்கிறேன். நான் இறந்து போனால் என் தந்தையின் சொத்துகள் எதுவும் எனக்கு உதவப்போவதில்லை. எனவே நான் எனது உரிமையை உனக்குத் தருகிறேன். முதலில் எனக்கு உணவு கொடு” என்றான். ஆனால் யாக்கோபு, “முதலில் உன் உரிமையைத் தருவதாகச் சத்தியம் செய்” என்றான்.

எனவே ஏசா சத்தியம் செய்தான். அதன் பிறகே யாக்கோபு ஏசாவுக்கு அப்பத்தையும் சூடான கூழையும் பரிமாறி அவன் வயிற்றை நிறைத்தான். பசி நீங்கி உடலில் திறன் வந்ததும் முகம் மலர்ந்த ஏசா, வேண்டிய மட்டும் கூழ் உண்டான். இவ்வாறு ஏசா, தனது பிறப்புரிமையைப் பற்றிக் கவலைப்படாமல் அதை யாக்கோவுக்கு விட்டுக்கொடுத்தான்.

தம்பியின் மீது கொடுங்கோபம்

தந்தைக்குப் பிறகு குலத்தலைவன் ஆகும் ஆசீர்வாதம் அந்நாட்களில் மூத்த மகனுக்கு அருளப்பட்டுவந்தது. இதனால் குடும்பத்தில் மூத்தவனே தந்தையின் மறைவுக்குப் பிறகு அனைத்துக்கும் உரிமையாளன் ஆனான். ஈசாக்கு முதுமையை எட்டி, கண்பார்வை மங்கியிருந்த காலத்தில் ஏசா பெற வேண்டிய குலத்தலைவன் ஆசீர்வாதத்தை அவரிடமிருந்து யாக்கோபு பெற்றுக்கொண்டான்.

குலத்தலைவன் ஆசீர்வாதத்தைப் பெறும் உரிமையை ஏற்கெனவே அவன் யாக்கோபுக்கு விட்டுக்கொடுத்துவிட்டிருந்தால் அதை நினைத்து இப்போது கடுங்கோபம் கொண்டான். தான் ஏமாற்றப்பட்டுவிட்டோமோ என ஏசா எண்ணினான். இந்த ஏமாற்றம் கொலைவெறியாக மாறியது. யாக்கோபைக் கொல்லப்போவதாகக் கோபாவேசத்துடன் கூறினான். இதைக் கேட்ட தாய் ரெபெக்கா மிகவும் கவலைப்பட்டாள்.

அவள் யாக்கோபை அழைத்து அவனிடம், “ உன் சகோதரன் ஏசா உன்னைக் கொல்லத் திட்டமிடுகிறான். எனவே நான் சொல்கிறபடி நீ செய். ஆரானில் இருக்கிற என் சகோதரனும் உன் மாமனுமாகிய லாபானிடம் ஓடிச் சென்று அவரோடு இரு. உன் சகோதரனின் கோபம் தீரும்வரை அங்கேயே இரு. கொஞ்ச காலம் ஆனதும் உன் சகோதரன் நீ செய்ததை மறந்துவிடுவான். பிறகு உன்னை இங்கு அழைக்க ஒரு வேலைக்காரனிடம் செய்தியைச் சொல்லி அனுப்புவேன். ஒரே நாளில் எனது இரண்டு மகன்களையும் நான் இழக்க விரும்பவில்லை” என்றாள்.

ஏசா 40 வயதாக இருந்தபோது கானான் தேசத்தைச் சேர்ந்த இரண்டு பெண்களைக் கல்யாணம் செய்துகொண்டான். இதை நினைத்து ஈசாக்கும் ரெபெக்காளும் ரொம்பவே வேதனைப்பட்டார்கள். காரணம், இந்தப் பெண்கள் பரலோகத் தந்தையாகிய யகோவா தேவனை வணங்காதவர்கள். அதனால் தன் கணவன் ஈசாக்கிடம், “ஏசா செய்தது போல இந்தக் கானான் தேசத்துப் பெண்களில் ஒருத்தியை யாக்கோபும் கல்யாணம் செய்தால் என்னால் தாங்கிக்கொள்ளவே முடியாது” என்று சொன்னான்.

நாட்டை விட்டுக் கிளம்பிய யாக்கோபு

அதனால் ஈசாக்கு தன் மகன் யாக்கோபை அழைத்து, “கானான் தேசத்துப் பெண்ணை நீ கல்யாணம் செய்துகொள்ளக் கூடாது. அதற்குப் பதிலாக ஆரானிலிருக்கும் உன் தாயின் சகோதரன் லாபானின் மகள்களில் ஒருத்தியைக் கல்யாணம் செய்துகொள்” என்று சொன்னார். பெற்றோருக்குக் கீழ்ப்படிந்து வெகு தொலைவில் இருந்த ஆரானுக்குத் தன் மாமன் மகளைக் காண ஆவலுடன் புறப்பட்டார் யாக்கோபு.

நீண்ட பயணத்துக்குப் பிறகு ஆரானின் புல்வெளிகளை அடைந்தார் யாக்கோபு. அங்கே ஆட்டு மந்தைகளை மேய்த்துக் கொண்டிருந்தவர்கள் புதியவரான யாக்கோபுவைக் கண்டு அவரை நெருங்கி வந்து விசாரித்தார்கள். அவர்களிடம் “உங்களுக்கு லாபானைத் தெரியுமா?” என்று யாக்கோபு கேட்டார். “ ஓ...தெரியுமே. அதோ அங்கே பாருங்கள். ஆடுகளை மேய்த்தபடி தனது மந்தைகளின் நடுவே வந்துகொண்டிருக்கிறாளே அவள்தான் அவருடைய மகள் ராகேல்” என்று கூறினார்கள்.

மாமன் மகளைக் கண்ட யாக்கோபு, அவளது ஆடுகள் தண்ணீர் குடிப்பதற்காகத் தரைக் கிணற்றின் மீதிருந்த கல்லைப் புரட்டிப்போட்டார். தண்ணீரைக் கண்ட ஆடுகள் அவளுடன் ஓடி வந்து நீரைப் பருகின. தன் ஆடுகளுக்குப் பரிவுகாட்டிய இவர் யாராய் இருப்பார் என்று ராகேல் அவரது முகத்தைக் கூர்ந்து கவனித்தாள்.

அந்த முகத்தில் தனது குடும்பத்தின் சாயலைக் கண்டு புன்னகை செய்தாள். அவளது புன்னகையால் கவரப்பட்ட யாக்கோபு அவள் கைகளைக் கனிவுடன் பற்றிக் கன்னத்தில் அவளை முத்தமிட்டார். தான் யார் என்பதையும் அவளுக்குத் தெரிவித்தார். மிகுந்த பரபரப்படைந்த அவள், ஆடுகளை அங்கேயே விட்டுவிட்டு தன் வீட்டுக்குத் தலைதெறிக்க ஓடிச் சென்று தன் அப்பா லாபானிடம் நடந்ததைச் சொன்னான்.

ஆச்சரியமடைந்த லாபான், தன் மருமகனை வரவேற்கச் சென்றார். ராகேலின் ஆட்டு மந்தை யாக்கோவுக்குக் கட்டுப்பட்டு அவருடன் வந்துகொண்டிருந்தது. இதைக் கண்ட லாபானுக்கு மகிழ்ச்சியைக் கட்டுப்படுத்த முடியவில்லை. யாக்கோபு மிகச் சிறந்த மேய்ப்பன் என்பதை அந்த நொடியில் உணர்ந்து கொண்டார்.

யாக்கோபுவைக் கட்டித் தழுவித் தன் பிரியத்தை வெளிப்படுத்தினார். ராகேலைத் திருமணம் செய்துகொள்ள விரும்பி லாபானிடம் கேட்டபோது அவர் இன்னும் மகிழ்ச்சியடைந்தார். ஆனால், ராகேலைக் கல்யாணம் செய்துகொள்ள வேண்டுமானால் ஏழு ஆண்டுகள் தனக்காக வேலை செய்ய வேண்டுமென யாக்கோபிடம் லாபான் கூறினார். ராகேல் மீது முதல் பார்வையிலேயே காதல்கொண்ட யாக்கோபு ஏழு ஆண்டுகள் ஏழுநாட்களாய் மறைந்துவிடும் என்று நம்பினார். மாமாவுக்காக உழைக்கத் தொடங்கினார்.

ஆடுகளை மேய்த்தபடி தனது மந்தைகளின் நடுவே வந்துகொண்டிருக்கிறாளே அவள்தான் அவருடைய மகள் ராகேல்” என்று கூறினார்கள். மாமன் மகளைக் கண்ட யாக்கோபு, அவளது ஆடுகள் தண்ணீர் குடிப்பதற்காகத் தரைக் கிணற்றின் மீதிருந்த கல்லைப் புரட்டிப்போட்டார். தண்ணீரைக் கண்ட ஆடுகள் அவளுடன் ஓடிவந்து நீரைப் பருகின

ஏழு ஆண்டுகள் முடிந்தபோது லாபன் கொடுத்த வாக்கைக் காப்பாற்றினாரா?

(அடுத்த கதையில் காண்போம்)

http://tamil.thehindu.com/society/spirituality/பைபிள்-கதைகள்-8-இரட்டைச்-சகோதரர்கள்/article8648741.ece

Link to comment
Share on other sites

பைபிள் கதைகள் 9: ராக்கேலின் அவமானத்தை நீக்கிய கடவுள்

 

6_2878240f.jpg
 
 
 

விசுவாசத்தின் தந்தை என்று புகழப்படும் ஆபிரகாமின் ஆசீர்வதிக்கப்பட்ட மகனாகிய ஈசாக்கின் இரண்டு மகன்களின் கதையைப் பார்த்து வருகிறோம். தந்தையிடமிருந்து மூத்த மகனுக்குக் கிடைக்க வேண்டிய ஆசீர்வாதத்தை ஈசாக்கின் இளைய மகனாகிய யாக்கோபு பெற்றுக்கொண்டார்.

இதனால் மூத்த மகனாகிய ஏசா, தம்பியின் மீது கொடுஞ்சினம் கொண்டார். ஈசாக்கின் மறைவுக்குப் பிறகு தம்பியைக் கொன்றுவிடத் திட்டமிட்டார். இதை அறிந்த அந்த இருவரின் தாயான ரெபேக்காள், யாக்கோபுவைக் காப்பாற்றும் விதமாக ஆரான் தேசத்தில் வாழ்ந்துவந்த தன் சகோதரன் லாபான் வீட்டுக்கு ஈசாக்கின் அனுமதியோடும் ஆசீர்வாதத்தோடும் யாக்கோபுவை அனுப்பிவைத்தாள்.

கடவுளின் வீடு

நீண்ட பயணத்துக்குப் பிறகு லூஸ் என்ற நகரின் புறத்தே பயணித்துக்கொண்டிருந்தார் யாக்கோபு . அப்போது சூரியன் அஸ்தமித்தது. இருளில் பயணிக்க விரும்பாமல் ஒரு கல்லை எடுத்து தலையணைபோல் தலைக்கு வைத்துப் படுத்தார். ஆழ்ந்த உறக்கத்தில் யாக்கோபு ஒரு கனவு கண்டார்.

கனவில் கடவுள் தோன்றினார். “நானே உன் கடவுள். உன் தாத்தாவான ஆபிரகாமுக்கும் உன் தந்தையாகிய ஈசாக்கிற்கும் நானே கடவுள். இப்போது நீ படுத்துறங்கும் இந்தப் பூமியையே உனக்குக் கொடுப்பேன். இது உனக்கும் உன் பிள்ளைகளுக்கும் உரியதாகும். உன் வழியே ஏராளமான சந்ததிகள் பிறப்பார்கள்.

அவர்கள் பூமியின் நான்கு திசைகளிலும் பரவிப் பெருகுவார்கள். உன்னாலும் உன் சந்ததிகளாலும் உலகிலுள்ள குடும்பங்கள் அனைத்தும் ஆசீர்வதிக்கப்படும். நான் உன்னோடு இருக்கிறேன். நீ போகிற ஒவ்வொரு இடத்திலும் உன்னைக் காப்பாற்றுவேன். நான் மீண்டும் உன்னை இங்கே கொண்டுவருவேன். எனது வாக்குறுதியை முடிக்கும்வரை உன்னை விட்டு விலக மாட்டேன்” என்றார்.

கனவு முடிந்ததும் தூக்கம் கலைந்து எழுந்த யாக்கோபு “இது கடவுளுடைய வீடு, பரலோகத்தின் வாசல்” என்றார்.

பொழுது புலர்ந்ததும் தலைக்கு வைத்துப்படுத்த கல்லை நிமிர்த்தி அதை நடுகல்லாக்கினார். அதன்மேல் எண்ணெய் ஊற்றினார். இவ்வாறு அவர் அந்தக் கல்லை நினைவுச் சின்னமாக ஆக்கினார். லூஸ் என்ற அந்த நகரத்துக்கு யாக்கோபு ‘பெத்தேல்’ என்று பெயரிட்டார். பிறகுஆரானை நோக்கிப் பயணம் செய்தார்.

வாக்குத் தவறிய லாபான்

ஆரானை அடைந்ததும் தனது மாமன் லாபானின் மகள் ராகேலைக் கண்டு காதல் கொண்டார் யாக்கோபு. அவளைத் திருமணம் செய்துதருமாறு லாபானிடம் கோரினார். ஏழு ஆண்டுகள் தனக்காக வேலை செய்தால் மட்டுமே ராக்கேலைத் திருமணம் செய்து தர முடியும் என்று சொன்ன லாபானின் வார்த்தைகளை நம்பி, ராக்கேல் மீதிருந்த காதலால் உழைத்துவந்தார். ஏழு ஆண்டுகளும் முடிந்தன.

ஆனால் ராக்கேலுக்குப் பதிலாகத் தன் மூத்த மகள் லேயாளை யாக்கோபுக்குத் தந்திரமாகத் திருமணம் செய்துவைத்தார் லாபான். மனமுடைந்த யாக்கோபுவிடம் , “மூத்தவள் இருக்கும்போது இளையவளுக்கு மணம் முடிக்க எங்கள் நாட்டில் அனுமதிக்க மாட்டோம். ஆனால் முதல் திருமணச் சடங்குகளை முடித்த பின் நான் உங்களுக்கு ராக்கேலையும் திருமணம் செய்து வைப்பேன்.

ஆனால் இன்னும் ஏழு ஆண்டுகள் எனக்கு நீங்கள் பணியாற்ற வேண்டும்” என்றார் லாபான். ராக்கேலை மனதார நேசித்த யாக்கோபு, மேலும் ஏழு ஆண்டுகள் வேலை செய்ய சம்மதித்து ராக்கேலையும் மணந்துகொண்டார். அந்நாட்களில் ஒன்றுக்கும் மேற்பட்ட பெண்களை ஆண்கள் மணந்துகொள்வது வழக்கத்தில் இருந்தது.

பல்கிப் பெருகிய குடும்பம்

இரண்டு மனைவியரைப்பெற்ற யாக்கோபு, இருவரிடமும் பாரபட்சமற்ற அன்பைச் செலுத்தினார். ரூபன், சிமியோன், லேவி, யூதா ஆகிய மகன்களை லேயாள் பெற்றெடுத்தாள். ராக்கேலோ குழந்தைப் பேறு இல்லாதவளாக மனமுடைந்து காணப்பட்டாள். ராக்கேலின் மனவாட்டம் யாக்கோபுவையும் பாதித்தது.

தன் பணிப்பெண்ணைக் கணவனுக்கு மனைவியாக்கி அவள் மூலம் பிறக்கும் குழந்தையைத் தனது வாரிசாக ஏற்றுக்கொள்ளும் வழக்கம் அந்நாட்களில் கடைப்பிடிக்கப்பட்டது. எனவே தனக்காகத் தன் தந்தை லாபான் அனுப்பிவைத்த பணிப்பெண்ணான பில்காளை யாக்கோபுக்கு மனைவியாகக் கொடுத்தாள் ராக்கேல். பில்காளுக்கு தாண், நப்தலி என்ற இரண்டு மகன்கள் பிறந்தனர்.

ராக்கேலைத் தொடந்து மூத்தவளாகிய லேயாள் தனக்கு மேலும் பல பிள்ளைகள் வேண்டும் என்று விரும்பினாள். இதற்காகத் தன் தந்தை தனக்காக அனுப்பிவைத்த பணிப்பெண் சில்பாளை யாக்கோபுக்கு மனைவியாகக் கொடுத்தாள். அவளுக்கு காத், ஆசேர் என்ற இரண்டு மகன்கள் பிறந்தனர். இதன் பிறகு இசக்கார், செபுலோன் ஆகிய இரண்டு மகன்கள் லேயாளுக்குப் பிறந்தனர். இவ்வாறு லேயாள் ஆறு மகன்களைப் பெற்று குதூகலித்தாள். மேலும் தீனாள் என்ற மகளையும் லேயாள் பெற்றாள்.

தன் சகோதரியாகிய லேயாளை கடவுள் தொடர்ந்து ஆசீர்வதித்து வருவதைக் கண்ட ராக்கேல், அவள் மீது பொறாமைப்படுவதை நிறுத்திக்கொண்டு கடவுளிடம் கெஞ்சி பிரார்த்தனை செய்தாள். அவளது குரலைக் கேட்ட கடவுள், கருணை கொண்டு ஆசீர்வதித்தார். ராக்கேல் கர்ப்பமாகி ஒரு மகனைப் பெற்றாள். “தேவன் எனது அவமானத்தை அகற்றி ஒரு மகனைத் தந்துவிட்டார்” என்று மகிழ்ச்சியடைந்தாள். அவள் தன் மகனுக்கு யோசேப் என்று பெயரிட்டாள். இவ்வாறு யாக்கோபுவின் குடும்பம் பல்கிப் பெருகியது.

லாபானை விட்டுப்பிரிந்து தனது பெற்றோர் வாழ்ந்துவந்த கானான் தேசத்துக்குத் திரும்பிச் செல்லத் தீர்மானித்தார் யாக்கோபு. எனவே தனது பெரிய குடும்பத்தையும், ஆட்டு மந்தை, மாட்டு மந்தை, ஒட்டங்கள், கோவேறு கழுதைகள், காவல் நாய்கள் ஆகியவற்றையும் அழைத்துக் கொண்டு நீண்ட பயணத்தைத் தொடங்கினார்.

(அடுத்த கதையில் காண்போம்)

http://tamil.thehindu.com/society/spirituality/பைபிள்-கதைகள்-9-ராக்கேலின்-அவமானத்தை-நீக்கிய-கடவுள்/article8680755.ece

Link to comment
Share on other sites

பைபிள் கதைகள் 10: துரத்தி வந்த தாய் மாமன்

 
bible_2887370f.jpg
 
 
 

ஆபிரகாமின் பேரனும் ஈசாக்கின் மகன்களில் ஒருவரும், ஏசாவின் சகோதரருமாகிய யாக்கோபு தனது தந்தையாகிய ஈசாக்கிடமிருந்து தனது சகோதரன் ஏசாவுக்குக் கிடைக்க வேண்டிய ஆசீர்வாதத்தைத் தந்திரமாகப் பெற்றுக்கொண்டதால், ஏசாவின் கோபத்துக்கு ஆளானார்.

“யாக்கோபுவை ஒருநாள் கொல்வேன்” என்று ஏசா கூறியதைக் கண்டு அஞ்சிய யாக்கோபுவின் தாயாகிய ரேபேக்காள் தனது இரண்டு மகன்களையும் இழக்க விரும்பவில்லை. இதனால் யாக்கோபுவை ஏசாவிடமிருந்து அப்புறப்படுத்த விரும்பினார். தனது சகோதரன் லாபானிடம் யாக்கோபுவை அனுப்பி, அவரது மகளை மணந்துகொண்டு அவரோடு தங்கிவிடும்படி பணித்தாள். தாயின் சொல்லைக் கேட்டுத் தந்தையிடம் ஆசிபெற்றுக் கிளம்பிய யாக்கோபுவை கடவுள் தொடர்ந்து ஆசீர்வதித்தார். ஆபிரகாம், ஈசாக்கு ஆகியோரைத் தொடர்ந்து யாக்கோபுவிடமுடம் கடவுள் பேசினார்.

பதினோரு மகன்கள்

தனது தாய்மாமன் லாபானுக்காக முதலில் 14 ஆண்டுகள் மேய்ப்பனாக வேலைசெய்து அவரது மகள்களான லேயாள், ராகேல் ஆகிய இருவரையும் மணந்துகொண்டார். ரூபன், சிமியோன், லேவி, யூதா, தாண், நப்தலி, காத், ஆசேர் இசக்கார், செபுலோன் ஆகிய பத்து மகன்கள் பிறந்தனர்.

தீனாள் என்ற மகளையும் லேயேள் பெற்றெடுத்தாள். குழந்தை இல்லாமல் வருந்திவந்த ராகேலின் கர்ப்பத்தையும் கடவுள் ஆசீர்வதித்தார். தனது கர்ப்பத்தின் மூலம் முதல் மகனைப் பெற்று அவனுக்கு யோசேப்பு என்று பெயரிட்டாள். இப்படியாக யாக்கோபு தனது மாமன் லாபானிடம் வேலை செய்துவந்த காலங்களில் அவருக்கு பதினோரு மகன்கள் பிறந்தனர்.

துரத்தி வந்த மாமன்

காலப்போக்கில் தாய்மாமனின் அன்பு தன் மீது குறைந்து வருவதையும் உணர்ந்த யாக்கோபு, லாபானை விட்டுப் பிரிந்து தனது முன்னோர்களின் தேசமாகிய கானானுக்குத் திரும்பிச் செல்ல தீர்மானித்தார். என்றாலும் தனது சகோதரன் ஏசாவின் கோபத்தை எண்ணி 20 ஆண்டுகளுக்குப் பிறகும் கலங்கினார். இறுதியில் தனது கடவுளாகிய யகோவா தேவன் தன்னை வழிநடத்துவார் என்ற துணிவுமிக்க விசுவாசத்துடன் தனது நாடோடி வாழ்வை முடித்துக்கொள்ள விரும்பிக் கிளம்பினார்.

எனவே, தன் பெரிய குடும்பத்தையும் மந்தைகளையும் பணியாட்களையும் கூட்டிக்கொண்டு தன் பயணத்தைத் தொடங்கினார். லாபானிடம் சொல்லிவிட்டுக் கிளம்பினால் அவர் தன்னை விட மறுக்கலாம் என்பதைக் கடவுள் மூலம் அறிந்திருந்த யாக்கோபு சொல்லாமல் கொள்ளாமல் கிளம்பினார். நீண்ட பயணத்துக்குப்பிறகு கீலேயாத் என்ற மலை நகரில் யாக்கோபு முகாமிட்டிருந்தார். கோபத்துடன் யாக்கோபுவைத் துரத்திக்கொண்டு வந்த லாபான் அந்த மலைநகரில் அவரைப் பிடித்து தடுத்து நிறுத்தினார்.

லாபானுடன் ஒப்பந்தம்

கடுங்கோபத்துடன் யாக்கோபுவிடம், “என்னிடம் சொல்லாமல் ஏன் ஓடிப்போகிறாய்? ஏன் என் மகள்களைப் போரில் கைப்பற்றிய பெண்களைப் போன்று கவர்ந்துகொண்டு போகிறாய்? என்னிடம் நீ சொல்லியிருந்தால் உனக்கு ஒரு விருந்து கொடுத்திருப்பேனே. நான் என் மகள்களையும் பேரப்பிள்ளைகளையும் முத்தமிட்டு வழியனுப்பும் வாய்ப்பையும் நீ கொடுக்கவில்லையே.. உன்னைத் துன்புறுத்தும் அளவுக்கு எனக்கு வல்லமை இருக்கிறது” என்று லாபான் கொந்தளித்தார்.

அதற்குப் பதிலளித்த யாக்கோபு, “நான் செய்த தவறு என்ன? எந்தச் சட்டத்தை உடைத்துவிட்டேன்? எதற்கு என்னைப் பின்தொடர்ந்து வந்து தடுத்து நிறுத்த வேண்டும்? நான் எதுவும் சொல்லாமல் வந்துவிட்டேன். ஏனென்றால் எனக்குப் பயமாக இருந்தது. ஒருவேளை நீங்கள் உங்கள் பெண்களை என்னிடமிருந்து பிரித்துவிடலாம் என்று நினைத்தேன். நான் உமக்காக 20 ஆண்டுகள் உழைத்திருக்கிறேன்.

அப்போது எந்த ஆட்டுக்குட்டியும் பிறக்கும்போது இறக்கவில்லை. எந்தக் கடாவையும் உமது மந்தையிலிருந்து எடுத்து நான் உண்டதில்லை. காட்டு விலங்குகளால் ஆடுகள் அடிபட்டு இறந்திருக்குமானால் அதற்குரிய விலையை நானே தந்திருக்கிறேன். இறந்த ஆடுகளைக் கொண்டுவந்து உமக்கு முன் காட்டி இதற்குக் காரணம் நானில்லை என்று சொன்னதில்லை.

ஆனால் நானோ பகலிலும் இரவிலும் திருடப்பட்டேன். பகல் பொழுது என் பலத்தை எடுத்துக்கொண்டது. இரவுக் குளிர் என் கண்களிலிருந்து உறக்கத்தைத் திருடிக்கொண்டது. ஒரு அடிமையைப் போன்று 20 ஆண்டுகளாக உமக்காக உழைத்திருக்கிறேன்.

இந்நாட்களில் எனது சம்பளத்தைப் பத்து முறை மாற்றி இருக்கிறீர். என் கடவுளாகிய யகோவா மட்டும் என்னோடு இல்லாமல் போயிருந்தால் நீர் என்னை ஒன்றும் இல்லாதவனாக ஆக்கி அனுப்பி இருப்பீர்” என்றார்.

யாக்கோபுவைக் கடவுள் தன் உள்ளங்கையில் வைத்துக் காத்து வருவதைக் கண்ட லாபான், இனி அவரைத் தடுத்து நிறுத்த முடியாது என்பதை உணர்ந்துகொண்டார். எனவே அவருடன் ஒப்பந்தம் ஒன்றைச் செய்துகொண்டார்.

“நாம் இங்கே ஒரு கல்லை நட்டு, அதை நமது ஒப்பந்தத்திற்கு நினைவுச் சின்னமாகக் கருதுவோம்”என்றார் லாபான். அதை யாக்கோபும் ஒப்புக்கொண்டு ஒரு பெரிய கல்லை ஒப்பந்தத்துக்கு அடையாளமாக நட்டு வைத்தார். பிறகு லாபான், “ நாம் பிரிந்துவிட்டாலும் கடவுள் நம்மைக் கண்காணிக்கட்டும். இந்தக் கல்லைத் தாண்டி வந்து நான் உன்னோடு போரிட மாட்டேன்.

நீயும் இதைக் கடந்து வந்து என்னோடு போரிடக் கூடாது” என்றார். யாக்கோபு கடவுளின் பெயரால் வாக்குறுதி அளித்தார். பிறகு லாபான் எழுந்து தன் மகள்களையும் பேரப் பிள்ளைகளையும் முத்தமிட்டு ஆசீர்வதித்தார். பின் தன் ஊருக்குத் திரும்பிப் போனார். யாக்கோபு நிம்மதியடைந்து பிறகு தன் சகோதரன் ஏசாவிடன் சமாதானம் செய்துகொள்ள கானான் நோக்கித் தன் பயணத்தைத் தொடர்ந்தார்.

http://tamil.thehindu.com/society/spirituality/பைபிள்-கதைகள்-10-துரத்தி-வந்த-தாய்-மாமன்/article8709089.ece

Link to comment
Share on other sites

பைபிள் கதைகள் 11: ஏல் எல்லாகே இஸ்ரவேல்

 

 
eal_2896497f.jpg
 
 
 

ஆபிரகாமின் பேரனும், ஈசாக்கின் மகன்களில் ஒருவருமான யாக்கோபு, தன் சகோதரன் ஏசாவுக்குக் கிடைத்திருக்க வேண்டிய தலைமகனுக்கான ஆசீர்வாதத்தைத் தந்திரமாகப் பெற்றுக்கொண்டார். இதனால் ஏசாவின் கோபத்துக்கு ஆளானார். பெற்றோரின் அறிவுறுத்தலை ஏற்று கானான் தேசத்திலிருந்து வெளியேறி ஆரானை அடைந்தார். அங்கே வசித்துவந்த தனது தாய் மாமன் லாபானின் இரு பெண்களையும் அவர்களது பணிப்பெண்கள் இருவரையும் மணந்துகொண்டார். 11 மகன்கள் பிறந்தனர். சில மகள்களும் யாக்கோபுவுக்கு இருந்தாலும் விவிலியம் தீனாள் என்ற அவரது மகளைப் பற்றி மட்டுமே பேசியிருக்கிறது.

சொந்த மண்ணைப் பிரிந்து ஒரு நாடோடியாய் ஆரானில் 20 ஆண்டுகள் வாழ்ந்த யாக்கோபு தனது நாடோடி வாழ்வை முடித்துக்கொண்டு கானானுக்குத் திரும்ப முடிவு செய்தார். தன் சகோதரன் ஏசாவை சமாதானப்படுத்திவிடலாம் என்று நம்புகிறார். தன்னைப் பலவகையிலும் கட்டுப்பாட்டில் வைத்திருந்த லாபானிடமிருந்து சொல்லாமல் புறப்பட்ட யாக்கோபுவையும் அவரது குடும்பத்தாரையும் பாதி வழியில் தடுத்துநிறுத்தித் தாக்க நினைத்தார் லாபான். ஆனால் யாக்கோபுவுக்குப் பரலோகத் தந்தையாகிய கடவுளின் பாதுகாப்பும் ஆசீர்வாதமும் இருப்பதைக்கண்டு, யாக்கோபுவைத் தடுக்காமல் அவரை வழியனுப்பிவிட்டு லாபான் ஊர் திரும்பினார்.

சகோதரனோடு சமாதானம்

லாபானின் மனமாற்றத்தைக் கண்டு நிம்மதியடைந்த யாக்கோபு கடவுளுக்கு நன்றி செலுத்திவிட்டுத் தன் பயணத்தைத் தொடர்ந்தார். ஏசா, ஏதோம் நகரைச் சேர்ந்த சேயீர் பகுதியில் வாழ்ந்து வந்ததை யாக்கோபு அறிந்துகொண்டார். ஏசாவிடம் தன் தூதுவர்களை அனுப்பினார். யாக்கோபு தன் தூதர்களிடம், “ எனது எஜமானனான ஏசாவிடம் இதைச் சொல்லுங்கள். உங்கள் வேலைக்காரனான யாக்கோபு இந்த நாள்வரை லாபானோடு வாழ்ந்தேன். என்னிடம் நிறைய பசுக்களும், கழுதைகளும், ஆடுகளும், ஆண் வேலைக்காரர்களும், பெண் வேலைக்காரர்களும் உள்ளனர். ஐயா நீர் எங்களை ஏற்றுக்கொள்வதற்காகவே இந்தத் தூதுவரை அனுப்பினேன்” என்று சொல்லியனுப்பினார். தூதுவர்கள் அப்படியே செய்தனர். ஆனால் யாக்கோபுவைச் சந்திக்க 400 பேர்களைக் கொண்ட தனது படையணியுடன் புறப்பட்டு வந்துகொண்டிருந்தார். இதனால் மிகவும் பயந்த யாக்கோபு, தன்னோடு இருந்தவர்களையும் மிருகங்களையும் இரண்டு பிரிவுகளாகப் பிரித்தார். ஏசா வந்து ஒரு பிரிவை அழித்தால், இன்னொரு பிரிவு தப்பி ஓடிப் பிழைத்துக்கொள்ளும் என்று நினைத்தார்.

பிரார்த்தனையும் பரிசுகளும்

பிறகும் ஏசாவின் கோபம் தீராமல் இருந்தால் தன்னால் தப்பிச் செல்ல இயலாதே என்று நினைத்த யாக்கோபு தன்னை வழிநடத்திய கடவுளை நோக்கி பிரார்த்தனை செய்தார். “ என் தந்தையாகிய ஆபிரகாமின் தேவனே! என் தந்தையாகிய ஈசாக்கின் தேவனே, என்னை என் சொந்த நாட்டுக்குத் திரும்பிப் போகுமாறு கூறினீர். என் மீது நீர் வைத்த மிகுதியான கருணைக்கும் நன்மைகளுக்கும் நான் தகுதியுடையவனல்ல. நான் யோர்தான் நதியை முதல் முறையாகக் கடந்து சென்றபோது, என்னிடம் எதுவுமில்லை. ஒரு கைத்தடி மட்டுமே இருந்தது. இப்போது என்னிடம் இரண்டு குழுக்களாகப் பிரிக்கும் அளவுக்கு என்னை நம்பி பல உயிர்கள் உள்ளன. பெருஞ்செல்வம் உள்ளது. என்னை என் சகோதரனாகிய ஏசாவிடமிருந்து காப்பாற்றும். அவரைக் குறித்து நான் அஞ்சுகிறேன். அவர் வந்து அனைவரையும் கொன்றுவிடுவார். கர்த்தாவே, ‘நான் உனக்கு நன்மை செய்வேன் என்றும் உனது குடும்பத்தையும் ஜனங்களையும் கடற்கரையிலுள்ள மணலைப் போன்று பெருகச் செய்வேன்’ என்று கூறினீர்” என்று மனமுருக மன்றாடினார். கடவுள் யாக்கோபுவின் பிரார்த்தனையைக் கேட்டார்.

பிறகு யாக்கோபு உற்சாகமடைந்தது தனது மந்தையிலிருந்து முதல்தரமான 200 வெள்ளாடுகளையும், 20 கடாக்களையும் 200 செம்மறி ஆடுகளையும், 15 பால் கொடுக்கும் பசுக்களையும் 30 ஒட்டகங்களையும் அதன் குட்டிகளையும், 40 கடாரிகளையும், 10 காளைகளையும் 20 பெண் கழுதைகளையும், 10 ஆண் கழுதைகளையும் பிரித்தெடுத்தான். பிறகு தன் வேலைக்காரர்களிடம் ஒவ்வொரு மந்தையையும் தனித்தனியாக ஒப்படைத்து “என் சகோதரன் ஏசா வந்து, ‘ இவை யாருடைய மிருகங்கள், எங்கே போகின்றன, நீங்கள் யாருடைய வேலைக்காரர்கள்?’ என்று கேட்டால் ‘இவை உங்கள் அடிமையான யாக்கோபின் விலங்குகள். எஜமானே இவை உங்களுக்கான பரிசுகள், யாக்கோபுவும் அவரது குடும்பத்தினரும் பின்னால் வந்துகொண்டிருக்கிறார்கள்’ என்று சொல்லுங்கள்” என்றார்.

முதல்தரமான விலங்குகளைக் கண்ட ஏசா வியந்து வேலைக்காரர்கள் சொன்னதைக்கேட்டு ஆச்சரியப்பட்டான். ஆனால் அவற்றின் மீது ஏசாவுக்கு விருப்பமில்லை. ஏனெனில் ஏசா பெரும் செல்வந்தனாக இருந்தான்.

மனம் கனிந்த ஏசா

கண்ணுக்கெட்டிய தூரத்தில் யாக்கோபுவைக் கண்டு புன்முறுவல் பூத்தார் ஏசா. சகோதரனின் முகம் மலர்ந்திருப்பதைக் கண்டு நிம்மதியடைந்த யாக்கோபு, ஏசாவை நெருங்கியபடியே ஏழுமுறை தரையில் குனிந்து வணங்கினார். முதிர்ந்த வயதில் சகோதரனின் பணிவைக் கண்டு வியந்த ஏசா எதிர்கொண்டு ஓடிவந்து யாக்கோபுவைக் கட்டித் தழுவிக்கொண்டு முத்தமிட்டார். இருவரும் தங்கள் பிரிவை எண்ணி அழுதனர். பின்னர் ஏசாவை யாக்கோபுவின் குடும்பத்தினர் அனைவரும் பணிந்து வணங்கினர்.

பிறகு யாக்கோபு, “என்னை நீர் ஏற்றுக்கொண்டதன் அடையாளமாக இந்தப் பரிசுப் பொருட்களை ஏற்றுக்கொள்ள வேண்டும்” என்றார். ஆனால் ஏசாவோ, “எனக்கு நீங்கள் பரிசுப் பொருட்கள் கொடுக்க வேண்டிய தேவையில்லை. என்னிடம் போதுமான அளவு இருக்கிறது” என்றான். அதற்கு யாக்கோபு, “இல்லை. நான் கெஞ்சிக் கேட்டுக்கொள்கிறேன், என்னை நீர் உண்மையில் ஏற்றுக்கொள்வதானால் இப்பொருட்களையும் ஏற்றுக்கொள்ளும். என்னை நீர் ஏற்றுக்கொண்டதைப் பார்த்து மிகவும் சந்தோஷப்படுகிறேன். ஆகையால் நான் கொடுக்கும் பரிசுப் பொருட்களையும் ஏற்றுக்கொள்ளுமாறு வேண்டுகிறேன். தேவன் எனக்கு நிறைய நன்மைகள் செய்திருக்கிறார். தேவைக்குமேல் என்னிடம் உள்ளது” என்றார். இவ்வாறு யாக்கோபு கெஞ்சியதால் ஏசா, பரிசுப் பொருட்களை ஏற்றுக்கொண்டார். பிறகு ஏசா, யாக்கோபுவை சொந்த மண்ணில் அனுமதித்தான். யாக்கோபு தனது பயணத்தைச் சுகமாக பதான் அராமிலிருந்து கானான் நாட்டிலுள்ள சீகேம் பட்டணத்துக்கு அருகில் முடித்துக்கொண்டார். நகரத்துக்கு அருகிலுள்ள வயலொன்றை விலைக்கு வாங்கித் தனது கூடாரத்தைப் போட்டார். கடவுளைத் தொழுதுகொள்ள அங்கே ஒரு பலிபீடத்தைக் கட்டினார். யாக்கோபு அந்த இடத்திற்கு ‘ஏல் எல்லோகே இஸ்ரவேல்’ என்று பெயரிட்டார்.

http://tamil.thehindu.com/society/spirituality/பைபிள்-கதைகள்-11-ஏல்-எல்லாகே-இஸ்ரவேல்/article8736334.ece

Link to comment
Share on other sites

பைபிள் கதைகள் 12: கேடில் முடிந்த கூடா நட்பு

 
9_2905292f.jpg
 
 
 

சீகேம் நகரின் பெண்கள் சிலரது நட்பு கிடைத்ததும் அந்த நகரத்தின் பளபளப்பு அவளுக்குப் பிடித்துப்போனது. தனது கானானியத் தோழிகளுடன் நகரை வலம் வந்துகொண்டிருந்தபோது சீகேம் அவளைக் கண்டான். அவளது அழகில் மயங்கினான். அவளது அருகில் வந்து பேச்சுக்கொடுத்தான். அவளது கானானியத் தொழிகள், “ நீ அதிர்ஷ்டம் செய்தவள்; சீகேம் இந்த நகரத்தின் பிரபு. அவனே உன்னை விரும்புகிறான்” என ஊக்குவித்தார்கள்.

அந்தக் கணத்தில் தன் அழகு, செல்வாக்கு மிக்க ஒரு இளைஞனை கவர்ந்திருக்கிறது என்றெண்ணி கர்வம் கொண்டு புன்முறுவல் பூத்தாள். அந்தக் கணமே சீகேம் அவளைத் தனியே வரும்படி அழைத்தான். அவனது அழைப்பை ஏற்றுச் சென்ற தீனாள் வஞ்சிக்கப்பட்டாள். தீனாளை சீகேம் தந்திரமாக அடைந்தான். அவளைவிட மனமில்லாமல் தனது மாளிகையில் அடைத்துவைத்தான்.

பிறகு அவளை மணந்துகொள்ள விரும்பித் தன் தந்தையிடம் தெரிவித்தான். திருமணத்துக்கு முன்பே பாலுறவு கொள்வது இஸ்ரேலியர் வாழ்முறையில் பாவமாகக் கருதப்பட்டது.

சமாதனமும் நிபந்தனையும்

யாக்கோபு தன் மகளுக்கு ஏற்பட்ட தீய நிலைமையை அறிந்துகொண்டார். அப்போது யாக்கோபின் மகன்கள் ஆடு மேய்ப்பதற்காகச் சற்று தூரத்தில் இருந்த சமவெளிக்குப் போயிருந்தார்கள். தங்கள் தங்கைக்கு நடந்த சம்பவம் பற்றி அவர்களுக்குத் தகவல் சென்றது. தீனாள் வழியே தங்கள் குடும்பத்துக்கு இழிவும் அவமானமும் வந்து சேர்ந்துவிட்டதாக நினைத்துக் கொதித்தனர். அந்த இழிவுக்கு முக்கியக் காரணமாக இருந்த சீகேம் மீது அவர்களது கோபம் மொத்தமாய்த் திரும்பியது. யாக்கோபுவின் மகன்கள் திரும்பி வருவதற்குள் சீகேமின் தந்தையாகிய ஏமோர் யாக்கோபோடு சமாதானம் பேசினார்.

“என் மகன் சீகேம் உங்கள் மகள் தீனாளைப் பெரிதும் விரும்புகிறான். அவளை அவன் மணந்துகொள்ளுமாறு அனுமதியுங்கள். இந்தத் திருமணம் நமக்குள் ஒரு சிறப்பான ஒப்பந்தம் உண்டு என்பதற்கு அடையாளம் ஆகட்டும். பிறகு உங்கள் ஆண்கள் எங்கள் பெண்களையும், எங்கள் ஆண்கள் உங்கள் பெண்களையும் மணந்துகொள்ளட்டும். நீங்கள் இங்கேயே எங்களோடு வாழலாம்.”என்றார். அதற்குள் தீனாள் சகோதரர்கள் வந்து சேர்ந்தார்கள்.

அங்கே வந்த சீகேமும், “தீனாளை மணக்க என்னை அனுமதிக்க வேண்டும்” என்று கெஞ்சினான். யாக்கோபின் மூத்த மகன்களோ சீகேமையும் அவனது தந்தையையும் வஞ்சிக்க விரும்பினார்கள். தங்கள் சகோதரிக்கு அவன் இழைத்த இழிவினை அவர்களால் மறக்க முடியவில்லை.

அதனால், “எங்கள் சகோதரியை நீ மணந்துகொள்ள அனுமதிக்க முடியாது. ஏனென்றால் நீ இன்னும் விருத்தசேதனம் செய்துகொள்ளவில்லை. அதனால் இந்த மணம் தவறாகும். ஆனால் நீயும் உன் நகரத்திலுள்ள அனைத்து ஆண்களும் விருத்தசேதனம் செய்துகொள்ள வேண்டும்.

அப்போது எங்கள் சகோதரியை மணந்துகொள்ள அனுமதிக்கிறோம். பிறகு நாம் ஒரே ஜனங்கள் ஆகலாம். இல்லாவிட்டால் நாங்கள் தீனாளை அழைத்துக்கொண்டு போய்விடுவோம்” என்றனர். இந்த ஒப்பந்தத்தால் ஏமோரும் அவன் மகன் சீகேமும் மகிழ்ச்சி அடைந்தனர். ஏமோரின் ஆலோசனையை ஏற்று சீகேம் நகரின் ஒவ்வொரு ஆண்மகனுக்கும் விருத்தசேதனம் செய்யப்பட்டது.

குடியைக் கெடுத்த கோபம்

இருப்பினும் கோபம் தணியாமல் இருந்த யாக்கோபின் மகன்களில் இருவராகிய சிமியோனும் லேவியும் கானான் நகரத்தவர் விருத்தசேதனம் செய்துகொண்ட மூன்றாம்நாள் சீகேம் நகருக்குள் தங்கள் வாள்களுடன் நுழைந்தனர். அங்கே எதிர்கொண்ட எல்லா ஆண்களையும் கொன்றார்கள். இறுதியில் ஏமோரையும் சீகேமையும் கொன்றுபோட்டனர். பிறகு தீனாளை அழைத்துக்கொண்டு சீகேமின் மாளிகையை விட்டு வெளியேறினர். வரும் வழியில் நகரத்தையும் அவர்கள் கொள்ளையிட்டனர்.

ஆனால் யாக்கோபு தனது இரு மகன்களின் கொடூரச் செய்கைகளுக்காக மனம் வருந்தினார். “நீங்கள் எனக்கு மிகுதியாகத் தொல்லை கொடுக்கிறீர்கள். இந்தப் பகுதியிலுள்ள அனைவரும் என்னை வெறுப்பார்கள். அனைத்து கானானியர்களும் பெரிசியர்களும் எனக்கு எதிராகத் திரும்புவார்கள். நாம் கொஞ்சம் பேர்தான் இருக்கிறோம்.

இங்குள்ள ஜனங்கள் எல்லாம் கூடி நம்மோடு சண்டைக்கு வந்தால் நாம் அழிக்கப்பட்டுவிடுவோம். நமது ஜனங்கள் அனைவரும் அழிந்து போவார்கள்”என்று கொலைவெறி பிடித்த தன் மகன்களிடம் கூறினார். அவர்களோ “எங்கள் சகோதரியை அவர்கள் ஒரு பாலியல் தொழிலாளி போன்று நடத்தினார்களே. அதை நாங்கள் அனுமதிக்க முடியுமா?” என்றார்கள். ஆனால் யாக்கோபு அங்கிருந்து உடனடியாகக் குடிபெயர்ந்து செல்லும் நிலை உருவானது.

சொந்த நாடாகிய கானானுக்குத் திரும்பிய யாக்கோபு அங்கிருந்த சீகேம் நகரத்துக்கு அருகில் தனக்கான இருப்பிடத்தை அமைத்துக்கொண்டார். கானானின் ஒரு பகுதியை ஆண்டுவந்த ஏமோர் தனது மகன் சீகேமின் பெயரால் நிறுவிய நகரம் அது.

தனது இருப்பிடத்தின் அருகிலேயே தன்னை வழிநடத்திச் செல்லும் கடவுளாகிய யகோவா தேவனுக்கு பலிபீடம் ஒன்றை எழுப்பி அவரைத் தொழுதுவந்தார். அந்தப் பகுதிக்கு ‘ஏல் எல்லோகே இஸ்ரவேல்’ என்று யாக்கோபு பெயரிட்டதால் யாக்கோபுவின் வாரிசுகள் அவர்தம் பணியாட்கள் கூட்டம் என அனைவரையும் ‘இஸ்ரவேலர்கள்’ என்று அந்த இடத்தின் பெயரால் கானானியர்கள் அழைக்க ஆரம்பித்தனர்.

ஈர்க்கப்பட்ட தீனாள்

சீகேம் நகரின் செல்வச் செழிப்பும் அதன் மிதமிஞ்சிய நாகரிகமும் அங்கே நிலவிவந்த கொண்டாட்டம் நிரம்பிய வாழ்வும் யாக்கோபுவின் மகளாகிய தீனாளை ஈர்த்தன. அந்த நகரின் ஆண்கள் பெண்கள் அணியும் ஆடைகள் அணிகள் மீதும் அவளுக்கு ஈர்ப்பு உருவானது. எனவே சீகேமில் வசிப்பவர்களோடு தீனாள் நட்பு பாராட்ட விரும்பினாள். இந்த விருப்பம் தனது குடும்பத்துக்குப் பிடிக்காது என்பதைத் தீனாள் அறிந்திருந்தாள்.

ஆபிரகாம் தன் மகன் ஈசாக்கிற்கு கானானியப் பெண்ணை மணந்துகொள்ள அனுமதிக்கவில்லை. அதேபோல் ஈசாக்கு, தனது மகன் ஏசாவைப்போலத் தங்கள் மகன் யாக்கோபுவும் கானானியப் பெண்னை மணந்துகொண்டுவிடாமல் இருக்க அவரை அவனது தாய்மாமனிடம் அனுப்பினார்கள்.

ஏன் கானானியப் பெண்களையும் கானானியர்களையும் ஆபிரகாமும் அவரது வழித்தோன்றல்களும் வெறுத்தார்கள்? ஏனெனில் அவர்கள் பிரபஞ்சத்தைப் படைத்து அதை இயக்கும் ஏகக் கடவுளாகிய யகோவா தேவனை அவர்கள் ஏற்கவில்லை. ஏற்றுக்கொண்டால் கட்டுப்பாடான வாழ்வு வாழ நேரிடும் என்று நினைத்தார்கள். ஆபிரகாமின் வழித்தோன்றல்களாகிய இஸ்ரவேலர்களைப்போல ‘விருத்தசேதனம்’ செய்துகொள்வதில் விருப்பமில்லாமல் இருந்தார்கள்.

இதனால் தாங்களே சிருஷ்டித்துக்கொண்ட பொய்க் கடவுளர்களை வணங்கத் தொடங்கினர். இதையெல்லாம் தனது தாத்தாவாகிய ஈசாக்கு மூலமும் தந்தையாகிய யாக்கோபு மூலமும் தீனாள் அறிந்துகொண்டாலும் சீகேம் நகரம் அவளைத் தன் வண்ணங்களால் வசீகரித்துக்கொண்டேயிருந்தது. சீகேம் நகரின் செல்வந்தர் வீட்டுப் பெண்களின் அறிமுகம் அவளுக்குக் கிடைத்தது. எனவே அவர்களைக் காண சீகேம் நகருக்குச் சென்றாள்.

சீகேமின் வலையில்

சீகேம் நகரின் பெண்கள் சிலரது நட்பு கிடைத்ததும் அந்த நகரத்தின் பளபளப்பு அவளுக்குப் பிடித்துப்போனது. தனது கானானியத் தோழிகளுடன் நகரை வலம் வந்துகொண்டிருந்தபோது சீகேம் அவளைக் கண்டான். அவளது அழகில் மயங்கினான். அவளது அருகில் வந்து பேச்சுக்கொடுத்தான்.

அவளது கானானியத் தொழிகள், “ நீ அதிர்ஷ்டம் செய்தவள்; சீகேம் இந்த நகரத்தின் பிரபு. அவனே உன்னை விரும்புகிறான்” என ஊக்குவித்தார்கள். அந்தக் கணத்தில் தன் அழகு, செல்வாக்கு மிக்க ஒரு இளைஞனை கவர்ந்திருக்கிறது என்றெண்ணி கர்வம் கொண்டு புன்முறுவல் பூத்தாள்.

அந்தக் கணமே சீகேம் அவளைத் தனியே வரும்படி அழைத்தான். அவனது அழைப்பை ஏற்றுச் சென்ற தீனாள் வஞ்சிக்கப்பட்டாள். தீனாளை சீகேம் தந்திரமாக அடைந்தான். அவளைவிட மனமில்லாமல் தனது மாளிகையில் அடைத்துவைத்தான். பிறகு அவளை மணந்துகொள்ள விரும்பித் தன் தந்தையிடம் தெரிவித்தான். திருமணத்துக்கு முன்பே பாலுறவு கொள்வது இஸ்ரேலியர் வாழ்முறையில் பாவமாகக் கருதப்பட்டது.

(தொடரும்)

http://tamil.thehindu.com/society/spirituality/பைபிள்-கதைகள்-12-கேடில்-முடிந்த-கூடா-நட்பு/article8764137.ece

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பகிர்வுக்கு நன்றி நவீனன்....!  தொடருங்கள்....!  tw_blush:

Link to comment
Share on other sites

பைபிள் கதைகள் 13: அண்ணன்களால் விற்கப்பட்ட தம்பி!

 

 
yukoop_2923129f.jpg
 
 
 

தீனாளுக்கு ஏற்பட்ட இழிவுக்குப் பிறகு தன் வாழ்விடத்தை விட்டு வெளியேறிய யாக்கோபு மீண்டும் பெத்தேலுக்கு வந்தார். கடந்தகால நினைவுகள் அவ மனதில் ஓடின. லாபானின் மகள்களை மணந்து பெரிய குடும்பமாய் பெருகி நின்ற யாக்கோபு தனது தாய்மாமனின் வஞ்சனையால் அராமிலிருந்து தப்பித்துச் சொந்த மண்ணுக்குத் திரும்பி வந்தபோது கடவுள் மீண்டும் அவருக்குக் காட்சியளித்தார், அப்போது கடவுள் யாக்கோபுவிடம், “ உன் பெயர் இனி யாக்கோபு என அழைக்கப்பட மாட்டாது. இக்கணம் முதல் நீ இஸ்ரவேல் எனப்படுவாய். நீ நிறைய குழந்தைகளைப் பெற்று ஒரு நாட்டை உருவாக்குவாய். புறவினத்தாரின் மக்கள் திரளும், அரசர்களும் உன்னிடமிருந்து தோன்றுவார்கள். ஆபிரகாமுக்கும் ஈசாக்குக்கும் சிறந்த இடங்களைக் கொடுத்திருந்தேன். இப்போது அதனை இஸ்ரவேலின் குடும்பமாகிய உனக்குக் கொடுக்கிறேன். உனக்குப் பின்னால் வரும் உன் பிள்ளைகளுக்கும் கொடுப்பேன்” என்று கூறியிருந்தார். இதனால்தான் அந்த இடத்துக்கு யாக்கோபு ‘பெத்தேல்’ அதாவது ‘தேவனின் வீடு’ என்று பெயர் வைத்து அங்கொரு நடுகல்லையும் நிறுத்தியிருந்தார்.

பன்னிரெண்டாவது மகன்

இம்முறை தனது இரு மகன்களின் ஆணவச் செயலால் ஓடிவந்த யாக்கோபுவுக்குப் பாதுகாப்பான இடமாக பெத்தேல் இருந்தது. இங்கே ராகேல் தனது இரண்டாவது மகனைப் பெற்றெடுத்துவிட்டு அதற்கு ‘பெனோனி’ என்று பெயர் சூட்டிய பின் இறந்துபோனாள். யாக்கோபுவோ அவனைப் பென்யமீன் என்று அழைத்தார். பிற்காலத்தில் யாக்கோபுவின் இந்த 12 மகன்களுடைய பரம்பரையிலிருந்தே இஸ்ரவேல் மக்கள் எல்லோரும் வந்தார்கள். அது மட்டுமல்ல யாக்கோபின் 10 மகன்களுடைய பெயர்களும் யாக்கோபுவின் மகன்களில் ஒருவராகிய யோசேப்பின் இரண்டு மகன்களுடைய பெயர்களும் இஸ்ரவேல் மக்களின் 12 கோத்திரத்தாருக்கும் சூட்டப்பட்டன.

பொறாமைப்பட்ட அண்ணன்கள்

யாக்கோபு தனது எல்லா மகன்களின் மீதும் மிகுந்த பிரியம் வைத்திருந்தார். என்றாலும் அவரது கடைக்குட்டிகளில் ஒருவனாகிய யோசேப் மீது உயிரையே வைத்திருந்தார். அவன் மீது சற்று அதிகமாகவே பிரியம் காட்டினார். அவனுக்கு நீளமான, ஒட்டுப்போடாத அழகு மிளிரும் ஒரு அங்கியைப் பின்னி அவனுக்குக் கொடுத்தார்.

அந்த அங்கியை அணிந்துகொண்டு ஒரு இளம் ராஜகுமாரனைப்போல் வலம் வந்த யோசேப்பு தந்தையின் சொல்லைத் தட்டாதவனாகவும் அண்ணன்கள் கூறும் வார்த்தைக்கு அடிபணிந்து நடப்பவனாகவும் இருந்தான். யோசேப் இத்தனை பணிவுடன் நடந்துகொண்டாலும் யோசேப்பிடம் மட்டும் தங்களது தந்தை இந்தளவு பாசம் காட்டுவதை அந்த 10 அண்ணன்களாலும் சகித்துக்கொள்ள முடியவில்லை. இதனால் யோசேப்பு மீது பொறாமைப்பட்டு அவனை வெறுக்க ஆரம்பித்தார்கள்.

உண்மைக்குக் கிடைத்த பரிசு

யோசேப்புவை அவனது அண்ணன்கள் வெறுத்ததற்கு மற்றொரு காரணமும் இருந்தது. யோசேப்பு இரண்டு கனவுகளைக் கண்டான். அந்த இரண்டு கனவுகளிலும் அவனுடைய அண்ணன்கள் அவனுக்கு முன்பாகத் தலைகுனிந்து வணங்கினார்கள். இந்தக் கனவுகளை யோசேப்பு மறைக்காமல் தன்னுடைய அண்ணன்களிடம் சொன்னபோது வெறுப்புற்ற அவர்கள் “இவன், நமக்கெல்லாம் அரசனாகும் கனவுடன் இருக்கிறான்” என்று கூறி மேலும் அவனை வெறுக்கத் தொடங்கினார்கள்.

ஆட்டு மந்தைகளை மேய்த்துக் கொண்டிருந்த தனது மூத்த மகன்களும் மந்தைகளும் நலமுடன் இருக்கிறார்களா என்று , பார்த்து வரும்படி யோசேப்புவை அனுப்பி வைக்கிறார் யாக்கோபு. தந்தைக்கு வணக்கம் செலுத்தி மந்தையை நோக்கிப்புறப்பட்டான்.

யோசேப்பு தூரத்தில் வருவதைப் பார்த்த அவனுடைய அண்ணன்களில் சிலர், “ இதுதான் நல்ல சமயம்; நாம் அவனை இங்கேயே கொன்று புதைத்து விடலாம்!’ என்றார்கள். ஆனால் மூத்த அண்ணனாகிய ரூபன், “வேண்டாம், அப்படிச் செய்யக் கூடாது” என்று தடுக்கிறான். எனவே யோசேப்புவை கொல்வதற்குப் பதிலாக அவனைப் பிடித்து ஒரு வறண்ட குழிக்குள் தள்ளி அதிலிருந்து வெளியே வர முடியாதவாறு செய்துவிடுகிறார்கள். பிறகு அவனை என்ன செய்யலாம் என்று பதைபதைப்புடன் யோசிக்கத் தொடங்குகிறார்கள்.

அந்தச் சமயத்தில் அந்த வழியே எகிப்து நாட்டுக்குச் சென்றுகொண்டிருந்த இஸ்மவேலர்கள் அங்கே வருகிறார்கள். மனித அடிமைகளை வாங்கிச்செல்வதில் அதிகம் விருப்பம் கொண்டவர்கள் அவர்கள். எனவே யூதா தன்னுடைய மற்ற சகோதரர்களிடம், “இந்த இஸ்மவேலருக்கு யோசேப்ப்பை நாம் விற்றுவிடலாம்” என்று சொல்கிறான்.

அதை மற்ற அண்ணன்மாரும் ஏற்றுக்கொள்ளச் சொன்னபடியே யோசேப்புவை அற்பமாக 20 வெள்ளிக் காசுகளுக்கு விற்றுவிடுகிறார்கள். அவனை அனுப்பும் முன் ஒரு அடிமைக்கு எதற்கு ஆடம்பரமான உடை என்று கூறி அவன் அணிந்திருந்த விலையுயர்ந்த அங்கியைக் கழற்றிக்கொள்கிறார்கள். கண்ணீர் மல்கத் தன் அண்ணன்களைப் பிரிந்து செல்லும் யோசேப்பு இனி ஓர் அடிமையாக எகிப்து தேசத்தில் அவர்களுக்கு வேலை செய்ய வேண்டும்.

அங்கியில் அடையாளம்

வெறுத்து ஒதுக்கிவந்த தம்பி தங்கள் கண் பார்வையிலிருந்து மறைந்த பிறகு அண்ணன்களுக்குப் பதற்றம் தொற்றிக்கொள்கிறது. யோசேப் பற்றி தந்தை யாக்கோவுக்கு என்ன பதில் சொல்வது?! மந்தையிலிருந்த ஒரு வெள்ளாட்டைக் கொல்கிறார்கள். அந்த வெள்ளாட்டின் இரத்தத்தில் யோசேப்பின் அழகிய அங்கியைத் தோய்த்து எடுக்கிறார்கள். பின்பு அந்த அங்கியைத் தங்கள் தந்தையிடம் காட்டிய அவர்கள் “அப்பா நாங்கள் இதைக் கண்டெடுத்தோம்.

இது யோசேப்பின் அங்கிதானா என்று கொஞ்சம் பாருங்கள்” என்று கேட்கிறார்கள். முதுமையிலிருந்த யாக்கோபு, யோசேப்புவுக்காக தாம் பின்னிய அங்கிதான் என்பதை அறிந்துகொண்டு கதறியழத் தொடங்குகிறார். “என் அன்பு மகனை ஒரு காட்டு விலங்கு கொன்றுவிட்டதே” என்று துடித்துத் துவண்டுபோகிறார். தந்தை இப்படி நினைத்துக்கொள்ள வேண்டும் என்பதுதான் அண்ணன்களுடைய திட்டம். தம்பியை ஒழித்துக்கட்டியதில் அந்த அண்ணன்கள் வெற்றிபெற்றார்கள்.

http://tamil.thehindu.com/society/spirituality/பைபிள்-கதைகள்-13-அண்ணன்களால்-விற்கப்பட்ட-தம்பி/article8818924.ece

Link to comment
Share on other sites

பைபிள் கதைகள் 14: நேர்மைக்குக் கிடைத்த பரிசு!

 
bible_2931577f.jpg
 
 
 

தம்பி யோசேப்பின் மீது பொறாமை கொண்ட சகோதரர்கள் அவனைக் கொல்ல மனமின்றி எகிப்துக்குச் சென்றுகொண்டிருந்த வணிகர்களிடம் விற்றுவிட்டார்கள். எகிப்தை அடைந்த வணிகர்கள் அந்நாட்டின் அரசனாகிய பார்வோனின் தலைமை அமைச்சரும் படைத் தளபதியுமாகிய போத்திப்பார் என்பவருக்கு யோசேப்பை விற்றுவிட்டார்கள்.

அடிமைகள் தங்களை விலைகொடுத்து வாங்கிய எஜமானனுக்கு நன்றியுள்ள நாயைப்போல வேலை செய்து வர வேண்டும் என்பது அந்நாட்களின் சட்டமாக இருந்தது. இருபது வயதுகூட நிறைவடையாத இளைஞன் யோசேப்புவைத் தந்தையைப் பிரிந்த துயரமும் சகோதரர்கள் தன்னை விற்றுவிட்ட வேதனையும் வாட்டின. இருப்பினும் மெல்ல மெல்ல தனது வாழ்க்கைச் சூழ்நிலையை யோசேப்பு ஏற்றுக்கொண்டார். தன்னை வழிநடத்திச் செல்லும் கடவுளை நினைவுகூர்ந்து அவரை நோக்கிப் பிரார்த்தனை செய்து வந்தார். எனவே கடவுள் எப்போதும் அவரைத் தன் உள்ளங்கையில் வைத்துக் காத்து வந்தார்.

சோதனையை வென்ற இளைஞன்

யோசேப்பு செய்கிற எல்லாச் செயல்களும் கடவுளின் உதவியால் வெற்றி பெறுவதைக் கண்டு எஜமானனாகிய போந்திப்பார் மகிழ்ச்சி அடைந்தார். யோசேப்பின் நன்னடத்தை, உழைப்பு ஆகியவற்றைப் பார்த்துத் தனது சொத்துகள் அனைத்தையும் நிர்வகிக்கும் அதிகாரியாக ஆக்கினார். இவ்வாறு எஜமானின் நம்பிக்கையைப் பெற்ற யோசேப்புவின் வளர்ச்சி பலரது கண்களை உறுத்தியது.

சில ஆண்டுகள் உருண்டோடின. அளவான உணவு, கடுமையான உழைப்பு, காலம் தவறாத பிரார்த்தனை என வாழ்க்கையை வகுத்துக்கொண்டதால் யோசேப்புவின் முகம் ஓர் இளவரசனைப்போல் ஜொலித்தது. கம்பீரமாகவும் பார்ப்பதற்கு அழகாகவும் இருந்தார். இம்முறை எஜமானின் மனைவி வழியே யோசேப்புவுக்கு ஆபத்து காத்திருந்தது. போந்திப்பாரின் மனைவி யோசேப்பின் மீது ஆசைப்பட ஆரம்பித்தாள். அவனைக் கணவன் இல்லாத நேரத்தில் அடைய விரும்பி அவனை அழைத்தாள். ஆனால் யோசேப்பு மறுத்துவிட்டார். “ என் எஜமானன் என் மீது முழு நம்பிக்கை வைத்திருக்கிறார். இந்த வீட்டில் ஏறக்குறைய என்னைத் தனக்குச் சமமாக வைத்திருக்கிறார். நான் அவரது மனைவியோடு உறவுகொள்ளக் கூடாது. இது தவறு, கடவுளுக்கு விரோதமான பாவம்” என்று எஜமானிக்கு எடுத்துரைத்தான்.

அப்போதைக்கு விலகிச் சென்ற அவள், ஒவ்வொரு நாளும் யோசேப்போடு பேசிப் பேசி அவன் மனதைக் கரைக்க முயற்சித்தாள். ஆனால் திட்டவட்டமாக மறுத்ததோடு நில்லாமல், எஜமானியின் மனதை மாற்றும்படி கடவுளிடம் பிரார்த்தனை செய்தார். ஆனால் சாத்தானின் பிடியில் இருந்த எஜமானியின் பிடிவாதம் குறையவில்லை.ஒரு நாள் வீட்டுவேலைகளில் கவனம் செலுத்திக் கொண்டிருந்த யோசேப்புவின் அங்கியை வலுவாகப் பற்றிப் பிடித்து, அவரை அணைக்க முயன்றாள். திடுக்கிட்டு பதறிய யோசேப்பு வேகமாக வீட்டை விட்டு வெளியே ஓடிப்போனார். அப்போது அவரது அங்கி எஜமானியின் கையில் சிக்கிக்கொண்டது.

சிறை வாழ்க்கையும் கனவுகளும்

எஜமானிக்கோ யோசேப்பை அடையமுடியாத ஏமாற்றம் கடும்கோபமாக மாறியது. வீட்டிலுள்ள மற்ற வேலைக்காரர்களை அழைத்து “இந்த எபிரேய அடிமை நன்றி மறந்துவிட்டான். அவன் என்னை நிர்பந்தித்து என்னை பலாத்காரம் செய்ய முயன்றான். நான் சத்தமிட்டதால் அவன் ஓடிப் போய்விட்டான். அவனது அங்கி மட்டும் என் கைகளில் சிக்கிக்கொண்டது” என்று கண்ணீர் வடித்தபடி முறையிட்டாள். மனைவி கூறிய கதையை நம்பிய போந்திப்பார் கொஞ்சமும் சிந்திக்காமல் யோசேப்புவைப் பிடித்துவரச் செய்து, பார்வோன் அரசனுடைய கொடுஞ்சிறையிலே அடைத்துவிட்டார். யோசேப்புவின் நேர்மைக்கு சிறைத் தண்டனை பரிசாகக் கிடைத்தது. ஆனால் கடவுள் யோசேப்புவைக் கைவிடவில்லை.

யோசேப்புவின் நடத்தையில் இருந்த தூய்மையைக் கண்ட சிறையதிகாரி அவரைக் கைதிகளைக் கண்காணிப்பவராக நியமித்தார். யோசேப்பு பொறுப்பாளனாக உயர்த்தப்பட்ட அந்தச் சிறைக்குப் புதிதாக இரண்டு கைதிகள் வந்து சேர்ந்தனர். அவர்கள் இருவரும் அரண்மனை ஊழியர்கள். அதுவும் அரசனின் உணவைக் கண்காணிப்பவர்கள். ஒருவன் அரசனுக்கு ரொட்டி சுடுபவன். மற்றவன் அரசனுக்குத் திராட்சை ரசம் தயாரித்துக் கொடுப்பவன். இந்த இருவரும் தனக்கு எதிராகக் குற்றம் செய்ததாக எண்ணிய அரசன் அவர்களை சிறையில் அடைத்துவிட்டான். சிறையதிகாரி, இந்த இருவரையும் யோசேப்பின் கண்காணிப்பில் வைத்தார். சிறையில் தங்கியிருந்த நாட்களில் இந்த இருவரும் வெவ்வேறு கனவுகளைக் கண்டனர். தங்கள் கனவுகளைக் குறித்த பொருள் தெரியாமல் எதிர்காலம் குறித்துக் கவலையுடன் இருந்தனர். அவர்களது வாட்டத்தைத் தெரிந்துகொண்ட யோசேப்பு கனவுளைக் கூறும்படி கேட்டார்.

திராட்சை ரசக்காரனின் கனவு

திராட்சை ரசக்காரன் தன் கனவை யோசேப்பிடம் கூறினான். “என் கனவில் நான் ஒரு திராட்சைக் கொடியைக் கண்டேன். அதில் மூன்று கிளைகள் இருந்தன. அவை வளர்ந்து பூக்கள் விட்டு கனிவதைக் கண்டேன். நான் பார்வோனின் கோப்பையை ஏந்தியிருந்தேன். எனவே அந்தத் திராட்சையைப் பிழிந்து சாறு எடுத்தேன். பிறகு அதனைப் பார்வோனுக்குக் கொடுத்தேன். இதுதான் நான் கண்ட கனவு” என்றான்.

இதைக்கேட்ட யோசேப்பு, “ நீ கண்ட கனவில் மூன்று கிளைகள் என்பவை மூன்று நாட்கள். இன்னும் மூன்று நாட்களில் பார்வோன் மன்னன் உன்னை மன்னித்து, விடுதலை செய்து, பழையபடி உன்னைத் தனது திராட்சைரசக்காரனாக ஏற்றுக்கொள்வார்” என்றவர், “நீ விடுதலையாகி அரண்மனையில் மீண்டும் பணியில் சேர்ந்ததும் என்னை நினைத்துக்கொள். மன்னனிடம் என்னைப் பற்றிக் கூறு. அவர் என்னை விடுதலை செய்வார். நான் எந்தத் தவறும் செய்யவில்லை. நான் சிறையில் இருக்க வேண்டியவன் அல்ல” என்றார்.

ரொட்டி சுடுபவனின் கனவு

இதைக் கேட்டு ஆச்சரியப்பட்ட ரொட்டி சுடுபவன் தன் கனவையும் யோசேப்பிடம் கூறினான். “என் தலையில் ரொட்டிகளால் நிறைந்த மூன்று கூடைகள் இருந்தன. அவை மன்னனுக்காக நான் சுட்ட ரொட்டிகள். ஆனால் மேல் கூடையில் இருந்த ரொட்டிகளைப் பறவைகள் தின்றுகொண்டிருந்தன ” என்றான்.

இந்தக் கனவுக்கும் பொருள் கூறிய யோசேப்பு, “உன் தலையில் இருந்த மூன்று கூடைகள் மூன்று நாட்களைக் குறிக்கும். மூன்று நாட்கள் முடிவதற்குள் நீயும் விடுதலை செய்யப்படுவாய் ஆனால் அரசன் உன் தலையை வெட்டிவிடுவான். உனது உடலைக் கம்பத்தில் தொங்கவிடுவான். பறவைகள் உன் உடலைத் தின்னும்” என்று கவலையோடு கூறினார். ரொட்டி சுடுபவனோ கதறித் துடித்தான். யோசேப்பு அவனுக்கு ஆறுதல் கூறினார்.

மூன்று நாட்கள் கடந்ததும் யோசேப்பு சொன்ன சொற்கள் பலித்தன.

உயிர் பிழைத்து அரசனின் திராட்சை ரசக்காரனாய் மீண்டும் தனது வேலையைத் தக்கவைத்துகொண்டவன் அதன் பிறகு யோசேப்புவை மறந்துபோனான்.

(பைபிள் கதைகள் தொடரும்)

http://tamil.thehindu.com/society/spirituality/பைபிள்-கதைகள்-14-நேர்மைக்குக்-கிடைத்த-பரிசு/article8848699.ece

Link to comment
Share on other sites

பைபிள் கதைகள் 15: அரசனுக்கு அடுத்த இடம்!

 

 
ey_2958324f.jpg
 
 
 

எகிப்து தேசத்தின் அரசர்களை பார்வோன் என அழைப்பது மரபு. இந்த அரசர்கள் மக்களைப் பற்றி அதிகம் கவலைப்படாத சுகபோகிகளாக இருந்தனர். பொய்க்குற்றம் சுமத்தப்பட்ட யோசேப்பு பார்வோனின் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். எனினும் கடவுள் அவரோடு இருந்தார். கனவுகளின் பலன்களை அறிந்து அவற்றை விளக்கிச் சொல்லும் ஆற்றலைக் கடவுள் அவருக்குக் கொடுத்திருந்தார்.

அரசனின் கோபத்துக்கு ஆளாகி சிறையில் அடைப்பட்டுக் கிடந்தான் அரண்மனை திராட்சைரசக்காரன். அவன் கண்ட கனவுக்கு விளக்கம் தந்தார் யோசேப்பு. “மரண தண்டனையிலிருந்து தப்பித்து நீ மீண்டும் அரசனின் அன்பையும் இழந்த வேலையையும் பெறுவாய்” என்று கூறினார் . அவ்வாறே நடந்தது. ஆனால் திராட்சைரசக்காரன் நன்றி மறந்துபோனான். யோசேப்பு பற்றி அரசரிடம் எடுத்துக் கூறுவதாக வாக்களித்துச் சென்றவன், அதை அடியோடு மறந்துபோனான். யோசேப்புவுக்குச் சிறையிலேயே இரண்டு ஆண்டுகள் கழிந்தன.

கனவில் கண்ட பசுக்களும் கதிர்களும்

இதற்கிடையில் பார்வோன் அரசர் இரண்டு கனவுகளைக் கண்டார். முதல் கனவில் நைல் நதியின் அருகில் அரசர் நின்றுகொண்டிருக்கிறார். அப்போது ஆற்றிலிருந்து ஏழு கொழுத்த பசுக்கள் வெளியே வந்து புற்களை மேயத் தொடங்கின. இப்போது மேலும் ஏழு பசுக்கள் ஆற்றிலிருந்து வெளியே வந்தன. அவை மெலிந்தும் பார்க்க அருவருப்பாகவும் இருந்தன. இவை மேய்ந்துகொண்டிருந்த கொழுத்த ஏழு பசுக்களையும் விழுங்கிவிட்டன. இந்தக் காட்சியைக் கண்டு திடுக்கிட்ட பார்வோன் கனவிலிருந்து விழித்தெழுந்தார்.

மீண்டும் தூக்கம் கண்களைத் தழுவிட, தூங்கிப்போனார். இப்போது இரண்டாவது கனவு தோன்றியது. அந்தக் கனவில் ஒரே செடியில் ஏழு செழுமையான கதிர்கள் வளர்ந்து காற்றில் கர்வத்துடன் அசைந்தாடிக் கொண்டிருந்தன. மற்றொரு செடியில் பாதிக்கும் அதிகமாய் பதர்களாய் மாறி, மெலிந்த தானியங்களைக் கொண்டிருந்த ஏழு கதிர்கள் காற்றில் அசைந்துகொண்டிருந்தன. இந்த மெலிந்த ஏழு கதிர்களும் செழுமையான ஏழு கதிர்களை விழுங்கின. இம்முறை திடுக்கிட்டு விழித்த அரசர் தூக்கம் கலைந்து கவலை கொண்டார். விடிந்ததும் ஞானிகளையும் மூப்பர்களைவும் அழைத்துத் தான் கண்ட கனவுக்கான பலன்களைக் கூறிமாறு கேட்டார். ஆனால் யாருக்கும் கனவுகளுக்கான அர்த்தம் விளங்கவில்லை. ஏமாற்றம் அடைந்த பார்வோன் குழப்பத்தில் இருந்த சமயத்தில் கோப்பையை ஏந்திவந்து அரசனிடம் நீட்டினான் திராட்சைரசக்காரன். அப்போது கனவுகளுக்கு நிஜமான விளக்கத்தைத் தரும் ஒருவரைத் தான் சிறையில் இருந்தபோது சந்தித்ததாக அரசரிடம் எடுத்துரைத்தான்.

யோசேப்புவுக்கு அழைப்பு

இதைக் கேட்ட அரசர் சிறையிலிருந்து யோசேப்புவை அழைத்து வரச்செய்தார். மூப்பர்களால் கண்டறிய முடியாத ரகசியத்தைச் சிறியவனாகவும் கானான் தேசத்தவனாகவும் இருக்கும் இந்த அந்நிய இளைஞனா நமக்குக் கூறிவிடப்போகிறான் என்று யோசேப்புவை நோக்கி அலட்சியமான பார்வையை வீசினார் அரசர். “ உன்னால் என் கனவுகளுக்கு விளக்கம் தர முடியுமா இளைஞனே?” என்றார் இளக்காரம் தொனிக்க. உடனே யோசேப்பு பணிவுடன், “என்னால் முடியாது ... ஆனால் கடவுள் உமக்காக விளக்கம் தருவார்” என்றார். பணிவும் ஞானமும் மிக்க பதிலால் மனமிறங்கிய அரசர், தன் இரு கனவுகளையும் யோசேப்பிடம் கூறினார்.

கனவுகளைத் தெளிவாகக் கேட்ட யோசேப்பு பார்வோனை நோக்கி, “ அரசே… இந்த இரண்டு கனவுகளுக்கும் ஒரே பொருள்தான். இந்தத் தேசம் எதை எதிர்கொள்ளப்போகிறது என்பதைக் கடவுள் எனக்குக் கூறிவிட்டார். அந்த ஏழு செழுமையான பசுக்கள், ஏழு செழுமையான கதிர்கள் ஆகியவை இனி வரப்போகும் ஏழு வளமான ஆண்டுகளைக் குறிக்கும். ஏழு மெலிந்த பசுக்களும், ஏழு மெலிந்த கதிர்களும் வளமான ஏழு ஆண்டுகளைத் தொடர்ந்து வந்து ஏழு ஆண்டுகள் தாக்கப்போகும் கொடும் பஞ்சத்தைக் குறிக்கும். இதையே கனவின் மூலம் கடவுள் உமக்குக் காண்பித்திருக்கிறார். இந்தக் கனவை ஓர் எச்சரிக்கையாக எடுத்துக்கொள்ளுங்கள். ஏழு ஆண்டுகளுக்கு எகிப்தில் ஏராளமான உணவுப் பொருட்கள் விளைந்து கொழிக்கும். பிறகு அடுத்து வரும் ஏழு ஆண்டுகள் பஞ்சமும் பசியும் இருக்கும். எனவே, புத்திசாலியான ஒருவரிடம் உமது நாட்டின் தானியக் களஞ்சியத்தின் பொறுப்பை ஒப்படைத்து வரப்போகும் பஞ்சத்தின் அழிவிலிருந்து உமது குடிமக்களைக் காப்பாற்றும்” என்றார்.

30 வயதில் ஆளுநர்

இதைக் கேட்டு முதலில் பயந்த அரசர், இத்தனை துல்லியமாக விளக்கம் தந்ததோடு நில்லாமல் வரப்போகும் பஞ்சத்தை எப்படிச் சமாளிக்க வேண்டும் என்ற ஆலோசனையையும் கொடுத்ததால் யோசேப்பு மீது நம்பிக்கை கொண்டார்.

“இளைஞனே..! வரப்போகும் பஞ்சத்தைக் கடவுள் உன் வழியாகத் தெரியச் செய்தார். உன்னைப்போல் அறிவுக் கூர்மையும், ஞானமும் உள்ளவர்கள் வேறு யாருமில்லை. உன்னை என் நாட்டிற்கு ஆளுநராய் ஆக்குகிறேன். உன் கட்டளைகளுக்கு என் ஜனங்கள் அடங்கி நடப்பார்கள். நான் மட்டுமே உன்னைவிட மிகுந்த அதிகாரம் பெற்றவனாக இருப்பேன்” என்று கூறி, யோசேப்புவுக்கு அரசுச் சின்னம் பொறிக்கப்பட்ட தன் முத்திரை மோதிரத்தைக் கொடுத்து பதவியில் அமர்த்தினார் அரசர்.சாப்னாத்பன்னேயா என்ற புதிய பெயரையும் யோசேப்புவுக்குச் சூட்டினார்.

அப்போது யோசேப்புக்கு 30 வயதே ஆகியிருந்தது. இத்தனை சிறிய வயதில் எங்கிருந்தோ வந்த ஒருவன் எகிப்தின் ஆளுநராக ஆனது அரசனுக்குக் கீழ் இருந்த அமைச்சர்களையும் மூப்பர்களையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.

பதவியில் அமர்ந்ததும் முதல் வேலையாகச் சிறந்த பணியாட்களைத் தேர்ந்தெடுத்தார் யோசேப்பு. நாடு முழுவதும் சுற்றுப்பயணம் தொடங்கிய யோசேப்பு, அமோக விளைச்சல் ஏற்பட்டு அறுவடையால் மக்கள் மகிழ்ச்சியில் திளைத்திருந்ததைக் கண்டார். மக்கள் தங்கள் விளைச்சலில் ஐந்தில் ஒரு பங்கை அரசனுக்குரிய வரியாகச் செலுத்த உத்தரவிட்டார். மக்கள் மனம் கோணாமல் அரசனுக்குரியதைச் செலுத்தினர். யோசேப்பு அவற்றைச் சேமித்து வைத்தார். ஒவ்வொரு நகரத்திலும் அதன் சுற்றுப்புறத்திலுள்ள தானியங்களையெல்லாம் சேமித்து வைத்தார். கடற்கரை மணலைப் போன்று எகிப்தின் தானிய சேமிப்பு குவியத் தொடங்கியது.

http://tamil.thehindu.com/society/spirituality/பைபிள்-கதைகள்-15-அரசனுக்கு-அடுத்த-இடம்/article8941882.ece

Link to comment
Share on other sites

பைபிள் கதைகள் 16: மனம் மாறிய சகோதரர்கள்

 

 
 
baibe_2976332f.jpg
 
 
 

எகிப்து தேசத்தின் அரசனாகிய பார்வோனின் கனவுகளுக்கு யோசேப்பு கொடுத்த விளக்கமும் ஆலோசனையும் நம்பக்கூடியவையாக இருந்தன. எனவே யோசேப்புவை அரசன் தனக்கு அடுத்த நிலையில் அதிகாரம் கொண்ட ஆளுநராக்கினான். யோசேப்பு கூறியதைப் போலவே அரசனின் கனவுகள் பலித்தன. ஏழு ஆண்டுகள் பெரும் விளைச்சலும் அறுவடையும் எகிப்தைக் கொழிக்கச் செய்தன. அதேபோல் அடுத்து வந்த ஏழு ஆண்டுகள் கொடிய பஞ்சத்தைக் கூட்டி வந்தன. எகிப்தை மட்டுமல்லாது எகிப்தைச் சுற்றியிருந்த பல நாடுகளையும் பஞ்சம் தாக்கியது. அதில் யோசேப்பின் தந்தையாகிய யாக்கோபு எனும் இஸ்ரவேல் வசித்து வந்த கானான் தேசமும் தப்பவில்லை. தனது செல்ல மகன் யோசேப்புவைக் கொடிய மிருகம் கொன்றுவிட்டதாகக் கூறிய மகன்களின் கூற்றை நம்பிய யாக்கோபு ஒன்பது ஆண்டுகள் ஆகியும் யோசேப்புவை மறக்க முடியாமல் இருந்தார். அதேநேரம் மற்ற 11 மகன்களின் நலன்களுக்காகக் கடவுளின் வழியில் பிறழாமல் வாழ்ந்துவந்தார்.

உணவைத் தேடி ஒரு பயணம்

எகிப்தில் உணவுப் பொருட்கள் விற்கப்படுவதை அறிந்த யாக்கோபு, “ எனதருமைப் பிள்ளைகளே.. நாம் பட்டினியால் செத்து மடிவதை விட எகிப்துக்குப் போய் உணவுப் பொருட்களை வாங்கி வந்து உயிரைக் காத்துக்கொள்ளலாம்” என்றார். அப்பாவின் பேச்சைக் கேட்டு யோசேப்பின் பத்துச் சகோதரர்களும் உணவுப் பொருட்கள் வாங்க எகிப்து நாட்டிற்குப் போனார்கள். ஆனால் ராக்கேலுக்குப் பிறந்த பென்யமீனை மட்டும் யாக்கோபு அவர்களோடு அனுப்பவில்லை. யென்மீன் கடைசியாகப் பிறந்தவன். யோசேப்பின் மீது அப்பாவைப் போலவே அதிக பாசம் வைத்திருந்தவன். சிறுவனாக இருக்கும் யென்மீனை அனுப்பினால் அவனுக்கும் ஏதாவது கேடு ஏற்படலாம் என்று யாக்கோபு பயந்தார். எனவே அவனை மட்டும் தன்னோடு வைத்துக்கொண்டு மற்ற பத்து மகன்களையும் தானியம் வாங்கிவர அனுப்பினார்.

அடையாளம் தெரியவில்லை

கானானிலிருந்து எகிப்துக்கு புறப்பட்டுச் சென்ற பெருங்கூட்டத்துடன் பத்துச் சகோதரர்களும் பயணப்பட்டார்கள். பெரும் களைப்பு மேலிட எகிப்தை அடைந்து தானியங்கள் விற்கப்படும் களஞ்சியத்துக்கு வந்து சேர்ந்தார்கள். அங்கே கம்பீரமான அரியணையில் ஆளுநருக்கு உரிய அரச உடையில் யோசேப்பு அமர்ந்திருந்தார். அவருக்கு முன்பாக வந்து நின்ற யோசேப்பின் சகோதரர்கள் பத்து பேரும் அவரைக் குனிந்து வணங்கி நின்றனர். “என்னை நீங்கள் வணங்குவதுபோல் நான் கனவு கண்டேன்” என்று கூறியது அவர் நினைவுக்கு வந்தது. காரணம் இப்போது யோசேப்பு தன் சகோதரர்களைப் பார்த்ததும், உடனே அடையாளம் கண்டுகொண்டார். ஆனால் அவர்களால் யோசேப்புவை அடையாளம் கண்டுகொள்ள முடியவில்லை.

தனது சகோதரர்கள் முன்புபோலவே மனம் திருந்தாதவர்களாகவும் பொறாமைக்காரர்களாகவும் இருக்கிறார்களா என்பதைக் கண்டறிய அவர்களைத் தெரிந்துகொண்டதைப்போல் காட்டிக்கொள்ளாமல் அவர்களிடம் கடுமையாக நடந்துகொண்டார். “ நீங்கள் எங்கேயிருந்து வருகிறீர்கள்?” என்று கோபமான தொனியில் கேட்டார். அவர்கள், “ நாங்கள் கானான் பகுதியிலிருந்து வருகிறோம். உணவுப் பொருட்களை வாங்குவதற்காக வந்தோம்” என்றனர். ஆனால் யோசேப்பு “ இல்லை; நீங்கள் கானானிலிருந்து வந்திருக்கும் உளவாளிகள்போல் இருக்கிறீர்கள். எங்கள் தேசத்தில் என்ன குறை இருக்கிறதென்பதை உளவறிய வந்திருக்கிறீர்கள்” என்றார்.

ஆளுநராகிய யோசப்பு இப்படிக் கூறியதும் பத்துச் சகோதரர்களும் பதறிப்போனார்கள். ஏனெனில் அந்நாட்களில் உளவாளிக்கு விசாரணை ஏதுமற்ற மரண தண்டனை விதிக்கப்பட்டது. “ இல்லை, நாங்கள் உளவாளிகள் இல்லை. நாங்கள் அனைவரும் சகோதரர்கள். யாருக்கும் தீங்கு செய்ய நினைப்பவர்கள் அல்ல. நாங்கள் மொத்தம் 12 பேர். ஆனால் ஒரு தம்பி காணாமல் போய்விட்டான். கடைசித் தம்பி, வீட்டில் எங்கள் அப்பாவோடு இருக்கிறான். எங்களை நம்புங்கள் ஐயா” என்று கைகூப்பி நின்றார்கள்.

யோசேப்பு வைத்த பரீட்சை

தன் சகோதரர்கள் இப்போது மாறியிருக்கிறார்கள் என்று யோசேப்பு உணர்ந்துகொண்டாலும் அவர்களை நம்பாததுபோல் நடித்தார். அந்தப் பத்துப் பேரில் தனது அண்ணன் சிமியோனை மட்டும் சிறையில் வைத்துவிட்டு, மற்றவர்கள் வேண்டிய மட்டும் தானியங்களை எடுத்துக்கொண்டு வீட்டுக்குப் போகும்படி அனுமதித்தார். ஆனால் அவர்களிடம் ஒரு நிபந்தனை விதித்தார். “ உங்கள் தானியங்கள் தீர்ந்ததும் நீங்கள் திரும்பி எகிப்துக்கு வரும்போது உங்கள் கடைசித் தம்பியையும் கூட்டிக்கொண்டு வர வேண்டும். அப்போதுதான் உங்கள் அண்ணன் சிமியோனை விடுதலை செய்வேன்” என்றார்.

வேறு வழியின்றி தானியங்களுடன் தங்கள் வீட்டுக்குப் போய்ச் சேர்ந்தபோது, நடந்த அனைத்தையும் தங்கள் தந்தையிடம் சொன்னார்கள். யாக்கோபு இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்தார். யோசேப்புவை இழந்ததைப் போல் யென்மீனையும் நான் இழக்க வேண்டுமா எனக்கேட்டுக் கலங்கினார். ஆனால் தானியம் கொஞ்சம் கொஞ்சமாகத் தீர்ந்துபோனது. எனவே மீண்டும் உணவு வாங்கி வருவதற்காக பென்யமீனை எகிப்துக்கு அழைத்துச் செல்ல அனுமதிப்பதைத் தவிர யாக்கோபுவுக்கு வேறு வழியில்லாமல் போனது.

http://tamil.thehindu.com/society/spirituality/பைபிள்-கதைகள்-16-மனம்-மாறிய-சகோதரர்கள்/article9002283.ece

Link to comment
Share on other sites

பைபிள் கதைகள் 17: தன்னை வெளிப்படுத்திய யோசேப்பு

 

 
bible_2994537f.jpg
 
 
 

ஏழு ஆண்டுகள் கொடிய பஞ்சம் தலைவிரித்தாடிய எகிப்து தேசத்தில் யோசேப்பின் திட்டமிடலால் தானியக் களஞ்சியம் நிரம்பியிருந்தது. குடிமக்களுக்கும் அந்நிய நாட்டிலிருந்து வரும் மக்களுக்கும் தானியத்தை விற்றதால் கஜானா நிறைந்து வழிந்தது. யோசேப்புவின் தந்தை யோக்கோபுவும் அவரது 11 சகோதரர்களும் வசித்து வந்த கானான் தேசத்தையும் பஞ்சம் தாக்கியதால் எகிப்துக்கு வந்தனர். தங்களால் அடிமையாக விற்கப்பட்ட சகோதரன் யோசேப்புதான் அந்நாட்டின் ஆளுநர் என்பதை அறியாமல் அவர் முன் பணிந்து வணங்கி தானியத்தை வாங்கிச் சென்றனர். தனது சகோதரர்களை அறிந்துகொண்ட யோசேப்புவோ அதை வெளிக் காட்டிக்கொள்ளாமல் அண்ணன் சிமியோனைச் சிறைவைத்துவிட்டு “உங்கள் கடைசி தம்பி பென்யமினை அழைத்து வாருங்கள். அப்போது நீங்கள் அந்நிய நாட்டின் உளவாளிகள் அல்ல என்று நம்புகிறேன்” என்று கூறியனுப்பினார்.

விருந்தும் விடுதலையும்

தன் அண்ணன்கள் சிமியோசனை மீட்டுச் செல்லவும் திரும்பவும் தானியம் வாங்கிச் செல்லவும் தனது தம்பி பென்யமினை அழைத்துக்கொண்டு கண்டிப்பாக மீண்டும் வருவார்கள் என்று நம்பினார் யோசேப்பு. அவரது நம்பிக்கை வீண்போகவில்லை. தானியங்கள் தீர்ந்துபோனதும் மீண்டும் அவர்கள் வந்தார்கள். சகோதரர்களையும் தன்னுடைய தம்பி பென்யமீனையும் கண்டதும் பாசத்தால் அவர் மனம் துள்ளியது. மிகவும் சந்தோஷமடைந்தார். ஆனால் தம்பி பென்யமினுக்குமே யோசேப்புவை அடையாளம் தெரியவில்லை. வாக்களித்தபடி சிமியோனை விடுதலை செய்தார். அவர்கள் அனைவருக்கும் அரச விருந்தளித்துக் கவுரவித்தார்.

ஆளுநரின் பணியாட்களும் பாதுகாவலர்களும், “அகதிகள் போல் தானியம் கேட்டு வந்தவர்களை அரச விருந்தினர்களாகக் கவுரவிக்கிறாரே!” என்று ஆச்சரியப்பட்டனர். யோசேப்பு யாரைப் பற்றியும் கவலைப்படாமல் தன் சகோதரர்களிடம்… “உங்கள் வயதான தந்தை எப்படி இருக்கிறார்? இப்போதும் அவர் உயிரோடும் நலமாகவும் இருக்கிறாரா?” என்று கேட்டார். சகோதரர்கள் அனைவரும், “ஆமாம் ஐயா, அவர் இன்னும் உயிரோடு இருக்கிறார்”என்றனர். மீண்டும் அவர்கள் யோசேப்பைப் பணிந்து வணங்கினார்கள். அவர்கள் தானியங்களைப் பெற்றுக்கொண்டு திரும்ப முடிவு செய்தபோது தன் சகோதரர்கள் திருந்திவிட்டார்களா என்பதைச் சோதிப்பதற்கு இறுதியாக ஒரு நாடகம் நடத்த முடிவுசெய்தார்.

திருட்டுப் பழி

அவர்கள் அனைவரது சாக்குகளிலும் தானியத்தை நிரப்பும்படி தன்னுடைய பணியாளர்களுக்கு ஆணையிட்டார். அதேநேரம் பென்யமீனுடைய சாக்குப் பையில் யாருக்கும் தெரியாமல் தன்னுடைய வெள்ளிக் கோப்பையைப் போடும்படி சொன்னார். பணியாளர்கள் அவ்வாறே செய்தனர். அவர்கள் எல்லோரும் புறப்பட்டு கொஞ்ச தூரம் போன பிறகு, தன்னுடைய பணியாளர்களை அனுப்பி அவர்களைப் பரிசோதிக்கும்படி கூறினார். அவர்களைத் துரத்திப் பிடித்து பென்யமினின் தானியப்பையைச் சோதனையிட்ட பணியாளர்கள், அதிலிருந்து வெள்ளிக்கோப்பையை வெளியே எடுத்துக்காட்டி “எங்கள் எஜமானரின் விலை மதிப்புமிக்க கோப்பையை ஏன் திருடினாய்?” என்று கேட்டு பென்யமினை மட்டும் கைதுசெய்து அழைத்து வந்தனர். துடித்துப்போன மற்ற 10 சகோதரர்களும் திரும்பவும் ஆளுநர் மாளிகைக்கு வந்தார்கள்.

யோசேப்பு தன் அண்ணன்மாரிடம், ‘நீங்கள் எல்லோரும் வீட்டுக்குப் போகலாம். ஆனால் பென்யமீன் மட்டும் என் அடிமையாக இங்கேயே இருக்க வேண்டும்’ என்றார். அப்பொழுது மூத்த சகோதரர்களில் ஒருவனாகிய யூதா “ஐயா, இவன் இல்லாமல் நான் வீட்டுக்குப் போனால் என் அப்பா செத்தே விடுவார். ஏனென்றால் இவன் மீது அவர் உயிரையே வைத்திருக்கிறார். அதனால் தயவுசெய்து என்னை உம்முடைய அடிமையாக இங்கே வைத்துக்கொண்டு இவனை எனது மற்ற சகோதரர்களோடு வீட்டுக்குத் திரும்ப அனுமதியுங்கள்” என்று கெஞ்சினார்.

யூதாவின் வார்த்தைகள் மூலம் தனது தந்தையின் மீதும் தன் உடன்பிறந்த தம்பி மீதும் அவர்கள் நிஜமான பாசம் வைத்திருப்பதை யோசேப்பு உணர்ந்துகொண்டார். தனது சகோதரர்கள் முற்றாக மாறிவிட்டிருப்பதை அறிந்து கொண்டதால் பொங்கியெழுந்த உணர்ச்சிப்பெருக்கை யோசேப்புவால் கட்டுப்படுத்திக்கொள்ள முடியவில்லை. அங்கிருந்தவர்களின் முன்னால் அவர் உள்ளம் நெகிழ்ந்து கண்ணீர் சிந்தினார். ஆளுநர் தங்கள் முன்னால் அழுவதைக் கண்டு குழப்பிப்போனார்கள்.

தன் சகோதரர்களைத் தவிர மற்ற அனைவரையும் மாளிகைக்கு வெளியே அனுப்பிய யோசேப்பு “என்னருகே வாருங்கள். நான் உங்களின் சகோதரன் யோசேப்பு. எகிப்திய வியாபாரிகளிடம் உங்களால் விற்கப்பட்டவன். இப்போது அதற்காக வருத்தப்படாதீர்கள். நீங்கள் செய்தவற்றுக்காக உங்களையே கோபித்துக்கொள்ளாதீர்கள். இங்கே நான் வர வேண்டும் என்பது தேவனின் திட்டம். உங்கள் வாழ்க்கையைக் காப்பாற்றவே இங்கே இருக்கிறேன். இந்தப் பஞ்சம் இன்னும் ஐந்து ஆண்டுகள் நீடிக்கும். ஆகவே தேவன் என்னை உங்களுக்கு முன்னதாக அனுப்பி இருக்கிறார். அதனால் உங்களைக் காப்பாற்ற முடியும். என்னை இங்கே அனுப்பியது உங்களது தவறு அல்ல. இது தேவனின் திட்டம்”என்றார்

தெளிவு பிறந்தது

அப்படியும் பயந்து பின்வாங்கிய சகோதரர்களை அருகில் அழைத்து ஒவ்வொருவராகக் கட்டியணைத்து முத்தமிட்டார். யோசேப்புவை ஸ்பரிசித்தபிறகே அவர் தங்கள் சகோதரன்தான் என்பதை உணர்ந்த அவர்கள் பாசப்பெருக்கினால் அழத் தொடங்கினார்கள். இந்தக் காட்சியைக் கண்ட எகிப்தியர்கள் ஆச்சரியப்பட்டுப்போனார்கள். யோசேப்பு தன் சகோதரர்களிடம், “வேகமாக நம் தந்தையிடம் போங்கள். உங்கள் மகன் யோசேப்பு இந்தச் செய்தியை அனுப்பியதாகக் கூறுங்கள். கடவுள் என்னை எகிப்தின் ஆளுநராக ஆக்கினார். எனவே என்னிடம் வாருங்கள். காத்திருக்க வேண்டாம். இப்போதே வாருங்கள். என்னோடு கோசேன் நிலப்பகுதியில் வாழலாம். நீங்களும், உங்கள் பிள்ளைகளும், பேரப்பிள்ளைகளும், மிருகங்களும் இங்கே வரவேற்கப்படுகிறீர்கள். இனி வரும் ஐந்தாண்டு பஞ்சத்திலும் உங்கள் அனைவரையும் பாதுகாத்துக்கொள்வேன். உங்களுக்குரிய எதையும் இழக்க மாட்டீர்கள் என்று கூறுங்கள்” என்றார்.

http://tamil.thehindu.com/society/spirituality/பைபிள்-கதைகள்-17-தன்னை-வெளிப்படுத்திய-யோசேப்பு/article9059322.ece

Link to comment
Share on other sites

பைபிள் கதைகள் 18 - இஸ்ரவேல் என்ற இனம் உருவாதல்!

 

 
bibl_3002118f.jpg
 
 
 

தன் அன்புக்குரிய செல்ல மகன் யோசேப்புவை மிருகம் அடித்துக் கொன்றுவிட்டதாக இத்தனை காலம் நம்பியிருந்தார் யாக்கோபு. கடவுளால் இஸ்ரவேல் என்று பெயர் சூட்டப்பட்ட அவரிடம், “ யோசேப்பு மரிக்கவில்லை; எகிப்தின் ஆளுநராக இருக்கிறார். நாம் அனைவரையும் எகிப்தில் குடியேறி வாழ அழைக்கிறார்” என்று தனது மகன்கள் வந்து கூறியதும் மரணத்திலிருந்து மீண்டு வந்தவரைப் போல மகிழ்ந்தார். தனது குடும்பத்தினர், மந்தைகள், பணியாளர்கள் அனைவருடனும் அவர் எகிப்துக்குப் பயணமானார்.

மனநிறைவுடன் இறப்பேன்

தன் தந்தை வருவதை அறிந்த யோசேப்பு தன் தேரைத் தயார் செய்துகொண்டு, அவரை எதிர்கொண்டு அழைத்துவரக் கிளம்பிப்போனான். பெருந்திரளான மந்தையும் தன் மக்களுமாய் யோக்கோபு வருவதைக் கண்ட யோசேப்பு தன் பழைய நினைவுகளால் கலங்கிப்போனார். இயற்கையுடன் இரண்டறக் கலந்த, அமைதியான மேய்ப்பர்களின் குடும்ப வாழ்க்கையை அவர் அப்போது எண்ணிப் பார்த்தார். அப்படிப்பட்ட வாழ்க்கையைத் தான் இழந்திருந்ததையும் எண்ணி ஏங்கினார். தன் தந்தையைப் பார்த்ததும் ஓடிப்போய் மார்போடு அவரைக் கட்டிப் பிடித்துக்கொண்டு நீண்ட நேரம் அழுதான்.

பின்னர் சமாதானமாகி மகன் யோசேப்புவின் முகத்தைப் பார்த்த இஸ்ரவேல் (யாக்கோபு), “இப்போது நான் மனநிறைவுடன் இறந்துபோவேன். உன் முகத்தைப் பார்த்துவிட்டேன். இன்னும் நீ உயிரோடு இருக்கிறாயே. அதுவே எனக்குப் போதும்” என்றார்.

கோசேனில் குடியேறிய குடும்பம்

யோசேப்பு தன் சகோதரர்களிடமும் அவர்களின் குடும்பத்தினரிடமும் எகிப்தில் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்பதை எடுத்துக்கூறினார். “ நான் இப்போது போய் எனது மன்னரிடம் நீங்கள் இங்கே அடைக்கலம் தேடி வந்திருப்பது பற்றிக் கூறும்போது, “என் தந்தையும் சகோதரர்களும் அவர்களது குடும்பமும் கானான் நாட்டை விட்டு என்னிடம் வந்திருக்கிறார்கள். அவர்கள் அனைவரும் மேய்ப்பர் குடும்பத்தினர். அவர்கள் ஆடு மாடுகளையும் அவர்களுக்குரிய அனைத்தையும் கொண்டு வந்திருக்கிறார்கள் என்பேன். அவர் உங்களை அழைத்து, நீங்கள் என்ன வேலை செய்கிறீர்கள் என்று கேட்டால், நாங்கள் மேய்ப்பர்கள், மேய்ப்பதுதான் எங்கள் தொழில். எங்கள் முற்பிதாக்களும் மேய்ப்பர்கள்தான் என்று சொல்லுங்கள். பிறகு பார்வோன் மன்னன் உங்களை கோசேன் பகுதியில் வாழ அனுமதிப்பார். எகிப்தியர்கள் மேய்ப்பர்களை விரும்ப மாட்டார்கள். எனவே நீங்கள் கோசேனில் இருப்பதுதான் நல்லது” என்றார்.

யோசேப்பு கூறியதைப் போலவே நடந்தது. யோசேப்பின் தந்தையும் அவரது சகோதரர்களும் வந்திருப்பதை பார்வோன் மன்னன் கேள்விப்பட்டான். ஆவலோடு அவர்களை வந்து சந்தித்து முதியவராய் இருந்த இஸ்ரவேலிடம் ஆசீர்வாதம் பெற்றுக்கொண்டான். பின்னர் “எகிப்து முழுவதிலுமுள்ள நிலங்களிலேயே மிகச் சிறந்த நிலத்தை நான் உங்களுக்குக் கொடுப்பேன்” என்று கோசேன் நிலப்பகுதியை அவர்களுக்குக் கொடுத்தான். இஸ்ரவேலின் குடும்பம் எகிப்தின் கோசேனில் குடியேறி வாழத் தொடங்கியது.

இஸ்ரவேலர் என்ற இனம் உருவாதல்

இஸ்ரவேல் என்று கடவுளால் பெயர் சூட்டப்பட்ட யாக்கோபு எகிப்துக்கு புலம்பெயர்ந்த சமயத்தில் யாக்கோபு, அவருடைய பிள்ளைகள், அவர்களின் மனைவியர், பேரப் பிள்ளைகள், வேலைக்காரர்கள் என நூற்றுக்கும் அதிகமாக இருந்தார்கள். இவர்கள் எல்லோரும் எகிப்தில் குடியேறினார்கள். இவர்கள் இஸ்ரவேலர் என்ற இனமாக எகிப்தியர்களால் அழைக்கப்பட்டார்கள். இஸ்ரவேல் எகிப்தில் 17 ஆண்டுகள் வாழ்ந்த பின்பு தனது 147 வயதில் மரித்தார்.

இஸ்ரவேல் மரித்ததும் யோசேப்பு மிகவும் துக்கப்பட்டார். இஸ்ரவேல் ஆளுநரின் தந்தை என்பதால் எகிப்தியர்கள் அவரது இறப்பை அரச துக்கமாக அனுசரித்தார்கள். யோசேப்பு தனது 11 சகோதரர்களுடன் இணைந்து தந்தைக்கு இறுதிச் சடங்குகள் செய்தான். தந்தை சொன்னபடியே அவரது உடலைக் கானானுக்குள் எடுத்துச் சென்று மக்பேலாவில் அடக்கம் செய்தனர். அப்போது பார்வோன் மன்னனின் படைப் பிரிவும் வந்ததது. கானான் நாட்டின் மக்கள் அனைவரும் திரண்டு வந்து இஸ்ரவேலுக்கு அஞ்சலி செலுத்தினார்கள். அடக்கம் முடிந்த பிறகு யோசேப்புடன் அனைவரும் எகிப்துக்குத் திரும்பினார்கள்.

யோசேப்பை அறியாத அரசன்

யோசேப்பு தொடர்ந்து எகிப்தில் தன் சகோதரர்களின் குடும்பத்தோடு வசித்துவந்தான். 110 வயதானபோது அவனும் மரணமடைந்தான். யோசேப்பின் மறைவுக்குப் பிறகு அவனது சகோதரர்களும் தங்கள் பழுத்த முதுமையில் மரித்தார்கள். ஆனால் அவர்களின் வாரிசுகள் பல குடும்பங்களாகப் பல்கிப் பெருகத் தொடங்கினார்கள். இஸ்ரவேலின் ஜனங்களின் எண்ணிக்கை ஆண்டுகள்தொறும் பெருகிக்கொண்டே இருந்தது. இஸ்ரவேலின் ஜனங்கள் வலிமையுடையோரானார்கள். எகிப்து நாடு இஸ்ரவேலரால் நிரம்பிற்று. அப்போது யோசேப்பை அறிந்திராத புதிய அரசன் எகிப்தை ஆட்சிசெய்துவந்தான்.

அந்த அரசன் தனது ஜனங்களை நோக்கி, “ இஸ்ரவேலின் ஜனங்களைப் பாருங்கள்! அவர்கள் மிக அதிகமாக இருக்கிறார்கள்! நம்மைக் காட்டிலும் அவர்கள் பலம் மிக்கவர்கள்! இஸ்ரவேலர் பலம் பொருந்தியவர்களாய் வளர்ந்துகொண்டிருப்பதைத் தடை செய்ய நாம் திட்டங்கள் வகுக்க வேண்டும். போர் ஏற்படுமானால், இஸ்ரவேலர் நமது பகைவரோடு சேர்ந்துகொள்வதுடன், நம்மைத் தோற்கடித்து, நம்மை ஆட்சிசெய்யக்கூடும். அதற்கு முன் அவர்களை அடிமையாக்குவதே நமக்குப் பாதுகாப்பு” என்றான்.

இஸ்ரவேல் மக்களின் அமைதியான வாழ்க்கையைச் சிதைக்கும் நோக்கத்துடன், அவர்களைக் கண்காணிக்க அவர்களுக்கு மத்தியில் எகிப்திய மேற்பார்வையாளர்களை அரசன் நியமித்தான். இஸ்ரவேலர் மெல்லத் தங்கள் சுதந்திரத்தை இழக்கும் முதல் புள்ளியாக அதுவே அமைந்தது.

http://tamil.thehindu.com/society/spirituality/பைபிள்-கதைகள்-18-இஸ்ரவேல்-என்ற-இனம்-உருவாதல்/article9084719.ece

Link to comment
Share on other sites

பைபிள் கதைகள் 19: ஒடுக்கப்பட்ட மக்களுக்காக ஒரு குழந்தை

 

 
story_3010753f.jpg
 
 
 

ஈசாக்கின் இரண்டு மகன்களில் யாக்கோபுவைக் கடவுள் தனக்காகத் தேர்ந்தெடுத்தார். அவருக்கு ‘இஸ்ரவேல்’ என்று பெயரிட்டார்.

இஸ்ரவேலுக்கு மொத்தம் 12 மகன்கள் . அவருக்குச் சில மகள்களும் இருந்தனர். இஸ்ரவேலின் மூத்த மகன்கள் பத்துப் பேரும் தங்களது தம்பியான யோசேப்பை வெறுத்துவந்தார்கள். அதனால் எகிப்து தேசத்து வியாபாரிகளிடம் ஓர் அடிமையாக அவரை விற்றுவிட்டார்கள். ஆனால் யோசேப்புவுடன் கடவுள் இருந்தார்.

அவரை எகிப்து தேசத்தின் ஆளுநர் ஆக்கினார். எகிப்தையும் அதைச் சுற்றியுள்ள நாடுகளைக் கொடிய பஞ்சம் தாக்கியது. அப்போது தானியம் வாங்கிச் செல்ல எகிப்துக்கு வந்த தன் அண்ணன்களின் மனம் மாறியிருக்கிறதா என்பதை அவர் பரிசோதித்துப் பார்த்தார்.

அவர்கள் மனம் மாறியிருப்பதைக் கண்ட யோசேப்பு அவர்களை மன்னித்து, தனது தந்தை இஸ்ரவேலையும் சகோதரர்களின் குடும்பம் முழுவதையும் எகிப்தில் குடியேறச் செய்தார். இஸ்ரவேலர்கள் அங்கே ஒரு மக்கள் இனமாகப் பெருங்கூட்டமாய் ஆனார்கள்.

இப்படி அவர்கள் எகிப்தில் சுமார் 215 ஆண்டுகள் வாழ்ந்தார்கள். யோசேப்புவைப் பற்றி அறியாத ஒரு அரசன் எகிப்தை ஆண்டபோது இஸ்ரவேலர்கள் அங்கு அடிமைகளாக ஆக்கப்பட்டார்கள். அடிமைத்தளையிலிருந்து அவர்களை விடுவிக்கக் கடவுள் மோசேயைப் பிறக்கச் செய்தார். எகிப்திலிருந்து இஸ்ரவேலரை விடுவித்துப் புதிய நிலப்பரப்புக்கு அவர்களை அழைத்துவர மோசேயைக் கடவுள் பயன்படுத்தினார்.

வரலாறு அறியாத மன்னன்

எகிப்தில் குடியேறிய இஸ்ரவேலர்கள் முதலில் மேய்ப்புத் தொழிலையும் பிறகு அதனோடு தொடர்புடைய பயிர்த் தொழிலையும் செய்து முன்னேறினார்கள். அதனால் அவர்களது சமூக நிலை உயர்ந்தது. இதனால் எண்ணிக்கையிலும் இஸ்ரவேலர்கள் பெருகியபடியே இருந்தார்கள். எனினும் தங்களுக்கு அடைக்கலம் தந்த எகிப்தியர்களை அவர்கள் பகைத்துக்கொள்ளவில்லை. அவர்களோடு சமாதானமாய் வாழ்ந்தார்கள். ஆனால் எகிப்தின் ஆளுநராய் இருந்த யோசேப்பின் மறைவுக்குப் பிறகு நிலைமை மாறியது. காலங்கள் கடந்துசென்றதில் யோசேப்புவின் புகழ் மறைந்தது. ஒரு இஸ்ரவேலன் எகிப்தின் ஆளுநராய் இருந்ததை வரலாறு மூலம்கூட அறிந்துகொள்ளாத புதிய பார்வோன் மன்னன் எகிப்தின் மன்னனாக முடிசூட்டப்பட்டான்.

அவன் தனது ஜனங்களிலிருந்து இஸ்ரவேலர்கள் தோற்றத்திலும் அந்தஸ்திலும் வேறுபட்டிருந்ததைக் கவனித்தான். இஸ்ரவேலர்கள் யார், அவர்களது பூர்வீகம் என்ன என்பதைத் தனது முதிய அமைச்சர்கள் மூலம் தெரிந்துகொண்டான். இதன் பின்னர் இஸ்ரவேலரை அவனுக்குப் பிடிக்காமல் போய்விட்டது. அதனால் இந்தப் புதிய பார்வோன் மன்னன் இஸ்ரவேலரை வந்தேறிகளாக அறிவித்தான்.

விடுதலை மறுக்கப்பட்டவர்கள்

பிழைக்க வந்த தேசத்தில் அடிமைகளாக மட்டுமே வாழ முடியும் என்று அவர்களை இரண்டாந்தரக் குடிமக்களாக்கினான். அவர்களுக்கு விடுதலை மறுத்தான். எகிப்தை விட்டுத் தப்பிச் செல்ல முயன்றவர்களைக் கொன்றொழித்தான். அவர்களை மேற்பார்வையிடுவதற்குக் கண்பாணிப்பாளர்களை நியமித்தான். இவர்கள் துளியும் இரக்கமற்றவர்களாக மாறி இஸ்ரவேலரைத் துன்புறுத்தத் தொடங்கினார்கள்.

இஸ்ரவேலர்களின் உடல்பலத்தைக் குறைப்பதற்காக, பித்தோம், ராமசேஸ் ஆகிய இரண்டு நகரங்களை பார்வோன் மன்னனுக்காகக் கட்டும்படி இஸ்ரவேலரைக் கட்டாயப்படுத்தி வேலை வாங்கினார்கள். இதற்காக இஸ்ரவேலர்கள் அறியாத தொழிலாக இருந்த செங்கல்லும், சாந்தும் செய்யும்படியாகவும் சுமைகளைத் தூக்கும்படியாவும் அவர்களை அடிமாட்டைப் போல் நடத்தினார்கள்.

பல்கிப் பெருகிய இஸ்ரவேல் மக்கள்

வயல்களிலும் கடினமாக உழைக்கும்படியாக மாற்றி வெறும் உணவுக்காக அவர்களைப் பிழிந்தெடுத் தார்கள். இஸ்ரவேல் மக்களை எந்த அளவுக்கு எகிப்தியர்கள் ஒடுக்கினார்களோ அந்த அளவுக்கு அவர்கள் பெருகிப் பரவினார்கள். இதனால் முன்பைக் காட்டிலும் இஸ்ரவேல் மக்களைக் கண்டு எகிப்திய மக்கள் அதிகப் பதற்றமும் பயம் கொண்டனர். தனது வழியிலேயே மக்களின் மனமும் இருப்பதைக் கண்ட பார்வோன் மன்னன் ஒரு மூர்க்கமான புதிய முடிவை எடுத்தான்.

ஒரு குழந்தை மட்டும் தப்பியது!

இஸ்ரவேல் பெண்களின் பிரசவ காலத்தில் அவர்களுக்கு மகப்பேறு பார்க்கும் இரண்டு மூத்த மருத்துவச்சிகள் இருந்தனர். சிப்பிராள், பூவாள் என்று அழைக்கப்பட்ட அவர்கள் இஸ்ரவேல் வழிவந்த எபிரேய மூதாட்டிகள். அவர்கள் கடவுளுக்குப் பணிந்தவர்களாய் இருந்தனர். அவர்களை அழைத்துப் பேசிய பார்வோன் மன்னன் “இஸ்ரவேல் பெண்களின் பிரசவத்தின்போது பெண் குழந்தை பிறந்தால் அக்குழந்தை உயிரோடிருக்கட்டும். குழந்தை ஆணாக இருந்தால் அதை நீங்கள் கொன்றுவிட வேண்டும்!” என்று அவர்களுக்குக் கட்டளையிட்டான். ஆனால் மருத்துவச்சிகள் மன்னனின் கட்டளைக்குக் கீழ்ப்படியவில்லை. அவர்கள் எல்லா ஆண் குழந்தைகளையும் உயிரோடு விட்டனர்.

இதனால் கோபம் கொண்ட பார்வோன் மன்னன் தன் படைச் சேவகர்களை அழைத்து “இஸ்ரவேலரின் எல்லா ஆண் குழந்தைகளையும் கொன்று போடுங்கள். பெண் குழந்தைகள் மட்டும் உயிரோடி ருக்கட்டும்”என்று கட்டளையிட்டான். அவன் கட்டளைப்படியே சேவகர்கள் ஆண் குழந்தைகளை வீடுவீடாகத் தேடிப்போய்க் கொன்றார்கள். ஆனால் இந்த ஆண் குழந்தைகளில் ஒரு குழந்தை மட்டும் தப்பித்துக்கொண்டது. அந்தக் குழந்தைதான் மோசே!

http://tamil.thehindu.com/society/spirituality/பைபிள்-கதைகள்-19-ஒடுக்கப்பட்ட-மக்களுக்காக-ஒரு-குழந்தை/article9110511.ece

Link to comment
Share on other sites

பைபிள் கதைகள் 20: நதியில் மிதந்து வந்த உயிர்

 

 
bibl_3018900f.jpg
 
 
 

இஸ்ரவேலர்களுக்குப் பிறக்கும் ஆண் குழந்தைகளை மட்டும் வீடுவீடாகத் தேடிச் சென்று படுகொலை செய்யும்படி புதிய பார்வோன் மன்னன் உத்தரவிட்டான். இந்தக் கொடிய செயலால் எகிப்து தேசம், ஆண் குழந்தைகளைப் பெற்ற தாய்மார்களின் மரண ஓலத்தால் எதிரொலித்தது.

மறைக்கப்பட்ட குழந்தை

பார்வோனின் இந்தக் கொடிய செயலால் கோபமுற்ற கடவுள், இஸ்ரவேல் மக்களைக் காக்க முடிவு செய்தார். யாக்கோபுவின் மூத்த மகன்களின் மூன்றாவது மகன் லேவியின். வம்சாவளியில் மோசேயைப் பிறக்கச் செய்தார். மோசேயின் தாய் பார்வோனின் படை வீரர்கள் கண்களில் பட்டுவிடாதவாறு குழந்தை மோசேயை மூன்று மாதங்கள் மறைத்துவைத்தாள்.

தனது குழந்தை கண்டுபிடிக்கப் பட்டால் எந்நேரமும் கொல்லப்படலாம் என்பதால் மோசேயைக் காப்பாற்ற முடிவுசெய்தாள். மிதக்கும் நாணல் தட்டைகளால் ஆன வேலைப்பாடுகள் நிறைந்த ஓர் அழகிய கூடையைச் செய்தாள். அதற்குள் தண்ணீர் கசிந்து மூழ்கிவிடாதவாறு கீல் பூசி, குழந்தையை அக்கூடையில் வைத்தாள். பிறகு நைல் நதியின் கரையோரம் உயரமான புற்களிடையே கூடையை மிதக்கவிட்டாள்.

குழந்தை மோசேயின் அக்கா மிரியம் சிறுமியாக இருந்தாள். அவளிடம் “நீ இங்கேயே நின்று குழந்தையை யாரும் கவனிக்கிறார்களா என்று பார்த்துக்கொள்” என்று கூறிவிட்டு தூரமாகச் சென்று மறைந்துகொண்டாள். அம்மா சொன்னபடியே அங்கே காத்திருந்தாள் மிரியம்.

மன்னனின் மகள் வந்தாள்

அப்போது பார்வோன் மன்னனின் மகளும் நாட்டின் இளவரசியுமானவள் நதியில் நீராடுவதற்காகத் தனது பணிப்பெண்களோடு அங்கே வந்தாள். உயர்ந்த நாணல் புற்களிடையே மிதந்துகொண்டிருந்த கூடை அவளது கண்களில் பட்டது. திறந்த நிலையில் இருந்த அந்தக் கூடையில் கை, கால்களை அசைத்தவாறு ஜொலித்துக்கொண்டிருந்த குழந்தை மோசேயைக் கண்டாள். உடனடியாகக் கூடையை எடுத்து வருமாறு தனது ஊழியக்காரியைப் பணித்தாள். வியப்புடன் குழந்தையை அருகில் கண்ட அவள், அதனருகில் மண்டியிட்டு அதை ஆச்சரியத்துடன் கவனித்தாள்.

அழுது கொண்டிருந்த குழந்தை மோசே, இளவரசியைக் கண்டு சிரித்தது. மழலைக் குரலில் அவளை நோக்கிக் குரல் எழுப்பியது. இளவரசி அதற்காக மனமிரங்கினாள். குனிந்து தன் விரலை நீட்டியதும், அக்குழந்தை அவளது விரலைப் பற்றிக்கொண்டது. அக்கணமே அது தனக்கான குழந்தை என்ற முடிவுக்கு வந்தாள். “இத்தனை அழகான ஆண் குழந்தையா? இதை கடவுள் எனக்குப் பரிசாகக் கொடுத்திருக்கிறார்” என்றாள். அது இஸ்ரவேலர் இனத்தைச் சேர்ந்த குழந்தை என்பதை அவள் கண்டதுமே தெரிந்துகொண்டாலும் அந்தக் குழந்தையைக் காப்பாற்ற விரும்பி அதனைத் தன்னுடன் அரண்மனைக்கு எடுத்துச் செல்ல விரும்பினாள்.

பெற்றவளே பேணிக் காப்பவள் ஆனாள்

தனது தம்பியைச் சாவிலிருந்து கடவுள் மீட்டுவிட்டதை அறிந்து மனம் நிறைந்த சிறுமி மிரியம், இளவரசியின் அருகில் ஓடி வந்து, “நான் போய் குழந்தைக்குப் பாலூட்டுவதற்கும், அதைக் கவனித்துக்கொள்வதற்கும் ஒரு எபிரெயப் பெண்ணை அழைத்து வரட்டுமா? “ என்றாள்.

இளவரசியும், “ சரியான யோசனை தந்தாய். தயவுசெய்து அப்படிப்பட்ட ஒரு பெண்ணை உடனே அழைத்து வா” என்றாள். துள்ளிக் குதித்து ஓடிய மிரியம் தூரத்தில் மறைந்திருந்த தன் தாயிடம் நடந்தவற்றை எடுத்துகூறி தாயையே இளவரசிக்கான பணிப்பெண்ணாக அழைத்துவந்தாள். மோசேயின் தாயைக் கண்ட இளவரசி, “குழந்தையை எடுத்துசென்று எனக்காகப் பாலூட்டி வளர்த்து வா. அவனைக் கவனித்துக்கொள்வதற்காக உன்னைப் பணியில் அமர்த்துகிறேன்” என்றாள்.

குழந்தை வளர்ந்தது. அதைத் தன் சொந்த மகனாகவே ஏற்றுக் கொண்ட இளவரசி, தண்ணீரிலிருந்து அவனைக் கண்டெடுத்ததால் மோசே என்று பெயரிட்டாள்.

சொந்த ரத்தங்களுக்காகத் துடித்த இதயம்

மோசே இளைஞர் ஆனார். அரண்மனையில் வளர்ந்தாலும் தாமொரு இஸ்ரவேலன் என்பதையும் தனது தாய்மொழி எபிரேயம் (ஹீப்ரூ) என்பதையும் உணர்ந்துகொண்டார். தனது சொந்த உறவுகளாகிய இஸ்ரவேலர்கள் எகிப்தில் அடிமைகளாக இருப்பதையும் எகிப்தியருக்காகக் கடினமாக உழைப்பதற்கு வற்புறுத்தப்படுவதைக் கண்டார். இதனால் அவர் மனம் கொதித்தது. விடுதலை உணர்ச்சி அவருக்குள் பொங்கியது. அப்போது ஒரு சம்பவம் அவர் கண் முன்னால் நடந்தது.

இஸ்ரவேல் அடிமை ஒருவனை, எகிப்திய மனிதன் ஒருவன் கண்மூடித் தனமாக அடித்துக்கொண்டிருப்பதைக் கண்டார். இந்தக் காட்சியைக் கண்டு வெகுண்ட மோசே, சுற்றிலும் நோக்கி, யாரும் தன்னைக் கவனிக்கவில்லை என்பதை உறுதிசெய்துகொண்டார். பின் மோசே, அந்த எகிப்தியனைக் கொன்று, அந்த இடத்திலேயே மண்ணில் புதைத்தார். இதற்குச் சாட்சியாக இருந்த இஸ்ரவேலர்கள் பலரும் மோசேயை நம்பிக்கையுடன் நோக்கினார்கள்.

ஆனால் எகிப்தியனை மோசே கொன்ற நிகழ்ச்சியை பார்வோன் மன்னன் தெரிந்துகொண்டார். அதற்காக மோசே அஞ்சினார். அவர் அஞ்சியதுபோலவே ஆனது. மோசேயைக் கொல்ல மன்னன் முடிவு செய்தான். ஆனால் பார்வோனிடமிருந்து தப்பி ஓடிய மோசே, எகிப்து நாட்டிலிருந்து வெளியேறி மீதியான் நாட்டிற்குச் சென்றார்.

(மோசேயின் கதை தொடரும்)

http://tamil.thehindu.com/society/spirituality/பைபிள்-கதைகள்-20-நதியில்-மிதந்து-வந்த-உயிர்/article9135504.ece

Link to comment
Share on other sites

பைபிள் கதைகள் 22: மோசேயிடம் பேசிய கடவுள்

 

mose_3035288f.jpg
 
 
 
இஸ்ரவேலர்கள் மத்தியில் புரட்சியை ஏற்படுத்தி, அவர்களை எகிப்தின் அடிமைத் தளையிலிருந்து விடுவித்துச் செல்லும் கலகக்காரனாக மோசே மாறக்கூடும் என்று பயந்தான் பார்வோன் மன்னன். அதனால் மோசேயைக் கண்டுபிடித்துக் கொல்லும்படி ஆணையிட்டான். உயிரைக் காத்துக்கொள்ள எகிப்திலிருந்து தப்பித்து ஒடிய மோசே, வறட்சியும் பாலைவனச் சோலைகளும் கொண்டிருந்த மீதியான் நாட்டின் எல்லைக்குள் நுழைந்தார்.

 

அங்கே ஆண்கள், பெண்கள் எனப் பலரும் ஆட்டு மந்தைகளை மேய்த்துக்கொண்டிருந்ததை மோசே கண்டார். மோசே மந்தைகளை மேய்த்தவர் இல்லை என்றாலும் அவரது பெற்றோர் மற்றும் முன்னோர்களின் குலத்தொழிலாக மேய்ப்புத் தொழிலே இருந்ததால், அங்கே மேய்ப்பர்களையும் கனிவான முகங்களைக் கொண்ட பெண்களையும் கண்ட அவரது மனதில் நிம்மதியும் அமைதியும் உண்டானது. அவர் இளைப்பாறுவதற்காக அங்கே இருந்த கிணற்றருகே சென்றார் மோசே. அப்பகுதியில் இருந்த ஒரே கிணறு அது.

 

தலைமை குருவின் தயவு

அங்கே பிரதான மேய்ப்பனாகவும் பல நூறு குடும்பங்களுக்குத் தலைமை மதகுருவாகவும் இருந்தார் எத்திரோ. அவருக்கு ஏழு புதல்வியர் இருந்தனர். அவர்கள் ஆண் பிள்ளைகளைப்போல் தங்களது கிடைகளை மேய்த்துப் பேணிக் காத்துவந்தனர். மோசே கிணற்றருகே சென்றபோது அப்பெண்கள் மிகுந்த சிரமத்துடன் தண்ணீர் இறைத்து தொட்டிகளை நிரப்பி தங்களது ஆடுகளுக்குக் காட்டிக்கொண்டிருந்தனர். ஆனால் அங்கே வந்து சேர்ந்த சில ஆண் மேய்ப்பர்கள் அப்பெண்களை மிரட்டிக் கிணற்றை விட்டு அகன்று செல்லுமாறு பயங்காட்டினார்கள்.

இதனால் அச்சமடைந்த அவர்கள் கலக்கமுற்று நகர, அவர்களைத் தடுத்து நிறுத்தினார், உயிருக்குப் பயந்து ஓடிவந்த மோசே. “வீணாகப் பயம் காட்டுகிறவர்களை நினைத்து அஞ்சத் தேவையில்லை” என்று நம்பிக்கை தந்த அவர், அவர்களது ஆடுகளுக்குத் தண்ணீர் இறைத்துக் கொடுத்தார். “வாட்டசாட்டமான இந்த ஆண்மகன் யார்? எளிதில் மிரண்டுபோகும் இப்பெண்களுக்கு அரணாக இருக்கட்டும் என்று எகிப்திலிருந்து எத்திரோவால் தருவிக்கப்பட்டிருப்பானோ?” என்று முணுமுணுத்தவாறு அந்த மேய்ப்பர்கள் பின்வாங்கினர்.

பிறகு ஆடுகளுடன் கூடாரத்துக்குத் திரும்பிய பெண்கள் தந்தையிடம் ஓடிச் சென்று தங்களுக்கு உதவிய எகிப்திய மனிதனைப் பற்றிக் கூறினார்கள். எத்திரோ தன் மகளிரிடம் “அம்மனிதர் எங்கே? ஏன் அவரை விட்டுவிட்டு வந்தீர்கள்? அவரைப் போய் அழையுங்கள், நம்மோடு அவர் உணவருந்தட்டும்” என்றார். அவர் இவ்வாறு சொல்லிக்கொண்டிருக்கும்போதே மோசே அவர்களது கூடாரத்தை நெருங்கி வந்துகொண்டிருந்தார். அவரை வரவேற்ற எத்திரோ “அடைக்கலம் தேடும் உம் கண்களில் அமைதி உண்டாகட்டும். எங்களோடு நீர் இங்கே தங்கிவிடும்” என்று கூறி ஆதரவு தந்தார்.

 

குடும்பமும் குழந்தையும்

அப்பகுதியின் தலைமைக்குரு தனக்குக் காட்டிய தயவைக் கண்டு மோசே அவர்களோடு தங்குவதில் மகிழ்ச்சியடைந்தார். நாட்கள் எரிநட்சத்திரங்களைப்போல் வீழ்ந்தன. எத்திரோ தன் மூத்த மகளாகிய சிப்போராளை மோசேக்குத் திருமணம் செய்து வைத்தார். மோசே, சிப்போராள் தம்பதிக்கு ஒரு மகன் பிறந்தான். அவனுக்குக் கெர்சோம் என்று பெயரிட்டனர். தனக்குச் சொந்தமில்லாத நாட்டில் ஓர் அகதியைப்போல் புலம்பெயர்ந்து வாழ்ந்தமையால் மோசே அவனுக்கு இப்பெயரைச் சூட்டினார்.

மாமனாரின் குடும்பத்துக்கு நன்றியுள்ள மருமகனாக அவர்களது மந்தைகளை திறம்படக் காத்து பெருக்கி வந்தார். எத்திரோவோ உலகைப் படைத்த ஒரே கடவுளாகிய பரலோகத் தந்தையை வணங்கவில்லை. மனிதர்களால் சிருஷ்டிக்கப்பட்ட சிலைகளை வணங்கி வந்தனர். மோசே அக்கடவுளரை வணங்க மனமின்றி வழிபாடுகளில் கலந்துகொள்ளாமல் தவிர்த்து வந்தார். ஏற்கெனவே வெயிலால் வாடிவந்த மீதியானின் கோடைக்காலம் வாட்டியது. காய்ந்த புற்களும் கூட இல்லாமல் ஆடுகள் பசியால் வாடுவதை அவரால் தாங்கிக்கொள்ள முடியவில்லை.

 

ஒரேப் மலை அனுபவம்

எனவே ஆடுகளுக்குத் தேவையான புல்லைத் தேடிக் கண்களுக்குப் பசுஞ்சோலையாகக் காட்சியளித்த ஓரேப் மலைக்கு தன் ஆடுகளோடு வந்து சேர்ந்தார். ஆடுகள் வயிறாரப் புற்களை மேய்ந்துகொண்டிருந்தன. இக்காட்சியைக் கண்டு மோசேயின் மனம் நிறைந்தது. அந்தச் சமயத்தின் அங்கே அவருக்கு ஓர் எதிர்பாராத அனுபவம் ஏற்பட்டது. பசுமையான செடிகள் சூழ்ந்த புதர் ஒன்று எரிந்துகொண்டிருந்தது. பெரும் சுவாலைகளோடு எரிந்துகொண்டிருந்தாலும் அப்புதரில் இருந்த செடிகளும் இலைகளும் பூக்களும் நெருப்பால் கருகிப்போகாமல் அப்படியே இருந்தன. இது எப்படிச் சாத்தியம் என்று அதிசயித்தவாறே எரியும் புதர் அருகே சென்று கவனித்தார் மோசே.

அவர் புதரின் அருகில் சென்றபோது அதிலிருந்து ஒரு குரல் ஒலித்தது. “மோசே… அங்கேயே நில்! நெருப்பின் அருகில் வராதே. உன் பாதணிகளைக் கழற்றி வை. ஏனென்றால் நீ நிற்கிற இந்த இடம் புனிதமானது.” ஆம்! ஒரு வானதூதன் மூலமாகக் கடவுள் மோசேயுடன் பேசினார். அப்போது மோசே தன் முகத்தை மூடிக் கொண்டார்.

கடவுள் தொடர்ந்து பேசினார் “எகிப்தில் என் மக்கள் படுகிற துன்பத்தைக் கண்டேன். அவர்களை நான் விடுவிக்கப்போகிறேன். என் மக்களை எகிப்திலிருந்து வெளியே கொண்டுவர நான் உன்னைத்தான் அனுப்பப் போகிறேன்” என்றார். மோசே மெல்ல கண்களைத் திறந்து பார்த்தார்.

http://tamil.thehindu.com/society/spirituality/பைபிள்-கதைகள்-22-மோசேயிடம்-பேசிய-கடவுள்/article9191286.ece?ref=relatedNews

Link to comment
Share on other sites

பைபிள் கதைகள் 23: பாம்பாக மாறிய கைத்தடி!

 

bible_3042803f.jpg
 
 
 

பசும்புற்களைத் தேடி ஓரேப் மலைக்குத் தன் ஆடுகளோடு வந்து சேர்ந்தார் மோசே. அங்கே அவருக்கு எதிர்பாராத இறையனுபவம் ஏற்பட்டது. இலைகள், பூக்கள் என எதுவும் கருகிவிடாமல் எரிந்துகொண்டிருந்த புதர், மோசேயை அச்சமும் ஆச்சரியமும் கொள்ள வைத்தது. அந்தப் புதரை எரிய வைத்த கடவுள், அது புனிதமான இடம் என்பதை மோசேவுக்குப் புரியவைத்தார். அங்கே தனது தூதன் வழியே மோசேயிடம் அவர் பேசினார்.

“எகிப்திலிருந்து என் மக்களை நான் மீட்டு வரப்போகிறேன். அதற்காக அங்கே செல்லும்படி நான் உன்னை அனுப்புகிறேன்” என்றார் பரலோகத் தந்தையாகிய கடவுள். ஆனால் மோசே, “நான் மிகச் சாதாரணமானவன். இதை என்னால் எப்படிச் செய்ய முடியும்? அப்படியே நான் சென்றாலும் ‘உன்னை யார் அனுப்பியது?’ என்று இஸ்ரவேலர்கள் என்னைக் கேட்பார்களே… அதற்கு நான் என்ன பதில் சொல்வது?” என்று கேட்டார். அதற்கு பரலோகத் தந்தையானவர், “ஆபிரகாமின் கடவுளும், ஈசாக்கின் கடவுளும், யாக்கோபின் கடவுளுமான யகோவா என்னை உங்களிடம் அனுப்பினார் என்று அவர்களுக்குச் சொல்” என்று பதிலளித்தார். “அவர்கள் நம்பாவிட்டால் நான் என்ன செய்வது?” என்று மோசே திரும்பக் கேட்டார்.

பாம்பாக மாறிய கைத்தடி

அதற்கு கடவுள் “உன் கையில் என்ன இருக்கிறது?” என்று கடவுள் திரும்பக் கேட்டார். “ ஒரு கைத்தடி இருக்கிறது” என்று மோசே பதிலளித்தார். “அதைக் கீழே போடு “ என்றார். கடவுள் சொன்னபடியே மோசே அதைக் கீழே போட்டார். உடனே அந்தக் கைத்தடி ஒரு பாம்பாக மாறியது. மோசே அதைக் கண்டு பயந்து அங்கிருந்து ஓடி முயன்றார். கர்த்தர் மோசேயை நோக்கி, “பயப்படதே… கையை நீட்டி, பாம்பின் வாலைப் பிடி” என்றார். மோசே கையை நீட்டிப் பாம்பின் வாலைப் பிடித்தார். மோசே அவ்வாறு செய்தபோது, பாம்பு மீண்டும் கைத்தடியாக மாறியது. அப்போது கடவுள், “உனது கைத் தடியை இவ்வாறு பயன்படுத்து. அப்போது நீ என்னைக் கண்டதை நம்புவார்கள்”என்றார். மோசேயின் முகத்தில் நம்பிக்கை படருவதைக் கடவுள் கண்டார்.

பின் கடவுள், “ உனக்கு மற்றொரு அடையாளத்தையும் தருவேன். உனது கையை இப்போது அங்கிக்குள் நுழை” என்றார். மோசே பணிவுடன் தன் அங்கிக்குள் கையை நுழைத்தார். மோசே கையை வெளியே எடுத்தபோது, உறைந்த பனியைப் போன்ற வெள்ளைப் புள்ளிகளால் கை நிரம்பியிருந்தது. இதைக் கண்ட மோசே தனது கை நோய்வாய்ப்பட்டிருப்பதை எண்ணி பயந்தார்.

அப்போது கடவுள், “உனது கையை மீண்டும் அங்கிக்குள் நுழைத்து வெளியே எடு” என்றார். மோசே அவ்வாறே செய்ய, அவரது கை முன்பிருந்ததைப்போலவே ஆரோக்கியமான கையாக மாறியது.

நாவை அளித்த கடவுள்

அப்போது கடவுள், “ நீ உனது கைத்தடியைப் பயன்படுத்தும்போது ஒருவேளை ஜனங்கள் உன்னை நம்பாவிட்டாலும், இந்த அடையாளத்தைக் காட்டும்போது, அவர்கள் உன்னை நம்புவார்கள். இதன் பிறகும் மக்கள் உன்னை நம்ப மறுத்தால், நைல் நதியிலிருந்து கொஞ்சம் தண்ணீரை அள்ளி, அதனைத் தரையில் ஊற்று. அது நிலத்தைத் தொட்டதும் இரத்தமாக மாறும்” என்றார்.

ஆனால் மோசே கடவுளை நோக்கி, “தேவனே, நான் உமக்கு ஓர் உண்மையைச் சொல்கிறேன். நான் தேர்ந்த பேச்சாளன் அல்ல. நான் நிதானமாகப் பேசுகிறேன் என்பதும், சிறந்த வார்த்தைகளைப் பயன்படுத்தாத எளியவன் என்பதும் உமக்குத் தெரியும்”என்று கூறினார். அப்போது கடவுள் அவனை நோக்கி, “மனிதர்களாகிய உங்களுக்கு வாயையும் மொழியையும் படைத்தது யார்? எனவே நம்பிக்கையிழக்காமல் நீ புறப்பட்டுப் போ.. நீ பேசும்போது நான் உன்னோடு இருப்பேன். நீ சொல்ல வேண்டிய வார்த்தைகளை நான் உனக்குத் தருவேன்”என்றார். மேலும் “இப்போது நீ எகிப்துக்குத் திரும்பிப் போவதற்குப் பொருத்தமான தருணம் இதுவே. உன்னைக் கொல்ல விரும்பிய அரசனும், எகிப்தியர்களும் இறந்து போய்விட்டனர்”என்று மோசேயைத் திடப்படுத்தினார்.

எகிப்துக்குப் புறப்பட்ட மோசே

மிகுந்த நம்பிக்கை மிக்கவராக மோசே மாறினார். எரியும் புதர் முன் முழந்தாள் இட்டிருந்த மோசே அவ்விடத்தைப் பணிந்து வணங்கிவிட்டு, வயிறு நிறைய மேய்ந்திருந்த தனது மந்தையுடன் வீடு போய்ச் சேர்ந்தார்.

இரவுணவின்போது, தனது மாமனாராகிய எத்திரோவிடம் மோசே பேசினார். “எகிப்தில் என் உறவினர்களாகிய இஸ்ரவேலர்க்கள் எப்படியிருக்கிறார்கள் என்று பார்த்துவர விரும்புகிறேன். தயவுசெய்து என்னை அனுமதியுங்கள்” என்று கேட்டார். கேட்டுக்கொண்டபடியே, “சமாதானத்தோடு போய்வாருங்கள் மோசே”என்று எத்திரோ அனுமதியளித்தார். மிகவும் மகிழ்ந்த மோசே, பல நாட்கள் பயணதுக்குத் தேவையான உணவுப்பொருட்களை கட்டிக்கொண்டு, தன் மனைவியையும், குழந்தைகளையும் கழுதையின்மேல் ஏற்றிக்கொண்டு, எகிப்தை நோக்கித் தனது பயணத்தைத் தொடங்கினார். கடவுளின் வல்லமையைப் பெற்றிருந்த தனது கைத்தடியையும் மோசே மறக்காமல் எடுத்துக்கொண்டார். இந்தத் தலைவனின் வருகைக்காக அந்த தேசம் காத்திருந்தது.

( மோசேயின் கதை தொடரும்)

Link to comment
Share on other sites

பைபிள் கதைகள் 24: வாக்களித்த தேசத்தைத் தருவேன்

 

 
bible_3051096f.jpg
 
 
 

கடவுளின் வழிநடத்துதலை ஏற்று, மோசே தனது குடும்பத்துடன் எகிப்து நோக்கிப் பயணித்தார். பாலைவனத்தில் வந்துகொண்டிருந்தபோது ‘கடவுளின் மலை’என்ற இடத்தில் மோசேயை சந்தித்து வரவேற்றார் ஆரோன். அவர் எகிப்தில் வசித்து வந்த மோசேயின் சகோதரர். அவர் தேர்ந்த பேச்சாளரும்கூட. கடவுள் ஆரோனின் கனவில் தோன்றி மோசே எகிப்துக்குத் திரும்பி வருவதைப் பற்றிக் கூறியிருந்தார். பிறகு மோசேயிடம் “எகிப்தில் என் மக்களை மீட்க நீ போராடும்போது, ஆரோன் உனது இரண்டு கரங்களைப் போல் துணையாக இருப்பான்.

இஸ்ரவேல் மக்களிடமும் பாரவோனிடமும் பேசுவதற்கு அவன் உன்னோடு வருவான். அரசனின் முன்னால் நீ ஒரு பேரரசனைப் போலிருப்பாய்; உனக்குரிய பேச்சாளனாக ஆரோன் இருப்பான்” என்று கடவுள் ஓரேப் மலையில் மோசேவுக்கு ஏற்கெனவே கூறியிருந்தார். இப்போது ஆரோன் எதிர்கொண்டு வந்து தன்னைச் சந்தித்ததும் தனது கடவுள் எத்தனை வல்லமை மிக்கவர் என்பதில் மோசே மேலும் விசுவாசம் வைத்தார்.

மக்களைவிட மறுத்த அரசன்

மோசேயும் ஆரோனும் முதலில் இஸ்ரவேல் மக்களிடம் பேசினார்கள். இஸ்ரவேலர்களும் பரலோகத் தந்தையாகிய யகோவா தேவனின் மேல் விசுவாசம் கொண்டார்கள். பிறகு, மோசேயும் ஆரோனும் பார்வோன் மன்னனிடம் சென்று அவனைச் சந்தித்தனர். அப்போது அவர்கள், “உலகைப் படைத்த இஸ்ரவேல் மக்களின் கடவுளாகிய யகோவா, தேவனுக்குப் பாலைவனத்தில் போய் பண்டிகை கொண்டாடி அவரை கவுரவப்படுத்துவதற்கு மூன்று நாட்கள் விடுப்பு அளித்து எங்கள் மக்களைப் போகவிடுங்கள்” என்று கோரிக்கை வைத்தனர்.

இதைக் கேட்ட மன்னன் “நீங்கள் கூறும் கடவுள் யார் என்றுகூட எனக்குத் தெரியாது. அவருக்கு நான் ஏன் கீழ்ப்படிய வேண்டும்? நான் இஸ்ரவேலரை எங்கும் போக அனுமதிக்க மாட்டேன்” என்றான். மோசேயும் ஆரோனும் ஏமாற்றதுடன் திரும்பி வந்தனர். ஆனால் அரசன் எச்சரிக்கையடைந்தான். தங்கள் கடவுளை வணங்குவதற்காக வேலையிலிருந்து விடுப்பு எடுக்க இஸ்ரவேலர்கள் அனைவரும் விரும்புகிறார்கள் என்பதை அறிந்த மன்னனுக்கு பயங்கரக் கோபம் வந்தது.

இதனால் இஸ்ரவேல் மக்களை முன்பைவிடவும் கடினமாக உழைக்கும்படி கட்டாயப்படுத்தினான். அரசன் நம்மை மேலும் வாட்டுவதற்கு மோசேயும் ஆரோனுமே காரணம் என்று நினைத்த இஸ்ரவேலர்கள் பொறுமையிழந்து பேசத் தொடங்கினார்கள். இதனால் மோசேயையும் ஆரோனையும் வசைபாடத் தொடங்கினார்கள்.

சிறந்த தேசத்தை அளிப்பேன்

இதைக் கண்டு மிகுந்த மன உளைச்சலில் இருந்த மோசேயிடம் கடவுள் மீண்டும் பேசினார். “பார்வோனிடம் மீண்டும் போய் இஸ்ரவேலர்களைப் போகவிடும்படியாகக் கூறு” என்றார். ஆனால் மோசே, “இஸ்ரவேல் மக்களே எனக்குச் செவிசாய்க்க மறுக்கிறார்கள்! எனவே பார்வோனும் நான் சொல்வதைக் கேட்க மாட்டான். நான் பேசத் திறமையில்லாதவன்” என்று வருந்திப் பதில் கூறினான்.

அதற்குக் கடவுள், “மோசேயே மனம் தளராதே… உனது முன்னோர்களாகிய ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு ஆகியோரைத் தேர்ந்தெடுத்து நான் அவர்களுக்குக் காட்சியளித்தேன். நான் அவர்களோடு ஒரு உடன்படிக்கை செய்துகொண்டேன். கானான் தேசத்தை அவர்களுக்குக் கொடுப்பதாக வாக்களித்தேன். அவர்கள் அத்தேசத்தில் வாழ்ந்தார்கள். ஆனால் அது அவர்களின் சொந்த தேசமல்ல. அதனால் அவர்களுக்கு ஒரு விசேஷமான தேசத்தை அளிப்பதாக வாக்களித்தேன். அந்த வாக்குறுதியை நிறைவேற்றும் நேரம் நெருங்கிவிட்டது.

என் மக்கள் எகிப்தில் அடிமைகளாக இருப்பதை இனியும் நான் அனுமதிக்க மாட்டேன். எகிப்திலிருந்து அவர்களை மீட்டு அழைத்து வரும் நான், அவர்களுக்கு வாக்களித்த புதிய தேசத்துக்கு வழிநடத்துவேன். அது என்றென்றைக்கும் அவர்களுடையதாக இருக்கும். இதையே நீ இஸ்ரவேலர்களுக்கு எடுத்துச் சொல்” என்றார். கடவுளின் உத்தரவுக்கு மோசேயும் ஆரோனும் கீழ்ப்படிந்தனர். அவ்வாறே இஸ்ரவேலர்களுக்குச் சொல்ல, அவர்கள் இழந்த நம்பிக்கையை மறுபடியும் பெற்றுக்கொண்டார்கள்.

விடாமுயற்சி

80 வயதுக் கிழவனாக இருந்த மோசேயும் 83 வயதுக் கிழவனாக இருந்த ஆரோனும் தங்கள் முதுமை குறித்த பயமின்றிச் செயல்பட்டனர். இதனால் இஸ்ரவேலர்களின் மத்தியில் செல்வாக்குப் பெற்ற தலைவர்கள் ஆனார்கள். கடவுளின் உத்தரவை ஏற்று மீண்டும் பார்வோனைச் சந்தித்தனர். அப்போது ஆரோன் தனது கைத்தடியைக் கீழே போட்டார், அது ஒரு பெரிய பாம்பாக மாறியது. பார்வோனுடைய அவையில் இருந்த கண்கட்டி வித்தைக் கலைஞர்களும் தங்கள் கோல்களைக் கீழே போட்டார்கள், அவையும் பாம்புகளாக மாறின.

ஆனால், ஆரோனின் பாம்போ, அந்தக் கலைஞர்கள் உருவாக்கிய பாம்புகளைப் பிடித்து விழுங்கியது. அப்படியிருந்தும் அசைந்துகொடுக்காத பார்வோன் இஸ்ரவேல் மக்களைப் போக விடவில்லை. எனவே, பார்வோனுக்கு கடவுள் பாடம் புகட்ட முடிவுசெய்தார்.

http://tamil.thehindu.com/society/spirituality/பைபிள்-கதைகள்-24-வாக்களித்த-தேசத்தைத்-தருவேன்/article9244301.ece

Link to comment
Share on other sites

பைபிள் கதைகள் 25: வாட்டி வதைத்த வாதைகள் பத்து

 

 
bible_3066849f.jpg
 
 
 

எகிப்தியருக்கு அடிமையாக வாழ்ந்துகொண்டு பெரும் துன்பத்தை அனுபவித்துவந்த இஸ்ரவேலர்களை விடுவிடுவிக்க கடவுள் சித்தம் கொண்டார். அதற்காக மோசேயை எகிப்தின் மன்னனாகிய பார்வோனிடம் அனுப்பினார். 80 வயது மோசே, தனது சகோதரர் ஆரோனுடன் பார்வோன் மன்னனைச் சந்தித்து கடவுள் அருளிய அடையாளங்களை அற்புதங்களாகச் செய்து காண்பித்தார். அதற்கெல்லாம் அசைந்துகொடுக்காத மன்னன், மக்களை விட மறுத்தான். இனி எகிப்தியரைத் தண்டிப்பதைத் தவிர வேறு வழியில்லை என்ற முடிவுக்கு வந்தார் கடவுள்.

எகிப்தியருக்குப் பத்து விதமான கஷ்டங்களை உண்டாக்கியதன் மூலம் பார்வோன் மன்னனை நிலைகுலையச் செய்தார் கடவுள்.

ரத்தமாய் மாறிய நதி

எகிப்தியர்கள் நைல் நதியைத் தங்கள் உதிரமெனப் போற்றிவந்தவர்கள். அப்படிப்பட்ட நைல் நதியின் பளிங்குபோன்ற தண்ணீர் முழுவதும் ரத்தமாக மாறினால் அதை அவர்களால் பொறுத்துக்கொள்ள முடியுமா? கடவுள் உத்தரவிட்டபடி ஆரோன் தன் கைத்தடியால் நைல் நதியில் அடிக்க, அடுத்த நொடியே நதியின் தண்ணீர் ரத்தமாக மாறியது. மீன்கள் கொத்துக் கொத்தாய் செத்து மிதந்தன. இதனால் நதியில் துர்நாற்றம் வீசத் தொடங்கியது. எகிப்தியர்கள் திகைத்துப் போனார்கள். ஆனால் மன்னன் பயப்படவில்லை.

அதனால் நைல் நதியிலிருந்து தவளைகள் கூட்டங்கூட்டமாகப் படையெடுத்து நகரத்துக்குள் வரும்படி செய்தார் கடவுள். ஒவ்வொரு வீட்டிலும் தவளைகள் நிறைந்தன. அடுப்புகளிலும் சமையல் பாத்திரங்களிலும் படுக்கைகளிலும் கூட தவளைகள் தாவி ஏறின. இப்படி வந்த தவளைகள் செத்து மடிந்தபோது நாடே நாறியது. அவற்றை அள்ளிப் போட்டு அப்புறப்படுத்துவதில் எகிப்தியர்கள் களைத்துப்போனார்கள்.

பூச்சிகளும் ஈக்களும்

தவளைகளால் தன் மக்கள் பட்ட துன்பத்தைக் கண்டும் துவளாமல் இருந்தான் மன்னன். இதனால் ஆரோனை மேற்கொண்டு வழிநடத்தினார் கடவுள். ஆரோனைத் தனது கைத்தடியால் தரையை அடிக்கும்படி செய்தார். அப்போது கிளம்பிய புழுதியும் தூசிகளும் அந்துப் பூச்சிகளாய் மாறின. அவை நாடெங்கும் நிறைந்து மக்களுக்குப் பெரும் தொல்லையாக அமைந்தன.

இந்த மூன்று வாதைகளையும் எகிப்தியர்களோடு இஸ்ரவேலர்களும் சேர்ந்து அனுபவிக்க வேண்டியிருந்தது. ஆனால் கடவுள் நான்காவது வாதையில் தொடங்கி அதன் பிறகு எகிப்தியரை மட்டுமே வாட்டும்படியாக ஏழு கஷ்டங்களைக் கொடுத்தார். நான்காவதாகப் பெரிய ஈக்களைப் பெருகச் செய்த கடவுள், அவற்றை எகிப்தியரின் வீடுகளில் மட்டுமே ஆயிரக்கணக்கில் படையெடுக்கும்படி செய்தார். இப்படி வந்து மொய்த்த ஈக்களால் அவர்கள் தூக்கம் இழந்தார்கள்.

வெட்டுக்கிளிகளும் கல் மழையும்

கடவுள் ஐந்தாவது வாதையை எகிப்தியரின் கால்நடைகளின் மீது தொடுத்தார். இதனால் எகிப்தியரின் பெரும் செல்வங்களில் ஒன்றாயிருந்த அவர்களின் ஆடு மாடுகள் அத்தனையும் செத்து விழுந்தன. பிறகு மோசேயும் ஆரோனும் கொஞ்சம் சாம்பலை எடுத்து அதைக் காற்றில் ஊதினார்கள். இதனால் எகிப்தியர் மீதும் எஞ்சியிருந்த விலங்குகள் மீதும் கொடும் வேதனைத் தரக்கூடிய கொப்புளங்கள் தோன்றின. இதனால் எகிப்தியர் கதறித் துடித்தனர். ஆனால் மன்னன் கலங்கவில்லை.

அதன் பிறகு மோசே தன் கையை வானத்தை நோக்கி நீட்டினார், அப்போது கடவுள் இடி முழக்கத்துடன் கூடிய கல் மழையை பொழியச் செய்தார். கல் மழையைக் கண்டதும் நடுங்கிப் போனான் மன்னன். ஆனால் மனமாற்றம் ஏற்படவில்லை.

இதனால் கடவுள் எட்டாவது வாதையை உருவாக்கும்படி ஆனது. பெரும் கூட்டமான வெட்டுக்கிளிகள் எகிப்தை நோக்கிப் படையெடுக்கும்படி செய்தார். ஒருபோதும் இப்படி கோடிக்கணக்கான வெட்டுக்கிளிகளை எகிப்தியரோ இஸ்ரவேலர்களோ கண்டதில்லை. கல் மழை அழிக்காமல் விட்டுவைத்த எகிப்தியரின் வயல்களில் இருந்த விளைச்சல் அனைத்தையும் தோட்டங்களையும் வெட்டுக்கிளிகள் தின்று தீர்த்தன.

இருளில் மூழ்கிய தேசம்

இத்தனை கொடிய வாதைகளைக் கடவுள் கொண்டுவந்தபோதும் மன்னன், எப்படியாவது சமாளித்துவிடலாம் என்று திடமாக இருந்தான். ஆனால் அவனது எண்ணத்தை இருண்டுபோகும்படிச் செய்தார் கடவுள். அவர் தேசம் முழுவதையும் மூன்று தினங்கள் கடும் இருளில் தள்ளினார். ஆனால் இஸ்ரவேலர் வசித்து வந்த பகுதிகளில் மட்டும் வெளிச்சம் ஒளிர்ந்தது. கும்மிருட்டால் மன உளைச்சலுக்கு ஆளான மன்னன், அப்படியும் துணிச்சல் காட்டவே கடைசியாகப் பத்தாவது வாதையைத் தந்தார் கடவுள்.

நிலைகுலைந்த மன்னன்

ஓர் இளம் செம்மறியாட்டின் ரத்தத்தைத் தங்கள் வாசல் நிலைக்கால்களில் தடவி அடையாளம் செய்துகொள்ளும்படி, தனது மக்களாகிய இஸ்ரவேலர்களிடம் சொன்னார் கடவுள். அவர்களும் அவ்வாறே செய்தனர். பின்னர் கடவுளுடைய தூதன் எகிப்து தேசத்தை வீதிவீதியாகக் கடந்து சென்றார். அப்போது எந்தெந்த வீடுகளின் நிலைக்கால்களில் ரத்தம் காணப்பட்டதோ அந்த வீட்டிலிருந்த எவரையும் அவர் எதுவும் செய்யவில்லை. ஆனால் ரத்தமில்லாதிருந்த எல்லா வீடுகளிலும் சாவு விழுந்தது. அந்த வீடுகளில்

இருந்த தலைப் பிள்ளையையும், எஞ்சியிருந்த கால்நடைகளில் தலைச்சன் குட்டிகளையும் கடவுளின் தூதன் கொன்றுபோட்டார்.

பத்தாவது வாதைக்குப் பின், பார்வோன் மன்னன் இனியும் இஸ்ரவேல் மக்களை எகிப்தில் இருக்கும்படி கட்டாயப்படித்தினால் இங்கே எல்லாம் அழிந்துபோகும் என்பதை உணர்ந்துகொண்டார். எனவே இஸ்ரவேலர்கள் எகிப்திலிருந்து செல்லலாம் என்று உத்தரவிட்டான். எகிப்தியரின் வீடுகளில் மரணம் நிகழ்ந்த அதே இரவில் எகிப்தை விட்டு இஸ்ரவேலர்கள் புறப்பட்டார்கள்.

http://tamil.thehindu.com/society/spirituality/பைபிள்-கதைகள்-25-வாட்டி-வதைத்த-வாதைகள்-பத்து/article9271898.ece

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கலாயோகி ஆனந்த குமாரசுவாமி பற்றி சில வரிகள் எழுத வேண்டும் என்று நினைத்திருந்து, மறந்துவிட்டேன். நீங்கள் ஞாபகப்படுத்தி விட்டீர்கள்.........👍
    • IBC தமிழ் நேர்காணல். Sharmila Vinothini Thirunavukarasu மிகவும் நேர்த்தியான நேர்காணலுக்கு நன்றி. #நீ_கொன்ற_எதிரி_நான்_தான்_தோழா புத்தகம் பற்றிய உரையாடலின் நடுவே கேட்கப்பட்ட ஒருசில பிற கேள்விகளுக்கும் எனக்கு தெரிந்த பதில்களை வழங்கினேன் - நன்றி IBCTamil.com   தியா - காண்டீபன்    
    • 🤣.... இது தானே அவர்களின் வழக்கம். டெய்லி மிர்ரர் அற்புதமான கார்ட்டூன்களை தொடர்ந்து போட்டுக் கொண்டு வருகின்றது.....👍
    • இப்படியான செய்திகளை நாம்தமிழர் செய்கிறார்கள் மற்றக் கட்சிகள் செய்வதில்லை என்று நினைப்பது போல் தெரிகிறது.இந்தியா இப்படியே ஒரேநாடாக நீண்டகாலத்துக்கு இருக்கும் என்றுநினைக்காதீர்கள்.இந்தியா பல தேசங்கள் இணைந்த ஒரு கூட்டு ஒருநாள் இந்தியா சோவியத் யூனியன் உடைந்தது போல் உடையும் இப்பொழுத இந்தியாவின் வளர்ச்சி பெற்ற மாநிலங்கள் மகன் இந்தியாவிலேயே இருக்கின்றன.அப்படி உடையும் நிலையில் தமிழருக்கு உலகில் 2 நாடுகள் இருக்கும்.   சொல்வது ஒன்று செய்வது ஒன்று சீமான் கட்சியை விட மற்றைய கட்சிகளில் தாராளமாக உண்டு.பெண்களுக்கு சம் பிரதிநிதித்துவம் ,அனைத்துச் சாதியினருக்கும் வேட்பாளர் தெரிவில் பிரதிநித்துவம் போன்ற நல்ல விடயங்களை கணக்கில் எடுங்கள் குணம் நாடிக் குறமும்நாடி அவற்றுள் மிகைநாடி மிக்க கொளல்    
    • அவள் ஒருநாள் வீதியோரம் கூடை நிறைந்த கடவுளர்களை கூவிக் கூவி விற்றுக்கொண்டிருந்தாள்   போவோர் வருவோரிடம் 'கடவுள் விற்பனைக்கு' என்று கத்திச் சொன்னாள்   அவள் சொன்னதை யாரும் கவனித்ததாகத் தெரியவில்லை   பிள்ளை பாலுக்கு அழுதது கடவுளர்களின் சுமை அவளின் தலையை அழுத்தியது   'கடவுள் விற்பனைக்கு' அவள் முகம் நிறைந்த புன்னகையுடன் மீண்டும் கூவினாள்   கடவுள் மீது விருப்புற்ற பலரால் கடவுள் அன்று பேரம் பேசப்பட்டார்   அந்நாளின் முடிவில் அவளின் வேண்டுதலை ஏற்றுக் கடவுளர்கள் அனைவரும் விலை போயினர்     தியா - காண்டீபன் மார்ச் 29, 2024 காலை 7:20
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.