Jump to content

பைபிள் கதைகள்


Recommended Posts

பைபிள் கதைகள் 26: இரண்டாய்ப் பிளந்த செங்கடல்

 

 
bible_3074346f.jpg
 
 
 

பல தலைமுறைகளாக எகிப்தியர்களிடம் அடிமைகளாக இஸ்ரவேல் மக்கள் இருந்தனர். அவர்களை மோசே தலைமையில் மீட்டு, அந்த நாட்டைவிட்டு வெளியே அழைத்துச் சென்றார் கடவுள். அப்போது கடவுள் மோசேயை நோக்கி, “ மக்களை வழிநடத்திச் செல்… இரவு நெருங்கியதும் மிக்தோலுக்கும் செங்கடலுக்கும் மத்தியில் அவர்களைத் தங்க வை. அப்போது இஸ்ரவேல் மக்கள் பாலைவனத்தில் வழிதெரியாமல் திண்டாடுகிறார்கள் என்றும் அவர்களுக்குப் போக்கிடம் இல்லை என்று பாரவோன் நினைப்பான். அவன் இவ்வாறு நினைக்கும்படி நான் செய்வேன். அவன் தனது தேர்ந்த படைகளின் ஒரு தொகுதியுடன் புறப்பட்டு வந்து உங்களைத் துரத்துவான். ஆனால் பாரவோனையும் அவனது சேனையையும் நான் தோற்கடிப்பேன். அதைக்கண்டு இஸ்ரவேல் மக்கள் எனக்கு முழுமையாகக் கீழ்ப்படிவார்கள்” என்றார்.

துரத்தி வந்த மன்னன்

கடவுள் கூறியபடியே பாரவோனும் அவனது தலைமை அதிகாரிகளும் மனம் குமைந்து போனார்கள். காலம் காலமாக நமக்கு அடிமைகளாக இருந்து பல நகரங்களை எழுப்பித் தந்தவர்கள், நமக்கு சேவகம் செய்து வரி செலுத்தியவர்கள், அப்படிப்பட்ட நம் அடிமைகளை தப்பவிட்டது எத்தனைபெரிய முட்டாள்தனம்

என்று கடவுள் அவர்களது எண்ணத்தைக் கிளறிவிட்டார். “ மதிப்புக்குரிய நமது அடிமைகளை இப்போது நாம் இழந்துபோனோம்!” என்று பாரவோன் மனம் கொதித்தான். இன்னும் நேரம் கடந்துவிடவில்லை என்று எண்ணிய அவன், தனது தலைசிறந்த 600 மாவீரர்களை உடனடியாகத் திரட்டினான். வலிமைமிக்க தனது ரதப்படையை அவர்களிடம் ஒப்படைத்தான். ஒவ்வொரு தேரிலும் ஒரு வீரனும் ஒரு அதிகாரியும் இருந்தனர். இந்தப் படையுடன் குதிரை வீரர்களின் அணியும் இணைந்துகொண்டது. தனது படையணியை அழைத்துக் கொண்டு இஸ்ரவேல் நடத்திச் சென்றான். கோபாவேசத்துடன் புறப்பட்ட

அவர்கள், செங்கடலின் அருகேயுள்ள பாகால் செபோனுக்குக் கிழக்கேயிருக்கிற ஈரோத் என்ற இடத்தை நோக்கி இஸ்ரவேல் மக்கள் சென்று கொண்டிருப்பதைக் கண்டு அவர்களை இலக்காக வைத்து, புழுதி கிளப்பியபடி புயலென நெருங்கி வந்தனர்.

புலம்பிய மக்களும் கலங்கிய மோசேவும்

பாரவோனும் அவனது படையினரும் தங்களை நோக்கி வருவதைக் கண்ட இஸ்ரவேல் மக்கள் மிகவும் பயந்தனர். அவர்கள் மோசேயை நோக்கி, “எங்களை எகிப்திலிருந்து அழைத்து வந்தது இந்தப் பாலைவனத்தில் சாவதற்காகவா? எகிப்தில் நிறைய கல்லறைகள் இருக்கின்றன. இங்கு அதுவுமில்லை. நாங்கள் இங்கு நிராதரவாக மடிவதைக் காட்டிலும் அங்கே அடிமைகளாக வாழ்ந்து சாவதே நலமாக இருந்திருக்குமே”என்று கோழைகள்போல் கதறியழுதனர்.

அவர்களை ஆறுதல்படுத்திய மோசே, “பயப்படாதீர்கள்! நம் கடவுளாகிய யகோவா தேவன் எதிரிகளின் கைகளில் சிக்காதவண்ணம் இன்று உங்களை மீட்பதைப் பாருங்கள். இந்த எகிப்தியர்களை இனி உங்கள் வாழ்நாட்களில் திரும்பவும் பார்க்கமாட்டீர்கள்! நீங்கள் எதையும் செய்ய வேண்டாம். அழுது புலம்பாமல் அமைதியாக இருந்தாலே போதும், நம் கடவுள் நமக்காகப் போரிடுவார்” என்றார்.

உடனே வானை நோக்கி இறைஞ்சினார் மோசே. அப்போது கடவுள் மோசேயை நோக்கி, “ இன்னும் நீ என்னிடம் ஏன் அழுகிறாய்? செங்கடலுக்கு மேலாக உன் கைத்தடியை உயர்த்து. கடல் இரண்டாய்ப் பிளக்கும். பிளந்த இடத்தில் உலர்ந்த தரையைக் காண்பீர்கள். அப்போது உலர்ந்த தரை வழியே நடந்து கடலைக் கடந்து செல்லுங்கள். உங்களைத் துரத்திவரும்படியாக நானே எகிப்தியருக்குத் துணிவை அளித்தேன். ஆனால் நானே பாரவோனையும், அவனது குதிரைகள் ரதங்களைக் காட்டிலும் வல்லமை பொருந்தியவர் என்பதை அவர்கள் உணரும்படி செய்வேன்” என்றார்.

இரண்டாகப் பிளந்த கடல்

கடவுளின் வார்த்தைகளைக் கேட்டு மனதிடம் கொண்ட மோசே, தனது கைத்தடியை கடலைநோக்கி உயர்த்தினார். அப்போது பலத்த காற்று வீசி, கடலை இரண்டாகப் பிரித்தது. காற்று நிலத்தை உலரச் செய்தது. வாயடைத்துப்போன இஸ்ரவேல் மக்கள், கடலின் உலர்ந்த தரையின் மேல் நடந்து போனார்கள். அவர்களுக்கு வலது பக்கத்திலும் இடது பக்கத்திலும் தண்ணீர் கோட்டை மதிற்சுவர்போல் உயர்ந்து நின்றது. அப்போது பார்வோனின் குதிரை வீரர்கள் தங்கள் இரதங்களுடன் கடலினுள் அதே வழியில் இஸ்ரவேல் மக்களைப் பின்தொடர்ந்து நெருங்கி வந்தனர். இதைக் கண்டு மக்கள் மீண்டும் அஞ்சி நடுங்கினார்கள்.

அப்போது கடவுள் மோசேயிடம், “உன் கைகளைக் கடலுக்கு மேலாக உயர்த்து, தண்ணீர் புரண்டு எகிப்தியரின் ரதங்களையும் குதிரை வீரர்களையும் மூழ்கடிக்கும்”என்றார். அவ்வாறே மோசே தன் கைகளை உயர்த்தினார். பிளந்து நின்ற கடல் தண்ணீர், முன்புபோல் தன் இயல்புக்குத் திரும்பி, சமமாக வந்து நின்றது. எகிப்தியர்கள் தங்களால் முடிந்த அளவு தண்ணீரிலிருந்து தப்பியோட முயன்றார்கள். ஆனால் கடவுள் ரதங்களையும், குதிரை வீரர்களையும் கடலின் அடியாழத்தில் மூழ்கடித்துவிட்டார். பாரவோனின் தனிப்படையில் இருந்த 600 பேரில் ஒருவரும் பிழைக்கவில்லை!

செங்கடலை நடந்து கடந்து இஸ்ரவேல் மக்களில் கடைசி மனிதனும் கரையேறும்வரை பொறுத்திருந்த கடல் பின் முழுமையாக மூடிக்கொண்டது. கரையில் எகிப்தியரின் பிணங்களை இஸ்ரவேலர்கள் கண்டனர். கடவுளின் வல்லமையைக் கண்டு பயந்த அவர்கள் கடற்கரை மணலில் மண்டியிட்டு அவரை மதித்தார்கள். அவரது தாசனாகிய மோசேயையும் அவரது வார்த்தைகளையும் அதன்பின் முழுமையாக நம்ப ஆரம்பித்தனர். அப்போது, மோசேயின் சகோதரியாகிய மிரியம் ஒரு தம்புராவை எடுத்து இசைத்தபடி கடவுளை வாழ்த்திப் பாடத் தொடங்கினாள்.

“ கர்த்தரைப் பாடுங்கள்! அவர் பெரிய செயல்களைச் செய்தார். அவர் குதிரைகளையும், குதிரை வீரர்களையும் ரதங்களையும் கடலுக்குள் அமிழ்த்தினார்”என்று பாடினாள்.

மிரியமுடன் இணைந்துகொண்ட இஸ்ரவேல் பெண்கள் பாடவும் நடனமாடவும் செய்தனர். விடுதலையடைந்த மக்கள் அந்தக் கடற்கரையில் சுதந்திரக் காற்றைச் சுவாசித்தனர்.

http://tamil.thehindu.com/society/spirituality/பைபிள்-கதைகள்-26-இரண்டாய்ப்-பிளந்த-செங்கடல்/article9323900.ece

Link to comment
Share on other sites

  • Replies 66
  • Created
  • Last Reply

பைபிள் கதைகள் 27: வானிலிருந்து ஒரு உணவு!

 

 
bible_3083197f.jpg
 
 
 

எகிப்தியரிடமிருந்து தங்களைக் காக்க கடலையே இரண்டாய் பிளந்து வழிவிடச்செய்த கடவுளைப் போற்றிப் பாடி இஸ்ரவேலர்கள் மகிழ்ந்தனர். அதன்பிறகு செங்கடலை விட்டு சூர் பாலைவனத்திற்குள் இஸ்ரவேல் மக்களை வழிநடத்திச் சென்றார் மோசே. அந்தப் பாலைவனத்தில் இருபத்தி மூன்று நாட்கள் பயணம் செய்த மக்கள் தாகத்தால் நா வறண்டு தவித்தனர். மாரா என்ற இடத்துக்கு வந்தபோது அங்கே மாராவில் தண்ணீர் இருப்பதைக் கண்டு தாவிச்சென்று தண்ணீர் அள்ளிப் பருகினர். ஆனால் அந்தத் தண்ணீர் குடிக்க முடியாதபடி கசப்பாக இருந்தது. இதனால் கோபப்பட்ட மக்கள் மோசேயை முற்றுகையிட்டு “நாங்கள் இப்போது எதைக் குடிப்போம்?” என்று முறையிட ஆரம்பித்தனர்.

மோசே வானை நோக்கித் தன் கைகளை நீட்டி இறைஞ்சினார். கடவுள் அங்கிருந்த பாலைவனச் சோலையில் ஒரு மரத்தைக் காட்டினார். மோசே அம்மரத்தை வெட்டி தண்ணீர் சுனைக்குள் போட்டார். அவ்வாறு செய்ததும் அந்த நீர் பனிநீரைப்போல் திடுமெனத் தெளிந்து அது நல்ல குடிதண்ணீராக மாறிற்று. உடனே மனம் தெளிந்த மக்கள் கடவுளைப் போற்ற ஆரம்பித்தனர். கடவுள் பெரும் அற்புதங்களைச் செய்தும் இந்த மக்கள் அவ்வப்போது விசுவாசத்தை இழந்துவிடுகிறார்களே என்று கவலைப்பட்டார் மோசே.

நம்பிக்கையற்ற மக்கள்

பின்பு மக்களை அழைத்துக்கொண்டு ஏலிம் என்ற இடத்துக்குப் பயணமாயினர். அதை அடைந்தபோது பன்னிரண்டு நீரூற்றுகளும், எழுபது பேரீச்ச மரங்களும் இருந்தன. எனவே ஆறு லட்சம் இஸ்ரவேலர்களுக்கும் போதுமான தண்ணீர் அங்கே இருந்ததால் அங்கேயே கூடாரமிட்டுத் தங்கினார்கள். பிறகு ஏலிமுக்கும், சீனாய் மலைக்கும் நடுவில் உள்ள சீன் பாலைவனத்திற்கு வந்தனர். எகிப்தைவிட்டுப் புறப்பட்டபின், இரண்டாவது மாதத்தில் பதினைந்தாம் நாளில் அவர்கள் அந்த இடத்தை வந்தடைந்தனர். இம்முறை உணவுப்பொருட்கள் அனைத்தும் தீர்ந்துபோனதால் பயம் அவர்களை வாட்டியது. கண்ணுக்கெட்டிய தூரம் வரை பாலைவனத்தின் நுண்ணிய மணல் மட்டுமே தெரிந்தது. வெயில் சுட்டெரித்தது.

இரவிலோ குளிர் வாட்டியது. இஸ்ரவேல் மக்கள் மீண்டும் மோசேயிடம் முறையிட ஆரம்பித்தனர். அவரோடு கூட இருந்த அவரது சகோதரர் ஆரோனையும் பிடித்து கடும் வார்த்தைகளால் துளைக்க ஆரம்பித்தனர். “ இந்தக் கிழவர்களின் பேச்சைக் கேட்டு வந்த நாம் இந்தப் பாலைவனத்தில் கூட்டம் கூட்டமாக பட்டினி கிடந்து மடியப்போகிறோம்.” என்று புலம்பியவாறு மோசேயையும், ஆரோனையும் நோக்கி: “எகிப்து தேசத்தில் கடவுள் எங்களைக் கொன்றிருந்தால் நலமாக இருந்திருக்கும். அங்கு உண்பதற்காகவாவது மிகுதியான உணவு கிடைத்தது. எங்களுக்குத் தேவையான எல்லா உணவும் கிடைத்தன. ஆனால் இப்போது எங்களை நீங்கள் இருவரும் இந்தக் கொடும் பாலைவனத்திற்குள் கொண்டு வந்திருக்கிறீர்கள். உணவுக்கு நாங்கள் எங்கேபோவது” என்று கதறினார்கள்.

வானிலிருந்து பொழிந்த உணவு

அப்போது மக்களோடு எதிர்வாதம் புரியாமல் அமைதி காத்த மோசே வானத்தை இரக்கத்தோடு நோக்கினார். அவரது பார்வையைப் புரிந்துகொண்ட கடவுள், “ நான் வானத்திலிருந்து உணவுப்பொருளை விழச் செய்வேன். நீங்கள் உண்பதற்குரியப் புனித உணவாக அது இருக்கும். ஒவ்வொரு நாளும் மக்கள் கூடாரத்தைவிட்டு வெளியே போய் அவர்களுக்கு அந்தந்த நாளுக்கு மட்டும் தேவையான உணவைச் சேகரித்துவரவேண்டும். ஒவ்வொரு நாளும் ஜனங்கள் அந்த நாளுக்குத் தேவையான உணவை மட்டுமே சேகரிக்கவேண்டும்: ஆனால் வெள்ளிக் கிழமையன்று, ஜனங்கள் உணவைத் தயாரிக்கும் பொழுது, அடுத்துவரும் இரண்டு நாட்களுக்குப் போதுமான இருமடங்கு உணவு இருக்குமாறு கூடுதலாகச் சேகரித்துக் கொள்ளவேண்டும்” என்றார்.

மோசே பசியால் வாடியிருந்த மக்களைப் நோக்கி, “இன்றிரவு நீங்கள் கடவுளின் வல்லமையைக் காண்பீர்கள். எகிப்திலிருந்து உங்களை அழைத்து வந்தவர் அவரே என்பதை நீங்கள் அறிவீர்கள். நீங்கள் அவரிடம் முறையிட்டபோது அவர் உங்கள் முறையீட்டைக் கேட்டார். எனவே நாளை காலை, கடவுளின் மகிமையை பாலைவனத்தின் மணல்மேல் உங்களுக்கான அப்பத்தைக் காண்பீர்கள். நீங்கள் எங்களிடம் முறையிட்டுக் கொண்டேயிருக்கிறீர்கள். இனி எங்களுக்குச் சற்று ஓய்வு கிடைக்கும்” என்றார்கள். விடிந்ததும் எல்லா மக்களும் கூடாரத்தை விட்டு வெளியே வந்தார்கள்.

காலையில் அவர்கள் தங்கியிருந்த இடத்துக்கு அருகே பனிபடர்ந்திருந்தது. கதிரவன் தோன்றி பனி மறைந்ததும் மெல்லிய அப்பம் போன்ற ஒரு பொருள் நிலத்தின் மேல் கொட்டப்பட்டிருப்பதைக் கண்டார்கள். “இதுதான் கடவுள் வானிலிருந்து பொழியச் செய்த உணவா?” என்று கேட்க, மோசே அவர்களை நோக்கி, “கர்த்தர் உங்களுக்கு உணவாகக் கொடுப்பது இதுவே. ஒவ்வொருவனும் அவரவருக்குத் தேவையான உணவை மட்டுமே எடுத்துக்கொள்ள வேண்டும். உங்கள் குடும்பத்திலுள்ள ஒவ்வொருக்கும் எட்டு கிண்ண அளவின்படி எடுத்துக்கொள்ள வேண்டும் என்று கடவுள் சொல்லுகிறார்” என்றார். இஸ்ரவேல் மக்கள் அவ்வாறே செய்தார்கள்.

சிலர் மற்றவர்களை விட அதிகமாக எடுத்துக்கொண்டனர். ஜனங்கள் இந்த உணவைக் குடும்பத்திலுள்ள ஒவ்வொருவருக்கும் கொடுத்தார்கள். உணவை அளந்தபோது ஒவ்வொருவருக்கும் போதுமான அளவு இருந்தது. ஒருபோதும் அதிகப்படியான உணவு இருந்ததில்லை. ஆனால் அதிகப்படியாக உணவை எடுத்தவர்களை நோக்கி எச்சரித்த மோசே “ மறுநாள் உண்பதற்காக உணவை வைக்காதீர்கள்” என்று எச்சரித்தார். ஆனால் அதிகமாகச் சேகரித்தவர்களின் உணவு கெட்டுப்போனது.

உருகி மறைந்த உணவு

அடுத்த தினமே அதிகமாய் சேகரிக்கமுடியாதபடி இளவெயில் முடிந்து சூடு அதிகரித்ததும் கடவுள் தந்த உணவு உருகி மறைந்துபோனது. வெள்ளியன்று, ஜனங்கள் இரண்டு மடங்கு உணவைச் சேர்த்தார்கள். சனிக்கிழமையன்று மோசே மக்களை நோக்கி, “இன்று ஓய்வுநாள், இது கடவுளுக்கு மரியாதை செலுத்தும் விசேஷ நாள். எனவே உங்களில் ஒருவரும் கூடாரத்தை விட்டு வெளியே போகக்கூடாது. நேற்று சேர்த்து வைத்த உணவையே உண்ணுங்கள். ஆறு நாட்கள் நீங்கள் உணவைச் சேகரிக்கவேண்டும்; ஆனால் வாரத்தின் ஏழாவதுநாள் ஓய்வுக்குரிய நாள். இந்த உலகைப் படைத்த கடவுள் ஏழாம் நாளை ஓய்வு நாளாய் ஆக்கினார். அது புனிதமான நாள். எனவே பூமியில் கடவுள் பொழியச் செய்யும் புனித உணவு எதுவுமிராது.

அன்று நாம் அவரை மறக்கவே கூடாது” என்றார். மோசேக்கு தலையசைத்த மக்கள் அமைதியுடன் கலைந்து கூடாரங்களுக்குத் திரும்பினார்கள். அந்த விசேஷ உணவை ஜனங்கள் “மன்னா” என்று அழைத்தார்கள். வானிலிருந்து கடவுள் மண்ணில் பொழியச் செய்ததால் அதை அவ்வாறு அழைத்தனர். இந்த மன்னா தோற்றத்தில் சிறிய வெண்மையான கொத்த மல்லி விதைகளைப் போன்றிருந்தன. அவை ருசியில் தேனில் தோய்க்கப்பட்ட மெல்லிய வெண்ணிற முதல்தரமான கோதுமை ரொட்டிக்கான அப்ப மாவு போன்று இருந்தது.

(பைபிள் கதைகள் தொடரும்)

http://tamil.thehindu.com/society/spirituality/பைபிள்-கதைகள்-27-வானிலிருந்து-ஒரு-உணவு/article9356638.ece

Link to comment
Share on other sites

பைபிள் கதைகள் 28: கடவுள் தந்த கட்டளைகள்

 

 
bible_3090195f.jpg
 
 
 

கடவுள் காட்டிய இரக்கத்தால் எகிப்திலிருந்து தப்பித்து செங்கடல் வழியாக சீன் பாலைவனத்தில் ஏலிம் என்ற இடத்துக்கு வந்தனர் இஸ்ரவேல் மக்கள். அங்கே பட்டினியால் சாகாதிருக்க அவர்களுக்கு வானிலிருந்து உணவைப் பொழியச் செய்தார் கடவுள். அந்த உணவுக்கு ‘மன்னா’எனப்பெயரிட்டு மகிழ்ந்த மக்கள் கடவுளைப் போற்றிப் புகழ்ந்தனர். பிறகு “இங்கிருந்து கிளம்பிச் செல்வோம்” என மோசே கேட்டுக்கொண்டதால் அவரைப் பின் தொடர்ந்தனர். எகிப்தை விட்டுக் கிளம்பி இரண்டு மாதங்கள் கடந்துவிட்டிருந்த நிலையில் இப்போது இஸ்ரவேலர் சீனாய் மலையடிவாரத்துக்கு வந்து சேர்ந்தனர்.

அந்த மலையின் உச்சியில்தான் மிகப்பசுமையான ஓரேப் சிகரம் இருந்தது. மேகங்கள் அந்தச் சிகரத்தை தழுவிச்சென்றன. மோசே தனது மாமனாரின் ஆட்டு மந்தையை மேய்த்துக்கொண்டிருந்தபோது அவற்றுக்கு பசும்புற்களைத் தேடித் தனது மந்தையை நடத்திக்கொண்டு வந்தது இந்த மலைச் சிகரத்துக்குத்தான். இங்கேதான் மோசேவுக்கு ‘கருகாமல் எரிந்த பசும்புதர்’மூலம் மோசேயிடம் கடவுள் முதல்முதலாகப் பேசினார்.

சீனாய் மலையில் மக்கள்

இந்த இடத்துக்கு வந்ததும் மோசே மனநிம்மதி கொண்டார். மக்களும் இந்த மலையடிவாரத்தில் மகிழ்ச்சியுடன் கூடாரம் அமைத்துத் தங்கினார்கள். சில நாட்களுக்குப்பின் மோசே மலையின் மேல் உள்ள சிகரத்தை நோக்கிப் போனார். இதைக்கண்ட மக்கள் அவர் கடவுளிடமிருந்து அடுத்து எங்கே செல்வது என்ற செய்தியை கேட்டுப்பெற்றுவருவார் என்று நினைத்தார்கள். அவர் மலையிலிருந்து இறங்கி வரும் வரையில் கீழே காத்துக் கொண்டிருந்தார்கள். முன்பு மலை உச்சியின்மேல் எரியும் புதர் இருந்த இடத்தை மோசே அடைந்ததும் அது புனிதமான இடம் என்பதை தன்னியல்பாக உணர்ந்து முழந்தாள்படியிட்டார்.

மோசே இவ்வாறு செய்ததும் உலகைப் படைத்த கடவுளாகிய யகோவா அவரிடம் பேசினார். “ இஸ்ரவேல் மக்கள் அனைவரும் எனக்குக் கீழ்ப்படிந்து நடக்க வேண்டும். எனது மக்கள் என்று நான் நினைக்கும்விதமாக அவர்கள் மாறவேண்டும். இதற்கு அவர்கள் தயாராக இருக்கிறார்களா என்பதை அவர்கள் மூலமே நான் அறிய வேண்டும்”என்று கூறினார். கடவுளின் விருப்பத்தை அறிந்துகொண்ட மோசே கீழே இறங்கி வந்தபோது மக்கள் ஓடிவந்து அவரைச் சூழ்ந்துகொண்டார்கள். கடவுளின் விருப்பத்தை மோசே இஸ்ரவேலருக்கு எடுத்துக் கூறினார். அதைக்கேட்ட அவர்கள் “கடவுளின் விருப்பப்படியே ஆக விரும்புகிறோம். அவருக்குக் என்றென்றும் கீழ்ப்படிவோம்”என்று உறுதியளித்தார்கள்.

கடவுளின் இடிமுழக்கம்

இஸ்ரவேலர் இப்படி உறுதியளித்ததைக் கேட்டுக்கொண்டிருந்த கடவுள், இனி அவர்களோடு நேரடியாகப் பேசலாம் என்ற முடிவுக்கு வந்தார். எனவே மலைச்சிகரத்தின் உச்சியில் புகை உண்டாகும்படி செய்தார். அதன் தொடர்ச்சியாக இடி, மின்னல் முழக்கத்தை உருவாக்கினார். பிறகு மக்களிடம் மேகத்தின் புகை மூட்டத்திலிருந்து தன் குரல்வழியே பேசினார்: “எகிப்தின் அடிமைத் தளையிலிருந்து உங்களை மீட்டு அழைத்து வந்த உங்களின் கடவுளாகிய யகோவா நானே.. என்னைத் தவிர உங்களுக்கு வேறு கடவுள் இல்லை. வேறு எந்தக் கடவுளையும் நீங்கள் வணங்கக் கூடாது.

கடவுள் என்ற பெயரில் கற்பனையால் நீங்கள் எதையும் உருவாக்கி வணங்கக் கூடாது”என்று கடும் குரலில் கட்டளையிட்டார். அவ்வாறு கட்டளையிட்டு முடித்தபோது மின்னல் மக்களின் கண்களைக் கூசச்செய்யும்படியாகவும் இடி காதுகளை வலிக்கச் செய்யும் விதமாகவும் இருந்தது. இதனால் பயந்துபோன மக்கள் “எங்கள் மூப்பனே… நீரே கடவுளிடம் பேசும்… கடவுள் எங்களிடம் பேசினால் நாங்கள் செத்துப்போய் விடுவோமோ என்று பயமாக இருக்கிறது” என்று அஞ்சி நடுங்கினார்கள். இதைக் கேட்ட கடவுள், தன் மீது அவர்களுக்கு பயமிருப்பதைக் கண்டார்.

எனவே மோசேவை நோக்கி “ மோசே நீ மீண்டும் மலை மீதேறி என்னிடத்துக்கு வா. அங்கு நான் உனக்குத் தட்டையான இரண்டு கற்களைக் கொடுப்பேன். என் மக்கள் கடைப்பிடிக்க வேண்டிய கட்டளைகளை அதன் வழியே நான் தருவேன். அவை இந்த பூமியில் வாழ்வதற்கான சட்டங்கள்”என்று கூறினார். எனவே மோசே மலைச் சிகரம் நோக்கி ஏறிச் சென்றார். இம்முறையும் மக்கள் அவருக்காக ஆவலுடன் காத்திருக்க ஆரம்பித்தனர். ஆனால் மோசே உடனடியாக அங்கிருந்து திரும்பவில்லை.

பத்து கட்டளைகள்

கடவுள் பேசும் இடமாகிய ஓரேப் மலைச்சிகரத்துக்கு ஏறிச் சென்று முழந்தாளிட்டுக் கைகளை ஏந்தியபடி தியானித்தார் மோசே. உணவு எதையும் உண்ணாமல் தண்ணீர் பருகாமல் இரவும் பகலுமாக நாற்பது திங்கள் அங்கே அவர் தவமிருந்தார். அப்போது மோசேயிடம் இரண்டு தட்டையான கற்களைக் கொடுத்த கடவுள் அவற்றில் தனது கட்டளைகளை எழுதும்படி அவரைப் பணித்தார். கடவுள் கூறக் கூற மோசே அந்த இரண்டு கற்களிலும் பத்துக் கட்டளைகளை எழுதி முடித்தார்.

பத்துக் கட்டளைகள்

1. உன் கடவுளாகிய என்னை நீ உன் முழு மனதோடும், முழு ஆத்மாவோடும் முழு பலத்தோடும் நேசிக்க வேண்டும். என்னைத் தவிர உனக்கு வேறு கடவுள் இல்லை.

2. உன்னை நேசிப்பது போலவே நீ மற்றவர்களையும் நேசிக்க வேண்டும்.

3. கடவுளாகிய என் பெயரை வீணாகச் சொல்லாதே.

4. வாரத்தின் ஏழாம் நாளில் எந்த வேலையும் செய்யாதே. மற்ற நாட்களில் உழைக்கும் நீ, ஏழாம் நாளை என்னை நினைத்துத் தியானிக்கும் புனித நாளாக அனுசரி.

5. உன் பெற்றோரை மதித்துக் கீழ்படித்து அவர்களைப் போற்று.

6. கொலை செய்யாதே

7. பாலியல் தொழிலில் ஈடுபடாதே.

8. உனக்குச் சொந்தமில்லாத எந்தப் பொருளையும் திருடாதே. அதற்குப் பிறருடைய உடைமையை விரும்பாதே.

9. யாருக்கு எதிராகவும் பொய் சாட்சி சொல்லாதே.

10. பிறரது மனைவியைக் கவர்ந்து கொள்ளாதே.

(பைபிள் கதைகள் தொடரும்)

http://tamil.thehindu.com/society/spirituality/பைபிள்-கதைகள்-28-கடவுள்-தந்த-கட்டளைகள்/article9378037.ece

Link to comment
Share on other sites

பைபிள் கதைகள் 29: கன்றுக்குட்டியை வணங்கிய மக்கள்

 
bible_3097050f.jpg
 
 
 

கடவுள் அருளிய பத்துக் கட்டளைகள் அடங்கிய இரண்டு தட்டையான கற்கள் இஸ்ரவேலரின் வாழ்க்கைச் சட்டங்கள் ஆயின. ஆனால் இந்தப் பத்துக் கட்டளைகளைத் தவிர அன்றாட வாழ்க்கை முறையில் ஒவ்வொரு ஆணும் பெண்ணும் கடைப்பிடித்து வாழ வேண்டிய இன்னும் ஏராளமான வாழ்க்கைச் சட்டங்களை மொசே வழியாக அருளினார். இவற்றையெல்லாம் கடவுள் சொல்லச் சொல்ல ஒரு சுருளில் எழுதிய மோசே அவற்றை இஸ்ரவேல் மக்கள் கேட்கும்படியாக உரக்க வாசித்தார்.

வேளாண்மையே வாழ்வு

அவற்றில் பல முக்கிய நடைமுறைச் சட்டங்கள் இருந்தாலும் வேளாண் வாழ்வை ஒவ்வொரு இஸ்ரவேலரும் பின்பற்றி வாழ வேண்டும் என்பது முக்கியமாக இருந்தது. “ விதைகளை விதையுங்கள், பயிர்களை அறுவடை செய்யுங்கள். இவ்வாறு ஆறு ஆண்டுகள் நிலத்தைப் பண்படுத்துங்கள். ஆனால் ஏழாவது ஆண்டு நிலத்தைப் பண்படுத்தாதீர்கள்.

நிலம் ஓய்வெடுப்பதற்குரிய காலமாக ஏழாவது ஆண்டு இருக்கட்டும். அந்த ஆண்டில் உங்கள் நிலங்களில் எதையும் விதைக்காதீர்கள். இறைந்த கதிர்களிலிருந்து பயிர்கள் தானாக அந்நிலத்தில் விளைந்தால் அதை ஏழைகள் எடுத்துக்கொள்ளட்டும். இன்னும் மிகுதியான தானியங்களைக் காட்டு மிருகங்களும் சிறு பறவைகளும் உண்ணட்டும். உங்களுக்குச் சொந்தமான திராட்சைத் தோட்டங்களையும், ஒலிவமரத் தோப்புக்களையும் அவ்வாறே பயன்படுத்துங்கள்.

அதேபோல் வாரத்தில் ஆறு நாட்கள் மட்டும் உழையுங்கள். ஏழாவது நாளில் ஓய்வு எடுங்கள். உங்கள் பணியாளர்களுக்கு ஓய்வுக்கும், அமைதிக்கும் அது வழி வகுக்கும். உங்கள் மாடுகளும், கழுதைகளும் ஓய்வெடுக்க நேரம் கிடைக்கும். இச்சட்டங்களை உறுதியாகப் பின்பற்றுங்கள்” என்று வாசித்தார் மோசே. அவற்றைக் கேட்டு மனதில் இருத்திக்கொண்ட மக்கள், “கடவுள் எங்களுக்குக் கொடுத்த சட்டங்களைக் கேட்டோம். அவற்றுக்குக் கீழ்ப்படிய சம்மதிக்கிறோம்” என்றார்கள்.

கடவுளை எப்படி வழிபடுவது?

வாழ்க்கைத் தொழில் பற்றி கடவுளின் சட்டங்களை வாசித்ததோடு நில்லாமல், கடவுள் தன்னை எப்படி வழிபட வேண்டும் என்பதையும் நமக்குச் சட்டமாக தந்திருக்கிறார் என்பதை வாசிக்கத் தொடங்கினார்.

“ ஒவ்வொரு ஆண்டும் மூன்று முக்கிய விடுமுறைகள் உங்களுக்கு இருக்கும். அந்நாட்களில் என்னைத் தொழுதுகொள்ளும்படி புனிதமான இடத்தில் நீங்கள் அனைவரும் ஒன்று கூடுங்கள். அவற்றை மூன்று பண்டிகைகளாகக் கொண்டாடினால், என் குழந்தைகள் என் விருப்பப்படி நடக்கிறார்கள் என நான் மகிழ்வேன். முதலில் நீங்கள் கொண்டாட வேண்டியது புளிப்பில்லா அப்பப் பண்டிகை. புளிப்புச் சேராத ரொட்டியை நீங்கள் ஏழு நாட்கள் உண்ண வேண்டும். ஆபிப் மாதத்தில் இதைச் செய்ய வேண்டும். ஏனெனில் அம்மாதத்தில்தான் நீங்கள் எகிப்தின் அடிமைத்தனத்திலிருந்து விடுபட்டு அந்த நாட்டை விட்டு வெளியேறினீர்கள்.

“ இரண்டாவது பெந்தகோஸ்தே பண்டிகையை உங்களுக்காக உருவாக்குகிறேன். இது ஆண்டின் இரண்டாவது விடுமுறை நாளாக இருக்கும். உங்கள் வயல்களில் அறுவடை தொடங்கும் கோடையின் ஆரம்பத்தில் இது வரும்.

“மூன்றாவது பண்டிகைக்கு ‘அடைக்கலக் கூடாரப் பண்டிகை’ எனப் பெயரிட்டிருக்கிறேன்.. ஆண்டின் மூன்றாம் விடுமுறையாக இருக்கும். இலையுதிர் காலத்தில் வரும். அறுவடைக் காலத்தில் முதல் அறுவடையை என் வீட்டிற்குக் (பரிசுத்த கூடாரத்துக்கு) கொண்டுவந்து எனக்கு அதைப் பலியாகச் செலுத்துங்கள். உங்கள் உழைப்பின் வாசனையை நான் நுகர்ந்து மகிழ்வேன்” என்கிறார் கடவுள் என்று மோசே வாசித்து முடித்தார்.

“மிகச் சிறந்த சட்டங்களையும் புனிதமானதும் அர்த்தம் மிக்கதுமான பண்டிகளையும் நாம் மகிழ்ச்சியாக இருக்கும்படி கடவுள் உண்டாக்கியிருக்கிறார். அவரை என்றென்றைக்கும் பின்பற்றி வாழ்வோம்” என்று கூறி மக்கள் ஆரவாரித்தனர்.

கடவுளாய் மாறிய கன்றுக்குட்டி

மக்களின் உறுதிமொழியால் பரலோகத் தந்தையாகிய யோகேவா மகிழ்ந்திருப்பார் என்று மனம் நிறைந்த மோசே, கடவுள் அளித்த பத்துக் கட்டளைக் கற்கள் இரண்டையும் நெஞ்சோரம் அணைத்தபடி மீண்டும் கடவுளிடம் உரையாடப் புனிதமான ஓரேப் மலைச்சிகரத்துக்கு ஏறிப்போனார். அங்கே கடவுள் காட்சியருளிய இடத்தில் முழந்தாளிட்டு அவர் ஆழ்ந்த தியானத்தில் மூழ்கினார்

மோசே மலைக்கு ஏறிப் போய் நாட்கள் மாதங்களாய் கரையத் தொடங்கின. “மோசேக்கு என்ன நடந்துவிட்டதோ தெரியவில்லை. இந்த நாட்டிலிருந்து வெளியேறி கடவுள் நமக்கு வாக்களித்த இடத்துக்கு நம்மைக் கூட்டிச்செல்ல ஒரு கடவுளை நாம் உருவாக்கிக்கொள்வோம் வாருங்கள்” என்று சில மூத்த குடிமக்கள் கூற அதைப் பெருந்திரளான மக்கள் ஆதரிக்கிறார்கள். மக்களின் எழுச்சியைக் கண்டு பயந்த மோசேயின் அண்ணன் ஆரோனும் அதற்கு ‘சரி’ என்று தலையாட்டுகிறார். “நீங்கள் அணிந்திருக்கும் தங்க ஆபரணங்களைக் கழற்றி, என்னிடம் கொண்டு வாருங்கள்” என்கிறார். மக்களும் அவற்றை ஆரோனிடம் கொண்டுவந்து கொடுக்கிறார்கள்.

இப்படிச் சேர்ந்த ஆபரணங்கள் அனைத்தையும் உருக்கி ஒரு தங்கக் கன்றுக்குட்டியைச் செய்கிறார் ஆரோன். பளபளக்கும் கன்றுக்குட்டியின் சிலையைக் கண்டதும் உணர்ச்சிப் பெருக்கால் உந்தப்பட்ட இஸ்ரவேல் மக்கள், “எகிப்திலிருந்து எங்களை அழைத்து வந்த எங்கள் கடவுள் இதுவே” என்று கூறி ஆர்ப்பரித்தார்கள். அத்துடன் நிற்காமல் மக்கள் ஒரு பெரிய விருந்தை ஏற்பாடு செய்து குடித்துக் கும்மாளமிட்டுக் கொண்டாடி, அந்தக் கன்றுக்குட்டியை வணங்கத் தொடங்கினார்கள். மக்களில் பலரும் மோசேவால் நியமிக்கப்பட்ட காவல் வீரர்கள் சிலரும் கடவுளுக்கு விரோதமான இந்தச் செய்கையால் கவலையுடன் செய்வதறியாது திகைக்கு விலகி நின்றார்கள்.

கடவுளின் கோபம் வெளிப்பட்டது

நன்றி மறந்த தன் மக்களில் ஒரு பகுதியினரின் இந்தச் செய்கைகளைக் கண்டு கடவுள் மிகவும் கோபமடைந்தார். அதனால் அவர் மோசேயிடம், “சீக்கிரமாய்க் கீழே போ, என் கட்டளைகளை மறந்து ஒரு கன்றுக்குட்டியின் உருவத்தை இவர்கள் வணங்கிக் கொண்டிருக்கிறார்கள்” என்று என்றார்.

கடவுளின் வருத்தம் தொனித்த வார்த்தைகளைக் கேட்டு அவசர அவசரமாக மலையிலிருந்து கீழே இறங்கி வந்தார். கன்றுக்குட்டியின் முன்னால் மக்களின் கொண்டாண்டத்தைக் கண்ட மோசேவுக்குக் கடுங்கோபம் வந்தது. பத்துக் கட்டளைகள் எழுதப்பட்ட அந்த இரண்டு புனிமான தட்டையான கற்களைக் கீழே தூக்கி வீசுகிறார். அவை சுக்கல் நூறாக உடைந்து தெறித்து விழுகின்றன.

ஓடிச் சென்று அந்தக் கன்றுக்குட்டியின் சிலையைக் கைப்பற்றிய மோசே அதை உருக்கி அதைப் பொடியாக்கி விதைப்புக்குத் தகுதியற்ற களர் நிலத்தில் கொட்டி விடுகிறார். கடவுளின் கோபத்தை, மோசேவின் முகத்தில் கண்ட மக்கள் அனைவரும் நடுங்கிப்போய் நின்றார்கள்.

(பைபிள் கதைகள் தொடரும்)

http://tamil.thehindu.com/society/spirituality/பைபிள்-கதைகள்-29-கன்றுக்குட்டியை-வணங்கிய-மக்கள்/article9402051.ece

Link to comment
Share on other sites

பைபிள் கதைகள் 30: இறங்கி வந்த வெள்ளை மேகம்

 
bible_3100858f.jpg
 
 
 

இருநூறு ஆண்டுகளாக எகிப்தியர்களிடம் அடிமைப்பட்டுக் கிடந்த இஸ்ரவேல் ஜனங்கள் மீது கடவுள் இரக்கம் கொண்டார். அவர்களை அங்கிருந்து மோசேவின் தலைமையில் மீட்டெடுத்தார். செங்கடல் வழியாகத் தப்பித்து சீன் பாலைவனம் வழியாக சீனாய் மலைவரை முன்னேறிய மக்கள் அதன் அடிவாரத்தில் கூடாரங்கள் அமைத்துத் தங்கினார்கள். மோசேக்குக் கடவுள் காட்சியளித்த ஓரேப் சிகரம் அந்த மலையின் மீதே இருந்தது. மோசே அடிக்கடி அந்தப் புனித இடத்துக்குச் சென்று தங்கி கடவுளைத் தியானித்து அவரிடம் பேசிவந்த நிலையில் ஓராண்டு கடந்து சென்றது. மக்களில் ஒரு பகுதியினர் தங்களை மீட்டுவந்த உலகின் ஒரே கடவுளாகிய யகோவா மீது நம்பிக்கை வைத்து பொறுமையுடன் இருந்தனர்.

மற்றவர்களோ பொறுமையிழந்து ஆரோன் உள்ளிட்ட தங்களது மூப்பர்களுக்கு நெருக்கடி கொடுக்கத் தொடங்கினர். அவர்களைச் சமாதனப்படுத்தும் பொருட்டே தங்கத்தால் ஆன கன்றுக்குட்டியை செய்ய வேண்டிய கட்டாயம் ஆரோனுக்கு ஏற்பட்டது. இஸ்ரவேல் மக்கள் எப்படி வாழ வேண்டும் என்பதையும் தன்னை எப்படி வழிபட வேண்டும் என்பதை கடவுள் மோசே வழியே மக்களுக்குக் கற்பித்தார். மீறக்கூடாத பத்துக் கட்டளைகளைத் தந்தார். அதில் “என்னைத் தவிர உங்களுக்கு வேறு கடவுள் இல்லை. உங்கள் கற்பனையால் கடவுள் எதையும் நீங்கள் உருவாக்கக் கூடாது” என்பதே பிரதான கட்டளையாக இருந்தது. ஆனால் அதையே இந்த நன்றிகெட்ட மக்கள் மீறிவிட்டார்களே என்று கொதித்துப்போனார் மோசே. கோபத்தில் கட்டளைகள் கற்களை உடைத்தெறிந்ததோடு நில்லாமல் தங்கக் கன்றுகுட்டியின் சிலையைத் தீயிலிட்டு உருக்கிப்போட்டார்.

கடவுளுக்கு நினைவூட்டிய மோசே

மோசேயின் கோபமான முகத்தைக் கண்ட மக்கள் பயந்து நடுங்கினார்கள். புதிய கடவுளை உருவாக்கும்படி நிர்பந்தம் செய்து கலகம் உண்டாக்கிய மக்களில் சுமார் மூவாயிரம் பேரை மோசேவின் தலைமையை ஏற்றுக்கொண்டு கீழ்ப்படியும் இளைஞர்கள் குழு கொன்று குவித்தது. கீழ்ப்படியாத சொந்த மக்களில் இத்தனை பேர் கொல்லப்பட வேண்டி நிலை ஏற்பட்டதற்காக மனம் குமைந்த மோசே மீண்டும் கடவுளை நாடி மலை மீது ஏறினார்.

மோசேவைக் கண்டதும் கடவுள் தன் கோபத்தைக் கடும் இடியும் மின்னலுமாக வெளிப்படுத்தினார். அவரிடம் மோசே, “தயவு செய்து நான் கூறுவதைக் கேளும்! என் மக்களில் பலர் பெரும்பாவம் செய்தனர். அவர்கள் தங்கத்தால் ஒரு கற்பனை உருவத்தைச் செய்து வழிபாடு செய்துவிட்டனர். இப்போது அவர்களின் இப்பாவத்தை மன்னித்துவிடும்! நீர் அவர்களை மன்னிக்காவிட்டால், உமது புத்தகத்திலிருந்து எனது பெயரைக் கிறுக்கி அழித்துவிடும்” என்றார்.

ஆனால் கடவுள் மோசேயை நோக்கி, “எனக்கெதிராகப் பாவம் செய்தோரின் பெயர்களை மட்டுமே நான் அழிப்பேன்” என்றார். கடவுளின் கோபம் தணியாதிருப்பதைக் கண்ட மோசே, “இவர்கள் உமது மக்கள். அவர்களை அழித்துவிட வேண்டாம். ஆபிரகாம், ஈசாக்கு, இஸ்ரவேல் (யாக்கோபு) ஆகியோரை இந்த இக்கட்டான நேரத்தில் நினைவுகூரும். அவர்கள் உமக்குப் பணிவிடை செய்தனர். உமது பெயரால் அவர்களுக்கு வாக்குறுதி கொடுத்தீர். ‘நான் உன் ஜனங்களை வானத்தின் நட்சத்திரங்களைப் போல பெருகச் செய்வேன். நான் உன் ஜனங்களுக்கு வாக்களித்த தேசத்தைக் கொடுப்பேன். அத்தேசம் என்றும் அவர்களுக்குரியதாகும்’ என்று நீர் வாக்குறுதி தந்தீர்” என்றான்.

கடவுளை வணங்க ஒரு கூடாரம்

மோசேயின் வேண்டுதலும் நினைவூட்டலும் கடவுளின் கோபத்தைத் தணித்தன. அவர் மக்களை அழிக்கவில்லை. பின்பு கர்த்தர் மோசேயை நோக்கி, “நீயும், இஸ்ரவேல் மக்களும் இவ்விடத்தை விட்டுப் புறப்படுங்கள். நான் வாக்களித்த கானான் தேசத்துக்குச் செல்லுங்கள். உங்களுக்கு முன்பாகச் செல்வதற்கு ஒரு தூதனை அனுப்புவேன். கானானியரையும், எமோரியரையும், ஏத்தியரையும், பெரிசியரையும், ஏவியரையும், எபூசியரையும், நான் தோற்கடிப்பேன்.

உங்கள் தேசத்தை விட்டு அவர்கள் போகும்படியாகச் செய்வேன். எனவே அத்தேசத்திற்குச் செல்லுங்கள். நீ என்னிடம் பேசவும் உங்கள் மத்தியில் நான் வாழவும் தூய்மையான கூடாரம் ஒன்றை அமைத்துக்கொள்” என்றார். அதை எப்படி அமைக்க வேண்டும் என்பதையும் மோசேவுக்குக் கடவுள் சொல்லித்தந்தார். கடவுளின் அருளையும் வழிகாட்டுதலையும் பெற்றுக்கொண்டு கீழே இறங்கி வந்த மோசே, வாக்களித்த தேசம் நோக்கிப் பயணிக்க மக்களைத் தயார்ப்படுத்தினார். கடவுளுடன் பேசவும், அவரது பிரசன்னம் தங்கள் மத்தியில் இருக்கவும் அவர் கூறியபடியே புனிதக் கூடாரத்தை அமைத்தார்கள்.

‘ஆசரிப்புக் கூடாரம்’ என்று அது அழைக்கப்பட்டது. அதன் உள்ளே சென்று கடவுளுடன் மோசே பேசியபொதெல்லாம் வெள்ளை மேகம் ஒன்று இறங்கி வந்து கூடாரத்தின் மேல் நின்றது. அந்த வனாந்தரத்தில் இடம் விட்டு இடம் செல்லும்போது இந்தக் கூடாரத்தையும் பிரித்து எடுத்துசென்று முகாமிடும் இடத்தில் மீண்டும் அமைத்துக்கொண்டார்.

முதல் குரு

அந்தக் கூடாரத்தின் உள்ளேயிருந்த மூலையில் கடவுளுடன் செய்துகொண்ட உடன்படிக்கைப் பெட்டியை வைத்துக் கண்ணும் கருத்துமாகப் பாதுகாத்துவந்தனர். மோசே உடைத்தெறிந்த பத்துக் கட்டளை கற்களை மறுபடி கடவுள் அவருக்கு உருவாக்கித் தந்தார். அந்தப் புனிதக் கற்கள் இந்தப் பெட்டியின் உள்ளே வைக்கப்பட்டிருந்தன. தவிர, சீன் பாலைவனத்தில் மக்கள் உணவின்றித் தவித்தபோது வானிலிருந்து கடவுள் பொழிந்த மன்னா உணவு நிரப்பட்ட ஒரு மண் ஜாடி ஒன்று கடவுளின் வல்லமையைப் போற்றும் வகையில் அந்தப் பெட்டிக்குள் வைக்கப்பட்டிருந்தது.

கூடாரம் அமைக்கப்பட்ட பின் முதன்மை குருவாக மோசேயின் அண்ணன் ஆரோனைக் கடவுள் தேர்ந்தெடுக்கிறார். கடவுளை வணங்க அவர் ஜனங்களுக்குக் கற்றுக்கொடுக்கத் தொடங்கினார். இஸ்ரவேல் மக்கள் எங்கு முகாமிடுகிறார்களோ அந்த இடத்தின் நடுவில் ஆசரிப்புக் கூடாரம் அமைக்கப்பட்டது. அதைச் சுற்றியே இஸ்ரவேலர்கள் கூடாரங்களில் வசிக்கத் தொடங்கினார்கள்.

சீனாய் மலையிலிருந்து கானான் தேசத்தை நோக்கிப் புறப்பட்ட அவர்கள் கானானை ஓட்டியிருந்த காதேஸ் வனாந்திரப்பகுதிக்கு வந்து சேர்ந்தார்கள். இஸ்ரவேலர்களின் மூதாதையர்களான ஆபிரகாமும் ஈசாக்கும் யாக்கோபும் ஒரு காலத்தில் வாழ்ந்த நாடுதான் கானான். அங்கே பஞ்சம் ஏற்பட்டதால் யாக்கோபு தன் குடும்பத்துடன் எகிப்துக்குப் புலம்பெயர்ந்து போனார்.

அங்கே யாக்கோபுவின் மகனாகிய ஈசாக்கு ஆளுநராய் இருந்தார். ஆனால் காலம் சுழன்றதில் அங்கே பெருகிய இஸ்ரவேலர்களை ‘வந்தேறி’களாய்க் கருதி அடிமைகள் ஆக்கினார்கள். இப்பொழுது, சுமார் 216 ஆண்டுகளுக்குப் பிறகு கடவுளின் வல்லமையுடன் இஸ்ரவேலரைத் திரும்பவும் கானான் நாட்டுக்கு மோசே வழிநடத்திச் செல்கிறார். அவர்களால் அந்த நாட்டுக்குள் அத்தனை சீக்கிரம் நுழைய முடியவில்லை…

(பைபிள் கதைகள் தொடரும்)

http://tamil.thehindu.com/society/spirituality/பைபிள்-கதைகள்-30-இறங்கி-வந்த-வெள்ளை-மேகம்/article9417255.ece

Link to comment
Share on other sites

பைபிள் கதைகள் 31: கடவுள் வழங்கிய கடும் தண்டனை

 
mose_3104023f.jpg
 
 
 

யூதர்கள் ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு ஆகியோரைத் தங்களது ஆன்மிக வழிகாட்டி களாகக் கருதிவந்தனர். அதில் அவர்கள் பழம்பெருமை கொண்டிருந்தனர். இந்த மூவரும் வணங்கிவந்த உலகைப் படைத்த கடவுளாகிய யகோவா தேவனுக்கு உகந்தவர்களாக வாழாமல் வழிதவறிப்போன யூதர்கள் தங்கத்தால் கன்றுக்குட்டியின் சிலை ஒன்றைச் செய்து வழிபட்டதால் கடவுளின் கோபத்தைச் சம்பாதித்துக்கொண்டனர். கடவுள் தங்களை எகிப்திலிருந்து மீட்டெடுத்தார் என்பதை அவர்கள் வெகு விரைவாக மறந்துபோனார்கள். இந்த நிலையில்தான் இஸ்ரவேலர்கள் மீது கடவுள் கடுங்கோபம் கொண்டார். அப்போது கடவுளுக்கு அவரது வாக்குறுதியை நினைவூட்டி அவரது கோபத்தைத் தணித்தார் மோசே. பிறகு கடவுளின் வழிகாட்டுதலின்படி வாக்களித்த தேசமாகிய கானான் நாட்டுக்கு இஸ்ரவேல் மக்களை அழைத்துச் செல்லும்படி கடவுள் மோசேயை வழிநடத்தினார்.

ஒரு காலத்தில் ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு ஆகியோர் வாழ்ந்த நாடுதான் கானான். ஆனால் கானானுக்குள் அவர்களால் அத்தனை சீக்கிரம் நுழைய முடியவில்லை. கட்டுக்கோப்பான பாதுகாப்புடன் கானான் விளங்கியது. எனவே கானானுக்குள் நுழையும் முன் பாரான் பாலைவனத்தில் இருந்த காதேஸ் என்ற வனந்தரப் பகுதியில் இஸ்ரவேலர்கள் முகாமிட்டுத் தங்கினார்கள்.

12 வேவுக்காரர்கள்

நாட்டிற்குள் நுழையும் முன் கானான் தேசத்தை வேவு பார்த்து அறிந்துகொள்வதற்காக இஸ்ரவேல் மக்களின் 12 கோத்திரங்களிலிருந்து தலா ஒரு திறன்மிக்க இளம் தலைவரைத் தேர்ந்தெடுத்திருந்தார் மோசே. அவர்களில் நூனின் மகனான ஓசேயாவையும் எப்புன்னேயின் மகனான காலேப்பையும் மோசே பெரிதும் நம்பினார். ஓசேயாவுக்கு யோசுவா என்று மோசே பெயர் சூட்டினார். யோசுவா என்ற பெயருக்கு ‘ரட்சகன்’ என்பது பொருள்.

பன்னிரெண்டு வேவுக்காரர்களையும் அழைத்த மோசே, “நீங்கள் கானான் நாட்டுக்குள் ஊடுருவிச் சென்று, அங்கே வாழுகிற மக்களைப் பற்றித் தெரிந்துகொள்ளுங்கள். அவர்கள் பலமானவர்களா, அல்லது பலவீனமானவர்களா? அவர்களின் எண்ணிக்கை குறைவா, மிகுதியா? அவர்கள் எந்த விதமான நகரங்களில் குடியிருக்கிறார்கள்? நகரங்களைப் பாதுகாக்க மதிற்சுவர்கள் உள்ளனவா? அங்குள்ள மண் விவசாயம் செய்வதற்குரிய வளம் கொண்டதாக இருக்கிறதா? அங்கே மரங்கள் இருக்கின்றனவா? அங்குப் பழங்கள் விளைகின்றனவா? விளைந்தால் அவற்றில் சிலவற்றைக் கொண்டுவர முயலுங்கள்” என்றார்.

மோசே வழியகாட்டியபடியே கானான் நாட்டின் நெகேவ் வனாந்தரத்தின் வழியாக அவர்கள் உள்ளே நுழைந்தனர். பின்னர் எஸ்கோல் பள்ளத்தாக்கு வரை சென்று நாட்டின் நான்கு திசைகளிலும் நோட்டமிட்டனர். இவ்வாறு நாற்பது நாட்கள் கானான் நாட்டைச் சுற்றிப் பார்த்துத் தகவல்களை அறிந்துகொண்ட பின் அங்கிருந்து திராட்சை, மாதுளை, அத்தி ஆகிய பழங்களைப் பறித்துக்கொண்டு தங்கள் முகாமுக்குத் திரும்பினார்கள். கானான் நாட்டிலிருந்து கொண்டுவந்திருந்த பழங்களை மோசேயிடமும் மக்களிடமும் காட்டினார்கள்.

கலகம் செய்த பத்துப் பேர்

பிறகு மோசேயிடம் அவர்கள், “நீங்கள் தந்த பணியை நல்லபடியாக முடித்துவிட்டோம். அந்நாடு மிகுந்த வளம் மிக்கது. ஜனங்கள் மிகவும் பலமுள்ளவர் களாக வாழ்கிறார்கள். நகரங்கள் மிகவும் விரிவானவை. பலமான பாதுகாப்பு கொண்டவை. அங்கே சில ஏனாக்கின் மக்களையும் கண்டோம். அவர்களில் பலர் தோற்றத்தில் ராட்சசர்கள் போல் மிகுந்த பலசாலிகளாக உள்ளனர். அமலேக்கியர் தென்புறமான நாட்டில் குடியிருக்கிறார்கள். மலை நாடுகளில் ஏத்தியரும், எபூசியரும், எமோரியரும் குடியிருக்கிறார்கள். கானானியர்கள் கடற்கரைகளிலும், யோர்தான் நதி அருகேயும் வாழ்ந்துவருகிறார்கள்” என்றனர்.

காலேப் வீரம் கொப்பளிக்க, “நாம் புறப்பட்டுப் போய் அவர்களை வென்று, கானானை நமக்குரியதாக எடுத்துக்கொள்வோம்” என்றான்.

ஆனால் யோசுவா தவிர அவனோடு சென்று வந்த மற்ற பத்துப் பேரும், “நாம் அவர்களோடு சண்டையிட முடியாது. அவர்கள் ராட்சச பலமுள்ளவர்கள். எங்கள் பார்வையில் அவர்களுக்கு முன் நாங்கள் சிறிய வெட்டுக்கிளிகளைப் போன்று இருந்தோம்” என்று மக்கள் மனதில் அவநம்பிக்கையை விதைத்தார்கள் மீண்டும் அவநம்பிக்கை கொண்ட இஸ்ரவேல் மக்கள், “போரில் நாங்கள் செத்துவிடுவோம். எங்கள் மனைவிகளையும் பிள்ளைகளையும் சிறைபிடித்துக் கொண்டுபோய் விடுவார்கள். அதனால் மோசேக்குப் பதிலாக ஒரு புதிய தலைவரைத் தேர்ந்தெடுத்துக்கொண்டு எகிப்துக்கே போய்விடலாம் வாருங்கள்” என்று உரத்த குரலில் கத்தி ஆர்ப்பாட்டம் செய்யத் தொடங்கினர்.

சபிக்கப்பட்ட மக்கள்

இந்தப் புதிய குழப்பத்தைக் கண்டு மோசே மிகவும் வருந்தினார். காலேப்பும் யோசுவாவும் கடவுள் மேல் நம்பிக்கை வைத்து, ஜனங்களை அமைதிப்படுத்த முயன்றார்கள். அவர்கள் இஸ்ரவேல் மக்களைப் பார்த்து: “அன்பு மக்களே… பயப்படவேண்டாம். உலகைப் படைத்து, காத்துவரும் ஒரே கடவுளும் நம்மை எகிப்தின் அடிமைத்தனத்திலிருந்து மீட்டு அழைத்துவந்தவருமான யகோவா நம்முடன் இருக்கிறார். கானான் நாட்டை நாம் எளிதாகக் கைப்பற்றிவிடலாம்” என்றார்கள்.

ஆனால் இஸ்ரவேலர்கள் கேட்பதாக இல்லை. அந்த இருவர் மீது கடுங்கோபம் கொண்ட அவர்கள் யோசுவாவையும் காலேப்பையும் கல்லெறிந்து கொல்லத் துணிந்தார்கள். இதைப் பார்த்துக்கொண்டிருந்த கடவுள் கடுங்கோபம் கொண்டார். இதைக் கண்டு மீண்டும் தனது மக்களை மன்னித்து உயிரோடு விட்டுவிடும்படி கடவுளிடம் கெஞ்சி மன்றாடினார் மோசே.

மீண்டும் மனமிரங்கிய கடவுள், “இந்த மக்களில் இருபது வயதும் அதற்கு மேற்பட்ட வயதும் கொண்ட யாரும் கானான் தேசத்துக்குள் நுழையப் போவதில்லை. எகிப்திலும் வனாந்தரத்திலும் நான் செய்த அற்புதங்களை கண்கூடாகப் பார்த்தும்கூட அவர்கள் என்னை நம்பவில்லை. அதனால் இவர்களில் கடைசி மனிதன் சாகும்வரை, நாற்பது ஆண்டுகள் வனாந்தரத்தில் அலைந்து திரிவார்கள். யோசுவாவும் காலேபும் மாத்திரமே கானான் தேசத்துக்குள் செல்வார்கள்” என்று கடவுள் மோசேயிடம் கூறினார்.

வாக்களிக்கப்பட்ட கானான் நாட்டிற்குச் சென்று மகிழ்ச்சியாக வாழ்ந்திருக்க வேண்டிய இஸ்ரவேலர்கள் இந்தச் சாபத்தால், வனாந்தரத்தில் ஆடுமாடுகளை மேய்த்துக்கொண்டு மிகக் கடினமான அலைச்சலும் துன்பமும் மிக்க வாழ்வை வாழ்ந்துகொண்டிருந்தார். இத்தனை கடுமையான சாபத்தைக் கடவுளிடமிருந்து பெற்றிருந்த நிலையிலும் அவர்களிடம் பதவிச் சண்டை ஏற்பட்டது...

(பைபிள் கதைகள் தொடரும்)

http://tamil.thehindu.com/society/spirituality/பைபிள்-கதைகள்-31-கடவுள்-வழங்கிய-கடும்-தண்டனை/article9428062.ece

Link to comment
Share on other sites

பைபிள் கதைகள் 32: கடவுள் நடத்திய தேர்தல்

 

 
bible_3107005f.jpg
 
 
 

அடிமைத் தளையிலிருந்து தங்களை விடுவித்து, பாலைவனத்தில் தங்களுக்கு உணவளித்துக் காத்த கடவுள் மீது நம்பிக்கையற்று விரக்தியடைந்தனர் இஸ்ரவேல் மக்கள். எகிப்துக்கே திரும்பச் சென்று வாழ்வதே சரியென்று பெரும்பாலான மக்கள் நினைத்தனர். இதனால் கோபமடைந்த கடவுள், கானான் நாட்டுக்குள் அவர்கள் செல்ல முடியாதவாறு சபித்து 40 ஆண்டுகள் பாலைவனத்திலேயே வாழ்ந்து மடியும்படியான வாழ்க்கையை அவர்களுக்குக் கொடுத்தார். இவ்வாறு பாலைவன வனாந்தரத்தில் அலைந்து திரிந்து கொண்டிருந்த அவர்கள், கடவுளின் சாபத்திலிருந்து நம்மைக் காக்க வழியற்ற மோசே இனி நமக்குத் தலைவராக இருக்க வேண்டாம்; அந்தத் தகுதியை அவர் இழந்துவிட்டார் என்று கடுகடுத்தார்கள்.

தங்களுக்குத் தலைவராக மோசேயோ, தங்களை ஆன்மிகப் பாதையில் வழிநடத்து பிரதான தலைமை குருவாக இருந்த மோசேயின் சகோதரர் ஆரோனோ இனி அந்த அந்த அந்தஸ்தில் இருக்க வேண்டியதில்லை என்றார்கள். இப்படிக் கூறிய கூட்டத்துக்கு கோராகு, தாத்தான், அபிராம் ஆகிய மூன்று பேர் தலைமை வகித்தார்கள். இந்த மூவரின் பேச்சைக் கேட்ட்ட 250 மூன்றாம் கட்டத் தலைவர்களும்கூட மோசேயையும் ஆரோனையும் நிராகரிக்கத் தொடங்கினார்கள். இவர்கள் கூட்டமாகத் திரண்டு வந்து மோசேயிடம் “எங்கள் அனைவருக்கும் தலைவர்போல் ஏன் உம்மைக் காட்டிக்கொள்கிறீர்?” என்று கேட்கிறார்கள்.

கடவுள் நடத்திய தேர்தல்

அதற்கு மோசே மிக அமைதியாகப் பதில் அளித்து அவர்களை ஒரு உடன்பாட்டுக்குள் கொண்டுவந்தார். “நாளைக் காலை தூப கலசங்களை எடுத்துக்கொள்ளுங்கள். அவற்றில் தூப வர்க்கத்தைப் போடுங்கள். பின்னர் எதிர்ப்பவர்கள் அனைவரும் நம் கடவுளும் பரலோகத் தந்தையுமாகிய யகோவா தேவனின் ஆசரிப்புக் கூடாரத்துக்கு வாருங்கள். அப்போது நம் கடவுள் யாரைத் தேர்ந்தெடுக்கிறார் என்று நீங்களே பாருங்கள். இந்த ஏற்பாட்டை ஏற்றுக்கொள்கிறீர்களா?” என்று கேட்டார். கடவுள் தேர்தெடுப்பார் என்றால் எவ்வகையான அடையாளத்தைக் கொண்டு நாங்கள் தெரிந்துகொள்வது என்று அவர்கள் எதிர்க்கேள்வி கேட்டனர். அதையும் நம் கடவுளே வெளிப்படுத்துவார். அதை உங்களைப் போலவே இப்போதைக்கு நானும் அறியேன் என்றார். சமாதான மடைந்து கலைந்து சென்றனர்.

மறுநாள் நாள் கோராகுவின் தலைமையில் எதிர்ப்பாளர்கள் அனைவரும் ஆசரிப்புக் கூடாரத்துக்கு முன் குழுமினர். நேற்று மோசேயுடன் விவாதித்த போது இருந்த கூட்டத்தைவிட தற்போது மேலும் அதிகமான பேர் திரண்டிருந்தார்கள். அந்தக் கூட்டத்தில் மோசே, ஆரோன் ஆகியோருக்கு ஆதரவானவர்களும் நின்றுகொண்டிருந்தார்கள். இவர்களைக் கண்டு யகோவா கோபம் கொண்டார். அந்தப் பொறாமைக் கூட்டத்தாரை நோக்கி மோசே தைரியமாகப் பேசும்படி கடவுள் செய்தார். கூட்டத்தாரை நோக்கி மோசே, “ இந்தக் கெட்ட மனிதர்கள் தங்கியிருக்கிற கூடாரங்களின் அருகில் நிற்காதீர்கள். அவற்றை விட்டு விலகி நில்லுங்கள். அவர்களுக்குச் சொந்தமான எந்தப் பொருளையும் தொடாதீர்கள்” என்றார். மோசே இப்படிக் கூறியதும் நம்பிக்கையான மக்கள் அவருக்குக் கீழ்ப்படிந்து எதிர்ப்பாளர்களை விட்டு விலகி நின்றார்கள்.

விழுங்கிய பூமி

இப்படி அவர்கள் விலகி நின்றதும் மோசே மீண்டும் பேசினார். “ கடவுள் யாரைத் தேர்ந்தெடுத்திருக்கிறார் என்பதை இப்போது நீங்கள் தெரிந்துகொள்வீர்கள். இந்த நிலம் பிளந்து இங்குள்ள கெட்ட மனிதர்களை விழுங்கிவிடும்” என்றதும் சில நொடிகள் அங்கே சலசலப்பும் பீதியும் ஏற்பட்டது. மோசே சொல்லி முடித்ததுமே நிலம் பிளந்தது. எதிர்ப்பாளர்களுக்குத் தலைமையேற்றவர்கள் கூடாரங்களும் அவர்களது உடைமைகளும் கூக்குரல் பீறிட பூமிக்குள் புதைந்துபோனார்கள்.

இப்போது ஆசாரிப்பு கூடாரத்தின்மேல் வெள்ளை மேகமாய் இறங்கிவந்த கடவுள் மோசேயிடம் பேசினார். “இஸ்ரவேல் மக்களின் ஒவ்வொரு கோத்திரத்திலுமுள்ள தலைவர்கள் அனைவரையும் தலா ஒரு கோலைக் கொண்டு வரச் சொல். அந்தக் கோல்களை ஆசரிப்புக் கூடாரத்திலுள்ள உடன்படிக்கைப் பெட்டிக்கு முன்பாக வை. யாரை ஆசாரியனாக (தலைமை குரு) நான் தேர்ந்தெடுக்கிறேனோ, அவனது கோல் மட்டும் பூ பூக்கும்” என்று பேசினார். அவ்வாறே 12 கோல்களை ஆசாரிப்புக் கூடாரத்தின் உடன்படிக்கைப் பெட்டி முன்பாக வைத்துவிட்டுக் கலைந்து சென்றனர்.

மறுநாள் காலை கூடாரத்தின் மேல் வெள்ளை மேகமாய் கடவுள் இறங்கி வருவதைக் கண்ட மக்கள் புனிதக் கூடாரத்தின் முன்னாள் திரண்டனர். பின்னர் மோசே, ஆரோன் ஆகியோரின் பின்னால் கூடாரத்தின் உள்ளே சென்று பார்த்தனர். இப்போது ஆரோனின் கோலில் பூக்கள் மலர்ந்து, பழுத்த வாதுமைப் பழங்களும் கொத்துக்களுடன் காட்சியளித்தன. ஆரோனின் கோலை மட்டும் பூக்கும்படி செய்து அவரை இஸ்ரவேல் ஜனங்களின் தலைமை குருவாகக் கடவுள் தேர்தெடுத்தார். அதன் பிறகு அந்தக் கூட்டத்தாரின் மத்தியில் எதிர்ப்பு என்பதே இல்லாமல் போயிற்று.

(பைபிள் கதைகள் தொடரும்)

http://tamil.thehindu.com/society/spirituality/பைபிள்-கதைகள்-32-கடவுள்-நடத்திய-தேர்தல்/article9438347.ece

Link to comment
Share on other sites

பைபிள் கதைகள் 33: பாறையிலிருந்து பீறிட்ட தண்ணீர்!

 

 
bible_3110122f.jpg
 
 
 

கடவுள் அளித்த தண்டனை காரணமாக இஸ்ரவேலர்கள் நாடின்றி 40 ஆண்டுகள் பாலைவனத்தின் பல்வேறு இடங்களில் மாறி மாறி முகாமிட்டு வாழ்ந்துவந்தனர். இவ்வாறு 39 ஆண்டுகள் உருண்டோடிவிட்டன. இத்தனை ஆண்டுகளாகத் தம் மக்களுக்குப் பனியைப் போன்ற மன்னா உணவைப் பொழியச் செய்து அவர்களைப் பட்டினியிலிருந்து காத்திருந்தார் கடவுள். தன்னுடன் பேசவும் வழிகாட்டுதல் பெறவும் ஆசாரிப்புக் கூடாரம் அமைத்து புனிதம் பேணக் கடவுளே கற்றுக்கொடுத்திருந்தார். அந்தக் கூடாரத்தின் மீது பகலில் வெள்ளை மேகமாகவும் இரவில் நெருப்புத் தூணாகவும் இறங்கிவந்து அவர்களுக்கு நம்பிக்கை அளித்தார். பாலைவனத்தின் கடும்வெப்பம், கடுங்குளிர், கல், முள் ஆகிய எதனாலும் அவர்கள் பாதிக்காத வண்ணம் காத்து வந்த கடவுள், இஸ்ரவேலர்களின் ஆடைகள் இத்தனை ஆண்டுகளை பழுதாகிக் கிழிந்துவிடாத அற்புதத்தையும் செய்தார்.

குடிக்கத் தண்ணீர் இல்லை

கடவுள் அளித்த தண்டனை முடியவிருக்கும் 40-வது ஆண்டின் தொடக்கத்தில் பாலைவனத்தில் காதேஸ் என்ற இடத்துக்கு மீண்டும் வந்து முகாமிட்டுத் தங்கினார்கள். சுமார் 39 ஆண்டுகளுக்கு முன் கானான் நாட்டைக் குறித்து உளவறிந்து வர பன்னிரண்டு வேவுக்காரர்களை அனுப்பி வைத்தபோது இஸ்ரவேலர்கள் தங்கியிருந்தது இதே காதேஸில்தான். இம்முறை காதேஸில் முகாமிட்டபோது மோசேயின் அக்காவாக மிரியாம் இறந்து போனார். மிரியாமின் இறப்பு அவர்களை வாடச் செய்தது.

இப்போது காதேஸில் அவர்களுக்குப் புதிய பிரச்சினை தோன்றியது. யாருக்கும் குடிக்கத் தண்ணீர் இல்லை. எனவே மக்கள் மோசேவிடம் கூட்டமாகச் சென்று முறையிட்டார்கள், “நாங்கள் எகிப்திலேயே செத்துப்போயிருந்தால் எவ்வளவோ நன்றாக இருந்திருக்கும். தண்ணீர் இல்லாத இந்தப் பாலைக்கு ஏன் எங்களை நடத்திக்கொண்டு வந்தீர்? இங்கு தானியமோ திராட்சையோ, மாதுளையோ ஏன் அத்திப் பழங்களோ கூட இல்லை.” என்று கண்ணீர் ததும்பக் கூறினார்கள்.

கடவுளின் வார்த்தையை மறந்த மோசே

இந்த இக்கட்டான சூழ்நிலையில் கடவுளின் கருணையை எதிர்பார்த்து ஆசரிப்புக் கூடாரத்துக்குச் சென்று மோசேவும் ஆரோனும் முழந்தாளிட்டனர். அப்போது இறங்கிவந்த கடவுள், “இந்த மக்களைக் கூட்டமாக அழைத்துச் சென்று இங்கேயிருக்கும் கற்பாறையின் முன் நிறுத்து. பின்னர் கற்பாறையைப் பார்த்துப் பேசு. அப்போது மக்களுக்கும் அவர்களுடைய எல்லா விலங்குகளுக்கும் போதுமான தண்ணீர் அதிலிருந்து பீறிட்டு வரும்” என்று மோசேயிடம் கூறினார். இதைக் கேட்டு நிம்மதியுடன் வெளியே வந்தபோது மோசேயின் முகத்தை மக்கள் ஆவலுடன் நோக்கினார்கள்.

மக்களைக் கற்பாறைக்கு அழைத்துச்சென்ற மோசே “ நானும் ஆரோனும் இந்தக் கற்பாறையிலிருந்து உங்களுக்குத் தண்ணீர் வரவழைத்துக் காட்டட்டுமா?” என்று கேட்டார். பின்னர் மக்களின் பதிலுக்குக் காத்திருக்காமல் மோசே ஒரு கோலினால் அந்தக் கற்பாறையை இருமுறை அடித்தார். இப்போது அந்தக் கற்பாறையிலிருந்து மலையருவி ஒன்றின் ஊற்றுக்கண்போல தண்ணீர் பீய்ச்சி அடித்து ஓடத் தொடங்கியது. கடவுளின் கருணை தண்ணீராய் ஊற்றெடுத்துவருவதைக் கண்ட மக்கள் அனைவரும் அள்ளிப்பருகி நிம்மதியடைந்தனர். தங்களின் விலங்குகளுக்கு வேண்டியமட்டும் தண்ணீர் காட்டினர்.

கண்களை மறைத்த தற்பெருமை

கடும் கற்பாறையிலிருந்து தண்ணீரை வரவழைத்தவர் கடவுளாயிருக்க, மோசேவும் ஆரோனும் ஒருகணம் நிலைதடுமாறிப்போய் கற்பாறையிலிருந்து தாங்களே தண்ணீரை வரவழைக்கப் போவதாக மக்களிடம் சொன்னது கடவுளை மிகவும் கோபப்படுத்தியது. உண்மையை மக்களிடம் சொல்லாத அவர்களைக் கடவுள் தண்டித்தார். “நீங்கள் இருவரும் என் மக்களுக்குத் தலைமை தாங்கி கானான் நாட்டுக்குள் அவர்களை அழைத்துப்போக மாட்டீர்கள் “ என்று கூறி அவர்களைக் கடிந்துகொண்டார். கடவுளை மீறிச் செயல்பட்டதற்காக மோசேயும் ஆரோனும் மனம் வருந்தினர்.

ஆரோனின் மறைவு

பின்னர் காதேஸ் பாலைவனப் பகுதியிலிருந்து கிளம்பிய இஸ்ரவேலர்கள் ‘ஓர்’ என்ற மலைப்பகுதிக்கு வந்து அதன் உச்சியில் முகாமிட்டிருந்தனர். அந்த நாட்களில் 123 வயதை எட்டியிருந்த ஆரோன் இறந்துவிடுகிறார். மிரியாமைத் தொடர்ந்து வந்த ஆரோனின் இழப்பு அவர்களை மேலும் அதிகமாக வாட்டியது. அவருக்காக முப்பது நாட்கள் துக்கம் அனுசரித்தார்கள். தங்களுக்கான அடுத்த தலைமை குருவைத் தேர்ந்தெடுக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டது.

இதனால் கடவுள் கூறியிருந்தபடி ஆரோனுடைய மகன் எலெயாசாரை தங்களின் பிரதான ஆசாரியாராகத் தேர்ந்தெடுத்தனர். சிறிது காலத்தில் பழையபடியே நம்பிக்கையிழந்த இஸ்ரவேல் மக்கள் கடவுளுக்கும் மோசேக்கும் எதிராகப் பழையபடியே பேசத் தொடங்கினார்கள். “இங்கே தண்ணீரும் இல்லை; உணவும் இல்லை. இனி மன்னாவை மட்டுமே எங்களால் சாப்பிட்டுக்கொண்டிருக்க முடியாது. மன்னாவைக் கண்டாலே எங்களுக்கு வெறுப்பாக இருக்கிறது” என்று வெறுப்புடன் பேசத் தொடங்கினார்கள். சக்தியும் ஆற்றலும் கொடுத்துவந்த மன்னா உணவானது கடவுள் வானத்திலிருந்து தன் அருளைப் போல் பொழியச் செய்வது என்ற உண்மையை அவர்கள் மறந்தேபோனார்கள்.

படையெடுத்த பாம்புகள்

நன்றியின்மையின் மொத்த உருவமாகப் பெரும்பாலானவர்கள் மாறிக்கொண்டிருந்தார்கள். எனவே தன்மீது நம்பிக்கையில்லாதவர்களைத் தண்டிக்க கடவுள் பாம்புகளை அனுப்பினார். பாம்புகளிடம் கடிபட்ட இஸ்ரவேலர்களில் பலர் மாண்டுபோனார்கள். பாம்புகளின் படையெடுப்பைக் கண்ட பிறகே இது கடவுளின் கோபம் என்று உணர்ந்த மக்கள் மோசேயிடம் ஓடிவந்தனர்.

“ நாங்கள் கடவுளுக்கும் உமக்கும் எதிராகப் பேசிப் பாவம் செய்தோம். இப்பொழுது இந்தப் பாம்புகளை நீக்கிப்போடும்படி கடவுளிடம் எங்களுக்காகப் பரிந்துபேசும்” என்று வேண்டிக் கேட்டுக்கொண்டார்கள். எனவே மோசே ஜனங்களுக்காக வேண்டிக்கொண்டார். அப்போது கடவுள் மோசேயைப் பார்த்து “வெண்கலத்தால் செய்யப்பட்ட ஒரு பாம்பை கம்பத்தில் பொருத்தி வை. நான் அனுப்பிய பாம்புகளால் கடிபட்டவர்கள் அந்த வெண்கலப் பாம்பை ஏறெடுத்துப் பார்க்கட்டும். அவ்வாறு செய்யும்போது அவர்கள் குணமடைவார்கள்” என்றார். மோசேவும் அவ்வாறே செய்தார். பாம்புகளால் கடிபட்டு உயிருக்குப் போராடிக்கொண்டிருந்தவர்கள் வெண்கலப் பாம்பைக் கண்டு உயிர் பிழைத்தனர்.

(பைபிள் கதைகள் தொடரும்)

http://tamil.thehindu.com/society/spirituality/பைபிள்-கதைகள்-33-பாறையிலிருந்து-பீறிட்ட-தண்ணீர்/article9448913.ece

Link to comment
Share on other sites

பைபிள் கதைகள் 34: கழுதை பேசியது!

 
 
bible_3113024f.jpg
 
 
 

பாம்புக்கடியிலிருந்து மீண்ட இஸ்ரவேல் மக்கள், கடவுளின் சக்தியைக் கண்டுவியந்து அவரைப்போற்றிப் பாடினர். பின்னர் அவ்விடத்தை விட்டுக் கிளம்பி ஓபோத் என்ற இடத்தில் கூடாரம் போட்டனர். பிறகு அங்கிருந்து மோவாபிற்குக் கிழக்கே அய் அபாரீமின் என்ற பாலைவனப்பகுதியில் தங்கினார்கள். வறட்சி வாட்டத் தொடங்கியதால் அங்கிருந்து புறப்பட்டு சாரோத் பள்ளத்தாக்கில் சிலமாதங்கள் தங்கினர். பின்னர் அங்கிருந்தும் புறப்பட்டு அர்னோன் ஆற்றைக் கடந்து அதன் மறுகரையில் தங்கினார்கள். அந்த ஆற்றின் நீர் குடிப்பதற்கு உகந்ததாக இல்லை.

இதனால் அங்கிருந்து கிளம்பி பேயீர் என்ற பகுதிக்குப் போய்ச் சேர்ந்தார்கள். அங்கே கிணறு இருந்தது. இந்த இடத்தில் கடவுள் மோசேயிடம், “மக்களை இங்கே கூட்டிக்கொண்டு வா.. அவர்களுக்கு தண்ணீர் வழங்கு வேன்” என்றார். அவ்வாறே மோசே மக்களுக்கு கிணற்றைக் காட்டினார். அதைக் கண்ட மக்கள் மகிழ்ச்சிபொங்கிட...

“தண்ணீரால் நிரம்பி வழிகிறது இந்தக் கிணறு,!

பாடுங்கள் இதைப் பற்றி!

பாலைவனத்தில் இது கடவுளின் அன்புக் கொடையாகும்”

-எனப் புகழ்ந்து பாடினர். அதன்பின் அந்தக் கிணற்றை அவர்கள் ‘மாத்தனா’ என்று அழைத்தனர். சில காலத்துக்குப் பின் மாத்தனாவிலிருந்து நகாலியேலுக்கும், பிறகு நகாலியேலிலிருந்து பாமோத் துக்கும் பாமோத்திலிருந்து மேவாப் பள்ளத்தாக்குக்கும் மனம் தளராமல் பயணம் செய்து எமோரியர்களின் அரசனாகிய சீகோன் வசித்து வந்த எஸ்போன் நகரத்துக்கு புறத்தே பாலைவனத்தில் முகாமிட்டனர்.

சீகோனிடம் சிலரை அனுப்பிய மோசே, “ உங்கள் நாட்டின் வழியாக நாங்கள் பயணம் செய்ய அனுமதி தாருங்கள். நாங்கள் வயல் வழியாகவோ திராட்சைத் தோட்டத்தின் வழியாகவோ செல்ல மாட்டோம். உங்கள் கிணறுகளிலுள்ள தண்ணீரைக் குடிக்க மாட்டோம். உங்கள் நாட்டைக் கடந்து செல்லும்வரை நாங்கள் சாலையிலேயே தங்குவோம்” என்று அனுமதி கேட்டார். ஆனால் சீகோன் அதற்கு ஒப்புக்கொள்ளவில்லை. அத்துடன் நில்லாமல் தன் படைகளைத் திரட்டிச் சென்று இஸ்ரவேல் மக்களுடன் ‘யாகாஸ்’ என்னும் இடத்தில் போரிட்டான். அந்தப் போரில் சீகோன் கொல்லப்பட்டான். இவ்வாறு எமோரியரின், எஸ்போன் உள்ளிட்ட அனைத்து நகரங்களையும் கைப்பற்றிய இஸ்ரவேல் மக்கள், அங்கே தற்காலிகமாக வாழத் தொடங்கினார்கள்.

பிறகு அங்கிருந்து கிளம்பி பாசான் எனும் பெரிய நகருக்குச் செல்லும் சாலையில் பயணம் செய்தனர். இதையறிந்த பாசானின் அரசனாகிய ஓக், தனது படைகளைத் திரட்டிக்கொண்டு இஸ்ரவேல் மக்களை எதிர்கொண்டு போர்புரிந்தான். இங்கேயும் கடவுள் இஸ்ரவேல் மக்களுக்கு வெற்றியைத் தந்தார். சீகோனைப் போலவே ஓக்கும் அவனது படைகளும் இஸ்ரவேலரிடம் வீழ்ந்தனர்.

தந்திரம் செய்த அரசன்

பின் பாசன் நகரிலிருந்து புறப்பட்ட இஸ்ரவேல் மக்கள், மோவாப் எனும் வளமையான நகரம் அமைந்திருந்த யோர்தான் பள்ளத்தாக்கு நோக்கிப் பயணம் செய்து, எரிகோ எனும் பலம் பொருந்திய கோட்டை நகரின் அருகிலுள்ள யோர்தான் நதியின் இக்கரையில் தங்கள் முகாம்களை அமைத்தனர். அந்த நேரத்தில் பாலாக் என்பவன் மோவாப் நகரின் அரசனாக ஆட்சி செய்துவந்தான்.

சீகோன், ஓக் ஆகிய இருபெரும் அரசர்களை இஸ்ரவேலர்கள் வீழ்த்திவிட்டு முன்னேறி வந்திருக்கும் செய்திகள் அவனைக் கலங்கடித்திருந்தன. இதனால் மிகவும் பயந்தான். காரணம் இஸ்ரவேல் மக்கள் அனைவருக்கும் போர்புரியும் திறத்தை கடவுள் அளித்திருந்தார். அவர்களது எண்ணிக்கையும் அதிகரித்திருந்தது. இதனால் மோதுவதற்கு முன் இஸ்ரவேலர்களுக்கு வெற்றி கிடைக்காதவாறு அவர்களை சபிக்கச் செய்துவிடலாம் என்று தந்திரம் செய்தான்.

சபிக்க ஒருவன்

தனது நகரை ஒட்டியிருந்த பெத்தூர் என்ற ஊரில் வசித்துவந்த பிலேயாம் என்பவரை சரியான நபர் எனக் கண்டறிந்தான் பாலாக். ஆம்! பிலேயாத்தின் சாபத்தைப் பெற்றவர்கள் வாழ்ந்ததில்லை. அவனுக்கு அப்படியொரு நாக்கு! உடனே அவனுக்கு அவசரச் செய்தி அனுப்பினான் அரசன்.

“ பிலேயாமே நீ வந்து எனக்கு உதவிசெய். எங்களைவிட இஸ்ரவேலர்கள் பலமிக்கவர்களாக உள்ளனர். உனக்குப் பெரும் வல்லமை உண்டு என்பதை அறிவேன். நீ ஒருவரை ஆசீர்வதித்தால் அவருக்கு நன்மைகள் ஏற்படும். நீ ஒருவருக்கு எதிராகப் பேசினால் அவருக்குத் தீமை ஏற்படும். எனவே நீ வந்து அவர்களைச் சபித்துவிடு. அதனால் நான் அவர்களை எளிதில் தோற்கடித்துவிடுவேன். இதற்கு உனக்குக் கைமாறாக என்ன வேண்டுமோ கேட்டுப் பெற்றுக்கொள்” என்று செய்தி அனுப்பினான்.

வாய் திறந்த கழுதை

பாலாக், கைநிறைய அள்ளிக் கொடுப்பான் என்று நம்பிய பிலேயாம் தன் கழுதை மேலேறி அவனைக் காணக் கிளம்பினான். ஆனால் பிலேயாம் தன் மக்களைச் சபிப்பதற்கு கடவுள் விரும்பவில்லை. அதனால் பிலேயாமைப் பாதி வழியிலேயே தடுத்து நிறுத்த நீண்ட வாளுடன் கூடிய ஒரு தேவதூதனை அனுப்பினார். கண்களைக் கூசச்செய்யும் வாளுடன் தேவதூதன் கழுதையின் முன்பாகத் தோன்றினார். அந்தத் தேவதூதனை பிலேயாமால் பார்க்க முடியவில்லை, ஆனால் அவனுடைய கழுதையினால் அவரைப் பார்க்க முடிந்தது. கழுதை எவ்வளவோ முயன்றும் தேவதூதனைத் தாண்டி ஒரு அடிகூட எடுத்து வைக்க முடியவில்லை. இதனால் கழுதை வழியிலேயே படுத்துவிடுகிறது. ஆத்திரம் தலைக்கேற பிலேயாம், தன் கோலால் கழுதையை மும்முறை அடித்துத் துவைத்தான். அப்போது கழுதை வாய் திறந்து பேசும்படியான அற்புதத்தை கடவுள் அரங்கேற்றினார்.

“என் எஜமானே என்ன தவறு செய்தேன் என்று என்னை இப்படி நையப் புடைக்கிறாய்?” என்று கழுதை கேட்டது. கழுதை பேசுகிறதே என்று ஆச்சரியப்படுவதை விடுத்து “என் கையில் ஒரு வாள் மட்டும் இருந்திருதால் உன்னை இந்நேரம் கொன்று போட்டிருப்பேன்!” என்று பிலேயாம் ஆத்திரம் பொங்கக் கத்துகிறான். அப்போது தேவதூதனை பிலேயாத்தின் கண்களுக்கும் தெரியும்படி செய்த கடவுள், “ எதற்காக உன் கழுதையை அடித்தாய்? உன்னைத் தடுக்கவே நான் வந்தேன். இஸ்ரவேல் மக்களை சபிக்கச் செல்லாதே. உன் கழுதைதான் உன்னை கீழே இறக்கிவிடாமல் காப்பாற்றியது. அதுமட்டும் உன்னை விட்டு விலகியிருந்தால் நான் உன்னைக் கொன்று போட்டிருப்பேன்” என்று அந்த தேவதூதன் வழியாகப் பேசினார். அதைக் கேட்ட பிலேயாம் நடுங்கிப்போனான்.

(பைபிள் கதைகள் தொடரும்)

http://tamil.thehindu.com/society/spirituality/பைபிள்-கதைகள்-34-கழுதை-பேசியது/article9459034.ece

Link to comment
Share on other sites

பைபிள் கதைகள் 35: புதிய தலைவர் கிடைத்தார்!

 
mose_3120050f.jpg
 
 
 

சீகோன், ஓக் ஆகிய மன்னர்களை வென்ற இஸ்ரவேல் மக்கள், மோவாப் எனும் வளமையான நகரம் அமைந்திருந்த யோர்தான் பள்ளத்தாக்கு நோக்கிப் பயணம் செய்தனர். அவர்களது அடுத்த இலக்கு மோவாப்பின் அரசனாகிய பாலாக்கைத் தோற்கடிப்பதாக இருந்தது. அதனால் யோர்தான் நதியின் இக்கரையில் தங்கள் முகாம்களை அமைத்தனர். இஸ்ரவேலர்களின் பலத்தையும் போர் திறத்தையும் அறிந்த பாலாக் ஒரு தந்திரம் செய்தான். பெத்தூரில் செல்வாக்குடன் வசித்துவந்த பிலேயாம் என்பவனை அழைத்து, போரில் இஸ்ரவேலர்கள் தோற்கும்படியாக, அவர்களை சபிக்கும்படி கூற, தனது தலைவர்களை அனுப்பி அவனை அழைத்து வரும்படி கூறினான். ஆனால் அவர்கள் வருவதற்கு முன்பாகவே பிலேயாமிடம் கடவுள் பேசினார். “என் மக்களுக்கு எதிராக நீ எதையும் கூறக் கூடாது” என்று கட்டளையிட்டார்.

கடவுளின் கட்டளையை மீற மாட்டேன்

கடவுளுக்குப் பணிந்த பிலேயாம் பாலாக்கின் அதிகாரிகளிடம் பேசும்போது, “என் தேவனாகிய கடவுளுக்கு நான் அடிபணிய வேண்டும். பாலாக் அரசன் ஒரு அழகான மாளிகையுடன் தங்கமும் வெள்ளியும் நிறைத்துக் கொடுப்பதாக இருந்தாலும் கர்த்தருடைய கட்டளைக்கு எதிராக நான் ஒன்றும் செய்ய மாட்டேன்” என்று பதில் கூறி அவர்களைத் திருப்பி அனுப்பினான். என்றாலும் பாலாக்கைப் பார்க்க கிளம்பிச் சென்றான். ஆனால் வழியில் பிலேயாமின் கழுதையைக் கடவுள் பேசும்படி செய்தார்.

அவனது கழுதையை ஒளிரும் வாளுடன் வழிமறித்து நின்ற தேவதூதன் பிலேயாமின் கண்களுக்குக் காட்சியளித்ததும் கடவுளின் வல்லமையைப் புரிந்துகொண்டான் அந்தக் சாப நாக்குக்காரன். தேவதூதனைப் பார்த்து, “ஐயோ, நான் பாவம் செய்துவிட்டேன். வழியிலே நீர் நின்றுகொண்டிருந்தது எனக்குத் தெரியவில்லை” என்று கூறுகிறான். அதன் பிறகு தேவதூதன் பிலேயாமுக்கு வழி விடுகிறார். பாலாக்கை சந்தித்தபின், பிலேயாம் இஸ்ரவேல் மக்களைச் சபிக்க முயலுகிறான். ஆனால் அதற்குப் பதிலாக அவன் வாயாலேயே இஸ்ரவேலை மூன்று முறை ஆசீர்வதிக்கும்படி கடவுள் செய்துவிடுகிறார்.

புதிய தலைமை

இப்போது இஸ்ரவேலர்கள் யோர்தான் நதியைக் கடந்து கானான் தேசத்துக்குள் நுழையத் தயாராகி விட்டார்கள். இதுவரை அவர்களது வழிகாட்டியாகவும் கடவுளாகிய யகோவா தேர்ந்துகொண்டவராகவும் விளங்கிய மோசேவும் தனது ஜனங்களுடன் கானானுக்குள் செல்ல விரும்பினார். எனவே கடவுளிடம், ‘ கர்த்தரே..யோர்தான் நதியைக் கடந்துசென்று அந்த தேசத்தைப் பார்ப்பதற்கேனும் என்னை அனுமதியும்” என்று கெஞ்சி மன்றாடினார். ஆனால் கடவுள் கோபத்துடன் மறுத்தார்.

மோசே கற்பாறையை அடித்து நீரை வரவழைத்தபோது மோசேயும் ஆரோனும் அது கடவுளின் கிருபை என்ற உண்மையை மக்களுக்கு அறிவிக்கவில்லை. அச்செயலைத் தங்ளுடைய கீர்த்திபோன்று காட்டிக்கொண்டார்கள். தன்னை மதிக்காமல் தான்தோன்றிகளாக நடந்துகொண்ட அச்செயலுக்கான தண்டனையாகவே மோசேவை கானானுக்குள் அனுமதிக்க கடவுள் உறுதியாக மறுத்தார்.

பின்னர் மோசேயை அழைத்த கடவுள், “யோசுவாவை அழைத்து வந்து, தலைமைக் குருவாகிய எலெயாசாருக்கும் மக்களுக்கும் முன்பாக அவனை நிறுத்தினார். இனி யோசுவாவே இஸ்ரவேலர்களின் புதிய தலைவர் என்று அவர்களுக்குச் சொல்” என கட்டளையிட்டார். கடவுள் கூறியபடியே மோசே யோசுவாவைப் புதிய தலைவாரக அறிவித்தார். பின்பு யோசுவாவுக்கு மனத்திடத்தையும் உறுதியையும் வழங்கும்விதமாக அவரோடு பேசிய கடவுள், “அஞ்சாதே, நான் உன்னோடு கூடவே இருப்பேன். தைரியமாக இரு. இஸ்ரவேலருக்கு நான் வாக்குக் கொடுத்திருக்கிற கானான் தேசத்துக்குள் நீ அவர்களை வழிநடத்தி அழைத்துச் செல்வாய்” என்றார்.

மோசேவின் இறுதி நாட்கள்

யோசுவா தலைவராகத் தேர்தெடுக்கப்பட்டபின் மோவாப் நாட்டிலிருந்த நேபோ மலையின் உச்சிக்கு ஏறி வருமாறு மோசேயிடம் கூறினார் கடவுள். மலை மீது ஏறி, பின்னர் அங்கிருந்து பார்த்தபோது யோர்தான் நதியின் அக்கரையில் இருந்த கானான் தேசத்தின் செழிப்பையும் அழகையும் மோசேயினால் பார்க்க முடிந்தது. அப்போது கடவுள் அவரிடம் “ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு ஆகியோரின் பிள்ளைகளுக்குக் கொடுப்பதாக நான் வாக்களித்த தேசம் இதுவே. அதை இங்கிருந்து பார்க்க உன்னை அனுமதிக்கிறேன்” என்றார்.

கானானுக்குச் செல்ல முடியாவிட்டாலும் நதிக்கரையின் இக்கரையிலிருந்து அந்தத் தேசத்தைக் கண்ட மோசே, அந்த மலையின் மீதே தன் இறுதி மூச்சை நிறுத்திக்கொண்டார். அப்போது அவருக்கு 120 வயது. மோசேவின் இறப்புக்காக 30 நாட்கள் தூக்கம் அனுசரித்த மக்கள், அந்த மாபெரும் இழப்பிலிருந்து மீண்டனர். மோசே இறந்துவிட்டாலும் தங்களுக்குப் புதிய தலைவர் கிடைத்துவிட்டதில் நிம்மதியடைந்தனர்.

எரிக்கோவை நோக்கி இருவர்

இப்போது இஸ்ரவேல் மக்கள் கானான் தேசத்திற்குள் செல்ல தயாராக இருக்கிறார்கள். எரிகோ எனும் பலம் பொருந்திய கோட்டை நகரை வீழ்த்தி, கானானுக்குள் நுழைய யோசுவா திட்டமிட்டார். அதற்காக இரண்டு வேவுக்காரர்களை எரிக்கோவுக்கு அனுப்புகிறார். அவர்களிடம், “ நீங்கள் போய் எரிக்கோ பட்டணத்தையும் அதன் நிலப்பகுதி யையும் பார்வையிட்டு வாருங்கள்” என்று கூறி அனுப்பினார். எரிக்கோ பட்டணத்துக்குச் சென்ற அவர்களுக்கு உதவ முன்வந்தாள் ஒரு பெண்.

இப்போது இஸ்ரவேல் மக்கள் கானான் தேசத்திற்குள் செல்ல தயாராக இருக்கிறார்கள். எரிகோ எனும் பலம் பொருந்திய கோட்டை நகரை வீழ்த்தி, கானானுக்குள் நுழைய யோசுவா திட்டமிட்டார். அதற்காக இரண்டு வேவுக்காரர்களை எரிக்கோவுக்கு அனுப்புகிறார். அவர்களிடம், “ நீங்கள் போய் எரிக்கோ பட்டணத்தையும் அதன் நிலப்பகுதி யையும் பார்வையிட்டு வாருங்கள்” என்று கூறி அனுப்பினார். எரிக்கோ பட்டணத்துக்குச் சென்ற அவர்களுக்கு உதவ முன்வந்தாள் ஒரு பெண்.

(பைபிள் கதைகள் தொடரும்)

http://tamil.thehindu.com/society/spirituality/பைபிள்-கதைகள்-35-புதிய-தலைவர்-கிடைத்தார்/article9489153.ece

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

பைபிள் கதைகள் 36: எரிக்கோவில் புகுந்த இருவர்!

 
bible_3123251f.jpg
 
 

விவிலிய காலத்தில் நகரங்களின் பாதுகாப்பு என்பது கோட்டை மதில் சுவர்களை நம்பியே இருந்தது. வியாபாரிகள் மட்டுமே கோட்டை நகருக்குள் தங்கிச் செல்ல அனுமதிப்பட்டனர். மற்றவர்கள் மாலையில் கோட்டைக் கதவுகள் சாத்தப்படும் முன் வெளியேறிவிடவேண்டும். இதனால் அந்நிய நாட்டுப் பயணிகள், நாடோடிகள் ஆகியோர் தங்கிச் செல்லக் கோட்டைக்கு வெளியேதான் சத்திரம் அமைக்கப்பட்டது. கானான் நாட்டின் முக்கிய நகரமாக விளங்கிய எரிக்கோவின் பல அடுக்குப் பாதுகாப்பு நிர்வாகமும் இதற்கு விதிவிலக்கு அல்ல. அந்நகரின் பிரம்மாண்ட மதில்கள், படையெடுப்பாளர்கள், கொள்ளைக்காரர்கள் ஆகியோரால் தகர்க்க முடியாதவையாக இருந்தன. கோட்டை மதில் சுவரில் காவல் புரியும் வீரர்களுக்கு வீடுகள் அமைக்கப்பட்டிருந்தன.

கடவுளே தலைவர்

அப்படிப்பட்ட எரிக்கோவை வீழ்த்தினால் கானான் கைக்குக்கிடைத்துவிடும் என்று இஸ்ரவேலர்கள் நம்பினார்கள். ஆனால் அத்தனை பெரிய கோட்டையை எப்படித் தகர்ப்பது? கடவுளே தங்களின் தலைவராக இருக்கும்போது இஸ்ரவேலர்கள் எரிக்கோவின் நெடிதுயர்ந்த மதில்களுக்கா அஞ்சுவார்கள். யோர்தான் நதியைக் கடந்து கானான் தேசத்திற்குள் கால் வைக்கத் தயாராகிவிட்ட இஸ்ரவேல் மக்களின் தற்போதைய தலைவர் யோசுவா இரண்டு உளவாளிகளை அழைத்தார். அவர்களிடம் “நீங்கள் போய் எரிக்கோ நகரத்தையும் அதன் நிலப்பரப்பையும் கண்டு அந்நகரின் பலவீனங்களை உளவறிந்து வாருங்கள்’ என்று ரகசியமாகக் கூறி அனுப்பினார்.

ஒரு பாலியல் தொழிலாளியின் பரிவு

உளவாளிகள் எரிக்கோவுக்கு வந்தபோது அவர்கள் இஸ்ரவேலர்கள் மீது பரிவுகொண்ட பாலியல் தொழிலாளி ராகாப் பற்றிக் கேள்விப்பட்டு கோட்டைச் சுவர் மீதிருந்த அவளது வீட்டுக்குச் செல்கிறார்கள். இரண்டு இஸ்ரவேலர்கள் உளவாளிகளாய் எரிக்கோவுக்குள் ஊடுருவியிருப்பதும் அவர்களுக்கு ராகாப் அடைக்கலம் தந்திருப்பதுமான செய்தி அரசனின் காதை காற்றின் வேகத்தில் எட்டிவிடுகிறது. கொதித்துப்போன அரசன், ராகாப் வீட்டுக்கு வீரர்களை அனுப்பி அவர்களைப் பிடித்துவர ஆணையிடுகிறான்.

ராகாப்போ உளவாளிகளைத் தன் வீட்டில் ஒளித்து வைத்திருக்கிறாள். ராகாப்பை மிரட்டி உருட்டி வீட்டைச் சோதனையிட்ட வீரர்கள் “ எங்கே அந்த உளவாளிகள்?” என்று கேட்டனர். அதற்கு ராகாப் “ அவர்கள் எங்கிருந்து வந்தார்கள்; அவர்கள் உளவாளிகளா என்று எனக்குத் தெரியாது. ஆனால் நகரின் வாசல் மூடுவதற்கு முன், அந்தி மயங்கும் வேளையில் அவர்கள் இங்கிருந்து போய்விட்டார்கள். நீங்கள் சீக்கிரமாய் போனால் அவர்களைப் பிடித்துவிடலாம்” என்றாள். அதை நம்பிய வீரர்கள் அவளது வீட்டை விட்டு வேகமாய் வெளியேறினார்கள்.

கடவுளின் மகிமை அறிவேன்

அரசனின் வீரர்கள் போன பின்னர் ஒளித்து வைத்திருந்த உளவாளிகளை அவசர அவசரமாக வெளியே அழைத்தாள். அவர்களிடம் “இந்த நாட்டைக் கடவுளாகிய யகோவா உங்களுக்குக் கொடுப்பார் என்று எனக்குத் தெரியும். ஏனென்றால் எகிப்திலிருந்து உங்களை மீட்டு அழைத்து வந்தது அவரே என்பதை அறிவேன். நீங்கள் செங்கடலைக் கடந்து வர அவர் அதை வறண்டு போகச் செய்தார். சீகோன், ஓக் ஆகிய இரு பெரும் அரசர்களை நீங்கள் வெற்றிகொள்ள அவர் உங்களுக்குத் துணைநின்றார்.

நீங்கள் இந்தக் கயிற்றைப் பிடித்துக்கொண்டு, இந்த ஜன்னல் வழியாகத் தப்பித்து செல்லுங்கள்” என ஒரு சிவப்பு நிறக் கயிற்றைக் கட்டினாள். அவர்கள் கயிற்றின் மூலம் கோட்டைச்சுவருக்கு வெளியே இறங்கித் தப்பிக்கத் தயாரானபோது, “ நான் இப்போது உங்களுக்குத் தயவு காட்டியிருக்கிறேன். அதைப்போலவே நீங்கள் எனக்குத் தயவு காட்டுமாறு மன்றாடுகிறேன். நீங்கள் எரிக்கோவை முற்றுகையிட்டு அதை அழிக்கும்போது என் பெற்றோரையும் சகோதர சகோதரிகளையும் கொன்றுவிடாமல் அவர்கள் காப்பாற்ற வேண்டும். இதை எனக்கு உறுதிமொழியாகத் தாருங்கள்” என்று கேட்டாள்.

சிவப்பு நிறக் கயிறு

எரிக்கோவைப் பற்றி எடுத்துரைத்ததுடன் தங்கள் உயிரையும் காப்பாற்றிய ராகாப்புக்கு அவர்களது குடும்பத்தைக் காப்பதாக வாக்களித்துத் திரும்புகிறார்கள். அப்போது அவர்கள் “ நாங்கள் இந்தக் கோட்டையை முற்றுகையிடும்போது இந்தச் சிவப்புக் கயிற்றை எடுத்து உன் வீட்டின் ஜன்னலில் கட்டித் தொங்கவிடு, உன்னுடைய உற்றார், உறவினர் அனைவரையும் உன் வீட்டுக்குள் இருக்குமாறு பார்த்துக்கொள். உன் ஜன்னலில் தொங்கிக் கொண்டிருக்கும் சிவப்பு நிறக் கயிற்றை அடையாளமாய்க் கொண்டு உன் வீட்டிலுள்ள யாரையும் நாங்கள் கொல்ல மாட்டோம்” என்றார்கள்.

பின்பு அவர்கள் யோர்தானின் மறுகரையில் அகாசியாவில் முகாமிட்டிருந்த தங்கள் மக்கள் திரள் நோக்கிச் சென்றனர். யோசுவாவிடம் ராகாப் காட்டிய பரிவுவையும் தப்பித்து வந்த நிகழ்வையும் எடுத்துக் கூறியதோடு எரிக்கோவின் பலவீனங்களையும் எடுத்துரைத்தார்கள்.

ஆனால் கடவுளுக்கு எந்தப் போர்த் தந்திரங்களும் தேவைப்படவில்லை. அவர் யோசுவை அழைத்தார். எரிக்கோவை கைப்பற்றும் உத்தியை உரைத்தார்.

(பைபிள் கதைகள் தொடரும்)

http://tamil.thehindu.com/society/spirituality/பைபிள்-கதைகள்-36-எரிக்கோவில்-புகுந்த-இருவர்/article9502212.ece

Link to comment
Share on other sites

பைபிள் கதைகள் 37: நகர மறுத்த நதி

 

bible_3126947f.jpg
 
 
 

யோசுவா அனுப்பிய இரு உளவாளிகள் எரிக்கோவை நோட்டமிட்டு, அதன் கோட்டை அரண்களைத் தெரிந்துகொண்டனர். இஸ்ரவேலர்கள் யோர்தான் நதியின் அக்கரையில் முகாமிட்டிருப்பது பற்றிய செய்தி எரிக்கோவின் உள்ளே வாழும் மக்களை எட்டிவிட்டதா என்பதையும் அறிந்துகொண்டார்கள். கோட்டை மதிலின் மீதிருந்த வீடொன்றில் வசித்துவந்த பாலியல் தொழிலாளி ராகாப், இவற்றை அறிந்துகொள்ள அவர்களுக்கு உதவினாள்.

பின்னர் எரிக்கோவிலிருந்து தப்பித்து ஆகாசியாவில் இருந்த முகாமை அடைந்தார்கள். உடனடியாகத் தங்களின் தலைவர் யோசுவாவைச் சென்று பார்த்து எரிக்கோவில் கண்டதையும் கேட்டதையும் விசாரித்த யாவற்றையும் தங்களைப் பாதுகாத்து அனுப்பிவைத்த ராகாப் பற்றியும் பகிர்ந்துகொண்டார்கள். இறுதியாக அவர்கள் யோசுவாவிடம்; “கர்த்தர் நமக்கு உண்மையாகவே அந்த தேசம் முழுவதையும் கொடுத்திருக்கிறார். அந்நாட்டின் மக்கள் எல்லோரும் நமக்கு அஞ்சுகிறார்கள்” என்றனர்.

மக்கள் என்ன செய்ய வேண்டும்?

மறுநாள் காலையில் யோசுவாவும், இஸ்ரவேல் மக்களும் எழுந்து, அகாசியாவை விட்டுப் புறப்பட்டு யோர்தான் நதிக்கரைக்கு வந்தார்கள். அது அறுவடைக் காலம். அவர்கள் நதியைக் கடக்கும் முன்பு நதிக்கரையில் மூன்று நாள் முகாமிட்டார்கள். அறுவடைகாலத்தில் யோர்தான் எப்போதும் வெள்ளப் பெருக்குடன் காணப்படும். அதைக் கடக்க நினைக்கும் யாரும் அதன் காட்டு வெள்ளத்தில் அடித்துச் செல்லப்படுவார்கள்.

யோர்தான் நதியைக் கடக்க வேண்டிய தருணம் நெருங்கியபோது, இஸ்ரவேல் மக்கள் என்ன செய்ய வேண்டும் என்பதை யோசுவாவிடம் கடவுள் எடுத்துக் கூறினார். “உடன்படிக்கைப் பெட்டியை (பத்துக் கட்டளைகள் பொறிக்கப்பட்ட சலவைக் கற்கள், ஏதுமற்ற பாலைவனத்தில் கடவுள் வானிலிருந்து பொழிந்த மன்னா உணவு சேகரிக்கப்பட்ட ஜாடிகள் ஆகியன புனிதப் பொருட்களாக வைக்கப்பட்டிருந்த பெட்டி) சுமந்து கொண்டு தலைமை குருமார்கள் உங்களுக்கு முன்பாகச் செல்லட்டும். அவர்கள் தங்கள் பாதங்களை யோர்தான் நதிக்குள் வைக்கும்போது அந்த நதி ஓடாமல் அப்படியே நின்றுவிடும்.” என்றார். கடவுள் கூறியதையே குருமார்களுக்கும் கூறினார் யோசுவா, “குருமார்களை இரண்டாயிரம் அடி இடைவெளிவிட்டுப் பின்தொடர வேண்டும்” என மக்களிடம் கேட்டுக்கொண்டார்.

வற்றிப்போன பெருநதி

தலைவர் யோசுவா கூறியதை சிரமேற்கொண்ட குருமார்கள், புனித உடன்படிக்கைப் பெட்டியைச் சுமந்துகொண்டு மக்களுக்கு முன்பாக நதியை நோக்கி நடந்தார்கள். நதியை நெருங்கித் தண்ணீருக்குள் அவர்கள் அடியெடுத்து வைத்தபோது அந்த அற்புதம் நிகழ்ந்தது. வெள்ளப் பெருக்குடன் வேகமாக ஓடிக்கொண்டிருந்த ஆழமான அந்த நதியானது, குருமார்களின் கால்கள் தண்ணீரில் பட்டதும் நகர மறுத்து அப்படியே நின்றது. கடவுள் யோர்தானின் நதிமூலத்தையே தடுத்து நிறுத்தினார். அதனால் சிறிது நேரத்தில் தண்ணீரின்றி வற்றிப்போன யோர்தான் சல சலத்துச் செல்லவும் வழியின்றி வற்றிப்போன தனது வயிற்றின் காய்ந்த தரையைக் காட்டியது.

உடன்படிக்கைப் பெட்டியைத் தூக்கிச்சென்ற குருமார்கள். வற்றிப்போன அந்த நதியின் நடுப்பகுதி வரை நடந்து சென்று மக்கள் வரும்வரை காத்து நின்றார்கள். இப்போது யோசுவா முன்செல்ல இஸ்ரவேல் மக்கள் அனைவரும் யோர்தான் நதியின் காய்ந்த தரை வழியாக நடந்து அதைக் கடந்து சென்றார்கள்!

பன்னிரண்டு நடுகற்கள்

மக்கள் அனைவரும் நதியைக் கடந்து போய்க்கொண்டிருந்தபோது, கடவுள் யோசுவாவை அழைத்தார். “இஸ்ரவேலரின் பன்னிரண்டு கோத்திரத்திலும் பலமுடைய 12 பேரை அழைத்து அவர்களுக்கு உத்தரவிடு. உடன்படிக்கைப் பெட்டியுடன் ஆற்றின் நடுவே குருமார்கள் நின்றுகொண்டிருக்கும் இடத்திலிருந்து 12 கற்களைத் தேடியேடுத்து அவர்களைச் சுமந்து வரச்சொல். எடுத்து வரும் கற்களை இன்றிரவு நீங்கள் அனைவரும் தங்கும் இடத்தில் நட்டு வையுங்கள். இந்தக் கற்கள் எதைக் குறிக்கின்றன என்று பின்னாட்ளில் உங்கள் பிள்ளைகள் கேட்டால் ‘யகோவாவின் உடன்படிக்கைப் பெட்டி எடுத்து வரப்பட்டபோது யோர்தான் நதியின் தண்ணீர் ஓடாமல் அப்படியே நின்று விட்டது. அதன் நினைவை உங்களைப் போன்ற எதிர்காலத் தலைமுறைகளுக்கு எடுத்துக் கூறவே இப்படிச் செய்தோம்’ என்று கூறுங்கள்” என்றார்.

கடவுள் கூறியபடியே யோசுவா பன்னிரண்டு பேரை அனுப்பி உடன்படிக்கை பெட்டியை குருமார்கள் சுமந்து நின்ற இடத்திலிருந்து பன்னிரண்டு கற்களைச் சுமந்து வரச் செய்தார். இவை தவிர உடன்படிக்கைப் பெட்டி நின்றுகொண்டிருந்த இடத்திலும் மோசே பன்னிரண்டு கற்களைக் குவித்துவைத்தார்.

யோர்தானை மக்கள் முழுவதுமாகக் கடந்து செல்லும்வரை புனித உடன்படிக்கைப் பெட்டியைச் சுமந்துகொண்டு குருமார்கள் நதியின் நடுவிலேயே காத்திருந்தனர். இஸ்ரவேல் மக்கள் அனைவரும் யோர்தானின் வற்றிக் காய்ந்த தரை வழியே கடந்து சென்ற பின், உடன்படிக்கைப்பெட்டியுடன் நதியை விட்டுக் கரையேறுமாறு குருமார்களிடம் கூறினார் யோசுவா. அவர்களும் நதியிலிருந்து வெளியே வந்தனர். இப்போது நதி மீண்டும் வேகமாக ஓடத் தொடங்கியது.

எரிக்கோ சமவெளியில் முகாம்

யோர்தானைக் கடந்த முதலாம் மாதத்தின் பத்தாவது நாளில் எரிக்கோ நகரத்தின் கிழக்கிலுள்ள கில்கால் சமவெளியில், இஸ்ரவேல் மக்கள் முகாமிட்டனர். யோர்தான் நதியிலிருந்து சுமந்து வந்த கற்களை கில்காலில் யோசுவா நாட்டினார். பிறகு மக்களை நோக்கி, “வருங்காலத்தில் பிள்ளைகள் பெற்றோரை நோக்கி, ‘இந்தக் கற்கள் எதைக் குறிக்கின்றன?’ எனக் கேட்பார்கள்.

நீங்கள் அவர்களுக்குச் சாட்சிகளாக இருந்து ‘வற்றித் தரை காய்ந்த யோர்தான் நதியை நாம் கடந்து வந்ததை நினைவூட்ட இக்கற்கள் உதவுகின்றன; நம் கடவுளாகிய ஆண்டவர் எகிப்தியரிடமிருந்து நம்மைக் காக்க செங்கடலைப் பிளந்து வழிவிடச் செய்தார். மக்கள் உலர்ந்த தரையில் கடந்து செல்லும் வரைக்கும் செங்கடலின் தண்ணீரை மதில்போல் தடுத்து நிறுத்தினார். அதைப் போலவே யோர்தான் நதியின் தண்ணீரையும் ஓடாதவாறு நிறுத்தினார் என்பதை நினைவுகூருங்கள்.” என்றார்.

யோர்தான் நதிக்குக் கிழக்கே வாழ்ந்துவந்த எமோரியரின் அரசர்களும், மத்தியதரைக் கடலின் கரையில் வாழ்ந்த கானானிய மக்களின் அரசர்களும் கடக்க முடியாத யோர்தானைக் கடவுளின் வல்லமையுடன் இஸ்ரவேலர்கள் கடந்து வந்ததைக் கேள்விப்பட்டு மிகவும் பயந்துபோனார்கள். எரிக்கோ நகரமோ இன்னும் நடுங்கியது.

(பைபிள் கதைகள் தொடரும்)

http://tamil.thehindu.com/society/spirituality/பைபிள்-கதைகள்-37-நகர-மறுத்த-நதி/article9516488.ece

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தொடருங்கள் நவீனன் இந்தத் தவக் காலத்தில்  வாசிக்க சுகமாக இருக்கின்றது ....!

Link to comment
Share on other sites

பைபிள் கதைகள் 38: மண்ணில் சரிந்த மதில்கள்

 

 
 
bibl_3129936f.jpg
 
 
 

யோர்தான் நதியை இஸ்ரவேலர்கள் கடக்கும்வரை அதன் தண்ணீரைக் கடவுள் வற்றச் செய்ததை எரிக்கோவின் உள்ளே வாழ்ந்து வந்த கானானியர் கேள்விப்பட்டனர். அதன்பிறகும் அவர்கள் வம்படியாக கோட்டை நகரிலிருந்து வெளியேறவில்லை. தங்களின் தானியப் பத்தாயங்கள் தொடர்பாகவும் தங்கமும் வெள்ளியும் பீதாம்பர ஆடைகளும் நிறைத்து வைத்திருந்த கஜானாக்கள் மீதும், மது நிரம்பிய மரப் பீப்பாய்கள் மீதும் அவர்கள் மயக்கத்துடன் இருந்தார்கள். இவை எல்லாவற்றுக்கும் மேலாகக் கடவுளையே அவர்கள் எதிர்த்தார்கள். இஸ்ரவேல் மக்களின் பக்கம் கடவுள் துணை நிற்கிறார் என்பதை அறிந்திருந்தும் அவர்களை எதிர்த்துப் போர்புரிந்தே தீருவது என்று இறுமாப்புடன் இருந்தார்கள்.

கடவுள் ஏன் வெறுத்தார்?

கானானியர்களைக் கடவுள் வெறுக்க இது மட்டும்தான் காரணமா? கானானியர்கள் கொடூர குணத்துக்குப் பேர்போனவர்களாய் இருந்தார்கள். பொய்க் கடவுளர்க்கு பலி என்ற பெயரில் தங்கள் குழந்தைகளை உயிரோடு நெருப்பில் போட்டார்கள். (இராஜாக்கள் 16:3). அவர்கள் வாழ்முறையே தீமைகளின் மொத்த உருவமாக இருந்தது. இந்த இடத்தில் ஆபிரஹாமின் காலத்தில் கடவுளால் அழிக்கப்பட்ட இரண்டு நகரங்களைப் பற்றி இந்தத் தொடரின் தொடக்கத்தில் நீங்கள் படித்ததை கொஞ்சமாய் நினைவுபடுத்திப் பார்க்கலாம்.

சோதோம், கோமரா ஆகிய நகரங்களை அழிக்கப்போவதாக ஆபிரஹாமிடம் கடவுள் கூறுகிறார். ஆனால் ‘அந்த நகரில் தனது சகோதரன் நீதிமானாக வாழ்கிறானே.. அவனும் அல்லவா அழிந்துபோவான்’ என்று அஞ்சிய ஆபிரஹாம், கடவுளிடம் அந்த நகரங்களை அழிக்க வேண்டாம் என இறைஞ்சுகிறார். அப்போது கடவுள், “பத்து நீதிமான்கள் அந்த நகரத்தில் வசித்தால் அவர்களின் பொருட்டு அதை நான் அழிப்பதில்லை” என்று ஆபிரகாமுக்கு உறுதியளித்தார் (ஆதியாகமம் 18:20-33).

ஆனால் கடவுள் அந்த நகரங்களை அழிக்கவேண்டிய நிலை உருவானபோது அங்கு வாழ்ந்த நீதிமான்களை மட்டும் காப்பாற்றினார், கெட்டவர்களை முற்றிலுமாக அழித்தார். சோதோம், கோமரா போலவே விண்ணை முட்டும் மதில்களோடு எரிக்கோ கர்வத்துடன் நின்றுகொண்டிருக்கிறது. ஆனால் மதில்களுக்கு உள்ளே கெட்ட வாழ்க்கை முறையின் மீது மோகங்கொண்டு வாழ்ந்து வந்தவர்களே அதிகமிருந்தனர்.

மறைந்த மன்னாவும் முன்வந்த தளபதியும்

யோர்தான் நதியைக் கடந்து எரிக்கோவின் சமவெளியில் ஒரு பகுதியாக இருந்த கில்காலில் முகாமிட்டிருந்தபோது, இஸ்ரவேல் மக்கள் பாஸ்கா பண்டிகையைக் கொண்டாடினார்கள். பாஸ்காவுக்கு மறுநாள், மக்கள் கானான் நாட்டின் நிலத்தில் விளைந்த தானிய உணவை உண்டனர். புளிப்பின்றிச் செய்த அப்பத்தையும், சுட்ட தானியத்தையும் சாப்பிட்டனர். மறுநாள், காலையிலிருந்து கடவுளால் வானத்திலிருந்து பொழியப்பட்டுவந்த மன்னா உணவு காணப்படவில்லை.

பாஸ்கா முடிந்து கில்காலிருந்து யோசுவா புறப்பட்டு எரிகோவை நெருங்கியபோது அவருக்கு முன்பாக வாளுடன் ஒருவர் வந்து நின்றார். யோசுவா அவரிடம் சென்று, “நீங்கள் யார்? எங்களின் நண்பரா, அல்லது எங்கள் பகைவரில் ஒருவரா?” என்று கேட்டார். அவர் அதற்கு பதிலாக, “நான் உன் பகைவன் அல்ல. கடவுளுடைய படையணியின் தளபதி நான். உமது ஊழியனாக உங்களிடம் வந்திருக்கிறேன். உங்கள் கட்டளைக் காக காத்திருக்கிறேன்” என்றார்.

ஏழு நாட்கள் மட்டுமே முற்றுகை

மக்கள் படையும் அதன் தளபதியும் தயாராக இருந்த வேளையில் அவர்களின் தலைவராகிய யோசுவாவைக் கடவுள் அழைத்தார். “ நீயும் உனது போர் வீரர்களும் அணிவகுத்துச் சென்று எரிக்கோ நகரத்தை ஒரு நாளைக்கு ஒரு முறை சுற்றி வாருங்கள். இப்படி ஆறு நாட்கள் அணிவகுத்து வாருங்கள். அணிவகுப்பின் முன்னால் உடன்படிக்கைப் பெட்டியை உங்களுடன் சுமந்து செல்லுங்கள். அந்தப் பெட்டிக்கு முன்னால் ஏழு ஆசாரியர்கள் (தலைமை மதகுருக்கள்) எக்காளங்களை ஊதியவாறு நடந்து செல்ல வேண்டும்.

ஏழாவது நாளிலோ நீங்கள் அந்த நகரத்தைச் சுற்றி ஏழு முறை அணிவகுத்துச் செல்ல வேண்டும். பின்பு எக்காளங்களை நீண்ட முழக்கத்தோடு இடைவிடாமல் ஊதுங்கள். அந்தச் சமயத்தில் வீரர்கள், மக்கள் என அனைவரும் போர் முழுக்கமிட்டு உரக்கக் கத்துங்கள். அப்போது எரிக்கோவின் மதில்களெல்லாம் இடிந்து விழும்!” என்றார்.

கடவுள் குறிப்பிட்டபடியே இஸ்ரவேல் மக்களும் வீரர்களும் எரிக்கோவைச் சுற்றி அணிவகுத்து வந்தனர். கோட்டைச் சுவர்களில் தாக்கத் தயாராக காத்திருந்த கானானிய வீரர்களும் அவர்களுக்குப் பின்னாலிருந்து பார்த்துக்கொண்டிருந்த கானானிய மக்களும் இஸ்ரவேலர்களின் செய்கையை விநோதமாகப் பார்த்துக் கொண்டிருந்தார்கள். இவர்களால் இத்தனை பெரிய மதில்களைக் கடந்து உள்ளே வர முடியாது என்று இறுமாந்து இருந்தனர்.

அன்றைய நாட்களில் ஒரு கோட்டையை மாதக்கணக்கில் எதிரிகள் முற்றுகையிட வேண்டியிருக்கும். கோட்டை நகரின் உள்ளே இருக்கும் தானியங்கள் முற்றிலுமாகத் தீர்ந்துபோய் உணவுச் சிக்கல் உருவாகும்போதுதான் இருதரப்புக்கும் இடையே தாக்குதல் தொடங்கும். அதுவே போர் மரபாகவும் இருந்தது. அது போன்றதொரு நீண்ட முற்றுகையில் சமாதானம் ஏற்பட்டால் போர் தவிர்க்கப்படும். ஆனால் எரிக்கோவுக்கு ஏழு நாட்கள் முற்றுகையே போதும் எனக் கடவுள் முடிவுசெய்துவிட்டார்.

எரிக்கப்பட்ட நகரம்

கடைசியாக, ஏழாவது நாளில் கடவுளுடைய மக்கள் என்று அழைக்கப்பட்ட இஸ்ரவேலர்கள் அந்த எரிக்கோ நகரத்தைச் சுற்றி ஏழு முறை அணிவகுத்து வந்த பின், இடைவிடாமல் எக்காளங்களை ஊதிப் பெருங்கூச்சலுடன் போர் முழக்கம் செய்தபோது அந்தக் கோட்டையின் மதில்கள் பொலபொலவென்று நொறுங்கிச் சரிந்தன. கோட்டை நகரம் தனது அரணாகிய மதில்களை இழந்து நிர்வாணமாய் நின்றபோது கானானியரின் கர்வம் தவிடுபொடியானது.

மதில்கள் சரிந்ததும் யோசுவா தனது போர் வீரர்களையும், மக்கள் படையணியைப் பார்த்து, “நமது உளவாளிகளுக்கு அடைக்கலம் தந்த ராகாப் குடும்பத்தினரைத் தவிர இந்த நகரத்திலுள்ள அனைவரையும் கொன்று, தானியம் உள்ளிட்ட அனைத்தையும் எரித்துவிடுங்கள். தங்கம், வெள்ளி, செம்பு, இரும்பு ஆகிய உலோகங்களை மட்டும் பரலோகத் தந்தையாகிய யகோவாவின் ஆசாரிப்புக் கூடாரத்திற்கு எடுத்துச்சென்று அங்கிருக்கும் பொக்கிஷத்தில் சேருங்கள்” என்று கட்டளையிட்டார்.

அவ்வாறே எரிகோவில் வாழ்ந்த கெட்ட மக்கள் அனைவரும் கொல்லப்பட்டனர். நகரம் தீக்கிரையாக்கப்பட்டது. ராகாப் குடும்பத்தினர் காப்பாற்றப்பட்டனர். அதுமட்டுமல்ல; ‘எரிக்கோவிலிருந்து என் மக்கள் எதுவொன்றையும் தங்களுக்குச் சொந்தமாக்கிக்கொள்ளக் கூடாது’ என்று கடவுள் கட்டளையிட்டிருந்தையும் யோசுவா அவர்களுக்கு நினைவூட்டியதால் எரிந்துகொண்டிருந்த நகரத்திலிருந்து எந்த உணவையும் இஸ்ரவேல் மக்கள் எடுத்துக்கொண்டு வரவில்லை. ஆனால் இஸ்ரவேல் மக்களில் ஒருவர் மட்டும் கடவுளின் வார்த்தைகளுக்கு கீழ்ப்படியவில்லை.

எரிக்கோ இன்று

எரிக்கோ என்றால் ‘பேரீச்சம் மரங்கள் நிறைந்த இடம்’ என்று அர்த்தம். எரிக்கோவை உலகின் மிகப் பழமையான நகரமாக வரலாற்றாசிரியர்களும் தொல்லியல் ஆகழ்வாய்வாளர்களும் ஏற்றுக்கொள்கிறார்கள். தொல்லியல் கார்பன் சோதனைகளின் வழி எரிகோ கி.மு 9000 ஆண்டுகளுக்கு முந்தையது என்பதாக நிறுவி வருகிறார்கள். அதைவிட ஆச்சரிகரமாக பல நாகரிகங்கள் இங்கே வாழ்ந்து மறைந்திருப்பதற்கான சான்றுகளை படிம ஆய்வின் வழி கண்டறிந்திருக்கிறார்கள். கடல் மட்டத்துக்கு 260 மீட்டர் தாழ்வான இடத்திலே எரிக்கோ இருப்பதால், இதமான வெப்பநிலை இந்த நகரத்தை பூமியின் வாழ்விடக் கொடையாகக் கருதி மக்கள் குடியேறினர். யோர்தான் நதி நீரால் எரிக்கோவைச் சுற்றி இன்றும் விவசாயம் செழிக்கிறது.

யோர்தானின் தூய குளிர் நீர் ஒருபுறம் இருக்க எரிக்கோவைச் சுற்றி ஆங்காங்கு காணப்படும் வெந்நீர் ஊற்றுகள் கடவுளின் பரிசுபோல் இருக்கின்றன. அதனால் அன்று மன்னர்களோ இதை ஓர் உல்லாச புரியாக கருதி அரண்மனைகளைக் கட்டி கோட்டை எழுப்பினர். யாராலும் உள்நுழைய முடியாத வானை முட்டும் கோட்டைச்சுவர்கள் இதன் அரணாக விளங்கின. ஆனால் இன்று எரிக்கோ கோட்டை மண்மேடாகக் காட்சியளிக்கிறது. புதிய ஏற்பாடு காலத்துக்கு சற்றுமுன், எகிப்திய ராணியான கிளியோபாட்ராவுக்கு காதல் பரிசாக இந்நகரம் அளிக்கப்பட்ட கதையும் வாய்மொழி வழக்காறாக இருக்கிறது.

இன்று முப்பதாயிரம் மக்கள் வசித்துவரும் சிறிய நகராக இருக்கும் எரிக்கோ 1948 முதல் 1967 வரை ஜோர்டான் அரசின் வசமிருந்தது. 1967 -ல் இருந்து இஸ்ரேல் அரசின் வசம் இருந்து வந்தது. பின்னர் 1994 முதல் இதன் நிர்வாகப் பொறுப்பு பாலஸ்தீன அதிகார சபையிடம் ஒப்படைக்கப்பட்டது.

(பைபிள் கதைகள் தொடரும்)

Link to comment
Share on other sites

பைபிள் கதைகள் 39: இஸ்ரவேலர்களின் தோல்வி!

 
bible_3133428f.jpg
 
 
 

கானானில் உள்ள அனைத்து நகரங்களைச் சேர்ந்தவர்களும் எரிகோவைத் தோற்கடிக்க முடியாது என்று நினைத்தார்கள். ஆனால் எரிகோ முற்றிலுமாக வீழ்த்தப்பட்ட பின்னர், இஸ்ரவேலர்களின் தலைவராகிய யோசுவாவின் புகழ் கானான் தேசம் முழுவதும் பரவியது. பாவக்கோட்டையாக விளங்கிவந்த எரிகோ, அதன் பிறகு தலையெடுக்கவே கூடாது என்று கடவுள் விரும்பினார். “எரிகோவை மீண்டும் கட்டியெழுப்புகிற எவனும் கடவுளால் அழிவைக் காண்பான். இந்த நகரின் அஸ்திவாரத்தை இடுபவன், தனது தலைமகனை இழப்பான். நகர வாயிலை அமைப்பவன், தனது கடைசி மகனை இழப்பான்” என யோசுவா எரிகோவைச் சபித்தார்.

ஆயீ நகரத்தில் விழுந்த அடி

எரிகோவைத் தோற்கடித்த பின் பெத்தேல் நகரத்துக்குக் கிழக்காக இருந்த ஆயீ நகரத்தைத் தோற்கடிக்க யோசுவா விரும்பினார். இதனால் சில உளவாளிகளை அங்கே அனுப்பி, அந்த நகரத்தின் பலவீனங்களை அறிந்துவரும்படி அனுப்பினார். அவ்வண்ணமே உளவறிந்து திரும்பிய அவர்கள் யோசுவாவிடம் வந்து, “அதுவொரு பலவீனமான பகுதி. அதைத் தோற்கடிக்க மூவாயிரம் பேரை மட்டும் அனுப்பினால் போதும். நம்மை எதிர்த்துப் போர்புரிய அங்கே சில மனிதர்களே உள்ளனர்” என்றார்கள்.

இதை நம்பிய யோசுவா, மூவாயிரம் பேரை மட்டும் ஆயீக்கு அனுப்பினார். ஆனால் ஆயீயின் மக்கள் மிக ஆக்ரோஷமாகப் போரிட்டு இஸ்ரவேலர்களில் 36 பேரைக் கொன்று குவித்தனர். இதைச் சற்றும் எதிர்பார்க்காத எஞ்சிய இஸ்ரவேல் வீரர்கள் சிதறி ஓடினர். நகரின் மலைச்சரிவு வரையிலும் அவர்களைத் துரத்தியடித்தார்கள். எரிக்கோவையே வீழ்த்திய தங்களுக்கு ஒரு சிறு நகர மக்கள் தோல்வியைப் பரிசாகக் கொடுத்து அனுப்பிய செய்தி யோசுவாவின் காதுகளை எட்டியது.

அதைக் கேட்டதும் துயருற்று தன் ஆடைகளைக் கிழித்துக்கொண்ட யோசுவா உடனடியாகக் கடவுளை வழிபடும் ஆசாரிப்புக் கூடாரத்துக்குச்சென்று அங்கிருந்த பரிசுத்தப் பெட்டியின் முன்பு விழுந்து வணங்கிக் கண்ணீர் சிந்தினார். பொழுது சாயும்வரை கடவுளைத் துதித்தபடி தண்ணீர் அருந்தாமல் அங்கேயே இருந்தார். இஸ்ரவேலர்களின் பன்னிரெண்டு கோத்திரத்தாருக்குரிய தலைவர்களும் யோசுவாவின் இந்த நிலையைக் கண்டு ஆசாரிப்புக் கூடாரத்தின் வாசலிலேயே காத்திருந்தார்கள்.

ரகசிய பாவம் செய்தவன்

பரலோகத் தந்தையாகிய யகோவா, யோசுவாவின் நிலையைக் கண்டு மனமிரங்கினார். அவர் யோசுவாவை நோக்கி, “உன் முகத்தைத் தரையில் கவிழ்த்து ஏன் விழுந்து கிடக்கிறாய்? எழுந்து நில்! எரிகோவில் அழித்துவிடும்படி நான் கட்டளையிட்ட பொருட்களை இஸ்ரவேல் மக்களில் ஒருவன் எடுத்து வைத்திருக்கிறான். தனக்காக அவன் அவற்றை எடுத்து வைத்திருக்கிறான். இச்செயல் எனக்கு விரோதமானது. அதனால்தான் இஸ்ரவேலரின் படை, போரில் புறமுதுகு காட்டி ஓடிவந்தது. நீங்கள் பொய் கூறியதாலேயே அவ்விதம் நடந்தது. அழிக்க வேண்டுமென நான் கட்டளையிட்டவற்றை அழிக்காவிட்டால் நான் உங்களோடு இருக்க மாட்டேன். இதன் பின்னர் உங்கள் பகைவர்களை ஒருபோதும் நீங்கள் வெல்ல முடியாது” என்றார்.

அகப்பட்டுக்கொண்ட ஆகான்

கடவுள் யோசுவாவிடம் குறிப்பிட்டபடியே, மறுநாள் காலை ஆசாரிப்பு கூடாரத்தின் முன் இஸ்ரவேல் கோத்திரத்தாரின் அனைத்துக் குடும்ப ஆண்களையும் யோசுவா கூட்டினார். யூதா கோத்திரத்தைச் சேர்ந்த ஆகானைக் கடவுள் அடையாளம் காட்டினார். இனி எதையும் மறைக்க முடியாது என்ற முடிவுக்கு வந்த ஆகான், “நமது கடவுளாகிய யகோவாவுக்கு எதிராக நாம் பாவம் செய்தது உண்மை. நாம் எரிகோவைக் கைப்பற்றியபோது பாபிலோனிலிருந்து தருவிக்கப்பட்ட அழகிய மேலாடை ஒன்றையும், சுமார் ஐந்து பவுண்டு வெள்ளி, ஒரு பவுண்டு தங்கப் பாளம் ஆகியவற்றையும் கண்டேன்.

அவற்றின்மீது இச்சை கொண்டு, யாருக்கும் தெரியாது என்று எண்ணி அவற்றை ரகசியமாக என் கூடாரத்திற்கடியிலுள்ள நிலத்தில் புதைத்து வைத்திருக்கிறேன்” என்று வாக்குமூலம் தந்தான். இதனால் ஆகானிடமிருந்து கைப்பற்றப்பட்ட மேலாடை, வெள்ளி, தங்கம் உள்ளிட்ட அவனது மற்ற அனைத்து உடமைகளோடு ஆகான், அவனது குடும்பத்தினர் அனைவரையும் ஆகோர் பள்ளத்தாக்கிற்கு அழைத்துச் சென்றனர். அங்கே அவனது பொருட்கள் அனைத்தையும் எரித்த பின் ஆகானையும் அவனது குடும்பத்தினரையும் கல்லெறிந்து கொன்றனர்.

மன்னிக்கமுடியாத பாவம்

உலகப்பொருட்களின் மீது இச்சை கொண்டு, ஆகான் அவற்றைப் புதைத்து வைத்ததை வெளிப்படுத்திய கடவுள் அவனை மன்னிக்கவில்லை. தான் பிடிபடும் வரை உண்மையை அவன் மறைத்து வைத்ததே ஆகான் மீதான கடவுளின் கோபம் குறையாமல் போனதற்கான காரணம். தனக்குச் சொந்தமில்லாத பொருளை அபகரித்த ஆகான் அதைக் கடவுளுக்கு விரோதமாகச் சேர்த்துவைத்த பேராசை அவனை மட்டுமல்ல; அவன் குடும்பத்தையும் அழித்தது. ஆகானின் அழிவுக்குப் பின்னர் இஸ்ரவேல் மக்களுக்குக் கடவுள் வெற்றிகளைத் தந்தார். ஆயியையும் அவர்கள் கைப்பற்றினார்கள்.

(பைபிள் கதைகள் தொடரும்)

http://tamil.thehindu.com/society/spirituality/பைபிள்-கதைகள்-39-இஸ்ரவேலர்களின்-தோல்வி/article9544987.ece

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

பைபிள் கதைகள் 40: கிபியோனியர்களின் புத்திசாலித்தனம்

 

 
bible_3136484f.jpg
 
 
 

இஸ்ரவேலர்களுக்காக கடவுள் வாக்களித்த தேசம் கானான். அதனைக் கைப்பற்றி வாழ, கடவுள் அவர்களின் பக்கம் நின்றார். கானானில் இருந்த கோட்டை நகரங்களிலேயே வீழ்த்தமுடியாத ஒன்றாகப் பார்க்கப்பட்ட எரிக்கோவின் வானுயர்ந்த சுவர்களை பொலபொலவென்று உதிர்ந்துவிழச் செய்தார். இதைக்கண்டு மற்ற நகரங்களைச் சேர்ந்தவர்கள் நடுங்கினார்கள். ஆனால் இஸ்ரவேலர்களுக்கு, சிறிய நகரமான ஆயீ பட்டணத்தில் மரண அடி விழுந்தது. ஆயீ நகரத்தின் மிகச்சிறிய மக்கள் போர்ப்படை 36 இஸ்ரவேலர்களைக் கொன்று குவித்தது மட்டுமல்ல; இஸ்ரவேலர்களின் சிறப்புப் படையணியை நகரத்தின் எல்லைவரை துரத்தியடித்தது. இஸ்ரவேலர்களின் இந்த முதல் தோல்விக்கு ஆகான் காரணமாக இருந்தான் என்பதைக் கடவுள் அடையாளம் காட்டுகிறார்.

தன் சுயநலத்தால் எரிக்கோ நகரத்திலிருந்து விலக்கப்பட்ட பொருட்களை எடுத்து ரகசியமாக ஒளித்து வைத்தான். பாவங்களில் எல்லாம் கொடியது ரகசியப் பாவம். இதனால் ஆகானும் அவனது குடும்பத்தாரும் கல்லெறிந்துக் கொல்லப்பட்டார்கள். ஆகானுக்கு நேர்ந்த கதியைக் கண்டு ‘இனி ஒழுக்கமும் கட்டுப்பாடும் இல்லாவிட்டால் இதே கதியே நமக்கும் நேரும்’ என்று மற்ற இஸ்ரவேலர்கள் அனைவரும் எச்சரிக்கையடைந்து சுயநலமற்ற கட்டுக்கோப்பான வாழ்வை வாழத்தொடங்கினார்கள்.

தப்புக் கணக்கும் தப்பாத கணக்கும்

இஸ்ரவேலர்களிடம் ஏற்பட்ட இந்த மாற்றத்தை கானானில் உள்ள மற்ற நகரங்களைச் சேர்ந்தவர்கள் அறியவில்லை. இஸ்ரவேலர்கள் தொடர்ந்து போர் செய்துவருவதால் அவர்கள் பலவீனமடைந்துவிட்டனர் என்று தப்புக்கணக்குப் போட்டார்கள். குறிப்பாக கானானின் மற்றொரு முக்கிய நகரமான எருசலேமும் அதனைச் சுற்றியிருந்த பல நகரங்களும் இஸ்ரவேலர்களுக்கு எதிராகப் போர் செய்து அவர்களை எளிதாகத் தோற்கடித்துவிடலாம் என்று எண்ணினார்கள்.

அதனால் இஸ்ரவேலர்களுடன் போர்புரிய தங்களைத் தயாரித்துக்கொண்டார்கள். ஆனால் எருசலேம் பக்கம் நின்ற கிபியோன் நகரத்தார் மட்டும் இஸ்ரவேலர்களை எதிர்ப்பது தவறான முடிவாக அமையும் என்று நினைத்தார்கள். இஸ்ரவேலர்களை தன் கரங்களில் வைத்துக் காப்பதுபோல் அவர்களுக்குக் கடவுள் உதவி செய்து வருவதை கிபியோனியர்கள் முழுமையாக நம்பினார்கள். எனவே இஸ்ரவேலர்களை எதிர்ப்பது கடவுளை எதிர்ப்பதற்கு இணையானது என்பதை அறிந்து மோதுவதைத் தவிர்த்து அவர்களோடு சமாதானம் பேச விரும்பினார்கள். அதற்காக புத்திசாலித்தனமாக ஒரு உபாயம் செய்தனர். கிபியோனியர்களின் அந்தக் கணக்குத் தப்பவில்லை.

நம்ப வைத்த நடிப்பு

இஸ்ரவேலர்களின் முகாமை நோக்கி கிபியோனியர்களிலிருந்து தேர்தெடுக்கப்பட்ட பல ஆண்கள் வந்தார்கள். முகாமை அடைந்ததும் வெகு தூரத்திலிருந்து பயணப்பட்டு வந்திருப்பதுபோல, இஸ்ரவேலரிடம் தங்களைக் காட்டிக்கொண்டார்கள். வேண்டுமென்றே அதற்காகக் கந்தலான ஆடைகளையும் தேய்ந்துபோன காலணிகளையும் அணிந்து வந்திருந்தார்கள். தவிர கந்தலான கோணிப் பைகளை தங்கள் கழுதைகளின்மேல் சுமையாகக் கொண்டுவந்திருந்ததோடு, காய்ந்த ரொட்டிகளைப் பசியுடன் தின்பதுபோல் பாசாங்கு காட்டினார்கள்.

அவர்களைக் கண்டு இரங்கிய இஸ்ரவேலர்கள் தங்கள் தலைவராகிய யோசுவாவிடம் அவர்களை அழைத்துச் சென்றனர். அப்போது கிபியோனிய ஆண்கள் கூட்டத்தின் தலைவன், “ ஐயா! நாங்கள், வெகு தொலைவில் உள்ள ஒரு தேசத்திலிருந்து வந்திருக்கிறோம். நீங்கள் வணங்கும் உலகின் ஏக இறைவன் யகோவாவைப் பற்றிக் கேள்விப்பட்டோம். அவர் எகிப்து தேசத்தில் உங்களுக்குச் செய்த எல்லாக் காரியங்களையும் பற்றி நாங்கள் அறிந்துகொண்டோம்.

அதனால் எங்கள் தலைவர்கள் உங்களைச் சந்தித்து: “ ‘நாங்கள் உங்களுடைய வேலைக்காரர்கள்; நீங்கள் எங்களோடு போர் செய்ய வேண்டாம்’ என்று வாக்குப் பெற்றுவரும்படி அனுப்பினார்கள்” என்றான். யோசுவாவும் மற்ற தலைவர்களும் கிபியோனியரின் நடிப்பை நம்பிவிடுகிறார்கள். அவர்கள் விரும்பியபடியே, அவர்களோடு போர் செய்ய மாட்டோம் என்று வாக்குக் கொடுத்தார்கள்.

குட்டு உடைந்துபோனது

ஆனால் அடுத்துவந்த மூன்று நாட்களில் கிபியோனியர் எரிக்கோவின் அருகாமையில் வசிப்பவர்கள்தான் என்பதை அறிந்து யோசுவா கோபம் கொள்கிறார். “எதற்காகத் தூர தேசத்திலிருந்து வந்ததாகப் பொய் உரைத்தீர்கள்?” என்று கடிந்துகொண்டார். நடுங்கிப்போன கிபியோனியர், “இந்தக் கானான் தேசம் முழுவதையும் கடவுள் உங்களுக்கு அளிப்பதாக வாக்குக் கொடுத்திருக்கிறார் என்று கேள்விப்பட்டோம். அதனால் எங்களையும் நீங்கள் கொன்று விடுவீர்களோ என்று உயிருக்குப் பயந்தே அப்படிச் சொன்னோம்” என்றனர்.

இதைக்கேட்டுக்கொண்டிருந்த கடவுள் யோசுவாவின் இதயத்தில் கனிவை மலரச்செய்தார். “கவலைவேண்டாம். நாங்கள் கொடுத்த வாக்குப்படியே உங்களைக் கொல்லமாட்டோம். அதேபோல் நீங்கள் அளித்த வாக்கின்படி எங்களுக்குப் பணியாளர்களாக இருங்கள்” என்று யோசுவா இரக்கம் காட்டினார்.

எருசலேம் எழுச்சி

இஸ்ரவேலரோடு சமாதானம் செய்துகொண்டதால் கிபியோனியர் மீது கடுங்கோபம் கொண்டான் எருசலேமின் அரசன். “அந்தக் கோழைகளை முதலில் கொன்றொழிப்போம்” என்று சூளுரைத்தான். உடனடியாக அருகிலிருந்த நான்கு நகரங்களின் அரசர்களிடமும், “ கிபியோனியரோடு போர் செய்ய என்னோடு கரம் கோர்த்துக்கொள்ளுங்கள்” என்று அழைப்பு விடுத்தான். ஆகமொத்தம் ஐந்து நகரங்களின் அரசர்களும் கிபியோன் நகரம் நோக்கி தங்கள் படைகளுடன் முன்னேறி வந்தார்கள். தங்களுக்கு எதிராக ஐந்து நகரங்கள் திரண்டதால், “சமாதானம் செய்து கொண்டதற்குப் பரிசு சாவுதானா?” என்று கேட்டு கிபியோன் மக்கள் புலம்பி அழுதனர்.

(பைபிள் கதைகள் தொடரும்)

http://tamil.thehindu.com/society/spirituality/பைபிள்-கதைகள்-40-கிபியோனியர்களின்-புத்திசாலித்தனம்/article9555276.ece

Link to comment
Share on other sites

பைபிள் கதைகள் 41: சூரியனே அசையாது நில்!

 
bible_3139085f.jpg
 
 
 

எரிக்கோ எனும் பலம்பொருந்திய கோட்டை நகரை வென்றபின் இஸ்ரவேலர்கள் கில்காலில் முகாமிட்டுத் தங்கினார்கள். அடுத்து சிறிய நகரமான ஆயீயிடம் ஆகான் செய்த பாவத்தால் பரிதாபகரமாகத் தோற்றனர். ஆகான் தண்டிக்கப்பட்டபின்னர் அந்த நகரத்தையும் யோசுவா வென்றார். இதன்பிறகு கானான் தேசத்தில் மொத்தமிருந்த 31 நகரங்களில் 29 நகரங்கள் எஞ்சியிருந்தன. இஸ்ரவேலர்களின் படைக்குக் கடவுளே தலைவராக நின்று வழிநடத்துவதை அறிந்த கிபியோன் நகர மக்கள்; பொய்யாக நடித்து, இஸ்ரவேலர்களின் இரக்கத்தைச் சம்பாதித்துக்கொண்டனர். அவர்களுக்கு அடிமைகளாகப் பணிபுரிய ஒப்புக்கொண்டு, உயிரைக் காத்துக்கொண்டார்கள். இத்தனைக்கும் கிபியோனியர் பலம்பொருந்திய கோட்டை நகரையும், வீரம்மிக்க போர் வீரர்களையும் வைத்திருந்தனர்.

உதவி கேட்டுக் கதறிய மக்கள்

கிபியோனியர், இஸ்ரவேலர்களுடன் சமாதானம் செய்து கொண்டதை அறிந்த எருசலேமின் அரசனாகிய அதோனிசேதேக் அவர்கள் மீது கோபம் கொண்டான். அக்கம்பக்கத்து எமோரிய நகரங்களான எப்ரோன், யர்மூத், லாகீசு, எக்லோன் ஆகிய நான்கு நகரங்களின் அரசர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி கூட்டுப்படையைத் திரட்டிக்கொண்டு கிபியோன் நகரத்தை நெருங்கி தாக்கத் தொடங்கினான். இதைச் சற்றும் எதிர்பாராத கிபியோன் மக்கள்; தங்கள் நகரம் முற்றுகையில் சிக்கித் தாக்குதலுக்கு இலக்காகி யிருப்பது பற்றி யோசுவாவுக்கு அவசர அவசரமாகத் தகவல் அனுப்பினர். “ உடனே படையுடன் புறப்பட்டு, உங்கள் பணியாட்களாகிய எங்களது உயிரைக்காக்க விரைந்து வாருங்கள்” என்று கேட்டுக்கொண்டனர்.

சூரியனுக்கு உத்தரவிட்ட யோசுவா

கிபியோனியரின் கதறலைக் கேட்ட யோசுவா சிறிதும் காலம் தாழ்த்தாமல், தகவல் கிடைத்த அதே இரவில் கிபியோன் நகரம் நோக்கித் தன் பெரும்படையுடன் புறப்பட்டார்.

யோசுவா வருவதைப் பகைவர்கள் அறியவில்லை. எனவே யோசுவாவின் படை திடீரென்று தாக்கியபோது எதிரிகளுக்கு அதிர்ச்சியாக இருந்தது. ஐந்து நகரங்களின் கூட்டுப்படையை இஸ்ரவேலர்கள் தாக்கத் தொடங்கிய அதேநேரம் கடவுள் வானத்திலிருந்து பெருங்கற்கள் விழும்படியாகச் செய்தார். அக்கற்களால் எதிரிப்படையினர் நசுங்கி மாண்டனர். இஸ்ரவேல் வீரர்களின் வாளால் கொல்லப்பட்டவர்களைக் காட்டிலும் வானத்திலிருந்து விழுந்துகொண்டேயிருந்த கல் மழையால் கொல்லப்பட்டவர்களே அதிகமாக இருந்தனர். அப்படியும் ஆயிரக்கணக்கில் எஞ்சியிருந்த எதிரிகள், இஸ்ரவேலர்களை எதிர்த்துப் போர்புரிந்துகொண்டிருந்தனர்.

அந்நாட்களில் சூரியன் மறைந்ததும் போரை நிறுத்தி சூரியன் மீண்டும் எழுந்ததும் தாக்குதலைத் தொடர்வது போர் முறை மரபாக இருந்தது. ஆனால் யோசுவா, எதிரிகளுக்கு அந்த வாய்ப்பை வழங்கவேண்டாம் என்று கடவுள் நினைத்தார். எனவே யோசுவாவின் வார்த்தைகளுக்கு வல்லமையை அளித்தார். இஸ்ரவேல் ஜனங்களுக்கு முன்பாக நின்ற யோசுவா, வானை நோக்கி: “சூரியனே கிபியோன் நகரின்மேல் நில்! சந்திரனே… ஆயலோன் பள்ளத்தாக்கின் மேல் அசையாது நில்” என்று அதிகார தொனியுடன் உத்தரவிட்டார்.

எனவே சூரியனும், சந்திரனும் யோசுவாவின் உத்தரவுக்கு கீழ்ப்படிந்தன. தங்கள் பகைவர் படையின் கடைசி வீரனையும் இஸ்ரவேலர் முறியடிக்கும் வரைக்கும் அவை அசையாமல் நின்றன. வானத்தின் நடுவில் சூரியன் ஒரு நாள் முழுவதும் பிரகாசமாய் அசையாமல் நின்றது. அவ்வாறு அதற்கு முன்னர் இப்படி நிகழ்ந்ததேயில்லை! அதன் பின்னரும் நிகழவுமில்லை. உண்மையில் கடவுளே இஸ்ரவேலருக்காகப் போர் செய்தார்! போரின் முடிவில் எருசலேமின் அரசன் உட்படத் தப்பிச்சென்று ஒளிந்துகொண்ட ஐந்து நகரங்களின் அரசர்களையும் கைதுசெய்து அழைத்துவந்து அவர்களையும் இஸ்ரவேலர்கள் கொன்றொழித்தனர்.

ஆறாவது ஆண்டின் முடிவில்

இவ்வாறு அடுத்துவந்த ஆறு ஆண்டுகளில் கானான் தேசத்தின் பெரும்பகுதியை நகரங்களின் வழியே ஆண்டுவந்த 31 அரசர்களைத் தோற்கடித்த யோசுவா கிடைத்த நிலப்பகுதியைப் பிரித்து யூதா உள்ளிட்ட இஸ்ரவேலரின் கோத்திரத்தாருக்கும் கடவுள் கூறியபடி பிரித்துக் கொடுக்கிறார்.

இப்போது இஸ்ரவேலருக்கு எதிரிகள் என்பவர்களே இல்லாமல் போனார்கள். கடவுள் இஸ்ரவேலருக்கு அமைதியைக் கொடுத்தார். ஆண்டுகள் உருண்டோடின. யோசுவா வயது 110 வயதினை எட்டி முதிர்ந்த கிழவன் ஆனார். தனது இறுதி நாட்களை உணர்ந்துகொண்ட அவன், இஸ்ரவேல் கோத்திரத்தாரின் எல்லா மூத்த தலைவர்களையும், குடும்பத் தலைவர்களையும், நியாயாதிபதிகளையும், படை அதிகாரிகளையும் யோசுவா ஒருங்கே அழைத்தார்.

அவர்களிடம், “நான் முதுமை அடைந்துவிட்டேன். இது நான் இறக்கப்போகும் நேரம். கற்பனைக் கடவுளர்களை வழிபட்ட, தனக்குக் கீழ்ப்படியாத கெட்ட அரசர்கள் அனைவரையும் வீழ்த்தி, நமக்கு வாக்களித்தபடியே நமது மூதாதையர்களின் நிலத்தை நமக்குக் கொடுத்தார். எனவே அவர் நமக்குக் கட்டளையிட்ட எல்லாவற்றிற்கும் கீழ்ப்படிவதற்குக் கவனமாக இருங்கள்.

மோசேயின் சட்டப் புத்தகத்தில் எழுதப்பட்டிருக்கிற கட்டளைகள் அனைத்துக்கும் கீழ்ப்படியுங்கள். அச்சட்டத்தை மீறாதீர்கள். கடவுளின் உதவியோடு, இஸ்ரவேலரில் ஒருவன் எதிரிகளின் ஆயிரம் பகைவீரர்களை வெல்ல முடிந்தது. ஏனெனில் கடவுள் நமக்காகப் போர் செய்கிறார். எனவே உங்கள் தேவனாகிய கடவுளைத் தொடர்ந்து நேசியுங்கள்.

நீங்கள் தவறு செய்தால் உங்களுக்குத் தீமை விளையுமெனக் கடவுள் உறுதியளித்தார். மீறி நீங்கள் தீய வழியில் சென்றால் உங்களுக்குத் தந்த இத்தேசத்திலிருந்து அவர் உங்களைத் துரத்துவார் என்பதையும் உறுதியாக நினைவில் வைத்திருங்கள். நம் தேவனாகிய கடவுளோடு செய்த உடன்படிக்கையை நீங்கள் மீறினால் இவ்வாறு நிகழும்.” என்று கூறி யோசுவா இறந்துபோனார். யோசுவா என்ற மாபெரும் சகாப்தம் முடிந்துபோனது.

யோசுவா இருந்தவரை அவருக்குக் கீழ்ப்படிந்து நடந்த இஸ்ரவேலர்கள் அதன்பிறகு பல கெட்ட செயல்களில் இறங்கி பிரச்சினையை விலைகொடுத்து வாங்கிக்கொண்டார்கள்.

(பைபிள் கதைகள் தொடரும்)

http://tamil.thehindu.com/society/spirituality/பைபிள்-கதைகள்-41-சூரியனே-அசையாது-நில்/article9565356.ece

Link to comment
Share on other sites

பைபிள் கதைகள் 42: ஒரு பெண்ணின் துணிவு

 

 
bibl_3141348f.jpg
 
 
 

வாக்களித்தவாரே கானான் நாட்டை இஸ்ரவேலர்கள் வெல்லும்படி செய்தார். என்றாலும் அங்கே வாழ்ந்துவந்த பிற இனத்தினரை அங்கிருந்து செல்லும்படி கடவுள் வற்புறுத்தவில்லை. அவர்களில் பல இனங்களை அங்கேயே விட்டுவைத்தார். இஸ்ரவேலர்களின் மூதாதையான மோசேயின் மூலமாக அவர்களுக்குக் கொடுத்த கட்டளைகளை மதித்து, அவற்றுக்கு புதிய தலைமுறையினர் கீழ்ப்படிந்து வாழ்கிறார்களா என்பதைப் பார்க்க கடவுள் விரும்பினார்.

இதன் பொருட்டே கானானியர், ஏத்தியர், எமோரியர், பெரிசியர், ஏவியர், எபூசியர் ஆகிய புற இன மக்களுக்கு மத்தியில் இஸ்ரவேலர்களை வாழும்படி செய்தார். ஆனால் தங்கள் முன்னோர்கள்போல புதிய தலைமுறையினர் திருச்சட்டங்களையும் கட்டளைகளையும் பொருட்படுத்தவில்லை. புற இனத்தைச் சேர்ந்தவர்களுடன் திருமணம் உறவு வைத்துக்கொண்டனர். பெண் எடுக்கவும் பெண் கொடுக்கவும் செய்தனர்.

இதன் பொருட்டு புற இன மக்கள் வழிபட்டுவந்த கற்பனையான தெய்வங்களான பாகால், அசேரா ஆகியவற்றை இஸ்ரவேலர்களும் வழிபடலாயினர். தன்னை மறந்த தன் மக்கள் மீது கடவுள் கடுங்கோபம் கொண்டார்.

மீண்டும் மீட்பை அளித்த கடவுள்

மெசபடோமியாவின் அரசனாகிய கூசான்ரிஷதாயீம் என்பவன் இஸ்ரவேலரைத் தோற்கடித்து அவர்களை ஆட்சி செய்வதற்கு கடவுள் அனுமதித்தார். அம்மன்னனின் ஆட்சியின் கீழ் இஸ்ரவேலர் எட்டு ஆண்டுகள் வாழ்ந்தனர். அந்நிய ஆட்சியால் கீழாக நடத்தப்படுவதைக் கண்டு தங்கள் கடவுளாகிய யகோவா தேவனிடம் உதவிக்காக அழுது புலம்பினார்கள். அவர்களை மீட்பதற்காகக் கடவுள் ஒரு மனிதனை அனுப்பினார். அம்மனிதனின் பெயர் ஒத்னியேல். அவன் கேனாஸ் என்னும் இஸ்ரவேலரின் மகன். கடவுளுடைய தூய ஆவி ஒத்னியேல் மீது இறங்கி வந்தது. அவன் இஸ்ரவேலருக்கு நியாயாதிபதி ஆனான்.

மெசபடோமிய அரசனின் ஆளுகையிலிருந்து தேசத்தை மீட்க இஸ்ரவேலரைப் போருக்கு வழிநடத்தினான். போரில் கூஷான்ரிஷதாயீமின் படைகள் இஸ்ரவேலரிடம் தோற்று ஓடின. இஸ்ரவேல் மக்கள் பரலோகத் தந்தையின் வல்லமையை மீண்டும் உணர்ந்துகொண்டனர். புறமத வழிபாட்டை உதறினர். இதனால் ஒத்தேனியேல் வயது முதிர்ந்து இறக்கும்வரை 40 ஆண்டுகள் கானான் அமைதியாக இருந்தது.

தீர்க்கதரிசினி தெபோராள்

ஆனால் ஒரு குறிப்பிட்ட காலத்துக்குப்பிறகு கடவுள் அளித்த கட்டளைகளை மறந்து, புற இன மக்களின் அறமற்ற வாழ்க்கை முறையால் கவரப்பட்டு மீண்டும் மீண்டும் இஸ்ரவேலர்கள் கஷ்டத்தில் மாட்டிக்கொண்டார்கள். தங்கள் வானகத் தந்தையை உணர்ந்து அவரை நோக்கிக் கெஞ்சினார்கள். அப்போது அவர்களுக்கு உதவி செய்ய தைரியமுள்ள தலைவர்களை (நியாயாதிபதிகள்) நியமித்த கடவுள், அவர்கள் வழியே அந்நிய ராஜாக்களையும் படையெடுப்பாளர்களைத் துரத்தியடித்து இஸ்ரவேலர்களைக் காத்தார்.

இப்படி ஒத்னியேலுக்குப் பிறகு ஏகூத், சம்கார் உள்ளிட்ட 13 தலைவர்களை அவர்களுக்குத் தந்தார். இஸ்ரவேலர்களுக்கு ஆண்களை மட்டுமே அல்ல; ஒரு பெண்ணையும் நியாயாதிபதி ஆக்கினார். அவர் தெபோராள். தேபோராளை தீர்க்கதரிசினியாக உயர்த்திய கடவுள் இஸ்ரவேலர்களின் நியாதிபதியாக பாராக்கை நியமித்தார். தெபோராள் வழியே இஸ்ரவேலர்களுக்கு கடவுள் உதவினார். பாராக், தெபோராள் காலத்தில் யாக்கேல் என்ற வீரமும் விசுவாசமும் மிக்க பெண்ணையும் கடவுள் பயன்படுத்திக்கொண்டார்.

ஒரு கெட்ட ராஜாவும் அவன் தளபதியும்

இஸ்ரவேலர்களின் எதிர்காலத்தைப் பற்றி தெபோராளின் வழியே கடவுள் கூறிவந்தார். கடவுள் சொல்வதை அவர் மக்களுக்கும் நியாயாதிபதியான பாராக்கிற்கும் சொல்லிவந்தார். எபிராயீம் மலைநாட்டில் இருந்த ஒரு பேரீச்சை மரத்தின் கீழ் அமர்ந்து தன்னைத் தேடிவரும் இஸ்ரவேல் மக்களுக்கு பிரச்சினைகளைத் தீர்த்துக்கொள்ள ஆலோசனை வழங்கி, அவர்களை ஆற்றுப்படுத்தி வந்த தெபோராளை பாராக் மிகவும் மதித்தார்.

இக்காலகட்டத்தில் இஸ்ரவேலர்கள் 20 ஆண்டுகள் கொடுமையான அந்நிய ஆட்சியின் கீழ் இருந்தார்கள். யாபீன் என்ற அந்நியன் கானானில் அரசனாகி அதைக் கொடுங்கோன்மையுடன் ஆண்டுவந்தான். இஸ்ரவேலர்களை அவன் தனது வேலையாட்களாக நடத்தி வந்தான். எல்லாவிதத்திலும் அவர்களை ஒடுக்கினான். அவனிடம் 900 யுத்த ரதங்கள் இருந்தன. அந்த கெட்ட அரசனின் படை மிகவும் பலமுள்ளதாய் இருந்தது. அந்தப் படையை சிசெரோ என்ற தளபதி தலைமை தாங்கி கொடுஞ்செயல்களைச் செய்துவந்தான். சிசெரோவைக் கண்டு இஸ்ரவேலர்கள் நடுங்கினார்கள்.

கடவுள் தேர்ந்த இரு பெண்கள்

ஒருநாள் நியாயாதிபதி பாராக்கை அழைத்த தெபோராள் கடவுள் தனக்குக் கூறியதை அவரிடம் தீர்க்கதரிசனமாய் உரைத்தார்.

“ இஸ்ரவேலர்களில் பத்தாயிரம் படைவீரர்களைத் தயார்செய்து அவர்களைத் தாபோர் மலைக்குக் கூட்டிக்கொண்டு போ. அங்கே நான் சிசெரோவை உன்னிடம் கொண்டு வருவேன். அவன் மீதும் அவனுடைய படை மீதும் நான் உனக்கு வெற்றியைத் தருவேன் ” என்ற கடவுளின் வார்த்தைகளை அப்படியே கூறினார். ஆனால் அப்போது தனியே செல்ல ஒரு கோழைபோல் பயந்த பராக்;

“ நீங்களும் என்னோடுகூட வந்தால் நான் போவேன்” என்று சொன்னார். எனவே தெபோராள் அவருடன் கிளப்பினார். ஆனால் புறப்படும்முன் “போரில் கிடைக்கப்போகும் வெற்றியை உன்னுடையதாக நீ கொண்டாட முடியாது. ஏனெனில் நம் கடவுள் சிசெரோவை ஒரு பெண்ணின் கையால் வீழ்த்துவார்” என்று கூறினார். அதை ஏற்றுக்கொண்ட பாராக், சிசெரோவின் படையை நேருக்கு நேர் எதிர்கொள்ள தாபோர் மலையின் மீதேறிப் பின் அங்கிருந்து கீழே இறங்கினார். இஸ்ரவேலர்கள் படையாகத் திரண்டுவருவதைக் கண்ட சிசெரோ பள்ளத்தாக்கில் முகாமிட்டிருந்த தனது படைகளுக்கு உடனே தாக்கும்படி உத்தரவிட்டான். ஆனால் பாராக்கின் படையிடம் சிரெரோவின் படை சுருண்டது. இதைச் சற்றும் எதிர்பாராத சிசெரோ அங்கிருந்து தப்பித்து ஓடினான்.

யாக்கேலின் துணிவு

தளபதி சிசெரோ, ஏபேர் என்பவரின் கூடாரத்தைக் கண்டான். அங்கே சென்று ஒளிந்துகொள்ள நினைத்துச் சென்றவனை ஏபேரின் மனைவியாகிய யாக்கேல் வரவேற்று உள்ளே அழைத்து சென்று அவனுக்குக் குடிக்கப் பால் கொடுக்கிறாள். பால் அருந்தியதால் அவனுக்குத் தூக்கம் வர வெகுசீக்கிரமே ஆழ்ந்த தூக்கத்துக்குச் சென்றுவிடுகிறான். தனது கணவர் ஏபேருக்கும் அரசனாகிய யாபீனுக்கும் இணக்கமான ஒப்பந்தம் இருந்தும்கூட, சிறிதும் யோசிக்கவில்லை யாக்கேல்.

‘இஸ்ரவேலர்களைத் துன்புறுத்தும் இவன் எனக்கும் எதிரியே’ என்ற எண்ணத்தால் உந்தப்பட்டு ஒரு கூடார ஆணியை எடுத்து, அந்தக் கெட்ட தளபதியின் தலையில் அடித்து, அவனைக் கொன்றுவிடுகிறார். பிறகு சிசெரோவைத் தேடிக்கொண்டு அங்கே வந்துசேர்ந்த பராக்கிடம் அவனது பிணத்தைக் காட்டுகிறார். தெபொராள் சொன்னபடியே நடந்ததைக் கண்டு பாராக் கடவுளைப் போற்றுகிறார். அதன் பின் யாபீன் அரசனும் கொல்லப்பட்டு, இஸ்ரவேலர்கள் அமைதியாக வாழத்தொடங்குகிறார்கள்.

http://tamil.thehindu.com/society/spirituality/பைபிள்-கதைகள்-42-ஒரு-பெண்ணின்-துணிவு/article9575805.ece

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

பைபிள் கதைகள் 43: நவோமியைத் தொடர்ந்த ரூத்

 
bible_3143852f.jpg
 
 
 

இஸ்ரவேலர்களுக்கேன்று ஒரு ராஜா தோன்று வதற்கு முன் அவர்களது தலைவர்களாக நியாயாதிபதிகளே இருந்தனர். அவர்களது ஆட்சிக்காலத்தில் கானானின் ஒரு பகுதியாக இருந்த யூதேயா மிக மோசமான ஒரு பஞ்சத்தைச் சந்தித்தது. எனவே அங்கே வாழ்ந்த பெரும்பாலான குடும்பங்கள் விளைச்சல் செழித்த பகுதிகளை நோக்கி இடம்பெயர்ந்து சென்றார்கள். அப்படி யூதேயாவின் பெத்லெகேம் நகரத்தை விட்டு, எலிமெலேக்கு என்பவர் தனது மனைவி நாகோமியுடனும், அவர்களது இரண்டு மகன்களாகிய மக்லோன், கிலியோன் ஆகியோருடன் சற்றுத் தொலைவில் இருந்த மலை நாடான மோவாபுக்குச் சென்று அங்கே குடியேறி வசிக்க ஆரம்பித்தார்.

ஆண்களை இழந்த நகோமி

மோவாப் வளமான மலைநகரமாக இருந்தாலும் அங்கே வாழ்ந்துவந்த மக்கள் பரலோகத் தந்தையாகிய யகோவாவை வழிபடவில்லை. எனினும் அங்கே வசித்துவந்த மோவாபிய மக்கள் யகோவா பற்றி அறிந்திருந்தனர். இதனால் அங்கே பஞ்சம் பிழைக்க வந்த இஸ்ரவேலர்களை மோவாபியர்கள் எதிர்க்கவில்லை. மகன்கள் வளர்ந்து பெரியவர்களான போது நகோமியின் கணவனான எலிமெலேக்கு மரித்துப் போனார். மனமுடைந்த நகோமி, தன்னைக் காக்க மகன் இருப்பதை எண்ணி மனதைத் தேற்றிக்கொண்டாள்.

அவளது மகன்கள் வளர்ந்து பெரியவர்கள் ஆனதும் மோவாப் இனப் பெண்களை மணந்துகொண்டனர். மூத்தவன் மனைவியின் பெயர் ஓர்பாள். இளையவன் மனைவியின் பெயர் ரூத். திருமணத்துக்குப்பின் அவர்கள் பத்து ஆண்டுகள் மோவாபில் மகிழ்வுடன் வாழ்ந்தனர். ஆனால் அடுத்த பெரிய இழப்பாக நகோமியின் மகன்கள் இருவரும் மரித்துப்போனார்கள், நகோமி தன் குடும்பத்திலிருந்த அனைத்து ஆண்களையும் இழந்ததில் மனமுடைந்துபோய் தனிமரம் ஆனதைப் போல் உணர்ந்தாள். அதற்கு மேலும் அந்த மலைநாட்டில் வசிக்க அவள் விரும்பவில்லை. எனவே முதுமை தன்னை முடக்கு முன் தனது சொந்த ஊராகிய பெத்லகேமுக்குச் சென்றுவிட முடிவெடுத்தாள்.

பின்தொடர்ந்த இருவர்

அதற்குமுன் இள வயதில் கணவர்களை இழந்துவிட்ட தன் மருமகள்களின் பாதுகாப்பு கருதி தாய் வீட்டுக்குச் சென்றுவிடுவதே நல்லது என்று நினைத்தாள். இருவருக்கும் கண்ணீர் மல்க முத்தமிட்டுக் கிளம்பினாள். சிறிது தூரம் நடக்க ஆரம்பித்ததும் தன்னை இரு பெண்கள் பின் தொடர்வதைக் கண்டு திரும்பிப் பார்த்தாள். நகோமியைப் பின்தொடந்து வந்துகொண்டிருந்த அந்த இருவர் வேறு யாருமல்ல; ஓர்பாளும் ரூத்தும்தான்.

உன் மக்களே என் மக்கள்

அதிர்ச்சியடைந்த நகோமி அவர்களை அருகில் அழைத்து, “என் பிள்ளைகளே, நீங்கள் திரும்பிப் போய் உங்கள் தாயாரின் வீட்டில் இருப்பதுதான் உங்களுக்கு நல்லது. நீங்கள் இருவரும் மறுமணம் செய்துகொண்டு வாழுங்கள். உங்களைப் பரலோகத் தந்தை ஆசீர்வதிப்பார்” என்று மீண்டும் முத்தமிட்டுக் கட்டித் தழுவி அனுப்புகிறாள். அதைக் கேட்ட ஓர்பாள் அங்கிருந்து தனது தாய்வீட்டுக்கு நடக்க ஆரம்பித்தாள். ரூத்தும் அவ்வாறே செல்வாள் என்று நகோமி எதிர்பார்த்தாள். ஆனால், ரூத் போகவில்லை.

“ஒர்பாள் போய் விட்டாள், நீயும் அவளுடன் திரும்பிப் போ” என்றாள் நகோமி. ஆனால் ரூத், “உங்களை விட்டுப் பிரிந்து போகும்படி என்னைக் கட்டாயப்படுத்தாதீர்கள்! தயவுசெய்து என்னை உங்களோடு வரவிடுங்கள். நீங்கள் எங்கே போகிறீர்களோ அங்கே நானும் போவேன், நீங்கள் எங்கே வாழ்கிறீர்களோ அங்கே நானும் வாழ்வேன். உங்களின் மக்கள் என் மக்களே. உங்களின் கடவுளே என் கடவுள். நீங்கள் மரிக்கும் இடத்தில் நானும் மரிப்பேன், அங்கேயே நானும் அடக்கம் பண்ணப்படுவேன்” என்று உறுதியாகக் கூற அதைக் கேட்டு நெகிழ்ந்த நகோமி, ரூத்தின் அன்பில் கரைந்துபோனாள். ரூத், இஸ்ரவேல் இனத்தைச் சேர்ந்த பெண் அல்ல. ஆனால் யகோவாவைப் பற்றி அறிந்து அவரை வழிப்பட்டு வந்தாள் ரூத்.

தாயும் மகளும்

நகோமியும் ரூத்தும் பெத்லகேமை அடைந்து விடுகிறார்கள். விவசாயக்குடும்பத்தில் பிறந்த ரூத், வயல்களில் வேலைசெய்து தனது மாமியார் நகோமியை நன்கு கவனித்துக்கொள்கிறாள். இவர்கள் தாயும் மகளுமா, இல்லை மருமகளும் மாமியாருமா என்ற சந்தேகம் எழும் வண்ணம் பாசம் கொண்டவர்களாக நகோமியும் ரூத்தும் இருக்கிறார்கள். வாற்கோதுமை அறுவடைக் காலம் நெருங்கியபோது போவாஸ் என்பவர் தன் வயல்களில் வாற்கோதுமையைப் பொறுக்கிக்கொள்ள ரூத்தை அனுமதிக்கிறார். இந்த போவாஸ் எரிக்கோ பட்டணத்தில் ஏகக்கடவுள் மீது நம்பிக்கை கொண்டு இஸ்ரவேலர்களுக்கு உதவிய பாலியல் தொழிலாளிப் பெண்ணான ராகேப்பின் மகன்.

நகோமியிடம் பேரன்பு வைத்திருக்கும் ரூத்தைப் பற்றிக் கேள்விப்பட்ட போவாஸ் ஒருநாள் அவளை அழைத்தார். “உன்னைப் பற்றி நன்கு அறிவேன். நீ சிறந்த உழைப்பாளி. அன்பே உருவானவள். உனது மாமியார் நகோமியிடம் நீ எந்தளவு அன்பு வைத்திருந்தால் உன் பெற்றோரையும் சொந்த ஊரையும் விட்டுவிட்டு, முன்பின் தெரியாத இந்த மக்களுடன் இங்கே வாழ வந்திருப்பாய். உனக்கு பரலோகத் தந்தை நன்மை செய்வாராக” என்று வாழ்த்தினார். அந்த வாழ்த்துதலில் அன்பு இருந்ததை ரூத் கண்டாள். அவர்கள் இருவரும் நகோமியின் சம்மதத்துடன் விரைவிலேயே திருமணம் செய்துகொண்டார்கள்.

தன்னைக் கண்போலக் காத்துக்கொண்ட ரூத்துக்கு மறுமணத்தை ஆசீர்வதித்தற்காகக் கடவுளுக்கு நவோமி நன்றி கூறினாள். ரூத்துக்கும் போவாஸுக்கும், ஓபேத் என்ற மகன் பிறந்தபோது நகோமி மேலும் சந்தோஷப்பட்டாள். அன்பே உருவான அந்தக் குடும்பத்தைக் கடவுள் மேன்மேலும் ஆசீர்வதித்தார்.

http://tamil.thehindu.com/society/spirituality/பைபிள்-கதைகள்-43-நவோமியைத்-தொடர்ந்த-ரூத்/article9585294.ece

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்றாகப் போகின்றது, தொடருங்கள் நவீனன்......!  tw_blush: 

Link to comment
Share on other sites

பைபிள் கதைகள் 44: கடவுள் தேர்ந்தெடுத்த ஏழை விவசாயி!

 

 
 
bible_3146163f.jpg
 
 
 

நியாயாதிபதிகளைத் தலைவர்களாகக் கொண்டு இஸ்ரவேலர்கள் கானானில் வாழ்ந்துவந்த காலம் அது. எகிப்தில் 400 ஆண்டுகள் அடிமைகளாய் இருந்தவர்களை மீட்டு அழைத்துவந்து வாக்களித்தபடியே, கானான் நாட்டைத் தந்த தங்களது கடவுளும் பரலோகத் தந்தையுமாகிய யகோவாவை அவர்கள் மீண்டும் மறந்துபோனார்கள்.

கற்பனையாக உருவாக்கப்பட்ட அந்நிய தெய்வங்களை அவர்கள் சிலைகளாக வழிபடத் தொடங்கினார்கள். இதனால் ஒரு தந்தைக்கே உரிய கோபம் கடவுளுக்கு வந்தது. தனது மக்கள் மீண்டும் மீண்டும் தன்னை மறந்து, தனக்குக் கீழ்ப்படியாமல் தடுமாறித் தவறான பாதையில் செல்வதை அவர் விரும்பவில்லை. அவர்களை அப்படியே விட்டுவிடவும் அவர் விரும்பவில்லை. எனவே அவர்களுக்குப் பாடம் கற்பிக்க விரும்பி, இஸ்ரவேலர்களின் தேசத்தை மீதியானியர்கள் கைப்பற்றி ஆட்சி செய்யும்படிவிட்டார்.

வெட்டுக்கிளிகளைப் போன்றவர்கள் மீதியானியர்களோ வெட்டுக்கிளிகளைப்போல் கூட்டம் கூட்டமாக வந்து கானான் தேசத்தை நிறைத்தார்கள். இஸ்ரவேலர்களிடமிருந்த எல்லாவற்றையும் பிடுங்கிக்கொண்டார்கள். இஸ்ரவேலர்களின் விளைச்சல், பொருட்கள், ஆடுகள், பசுக்கள், கழுதைகள் என எதையும் விட்டுவைக்கவில்லை. எதிர்த்த அனைவரையும் துன்புறுத்தினார்கள். அவர்களின் கொடுமைகளுக்குப் பயந்த இஸ்ரவேலர், மீதியானியர்களின் பார்வை படாத மலைகளிலும் குகைகளிலும் ஒளிந்துகொள்வதற்கான இடங்களைத் தேடிக் கண்டறிந்து அங்கே மறைந்து வாழ்ந்தனர். தானியங்களையும் உணவுப் பொருட்களையும் அவர்களுக்குத் தெரியாமல் மறைத்து வைத்தனர்.

மீதியானியர்கள் வடிவில்

தங்களை இப்படியொரு பெருந்துன்பம் வந்து ஆக்கிரமித்துக் கொண்டதற்கு என்ன காரணம் என்று யோசித்தார்கள். கற்பனை கடவுளர்களை வழிபட்டு, நம் கடவுளாகிய பரலோகத் தந்தையை மறந்துபோனோமே அதுவே காரணம் என்பதை உணர்ந்துகொண்டார்கள். இதனால் தங்கள் கடவுளாகிய யகோவா தேவனை நோக்கி இறைஞ்சத் தொடங்கினர். கடவுள் மனமிறங்கினார். இஸ்ரவேலர்களைக் காக்க, கிதியோன் என்ற ஏழை விவசாயியைத் தேர்ந்தெடுத்தார். அவனிடம் தனது தூதரை அனுப்பி வைத்தார்.

கடவுளுடன் ஒரு சந்திப்பு

ஓப்ரா என்னுமிடத்தில் ஒளிந்து வாழ்ந்துவந்தார் யோவாஸ் என்ற எளிய விவசாயி. அவரது மகன்தான் கிதியோன். திராட்சை ஆலையில் கிதியோன் கோதுமையை அடித்து, பதர்களை விலக்கி தானியங்களை மட்டும் தனியே எடுத்துக்கொண்டிருந்தான். பின்னர் அந்தக் கோதுமையை மீதியானியர் பார்த்துவிடாதபடி ஓக் மரத்தின் அருகே மறைத்துவைத்துக் கொண்டிருந்தான். அப்போது கடவுள் அனுப்பிய தூதர் கிதியோன் முன்பாகத் தோன்றி “ பெரும் வீரனே! கடவுள் உன்னோடிருக்கிறார்!” என்று வாழ்த்தினார்.

தூதர் கூறியதைக் கேட்ட கிதியோன், “கடவுள் எங்களோடிருந்தால் ஏன் இத்தனை துன்பங்கள் நேர்கின்றன? எகிப்தில் அடிமைகளாயிருந்த எங்கள் முற்பிதாக்களை அவர் விடுதலை செய்து அழைத்துவந்து, இந்த தேசத்தை அவர்களுக்குத் தரும்வரை அவர் அற்புதமானக் காரியங்களைச் செய்தார் என்று நாங்கள் கேட்டிருக்கிறோம். ஆனால், கடவுள் இப்போது எங்களோடு இல்லை; அவர் எங்களை விட்டுப் பிரிந்துவிட்டார். மீதியானியர் எங்களைத் தோற்கடிப்பதற்கு அனுமதித்தார்” என்று வேதனை பொங்கக் கூறினான்.

அப்போது தூதர் வழியாகப் பேசிய கடவுள் “ உனது வல்லமையைப் பயன்படுத்து, மீதியானியரிடமிருந்து இஸ்ரவேலரைக் காப்பாற்ற நான் உன்னை அனுப்புகிறேன்!” என்றார். ஆனால், கிதியோன் தயங்கினான். “என்னை மன்னித்துவிடுங்கள் ஐயா, நான் எவ்வாறு இஸ்ரவேலரைக் காப்பாற்றுவேன்? மனாசே கோத்திரத்தில் எங்கள் குடும்பமே மிகவும் வறியது. எங்கள் குடும்பத்தில் நான் இளையவன்” என்றான். அப்போது கடவுள் “நான் உன்னோடிருக்கிறேன்! மீதியானியரை உன்னால் தோற்கடிக்க முடியும்!” என்றார். கிதியோன் கடவுளிடம், “உமக்கு என் மேல் கருணை இருந்தால் என்னிடம் பேசுகிறவர் என் மூதாதையரின் கடவுள்தான் என்றால் நான் திரும்பி வரும்வரை எங்கும் செல்லாமல் இங்கே காத்திரும் பிதாவே. நான் போய் எனது காணிக்கையைக் கொண்டுவந்து உம்முன் வைக்க என்னை அனுமதியும்”என்றான். “நீ வரும்வரை காத்திருப்பேன்” என்றார் கடவுள்.

விரைந்து சென்ற கிதியோன் ஒரு வெள்ளாட்டுக் குட்டியைச் சமைத்தான். மாவை எடுத்துப் புளிப்பின்றி அப்பம் செய்தான். பின் ஓடோடி வந்து ஓக் மரத்தின் கீழே அமர்ந்திருந்த தேவதூதனுக்கு அருகில் அந்த உணவைக் கடவுளுக்காக வைத்தான். தூதர் தன் கையில் வைத்திருந்த கைத்தடியின் முனையால் அந்த உணவுகளைத் தொட, அந்தக் கணத்தில் பாறையிலிருந்து தோன்றிய நெருப்பு இறைச்சியையும், அப்பத்தையும் எரித்துவிட்டது! பின் கர்த்தருடைய தூதரும் மறைந்து போனார். இதைக் கண்டு கிதியோன் பெருமகிழ்ச்சி கொண்டான்.

“சர்வ வல்லமையுள்ள கடவுளே! நீர் அனுப்பிய தூதனை நேருக்கு நேராக நான் சந்தித்தேன்!” என்று ஆனந்தக் குரல் எழுப்பி ஆர்ப்பரித்தான். அப்போது கடவுளின் குரல் “ கிதியோனே அமைதியாயிரு!” என அவனைச் சாந்தப்படுத்தியது. மூதாதையர்களின் கடவுளாகிய யகோவா தம் மக்களை மறக்கவும் இல்லை; கைவிடவும் இல்லை என்பதை உணர்ந்துகொண்ட கிதியோன், அவரை ஆராதிப்பதற்கு ஒரு பலிபீடத்தைக் கட்டினான். அதற்கு ‘கர்த்தரே சமாதானம்’ என்று பெயரிட்டான். அதற்குமுன் கற்பனை தெய்தவங்களுக்காக கட்டப்பட்ட எல்லாப் பலிபீடங்களையும் இரவோடு இரவாக உடைத்துப்போட்டான்.

300 வீரர்கள்

இப்போது மீதியானியர்களை எதிர்த்துப் போர் புரிவதற்காக ஒரு படையைத் திரட்டும்படி கிதியோனிடம் கடவுள் கூறினார். எனவே கிதியோன் 32 ஆயிரம் போர் வீரர்களைத் திரட்டினான். ஆனால், எதிரிகளின் படையிலோ 1 லட்சத்து 35 ஆயிரம் மீதியானிய வீரர்கள் இருந்தார்கள். கடவுள் கிதியோனை அழைத்து, “ நீ திரட்டிய படையில் அளவுக்கதிகமான வீரர்கள் இருக்கிறார்கள்” என்றார். இதைக் கேட்டு கிதியோன் ஆச்சரியப்பட்டான். மீண்டும் அவனிடம் பேசிய கடவுள், “ உன் படையில் இருப்பவர்களில் உயிரை எண்ணி அஞ்சுகிற அனைவரையும் வீட்டுக்கு அனுப்பிவிடு” என்றார். அவ்வாறே கிதியோன் உயிர் பயம் கொண்டவர்கள் போய்விடலாம் என்று சொன்னதும் 22 ஆயிரம் வீரர்கள் வீட்டுக்குப் புறப்பட்டுச் சென்றுவிடுகிறார்கள். இப்போது எதிரிகளின் பெரும்படைக்கு முன்னால் போர் செய்ய கிதியோனிடம் 10 ஆயிரம் வீரர்கள் மட்டுமே இருந்தார்கள்.

தண்ணீர் குடிக்கும்போது கவனி!

இப்போதும் கடவுள் மீண்டும் கிதியோனிடம், “இன்னும் உன்னிடம் நிறைய வீரர்கள் இருக்கிறார்கள். எனவே அவர்களை அழைத்துச்சென்று நீரோடையிலிருந்து ஓடிவரும் தண்ணீரைக் குடிக்குமாறு செய். யாரெல்லாம் குனிந்து தண்ணீர் குடிக்கிறார்களோ அவர்களை யெல்லாம் வீட்டுக்கு அனுப்பிவிடு. சுற்றும் முற்றும் கவனித்தவாறே தண்ணீர் குடிக்கிற 300 வீரர்களை மட்டும் தேர்ந்தெடு. அவர்களை மட்டும் உன்னுடன் வைத்துக்கொள். அந்தச் சிறுபடையணி மூலம் நான் உனக்கு வெற்றியைக் கொடுப்பேன்’ என்று வாக்குக் கொடுத்தார். கடவுள் குறிப்பிட்டபடியே 300 பேரைத் தேர்வு செய்தான் கிதியோன். கடவுளின் கட்டளைக்காகக் காத்திருந்தான்.

http://tamil.thehindu.com/society/spirituality/பைபிள்-கதைகள்-44-கடவுள்-தேர்ந்தெடுத்த-ஏழை-விவசாயி/article9595828.ece

Link to comment
Share on other sites

பைபிள் கதைகள் 45: கிதியோனும் 300 வீரர்களும்

bible_3148733f.jpg
 
 
 

பணிவும் பரலோகத் தந்தையின் மீது விசுவாசமும் கொண்டிருந்த ஏழை விவசாயியான கிதியோனிடம் கடவுள் பேசினார். மீதியானியர்களின் பிடியிலிருந்து மீள, படைதிரட்டும்படி கூறினார். 32 ஆயிரம் வீரர்களை கிதியோன் திரட்டினார். ‘இத்தனை வீரர்கள் உனக்குத் தேவையில்லை’ என்று எடுத்துரைத்த கடவுள், உயிருக்குப் பயந்தவர்களை வீட்டுக்கு அனுப்பும்படி கூறினார். அவ்வாறு அனுப்பிய பிறகும் 12 ஆயிரம் வீரர்கள் மிஞ்சியிருந்தார்கள். அதனால் “எச்சரிக்கையாக இருப்பவர்களை மட்டும் வைத்துக்கொள். அப்படிப்பட்ட 300 வீரர்கள் உனக்கு போதும்.” என்ற கடவுள், அந்த 300 பேரையும் எப்படித் தேர்ந்தெடுக்க வேண்டும் என்பதையும் தெரிவித்தார். கடவுள் சொல்லித்தந்தவாறு நீரோடையில் யாரெல்லாம் சுற்றுமுற்றும் கவனித்தவாறு எச்சரிக்கையுடன் தண்ணீர் அருந்தினார்களோ அவர்களில் 300 பேரைத் தேர்வு செய்த கிதியோன், கடவுளின் அடுத்த கட்டளைக்காகக் காத்திருந்தார்.

போர்த் தந்திரம்

300 பேர் கொண்ட தன் படையணியை தலா 100 பேர் அடங்கிய மூன்று குழுக்களாகப் பிரித்தார். பின்னர் கடவுள் கூறியபடி ஒவ்வொருவருக்கும் ஒரு ஊதுகொம்பும் ஒரு பெரிய மண்பானையும் கொடுக்கப்பட்டது. மண்பானைக்குள் ஒவ்வொருவரும் ஒரு தீப்பந்தத்தை மறைத்து வைக்கும்படி கிதியோன் உத்தரவிட்டார். பிறகுத் தன் வீரர்களைப் பார்த்து “நாம் இந்த இரவில் புறப்பட்டு மீதியானியர்களின் முகாமை நோக்கிச் செல்லப்போகிறோம். முகாமின் எல்லையை அடைந்ததும், நான் செய்வதை நன்றாகக் கவனித்து, அதேபோல் நீங்களும் செய்ய வேண்டும். நாம், அவர்களது முகாமைச் சூழ்ந்துகொண்டதும் நான் ஊதுகொம்பை ஊதும்போது நீங்களும் அவரவர் ஊதுகொம்பை எடுத்து ஊத வேண்டும். ஊதிக்கொண்டே ‘இது யகோவாவின் போர்! கிதியோனின் போர்!’ என்று முழங்க வேண்டும்”என்றார்.

கிதியோன் கூறியதைக் கவனமாகக் கேட்டுக்கொண்ட 300 வீரர்களும் எதிரிகள் முகாமிட்டிருந்த பாளையத்தின் ஓரம்வரை பதுங்கிச் சென்றார்கள். அப்போது இரவு பத்து மணி ஆகியிருந்தது. மீதியானிய வீரர்கள் அனைவரும் வயிறுமுட்ட மதுவருந்தி, பின் உண்ட களைப்பில் நன்கு கண் அயர்ந்திருந்தனர். அவர்களைத் தாக்குவதற்கு ஏற்ற தருணம் இதுவே என்று எண்ணிய கிதியோன், இப்போது தனது ஊதுகொம்பை எடுத்து ஊதுகிறார். தலைவர் செய்வதைக் கண்டு முகாமைச் சூழ்ந்திருந்த 300 வீரர்களும் அவ்வாறே செய்கிறார்கள்.

இருளும் குழப்பமும்

300 மண்பானைகளைக் கீழேபோட்டு உடைக்கும்படி கிதியோன் கூற வீரர்கள் அவ்வாறே செய்கிறார்கள். 300 மண்பானைகள் ஒரே நேரத்தில் உடைந்த சப்தம், தலைக்கேறிய போதையுடன் அரைத்தூக்கத்தில் இருந்த மீதியானியர்களைத் திடுக்கிடலுடன் விழித்தெழச் செய்து பீதிகொள்ள வைக்கிறது. 300 ஊதுகொம்புகளும் முழங்க, 300 வீரர்களும் “இது யகோவாவின் போர்! கிதியோனின் போர்!” என்று உரக்கக் கத்தி ஆரவாரம் செய்தனர். அந்த இரவின் அமைதி குலைந்து மீதியானியர்களை திகில் சூழ்ந்துகொள்கிறது. இருள், கண்களுக்குப் பழக்கப்பட நேரமெடுத்ததால், அதிர்ச்சியடைந்த மீதியானியர், யார் எதிரி, யார் நண்பன் என்று அடையாளம் காணமுடியாத குழப்பத்தில் தங்களுக்குள்ளேயே ஒருவரையொருவர் வெட்டிக்கொண்டு தரையில் சாய்ந்து மடிந்தார்கள்.

ஆனால் கிதியோனும் அந்த 300 பேரும் தங்களுடைய இடங்களில் ஆடாமல் அசையாமல் நின்றார்கள். மீதியானியர்களின் பாளைய முகாமில் இருந்தவர்களை அவர்களது குடிப்பழக்கம் என்னும் பலவீனத்தாலேயே கடவுள் முறியடித்தார். இதையும் மீறித் தப்பிச்சென்றவர்களையும் மீதமிருந்தவர்களை 300 வீரர்கள் பிடித்துக் கைதிகளாக்குகிறார்கள். இவ்வாறு கானான் தேசத்தை வெட்டுக்கிளிக் கூட்டம்போல் வேட்டையாடி வந்த மீதியானியர்களின் ஆக்கிரமிப்பு முற்றாகத் துடைத்தெறிப்படுகிறது.

தலைவனின் தாழ்மை

மீதியானியர்களை முறியடித்த வெற்றிக்குப் பின்பு கிதியோனுக்கு புதிய பிரச்சினை வந்தது. இந்தப் போரில் இஸ்ரவேல் மக்களில் ஒரு கோத்திரமாக இருந்த எப்பிராயீம் மக்களை கிதியோன் சேர்த்துக்கொள்ளவில்லை என்று அவர்கள் கோபம் கொண்டார்கள்.

எனவே அவருடன் அவர்கள் சண்டைபோட கோபத்துடன் வந்தார்கள். “மீதியானியர்களோடு போர் செய்ய ஏன் எங்களை அழைக்கவில்லை?” என்று கேட்டு கிதியோனுடன் வாக்குவாதம் செய்தார்கள். ஆனால் அவர் அவர்களிடம், “ உங்களைப் போல நான் பெரிதாக ஒன்றுமே செய்யவில்லை. அபியேசரின் வம்சத்தாராகிய எங்களைவிட எப்பிராயீமின் வம்சத்தாராகிய நீங்கள்தான் பெரிய காரியங்களைச் செய்திருக்கிறீர்கள்” என்று தாழ்மையாகப் பதிலளித்தார். இதனால் அவர்களின் கோபம் தணிந்தது. இஸ்ரவேல் இன மக்கள் பிரிவுகளுக்கு மத்தியில் சமாதானம் நிலைநாட்டப்பட்டது

இப்போது கிதியோனின் திறமை, பணிவு ஆகிவற்றைக் கண்ட மக்கள், அவரை அரசனாக ஆகும்படி கூறுகிறார்கள். அதற்கு கிதியோன் மறுத்துவிட்டார். மீதியானியரை உண்மையிலேயே வெற்றிகொண்டது யார் என்பதை அவர் மறந்துவிடவில்லை. “நான் உங்களை ஆட்சிசெய்ய மாட்டேன்; என் வாரிசும் உங்களை ஆள மாட்டான்; கடவுளே அரசர். அவரே உங்களை ஆளுவாராக” என்று அவர் கூறி மறுத்துவிடுகிறார். இவ்வாறு மக்களே முடிசூட்ட முன்வந்தும் அந்த விவசாயி அரசனாக விரும்பவில்லை.

http://tamil.thehindu.com/society/spirituality/பைபிள்-கதைகள்-45-கிதியோனும்-300-வீரர்களும்/article9606323.ece

Link to comment
Share on other sites

பைபிள் கதைகள் 46: ஒதுக்கப்பட்டவனே தலைவன்

 

 
 
 
 
bible_3151168f.jpg
 
 
 

இஸ்ரவேலர்களின் விளைச்சலைக் கவர்ந்து சென்றுவிட வேண்டும் என்பதில் அந்நியர்கள் குறியாக இருந்தார்கள். வயலில் இறங்கி உழைப்பதற்குப் பதிலாக, இஸ்ரவேலர்களின் கடும் உழைப்பில் விளைந்து நிற்கும் கதிர்களையும் தானியக் குதிர்களையும் கவர்ந்துசெல்வது அவர்களுக்குச் சுலபமாக இருந்தது. இப்படிக் கொள்ளையடித்துச் செல்ல, இஸ்ரவேலர்கள் போரில் வென்று 500 ஆண்டுகளைக் கடந்து பலதலைமுறைகளாக வாழ்ந்து வந்த பகுதிகளை தங்கள் பூர்வீக இடமென்று சொந்தம் கொண்டாடினார்கள்.

இவ்வாறு அவர்கள் இஸ்ரவேலர்களின் பகுதிகளைக் கைப்பற்றிக்கொள்ளத் துடித்ததன் பின்னணியில், யோசுவாவுக்குப் பிறகு வீரம் நிறைந்த தலைவர்கள் இல்லாமல் போனாதும் ஒரு காரணமாக இருந்தது. இருப்பினும் தன்னை மறக்காமல் மிஸ்பாவுக்கு வந்து (மிஸ்பா - கடவுளுடன் தனிமையில் பிரார்த்தனை மூலம் உரையாடும் இடம்) தன்னிடம் பேசுகிற மிக எளிய இஸ்ரவேல் மனிதர்களை கடவுள் உயர்த்தினார். அவர்களைக் கொண்டு இஸ்ரவேலர்களை மீண்டும் மீண்டும் அந்நியப் படையெடுப்புகளிலிருந்து கடவுள் காத்துவந்தார்.

கிதியோன் போன்ற ஏழை விவசாயியைக் கடவுள் இவ்வாறு பயன்படுத்திக்கொண்டார். கிதியோனுக்குப் பிறகு தோலா, யாவீர் போன்ற நியாயாதிபதிகளை இஸ்ரவேலர்களுக்குக் கடவுள் கொடுத்தார்.

கற்பனைத் தெய்வங்கள்

ஆனால் தீமையான காரியங்கள் என்று கடவுளால் குறிக்கப்பட்ட அனைத்தையும் இஸ்ரவேலர் மீண்டும் செய்ய ஆரம்பித்தனர். அவற்றில் முக்கியமானது அந்நிய தெய்வங்களை வழிபடத் தொடங்கியது. அந்நியப் படையெடுப்பாளர்கள் கொண்டுவந்த கற்பனை தெய்வங்களாகிய பாகாலையும் அஸ்தரோத்தையும் வணங்கத் தொடங்கினர். மேலும் அவர்கள் ஆராமின் தெய்வங்களையும், சீரியாவின் தெய்வங்களையும் சீதோனின் தெய்வங்களையும் மோவாபின் தெய்வங்களையும் அம்மோனியரின் தெய்வங்களையும், பெலிஸ்தரின் தெய்வங்களையும் வணங்க ஆரம்பித்தார்கள்.

எகிப்தின் 400 ஆண்டுகால அடிமைத் தளையிலிருந்து மீட்டு அழைத்துவந்து, பாலைவனத்தில் ‘மன்னா’ உணவிட்டு, மூதாதையர்கள் நிலமாகிய கானானை வென்று தந்த பரலோகத் தந்தையாகிய யகோவாவை அடுத்தடுத்து வந்த இஸ்ரவேல் தலைமுறையினர் மறந்துபோனார்கள். ஆனால் சில குடும்பங்கள், சில மனிதர்கள் என்று இஸ்ரவேல் மக்களில் கடவுளை மறக்காதவர்கள் இருக்கவே செய்தனர்.

அம்மோனியர்களின் ஆதிக்கம்

இப்போது இஸ்ரவேலர்களைக் கொன்று, அவர்களது விளைச்சலைக் கவர்ந்து, செல்வங்களைக் கொள்ளையிட்டுச் செல்ல அம்மோன் தேசத்தைச் சேர்ந்த அம்மோனியர்கள் அடிக்கடி வரத் தொடங்கினார்கள். இப்படி இஸ்ரவேலின் கீலேயாத் தேசமானது 18 ஆண்டுகாலம் அம்மோனியர்களால் அடிக்கடி நிகழ்த்தப்பட்ட தாக்குதல்கள், கொள்ளைகள், இன அழித்தல் என பெரும் பாதிப்பைச் சந்தித்துக்கொண்டிருந்தது.

இந்நிலையில்தான் தங்கள் உண்மைக் கடவுளாகிய யகோவாவின் நினைவு இஸ்ரவேலர்களுக்கு வருகிறது. மூப்பர்கள் வழியே தங்கள் கடந்த கால வரலாற்றைத் திரும்பப் படித்தார்கள். கண்ணின் இமைபோல் காத்துவந்த தங்களது கடவுளின் கிருபையை அறிந்து, மறந்துபோன தங்கள் கடவுளை நோக்கிக் கூப்பிடுகிறார்கள்.

“ எங்களைக் காத்துவந்த தெய்வமே; வாக்களித்த தேசத்தைத் தந்தவரே, உமக்கு விரோதமாக நாங்கள் பாவம் செய்தோம். நீரே எங்களின் தஞ்சம், அம்மோனியர்களிடனிருந்து எங்களைக் காப்பாற்றும் தந்தையே” என்று கெஞ்சுகிறார்கள். அவர்களது இறைஞ்சுதலைக் கேட்ட பரலோகத் தந்தையாகிய யகோவா அவர்களுக்காக மனமிரங்கினார். அமோனியர்களை எதிர்த்துப் போர்புரிந்து வெற்றிகொள்ள யெப்தா என்பவரைத் தேர்ந்தெடுக்கும்படி கடவுள் வழிகாட்டுகிறார். யெப்தா என்றதும் கீலேயாத்தில் தேசத்தில் வசித்துவந்த மக்களுக்கும் மூப்பர்களும் அதிர்ச்சி அடைகிறார்கள். ஏனெனில், “ நீயொரு பாலியல் தொழிலாளியின் மகன், கீலேயாத்தை விட்டு விலகிச் செல். எங்களை விட்டு தூரமாய்ப்போ” என்று இஸ்ரவேலர்களால் துரத்தியடிக்கப்பட்டவன்தான் யெப்தா.

யார் இந்த யெப்தா?

இஸ்ரவேலர்களின் கீலேயாத் கோத்திரத்தைச் சேர்ந்தவன் யெப்தா. அவனது தந்தையான கீலேயாத் என்ற செல்வந்தன் திருமணம் முடித்துப் பல ஆண்டுகள் ஆகியும் பிள்ளைபேறு இல்லாதவனாக இருந்தான். மனைவியின் மீது நம்பிக்கையற்றவனாக இருந்த அவன், வாடகைத் தாய் மூலம் தனது வாரிசைப் பெற விரும்பினான். அவனுக்காக பாலியல் தொழிலாளிப் பெண்ணொருத்தி முன்வந்தாள். அவனுக்கு யெப்தா என்ற மகனைப் பெற்றுத்தந்தாள். கிலேயாத் தனக்கு தலைமகன் கிடைத்துவிட்டதாக மகிழ்ந்தான்.

ஆனால் அவனது மகழ்ச்சி நெடுநாள் நீடிக்கவில்லை. கீலேயாத் தன் முதல் மனைவியை குழந்தை பாக்கியம் இல்லாதவள் என்று கருதியது பொய்யாப் போனது. அவனது முதல் மனைவிக்கு அடுத்தடுத்துப் பிள்ளைகள் பிறந்தனர். அவர்கள் வளர்ந்து பெரியவர்கள் ஆனதும் யெப்தாவையும் அவனது தாயையும் விட்டை விட்டுத் துரத்தியடித்தனர். அவர்கள் எவ்வளவோ கெஞ்சி மன்றாடியும் அவர்கள் இரங்கவில்லை. அவர்கள் யெப்தாவை நோக்கி, “நம் தந்தையின் சொத்திலிருந்து உனக்கு எதையும் தர மாட்டோம். ஏனென்றால் எங்கள் தந்தைக்குப் பிறந்திருந்தாலும் நீ ஒரு பாலியல் தொழிலாளின் மகன்” என்று இழிவாக பழித்துரைத்தனர். அப்போது கீலேயாத்தில் இருந்த மூப்பர்களும், தலைவர்களும் யெப்தாவுக்கு ஆதரவாக எதுவும் பேசவில்லை.

நீ இங்கிருந்து வெளியேறுவதே சிறந்தது என்றார்கள்” வேறு வழியின்றிப் பிறந்து வளர்ந்த தன் சொந்த வீட்டையும், மண்ணையும் தன்னை விரும்பாத சகோதரர்களையும் பிரிந்து சென்ற யெப்தா அருகாமையில் இருந்த தோப் என்ற தேசத்தில் குடியேறி வாழ்ந்து வந்தான். என்றாலும் அவனது தாயும் தந்தையும் அவனுக்குக் கற்பித்த பரலோகத் தந்தையாகிய யோகாவை அவன் மறக்கவில்லை. சிலை வழிபாட்டை அவன் நாடவில்லை. அதே நேரம் அவன் பெரும் பலசாலியாகவும் வீரனாகவும் மாறினான்.

அவனது வீரத்தைக் கண்டு தோப் தேசத்தில் பல முரட்டு மனிதர்கள் அவனைப் பின்பற்றத் தொடங்கினார்கள். முரட்டு மனிதர்களின் படையணியை உருவாக்கிய யெப்தா ஒரு கூலிப்படையின் தலைவனைப் போல் ஆனான். அவனது வீரமும் மூர்க்கமும் இஸ்ரவேல் முழுக்கப் பிரபலமானது.

எங்களுக்குத் தலைவனாக இரு

உறவுகளாலும் ஊர்க்காரர்களாலும் கைவிடப்பட்டதாலேயே யெப்தா இப்படி முரட்டு மனிதனாக மாறிப்போனான். யாரால் அவன் புறக்கணிக்கப்பட்டானோ அவர்களையே யெப்தாவிடம் திருப்பி அனுப்பினார் கடவுள். கீலேயாத்தின் மூப்பர்கள் திரண்டு சென்று யெப்தாவைச் சந்தித்தனர். “ யெப்தாவே உன் வீரம் குறித்து நாங்கள் நன்கு அறிவோம். நீ எங்கள் ஊரின் மைந்தன். இந்த தேசத்தை விட்டு விலகி நம் கீலேயாத்துக்கு திரும்பி வா. நம் படையின் தளபதியாக இருந்து அம்மோனியர்களை எதிர்த்துப் போரிடு” என்றனர்.

அப்போது யெப்தா கீலேயாத் தேசத்து மூப்பர்களிடம், “எனது தந்தையின் வீட்டிலிருந்து வெளியேறும்படி என்னைக் கட்டாயப்படுத்தினீர்கள். உங்களுக்கு இப்போது துன்பம் வந்ததும் என்னிடம் வந்திருக்கிறீர்கள்” என்று சொன்னான்.

கீலேயாத்தின் மூப்பர்கள் மனவருந்தி, “பழைய நாட்களை மறந்து, எங்களை மன்னித்துவிடு. எங்களோடு வந்து அம்மோனியர்களை எதிர்த்துப் போராடு. நமக்கான வெற்றியைக் கடவுள் உன்வழியாகத் தருவார் என நம்புகிறோம். கீலேயாத்தில் வாழும் மக்கள் அனைவருக்கும் நீ அதிபதியாக இருக்கச் சாம்மதிக்கிறோம்” என்றனர். அதற்குச் சம்மதித்த யெப்தா, “நம் கடவுளாகிய பரலோகத் தந்தை நாம் வெற்றி பெற உதவினால், நான் உங்கள் புதிய தலைவனாக இருப்பேன்” என்று ஒப்புக்கொண்டு போருக்குத் த யாரானான். போர்முனைக்குச் செல்லும்முன் மிஸ்பாவுக்குச் சென்று கடவுளுடன் பேச விரும்பினான்.

http://tamil.thehindu.com/society/spirituality/பைபிள்-கதைகள்-46-ஒதுக்கப்பட்டவனே-தலைவன்/article9617438.ece

Link to comment
Share on other sites

பைபிள் கதைகள் 47: கடவுளுக்குச் சேவை செய்த பெண்

 

 
 
 
 
bible_3155898f.jpg
 
 
 

யோசுவானின் தலைமையில் வென்றெடுத்த கானான் நாட்டின் நிலங்களை வளமாக்கி, விவசாயப் பெருங்குடிகளாக இஸ்ரவேல் மக்கள் வாழ்ந்து வந்தனர். கானான் நாட்டின் இன்னொரு பெயரே இஸ்ரவேல். அதன் முதல் நியாயாதிபதியாக யோசுவா இருந்தார்; அதன் பிறகு சுமார் 350 ஆண்டுகளுக்கு வெவ்வேறு நியாயாதிபதிகள் இஸ்ரவேலை ஆட்சிசெய்தனர்.

ஆனால் இஸ்ரவேலர்கள் மீது தொடர் படையெடுப்புகள் மூலம் அந்நியர்கள் பலரும் ஆதிக்கம் செலுத்திவந்தனர். அவர்களை வென்று இஸ்ரவேல் நாட்டைத் தக்கவைத்துக்கொள்ளக் காலம்தோறும் கடவுள் உதவிவந்தார். இப்படி அம்மோன் நாட்டின் மக்களாகிய அம்மோனியர்கள் இஸ்ரவேலர்கள் மீது 18 ஆண்டு காலம் ஆதிக்கம் செலுத்தி வந்தனர். இரக்கமற்ற கொலைகள், கொள்ளையில் ஈடுபட்டுவந்தனர். அவர்களது அட்டூழியங்களுக்கு முடிவுகட்ட எண்ணிய இஸ்ரவேலர்கள் தங்கள் கடவுளாகிய பரலோகத் தந்தையிடம் கெஞ்சி மன்றாடினார்கள்.

யெப்தா செய்த சத்தியம்

அம்மோனியருடன் போர் செய்ய யெப்தாவைத் தேர்ந்தெடுக்கும்படி கடவுள் வழிகாட்டினார். பாலியல் தொழிலாளிப் பெண்ணுக்கு மகனாகப் பிறந்ததால் உறவுகளாலும் ஊர்க்காரர்களாலும் ஊரைவிட்டு வெளியேற்றப்பட்டவர் யெப்தா. மாவீரனாகத் திகழ்ந்த அவரிடம் சென்று, “யெப்தாவே, கடந்த காலத்தில் நாங்கள் உனக்குச் செய்த அநியாயத்துக்காக வருந்துகிறோம். அதை மனதில் வைத்துக்கொள்ளாமல் நம் சொந்த நாட்டுக்குத் திரும்பி வா. நமக்குத் தொல்லை கொடுத்துவரும் அம்மோனியர்களை வென்று எங்களுக்கு நியாயாதிபதியாக இரு” என்று இஸ்ரவேலர்கள் கெஞ்சி அழைத்தனர். அதை ஏற்றுக்கொண்டார் யெப்தா.

“யாரால் புறக்கணிக்கப்பட்டோமோ அவர்களே வந்து நம்மைத் தலைவராக ஏற்றுக்கொள்வதாகச் சொல்கிறார்களே… இது எத்தனை பெரிய தலைகீழ் மாற்றம். கடவுளாகிய யகோவா என் மீது காட்டிய கருணையன்றி இது வேறென்ன!” என்று கடவுளைப் புகழ்ந்த யெப்தா, போரில் வெற்றி பெறக் கடவுளின் உதவி தேவை என்பதை உணந்தார். கடவுளிடம் பிரார்த்தனை செய்வதற்காக ‘மிஸ்பா’வுக்குச் சென்றார். அங்கே போய் முழந்தாளிட்டுக் கடவுளை நோக்கி, “கர்த்தாவே.. அம்மோனியரை வென்று அவர்களைத் தோற்கடிக்க எனக்கு வெற்றியைத் தாரும். நீர் எனக்கு வெற்றியைத் தந்தால் போர் முடிந்து நான் வீடு திரும்பும்போது, என் வீட்டிலிருந்து என்னை எதிர்கொண்டு வரவேற்க முதல் நபராக யார் வருகிறார்களோ...அவர்களை உமக்கு அர்ப்பணிப்பேன்” என்று சத்திய நேர்த்தி செய்து பிரார்த்தனை செய்தார்.

எதிர்கொண்டு வரவேற்ற மகள்

யெப்தா செய்த சத்திய நேர்த்தியைக் கடவுள் கேட்டார். அம்மோனியர்களுடனான போரில் யெப்தாவுக்கு மிகப் பெரிய வெற்றி கிடைக்கிறது. அவர்களது கட்டுப்பாட்டில் இருந்த 20 நகரங்களை யெப்தா மீட்டெடுத்தார். வெற்றிக் களிப்புடன் இஸ்ரவேலர்களுக்குத் தலைமையேற்பதற்காக ஊர் திரும்பினார். ஊருக்குள் நுழைந்ததும் அவரை வரவேற்க எதிர்கொண்டு வந்தவர்களில் முதலில் வந்தாள், அவருடைய ஒரே அன்பு மகள். யெப்தா அவளை மிகவும் நேசித்தார். தன்னை முதலில் எதிர்கொண்டு வந்து மகளே முதலில் வரவேற்பாள் என்று அவர் சிறிதும் நினைக்கவில்லை. மிகுந்த மனவேதனை கொண்டவராய், தனது ஆடையைக் கிழித்துக் கதறியழுதார். “ஐயோ…என் அன்பு மகளே! நீ என்னை மிகுந்த துக்கத்திற்குள்ளாக்கினாய். நான் கர்த்தருக்குக் கொடுத்த வாக்குறுதியை எப்படி மாற்றுவேன்?” என்று அழுது புலம்பினார்.

கடவுளுக்குக் கீழ்ப்படிந்த மகள்

யெப்தாவின் மகள் யகோவா தேவனை மிகுந்த பத்தியுடன் போற்றிப் பாடுகிறவள். மிகச் சிறந்த தம்புரா இசைக் கலைஞர். தனது தந்தையின் சத்திய நேர்த்தியைப் பற்றித் தெரிந்து கொண்டபோது முதலில் வருத்தப்பட்டாலும் பின்னர் அவள் வருந்தவில்லை. தந்தையையும் தோழிகளையும் பிரிய வேண்டியிருக்குமே என்று அவள் நினைத்தாலும் சீலோவிலிருக்கிற ஆசாரிப்புக் கூடாரத்தில் கடவுளுக்கு வாழ்நாள் முழுவதும் சேவை செய்ய முடியும் என்பதை நினைத்தபோது அவள் மனம் நிறைந்தது. பின்னர் தனது தந்தையைப் பார்த்து, “அப்பா நம் பரலோகத் தந்தைக்கு நீங்கள் சத்தியம் செய்திருந்தால் அதைக் கட்டாயம் நிறைவேற்ற வேண்டும். என்னை மனக் கசப்பின்றி இறைச் சேவைக்காக அனுப்பி வையுங்கள்” என்று கேட்டுக்கொண்டாள். மகளின் மன உறுதியை எண்ணி யெப்தாவின் மனக் குழப்பம் தீர்ந்தாலும் மகளைப் பிரிய முடியாமல் மிகவும் கஷ்டப்பட்டார். ஏனென்றால் அவருக்கு வேறு மகனோ, மகளோ கிடையாது.

பின்னர் கடவுளுக்குச் சத்தியம் செய்தபடியே யெப்தாவின் மகள் சீலோவுக்குப் போகிறாள். அங்கே யகோவாவின் ஆசாரிப்புக் கூடாரத்தில் தன் வாழ்நாள் முழுவதும் கடவுளுக்குச் சேவை செய்கிறாள். தந்தையைப் பிரிய முடிவு செய்த அவளது மன உறுதியை மக்கள் கண்டனர். கடவுளுக்குத் தன்னை அர்ப்பணித்துக்கொள்வது மிகச் சிறந்த வாழ்வு என அவள் கிளம்பிச் சென்றதைக் கண்டு இஸ்ரவேல் மக்கள் அவளை மிகவும் புனிதமான பெண்ணாக மதித்தார்கள். அவளை நேசிக்கத் தொடங்கினார்கள்.

அவளைப் பற்றி இஸ்ரவேலே புகழ்ந்து பேசியது. ஒவ்வொரு ஆண்டும் நான்கு நாட்கள் இஸ்ரவேல் பெண்கள் அவளைப் பார்க்க சீலோவுக்குச் சென்றார்கள், அவளுடன் மகிழ்ச்சியுடன் பொழுதைக் கழித்தார்கள். ஆண்கள் மட்டுமே கடவுளுக்கு ஊழியக்காரர்களாய் இருந்து சேவை செய்ய முடியும் என்ற நிலை, யெப்தாவின் மகளால் மாறியது. அவள் மிகச் சிறந்த கடவுளின் புத்திரியாய் அவருக்கு இறைப் பணியாற்றினாள்.

(பைபிள் கதைகள் தொடரும்)

http://tamil.thehindu.com/society/spirituality/பைபிள்-கதைகள்-47-கடவுளுக்குச்-சேவை-செய்த-பெண்/article9649958.ece

Link to comment
Share on other sites

பைபிள் கதைகள் 48: தலைமுடியில் ஒளிந்திருந்த வலிமை

 
bible_3158548f.jpg
 
 
 

இஸ்ரவேல் மக்களினத்தில் எத்தனையோ மாவீரர்கள் தோன்றினார்கள். அவர்களில் ஒருவர் சிம்சோன். இஸ்ரவேலர்களுக்கு 20 ஆண்டுகள் நியாயாதிபதியாக இருந்தார். அவரது கதை பலகீனத்தால் வீழ்ந்த வீரனுக்குச் சிறந்த எடுத்துக்காட்டு. சிம்சோன் இளைஞராக இருந்த காலத்தில் இஸ்ரவேலர்கள் மீண்டும் தீயசெயல்களில் ஈடுபடுவதைக் கடவுள் கண்டார். எனவே பெலிஸ்தியர் என்ற அந்நிய நாட்டினர் கானான் நாட்டைக் கைப்பற்றி அவர்கள் இஸ்ரவேலரை 40 ஆண்டுகள் ஆட்சிசெய்ய அனுமதித்தார். இதனால் மீண்டும் நிம்மதியற்ற வாழ்க்கையை இஸ்ரவேலர்கள் எதிர்கொண்டனர்.

ஆயுதமின்றி சிங்கத்தை அடக்கியவன்

இஸ்ரவேல் ஆகிய கானான் நாட்டில் சோரா என்னும் ஊரில் மனோவா என்ற மனிதர் வசித்துவந்தார். அவர், தாண் கோத்திரத்தைச் சார்ந்த இஸ்ரவேலர். மனோவாவின் மனைவி, குழந்தைகளின்றி பெரிதும் துயருற்றாள். அப்போது கடவுளின் தூதன் அவளுக்குத் தோன்றி, “உனக்கொரு மகன் பிறப்பான். அவனைக் கடவுள் தனக்கானவனாகத் தேர்ந்துகொள்வார்; அதுமட்டுமின்றி அவன் பெலிஸ்தியரை வீழ்த்தி இஸ்ரவேல் மக்களைத் தலைநிமிரச் செய்வான். அவனது தலைமுடியை மட்டும் வெட்டவேண்டாம்” என்று வாக்குறைத்தார். அவ்வாறு மனோவானின் மனைவி சிம்சோனைப் பெற்றெடுத்தாள். அவன் வளர்ந்து இளைஞனாக மாறியதும் மிகப் பலம்பொருந்திய வீரனாக இருந்தான்.

சிம்சோன், திம்னாத் என்னும் நகரத்துக்குச் சென்றான். அங்கே ஒரு பெலிஸ்திய இளம் பெண்ணைக் கண்டான். அவளது அழகில் மயங்கிய அவன், அவளை மணந்துகொள்ள விரும்பினார். பெற்றோரோ எதிர்ப்பு தெரிவித்தனர். அவர்களை வற்புறுத்திய சிம்சோன், திம்னாத் நகரத்திற்கு அவர்களை அழைத்துச் சென்றான். அவனது பெற்றோர் மகன் விரும்பிய பெண்ணின் வீட்டுக்கு முன்னால் போய்க்கொண்டிருந்தார்கள். சிம்சோன் சற்றுபின்னால் வந்துகொண்டிருந்தான். அந்த நகரத்திற்கு அருகேயுள்ள திராட்சைத் தோட்டத்தை நெருங்கியபோது ஒரு இளம் சிங்கம் திடீரென கர்ஜித்தபடி சிம்சோனை நோக்கிப் பாய்ந்தது.

அப்போது கடவுள், சிம்சோனுக்கு பெரும் ஆற்றலை வழங்கினார். அவன் தனது வெறுங்கைகளாலேயே சிங்கத்தைக் கொன்றான். ஒரு வெள்ளாட்டைக் கொல்வதுபோல் எளிதாக அதனைக் கொன்றான். ஆனால் அவன் அதை தன் தந்தைக்கோ, தாய்க்கோ தெரிவிக்கவில்லை. அந்த அளவுக்கு வீரனாக இருந்தவனின் திருமணவாழ்வு தோல்வியில் முடிந்தது. இருப்பினும் பெலிஸ்தியருக்கு பெரும் சவாலாகவும் வெல்லமுடியாதவனாகவும் சிம்சோன் இருந்தான். அவனை எப்படியாவது கொல்லவும் அவனது உடல்பலத்தின் ரகசியத்தை அறிந்து அவனை வீழ்த்தவும் பெலிஸ்தியர்கள் வழிதேடிக்கொண்டிருந்தார்கள்.

காதலால் வீழ்ந்த வீரன்

இந்தச் சமயத்தில் சிம்சோன் தெலீலாள் என்னும் ஒரு பேரழகான பெண்ணை காதலித்தான். அவள் சோரேக் என்னும் பள்ளத்தாக்கைச் சேர்ந்தவள். தெலீலாளின் அழகின் வல்லமை ஒரு மாவீரனையே மண்டியிடவைக்கிறதே என்று பெலிஸ்தியர்களின் தலைவர்கள் ஆச்சரியப்பட்டார்கள். தெலீலாளை வைத்து அவனது வீரத்தின் பின்னணியை அறிந்துகொள்ள முடிவு செய்தார்கள். உடன் அவர்கள் தெலீலாளின் பலகீனங்கள் பற்றி விசாரித்தார்கள். அவள் மிகுந்த பொருளாசை மிக்கவள் என்பதைத் தெரிந்துகொண்டவர்கள் அவளைச் சந்தித்தனர். “ தெலீலாளே… சிம்சோனைப் பலசாலியாக வைத்திருப்பது எதுவென்று நாங்கள் அறிய விரும்புகிறோம்.

அவனது அந்த ரகசியத்தை உனக்குத் தெரிவிக்குமாறு நீ ஏதேனும் தந்திரம் செய். அப்போது அவனைப் பிடித்து நாங்கள் கட்டுப்படுத்துவதும் எளிதாயிருக்கும். அவனும் உன்னைவிட்டு அகலாமல் இருப்பான். நீ இதைச் செய்தால் நாங்கள் ஒவ்வொரு வரும் உனக்கு 28 பவுண்டு எடையுள்ள வெள்ளிக்காசுகளை(1,100 வெள்ளிகள்) கொடுப்போம்” என்று விலைபேசினார்கள். ஒரு சிறு காரியத்துக்காக இவ்வளவு பணமா என்று தெலீலாள் பேராசை கொண்டாள். அப்போதுதான் சிம்சோன் மீது தனக்கு இருப்பது காதல் அல்ல என்பதை அவள் உணர்ந்துகொண்டாள். அவள் இஸ்ரவேல் மக்களையும் விரும்பாதவள். எனவே பணத்துக்காக பெலிஸ்தியர்களுக்கு உதவும்பொருட்டு சிம்சோனை, “உங்களுக்கு எப்படி இவ்வளவு பலம் வந்தது” எனக்கேட்டு அவனைச் சதா நச்சரித்துக் கொண்டே இருக்கிறாள். அவளது நச்சரிப்பு தாங்கமுடியாமல் ஒருநாள் உண்மையை உரைத்தான் சிம்சோன்.

சிறையில் வாடிய சிங்கம்

“இதுவரை எனது தலைமுடியானது வெட்டப்பட்டதே இல்லை. என் கடவுளாகிய யகோவா என்னை மக்களுக்காகத் தேர்ந்தெடுத்திருக்கிறார். எனது பலம் முழுவதும் எனக்கு அவர் தந்ததே. என் தலைமுடியை வெட்டினால், என் பலமெல்லாம் போய்விடும். இதை ரகசியமாக வைத்துக்கொள்” என்று கூறினான். ரகசியம் தெரிந்ததும் அவனைத் தனது மடியில் தலைசாய்க்க வைத்து அவனைச் சுகமாய் தூங்க வைத்தாள். பின்பு பெலிஸ்தியர்களுக்கு தகவல் அனுப்பினாள். அவர்கள் ஒரு ஆளை அனுப்ப அவனை உள்ளே கூப்பிட்டு சிம்சோன் அயர்ந்து தூங்கிக்கொண்டிருக்கும்போது அவனது முடியை வெட்டிவிடுகிறாள்.

சிம்சோன் தூங்கியெழுந்தபோது தன் பலம் முழுவதும் போயிருப்பதை உணர்ந்தான். அப்பொழுது பெலிஸ்தர்கள் வந்து அவனைக் கைது செய்து காசா நகரத்தின் சிறையில் அடைக்கிறார்கள். அத்தோடு மட்டும் அவர்கள் நின்றுவிடவில்லை. இரக்கமற்று அந்த மாவீரனின் இரண்டு கண்களையும் பிடுங்கி, அவனது கண்களின் ஒளியைப் பறித்துக்கொண்டு அடிமையாக ஆக்குகிறார்கள். அவன் சிறையிலிருந்து தப்பித்துவிடாதபடி அவனுக்கு விலங்கிட்டு சிறையில் அவனைத் தானியம் அரைக்குமாறு செய்தனர். ஆனால் சிம்சோனின் தலைமுடி மீண்டும் வளர ஆரம்பித்தது.

சரிந்து விழுந்த அரண்மனை ஆலயம்

ஒருநாள் பெலிஸ்தர்கள் தங்கள் கடவுளான தாகோனுக்கு ஒரு பெரிய விருந்து கொண்டாடுகிறார்கள். அது சிம்சோனை வென்றுவிட்டதைக் கொண்டாடும் விருந்து. அந்த விருந்துக்கு பெலிஸ்தியர்களின் அனைத்துத் தலைவர்கள், தளபதிகள், முக்கியஸ்தர்கள் உட்பட மூவாயிரம் பேர் வந்திருக்கிறார்கள். அந்த விருந்தில் அவர்கள் சிம்சோனை கேலி செய்து சந்தோஷப்பட அவனைச் சிறையிலிருந்து கொண்டு வருகிறார்கள். இப்போது சிம்சோனின் முடி மறுபடியும் வளர்ந்துவிட்டது மட்டுமல்ல; தன் பலகீனத்தால் இஸ்ரவேலர் மக்களுக்கு அவநம்பிக்கையாக மாறிவிட்டதை எண்ணி வருந்தினான். இதனால் பெரிய மனமாற்றம் அடைந்திருந்த அவன், பரலோகத் தந்தையாகிய கடவுளை நோக்கி மனதுக்குள் மன்றாடினான்.

அந்த விருந்து நடத்த அரண்மனையின் ஆலய மண்டபத்துக்கு இழுத்துவந்த சிறைக் காவலாளியிடம், “ இந்தப் பெரிய கட்டிடத்தை என்னால் பார்க்கமுடியாது. ஆனால் தூண்களையாவது நான் தொட்டுப் பார்க்க அனுமதிக்க வேண்டும்” என்று கேட்டார். பின்பு கடவுளிடம் தனக்குப் பலம் தரும்படி ஜெபித்துவிட்டு அந்தத் தூண்களை தனது கரங்களால் தள்ள ஆரம்பித்தபடியே “ பரலோகத் தந்தையே… இந்தப் பெலிஸ்தியரோடு சேர்ந்து நானும் செத்துப்போகிறேன்” என்று சத்தமாய்க் கத்திச் சொல்லிவிட்டு தன் முழு பலத்தையும் ஒருங்கே திரட்டி அந்தத் தூண்களைச் சாய்த்தான், அப்போது அந்த பிரம்மாண்டக் கட்டிடம் இடிந்து விழுந்தது. அங்கே விருந்து கொண்டாடிக்கொண்டிருந்த அத்தனை தீயவர்களும் கட்டிடத்தில் நசுங்கி மாண்டுபோனார்கள். தன் சாவின் வழியே இஸ்ரவேலர்களைக் காத்த சிம்சோனின் உடலை எடுத்துவந்து சோரா என்ற நகரத்துக்கு அருகில் இருந்த அவனது தந்தையின் கல்லறைக்கு அருகில் அடக்கம் செய்தனர்.

(பைபிள் கதைகள் தொடரும்)

http://tamil.thehindu.com/society/spirituality/பைபிள்-கதைகள்-48-தலைமுடியில்-ஒளிந்திருந்த-வலிமை/article9665525.ece

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 😀..... உங்களுக்காக 'கோப்பிக் கணக்கு' என்ற தலைப்பில் ஒன்று எழுத வேண்டும்....🤣 நீங்கள் இலகுவாக கடந்து விடுகிறீர்கள்........👍
    • உங்களின் சிறுகதைப் புத்தகம் வந்தவுடன் சொல்லுங்கள், நான் வாசிப்பில் கொஞ்சம் ஆர்வம் உள்ளவன். நீங்கள் அகரமுதல்வனின் எழுத்துகளை பற்றி இன்னொரு திரியில் எழுதியிருந்ததை பார்த்தேன். எனக்கும் அவரின் எழுத்துகளை பற்றி சில அபிப்பிராயங்கள் இருக்கின்றது. ஆனால், இந்த மாதம் தான் இங்கே களத்தில் இணைந்தேன், அதனால் உடனேயே எல்லா இடமும் போய் கருத்து எழுத ஒரு சின்ன தயக்கமாக இருக்கின்றது. போகப் போக தயக்கம் போய்விடும்.........😀 கலிபோர்னியாவின் பெரும் நகரங்களில் நீங்கள் கண்ட விடயம் மிகச் சாதாரண ஒரு நிகழ்வு. அமெரிக்காவின் பல பெரு நகரங்களிலும் இதே நிலையே.  மினசோட்டாவிற்கு வந்திருக்கின்றேன். அந்த நாட்களில் Kevin Garnett அங்கு கூடைப்பந்து விளையாடும் போது, அது பிடித்த அணிகளில் ஒன்றாக இருந்தது. இந்த வருடம் மீண்டும் ஒரு நல்ல அணி மினசோட்டாவில் உருவாகியுள்ளது. Vikings அணியும் பிடித்த ஒரு அணியே.
    • நன்றி... நாங்கள் அழகிய ஏரிகள் சூழ்ந்த மினசோட்டாவில் வசிக்கின்றோம். மிகவும் பிடித்தமான மகிழ்வான வாழ்வுக்குரிய இடம். தொடக்கத்தில் பனி கொஞ்சம் சிரமமாக இருந்தாலும் குழந்தைகளுடன் குழந்தையாக அதையும் ரசித்து வாழப் பழகி விட்டோம்.  இந்த இடத்தில் இன்னொன்றும் சொல்ல வேண்டும், போன வருடம் வட அமெரிக்க பேரவையின் தமிழ் பெரு விழாவுக்காக சாக்கிரமென்டோ போயிருந்தேன். இடையில் சான்பிரான்ஸ்சிஸ்கோவில் இரண்டு நாட்களை களித்தோம், கோல்டன் கேட் பாலத்துக்கு அருகில் கார் கண்ணாடிகளை உடைத்து பட்டப்பகலில் கொள்ளையர் புரியும் அட்டகாசத்தை நேரில் கண்டு பயந்தேன். இது பற்றி "தங்க வாசல்" என்ற தலைப்பில் ஒரு சிறுகதை எழுதியுள்ளேன், இன்னும் ஓரிரு மாதங்களில் வரவுள்ள எனது சிறுகதை புத்தகத்தில் அது இடம்பெறுகிறது.   
    • நாமெல்லாம் இதற்குள் வரமாட்டோம் ராசாக்கள்.........ஏதோ கடையில் கோப்பி குடிக்கும்போது ஒரு ஈரோ டிக்கட் வாங்கி சுரண்டிபோட்டு அங்கேயே வீசிப்போட்டு போறதுதான் அதிகம்......!  😂
    • ஆடுஜீவிதம் Review: எளிய மனிதனின் வாழ்வியல் போராட்டம் தரும் தாக்கம் என்ன?     கர்ப்பிணியான தனது மனைவி சைனு (அமலாபால்) மற்றும் தாயுடன் கேரளாவில் மகிழ்ச்சியுடன் எளிமமையாக வாழ்ந்து வருகிறார் நஜீப் (பிருத்விராஜ்). ஆற்றுமணல் அள்ளும் வேலை செய்து வாழ்க்கையை ஓட்டிவரும் அவர் குடும்ப கஷ்டத்துக்காக, வாழ்வதற்கு ஒரு நல்ல வீடு, மழை பெய்தால் ஒழுகாத சமையல்கட்டு, பிள்ளைகள் படிக்க நல்ல ஸ்கூல் என்ற சாதாரணமா கனவுகளை நிஜமாக்கும் முனைப்போடு வெளிநாடு செல்ல முடிவெடுக்கிறார். வீட்டை அடமானம் வைத்து ஏஜென்ட் மூலம் வளைகுடா நாட்டுக்குச் செல்கிறார். அங்கு என்ன நடந்தது? அங்கு அவருக்கு வேலை கிடைத்ததா? தகுந்த சம்பளம் கிடைத்ததா? அவருடைய வாழ்க்கை என்னவாக மாறுகிறது? அதிலிருந்து அவர் மீண்டாரா? இல்லையா? - இதுதான் ‘ஆடுஜீவிதம்' படத்தின் திரைக்கதை. மலையாள எழுத்தாளர் பென்யாமின் எழுதிய நாவலைத் தழுவி இயக்குநர் ப்ளஸ்ஸி இயக்கத்தில் வெளிவந்திருக்கும் திரைப்படம் 'ஆடுஜீவிதம்'. மலையாளம், தமிழ் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் இந்தத் திரைப்படம் வெளியாகி உள்ளது. குடும்பக் கஷ்டத்தின் காரணமாக வளைகுடா நாடு சென்று ஏமாற்றப்பட்ட மனிதனின் கதையை சமரசம் எதுவுமின்றி வெள்ளித்திரையில் கொண்டு வந்ததற்காக இயக்குநரைப் பாராட்டலாம். குறிப்பாக, கேரளாவில் இருந்து அதிகமான எண்ணிக்கையில், வளைகுடா நாடுகளுக்குச் செல்லும் உடலுழைப்புத் தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு இந்தப் படம் நிச்சயம் ஆறுதலாக இருக்கும். நாவலை படம் ஆக்குவதில் உள்ள சிரமங்கள் தென்பட்டாலும், இதுவரை நமக்கு அறிமுகம் இல்லாத நிலப்பரப்பை இந்த சர்வைவல் டிராமா கண்முன் கொண்டு வந்திருக்கிறது. “எப்படியாவது கஷ்டப்பட்டு நான் கேட்ட காசைக் கொடு, அங்க போய் மூணே மாசத்துல சம்பாதித்துவிடலாம்" - போலி ஏஜென்ட்டுகளின் இந்த ஒற்றைப் பொய்தான், உலகம் முழுவதும் நஜீப்களை மீண்டும் மீண்டும் உருவாக்கிக் கொண்டே இருக்கிறது என்பதை இப்படம் நிறுவியிருக்கிறது. போலி ஏஜென்ட் ஸ்ரீகுமார் உலகின் எந்த மூலையில் இருந்தாலும், பக்தி பரவசத்துடன் ஊர் திருவிழாவுக்கு வந்துவிடும் நபர் எனக் காட்டியிருப்பது இயக்குநர் ப்ளஸ்ஸி டச். படத்தில் அந்த கேரக்டருக்கு ஒரு காட்சிதான். வேறு காட்சிகளே கிடையாது. படத்தின் முதல் பாதியை ப்ளஸ்ஸி காட்சிப்படுத்தியிருக்கும் விதம் அழகு. பாலைவனத்தில் நடக்கும் காட்சிகளையும், கேரளத்தின் காட்சிகளையும் இணைத்து கதை சொல்லிய விதம், சுட்டெரிக்கும் வெயிலில் பெய்யும் பனிக்கட்டி மழைபோல் குளிரூட்டுகிறது. இரண்டாம் பாதியில் வெகு நேரமாக பாலைவனத்தைப் பார்த்துக் கொண்டிருப்பதுதான் அயற்சியைத் தருகிறது. "பெரியோனே ரஹ்மானே" பாடல் முழுமையாக இல்லாதிருப்பது குறையாகத் தோன்றுகிறது. உலகம் முழுவதும் வேலைக்காக புலம்பெயரும் எவரும் தங்களது வாழ்க்கையுடன் சுலபமாக ஒப்பிட்டுக் கொள்ள இந்தப் படம் உதவும். அந்தவகையில், இயக்குநரின் இந்த முயற்சி நிச்சயம் பாராட்டுக்குரியது. இயக்குநரின் இந்த மெனக்கெடல்களுக்கு பெரிய ஒத்துழைப்பு வழங்கியிருக்கிறது, இந்தப்படத்தின் தொழில்நுட்பக் குழு. ஒளிப்பதிவு, பின்னணி இசை, ஒப்பனை, ஆடைகள், ஒலிப்பதிவு என படத்தில் வரும் அத்தனை தொழில்நுட்பக் கலைஞர்களின் உழைப்பும் பாராட்டுக்குரியது. படத்தின் தொடக்கம் முதலே கே.எஸ்.சுனிலின் கேமரா பார்வையாளர்களின் கண்களை அகல விரயச் செய்கிறது. பரந்து கிடக்கும் பாலைவனம், வெயில், கானல்நீர், ஒட்டகம், ஆடுகள், மலைக்குன்று என அனைத்து இடங்களிலும் கேமிரா ஜீவித்துக்கிடக்கிறது. இருளை விழுங்கிய நடுராத்திரி, கசராவில் (ஆட்டுப்பட்டி) ஆடுகளுக்கு வைக்கப்பட்டிருக்கும் தண்ணீரை தாகம் தணிக்க குடித்துவிட்டு கேமிரா இருக்கும் திசை நோக்கி பிருத்விராஜ் பார்க்கும் காட்சி, ஒட்டகம் ஒன்றின் கண்ணுக்குள் பிருத்விராஜ் தெரியும்படி காட்சிப்படுத்தியிருக்கும் காட்சியும் அருமை. இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு இது மூன்றாவது மலையாளப் படம். படத்தின் டைட்டில் தொடங்கும்போது, ரஹ்மானின் புல்லாங்குழல் பாலைவன மணல்வெளியில் நம் மனங்களை இலகுவாக இழுத்துச் செல்கிறது. முதல் பாதியில் வரும் பாடல் அட்டகாசம். படம் முழுக்க அவ்வப்போது சின்ன சின்ன வரும் பாடல்கள் அதிகாலை நேரத்தில் தூரத்தில் கேட்கும் பங்கோசைக்கு இணையாக இருக்கிறது. ஆக்‌ஷன் காட்சிகள் எதுவும் இல்லாதபோதும், தப்பித்துச் செல்ல முயற்சிக்கும் காட்சிகளில் ஏ.ஆர்.ரஹ்மானின் பின்னணி இசைதான் வலு சேர்த்திருக்கிறது. ஸ்ரீகர் பிரசாத்தின் கட்ஸ் முதல் பாதியை கணகச்சிதமாக கத்தரித்திருக்கிறது. பிருத்விராஜ் கேரியரில் இந்தப் படம் மிகமுக்கிய திரைப்படமாக இருக்கும். படத்தில் அவரது கதாப்பாத்திரத்துக்கு நிறைய சேஞ்ச் ஓவர் வருகிறது. அப்படி வரும் எல்லா இடங்களிலும் பிருத்விராஜ் ஸ்கோர் செய்திருக்கிறார். குடிக்கவும், கழுவவும் தண்ணீர் இல்லாத கணங்களில் அவரது நடிப்பு கலங்கடித்து விடுகிறது. உயிர்வாழ வேண்டும் என்றால், கண்ணுக்கு எட்டிய தூரம் வரை விரிந்துக் கிடக்கும் பாலைவனத்தை நடந்து கடக்க வேண்டிய காட்சிகளில் பிருத்விராஜின் உடல்மொழி வியக்க வைக்கிறது. பிருத்விராஜ் உடன் வளைகுடா நாடு செல்லும் ஹக்கிம் (கே.ஆர்.கோகுல்) மற்றும் இப்ராஹிம் காத்ரியாக (ஜிம்மி ஜீன் லூயிஸ்) வருபவரும் தங்களது கதாப்பாத்திரங்களை சிறப்பாக செய்துள்ளனர். ஒட்டகமும், மயிலும் தனது அழகை நீண்ட கழுத்தில் ஒளித்து வைத்துக்கொள்ளும். அமலாபாலும் அப்படித்தான், தனது அழகு முழுவதையும் நடிப்பில் ஒளித்து வைத்திருக்கிறார். கேரளத்தின் பொலிவும், அழகும் மயக்கும். இந்தப் படத்தில் பிருத்விராஜ் அமலாபால் வரும் காட்சிகளும் அப்படித்தான், பார்வையாளர்களின் மனதில் பாசிப்போல படர்கிறது. பாலைவன சுடுமணலின் தகிப்பைக் குறைத்து ஆழமான ஆற்றுக்குள் மூழ்கி அள்ளி எடுத்துவரப்பட்ட மணலின் ஈரத்தையும், குளிர்ச்சியைக் கொண்டு வருகிறார் அமலாபால். எப்போதெல்லாம் தன்னுடைய ஞாபகம் வருகிறதோ, அப்போதெல்லாம் நிலாவைப் பார்த்துக் கொள்ளும் சொல்லும் காட்சி கவிதையாக தைக்கப்பட்டிருக்கிறது. விமான நிலையங்களின் பார்வையாளர் காத்திருப்பு வெளிகள் எப்போதும் கண்ணீரைச் சுமந்து நிற்பவை. வெளிநாடுகளுக்கு பிரிந்து செல்லும் உறவுகளை வழியனுப்ப வந்தவர்களின் கண்ணீர் அப்பகுதி முழுக்க நிரம்பியிருக்கும் காற்று முழுவதிலும் கரித்துக் கிடக்கும். அம்மாவும், அப்பாவும், கணவனும், மனைவியும், குழந்தைகளும் வெளிநாடு செல்லும் நபருக்கு தங்களது அன்பு முழுவதையும் ஒரு பெட்டிக்குள் அடைத்துக் கொடுத்துவிட்டு கனத்த மவுனத்துடன் வீடு திரும்பும் காட்சிகளைக் கடந்திருப்போம். அந்த வகையில், சென்ட் பாட்டிலும், கலர் டிவியும், கை நிறைய பணமும் இல்லாமல், வெளிநாட்டிலிருந்து உயிர் பிழைத்தால் போதும் என்று ஆயுள் உடன் திரும்பி வந்த ஒரு எளிய மனிதனின் வாழ்க்கைப் போராட்டத்தின் வலிகளின்தான் இந்த 'ஆடுஜீவிதம்'! ஆடுஜீவிதம் Review: எளிய மனிதனின் வாழ்வியல் போராட்டம் தரும் தாக்கம் என்ன? | aadujeevitham movie review - hindutamil.in
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.