30.11.16 ஆனந்த விகடனில் எனது "மாநகரத்தின் அகதிகள்" கவிதை
-
Tell a friend
-
Similar Content
-
By நவீனன்
சொல்வனம்
படம்: கே.ராஜசேகரன்
அன்பு எனும் நான்
என் அன்பு
ஒரு குருட்டுப் பிச்சைக்காரனின் கைத்தடி
மனமுவந்து பெறும் திருநங்கையின் ஆசி
குஷ்டரோகியின் நாற்பட்ட புண்ணுக்கான களிம்பு
நிறைமாதக் கர்ப்பிணியின் மசக்கை
முதிர்கன்னி எதிர்நோக்கும் ஆளரவமற்ற தனிமை
ஊமைச்சிறுமி யாசகம் பெற்ற ஐந்து ரூபாய் பணம்
மடி முட்டிக் கவ்வும் மறியின் காம்பு
இளங்கன்று மேனியை வருடும் பசுவின் நா
வானம் பார்த்த வறண்ட பூமியின் முதல் தூத்தல்
கால்கடுக்கக் காத்திருக்கும் முதியவளின் கடைசிப்பேருந்து
தடம் மறந்த குட்டியானைச் செவிமடுக்கும்
தாய் யானைப் பிளிறல் சத்தம்
கலைமான்கள் அருந்தும் காட்டுச்சுனை
இணைக்கென பாதியிரவில் பார்சலாகும் மூன்று பரோட்டா
முதுகாவலாளியின் குட்டித் தூக்கம்
இறுதிவரை சொல்லப்படாத ஒருதலைக் காதல்
கண்ணீர்த்துளி பெருக்கும் இரவின் கனிவான பாடல்
பைத்தியம் கையேந்தும் அதிகாலைத் தேநீர்
நோய்வாய்ப்பட்ட வயோதிகன் விரும்பிக் கேட்கும்
விடுதலை மரணம்
என் அன்பு…
- தர்மராஜ் பெரியசாமி
ஓவியக்காரி
சுவரெல்லாம் கிறுக்கத் தொடங்கிய
லாவண் குட்டி
முதலில் காடு வரைந்தாள்
மரக்கிளையில் மீன் வரைந்தாள்
நதி வரைந்தாள்
அதன் நீரில் விலங்குகள் வரைந்தாள்
வானம் வரைந்தாள்
அதன்மேலே படகு வரைந்தாள்
கடல் வரைந்தாள்
அதன் மேலே விமானம் வரைந்தாள்
அடுத்து என்ன வரைவதென
யோசித்துக்கொண்டே தூங்கிப்போனவள்
கனவிலும் எதையோ
வரைந்துகொண்டிருப்பாள்.
- கோ.பகவான்
காதல் காலம்
இன்றும்கூட சட்டை காலரில்
கர்சீப்பை வைத்துக்கொண்டு போகும்
ஆண்களின் முகத்தை
வலிய வந்து பார்க்கிறாள்
விமலா அக்கா;
இன்றும்கூட நம்பிக் கொண்டிருக்கிறாள்
ரயில்வே டிராக்கில் அடிபட்டு செத்த
முகமழிந்த பிணம்
வில்லியம் அண்ணா இல்லையென;
இன்னும்கூட நின்று கொண்டிருக்கிறது
அந்தப் பேருந்து நிழற்குடையும்
தட்டச்சுப் பயிலக பாதாம் மரமும்
காவியக் காதலுக்கு சாட்சியாய்;
இன்றும்கூட உயிரோடிருக்கிறார்
ஊர்ப் பெரியவர் சதாசிவம்
தான் எப்போதோ செய்துவிட்ட
பாதகங்களுக்கு
கோயில்தோறும் பாதயாத்திரை
செய்து பிராயச்சித்தம் தேடிக்கொண்டு;
இன்றும்கூட எங்கோ வளர்கிறது
வில்லியம் அண்ணாவின் வெளிர் நிறத்தில்
விமலா அக்காவின் அழகான கண்களுடன்
ஓர் அனாதைப் பிள்ளை;
இன்னும்கூட எங்கோ மூலையில் கிடக்கிறது
அந்த ரெஜிஸ்டர் ஆபீஸ் தடி நோட்டில்
விமலா.s வில்லியம்.j என்ற பெயர்கள்...
- கோஸ்ரீதரன்
http://www.vikatan.com
-
By seyon yazhvaendhan
ஆனந்த விகடன் (15.2.17) இதழில் வெளியான எனது "நகரத்தின் புதிய தந்தை" கவிதையை யாழ் களத் தோழர்களுடன் பகிர்ந்துகொள்வதில் மகிழ்ச்சி.... யாழ் களத்தோழர்கள் எனக்குத் தரும் உற்சாகத்துக்கு நன்றி!
நகரத்தின் புதிய தந்தை
எல்லாவற்றையும் மாற்றப்போவதாக வாக்களித்து
நாற்காலியைக் கைப்பற்றிய
நகரத்தின் புதிய தந்தைக்கு
அவர் பராமரிக்கவேண்டிய
பிள்ளைகளின் கணக்கு கொடுக்கப்பட்டது.
சாதுவானவர்கள், அடங்காதவர்கள்,
ஊதாரிகள், அயோக்கியர்களென
அனைவரின் புள்ளிவிவரம் அவரிடமிருந்தது.
அடங்காதவர்களை அவர் கலாச்சாரக் காவலர்களாக்கினார்.
ஊதாரிகளுக்கு வெகுமதிகள் கொடுத்தார்.
சாதுவானவர்களுக்கு வேலைகளைப் பகிர்ந்தளித்தார்.
அயோக்கியர்களைத் துணைக்கு வைத்துக்கொண்டார்
நகரம் முன்பைவிட நரகமானதைப் பற்றி
ஒருவரும் வாய்திறக்கவில்லை
-சேயோன் யாழ்வேந்தன்
(ஆனந்த விகடன் 15.2.17)
(எனது பதிவுகளில் படங்களை இணைக்க முடியவில்லை. யாழ் தளத்தின்நெறியாளர் அல்லது தோழர்கள் அதற்கான வழிமுறையைக் கூறவும்)
(அல்லது நான் இணைக்க முயன்ற படத்தை இப்பதிவில்இணைத்துவிடவும்)
-
By seyon yazhvaendhan
இந்த வார ஆனந்த விகடன் (18.1.17) இதழில் தனிப்பக்கத்தில் வெளியாகியுள்ள எனது இரண்டு கவிதைகளை யாழ் களத் தோழர்களுடன் பகிர்ந்துகொள்வதில் மகிழ்ச்சி.... யாழ் களத்தோழர்கள் எனக்குத் தரும் உற்சாகத்துக்கு நன்றி!
நள்ளிரவில் சூரியன் உதிக்கும் வீடு
இரண்டு ஷிப்ட் வேலைக்குப் பின்
நள்ளிரவில் வீடு சேர்பவன்
சூரியனை குண்டு பல்புக்குள் உதிக்கவிடுகிறான்.
தன்னை மலடாக்கிய உணவை
இல்லாளுடன் கதை பேசியபடி உண்கிறான்.
ஆடு மாடுகளின் மேவு
ஆத்தா அப்பனின் அன்றைய பிரச்சனைகளை
அலைக்கற்றைவழி விசாரித்து அறிகிறான்.
டிஜிட்டல் இந்தியாவின் வல்லசுரக் கனவோடு
போட்டியிட முடியாமல் பின்தங்கும் கனவோடு
உறங்கப் போகிறான் சூரியனை அணைத்துவிட்டு.
தலைமுறை இடைவேளை
“கோழி கூப்புட நாலுமணிக்கு
நாலு தூத்தல் போட்டுச்சு
மண்வாசமும் வெக்கையும் கிளம்ப
வெளிய வந்து பார்த்தா
கீகாத்து மழையக் கலச்சுடுச்சு”
என்று சொன்ன அப்பத்தாதான்,
இன்று பிற்பகல் நாலுமணிக்கு
விளம்பர இடைவேளையில் வெளியே வந்து
“மழையா பேஞ்சுச்சு?” என்கிறாள்
ஈரவாசல் பார்த்து.
-சேயோன் யாழ்வேந்தன்
(ஆனந்த விகடன் 18.1.17)
(எனது பதிவுகளில் படங்களை இணைக்க முடியவில்லை. யாழ் தளத்தின் நெறியாளர் அல்லது தோழர்கள் அதற்கான வழிமுறையைக் கூறவும்)
(அல்லது வழக்கம்போல் நான் இணைக்க முயன்ற படத்தை இப்பதிவில் இணைத்துவிடவும்)
-
By seyon yazhvaendhan
நவம்பர் மாத கணையாழி இதழில் வெளியாகியுள்ள எனது "ஒருவழிப் போக்குவரத்து" கவிதையை யாழ் களத் தோழர்களுடன் பகிர்ந்துகொள்வதில் மகிழ்ச்சி.... யாழ் களத்தோழர்கள் எனக்குத் தரும் உற்சாகத்துக்கு நன்றி!
ஒரு வழிப் போக்குவரத்து
-----------------------------------------------
நடுத்தெருவில் நிற்கும் பிழைப்பு அவருக்கு.
உச்சி வெய்யிலில் புகை தூசுக்கள் இடையில்
ஆயிரம் கவலைகளை மனதின் மூலையில் தள்ளி
நம்மை ஒழுங்குபடுத்திக் கொண்டிருக்கிறார்.
சிவப்பு விளக்கு கண்டல்ல,
சீருடைக் காவலர் சீறுவாரென்றே
விதிகளை மதிக்கப் பழகியிருக்கிறோம் நாம்.
அவருக்குள்ளும் கவிதை இருந்திருக்கும்,
கோடையின் வெப்பத்தில் உருகி ஓடியிருக்கும்.
அவரின் மழைக்கவிதைகள்
பாதாளச் சாக்கடையில் ஓடிக் கலந்திருக்கும்.
கோடையில் ஓர் இளநீரோ தர்பூசணிக்கீற்றோ
இடி மின்னலுக்கு இடையில் நிற்கையில் இதமாக ஒரு தேநீரோ
ஒருநாளும் நாம் அவருக்கு வாங்கிக்கொடுத்ததில்லை.
பரிவும் நேசமும்
ஒருவழிப் போக்குவரத்தாகவே இருக்கும் வாழ்வுக்குத்தான்
நாம் பழக்கப்படுத்தப்பட்டிருக்கிறோம்.
(கள நிர்வாகிகள் இணைக்கப்பட்டுள்ள படத்தை upload செய்து உதவவும்)
-
Topics
-
Posts
-
By சுகந்தமாறன் · Posted
தங்களது பாராட்டுக்களுக்கு மிக்க நன்றி புங்கையூரான். நான் எழுதுவதை நிறுத்தி 7 வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டது. இவையெல்லாம் திருமணமான முன்னரான காலத்தில் முகநூலில் எழுதிய கதைகள். யாழ்களத்தின் கருத்துக்களை பெறுவதற்காக இங்கே பதிவிட்டிருக்கிறேன். தொடர்ந்து எழுதுவேன். வரவேற்பிற்க்கு நன்றி ஈழப்பிரியன். இனி வரும் நாட்களில் எழுதி குவிப்பதாக உத்தேசம். உங்கள் கருத்து உற்சாகம் அளிக்கிறது. யாழ் களத்தில் இந்த கதையை பகிர்ந்து நீண்ட நேரமாக கருத்துக்கள் ஏதும் வராததால் "வாசகர்களுடைய ரசனைக்கும் எனது எழுத்துக்களுக்கும் வெகுதூரம்" என எண்ணியிருந்தேன். வரவேற்பிற்க்கு நன்றி தமிழ்த்தேசியன். -
By அன்புத்தம்பி · Posted
இந்த பாடல் ஒரு நேபாளி பாடல்,பாடல் வரிகள் புரியாவிடடாலும் பின்னணியில் வரும் காட்ச்சிகள் அழகாக இருக்கின்றது ,அத்தோடு பாடல் காட்ச்சியில் வரும் அந்த இருவரின் நடனமும் ................. -
By புரட்சிகர தமிழ்தேசியன் · பதியப்பட்டது
கொரோனாவை விரட்ட தீப்பந்தம் ஏந்திய கிராம மக்கள் - மத்திய பிரதேசம் கூத்துகள் போபால்: மத்தியப் பிரதேசம் மாநிலத்தில் உள்ள ஒரு கிராமத்தில் கொரோனாவை ஓடக் கூறி பொதுமக்கள் தீப்பந்தத்துடன் ஓடிய நிகழ்வு நடந்துள்ளது. கொரோனாவை ஒழிக்கும் பணிகளில் உலக நாடுகள் முழுவதும் அறிவியல் ரீதியான முயற்சிகளை முன்னெடுத்து வரும் சூழலில், இப்படிப்பட்ட நிகழ்வுகளும் ஆங்காங்கு நடந்து கொண்டு தான் இருக்கின்றன. கொரோனா என்பதை தீயசக்தியாக கருதும் அந்த கிராமமக்கள், நெருப்பைக் கொண்டு அதனை விரட்ட முடியும் என்ற நம்பிக்கையில் இவ்வாறு செய்துள்ளனர். தீப்பந்தம் இந்திய முழுவதும் கொரோனா 2-வது அலை வேகமாக பரவி வருவதால் அதனை தடுக்கும் பணிகளில் மத்திய மாநில அரசுகளே திணறி வருகின்றன. இந்தச்சூழலில், மத்தியப் பிரதேசம் மாநிலம் அஹர் மால்வா மாவட்டத்தில் உள்ள கணேஷ்புரா என்ற கிராமத்தில் தீப்பந்தத்தை கொண்டு கொரோனாவை விரட்டும் கூத்து அரங்கேறியுள்ளது. ஓடு கொரோனா .. ஓடு.. வாரத்துக்கு இரண்டு நாட்கள் வீதம் இரவு நேரங்களில் தீப்பந்தத்தை கைகளில் எடுக்கும் கணேஷ்புரா கிராமமக்கள், 'ஓடு கொரோனா ஓடு' என்ற முழக்கத்துடன் ஊரைச் சுற்றி வருகின்றனர். குடும்பத்தில் ஒருவர் இந்த நிகழ்வில் பங்கேற்க வேண்டும் என்பது அந்தக் கிராமத்தின் கட்டுப்பாடு. ஊரை ஒரு சுற்று சுற்றி வந்ததும் கைகளில் வைத்துள்ள தீப்பந்தங்களை ஊரின் எல்லையில் தூக்கி வீசி விடுகின்றனர். விழிப்புணர்வு ( ? ) இவ்வாறு செய்வதன் மூலம் கொரோனா வைரஸ் தங்கள் ஊருக்குள் நுழையாது என்பது அந்த ஊர் மக்களின் நம்பிக்கையாக (?) உள்ளது. கொரோனாவின் தீவிரமும், அது பரவும் விதமும் பற்றிய விழிப்புணர்வு இன்னும் முழுமையாக மக்கள் மத்தியில் சென்று சேரவில்லை என்பதற்கு இது போன்ற நிகழ்வுகளே உதாரணம். https://tamil.oneindia.com/news/india/in-madhyaprdaesh-village-people-carrying-fire-sticks-to-drive-out-the-corona-418604.html
Recommended Posts
Archived
This topic is now archived and is closed to further replies.