Jump to content

பிராங்பர்ட் தரும் புதிய வாய்ப்புகள்


Recommended Posts

பிராங்பர்ட் தரும் புதிய வாய்ப்புகள்

 

 
006_3096002f.jpg
 
 
 

ஜெர்மனியிலுள்ள பிராங்பர்ட்டில் ஆண்டுதோறும் நடக்கும் புத்தகக் காட்சி, உலகில் பல்வேறு மொழிகளில் புத்தகம் வெளியிடுபவர்களுக்கும், எழுத்தாளர்களுக்கும், மொழிபெயர்ப்பாளர்களுக்கும் புதிய வாசல்களைத் திறந்துவைக்கிறது. இது புத்தக விற்பனைக்கான சந்தையல்ல. எழுத்தாளர்கள் பதிப்பகங்களைச் சந்திப்பது, ஒரு மொழியிலிருந்து இன்னொரு மொழியில் வெளியிடுவதற்கான உரிமங்கள் தொடர்பான பரிவர்த்தனைகள், புத்தக வியாபாரிகள் மேற்கொள்ளும் கொள்முதல் போன்றவற்றுக்கான களம் இது. உரிமங்களுக்கான முகவர்கள், அச்சுத் துறை, பதிப்புத் துறைக்குத் தேவையான நவீன தொழில்நுட்பங்கள் அளிப்பவர்கள் எனப் பல விதமானவர்கள் இங்கு வணிகம் செய்ய வருகின்றனர்.

இப்புத்தகக் காட்சி, தமிழ்ப் புத்தகங்களை மற்ற மொழிகளில் பதிப்பிக்க உரிமம் வழங்குவதற்கும், பிற மொழிகளில் உள்ள சிறந்த நூல்களை உரிமம் பெற்றுத் தமிழில் வெளியிடுவதற்கும் பெருமளவில் வகை செய்கிறது. தமிழ் எழுத்தாளரோ அல்லது பதிப்பாளரோ தங்களது சிறந்த படைப்புகளை ஆங்கிலத்தில் உலகத் தரத்துக்கு மொழியாக்கம் செய்து, அந்தப் புத்தகங்களை பிராங்பர்ட் புத்தகக் காட்சியில் காட்சிப்படுத்தலாம். இதற்கான ஐந்து நாள் கடை வாடகை சுமார் ரூ.1,50,000. இந்திய அரசின் கட்டுப்பாட்டிலுள்ள காப்பெக்சில் (CAPEXIL) என்கிற அமைப்பு, செலவில் பெரும்பகுதியினை ஏற்றுக்கொள்கிறது. இதற்கு அவ்வமைப்பில் உறுப்பினராக வேண்டும்.

அதிக அளவில் மக்கள் பேசும் மொழிகளில் உரிமம் பெறுவது கடினம். எனவே, முதலில், ஐரோப்பா, ஆசியா, தென் அமெரிக்கா நாடுகளில் சிறிய அளவில் மக்கள் பேசும் மொழிகளுக்கு உரிமங்கள் விற்க முயற்சிக்கலாம். இச்சிறிய வெற்றிகள் நம்மைக் கொஞ்சம் கொஞ்சமாகப் பலப்படுத்தி, பெருமளவு மக்கள் பேசும் மொழிகளுக்கு விற்பதற்கு வழிவகை செய்யும்.

இந்திய மொழிப் புத்தகங்களுக்குத் தற்போது உலக அளவில் பெரும் வரவேற்பு உள்ளது. இந்தியாவின் பிற மொழியாளர்கள் இதனை உணர்ந்து எப்போதோ விழித்துக்கொண்டார்கள். அமெரிக்க டாலர்கள் 500-ல் தொடங்கி, 1,000-2,000 வரை உரிமங்களை விற்பதற்கு வாய்ப்புள்ளது. பிற மொழிகளில் வெளிவந்த சிறந்த புத்தகங்களைத் தமிழில் வெளியிடவும் உரிமம் பெறலாம். பல நாடுகள் தங்கள் நாட்டுப் புத்தகங்கள் பிற மொழிகளில் மொழியாக்கம் செய்யப்படுவதற்கு நிதியுதவி அளிக்கின்றனர். முறையாக, அதற்கான வழிமுறைகளைக் கையாண்டால் அச்சிடும் செலவுகூட இன்றித் தமிழில் வெளியிடலாம்.

புத்தகக் காட்சி நடத்தும் அமைப்பினர், ஒவ்வொரு ஆண்டும் இத்துறையில் வளர்ந்துவரும் பதிப்பாளர்களையும் எழுத்தாளர்களையும் புத்தகக் காட்சி நடைபெறும் காலத்தில் ஜெர்மனிக்கு அழைத்து (எல்லாச் செலவுகளையும் ஏற்றுக்கொண்டு), துறை சார்ந்த பயிற்சி அளிக்கிறார்கள்.

இவை எதிலும் நாட்டமில்லாதவரானால் ஒருமுறை பிராங்பர்ட் புத்தகக் காட்சிக்கு சுற்றுலாபோலச் சென்றுவரலாம். வாழ்நாள் முழுவதும் மறக்க முடியாத அனுபவமாக அது இருக்கும்.

http://tamil.thehindu.com/opinion/columns/பிராங்பர்ட்-தரும்-புதிய-வாய்ப்புகள்/article9397764.ece

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.