Jump to content

Cardiac Arrest, Heart Attack இரண்டுக்கும் என்ன வித்தியாசம்?


Recommended Posts

Cardiac Arrest, Heart Attack இரண்டுக்கும் என்ன வித்தியாசம்?

 

Cardiac arrest

முதல்வர் ஜெயலலிதா அவர்களுக்கு நேற்றைய தினம் கார்டியாக் அர்ரெஸ்ட் (Cardiac Arrest) ஏற்பட்டது அப்போலோ மருத்துவமனை தெரிவித்திருந்தது. ஊடங்கள் மற்றும் சமூக ஊடங்களில் மாரடைப்பு என சிலர் குறிப்பிட்டார்கள். நிஜத்தில் கார்டியாக் அரெஸ்ட்டுக்கும், மாரடைப்புக்கும் என்ன வித்தியாசம்? 

மாரடைப்பு : -

இதயத்துக்கு செல்லும் பிரத்யேக  கரோனரி (Caronary)  இரத்தக்குழாய்களில் அடைப்பு ஏற்பட்டு, இதயத்துக்கு இரத்தம் செல்வதில் தடை ஏற்படுவதைத் தான் மாரடைப்பு (Heart Attack) எனச் சொல்வார்கள். மாரடைப்பு ஏற்படும் போது முதலில் நெஞ்சுப் பகுதியில் ஒரு விதமான பாரம் ஏற்படுவது போல தோன்றும். பெரும்பாலும் மாரடைப்பு ஏற்படுபவர்களுக்கு சுய நினைவு இருக்கும், தனக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது என்பதை உணர முடியும்.

கழுத்து மற்றும் இடது கை பகுதிகளில் வலி ஏற்படும், வியர்த்துக் கொட்டி, மூச்சு வாங்கும். இதை வைத்தே தனக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளதா என ஒருவர் சந்தேகப்பட முடியும், 

வித்தியாசம்

மாரடைப்பு  வரும் அறிகுறி இருப்பவர்களுக்கு மருத்துவர்கள் ஆஸ்பிரின், டிஸ்பிரின் முதலான மாத்திரைகளை பரிந்துரைக்கிறார்கள், மாத்திரையை விழுங்கும் வடிவத்திலும், உதட்டுக்குள் வைக்கும் முறையிலும் இவை மருந்தகங்களில் கிடைக்கும். மருத்துவர் ஆலோசனை பெற்று, இந்த மாத்திரைகளை சாப்பிடுவதன் மூலம் தனக்கு தானே முதலுதவி செய்து கொள்ளலாம். பின்னர் உடனடியாக இதய அறுவை சிகிச்சைகள் செய்யும் அளவுக்கு வசதி உள்ள மருத்துவமனைக்கு சென்றால், அங்கே மருத்துவர்கள் முதலுதவி மற்றும் சிகிச்சைகளை அளித்து நோயாளியை காப்பாற்ற முடியும்.

மாரடைப்பு வந்த பின்னர் எவ்வளவு விரைவில் மருத்துவமனை செல்கிறோமோ அந்த அளவுக்கு உயிர் பிழைக்கும் வாய்ப்பு அதிகரிக்கும், எதனால் அடைப்பு ஏற்பட்டுள்ளது என்பதை அறிந்து அதற்கான சிகிச்சைகள் (ஆஞ்சியோ கிராம், ஆஞ்சியோ பிளாஸ்டி, இதய அறுவை சிகிச்சைகள்) மேற்கொள்ளப்படும்.

கார்டியாக் அரெஸ்ட் : -

மருத்துவர்கள் இதை இதயத் துடிப்பு முடக்கம் என சொல்கிறார்கள். எந்த வித அறிகுறி இல்லாமலும் கூட  இந்தப் பிரச்னை வரலாம். நமது இதயம் குறிப்பிட்ட கால அளவுக்கு ஏற்றவாறு,  சீரான எலெக்ட்ரிக் பல்ஸ் இருக்கும்போது, சரியாக பம்ப் செய்யும். இதயம் பம்ப் செய்யும்போதுதான் மூளை, நுரையீரல், சிறுநீரகம் என அத்தனை பகுதிக்கும்  சீராக இரத்தம் செல்லும். 

வித்தியாசம்

எலெக்ட்ரிக் பல்ஸ் திடீரென தாறுமாறாக மாறினால், சீரற்ற இதயத் துடிப்பு ஏற்படும். இவ்வாறு சீரற்ற இதயத் துடிப்பு ஏற்படுவதற்கு பல காரணிகள் உண்டு. அதில் ஒரு காரணி தான் மாரடைப்பு.

கிட்டத்தட்ட மரணம் அடைபவர்கள் அனைவருக்குமே கடைசி நேரத்தில் சடன் கார்டியாக் அரெஸ்ட் வந்து  இறப்பார்கள். தூக்கத்தில் சிலர் இறந்து விடுவதை மாரடைப்பு வந்து இறந்தார்கள் எனச் சொல்வார்கள், இது தவறு, தூக்கத்தில், உடலில் என்ன நடக்கிறது எனத் தெரியாமேலேயே ஒருவர் இறந்தால் அவருக்கு திடீர் இதயத்துடிப்பு முடக்கம் (Sudden Cardiac Arrest) ஏற்பட்டிருக்கக் கூடும்.

சடன் கார்டியாக் அரெஸ்ட் வந்தால் தப்பிக்க முடியமா?

அதிக வாய்ப்புகள் இருக்கின்றன. மாரடைப்பு என்பது நோய், ஆனால் சடன் கார்டியாக் அரெஸ்ட் என்பது  நோய் கிடையாது. தண்ணீரில் மூழ்கி இறக்கிறவர்கள், தூக்கு போட்டுத் தற்கொலை செய்து கொள்கிறவர்கள், மருந்து குடித்து தற்கொலை செய்பவர்கள், விபத்து என அத்தனை முறையிலும் கடைசியில் ஏற்படுவது  கார்டியாக் அரெஸ்ட் தான்.  

ஒருவருக்கு கார்டியாக் அரெஸ்ட் வந்த பின்னர், முதலுதவி தராமல் தாமதிக்கும் ஒவ்வொரு நிமிடத்துக்கும் உயிர் பிழைக்கும் வாய்ப்பு 10% குறைகிறது. சி.பி.ஆர் எனச் சொல்லப்படும் முதலுதவி தருவதன் மூலமாக இவர்களின் உயிரை காப்பாற்றும் வாய்ப்பு இருக்கிறது, மேலை நாடுகளில் இந்த செயல்முறை வகுப்புகளில் பயிற்றுவிக்கப்படுகிறது, இந்தியாவில் இந்தச் செயல்முறை இன்னும் சரியாக மக்களுக்கு தெரிவது இல்லை. சி.பி.ஆர் உள்ளிட்ட முதலுதவிகளை தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும். http://bit.ly/2h4yhLq

முதலுதவி கொடுத்து உயிர் பிழைக்க வைத்த பின்னர், உடனடியாக எதனால் சடன் கார்டியாக்  அரெஸ்ட் வந்திருக்கிறது என பார்க்க வேண்டும். ஒருவேளை இதய நோய்கள் காரணமாக ஏற்பட்டிருந்தால் அதற்குரிய சிகிச்சைகளைத் தொடர வேண்டும். மாரடைப்பு காரணமாக இருந்தால் அதற்கான சிகிச்சையைச் செய்ய வேண்டும். சடன் கார்டியாக் அரெஸ்ட் வந்து உயிர் பிழைத்தவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள்.

ஆஞ்சியோபிளாஸ்டி: -

பலூன் சிகிச்சை முறை என வழக்கத்தில்  குறிப்பிடுகிறார்கள். மாரடைப்பு ஏற்பட்டிருந்து, இரத்த குழாய்கள் அடைப்பு ஏற்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டால் இந்த  சிகிச்சை தரப்படுகிறது.  ஆஞ்சியோகிராம் மூலமாக எந்த ரத்தக் குழாயில் அடைப்பு ஏற்பட்டிருக்கிறது என கண்டுபிடித்த பின்னர் இந்த சிகிச்சை மேற்கொள்ளப்படும். இது அறுவை சிகிச்சை கிடையாது, மயக்க மருந்துகள் தேவையில்லை. 

anjiyo_12545.gif

எந்த இரத்த குழாயில் அடைப்பு  ஏற்பட்டிருக்கிறதா, அங்கே  ரேடியோ ஆர்ட்டரி மூலமாக உள்ளே செலுத்தப்படும் ஒயரில் இரண்டு செ.மி அளவில் சுருங்கி விரியும் தன்மை உடைய பலூன் செலுத்தப்படும். அடைப்பு இருக்கும் இடத்துக்கு கொண்டு சென்று, பலூனை விரிவடைய வைக்கும் போது, அடைப்பு நீங்கி இரத்தம் பாயும். இந்த சிகிச்சை முறையில் சிலருக்கு தேவைப்பட்டால் ஸ்டன்ட்  (படம்: கீழே) வைப்பார்கள். ஐம்பது வயதுக்கு மேற்பட்டவர்கள், மீண்டும் அடைப்பு ஏற்படலாம் என்ற வாய்ப்பு உள்ளவர்களுக்கு ஸ்டன்ட் வைக்கப்படும். இதன் மூலம் மீண்டும் அடைப்பு ஏற்படுவது தடுக்கப்படுகிறது. 

Stent

எக்மோ : -

எக்ஸ்டரா கார்போரியல் மெம்பரேன் ஆக்சிஜனேஷன் என்பதனைத் தான் Extra Corporeal  Membarane Oxygenation  (ECMO) என குறிப்பிடுகிறார்கள். 

ecmo_12188.jpg

திடீரென ரத்த அழுத்தம் குறைவது, மாரடைப்பு ஏற்படுவது போன்ற சமயங்களில் இதயத்தின் செயல்பாடு பாதிக்கப்பட்டு, மரணம் ஏற்படும் எனும் சூழ்நிலை வரும் போது, இந்தக் கருவியை பயன்படுத்தி சிகிச்சை மேற்கொள்ளப் படுகிறது. 

உடலுக்கு வெளியே இருந்து இதயம் மற்றும் நுரையீரலின் பணிகளை இது செய்யும். இந்தக் கருவி பொருத்தப்பட்டிருக்கும் போதே இதயம் மற்றும் நுரையீரலில் செயல்பாடுகளை மேம்படுத்தும் வகையிலான அடுத்தக் கட்ட சிகிச்சைகளும் மேற்கொள்ளப்படும். இது பலனளிக்காத பட்சத்தில் இதய மாற்று அறுவைச் சிகிச்சை தான்  தீர்வு. இதய மாற்று அறுவை சிகிச்சை செய்யும் வரைக்கும் எக்மோ கருவியை பயன்படுத்த முடியும். 

http://www.vikatan.com/news/health/74210-what-is-the-difference-between-cardiac-arrest-and-heart-attack.art

Link to comment
Share on other sites

  • 1 month later...

மாரடைப்பு என்பது வேறு இதயம் செயலிழப்பு என்பது வேறு

 

மாற்றியமைத்துக் கொண்ட வாழ்க்கை நடைமுறை, உணவு பழக்கவழக்கங்கள் மற்றும் மாசடைந்த புறச்சூழல் ஆகியவற்றின் காரணமாக மனிதர்களின் ஆரோக்கியம் இளமையின் இறுதிப்பகுதியிலேயே கேள்விக்குறியாகிவிடுகிறது.எம்மில் பலருக்கும் ஹார்ட் அட்டாக் எனப்படும் மாரடைப்பிற்கும், கார்டியாக் அரெஸ்ட் எனப்படும் இதயம் செயலிழப்பிற்கு உள்ள வித்தியாசம் தெரிவதில்லை. இரண்டையும் ஒன்றே என்று நினைக்கிறார்கள். ஆனால் இரண்டும் ஒன்றல்ல. இரண்டுக்கும் வேறுபாடு இருக்கிறது. 

health_image_2_A.jpg

‘ஹார்ட் அட்டாக்‘ என்பது நமது இதயம் இயங்குவதற்கு இரத்த நாளங்கள் மூலம் கிடைக்கும் இரத்தம் சீராக கிடைக்காமல் திடீரென தடைபடுவதால் ஏற்படுவதாகும். மார்பில் வலி ஏற்படுவது இதன் அறிகுறியாகும். ‘ஹார்ட் அட்டாக்‘ நிகழும்போது நோயாளிகள் பெரும்பாலும் உணர்வுடன் இருப்பார்கள். சுவாசிப்பார்கள். இன்னும் சொல்லப் போனால் அவர்களது இதயம் தொடர்ந்து துடித்தப்படி இருக்கும். அது இரத்தத்தை உடலின் மற்ற பாகங்களுக்கு அனுப்பும். ஆனால் “கார்டியாக் அரஸ்ட்” என்பது இதயம் தனது வழக்கமான துடிப்பையே அப்படியே நிறுத்திக் கொள்வதாகும். இதயம் துடிப்பது திடீரென நின்று போனால், அது இரத்தத்தை “பம்ப்” செய்யாது. இதயம் இரத்தத்தை “பம்ப்” செய்யாவிட்டால் உடல் முழுவதுக்கும் இரத்த ஓட்டம் நடக்காது. இரத்த ஓட்டம் நின்றால் மயக்கம் உண்டாகும். உணர்வற்ற நிலைக்கு சென்று விடுவார்கள்.

health_image_2.jpg

‘கார்டியாக் அரஸ்ட்’ எனப்படும் இதயம் செயலிழப்பு நிலை தோன்றினால், அடுத்த நிமிடமே சிகிச்சைகள் பெற வேண்டியது அவசியமாகும். குறிப்பாக சுவாசத்தை நீட்டிக்க சி.பி.ஆர். எனும் சிகிச்சையை அவசியம் அளிக்க வேண்டும். சுவாசம் சீரான பிறகு ‘கார்டியாக் அரஸ்ட்’ நிலை எப்படி உள்ளது என்பதை ஆய்வு செய்து, அதற்கு ஏற்ப சிகிச்சை பெறலாம். ஏனெனில் ‘கார்டியாக் அரஸ்டில்’ பல வகைகள் உள்ளது.

டொக்டர் கே தாமோதரன்

தொகுப்பு அனுஷா.

http://www.virakesari.lk/article/15513

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.