Jump to content

வேண்டுதல்


Recommended Posts

வேண்டுதல்

 

சிறுகதை: விமலாதித்த மாமல்லன், ஓவியங்கள்: ஸ்யாம்நட்சத்திர எழுத்தாளர்களின் சிறுகதை அணிவகுப்பு

 

p68a.jpg

கிழவர் படுத்த படுக்கையாகி அன்றோடு ஆறாவது நாள். பாத்ரூம் போகக்கூட எழுந்திருக்க முடியாமல் படுக்கையிலேயே இருந்துவிட்ட அன்றே, எல்லோருக்கும் சொல்லிவிடுவது எனப் பெண்ணும் மாப்பிள்ளையும் முடிவுசெய்துவிட்டார்கள்.

கிழவரைப் பார்த்துக்கொண்டது என்னவோ இளைய பெண்தான் என்றாலும், அவள் இருந்தது அவர் வீட்டில். இளையவள் சொந்தத்திலேயே மணமுடித்து இருந்ததால், அவர் வீட்டிலேயே சுவாதீனமாய் மாப்பிள்ளையும் தங்கிவிட்டார். அவர் பார்க்கும் வேலைக்கு அதைப்போல இரண்டு வீடுகளை வைத்துக்கொள்ள முடியும் என்பதால், அக்கம்பக்கத்தில்கூட பெரிய வம்பு எதுவும் எழவில்லை. இன்னும் இருந்த இரண்டு மகள்களில் பெரியவள் கல்கத்தாவிலும், நடுவுள்ளவள் பம்பாயிலும் இருந்தார்கள்.

`உடம்பு சுகமில்லாமல்தானே இருக்கிறார்... எமெர்ஜென்சி எதுவும் இல்லையே?' என, கல்கத்தாக்காரி திரும்பத் திரும்பக் கேட்டுக் கொண்டிருந்தாள். `என்னதான் அப்பா என்றாலும், குறுகிய அவகாசத்தில் புறப்பட வேண்டும் என்றால், விமானத்துக்கு சொளையாக அழுதாக வேண்டுமே' என்கிற கவலை அவளுக்கு. அவள் கணவர் இருந்த, அரசு நிர்வாகத்தின் கீழ் பராமரிக்கப்பட்டு வந்த தனியார் கம்பெனியை, முழுக்கவும் தனியாருக்குத் தாரைவார்த்துக் கொடுத்ததில் திடீரென `தங்கக் கைகுலுக்கல்' என ஒரு தொகையைக் கொடுத்து மாலையும் பூங்கொத்துமாக அனுப்பிவைத்துவிட்டார்கள். முந்தி மணந்தாலும் பிந்திப் பிறந்த மகன்களோ +1, +2-வுமாக கண்விழித்துப் படித்துக்கொண்டிருந்தார்கள்.

என்னதான் படித்தாலும், எவ்வளவுதான் மதிப்பெண்கள் எடுத்தாலும் எஃப்.சி-க்குக் காசை அவிழ்க்காமல் பொறியியல் கல்லூரி என்பது கானல் நீர். கைகுலுக்கிக் கொடுத்து அனுப்பியதை வைத்துக்கொண்டு, இன்னும் நான்கைந்து வருடங் களுக்கு நான்கு பேர் உட்கார்ந்து சாப்பிட்டாக வேண்டும். இதற்கு இடையில் ஆண்டவன் புண்ணியத்தில் யாருக்கும் உடம்புக்கு ஒன்றும் வராமல் இருக்க வேண்டும் என்பதை நினைக்க நினைக்க அவளுக்கு மலைப்பாக இருந்தது.

அதுநாள் வரை, அப்பா இருந்த மெட்ராஸ் வீட்டைப் பற்றியோ, அதன் மதிப்பைப் பற்றியோ, அப்பாவுக்குப் பிறகு அதை விற்க நேர்ந்தால் அதில் தனக்கு எவ்வளவு கிடைக்கும் என்பதைப் பற்றியோ அவள் கனவில்கூட எண்ணிப்பார்த்தது இல்லை. அப்பா படுத்தப்படுக்கையாகக் கிடக்கிறார் என்ற செய்தியைக் கேள்விப்பட்டதில் இருந்து, இப்படி ஓர் எண்ணம் தலைக்குள் தட்டாமாலை சுற்றத்தொடங்கிவிட்டது. அந்த நினைப்பை அகற்ற அவ்வப்போது `சீ... தூ' என அவளையும் மீறி வாய்விட்டுச் சொல்லிக்கொண்டி ருந்தாள். `இவளுக்கு என்ன ஆயிற்று?' என கணவர் பார்த்துக் கொண்டிருந்தார்.

அவர் தயிர்சாதம் சாப்பிடத் தொடங்கியதும் தன் தட்டை எடுத்து வைத்துக்கொண்டவளுக்கு, இரண்டு வாய் உள்ளே போவதற்குள் குமட்டிக்கொண்டு வந்தது. புடவைத் தலைப்பால் வாயைப் பொத்திக் கொண்டு வாஷ்பேசினுக்குப் போய் வாந்தி எடுத்த பின்னரே சற்று ஆசுவாசம் ஆகிற்று. கணவர், அவள் முதுகையே பார்த்தவண்ணம் இருந்தார். திரும்பியவள், `ஒன்றும் இல்லை... அஜீரணம். கொஞ்சம் ஓய்வெடுத்தால் சரியாகிவிடும்' எனச் சொல்லி விட்டு, போட்டது போட்டபடி படுக்கையறைக்குப் போய்ப் படுத்துவிட்டாள். அப்பாவின் உடல்நிலை மோசம் எனத் தெரியவந்தால், எந்தப் பெண்ணால்தான் சகஜமாக எடுத்துக்கொள்ள முடியும். இருந்தாலும் இதில் அவர் செய்ய என்ன இருக்கிறது, ஆறுதல் சொல்வதைத் தவிர. அவளுக்குப் பிறத்தியார் ஆறுதல் சொல்வதா? அவள் இல்லை என்றால், தம் கதியே அதோகதி அல்லவா என்றும் அவருக்குத் தோன்றியது.

`அறுபதைத் தொடப்போகிற வயதில் வேலையில்லா பட்டதாரி ஆகிவிடுவாய்' என்று எந்த ஜோசியரும் சொல்லியிருக்கவில்லை. அவர் வீட்டிலேயே உட்காரத் தொடங்கிய பின்னர் ஒருநாள் தயங்கித் தயங்கி, `வெளியில் ஏதாவது வேலைக்குப் போகலாமே!' என்ற பேச்சை எடுத்தாள். `கெளரவமாக வகித்த பதவிக்குத் தகுந்தாற்போல் வேலை தேடி, வெளியில் அலைந்தால் வீண்செலவுதான் மிஞ்சும். வாழ்நாள் முழுவதும் லஞ்சம் வாங்காமல் கெளரவமாக வாழ்ந்துவிட்டதற்கு, வட்டியும் முதலுமாக `கன்சல்டன்ட்' என்ற பந்தாவான பெயரில், முன்பின் தெரியாதவர்களுக்கு எல்லாம் லஞ்சத்தை வாங்கிக்கொடுக்கும் மாமா வேலை பார்க்க வைத்துவிடுவார்கள்’ என, பிள்ளைகள் எதிரிலேயே வாய்விட்டுச் சொல்லிவிட்டார். அன்று முதல் ஒருவருக்கொருவர் பேசிக்கொள்வது கூடக் குறைந்துவிட்டது.

அப்பா பற்றிய செய்தியை தங்கைதான் கைபேசியில் தெரிவித்தாள்.

``என்னடீது... இருந்தாப்ல இருந்து குண்டத் தூக்கிப் போடறே?''

``ஆமாங்க்கா... நேத்து ராத்திரிகூட நன்னாதான் இருந்தார். எப்பையும்போல உச்சுக்கொட்டி உச்சுக்கொட்டி சூப்பர் சிங்கர்லாம்கூட படுத்த வாகுலையே நன்னா பாத்துண்டிருந்தார். படுக்கிறதுக்கு மின்ன பாத்ரூமுக்குப் போனதுதான் கடைசி. காத்தால கட்டில்லயே போயிட்டார். அப்பா அப்பாங்கிறேன், கண்ணுலேர்ந்து தாரைத் தாரையா ஜலம்தான் வழியறது. வாயைத் தொறந்து ஒரு வார்த்தை பேச மாட்டேங்கிறார்'’ என்று சொல்லிக்கொண்டே போனவள், உடைந்து அழத் தொடங்கிவிட்டாள்.

``என்னடீ சொல்றே. டாக்டர் வந்து பார்த்தாரா?''

``டாக்டர்லாம் டெய்லி வந்து பார்த்துட்டு போயிண்டுதான் இருக்கார். ஒரு இம்ப்ரூவ்மென்ட்டும் இல்லை.''

``உங்காத்துக்காரர் என்ன சொல்றார்?''

``அவர்தான்க்கா, `டிக்கெட் கிடைக்கிறது கஷ்டம். கல்கத்தாக்காவுக்கு மொதல்ல சொல்லிடு'ன்னார்.''

``அவ என்னடி பண்றா. அவளுக்கு நியூஸ் தெரியுமோ?''

``அவளாவே சித்த நேரம் மின்ன யதேச்சையா போன் பண்ணி, `அப்பா என்ன பண்றார்? அவராண்ட போனைக் குடு, பேசணும் போல இருக்கு'னு கேட்டாக்கா.''

``என்னடீ சொல்றே?''

``ஆமாங்க்கா. விஷயத்தைச் சொன்னதும், `என் நாக்குல சனிடீ'னு துடிச்சுப் போயிட்டா. மத்தியானம் ஃப்ளைட்டைப் பிடிக்கிறதா சொல்லியிருக்கா.''

இன்னும் கொஞ்ச நேரம் பேசிக்கொண்டிருந் திருந்தால், மெட்ராஸ் தங்கை அவளாகவே விமான டிக்கெட் புக் பண்ணிக்கூடக் கொடுத்திருப்பாள் என்பது என்னவோ வாஸ்தவம்தான். ஏற்கத்தான் மனம் வரவில்லை. இதெல்லாம் அவளுக்கு ஒரு பணமே இல்லை. என்றாலும், ஏற்றுக்கொள்வது நன்றாகவா இருக்கும் எனத் தோன்றியது.

சட்டென ஏதோ தோன்றிற்று. விலுக்கென படுக்கையில் இருந்து எழுந்து ஹாலுக்கு வந்தாள். அவர் செருப்பைக் காணவில்லை. உள் தாழ்ப்பாள் போடப் படாமல் மூடப்பட்டிருந்த கதவு வெறிச்சென இருந்தது. அவர்தான் கதவுப் பூட்டைப் பூட்டிக்கொண்டு போயிருக்கிறார். இன்னொரு சாவி டி.வி பக்கத்தில் இருந்தது. கண் அனிச்சையாக அந்தப் பக்கம் பார்த்து, சாவி இருப்பதை உறுதிசெய்து கொண்டது. ட்ரெய்னுக்கு டிக்கெட் புக் பண்ணத்தான் போயிருப்பார். அவர் வீட்டில் இருக்க ஆரம்பித்தது முதலாகவே, பசங்க படிப்பு கெடும் என்ற காரணத்தை வைத்து, இன்டர் நெட்டைத் துண்டித்தாயிற்று. இந்த இழவெடுத்த சூப்பர் சிங்கர் மட்டும் இல்லை என்றால், டி.வி-யையும் துணி போட்டு மூடிவைத்துவிடலாம். சின்ன வயதில் பாட்டு கற்றுக்கொண்ட பாவத்துக்குக் கேட்காமல் இருக்க முடியவில்லை.

அப்பாதான் `அவள் பாட்டு கற்றுக்கொள்ள வேண்டும்' என ஒற்றைக்காலில் நின்றார். அவள் பாட்டுக் கச்சேரி அரங்கேற்றம், தெருக்கோடிப் பிள்ளையார் கோயில் மண்டபத்தில் விமர்சையாக நடந்தது. அதைப் பார்க்க அம்மாவுக்குத்தான் கொடுத்துவைக்கவில்லை. அதற்குள் போய்ச் சேர்ந்துவிட்டாள். மூன்று பெண் குழந்தைகளையும், அம்மாவுக்கு அம்மாவாக இருந்து அப்பாதான் வளர்த்தார். இதே மாதம் விஜயதசமி அன்றுதான் அம்மா போய்ச் சேர்ந்தாள். இன்னும் இரண்டு நாட்களில் விஜயதசமி என்பது நினைவுக்கு வர, வயிற்றில் பந்து சுருண்டது. அவருடைய அம்மாப் பாட்டியின் சாயலில் அவள் இருப்பதால்தான் பாட்டியைப் போலவே, அவளுக்கும் பாட்டு நன்றாக வருகிறது என வாய்க்கு வாய் சொல்லி மாய்ந்துபோவார் அப்பா. பெண் பார்க்க வந்தபோது பாடியதுதான் கடைசி. கல்யாணம் முடிந்து கல்கத்தாவுக்கு வந்து சேர்ந்த பின்னர் `குழந்தை... குழந்தை!' என 10 வருடங்கள் கண்ட கண்ட மருந்து மாத்திரைகளைத் தின்று, பிள்ளைப்பேறுக்கு முன்பே உடல் பெருத்து, குரல் முரடாகிப்போனது.

அவர் டிக்கெட் புக் பண்ணியாயிற்று என போன் பண்ணுவதற்குள், அப்பா எழுந்து உட்கார்ந்துவிட்டார் என்ற செய்தி வந்துவிடட்டும் என்று, ஒரு ரூபாய் நாணயத்தை மஞ்சள் துணியில் முடிந்து சுவாமி முன்பாக வைத்தாள். பக்கத்தில் இருந்த பித்தளைப் பெட்டியில் கல்யாணம் ஆனது முதல் முடிந்துவைத்தவை வேண்டிய மட்டுக்கும் இருந்தன. சில பிரார்த்தனைகள் நிறைவேறியிருந்தன; பல நிறைவேறியது இல்லை என்ற எண்ணம் மின்னல் கோடாக நெளிந்து மறைந்தது. `தெய்வக் குத்தம்' என, கை அனிச்சையாக மோவாயைத் தொட்டுக்கொண்டது.

ப்பாவைக் கண்கொண்டு பார்க்கச் சகிக்கவில்லை. பார்த்ததும் முதலில் தோன்றிய நினைப்பே, எப்போது வேண்டுமானாலும் போய்விடுவார் என்பதுதான். சகோதரிகளிடம் வாய்விட்டுச் சொல்லியேவிட்டாள்.

p68b.jpg

``என்னடீது, இப்படி இருக்கார்? நாளைக்குத் தாண்டுவாரான்னே தெரியலையேடீ.''

``ஒரு வாரமாவே இப்படிதான்க்கா இருக்கார். எவ்ளோ மாத்திரை மருந்து குடுத்தும் ஜுரம் இறங்கவே மாட்டேங்கறது.''

நெற்றியில் இருந்த ஈரத் துணியைத் திருப்பிப் போட்டாள் இளையவள்.

``இப்படித்தான்டி ஒரு விஜயதசமியன்னைக்கு அம்மா போய்ச் சேர்ந்தா...'' என்றாள்.

``வாய அலம்புடீ'' என்றபடி பம்பாய்க்காரி விசுக்கென இடம்விட்டு அகன்றாள்.

மாப்பிள்ளை, டாக்டர் மாமாவைக் கூட்டிக்கொண்டுவந்தார். அவர், அப்பாவின் பால்யகால சிநேகிதர். அப்பாவும் அவரும் ஒரே தெருவில் ஒன்றாக விளையாடியவர்கள் என்று, அப்பா அடிக்கடி சொல்லிக்கொண்டிருப்பார்.

``என்னைக் கூப்பிடணும்னு உங்களுக்கெல்லாம் இப்பதான் தோணித்தா?'' என்று கேட்டபடியே உள்ளே நுழைந்தார்.

அப்பாவின் அருகில் சென்று நெற்றியில் கை வைத்துப் பார்த்தவர், ``டேபிள் ஃபேன், பெடஸ்டல் ஃபேன்னு பக்கத்தாத்து அக்கத்தாத்துல இருக்கிறதை எல்லாம் கொண்டாந்து சுத்திவைங்கோ. அனல் இங்க அடிக்கறது'' என்று உருட்ட ஆரம்பித்துவிட்டார்.

``மாமா... பொழச்சுப்பாரா?'' என்றாள் பெரியவள் மெல்லிய விம்மலுடன்.

``என்னை எதுக்குக் கூப்ட்ருக்கேள். அவ்ளோ சுலபத்துல இவனைப் போகவிட்ருவேனா?''

``மாமா, ஏதோ எங்க ஆறுதலுக்காகச் சொல்றேள். எனக்கென்னவோ நம்பிக்கையே இல்லை.''

``நீ எப்ப வந்தே?''

``நீங்க வர்றதுக்கு அரை மணி மின்ன.''

``இப்பதான வந்தே. ஒரு வாரமா இவனோடயே இருந்தா மாதிரி பேசறே.''

``அதுக்கு இல்லே…'' - புடவைத் தலைப்பால் வாயைப் பொத்திக்கொண்டாள்.

டாக்டர் மாமா போன் போட்டார். யார் யாரோ வந்தார்கள். ஆம்புலன்ஸ் வந்தது. அப்பா ஆபத்தான கட்டத்துக்குப் போய்கொண்டிருக் கிறார். ஹாஸ்பிட்டலுக்கு அழைத்துக்கொண்டு போகப்போகிறார் என பெரியவள் நினைத்தாள். கிசுகிசுத்தக் குரலில் சகோதரிகளிடம் அரற்றவே ஆரம்பித்துவிட்டாள், ``அவ்ளதான்போல. நேக்கென்னவோ பயமா இருக்குடீ'' என்று.

ஹாலில் வேட்டியை விரித்து அப்பாவைக் கட்டிலில் இருந்து அப்படியே தூக்கிக் கீழே படுக்கவைத்தார். ஃபேன் காற்றில் அசைந்த நான்கு முழம் வேட்டியைத் தவிர ஒற்றை அசைவு இல்லாது பொம்மைபோல நடுக்கூடத்தில் படுக்கவைக்கப்பட்டிருந்தார் அப்பா. டாக்டர் மாமா என்ன செய்கிறார் என யாருக்கும் ஒன்றும் புரியவில்லை.

ஆம்புலன்ஸில் இருந்து ஆளுயரத்துக்கு நீள நீளமாக இரண்டு ஐஸ் பார்களை நான்கைந்து பேர் கொண்டுவந்து, அப்பாவுக்குப் பக்கவாட்டில் வைத்தார்கள். ஸ்கூல்விட்டு வந்த குழந்தைகள் இரண்டும் யூனிஃபார்மைக்கூடக் கழற்றாமல் விதிர்த்துப் பார்த்துக்கொண்டிருந்தன.

அப்பா பக்கத்தில் சேர் போட்டு உட்கார்ந்துவிட்டார் டாக்டர் மாமா. ஒருத்தர் ஒரு வார்த்தை பேசவில்லை.

கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் உட்கார்ந்திருந்தவர் நெற்றியைத் தொட்டுப்பார்த்தார். அப்பாவின் மணிக்கட்டைப் பிடித்துப் பார்த்துவிட்டு, ``அரை மணி கழிச்சு போன் பண்ணுங்கோ'' என்று மாப்பிள்ளையிடம் சொல்லிவிட்டு, ``பயப்பட ஒண்ணும் இல்லை, எழுந்துடுவான். கொஞ்சமா கஞ்சி ரெடி பண்ணி வெச்சுக்குங்கோ'' என்று சொல்லிவிட்டுக் கிளம்பிப் போயேவிட்டார்.

``என்னடீது... இந்த மனுஷன் ஏதோ ஜோசியக்காரராட்டமா இப்படிச் சொல்லிட்டுப் போயிட்டார். அவர் நிலைமை எழுந்திருக்கிறா மாதிரியா இருக்கு?'' என்று புலம்பத் தொடங்கிவிட்டாள் பெரியவள்.
இரண்டு சகோதரிகளும் எவ்வளவு சொல்லிப் பார்த்தும், அவள் வாய் ஓய்வதாக இல்லை. ஏதோ பிரமை பிடித்தவள்போல, ``அவர் எழுந்திருக்க மாட்டார். எனக்கு நம்பிக்கையே இல்லை'' என்று வறண்ட கண்களும் கம்மிய தொண்டையுமாகச் சொன்னதையே, திரும்பத் திரும்பச் சொல்லிக்கொண்டிருந்தாள்.

விளக்கு வைக்கும் நேரம் ஆகிவிட்டது. அப்பாவிடம் எந்த அசைவும் இல்லை. கஞ்சி ஆடைகட்டிவிட்டிருந்தது. பெரியவளின் அரற்றல் வேறு, எல்லோரையும் மிக மோசமான இரவை எதிர்நோக்க வைத்துக்கொண்டிருந்தது.

அப்பாவின் கட்டைவிரல் ஆடியதை முதலில் பெரியவள்தான் பார்த்தாள். பார்த்தவள், மிரட்சியுடன் சுற்றுமுற்றும் பார்த்தாள். அவள் முகத்தில் இருந்த பீதியில் மிரண்டவர்களாக, மற்றவர்கள் அப்பாவைப் பார்த்தார்கள். அவர் மெள்ள கை - கால்களை அசைக்கத் தொடங்கியிருந்தார். குதூகலத்தில் வீடே திமிலோகப்பட்டது.

பெரியவள், அப்பாவையே வெறித்துப் பார்த்தபடியே இருந்தாள். அவளை யாரும் கவனிக்கக்கூட இல்லை.

டாக்டர் மாமா கூறியதுபோல கொஞ்ச நேரத்தில் அப்பா எழுந்து உட்கார்ந்துவிட்டார். இளையவள் ஸ்பூனில் ஊட்டிய கஞ்சியை சப்புக்கொட்டி சாப்பிட்டபடி அவளைப் பார்த்து, நெஞ்சுக்கூட்டில் மூச்சிளைக்க, ``என்னடீ, எப்படி இருக்கே, எப்போ வந்தே, மாப்ள செளக்யமா இருக்காரா, பசங்க எல்லாம் எப்டி இருக்கா?'' என்றார்.

அவள் வெடித்து அழுதாள். ஏன் அழுகிறாள் என அவர் உள்பட யாருக்கும் புரியவில்லை. எல்லோரும் அவளை விநோதமாகப் பார்த்துக் கொண்டிருந்தார்கள்!

http://www.vikatan.com

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Similar Content

  • Topics

  • Posts

    • எதிர்த்தும் பெற தெரியாது. சேர்ந்தும் பெற தெரியாது.  இரண்டையும் விட சுலபமான வழி என்ன என்பதை நீங்கள் கூறலாமே!    அல்லது நீங்கள்  கூறலாமே!   
    • "வாலிபத்தில் தவற விட்டவைகளை  ... " ஏன் அனுபவித்ததாக இருக்கக் கூடாது?      
    • டிசம்பர் 2014 இல், ஓக்லாண்ட் இன்ஸ்டிடியூட் [Oakland Institute] ஒரு கள ஆய்வு இலங்கையின் வடக்கு கிழக்கில் நடத்தியது. போரின் பின் அதன் நிழலும், போருக்குப் பிந்தைய இலங்கையில் நீதிக்கான போராட்டம் பற்றியது அது [The Long Shadow of War: the Struggle for Justice in Postwar Sri Lanka,] பருந்து போல நிறைந்த இராணுவ சூழலில் மக்கள் எதிர்கொள்ளும் இன்னல்கள் மற்றும் துயரங்கள் பற்றியது அது. அத்துடன் பல வழிகளில்  அரசாங்க நிறுவனங்கள், அரசின் ஆசீர்வாதத்துடனும் பாதுகாப்புடனும்  செயல்படுத்தப்பட்ட தீவிரமான நில அபகரிப்பு மீது முக்கிய கவனம் செலுத்தியது.  வடக்கு மற்றும் கிழக்கில் பல்வேறு உத்திகள் மூலம் அரசாங்கம் கையாளும் தந்திரங்களையும் அடக்குமுறைகளையும்  2015 ஆண்டு தங்கள் அறிக்கை மூலம் அம்பலப்படுத்தியது அதில் நில அபகரிப்பு மற்றும் இராணுவமயமாக்கல் ஆகியவற்றுக்கு இடையேயான தொடர்பு மற்றும் அதன் தொடர்ச்சியான பயன்பாட்டை வெளிப்படுத்தியது.  நீர்ப்பாசனத் திட்டங்கள் மற்றும் வன்முறை போன்ற நில அபகரிப்புக்கான பழைய உத்திகளுடன் புதிதாக  புத்த கோவில்கள் அமைத்தல், தொல்பொருள் உருவாக்கம் உள்ளிட்ட புதிய முறைகள், பாதுகாப்புகள், உயர் பாதுகாப்பு வலயங்கள் மற்றும் சிங்களமயமாக்க சிறப்பு பொருளாதார வலயங்கள் என பல வழிகளில்  வடக்கு மற்றும் கிழக்கு - தமிழர்களின் பாரம்பரிய தாயகம் - கட்டாயத்தால் பறிப்பட்டுக்கொண்டு இருப்பதை எடுத்துக்காட்டியது. கொழும்பில் எந்த தமிழரும் நிலத்தை அபகரித்து குடியேறவில்லை. அது சிங்களவரின் பாரம்பரிய நிலமும் அல்ல. இலங்கையின் மன்னர் ஆட்சியை எடுத்துக்கொண்டால்,       Anuradhapura period (377 BCE–1017) Polonnaruwa period (1056–1232) Transitional period (1232–1505) இங்கு Jaffna Kingdom , Kingdom of Gampola , Kingdom of Kotte , Kingdom of Sitawaka , & Vanni Nadu என் நாம் அறிகிறோம்  The Kingdom of Kandy was a monarchy on the island of Sri Lanka, located in the central and eastern portion of the island. It was founded in the late 15th century and endured until the early 19th century. Initially a client kingdom of the Kingdom of Kotte, Kandy gradually established itself as an independent force during the tumultuous 16th and 17th centuries, allying at various times with the Jaffna Kingdom, the Madurai Nayak dynasty of South India, Sitawaka Kingdom, and the Dutch colonizers to ensure its survival. / கண்டி இராச்சியம் சேனாசம்பந்தவிக்கிரமபாகு என்பவனால் உருவாக்கப்பட்டது (1467- 1815)  கொழும்பு வை எடுத்துக்கொண்டால்  பதினாறாம் நூற்றாண்டுக்கு முந்திய காலப்பகுதியில் கோட்டை அரசின் ஒரு பகுதியாகவும், இந்தியத் தமிழர் மற்றும் இசுலாமிய வர்த்தகர்களின் ஒரு தளமாகவும் விளங்கிய இவ்விடம், பொ.ஊ. பதினாறாம் நூற்றாண்டுக்குப் பின்னர், போர்த்துக்கேயரின் வரவுக்குப் பின்னரே முக்கியத்துவம் பெறத் தொடங்கியது. அதாவது இங்கு சிங்களவர் பெரிதாக இருக்கவில்லை . இது உங்களுக்கு ஆச்சரியமாகக் கூட இருக்கலாம் , ஆனால் அதுவே உண்மை . இந்தியத் தமிழர் மற்றும் இசுலாமிய வர்த்தகர்களின் பேச்சு மொழி அதிகமாக தமிழே! 2001 சனத்தொகை கணக்கெடுப்பின்படி கொழும்பு நகர மக்கள் தொகையியல் இன அடிப்படையில் பின்வருமாறு காணப்படுகிறது. இல    இனம்    சனத்தொகை    மொத்த % 1    சிங்களவர்    265,657    41.36 2    இலங்கைத் தமிழர்    185,672    28.91 3    இலங்கைச் சோனகர்    153,299    23.87 4    இலங்கையின் இந்தியத் தமிழர்    13,968    2.17 5    இலங்கை மலேயர்    11,149    1.73 6    பறங்கியர்    5,273    0.82 7    கொழும்புச் செட்டி    740    0.11 8    பரதர்    471    0.07 9    மற்றவர்கள்    5,934    0.96 10    மொத்தம்    642,163    100 இதில் நீங்கள் கவனிக்க வேண்டியது 2001 இல் கூட சிங்களவரை விட [41.36] மற்றவர்களின் கூட்டுத்தொகையே கூட! Traveller Ibn Battuta who visited the island in the 14th century, referred to it as Kalanpu. Arabs, whose prime interests were trade, began to settle in Colombo around the eighth century AD mostly because the port helped their business by the way of controlling much of the trade between the Sinhalese kingdoms and the outside world. It was popularly believed that their descendants comprised the local Sri Lankan Moor community, but their genetics are predominantly South Indian [தென் இந்தியர் - ஆகவே தமிழே அங்கு கூடுதலாக பேசப்பட்டுள்ளது]  இதை ஒருக்கா முழுமையாக பாருங்கள். அதைத்தான், இலங்கை அரசு இன்று பின்பற்றுகிறது போல புரிகிறது. Israel’s Occupation: 50 Years of Dispossession  [amnesty international அறிக்கை]   Since the occupation first began in June 1967, Israel’s ruthless policies of land confiscation, illegal settlement and dispossession, coupled with rampant discrimination, have inflicted immense suffering on Palestinians, depriving them of their basic rights.    THE WORST THING IS THE SENSE OF BEING A STRANGER IN YOUR OWN LAND AND FEELING THAT NOT A SINGLE PART OF IT IS YOURS. Raja Shehadeh, Palestinian lawyer and writer     நன்றி 
    • துணிவான தமிழ் அரசியல்வாதிகளான கருணா, பிள்ளையான், டக்கிளஸ், வியாழேந்திரன் போன்று இனிவரும் இளைய தலைமுறையைச் சேர்ந்த துணிவான இளைஞர்கள் பின்வருவனவற்றை செய்வதன் மூலம் அரசுடன் இணைந்துகொள்ளலாம், 1. உரிமை பற்றிப் பேசுவதை முற்றாக நிறுத்துதல். 2. தமிழர் தாயகத்தில் சிங்களக் குடியேற்றங்கள் குறித்தோ, மேய்ச்சல் நில அபகரிப்புக் குறித்தோ பேசுவதை நிறுத்துதல். 3. தமிழர் தாயகத்தில் நடைபெற்றுவரும் பெளத்த மயமாக்கல் குறித்த எதிருப்புப் போராட்டங்களை நிறுத்துதல். 4. தமிழர் தாயகத்தின் இருப்புக் குறித்துப் பேசுவதை நிறுத்துதல். 5. போர்க்குற்ற விசாரணை, அரசியல்த் தீர்வு குறித்துப் பேசுவதை நிறுத்துதல். ஆகிய விடயங்களைச் செய்துவிட்டு அரசுடன் இணைந்தால், யாழ்ப்பாணத்தைக் காத்தான்குடியாக மாற்றலாம், மட்டக்களப்பில் ஹிஸ்புல்லாவின் பல்கலைக் கழகத்திற்கு நிகரான பல்கலைக்கழகம் ஒன்றைக் கட்டலாம். தமது தம்பி, அண்ணா, சகோதரிகளுக்கு பணம் பார்க்கும் வியாபாரங்களை எடுத்துக் கொடுக்கலாம். லாண்ட்ரோவரோ அல்லது லாண்ட்குறூசரோ எடுத்து ஓடலாம். இப்படிப் பல விடயங்களைச் செய்யலாம். 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.