சிந்திக்க வைக்கும் சில பதிவுகள் .. இங்கே என்ன சொல்கிறது
-
Tell a friend
-
Topics
-
23
By கிருபன்
தொடங்கப்பட்டது -
0
By புரட்சிகர தமிழ்தேசியன்
தொடங்கப்பட்டது
-
-
Posts
-
By அக்னியஷ்த்ரா · Posted
ஓய் ஸ்ரீலங்கன் ஹிந்தூஸ் வெட்கமேயில்லாமல் சிங்கள பௌத்த கதறகம தெய்யோவிடம் ஓடுகிறீர்கள் ,கந்தன், தமிழ்க்கடவுள், சிவனின் மகன்,ஒளவையிடம் சுட்ட பழம் எல்லாம் கப்ஸாவா ..? சொந்த தியேட்டரில் படத்தை ஓட்ட வக்கில்லை ,இந்த லட்சணத்தில் திருப்பதிக்கு போயாச்சு -
By புரட்சிகர தமிழ்தேசியன் · பதியப்பட்டது
“ஜெய்சங்கர் விஜயமும் இலங்கை - இந்திய நலன்களும்” - கலாநிதி கே.ரீ.கணேசலிங்கம் இலங்கை - இந்திய உறவின் பிரதான காலப் பகுதியாக 2021 அமையப் போகின்றது என்பதை கட்டியம் கூறுவதாக இந்திய வெளியுறவு அமைச்சரின் இலங்கைக்கான விஜயம் அமைந்துள்ளது. கடந்த இரு நாட்களிலும் (06.07.2021) இலங்கை ஜனாதிபதி மற்றும் வெளிவிவகார அமைச்சர் ஆகியோருடனான சந்திப்புகளும் அது வெளிப்படுத்தியுள்ள செய்திகளையும் முதன்மைப்படுத்தி இக் கட்டுரை இந்திய வெளிவிவகார அமைச்சரின் இலங்கை விஜயத்தின் முக்கியத்துவத்தைத் தேடுவதாக அமைய உள்ளது. பிரதமர் நரேந்திர மோடி ஆட்சிக்கு வந்த பிற்பாடு Saga Doctrine என்றழைக்கப்படும் (Security and growthfor all in the region) பிரகடனத்தை பிராந்திய மட்டத்தில் முதன்மைப்படத்தி வருகின்றது. அதில்; ஒரு அங்கமாகவே ஜெய்சங்கரின் விஜயம் அமைந்துள்ளது என இந்திய ஊடகங்கள் கருத்துப் பரிமாறி உள்ளன. அதற்கான ஆதாரங்களையும், அடிப்படைகளையும் இந்திய வெளிவிவகார அமைச்சரின் கருத்துக்கள் தெளிவுபடுத்துகின்றன. அவற்றை நோக்குவது அவசியமாகும். இந்திய வெளிவிவகார அமைச்சரும், இலங்கை வெளிவிவகார அமைச்சர் தினேஸ் குணவர்த்தனவும் கூட்டாக ஊடகங்களை சந்தித்த போது தெரிவித்த கருத்துக்கள் முதன்மையானவையாக விளங்குகின்றது. முதலாவது ஐக்கிய இலங்கைக்குள் சமத்துவமும், நீதியும், சமாதானமும் கொண்ட தமிழ் மக்களின் எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றுவது இலங்கையின் நலன்களுக்கு உகந்த விடயம். இரண்டாவது பதின்மூன்றாவது அரசியல் யாப்புத் திருத்தம் உட்பட அர்த்தபூர்வமான அதிகாரப் பகிர்வில் ஈடுபடுவது இலங்கையின் நலன்களுக்கு உகந்த விடயம். இது பதின்மூன்றாவது திருத்தம் உட்பட இலங்கை அரசின் வாக்குறுதிகளுக்கு அர்த்தபூர்வமான அதிகாரப் பகிர்வின் பொருத்தப்பாடுடையது என அவர் மேலும் தெரிவித்தார். மூன்றாவது இந்திய மீனவர்கள் விரைவில் நாடு திரும்புவதை தாம் எதிர்பார்ப்பதாக வெளிவிவகார அமைச்சர் தெரிவித்தார். நான்காவது பொருளாதார ரீதியாக அதிக ஒத்துழைப்பை இலங்கை அரசாங்கத்தோடு மேற்கோண்டு ஏற்கனவே கையெழுத்தான உடன்பாடுகளின் அடிப்படையில் அவற்றை அமுல்படுத்துவதும் பின்பற்றுவதுமான பூர்வாங்க வேலைப்பாடுகளை இலங்கை அரசாங்கத்திடம் எதிர்பார்ப்பதாக தெரிவித்தார். ஐந்தாவது இலங்கை அரசாங்கம் இந்தியாவுடன் கொரோனா தடுப்பூசி தொடர்பான விண்ணப்பக் கோரிக்கையை முன்வைத்திருப்பதோடு இந்தியா தயாரிக்கும் கொரோனா வைரஸ் இற்கு எதிரான மருந்தினை ஏனைய நாடுகளுக்கு விநியோகிக்கும் போது இலங்கைக்கு முன்னுரிமை அளிப்பதற்கு தயார் என தெரிவித்துள்ளது. அது மட்டுமுன்றி இந்திய சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்வதை ஊக்குவிக்கப்போவதாகவும் தெரிவித்தார். இவற்றை விட ஜனாதிபதியையும், இலங்கைப் பிரதமரையும் சந்தித்த வெளிவிவகார அமைச்சர் இந்தியாவின் பாதுகாப்பு இலங்கை - இந்திய கூட்டு ஒத்துழைபட்பு மற்றும் பொருளாதார விடயங்களில் அதிக ஒத்துழைப்பு செலுத்தியதாகவும் தெரியவருகின்றது. வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் சிறந்த இராஜதந்திரியாகவும் அனுபவம் மிக்க அரசியல்வாதியாகவும் விளங்குவதோடு இத்தகைய விஜயத்தின் ஊடாக அதிகமான பயன்பாடுகளை இந்தியா எட்டுவதற்கான முனைப்பனை வெளிப்படுத்தியுள்ளார். இவரது விஜயம் இராஜதந்திர ரீதியானது என்பதைக் கடந்து இந்திய நலன்களை அதிகம் பிரதிபலிப்பதாக உள்ளது. முதலாவது வெளிவிவகார அமைச்சர்; இலங்கை விஜயத்தின் போது வெளிப்படுத்திய கருத்துக்கள் ஒவ்வொன்றும் இராஜதந்திர ரீதியான உரையாடலாகவே தெரிகின்றது. ஊடகங்கள் மத்தியில் இனப் பிரச்சினை தீர்வு பொறுத்தும் பதின்மூன்றாவது திருத்தச் சட்டம் பொறுத்தும் அதன் மாகாண சபை தேர்தல் தொடர்பாகவும் வெளிப்படுத்திய அனைத்து சொல்லாடல்களும் இலங்கை ஆட்சியாளர்களிடையே தமிழ் மக்களையோ, தமிழ் மக்களின் அரசியல் சகத்திகளையோ, தென் இலங்கை அரசியல் சக்திகளையோ, தீவிர அரசியல் சக்தியகளிடையோ தமிழக தேர்தல் காலத்தில் ஈடுபட்டுள்ள அரசியல் பணியாளர்களையோ பாதிக்காத விதத்தில் வெளிப்படுத்தியுள்ளார். தேர்ந்தெடுக்கப்பட்ட சொற்களைப் பாவித்து இராஜதந்திர ரீதியான சொல்லாடலைக் கொண்டு இந்திய நலன்களை விட்டுக் கொடுக்காத வகையில் சாத்தியமான உகந்த பிரயோகத்தை மேற்கொண்டுள்ளார். இரண்டாவது ஒற்றையாட்சிக்குள் தமிழ் மக்களின் சமத்துவமான நீதியான கௌரவமான அர்த்த பூர்வமான அதிகாரப் பங்கீட்டை வலியுறுத்தியதன் மூலம் இலங்கை அரசாங்கத்திடம் இந்தியா எதனை எதிர்பார்க்கின்றது என்பதனைப் பூடகமாக வெளிப்படுத்தியுள்ளார். ஆனால் இதனை எல்லாம் கடந்த அரசாங்கம் இலங்கையிலுள்ள அரசாங்கம் என்பதை இந்தியத் தரப்பு பலதடவை உணரத் தவறியுள்ளமை கவனிக்கத்தக்கது. மூன்றாவது பொருளாதார விடயங்களை உரையாடுகின்ற போது கடந்த காலத்தில் மேற்கொள்ளப்பட்ட உடன்படிக்கைகளை தொடர்ந்து பேணவும் அமுல்படுத்தவும் இந்தியா விரும்புவதாகவும் தெரிவித்துள்ளார். அத்தகைய விடயம் கொழும்பு நிதி நகரத்தின் கிழக்கு முனையம் தொடர்பான கையாளுகையை முதன்மைப்படுத்துவதாகவே தெரிகின்றது. ஆனால் நேற்றைய தினம் (06.01.2021) பாராளுமன்றத்தில் இலங்கைப் பிரதமர் உரையாற்றுகின்ற போது கொழும்புத் துறைமுகம் எந்த நாட்டினுடைய நலன்களுக்காகவும் ஒப்படைக்கப்படாது என வெளிப்படுத்தியிருந்தமை நினைவு கொள்ளத்தக்கது. ஆனால் வெளிவிவகார அமைச்சரின் விஜயத்தின் மிகப் பிரதான நோக்கங்களில் ஒன்றாக கொழும்புத் துறைமுகத்தின் கிழக்கு முனையத்தின் நோக்கம் இந்தியாவிற்கு வழங்கப்பட வேண்டும் என்ற நோக்கத்தை அடைவதற்கான விஜயமாகவே காணப்படுகின்றது. நான்காவது தமிழகத்தில் நிகழும் தேர்தலில் பாரதீய ஜனதாக் கட்சிக்கும் அ.தி.மு.க.வுக்குமான உடன்பாடு ஒன்று காணப்படுவதோடு தேர்தல் கூட்டிலுள்ள கட்சிகளாகவே காணப்படும் நிலையில் பாரதீய ஜனதாக் கட்சி தமிழகம் நோக்கிய அரசியல் பலப்படுத்தலை உறுதிப்புடுத்துவதுடன் தமிழக மீனவ விவகாரம் சர்ச்சை மிக்கதாக உள்ளதை உணர்ந்துள்ளது. எனவே இக் காலப் பகுதியில் இலங்கை அரசாங்கத்தினால் சிறைப்பிடிக்கப்பட்ட தமிழக மீனவர்களை மீட்டெடுப்பதையும் அதனால் ஜனதாக் கட்சி, அ.தி.மு.க. கூட்டணியின் வெற்றிவாய்ப்பினை உறுதிப்படுத்துவதும் அவரது விஜயத்தின் நோக்கங்களில் ஒன்றாகும். அதனையே ஊடகங்கள் மத்தியில் வெளிப்படுத்தியுள்ளார். ஐந்தாவது ஜெனீவா விவகாரம் அதிகமான நெருக்கடியை இலங்கைக்கு ஏற்படுத்தும் என மேற்கு நாடுகளும் புலம் பெயர்ந்த தமிழர் அமைப்புகளும் வலியுறுது;தி வருகின்றன. இத்தகைய சந்தர்ப்பத்தில் புதிய தீர்மானம் ஒன்றிற்கான வாய்ப்பு அதிகரித்திருப்பதோடு அதன் விளைவுகளை கையாளுகின்ற திறனுடைய நாடாக இந்தியா காணப்படுவதும் மேற்கு நாடுகளின் நெருக்கமான நட்ப சக்தியாக இந்தியா விளங்குவதும் முக்கிய விடயமாகும். அத்தகைய புதிய தீர்மானத்ரைத பலமானதாகவும் அல்லது பலவீனமானதாகவும் மாற்றுகின்ற திறன் இந்தியாவிற்கு உண்டு. அது சார்ந்து இலங்கை தரப்புக்கு ஒரு செய்தியை வழங்குவதோடு கிழக்கு முனையம் தொடர்பாக ஏற்படடிருக்கும் அதிருப்தியை ஜெனீவாவை முன்னிறுத்திய தந்திரோபாயத்தை ஜெய்சங்கரின் விஜயம் வெளிப்படுத்துகின்றது. ஆறாவது இதந்கு மேலதிகமாக இலங்கையின் தமிழ் தரப்பை சந்திக்கும் செய்தியோடு இந்திய வெளிவிவகார அமைச்சரின் விஜயம் அமைந்திருந்தமை அதிக முக்கியத்துவம் பொருந்தியதாகும். அதாவது ஜெனீவா விடயத்துடன் கிழக்கு முனையம் பொறுத்தும் இலங்கை அரசாங்கத்தின் நடவடிக்கை எவ்வாறானதாக அமையும் என்பதைப் பொறுத்தும் தமிழர் தரப்பை பயன்படுத்தவும் அதனை அடிப்படையாகக் கொண்டு அச்சுறுத்தலை ஏற்படுத்தவும் திட்டமிட்டிருப்பதை அவரது விஜயம் உணர்த்துகின்றது. எனவே இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கரின் விஜயம் அதிக விளைவுகளை ஏற்படுத்தக் கூடிய ஒன்றாக விளங்குகின்றது. இது இந்தியாவுக்கு அதிக நலன்களையும் இலங்கைக்கு அதிகமான எச்சரிக்கையையும் ஏற்படுத்தியிருப்பதோடு தமிழர்களை முன்னிறுத்தி அத்தகைய இராஜதந்திர உரையாடலை உருவாக்கியுள்ளார். இது மட்டுமன்றி தமிழர் தரப்பு ஆரோக்கியமற்ற நகர்வுக்கான சூழலை மீளவும் ஏற்படுத்தக் கூடிய விதத்தில் ஜெய்சங்கரின் விஜயம் அமைய வாய்ப்புள்ளது.. அருவி இணையத்துக்காக கலாநிதி கே.ரீ.கணேசலிங்கம். http://aruvi.com/article/tam/2021/01/14/21554/ -
By புரட்சிகர தமிழ்தேசியன் · பதியப்பட்டது
மணிரத்னத்திற்கு எதிராக களமிறங்கும் சிரஞ்சீவி.! தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக இருக்கும் மணிரத்தினத்திற்கு எதிராக தெலுங்கு நடிகர் சிரஞ்சீவி களமிறங்கியிருக்கிறார். கல்கியின் பொன்னியின் செல்வன் சரித்திர நாவல் பெரும் பாலோர் படித்து ரசித்த நாவல். ஏற்கனவே இதனை மணிரத்னம் திரைப்படமாக உருவாக்கி வருகிறார். இதில் விக்ரம், ஐஸ்வர்யாராய், ஜெயம் ரவி நடித்த காட்சிகள் வட மாநிலத்தில் அடர்ந்த காட்டுப் பகுதியில் கொரோனா ஊரடங்கிற்கு முன்பு படமாக்கப்பட்டது. கொரோனா ஊரடங்கால் படப்பிடிப்பு தடைப்பட்டது. தற்போது மீண்டும் தொடங்கி உள்ளது. இந்நிலையில் வெப் தொடராக பொன்னியின் செல்வன் உருவாகவிருப்பதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. மெகா வெப் சீரிஸாக உருவாகும் இதில் தெலுங்கு நடிகர் சிரஞ்சீவி நடிக்கிறார். இசைஞானி இளையராஜா இசை அமைக்கிறார். இதில் நடிக்கும் மற்ற நடிகர், நடிகைகள் மற்றும் தொழில் நுட்ப விவரங்கள் வரும் ஏப்ரல் 14ம் தேதி வெளியாக உள்ளது. https://vanakkamlondon.com/cinema/2021/01/98688/ -
By புரட்சிகர தமிழ்தேசியன் · பதியப்பட்டது
இலங்கை விவகாரம் :: சர்வதேச சுயாதீன விசாரணை பொறிமுறையை உருவாக்குமாறு பிரிட்டன் பிரதமருக்கு அழைப்பு.! இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக நிகழ்ந்த கடுமையான சர்வதேச குற்றங்களை விசாரித்து வழக்குத் தொடர ஏதுவாக ஒரு சர்வதேச சுயாதீன விசாரணைப் பொறிமுறையை (IIM) உருவாக்குமாறு பிரிட்டன் பிரதமரிடம் அந்நாட்டு லிபரல் டெமோக்ரடிக் கட்சியின் தலைவா் எட் டேவி கோரிக்கை விடுத்துள்ளார். 11 ஆண்டுகளுக்கு முன்னர் நிறைவடைந்த ஆயுதப் போராட்டத்தின்போது இடம்பெற்றதாகக் கூறப்படும் போர்க்குற்றங்களை விசாரிப்பதற்கான சர்வதேச பொறிமுறைகளை ஏற்க இலங்கை தொடர்ச்சியாக மறுப்புத் தெரிவித்து வருகிறது. அத்துடன், ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களையும் ஏற்க மறுத்து அதிலிருந்து இலங்கை விலகியுள்ளதாகவும் எட் டேவி வெளியிட்டுள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டி கவலை தெரிவித்துள்ளார். இவ்வாறான நிலையில் சர்வதேச சுயாதீன விசாரணைப் பொறிமுறை ஒன்றின் மூலமே தமிழ் இனப் படுகொலையில் ஈடுபட்டவர்களை பொறுப்புக் கூறச் செய்ய முடியும். இலங்கையில் அர்த்தமுள்ள நல்லிணக்கத்திற்கான ஒரு படியாகவும் இந்த விசாரணை அமையும் எனவும் டேவி கூறியுள்ளார். சர்வதேச சுயாதீன விசாரணைப் பொறிமுறை ஒன்றை உருவாக்குமாறு நூற்றுக்கும் மேற்பட்ட இங்கிலாந்து தமிழ் சமூகங்கள் விடுத்துள்ள அழைப்பை அடுத்து டேவி இவ்வாறான கோரிக்கையை முன்வைத்துள்ளார். டேவியின் அழைப்புக்கு சாம் டாரி மற்றும் சியோபைன் மெக்டோனாக் உள்ளி்ட்ட பல பிரிட்டிஷ் எம்.பி.க்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். முன்னொருபோதும் இல்லாத வகையில் இலங்கையில் தமிழ் தரப்பைச் சோ்ந்த முக்கிய கட்சிகள் ஒன்றிணைந்து இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் (ICC) நிறுத்த வேண்டும் என சர்வதேச சமூகத்துக்கு பரிந்துரைத்துள்ளனர். இலங்கையின் பொறுப்புக் கூறல் பொறிமுறையை உறுதி செய்யுமாறும் அவா்கள் அழைப்பு விடுத்துள்ள நிலையிலேயே சர்வதேச சுயாதீன விசாரணைப் பொறிமுறையை (IIM) உருவாக்குமாறு பிரிட்டன் பிரிதமரிடம் அந்நாட்டு லிபரல் டெமோக்ரடிக் கட்சியின் தலைவா் எட் டேவி அழைப்பு விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது. http://aruvi.com/article/tam/2021/01/16/21611/ -
By புரட்சிகர தமிழ்தேசியன் · பதியப்பட்டது
தரம் ஆறுக்கு மாணவர்களை இணைப்பதற்கான வெட்டுப்புள்ளி வெளியாகியது.! கடந்த ஆண்டு நடைபெற்ற புலமைப் பரிசில் பரீட்சை முடிவுகளின் அடிப்படையில் தரம் ஆறு கற்பதற்காக முன்னணிப் பாடசாலைகளில் இணைத்துக்கொள்வதற்கான வெட்டுப்புள்ளிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. கடந்த ஒக்டோபர் 11 ஆம் திகதி இடம்பெற்ற புலமைப்பரிசில் பரீட்சைகள் 2,936 பரீட்சை நிலையங்களில் நடைபெற்றிருந்தது. தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சைக்கு 331,741 மாணவர்கள் பரீட்சைக்கு விண்ணப்பிருந்த நிலையில், 326,264 பேர் அதற்காக தோற்றியிருந்ததாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்திருந்தது. இந்நிலையில் தரம் ஆறு மாணவர்களை பிரபல பாடசாலைகளில் இணைத்துக்கொள்வதற்கான வெட்டுப்புள்ளிகள் வெளியிடப்பட்டுள்ளன. அவற்றின் விபரம் வருமாறு, ஆண்கள் பாடசாலை - வெட்டுப் புள்ளிகள் கொழும்பு ரோயல் கல்லூரி - 187 டி.எஸ் சேனாநாயக்க கல்லூரி, கொழும்பு 07 - 179 பருத்தித்துறை ஹாட்லி கல்லுரி - 178 இசிபத்தான கல்லூரி, கொழும்பு 05 - 174 யாழ். இந்துக் கல்லூரி - 166 யாழ். மத்திய கல்லூரி - 161 மட்டக்களப்பு மெதடிஸ்ட் மத்திய கல்லூரி - 160 ஓட்டமாவடி மத்திய கல்லூரி - 160 சாய்ந்தமருது சாஹிரா கல்லூரி - 160 திருகோணமலை கோணேஸ்வரா இந்து கல்லூரி -159 புத்தளம் ஷாஹிரா தேசிய கல்லூரி - 157 பெண்கள் பாடசாலை - வெட்டுப் புள்ளிகள் பம்பலப்பிட்டி, முஸ்லிம் மகளிர் கல்லூரி - 181 பருத்தித்துறை, மெதடிஸ்ட் பெண்கள் உயர்தர பாடசாலை - 174 யாழ்ப்பாணம், வேம்படி பெண்கள் உயர்தர பாடசாலை - 173 கல்முனை, மஹ்மூத் பாலிகா கல்லூரி - 170 யாழ். ஹிந்து மகளிர் கல்லூரி - 169 வின்சென்ட் பெண்கள் உயர்தர பாடசாலை, மட்டக்களப்பு - 169 கண்டி, பதியுத்தீன் மஹ்மூத் பாலிகா வித்தியாலயம் - 166 ஹட்டன், புனித கெப்ரியல் பெண்கள் கல்லூரி, - 166 பம்பலப்பிட்டி, இராமநாதன் இந்து மகளிர் கல்லூரி - 163 திருகோணமலை, ஸ்ரீ சண்முகா இந்து மகளிர் கல்லூரி - 160 கலவன் பாடசாலை - வெட்டுப் புள்ளிகள் ஹட்டன், ஹைலண்ட்ஸ் கல்லூரி - 181 மூதுர், மத்திய கல்லூரி - 171 கொட்டகலை, கேம்பிரிட்ஜ் கல்லூரி - 168 கொக்குவில், கொக்குவில் இந்து கல்லூரி - 167 ஹப்புகஸ்தலாவ, அல் மின்ஹாஜ் தேசிய பாடசாலை - 166 சம்மாந்துறை, முஸ்லிம் மத்திய கல்லூரி - 165 முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரி - 165 கெக்குணுகொல்ல தேசிய பாடசாலை - 164 மாவலனல்லை, சாஹிரா முஸ்லிம் மத்திய மகா வித்தியாலயம் - 164 கல்முனை, கார்மெல் பற்றிமா கல்லூரி - 164 ஹாலி எல, ஊவா விஞ்ஞான கல்லூரி - 164 விஷ்வமடு மகா வித்தியாலயம் - 164 கரவெட்டி, நெல்லியடி மத்திய கல்லூரி - 163 கம்பளை, ஷாஹிரா கல்லுரி - 162 கொழும்பு 12, விவேகானந்தா கல்லூரி - 162 மாவனல்லை, பதுரியா மகா வித்தியாலயம் - 162 அக்கரைப்பற்று, ஸ்ரீ இராமகிருஷ்ணா கல்லூரி - 162 மஸ்கெலியா, புனித ஜோசப் தமிழ் வித்தியாலயம் - 161 அட்டாளைச்சேனை, மத்திய கல்லூரி - 161 கொட்டகலை, தமிழ் மகா வித்தியாலயம் - 161 http://aruvi.com/article/tam/2021/01/16/21604/
-
Recommended Posts
Join the conversation
You can post now and register later. If you have an account, sign in now to post with your account.