Jump to content

ஏழை மீனவரின் ஆட்டைத் திருடி கறி காய்ச்சித் தின்ற இந்திய இராணுவம்.


Recommended Posts

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்தியக் கலாச்சாரம் என்ற போலித்தனம்

தமிழ் படங்களாகட்டும் இந்தியாவிலிருந்து வெளிவருகிற பிற மொழிப் படங்களாகட்டும். இந்தியக் கலாச்சாரத்தைப் பற்றி விலா வரியாக விளக்கங்கள் வரும். இந்தியா எய்ட்ஸ் நோயில் முன்னணியில் இருக்கிறது என்பது வேறு கதை, ஆனால் இங்கு எங்களுக்கு எழும் கேள்வி அப்படி ஒரு கலாச்சாரம் உண்மையிலே இருக்கிறதா?! இல்லாத ஒன்றைக் காட்டி இவ்வளவு பிதற்றுகிறார்களே! இவர்களைக் காட்டிலும் வடி கட்டின முட்டாள்கள் வேறு யாராவது இருப்பார்களா????????

நான் கேட்கிறேன் தமிழர்களின் மரபுகளும் வங்காளிகளின் மரபுகளும் ஒன்றாகவா இருக்கின்றன? மலையாளிகளின் பழக்க வழக்கங்களும் பஞ்சாபிகளின் பழக்க வழக்கங்களும் ஒன்றா? ராஜஸ்தானிகளும் கஷ்மீரிகளும் ஒரே மாதிரியா வாழ்கிறார்கள்? இதில் இந்தியக் கலாச்சாரம் என்ற ஒன்று எங்கிருந்து வந்தது.

Link to comment
Share on other sites

  • Replies 119
  • Created
  • Last Reply

சுய கட்டுப்பாடு இல்லாமல் மனம் போன போக்கில் போகிறான் எய்ட்ஸ் வந்து சாகிறான் அதுக்கு என்ன செய்வது. அதை வைத்து இந்திய பெண்களை கேவலப்படுத்தாலாம் என்று யாரும் நினைக்கவேண்டாம்.

Link to comment
Share on other sites

சுய கட்டுப்பாடு இல்லாமல் மனம் போன போக்கில் போகிறான் எய்ட்ஸ் வந்து சாகிறான் அதுக்கு என்ன செய்வது. அதை வைத்து இந்திய பெண்களை கேவலப்படுத்தாலாம் என்று யாரும் நினைக்கவேண்டாம்.

சச்சிதா,

குழப்பத்தை உண்டுபண்ணாதீர்கள். இந்திய கலாச்சாரம்தான் விமர்சிக்கப்பட்டுள்ளதேயன்ற

Link to comment
Share on other sites

சுய கட்டுப்பாடு இல்லாமல் மனம் போன போக்கில் போகிறான் எய்ட்ஸ் வந்து சாகிறான் அதுக்கு என்ன செய்வது. அதை வைத்து இந்திய பெண்களை கேவலப்படுத்தாலாம் என்று யாரும் நினைக்கவேண்டாம்.

ஆணும் பெண்ணும் தவறாக இணையும் போதுதான் 95%ஆனோருக்கு எய்ட்ஸ் வருகிறதென்று உலக எய்ட்ஸ் நிறுவனம் சொல்கின்றது, தமிழகத்தில் மட்டும் 100,000 எய்ட்ஸ் நோயாளிகள் உள்ளனர், அப்படிப் பார்த்தல் நீரே கணக்குப் பண்ணிப் பாரும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சுய கட்டுப்பாடு இல்லாமல் மனம் போன போக்கில் போகிறான் எய்ட்ஸ் வந்து சாகிறான் அதுக்கு என்ன செய்வது. அதை வைத்து இந்திய பெண்களை கேவலப்படுத்தாலாம் என்று யாரும் நினைக்கவேண்டாம்.

rmsachitha!!!!!!!!!

திரும்ப திரும்ப உங்களைப் போன்றவர்களுக்கு ஒரு கருத்தை வலியுறுத்திக் கூறிக் கொள்ள விரும்புகிறேன்.

நான் இங்கே எதிர்ப்பது இந்திய அரசின் வல்லாதிக்கப் போக்கைத்தானேயன்றி இந்திய மக்களை அல்ல. எந்த நாட்டு மக்களும் நமக்கு எதிரிகள் அல்ல. ஆட்சியாளர்கள் செய்யும் தவறுக்கு நாம் ஒரு போதும் மக்களைக் குறை கூற மாட்டேம்.

Link to comment
Share on other sites

அரசும் அரசும் கைகோர்த்துக்கிறது சரின்னா மக்களும் மக்களும் கைகோர்த்துக்கிறது சரிதானே!.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தனது வலைப்பதிவில் (http://poar-parai.blogspot.com/2006/07/blog-post_14.html) அசுரன் எழுதிய கட்டுரையை இங்கு இணைக்கிறேன்.

கேடு கெட்ட இந்தியா - யானை கட்டியா போரடித்தோம்?

farmerploughup3.jpg

தனது நிலத்தில் தானே எருதாக - ஏர் கலப்பையை முதுகில் பூட்டி உழும் ஒரு விவசாய குடும்பம்.

குட்டக் குட்டக் குனிய கற்றுக் கொடுத்த நமது பாரம்பரிய வர்னாசிரம் பண்பாட்டை ஆளூம் வர்க்கம் தூக்கிப் பிடிக்கும் மர்மம் இதோ இங்கே தெரிகிறது.

நாம் அஹிம்சா விரும்பிகளாம்....சொல்லுவது யார்? மூன்று வேலையும் மூக்குப் பிடிக்க உண்ணும் புண்ணிய ஆத்மாக்கள்.(இதில் எந்த தனிமனித தாக்குதலோ அல்லது உள்குத்தோ இல்லை. இது பொதுவான தத்துவ விமர்சனம்).

அடிமையாய் வாழ பழக்கப்பட்டவன், உரிமை என்பதை பற்றி எந்த அறிமுகமும் இல்லாதவன், ஜனநாயகத்தை அவனுக்காக ஓட்டுப் பொறுக்கும் ஆத்மாக்களின் வாய்களிலும், வசவுகளிலுமே அறிந்தவன் - எப்படி தனக்கான உரிமைகளை கேட்டு போராடுவான்? அவன் அஹிம்சாவின் வன்முறையை தனது பிறப்பால் ஏற்றுக் கொண்டவன்.

அவனை பீடித்திருக்கும் அத்தனை பழமைவாத தத்துவ, பித்துவ பண்பாட்டு மாயைகளையும் அதன் மூல வேர்களையும் அடித்து நொறுக்க வேண்டும்.

அதுதான் அவனை, எமது மக்களை, இந்த நாட்டின் முதுகெலும்பாய் கூனிக் குறுகி வாழ்கை நடத்தும் பெரும்பான்மை உழைக்கும் மக்களை விழிப்புறச் செய்யத் தேவையான முதல் நடவடிக்கையாக உள்ளது.

இந்த விவசாயிக்கு சலுகைகளை அல்ல தனக்கான நியயமான கோரிக்கைகளைக்க்கூட எழுப்பத் தெரியவில்லை.

தொடர்ச்சியாக நிலத்தால் வஞ்சிக்கப்பட்ட அந்த விவசாயிடம் பின்வரும் கேள்வி கேட்கப்பட்டது:

"இந்த வருடமும் சரியாக விளையாது என்று தெரிந்த பின்னும் ஏன் பயிர் செய்கிறேர்கள்?"

அதற்க்கு அவர் சொன்ன பதில்:

"நாங்கள் கடவுள் குழந்தைகள் எங்களை அவர் கைவிட மாட்டார்".

இது மத வெறி பன்றிகளுக்கு மகிழ்ச்சியளிக்கும் விசயம்தான்.

எமக்கும் கூட ஒருவகையில் இது மகிழ்ச்சியளிக்கிறது. ஏனெனில் இந்த நம்பிக்கை இல்லையெனில் அவர் தற்கொலை செய்திருப்பார்.

இதை அவரே சொல்கிறார்:

"வேறு யாராகவும் இருந்தால் இன்னேரம் தற்கொலை செய்திருப்பார்கள்".

இன்னொரு வகையில் மகிழ்ச்சி. அவரது தத்துவ மயக்கத்தை போக்கினால் அவரது எதிரிகளின் முதுகில் ஏர்கலப்பையை கட்டி உழுவ செய்வதற்க்கு ஒரு உயிர் அங்கே காத்திருக்கிறது என்பது.

இந்த செய்தி, நேபாளத்தில் எனது சகோதரன் இதே நடவடிக்கையை மேற்கொண்ட போழுது இங்கே குய்யோ முறையோ என்று கூவிய மதவெறி பன்றிகளுக்கு உறுதியாக மகிழ்ச்சியளிக்கும் விசயமல்ல.

பிறப்பால் வர்னாசிரம பிரிவை/ஏற்றத்தாழ்வை மறைமுகமாக/நேரடியாக வரவேற்பவர்கள் அந்த பெரியவரின் - தனது தொழிலின் மீதான காதலை பாருங்கள். நிலத்தை விற்று பான்மசால கடை வைப்பதற்க்கு தனது மகனை அனுமதிக்கவில்லை அவர். மாறாக இப்பொழுது நிலத்தை தனது முதுகில் பிணைத்துள்ளார். சுயமரியாதையுள்ள மனிதர்.

நகரங்களுக்கு சென்று வேலை செய்யவும் அவர் தாயாராயில்லை.

வெறும் பழைமைவாத கருத்துக்களால் கட்டுண்ட சுயமரியாதையின் அவலம் இது. புரட்சிகர சுயமரியாதைதான் இன்றைய தேவை. விடுதலையின் திறவுகோல் அதுதான்.

இதை ஐந்திலக்க எச்சில் சோற்றுப் பருக்கையுண்ணும் சுய நல, தனிமனித சிந்தனை வெறிபிடித்த, நுகர்வுகலாச்சார ரோகம் பாதித்த யுப்பி வர்க்கம் ஒப்பிட்டு பார்க்க வேண்டும்.

அமெரிக்க ஊழியனின் வேலையிழப்பில் தனது சந்தோசத்தை உத்திரவாத படுத்திக் கொண்டு. சொந்த சகோதரர்களுக்கிடையிலேயே(அமேர

Link to comment
Share on other sites

இலங்கைத்தமிழனுக்கு இந்தியத்தமிழன் செய்த உதவி மகா பெரிது. அதே நேரம் ஈழத்த்தமிழன் நல்லவனாக இருக்கமுடியாமல் பழிவாங்க புறப்பட வைத்ததே கின்டி பேசும் இந்தியன். ஆகவே என் அருமை நண்பன் ரம்சச்ச்திதா கவலைபடாதீர்கள். எங்களுக்கு தேவை விடுதலை. ஆமாம் சிங்கள் தேசத்தில் இருந்து முற்றாக விடு பட வேண்டும். அதற்காகத்தான் இங்கே என் களக குஞ்சுகள் கருதாடுகிறார்கள். எதுக்கும் அஞ்சாத காளைகள் இவர்கள். இந்தியா என்ற நாட்டுக்குள் தமிழன் தான் உலகம் பூரா கொடி நாடுகிறாம் ஆகவே தமிழன் தான் இந்தியாவினை ஆள வேண்டும். உங்களிடம் போராடுவதற்கான் சூழநிலைகள் வரவில்லை ஆனால் எமது போராட்டதின் காரணமாக அது உங்கள் தமிழ்நாட்டுத் தமிழரை பாதிக்கும் என்று தெரிந்து தான் இந்தியா இப்படி ஆடுகிறது. நீங்கள் நான் கவலைப்பட்டு வெளியேறும் போது தோல் கொடுத்த பெரு மகன் உங்களில் ஒரு தனி மரியாதை எனக்கு உண்டு. ஆதரவு தாருங்கள் எனது தமிழின விடுதலைக்கு.? :lol:

Link to comment
Share on other sites

  • 4 weeks later...
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழக மீனவர்களை காப்பாற்ற வக்கற்ற இந்திய கடற்படை தளபதி, விடுதலைப் புலிகள் மீது வீணான பழியை சுமத்துவதற்கு முற்பட்டிருக்கிறார்.

உலகத் தமிழர் பேரமைப்புத் தலைவர் பழ. நெடுமாறன் விடுத்துள்ள அறிக்கை :

02-04-2007

குமரி மாவட்ட மீனவர்கள் மீது விடுதலைப் புலிகள் தான் சுட்டிருக்க வேண்டுமென்றும், இந்தியா இலங்கை ஆகிய இரு நாடுகளுக்கு இடையே பகைமை ஏற்படுத்தும் நோக்கத்துடன் இவ்வாறு செய்திருக்க வேண்டுமென்றும்.. இந்திய கடற்படை தலைமை தளபதி சுரேஷ் மேத்தா கூறியுள்ளார்.

1983-ஆம் ஆண்டிலிருந்து கடந்த 24 ஆண்டு காலமாக 300-க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்களை சிங்கள கடற்படையினர் எல்லை மீறி வந்து சுட்டுக் கொன்றிருக்கின்றனர்.

தங்களை யார் சுட்டார்கள் என்பதை தமிழக மீனவர்கள் வெளிப்படையாகக் கூறியுள்ளார்கள். ஆனால் நமது மீனவர்களின் குற்றச்சாட்டை நம்பாமல், சிங்கள கடற்படை தளபதியின் கூற்றை நம்பி இந்திய கடற்படை தலைமை தளபதி விடுதலைப் புலிகள் மீது குற்றம் சாட்டியிருப்பதை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன்.

சிங்கள கடற்படையினரின் கொலை வெறித் தாக்குதலில் இருந்து தமிழக மீனவர்களை காப்பாற்ற வக்கற்ற இந்திய கடற்படையின் கையாலாகத்தனத்தை மூடி மறைக்கவே இந்திய கடற்படை தளபதி விடுதலைப் புலிகள் மீது வீணான பழியை சுமத்துவதற்கு முற்பட்டிருக்கிறார்.

குமரிக் கடலில் படுகொலை செய்யப்பட்ட மீனவர்களின் குடும்பத்தினர், மற்றும் அவர்களுடன் கடலில் சென்று உயிர் தப்பி மீண்டவர்களிடம் கடற்படை தளபதி சுரேஷ் மேத்தா நேரில் வந்து விசாரணை நடத்த தயாரா என நான் அறைகூவல் விடுக்கிறேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இளங்கோ தூங்கிட்டு இருந்த இந்த களத்த தட்டி எழுப்பிட்டாரு

இல்லாவிட்டால் மீண்டும் மீண்டும் இந்தியா தமிழினத்திற்கு துரோகம் செய்கிறது என்பதை மறந்து விடுவார்கள்.

Link to comment
Share on other sites

  • 5 weeks later...
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

"இந்தியனே வெளியேறு'' - வடகிழக்கின் விடியலுக்கான முழக்கம்

- மீனாமயில்

"இந்தியனே வெளியேறு" என்ற இந்த முழக்கம் தேசாபிமானிகளுக்கு அதிர்ச்சியைக் கொடுக்கலாம். பலருக்கு பல கேள்விகளையும், குழப்பத்தையும் இம்முழக்கம் ஏற்படுத்தலாம். தங்கள் உரிமைகளை நசுக்கும் இந்திய ராணுவத்தினரை வெளியேறச் சொல்லி இப்படிப் போராடுவது - பாகிஸ்தானியர்களோ, வங்க தேசத்தினரோ, இலங்கை மக்களோ அல்லது வேறெந்த நாட்டினரோ அல்ல. இந்தியாவில் உள்ள காஷ்மீரிகள் மற்றும் அசாம், நாகலாந்து, மணிப்பூர், அருணாச்சலப் பிரதேசம், மிசோரம், திரிபுரா ஆகிய வடகிழக்கு மாநில மக்களும்தான் இப்படிப் போராடி வருகின்றனர்.

நள்ளிரவில் இந்தியா ஆங்கிலேயரிடமிருந்து "விடுதலை' பெற்றபோது, பல மாநில மக்களின் உரிமைகள் இந்திய ஒருமைப்பாட்டுக்குள் முடக்கப்பட்டன. சாதி, மதம், மொழி என எல்லா பாகுபாடுகளுக்கும் விளக்கேற்றி வைத்துதான் இந்திய ஜனநாயகம் ஒளி பெற்றது. வெள்ளையர்களை வெளியேற்றிய கையோடு, சாதி மத ஆதிக்கவாதிகள் சர்வாதிகாரத்தை கையிலெடுத் தனர்.

"வேற்றுமையில் ஒற்றுமை' என்ற முகமூடியை அணிய பல தரப்பு மக்களும் நிர்பந்திக்கப்பட்டனர். அணிய மறுத்தவர்கள் வேட்டையாடப்பட்டனர். அவசர அவசரமாக இந்திய அரிதாரத்தைப் பூசிக்கொண்டு, மக்கள் அனைவரையும் இந்து ராஜ்ஜியத்துக்குள் இழுக்கும் கபட நாடகமும் அரங்கேறியது. அரிதாரமே உண்மை என மதி மயங்கி, பலர் தங்கள் சுயத்தை இழந்துவிட, பாரம்பரியத்தையும் பண்பாட்டையும் இந்து சாம்ராஜ்யத்துக்கும் இந்திய ஒருமைப்பாட்டுக்கும் காவு கொடுக்க விரும்பாத காஷ்மீரிகளும், வடகிழக்கு மாநிலத்தவரும் இன்று வரை எண்ணற்ற உயிர்களை பலி கொடுத்து, தங்கள் உரிமைகளை மீட்கப் போராடி வருகின்றனர்.

இந்தப் போராட்ட குணம்தான் அவர்களை இந்திய தேசாபிமானிகளுக்கு எதிரிகளாக்கியது. பாகிஸ்தான் எல்லையில் இருப்பதால், காஷ்மீரிகளின் துயரமாவது அவ்வப்போது செய்தியாக வெளியே கசியும். ஆனால், வடகிழக்கு மக்களின் நிலை இன்னும் பரிதாபமானது. பழங்குடியின மக்கள் அதிகம் வசிக்கும் வடகிழக்கு மாநிலங்கள், எந்த விதத்திலும் இந்தியாவோடு தொடர்பில்லாதவை. அவர்களின் பண்பாடு, பாரம்பரியம், தோற்றம், தொழில்கள், வாழ்க்கை முறை எல்லாமே இந்திய வேஷத்துக்குப் பொருத்தமற்றவை. உண்மையில், பிரிட்டிஷ் காலனியாதிக்கத்திற்கு முன்பும் சரி, காலனியாதிக்கத்தின் போதும் சரி, வடகிழக்குப் பகுதிகள் இந்தியாவோடு எந்தத் தொடர்புமின்றி, ஒரு குறுநாடாகவே தனித்து இயங்கி வந்தன. விடுதலைக்குப் பின்னர்தான் இவை மாநிலங்களாக இணைக்கப்பட்டன.

அதிகாரம் கைமாறியபோதும் வடகிழக்குப் பகுதிகளுக்குப் பெருமளவில் சுயாட்சி அதிகாரம் வழங்கித் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது : இந்தப் பகுதிகளை விருப்பத்துக்கு மாறாக, இந்திய யூனியனோடு இணைக்க இயலாது. இந்த பிரதேசங்கள் தனித்துப் பிரிந்து போக விரும்புகிறபோது, அப்படிப் போக உரிமை இருக்கிறது'' என்கிறது அந்தத் தீர்மானம்.

ஆனால், மக்களின் விருப்பமோ, அனுமதியோ இன்றி ஒவ்வொரு மாநிலமாக இந்திய யூனியனோடு இணைக்கப்பட்டது. வெண்கலக் கடைக்குள் யானை புகுந்தது போலானது, வடகிழக்கு மாநிலங்களின் நிலை. அப்படி இணைக்கப்பட்ட பிறகும் நீண்ட காலத்திற்கு, தாங்கள் இந்தியாவில் இருக்கிறோம் என்ற உணர்வே அந்த மக்களுக்கு ஏற்படவில்லை. பிற மாநிலத்தவரைப் பார்த்தால் நீங்கள் இந்தியர்களா?'' என்று கேட்குமளவுக்கு அவர்கள் தனித்தன்மையோடு இருந்தனர். இந்நிலையில்தான், கொட்டிக் கிடந்த இயற்கை வளங்களைக் கொள்ளையடிப்பதற்காகப் பெரிய பெரிய மூட்டைகளோடு பன்னாட்டு நிறுவனங்களும், அரசியல்வாதிகளும் படையெடுத்தனர்.

பாரம்பரியமாக மண்ணின் மக்களாக வாழ்ந்து வந்த பழங்குடியினரின் இருத்தலே அங்கு கேள்விக்குறியானது. வெளி மாநிலங்களிலிருந்து வந்தவர்களின் ஆதிக்கம் கை ஓங்க, சொந்த மண்ணில் வாழ்வைத் தொலைத்தனர் வடகிழக்கு மக்கள். எல்லாமே கூறுபோடப்பட்ட நிலையில், மக்களுக்கு காய்கறிகள்கூட கிடைப்பது அரிதானது. பழங்குடியின மக்களின் தனித்துவ அடையாளம் சூறையாடப்பட்டது. குறிப்பாக, அவர்கள் இந்து மதப் பட்டியலில் இருக்க நிர்பந்திக்கப்பட்டனர். இந்த துரோகமும், உரிமை மீறல்களும் மக்களை கிளர்ந்தெழச் செய்தன.

வெள்ளையர்களை விரட்டியடிப்பதற்காக உருவான போராட்டக் குழுக்கள் மீண்டும் உயிர் பெற்றன. வெள்ளையனே வெளியேறு'' என்று முழங்கிய மக்கள், "இந்தியனே வெளியேறு'' என்று முழங்க வேண்டியதாயிற்று. இந்தப் போராட்டக் குழுக்கள் தங்களுக்கு சுயாட்சியை வழங்கக் கோரி, ஆயுதமேந்திப் போராட்டம் நடத்தின. இந்திய ஒருமைப்பாட்டையும் இறையாண்மையையும் வடகிழக்கு மாநிலங்கள் குலைப்பதாகக் கருதி, அவற்றைப் பதட்டம் நிறைந்த பகுதிகளாக அறிவித்தது அரசு. விளைவு, போராட்டக் குழுக்களை ஒடுக்க, இந்திய ராணுவம் அப்பகுதிகளில் குவிக்கப்பட்டது.

"வெள்ளையனே வெளியேறு' இயக்கத்தை வழி நடத்திய இந்தியப் போராட்டக் குழுக்களை ஒடுக்குவதற்காக, ஆங்கிலேயர்கள் இயற்றிய ஆயுதப்படைச் சிறப்புச் சட்டத்தை வடகிழக்கு மாநிலங்களில் நடைமுறைப்படுத்தியது இந்திய அரசு. அடிப்படை உரிமைகளை நசுக்கும் இச்சட்டத்தை துளியளவும் மாற்றாமல் "ஆயுதப் படை (அசாம், மணிப்பூர்) சிறப்பு அதிகார அவசரச் சட்டம் 1958' என்ற பெயரில் மட்டும் சிறிய திருத்தம் செய்து, தன் மக்கள் மீது ஏவி விட்டது இந்திய அரசு. 1980 ஆம் ஆண்டு வடகிழக்கு மாநிலங்களிலும், 1990 ஆம் ஆண்டு ஜம்மு காஷ்மீரிலும் இக்கொடிய சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது. எல்லைப் பாதுகாப்புப் படையினர், அசாம் ரைபிள்ஸ், ராஷ்ட்ரிய ரைபிள்ஸ், சீக்கியப் படைப்பிரிவு, தேசிய பாதுகாப்புப் படை எனப் பல்வேறு பெயர்களில் பயிற்று விக்கப்பட்ட இந்திய ராணுவத்தினர், ஆயுதப் படையினராக இந்தப் பகுதிகளில் ஏவி விடப்பட்டனர்.

ஆயுதப்படை சிறப்புச் சட்டம், ராணுவத்தினருக்கு எல்லையில்லா சுதந்திரத்தை வழங்குகிறது. இச்சட்டத்தின்படி, ராணுவத்தினர் எந்த வீட்டிலும் தன்னிச்சையாக நுழைந்து தேடுதல் வேட்டை நடத்தலாம். வாரண்ட் இல்லாமல் யாரை வேண்டுமானாலும் கைது செய்யலாம்; விசாரணை என்ற பெயரில் சித்ரவதை செய்யலாம். சுட்டும் கொல்லலாம். இதில் கொடுமை என்னவென்றால், அப்படி நிகழ்த்தப்படுகிற எந்த "என்கவுன்டர் கொலை'க்கும் சம்பந்தப்பட்ட அதிகாரி மீது விசாரணை நடத்த இச்சட்டம் தடை விதிக்கிறது. அப்படியே நடத்த முற்பட்டாலும், அதற்கு மத்திய அரசின் ஒப்புதலைப் பெற வேண்டும். இந்நிலையில் இதில் எங்கிருந்து விசாரணை நடத்தி, மக்கள் தங்களுடைய நீதியைப் பெறுவது?

ஆயுதப் படையினருக்கு வழங்கப்பட்ட இந்தக் கட்டுப்பாடற்ற சுதந்திரம், அவர்களை வேட்டை மிருகங்களாக்கியது. காம வெறி தலைக்கேறும் போதெல்லாம் பெண்கள் விசாரணைக்கென இழுத்துச் செல்லப்பட்டனர். அப்படி கொண்டு செல்லப்பட்டவர்கள் பிணமாகக் கிடந்தனர் அல்லது காணாமல் போயினர். அரசாங்கக் கணக்குப்படி மட்டும், இதுவரை மணிப்பூரில் சுமார் இருபதாயிரம் பேர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். போராட்டக் குழுவை ஒடுக்குவதுதான் அரசின் நோக்கமென்றால், நியாயமான முறைகளில் அதை என்றோ நிறைவேற்றியிருக்கலாம். உண்மையில் ஆயுதச் சட்டம் நடைமுறைக்கு வந்தபோது, மணிப்பூரில் இருந்த போராட்டக் குழுக்களின் எண்ணிக்கை நான்கே நான்குதான்.

இப்போது இருபத்தைந்து. அரசுதான் அநீதியின் வாயிலாக மக்களைப் போராளிகளாக்கி இருக்கிறது. ராணுவத்துக்கு தீனி போடவும் அதன் மூலம் போலி தேசப்பற்றை வளர்த்து விடவும் இந்திய அரசு பணயம் வைத்தது தன் சொந்த மக்களை. மக்களுக்கெதிரான இச்சட்டத்தை திரும்பப் பெறச் சொல்லி, பல ஆண்டுகளாக மனித உரிமை அமைப்புகளும், பெண்கள் அமைப்புகளும், பொது மக்களும் போராடி வருகிறார்கள். எத்தனை விதமானப் போராட்டங்கள்? ஒவ்வொன் றுமே உயிரை நடுங்கச் செய்பவை!

மணிப்பூரைச் சேர்ந்த கவிஞரும் போராளியுமான இரோம் ஷர்மிளா சானு, ஆறு ஆண்டுகளாகப் பட்டினிப் போராட்டம் நடத்தி வருகிறார். நவம்பர் 2, 2000இல் போராட்டக் குழு ஆயுதப் படை அலுவலகத்தின் மீது தாக்குதல் நடத்தியது. அதற்கு பதிலடி கொடுக்க விரும்பிய ஆயுதப் படையினர், பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருந்த பொது மக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதில் பத்து பேர் உயிரிழந்தனர். செய்தித் தாள்களின் முதல் பக்கத்தில் வெளிவந்த ரத்தக் கறை படிந்த அந்த புகைப்படங்கள், இரோம் ஷர்மிளாவின் உடலை நடுங்கச் செய்தது. பதட்டத்தோடு வீடு திரும்பியவர், அமைதியாக தன் குடிசையில் இருந்தபடி சாகும் வரை பட்டினிப் போராட்டத்தை அறிவித்தார்.

இரோமின் உடல்நிலை மோசமாகிற போதெல்லாம், அவரைக் கைது செய்து வலுக் கட்டாயமாக மருத்துவமனையில் சிறை வைத்து, ட்யூப் வழியாக திரவ உணவை செலுத்தியது அரசு. மருத்துவமனைக்கு பதில் என்னை நீதிமன்றத்திற்குக் கொண்டு செல்லுங்கள். எனக்கான நீதி அங்குதான் கிடைக்கும்'' என தன் மெல்லிய ஆனால் உறுதியான குரலில் முழங்கினார் இரோம். ஏழ்மையான குடும்பத்தில் எட்டாவது குழந்தையாக இரோம் பிறந்தபோது, அவரது தாய்க்கு பால் சுரக்கவில்லை. இரவு நேரத்தில் இரோமைத் தூக்கிக் கொண்டு அவரது தந்தை வீடு வீடாகச் செல்வார். கைக் குழந்தை இருக்கிற தாய்மார்கள் இரோமுக்குப் பாலூட்டுவார்கள். இப்படியாக பல தாய்மார்களிடம் தாய்ப்பால் குடித்துதான் இரோம் வளர்ந்தார். அந்த தாய்மார்களுக்கு தான் செய்ய வேண்டிய கடமையாகத்தான் இரோம் இந்தப் பட்டினிப் போராட்டத்தைக் கருதுகிறார்'' என்கிறார், இரோமை மருத்துவமனையில் கவனித்துக் கொள்ளும் அவரது அண்ணன் சிங்காஜித்.

இரோமின் குடும்பம் மட்டுமல்ல, வடகிழக்கு மாநிலப் பெண்கள் அனைவருமே இதே மன உறுதியோடும், போராட்ட குணத்தோடும்தான் இருக்கிறார்கள். எப்போது முழு கடையடைப்பு, சாலை மறியல் அறிவிக்கப்பட்டாலும் அதற்கு முன்னிலை வகித் தனர். கடந்த 2004 ஆம் ஆண்டு தங்ஜம் மனோரமா என்ற பெண், ஆயுதப் படையினரால் பாலியல் வல்லுறவு செய்யப் பட்டு, கொல்லப்பட்டதைக் கண்டித்து – மணிப்பூர் தாய்மார்கள் நடத்திய நிர்வாணப் போராட்டம், மனித உரிமையில் நம்பிக்கை கொண்டவர்களை உறைய வைத்தது. இந்திய ராணுவம் எங்கள் சதையை தின்கிறது'',

இந்திய ராணுவம் எங்களை பலாத்காரம் செய்கிறது'' என வெற்றுடம்போடு ஆயுதப் படைப்பிரிவு அலுவலகத்தின் முன் போராட்டத்தில் ஈடுபட்டனர். தங்கள் துயரங்களையும், அநீதியையும் உலகுக்கு உணர்த்தியதற்காக அவர்கள் மூன்று மாதங்கள் சிறைத் தண்டனையை அனுபவித்தனர். மாதக்கணக்கில் நீடித்த போராட்டங்களில் நாட்டின் பல பகுதிகளில் இருந்தும் மணிப்பூர் மக்களுக்கு ஆதரவு திரண்டது. 32 சமூக அமைப்புகள் அந்தப் போராட் டங்களுக்கு கைகொடுத்தன. அதன் விளைவாக, இம்பால் மாவட்டத்தில் மட்டும் அந்தச் சட்டம் திரும்பப் பெறப்பட்டது.

இத்தகைய போராட்டங்களை எந்த கட்சியின் அரசும் பொருட்படுத்துவதில்லை. இக்கொடுஞ்சட்டத்தை நியாயப்படுத்தவே அவை முயல்கின்றன. வடகிழக்கு மாநிலங்களில் ஆயுதப்படை சிறப்புச் சட்டம் கட்டாயம் தேவை; இச்சட்டம் இல்லையெனில் ராணுவத்தால் பதட்டமான சூழலைக் கையாள முடியாது. ராணுவத்தினருக்கு எதிராகக் கிளம்பும் புகார்களை பொருட்படுத்தக் கூடாது. அப்போதுதான் ராணுவத்தினர் மனசாட்சியோடும் பாகுபாடின்றியும் நடந்து கொள்ள முடியும்'' என்ற சுயநலக் கருத்தை வெளிப்படுத்துகிறார், ராணுவ உயரதிகாரிகளில் ஒருவரான அரவிந்த் ஷர்மா.

சர்வதேச மனித உரிமைகளையும், மனிதநேய சட்டங்களையும் ஆயுதப் படையினர் தொடர்ந்து அத்து மீறுகின்றனர் என்றாலும், நீதிமன்றம் இதில் மிக அலட்சியமாகவே செயல்பட்டது. 1980, 82, 84, 85 மற்றும் 1991இல் தொடுக்கப்பட்ட வழக்குகளை விசாரித்த உச்ச நீதிமன்றம்,

ஆயுதப்படைச் சட்டம் காரணமில்லாமல் நடைமுறையில் இல்லை. இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் எந்த விதிமுறையையும் அது மீறவில்லை'' என தீர்ப்பளித்தது. மேலும், "பதட்டமான பகுதிகளாக அறிவிக்கப்பட்ட பகுதிகளை ஆறு மாதங்களுக்கு ஒரு முறை மறு பரிசீலனை செய்ய வேண்டும். ராணுவ அதிகாரி மீது வழக்குத் தொடர விரும்புகிறவர்கள், அரசாங்க அனுமதியோடுதான் அதைச் செய்ய இயலும். மத்திய அரசு அப்படி அனுமதி மறுக்கிற பட்சத்தில் நீதிமன்ற அனுமதியைப் பெறலாம்'' என்று கூறி யுள்ளது. நீதிமன்றத்தின் "நீதி' இதுதான். ஆனால், இந்தத் தீர்ப்பு பரவலாக அதிர்ச்சியைக் கிளப்பியது. நிலைமையை இது மேலும் மோசமடையச் செய்யும் என வெளிப்படையாக விமர்சனங்கள் கூறப்பட்டன. 1997இல் வெளிவந்த இந்தத் தீர்ப்பைத் தொடர்ந்து தேசிய மனித உரிமை ஆணையம், ராணுவத்தினர் சூழலை கவனமாகக் கையாள அந்தந்த அமைச்சகங்களுக்குப் பரிந்துரை செய்தது.

தொடர்ச்சியான போராட்டங்களை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர வேண்டிய நிர்பந்தத்தில் மன்மோகன் சிங், 2004இல் ஓர் உறுதிமொழியை அளித்தார். அதன்படி, "ஆயுதப்படை சிறப்புச் சட்டத்திற்குப் பதிலாக மனித உரிமைகளுக்கு பங்கம் விளைவிக்காத வேறொரு நல்ல சட்டம் கொண்டு வரப்படும். அச்சட்டம் தேசப் பாதுகாப்புக்கான உத்திரவாதத்தையும் அளிக்கும்' என்று வாக்குறுதி அளித்தார். இதற்காக அமைக்கப்பட்ட பரிசீலனைக் குழு, இன்றுவரை எந்த முடிவுக்கும் வந்ததாகத் தெரியவில்லை.

இந்நிலையில் "அம்னஸ்டி இன்டர்நேஷனல்' அமைப்பு, இந்திய அரசுக்கு கடும் கண்டனத்தைத் தெரிவித்துள்ளது. ஆயுதப்படை சிறப்புச் சட்டம் நடைமுறையில் உள்ள பகுதிகளில், மனித உரிமை மீறல் கள் அப்பட்டமாக நடந்துள்ளதாகவும், இந்திய அரசு இந்த உரிமை மீறல்களை ஊக்குவிப்பதாகவும் அது கூறியுள்ளது. சர்வதேச மனித உரிமைக் கூட்டமைப்பின் உறுப்பினராக இருப்பதால், இந்திய அரசு சர்வதேச மனித உரிமைச் சட்டங்களுக்கு கட்டுப்பட வேண்டும் என்றும் அது வலியுறுத்தி யுள்ளது. ஆயுதப்படை சிறப்புச் சட்டத்தை உடனே நீக்கவும், எதிர்காலத்தில் உருவாக்கப்படும் பாதுகாப்புச் சட்டமானது, சர்வதேச மனித உரிமைக் கோட்பாடுகளை உள்ளடக்கியதாக இருக்க வேண்டும் என்றும் அது கடுமையாகக் கூறியுள்ளது. காஷ்மீரிலிருந்தும் இச்சட்டத்தை அப்புறப்படுத்த, அம்னஸ்டி இன்டர்நேஷனல் பரிந்துரைத்திருக்கிறது. தவிர, ராணுவத்தினர் செய்ய வேண்டிய, செய்யக் கூடாத செயல்களையும் அது பட்டியலிட்டுள்ளது. முடிவில்லாத காலத்துக்கு, விளக்க முடியாத காரணங்களுக்காக, நடைமுறையில் இருக்கும் அறிவிக்கப்படாத அவசர நிலை'' என்று வடகிழக்கு மாநிலங்களின் சூழலை விளக்குகிறது, அம்னஸ்டி இன்டர்நேஷனல்.

ஆனால், இதற்கெல்லாம் இந்தியாவின் போலி தேசாபிமானிகள் செவிமடுப்பார்களா என்பதே கேள்வி. பல்வேறு பண்பாடு, மொழி, வாழ்க்கை முறையைக் கொண்ட மக்களைத் துப்பாக்கி முனையில் இணைத்து, இந்து சாம்ராஜ்யத்துக்குள் அடைத்ததே இந்திய ஜனநாயகத்தின் மிகப் பெரிய சாதனை! அப்படி இணைய மறுக்கிறவர்களே தீவிரவாதிகளாகவும், நக்சலைட்டுகளா கவும் சித்தரிக்கப்பட்டு, ஆயுதங்களுக்கு பதில் சொல்லிக் கொண்டிருக்கின்றனர். கிரிக்கெட்டில் இந்தியா பாகிஸ்தானை வெல்ல வேண்டும்; எல்லையில் இந்திய ராணுவம் பாகிஸ்தானிய ராணுவத்தினரைக் கூறு போட வேண்டும் என்பதுதான் பொதுப் புத்தியின் தேசப்பற்றாக இருக்கிறது. நாட்டைக் காக்கிறவர்கள் என ராணுவத்தினருக்குதான் எத்தனை மரியாதை! தவறுகளுக்கும் குற்றங்களுக்கும் அப்பாற்பட்டவர்களாக அவர்களை சட்டமும் அரசாங்கமுமே நடத்துவது மூடத்தனமில்லையா?

ஒரு குடும்பத்தின் நலனுக்காக ஒரு உறுப்பினரை இழக்கலாம்; ஒரு ஊரின் நலனுக்காக ஒரு குடும்பத்தை இழக்கலாம்; ஒரு சமூகத்தின் நலனுக்காக ஒரு ஊரை இழக்கலாம்; ஒரு நாட்டின் நலனுக்காக ஒரு இனத்தையே அழிக்கலாம் என்பதுதான் சர்வாதிகாரிகளின் கோட்பாடு. இந்தியாவில் இந்து ஆதிக்கவாதிகள் ஊன்றி வளர்த்தது இந்தக் கோட்பாட்டைத்தான். அதனால்தான் காஷ்மீரிகளையும், வடகிழக்கு மக்களையும் வேட்டையாடி, இந்திய ஜனநாயகத்தை நிலைநிறுத்துவதை அவர்கள் நியாயப்படுத்துகிறார்கள்.

அவரவர் உணவு, உடை, வாழ்க்கை முறை, மதம் மற்றும் பண்பாட்டைத் தேர்ந்தெடுக்கும் உரிமையை, எந்த சமூகம் தன் மக்களுக்கு மகிழ்ச்சியோடு வழங்கியிருக்கிறதோ, அதுவே ஜனநாயக நாடு. இந்தியா அப்படியொரு ஜனநாயக நாடாக எப்போதும் இல்லை. எல்லைகளை வளைப்பது என்பது வெறும் புவியியல் சார்ந்த பிரச்சனை அல்ல; அது உணர்வு ரீதியாக ஆராயப்பட வேண்டிய கோட்பாடு. ஆனால், ஆதிக்க அரசியலில் அதற்கான சாத்தியக் கூறுகள் இல்லை. இந்திய தேசியத்தை வணங்கி அதற்குள் மூழ்கிப் போய்விட்டால், எந்தப் பிரச்சனையும் இல்லை. அடிமைத்தனம் பழக்கமாகி, பின் அதுவொரு போதையாகி விடும். அப்படி மூழ்க முடியாதவர்கள்தான் "இந்தியனே வெளியேறு" என்று முழங்கிக் கொண்டிருக்கிறார்கள்.

நன்றி : தலித்முரசு மே 2007

Link to comment
Share on other sites

  • 9 months later...
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

Malaysian Tamils and Kenyan Gujaratis

- Sathish

TAMIL TRIBUNE, March 2008 (ID. 2008-03-03)

This article is archived at: http://www.geocities.com/tamiltribune/08/0303.html

When Malaysian Tamils were discriminated and their Hindu temples demolished, and Tamil protests against this were put down harshly, Indian Government did not speak a word on behalf of the Tamils (late 2007).

When some Gujarati owned shops in Kenya were destroyed during a "civil war" like situation between two political parties, Indian Government contacted the Kenyan Government and expressed concern, although the conflict has nothing to do with Gujaratis and destruction of the shops were not because they were of Gujarati-owned (other shops were also destroyed). (late 2007 and early 2008)

Link to comment
Share on other sites

  • 9 months later...
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்தியா வல்லரசு ஆகுமா? - இயக்குனர் சீமான்

http://uk.youtube.com/watch?v=AabnViHZZ8w&...feature=related

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சுய கட்டுப்பாடு இல்லாமல் மனம் போன போக்கில் போகிறான் எய்ட்ஸ் வந்து சாகிறான் அதுக்கு என்ன செய்வது. அதை வைத்து இந்திய பெண்களை கேவலப்படுத்தாலாம் என்று யாரும் நினைக்கவேண்டாம்.

இது ரெம்ப பிடிசிருக்கு...ஜடியா மணி அசத்துராருங்கோ.......... :)

Link to comment
Share on other sites

இளங்கோ இதை விடமாட்டார் போலிருக்கு :) ரொம்ப நாளைக்கு அப்புறம் அதே பதிவில் வந்திருக்கிறார்

சீமான் பேச்சு சரவெடி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மொழித்திரிவு எப்படி தமிழ் இனத்தை பலவீனப்படுத்தியிருக்கிறது எண்டு சீமான்

">

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சித்தரிப்புப் படம் கட்டுரை தகவல் எழுதியவர், அலெசியா பிராங்கோ மற்றும் டேவிட் ராப்சன் பதவி, ஃபீச்சர்ஸ் செய்தியாளர் 4 மணி நேரங்களுக்கு முன்னர் புதன் கோள், அதன் "பொருத்தமில்லாத" மையப்பகுதியில் தொடங்கி அதன் மேற்பரப்பின் குழப்பமான ரசாயன கலவை வரை, ஆச்சரியங்கள் நிறைந்தது. இந்தக் கோளின் தோற்றம் குறித்த பின்னணியிலும் ஆச்சரியத்திற்குக் குறைவு இல்லை. ஆனால், சைப்ரஸில் காணப்படும் பாறைகளில் அதற்கான சில பதில்கள் கிடைக்கக்கூடும். அறிவார்வம் பல ஆய்வாளர்களைப் பலி வாங்கியுள்ளது. அந்த வரிசையில் தாம் அடுத்தாக இருக்கக்கூடும் என்று நிக்கோலா மாரி அஞ்சினார். சைப்ரஸின் தொலைதூர மலைகளைச் சுற்றி வாகனம் ஓட்டும்போது மாரி வழிகாட்டலுக்கு தனது செல்போனை நம்பியிருந்தார். ஆனால் பகல்பொழுது சாய்ந்தபோது அவரது போனின் பேட்டரியும் குறைந்தது. தனது தங்குமிடத்திற்குத் திரும்பிச் செல்ல வழி தெரியாமல் அவர் தவித்தார். ”நான் 50 கி.மீ.க்கும் அதிகமாக (31 மைல்கள்) பயணித்தேன். அதன்போது நான் ஒரு வாகனத்தைக்கூட பார்க்கவில்லை," என்று அவர் கூறுகிறார். அவர் தனது வயிறு, இயந்திரம் மற்றும் தொலைபேசி பேட்டரிகளை நிரப்பக்கூடிய உணவு விடுதிக்குச் செல்லும் வழி தனக்கு நினைவில் இருப்பதாக நினைத்தார். ஆனால் அவர் அங்கு சென்றபோது அது வெறிச்சோடியிருப்பதைக் கண்டார். ஒரு திருப்பம் இறுதியில் அவரை மற்றொரு ஸ்தாபனத்திற்கு அழைத்துச் சென்றது, ஆனால் அந்த தனிமையான மலைச் சாலைகளில் தனது உயிருக்குப் பயந்ததாக அவர் ஒப்புக்கொள்கிறார். "நான் சில மோசமான கணிப்புகளைச் செய்தேன்," என்று அவர் கூறுகிறார். அதிர்ஷ்டவசமாக அவரது பயணம் வீண் போகவில்லை. மாரி இத்தாலியில் உள்ள பாவியா பல்கலைக்கழகத்தில் கோள் புவியியலாளராக உள்ளார். அவர் சூரிய குடும்பத்தில் நமது அண்டை கோள்களின் உருவாக்கம் மற்றும் பரிணாம வளர்ச்சியை ஆய்வு செய்கிறார். அவர் தனது முனைவர் பட்டத்திற்காக செவ்வாய் கோளின் எரிமலை குழம்பு ஓட்டங்களை ஆய்வு செய்தார். இந்த நேரத்தில் அவர் சைப்ரஸ் வழியாக புதன் மீது தனது பார்வையைச் செலுத்துகிறார். புதனில் காணப்படும் பாறைகளுடன் வினோதமான ஒற்றுமையைக் கொண்டிருப்பதாக நம்பப்படும் "போனினைட்" என்று பெயரிடப்பட்ட ஒரு குறிப்பிட்ட வகை பாறையைக் கண்டுபிடிப்பதே அவரின் நோக்கமாக இருந்தது. அவர் நினைப்பது சரியாக இருந்தால் அந்தக் கோளின் தனித்துவமான தோற்றம் தொடர்பான ஒரு துப்பு கிடைக்கலாம்.   சூரியனில் இருந்து முதல் பாறை பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சித்தரிப்புப் படம் புதன் கோளில் அனைத்துமே உச்ச அளவில் உள்ளது. சந்திரனைவிட சற்றே அதிக கன அளவு கொண்ட புதன், சூரிய குடும்பத்தின் மிகச் சிறிய கோள். அது சூரியனுக்கு மிக அருகில் உள்ளது. அதில் வெப்பத்தைத் தக்கவைக்க வளிமண்டலம் இல்லை. அதாவது மேற்பரப்பில் வெப்பநிலை பகலில் 400 டிகிரி செல்ஷியஸ் முதல் இரவில் -170 டிகிரி செல்ஷியஸ் (750F முதல் -275F) வரை மாறுபடும். இது சூரிய குடும்பத்தில் மிகச் சிறிய சுற்றுப்பாதையைக் கொண்டுள்ளது; அதன் ஒவ்வோர் ஆண்டும் 88 புவி நாட்கள் மட்டுமே உள்ளன. ”இன்று நாம் காணும் புதன் ஒரு காலத்தில் இருந்த மொத்த கோளின் உட்கருவைத் தவிர வேறில்லை” என்கிறார் நிக்கோலா மாரி. புதன் இருக்கும் இடமானது விஞ்ஞானிகளின் ஆய்வை மிகவும் கடினமாக்கியுள்ளது. இதற்கு வெப்பமும் ஒரு காரணம். சூரியனுக்கு மிக அருகில் சுற்றும் இந்தக் கோளை நெருங்கும் விண்கலங்கள் வெப்பத்தைத் தாங்கும் திறன் கொண்டவையாக இருக்க வேண்டும். இரண்டாவது ஈர்ப்பு விசை. சூரியனை நெருங்க நெருங்க அதன் இழுவை சக்தி வலுவடையும். இது விண்கலத்தை விரைவுபடுத்தும். மிக வேகமாகப் பயணிப்பதைத் தவிர்க்க விண்கலம் ஒரு சிக்கலான பாதையில் செல்ல வேண்டும். இது மற்ற கிரகங்களைச் சுற்றி நிறைய மாற்றுப் பாதைகளை உள்ளடக்கியதாக இருக்கும். இது அதன் வேகத்தைக் கட்டுப்படுத்த உதவும். ஆனால் விண்கலம் தன் வேகத்தைக் குறைத்து, கட்டுப்பாட்டை மீண்டும் பெற அதிக எரிபொருள் தேவைப்படுகிறது.   பட மூலாதாரம்,NICOLA MARI படக்குறிப்பு,இந்த பண்டைய ‘சால்ட் லேக்’ போன்ற சைப்ரஸின் சில பகுதிகளில் காணப்படும் தரிசு நிலப்பரப்புகள், புதன் கோளின் தோற்றம் பற்றிய தடயங்களைக் கொண்டிருக்கலாம். "சுற்றுப்பாதை கண்ணோட்டத்தில் பார்த்தால் வியாழனைவிட புதன் கோளை அடைவது கடினம்,” என்று கூறுகிறார் ஐரோப்பிய விண்வெளி ஆய்வு மையத்தின் ’பெபிகொலம்போ’ என்று அழைக்கப்படும் புதன் கோளுக்கான பயணத் திட்டத்தின் விண்கல இயக்க மேலாளர் இக்னாசியோ கிளெரிகோ. மாரி சைப்ரஸில் செய்துகொண்டிருக்கும் பணி இந்தத் திட்டத்தில் பங்கு வகிக்கிறது. இந்த சிரமங்கள் காரணமாக நமது மற்ற அண்டை கோள்களைவிட புதன் குறைவாகவே ஆய்வு செய்யப்பட்டுள்ளது. இரண்டு முந்தைய பயணங்கள் - மரைனர் 10 மற்றும் மெசஞ்சர் - அதன் மேற்பரப்பை வரைபடமாக்கும் அளவுக்கு நெருக்கமாகப் பறந்தன. புதன் பள்ளங்களால் நிரம்பியுள்ளதையும், அதன் கட்டமைப்பு பற்றிய சில முக்கிய ஆச்சரியங்களையும் அது வெளிப்படுத்தியது. புதன் கோளின் மையப்பகுதி ஆச்சரியங்கள் நிறைந்தது. மற்ற பாறை அடிப்படையிலான கிரகங்கள் - வெள்ளி, பூமி மற்றும் செவ்வாய் அனைத்தும் ஒப்பீட்டளவில் சிறிய மையப்பகுதியைக் கொண்டுள்ளன. அவை தீக்குழம்பால் செய்யப்பட்ட தடிமனான மேலோடு மற்றும் கடினமான மேற்பரப்பால் சூழப்பட்டுள்ளன. இருப்பினும் புதனின் மேலோடு வியக்கத்தக்க வகையில் மெல்லியதாகத் தோன்றுகிறது. அதே நேரம் அதன் மையமானது எதிர்பாராதவிதமாக மேற்பரப்பைவிட மிகப் பெரியதாக உள்ளது. "இது பொருத்தமில்லாதது," என்று மாரி கூறுகிறார். மேலும் புதன் ஒரு காந்தப்புலத்தால் சூழப்பட்டிருப்பதை இந்தப் பயணங்கள் வெளிப்படுத்தின. அதன் அடர்த்தியுடன் இணைந்து, இது ஒரு இரும்பு மையத்தைக் கொண்டிருப்பதைக் குறிக்கிறது. மேலும் பூமியைப் போலவே அதன் மையப் பகுதியும் ஓரளவு உருகிய தீக்குழம்புகள் அடங்கியதாகக் இருக்கக்கூடும். புதனின் மேற்பரப்பில் உள்ள ரசாயனங்களின் விகிதம் மிகவும் அசாதாரணமானது. தொலைவில் இருந்து கிரகத்தின் வேதியியல் கலவையைப் பகுப்பாய்வு செய்ய "ஸ்பெக்ட்ரோமெட்ரி" என்ற நுட்பத்தைப் பயன்படுத்துவதன் மூலம் விஞ்ஞானிகள், புதன் கோள் தனது அண்டை கோள்களைக் காட்டிலும் தோரியத்தின் அதிக செறிவுகளைக் கொண்டிருப்பதைக் கண்டுபிடித்துள்ளனர். ஆரம்பக்கால சூரிய குடும்பத்தின் தீவிர வெப்பத்தில் தோரியம் ஆவியாகியிருக்க வேண்டும். அதற்குப் பதிலாக அதன் தோரியம் அளவு மூன்று கோள்கள் தொலைவில் உள்ள செவ்வாய் கிரகத்திற்கு ஒத்ததாக உள்ளது. சூரியனில் இருந்து அதன் தூரம் காரணமாக செவ்வாய் கிரகத்தில் குளிர்ந்த வெப்பநிலையில் தோரியம் உருவாகியிருக்கும்.   பட மூலாதாரம்,NICOLA MARI படக்குறிப்பு,"ஆலிவின்ஸ்" என்று அழைக்கப்படும் பல பச்சை படிகங்களைக் கொண்ட போனினைட்டின் மாதிரி இத்தகைய முரண்பாடுகள், சூரியனில் இருந்து வெகு தொலைவில் செவ்வாய் கோளுக்கு அருகில் புதன் உருவாகியிருக்கக்கூடும் என்று சில கோள் விஞ்ஞானிகள் ஊகிக்க வழிவகுத்தது. அதன் பெரிய மையப்பகுதிக்கு ஏற்ற, பூமியின் அளவை ஒத்த நிலைத்தன்மையுடன் அது முதலில் உருவாகியிருக்க வேண்டும். அதன் வரலாற்றின் ஒரு கட்டத்தில், புதன் மற்றொரு கோளின் மேற்பரப்புடன் மோதியதாகவும், இந்த மோதல் சூரியனை நோக்கி அதை சுழலச் செய்ததாகவும் அனுமானிக்கப்படுகிறது. அத்தகைய மோதல் அதன் மேலோடு மற்றும் அதன் மேற்பரப்பின் பெரும்பகுதியைத் தகர்த்து அதைப் பறக்கச் செய்திருக்கும். அந்த நேரத்தில் ஒரு பெரிய திரவ மையம் உருவாகியிருக்கும். "இன்று நாம் காணும் புதன் ஒரு காலத்தில் இருந்த கிரகத்தின் உட்கருவைத் தவிர வேறொன்றுமில்லை," என்று மாரி கூறுகிறார். வேற்றுகிரக பாறைகள் இந்தக் கோட்பாட்டை சோதிப்பதற்கான சிறந்த வழி, புதனின் மேற்பரப்பில் இருந்து பாறைகளின் மாதிரிகளைப் பகுப்பாய்வு செய்வது அல்லது அதன் மேற்பரப்பில் துளையிடுவது. ஆனால் எந்த ஆய்வும் மேற்பரப்பில் தரையிறங்க முடியவில்லை. இதனால் விஞ்ஞானிகள் மற்ற தகவல்களைத் தேடுகிறார்கள். சில தடயங்கள் ஆபிரைட்டுகள் எனப்படும் விண்கற்களில் இருந்து வரலாம், அவை முதலில் கண்டுபிடிக்கப்பட்ட பிரான்ஸ் கம்யூன் ஆப்ரெஸின் பெயரால் அறியப்படுகிறது. இந்தப் பாறைகளின் ரசாயன கலவை புதன் கோளைப் போலவே உள்ளது. புதனை அதன் தற்போதைய நிலைக்குக் கொண்டுவந்த, கோள்களுக்கு இடையே நிகழ்ந்த மோதலின் விளைவாகச் சிதறிய பாறைத் துண்டுகளாக அவை இருக்கக்கூடும் என்றுகூட சில விஞ்ஞானிகள் கருதுகின்றனர். இது ஒரு நம்பக்கூடிய கருதுகோள்தான். ஆனால் மாரிக்கு இதில் சந்தேகம் உள்ளது. புதன் உருவான அதே சூரிய நெபுலா பகுதியில் உருவான சிறுகோள்களில் இருந்து ஆபிரைட்டுகள் வந்ததாக இதுவரை கிடைத்த சான்றுகள் தெரிவிக்கின்றன. ஆனால் அவை ஒருபோதும் கிரகத்தின் பகுதியாக இல்லை. "புவி வேதியியல் ஒப்புமைகள்" என்பதில் இருந்து ஒரு மாற்று ஆதாரம் வரலாம். அதாவது பூமியில் உருவாகும் பாறைகள் மற்ற கிரகங்களில் காணப்படும் அமைப்புகளை ஒத்திருக்கும். பூமிக்கு அருகில் புவியியல் செயல்முறைகள் பற்றிய சிறந்த அறிவை நாம் பெற்றுள்ளோம். மேலும் இந்தப் புரிதலைப் பயன்படுத்தி இதை ஒத்த தோற்றத்துடன் இருக்கும் பிற கோள்களின் உருவாக்கம் பற்றிய கோட்பாடுகளை நாம் உருவாக்கலாம்.   பட மூலாதாரம்,NICOLA MARI படக்குறிப்பு,டெதிஸ் பெருங்கடலின் அடிப்பகுதியில் வெடித்த பழங்கால எரிமலையின் தடயங்களை சைப்ரஸில் உள்ள ஒரு வெளிப்பகுதி காட்டுகிறது. சைப்ரஸுக்கான மாரி செய்துவரும் பணியின் நோக்கம் இதுதான். அவர் தேடும் குறிப்பிட்ட கட்டமைப்பை அது கொண்டிருக்கலாம் என்று கிடைக்கப் பெறும் புவியியல் தரவுகள் கூறுகின்றன. இந்த ஆளரவமற்ற மலைகள் வழியாகத் தனது தேடலைத் தொடங்கும்போது அவர் தன்னை ஒரு "நவீன இந்தியானா ஜோன்ஸ்" போல் உணர்ந்ததாகக் குறிப்பிடுகிறார். சைப்ரஸ் என்பது 90 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு டெதிஸ் பெருங்கடலுக்கு அடியில் உருவான பூமியின் மேலோடு. மோதிய கண்டத்தட்டுகள் (tectonic plates) இறுதியில் அதை மேற்பரப்பை நோக்கித் தள்ளியது. இன்று நாம் அறியும் தீவாக அது மாறியது. தாதுக்கள் நிறைந்த பச்சைப் பாறைகளுடன் அந்த நிலப்பரப்பு வேறு ஒரு உலகத்தின் உணர்வைக் கொண்டுள்ளது என்கிறார் மாரி. "சைப்ரஸ் மலைகளின் சில பகுதிகளில் நடக்கும்போது நீங்கள் இன்னும் ஒரு பண்டைய கடல் படுகையில் நடப்பது போல் உணர்கிறீர்கள்," என்று அவர் கூறுகிறார். இறுதியில் அவர் தான் தேடும் போனினைட்ஸ் எனப்படும் எரிமலைக் குழம்புகளின் குறிப்பிட்ட துண்டுகளைக் கண்டுபிடித்தார். மாரி வீடு திரும்பினார். நாசா மற்றும் இத்தாலியில் உள்ள கோள் அறிவியல் அருங்காட்சியகத்தில் சக ஊழியர்களுடன் பணிபுரிந்து, பாறைகளின் கலவையைப் பகுப்பாய்வு செய்து, புதனிலிருந்து எடுக்கப்பட்ட அளவீடுகளுடன் ஒப்பிட்டார். முடிவுகள் வந்தபோது அவர் ஆச்சரியப்பட்டார். "அவை ஒன்று போல் இருக்கவில்லை. ஒன்றாகவே இருந்தன." மெக்னீசியம், அலுமினியம், இரும்பு போன்ற தனிமங்களின் கலவையானது, ராட்சத மையத்துடன் இருக்கும் ஒரு மர்மமான கோளில் காணப்படுவது போலவே இருந்தது. ஒரே வித்தியாசம் என்னவென்றால், சைப்ரஸின் பாறைகள் ஆக்ஸிஜனேற்றப்பட்டன. இது பூமியின் ஆக்ஸிஜன் நிறைந்த வளிமண்டலத்தில் தவிர்க்க முடியாதது. இது புதன் கோளின் முதல் உண்மையான நிலப்பரப்பு அனலாக் என்று மாரி கூறுகிறார். கிரகத்தைப் பற்றிய நமது புரிதலுக்கு மதிப்புமிக்க கூடுதல் தரவை இது வழங்குகிறது. இந்த பாறைகள் பற்றிய கூடுதல் ஆய்வு, புதனின் கடந்த கால புவியியல் செயல்பாடு பற்றிய சில தடயங்களைக் கண்டறிய உதவும். எல்லாவற்றுக்கும் மேலாக சைப்ரஸ் போனினைட்டுகள் பூமியின் மேலோட்டத்தில் ஓர் ஆழமற்ற புள்ளியில் இருந்து வெடித்த எரிமலைக் குழம்பில் இருந்து உருவானவை என்பதை நாம் அறிவோம். புதன் கோளில் உள்ள பாறைகளுடனான அவற்றின் முழுமையான ஒற்றுமை, அங்குள்ள மேலோட்டம் வழக்கத்திற்கு மாறாக மேற்பரப்புக்கு அருகில் உள்ளது என்பதைக் காட்டுகிறது. இது கிரகத்தின் அசல் மைய மேலோடு வெடித்ததால் ஏற்பட்ட தோற்றத்துடன் ஒத்துப் போகிறது.   எதிர்கால பயணங்கள் பட மூலாதாரம்,GETTY IMAGES மாரியின் கண்டுபிடிப்புகள் மிகப் பெரிய புதிரின் ஒரு பகுதி. மேலும் பல நுண்ணறிவுகள் பெபிகொலம்போ பணியிலிருந்து வரக்கூடும். இது ஐரோப்பிய விண்வெளி ஆய்வு மையம் மற்றும் ஜப்பானுக்கு இடையிலான ஒத்துழைப்பு ஆகும். இது அக்டோபர் 2018இல் தொடங்கப்பட்டது. இதற்கு கணிதவியலாளரும் பொறியியலாளருமான கியூசெப்பே (பெபி) கொலம்போவின் பெயர் சூட்டப்பட்டது. மரைன் 10 விண்கலத்தின் சிக்கலான பாதையைத் திட்டமிட அவர் உதவினார். விண்கலத்தின் சுற்றி வளைந்து செல்லும் பாதையின் ஒரு பகுதியாக புதனுக்கு அருகில் இருந்து மூன்று முறை செல்லும் பாதைகளை பெபி கொலம்போ உருவாக்கியுள்ளார். விண்கலத்தின் வேகத்தைக் குறைப்பதே இதன் நோக்கம். விண்கலம் 2025இல் கிரகத்திற்கு அதன் இறுதி அணுகலைச் செய்யும். அங்கு அது இரண்டு சுற்றுக் கலங்களாக பிரியும். ஒன்று காந்தப்புலத்தை அளவிடும். மற்றொன்று மேற்பரப்பு மற்றும் உட்புற அமைப்பை ஆய்வு செய்யும். புவி வேதியியல் ஒப்புமைகள் குறித்த மாரியின் ஆராய்ச்சி இங்கே பொருத்தமானதாக இருக்கலாம். ஏனெனில் அவை இந்த அளவீடுகளில் சிலவற்றுக்கான வரையறைகளாகப் பயன்படுத்தப்படலாம் என்று அவர் கூறுகிறார். "புதன் போன்ற ஒப்புமைகளின் ஆய்வக அளவீடுகள் எங்கள் அகச்சிவப்பு (வெப்ப அகச்சிவப்பு) ஸ்பெக்ட்ரோமீட்டர்கள் மற்றும் சில வகையான எக்ஸ்-ரே ஸ்பெக்ட்ரோமீட்டர்கள் மூலம் பெறப்பட்ட அளவீடுகளின் முடிவுகளைச் சிறப்பாக விளக்க உதவுகிறது," என்று பெபிகொலம்போவின் திட்ட விஞ்ஞானி ஜோஹன்னஸ் பென்காஃப் விளக்குகிறார். அதன் பிறகான ஆண்டில் இந்தக் கலங்கள் புதனின் கனிம கலவை, அதன் நிலப்பரப்பு மற்றும் அதன் உட்புற அமைப்பு ஆகியவற்றின் துல்லியமான அளவீடுகளைச் செய்யும். முந்தைய பயணங்களின் தரவுகளுடன் இந்தத் தரவை ஒப்பிடுவதன் மூலம், கிரகம் இன்னும் புவியியல் ரீதியாக "உயிருடன்" உள்ளதா என்பதை விஞ்ஞானிகள் தீர்மானிக்க முடியும். புதனின் உள்ளே இருந்து பொருள் ஆவியாவதால் உருவானதாகத் தோன்றும் ’வெற்று இடைவெளிகள்’ மேற்பரப்பில் உள்ளன. ஆனால் இந்தச் செயல்முறை இன்னும் நடக்கிறதா என்பது தெளிவாக இல்லை. இந்த அளவீடுகள் இறுதியாக புதனின் மர்மமான தோற்றத்தின் வேர்வரை செல்ல அனுமதிக்கலாம். மேலும் அதை நீட்டிப்பதன் மூலம் பிரபஞ்சத்தில் நமது இடம் பற்றியும் அதிகம் சொல்ல முடியும். "புதன் ஏன் மிகவும் அடர்த்தியாக உள்ளது, அதன் மையப்பகுதி ஏன் மிகவும் பெரிதாக உள்ளது என்ற கேள்விகள் நமது சூரிய மண்டலத்தின் உருவாக்கம் மற்றும் வரலாற்றைப் புரிந்துகொள்வதற்கு மிகவும் முக்கியமானது" என்று பென்காஃப் கூறினார். ”விண்கலத்தில் மிகவும் பரந்த அளவிலான உபகரணங்கள் மற்றும் கருவிகள் உள்ளன. அவை உண்மையில் நமது அறிவியல் அறிவை மேம்படுத்தும் என்று நாங்கள் நம்புகிறோம்." சூரியனுக்கு அருகில் இருக்கும் முதல் கிரகத்தை நாம் பார்க்கும் விதம் ஏற்கெனவே நிறைய மாறிவிட்டது. "பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு, புதன் ஒரு ஆர்வத்தைத் தூண்டாத கிரகமாகக் கருதப்பட்டது," என்கிறார் பென்காஃப். "ஆனால் நான் இன்னும் பல ஆச்சரியங்களை எதிர்பார்க்கிறேன்,"என்று அவர் குறிப்பிட்டார். மாரிக்கு புதன் கோள் ஆரம்பம் மட்டுமே. "வட அட்லாண்டிக் பெருங்கடலில் உள்ள ஒரு தீவான லான்சரோட்டில் செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பில் உள்ளது போன்ற எரிமலைக்குழம்பு கிடைத்தது. மேலும் வெள்ளி கோளின் தடயங்களைக் கண்டறிய, சிசிலி, ஹவாய், இந்தோனீசியா மற்றும் ரஷ்யாவில் உள்ள கம்சட்காவை ஆய்வு செய்து வருகிறோம்," என்றார் அவர். பெபி கொலம்போவின் முழு அறிவியல் செயல்பாடுகள் 2026இல் தொடங்க இருக்கும் நிலையில் பூமியில் உள்ள இந்தப் பாறைகள் சூரியக் குடும்பத்தில் உள்ள நமது மற்ற அண்டை கோள்களைப் பற்றி எவ்வளவு சொல்ல முடியும் என்பதை விரைவில் நாம் தெரிந்துகொள்ள முடியும். https://www.bbc.com/tamil/articles/c89z8v501p9o
    • அப்படியெல்லாம் லேசில விடமுடியாது பையா ....... எப்படியும் உங்களுக்கு சந்தர்ப்பம் தராத பெரியப்பாவுக்கு கொஞ்சம் மேல நின்றால்தான் மனம் ஆறும்.......!  😂
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.