Jump to content

தந்ரா தியானம்


Recommended Posts

தந்ரா தியானம்

 

10984098_433308263488697_319912138959814913_n

★சித்தர்களில் ஓரிருவர் தவிர ஏனையோர் இல்லறம் நடத்தியே வாழ்ந்துள்ளனர். யோகமார்க்கத்தில் மெய்யறிவு பெற்று இறைநிலை அடைவதை மட்டுமல்ல, இல்லறத்தில் வாழ்வோர்களும் எல்லா விஷயங்களையும் இறையுணர்வோடு செய்து இறைநிலை அடைய முடியும் என்று வாழ்ந்து காட்டி அதற்கான வழிகளையும் சொல்லியிருக்கிறார்கள். சிற்றின்பமாகட்டும், பேரின்பமாகட்டும் அதாவது யோகமானாலும், போகமானாலும் இரண்டிலும் உபயோகப் பொருள் விந்துதான்.

★நாம் உண்ணும் உணவிலிருந்து ஏழு தாதுக்கள் பெறப்பட்டு உருவாவது இந்த தேகம். சாரம், செந்நீர், ஊன், கொழுப்பு, எலும்பு, மூளை, வெண்ணீர் என்ற ஏழாகும். அதாவது இரசம், இரத்தம், மாமிசம், மேதசு, அத்தி, மச்சை, சுக்கிலம் என்றும் சொல்வார்கள். சாரம், செந்நீர், வெண்ணீர் இம்மூன்றும் ஒருநாள் ஒரு புல்லின் நுனியில் நிற்கும் பனித்துளி போல் திரண்டு நிற்கும் என்றும்.

★அத்திரட்சியே விந்து என்றும் இது 21 நாட்கள் வரை உடம்பில் வளரும் என்றும் திருமூலர் சொல்கிறார்(திருமந்திரம் -1934). மனித உடலை உருவாக்குவது நாதபிந்துக்கள். இந்த நாதபிந்துக்களை உருவாக்குவது அன்னம். எனவேதான் இது அன்னத்தாலாகிய உடம்பாகிய அன்னமய கோசம் எனப்படுகிறது. ஆண்களுக்கு பிந்து நாதமும், பெண்களுக்கு சுரோணித நாதமும் உருவாகிறது. இந்த விந்தானது மூன்று நாட்கள் உடல் விந்தாகவும், பிறகு மன விந்தாகவும் மாற்றமடையும் என்றும், அதை கலையாகிய அறிவு விந்தாக அமைத்து புருவ மத்தியில் தியானித்து இருப்பவர்களுக்க ு உடலைவிட்டு நீங்காது என்றும், உலக இல் வாழ்வில் பற்று கொண்டோர்களுக்கு மனதுடன் அழியும் அல்லது கழிவாகி வெளியேறும் என்றும் சொல்லப்பட்டுள்ளது.

★அழிகின்ற விந்து அளவை யறியார் கழிகின்ற தன்னையுட் காக்கலுந் தேரார் அழிகின்ற காயத் தழிந்தயர் வுற்றோர் அழிகின்ற தன்மை யறிந்தொழி யாரே – (தி ம – 1936)

★இவ்வாறு வீணே கழியும் விந்தின் பெருமையை உணராதவர்கள் அதை வீணாக்கி உடலையும் மனதையும் நாசம் செய்கின்றனர். ஒரு துளி விந்தில் 80 துளி வெண்ணீர் துளிகள் உள்ளன. ஒரு வெண்ணீர் துளி 80 துளி இரத்தத்தின் சாறு ஆகும். ஆக ஒரு துளி விந்து அழிந்தால் 6400 துளி இரத்தம் வீணாகிறது என்பது யாருக்கும் தெரிவதில்லை. இதனால் உடலும் தளரும் என்பதை யாரும் உணர்வதுமில்லை. ஆனால் காமசக்தியான விந்து சக்தியையும், காம உணர்ச்சியையும், புணர வேண்டும் என்கிற ஆசையையும் மனிதன்ஓரளவுக்கு மேல் அடக்க முடியாது, அடக்கவும் கூடாது.

★அவ்வாறு அடக்கும் போது விளைவுகள் மோசமாகும். மனநோய் உருவாகலாம். சரி அதிகமாகப் புணர்ந்தாலோ உடல் நலம் கெடும். என்னதான் செய்யலாம் என்று சிந்தித்த சித்தர்கள் அதற்கென சில வழிமுறைகளைக் கண்டு பிடித்தனர். வஜ்ரோலி முத்திரை, பரியங்க யோகம் போன்ற சில யோகங்களே அவைகள். உலகியல் வாழ்வின்படி மணம் செய்து கொண்ட யோகியர் பெண்ணிடம் சேர்ந்தாலும் உடல்கள் சங்கமிக்குமே அல்லாது உள்ளம் சிவனிடத்து இருக்குமாகையால் விந்து கழியாது.இதற்கு இருபாலினருக்கும ் பயிற்சியும் ஒருங்கிணைந்த மனப் போக்கும் அவசியம்.

★இதுவே நற்போகமென்றும், இதனால் விரைவில் குண்டலினி மகாசக்தி மகிழ்ந்து மேலேறுவாள் என்று சொல்லப்பட்டுள்ளது. இத்தகைய யோகியர் மக்கட்பேறு வேண்டி விந்துவினை விடுவார்களே அன்றி, காதல் வயப்பட்டு அதிகம் விடமாட்டார்கள். விந்துவினை மூலதாரத்தில் அனலால் செம்மையுறச் செய்து, அங்கிருந்து தொப்புள் முதல் நெஞ்சம் வரையுள்ள சூரிய மண்டலத்துக்கு வலது நாடி வழியாக ஏற்றி, அங்கிருந்து நெற்றி வரை இடப்பால் நாடி வழியாக ஏற்றி சந்திர மண்டலம் சேர்ந்து அமுதம் உண்ணலாம். இந்த வேளையில் மேலேறும் விந்துவைக் கட்டும் வழி உள்ளது. திருவருட் சக்தியின் துணை கொண்டு மூலத்திடை விளங்கும் அனலை எங்கும் போகமாட்டாமல் சிவசிவ என்னும் நான்மறையால் கைவரச் செய்து யோகியானவர் தன் வாழ்க்கைத் துணைவியாம் பெண்ணின் செந்நீராம் நாதத்துடன் தன் நடுநாடி வழியாக விந்துவாம் வெண்ணீரைச் செலுத்தினால் அவ்விந்து கட்டுப்படும்.

★இதை ஒவ்வொரு ஆதாரமாக மேலேற்றுவார்களாம். இதற்கு நெற்றி வழியாக அருந்தும் சந்திர அமிர்தமும் துணை நிற்கும். ஆரம்ப நிலையில் குண்டலினி யோகம் செய்கிறவர்களுக்கு ஏற்படும் அதிகபட்சமான வீரியத்தை சமநிலைக்கு கொண்டுவர பெண் சம்போகம் தேவையாகும். பிறகு அவர்கள் வஜ்ரோலி முத்திரை மூலமாக விந்து விரையமாகாமல் போகம் செய்து, அதையும் சிவயோகமாகச் செய்து இருவரும் மேன்மை அடைவர். வஜ்ரோலி முத்திரை தேர்ந்த குரு மூலம் கற்றுக் கொள்ள வேண்டியது அவசியம்.இதில் பயிற்சியாளர் முதலில் தண்ணீரை ஆண்குறி மூலமாக உள்ளிழுக்க பயிற்றுவிக்கப்படுவார். பிறகு பாலை உள்ளிழுக்க பயில வேண்டும். பிறகு தேன். இந்த மூன்றிலும் நன்கு தேர்ச்சி பெற்றவர்களை பாதரசத்தை உள்ளிழுக்கப் பயிற்றுவிப்பார்கள்.

★இதனால் என்ன பயன் என்றால் சம்போகம் செய்யும் போது விந்து வெளியேறினாலும், அடுத்த நொடியே மூச்சுப் பயிற்சியினாலும், வயிற்றுத் தசைகளைச் செயல் படுத்தியும் அடிவயிற்றில் ஒரு வெற்றிடத்தை உருவாக்கி, வெளியைறிய விந்துவை உள்ளே இழுத்து விடுவார்கள்.

★எனவே மனதின் இச்சையையும் தீர்த்துக் கொண்டு, விந்துவையும் விரையமாகாமல் காத்து தேகத்தை வலுவாக்கிக் கொள்ளலாம். இது மிகவும் கடுமையான பயிற்சியாகும். விளையாட்டாக எதுவும் செய்தால் விபரீதமாகிவிடும். குரு அவசியம். இதில் தேர்ச்சி பெற்ற குருவெல்லாம் அவ்வளவு எளிதில் வெளியே காட்டிக் கொள்ள மாட்டார்கள். ஏனென்றால் இன்றைய காலகட்டங்கள் சரியில்லை. இதைப் பயன்படுத்தி தவறு செய்பவர்களே அதிகம் காணப்படுவார்கள் என்பது மறுக்க முடியாத உண்மை. மாதம் இருமுறை சம்போகம் செய்பவர்களுக்கு இதெல்லாம் தேவையில்லை என்பதே சித்தர்கள் வாக்கு. யோக மார்க்கத்தில் மேன்மையடைய சம்போகத்தையே பயன்படுத்தும் தாந்திரீக யோகமும் உண்டு. அதாவது மன உணர்வினை உடலில் அனுபவித்து, விந்தை வெளிவிடாது மனதை ஒரு நிலைப்படுத்துவர ். கடும் பயிற்சிக்குப் பின் இருவருடைய ஒத்துழைப்பின் அடிப்படையில் இந்தக் கலை சிறக்கும்.

★இந்த நிலையில் யோகியானவர் யோகாசனம் தெரிந்த பெண்ணோடு உடல் அதிக உஷ்ணமடையாத வண்ணமும், சுவாசம் தறிகெட்டு ஓடாத வண்ணமும் சுவாச முறைகளைக் கையாண்டு நீண்ட நேரம் சம்போகம் செய்வார். இந்த நேரத்தில் காம உணர்வோடு கூடாமல், சிந்தையை புருவ மத்தியில் திரட்டி, விந்தை வெளியே விடாமல் நீண்ட நேரம் கூடி உள்ள உணர்வுகளை ஒருங்கிணைத்து தெய்வநிலை அடைவர். உடல் புணர்ச்சி நிலையில் திளைத்திருந்தாலும் மனம் மட்டும் புருவ மத்தியிலேயே நிலைத்திருக்கும். இதனால் குண்டலினியானது வெளியே கிளம்பும். போகத்தால் குண்டலினியைக் கிளப்புவர். இதில் பெண்ணும் ஒத்துழைத்து மனதை புருவ மத்தியில் நிறுத்திக் கொள்ள வேண்டும். இல்லையெனில் மனதை ஏதாவது ஒரு ஆதாரத்தில் நிறுத்தலாம்.

http://www.pannaiyar.com/category/வாழ்க்கை-முறை/

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.