Jump to content

உள்ளமெனும் கோவில்


Recommended Posts

உள்ளமெனும் கோவில்

 

 

உலகில் காலங்காலமாக தெய்வ வழிபாட்டுக்கென கோவில்கள் எழுப்பப்பட்டு வந்துள்ளன. சிறியதும் பெரியதுமாக பல கோடி கோவில்கள் உலகம் முழுவதுமாக பரவிக்கிடக்கின்றன. இவற்றில் தலைசிறந்தவையாக உள்ளவற்றைக் காண்கையில் தற்போது நடைமுறையில் உள்ள தொழில்துறை நிபுனத்துவம் இல்லாத அக்காலத்தில்கூட இத்தகைய பல பிரமாண்டமான கோவில்கள் எழுப்பப்பட்டதானது நம்மை பிரமிக்கவைக்கின்றது.

உதாரணமாக, ஆரம்பத்தில் விஷ்ணு வழிபாட்டிற்காக கம்போடிய நாட்டில் பல நூறு வருடங்களுக்கும் முன் எழுப்பப்பட்ட “அங்கோர் வாட்” எனப்படும் கோவில் உலகில் உள்ள இந்து கோவில்களிலேயே அதி பெரியது என வருணிக்கப்படுகின்றது. அதே போன்று துருக்கி நாட்டில் உள்ள பைசன்டைன் கட்டிடக்கலை பள்ளிவாசல்கள், வட்டிக்கன், இத்தாலியில் உள்ள 60,000 மக்களை உள்ளடக்கக்கூடிய செயின்ட் பீட்டர் தேவாலயத்தையும் நாம் குறிப்பிடலாம். இன்று உலகம் முழுவதும் ஆங்காங்கே உள்ள பஹாய்களின் வழிபாட்டு இல்லங்களையும் நாம் இங்கு குறிப்பிடக்கூடும்.

இங்கு கோவில்கள் என ஒரு மதச்சார்ப்புடையோரின் கோவில்களை மட்டும் உள்ளடக்காமல் எல்லா சமய வழிபாட்டு இல்லங்களையும் நாம் இங்கு குறிப்பிடுகின்றோம். ஐரோப்பிய நாடுகளில் எழுப்பப்பட்டுள்ள மாதாகோவில்கள், இஸ்லாமிய நாடுகளின் பள்ளிவாசல்கள் மற்றும் இந்துக்களின் கோவில்கள் பெரும்பான்மையானவை. கடந்தகாலத்தில் பல அரசர்கள் இத்தகைய பெரும் பெரும் வழிபாட்டு இல்லங்கள் கட்டியே தங்கள் பொக்கிஷங்களை காலி செய்தும் உள்ளனர்.

வழிபாட்டுக்காக கோவில்கள் தேவைதான். ஆனால், அவை இத்தகைய மாபெரும் கட்டிடங்களாக இருக்கவேண்டுமா எனும் கேள்வி எழக்கூடும். சிறு சிறு கோவில்களில் வழிபாடுகள் செய்யமுடியாதா? அவற்றில் செய்யப்படும் வழிபாடுகளை கடவுள் ஏற்றுக்கொள்ளமாட்டாரா?

இது குறித்து சற்று ஆழ சிந்தித்தோமானால் இத்தகைய பிரமாண்டமான கோவில்கள் நிறுவப்பட்டது வழிபாட்டிற்காக மட்டுமல்லாமல் கடவுள் மீதுள்ள தங்களின் பக்தியை மக்களும் அரசாங்கங்களும் வெளிப்படுத்துவதற்கான ஒரு வழியாகவும் இதை நாம் கருதக்கூடும் மற்றும் கடவுளுக்காக அர்ப்பணிக்கப்படும் ஒரு பொருள் கடவுளின் உயர்வை பிரதிபலிப்பதாகவும் இருக்கவேண்டும் என்பதாகவும் இருக்கலாம். இதற்கு வேறு பல காரணங்களும் இருக்கலாம். அவற்றை இங்கு விமர்சிப்பது நமது நோக்கமல்ல.

கோவில்களுக்கு சென்று கடவுளை வழிபடுவதன் நோக்கமென்ன? ஆண்டவரை நாம் வீட்டில் இருந்து கொண்டே வழிபட முடியாதா? அவர் அத்தகைய வழிபாட்டை ஏற்றுக்கொள்ளமாட்டாரா? இதுவும் தேவை அதுவும் தேவைதான். தனிமையில் வழிபடுவதும் முக்கியம்தான் அதே வேளை ஒரு சமூகமாக வழிபடுவதும் முக்கியம்தான். அனைத்திற்குமே அதனதன் தாத்பரியங்கள் உண்டு. அவற்றின் முக்கியத்துவத்தை நாம் ஒப்பீடு செய்யவும் முடியாது அவற்றை குறைத்து மதிப்பிடவும் முடியாது.

வழிபாடு என்பது வழிபாட்டு இல்லங்களுக்கு சென்று இறைவனை வழிபடுவது மட்டுமா அல்லது வழிபாட்டுக்கு வேறு உள்ளர்த்தங்களும் உண்டா என்பதை நாம் இங்கு ஆய்வு செய்யவேண்டும்.

உலகில் பல பிரமாண்டமான கோவில்கள் உள்ளன ஆனால், நாம் அறியாத, எல்லயற்ற, மனித அறிவுக்கு அப்பாற்பட்ட அதிவுயர்ந்த கோவில் ஒன்று உள்ளது என்பதை நாம் அறிவோமா? இக்கோவிலில் செய்யப்படும் வழிபாடே மற்ற எல்லா வழிபாடுகளுக்கும் மூலாதாரம் என்பதையும் நாம் அறிவோமா? இக்கோவிலில் வழிபாடு இல்லையெனில் எக்கோவிலிலும் உண்மையான வழிபாடு கிடையாது.

இந்த மனித அறிவிற்கு அப்பாற்பட்ட கோவிலோடு ஒப்பிடும்போது மற்ற கோவில்கள் அனைத்தும் வெறும் பிரதிபலிப்புக்களே ஆகும். ஒப்பீடற்ற இக்கோவிலுக்கு இயல்பான அளவு கிடையாது. இக்கோவிலில் சடங்கு சம்பிரதாயங்கள் கிடையாது. சடங்குகளும் சம்பிரதாயங்களும் அங்கு செய்யப்படும் வழிபாட்டின் அளவை எல்லைக்குட்பட்டதாக்குகின்றன. எல்லையற்ற இக்கோவிலின் அளவை நமது கடவுள் வழிபாடுகளின் வாயிலாக நாமே நிர்ணயித்துக்கொள்ளலாம் பிறகு அதனை மாற்றியும் கொள்ளலாம்.

அப்படியானால் இது எந்த கோவில்?

பஹாவுல்லாவின் மறைமொழிகளில் பின்வரும் வாக்கு ஒன்றை நாம் காணலாம்:

இருப்பின் புத்திரனே!
உனது உள்ளமே எனது இல்லம். எனது வருகைக்காக அதனை புனிதப்படுத்துவாயாக

ஆம், கடவுள் உண்மையிலேயே குடிகொண்டிருக்கும் கோவில் நமது உள்ளமே ஆகும். அவர் அங்குதான் முதன்மையாக குடிகொண்டிருக்கவேண்டும். நமது உள்ளத்தைதான் இறைவன் தமது இல்லமென்கிறார். இறைவன் குடிகொண்டிருக்கும் இடம் கோவிலும் ஆகும். ஆகவே, அவர் இருக்கும் அல்லது இருக்கவேண்டிய இடத்தை ஒரு புன்யபீடமாக்குவது நமது கடமையாகும். நாம் அவ்வாறு செய்யவில்லையெனில் கடவுள் அங்கு குடிகொள்ளமாட்டார், அக்கோவில் ஒரு வெற்றிடமாகிவிடும் மற்றும் அவ்வுள்ளம் இருளைடைந்து போகும் பிறகு எங்கு சென்று அவரை பூஜித்தாலும் அதனால் எந்த பயனும் இல்லாமல் போகும்.

மனித உள்ளம் அன்பின் உதயமையமும் ஆகும். அங்கு கடவுள் குடிகொண்டிராவிடில் உள்ளத்தில் உதயமாகும் அன்பு கடிவாளம் இல்லாத குதிரை போன்றதாகி லௌகீக பற்றுக்களில் மனிதன் ஆழ்ந்துவிடுவான்.

கடவுளை மனித இதயத்தில் வைத்து பூஜிப்பது என்பதன் தாத்பர்யம் என்ன?

உள்ளம் எனும் கோவிலில் மனிதன் கடவுளை பூஜிப்பது என்பது மனதால் கொள்ளப்படும் ஒரு செயல் மட்டும் அல்ல. கடவுளின் படைப்பு இருவிதமானது. ஒன்று ஆன்மீகம் மற்றது லௌகீகம் அல்லது பௌதீகம். உணர்வுகள் ஆன்மீகம். அந்த உணர்வுகளிலிருந்து வெளிப்படும் செயல்கள் பௌதீகமானவை. அதாவது வழிபாடு என்பது வெறும் உணர்வுகளை மட்டும் உள்ளடக்கியதாக இருக்கக்கூடாது அவ்வாறு இருக்கவும் முடியாது. உதாரணமாக ஒருவர்பால் கொண்டிருக்கும் அன்பு எனும் உணர்வு அதே நபர்பால் செயல்களாக வெளிப்படாத வரை அந்த அன்பினால் எவ்வித பயனும் இல்லை. அதே போன்று கடவுள் மீது நாம் கொண்டிருக்கும் அன்பு செயல்களாக வெளிப்படாத வரை அந்த அன்பினால் யாருக்கும் எவ்வித பயனும் இல்லை.

கடவுள் யாவற்றையும் அதனதன் சாயலிலேயே படைத்துள்ளார். ஜடப்பொருட்களை ஜடப்பொருட்களின் சாயலிலும் தாவர வகைகளை அவற்றின் சாயலிலும் மிருகங்களை மிருகங்களின் சாயலிலும் அவர் படைத்துள்ளார். ஆனால், மனிதனை மட்டும் தமது சாயலில் படைத்துள்ளார். மனிதனுக்கு தமது பன்புகள் அனைத்தையும் வெளிப்படுத்தும் ஆற்றலை வழங்கியுள்ளார். இதைத்தான் அவர் நம்மிடமிருந்தும் எதிர்ப்பார்க்கின்றார். “மனிதனென்பவன் தெய்வமாகலாம் என்பதற்கு அர்த்தமும் இதுதான். மனிதப்படைப்பின் நோக்கமும் இதுதான். மனிதன் கடவுளை தன் இதயத்தில் வைத்து பூஜிப்பது என்பதன் அர்த்தமும் இதுதான்.

மனித உள்ளம் எனும் கோவிலின் மூலஸ்தானம் ஒரு கண்ணடியைப்போன்றது. அக்கண்ணாடி எவ்வேளையிலும் இறைவனை நோக்கியே திரும்பியிருக்க வேண்டும், அவர் வழியிலேயே மனிதன் நடக்க வேண்டும். சக மனிதர்களுக்கு செய்யப்படும் சேவையே கடவுளுக்கு செய்யப்படும் சேவையாகும். ஆகவே, மனிதர்களுக்கு சேவை செய்வதிலேயே மனிதன் தன் வாழ்க்கையை அர்ப்பனிக்க வேண்டும். இதுவே உண்மையான கடவுள் பக்தி மற்றும் வழிபாடு. இதுவே மனிதப்படைப்பின் குறிக்கோள். இதற்காகவே கடவுள் மனிதனுக்கு மனித உள்ளமெனும் கோவிலை வழங்கியுள்ளார்.

https://prsamy.wordpress.com/tag/உள்ளமெனும்-கோவில்/

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • பண்டைய ஒலிம்பியாவில் ஒலிம்பிக் சுடர் ஏற்றப்படும் 16 APR, 2024 | 12:43 PM (நெவில் அன்தனி) பாரிஸ் 2024 ஒலிம்பிக் விளையாட்டு விழா ஆரம்பமாவதற்கு இன்னும் மூன்று மாதங்கள் உள்ள நிலையில் கிரேக்கத்தின் பண்டைய ஒலிம்பியாவில் ஒலிம்பிக் சுடர் பாரம்பரிய முறையில் இன்று செவ்வாய்க்கிழமை (16) ஏற்றப்படவுள்ளது. இந்த ஒலிம்பிக் சுடர் பிரெஞ்சு தலைநகர் பாரிஸை எதிர்வரும் ஜூலை 26ஆம் திகதி சென்றடைவதற்கு முன்னர் அக்ரோபோலியிலிருந்து பிரெஞ்சு பொலினேசியாவுக்கு பயணிக்கவுள்ளது. கொவிட் - 19 தொற்றுநோய் காரணமாக டோக்கியோ 2020 ஒலிம்பிக், பெய்ஜிங் 2022 குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டு விழாக்களுக்கான தீபச் சுடர் ஏற்ற நிகழ்வு பார்வையாளர்கள் இன்றி நடத்தப்பட்டது. இம்முறை ஒலிம்பிக் தீபச் சுடர் ஏற்றத்தை பொதுமக்கள் நேரடியாக பார்வையிடுவதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர். கிரேக்க ஒலிம்பிக் குழுத் தலைவர் கெத்தரினா சக்கெல்லாரோபவ்லூ, சர்வதேச ஒலிம்பிக் குழுத் தலைவர் தோமஸ் பெச் உட்பட சுமார் 600 பிரமுகர்கள் ஒலிம்பிக் தீபச் சுடர் ஏற்றும் வைபவத்தில் கலந்துகொள்வர் என அறிவிக்கப்படுகிறது. பண்டைய பெண் பாதிரியார்களாக   உடையணிந்த நடிகைகள் குழிவுவில்லை கண்ணாடியைக் கொண்டு சூரிய ஒளிக் கதிரினால் இயற்கையாக சுடரை ஏற்றிவைப்பர். கிறிஸ்துவுக்கு முன்னர் 776ஆம் ஆண்டில் பண்டைய ஒலிம்பிக்கின் பிறப்பிடமான ஒலிம்பியாவில் ஆரம்பமான இயற்கையாக தீபச் சுடரை ஏற்றும் இந்த நடைமுறை பல நூற்றாண்டுகளாக பின்பற்றப்பட்டுவருகிறது. 2600 ஆண்டுகள் பழைமைவாய்ந்த ஹேரா கோவிலின் இடிபாடுகள் உள்ள இடத்தில் நடைபெறும் இந்த வைபவத்தில் ஒலிம்பிக் கீதத்தை அமெரிக்க பாடகி ஜொய்ஸ் டிடோனட்டோ பாடுவார். ஒலிம்பிக் சுடர் ஏற்றப்படுவதானது ஒலிம்பிக் விழாவுக்கான நாட்களைக் கணக்கிடுவதாக அமைகிறது. ஒலிம்பிக் சுடரை முதலாவதாக ஏந்திச் செல்லும் பாக்கியம் கிரேகத்தின் படகோட்ட சம்பியன் ஸ்டெஃபானஸ் டௌஸ்கொஸுக்கு கிடைத்துள்ளது. இவர் டோக்கியோ 2020 ஒலிம்பிக் விளையாட்டு விழாவில் படகோட்டப் போட்டியில் பங்குபற்றிய வீரராவார். கிரேக்கத்தில் ஒலிம்பிக் சுடரை சுமார் 600 பேர், 11 தினங்களில் 5,000 கிலோ மீட்டர் தூரத்திற்கு ஏந்திச் செல்வர். ஏதென்ஸ் 2004 ஒலிம்பிக் விளையாட்டு விழாவில் நீச்சல் போட்டியில் சம்பியனான பிரெஞ்சு நீச்சல் வீராங்கனை லோரி மனவ்டூ, பிரான்ஸ் தேச ஒலிம்பிக் சுடர் பயணத்தில் முதலாமவராக தீபத்தை ஏந்திச் செல்வார். பாரிஸ் 2024 ஒலிம்பிக் விளையாட்டு விழா ஜூலை 26ஆம் திகதி தொடக்க விழாவுடன் ஆரம்பமாகி ஆகஸ்ட் 11ஆம் திகதி முடிவு விழாவுடன் நிறைவுபெறும். https://www.virakesari.lk/article/181219
    • process flow of the cement manufacturing process – palavi operation   The Puttalam cement factory, now owned by the Swiss  company Holcim Group, is the biggest one in Sri Lanka and is located in the Palaviya G.S. division, just 8 km from Puttalam town. The local population claims that cement dust poses a health hazard [Pollution] to them  The site consists of a dry process cement plant with two kilns
    • 16 APR, 2024 | 03:39 PM   ஈரானின் அணுஉலைகள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தலாம் என ஐநாவின் அணுசக்தி கண்காணிப்பு அமைப்பு அச்சம் வெளியிட்டுள்ளது. சிரிய தலைநகரில் உள்ள ஈரானின் துணைதூதரகத்தின் மீது  இஸ்ரேல்  மேற்கொண்ட தாக்குதலிற்கு ஈரான் பதில் தாக்குதலைமேற்கொண்டுள்ள நிலையில் தனது நாடு அதற்கு பதிலடி கொடுக்கும் என இஸ்ரேலின் இராணுவதளபதி தெரிவித்துள்ளார். பாதுகாப்பு காரணமாக ஞாயிற்றுக்கிழமை ஈரான் தனது அணுஉலைகளை மூடியது என தெரிவித்துள்ள ஐஏஈஏ அமைப்பின் பணிப்பாளர் நாயகம் ரபெல் குரொசி தெரிவித்துள்ளார். பின்னர் திங்கட்கிழமை  அவை திறக்கப்பட்டன எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இஸ்ரேல் அணுஉலைகள் மீது தாக்குதலை மேற்கொள்ளும் சாத்தியம் குறித்த கேள்விக்கு பதிலளித்துள்ள அவர் நாங்கள் எப்போதும் அது குறித்து அச்சமடைந்துள்ளோம் கடும் பொறுமையை நிதானத்தை கடைப்பிடிக்க கோருகின்றோம் என தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/181235
    • அன்னை பூபதிக்கு வவுனியாவில் அஞ்சலி Published By: DIGITAL DESK 7   16 APR, 2024 | 02:42 PM   நாட்டுப்பற்றாளர் அன்னை பூபதியின் 36 ஆம் ஆண்டு நினைவு நிகழ்வு அனுஷ்டிக்கப்பட்ட நிலையில் அவரின் திருவுருவப்படம் தாங்கிய ஊர்திக்கு இன்று வவுனியாவில் அஞ்சலி செலுத்தப்பட்டது. தமிழ் தேசிய மக்கள் முண்ணனியின் ஏற்பாட்டில் வடக்கு கிழக்கில் அனைத்து மாவட்டங்களுக்கும் செல்லவுள்ள ஊர்தியானது இன்று வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களின் போராட்ட பந்தலுக்கு முன்பாக அஞ்சலிக்காக கொண்டுவரப்பட்டது. இதன்போது காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களின் சங்க தலைவி கா. ஜெயவனிதா ஈகைச்சுடரினை ஏற்றி வைத்ததுடன் மற்றும் தாயார் மலர்மாலை அணிவித்து அடுத்து மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது. https://www.virakesari.lk/article/181216
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.