Jump to content

அடேலினா


Recommended Posts

அடேலினா - சிறுகதை

அவள் அறிமுக எழுத்தாளர் பா.விஜயலட்சுமி ஓவியம்: ஸ்யாம்

 

ல்ப்ஸ் மலையின் மிதமிஞ்சிய குளிர், கணப்புச் சூட்டைத் தாண்டி போர்வைக்குள் சுருண்டு படுத்திருந்த அடேலினாவின் உடலை சன்னமாக குலுங்க வைத்தது. கண்கள் மூடி தூக்கத்தில் கனவுகண்டு புன்னகை புரிந்தவளை கண்கொட்டாமல் பார்த்துக்கொண்டே ஜன்னல் ஓரத்தில் கைதொடும் தூரமாகக் கிடப்பதைப் போல விரிந்துகிடக்கும் ஆல்ப்ஸ் மலையின் பிம்பத்தை ரசித்துக்கொண்டிருந்தான் கெவின்.

p28a.jpg

கெவின்... நாற்பது வயதைத் தொட 1,460 நாட்களை கைகளில் வைத்துக் கொண்டிருப்பவன். ஆல்ப்ஸ் மலையின் பனிப்படுகைகளில் உருண்டு, புரண்டு ஐஸ்கட்டிகளை ஆராய்ச்சி செய்பவன் -  ‘கிளேசியர் ரிசர்ச் சயின்ட்டிஸ்ட்’.

அவனிடம் பயிற்சியாளினியாக வேலைக்குச் சேர்ந்தவள் அடேல். பாம்பு முதல் அமேசான் தவளைகள் வரை விஷ ஆராய்ச்சியில் கைதேர்ந்தவள். கெவினின் அறிவார்ந்த பேச்சையும், பனிக்கட்டிகளை அவன் ஆராயும் லாகவத்தையும், வேலையின் மீதான காதலையும் கண்டவளுக்கு அவள் மனதும் அவன் பின்னேயே பனிபடர்ந்த பாறைகளின் இடையில் பூத்துக்குலுங்கும் இளஞ்சிவப்பு நிற அல்ஃபினா மலர்களாகப் படர்ந்துகொண்டே சென்றது.

‘திருமணம் செய்துகொள்ளலாமா?’ என்று தடாலடியாக ஒருநாள் கேட்டவள், உடனடியாக அவனை இழுத்துக்கொண்டு போய் சர்ச்சில் நிறுத்தி டக்கென்று தன்வசமாக்கிக் கொண்டாள். இதோ... வாழ்க்கை மலைப்பயணம், ஆர்கிட் மலர் தேடுதல், பனி ஆராய்ச்சி என்று நிற்காமல் மெல்லிய தென்றல் போல கடந்துகொண்டே இருக்கிறது.

இனி மீண்டும் அவர்களின் அறை... இருவரும் இன்று செய்ய வேண்டியிருப்பது மிக முக்கியமான பணி. விஞ்ஞானிகள் குழுவின் நீண்ட ஆராய்ச்சியில் கிடைத்த ஒரு விஷயம், எல்லோரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருந்தது. ஆல்ப்ஸ் மலைப்பகுதியின் பனிப்பாறைகளில் சிலநாட்களாக ஒரு விபரீத மாற்றம்.  பனிப்பாறைகளில் வெடிப்புகளும் பிளவுகளும் ஒரே சீராக நேர்க்கோட்டு வரிசையில் பரவிவருவது செயற்கைக்கோள் படங்களின் மூலமாகத் தெரியவந்தது.

இது ஏதாவது வெளிநாட்டு சதியா, இயற்கையின் அபாயகர மாற்றமா என்பதை ஆராயத்தான் கெவினும் அடேலும் பயணமாகிறார்கள். மேலும் மூன்று விஞ்ஞானிகளுடன் இணைந்து புறப்பட்டவர்கள் அப்பகுதியைச் சென்றடைந்தபோது இருள் சூழ்ந்திருந்தது. காற்றுடன் பனியின் சாரலும், பனிக்குள் நுழைந்து வரும் ஊதக்காற்றின் மெல்லிய சீழ்க்கை ஒலியும் அச்சமூட்டிக் கொண்டிருந்தன.

ஒரு வாரமேனும் வேலை நீளக்கூடும் என்பதால் அதற்கான முன்னேற்பாடுகளுடன் வந்திருந்தார்கள். உடனடியாக கூடாரம் அமைத்து தங்களை ஆசுவாசப் படுத்திக்கொண்டனர். கெவினோ, ‘நான் சூழ்நிலையை கண் காணித்துவிட்டு வருகிறேன்’ என்று துள்ளலுடன் கிளம்பிவிட்டான்.

இரவின் நிசப்தத்தையும் தாண்டி எல்லோரும் நெடிய தூக்கத்தில் ஆழ்ந்திருக்க, விடியும் தறுவாயிலும் கெவின் திரும்பிவராததால் அடேலுக்கு வயிற்றுக்குள் பயப்பந்து உருண்டது. பொழுதும் நன்றாக விடிந்துவிட்டதால், பனிப் பாறைகள் வைரத்துண்டு களாக வெயிலின் பிடியில் ஜொலித்துக்கொண்டிருந்தன. `கெவின்... கெவின்' என்று கூச்சலிட்டுக்கொண்டே அலைந்துகொண்டிருந்தவர் களின் தேடுதலை கெவின் வீணாக்கவில்லை. ஒரு வெடிப்பின் ஆரம்பத்தில் படர்ந்து கிடந்த செடிகளின் நடுவே உருண்டு விழுந்து கிடந்தான் அவன்.

p28b.jpg

‘கெவின்ன்ன்ன்’ என்று அடேல் அலறியதில் பனிக் கட்டிகள் உருகி வழிந்தே விடும் அளவுக்கு அதிர்ந்தன. உடனடியாக கெவினை மீட்டு அதிவேகமாக மலையைக் கடந்து கீழே வந்து, மருத்துவமனையில் சேர்க்கும் வரை அடேலின் உயிர் அவளிடமில்லை. மருத்துவர்கள் அவனுடைய மயக்கத்துக்குக் காரணம் தெரியாமல் தவித்தனர். அவனோ சரியாக ஒரு மணி நேரத்தில் படுக்கையில் எழுந்து அமர்ந்தான். அவனது முகம் மிகக் கொடூரமாகக் காட்சியளித்தது.

விறுவிறுவென்று வெளியே வந்தவன், அடேலிடம், ‘வீட்டுக்குக் கிளம்பலாம்’ என்று எதுவும் சொல்லாமல் இழுத்துக் கொண்டு கிளம்பிவிட்டான். மருத்துவர்கள் அழைப்பதைக்கூட காதில் போட்டுக் கொள்ளவில்லை. வந்த வனிடம் துளிக்கூட சிரிப்பில்லை. அடேலை வெறித்துப் பார்த்தவன் ‘எனக்குப் பசிக்குது’ என்று சொல்லிவிட்டு உள்ளே சென்று படுத்துக் கொண்டான்.

அதேநேரம் சக விஞ்ஞானி களையும் இனம்புரியாத ஒரு பதற்றம் சூழ்ந்திருந்தது. விஞ்ஞானிகள் அமைப்பின் தலைவரான மார்க்ஸர் டேவிட் சொல்லிய விஷயமும், அவருடைய ஆய்வு முடிவுகளும் எல்லோரையும் சிலையாக்கி நிற்க வைத்தன. அடேலிடம் அதைச் சொல்லியே ஆக வேண்டும் என்று அவளுடைய தோழி ஃப்ளோராவுக்கு மனது அடித்துக் கொண்டது. உடனடியாக தன் எண்ணத்தை நிறைவேற்றக் கிளம்பியும் விட்டாள்.

கெவினுடைய வீட்டுக்குள் ஃப்ளோரா நுழைந்தபோது அடேல் அங்கில்லை. சுற்றுமுற்றும் பார்த்துக்கொண்டே அவள் பெட்ரூமுக்குள் நுழைந்தபோது கெவின் தலைமுதல் பாதம் வரையில் போர்வையை இழுத்துப் போர்த்திப் படுத்திருந்தான். p28c1.jpg

அதேநேரம்... ஏதோ வாங்குவதற்காக வெளியில் சென்றிருந்த அடேலுக்கு வந்த செல்போன் அழைப்பு அவளை ரத்தம் உறைய வைத்தது. கெவின் உருண்டு விழுந்த புதர்ப்பரப்புதான் பனிப்பாறை வெடிப்புக்கும், அவனுடைய நிலைமைக்கும் காரணம் என்று மறுபுறம் அவளுக்கு விவரித்துக் கொண்டிருந்தார் மார்க்ஸர்.

‘கெவின் உருண்டு விழுந்த அந்த ஆர்க்கிட் மலர்களில் வசிக்கும் ஒரு வகை பூச்சிகள்தான் அந்தப் பெருவெடிப்புக்குக் காரணம் அடேல். அவற்றின் குணாதிசயமே இயல்பான ஒருவரின் குணத்தை நேர்மாறாக மாற்றுவதுதான். அழிந்து போய்விட்ட உயிரினங்கள் பட்டியலில் சேர்க்கப்பட்ட அந்தப் பூச்சி   இப்போது மீண்டும் உருவாகியிருப்பது எப்படி என்பது தெரியவில்லை. ஆனால், அவற்றின் முட்களில் இருக்கும் விஷமானது, பனிப்பாறைகளின் அடியில் தங்கிவிட்டதால், அது ஒரே நேர்க்கோடாக பாறைகளில் வெடிப்பை ஏற்படுத்த ஆரம்பித்துள்ளது. கட்டியாக இருக்கும் பனியையும் உருக்க ஆரம்பித்துள்ளது. அதில் கால்தவறி விழுந்த கெவின் அந்த விஷத்தை 6 மணி நேரத்துக்கும் மேலாகவே சுவாசித்துள்ளான். அவன் உடல் முழுவதும் பரவியுள்ள அந்த விஷம், அவனைக் கொல்லாது. ஆனால், கெவின் இனி மனிதனில்லை. அன்பு, பாசம் போன்ற குணங்கள் இனி அவனிடம் இருக்காது. அவனை பழைய நிலைக்கு மாற்றுவது கடினம். நீ பத்திரமாக இரு அடேல். அவன் எதை வேண்டுமானாலும் செய்வான்’ என்று அவர் எச்சரித்துக் கொண்டிருக்கும்போதே, அடேல் போனை கைநழுவ விட்டுவிட்டாள்.

அவசர அவசரமாக வீட்டுக்குத் திரும்பிய அடேல் வெகுநேரமாகத் தட்டியும் கதவுகள் திறக்கப்படவில்லை. பயந்து போனவள் பின்பக்க வழியாக வீட்டுக்குள் விரைந்தாள். அங்கே கண்ட காட்சி அவளை உறைய வைத்தது. உடல் முழுவதும் நகத் தீற்றல்களுடன் சோபாவில் பிணமாகக் கிடந்தாள் ஃப்ளோரா. சற்றுக்கூட அசையாத கருவிழிகளுடன் அமர்ந்திருந்த கெவின், ‘எனக்கு ஜினபி வேண்டும்’ என்று கடினக் குரலில் கேட்டான். ஆழ்ந்து மூச்சை விட்ட அடேல் விரைந்து உள்ளே சென்றாள்.

சரியாக 20 நிமிடங்களில் திரும்பி வந்தவள் அவனுக்கு ஜினபியை கோப்பைகளில் ஊற்றிக் கொடுத்தாள். கிட்டத்தட்ட நான்கு கோப்பை ஜினபியை உட்செலுத்தினான் கெவின். மீண்டும் ஒரு குவளைக்காகக் கீழே குனிந்தவனின்  கண்களில் பட்டது அந்தக் காகிதம். எடுத்துப் படித்தவனின் கண்கள் சிறிது கூட அசையவோ, அதிர்ச்சியை வெளிக்காட்டவோ இல்லை.

“உன்னுடைய ஜினபி நிரம்பிய மதுக்கோப்பையில் சரியாக இருபத்து நான்கு துளிகள் மெர்க்குரி கலந்திருக்கிறேன் கெவின்... இந்த உலகில் நான் அதிகமாக நேசித்தது உன்னைத்தான். ஆனால், உன்னால் நேசிக்கப்பட்டவர்கள் உன்னாலேயே மரணமடைவதை நான் விரும்பவில்லை. நானும் போகிறேன் கெவின். நீ பாதியில் விட்டுப் போகும் ஆராய்ச்சியை முடித்து உயிர்களைக் காப்பாற்றும் பொறுப்பை முடித்துவிட்டு நானும் உன்னிடமே வந்துவிடுவேன். வலியில்லாத நீண்ட, நெடிய தூக்கம் உனக்கு வாய்க்கட்டும்...”

கடிதத்தைப் படித்து முடிக்கும் முன்னரே அவனது இதயம் துடிக்க மறந்திருந்தது. எல்லாவற்றுக்கும் சாட்சியான லிம்மட் நதி அந்தக் கரிய இரவில் குளிரை அணைத்துக்கொண்டு சலனமற்று உறங்கத் தொடங்கியிருந்தது!

http://www.vikatan.com

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Similar Content

  • Topics

  • Posts

    • அப்ப வருசக் கணக்கா தமிழர்களை.. தமிழர் வழிபாட்டிடங்களை திட்டித் தீர்த்து ஆக்கிரமிக்கத் தூண்டியதற்கு ஏன் தண்டனை இல்லை..??! அதுக்கும் தண்டனை வழங்கினால்.. ஆள் ஆயுள் காலம் பூரா உள்ள தான்.  அதே நிலையில்.. விமல்.. வீரசேகர..கம்பன்பில.. போன்ற வில்லங்கங்களுக்கு எதிராக ஏன் இன்னும் சட்ட நடவடிக்கை இல்லை. தமிழர்களை.. இந்துக்களை (சைவர்களை) திட்டினால்.. சமாளிச்சுக் கொண்டு போவது எழுதாத சட்டமோ. 
    • இது தான் சொறீலங்கா கடற்படை ஆக்கிரமிப்பில் இருக்கும்.. காங்கேசந்துறை நோக்கிய கடற்கரை. அண்ணர் ஆலாபனையோடு சொன்னது.  இது தான் கடலட்டை வாடிகளோடு அமைந்த.. அழுகி நாறும் பண்ணைக் கடற்கரை நோக்கிய தோற்றம். குத்தியரின் சீன ஏற்றுமதி வருவாய். அண்ணர் இதனை பற்றி மூச்சும் விடேல்ல.. ஆனால் பண்ணைக் கடற்கரை காதல் காட்சிகளை மட்டும் வர்ணிச்சிட்டு போயிட்டார். இது தான் கொழும்பின் தாமரைத் தடாகம் இரவுக் காட்சி. அண்ணர் சொன்ன மாதிரி தடாகம் ஒளிந்தாலும் சுற்றயல் ஒளிரவில்லை. இன்னும் பல பகுதி காலு வீதியில் இரவில் வீதி விளக்குகள் எரிவதில்லை.  அதே நேரம் யாழ்ப்பாண நெடுந்தூர பயணிகள் பேரூந்து தரிப்பிடத்திற்கு அருகில் உள்ள புல்லுக் குளத்தின் இரவுக் காட்சி. சுற்றயல் எங்கும் ஒளிரோ ஒளிரெண்டு ஒளிருது. யாழ் மணிக்கூட்டுக் கோபுரமும் தான். அண்ணர் அதை பற்றி மூச்.  ஆக அவை அவை பார்க்கிற பார்வையில தான் இங்கு களத்தில் இருந்தான காட்சிகளுக்கு ஆலாபனைகள் வருகின்றன. 
    • நீங்கள், அரச இரகசியங்களை கசிய விடுவதால்.... நாலாம் மாடியில் வைத்து,  கசையடி விழ வாய்ப்புகள் உண்டு. 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.