Jump to content

"நாளையோடு ஒன்றிணைவோம்" லண்டனில் இருநாள் புலம்பெயர் மாநாடு.!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

ஏற்கனவே எழுதியதுதான், விளங்கவில்லையா மீண்டும் ஆரம்பத்திலிருந்தே வாசியுங்கள் 

உங்கள் அறிவிலித் தனத்துக்கும், ஆளுமை அற்ற செயற்பாடுகளுக்கும் இதுவே எடுத்துக்காட்டு.

ஓர் பொது அமைப்பில் (மக்களின் பணத்தில் இயங்கும்) நடக்கும் பிரச்சனையை கேட்டால் ஏன் எனது தனிப்பட்ட விடயம். ஏற்கனவே எழுதியதுதான் நான் செய்வது எனக்கு தெரியும்

 

Link to comment
Share on other sites

  • Replies 58
  • Created
  • Last Reply
9 minutes ago, MEERA said:

ஏற்கனவே எழுதியதுதான், விளங்கவில்லையா மீண்டும் ஆரம்பத்திலிருந்தே வாசியுங்கள் 

உங்கள் அறிவிலித் தனத்துக்கும், ஆளுமை அற்ற செயற்பாடுகளுக்கும் இதுவே எடுத்துக்காட்டு.

ஓர் பொது அமைப்பில் (மக்களின் பணத்தில் இயங்கும்) நடக்கும் பிரச்சனையை கேட்டால் ஏன் எனது தனிப்பட்ட விடயம். ஏற்கனவே எழுதியதுதான் நான் செய்வது எனக்கு தெரியும்

 

ணம் வழங்கும் அங்க்கட்துவர்கள் கேட்பதற்கான வழி முறைகள் பி டி எவிடம் உண்டு. பி ரி எவின் தொடபிலக்கங்கள் உண்டு அதில் கேட்கலாம்.

அங்கே ஒரு பிரச்சினை இருக்கு என்பவர் நீங்கள். தேர்தல் முறைகேடானது என்று சொல்கிறீர்கள். இதற்கான ஆதரங்களை முன் வையுங்களேன்.

எனக்குத் தெரியாததை நான் கூற முடியாது. பி ரி எவுக்கு பணம் தரும் உறுப்பினருக்கு பி ரி எவிடம் தொடர்பு கொள்வதற்கான வழி முறைகள் உண்டு.

பி ரி எவ் ஒரு ரகசிய அமைப்பு அல்ல. பி ரி எவ் செய்யும் வேலைகள் பல, அதைநம்பியே பலர் அதற்க்கு பண உதவி செய்கின்றனர்.

க் ஏட்ட கேள்விகள் எதற்க்கு பதில் இல்லை உங்களிடம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

"சட்டியே இல்லை எப்படி ஜயா அகப்பையில் வரும்" இது ஏற்கனவே நான் எழுதியது. 

இனியும் உங்களுடன் கருத்தாடி பிரயோசனம் இல்லை, நன்றி வணக்கம்.

உங்கள் முள்ளிவாய்க்கால் வியாபாரத்தை ஆரம்பியுங்கள்.

Link to comment
Share on other sites

3 minutes ago, MEERA said:

"சட்டியே இல்லை எப்படி ஜயா அகப்பையில் வரும்" இது ஏற்கனவே நான் எழுதியது. 

இனியும் உங்களுடன் கருத்தாடி பிரயோசனம் இல்லை, நன்றி வணக்கம்.

உங்கள் முள்ளிவாய்க்கால் வியாபாரத்தை ஆரம்பியுங்கள்.

உண்மை தான் நீங்கள் இன்னும் வெட்டி வீழ்த்தியதைப் பற்யோ, உங்கள் சட்டியில் இருப்பதைப் பற்றியோ இல்லை சட்டி இருக்கிறதா என்பதைப் பற்ரியோ எதுவுமே சொல்ல வில்லையே?
உங்களிடம் இருந்தால் தானே வரும்?

மற்றவன் வடை ஓட்டைய என்பதியும் மற்றவனில் பிழை பிடிப்பதில் நாங்கள் ஆகா சூரியர்கள். அதே கேள்வி எங்களை நோக்கித் திரும்பினால் பதில் இல்லை.

முள்ளிவாய்க்கால் வியாபாரத்தை நாங்கள் பார்க்கிறோம், நீங்கள் உங்கள் வியாபார நண்பர்களுடன் சேர்ந்து இன்னும் கொள்ளை அடிக்க  வழியைத் தேடுங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
47 minutes ago, MEERA said:

ஏற்கனவே எழுதியதுதான், விளங்கவில்லையா மீண்டும் ஆரம்பத்திலிருந்தே வாசியுங்கள் 

உங்கள் அறிவிலித் தனத்துக்கும், ஆளுமை அற்ற செயற்பாடுகளுக்கும் இதுவே எடுத்துக்காட்டு.

ஓர் பொது அமைப்பில் (மக்களின் பணத்தில் இயங்கும்) நடக்கும் பிரச்சனையை கேட்டால் ஏன் எனது தனிப்பட்ட விடயம். ஏற்கனவே எழுதியதுதான் நான் செய்வது எனக்கு தெரியும்

 

பிரித்தானிய தமிழர் பேரவை பெயருக்குத்தான் பொதுமக்களின் பணத்தில் இயங்குகிறது என்று பெயர். பணப் பற்றாக்குறையில் சிலம் தம் பணத்தைப் போட்டு இயங்கவைத்துக்கொண்டு இருக்கின்றனர் என்பதுதான் உண்மை. சுகந்தன் அண்ணாவையும் சென் அண்ணாவையும் பற்றி எதுவும் தெரியாமல் அல்லது கொஞ்சம் தெரிந்து வைத்துக்கொண்டு நீங்கள் அவர்கள் பற்றிக் கேட்கிறீர்கள். ஆனால் அவர்களை அத்தனை இலகுவில் எடைபோட்டுவிடவேண்டாம் மீரா. எல்லோருக்கும் தன் கதிரை முக்கியமே தவிர தேச நலன் அல்ல. நான் இப்பொழுது BTF இன் செய்யர்ப்பாட்டாளராக இல்லை. அதலால் அவர்கள் பற்றிக் கதைப்பதற்கு எனக்கு அருகதையும் இல்லை. ஒரு பொது நிறுவனத்தை நடத்துவது என்பது வெளிப் பார்வைக்கு சாதாரணாமாக இருக்கலாம். ஆனால் செய்யர்ப்படுவதும் செயர்ப்படுத்துவதும் மிகக் கடினம். உங்களுக்கு விருப்பம் என்றால் ஒரு இரண்டு மாதங்கள் பிரித்தானியத் தமிழர் பேரவையின் செயர்ப்பாட்டாளராக இருந்துபாருங்கள் அந்தத் துன்பம் தெரியும். அவர்கள் என்ன செய்கிறார்கள் என்பதும் தெரியும். இது என் வேண்டுகோள்.

முள்ளி வாய்க்கால் நிகழ்வுக்கு வரும் மக்கள் கொடுக்கும் பணத்தில் அந்த நிகழ்வு நடைபெறுகிறது என்று நீங்கள் எண்ணிக்கொண்டு இருக்கிறீர்களா மீரா. ஒரு ரூபாய் கொடுத்து அங்கத்துவராகச் சேர்ந்துவிட்டு என்ன செய்கிறாய் என்று சொல் என்று கேட்பவன் தமிலனாக்த்தான்தமிழன் மட்டுமாகத்தான் இருப்பான்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
24 minutes ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

பிரித்தானிய தமிழர் பேரவை பெயருக்குத்தான் பொதுமக்களின் பணத்தில் இயங்குகிறது என்று பெயர். பணப் பற்றாக்குறையில் சிலம் தம் பணத்தைப் போட்டு இயங்கவைத்துக்கொண்டு இருக்கின்றனர் என்பதுதான் உண்மை. சுகந்தன் அண்ணாவையும் சென் அண்ணாவையும் பற்றி எதுவும் தெரியாமல் அல்லது கொஞ்சம் தெரிந்து வைத்துக்கொண்டு நீங்கள் அவர்கள் பற்றிக் கேட்கிறீர்கள். ஆனால் அவர்களை அத்தனை இலகுவில் எடைபோட்டுவிடவேண்டாம் மீரா. எல்லோருக்கும் தன் கதிரை முக்கியமே தவிர தேச நலன் அல்ல. நான் இப்பொழுது BTF இன் செய்யர்ப்பாட்டாளராக இல்லை. அதலால் அவர்கள் பற்றிக் கதைப்பதற்கு எனக்கு அருகதையும் இல்லை. ஒரு பொது நிறுவனத்தை நடத்துவது என்பது வெளிப் பார்வைக்கு சாதாரணாமாக இருக்கலாம். ஆனால் செய்யர்ப்படுவதும் செயர்ப்படுத்துவதும் மிகக் கடினம். உங்களுக்கு விருப்பம் என்றால் ஒரு இரண்டு மாதங்கள் பிரித்தானியத் தமிழர் பேரவையின் செயர்ப்பாட்டாளராக இருந்துபாருங்கள் அந்தத் துன்பம் தெரியும். அவர்கள் என்ன செய்கிறார்கள் என்பதும் தெரியும். இது என் வேண்டுகோள்.

முள்ளி வாய்க்கால் நிகழ்வுக்கு வரும் மக்கள் கொடுக்கும் பணத்தில் அந்த நிகழ்வு நடைபெறுகிறது என்று நீங்கள் எண்ணிக்கொண்டு இருக்கிறீர்களா மீரா. ஒரு ரூபாய் கொடுத்து அங்கத்துவராகச் சேர்ந்துவிட்டு என்ன செய்கிறாய் என்று சொல் என்று கேட்பவன் தமிலனாக்த்தான்தமிழன் மட்டுமாகத்தான் இருப்பான்.

 

சுமோ உங்களுக்கக மீண்டும் இந்த திரியில்,

அப்போ btf ஏன் சுகந்தன் பின்னணியில் இருக்கும் தலைமைச் செயலகத்துடன் கைகோர்த்துள்ளது?

முள்ளிவாய்க்கால் நிகழ்விற்காக எத்தனை பேரிடம் போன் அடித்து காசு கேட்கிறார்கள் என்று தெரியுமா?

இனி எந்த ஒரு அமைப்பிற்காகவும் செயற்படப்போவதில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இங்கு பதவியும் முகாமைத்துவமும் தம்மை முன்னிலைப்படுத்தலுமே முக்கியமானதாகின்றது. எல்லாம் இப்போது இந்திய அரசியல் போலாகிவிட்டது. முன்னர் BTF ஐ ச்தாபிக்கச் செய்தது TCC 2009 இன் பின்னர் TCC இன் தமைமையை ஏற்க பிரித்தானியத் தமிழர் பேரவையில் இருந்த பலர் மறுத்ததாலும் பதவி மோகத்தாலும் பலர் பிரியவும் வெளியேறவும் ஏற்பட்டது. லண்டனில் நடைபெற்ற ஊர்வலங்கள் எல்லாவற்றுக்குமே BTF தான் அனுமதி பெற்று நடத்தியது. 2009 க்கு முன்னர் ஊர்வலங்களில் சேர்ந்த பணம் எல்லாம் BTF இடம் வரவில்லை. அழிவுக்குப் பின்னர் ஒவ்வொரு நிகழ்வுகளையும் நடத்துவதற்குத் தேவைப்பட்ட பணம் பொதுமக்களிடமிருந்து அரைவாசி கூட கிடைக்கவில்லை.அந்த நேரங்களில் BTF இல் முன்நின்று வேலை செய்தவர்களே தம் பணத்தைப் போட்டார்கள். கருத்து முரண்பாடுகளினால் ஒருபக்கம் விலக ஒருபக்கம் தம்மாலான வேலைத் திட்டத்தை அவர்கள் செய்துகொண்டே இருக்கிறார்கள். அவர்கள் செய்வது சரியா தவறா என்று நாம் வெளியே நின்று விமர்சிப்பது தவர். பல மாவீரர் நாள் நிகழ்வுகளில் TCC பிரித்தானியத் தமிழர் பேரவையை வேண்டுமென்றே உள்ளே அவர்களை செயற்பட விடாது அவமதித்தது. தமிழர்கள் ஒன்று சேர்ந்து இயங்குவதுதான் எமக்குப் பலம். அவர்களுக்கு எங்கு ஆதரவு இருக்கோ அவர்களுடன் BTF சேர்ந்து இயங்குவதைத் தவறு என்று எப்படிக் கொள்ள முடியும். யார் இடித்தால் என்ன அரிசி எங்கு கிடைக்கிறதோ அங்கேதான் பட்டினியில் உள்ளவர்கள் செல்வார்கள்.

இதற்குமேல் ஒரு நிறுவனத்தைப் பற்றி நான் எழுத முடியாது. அது தவறு.

அடிப்படையில் சுகந்தன் அண்ணா நல்லவர்தான். அவர் தலையில் வெண்ணையை வைத்துப் பிடிக்கத் தெரிந்தவர்கள் பிடித்துள்ளனர். அவ்வளவே.

 

Link to comment
Share on other sites

26 minutes ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

இங்கு பதவியும் முகாமைத்துவமும் தம்மை முன்னிலைப்படுத்தலுமே முக்கியமானதாகின்றது. எல்லாம் இப்போது இந்திய அரசியல் போலாகிவிட்டது. முன்னர் BTF ஐ ச்தாபிக்கச் செய்தது TCC 2009 இன் பின்னர் TCC இன் தமைமையை ஏற்க பிரித்தானியத் தமிழர் பேரவையில் இருந்த பலர் மறுத்ததாலும் பதவி மோகத்தாலும் பலர் பிரியவும் வெளியேறவும் ஏற்பட்டது. லண்டனில் நடைபெற்ற ஊர்வலங்கள் எல்லாவற்றுக்குமே BTF தான் அனுமதி பெற்று நடத்தியது. 2009 க்கு முன்னர் ஊர்வலங்களில் சேர்ந்த பணம் எல்லாம் BTF இடம் வரவில்லை. அழிவுக்குப் பின்னர் ஒவ்வொரு நிகழ்வுகளையும் நடத்துவதற்குத் தேவைப்பட்ட பணம் பொதுமக்களிடமிருந்து அரைவாசி கூட கிடைக்கவில்லை.அந்த நேரங்களில் BTF இல் முன்நின்று வேலை செய்தவர்களே தம் பணத்தைப் போட்டார்கள். கருத்து முரண்பாடுகளினால் ஒருபக்கம் விலக ஒருபக்கம் தம்மாலான வேலைத் திட்டத்தை அவர்கள் செய்துகொண்டே இருக்கிறார்கள். அவர்கள் செய்வது சரியா தவறா என்று நாம் வெளியே நின்று விமர்சிப்பது தவர். பல மாவீரர் நாள் நிகழ்வுகளில் TCC பிரித்தானியத் தமிழர் பேரவையை வேண்டுமென்றே உள்ளே அவர்களை செயற்பட விடாது அவமதித்தது. தமிழர்கள் ஒன்று சேர்ந்து இயங்குவதுதான் எமக்குப் பலம். அவர்களுக்கு எங்கு ஆதரவு இருக்கோ அவர்களுடன் BTF சேர்ந்து இயங்குவதைத் தவறு என்று எப்படிக் கொள்ள முடியும். யார் இடித்தால் என்ன அரிசி எங்கு கிடைக்கிறதோ அங்கேதான் பட்டினியில் உள்ளவர்கள் செல்வார்கள்.

இதற்குமேல் ஒரு நிறுவனத்தைப் பற்றி நான் எழுத முடியாது. அது தவறு.

அடிப்படையில் சுகந்தன் அண்ணா நல்லவர்தான். அவர் தலையில் வெண்ணையை வைத்துப் பிடிக்கத் தெரிந்தவர்கள் பிடித்துள்ளனர். அவ்வளவே.

 

எந்த அமைப்பிலும், அந்த அமைப்பு என்ன செய்கிறது என்பது தான் முக்கியமே தவிர. அதில் யார் இருகிறார்கள் போகிறார்கள் என்பது  அல்ல. இவ்வாறான கதைகளைக் கதைப்பவர்கள் உண்மையில் மக்கள் மீதோ போராட்டம் மீதோ உண்மையான அக்கறை உடையவர்கள் அல்ல. யார் இருக்கிறார்களோ யார் ப்தவியில் இருக்கிறார்களோ இல்லை எனக்கு என்ன பதவியைப் பார்த்தோ பி ரி விற் வேலை செய்யவில்லை. அவர்களிடம் செயற்த்திட்டம் இருக்கிறது, அதன் பால் தொடர்ந்து இயங்கிக் கொண்டிருக்கிறார்கள். அது தான் எனக்கு முக்கியம். இப்படி வீணாகக் கதைகளைக் கதைப்ப து ஒரு சததிற்க்கும் பிரியோசனம் அற்ற விடயம். செயற்பட்ட அனுபவம் உங்களிடம் இருக்கிறது, அதனால் உங்களுக்கு விளங்கிறது.

உதாரணத்திற்க்கு கடந்த இருபதாம் திகதி அய்ரோப்பிய யுனியன் பிரதினிதிகளை பி த பேரவை சந்தித்து , அவர்களிடம் ஏன் கி எச் பி வரிச் சலுகையை சிறிலங்காவிற்க்கு வழங்க்கக் கூடாது என்பதற்கான அறிக்கையை தரவுகளுடன் கொடுத்து நேரடியாக வலியுறுத்தியது. இந்தப் பிரயாணகளுக்கெல்லாம் நிதி தேவை, இதையும் சில தனிநபர்களே செய்கிறார்கள். அவர்களும் இவற்றை தமது சொந்தத் தெவைக்குப் பயன் படுத்தலாம். இவ்வறானவர்களும் இருப்பதாலேயே நான் பி த பேரவைக்கு என்னால் ஆன உதவிகளைச் செய்கிறேன். சேர்ந்து இயங்கும் போது தான் இது தெரிய வரும். கதைகளையும் கட்டுக் கதைகளையும் காவித் திரிபவர்களுக்கு உண்மை என்ன என்று தெரியாது, ஆனால் காவித் திரிந்து பொழுது போக்குவர்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உறவுகளே தமிழர்களுக்கென்று பல அமைப்புகள் இருக்கின்றன.உங்களுக்கு நம்பிக்கையுள்ள அமைப்புகளுடன் சேர்ந்து இயங்குங்கள்.    

அந்த அமைப்பிற்கு பலத்தைத் தேடிக் கொடுங்கள்.அடுத்த அமைப்பை பலவீனமாக்க முயற்சிக்காதீர்கள்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • "பழைய சில பகிடிகள்"    1. Which is the longest word in the English dictionary? / ஆங்கில அகராதியில் மிக நீளமான சொல் எது? Smile -  Because after 'S' there is a 'mile'. 2.”மழைமேகம் [மழை may come] க்கு எதிர்சொல் என்ன?  மறுமொழி : மழை  may not come. 3.சாப்பிட  எதுவும்  சூடாக  கிடைக்காத  ஹோட்டல்  எது ?  மறுமொழி : ஆறிய  பாவன்   4. Which is the coolest alphabet in English? / ஆங்கிலத்தில் குளிரான  எழுத்து எது? மறுமொழி : ‘B’. ஏன்னா  அது  ‘A”C’ க்கு நடுவிலே  இருக்கு . 5. What is common to robbers and tennis players ? / கொள்ளையர்களுக்கும் டென்னிஸ் வீரர்களுக்கும் பொதுவானது என்ன? Ans: They both involve rackets(racquets) and courts! 6. கிண்ணத்துல  கல்லை  போட்டால்  ஏன்   மூழ்கிறது ?  மறுமொழி: அதுக்கு  நீச்சல்  தெரியாது  7. In a grocery store, a Sardarji was starring at an orange juice for couple of hours. You know why ? / ஒரு மளிகைக் கடையில், ஒரு சர்தார்ஜி இரண்டு மணி நேரம் ஆரஞ்சு ஜூஷை உற்றுப் பார்த்துக்கொண்டே  கொண்டிருந்தார். ஏன் தெரியுமா? Ans: Because it said CONCENTRATE. 8. What is the difference between a fly and a mosquito?  Ans: A MOSQUITO can FLY but a FLY cannot MOSQUITO!! 9. ஒரு  அறையிலே  ஒரு  மூலையில்  ஒரு  பூனை  இருக்கு . வலது மூலையில் ஒரு  எலி . இடது மூலையில்  ஒரு கிண்ணத்தில் பால். கேள்வி  : பூனையின்  கண்  இதில்  இருக்கும்  ?  மறுமொழி: பூனையின்  கண்  அதோட  முகத்தில்தான்  இருக்கும்   10. Which runs faster, Hot or Cold? / எது வேகமாக ஓடுகிறது? Hot or Cold?? ANS: Hot, because anyone can catch a cold
    • வீரப்பன் பையன்26 என்பதன் அர்த்தம் நீங்கள் வீரப்பனின் மகன் எனும் அர்த்தம் ஆகாதா? உங்கள் விருப்பம். 
    • "ஓடம்"   "கற்பகம் என்ற புகழ் பனையின் வளங்கள் - உந்தன்  காலடியில் களஞ்சியமாய்க் கண்ட பலன்கள்  பொற்பதியில் பஞ்சம் பசி பட்டினி தீர்க்கும் - தீராப் போரினிலும் அஞ்சேலென மக்களைக் காக்கும்!"  "கல்வி நிலையங்கள் கோயில் குளங்கள் - குதிரை  காற்றாய்ப் பறந்து செல்லும் நீண்ட வெளிகள் தொல்லை துயரம் தீர்க்கும் மருந்து மூலிகைகள் - உனைத்  தொட்டுக் கண்ணிலே ஒற்றித் தோயும் அலைகள்!"  "தென்னைமர உச்சியிலே திங்கள் தடவும் - கடல்  திசைகளெல்லாம் மணிகளை அள்ளி எறியும் வெள்ளை மணல் துறைகளை அலைகள் மெழுகும் - எங்கள் உள்ளம் அதிலே பளிங்கு மண்டபம் காணும்!" வித்துவான் எஸ் அடைக்கலமுத்து நெடுந்தீவை வர்ணித்தவாறு, நீலப் பச்சை வண்ணம் கொண்ட இரத்தினக் கல் போன்ற  நீர் இலங்கையின் கரையை முத்தமிடும் இந்தியப் பெருங்கடலின் மையத்தில், இலங்கையின் நெடுந்தீவு என்று அழைக்கப்படும் டெல்ஃப்ட் தீவு உள்ளது. இங்கே, கடல் மற்றும் கரடுமுரடான நிலப் பரப்புகளின் காலத்தால் அழியாத அழகுக்கு மத்தியில், நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் இளம் கணித ஆசிரியராக, கூர்மையான பார்வை, முறுக்கு மீசை, வாட்டசாட்டமான உடல்வாகு, வெளிப்படையான பேச்சு என கிராமத்து மனிதர்களின் அத்தனை சாயல்களையும் ஒருங்கே பெற்ற வெண்மதியன் கடமையாற்றிக் கொண்டு இருந்தான். இவர் நெடுந்தீவையே பிறப்பிடமாகவும் கொண்டவர் ஆவார்.  அதுமட்டும் அல்ல, கடல் வாழ்வுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட வரும் ஆவார். அதனால் தனக்கென ஒரு ஓடம் கூட வைத்திருந்தான். போர் சூழலால் வடமாகாணம் அல்லல்பட்டுக் கொண்டு இருந்த தருணம் அது. மகா வித்தியாலயத்தில் ஓர் சில முக்கிய பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்கள் தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள குறிக்கடுவான் ஜெட்டியில் இருந்து தான் வந்து போனார்கள். என்றாலும் படகு சேவை, பல காரணங்களால் ஒழுங்காக இருப்பதில்லை. தான் படித்த பாடசாலை இதனால் படிப்பில் பின்வாங்கக் கூடாது என்ற நல்ல எண்ணத்துடன் தன் ஓடத்திலேயே, வசதிகளை அமைத்து காலையும் மாலையும் இலவச சேவையை, தேவையான நேரங்களில் மட்டும், அவர்களுக்காக, பாடசாலைக்காக தனது ஆசிரியர் தொழிலுடன், இதையும் செய்யத் தொடங்கினான். இதனால் வெண்மதியனை 'ஓடக்கார ஆசிரியர்' என்று கூட சிலவேளை சிலர் அழைப்பார்கள். விஞ்ஞானம் கற்பிப்பதில் ஆர்வம் கொண்ட உற்சாகமான இளம் பெண் எழிற்குழலி, தனது பட்டப் படிப்பை முடித்து, முதல் முதல் ஆசிரியர் தொழிலை யாழ் / நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் பதவியேற் பதற்காக, அன்று குறிக்கடுவான் படகுத்துறைக்கு, மிகவும் நேர்த்தியாக சேலை உடுத்திக் கொண்டு வந்தார். உடையே ஒரு மொழி. அது ஒரு காலாசாரம் மட்டுமல்லாது சமூக உருவாக்கமுமாகும். உடை உடுத்துபரை மட்டுமின்றி பார்ப்பவரின் புரிதல்களையும் பாதிக்க வல்லது. அது மனிதர்களிடையே வேறுபாடுகளை ஏற்படுத்தவும் செய்கிறது. மனிதன் உடுத்தும் உடை அவன் மீது அவனுடன் உறவாடும் மற்ற மனிதர்களின் உள்மனத் தீர்ப்புகளைத் தீர்மானிக்கிறது என்பது கட்டாயம் அவளுக்கு தெரிந்து இருக்கும். அதனால்த் தான், தன் வேலைக்கான முதல்  பயணத்தில், தன்னை இயன்றவரை அழகாக வைத்திருக்க முயன்றால் போலும்!  அன்று வழமையான படகு சேவை சில காரணங்களால் நடை பெறவில்லை. என்றாலும் பாடசாலை ஏற்கனவே அவளுக்கு, தங்கள் பாடசாலை கணித ஆசிரியர், இப்படியான சந்தர்ப்பங்களில், தனது ஓடம் மூலம் உங்களுக்கு பயண ஒழுங்கு செய்வாரென அறிவுறுத்தப் பட்டு இருந்ததால், அவள் கவலையடையவில்லை.  அன்று வழமையாக வரும் மூன்று ஆசிரியர்கள் கூட வரவில்லை. அவள் அந்த கணித ஆசிரியர் ஒரு முதிர்ந்த அல்லது நடுத்தர ஆசிரியராக இருக்கலாம் என்று முடிவுகட்டி, அங்கு அப்படியான யாரும் ஓடத்துடன் நிற்கிறார்களா என தன் பார்வைக்கு எட்டிய தூரம் வரை பார்த்தாள். அவள் கண்ணுக்கு அப்படி யாரும் தெரியவில்லை. அந்த நேரம் ஜெட்டிக்கு ஒரு இளம் வாலிபன் ஓடத்தை செலுத்திக் கொண்டு வந்து, அவளுக்கு அண்மையில் அதை கரையில் உள்ள ஒரு கட்டைத்தூணுடன் [bollard] கட்டி நிறுத்தினான்.  எழிற்குழலி, இது ஒருவேளை கணித ஆசிரியாரோவென, தனது அழகிய புருவங்களை உயர்த்தி, ஒரு ஆராச்சி பார்வை பார்த்துக் கொண்டு இருந்தாள். வெண்மதியன் ஒரு சிறிய புன்னகையுடன், எந்த தயக்கமும் இன்றி, அவள் அருகில் வந்து, நீங்கள் விஞ்ஞான ஆசிரியை எழிற்குழலி தானே என்று கேட்டான். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றியது நம் தமிழ் மட்டும் அல்ல, காதல் உணர்வுகளும் தான் என்பதை அவர்கள் இருவரும் அந்த தருணம் உணரவில்லை. அவளுக்கு இது முதல் உத்தியோகம், தான் திறமையாக படிப்பித்து பெயர், புகழ் வாங்க வேண்டும் என்பதிலேயே மூழ்கி இருந்தாள். அவனோ எந்த நேரம், என்ன நடக்கும் என்ற பரபரப்பில், கெதியாக பாதுகாப்பான நெடுந்தீவு போய்விட வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தான்.  அவர்கள் இருவரும் ஓடத்தில் ஏறினார்கள், வெண்மதியன், எழிற்குழலியை பாதுகாப்பாக இருத்தி விட்டு ஓடத்தை ஜெட்டியில் இருந்து நகர்த்தினான். இது ஒரு சாதாரண பயணம் அல்ல, இருவரின் வாழ்க்கையை என்றென்றும் மாற்றும் ஒரு பயணத்தைத் ஓடத்தில் தொடங்குகிறார்கள் என்பதை அவர்கள் கண்கள், ஒருவரை ஒருவராவர் மௌனத்தில் மேய்ந்து கொண்டு இருந்தது, உண்மையில் சற்று உறக்கச் அவர்களின் இதயத்துக்கு சொல்லிக்கொண்டு இருந்தது. ஆனால் அவர்கள் இருவரும், அதை கவனிக்கும் கேட்கும் நிலையில் இருக்கவில்லை.   “நிலவைப் பிடித்துச் சிறுகறைகள் துடைத்துக் - குறு முறுவல் பதித்த முகம், நினைவைப் பதித்து - மன அலைகள் நிறைத்துச் - சிறு நளினம் தெளித்த விழி .” இந்த அழகுதான் அவனையும் கொஞ்சம் தடுமாற வைத்துக் கொண்டு இருந்தது. அவர்கள் இருவரும், தம்மை சுற்றிய சூழல் மறந்து, ஒவ்வொருவரின் இரண்டு விழிகளும் மௌனமாக பேசின. எத்தனை முறை பார்த்தாலும் விழிகளுக்கு ஏன் தாகம் தணிவதில்லை?  ஆர்பாரிக்கும் பேரலை ஒருபக்கம், அந்த இரைச்சலுக் குள்ளும் அவர்கள் தங்களை தங்களை அறிமுகம் செய்தார்கள். அனுமதியின்றி சிறுக சிறுக சிதறின இருவரினதும் உறுதியான உள்ளம். அவர்களின் உள்ளுணர்வு மிகவும் வித்தியாசமாய் இன்று இருந்தது. அவளின் கண்ணசைவுக்கு பதில் கூறிக் கொண்டிருந்த வெண்மதியன், ஏனோ அவளின் உதட்டசைவிற்கு செவிசாய்க்க முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தான். “ஹலோ” என்று மீண்டும் அவளின் குரல் கேட்க, தன் எண்ணங்களை சட்டென்று விண்ணிலிருந்து கடலிற்கு கொண்டு வந்தான்! " இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு ?", பொதுவாக ஒரு பயணம் 45 நிமிடம் எடுக்கும். இன்று சற்று கூட எடுத்து விட்டது. 15 நிமிடம் என்றான். அதன் பின்பு அவர்கள் இருவரும் மௌனமாக நெடுந்தீவு அடைந்தனர். என்றாலும் அவர்களின் எண்ணங்கள் அவர்களின் ஓடத்தை உலுக்கிய மென்மையான அலைகளைப் போல பின்னிப் பிணைந்தன. அவர்கள் அன்றில் இருந்து ஓடத்தில் பயணம் செய்த போது எல்லாம், எழிற்குழலியும் வெண்மதியனும் ஒன்றாக எதிர்காலத்தை உருவாக்குவதற்கான கனவுகளைப் பகிர்ந்து கொண்டனர். அவர்களின் உரையாடல்கள் சிரிப்பாலும், அபிலாஷைகளாலும் நிரம்பியிருந்தன, அவர்களின் இதயங்கள் கடலின் தாளத்துடன் ஒத்திசைந்து துடித்தன. என்றாலும் இன்னும் அவர்கள் வெளிப்படையாகத் தங்கள் ஆசைகளை ஒருவருக் கொருவர் சொல்ல வில்லை. எது எப்படியாகினும் அவர்களின் சொல்லாத காதலுக்கு ஓடமே சாட்சியாக இருந்தது? அவர்கள் இருவரும் ஒருவருக் கொருவர் தெரியாமல் ஓடத்துக்கு நன்றி தெரிவித்தனர்.  ஓடம் ஒவ்வொரு முறையும், இந்தியப் பெருங்கடலில் ஒரு ரத்தினமாக விவரிக்கப் படும் நெடுந்தீவுக்கு போகும் பொழுது அல்லது அங்கிருந்து திரும்பும் பொழுது, அதன் அழகு அலைகளுக்கு மத்தியில் மின்னும் விலைமதிப் பற்ற கல்லின் அழகு போல அவர்களுக்கு இப்ப இருந்தது. ஓடத்தில் இருந்து, நெடுந்தீவின் கரடு முரடான நிலப்பரப்புகள், காற்று வீசும் சமவெளிகள், நெடுந்தீவுக்கே உரித்தான கட்டைக் குதிரைகள் மற்றும் பெருக்கு மரம் எனப்படும் பாவோபாப் மரம் போன்றவற்றை, பயணித்துக் கொண்டு, அவை மறையும் மட்டும் அல்லது தெரியும் மட்டும் பார்ப்பதில் இருவரும் மகிழ்வு அடைந்தனர். அப்படியான தருணங்களில் இருவரின் நெருக்கமும் எந்த அச்சமும் வெட்கமும் இன்றித், இருவருக்கும் இடையில் உள்ள இடைவெளியை குறைத்துக் கொண்டு வந்தன. "ஓடத்தான் வந்தான் அன்று-விழி ஓரத்தால் பார்த்தான் நின்று சூடத்தான் பூவைத் தந்தான்-பூவை வாடத்தான் நோவைத் தந்தான்!" 'ஓடத்தைக் கைகள் தள்ளும்-கயல் ஓடிப்போய் நீரில் துள்ளும் நாடத்தாம் கண்கள் துள்ளும்-பெண்மை நாணத்தால் பின்னே தள்ளும்!" "வேகத்தால் ஓடஞ் செல்லும்-புனல் வேகத்தைப் பாய்ந்தே வெல்லும் வேகத்தான் வைத்தான் நெஞ்சம்-அந்த வீரத்தான் வரவோ பஞ்சம்!" கவியரசர் முடியரசனின் கவிதை அவளுக்கு ஞாபகம் அடிக்கடி வந்து, தன் வாய்க்குள் மெல்ல மெல்ல முணுமுணுப்பாள். ஒருமுறை எழிற்குழலி, தன் மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்பு எடுக்க வேண்டி இருந்தது. மற்ற மூன்று ஆசிரியர்களும் வழமையான படகு சேவையில் திரும்பி விட்டனர். மறையும் சூரியனின் தங்க நிறங்கள் ஓடத்தின் நிழலை கடல் அலையில் பிரதிபலிக்க, எழிற்குழலியும் வெண்மதியனும் ஓடத்தில் கைகோர்த்து அமர்ந்து இருந்தனர். ஓடத்தில் மோதிய அலைகளின் சத்தம் அவர்களின் அந்தரங்க தருணத்திற்கு ஒரு இனிமையான பின்னணியை வழங்கியது. எழிற்குழலி, வெண்மதியன் மார்பில் சாய்ந்தாள், அவனின் கையை வருடி முத்தமிட்டாள். அவளுடைய கண்கள் வானத்தின் எண்ணற்ற வண்ணங்களைப் பிரதிபலித்தன. "இந்த இடம் முற்றிலும் மூச்சடைக்கக் கூடியது அல்லவா?" அவள் முணுமுணுத்தாள், அவள் குரல் ஒரு கிசுகிசுவுக்கு மேல் தாண்டவில்லை. வெண்மதியன் ஓடத்தை கவனமாக பார்த்து செலுத்திக் கொண்டு, மெல்ல தலையசைத்தான், அவனது பார்வை அவளது கதிரியக்க புன்னகையில் கூடிக் குலாவியது. "இந்த தருணத்தின் அழகை ரசிக்க,  காலமே ஓடாமல் நின்று விட்டது போல் இருக்கிறது" என்று அவன் பதிலளித்தான், அவனது குரலில் ஒரு மயக்கம் நிறைந்து இருந்தது.  அவர்களின் விரல்கள் பின்னிப் பிணைந்தன, அவர்கள் நீலக்கடலின் அழகில் உலாவினர். என்றாலும் அவ்வப் போது அடிவானத்தில் சூரியன் கீழே இறங்குவதைப் பார்த்தார்கள். ஒவ்வொரு நொடியும், அவர்களின் இதயங்கள் ஒருமனதாக துடித்தன, ஒவ்வொரு கணத்திலும் அவர்களின் இணைப்பு மேலும் மேலும் வலுவடைந்தது. ஒரு வார இறுதியில், இருவரும் நெடுந்தீவில் சந்தித்தனர். அங்கே அவர்கள் ஒரு ஒதுக்குப்புற இடத்தை அடைந்ததும், வெண்மதியன் எழிற்குழலியைத் தன் கைகளுக்குள் இழுத்துக் கொண்டான், கடலின் மென்மையான தாளத்தை ரசித்தபடி, அவர்கள் ஒரு மென்மையான இதழுடன் இதழ் முத்தத்தைப் முதல் முதல் பகிர்ந்து கொண்டனர், அதன் பின், நட்சத்திரங்கள் நிரம்பிய வானத்தின் விதானத்தின் [கூரையின்] கீழ், எழிற்குழலியும் வெண்மதியனும், யாழ்பாணத்தை நோக்கி அமைதியான நீரில், நிலவொளியில் ஓடத்தில் பயணம் செய்தனர். இருள் சூழ்ந்திருந்த பரந்து விரிந்திருந்த நிலவின் மென் பிரகாசம், அவர்களின் முகங்களில் ஒளி வீசியது. ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டு, அருகருகே அமர்ந்து, தண்ணீரில் உள்ள நிலவின் மின்னும் பிரதிபலிப்பைப் பார்த்தபடி விரல்கள் பின்னிப் பிணைந்தன. அவர்களுக்கிடையேயான அமைதி, அவர்களின் காதல், சொல்லப்படாத மொழியால் நிரம்பியிருந்தது. "என் வாழ்க்கையில் உன்னைப் பெற்றதற்கு நான் எவ்வளவு உண்மையிலேயே பாக்கியவான் என்பதை இது போன்ற தருணங்கள் எனக்கு உணர்த்துகின்றன," என்று வெண்மதியன் கிசுகிசுத்தான், அவனது குரல் அலைகளின் மென்மையான தாளத்திற்கு மேலே கேட்கவில்லை. எழிற்குழலி தன் தலையை அவன் தோளில் சாய்த்துக் கொண்டாள், அவள் இதயம் உணர்ச்சியால் பொங்கி வழிந்தது. "மற்றும் நான், நீ," அவள் பதிலளித்தாள், அவளுடைய குரல் நேர்மையுடன் மென்மையாக இருந்தது. "இரவின் அழகால் சூழப்பட்ட உங்களுடன் இங்கே இருப்பது ஒரு கனவா? நனவா ?." என்றாள்.  அவர்களின் ஓடம் அலைகளின் குறுக்கே சிரமமின்றி சென்றது, இரவின் இதயத்திற்கு அது அவர்களை மேலும் கொண்டு சென்றது. கடந்து செல்லும் ஒவ்வொரு தருணத்திலும், அவர்களின் காதல் ஆழமடைந்தது, நேரத்தையும் இடத்தையும் தாண்டிய ஒரு பிணைப்பில் அவர்களை ஒன்றாக 'ஓடம்' இணைந்தது!  நன்றி  [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
    • 15/2/24  மூன்று பேர் வைத்தியசாலைக்கு போய் தாமதமானதால் கடையில் வடை மூன்று தேநீர் ஒன்று வாங்கினோம், எண்ணூற்று பத்து ரூபா எடுத்து விட்டு மிகுதி காசைத்தந்தார் ஒரு கடைக்காரர். ஒருவேளை அவர்  கணக்க்கில மட்டோ அல்லது  என்னைப்பார்த்து பரிதாபப்பட்டு தர்மம் இட்டாரோ தெரியவில்லை! இதுக்கு யாரும் நீதிமன்றம் செல்ல எத்தனிக்கக் கூடாது.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.