Jump to content

"நாளையோடு ஒன்றிணைவோம்" லண்டனில் இருநாள் புலம்பெயர் மாநாடு.!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

ஏற்கனவே எழுதியதுதான், விளங்கவில்லையா மீண்டும் ஆரம்பத்திலிருந்தே வாசியுங்கள் 

உங்கள் அறிவிலித் தனத்துக்கும், ஆளுமை அற்ற செயற்பாடுகளுக்கும் இதுவே எடுத்துக்காட்டு.

ஓர் பொது அமைப்பில் (மக்களின் பணத்தில் இயங்கும்) நடக்கும் பிரச்சனையை கேட்டால் ஏன் எனது தனிப்பட்ட விடயம். ஏற்கனவே எழுதியதுதான் நான் செய்வது எனக்கு தெரியும்

 

Link to comment
Share on other sites

  • Replies 58
  • Created
  • Last Reply
9 minutes ago, MEERA said:

ஏற்கனவே எழுதியதுதான், விளங்கவில்லையா மீண்டும் ஆரம்பத்திலிருந்தே வாசியுங்கள் 

உங்கள் அறிவிலித் தனத்துக்கும், ஆளுமை அற்ற செயற்பாடுகளுக்கும் இதுவே எடுத்துக்காட்டு.

ஓர் பொது அமைப்பில் (மக்களின் பணத்தில் இயங்கும்) நடக்கும் பிரச்சனையை கேட்டால் ஏன் எனது தனிப்பட்ட விடயம். ஏற்கனவே எழுதியதுதான் நான் செய்வது எனக்கு தெரியும்

 

ணம் வழங்கும் அங்க்கட்துவர்கள் கேட்பதற்கான வழி முறைகள் பி டி எவிடம் உண்டு. பி ரி எவின் தொடபிலக்கங்கள் உண்டு அதில் கேட்கலாம்.

அங்கே ஒரு பிரச்சினை இருக்கு என்பவர் நீங்கள். தேர்தல் முறைகேடானது என்று சொல்கிறீர்கள். இதற்கான ஆதரங்களை முன் வையுங்களேன்.

எனக்குத் தெரியாததை நான் கூற முடியாது. பி ரி எவுக்கு பணம் தரும் உறுப்பினருக்கு பி ரி எவிடம் தொடர்பு கொள்வதற்கான வழி முறைகள் உண்டு.

பி ரி எவ் ஒரு ரகசிய அமைப்பு அல்ல. பி ரி எவ் செய்யும் வேலைகள் பல, அதைநம்பியே பலர் அதற்க்கு பண உதவி செய்கின்றனர்.

க் ஏட்ட கேள்விகள் எதற்க்கு பதில் இல்லை உங்களிடம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

"சட்டியே இல்லை எப்படி ஜயா அகப்பையில் வரும்" இது ஏற்கனவே நான் எழுதியது. 

இனியும் உங்களுடன் கருத்தாடி பிரயோசனம் இல்லை, நன்றி வணக்கம்.

உங்கள் முள்ளிவாய்க்கால் வியாபாரத்தை ஆரம்பியுங்கள்.

Link to comment
Share on other sites

3 minutes ago, MEERA said:

"சட்டியே இல்லை எப்படி ஜயா அகப்பையில் வரும்" இது ஏற்கனவே நான் எழுதியது. 

இனியும் உங்களுடன் கருத்தாடி பிரயோசனம் இல்லை, நன்றி வணக்கம்.

உங்கள் முள்ளிவாய்க்கால் வியாபாரத்தை ஆரம்பியுங்கள்.

உண்மை தான் நீங்கள் இன்னும் வெட்டி வீழ்த்தியதைப் பற்யோ, உங்கள் சட்டியில் இருப்பதைப் பற்றியோ இல்லை சட்டி இருக்கிறதா என்பதைப் பற்ரியோ எதுவுமே சொல்ல வில்லையே?
உங்களிடம் இருந்தால் தானே வரும்?

மற்றவன் வடை ஓட்டைய என்பதியும் மற்றவனில் பிழை பிடிப்பதில் நாங்கள் ஆகா சூரியர்கள். அதே கேள்வி எங்களை நோக்கித் திரும்பினால் பதில் இல்லை.

முள்ளிவாய்க்கால் வியாபாரத்தை நாங்கள் பார்க்கிறோம், நீங்கள் உங்கள் வியாபார நண்பர்களுடன் சேர்ந்து இன்னும் கொள்ளை அடிக்க  வழியைத் தேடுங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
47 minutes ago, MEERA said:

ஏற்கனவே எழுதியதுதான், விளங்கவில்லையா மீண்டும் ஆரம்பத்திலிருந்தே வாசியுங்கள் 

உங்கள் அறிவிலித் தனத்துக்கும், ஆளுமை அற்ற செயற்பாடுகளுக்கும் இதுவே எடுத்துக்காட்டு.

ஓர் பொது அமைப்பில் (மக்களின் பணத்தில் இயங்கும்) நடக்கும் பிரச்சனையை கேட்டால் ஏன் எனது தனிப்பட்ட விடயம். ஏற்கனவே எழுதியதுதான் நான் செய்வது எனக்கு தெரியும்

 

பிரித்தானிய தமிழர் பேரவை பெயருக்குத்தான் பொதுமக்களின் பணத்தில் இயங்குகிறது என்று பெயர். பணப் பற்றாக்குறையில் சிலம் தம் பணத்தைப் போட்டு இயங்கவைத்துக்கொண்டு இருக்கின்றனர் என்பதுதான் உண்மை. சுகந்தன் அண்ணாவையும் சென் அண்ணாவையும் பற்றி எதுவும் தெரியாமல் அல்லது கொஞ்சம் தெரிந்து வைத்துக்கொண்டு நீங்கள் அவர்கள் பற்றிக் கேட்கிறீர்கள். ஆனால் அவர்களை அத்தனை இலகுவில் எடைபோட்டுவிடவேண்டாம் மீரா. எல்லோருக்கும் தன் கதிரை முக்கியமே தவிர தேச நலன் அல்ல. நான் இப்பொழுது BTF இன் செய்யர்ப்பாட்டாளராக இல்லை. அதலால் அவர்கள் பற்றிக் கதைப்பதற்கு எனக்கு அருகதையும் இல்லை. ஒரு பொது நிறுவனத்தை நடத்துவது என்பது வெளிப் பார்வைக்கு சாதாரணாமாக இருக்கலாம். ஆனால் செய்யர்ப்படுவதும் செயர்ப்படுத்துவதும் மிகக் கடினம். உங்களுக்கு விருப்பம் என்றால் ஒரு இரண்டு மாதங்கள் பிரித்தானியத் தமிழர் பேரவையின் செயர்ப்பாட்டாளராக இருந்துபாருங்கள் அந்தத் துன்பம் தெரியும். அவர்கள் என்ன செய்கிறார்கள் என்பதும் தெரியும். இது என் வேண்டுகோள்.

முள்ளி வாய்க்கால் நிகழ்வுக்கு வரும் மக்கள் கொடுக்கும் பணத்தில் அந்த நிகழ்வு நடைபெறுகிறது என்று நீங்கள் எண்ணிக்கொண்டு இருக்கிறீர்களா மீரா. ஒரு ரூபாய் கொடுத்து அங்கத்துவராகச் சேர்ந்துவிட்டு என்ன செய்கிறாய் என்று சொல் என்று கேட்பவன் தமிலனாக்த்தான்தமிழன் மட்டுமாகத்தான் இருப்பான்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
24 minutes ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

பிரித்தானிய தமிழர் பேரவை பெயருக்குத்தான் பொதுமக்களின் பணத்தில் இயங்குகிறது என்று பெயர். பணப் பற்றாக்குறையில் சிலம் தம் பணத்தைப் போட்டு இயங்கவைத்துக்கொண்டு இருக்கின்றனர் என்பதுதான் உண்மை. சுகந்தன் அண்ணாவையும் சென் அண்ணாவையும் பற்றி எதுவும் தெரியாமல் அல்லது கொஞ்சம் தெரிந்து வைத்துக்கொண்டு நீங்கள் அவர்கள் பற்றிக் கேட்கிறீர்கள். ஆனால் அவர்களை அத்தனை இலகுவில் எடைபோட்டுவிடவேண்டாம் மீரா. எல்லோருக்கும் தன் கதிரை முக்கியமே தவிர தேச நலன் அல்ல. நான் இப்பொழுது BTF இன் செய்யர்ப்பாட்டாளராக இல்லை. அதலால் அவர்கள் பற்றிக் கதைப்பதற்கு எனக்கு அருகதையும் இல்லை. ஒரு பொது நிறுவனத்தை நடத்துவது என்பது வெளிப் பார்வைக்கு சாதாரணாமாக இருக்கலாம். ஆனால் செய்யர்ப்படுவதும் செயர்ப்படுத்துவதும் மிகக் கடினம். உங்களுக்கு விருப்பம் என்றால் ஒரு இரண்டு மாதங்கள் பிரித்தானியத் தமிழர் பேரவையின் செயர்ப்பாட்டாளராக இருந்துபாருங்கள் அந்தத் துன்பம் தெரியும். அவர்கள் என்ன செய்கிறார்கள் என்பதும் தெரியும். இது என் வேண்டுகோள்.

முள்ளி வாய்க்கால் நிகழ்வுக்கு வரும் மக்கள் கொடுக்கும் பணத்தில் அந்த நிகழ்வு நடைபெறுகிறது என்று நீங்கள் எண்ணிக்கொண்டு இருக்கிறீர்களா மீரா. ஒரு ரூபாய் கொடுத்து அங்கத்துவராகச் சேர்ந்துவிட்டு என்ன செய்கிறாய் என்று சொல் என்று கேட்பவன் தமிலனாக்த்தான்தமிழன் மட்டுமாகத்தான் இருப்பான்.

 

சுமோ உங்களுக்கக மீண்டும் இந்த திரியில்,

அப்போ btf ஏன் சுகந்தன் பின்னணியில் இருக்கும் தலைமைச் செயலகத்துடன் கைகோர்த்துள்ளது?

முள்ளிவாய்க்கால் நிகழ்விற்காக எத்தனை பேரிடம் போன் அடித்து காசு கேட்கிறார்கள் என்று தெரியுமா?

இனி எந்த ஒரு அமைப்பிற்காகவும் செயற்படப்போவதில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இங்கு பதவியும் முகாமைத்துவமும் தம்மை முன்னிலைப்படுத்தலுமே முக்கியமானதாகின்றது. எல்லாம் இப்போது இந்திய அரசியல் போலாகிவிட்டது. முன்னர் BTF ஐ ச்தாபிக்கச் செய்தது TCC 2009 இன் பின்னர் TCC இன் தமைமையை ஏற்க பிரித்தானியத் தமிழர் பேரவையில் இருந்த பலர் மறுத்ததாலும் பதவி மோகத்தாலும் பலர் பிரியவும் வெளியேறவும் ஏற்பட்டது. லண்டனில் நடைபெற்ற ஊர்வலங்கள் எல்லாவற்றுக்குமே BTF தான் அனுமதி பெற்று நடத்தியது. 2009 க்கு முன்னர் ஊர்வலங்களில் சேர்ந்த பணம் எல்லாம் BTF இடம் வரவில்லை. அழிவுக்குப் பின்னர் ஒவ்வொரு நிகழ்வுகளையும் நடத்துவதற்குத் தேவைப்பட்ட பணம் பொதுமக்களிடமிருந்து அரைவாசி கூட கிடைக்கவில்லை.அந்த நேரங்களில் BTF இல் முன்நின்று வேலை செய்தவர்களே தம் பணத்தைப் போட்டார்கள். கருத்து முரண்பாடுகளினால் ஒருபக்கம் விலக ஒருபக்கம் தம்மாலான வேலைத் திட்டத்தை அவர்கள் செய்துகொண்டே இருக்கிறார்கள். அவர்கள் செய்வது சரியா தவறா என்று நாம் வெளியே நின்று விமர்சிப்பது தவர். பல மாவீரர் நாள் நிகழ்வுகளில் TCC பிரித்தானியத் தமிழர் பேரவையை வேண்டுமென்றே உள்ளே அவர்களை செயற்பட விடாது அவமதித்தது. தமிழர்கள் ஒன்று சேர்ந்து இயங்குவதுதான் எமக்குப் பலம். அவர்களுக்கு எங்கு ஆதரவு இருக்கோ அவர்களுடன் BTF சேர்ந்து இயங்குவதைத் தவறு என்று எப்படிக் கொள்ள முடியும். யார் இடித்தால் என்ன அரிசி எங்கு கிடைக்கிறதோ அங்கேதான் பட்டினியில் உள்ளவர்கள் செல்வார்கள்.

இதற்குமேல் ஒரு நிறுவனத்தைப் பற்றி நான் எழுத முடியாது. அது தவறு.

அடிப்படையில் சுகந்தன் அண்ணா நல்லவர்தான். அவர் தலையில் வெண்ணையை வைத்துப் பிடிக்கத் தெரிந்தவர்கள் பிடித்துள்ளனர். அவ்வளவே.

 

Link to comment
Share on other sites

26 minutes ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

இங்கு பதவியும் முகாமைத்துவமும் தம்மை முன்னிலைப்படுத்தலுமே முக்கியமானதாகின்றது. எல்லாம் இப்போது இந்திய அரசியல் போலாகிவிட்டது. முன்னர் BTF ஐ ச்தாபிக்கச் செய்தது TCC 2009 இன் பின்னர் TCC இன் தமைமையை ஏற்க பிரித்தானியத் தமிழர் பேரவையில் இருந்த பலர் மறுத்ததாலும் பதவி மோகத்தாலும் பலர் பிரியவும் வெளியேறவும் ஏற்பட்டது. லண்டனில் நடைபெற்ற ஊர்வலங்கள் எல்லாவற்றுக்குமே BTF தான் அனுமதி பெற்று நடத்தியது. 2009 க்கு முன்னர் ஊர்வலங்களில் சேர்ந்த பணம் எல்லாம் BTF இடம் வரவில்லை. அழிவுக்குப் பின்னர் ஒவ்வொரு நிகழ்வுகளையும் நடத்துவதற்குத் தேவைப்பட்ட பணம் பொதுமக்களிடமிருந்து அரைவாசி கூட கிடைக்கவில்லை.அந்த நேரங்களில் BTF இல் முன்நின்று வேலை செய்தவர்களே தம் பணத்தைப் போட்டார்கள். கருத்து முரண்பாடுகளினால் ஒருபக்கம் விலக ஒருபக்கம் தம்மாலான வேலைத் திட்டத்தை அவர்கள் செய்துகொண்டே இருக்கிறார்கள். அவர்கள் செய்வது சரியா தவறா என்று நாம் வெளியே நின்று விமர்சிப்பது தவர். பல மாவீரர் நாள் நிகழ்வுகளில் TCC பிரித்தானியத் தமிழர் பேரவையை வேண்டுமென்றே உள்ளே அவர்களை செயற்பட விடாது அவமதித்தது. தமிழர்கள் ஒன்று சேர்ந்து இயங்குவதுதான் எமக்குப் பலம். அவர்களுக்கு எங்கு ஆதரவு இருக்கோ அவர்களுடன் BTF சேர்ந்து இயங்குவதைத் தவறு என்று எப்படிக் கொள்ள முடியும். யார் இடித்தால் என்ன அரிசி எங்கு கிடைக்கிறதோ அங்கேதான் பட்டினியில் உள்ளவர்கள் செல்வார்கள்.

இதற்குமேல் ஒரு நிறுவனத்தைப் பற்றி நான் எழுத முடியாது. அது தவறு.

அடிப்படையில் சுகந்தன் அண்ணா நல்லவர்தான். அவர் தலையில் வெண்ணையை வைத்துப் பிடிக்கத் தெரிந்தவர்கள் பிடித்துள்ளனர். அவ்வளவே.

 

எந்த அமைப்பிலும், அந்த அமைப்பு என்ன செய்கிறது என்பது தான் முக்கியமே தவிர. அதில் யார் இருகிறார்கள் போகிறார்கள் என்பது  அல்ல. இவ்வாறான கதைகளைக் கதைப்பவர்கள் உண்மையில் மக்கள் மீதோ போராட்டம் மீதோ உண்மையான அக்கறை உடையவர்கள் அல்ல. யார் இருக்கிறார்களோ யார் ப்தவியில் இருக்கிறார்களோ இல்லை எனக்கு என்ன பதவியைப் பார்த்தோ பி ரி விற் வேலை செய்யவில்லை. அவர்களிடம் செயற்த்திட்டம் இருக்கிறது, அதன் பால் தொடர்ந்து இயங்கிக் கொண்டிருக்கிறார்கள். அது தான் எனக்கு முக்கியம். இப்படி வீணாகக் கதைகளைக் கதைப்ப து ஒரு சததிற்க்கும் பிரியோசனம் அற்ற விடயம். செயற்பட்ட அனுபவம் உங்களிடம் இருக்கிறது, அதனால் உங்களுக்கு விளங்கிறது.

உதாரணத்திற்க்கு கடந்த இருபதாம் திகதி அய்ரோப்பிய யுனியன் பிரதினிதிகளை பி த பேரவை சந்தித்து , அவர்களிடம் ஏன் கி எச் பி வரிச் சலுகையை சிறிலங்காவிற்க்கு வழங்க்கக் கூடாது என்பதற்கான அறிக்கையை தரவுகளுடன் கொடுத்து நேரடியாக வலியுறுத்தியது. இந்தப் பிரயாணகளுக்கெல்லாம் நிதி தேவை, இதையும் சில தனிநபர்களே செய்கிறார்கள். அவர்களும் இவற்றை தமது சொந்தத் தெவைக்குப் பயன் படுத்தலாம். இவ்வறானவர்களும் இருப்பதாலேயே நான் பி த பேரவைக்கு என்னால் ஆன உதவிகளைச் செய்கிறேன். சேர்ந்து இயங்கும் போது தான் இது தெரிய வரும். கதைகளையும் கட்டுக் கதைகளையும் காவித் திரிபவர்களுக்கு உண்மை என்ன என்று தெரியாது, ஆனால் காவித் திரிந்து பொழுது போக்குவர்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உறவுகளே தமிழர்களுக்கென்று பல அமைப்புகள் இருக்கின்றன.உங்களுக்கு நம்பிக்கையுள்ள அமைப்புகளுடன் சேர்ந்து இயங்குங்கள்.    

அந்த அமைப்பிற்கு பலத்தைத் தேடிக் கொடுங்கள்.அடுத்த அமைப்பை பலவீனமாக்க முயற்சிக்காதீர்கள்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • மக்கள் தொகைக் கணக்கெடுப்பு மற்றும் புள்ளி விபரத் திணைக்களத்தின் முக்கிய அறிவிப்பு! நாட்டில் தனி நபரின் மாதாந்த செலவு ஜனவரி மாதத்துடன் ஒப்பிடுகையில் பெப்ரவரி மாதத்தில் குறைந்துள்ளதாக மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதன்படி, நாட்டில் உள்ள ஒருவருக்கு அவர்களின் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்ய மாதாந்தம் குறைந்தபட்சம் 16,975 ரூபாய் தேவைப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு பெப்ரவரியில், தேசிய நுகர்வோர் விலைக் குறியீட்டின்படி, நாட்டின் பணவீக்கம் முந்தைய மாதத்துடன் ஒப்பிடுகையில் குறைந்துள்ளது. மேலும் கொழும்பு மாவட்டத்தில் வாழும் ஒருவருக்கு குறைந்தபட்ச அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்ய 18,308 ரூபா தேவைப்படுவதாகவும் திணைக்களம் குறிப்பிட்டுள்ளமை  குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1378659
    • 32 ஆயிரம் பேருக்கு வடக்கில் வீடுகள்! எதிர்வரும் ஒரு வருடத்துக்குள் 32 ஆயிரம் பேருக்கு வடக்கில் வீடுகள்! வடக்கு ஆளுநர் தெரிவிப்பு (ஆதவன்) வடக்கு மாகாணத்தில் 32 ஆயிரம் பேர் வீட்டுத் திட்டங்களுக்காகத் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். எதிர்வரும் ஒரு வருடத்துக்குள் இந்தத் திட்டம் நடை முறைப்படுத்தப்படும் என்று வடக்கு ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் தெரிவித்தார். வவுனியா நெடுங்கேணி மகா வித்தியாலயத்தில் நேற்றுமுன்தினம் இடம்பெற்ற புத்தாண்டுக் கொண்டாட்டத்தின் போதே வடமாகாண ஆளுநர் இவ்வாறு தெரிவித்தார். ஆளுநர் மேலும் தெரிவித்ததாவது:- ‘வடக்கு மாகாணத்தில் இவ்வருடம் திட்டமிட்ட பயிர்ச்செய்கையை மேற்கொள்ளமுடியும். இதற்கு போதுமான அளவு நீர் காணப்படுகின்றது. பெரிய மற்றும் சிறிய குளங்களின் நீர்மட்டம் போதுமானதாகக் காணப்படுகின்றமையால் இடைப்போகம் மற்றும் சிறுபோகம் ஆகியவற்றில் சிறந்த விளைச்சலை எதிர்பார்க்க முடியும். ஆகவே இதனூடாக வறுமையிலிருந்து மீள்வதற்கான சந்தர்ப்பமுண்டு. இந்த வருடத்துக்கான வரவு - செலவுத் திட்டத்தில் குளங்களைப் புனரமைப்பதற்கான நிதி ஒதுக்கீடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. அதே போல வடக்கு மாகாணத்தில் உள்ள 17 குளங்களை புனரமைப்புச் செய்வதற்கான நிதியை மத்திய அரசாங்கத்திடமும் ஏனைய நிதி நிறுவனங்களிடமும் நாங்கள் கோரியுள்ளோம். மக்களிடையே கலை, கலாசாரத்தை வளர்ப்பதற்கு அவர்கள் வாழும் கிராமங்களிலேயே திறந்த வெளி மேடைகளை அமைத்து அங்கு வாழக்கூடிய இளைஞர் யுவதிகளுக்கு சந்தர்ப்பங்களை பெற்றுக்கொடுக்க வேண்டும். கிராமங்களில் திறந்த வெளி மேடைகளை அமைத்து நிகழ்ச்சிகளை அரங்கேற்றுவதன் ஊடாக எமது தனித்துவமான கலை, கலாசாரத்தைப் பேணிப் பாதுகாக்க முடியும்'- என்றார். (ஏ)  https://newuthayan.com/article/32_ஆயிரம்_பேருக்கு_வடக்கில்_வீடுகள்!
    • பற்பசையில் போதைப்பொருள்: கொழும்பு சிறைச்சாலையில் சம்பவம். கொழும்புச் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள சந்தேகநபரை பார்வையிட வந்த நபரொருவர் பற்பசை டியூபுக்குள்(Tube)  போதைப்பொருளை மறைத்துவைத்துக் கொண்டு வந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பார்வையாளர்களைத் சோதனையிடும் பணியில் ஈடுபட்டிருந்த சிறைச்சாலை அதிகாரிகள் குறித்த நபர் கொண்டுவந்த பொருட்களைச் சோதனையிடும் போதே  போதைப்பொருள் மறைத்து வைத்துக் கொண்டுவரப்பட்டுள்ளமை அம்பலமாகியுள்ளது. இந்நிலையில் அந்நபரைக் கைது செய்த பொலிஸார் இது குறித்த மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். https://athavannews.com/2024/1378656
    • இன்னும் பாதிக்கிணற்றைத் தாண்டவில்லை என்பதால் எதுவும் நடக்கலாம். பெங்களூர் விராட் கோலி எப்படியும் வெளுத்துக்கட்டுவார்! போட்டி விதிகளைத் தளர்த்தமுடியாது @பையன்26!   போட்டி விதிகள் போட்டி முடிவு திகதி 34வது ஆரம்பப் போட்டி நிறைவு பெறும் வெள்ளி 19 ஏப்ரல் 2024 பிரித்தானிய நேரம் இரவு 10 மணி. ஒருவர் ஒரு முறைதான் பதில் அளிக்கவேண்டும். சகல கேள்விகளுக்கும் பதில்கள் முழுமையாகத் தரப்படவேண்டும். பதில் அளித்த பின்பு திருத்தங்களை அதே நாளில் மாத்திரம் செய்யலாம். அதன் பின்னர் திருத்தவேண்டி ஏற்படின் போட்டி நடத்துபவரிடம் முன்னரே அனுமதி பெறவேண்டும். ஒன்றுக்கு மேற்ப்பட்டவர்கள் ஒரே புள்ளிகள் பெற்றால், முதலில் பதில் அளிப்பவர் இவர்களுக்குள் முதலிடம் பெறுவார். போட்டி நடாத்துபவரைத் தவிர்த்து குறைந்தது 10 பேராவது போட்டியில் பங்குபற்றவேண்டும்.
    • புதிய ஆடுகளம் அமைத்து தானே அதில் சுருண்டு பலியாகிவிட்டதா குஜராத் அணி? ஏன் இந்த மோசமான தோல்வி? பட மூலாதாரம்,SPORTZPICS ஒரு மணி நேரத்துக்கு முன்னர் 4வது ஓவர் தொடக்கத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணி, 169 ரன்கள் வரை சேர்க்கும் என்று கணினியின் முடிவுகள் கணிக்கப்பட்டது. இது 6-வது ஓவரில் திடீரெனக் குறைந்து 120 ரன்களாகக் குறைந்தது. முடிவில் குஜராத் டைட்டன்ஸ் அணி இந்த சீசனிலேயே குறைந்தபட்ச ஸ்கோருக்கு ஆட்டமிழந்து அதிர்ச்சி அளித்தது. 2022ம் ஆண்டு இந்த ஐபிஎல் தொடருக்குள் வந்தபின் குஜராத் டைட்டன்ஸ் அணி சேர்த்த மிகக்குறைந்த ஸ்கோர் இதுவாகும். இதற்கு முன் 125 ரன்களில் சுருண்டிருந்தது குஜராத் அணி. அதைவிட இந்த ஆட்டத்தில் மோசமாகும். ஆமதாபாத்தில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 32-வது லீக் ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது டெல்லி கேபிடல்ஸ் அணி. முதலில் பேட் செய்த குஜராத் டைட்டன்ஸ் அணி 17.3 ஓவர்களில் 89 ரன்களில் சுருண்டது. 90 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய டெல்லி கேபிடல்ஸ் அணி 53 பந்துகளில் 4 விக்கெட் இழப்புக்கு 92 ரன்கள் சேர்த்து 67 பந்துகள் மீதமிருக்கையில் 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. இந்த வெற்றியால் டெல்லி கேபிடல்ஸ் அணி 7 போட்டிகளில் 3 வெற்றி, 4 தோல்வி என 6 புள்ளிகளுடன் 9வது இடத்தில் இருந்தது, 6-வது இடத்துக்கு முன்னேறியது. குறைந்த ஓவரில் வெற்றி வெற்றி பெற்றதால் நிகர ரன்ரேட்டும் மைனஸ் 0.975 லிருந்து மைனஸ் 0.074 ஆக முன்னேறிவிட்டது.   பட மூலாதாரம்,GETTY IMAGES நிகர ரன்ரேட் மோசமாக இருந்தநிலையில் தற்போது பாசிட்டிவ் நோக்கி டெல்லி அணி நகர்ந்துள்ளது. அடுத்ததாக ஒரு வெற்றி பெற்றால், நிகரரன்ரேட் பிளஸ்குக்குள் சென்றுவிடும். அதேசமயம், குஜராத் டைட்டன்ஸ் அணி அடுத்தடுத்து தோல்விகளைச் சந்தித்துள்ளது.7 போட்டிகளில் 3 வெற்றி, 4 தோல்விகள் என 6 புள்ளிகளுடன் 6-வது இடத்திலிருந்து 7-வது இடத்துக்கு சரிந்துள்ளது. நிகர ரன்ரேட்டும் மைனஸ் 1.303 ஆக வீழ்ச்சி அடைந்துள்ளது. நிகர ரன்ரேட்டை உயர்த்த குறைந்தபட்சம் அடுத்த இரு போட்டிகளில் பெரிய வெற்றியை குஜராத் அணி பெற்றால்தான் முன்னேற்ற முடியும். டெல்லி கேபிடல்ஸ் அணியின் வெற்றிக்கு முக்கியக்காரணம், ஹீரோக்களாக இருந்தவர்கள் பந்துவீச்சாளர்கள்தான். 6 பந்துவீச்சாளர்கள் பந்துவீசியதில் டிரிஸ்டன் ஸ்டப்ஸ் தவிர மற்ற 5 பந்துவீச்சாளர்களும் ஓவருக்கு. 4.50 ரன்களுக்கும் குறைவாகவே வழங்கினர். அதிலும் டிரிஸ்டன் ஸ்டப்ஸ் இதுவரை 79 டி20 போட்டிகளில் விளையாடி 177 பந்துகளை மட்டுமே வீசியுள்ளார். இந்த ஆட்டத்தில் ஸ்டப்ஸ் ஒரு ஓவர் மட்டும் சுழற்பந்துவீசி 11 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES கலீல் அகமது 4 ஓவர்கள் வீசி ஒரு மெய்டன் 18 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தினார், இசாந்த் சர்மா 2 ஓவர்கள் வீசி 8ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டுகளை சாய்த்தார். முகேஷ் குமார் 2.3 ஓவர்கள் வீசி 14 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். அக்ஸர் படேல் 4ஓவர்கள் வீசி 17 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தினார். இதில் விக்கெட் வீழ்த்தாமல் இருந்தது குல்தீப் யாதவ் மட்டும்தான். குறிப்பாக இந்த ஆட்டத்திஸ் ஸ்டப்ஸ் தவிர மற்ற 5 பந்துவீச்சாளர்களும் உள்நாட்டு பந்துவீச்சாளர்களை வைத்தே டெல்லி கேபிடல்ஸ் விளையாடியது. கடந்த ஆட்டத்திலும் இதேபோன்று வெளிநாட்டு பந்துவீச்சாளர்கள் உதவி இல்லாமல் உள்நாட்டு வீரர்களை வைத்தே டெல்லி அணி வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்த ஆட்டத்தில் இரு முக்கிய கேட்ச்கள், இரு முக்கிய ஸ்டெம்பிங்குகள் ஆகியவற்றுடன்16 ரன்கள் சேர்த்த டெல்லி கேபிடல்ஸ் கேப்டன் ரிஷப் பந்த் ஆட்டநாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.   பட மூலாதாரம்,SPORTZPICS ரிஷப் பந்த் கூறியது என்ன? டெல்லி கேபிடல்ஸ் ரிஷப் பந்த் கூறுகையில் “ ஏராளமான நேர்மறையான அம்சங்கள் நடந்தன. சாம்பியன் மனநிலையோடு எங்கள் அணி விளையாடியது. ஐபிஎல் சீசனில் சிறந்த பந்துவீச்சாக இருக்கும். தொடர்ந்து நாங்கள் எங்களை முன்னேற்றி வருகிறோம். நிகர ரன்ரேட்டை இழந்துவிட்டதால் இனிமேல் அதை உயர்த்த கவனம் செலுத்தவோம். பந்துவீச்சாளர்கள் அவர்கள் பணியை ரசித்துச் செய்தனர், அதனால்தான் வெற்றி எளிதாகியது” எனத் தெரிவித்தார் குஜராத் அணியின் பேட்டிங் நேற்று படுமோசமாக இருந்தது. சுருக்கமாகக் கூறினால், குஜராத் அணியின் பேட்டர்கள் களத்தில் சந்தித்ததே 17.3 ஓவர்கள்தான். அதில் பேட்டர்கள் டாட் பந்துகளாகச் சந்தித்தது 63 பந்துகள். ஏறக்குறைய 10 ஓவர்களுக்கு எந்த பேட்டர்களும் ரன்கள் ஏதும் சேர்க்கவில்லை. ஆக 7.3 ஓவர்களில்தான் 89 ரன்கள் சேர்த்தனர். அது மட்டுமல்லாமல் ஐபிஎல் வரலாற்றிலேயே ஒரு ஆட்டத்தில் குறைந்தபட்சமாக குஜராத் அணி ஒரே ஒரு சிக்ஸர் மட்டுமே நேற்று அடித்தது. குஜராத் அணியில் காயத்திலிருந்து மீண்டு டேவிட் மில்லர் அணிக்கு திரும்பி இருந்தார், இம்பாக்ட் ப்ளேயராக ஷாருக்கான் சேர்க்கப்பட்டிருந்தார். குஜராத் அணியில் 8-வது வரிசைவரை ஓரளவுக்கு நன்கு பேட்டிங் செய்யக்கூடிய வீரர்கள்தான் இருந்தனர். ஆனால், நேற்று ரஷித் கான் சேர்த்த 24 பந்துகளில் 31 ரன்கள்தான் அதிகபட்ச ஸ்கோர். மற்ற எந்த பேட்டரும் பெரிதாக ரன்கள் சேர்க்கவில்லை.   பட மூலாதாரம்,GETTY IMAGES சாய் சுதர்சன்(12), திவேட்டியா(10) ரஷித்கான்(31) ஆகிய 3 பேட்டர்கள் மட்டும்தான் இரட்டை இலக்க ரன்கள் சேர்த்தனர். மற்ற பேட்டர்களான சுப்மான் கில்(2), சாஹா(8), மில்லர்(2) அபினவ் மனோகர்(8), ஷாருக்கான்(0), மோஹித் சர்மா(2), நூர் அகமது(1) என 7 பேட்டர்கள் ஒற்றை இலக்க ரன்கள் மட்டுமே சேர்த்து மோசான பேட்டிங்கை வெளிப்படுத்தினர். ரஷித்கான் தவிர வேறு எந்த பேட்டரும் களத்தில் 15 பந்துகளைக் கூட சந்திக்காமல் தேவையின்றி டெல்லி பந்துவீச்சாளர்களிடம் விக்கெட்டை வழங்கி வெளியேறினர். ஆடுகளத்தின் தன்மை என்ன, பந்து எப்படி பேட்டை நோக்கி வருகிறது என்பது குறித்த எந்தப் புரிதலும் இல்லாமல், பொறுமை இல்லாமல் மோசமான ஷாட்களை ஆடியே ஒட்டுமொத்தமாக விக்கெட்டுகளை இழந்தனர். அதிலும் இசாந்த் சர்மா வீசிய 5வது ஓவரில் சுதர்சன் 12 ரன்னில் ரன்அவுட் ஆக, அதே ஓவரின் கடைசிப்பந்தில் மில்லர் 2 ரன்னில் ரிஷப்பந்திடம் கேட்ச் கொடுத்து விக்கெட்டை இழந்தார். இதேபோல டிரிஸ்டன் ஸ்டப்ஸ் வீசிய 9-வது ஓவரில் 3வது பந்தில் அபினவ் மனோகர் 8ரன்னில் ரிஷப்பந்தால் ஸ்டெம்பிங் செய்யப்பட்டார், அடுத்த பந்தைச் சந்தித்த இம்பாக்ட் ப்ளேயர் ஷாருக்கானும் ஸ்டெம்பிங் செய்யப்பட்டு ஆட்டமிழந்தார். இரு முறை ஒரே ஓவர்களில் 2 விக்கெட்டுகள் என குஜராத் அணி இழந்தது. முதல் விக்கெட்டை 11 ரன்களில் இழந்த குஜராத் அணி, அடுத்த 36 ரன்களுக்குள் 4 விக்கெட்டுகளை பறிகொடுத்தது. அடுத்த 42 ரன்களுக்குள் மீதமிருந்த 5 விக்கெட்டுகளையும் குஜராத் ஒட்டுமொத்தமாக இழந்தது.   பட மூலாதாரம்,SPORTZPICS குஜராத் சரிவுக்கு ஆடுகளம்தான் காரணமா? ஆமதாபாத்தில் போட்டி நடந்த ஆடுகளம் இதற்கு முன் நடந்த சீசன்களில் பயன்படுத்தப்படாத புதிய விக்கெட்டாகும். ஆடுகளத்தில் பந்து பிட்ச் ஆனதும் பேட்டரை நோக்கி மெதுவாகவே வரக்கூடிய ஸ்லோ பிட்சாகும். சுழற்பந்துவீச்சாளர்களுக்கும் பந்து வேகமாகத் திரும்பாமல் மெதுவாகத் திரும்பக்கூடிய ஆடுகளம். இதனால் மோசமான ஷாட்களை தேர்ந்தெடுத்து குஜராத் பேட்டர்கள் வெளியேறினர். அதிலும் டிரிஸ்டன் ஸ்டப்ஸ் வீசிய ஒரு ஓவரில் அடுத்தடுத்த பந்தில் மனோகர், ஷாருக்கான் இருவரும் ஸ்டெம்பிங் செய்யப்பட்டனர். இவர்கள் இருவருமே பந்து இந்த அளவு டர்ன் ஆகும் என நினைத்திருக்கமாட்டார்கள். பந்து வருவதற்கு முன்பே பேட்டர்கள் பேட்டை சுழற்றியதும், ஸ்லோ பந்துகளில் பெரிய ஷாட்களை அடிக்க முற்பட்டதும் எளிதாக விக்கெட்டுகளை வீழ்த்த உதவியது. ஆனால் புதிய ஆடுகளத்தால் தங்களுக்கு எந்தப் பிரச்னையும் ஏற்படவில்லை என்று சுப்மான் கில் கூறினார். தோல்விக்குப் பிறகு அவர் கூறுகையில் “ எங்கள் பேட்டிங் சராசரியாகவே இருந்தது. விக்கெட் ஓரளவுக்கு நன்றாகத்தான் இருந்தது. விக்கெட் மோசம் என்று நான் கூறவில்லை. எங்கள் வீரர்கள் ஆட்டமிழந்த விதத்தைப் பார்த்தால், குறிப்பாக நான்ஆட்டமிழந்ததற்கும் ஆடுகளத்துக்கும் தொடர்பில்லை. சாஹா ஆட்டமிழந்தது, சாய் சுதர்சன் ரன்அவுட் ஆகியவையும் பிட்சுக்கு எந்தத் தொடர்பும் இல்லை. என்னைப் பொருத்தவரை மோசமான பேட்டிங், மட்டமான ஷாட் தேர்வுகள்தான் தோல்விக்கு காரணம்” எனத் தெரிவித்தார். பட மூலாதாரம்,GETTY IMAGES ஆனால், குஜராத் பேட்டர் டேவிட் மில்லர் ஆடுகளத்தை குற்றம்சாட்டினார். அவர் கூறுகையில் “ விக்கெட் மிக மெதுவாக இருந்தது. எந்த அணியும் இதுபோன்று மோசமாக குறைந்த ஸ்கோரில் ஆட்டமிழந்தது இல்லை. அதிலும் ஒரு முன்னாள் சாம்பியன் அணி ஆட்டமிழந்தது இல்லை. இரு விக்கெட்டுகள் திடீரென அடுத்தடுத்து பறிபோனது அதிர்ச்சியளித்தது.” “சுப்மான் கில் கவர் ட்ரைவ் ஷாட்களை பந்து வரும்முன்பே ஆடிவிட்டார். பந்து ஆடுகளத்தில் நின்று மெதுவாக பேட்டரை நோக்கி வந்ததை புதிய பேட்டராக வருபவரால் கணிக்க முடியவில்லை அதனால்தான் 90 ரன்களுக்குள் ஆட்டமிழந்தோம். இந்த உலகத்திடம் ஆயிரம் மன்னிப்புகள் கேட்கலாம். ஆனால், இறுதியில் பார்த்தால் நாங்கள் மோசமான கிரிக்கெட்டைத்தான் விளையாடியிருக்கிறோம். 120 ரன்கள் சேர்த்திருந்தால்கூட பந்துவீச்சாளர்கள் டிபெண்ட் செய்ய உதவியிருக்கும். ஆனால்,90 ரன்கள்கூட வரவில்லை. ரஷித்கான் அணியை பெரிய ஸ்கோருக்கு கொண்டு செல்ல வேண்டும் என்ற நோக்கில் பேட் செய்ததால்தான் ஓரளவுக்கு ஸ்கோர் கிடைத்தது. இல்லாவிட்டால் மோசமாகி இருந்திருக்கும் ” எனத் தெரிவித்தார். https://www.bbc.com/tamil/articles/cqqny66krveo
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.