Jump to content

ஆணவம் ! மாயை ! கன்மம் ! என்பது யாது ?


Recommended Posts

 

ஆணவம் ! மாயை !கன்மம் ! என்பது யாது ?

 
 
ஆணவம் , மாயை ,கன்மம் , என்னும் வார்த்தை ஆன்மீகத்தில் அனைவராலும் பேசப்படும் வார்த்தையாகும் , ஆன்மா என்னும் ஒளியை, ஆணவம் ,மாயை ,கன்மம் என்னும் மும்மலங்கள் மறைத்துக் கொண்டு உள்ளதால் ,உண்மையான கடவுளை அறிய முடியவில்லை என்கிறார்கள் ,அதை அழித்தால் தான் கடவுளை அறிய முடியும் என்பது ஆன்மீக,சமய ..மத .. வாதிகளின் கருத்தாகும் .
 
இதற்கு வள்ளல்பெருமான் என்ன சொல்கிறார் என்பதைப் பார்ப்போம்! .
 
ஆன்மாக்கள் என்பது ,ஆண்டவரால் அனுப்பப் பட்ட ,ஆண்டவரின் குழந்தைகளாகும் .அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் என்பது ,அனைத்து அண்டங்களையும் இயக்கிக் கொண்டு இருக்கும்,,ஒரு மாபெரும் பேரொளியாகும். அந்த பேரொளி இருக்கும் இடம் ,அகண்ட ,அளவிடமுடியாத அருட்பெருவெளியாகும், அந்த அருட்பெரு வெளியில் ....ஆன்ம ஆகாசம் என்னும் ஓர் எல்லை (இடம் ) உள்ளது ....அங்குதான் ஆன்மாக்கள் நிறைந்து இருக்கின்றன ,அந்த ஆன்மாக்கள் முன்று பிரிவுகளாக உள்ளன .அதற்கு ..பக்குவ ஆன்மா ..அபக்குவ ஆன்மா ...பக்குவா பக்குவமுள்ள ஆன்மா,...என்பனப் போன்ற மூன்றுவிதமான ஆன்மாக்கள்,மூன்று பிரிவுகளாக நிறைந்து இருக்கின்றன .
 
அங்கு இருந்துதான் எல்லா அண்டங்களுக்கும் ஆன்மாக்களை அருட்பெரும்ஜோதி ஆண்டவரால் அனுப்பி வைக்கப் படுகின்றது ...
 
மூன்று விதமான ஆன்மாக்கள் !.
 
அந்த ஆன்மாக்களுக்கு ,உண்மை தெரியாத ஆன்மாக்கள் என்றும் ..உண்மையும் பொய்யும் தெரிந்த ஆன்மாக்கள் என்றும் ...உண்மை மட்டும் தெரிந்த ஆன்மாக்கள் என்றும் ..என மூன்று குணங்கள் உள்ள ஆன்மாக்கள் ,அந்த ஆன்மா ஆகாயத்தில் உள்ளன .அந்த ஆன்மா ஆகாயத்தில் மூன்று பிரிவுகளாக உள்ளன .அதற்குப் பெயர்;-- ,சகலர் ...பிரளயாகலர் ....விஞஞானகலர் ...என்பதாகும் .
 


அபக்குவம் உள்ள ஆன்மாக்கள் ;--...சகலர் என்பதாகும் ;----...அந்த ஆன்மாக்கள் ஜீவர்கள் எனப்படும் உயிர்பெற்று வாழம் ஜீவ ஆன்மாக்கள் என்பதாகும் .அந்த ஆன்மாவில் இயற்கையாகிய ஆணவம் ...இயற்கையில் செயற்கையாகிய மாயையும் ...செயற்கையாகிய காமியம் அல்லது கர்மம் ...இம்முன்றும் உள்ளவைகளாகும் ....

பக்குவாபக்குவம் உள்ள ஆன்மாக்கள் ;--பிரளயாகலர் ;----என்பதாகும் .இந்த ஆன்மாக்களில் இயற்கையாகிய ஆணவம் ...இயற்கையில் செயற்கையாகிய மாயை ...இவ்விரண்டும் உள்ள உயிர்பெற்று வாழும் ஜீவன்களாகும்....

பக்குவம் உள்ள ஆன்மாக்கள் ;---விஞ்ஞானகலர் ...என்பதாகும்...இந்த ஆன்மாவில் இயற்கை யாகிய ஆணவம் மாத்திரம் உள்ளதாகும்....இந்த ஆன்மா உயிர் பெறாமல் வாழும் கலாதீதர்கள். இவை எங்கு வேண்டுமானாலும் உயிர் ..உடல் ..இல்லாமல் எங்கு வேண்டுமானாலும் சென்று வாழும் தகுதிப் பெற்றதாகும் .

சகலர் ...பிரளயாகலர் ...விஞ்ஞானகலர் ..வாழ்க்கை முறைகள் ;--

சகலர் என்ப்படுவது ----ஜீவர்கள் ...தாவரம் முதல் மனிதர் வரை ஆணவம் ...மாயை ...கன்மம் ..என்னும் மும்மலங்களுடன்,ஆன்மா,உயிர்... உடம்பு பெற்று இவ்வுலகில் வாழ்ந்து ,..இறுதியில் மனித தேகம் கிடைத்து ,வாழ்ந்து இன்பம் ..துன்பம் ..சலிப்பு...வெறுப்பு அடைந்து ..மெய் அறிவு என்னும், ஆன்ம அறிவு பெற்று ,அருளை அடைந்து,சுத்த தேகம் பெற்று...பின் பிரணவ தேகம் பெற்று ..பின்பு ஞான தேகம் பெற்று ...இறை உண்மையை அறிந்து ,பேரின்ப நிலையை அடைவதாகும் ....

பிரளயாகலர் எனப்படுவது ;---கல்ப தேகிகள் ..இவர்கள் ஆன்மாவில் ஆணவம் மாயை என்னும் இரண்டு மலங்கள் உடையதால் ,இயற்கை யாகிய ஆணவத்துடன் செயற்கையாகிய மாயை என்னும் உடம்புடன் வாழும் தகுதியைப் பெற்று வாழ்வதாகும் . ,கன்மம் என்னும் செயல்கள்(பதிவுகள் )இவைகளுக்கு கிடையாது .இந்த ஆன்மாக்கள் மாயை என்னும் உடம்புடன் வாழ்ந்து ....இன்பம் ...துன்பம்...சலிப்பு...வெறுப்பு அடைந்து ..மெய் அறிவு என்னும் ஆன்ம அறிவு பெற்று... இறைவன் உண்மையை அறிந்து....அருளைப் பெற்றுப் பிரணவ தேகம் பெற்று.. ..பின் ஞான தேகம் பெற்று பேரின்ப நிலையை அடைவதாகும்.

விஞ்ஞானகலர் எனப்படுவது ;---கலாதீதர்கள்...இவர்கள் ..ஆன்மாவில் இயற்கையாகிய ஆணவம் மட்டும் உள்ளவர்கள் .இந்த ஆன்மாவிற்கு மாயையின் உடம்பு தேவை இல்லை ,மாயையின் உதவி மட்டும் தேவை ,இந்த ஆன்மா உடம்பு இல்லாமல் .மாயையின் உதவியுடன் என்ன வேண்டுமானாலும் செய்யலாம் .எங்கும் சென்று ..எப்படி வேண்டுமானாலும் வாழலாம் .அதுவும் வாழ்க்கையில்..இன்பம்...துன்பம்...சலிப்பு.... வெறுப்பு அடைந்து ,மெய் அறிவு என்னும் ...ஆன்ம அறிவு பெற்று ...இறை உண்மையை அறிந்து ,அருளைப் பெற்று ஞானதேகம் என்னும்... ஒளி தேகம் ....பெற்று பேரின்ப நிலையை அடைவதாகும்....மேலும் விரிக்கில் பெருகும் ...

இவை மூன்று விதமான ஆன்மாக்களின் வாழ்க்கை முறைகளாகும் .நாம் சகலர் என்னும் ஆணவம் ...மாயை ...கன்மம் ...என்னும் மும் மலங்கள் பொருந்திய ஆன்மாக்கள் ஆகிய ..நாம் பல பிறவிகள் எடுத்து ..இப்போது தான் மனிதப் பிறவி கிடைத்துள்ளது .இந்த மனிதப் பிறவி எப்படி கிடைத்தது,..நாம் எங்கு இருந்து வந்தோம் ,ஆன்மாவை ஆணவம்...மாயை ...கன்மம் ..என்னும் மலங்கள் எப்படி பற்றிக் கொண்டது ? ஏன் பற்றிக் கொண்டது ?  என்பதை நமது வள்ளல் பெருமான் எப்படி விளக்கம் அளிக்கிறார் என்பதைப் பார்ப்போம் .

 ஆன்மாக்கள் மேலே சொன்னபடி ..அருட்பெரு வெளியில் உள்ள ஆன்ம ஆகாசத்தில் இருந்து ஒவ்வொரு அண்டங்களுக்கும் அருட்பெருஞ் ஜோதி ஆண்டவரால் அனுப்பி வைக்கப் படுகின்றன .ஆண்டவர் ஆன்மாக்களை வெறுமென அனுப்பி வைக்க படுவதில்லை ஆன்மாக்களுக்கு வேண்டிய ''அருள்'' என்னும் பொக்கிஷத்தை வைத்து அனுப்பி வைக்கிறார் ..அருட் பெருவெளியில் இருந்து எப்படி அனுப்பி வைக்கிறார் என்பதைப் அறிவோம் .

ஆன்மாவில் பதிந்து உள்ளவைகள் எவை ?

ஆன்மாவின் முதல் மனைவி !

அருட்பெரு வெளியில் உள்ள ஆன்ம ஆகாசத்தில் இருந்து தான் எல்லா அண்டங்களுக்கும் (உலகங்கள் ) ஆன்மாக்களை அனுப்பி வைக்கப் படுகின்றன .ஆன்மாவை அனுப்பும் போது ஆன்மாக்கள்.... ,உலகத்தில் வந்து வாழ்ந்து, இன்பம் ....துன்பம் ....வெறுப்பும் ,...சலிப்பும்... அடைந்து, எங்கு இருந்து வந்தோமோ அங்கு திரும்பி செலவதற்கு தேவையான ''அருள் அமுதம்'' என்னும் அரும் பொருளை ஆன்மாவில்..இறைவனால் நிரைப்பி வைத்து அனுப்பப் படுகிறது .அதாவது,.திரும்பி வருவதற்கு .... ரிட்டன் டிக்கட் வாங்கிக் கொடுப்பது போலாகும்

ஆன்மா தானே எங்கும் செல்லாது ,...அதை அழைத்து செல்வதற்கு ''ஆணவம்''என்னும் ஒரு மனைவியை,..இயற்கையே கட்டிவைத்து,அதன் துணையுடன் உலகத்திற்கு அனுப்பி வைக்கப்படுகிறது .அதனால்தான் ஆணவம் செயற்கை அல்ல ,ஆணவம் இயற்கை என்கிறார் வள்ளலார் .

'உதாரணம்;-- ..ஒருபெண் திருமண வயது வந்தவுடன்,அந்த பெண்ணுக்கு தகுந்த கணவனை தேர்வு செய்து ,திருமணம் செய்து கணவன் வீட்டிற்கு ,தாய்,தந்தையார் மகிழ்ச்சியுடன் அனுப்பி வைப்பார்கள் .அனுப்பும் போது மணப் பெண்ணை சும்மா அனுப்புவ தில்லை ,அந்த பெண்ணுக்கு தேவையான ,ஆடை,...ஆபரணங்கள் ,....தேவையான பணம் போன்ற சீர் வரிசை... ,அனைத்தும் ஒரு பெட்டியில் வைத்து கணவன் வீட்டிற்கு அனுப்பி வைப்பார்கள் .

அதேபோல் ஆன்மாவுக்கு ஆணவம் என்னும் மனைவியை மணம் முடித்து  (கட்டிவைத்து) ,''அருள் அமுதம்'' என்னும் பொருளை ''ஆன்மா என்னும் பெட்டியில் ''வைத்து மகிழ்ச்சியுடன் ஆண்டவர் அனுப்பி வைக்கிறார் .

ஆன்மாவைப் பற்றிக் கொண்ட ஆணவம்,எப்படி பற்றிக் கொண்டது என்பதை வள்ளல் பெருமான் விளக்குவதை பாருங்கள் .செம்போடு களிம்பு சேர்ந்தது போன்று ஆணவக் கிழத்தி ,அனாதியில் இறுகப் பிடித்துக் கொண்டாள் .பிரம்ம ராட்ஷசி, பேய் போல் பிடித்துக் கொண்டாள் .சிவபூராணத்தை சிறிதும் காட்டாள்,..
ஜெகமேனும் ஏக தேசமும் தெரிய விடாமல் இருக்காள் .எவ்விடத்து இருளும் என்னுடைய அகம் என்னும் உண்மையை,...சுவர்போல் கட்டிக் கொண்டாள் .நனவில் தான் காட்டமாட்டாள் என்றால் ,கனவிலும் இருள் போல் மறைத்துக் கொண்டாள் .மிகவும் கொடியவள் .

இரவு எது ?,....பகல்எது ?,...இன்பம் எது ?,...துன்பம் எது?...ஒளி எது ?..வெளி எது ? என ஒன்றும் தெரிய விடாமல் ,இறுக்கும் அரக்கி,...இவளோடும் இருந்து வாழ்ந்து கொண்டு உள்ளேன் .எளியேனால் என்ன செய்ய முடியும் .அவள் மயக்கத்தில் என்னை இழந்தேன் .

ஆணவத்தின் முதல் பிள்ளை ! அஞ்ஞானம் !

ஆணவம் என்ற பெண்ணிடம் என்னுடைய காதலை வெளிப்படுத்தி கற்பை இழந்து ,அஞ்ஞானம் என்னும் ஒரு மூடப் பிள்ளையைப் பெற்றுக் கொண்டேன்.அவன் எனக்குத் துணையாக இருப்பான் என்று நினைத்து அன்போடு அரவணைத்து ஆசையோடு வளர்த்தேன் .அவனோ சூரியனை மறைக்கும் கரு மேகங்கள் போல்,என்னுடைய அகக் கண்ணையும் ,புறக் கண்ணையும்,அவன் கைகளாலே முடிக் கொண்டான் ...தன்னையும் காட்டாமல் ,என்னையும் நான் பார்க்க முடியாமல் மறைத்துக் கொண்டான் .

இவன் ஏடுறும்,..எண்ணும்,..எழுத்தும் ,..உணரான் ....தாயினும் கொடியன் ..ஆயினும் என்றன் விதியை நொந்து விருப்பமுடன் வளர்ந்தேன் .ஆனால் .இவன் என்னுடைய மகன் என்று சொல்லும் அளவிற்கு பெருமை வாங்கித்  தரவில்லை.அவன் பெருமை வாங்கித் தராவிட்டாலும் பரவாயில்லை ,சிறுவயது முதலே, என்னுடைய உறவில்லாமலும்... அவனுக்கும் அறிவு இல்லாமல் அவன் விருப்பம்போல், எனக்குத் தொல்லையும் துன்பமும் கொடுத்துக் கொண்டே உள்ளான்,அதனால்,ஆணவம் என்னும் முதல் மனைவியை கண்டு கொள்ளாமலே இருந்தேன்,

இந்த மாயை என்னும் உலகத்தில் வந்ததும் மண்ணும்... நீரும்...நெருப்பும் ...காற்றும் ...ஆகாயமும் ..அதனால் உண்டாக்கும் அதிசயங்களும்,அதில் உள்ள விசித்திரமான செயல்பாடுகளும் ....ஏழுவிதமான முக்கியமான அணுக்களும் ...அதற்கு துணையான சாதாரண, அசாதாரண அணுக்களும் . அந்த அணுக்களால்..''ஆன்மாக்களுக்கு'' கட்டிக் கொடுக்கப்பட்ட,அழகு ..அழகான வீடுகளும் ஆன்மாவில் இருந்து வெளியே வந்து வாழும் உயிர்களும் ,ஒவ்வொரு உயிர்களுக்கும் விதவிதமாக கட்டிக் கொடுக்கப்பட்ட ...வித ..விதமான தோற்றமுள்ள வீடுகளும் .தாவரம் ...ஊர்வன ...நீரில் வாழ்வன ...பறப்பன ....நடப்பன ....தேவர் ...நரகர்....மனிதர் ..போன்ற உயிர்கள் ....அந்த வீட்டில் இருப்பதையும் ....இயங்குவதையும் ....வாழ்வதையும் பார்த்து மயங்கிப் போனேன் அதனால் என்னுடைய முதல் மனைவியான ஆணவத்தை நினைத்துப் பார்க்க நேரமும் இல்லை.... அறிவும் இல்லை .

ஆணவம் என்னும் மனைவியை மறந்ததால்,என்னுடைய தவிப்பைப் பார்த்து  இடண்டாவது மனைவியாக, என்னை தானாகவே வந்து திருமணம் செய்து கொண்டாள் .அவள் தான் மாயை என்பவளாகும் .

எனது இரண்டாவது மனைவி ;--மாயை !

ஆன்மாகாசத்தில் இருந்து ,ஆணவம் என்ற மனைவியுடனும் ,அஞ்ஞானம் எண்ணும் மகனுடனும் .இந்த உலகத்திற்கு வந்தேன் .இங்கு வந்ததும் ஆணவம் என்னும் மனைவியையும் ,அவளுக்கு பிறந்த அஞ்ஞானும் என்னும்  பிள்ளையையும் இங்கு வந்த உடனே .மறந்து விட்டேன் .இரண்டாவது மனைவியாக மாயையைத் திருமணம் செய்து கொண்டேன் .

மாயை என்னும் பெண் என்னை எப்படி பிடித்துக் கொண்டாள் என்பதை வள்ளலார் விளக்குவதைப் பாருங்கள் .

மாயை என்னும் மாதினைக் கொணர்ந்தே
சிறுகருங் காக்கைக் குருகுறுங் கழுத்தில்
கனம்பெறு பனங்காய் கட்டிய வாறெனக்
கட்டிப் புண்ணியங் கட்டிக் கொண்டனன்
விடுத்தெனைப் புண்ணியன் விலகலும் அவள்தான்
விண்ணவர் மண்ணவர் வியக்கும் உருக்கொடு
கொள்ளிவாய்ப் பேய்களோர் கொடி நின்றே
தடித்த குழவியைப் பிடித்தது போல .

மற்றவள் என்னை மணந்து கொண்டனள்
பெண்ணடை அனைத்தும் பெருங்கதை யாகும்

மாயைக்கு பிறந்த குழைந்தைகள் ...நான்கு !

இரண்டாவது மனைவி மாயை என்பவளாகும் ,அவளுக்கு பிறந்தது நான்கு குழைந்தை களாகும் .

முதல் பிள்ளை ;--மனம் என்னும் பெயராகும் ....இரண்டாவது பிள்ளை ;--புத்தி என்னும் பெயராகும் .மூன்றாவது பிள்ளை ;--சித்தம் என்னும் பெயராகும் ....நான்காவது பிள்ளை ;---அகங்காரம் என்னும் பெயராகும் .இந்த நான்கு பிள்ளைகளும் எனக்கு கொடுக்கும் தொல்லைகள் அளவில் அடங்காது .

மனம் என்னும் முதல் பிள்ளை ..அதன் குணம் எப்படிபட்டது என்பதை விளக்குகிறார்..!

கொடுந்தவம் புரிந்தொரு குரங்கு பெற்றார் போல
மலைக்கப் பெற்றிட மனமெனும் இளைஞ்ன்
உலகைக் கொழுந்தென ஒருவன் பிறந்தான்
வருமிவன் சேட்டை வகுக்க வாய் கூசும்.

விதி விலக்கறியா மிகச் சிறிய வனாயினும்
விண் மண் நடுங்க வினைகள் இயற்றிக்
காமக் குழியில் கடுகிப் படுகுழி
விழு மதக் களிறென விழுந்து திகைப்பான்
பதியை இழந்த பாவையின் செயல்போல்

கோப வெங் கனலிற் குதித்து வெதும்புவன்
நிதிகவர் கள்வர் நேரும் சிறையென
உலோபச் சிறையில் உழன்று வாழ்வன்
வெற்பெனும் யானையை விழுங்கும் முதலை
முழுகிக் கடலில் முளைத்திடல் போல

மோகக் கடலில் மூழ்கி மயங்குவன்
மது குடித் தேங்கி மயக்குறு வார்போல்
மதத்தில் வீறி மதங்களில் வியப்பன்
பட்டினி இருக்கும் வெட்டுணி போல
மச்சரங் கொண்டு மகிழ கூர்ந் தலைவன்

காசில் ஆசை கலங்குறா வேசை
எனினும் விழிமுன் எதிர்ப்படில் அக்கணம்
அரிய தெய்வம் என்று ஆடுவான் பாடுவான் .
அணிகள் அணிவன் அடியும் பணிவன்
எலும்பைச் சுரண்டும் எரிநாய் போலச்

சுற்றுவன் பற்றுவன் தொழுவன் எழுவன்
கணத்தில் உலகெலாங் கண்டே இமைப்பில்
உற்ற விடத்தில் உறுவன் அம்மா
சேய்மை எல்லாஞ் செல்லற் கிளையான்
பித்தோங் கியவுன் மத்தனாத் திரிவான்

சொல்வழி நில்லான் நல்வழி செல்லான்
சேர அழைக்கில் சிரத்தே ஏறுவன்
வெட்டிலுந் துணியான் கட்டிலுங் குறுகான்
மலக்கி ஈன்ற மாதினும் பாவி
கள்ளது குடித்துத் துள்ளுவான் போல

மதத்தாற் பொங்கி வழிந்து துள்ளுவன்
முத்தம் தரல்போல் மூக்கைப் கடிப்பன்
மறைசொல் வான்போல் வளர்செவி கிள்ளுவன்
சற்றும் இரங்கான் தனித்துயில் கொள்ளான்
கூவிளிச் செய்வன் கூடுவன் பலரை

கூவி அதட்டினும் கோபங் கொள்வான்
இங்கு முள்ளான் அங்கும் முள்ளான்
படிக்கும் முன்னே பங்கு கொள்வான்
படியில் நிறுத்தி வாய்மை வழங்கினும்
வண்ணான் கல்லிடை வறிஞர் சீலையை

ஒலித்திடல் போல உரத்திக் கத்துவான்
என்னைத் தாதை என்று எண்ணான் சொல்லும்
வாய்மை எல்லாம் வண்புனல் ஓவியம்
ஆகக் கொள்வான் அவன் பரிசுரைக்கேன்
பிறந்த இப்பாவி இறந்தான் இலையே

சென்ற நாள் எலாம் இச்சிறுவனால் அன்றே
வருசுகங் காணா வைச்சுமை நேர்ந்தேன்
திறந்திவன் செயலைத் தினைத்துணை விடாது
செப்பின் கற்கள் சிதைந்து கசியும்
கனத்த மரங்கள் கண்ணீர் பொழியும் .

கடவுளர் இவன் செயல் காணுவாரேல்
இமையாக் கண்களை இமைத்திடு வாரால்

மாயையின் முதல் பிள்ளையான மனத்தைப் பற்றியும் அதன் செயல்கள் பற்றியும் தெளிவாக விளக்கி உள்ளார் .இரண்டாவது பிள்ளையான புத்தியைப் பற்றி எப்படி விளக்கம் தருகிறார் என்பதைப் பார்ப்போம் .

மாயையின் இரண்டாவது பிள்ளை ;--புத்தி ! ..புத்தியைப் பற்றி சொல்லுவதைப் பார்ப்போம் .

காசிபன் மனைவிமுன் கடுந்தவம் புரிந்து
பையுடைப் பாம்பை பயந்தது போன்று
புத்தி என்னும் புத்திரன் தன்னை
ஈன்றனன் அவனோ எளியரில் எளியன்
வாய்மையும் தூய்மையும் வதிதரு வாழ்க்கையன்
தாயோடும் பழகான் தமையனோ அணையான்
பாவம் என்னிற் பதறி அயர்வான்.

பாடு படற்குக் கூடான் உலகர்
கயங்கு நெறியில் உடங்கி மயங்குவன்
பாழ்நிகர் புந்தியர் பாலிற் பொருந்தான்
எப்பாடும் படான் எவரையும் கூடான்
கபடரைக் காணிற் காதம் போவான் .

கங்குலும் பகலும் கருது விகாரத்
தடத்திடை வீழ்ந்து தயங்குறு நயங்கள்
சாருவன் கூறுவன் தருக்குவன் எவைக்கும்
அடங்குவன் அறிதே அமைதல் இல்லான்
இவனை மடியில் இருத்திக் திடமொழி

செப்பிடச் சோர்வு செறிவதென் எனக்கே
இவன்பாற் செய்வது ஏதும் அறியேன் .

மாயையின் மூன்றாவது பிள்ளை ;--சித்தம் ....என்பதாகும்.அவன் செயல்கள் எப்படிபட்டது என்பதை பார்ப்போம் .

செறிதரு கோளுள சேயிழை யாள்பினும்
நையப் புணர்ந்து நாள்பட வருந்தி
நாடி நாடி நாயை யீன்றது போல் .

உணர்விலி என்றே உலகர் ஓதும்
சித்தம் என்னும் சிறிய குழவியைப்
பயந்து கரத்திற் பதர எடுத்தனன்
கரைதரு விண்ணீர்க் கடிதடம் ஆகக்
கதிர்விடும் உடுக்கன் கறங்கு மீனாக.

மதியைத் தாமரை மலராய் மதித்ததில்
மூழ்கப் பிடிக்க முன்னங் கொய்திட
எண்ணுவன் எழுவன் எட்டுவன் சிறிதும்
நேரா திளைத்தே நிலைகள் பற்பல
வான் கண்டவன் போல வாயாற் கொஞ்சுவன்.

எனையுங் கூவுவன் இவனிடர் பலவே
இடர் பல இயற்றி இழுக்குங் கொடியன்
இவன் செயல் நிற்க இவன் தாய் வயிற்றில் .

மாயையின் நான்காவது பிள்ளை ;--அகங்காரம் ,...அகங்காரம் என்னும் பிள்ளையின் செயல்களைப் பார்ப்போம் .

தாருகன் என்னும் தருகண் களிற்றைத்
தந்த மாயைக்குத் தனி மூத்தவளாய்
அகங்காரம் எனும் அடங்காக் காளை
அவனி மூன்றும் அதிர்ந்து கவிழக்
கடைமுறை பெற்றுக் களித்தனன் அவன் செயல்
கருதவும் பேசவும் கனிவாய்க் கூசுமே
கூற்றுவர் கோடிகொண்டு உதித்தா லென் .

முளைத்து வளர்ந்தனன் ''மூத்தவன் மூழை
இளையவன் காளை'' என்னும் இலக்கியமாய்
முன்னுள்ள மூவரை முடுகி ஈர்த்தே
எண்ணில் விளையாட்டை எழுப்பும் திறத்தன்
எல்லா ஆற்றலும் என்பால் உலதெனத்

தருக்குவன் இவன்றன் சங்கடம் பலவே
தன்னைத் தானே தகைமையில் மதிப்பன்
தரணியற் பெரியார் தாமிலை என்பான்
மாதின் வயிற்றில் வந்தவன் எனாது
தானே பிறந்த தன்மை போல் பேசுவன்

விடியும் அளவும் வீண் வாதம் இடுவான்
வாயால் வண்மை வகைபல புரிவன்
ஓத அவன் பெருமை ஈதவன் இயல்பே
சொல்லினுங் கேளாத் துரியோதனன் என
வானவர் தமக்கும் வணங்கா முடியன்

முன்வினை யாவும் முற்றும் திரண்டே
உருக் கொடியுங் இயம் பொணா ஊறுகள் இயற்றுவன்
பிள்ளையும் அல்லன் கொள்ளியும் அல்லன்
இன்னும் இவன் செயும் இடர்பல அவற்றை
இவர்பால் சொல்லி என்துயர் ஆற்றுவேன் .

பாதகி துன்பம் பவக்கடல் ஏழும்
மக்கள் துன்பம் மலைபோல் எட்டும்
நீளல் போல் அதனை செஞ்சில் நினைத்தோ
அவளது சூழ்ச்சி அற்புதம் அற்புதம் .

ஆன்மாவிற்கு முதல் மனைவி ,ஆணவம் ,அவளுக்கு பிறந்த குழைந்தை ,
அஞ்ஞானம் ,..இரண்டாவது மனைவி மாயை ;--அவளுக்கு பிறந்த குழைந்தைகள் ,..மனம் ...புத்தி ....சித்தம் ...அகங்காரம் ..என்னும் நான்கு குழைந்தைகள் பிறந்தது .அதனால் அடைந்த துன்பங்களும் ,துயரங்களும் ,அளவிடமுடியாது ,அவர்களுடன் வாழ்ந்து வரும் வேளையில்... மூன்றாவதாக ஒரு மனைவி வந்து பிடித்துக் கொண்டாள் .அவள் பெயர் காமியம்(அதாவது கன்மம் )...

மூன்றாவது மனைவி காமியம் (கன்மம் );--அவள் என்ன செய்கிறாள் என்பதைப் பார்ப்போம் .

தொல்லை மரபில் தொழில் பல கற்று
உலவுறு காமியம் ஒண்டொடி என்னும்
கபட வஞ்சகி யாங் களத்தினைக் கொணர்ந்து
பேய் பிடித்தவன் பாற் பெரும் பூதங் கூட்டித்
தான் மணந்தது போதாது இங்கு என்று பின்
''மாற்று காலுக்கு மறுகால் ஆக ''
மாட்டி மிக மனம் மகிழ்ந்தாள் கூர்வேல்
கண்ணினை யாள் நெடுங் கடல் சூழ் உலகில்
நிறைந்துள யாரையும் நெருக்குவள் கணத்தில்
இவள் செயும் வீரம் எண்ணி விளம்ப
உடலெலாம் நாவாய் உறினும் ஒண்ணா

ஒருத்தியே இரண்டு அங்குரு கொட அவ்வற்றில்
பலவாய்ப் பலவுளும் பற்பல வாயுரு
பொருத்தம் முறவே புரிவள அவ்வற்றில்
பலகால் புணர்ந்து பயன்வலி போக்கி
ஓருரு கரும்பும் ஓருரு காஞ்சியும்

ஓருரு நோவ இழுத்தே அனைவள்
இங்கனம் பற்பல ஏழைக் குறும்புகள்
இயற்றி எவருமே ஏக்கங் கொளவே
இவள்முன் நம்செபம் என்னுஞ் சாயா
அரகர என்றே அரற்றி மெலிவேன் .

மூன்றாவது மனைவிக்கும் மூன்று பிள்ளைகள் ;--அவை முக்குணங்கள் என்பதாகும் .அதாவது ..சாத்விகம் ...ராஜஸம்...தாமஸம் . என்பவையாகும் .இந்த பிள்ளைகள் என்ன செய்கிறார்கள் என்பதைப் பார்ப்போம் .

இவ்வா றென்னை இழைத்திடும் கொடியாள்
முக்கண் மூன்று மூவுருவம் எடுத்தே
வயிறு கிழிய வந்த சிறார்கள்
மூவர் தமையும் அம் மூவரும் அறியார்
வெலவரும் இவரால் மேலோடு கீழ் நடு

ஆய உலகும் அவ்வுலக உயிரும்
பற்பல நெறியிற் பாடு பட்டார் எனில்
எளியேன் பாடு இங்கு இயம்பவும் படுமோ
இவர்கள் இயல்பை எண்ணவும் பயமாம்
பாரெலாம் தாமாய்ப் பரவும் இவர்தம்

ஏற்றுவர் இறக்குவர் எங்கும் நடத்துவர்
இயற்றுவர் கீழ் மேல் எங்குமாக
உவகை ஊட்டுவர் உறு செவி மூடத்
திட்டுவர் பலவாய்த் திரண்டு திரண்டே
ஆற்றுறும் ஆற்றலை ஆற்றல் அரிதாம்

இவ்வுகம் அதனில் என்கண் காண
ஆழிழை யானை ஆய்ந்து மணந்து
நாளில் தொடங்கி இந்நாள் பரியந்தம்
மனம் சலித்திடவே வழிய விலங்கினைத்
தாளில் இட்டுத் தயங்கி அலைந்தேன் .

விண் சஞ்சலம் என விளம்பும் துகளை
முடி மூழ்க வாரி முடித்திட்டேன் ஆனால்
ஈட்டிய பொருளால் இற்பசு வீந்தே
எருமை தன்னை அருமையாய் அடைந்தனோ
ஆற்ற முடியா தலைவேன் எனவும்

குறித்த அங்கு எடுத்திடுங் கூவல் நீரை
விழற்கு முத்துலை வேண்டி இறைத்துத்
துணைக்கரஞ் சலித்தே துயர் உற்றேனோ
காற்றினும் விரைந்தே காரான் பாலை
கமரிடை ஏனோ கவிழ்த்துங் கலக்குவேன்

கலநீர் தன்னைக் கண்ணிற் சிந்திக்
கழறிக் குழறிக் கனியுடல் களைக்கச்
சிலை நேர் நுதலிற் சிறுவியர் விரும்ப
அருந்தொழிற் செய்து இங்கு அடைந்த பொருளைச்
சிவ புண்ணியத்திற் செலவிற் கலவாறு .

பெண் சிலுகுக்குப் பெரிதும் ஒத்தேன்
பகலும் இரவும் பாவிகள் அலைந்தனர்
இவர்கள் சல்லியம் ஏற்பவர் ஆரெனக்
கூக்குரல் கொண்டு குழறுவன் எழுவன்
கிணற்றில் மண்ணைக் கெல்லப் பூதம் .

தோன்றியது என்னும் சொல்லை ஒத்தது
இவருடன் ஆட என்னால் முடியுமோ
அவளுக்கு இவள்தான் அறிய வந்தால் எனும்
மூன்று மாதரும் ''முழுபாய் சுருட்டிகள் ''
இவர்களில் ஒருவரும் இசைய வந்தார் இலர் .

இச்சை வழியே இணங்கி வலிவில்
மனமது கொண்டு வாழ்ந்து வருகையில்
சண்டன் மிண்டன் தலைவர் என்ன
புவிமிசைப் பாதகர் போந்து இங்கு உதித்தனர்
இவரால் நேர்ந்த எண்ணிலாத் துயரைப்

பொறுப்பது அரிதாம் வெறுப்பது விதியே
பாவம் இன்னும் பற்பல உளவே.

மேலே கண்ட மூன்று மனைவிகளுக்கும் ,அவர்கள் பெற்ற பிள்ளைகளுக்கும் .அவர்கள் வாழ்வதற்கு வாடகை வீடு தேவைப்படுகிறது .அந்த தேகம் பெருமாயை என்னும் பெண்ணிடத்தில் ,தின வாடகைக்கு வாங்கி குடி இருக்கிறார்கள் . அதற்கு குடிக்கூலி வீடு ;--தேகம் என்பதாகும் .

ஆன்மாவின் குடிக்கூலி வீடு ;-- தேகம் ...

குடும்பத் துடனே குடித்தனம் செய்யக்
குடிகூலிக்குக் கொண்ட மனையில்
கண்ட காட்சிகள் கன வினோதங்கள்

இராமயணத்தும் பாரத்ததும் இலை
இழிவினும் இழிவது எண்சான் உள்ளது
மலமுஞ் சலமும் மாறா ஒழுக்கது
சுற்றினும் ஒன்பது பொத்தல் உடையது
சீழும் கிருமியுஞ் சேர்ந்து கிடப்பது

என்பு தோல் இறைச்சி எங்குஞ் செந்நீர்
ஆய்ந்து செய்த ஆகர முற்றது
அகலல் அணுகல் புகலல் இகலல்
அணிகள் துணிகள் அணிவ தாய
சால வித்தைகள் சதுரிற் கொண்டது

கிடந்தும் இருந்தும் நடந்தும் பற்பல
பகரிம் மனையால் படும் பாடு அதிகம் .

வாடகை வீட்டின் (உடம்பு )தலைவர் ;--வாத ...பித்த ...சிலேஷ்மம் ..(வாதநாடி ...பித்தநாடி ...சுழுமுனை நாடி ) இவர்களின் வேலையைப் பார்ப்போம் .

இம்மனைத் தலைவராய் எழுந்த மூவர்
தறுகட் கடையர் தயவே இல்லார்
பணிசிர முதலாய்ப் பாதம் வரையில்

வாது செய்திடும் வங்கால வாதி
பெருகுறு கள்ளினும் பெரிதுறு மயக்கம்
பேதமை காட்டும் பெருந்தீப் பித்தன்
கொடுவிடம் ஏறிடும் கொள்கை போல் இரக்கங்
கொள்ளாது இடர் செய் குளிர்ந்த கொள்ளி

இவர்கள் என்னோடு இகல்வர் இரங்கார்
எனக்கு நேரும் ஏழ்மையும் பாரார் .

ஆன்மாவின் வாடகை வீட்டிற்கு வாடகை குடிக்கூலி ;---பிண்டம் (உணவு )இவர்கள் செய்யும் வேலையைப் பார்ப்போம் .

பிண்டம் என்னும் பெருங் குடிக் கூலி
அன்றைக் கன்றே நின்று வாங்குவர்
தெரியாது ஒருநாள் செலுத்தா விட்டால்

உதரத்து உள்ளே உறுங் கனல் எழுப்பி
உள்ளும் புறத்தும் எண்ணையில் எரி ஊட்டி
அருநோய் பற்பல அடிக்கடி செய்வர்
இவர் கொடுஞ் செய்கை எண்ணும் தோறும்
பகீரென உள்ளம் பதைத்துக் கொதித்து
வெதும்பும் என்னில் விளம்புவது என்னே
சினமிகும் இவர்தம் செய்கைகள் கனவினும்
நினைந்து விழித்து நேர்வதன் முன்னர் .

இப்படி என்னுடைய ஆன்மாவை ...ஆணவம் ....மாயை...கன்மம் ...எண்ணும் மூன்று மனைவிகளுடனும்,,அவர்களுக்கு பிறந்த குழைந்தை களுடனும், வாடகை வீட்டில் குடி இருந்து கொண்டு நான் தவித்துக் கொண்டு இருக்க,மதவாதிகள் பொய்யான கற்பனைக் கதைகளை கட்டி எனக்கு களங்கம் கற்பித்துக் கொண்டு இருக்கிறார்கள் .என்னுடைய உண்மையான வாழ்க்கை தெரிந்து இருந்தால் இப்படி பேசுவார்களா !

மதவாதிகள் ;---வருகை ...

மற்போர் கருதி வந்தவர் போல
ஓதும் வேதாந்தம் உரைப்பவர் சிலபேர்

வாட் போரினுக்கு வந்தவர் போல
வயங்கு சித்தாந்தம் வழங்குவர் சிலபேர்
தண்டாயுதப் போர் தாங்குவர் போல
இதி காசத்தை இசைப்பவர் சிலபேர்
உலக்கைப் போரை உற்றார் போல

இலக்கண நூலை இயம்புவர் சிலபேர்
கற்போர் விளைக்கக் காட்டுவர் போலச்
சமய நூல்களைச் சாற்றுவர் சிலபேர்
வாய்ப் போருக்கு வந்தவர் போல
விவ காரங்கள் விளம்புவர் சிலபேர் .

மடிபிடி போர்க்கு வாய்ந்தவர் போல
மத தூஷனைகள் வழங்குவர் சிலபேர்
கட் குடியர் வந்து கலக்குதல் போலக்
காம நூல்கலைக் கழறுவர் சிலபேர்
விழற்கு நீரை விடுவார் போல

வீண் கதை பேச விழைவர் சிலபேர்
இவர்கள் முன்னே இவருக்கு ஏற்ப
குரல் கம்மிடவும் குறுநா உலரவும்
அழலை எழவும் அவரவர் தம்பால்
சமயோ சிதமாய்ச் சந்ததம் பேசி

இயன்ற மட்டில் ஈடு தந்து அயர்வேன் .

இப்படி என்னுடைய நித்திய கருமங்களை செய்து கொண்டு வருகிறேன் .என்னுடைய உண்மையான வீடு எங்கு உள்ளது என்பதை அறிந்து கொள்ள விரும்புகிறேன் .அப்படி நினைக்கும் பொது என்னுடைய உடம்பில் ...நான் உண்ணும் உணவு எப்படி செரிமானம் மாகிறது என்பதைப் பாருங்கள் .

பின்னர் மனையின் பின் புறத்தேகிக்
கலக்கும் மலத்தைக் கடிதே கழித்துக்
கல்லில் அழுக்கைக் கழற்றுதல் போன்று
பல்லின் அழுக்கைப் பண்பின் மாற்றிச்

சோமனைப் போல வெண் சோமனைத் துவைத்து
நன்னீர் ஆடி நறுமலர் கொய்து
தேவருக் கேற்ற திரவியம் கூட்டிப்
பாவையை வைத்துப் பாடி யாடும்
சிறாரைப் போலச் செய்பணி யாற்றி

மண்ணின் சுவர்க்கு வண்சுதை தீட்டல் போல்
வெண்ணீர் அதனை விளங்கப் பூசிப்
புகழ் ருத்ராக்கப் பூனை என்ன
உற்ற செபவடம் உருட்டி உருட்டிக்
குரண்டகம் போன்று குறித்த யோகம்

செய்த பின்னர் சிறிது நேரம்
அருத்தியிற் பூசனை அமர்ந்து அங்காற்றி
ஊன் பிண்டத்திற் உருபிண்டம் மீந்து
குடிக்கூலிக் கடன் குறையறத் தீர்த்துப்
பகல் வேடத்தால் பலரை விரட்டி

நித்திரைப் பரத்தையை நேர்ந்து கூடவும்
பொழுதும் சரியாய்ப் போகின்றதுவே .

மனிதன் எப்படி இந்த உலகத்தில் உண்மை தெரியாமல் வாழ்ந்து கொண்டு உள்ளான் என்பதை ,தெளிவாக விளக்கி உள்ளார் நமது அருள் வள்ளல் ...திரு அருட்பிரகாச வள்ளல் பெருமான் அவர்கள் .

ஆணவம் ...மாயை ...கன்மம் ...எண்ணும் மும்மலங்கள் நம்முடைய ஆன்மாவில் எப்படி பதிவாகி உள்ளது என்பதை தெள்ளத் தெளிவாக விளக்கி உள்ளார் .ஆன்மா வாடகை வீட்டில் வாழாமல் .ஆன்மா தனக்கு என சொந்தமான ஒளிதேகம் பெற்றுக் கொண்டால் மட்டுமே இவ்வுலகத்தை விட்டு வெளியே செல்லமுடியும் .

இந்த உலகத்தில் உயிர்கள் வாழ்வதற்கு பெருமாயையால் கட்டிக் கொடுக்கப்பட்ட வீடு உடம்பு என்பதாகும் .உயிர் இல்லாமல் வாழ வேண்டுமானால் உயிர் எடுக்காமல் இருக்க வேண்டும் .ஆன்மா வாழ்வதற்கு ஒளி தேகம் எடுத்தால் தான் வாடகை கிடையாது ,ஆன்மா வாழ்வதற்கு ஒளிதேகம் எடுப்பதே சொந்த வீடு என்பதாகும் .

ஆன்மாவில் இருந்து உயிர் வருவதற்கு ...உருவம் உள்ள பஞ்ச பூத தேகம் எடுத்து வாழ்ந்து கொண்டு வருகிறது ...இதை மாற்ற வேண்டுமானால் ஆன்மாவில் உள்ள அருள் என்னும் அமுதத்தை அறிந்து அதை ....ஜீவர்களின் அன்பால் ..தயவால் ...கருணையால் மோட்ச வீட்டின் திறவுகோலைப் பெற்று ,....இறைவன் கருணைக் கொண்டு மேல் வீட்டின் கதவைத் திறந்து,அருள் அமுதை உண்டு ,சுத்த தேகம் ...பிரணவ தேகம் ...ஞான தேகம் ...என்னும் ஒளிதேகத்தைப் பெற்றுக் கொண்டால் மட்டுமே ...ஆணவம் ...மாயை ...கன்மம் ...என்னும் கூண்டில் இருந்து வெளியே வரமுடியும் .

இதுவே வள்ளலார் காட்டிய சுத்த சன்மார்க்க கொள்கைகளாகும் .சுத்த சன்மார்க்கத்தை கடைபிடித்து கடவுள் அருளைப் பெற்று பேரின்ப பெருவாழ்வில் வாழ்வோம் .

ஆன்மநேயன்----கதிர்வேலு ....

மீண்டும் பூக்கும்.....  

http://suddhasanmargham.blogspot.com.au/2012/10/blog-post.html

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • எலும்பு வலு இழப்பது ஏன்? கு.கணேசன் ஐம்பது வயதைக் கடந்துவிட்டால் போதும் உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு, கண் புரை, காது கேளாமை, நடையில் தள்ளாட்டம், மாரடைப்பு, மூட்டுவலி எனப் பல நோய்கள் வரிசைகட்டி வந்து நிற்கும். இப்போது புதிதாக ‘ஆஸ்டியோபோரோசிஸ்’ (Osteoporosis) என்று நவீன மருத்துவர்களால் அழைக்கப்படுகிற ‘எலும்பு வலுவிழப்பு நோய்’ இந்த வரிசையில் சேர்ந்துள்ளது. அதிலும் குறிப்பாக, மாதவிலக்கு நின்ற பெண்களுக்கு இந்த நோய் அதிக பாதிப்பைத் தருகிறது. உடலுழைப்பு குறைந்துபோனது, உடற்பயிற்சி இல்லாதது, மேற்கத்திய உணவுமுறைகளைப் பின்பற்றுவது போன்ற பல காரணங்களால் இந்த நோய் ஏற்படுவது இப்போது அதிகரித்துவருகிறது. ‘எலும்பு வலுவிழப்பு நோய்’ என்றால் என்ன? நம் உடலுக்கு வடிவம் தருகிற எலும்புகள்தான் உடல் உறுப்புகளையும் தாங்கிப் பிடிக்கின்றன; நடப்பது, நிற்பது, குனிவது போன்ற உடல் இயக்கங்களுக்குத் தசைகளுடன் இணைந்து ஒத்துழைக்கின்றன. இதற்காக ஒவ்வொரு எலும்பும் குறிப்பிட்ட கால இடைவெளியில் தன்னைப் புதுப்பித்துக்கொள்கிறது. எலும்பில் உள்ள பழைய செல்கள் அழிக்கப்பட்டு, புதிய செல்கள் உற்பத்தியாகின்றன. இளமையில் இந்தச் செயல்பாடு மிக வேகமாக நிகழும். வயதாக ஆக இது மெதுவாக நிகழும். பொதுவாக 35 வயதுக்குப் பிறகே புதிய செல்கள் உருவாவது தாமதமாகும். பழைய செல்கள் அழிந்த இடங்களில் புதிய செல்கள் உருவாகாமலும் போகும். அப்போது எலும்பின் இயல்பான அடர்த்தி (Bone mass) குறையும். இதற்கு ‘ஆஸ்டியோபீனியா’ (Osteopenia) என்பது ஆங்கிலப் பெயர். தமிழில், ‘எலும்புத் திண்மக் குறைவு நோய்’. ஐம்பது வயதுக்கு மேல் எலும்பின் அடர்த்தி இன்னும் குறையும்போது அதில் சிறுசிறு துவாரங்கள் விழுந்து தன் வலிமையை இழக்கும். இதன் விளைவாக எளிதில் நிற்க முடியாமல், அதிக தூரம் நடக்க முடியாமல் போகும். நாளடைவில் அந்த எலும்பு முறிவு ஏற்பட அதிக வாய்ப்பு உண்டாகிறது. இதைத்தான் ‘எலும்பு வலுவிழப்பு நோய்’ என்கிறோம். இதற்கு ‘எலும்பு நலிவு நோய்’ என்றொரு பெயரும் உண்டு.       காரணங்கள் என்னென்ன? எலும்பு வலிமையை இழப்பதற்குப் பல காரணங்கள் உள்ளன. அவற்றுள் முதுமை ஒரு முக்கியக் காரணம். முதுமையில் ஆண், பெண் இருபாலருக்கும் இது வருகிறது. ஆண்களுக்கு டெஸ்டோஸ்டீரான் ஹார்மோன் குறைவதால் இது ஏற்படுகிறது. பெண்களுக்கு மாதவிலக்கு நின்றதும் ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் சுரப்பது குறைந்துவிடுவதால் இவர்களுக்கு எலும்பு வலுவிழந்து ‘எலும்பு வலுவிழப்பு நோய்’ வந்துவிடுகிறது. அடுத்து, புகைபிடித்தல், மது அருந்துதல், போதைப்பழக்கம், உடல் பருமன், தைராய்டு பிரச்சினை போன்ற பலதரப்பட்ட காரணிகளால் இந்த நோய் ஏற்படுகிறது.  குடும்பத்தில் யாருக்காவது இந்த நோய் இருந்தால், வம்சாவளியாகவும் அக்குடும்பத்தில் பிறந்தவர்களுக்கு இது வரலாம். வறுமை, பசியின்மை, வயிற்றில் அறுவைச் சிகிச்சை போன்றவற்றின் காரணமாக தேவையான ஊட்டச் சத்துள்ள உணவுகளை நெடுங்காலம் சாப்பிடாதவர்களுக்கு கால்சியம் மற்றும் வைட்டமின்-டி குறைபாடு ஏற்படும். இந்த இரண்டு ஊட்டச்சத்துகளும் எலும்பின் வலிமைக்கும் திண்மைக்கும் அடிப்படையானவை. எனவே, இந்தச் சத்துகள் குறையும்போது இவர்களுக்குக் காலப்போக்கில் ‘எலும்பு வலுவிழப்பு நோய்’ வருவதுண்டு.  இதுபோல், உடற்பயிற்சி இல்லாதவர்களுக்கும், உடலுழைப்பு குறைந்தவர்களுக்கும் வலிப்பு நோய்க்கான மாத்திரைகள் மற்றும் ஸ்டீராய்டு மருந்துகளைத் தொடர்ந்து பல வருடங்களுக்கு எடுத்துக்கொள்பவர்களுக்கும் இந்த நோய் வருவதுண்டு. ஒல்லியாக உள்ளவர்களுக்கு ஏற்கெனவே எலும்புகள் வலுவிழந்து இருக்கும் என்பதால், முதுமையில் இவர்களுக்கு ‘எலும்பு வலுவிழப்பு நோய்’ விரைவில் வந்துவிடும். அட்ரீனல் ஹார்மோன் மற்றும் பாராதைராய்டு ஹார்மோன்களின் அதீத செயல்பாடு காரணமாகவும் சிலருக்கு இந்த நோய் ஏற்படுவதுண்டு.   என்னென்ன தொல்லைகள்? பெரும்பாலும் இந்த நோய் இருப்பது நோயாளிக்கே தெரியாது. இந்த நோய் பல ஆண்டுகளாக உடலுக்குள்ளேயே மறைந்திருந்து, இறுதியில் எலும்பு முறிவு ஏற்படும்போதுதான் இந்த நோயின் விளைவாகவே எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது என்று தெரியவரும். கீழே விழாமல், உடலில் எவ்வித அடியும் படாமல் எலும்பு முறிவு ஏற்படுவதுதான் இந்த நோயின் தனிச் சிறப்பு. இடுப்பெலும்பு, முதுகெலும்பு, மணிக்கட்டு ஆகியவற்றில்தான் எலும்பு முறிவு அதிகமாக ஏற்படும். நோயைக் கண்டறிவது எப்படி?       முன்பெல்லாம் எலும்புகளை எக்ஸ்-ரே படமெடுத்துப் பார்த்து இந்த நோய் இருப்பதைக் கணிப்பதுதான் வழக்கத்தில் இருந்தது. பொதுவாக 50 சதவீதம் எலும்பு வலுவிழந்தால்தான் எக்ஸ்-ரேக்களில் இந்த நோய் தெரியும். ஆனால், அதற்குள் பலருக்கும் எலும்பு முறிவு ஏற்பட்டுவிடும் என்பதால் இந்தப் பரிசோதனையைக் கொண்டு நோயை ஆரம்பநிலையில் கண்டுபிடிக்க முடியாத நிலைமை நீடித்தது. இப்போது ‘டெக்சா ஸ்கேன்’ (Dexa Scan) எனும் பரிசோதனை வந்துள்ளது. இதுதான் எக்ஸ்-ரே பரிசோதனையைவிடச் சிறந்தது. நாற்பது வயதுக்கு மேற்பட்டவர்கள் குறிப்பிட்ட கால இடைவெளியில் மருத்துவரைச் சந்தித்து இந்தப் பரிசோதனையைச் செய்துகொள்ள வேண்டும். இது எலும்பின் அடர்த்தியை – அதாவது திண்ம அளவை - (Bone Mineral Density – BMD) அளக்கும் பரிசோதனை. எலும்பு முறிவு ஏற்படுவதற்கு முன்பாகவே எலும்பின் திண்ம அளவைச் சொல்லிவிடும். அதை ‘டி ஸ்கோர்’ (T Score) என்று சொல்கிறார்கள். இந்த அளவு பிளஸ் 1 எஸ்டிக்கும், மைனஸ் 1 எஸ்டிக்கும் இடையில் இருந்தால் அது இயல்பு அளவு. பிளஸ் 1 எஸ்டிக்கு மேல் இருந்தால் மிக நல்லது. இந்த அளவு மைனஸ் 1 முதல் மைனஸ் 2.5 எஸ்டிக்கும் இடைப்பட்டதாக இருந்தால் அது எலும்புத் திண்மக் குறைவு நோயைக் குறிக்கும். மைனஸ் 2.5 எஸ்டிக்கும் கீழ் இருந்தால் அது எலும்பு வலுவிழப்பு நோயைக் குறிக்கும். இந்த அளவுகளை வைத்து ஒருவருக்கு எதிர்காலத்தில் எலும்பு முறிவு ஏற்பட வாய்ப்புள்ளதா என்பதையும் அனுமானித்துவிடலாம். எலும்பின் திண்ம அளவைத் தெரிந்துகொண்டு சிகிச்சையை மேற்கொள்கிறவர்களுக்கு அது பலன் தருகிறதா என்பதையும் தெரிந்துகொள்ளலாம். ஆனால், இதற்கு ஆகும் செலவு சிறிது அதிகம் என்பதால் அனைவராலும் இந்தப் பரிசோதனையைச் செய்துகொள்ள முடியாது. ரத்தத்தில் கால்சியம் மற்றும் வைட்டமின்-டி அளவுகளைத் தெரிந்துகொண்டும் இந்த நோயை ஓரளவுக்கு அனுமானிக்கலாம். யாருக்கு வாய்ப்பு அதிகம்? உலக அளவில் 50 வயதுக்கு மேற்பட்ட பெண்களில் மூன்றில் ஒருவர் என்ற அளவிலும் ஆண்களில் எட்டில் ஒருவர் என்ற அளவிலும் இந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று ஒரு புள்ளிவிவரம் சொல்கிறது. எனவே, இந்த நோயை ஆரம்பத்திலேயே கண்டறிவதற்காக சர்வதேச ஆஸ்டியோபோரோசிஸ் நிறுவனம் ஒரு குறிப்பைத் தந்துள்ளது. அதற்கு ‘எலும்பு வலுவிழப்பு நோய்’ வரும் வாய்ப்புள்ளவர்களைக் கண்டறியும் ஒரு நிமிடச் சோதனை? (One minute osteoporosis risk test) என்று பெயர். கீழே தரப்பட்டுள்ள கேள்விகளைப் படியுங்கள். இவற்றில் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட கேள்விகளுக்கு ‘ஆம்’ என்று பதில் கூறினால் உங்களுக்கு எலும்பு வலிமை இழக்க வாய்ப்புகள் அதிகம் என்று பொருள். அப்படியானால் உடனே மருத்துவரைச் சந்தித்து ஆலோசனை பெறுங்கள். உங்களின் பெற்றோரில் அல்லது குடும்பத்தில் யாருக்காவது லேசாக தடுக்கி விழுந்து அல்லது லேசாக அடிபட்டதும் எலும்பு முறிவு ஏற்பட்டிருக்கிறதா? லேசாக தடுக்கி விழுந்து அல்லது லேசாக அடிபட்டதும் உங்களுக்கு எலும்பு முறிவு ஏற்பட்டிருக்கிறதா? உங்களுக்கு 45 வயதுக்கு முன்னரே மாதவிலக்கு நின்றுவிட்டதா? உங்களுக்கு மூன்று செ.மீ.க்கு மேல் உயரம் குறைந்துவிட்டதா? அதிகமாக மது அருந்தும் பழக்கம் உள்ளதா? அதிகமாக புகைபிடிக்கும் பழக்கம் உள்ளதா? சிகிச்சை என்ன? இந்த நோய் ஏற்பட்ட பின்பு இதை முழுமையாகக் குணப்படுத்த முடியாது. அதாவது, வலிமை இழந்த எலும்பை மீண்டும் வலிமை பெறச் செய்ய முடியாது. சிகிச்சையின் மூலம் மற்ற எலும்புகளை வலிமை பெறச் செய்யலாம். அவ்வளவே. இதைத் தடுப்பதற்குத்தான் வழி இருக்கிறது. முதுமையில் கால்சியம் மற்றும் வைட்டமின்–டி சத்துகள் குறைவதால், அவற்றுக்கு சிகிச்சை தரப்படும். தினமும் ஒருவருக்கு 500 - 1000 மில்லி கிராம் கால்சியம் தேவை. ஆண்களோடு ஒப்பிடும்போது பெண்களுக்குக் கால்சியம் தாது மிகமிக அவசியமான ஒரு சத்துப்பொருள். பெண்கள் மாதவிலக்கு ஆகும்போது, கர்ப்பம் அடையும்போது, பிரசவம் ஆகும்போது, தாய்ப்பால் தரும்போது என்று பல காலகட்டங்களில் கால்சியம் அவர்களுக்கு அதிகப்படியாகத் தேவைப்படுகிறது. இதை உணவிலிருந்து பெறுவது மிக நல்லது. கால்சியம் மிகுந்துள்ள திரவ உணவுகளில் முதலிடம் பிடிப்பது, பால். 100 மி.லி. எருமைப்பாலில் 200 மி.கிராம்; 100 மி.லி. பசும்பாலில் 100 - 150 மி.கிராம் கால்சியம் உள்ளது; திட உணவுகளில் கேழ்வரகு, கொள்ளு, சோயாபீன்ஸ், உளுந்து, மீன், இறால், நண்டு, முட்டை, ஆட்டிறைச்சி, பீட்ரூட், அவரை, துவரை, கீரைகள், பட்டாணி, காலிஃபிளவர், வெங்காயம், வெண்டைக்காய், வெந்தயம், உருளைக்கிழங்கு, கருணைக்கிழங்கு, மரவள்ளிக்கிழங்கு, தண்டுக்கீரை, வெள்ளைப்பூண்டு, முள்ளங்கி, எலுமிச்சை, திராட்சை, கொய்யாப்பழம் போன்றவற்றிலும் கால்சியம் உள்ளது. இந்த உணவுகளை அதிகப்படுத்திக்கொண்டால் நமக்குத் தேவையான கால்சியம் கிடைத்துவிடும். அல்லது தினமும் 500 – 1000 மில்லி கிராம் கால்சியம் மாத்திரை ஒன்றைச் சாப்பிடலாம்.  என்னதான் நீங்கள் கால்சியம் மிகுந்துள்ள உணவுகளைத் தேடிப்பிடித்துச் சாப்பிட்டாலும், அந்த கால்சியம் உடலுக்குள் உள்ள எலும்புக்குள் செல்ல வேண்டுமானால், வைட்டமின்–டி அவசியம். தினமும் சூரிய ஒளியில் அரை மணி நேரம் இருப்பதன் மூலம் வைட்டமின்–டி இயற்கையாகவே கிடைப்பதற்கு வழிசெய்யலாம். அல்லது பால், முட்டை, மீன், ஈரல் போன்ற உணவுகளில் இதைப் பெறலாம். இப்போது வைட்டமின்-டி மாத்திரைகளும் கிடைக்கின்றன. மருத்துவரின் ஆலோசனைப்படி தினமும் 2000 யூனிட்டுகள் என்ற அளவில் ஒரு மாத்திரையைச் சாப்பிடலாம். அல்லது 60,000 யூனிட்டுகள் என்ற அளவில் வாரத்துக்கு ஒரு மாத்திரையைச் சாப்பிடலாம். சமீபத்தில் இந்த நோய்க்கு ஊசி மருந்துகளும் வந்துள்ளன. மருத்துவரின் ஆலோசனையில் இவற்றையும் பயன்படுத்திப் பலன் அடையலாம். சில பெண்களுக்கு ‘ஹார்மோன் மாற்றுச் சிகிச்சை’ (Hormone Replacement Therapy) தரப்படுவதும் உண்டு. என்றாலும் இதன் பக்க விளைவாகக் கருப்பை வாய்ப் புற்றுநோய் வருவதற்கு அதிக வாய்ப்பு உள்ளதாக ஓர் எச்சரிக்கைத் தகவலும் வந்துள்ளது. எனவே, இவர்கள் வருடத்துக்கு ஒரு முறை ‘பாப் ஸ்மியர்’ என்ற பரிசோதனையை மேற்கொள்ள வேண்டும்.  தடுப்பது எப்படி? இளம் வயதிலிருந்தே தினமும் உடற்பயிற்சி செய்ய வேண்டும். வேகமாக நடப்பது, ஓடுவது, சைக்கிள் ஓட்டுவது, நீச்சல், கூடைப்பந்து விளையாட்டு, ஸ்கிப்பிங் போன்றவை மிகச் சிறந்த உடற்பயிற்சிகள். யோகாசனங்களைச் செய்வதும் நல்லது. புகைபிடிக்கக் கூடாது. மது அருந்தக் கூடாது. காபி, தேநீர் அருந்துவதை அளவாக வைத்துக்கொள்ள வேண்டும். ஒரு நாளில் 3 கப்புகளுக்கு மேல் இவற்றை அருந்தக் கூடாது. எல்லாச் சத்துகளும் கலந்த - ஊட்டச்சத்துள்ள - உணவுகளை சிறு வயதிலிருந்தே உட்கொள்ள வேண்டும். 50 வயதுக்கு மேற்பட்டவர்கள் உடலுக்குப் போதுமான அளவு கால்சியம் கிடைக்கவில்லை என்றால், மருத்துவரின் யோசனைப்படி கால்சியம் மாத்திரையை எடுத்துக்கொள்ளலாம். ஸ்டீராய்டு மாத்திரைகளைத் தேவையின்றி சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். நடக்கும்போது, குளிக்கும்போது, பேருந்தில் ஏறும்போது என இயல்பாக இயங்கும்போது தரையில் வழுக்கி விழாமல் பார்த்துக்கொள்ளுங்கள்.  இம்மாதிரியான தடுப்புமுறைகளைக் கையாண்டு ஒவ்வொருவரும் தங்கள் எலும்புகளை வலுவாக வைத்துக்கொள்வதில் அக்கறை செலுத்தினால்தான் முதுமையில் ‘எலும்பு வலுவிழப்பு நோய்’ வராமல் தடுத்துக்கொள்ள முடியும். https://www.arunchol.com/dr-g-ganesan-article-on-osteoporosis
    • கல்லறையில் உடல்கள் தோண்டியெடுப்பு.. மனித எலும்பில் உருவாகும் போதைப் பொருள்.. அடிமையாகும் இளைஞர்கள்! ’போதைப் பொருட்கள் உயிருக்குக் கேடு விளைவிக்கும்’ என விளம்பரப்படுத்தப்பட்டாலும், அதன் விற்பனையும் அதற்கு அடிமையாகும் நபர்களின் எண்ணிக்கையும் நாளுக்குநாள் அதிகரித்தே வருகிறது. உலகளவில் பலர் இந்தப் போதைப் பழக்கத்துக்கு அடிமையாகி வருகின்றனர். அந்த வகையில் மேற்கு ஆப்பிரிக்க நாடான சியரா லியோனில் இதற்கு பலர் இளைஞர்கள் அடிமையாகி உள்ளனர். அதிலும், மனித உடல் எலும்புடன் தயாரிக்கப்படும் ஒருவித போதைப் பொருளுக்குத்தான் அவர்கள் அதிகமாக அடிமையாகி இருப்பதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மேற்கு ஆப்பிரிக்க நாடான சியரா லியோனில் போதைப்பொருள் பயன்பாடு அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கடந்த ஆறு ஆண்டுகளுக்கு முன்பு போதைப் பொருளுக்கு அடிமையான இந்நாட்டு மக்களின் எண்ணிக்கை தற்போது அதிகரித்துள்ளது. அதிலும், இந்நாட்டிலுள்ள பெரும்பாலான மக்கள் ’குஷ்’ என்ற ரக போதைப்பொருளுக்கு அடிமையாகியுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது. இந்த ’குஷ்’ போதைப்பொருள் மனித எலும்புகளிலிருந்து உருவாக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது. கடந்த ஆறு ஆண்டுகளாக இந்த ’குஷ்’ ரக போதைப்பொருள் சியரா லியோன் பகுதியில் பழக்கத்திலிருந்து வருகிறது. இதன் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் அதனை தயாரிப்பவர்கள் கல்லறையில் இருக்கும் புதைகுழிகளைத் தோண்டி பிணங்களை சேகரித்து அதன் எலும்புகளிலிருந்து ’குஷ்’ போதைப்பொருளைத் தயார் செய்வதகாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இந்த எலும்புகளுடன் , கஞ்சா மற்றும் சில இரசாயனங்கள் கலந்து இந்தப் போதைப் பொருள் தயாரிக்கப்படுகிறது. இதற்காக, சியரா லியோனில் இதுவரை நூற்றுக்கணக்கான புதைகுழிகள் தோண்டப்பட்டுள்ளன. இந்த போதை மருந்து கிட்டத்தட்ட பல மணி நேரம் போதை தருவதாகச் சொல்லப்படுகிறது. மேலும் இந்தப் போதைக்கு அடிமையான இளைஞர்கள் தங்களிடம் இருக்கும் பொருட்களை (புத்தகங்கள், ஆடைகள்) விற்று அந்த போதை மருந்தை வாங்குவதாகவும், அதற்குப் பிறகு வீட்டில் உள்ள பொருட்களைத் திருடிச் சென்று கொடுத்து வாங்குவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. போதைப்பொருள் மூலம் நாட்டில் குடியிருப்பதற்கும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக அந்த நாட்டின் ஜனாதிபதி கவலை தெரிவித்துள்ளார். இதன் பிடியிலிருந்து மக்களை மீட்க போதைப்பொருள் ஒழிப்பு மையங்கள் அமைக்கப்படும் எனவும் போதைப்பொருள் விற்பனையாளர்கள் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அந்த நாட்டு ஜனாதிபதி எச்சரித்துள்ளார்.   https://thinakkural.lk/article/299459
    • வடக்கு மீனவர்களின் ஓயாத போராட்டம் ஜே.ஏ.ஜோர்ஜ் “அது ஒரு சனிக்கிழமை, நான் எனது வலைகளை எடுப்பதற்காக கடலுக்கு சென்றேன். வலை நிறைய மீன்களை எதிர்பார்த்து சென்ற எனக்கு அங்கு அதிர்ச்சியே மிஞ்சியது. ஏனென்றால் நான் விரித்து வைத்திருந்த வலைகள் அங்கு இல்லை.  எனது வலைகளை இழுவை படகுகளில் வந்த இந்திய மீனவர்களை சேதப்படுத்தி விட்டனர். ஆனால் இது முதல் முறையாக நடக்கும் சம்பவம் இல்லை” -  இவ்வாறு தனது கதையை கூறும் மீனவரான ரெஜினோல்ட் தனது கடந்த கால அனுபவங்களுடன் ஒப்பிடுகையில் தற்போதைய தனது போராட்டம் தீவிரமடைந்திருப்பதாக கூறுகின்றார். 20 ஆண்டுகளாக தனது வாழ்க்கைக்காக கடல் அலைகளுடன் போராடி வரும் ரெஜினோல்ட் மட்டுமன்றி வடமாகாண மீனவர்களில் அதிகளவானவர்கள் தற்போது இவ்வாறு கடும் நெருக்கடியை எதிர்நோக்கியுள்ளனர். இலங்கை கடற்பரப்பிற்குள் இழுவை படகுகளை பயன்படுத்தி இந்திய மீனவர்கள் முன்னெடுக்கும் மீன்பிடி நடவடிக்கைகளே இந்த நெருக்கடிக்கு காரணமாக உள்ளது. நெடுந்தீவைச் சேர்ந்த ரெஜினோல்ட் தனது தந்தையுடன் இணைந்து நீண்டகாலம் மீன்பிடியில் ஈடுபட்ட நிலையில், திருமணத்துக்கு பின்னர் தற்போது தனியாக தொழில் செய்கின்றார். “நான் என் படகை மோட்டார் இல்லாமல் பயன்படுத்துகிறேன். மோட்டார் ஒன்றை வாங்க என்னிடம் போதுமான பணம் இல்லை. அதனால் என்னால் அதிக தூரம் செல்ல முடியாது. கடந்த காலங்களில் மீன்பிடிக்க பாரம்பரிய வலைகளைப் பயன்படுத்தினேன். இழுவை படகுகளில் வந்த இந்திய மீனவர்களை எனது வலைகளை சேதப்படுத்தி விட்டனர். எனவே, இப்போது மீன்பிடிக்க சிறிய வலையைப் பயன்படுத்துகிறேன். இதனால், முன்பு போல் மீன் பிடிக்க முடியவில்லை. கடலில் இரண்டு மூன்று மணி நேரம் மாத்திரமே செலவிட முடிகின்றது. எனக்கு மூன்று பிள்ளைகள் உள்ளனர்.  எனது மூத்த மகன் ஐந்தாம் வகுப்பு படிக்கிறான். அவர்களுக்காக நான் பல செலவுகளைச் செய்ய வேண்டியிருக்கிறது. பொருட்களின் விலை முன்பை விட அதிகமாக உள்ளது. குடும்பத்தினரின் தேவைகளை நிறைவேற்றுவது இப்போது மிகவும் கடினமாக உள்ளது” என்கிறார் ரெஜினோல்ட். அமெரிக்க பாதுகாப்பு பல்கலைக்கழகம் 2008ஆம் ஆண்டு துருக்கியின் இஸ்தான்புல் நகரில் ஏற்பாடு செய்திருந்த செயற்குழு கூட்டத்தில் கலாநிதி சனத் டி சில்வாவினால் முன்வைக்கப்பட்ட அறிக்கையின்படி, இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான கடல் எல்லை மூன்று கடல் பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது. வடக்கில் வங்காள விரிகுடா, நடுவில் பாக்கு நீரிணை, தெற்கில் மன்னார் விரிகுடா என இந்த கடல் எல்லைகள் உள்ள நிலையில், பாக்கு நீரிணை ஊடாக இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான சராசரி தூரம் சுமார் 32 கிலோமீற்றர்கள் என அறிக்கை கூறுகிறது. கச்சதீவில் இருந்து இந்தியாவின் ராமேஸ்வரம் வரையிலான தூரம் சுமார் 14 கடல் மைல்கள், அதாவது சுமார் 26 கிலோமீட்டர்கள். யாழ்ப்பாணத்தில் இருந்து கச்சத்தீவு வரை சுமார் 60 கிலோமீட்டர் தொலைவான கடற்பரப்பில் தனது அதிகாரத்தை கொண்டுள்ள இலங்கை கடற்படை, சர்வதேச கடல் எல்லையை தாண்டி இலங்கை கடலுக்குள் நுழையும்  இந்திய இழுவை படகுகள் குறித்து அவ்வப்போது  நடவடிக்கை எடுத்து வருகிறது. எவ்வாறாயினும், இலங்கை  கடற்பரப்புக்குள் இந்திய இழுவை படகுகள் பிரவேசிப்பது  நாளாந்தம் இடம்பெறுவதாக வடபகுதி மீனவ சங்க தலைவர்கள் கூறுகின்றனர். “இது ஒரு தீவிரமான பிரச்சினை. இந்திய மீனவர்கள் மீது இலங்கை கடற்படை உள்ளிட்டவர்கள் தேவையான நடவடிக்கை எடுக்காதமையே இந்த பிரச்சினை தொடர்வதற்கு முக்கிய காரணமாக உள்ளது.  ஏராளமான இந்திய இழுவை படகுகள் இலங்கை கடல் பகுதிக்குள் நுழையும் நிலையில், கைது செய்யப்படும் இந்திய மீனவர்கள் மற்றும் கைப்பற்றப்படும் இந்திய இலுவை படகுகளின் எண்ணிக்கை மிகக் குறைவாகவே உள்ளது. சம்பந்தப்பட்ட தரப்பினருடன் கலந்துரையாடி தேவையான நடவடிக்கை எடுத்து இந்தப் பிரச்சினைகளுக்கு தீர்வு காண மீன்பிடி அமைச்சு நடவடிக்கை எடுப்பதாகத் தெரியவில்லை. இந்திய மீனவர்கள் பயன்படுத்தும் இழுவை படகுகள் வடபகுதி மீனவர்களுக்கு சொந்தமானதை படகுகளை விட பெரியவை. அவை தினமும் வடக்கு கடல் பகுதிக்குள் நுழைவதால், ஏராளமான பிரச்னைகள் ஏற்படுகின்றன. இதனால் வடபகுதி மீனவர்களின் வருமானம் பாதிக்கப்படுவதுடன், இந்திய இழுவை படகுகளால் இலங்கை மீனவர்களின் வலைகளுக்கு சேதம் ஏற்படுகின்றது. அத்துடன், எமது மீன்பிடி வளம் பறிபோகிறது. எமது மீனவர்களுக்குச் சொந்தமான படகுகளை சேதப்படுத்திய சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன”- என யாழ்ப்பாண மாவட்ட கடற்றொழிலாளர் சமாசங்களின் சம்மேளன தலைவர் அன்னலிங்கம் அன்னராசா தெரிவித்தார். அத்துடன், இந்தியாவில் இருந்து இழுவை படகுகள் வருவதை தடுக்கும் வகையில் இலங்கையில் சட்ட அமைப்பு இருப்பதாகவும் எனினும், அவற்றால் நடைமுறையில் இலங்கை மீனவர்களால் எந்தவித பயனையும் பெற்றுக்கொள்ள முடியவில்லை என, அன்னராசா சுட்டிக்காட்டினார். 1979 ஆம் ஆண்டின் 59 ஆம் இலக்க கடற்றொழில் (வெளிநாட்டு மீன்பிடி படகுகளை ஒழுங்குபடுத்துதல்) சட்டத்தின் 04ஆவது பிரிவின்படி, அனுமதியின்றி மீன்பிடி தொடர்பான நடவடிக்கைகளுக்காக வெளிநாட்டு மீன்பிடி படகுகளை இலங்கை கடற்பரப்பில் மீன்பிடிக்க பயன்படுத்தக்கூடாது என்று கூறுகிறது. அத்துடன், இலங்கை கடற்பரப்பிற்குள் வெளிநாட்டுப் படகுகள் பிரவேசித்தால், மீன்பிடிக்கப்படுவதைத் தடுக்கும் வகையில், அந்தப் படகில் உள்ள மீன்பிடி சாதனங்களை முறையான முறையில் தடுத்து வைக்க வேண்டும் என்று சட்டத்தின் 05வது பிரிவு கூறுகிறது. வெளிநாட்டுப் படகுகளை நிறுத்தவும், சோதனைகளை நடத்தவும், பிடியாணையுடன் அல்லது இல்லாமலும் படகுகளைக் கைப்பற்றவும், தனிநபர்களைக் கைது செய்யவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.  2018 ஆம் ஆண்டில், இந்த சட்டத்தில் திருத்தங்கள் செய்யப்பட்டதுடன், இலங்கையில் உள்ள ஆயுதப்படைகளின் தளபதிகள் மற்றும் அதன் அமுலாக்கத்துக்காக கரையோரப் பாதுகாப்புத் திணைக்களத்தின் தலைவர் ஆகியோருக்கு பொறுப்பை வழங்கும் கூடுதல் சரத்துகள் அறிமுகப்படுத்தப்பட்டன. வெளிநாட்டுப் படகுகள் மூலம் இலங்கைக் கடற்பரப்பில் சட்டவிரோதமாக மீன்பிடித்தால் இரண்டு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையும் அபராதமும் விதிக்கப்படும். இந்த குற்றம் தொடர்பான நீதிமன்ற விசாரணைகள் ஒரு மாதத்துக்குள் முடிக்கப்பட வேண்டும் என்று சட்டம் கூறுகிறது. இந்த சட்டத்தை நிறைவேற்றுவதற்கு பொறுப்பான அமைச்சருக்கு விதிமுறைகளை உருவாக்கும் திறன் உட்பட விரிவான அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளன. 1981 ஆம் ஆண்டு இந்தச் சட்டத்தின் கீழ் இலங்கைக் கடற்பரப்பில் நுழைவதற்கான அனுமதியைப் பெறுவதற்கான நடைமுறைகளை கோடிட்டுக் காட்டும் விதிமுறைகள் வெளியிடப்பட்டன. இந்தச் சட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கு மீன்பிடி அமைச்சு மற்றும் கடற்றொழில் மற்றும் நீரியல் வளத் திணைக்களம் என்பன மீள தவிர்க்க முடியாத பொறுப்பைக் கொண்டுள்ளன. இந்திய மீனவர்கள் வட கடலில் மேற்கொள்ளும் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளை முற்றாக நிறுத்துவதற்கு தேவையான நடவடிக்கைகள் தொடர்பிலான கலந்துரையாடல் 2023 ஜனவரி 24 ஆம் திகதி கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் நடைபெற்றது.  மேலும், 2023ல் சட்டவிரோத வெளிநாட்டு மீன்பிடி கப்பல்கள் மற்றும் மீனவர்கள் குறித்து அந்தந்த நிறுவனங்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. எவ்வாறாயினும், இந்திய இழுவை படகுகளினால் வடபகுதி மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வு காண போதிய நடவடிக்கைகளை எடுக்க அரசாங்கம் இன்னமும் தவறியுள்ளதுடன், இதனால் பிரச்சினை தொடர்ந்து மோசமாகி வருகிறது. இவ்விடயம் தொடர்பில் வினவிய போது கடற்றொழில் அமைச்சின் செயலாளர் கே.என். குமாரி சோமரத்ன, இந்த பிரச்சினைக்கு இரு நாடுகளுக்கிடையில் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணப்பட வேண்டும் என தெரிவிக்கின்றார். “இந்த விவகாரம் தொடர்பாக இரு நாடுகளுக்கும் இடையே பல ஆண்டுகளாக விவாதங்கள் நடந்து வருகின்றன. இந்த விடயம் தொடர்பில் மீண்டும் ஒருமுறை கலந்துரையாடலை ஆரம்பிக்குமாறு வெளிவிவகார அமைச்சிடம் கோரிக்கை விடுத்துள்ளோம். வெளிவிவகார அமைச்சரும் அதற்கான முயற்சியில் ஈடுபட்டு வருவதை நாம் அறிவோம். இப்பிரச்சினை தொடர்பாக தற்போதுள்ள சட்டங்களில் திருத்தம் செய்ய தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு, தற்போது இறுதிக்கட்டத்தில் உள்ளது. தற்போது, முதல் தடவை கைதுக்கான தண்டனை மற்றும் மீண்டும் மீண்டும் கைது செய்யப்பட்டதற்கான தண்டனையை சட்டம் குறிப்பிடுகிறது, ” என்று அவர் கூறுகின்றார். இந்தச் சட்டத்தின் கீழ் கைது செய்ய கடற்படையின் அதிகாரத்தைப் பயன்படுத்துவதற்கு ஏன் பணிப்புரை வழங்கப்படவில்லை என வினவியபோது, அந்தச் சட்டம் இன்னமும் அமுலில் உள்ளதாகவும், அதன்படி தற்போது கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் செயலாளர் தெரிவித்தார். இது இவ்வாறாக இருக்கும் நிலையில், இந்த ஆண்டு இதுவரையான காலப்பகுதியில் கடற்படையினரால் கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்களின் எண்ணிக்கை 150க்கும் அதிகமாகும். இது அதிக எண்ணிக்கையாக தெரிந்தாலும், நாளாந்தம் இலங்கைக் கடற்பரப்புக்குள் நுழையும் இந்திய மீனவர்களின் வருகையுடன் ஒப்பிடுகையில் இது மிகக் குறைவு என மீனவ சங்கத் தலைவர்கள் குறிப்பிட்டுள்ளனர். இந்த நிலையில், இலங்கை கடற்பரப்பிற்குள் பிரவேசிக்கும் இந்திய மீனவர்களை கண்காணிப்பதற்காக வடக்கில் ‘கடல் காவலர்கள்’ எனப்படும் தன்னார்வ குழுவொன்றை ஸ்தாபிப்பதற்கான அமைச்சரவை பத்திரத்தை கடற்றொழில் அமைச்சர் சமர்ப்பித்துள்ளார். இதேவேளை, இந்திய மீன்பிடி பிரச்சனையால் நாளாந்தம் 350 மில்லியன் ரூபாய் பொருளாதார இழப்பு ஏற்படுவதாக அமைச்சு மதிப்பிட்டுள்ளது. இந்த நிலையில், தற்போதைய கடற்றொழில் அமைச்சர் வடக்கில் உள்ள மீனவர்களின் வாக்குகளால் பாராளுமன்றத்துக்கு தெரிவு செய்யப்பட்டதாகவும், கடற்றொழில் அமைச்சராக பதவியேற்றதன் பின்னர் இந்த பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு அவர் போதிய தலையீடுகளை மேற்கொள்ளவில்லை என வடமாகாண மீனவர் சங்க தலைவர்கள் குற்றம் சுமத்துகின்றனர். வடக்கில் உள்ள எழுவைத்தீவு, அனலைத்தீவு, நெடுந்தீவு உள்ளிட்ட, மீன் பிடி தொழிலை வாழ்வாதாரமாக கொண்டுள்ள மக்கள் வசிக்கும் தீவு பகுதிகள் இன்னும் இலங்கை கடற்படையினரின் கண்காணிப்பிலேயே உள்ளதை எம்மால் நேரடியாக காண முடிந்தது. இந்த தீவுகளின் கடற்படையினரின் சோதனை சாவடி அல்லது முகாம் இன்னும் செயற்பாட்டிலேயே உள்ளது. இவ்வாறு வடக்கின் கடற்பரப்பை சுற்றி ரோந்து நடவடிக்கையில் ஈடுபடும் இலங்கை கடற்படையினர், இந்திய மீனவர்கள் இலங்கைக்குள் பிரவேசிப்பதை தடுக்க  உரிய நடவடிக்கை எடுக்காதது குறித்து வடபகுதி மீனவர்கள் தமது அதிருப்தியை வெளிப்படுத்துகின்றனர். இலங்கை கடற்படையினர் நினைத்தால் இந்திய மீனவர்களை இலங்கை கடல் வளத்தை சுரண்டாமல் இலகுவாக தடுத்து நிறுத்த முடியும் என்பதே வடபகுதி மீனவர்கள் நம்பிக்கையாகும். ஆனால், அது இன்றுவரை நிறைவேற்றப்படவில்லை என்பது அந்த மீனவர்கள் நிலையை நேரில் பார்க்குத்போது தெளிவாக புலப்படுகின்றது.   https://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/வடக்கு-மீனவர்களின்-ஓயாத-போராட்டம்/91-336077
    • யாழ்.பல்கலையின் பொன்விழாவை முன்னிட்டு ஆய்வு மாநாடு! adminApril 18, 2024 யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் யாழ்ப்பாண வளாகம் எனும் பெயரில் இலங்கைப் பல்கலைக்கழகத்தின் ஒரு அங்கமாக ஆரம்பிக்கப்பட்டு இவ்வருடத்துடன் ஐம்பதாண்டைப் பூர்த்தி செய்து பொன்விழாக் காண்கின்றது. அதனை முன்னிட்டு முதலாவது சர்வதேச கல்வியியல் ஆய்வுமாநாட்டை யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் உயர்பட்டப்படிப்புக்கள் பீடமும் கலைப்பீடத்தைச் சேர்ந்த கல்வியியல் துறையும் இணைந்து ஒழுங்கமைத்துள்ளன. ‘நாளையை வலுப்படுத்தல் – கல்வியின் போக்குகளும் அவற்றை புரிந்துகொள்ளவும் உள்வாங்கவும் வடக்கு மாகாணத்தின் இயலுமைகள்’ எனும் கருப்பொருளில் இம்மாநாடு திட்டமிடப்பட்டுள்ளது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர்.சி.சிறிசற்குணராசா தலைமையிலும் உயர்பட்டப்படிப்புக்கள் பீடப் பீடாதிபதி பேராசிரியர்.செ.கண்ணதாசன் மற்றும் கலைப் பீடாதிபதி பேராசிரியர்.சி.ரகுராம் ஆகியோரின் இணைத்தலைமையிலும் இவ் ஆய்வுமாநாடு அரங்கேறவுள்ளது. கல்வியியல் துறைத் தலைவர் கலாநிதி.ஆ.நித்திலவர்ணண் மாநாட்டின் இணைப்பாளராகச் செயற்படுகின்றார். வட மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் ம.பற்றிக் டிரஞ்சன் மற்றும் வட மாகாணக் கல்விப் பணிப்பாளர் தி.ஜோன் குயின்ரஸ் ஆகியோர் இந்நிகழ்வில் சிறப்பு விருந்தாளர்களாகக் கலந்துகொள்கின்றனர். எதிர்வரும் 20ம் திகதி சனிக்கிழமையும் 21ம் திகதி ஞாயிற்றுக்கிழமையும் காலை மற்றும் மாலை அமர்வுகள் எனத் திட்டமிடப்பட்டுள்ள இம்மாநாட்டின் காலை அமர்வுகள் கைலாசபதி கலையரங்கிலும் மாலை அமர்வுகள் உயர்பட்டப்படிப்புக்கள் பீடத்திலும் நடைபெறவுள்ளன. சனிக்கிழமை நடைபெறவுள்ள அங்குரார்ப்பண நிகழ்வில் திறவுகோல் உரையினை கொழும்புப் பல்கலைக்கழக கல்வியியல் பீட கல்வி உளவியல் இருக்கைப் பேராசிரியர் மஞ்சுளா விதாணபத்திரண நிகழ்த்தவுள்ளார். ‘வாண்மைத்துவ விருத்திக்கான ஆய்வு மைய புத்தாக்கங்கள்: வடக்கு இலங்கையின் ஆசிரியர் கல்விக்கான தந்திரோபாய அணுகுமுறை’ எனும் தலைப்பில் இவ் உரை நிகழவிருக்கின்றது. திறவுகோல் உரையினைத் தொடர்ந்து மாநாட்டின் கருப்பொருளை மையப்படுத்திய மையக்கருத்துரைகள் இடம்பெறவுள்ளன. இக்கருத்தரங்கிற்கு உயர்பட்டப்படிப்புக்கள் பீடப் பீடாதிபதி பேராசிரியர்.செ.கண்ணதாசன் தலைமைதாங்கவுள்ளார். ‘இலங்கையின் ஆரம்ப பிள்ளைப்பருவக் கல்வியை முறைமைப்படுத்தல் – சவால்களும் பிரச்சனைகளும்’ எனும் தலைப்பில் திறந்த பல்கலைக்கழக கல்வியியல் பீடப் பேராசிரியர்.தி.முகுந்தனும், ‘வட மாகாணக் கல்வியின் சமகால உள சமூக நிலைமைகள்’ எனும் தலைப்பில் உளமருத்துவ நிபுணர் சி.சிவதாசும், ‘இலங்கையின் பாடசாலைக் கலைத்திட்டத்தின் சவால்களும் புதிய போக்குகளும்’ எனும் தலைப்பில் திறந்த பல்கலைக்கழக கல்வியியல் பீடப் பேராசிரியர் எவ்.எம்.நவாஸ்தீனும், ‘சட்டத் தீர்மானங்களை அறிவிப்பதில் கல்வியியல் ஆய்வுகளின் தேவைகள்’ எனும் தலைப்பில் களுவாஞ்சிக்குடி நீதவான் நீதிமன்ற நீதிபதி ஜே.பி.ஏ.ரஞ்சித்குமாரும் உரையாற்றவுள்ளனர். ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள இரண்டாம் நாள் நிகழ்வுகளுக்கு யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கல்வியியல் துறைப் பேராசிரியர் ஜெயலக்சுமி இராசநாயகம் தலைமை தாங்கவுள்ளார். இந் நிகழ்வில் திறவுகோல் உரையை தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழக கல்வியியல் மற்றும் மேலாண்மைத் துறைத் தலைவர் பேராசிரியர் கு.சின்னப்பன் ‘தமிழ் கற்பித்தலில் புதிய போக்குகள்’ எனும் தலைப்பில் நிகழ்த்தவுள்ளார். அதனைத் தொடர்ந்து ‘நாளையை வலுப்படுத்தல் – கல்வியின் போக்குகளும் அவற்றை புரிந்துகொள்ளவும் உள்வாங்கவும் வட மாகாணத்தின் இயலுமைகள்’ எனும் தலைப்பில் கலைப்பீடப் பீடாதிபதி பேராசிரியர் சி.ரகுராம் தலைமையில் திறந்த புலமைத்துவக் கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது. இக்கலந்துரையாடலில் ஓய்வுபெற்ற வலயக் கல்விப்பணிப்பாளரும் அதிபருமாகிய என்.தெய்வேந்திரராஜா, கல்வியியல் ஆய்வாளரும் அகவிழி மற்றும் ஆசிரியம் சஞ்சிகைகளின் ஆசிரியருமான தெ.மதுசூதனன், தேசிய கல்வி நிறுவன விரிவுரையாளர் ஐ.கைலாசபதி, கிளிநொச்சி விவேகானந்தா வித்தியாலய அதிபர் ஜெய மாணிக்கவாசகர், இலங்கை பரீட்சைகள் திணைக்களப் பணிப்பாளர் எம்.ஜீவராணி புனிதா, யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி அதிபர் இ.செந்தில்மாறன், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகக் கல்லூரியின் முன்னாள் பணிப்பாளரும் ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டத்தின் திட்ட முகாமையாளருமாகிய ஜே. ஜூட் வோல்ற்றன் மற்றும் கிளிநொச்சி வடக்கு கல்வி வலய தொழில் வழிகாட்டல் அலுவலர் சு.வீரசுதாகரன் ஆகியோர் பங்குபற்றவுள்ளனர். பார்வையாளர்களின் வினாக்களுக்கும் விடையளிக்கும் நிகழ்வாகவும் இக் கலந்துரையாடல் திட்டமிடப்பட்டுள்ளது. ‘வடக்கு மாகாணப் பாடசாலைகளின் வெற்றிகளும் பின்னடைவுகளும்’, ‘பாடசாலைகளும் சமூகமும் – எங்கு நாம் நிற்கின்றோம் – முன்னோக்கிப் போவதற்கான வழிகள்’, ‘எதிர்பார்க்கப்படும் கற்றல் பேறுகளை அளவிடுதல்’, மற்றும் ‘கல்வியும் வேலைவாய்ப்பும் – சந்தர்ப்பங்களும் சவால்களும்’ எனும் தலைப்புக்களில் இக்கலந்துரையாடல் கட்டமைக்கப்பட்டுள்ளது. கலந்துரையாடலின் கருத்துச்செறிவுகளை மாநாடு நிறைவுபெற்ற பின்னர் கொள்கை ஆவணமாக வெளியிட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இரண்டு நாள்களும் மாலை அமர்வுகள் பலாலி வீதியில் அமைந்துள்ள உயர்பட்டப்படிப்புக்கள் பீடத்தில் நடைபெறும். இரண்டு நாள் மாலை அமர்வுகளிலும் தலா நாற்பத்து நான்கு ஆய்வுக் கட்டுரைகள் பல்வேறு தலைப்புக்களிலும் சமர்ப்பிக்கப்படவுள்ளன. பல்கலைக்கழகங்களின் ஆய்வு மாணவர்கள், விரிவுரையாளர்கள், கல்வியியல் கல்லூரிகள் மற்றும் ஆசிரிய பயிற்சிக் கலாசாலை ஆசிரியக் கல்வியலாளர்கள், கல்வி நிர்வாகிகள், பாடசாலை அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள் என பன்முகப்படுத்தப்பட்ட ஆய்வாளர்களினால் பல்வேறு தலைப்புக்களில் ஆய்வுக் கட்டுரைகள் முன்வைக்கப்படவுள்ளன   https://globaltamilnews.net/2024/201875/
    • போட்டியில் கலந்துகொண்ட @kalyani யும், @கந்தப்புவும் வெற்றிபெற வாழ்த்துக்கள். இன்னும் 15 மணித்தியாலங்களே இருப்பதனால், யாழ்களப் போட்டியில் விரைவில் கலந்துகொள்ளுங்கள்😀 இதுவரை போட்டியில் இணைந்தவர்கள்: @பையன்26 @முதல்வன் @suvy @ஏராளன் @நிலாமதி @Ahasthiyan @ஈழப்பிரியன் @kalyani @கந்தப்பு  
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.