Jump to content

கடவுள் உண்டா ? இல்லையா ?


Recommended Posts

கடவுள் உண்டா ? இல்லையா ?

 
284934_1812666290887_1666939523_1461344_414039_n.jpg
கடவுள் உண்டா? இல்லையா ? என்ற வினா, உலகம் தோன்றிய காலத்தில் இருந்தே கேட்கப் படும் கேள்விகளாகும்!

கடவுளைக் காட்ட முடியாது ! காண முடியும் ! எல்லா உயிர்களிலும், உடம்புகளிலும் ஒளியாக உள்ளது ,ஒளியை எப்படிக் காட்ட முடியும் ?உணரத்தான் முடியும் !

கடவுள் உண்டா? இல்லையா? என்ற வினாவுக்குப் நாம் போக வேண்டாம்--.நம்மை நாமே சிந்தித்து பார்க்க வேண்டும்!இந்த உலகம் என்னும் உருண்டை வடிவமான வட்டத்திற்குள் பஞ்ச பூதங்கள் என்று சொல்லப்படும் --நிலம், ,நீர்,அக்கினி,காற்று,ஆகாயம் என்னும் கருவிகள் எப்படி வந்தன? என்று சிந்திக்க வேண்டும் ,அடுத்து அணுக்கள் என்று சொல்லப்படும் ஏழு விதமான அணுக்கள் --வாலணு,--திரவ அணு,--குரு அணு --லகு அணு --அணு --பரமாணு ---விபு அணு ---போன்ற அணுக்கள் , எப்படி வந்தது என்று சிந்திக்க வேண்டும்,

ஒன்பது நவ கிரகங்கள் எப்படி வந்தது என்று சிந்திக்க வேண்டும்.இந்த உலகம் என்று சொல்லப்படும் அண்டத்திற்குள்,ஆன்மா என்னும் ஒளி கூட்டங்கள் எப்படி வந்தது என்பதை சிந்திக்க வேண்டும்.ஆன்மாவில் இருந்து உயிர்கள் எப்படி தோன்றின என்பதை சிந்திக்க வேண்டும்,உயிர்கள் வாழ்வதற்கு உடம்பு என்னும் தேகத்தை --எங்கு யாரால் கட்டிக் கொடுக்கப் பட்டது என்பதை சிந்திக்க வேண்டும்,

உயிர்களின் தோற்றமும் மாற்றமும் உடம்பின் தோற்றமும் மாற்றமும் ஏன்? மாற்றி மாற்றி அமைக்கப் படுகிறது அதாவது உண்டாக்கப் படுகிறது,தாவரம் முதல் மனித தேகம் வரை, உருவம் கட்டிக் கொடுக்கப் படுவது யாரால் ?எதனால் ?என்பதை சிந்திக்க வேண்டும் மனிதனாக பிறந்த நாம் நம்மைப் பற்றி சிந்திக்க வேண்டும் .

எப்படி சிந்திக்க வேண்டும் என்பதைப் பற்றி வள்ளலார் பதிவு செய்துள்ள பாடல் வருமாறு !

உடம்பு வருவகை அறியீர் உயிர் வகையை அறியீர்
உடல் பருக்க உண்டு நிதம் உறங்குதற்கே அறியீர்
மடம் புகு பேய் மனத்தாலே மயங்குகின்றீர் மனத்தை
வசப்படுத்தீர் வசப்படுத்தும் வழிதுறை கற்று அறியீர்
இடம் பெறு பொய் வாழ்க்கையிலே இன்பம் துன்பம் அடுத்தே
எண்ணி எண்ணி இளைக்கின்றீர் ஏழை உலகீரே
நடம் புரி என் தனித்தந்தை வருகின்ற தருணம்
நண்ணியது நண்ணுமினோ புண்ணியம் சார்வீரே !

புண்ணியம் என்னும் அன்பு,தயவு, கருணை எங்கு உள்ளதோ அங்கே கடவுள் விளங்குவார் !

கடவுள் உண்டு !

இந்த உலகத்தில் நாம் கடவுளாக நினைந்து வழிபடுவது எல்லாம் கடவுள்கள் இல்லை !கடவுளை மனிதன் படைக்க முடியாது ,மனிதன் படைத்த,அனைத்தும் தத்துவங்களே யாகும் ,அனைத்தும் மாயை என்று சொல்லப்படும் மாயையினால் உருவாக்கப் பட்டவைகளாகும்.மாயை என்பது .உருவங்களை உண்டாக்கும் ஆற்றல் படைத்தது,--மாயை --மாயைக்கு உருவம் இருக்கிறதா ?என்றால் இல்லை !அதுவும் உருவம் இல்லாத ஒரு சக்தி--உருவம் இல்லாத சத்தியை வைத்துக் கொண்டு உருவத்தை உண்டாக்குவது தான் மாயையின் வேலையாகும்.--அதுவும் சத்திவாய்ந்த {ஆற்றல் }என்னும் ஒளியாகும் .மாயையை படைத்தது யார் ?அதற்கு மேல் அனைத்தும் படைக்கும் ஆற்றல் அதாவது சத்தி யாருக்கு உள்ளது ?அவை --எங்கு இருக்கிறது --எங்கு இருந்து வருகிறது.--என்பதை இதுவரையில் யாராலும் கண்டு பிடிக்க முடியவில்லை.{வள்ளலாரைத்தவிர }

நமக்கு வழி காட்டிய ஆன்மீகப் பெரியவர்கள்{அருளாளர்கள் } உடம்பின் உறுப்புகளான --செயல்படும் கருவிகளை கண்டு --அதன் இயக்கங்களை அதாவது தத்துவத்தை கோவில்களாக,--ஆலயங்களாக--,சர்சுகளாக---,மசுதிகளாக--,பிரிமிடுகளாக--,இன்னும் பல வடிவங்களில் கடவுள் இருப்பதாக சொல்லி வைத்து ,பிரமன் ,விஷ்ணு,சங்கரன்,மயேச்சுவரன்,சதாசிவன், இயேசு,அல்லா ,புத்தம்,சத்தி,சத்தர்கள்,சூரியன் ,சந்திரன,அக்கினி ,-போன்ற இயக்கங்களை {தத்துவங்களை }படைத்து கடவுளாக வழிபட்டு வருகிறார்கள்.

இவைகள் யாவும் கடவுள்களா ?என்றால் இல்லை !

கடவுள் யார் ?அவர் எங்கே இருக்கிறார் ?என்பதை நமது அருட் தந்தை திருஅருட்பிரகாச வள்ளலார் அவர்கள் காட்டியதை பார்ப்போம் !

வகுத்த உயிர் முதற் பலவாம் பொருள் களுக்கும் வடிவம் 
வண்ணம் நலம் முதற் பலவாம் குணங்களுக்கும் புகுதல் 
புகுத்தல் உறன் முதல் பலவாம் செயல் களுக்கும் தாமே 
புகல் கரண உபகரணம் கருவி உபகருவி 
மிகுத்த உறுப்பு பதி கரணம் காரணம் பலகாலம் 
விதித்திடும் மற்றவை முழுதும் மாகி அல்லாராகி 
உகப்புறு ஓர் சுத்த சிவானந்த சபைதனிலே 
ஓங்க்குகின்ற தனிக்கடவுள் ஒருவர் உண்டே கண்டீர் !

மேலே கண்ட பாடலில்-- கடவுள் எங்கு உள்ளார் !அவர் தகுதி என்ன ?அவர் செயல்கள் என்ன ? என்பதை தெளிவு படுத்தி உள்ளார் .மேலும் அவருக்கு உருவம் என்ன ? அவரை யாராவது உருவாக்க முடியுமா?அவர்க்கு சொந்த பந்தங்கள் உண்டா ?அவருக்கு பிறப்பு இறப்பு உண்டா ?திரிபானவரா ?களங்கம் உள்ளவரா ?தீமை செய்பவரா ?வேண்டுதல் உள்ளவரா ?வேண்டாமை உள்ளவரா ?உண்மையானவரா ?பொய்யானவரா? அவர் எங்கு உள்ளார் என்பதை தெளிவு செய்யும் பாடலைப் பாருங்கள் !

இயற்கையிலே பாசங்கள் ஒன்றும் இல்லார் குணங்கள் 
ஏதும் இலார் தத்துவங்கள் ஏதும் இலார் மற்றோர் 
செயற்கை இல்லார் பிறப்பு இல்லார் இறப்பு இல்லார் யாதும் 
திரிபு இல்லார் களங்கம் இல்லார் தீமை ஒன்றும் இல்லார் 
வியப்புற வேண்டுதல் இல்லார் வேண்டாமை இல்லார்
மெய்யே மெய்யாகி எங்கும் விளங்கி இன்ப மயமாய்
உயத்தரும் ஓர் சுத்த சிவானந்த சபைதனிலே 
ஓங்குகின்ற தனிக் கடவுள் ஒருவர் உண்டே கண்டீர் !  

மேலே கண்ட பாடலில் விளக்கம் சொல்லாத அளவிற்கு எளிய தமிழில் --உண்மைக்  கடவுள் நிலையை விளக்குகிறார் அறிவு உள்ள மனிதர்கள் புரிந்து கொள்வார்கள்.அதற்கு மேல் சொல்ல வேண்டுவதில்லை !உடம்பின் தத்துவங்களை உண்டாக்கி உள் இருந்து இயக்கும் ஆன்ம ஒளிதான் மெய்ப்பொருள் அதாவது கடவுளின் ஏகதேசங்களாகும்  

அந்த கடவுள் ஒருவரா ?இருவரா ?அவர் உருவம் என்ன ?என்பதை கிழே கண்ட பாடலில் பாருங்கள்.

ஒன்றும் இலார் இரண்டும் இலார் ஒன்றும் இரண்டுமானார் 
உருவும் இலார் அருவும் இலார் உருவும் அருவும் ஆனார் 
அன்றும் உளார் இன்றும் உளார் என்றும் உளார் தமக்கோர்
ஆதியிலார் அந்தம் இலார் அருட்பெருஞ்சோதி யினார்
என்றும் கனல் மதி அகத்தும் புறத்தும் விளங்கிடுவார் 
யாவும் இலார் யாவும் உளார் யாவும் அலார் யாவும் 
ஒன்று உறு தாமாகி நின்றார் திருச்சிற்றம் பலத்தே
ஓங்குகின்ற தனிக்கடவுள் ஒருவர் உண்டே கண்டீர் !

கடவுள் எங்கு உள்ளார் என்பதை மிகத் தெளிவாக விளக்கி உள்ளார் .இவை தெரியாமல் 
புரியாமல், அறியாமல் --கடவுள் உண்டா ?இல்லையா ?என்று மக்கள் குழம்பிக் கொண்டு உள்ளார்கள்.--இயங்குகின்ற உருவத்தில் கடவுள் உள்ளார் !இயங்காத உருவத்தில் கடவுள் இல்லை !--கல்லிலும் செம்பிலும்,மண்ணிலும் ,தங்கத்திலும்,போன்ற உருவங்களில் கடவுள் இல்லை என்பதை ,அறிவைக் கொண்டு அறிந்து கொள்ள வேண்டும்.

அறிவாலே அறிவினை அறிகின்ற பொழுது அங்கு
அனுபவம் மாகின்றது என்னடி தாயே
செறிவாலே பிறிவாலே தெரியாது தெரியும்
திருவருள் உருவம் என்று அறியாயோ மகளே !--என்றும்

அருளாலே அருள் இறை அருள்கின்ற பொழுது அங்கு
அனுபவம் மாகின்றது என்னடி தாயே
தெருளாலே மருளாலே தெரியாது தெரியும்
திரு நட இன்பம் என்று அறியாயோ மகளே !

அறிவும் அருளும் ஒன்றுபடுகிற போது உண்மை தன்னைத்தானே விளங்கும் -இதை அறியாமல் மருள் என்னும் இருட்டில் இருந்து கொண்டு கடவுள் உண்டா ?இல்லையா ?என வெட்டி வேலையை செய்து கொண்டு உள்ளார்கள்.

மக்கள் மட்டும் அல்ல ,ஆன்மீக வாதிகளும் பகுத்தறிவு வாதிகளும்,விஞ்ஞானிகளும் ,அறிவியல் வல்லுனர்களும் மற்றம் உள்ள பெரியவர்களும் உண்மை தெரியாமல் அலைந்து திரிந்து ஆராய்ச்சி செய்து கொண்டு உள்ளார்கள்!

வள்ளலாருக்கு மட்டும் எப்படி தெரியும் ?

அகத்தே கருத்துப் புறத்து வெளுத்து இருந்த உலகர் அனைவரையும்
சகத்தே திருத்திச் சன்மார்க்க சங்கத்தில் அடைவித்திட அவரும்
இகத்தே பரத்தைப் பெற்று மகிழ்ந்திடுதற்கு என்றே எனை இந்த
உகத்தே இறைவன் வருவிக்க உற்றேன் அருளைப் பெற்றேனே !

என்கிறார் ;--

உலக மக்கள் அனைவரும் அகம் கருத்து புறம் வெளுத்து,உண்மை தெரியாமல் அழிந்து கொண்டு உள்ளார்கள் ஆதலால் உண்மை வழியான சுத்த சன்மார்க்க சங்கத்தை தோற்றுவித்து அதன் வாயிலாக இறைவனுடைய உண்மைகளை போதித்து,உண்மை ஒழுக்கம் உள்ளவர்களாக மாற்றி மனிதர்களை --இந்த உலகத்திலே பரத்தின் இன்பங்களைப் பெற்று மகிழுந்து வாழலாம் என்பதை உணர்த்த --இறைவன் என்னும் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் என்னை இந்த உலகத்திற்கு அனுப்பி வைத்தார் என்பதை தெரியப் படுத்துகிறார் .

சொர்க்கம் ,நரகம் ,வைகுண்டம்,கைலாயம்,பரந்தாமம்,பிரம்மம்,பரலோகம்,போன்ற இடங்களில் கடவுள் இல்லை ,--

அதுமட்டும் அல்ல !

மனிதனாக பிறப்பு எடுத்தவர்கள் என்றும் அழியாத இருக்கும் அருளைப் பெற வேண்டும்!அந்த அருளைப் பெற்றவர்களுக்கு மரணம் வராது .மரணம் அடையாதவர்கள்--பிறப்பு இறப்பு அற்றவர்கள் .அவர்களுக்கு மட்டும் தான் உலக உண்மைகளும் உலக ரகசியங்களும் எவ்விதப்பட்ட தடைகளும் இல்லாமல் வெட்ட வெளிச்சம் போல் தெரியும்.

வள்ளலார் அவர்கள் முழுமையான அருளைப் பெற்றவர் !மரணத்தை வென்றவர் !பிறப்பு இறப்பு அற்றவர் .உண்மையான இறைநிலையை அடைந்தவர்,ஆதலால் அவர் சொல்லுவது அனைத்தும் இறைவர் சொல்லுவதே யாகும் .

அப்போது மற்றவர் சொல்லுவது எல்லாம் பொய்யா ?என்ற வினா அனைவருடைய எண்ணங்களிலும் உண்டாகும்  சந்தேகங்கள் நியாயமானதுதான்!

அதற்கு வள்ளலார் சொல்லும் பதிலைப் பாருங்கள்.!

அறங்குலவு  தோழி இங்கே நீ உரைத்த வார்த்தை
அறிவு அறியார் வார்த்தை எதனால் எனில் இம் மொழி கேள்
உறங்குவதும் விழிப்பதும் பின் உண்ணுவதும் இறத்தல்
உறுவதுடன் பிறத்தல் பல பெறுவதுமாய் உழலும்
மறங்குலவு அணுக்கள் பலர் செய்த விரதத்தால்
மதத் தலைமை பதத் தலைமை வாய்ந்தனர் அங்கு அவர்பால்
இறங்கலில் ஏன் பேசுதலால் என் பயனோ நடஞ்செய்
இறைவர் அடிப் புகழ் பேசி இருக்கின்றேன் யானே !

நமக்கு கடவுளை காண்பித்த அருளாளர்கள் அனைவரும் உண்மையான அறிவு பெற்றவர்கள் அல்ல !{உண்மை அறிவு என்றால் கடவுளின் உண்மையை அறிதல் உண்மையான அறிவு என்பதாகும் .} அவர்களும் மனிதர்களைப் போல் உண்ணுவதும் உறங்குவதும் இறப்பதும் பிறப்பதுமாக உள்ளவர்கள்,அவர்கள் சில பல விரதங்களை செய்து--சிற்சில,சித்தி சத்திகளை பெற்றதால் -- தன்னை உயர்ந்தவர்கள் என்று காட்டிக் கொண்டவர்கள் ,அவர்களை வணங்குவதிலோ!வழிபடுவதிலோ !அவர்களைப் பற்றி பேசுவதாலோ !எந்த பயனும் இல்லை !நான் உண்மையான இறைவனுடைய புகழைப் பேசிக் கொண்டு இருக்கிறேன்.நீங்களும் உணர்ந்து கொள்ளுங்கள் என்று வள்ளலார் மிகவும் அழுத்தமாக உரைக்கிறார் !

கடவுளை கண்டு பிடித்து விடலாம் என்று---- பல சாதனங்களைக் கொண்டு அளந்தும்,அறிவைக் கொண்டு அளந்தும்,சமய மதங்களை தொடர்பு கொண்டு--பக்தி,தவம்,யோகம,தியானம், விரதம்,போன்றவற்றை செய்து--அளந்தும் பார்த்தார்கள் ஒன்றும் கிடைக்க வில்லை --என்று சோர்ந்து போய் விட்டார்கள் என்பதை விளக்கும் பாடல் !

கிளக்கின்ற மறை அளவை ஆகமப் பேரளவைக்
கிளந்திடும் மெய்ச் சாதனமாம் அளவை அறிவு அளவை
விளக்கும் இந்த அளவுகளைக் கொண்டு நெடுங்காலம்
மேலவர்கள் அளந்து அளந்து மெலிகின்றார் ஆங்கே
அளக்கின்ற கருவி எல்லாம் தேய்ந்திடக் கண்டாரேல்
அன்றி ஒருவாரேனும் அளவு கண்டார் இலையே
துளக்க முறு சிற்றறிவால் ஒருவாறு இன்று உரைத்தேன்
சொன்ன வெளிவரை ஏனும் துணிந்து அளக்கப் படுமோ !

அளவில் அடங்காத கணக்கில் அடங்காத எல்லைகளைத் தாண்டி --பல கோடி அண்டங்களைத் தன்னுள் அடக்கிக் கொண்டு இயக்கிக் கொண்டு இருக்கும் கடவுளை கண்டு கொள்ள முடியுமா ?நான் பார்த்ததை ஒருவாறு உரைத்தேன் அதையாவது உங்களால் துணிந்து அளக்க முடியுமா ?என்று சவால் விடுவது போல் உரைக்கிறார் வள்ளலார் !

கடவுள் எங்கு! எப்படி! உள்ளார் ?என்பதை வள்ளலார் தெளிவுப் படுத்தும் பாடல் !

ஒரு பிரமன் அண்டங்கள் அடிமுடிப் பெருமையே
உன்ன முடியாது அவற்றின்
ஓராயிரம் கோடி மால் அண்டம் அரன் அண்டம்
உற்ற கோடா கோடியே
திருகலறு பலகோடி ஈசன் அண்டம் சதா
சிவன் அண்டம் எண்ணிறைந்த
திகழ்கின்ற மற்றைப் பெறும் சத்தி சத்தர் தம்
சீரண்டம் என் புகல்வேன்
உருவுறு இவ் அண்டங்கள் அத்தனையும் அருள் வெளியில்
உருசிறு அணுக்களாக
ஊடசைய அவ்வெளியின் நடு நின்று நடனமிடும்
ஒரு பெருங் கருணை அரசே
மருவி எனை ஆட்கொண்டு மகனாக்கி அழியா
வரம் தந்த மெய்த் தந்தையே
மணி மன்றில் நடு நின்ற ஒரு தெய்வமே எல்லாம்
வல்ல நடராஜ பதியே !

கடவுள் எங்கு உள்ளார்! எப்படி உள்ளார்!  என்பதை வள்ளலார் விளக்குகிறார் !--பல கோடி அண்டங்களை இயக்கம் ஒரு மாபெரும் அருள் வெளி உள்ளது அதன் நடுவிலே அசைந்து  {நடனம் }கொண்டு இருக்கும் ---ஒரு பெருங் கருணை அரசு-- செய்து கொண்டு இருக்கும் ஒளிதான் அருட்பெருஞ்ஜோதி என்பதாகும் ;அந்த ஜோதி உள்ள இடம், அருள் பெரு வெளி என்கிறார் .அந்த இடத்தில் இருந்துக் கொண்டு பல கோடி அண்டங்களையும் தனிப்பெருங் கருணையினால் இயக்கிக் கொண்டு உள்ளார் --அவரே அருட்பெருஞ்சோதி ஆண்டவர் என்பவராகும் என்கிறார் வள்ளலார்-- அவர் ஒருவர்தான் கடவுள் ! அவை பேரொளியாகும் !

அந்த பேரொளி -- அகம் ,அகப்புறம் ,புறம் புறப்புறம் என்னும் நான்கு பகுதிகளாக செயல் பட்டுக் கொண்டி இருக்கின்றன ,பிண்டத்தில் நான்கு இடத்திலும்,--அண்டத்தில் நான்கு இடத்திலும்,உள்ளன --

பிண்டத்தில் --அகம் என்பது ஆன்மா என்னும் ஒளி   --அகப்புறம் என்பது ஜீவன் என்னும் உயிர் ஒளி ---புறம் என்பது கரணம் என்னும் ,மனம் புத்தி,சித்தம்,அகங்காரம் என்னும் ஒளி ---புறப்புறம் என்பது இந்திரியம் என்னும் ஐம்புலன்கள் --,உடம்பு, வாய்,கண்,மூக்கு ,காது,என்னும் உருவங்கள் என்பதாகும் .இந்த நான்கு இடத்திலும் கடவுள் பிரகாசம் உள்ளது .

அண்டத்தில் ;--அகம் என்பது,அக்கினி ஒளி !---அகப்புறம் என்பது சூரியன் ஒளி !--புறம் என்பது சந்திரன் ஒளி ---புறப்புறம் என்பது நட்சத்திரங்கள் ஒளி என்பனவாகும் .

ஆகவே --பிண்டத்தில் நான்கு இடம் ,--அண்டத்தில் நான்கு இடம் --ஆக எட்டு இடத்திலும் கடவுள் ஒளிப் பிரகாசம் காரியத்தால் உள்ளன ,

காரணத்தால் உள்ள இடம் ;--பிண்டத்தில் புருவ மத்தியில் உள்ள ஒளி ---அண்டத்தில் பரமாகாசம் என்னும் இடத்தில் உள்ள ஒளி -- ;அதாவது அருள் பெரு வெளியில் உள்ள ஒளி யாகும்.

காரிய, காரணமாய் உள்ள இடம் நான்கு ;--பிண்டத்தில் விந்து,நாதம் என்னும் ஒளி  !---அண்டத்தில் மின்னல்,இடி என்னும் ஒளி !

மேலும் சர்வ யோனி இடத்தும் விந்து விளக்கமாகிய மின்னல் இடத்தும் :--நாத விளக்கமாகிய இடியிடத்தும்:இது அல்லாது --"'பாரொடு விண்ணாய்ப் பரந்ததோர் ஜோதி"---என்னும் --ஜோதி உள் ஜோதியாயும் உள்ளதுதான் கடவுள் என்னும் அருட்பெருஞ்சோதி என்பதாகும்.

அவை எப்படி உள்ளது என்பதை விளக்கும் பாடலைப் பாருங்கள் !

அருட்பெரு வெளியில் அருட்பெரு உலகத்து
அருட்பெரு தலத்து மேனிலையில்
அருட்பெரும் பீடத்து அருட்பெரு வடிவில்
அருட்பெரும் திருவிலே அமர்ந்த
அருட்பெரும் பதியே அருட்பெரும் நிதியே
அருட்பெரும் சித்தி என் அமுதே
அருட்பெரும் களிப்பே அருட்பெரும் சுகமே
அருட்பெரும் ஜோதி என் அரசே !

கடவுள் எங்கு இருந்து செயல் பட்டுக் கொண்டு இருக்கிறார் என்பதை படம் போட்டுக்  காட்டி விளக்குவது போல் காட்டுகிறார் வள்ளலார் .

கடவுள் உண்டா ?இல்லையா ?என்பதை அறிந்து கொண்டோம் இல்லையா ?

கடவுள் பல உண்டு என்பதோ பைத்தியக் காரத்தனம்!
கடவுள் இல்லை என்பதோ ஏமாற்று வேலை !
கடவுள் ஒருவர் உண்டு என்பதே உண்மை அறிவாகும் !

கடவுள் இல்லை என்பவர்களுக்கு வள்ளலார் சொல்லும் பதில் !

நாத்திகம் சொல்கின்றவர் தம் நாக்கு முடை நாக்கு
நாக்கு ருசி கொள்ளுவது நாறிய பிண்ணாக்கு !

அதாவது கடவுள் இல்லை என்பவர்கள் நாக்கு முடை நாக்கு என்கிறார் {முடை நாக்கு என்பது வாய் பேசாத ஊமைகள் என்கிறார் --அடுத்து அவர்களின் நாக்கு ருசிக் கொள்வது நாறிய பிண்ணாக்கு என்கிறார் --நாறிய பிண்ணாக்கு என்றால் மலம் என்பதாகும் }

அகம, அகப்புறம்,புறம்,புறப்புறம்.!

மேலே சொன்ன நான்கு இடத்தில் கடவுளை அறிந்து கொள்ளுதல் எங்கனம் என்பதைப் பார்ப்போம்.;--  

இந்த நான்கு இடத்தில்-- எது கடவுள் தன்மை உடையது என்றால்--நம் உடம்பில் உள்ள தலைப் பாகத்தில் இயங்கிக் கொண்டு இருக்கும் --ஆன்மா என்னும் ஒளிதான் கடவுள் தன்மை உடையதாகும்.ஆன்மாவை அறிந்து கொண்டால கடவுளை அறிந்து கொள்ளலாம்,ஆன்மாவை எப்படி அறிவது --இந்திரியம் கரணம்,ஜீவன் என்னும் மூன்று நிலைகளும் ஆன்மாவில் இருந்து வெளியே தோன்றியதாகும் மூன்றும் செயல் அற்ற நிலைக்கு வந்தால் ஆன்மாவைக் காணலாம்,எப்படி செயல் அற்ற நிலை உண்டாகும் --

நம் உடம்பில் இந்திரியங்கள் என்று சொல்லப்படும் முக்கிய கருவிகளில் கண்கள் தான் முதன்மையானது .கண்கள் எங்கு செல்கிறதோ அங்கு மற்ற காது,மூக்கு ,வாய்,உடம்பு,போன்ற கருவிகளும் --மற்றும் கரணங்கள் என்று சொல்லப்படும் --மனம்,புத்தி,சித்தம்,அகங்காரம்,என்னும் கருவிகளும் ,--மேலும் ஜீவன் என்னும் உயிரும் --கண்கள் செல்லும் இடத்திற்கு சென்றுவிடும் .

ஆதலால் கண்களை வெளியே{புறத்திலே }செல்ல விடாமல் ஆன்மா என்னும் உள் ஒளியை தொடர்பு கொள்ள வேண்டும் --அதாவது சிற்சபை நடத்தை தெரிந்து துதித்தால் சித்திகள் அனைத்தும் சத்தியம் கிடைக்கும் என்கிறார் வள்ளலார் .கண்கள் உள்ளே செல்லாமல் வெளியே செல்வதற்கு எவைத் தடையாக உள்ளது என்றால்--

சாதி,சமயம்,மதம் என்பவற்றின் --ஆசார சங்கற்ப விகற்பங்களும் --வருணம்,ஆசிரமம் முதலிய உலகாசார சங்கற்ப விகற்பங்களும் முக்கிய தடையாக உள்ளன,!இதனால் ஆன்ம நேய ஒருமைப்பாடு என்னும் ஒருமை இல்லாமல் ஒழிந்து விட்டது --அடுத்து  நாம் உண்ணும உணவு தடையாக உள்ளது -உணவு இரு வகைப்படும் -ஒன்று பொருள் உணவு,மற்றொன்று அருள் உணவு என்பதாகும்.

உலகில் உள்ள பஞ்ச பூத உணவுகளை உட்கொள்ளாமல் ,அருள்  உணவை  உட்கொள்ள வேண்டும் .அருள் உணவு எப்படி கிடைக்கும்?,இந்த உலகம் அநித்தியமானது அனைத்தும் தோற்றம் மாற்றம் உள்ளது --நித்தியமானது எதுவோ அதைக் கண்டு அதனுடன் இணைய வேண்டும் என்ற உணர்வு வந்துவிட்டால் --அழியும் பொருள் உணவை விட்டு --அழியா அருள்  உணவைத் தேடும் அறிவு வந்துவிடும்.--அதன்பின் கடவுள் மீது அன்பும் ,உயிர்கள் மீது இரக்கமும் வந்துவிடும் --அதுவே ஜீவ காருண்யம் என்பதாகும்.இதைக் கண்களில் கண்டு களித்து அனுபவிக்கின்றவர்கள் உண்மையை உணர்ந்தவர்களாகும்.

கடவுள் மீது அன்பும் உயிர்கள் மீது இரக்கமும் கொண்டு -- இடைவிடாது உண்மையான ஆன்மாவை தொடர்பு கொண்டு, இருந்தோம் மானால் --அன்பும் தயவும் ஒன்றுடன் ஒன்று சேரும் போது -- ''கருணை'' என்னும் அருள் ஒளி தன்னுடன் இணைத்துக் கொள்ளும் --அதன் பின் ஆன்மாவில் உள்ள அருள் என்னும் திரவம் சுரக்கும் --அந்த அருள் திரவம் உடம்பிற்குள் அருள் உணவாக சென்று உடம்பை பொன் உடம்பாக மாற்றம் செய்யும் ,அதன் பின் ஊன உடம்பு ஒளி உடம்பாக மாறும் .

அந்த ஒளி உடம்பு பெற்றவர்களால் தான் கடவுளைக் காணமுடியும் !அந்த ஒளி உடம்பை  பெற்றவர்களை எதனாலும் அழிக்கவும்  முடியாது அடக்கவும்  முடியாது !கடவுள் நிலை என்னவோ அந்த நிலையில் தன்னுடைய நிலையும் இருக்கும் --இதுவே கடவுள் நிலை அறிந்து அம்மயமாதல் என்பதாகும். அதாவது அருள் தேகம் என்பதாகும் ,--சுத்த பிரணவ ஞான தேகம் என்பதாகும் .

அருள் தேகம் பெற்றவர்களை  எதனாலும் அழிக்க முடியாது என்பதை விளக்கும் பாடலைப் பாருங்கள் !

காற்றாலே புவியாலே ககனம் அதனாலே
கனலாலே புனலாலே கதிராதி யாலே
கூற்றாலே பிணியாலே கொலைக் கருவியாலே
கோளாலே பிறர் இயற்றும் கொடுஞ் செயல் களாலே
வேற்றாலே எஞஞான்றும் அழியாதே விளங்கும்
மெய் அளிக்க வேண்டும் என்றேன் விரைந்து அளித்தான் எனக்கே
ஏற்றாலே இழிவென நீர் நினையாதீர் உலகீர்
எந்தை அருட்பெருஞ்சோதி இறைவனைச் சார்வீரே !

அருள் தேகம் பெற்றவர்களை எதனாலும் அழிக்க முடியாது என்பதை விளக்கும் பாடலைப் பார்த்தோம் .

அருள் தேகம் பெற்றவர்கள் தான் கடவுளைக் காண முடியும் ,மற்றவர்களால் கடவுளைக் காண முடியாது .வள்ளலார் கடவுளைக் கண்டவர் ,கடவுள் உண்டு என்பதை உறுதியாக சொன்னவர் .

அவர் சொன்னக் கடவுள் அவர் கண்ட கடவுள் --சமய மதங்களில் சொல்லிய கடவுள்கள் அல்ல என்பதை நாம் அனைவரும் அறிந்து தெரிந்து புரிந்து கொள்ளவேண்டும் .வள்ளலார் கண்ட கடவுள்தான் ''அருட்பெருஞ்சோதி'' என்னும் கடவுளாகும் --அவர் தனிப் பெருங் கருணையாக உள்ளார் -அவருக்கு சமமானது அவரே !

மற்ற கடவுள்கள் எந்த நிலையில் உள்ளார்கள் என்பதை வள்ளலார் விளக்குகிறார் பாருங்கள்.!

தடை உறாப் --பிரமன் --விண்டு --உருத்திரன்-- மயேச்சுரன்-- சதாசிவன்-- விந்து
நடை யுறாப்-- பிரமம்-- உயர் பராசத்தி-- நவில் பரசிவம்-- ஏனும் இவர்கள்
இடை யுறாத் ''திருச்சிற்றம்பலத்து ஆடும்'' இடது கால் கடை விரல் நகத்தின்
கடையுறு துகள் என்று அறிந்தனன் அதன் மேல் கண்டனன் திருவடி நிலையே !

மேலே உள்ள நாம் வணங்கும் கடவுள்கள் எல்லாம் -- சிற்றம்பலத்திலே இயங்கிக் கொண்டு இருக்கும் அருட்பெருஞ்சோதி ஆண்டவரின் இடது கால் நகத்தில் உள்ள {வலது கால் நகம் அல்ல }சிறு துகள் {சிறு துரும்பு }என்று அறிந்தேன், என்கிறார் வள்ளலார் .

யார் கடவுள் !

  நம்மை எந்த ஆதாரமும் இல்லாமல் இந்த உலகத்தில் இயக்கிக் கொண்டு இருப்பது
யார் ? நமக்கு உடம்பு ஏன் வந்தது உயிர் ஏன வந்தது ,நமக்கு இன்பம் துன்பம் ஏன வருகிறது .இதற்கு எல்லாம் யார் காரணம் ?இன்பம் வந்தால் மகிழ்கிறோம் ,துன்பம் வந்தால் வேதனைப் படுகிறோம் ,நாம் துன்பத்தில் இருந்து நீங்குவதற்கு ஏதோ ஒருக் கடவுளை வணங்குகிறோம் ,வழிபாடு செய்கிறோம்.
 
நம் உடம்பில் துன்பமும்,இன்பமும்,வருவதற்கு என்ன காரணம்?எப்படி உடம்பிற்குள் இவைகள் புகுந்தன ,?தானே வந்ததா ?வேறு ஒருவர் மூலமாக வந்ததா? இந்த உண்மைகள் தெரியாமல் நாம் அலைந்து கொண்டு இருக்கிறோம்,இவற்றுக்கு எல்லாம் கடவுள் தான் காரணம் என்று ,பொய்யான கற்பனைக் கடவுள்கள்,  பின் செல்கிறோம்,நாம் ஏதோ ஒரு நம்பிக்கையின் அடிப்படையில் ஏதோ ஒரு கடவுளை வழிபடுகிறோம் --சில நேரம் துன்பம் குறைந்து விட்டதாக தோன்றுகிறது. .அனைத்தும் மனத்தின்,எண்ணத்தின்  செயபாடுகளே தவிர கடவுள் வந்து நம்முடைய குறைபாடுகளை தீர்ப்பதில்லை .
 
கடவுள் தான் நம்மைக் காப்பாற்றுகிறார் என்றால் --நமக்கு இளமை மாறி வாலிபம் வரக்கூடாது--வாலிபம் மாறி முதுமை வரக்கூடாது.முதுமை மாறி இறுதியில் மரணம் வரக்கூடாது.இவை அனைத்திற்கும் காரணம் நமக்கு நாமேதான் காரணம் என்பதை அறிந்து கொள்ள வேண்டும் .
 
நாம் பிறந்ததில் இருந்து நாம் செய்யும் ஒவ்வொரு காரியமும் நம்முடைய --உடம்பிலும் உயிரிலும் ஆன்மாவிலும் பதிவாகிக் கொண்டே இருக்கிறது .நாம் செய்யும் காரியங்கள் பிற உயிர்களுக்கு துன்பம் தருவதாக இருந்தால் அந்த துன்பம் நம்முடைய உடம்பின் வழியாக உயிரில் கலந்து ஆன்மா என்னும் ஒளியில் பதிவாகி விடுகிறது ,பின் அதுவே நமக்கு துன்பமாக வருகிறது.அதேபோல்த்தான்  இன்பம் என்பதும்,
 
நாம் செய்யும் காரியங்கள் பிற உயிர்களுக்கு நன்மையையும் ,மகிழ்ச்சியும் தருவதாக இருந்தால் ,அதே மகிழ்ச்சி நம் உடம்பின் வழியாக உயிரில் கலந்து ஆன்மா என்னும் ஒளியில பதிவாகிறது .இதுவே நன்மையையும் தீமையும் நமக்கு உண்டாகும் பதிவுகளாகும்,
 
நாம் நன்மையையும் மகிழ்ச்சியும் பிற உயிர்களுக்கு உண்டாக்கிக் கொண்டே இருந்தால் .நமக்கு எந்த துன்பமும் வராது நரை ,திரை,மூப்பு ,பயம் அச்சம்,துயரம் போன்ற எந்த செயல்களும் நம்மை அணுகாது.  நமக்கு இளமை மாறாது,முதுமை வராது,மரணமும் வராது .இதை அறிவு படைத்த மனிதர்கள் அறிந்து கொள்ள வேண்டும் ,என்றே எனினும் இளமையோடு இருக்க நன்றே தரும் ஒரு ஞான மாமருந்து என்று வள்ளலார் சொல்லுவார்,-- நம்மைக் காப்பாற்றும் அருள் மருந்து நம்முடைய ஆன்மாவில் இறைவனால் வைக்கப் பட்டுள்ளது --நமக்கு மட்டும் அல்ல எல்லா உயிர்களிலும் அருள் மருந்து வைக்கப் பட்டு உள்ளது.

பசி ,கொலை,தாகம்,பிணி,இச்சை,எளிமை,பயம்,அச்சம்,துக்கம், மரணம் ,போன்ற அனைத்தும் போக்கும் அருள் மருந்து நம் ஆன்மாவில் உள்ளது அதுவே ஞான மருந்தாகும் -அதுவே வைத்திய நாத மருந்தாகும் ,அந்த மருந்தை கண்டு அறிந்து உண்பவர்கள் கடவுளைக் காணலாம். 
 
உயிர்கள் தான் கடவுள் வாழும் ஆலயம் -அதனால் கடவுளைத் தேடி அலைய வேண்டாம் -உயிர்களுக்கு செய்யும் உபகாராமே கடவுளுக்கு செய்யும் வழிபாடாகும்,ஜீவன்களுக்கு செய்யும் ஜீவ காருண்யமே மோட்சவீட்டின் திறவு கோளாகும் உயிர் இரக்கமே கடவுளை வணங்கும் வழிபாடாகும். 
 
கடவுள் உண்டா ?இல்லையா?என்ற தேடுதலுக்கு போக வேண்டாம் ,நேரமும் ,காலமும்,வீண் விரையுமும் ,மன உளைச்சலும்,வேதனையும் வெறுப்பும் தான் வந்து சேரும்,
 
கடவுள் உண்டு !ஆனால் நாம் வணங்கும் கடவுள்களோ,தெய்வங்களோ கிடையாது,எல்லா உயிர்களும் கடவுள்தான் ,எல்லா உயிர்களிலும் கடவுள் என்னும் ஒளி இயங்கிக் கொண்டு இருக்கிறது.ஆதலால் எந்த உயிரையும் அழிக்காதீர்கள் ,தான் வாழ்வதற்கு மற்ற உயிர்களை அழிப்பது மனித பிறவியின் அறிவு அல்ல !மனித பிறப்பின் செயல்கள் அல்ல !
 
அனைத்து உயிர்களும் கடவுள்தான் , உயிரே கடவுள் ! அதன் உள் ஒளியே கடவுள் !

உள்ளொளி யோங்கிட உயிர் ஒளி விளங்கிட
வெள்ளொளி காட்டிய மெய்யருட் கனலே!

உள் ஒளியான ''மெய் அருட் கனல்''தான் உண்மையானக் கடவுள் ! 
 
கொல்லா நெறியே குவலயம் ஓங்குக !
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க.
 
அன்புடன் ஆன்மநேயன்;--கதிர்வேலு.

சந்தேகம் இருப்பின் தொடர்பு கொள்ளுங்கள் !

செல் ;--9865939896--பொன் ;--0424-2401402,

மீண்டும் பூக்கும் ;--
Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.