Jump to content

பூட்டிய அறையில் சிக்கிய இந்திய தலைவர்கள்.


Recommended Posts

பூட்டிய அறையில் சிக்கிய இந்திய தலைவர்கள்.

Friday, 02 February 2007

லண்டன் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பிரபலங்கள் பலரை, ஒரு வீட்டில் சில நாட்கள் பூட்டி வைத்து, அவர்கள் பேசிப் பழகுவதை ஒளிபரப்புவார்களாம். அதே போன்ற நிகழ்ச்சி ஒன்றை இங்கே நடத்தினால், பிரபலங்கள் எப்படிப் பேசிக் கொள்வார்கள் என்று ஒரு கற்பனை. ஒரு பங்களாவில் கருணாநிதி, ஜெயலலிதா, டாக்டர் ராமதாஸ், வைகோ, விஜயகாந்த் ஆகியோர் உள்ளே வைத்து பூட்டப்படுகிறார்கள். அவர்கள் பேசிப் பழகும் நேரடி ஒளிபரப்பு இதோ:

கருணாநிதி: இந்த மர்ம பங்களா போயஸ் தோட்டத்திலுள்ள ஒரு ஆடம்பர பங்களாவை எனக்கு நினைவூட்டுகிறது.

ஜெயலலிதா: போதும் ஃபிளாஷ்பேக்கை நிறுத்துங்க. இந்த நிகழ்ச்சியே நீங்க செய்த சதிதானே?

வைகோ: சரியா சொன்னீங்கம்மா. நம்மளை இங்கே பூட்டி வைச்சிட்டு, தாயகத்தைக் கைப்பற்ற சதி நடக்குது. அந்த இரண்டு கோமாளிகளின் கனவு பலிக்காது.

கருணாநிதி: கோமாளிகளா... யார் அது?

வைகோ: அடடா, இவருக்கு ஒண்ணுமே தெரியாதாமாம்.. எல்.ஜி.., செஞ்சி இந்தத் துரோகிகளாவது யார்னு தெரியுமா?

கருணாநிதி: தெரியாமல் இருக்குமா? எல்.ஜி. என்பது கூட்டுப் பெருங்காயம்.. செஞ்சி என்பது ராஜா தேசிங்கு கோட்டை இருக்கும் இடம்.. இவை எப்படி உங்களுக்குத் துரோகம் செய்ய முடியும்? புரியவில்லையே, முன்னாள் போர்வாளே?

வைகோ: (பற்களை நற நறவென்று கடித்தபடி) எனக்கு வர்ற ஆத்திரத்துக்கு உங்களை அப்படியே.. (திடீரென்று முகபாவம் மாறி அழுகிறார்) அய்யோ! அநியாயம் பண்றாங்களே! ரத்தக் கொதிப்பை ஏற்படுத்தறாங்களே! அம்மாவும் ஒண்ணும் கண்டுக்க மாட்டேங்கிறாங்களே?

விஜயகாந்த்: பக்கத்துல ஏதோ புல்டோஸர் வண்டிச்சத்தம் கேக்குது. அநேகமா டி.ஆர். பாலுதான் ஓட்டிட்டுப் போகிறார்னு நினைக்கிறேன். ஹ... மண்டபத்தைத் தானே இடிப்பாரு? மக்களோட மனக்கோட்டையை எப்படி இடிப்பாரு? ஹ.. எல்லா பக்கமும் ஊழல்னு சொல்றேன்.. உங்க பொன்னான ஓட்டை எனக்கே போடணும்னு ஆணித்தரமா கேக்கறேன்.

ஜெ: ஹலோ, இப்ப என்ன தேர்தலா நடக்குது? இன்னும் தெளியலை போலிருக்கு. டிரங்கர்ட் ஃபெல்லோ...

விஜய: தமிழ்நாட்டை சுரண்டினது போதும்.. இப்ப என்னை இங்கே பூட்டி வைச்சுட்டா, என் கட்சியைக் கலைச்சிடலாம்னு கனவு காணாதீங்க. ஆனானப் பட்ட பாகிஸ்தான் தீவிரவாதிங்களோட கொடுஞ்சிறைகள்லேர்ந்தே தப்பிச்சவன் நானு.. ஹ... ஞாபகம் வெச்சுக்குங்க.. ரமணா படம் பாத்திருக்கீங்களா? ஹ.. அதுதான் நடக்கப் போகுது..

ராமதாஸ்: இந்த சினிமாவால தான் நாடே குட்டிச் சுவராகுது... ஒரு நாளைக்கு ஒரு ஷோதான் காட்டணும். படத்துல ஹீரோவே இருக்கக் கூடாது... தம்பி திருமா மட்டும் வேணா, ஹீரோவா நடிக்கலாம். சினிமாவுல எவனாவது சிகரெட் பிடிச்சா தொலைஞ்சீங்க.

கருணா: மருத்துவர் கோபமா இருக்காரு. என்ன வேணும் கேளுங்க, தர்றேன் டாக்டர்...

ராம: பின்ன என்ன தலைவரே, பச்சைத் துரோகம் செஞ்சா கோபம் வருமா வராதா?

கருணா: பச்சைத் துரோகமா? யார் செஞ்சது? ‘பச்சைத் துரோகம்’னு 1962_ல அண்ணா தலைமையில வாணியம்பாடியில நாடகம் ஒண்ணு போட்டிருக்கேன். அதைச் சொல்றீங்களா?

விஜய: வெறும் நாடகம்னு சொல்லாதீங்க.. கபட நாடகம்னு சொல்லுங்க... ஹ... அதுதான் உங்களுக்குக் கைவந்த கலையாச்சே...

கருணா: ‘கபட’ என்றொரு வார்த்தையையே தமிழிலிருந்து அழித்திட வேண்டும் என்று நினைப்பவன் இந்தக் கருணாநிதி...

வைகோ: (கண்களைக் கசக்கியபடி) இவரு எப்பவும் இப்படித்தாங்க... ஒண்ணுமே தெரியாத மாதிரிதான் பேசுவாரு... ஆனா எல்லாத்தையும் செய்யிறது இவருதான்..என் கட்சியைக் கூட உடைக்கப் பார்த்தாரு... பூ... பூ.. (அழுகிறார்)

ஜெ: ஷ்ஷ§... இந்த மாதிரியெல்லாம் அழுது கலாட்டா பண்ணக் கூடாது..என் கட்சியை விட்டு, கூட்டணியை விட்டு எத்தனையோ பேரு போறானுங்க.. அதைப் பத்தியெல்லாம் நான் கவலைப்பட்டிருக்கேனா... போனா போறாங்க... வந்தாவர்றாங்க...

ராம: யார் வேணா வரட்டும், போகட்டும்.. ஆனா எவனும் ராத்திரி எட்டு மணிக்கு மேல ரோட்டுல திரியக் கூடாது.

வைகோ: இந்த பங்களா ரொம்ப நல்லா இருக்கு.. துரோகிகள் கிட்டே பொதுக்குழு உறுப்பினர்கள் போகாம இருக்க உள்ளே வைச்சுப் பூட்டிடலாம்.. விஷயம் வெளியே தெரியாது.

ஜெய: இந்த பங்களா விலைக்கு வருமா? சசியை விட்டுப் பேசச் சொல்லணும்.

கருணா: விலைக்கு வாங்கினால் சட்டம் அதன் கடமையைச் செய்யும்..

விஜய: சட்டம் தன் கடமையைச் செஞ்சா, தெய்வம் நின்னு கொல்லும்.

ஜெய: என்ன இந்தாளு.. எதிர்க்கட்சித் தலைவர் நானா, இவரா? ரொம்ப அதிகமா பேசிக்கிட்டே போறாரு? சினிமாவுல தான் அதிகமா பேசறாருன்னு பார்த்தா, அரசியல்லயும் டூ மச்சாப் பேசறாரு..

வைகோ: இந்தக் கருத்தைச் சொல்றதுக்காக என்னை மன்னிச்சிடுங்கம்மா. நீங்க பேசாம இருக்கிறதுனாலத்தான் இவரை மாதிரி ஆளுங்களெல்லாம் பேச ஆரம்பிச்சுட்டாங்க. எப்படி சக்கைப் போடு போடுறாரு பாருங்க. எனக்கே இவருகிட்டே கூட்டணி மாறிடலாமான்னு உணர்ச்சிவசப்படத் தோணுது..

ஜெ: ஓஹோ, என்கிட்டே பேச இவ்வளவு தைரியம் வந்திடுச்சா? மறுபடியும் உள்ளே வைச்சாத்தான் சரிப்படுவாரு போலிருக்கு. சீக்கிரம் கூட்டணியிலேர்ந்து அனுப்பிட வேண்டியதுதான்..

வைகோ: ( அழுதபடி ) என்னை மன்னிச்சிடுங்கம்மா..

ராம: சரி..சரி.. எல்லாரும் அவங்க அவங்க ரூமுக்குக் கிளம்புங்க. மணி எட்டு ஆகப் போகுது. எல்லா லைட்டையும் ஆஃப் பண்ணிடணும். ஃபேன் போடக்கூடாது. சினிமா பாட்டை யாரும் முணுமுணுக்கக் கூடாது..பாத்ரூம் போகக் கூட யாரும் அறையை விட்டு வெளியே வரக் கூடாது. வந்தா அடி பின்னிடுவேன்.. எல்லோரும் அவரவர் அறைக்குத் திரும்புகிறார்கள்.

ராம: (கலைஞரிடம் ) என்ன, ஏதோ யோசனையில நிக்கறீங்க?

கருணா: உங்க கட்சியிலேர்ந்து சில பேர் உங்களை எதிர்த்து வெளியே வர்றா மாதிரி ஒரு சின்ன கனவு வந்தது. அதான்...

ராமதாஸ் ‘அய்யய்யோ’ என்று கத்தியபடியே ஓடுகிறார்.

குமுதம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நாம கற்பனை பண்ணாததெல்லாம் நடக்குமிடம் இதில் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • தினமுரசு ஒரு ஜனரஞ்சக பத்திரிகை என்பதில் சந்தேகமேயில்லை. அதில் அற்புதன் எழுதிவந்த துரையப்பா முதல் அற்புதன் வரை எனும் தொடர் பல நிகழ்வுகளை சொல்லி வந்தது. இதற்காகவே அந்த பத்திரிகையை வாங்கி தொடர் தொடராக வாசித்து வந்தேன். அவற்றையெல்லாம் கட்டி பத்திரமாக இன்றும் வைத்திருக்கின்றேன். கதையை வாசித்தவர்களுக்கு கொலையாளி யாரெனெ தெரிந்திருக்கும்.
    • தினமுரசு பத்திரிகையில் ஈழமக்கள் முன்னணியில் இருந்து தொடர்கதையாக எழுதி வந்த பத்திரிகையாளர் அற்புதன் எமது போராட்டம் எப்படி யார்யார் தொடங்கினார்கள்.                   எமது போராட்டம் பற்றிய உடனடி கள தகவல்களுடன் தினமுரசு பத்திரிகை வெளிவந்து கொண்டிருந்தது.துரோக கும்பலில் உள்ளவர்களால் எழுதப்பட்டாலும் ஒவ்வொரு கிழமை வெளிவந்த பத்திரிகையையும் வாங்கி வாசித்து பலருக்கும் வாசிக்க கொடுத்து சேர்த்து வைத்திருந்தேன்.                  பலரும் ஒவ்வொரு கிழமையும் எப்படா தினமுரசு வரும் என்று காவல் இருந்து வாங்கி வாசித்துக் கொண்டிருந்த காலத்தில் திடீரென பத்திரிகையாளர் அற்புதன் சுட்டுக் கொல்லப்பட்டார்.                அவரது கொலை அவர்களது இயக்கமான ஈபிடிபி யே காரணம் என எல்லோராலும் பேசப்பட்டது.டக்ளஸ் ஏற்கனவே அற்புதனை எச்சரிகை செய்தும் தொடர்ந்தும் பல உண்மைகளை எழுதியதால்த் டக்ளசால் கொல்லப்பட்டாக சொல்கிறார்கள்.                             அற்புதனின் தினமுரசு பத்திரிகையை வாசிக்காதவர்கள் எமது போராட்ட ஆரம்ப வரலாறு தெரியாதவர்கள் இந்த தொடரை பாருங்கள்.                 வரலாற்றை அறிந்து கொள்ளுங்கள்.   பாகம்1    
    • உள்ளதைத்தான் சொல்லியிருக்கின்றீர்கள். இப்ப ஜேர்மனியிலை எதுக்கெடுத்தாலும் தொட்டால் பட்டால் புட்டின் தான் குற்றவாளி.அந்த மாதிரி மக்களை மூளைச்சலவை செய்துகொண்டு போகின்றார்கள். இணக்க அரசியலுக்கு பெயர் போன ஜேர்மனி இப்படி ஆகிவிட்டது. உள்ளதைத்தான் சொல்லியிருக்கின்றீர்கள்.  
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.