Jump to content

அதிகாரத்தில் தெறிக்கும் வன்மம் - 'Road to Nandikadal'


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

அதிகாரத்தில் தெறிக்கும் வன்மம்

 

1.

'Road to Nandikadal' என்பது புலிகளை ஆயுதப்போராட்டத்தின் மூலம் வெற்றிகொண்டதை சிங்கள இராணுவத் தரப்பிலிருக்கும் ஒருவர்  கொண்டாடிக் குதூகலிக்கின்ற ஒரு நூலாகும்முகமாலையில் தரித்து நின்ற 53 டிவிசனுக்குத் தலைமை தாங்கிய கமல் குணரட்னே நான்காவது ஈழப்போரில் இறுதியில் புலிகளின் தலைவர் கொல்லப்படுகின்ற தாக்குதலை நிகழ்த்தியதுவரை பலவற்றை எழுதிச் செல்கின்றார்புலிகளின் தலைவரைப் புகழ்ந்திருக்கின்றாரென 2ம் அத்தியாயம் மட்டும் வாசித்துவிட்டு 'புகழ்பரப்பியவர்கள்இந்நூலை முழுமையாகக் கடைசி அத்தியாயம் வரை வாசித்திருந்தால் அவர்களுக்கு நிச்சயம் கடும் சினம் வந்திருக்கும்

 

ஒரு நாய் தன் காலின் மீது கிடக்கிறது எனவும்நாயின் அடையாள அட்டைச் சின்னம் எதுவெனவும் புலிகளின் தலைவரை -அவர் ஒரு மனிதர் என்றளவில் கூடசிறிதும் மரியாதை கொடுக்காமல் எழுதப்பட்டிருப்பதை வாசித்திருந்தால்புகழைப் பதிந்தவர்கள் தம் பதிவுகளை மறைத்துவிட்டு ஓடியிருப்பார்கள்.

புலிகளைத் தீவிரவாதிகளென எல்லா இடத்திலும் அடையாளமிடும் கமலுக்குஅவரை மீறி பல இடங்களில் புலிகளென எழுத வந்துவிடுகின்றதுபாவம் அடுத்த பதிப்பிலாவது  புலிகள் என  எழுதப்பட்டு எஞ்சியுள்ள இடங்களை தீவிரவாதிகளென மாற்ற அவர் ஆவன செய்வாரென நம்புவோமாக.

 

தீவிரவாதிகள் மீது வெஞ்சினம் கொண்டபொழுதிலும் அவர்கள் அலையலையாய் வந்து முகமாலைபுதுக்குடியிருப்புப் பகுதிகளில் மோதியதை எதுகொண்டும் மறைக்க முடியவில்லைமூன்று வருடங்களுக்குள் நிகழ்ந்த யுத்ததிற்குள் கிட்டத்தட்ட 5,800 படையினர் கொல்லப்பட்டதையும், 29,000 பேர் போரினால் அங்கவீனப்பட்டதையும் ஒப்புக்கொள்கிறார்.

 

roAD.jpg

தீவிரவாதிகளை சில இடங்களில்  அவ்வப்போது பாராட்டியும் விடுகின்றார்அவர்களின் மிகத்துல்லியமான ஆட்டிலறித்தாக்குதல்களை மட்டுமின்றி தங்களால் அவ்வளவு எளிதில் அழிக்கமுடியாது மிக நுட்பமான கோணங்களில் அவற்றை நிறுத்திவைத்திருந்த முறையையும் உலகில் எந்த இடத்திலும் இவ்வாறான கோணங்களில் வைத்து பார்த்ததில்லையெனவும் வியக்கின்றார்.

 

இன்னொரு இடத்தில்தீவிரவாதிகளின் வேவு பார்க்கும் திறத்தைமுகமாலை போன்ற முக்கிய நிலைகளைத் தாண்டி வந்து அவர்கள் உளவு பார்த்த நுட்பத்தை கவனப்படுத்துகின்றார்முக்கியமாய் 8-10 கிலோமீற்றர்கள்மிதக்கும் படகை கைகளால் (கவனிக்க துடுப்பு எதுவும் பாவிக்காதுஅளைந்து வந்து உள்நுழைந்தது மட்டுமின்றி தாங்கள் இரவு சாப்பிட்டுவிட்டு மிச்சம் வைக்கும் சாப்பாட்டையும் உண்டு விட்டுசென்ற வேவுப்புலிகளின் திறமையைப் பாராட்டச் செய்கின்றார்அதுவும் அவ்வப்போது சுட்டு சுட்டு வீழ்த்த தொடர்ச்சியாக இப்படி கைகளால் வலித்துக்கொண்டு வந்த உளவுப்புலிகள் பற்றி தமது இராணுவத் தளபதியான சரத் பொன்சேகாவிடம் குறிப்பிட்டபோதுகூட மிகச்சிறந்த நீச்சல்வீரான அவரால் கூடஇப்படியும் முடியுமா என நம்பமுடியாது இருந்தது என்கின்றார்.

 

இறுதியாய் புதுமாத்தளனில் 800m X 800m குறுகிய நிலப்பரப்பில் நடந்த கடைசி யுத்தத்தில் கால்களே இல்லாத சில புலிகள் அவ்வளவு மூர்க்கமான போராடிய திறமையைத் தன்னால் பாராட்டாமல் இருக்கமுடியவில்லை எனவும் எழுதிச்செல்கின்றார்.

 

2.

புலிகளின் தலைவரின் மூத்த மகனானசார்ஸ்ஸ் அன்ரனி ஓரிரவில் சாதாரண மக்கள் போலசில போராளிகளோடு இராணுவ எல்லைக்குள் நுழைந்தபோது இது இரவு இப்போது அனுமதிக்கமாட்டோம் என இராணுவம் மறுத்தபோது நடந்த சண்டையிலே கொல்லப்பட்டிருக்கின்றார் என்கின்றார்சார்ஸ் அன்ரனி 800X 800 புதுமாத்தளன் சண்டை box இறுக்கப்பட்டபோது கிட்டத்தட்ட கிலோமீற்றர் தொலைவில் சென்றே இராணுவ எல்லைக்குள் நுழைந்தார் எனச் சொல்லப்படுகின்றது.

 

புலிகளின் தலைவர் இருக்கின்றாரா அல்லது தப்பிவிட்டாரா என்பது தங்களுக்கு அவரைக் கொல்லும்வரை தெரியாது எனவும் சொல்கின்றார். புலிகளின் தலைவர் கொல்லப்படுவதற்கு முன் மூன்று அலையலையான தாக்குதல்கள் நடத்தப்படுகின்றதுஅந்த தாக்குதலிலேயே புலிகளின் தளபதிகளான பானு,சொர்ணம்மாதவன் மாஸ்டர் உள்ளிட்டோர் கொல்லப்பட்டதாய் கூறுகின்றார்கிட்டத்தட்ட 700 பேர் ஒரு நாளிலேயே (மே 17) கொல்லப்படுகின்றனர்.

புலிகளின் தலைவரும்கடற்புலிகளின் தளபதியான சூசையும் கிட்டத்தட்ட அருகிலேயே கடைசிவரை நின்றிருக்கின்றனர். புலிகளின் தலைவர் கொல்லப்பட்ட விதம் குறித்து எல்லாவிதமான வதந்திகளையும் அவர் சரணடைந்து மகிந்தாவின் முன் மண்டியிடவைக்கப்பட்டவர் உட்படநிராகரித்துதன்னைப் போன்றவர்கள் நேரடிச் சாட்சியாக நடந்ததைப் பார்த்தவர்கள் என உறுதியாகக் கமல் சொல்கின்றார்இறுதித்தாக்குதலை நடத்திய கொமாண்டோக்களின் படமும் இந்தப் புத்தகத்தில் உள்ளடக்கப்பட்டு இருக்கிறது. உடனேயே புலிகளின் தலைவரின் உடலை எரித்து அடையாளமின்றிச் செய்ததாகவும்எல்லாளன் போல நினைவுச்சமாதி ஒருபோதும் அமைத்துவிடக்கூடாதெனவும் எச்சரிக்கையுடன் இருந்ததாகவும் கூறுகின்றார்.

 

புலிகளின் தலைவரின் உடலை அடையாளங் காட்ட கருணா வந்தபோதுதனக்குக் கேட்க ஒரு இராணுவத்தினன், 'நீங்களும் அவசரப்படாது பிரிந்துவிடாதிருந்தால்உங்கள் உடலையும் இங்கே கிடத்தியிருப்போம்எனச் சொன்னதையும் இந்தப்புத்தகத்தில் பதிவு செய்கின்றார்கருணா ஒரு புன்சிரிப்புடன் புலிகளின் தலைவரை அடையாளம் காட்டினாலும்தயா மாஸ்டர் கண்களில் நீரோடு இருந்தார் எனவும் எழுதுகின்றார்.

 

ஆனால்இந்தப் புத்தக்கத்தில் நடேசன்புலித்தேவன் போன்றோர் சரணடைய வந்த காட்சிகளின் பதிவு எதுவும் இல்லை. புலிகளின் தலைவரின் இளையமகனான பாலச்சந்திரன் உயிரோடு சரணடைந்ததும்பிறகு கொல்லப்பட்டதும் பற்றி ஒரு சிறுமூச்சும் இல்லை. தீவிரவாதிகளோடு யுத்தம் தொடங்கியது சரிஆனால் no fire zone வரும்வரைக்கும் மக்கள் இழப்பு/கஷ்டம் பற்றி சிறுவிபரிப்புக்களும் இல்லை.ஏதோ இரண்டு இராணுவங்கள் மக்கள் இல்லாத சூனியப்பிரதேசத்தில் சண்டை செய்தனர் என நாங்கள் கற்பனை செய்யவேண்டியதுதான்.

 

3.

இத்தனை அழிவு நிகழ்ந்தபின்னும்புலிகள் மீது கட்டாய இராணுவ சேர்ப்புமக்களை வெளியேவிடாது தடுத்தமை போன்ற பாரிய குற்றச்சாட்டுக்கள் வெளிப்படையாக இருந்தாலும் ஏன் அந்தமக்கள் உட்பட பெரும்பான்மையான தமிழ்மக்கள் மகிந்த ராஜபக்‌ஷாவிற்கு தன் பெரும்பான்மையாக ஆதரவை போரின் பின்பான காலத்தில் கூட காட்டவில்லை என்பதைப் புரியாதவரைஎல்லாளன் துட்டகைமுனு,, மகிந்த ராஜபக்‌ஷாபிரபாகரன் போன்றவர்கள் சாதாரண பெயர்களேஇவற்றின் பின்னால் இருக்கும் நுட்பமான பிரச்சினைகள் தீர்க்கப்படாது இருக்கும்வரை இஃதொரு நச்சுச்சூழல் என்பதை அறியாதவரை இந்த அழகிய தீவு அமைதியாக எளிதில் இருக்கமுடியுமா எனவும் சிங்களப் பேரின்வாத அரசும்அதற்கு முண்டுகொடுக்கும் இராணுவமும் யோசித்துப் பார்க்கவேண்டும்.

 

வெற்றியை நடத்திக் காட்டிய இராணுவத்தளபதியான சரத் பொன்சேகா சிறைக்குள்தான் பின்னர் மகிந்த ராஜபக்‌ஷா அரசினால் அனுப்பப்பட்டார்இராணுவப் புரட்சி நடந்துவிடும் என்ற அச்சத்தாலோ என்னவோ போருக்குத்தலைமை தாங்கிய தளபதிகளில் பெரும்பான்மையோர் வெளிநாடுகளுக்கு தூதர்களாகவும் துரத்தப்பட்டார்கள்.

 

ஈழத்தின் இறுதிப்போர் நிகழும்போது 120, 000 இருந்த இராணுவம் கிட்டத்தட்ட 230,000, இரண்டு மடங்காக்கப்பட்டதுஅதுவரை இருந்த டிவிசன் - 20 டிவிசன்களாகவும் ஆக்கப்பட்டனஇவ்வளவு பேரை வைத்துக்கொண்டுகொல்வதற்கு 'தீவிரவாதிகளும்இல்லாதுபோகும்போது நாட்டில் எந்தச் சூழ்நிலையும் வரலாம் என்பதையும் அவ்வளவு எளிதில் மறந்துவிடமுடியாது.ஒரு தோற்றுப்போன போராட்டத்தைஅவர்கள் 'தீவிரவாதி'களாய் இருந்தாலும் தங்களின் சகோதரர்களாகவும்நண்பர்களாகவும் இருந்த அவர்களை 'இயக்கம்எனற பெயரில் பலர் வெறுக்கலாம்ஆனால் சக மனிதர்களாய் அவர்களை தமிழ்ச்சமூகம் அவ்வளவு எளிதில் விட்டுக்கொடுக்காதுமிக மோசமாக அவர்களைச் சித்தரிக்கும் இந்த நூலில் கற்றுக்கொள்ளும் பாடம் என்னவென்றால், 'நாங்கள் எப்போதும் அதிகாரம் மிக்கவர்கள்எங்களால் எதையும் செய்யமுடியும்என்பதே.

 

ஆம்எதையும் செய்யமுடியாது கீழ்மைப்பட்ட ஒரு சமூகம்தன் சாபங்களாலும்குற்றவுணர்வுகளைப் பெருக்குவதன் மூலமும் அதிகாரத்தில் இருப்பவர்களின் மனச்சாட்சிகளை அவ்வளவு எளிதில் உறங்கவிடாது என்று நம்புவதைத் தவிர இப்போதைக்கு எமக்கும் எந்த வழிகளுமில்லை.

 

----------------------

(நன்றி: 'அம்ருதா' - மார்கழி/2016)

http://djthamilan.blogspot.co.uk/2016/12/blog-post.html?m=0

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாசிக்க.....  கண் கலங்குகின்றது.
எமது  தாயகத்துக்கு, போராடிய... மாவீரர்களுக்கு, வீர வணக்கம்.
இணைப்பிற்கு... நன்றி, கிருபன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, கிருபன் said:

'Road to Nandikadal

பொழுது போகாதவர்கள் படிக்க நல்லதொரு புத்தகமாக இருக்குமென நம்புகின்றேன்.:cool:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த மனித உரிமை மீறல் வாதிகளின் பண்ணாடைப் புத்தகங்கள், ஐ நா முன்னால் கொழுத்தப் பட வேண்டும்.

இவர் வெள்ளை வேட்டிக் கள்வர் போல, தன் மீதான மனித உரிமை மீறல் கறையைப் போக்க வெள்ளை அடிக்க முயல்கிறார்.

இதை வாசிப்பதே வேஸ்ட்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, குமாரசாமி said:

பொழுது போகாதவர்கள் படிக்க நல்லதொரு புத்தகமாக இருக்குமென நம்புகின்றேன்.:cool:

நான் படிக்கப்போவதில்லை. முள்ளிவாய்க்கால் வரலாற்றை எவருமே சரியாக எழுதமாட்டார்கள்.

கால்களை இழந்த போராளிகள்கூட கடைசிப் பொக்ஸுக்குள் மூர்க்கமாகப் போரிட்டு மடிந்தார்கள் என்பதை சிங்களத் தளபதி குறிப்பிட்டுள்ளார். இது அவர் எதிர்பார்க்காதது என்பதுதான் ஆச்சரியமானது.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • உற‌வே ஏன் சீமான் மீது இம்புட்டு வ‌ன்ம‌ம்..........2009 முள்ளிவாய்க்கால் இன‌ அழிப்புக்கு துணை போனாரா அல்ல‌து த‌லைவ‌ருக்கு எங்க‌ட‌ போராட்ட‌த்துக்கு வைக்கோ ராம‌தாஸ் திருமாள‌வ‌ன் போன்ற‌வ‌ர்க‌ள் போல் துரோக‌ம் செய்தாரா...............எல்லாம் அழிந்த‌ நிலையில் த‌மிழீழ‌ம் என்ற‌ பெய‌ரை உயிர்ப்போடு வைத்து இருப்ப‌து 30ல‌ச்ச‌த்துக்கு மேல் ப‌ட்ட‌  எம் தொப்பில் கொடி உற‌வுக‌ள்...........பிர‌பாக‌ர‌ன் என்றாலே தீவிர‌வாதி என்று இருந்த‌ த‌மிழ் நாட்டில் பிர‌பாக‌ர‌ன் எம் இன‌த்தின் த‌லைவ‌ர் என்று கோடான‌ கோடி ம‌க்க‌ள் கேட்டுக்கும் ப‌டி சொன்ன‌துக்கா சீமான் மீது இம்ம‌ட்டு வெறுப்பா சீ சீ 2009க்கு முத‌ல் ஈழ‌ம் ஈழ‌ம் என்று க‌த்தின‌ கூட்ட‌ம் இப்ப‌ சிங்க‌ள‌வ‌னுக்கு விள‌ம்ப‌ர‌ம் செய்துக‌ள் இதை விட‌ கேவ‌ல‌ம் என்ன‌ இருக்கு...............அந்த‌ க‌ரும‌த்தை நான் தொட்டு என்ர‌ ந‌ட்ப்பு வ‌ட்டார‌ம் தொட்டு ஒருத‌ரும் கேடு கெட்ட‌ செய‌ல் செய்த‌து இல்லை................சீமான் மீது விம‌ர்ச‌ன‌ம் வைக்க‌லாம் ஆனால் அவ‌ர் கொண்ட‌ கொள்கையோடு உறுதியாய் நிக்கிறார் த‌னித்து நிக்கிறார்...........சீமான் காசு மீது பேர் ஆசை பிடித்த‌வ‌ர் என்றால் இந்த‌ தேர்த‌லில் ஆதிமுக்கா கூட‌ கூட்ட‌னி வைச்சு 500 கோடியும் 8 தொகுதியும் ஜா ப‌ழ‌னிசாமி கொடுத்து இருப்பார்................ த‌மிழ‌க‌ அர‌சிய‌ல் வாதிக‌ளை பார்த்தால் கூடுத‌லான‌ ஆட்க‌ள்  பெண்க‌ளுட‌ல் க‌ள்ள‌ உற‌வு வைத்து இருந்த‌வை அந்த‌ வ‌கையில் அண்ண‌ன் சீமான் வாழ்த்துக்க‌ள் ப‌ட‌ம் எடுத்த‌ போது விஜ‌ய‌ல‌ட்சுமி கூட‌ காத‌லோ அல்ல‌து ஏதோ ஒரு உற‌வு இருந்து இருக்கு.............நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே...........ஆனால் அண்ண‌ன் சீமான் அவ‌ரின் திரும‌ண‌த்தை வெளிப்ப‌டையாய் தான் செய்தார் அப்போது ஒரு பிர‌ச்ச‌னையும் வ‌ர‌ வில்லை அர‌சிய‌லில் வ‌ள‌ந்து வ‌ரும் போது அந்த‌ பெண்ண‌ திராவிட‌ கும்ப‌ல் ஊட‌க‌ம் முன்னாள் பேச‌ விடுவ‌து ம‌னித‌ குல‌த்துக்கு அழ‌கில்லை................. சீமான் த‌வ‌று செய்தால் அதை நான் ப‌ல‌ இட‌த்தில் சுட்டி காட்டி இருக்கிறேன்.............எங்க‌ட‌ த‌மிழீழ‌ தேசிய‌ த‌லைவ‌ர் எப்ப‌டி ப‌ட்ட‌வ‌ர் என்று எம‌க்கு ந‌ன்றாக‌வே தெரியுன் அண்ண‌ன் சீமான் ஒரு ப‌டி மேல‌ போய் அள‌வுக்கு அதிக‌மாய் த‌லைவ‌ரை புக‌ழ் பாட‌ தொட‌ங்கி விட்டார்.............ஆர‌ம்ப‌ கால‌த்தில் அதிக‌ம் பேசினார் அப்போது எம‌க்கே தெரிந்த‌து அது உண்மை இல்லை என்று............இப்போது சீமானின் பேச்சில் ப‌ல‌ மாற்ற‌ம் தெரியுது.................நிஜ‌த்தில் ந‌ல்ல‌வ‌ர் அன்பான‌வ‌ர் ஆனால் அவ‌ரை சுற்றி ப‌ல‌ துரோகிய‌ல் இருக்கின‌ம் அவ‌ருட‌ன் க‌தைப்ப‌தை ரெக்கோட் ப‌ண்ணி  விஜேப்பியின் ஆட்க‌ளுக்கு போட்டு காட்டின‌து அப்ப‌டி க‌ட்சிக்குள் இருந்த‌வையே  ப‌ல‌ துரோக‌ங்க‌ள் செய்த‌வை உற‌வே 2009க்கு முத‌ல் த‌மிழீழ‌த்தில் ஒரு மாத்தையா ஒரு க‌ருணா.............த‌மிழ் நாட்டில் ப‌ல‌ நூறு க‌ருணா ப‌ல‌ நூறு மாத்தையா இதை எல்லாம் தாண்டி க‌ன‌த்த‌ வ‌லியோடு தான் க‌ட்சியை கொண்டு ந‌ட‌த்துகிறார் த‌ன‌து ம‌னைவிக்கு இந்த‌ தேர்த‌லில் சீட் த‌ர‌வில்லை என்று க‌ட்சியை விட்டு போன‌ ந‌ப‌ரும் இருக்கின‌ம்............... உங்க‌ட‌ பாதுகாப்புக்கு சொல்லுறேன் உற‌வே த‌மிழ் நாட்டுக்கு போகும் நிலை வ‌ந்தால் நாம் த‌மிழ‌ர் க‌ட்சியில் ப‌ய‌ணிக்கும் இள‌ம் பெடிய‌ங்க‌ள் கூட‌ அண்ண‌ன் சீமானை ப‌ற்றி யாழில் எழுதுவ‌து போல் நேரில் த‌ப்பா க‌தைச்சு போடாதைங்கோ.............நீயார‌ட‌ எங்க‌ள் அண்ண‌ன‌ விம‌ர்சிக்க‌ என்று ச‌ண்டைக்கும் வ‌ந்து விடுவின‌ம்.............இப்ப‌டி ப‌ல‌ ச‌ம்ப‌வ‌ங்க‌ள் இருக்கு சொல்ல‌.............இது யாழ்க‌ள் ஆனால் இதே முக‌ நூல் என்றால் நாம் த‌மிழ‌ர் க‌ட்சி ஜ‌ரிம் சீமான சீண்டி பாப்ப‌வ‌ர்க‌ளுக்கு அவேன்ட‌ பானியில் ப‌தில் அளிப்பார்க‌ள்...............6வ‌ருட‌த்துக்கு முத‌ல் என‌க்கும் திமுக்கா சொம்புக்கும் வாத‌ம் ஏற்ப‌ட்டு க‌ட‌சியில் எப்ப‌டி போய் முடிந்த‌து என்று என‌க்கு ம‌ட்டும் தான் தெரியும்............யாழில் இருக்கும் மூத்த‌வையின் சொல்லை கேட்டு யாழில் நான் இப்ப‌ யார் கூட‌வும் முர‌ன் ப‌டுவ‌தில்லை..........இது தான் கால‌ நீர் ஓட்ட‌த்தில் பெரிய‌வ‌ர்க‌ள் சொல்ல‌  என்னை நானே மாற்றி கொண்டேன்.............. வெற்றியோ தோல்வியே த‌னித்து போட்டி யார் கூட‌வும் கூட்ட‌னி இல்லை அதுக்காக‌ தான் பெரும்பாலான‌ த‌மிழ‌க‌ இளைஞ்ர்க‌ள் வ‌ய‌தான‌வ‌ர்க‌ள் அண்ண‌ன் சீமானை தொட‌ர்ந்து ஆத‌ரிக்கின‌ம்🙏🥰.................
    • மக்கள் ஏமாற்றப்படுக்கின்றார்கள் தான் ஆனால் நூறுவீதம் இல்லை.. அதே நேரம் தமிழ் அரசியல்வாதிகளும் சரியானவர்கள் இல்லை. இருப்பினும் புலம்பெயர்ந்த பலரும் அங்கிருப்பவர்களும் தமிழர் உரிமைகள் பற்றி விவாதிக்கொண்டிருக்கும் வேளையில்...... தமிழர் பகுதிகளில் ஆடம்பர உல்லாச விடுதிகளும், புலம்பெயர் மக்களின் கோடிக்கணக்கான செலவுடன் மாட மாளிகைகளும் திறந்த வெளி  அட்டகாச நிகழ்வுகளும் புலம்பெயர் மக்களின் கோடை கால கொண்டாட்ட சுற்றுலாக்களும்..... தமிழர்களுக்கு பிரச்சனை ஏதுமில்லை என்பதை சொல்லி நிற்கின்றது.   போர் மூலம் வந்த  வறுமையால் வாடுபவர்களை இனப்பிரச்சனை அட்டவணைக்குள் சேர்க்க உடன்படுமா அந்த சிங்கள இனவாத அரசுகள்? புலம்பெயர் தமிழர்களே ஊரில் வீடுகட்டிக்கொண்டு  பிற்காலத்தில்  நிம்மதியாக வாழலாம் எனும் போது.....?!  
    • சீமானுக்காக எதையும் தாங்குவார்கள் புலன்பெயர்ந்த ஈழதமிழர்கள். தேர்தலில் சீமான் வெற்றிபெறவில்லை என்றால் மெசின் மோசடி , சீமான் ஆங்கில மோகத்தால் மகனுக்கு தமிழ்நாட்டிலேயே ஆங்கில வழிக் கல்வி கற்ப்பிப்பது தமிழ் பள்ளிகள் சரியில்லை. தமிழ் தமிழ் என்று முழங்குவது அவரது அரசியல் பிழைப்பு.  இவர்  தமிழ்நாட்டு முதல் அமைச்சராக வந்தால் அரசுபாடசாலைகளிலும் தமிழை தூக்கி எறிந்துவிட்டு ஆங்கிலம் மூலம் கல்வி கற்பிப்பார் தமிழ் செய்த அதிஷ்டம் அவர் முதல் அமைச்சராகும் வாய்ப்பே  இல்லை
    • அங்கு ஒரு வீட்டில் கஞ்சா புகைத்திருக்கின்றனர். பின்னர், முதலாவதாக, உடனிருந்து புகைத்த நண்பரே குத்திக் கொல்லப்பட்டிருக்கின்றார். குற்றவாளி என்று கைது செய்யப்பட்டவர் கஞ்சாவில் ஒரு வலுவான போதைப் பொருளை தன் நண்பர் கலந்து விட்டதாக இப்பொழுது சொல்லுகின்றார். எதைக் கலந்தாலும், எதைப் புகைத்தாலும், ஓட ஓட சக மனிதர்களை கத்தியால் குத்தும் அளவிற்கு நிலை தடுமாறுமா.....😢 Following his arrest in the frenzied attack, the suspect, Christian Soto, waived his Miranda rights to remain silent and told investigators he was high on marijuana he claimed was given to him by one of the slaying victims that he believed was laced with a strong narcotic, Winnebago County State's Attorney J. Hanley said at a news conference Thursday. https://abcnews.go.com/US/deadly-rockford-illinois-stabbing-spree/story?id=108605783    
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.