Jump to content

கட்டுக்கதைகளுக்கு அதிரடி கட்டுப்பாடு கொண்டு வருகிறது ஃபேஸ்புக்! #FaceBookUpdate


Recommended Posts

கட்டுக்கதைகளுக்கு அதிரடி கட்டுப்பாடு கொண்டு வருகிறது ஃபேஸ்புக்! #FaceBookUpdate

ஃபேஸ்புக்

ஃபேக் ஐடிகள் மட்டுமல்ல ஃபேக் செய்திகளும், கதைகளும் ஃபேஸ்புக்கில் மிகப்பிரபலம். ஏதாவதொரு கடவுள் போட்டோவை போட்டு, இதைப் பார்த்த மாத்திரத்தில்  ஷேர் செய்யுங்கள், உடனே ஷேர் செய்தால் நல்லது நடக்கும். இல்லையெனில் சாமி கண்ணைக் குத்தும் ரக  போஸ்ட்களை ஃபேஸ்புக்கில் இருக்கும் அனைவருமே கடந்து  தான் வந்திருக்கிறோம். சமீபத்தில் கூட அம்புஜா சிமி என ஒரு பேக் ஐடிக்கு  லட்சக்கணக்கான ஃபாலோயர்கள் இருந்ததும், அது முடக்கப்பட்ட செய்தி வந்தவுடன் சிமி மீம்ஸ் வைரல் ஆனது நினைவிருக்கலாம். 

ஃபேக் ஐடி, ஃபேக் நியூஸ், கட்டுக்கதைகள் போன்றவற்றை பலரும் நம்பிவிடுகிறார்கள், இதனால்  பொய்யான தகவல்கள் எளிதில் பரப்பப்பட்டு வருகின்றன. 

கடந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் ஃபேஸ்புக்கில் உலவிய பல்வேறு கட்டுக்கதைகள் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியதாக அமெரிக்கர்கள் குற்றச்சாட்டுகளை வைத்தனர். இதையடுத்து கடந்த நவம்பர் 19-ம் தேதி, கட்டுக்கதைகளை, பொய்ச் செய்திகளை கட்டுப்படுத்த ஃபேஸ்புக் உரிய நடவடிக்கைகளை  எடுக்கும் என விளக்கி மிக நீண்ட ஒரு பதிவை எழுதியிருந்தார் பேஸ்புக் நிறுவினர் மார்க் சக்கர்பெர்க் இந்நிலையில் தற்போது கட்டுக்கதைகளுக்கு எப்படி கட்டுப்பாடு கொண்டு வரப் படவுள்ளது என்ற செயல்முறையை விவரித்துள்ளது ஃபேஸ்புக். 

 "மக்களின் ஊடகம் ஃபேஸ்புக். மக்கள் அங்கே எதை பற்றி வேண்டுமானாலும் பேசலாம், ஆனால் அவர்கள் எல்லோரும் சொல்லும் தகவல்கள், பகிரும் தகவல்கள் நூறு  சதவீதம் உண்மையாகத்தான் இருக்கும் என சொல்ல முடியாது. எது சரி, எது தவறு என எப்போதும் நாட்டாமை வேலை பார்த்துக் கொண்டிருப்பது  சாத்தியமற்றது. எனினும் இது போன்ற தவறான செய்திகளைக் கட்டுப்படுத்த சில நடவடிக்கைகளை எடுத்துக் கொண்டிருக்கிறோம். அதில் முதற்கட்டமாக மக்களே எது கட்டுக்கதை, பொய்ச் செய்திகள் என ஃபேஸ்புக்குக்கு தெரிவிக்கும் வகையில்  செட்டிங்களில் சில ஆப்ஷன்களை சேர்த்திருக்கிறோம். 

உங்களுக்கு ஃபேஸ்புக்கில் உள்ள ஏதாவதொரு  நிலைத்தகவல் (POST) கட்டுக்கதை வகையறா என தெரிந்தால், அந்த நிலைத்தகவலின் வலது மூலையில் கிளிக் செய்து ரிப்போர்ட் போஸ்ட் என்பதை கிளிக் செய்யவும். இனிமேல் அதில் IT'S A FAKE NEWS STORY என்ற ஆப்ஷன் சேர்க்கப்படும். அதை கிளிக் செய்யவும். அதற்கடுத்ததாக என்ன காரணம் என  தெரிவிக்கவும். 

ஃபேஸ்புக்

பேஸ்புக்கில் இவ்வாறு ரிப்போர்ட் செய்யப்படும் நிலைத்தகவல்கள்/போட்டோ/வீடியோ  போன்றவற்றின் நம்பகத்தன்மையை சோதிக்க மூன்றாம் நபர் பரிசோதகர்களுடன்  ஒரு ப்ரோகிராம் செய்யப்பட்டிருக்கிறது. ஏபிசி நியூஸ், ஆப்பிரிக்கா செக் போன்ற பல நிறுவனங்கள் ஒப்பந்தம்  செய்யப்பட்டு வருகின்றன. இந்த நிறுவனங்களிடம் நீங்கள் ரிப்போர்ட் செய்த தகவல் ஒப்படைக்கப்படும். அவர்கள் அதனை பரிசோதித்து அந்த தகவல்கள் சரியா, தவறா, கட்டுக்கதையா, சர்ச்சைக்குரியதா என ஆராய்ந்து  ஃபேஸ்புக்குக்கு தகவல் தெரிவிப்பார்கள். 

ஃபேஸ்புக்

சர்ச்சைக்குரியது என முடிவு செய்யப்பட்டால், பேஸ்புக்  கடைபிடிக்கும் ரேங்கிங் அடிப்படையில்  அந்த போஸ்ட் அதன் பிறகு நியூஸ் ஃபீடில் முன்னணியில் வராது. இதனால் அந்த  போஸ்ட் பேஸ்புக்கில் தான் இருக்கும், ஆனால் பலரைச் சென்றடையாது என்ற நிலைமை ஏற்படும். ஒருவேளை யாராவது  அந்த குறிப்பிட்ட போஸ்ட்டை  ஷேர் செய்ய வேண்டும் என விரும்பினால், அவருக்கு "இந்த போஸ்ட் மூன்றாவது பார்ட்டியால்  சர்ச்சைக்குரியது என குறிப்பிடப்பட்டிருக்கிறது" என அலர்ட் தரப்படும். அதன் பிறகும் அவர் அந்த போஸ்ட்டை  ஷேர் செய்ய விரும்பினால் தாராளமாக  ஷேர் செய்ய முடியும். 

ஃபேஸ்புக்

ஒருமுறை  சர்ச்சைக்குரிய போஸ்ட் என அடையாளப்படுத்தப்பட்டு விட்டால், அதன் பிறகு அந்த போஸ்டை பேஸ்புக்கில் விளம்பரம் கொடுத்து அதிக பேரை ரீச் செய்ய வைக்கவும் முடியாது. ஃபேஸ்புக்குக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டாலும் பரவாயில்லை என்ற நோக்கில் இந்த முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.  நிறைய மோசடி செய்தி நிறுவனங்கள் இதுவரை தவறான  தகவல்களை பேஸ்புக்கில் தந்து, அதன் மூலம் அவர்களது இணையதளத்திற்கு வாடிக்கையாளர்களை அழைத்து  பணம் சம்பாதிக்கிறார்கள். இனிமேல் இதுவும் கட்டுப்படுத்தப்படும்.

பேஸ்புக்கில் உங்களுக்கு பகிரப்படும் தகவல்கள் உண்மையானதாக, பயனுள்ளதாக இருக்க வேண்டும் என்பதே ஃபேஸ்புக்கின் எண்ணம், அதற்கு இது போன்ற பல மாற்றங்களைச் செய்யப் போகிறோம், அதன் முதல் படி தான் இது. இனிமேலும் அதிரடிகள் தொடரும்"  என  அறிவித்திருக்கிறது ஃபேஸ்புக்

http://www.vikatan.com/news/miscellaneous/75161-facebook-brings-strong-limitations-for-hoaxes-and-fake-news-in-newsfeed.art

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.