Jump to content

என் உலகம்: கடலோரத்துக் கதைகள்


Recommended Posts

என் உலகம்: கடலோரத்துக் கதைகள்

 

 
meeran_3105036f.jpg
 
 
 

இன்றைய கன்னியாகுமரி மாவட்டம் தேங்காய்ப் பட்டணம் எங்களது சொந்த ஊர். 1944-ம் ஆண்டு பிறந்தேன் என்பது பதிவேடுகளில் உள்ளது. ஆனால், நிச்சயமாக அதற்கு ஓரிரு ஆண்டுகள் முன்பு பிறந் திருப்பேன். என் தகப்பனார் அப்துல் காதர்; தாயார் பாத்திமா. இருவருக்கும் எழுதப் படிக்கத் தெரியாது. தகப்பனாருக்குக் கருவாடு வியாபாரம். இங்கிருந்து இலங்கைக்குக் கருவாடு ஏற்றுமதி செய்துவந்தார். என் தகப்பனாருக்கு எங்களைப் படிக்கவைக்க வேண்டும் என்ற ஆர்வமெல்லாம் கிடையாது. ஆங்கிலக் கல்வி இஸ்லாத்தில் விலக்கப்பட்டது என்ற நம்பிக்கை அப்போது பரவலாக இருந்தது. அதனால் நாங்கள் சகோதரர்கள் பள்ளிக்குப் போய்ப் படிப்பது எங்கள் தகப்பனாருக்குப் பிடிக்கவில்லை. இந்த ஆங்கிலக் கல்வி எதிர்ப்பை எனது ‘ஒரு கடலோர கிராமத்தின் கதை’ நாவலில் சொல்லியிருப்பேன்.

எங்கள் தகப்பனாருக்கு இரு மனைவிகள். மூத்த மனைவிக்குக் குழந்தைகள் இல்லை என்பதால் என் தாயாரை இரண்டாவதாகத் திருமணம் செய்து கொண்டார். எங்கள் பெரியம்மா எங்கள் மேல் மிகுந்த அன்பு கொண்டவர். அவரிடம் போய் பள்ளிக்குண்டான கட்டணத்தைப் பெற்றுக்கொள்வோம். அந்த ஒண்ணேகால் ரூபாயையும் நாங்கள் கேட்டதற்காகத் தருவாரே தவிர பிள்ளைகள் படிக்க வேண்டும் என்ற அக்கறையில் இல்லை. இந்தச் சூழலில்தான் நாங்கள் சகோதர, சகோதரிகள் வளர்ந்தோம்.

அந்தக் காலத்தில் எஸ்.எஸ்.எல்.சி சான்றிதழ் வாங்குவதற்குத் தகப்ப னாரின் கையெழுத்து அவசியம். நான் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் தகுதி யானதும் அதற்கான சான்றிதழ் வாங்கு வதற்கு என் தகப்பனாரை அழைத்து வர வேண்டும் என்று பள்ளியில் சொன் னார்கள். என்னுடைய தகப்பனாருக்கு நாங்கள் படிப்பதிலேயே இஷ்ட மில்லையே, எப்படிச் சான்றிதழில் கையெப்பமிட வருவார், ஆனால் சான்றிதழும் வாங்க வேண்டும், என்ன செய்ய? அந்தக் காலத்தில் ராமநாதபுரத்திலிருந்து ஒரு சங்கு வியாபாரி எங்கள் ஊருக்கு வருவார். எனக்கு அவருடன் நல்ல பழக்கம்.

என் பள்ளியில் உள்ளவர்களுக்கு என் தகப்பனாரைத் தெரியாது. அதனால் சங்கு வியாபாரிக்கு என் தகப்பனார் வேஷம் கட்டிவிட்டேன். எஸ்.எஸ்.எல்.சி. சான்றிதழில் கையொப்பமிட அவரைக் கூட்டிச் சென்றேன். ஆனால், மாண வர்கள் விளையாட்டாகக் காட்டிக் கொடுத்துவிட்டார்கள். அதற்குப் பிறகு ஊராரின் நிர்ப்பந்தத்தின் பேரில் என் தகப்பனார் விருப்பமில்லாமல் கையெழுத்துப் போட்டார்.

என் தகப்பனாருக்கு நாங்கள் பள்ளி யில் படிப்பதில் இஷ்டமில்லையே தவிர எங்களுடன் பிரியமாக இருந்தார். வாய் நிறைய வெற்றிலை போட்டுக்கொண்டு எங்களுக்குக் கதைகள் சொல்வார். அவரது வேலைகளுக்கு இடையில் எங்களுடன் கதைகள் பேசுவதற்கும் நேரம் ஒதுக்குவார். நாட்டுப்புறக் கதை கள், ஊரிலுள்ள முதலாளிகளின் அடா வடித்தனங்கள் இவற்றையெல்லாம் நடிப்புடன் சொல்லிக் காண்பிப்பார். நாங்கள் வட்டமாக உட்கார்ந்து கேட் போம். என் தகப்பனார் சிறந்த ஒரு கதை சொல்லி. கல்வி அறிவு இல்லையா கிலும் இவ்வளவு பரந்த அறிவு எப்படிக் கிடைத்தது, என்று நாங்கள் சகோதர, சகோதரிகள் அடிக்கடி வியப்பதுண்டு.

நான் எழுத ஆரம்பித்ததற்கு என் தகப்பனாரிடம் கதைகள் கேட்டதுதான் காரணம். கருவாட்டு ஏற்றுமதியில் என் தகப்பனாருக்குப் பெரிய இழப்பு ஏற்பட்டது. எங்கள் சரக்குடன் சென்ற கப்பல் கவிழும் நிலைக்குச் சென்ற போது கப்பலில் இருந்த சரக்குகளை யெல்லாம் கடலுக்குள் எறிந்துவிட்டனர். அவற்றில் எங்கள் சரக்குகளும் அடக் கம். அதில் ஏற்பட்ட இழப்பு எங்கள் குடும்பத்தைத் துண்டுதுண்டாக்கி விட்டது. இதை என் தகப்பனார் கதை யாகச் சொல்லி, நான் எனது ‘துறை முகம்’ நாவலில் எழுதியிருக்கிறேன்.

என் தகப்பனாரின் கதைகளை எழுதியிருக்கிறேனே தவிர அவருக்கு நான் கதைகள் எழுதுவதும் பிடிக்காது. “காண்டம் எழுதுறான்” எனச் சொல் லியபடி காகிதங்களைக் கிழித்துப் போட்டுவிடுவார். என் சகோதர, சகோதரிகளுக்கும் நான் எழுதுவதைக் குறித்த அறிவோ ஆர்வமோ இருந்த தில்லை. எனக்கு முதலில் மலையாளப் பத்திரிகையான சந்திரிகாவில் வேலை கிடைத்தது. ஆனால், என் மூத்த அண்ணனுக்கு அதில் விருப்பம் இல்லை. சென்னையில் ஒரு எண் ணெய்க் கடை வேலைக்கு என்னை அனுப்பிவைத்தார். அங்கு வேலை பார்த்தபோது எனக்கு சினிமா மீது ஆர்வம் வந்தது.

அந்த அடிப்படையில் கடக்காவூர் தங்கப்பன் என்னும் மலையாள தயாரிப்பாளர் ஒருவர் படம் எடுப்பதற்குப் பணம் உதவினேன். பிரபல மலையாள நடிகர் மதுவும் சாரதாவும் இணைந்து நடித்த அந்தப் படமும் வெளிவந்தது. ஆனால், என் கடை முதலாளி என் சினிமா ஆர்வத்தை என் அண்ணனிடம் தெரிவித்துவிட்டார். “கலையும் வியாபாரமும் பொருந்திப் போகாது. ஒன்று வியாபாரியாக இரு. இல்லையென்றால் கலைஞனாக இரு” என்று எனக்கு எழுதினார். இந்த அண்ணன் ஒரு ஓவியர். நாகர்கோவில் இந்துக் கல்லூரியின் சின்னம் இவர் வரைந்ததுதான்.

எனக்கு சாகித்திய அகாடமி விருது கிடைத்தபோதும்கூட என் சகோதர, சகோதரிகள் யாரும் எனக்கு வாழ்த்துச் சொல்லவும் இல்லை; சந்தோஷப்பட்டதும் இல்லை. ஒருவேளை இந்த சாகித்திய அகாடமி விருது பற்றி அவர்களுக்குத் தெரியாதிருந்திருக்கலாம்.

நான் இப்போது திருநெல்வேலி யில் வியாபாரத்துக்காக வந்து தங்கிவிட்டேன். என் மனைவியின் பெயர் ஜெலீலா. எங்களுக்கு சமீம் அகமது, மிர்சாத் அகமது என்று இரண்டு மகன்கள். இருவரும் அரபு நாட்டில் ஐடி துறையில் பணியாற்றிவருகிறார்கள். என் பிள்ளைகள் இருவரும் வாசிக்கும் பழக்கம் உடையவர்கள்தான். இரவு நேரங்களில் நான் கதைகள் எழுதும்போது என் மனைவி வாஞ்சை யுடன் எனக்குத் தேநீர் வைத்துத் தருவாள்.

வியாபாரம், எழுத்து என்று நான் இருந்தபோது, என் பிள்ளைகளைக் கவனித்துக்கொண் டாள். மலையாளம் வாசிக்கத் தெரிந்தவள். என்னுடைய கதைகளை அவ்வப்போது படிக்கக்கூடியவள். ஆனால், அபிப்ராயங்கள் எதுவும் பெரிதாகச் சொல்ல மாட்டாள். நான் பிறருடைய அபிப்ராயங்களைக் கேட்கக் கூடியவனும் இல்லை.

(தொடரும்)
- தோப்பில் முஹம்மது மீரான்,
மூத்த தமிழ் எழுத்தாளர்.

http://tamil.thehindu.com/general/literature/என்-உலகம்-கடலோரத்துக்-கதைகள்/article9432176.ece?homepage=true&theme=true

Link to comment
Share on other sites

என் உலகம்: என் நண்பர்கள்

தோப்பில் முஹம்மது மீரான்

 

 
 
ஓவியம்: முத்து
ஓவியம்: முத்து
 
 

என் முதல் நாவல் ‘ஒரு கடலோரக் கிராமத்தின் கதை’ 1988-ல் வெளிவந்தது. அதுவரை தமிழ்ப் படைப்புகள் எதைப் பற்றியும் எனக்குத் தெரியாது; வாசித்ததில்லை. மலையாளம் மூலமாகத்தான் எழுதினேன். எனது நாவலை கேரளப் பல்கலைக்கழகத்தில் தமிழ் முதுநிலைப் பாடத்திட்டத்தில் சேர்த்திருந்தார்கள். ஒரு சமயம் திருவனந்தபுரம் போயிருந்தபோது, கேரளப் பல்கலைக்கழகம் சென்று தமிழ்த் துறைத் தலைவரான பேராசிரியர் கி. நாச்சிமுத்துவைச் சந்தித்தேன். அவர் தமிழ்ப் படைப்புகள் பற்றி என்னிடம் பேசினார். எனது பதிலை வைத்து நான் தமிழில் எதுவும் படித்ததில்லை என்பதைப் புரிந்துகொண்டார். அன்று ‘ஒரு புளிய மரத்தின் கதை’, ‘கோபல்ல கிராமம்’ ஆகிய நாவல்களைப் படிக்கத் தந்தார். நான் முதன்முதலில் தமிழ்ப் படைப்புகள் வாசித்தது அப்போதுதான். அவர் மூலமாகத்தான் ஆ. மாதவன் எனும் தமிழ் எழுத்தாளர் திருவனந்தபுரத்தில் இருக்கிறார் என்பதைத் தெரிந்துகொண்டேன்.

ஆ. மாதவனைச் சென்று பார்த்தேன். அவரது ‘கடைத்தெருக் கதைகள்’ புத்தகத்தை வாசிக்கத் தந்தார். முதன்முதலில் ஒரு தமிழ் எழுத்தாளரின் பழக்கம் அப்போதுதான் எனக்கு ஏற்பட்டது.

அதன் பிறகு வியாபார விஷயமாகத் திருவனந்தபுரம் செல்லும்போதெல்லாம் ‘செல்வி ஸ்டோர்’ சென்று மாதவனுடன் பேசிக்கொண்டிருப்பேன். அவர்தான் பல தமிழ்ப் படைப்புகளை அறிமுகப்படுத் திவைத்தார். அவர் மூலமாகத்தான் சுந்தர ராமசாமியின் நட்பு கிடைத்தது.

frds_3108331a.jpg

சுந்தர ராமசாமியை நாகர்கோவிலில் சென்று சந்தித்தேன். அவரிடம் எனது ‘ஒரு கடலோர கிராமத்தின் கதை’ நாவலைக் கொடுத்தேன். நாவலைப் பற்றிய அவரது கருத்தை எதிர்பார்த்திருந்தேன். ஆனால், அவர் மெளனமாகவே இருந்தார். அது நடந்து ஒரு வருடத்துக்குப் பிறகு அவரிடமிருந்து ஒரு கடிதம் வந்தது. அதில் நாவலின் ஐந்து படிகளை நெய்தல் கிருஷ்ணனுக்கு அனுப்பிவைக்கவும் என எழுதியிருந்தார். நெய்தல் அமைப்பு ஏற்பாடு செய்திருந்த அந்தக் கூட்டத்துக்கு தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் வ.ஐ. சுப்பிரமணியம் தலைமை தாங்கினார். எனக்கு எதிர்பாராத சந்தோஷமாக சுந்தர ராமசாமியே அந்த நாவலைப் பாராட்டிப் பேசினார். எனது நாவலுக்குக் கிடைத்த முதல் பாராட்டு அதுதான். அதன் பிறகு எனக்கும் சுந்தர ராமசாமிக்குமான நட்பு நெருக்கமானது. எனது ‘கூனன் தோப்பு’ நாவலுக்கு அவரிடம் முன்னுரை எழுதிக் கேட்டேன். முன்னுரை எழுதியதோடு அல்லாமல் நாவலில் உள்ள பிழைகளைத் திருத்தவும் உதவினார். இலக்கியம் தொடர்பாகப் பல அறிவுரைகளை அவரிடம் கேட்டுக்கொள்வேன். அவர் போட்டுத்தந்த தடத்தில் இன்றுவரை பயணித்துக்கொண்டிருக்கிறேன்.

கி. ராஜநாராயணனுடனும் எனக்கு நெருங்கிய நட்புண்டு. அவரைச் சந்திப்பதற்காகவே பாண்டிச்சேரி சென்றேன். இன்றுவரை அவருடனான நட்பு தொடர்கிறது. அவரும் அவரது மனைவி குணவதி அம்மாளும் எங்கள் பிரியத்துக்குரிய குடும்ப நண்பர்கள். எனக்கு சாகித்ய அகாடமி விருது கிடைக்க ஒரு வழியில் கி.ரா. முக்கியக் காரணம்.

தி.க. சிவசங்கரன் பணி ஓய்வுபெற்று திருநெல்வேலிக்கு வந்த பிறகுதான் அவர் எனக்குப் பழக்கம். தினசரி அவரைச் சென்று சந்திப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தேன். நள்ளிரவு 12 மணிக்கெல்லாம் அவர் வீட்டுக்குப் போயிருக்கிறேன். அவர் உறங்கிய பிறகும் அவர் வீட்டுக் கதவைத் தட்டியிருக்கிறேன். எவ்வளவு உறக்கத்தில் இருந்தாலும் ‘மீரான்’ என்ற சப்தத்தைக் கேட்டு எழுந்து வந்துவிடுவார் அவர். அவரோடு பேசிக்கொண்டிருந்த ஒரு நள்ளிரவு எனக்குத் தெளிவாக நினைவிருக்கிறது. அன்று தி.க.சி.க்கு ஒரு அழைப்பு வந்தது. இந்தச் சமயத்தில் யார் அழைக்கிறார்கள் என நினைத்தேன். ஆனால், அவர் சாதாரணமாகத்தான் பேசினார். பிறகு சந்தோஷப்பட்டதுபோலத் தெரிந்தது. “அவர் பக்கத்தில்தான் இருக்கிறார். நீங்களே பேசுங்கள்” என்று சொல்லிவிட்டுத் தொலை பேசியை என்னிடம் கொடுத்தார். மறுமுனையில் பேசியவர், “உங் களுக்கு சாகித்ய அகாடமி கிடைத்திருக்கிறது. டிவியில் சொன்னார்கள்” என்றார். அதைக் கேட்டதும் உணர்ச்சி வசப்பட்டுப் போனேன். என்னுடன் பேசியவருக்கு நன்றி சொல்ல வில்லை. அவர் யார், பேரென்ன? என்று கூடக் கேட்க வில்லை. இன்றுவரை அவர் யாரெனத் தெரியாது. தி.க.சி.யை நினைக்கும்போதெல்லாம் எனக்கு இந்தச் சம்பவம் நினைவுக்கு வரும்.

தி.க.சி. எனக்கு நண்பரான பிறகு எனது எல்லா எழுத்துகளின் முதல் வாசகர் அவர்தான். அவற்றில் உள்ள பிழைகளைக் கவனம் எடுத்துத் திருத்தித் தருவார். அவர் எனக்குள் ஒரு பாகமாக இருந்தார். அவர் மறைந்தபோது என்னுடலில் ஒரு உறுப்பை இழந்ததுபோல் உணர்ந்தேன். நெல்லையில் பேரெடுத்துச் சொல்லக்கூடிய ஒரு நண்பர் கிருஷி என்று எல்லோராலும் அழைக்கப்படும் ராமகிருஷ்ணன். இவர்கள் தவிர இந்திரா பார்த்தசாரதி, வாஸந்தி ஆகியோருடனும் எனக்கு நெருங்கிய நட்புண்டு.

மலையாளத்தில் எனக்கு நண்பர்கள் பலருண்டு. குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய ஒருவர், மறைந்த மலையாள கரமனை ஜனார்த்தனன் நாயர். ‘எலிப்பத்தாயம்’ படம் மூலம் பெரும் புகழ்பெற்றவர். எனக்கு அவருக்கும் நெருங்கிய நட்பு இருந்தது. இங்கே திருநெல்வேலியில் வந்து பல நாட்கள் வந்து தங்கியிருக்கிறார். என்னுடைய ‘கூனன் தோப்பு’ நாவலை மலையாள வார இதழான ‘கலாகெளமுதி’யில் நேரடி யாகக் கொண்டுவரப் பெரும் முயற்சி எடுத்துக்கொண்டார். ஆனால், மதக் கலவரம் ஏற்படும் என மறுத்துவிட்டார்கள். அந்த நாவல் தமிழில் வெளிவந்த பிறகு மலையாளத்தில் மொழிபெயர்க்கப் பட்டபோது அதை இதே ‘கலாகெளமுதி’ வெளியிட்டது. அந்த மொழிபெயர்ப்புக்கு சாகித்ய அகாடமி விருதும் கிடைத்தது. இன்னும் நண்பர்கள் பலர் நினைவுக்கு வருகிறார்கள். ஆனால் எல்லோரையும் ஒரே கட்டுரைக்குள் அடக்க முடியவில்லை.

-(தொடரும்)

http://tamil.thehindu.com/general/literature/என்-உலகம்-என்-நண்பர்கள்/article9442706.ece?homepage=true&theme=true

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • திமுகாவில் ஒரு  it குருப் இருக்கு அதன் முக்கிய வேலையே திமுகாவை பற்றி இல்லாத பொல்லாத  செய்தியை சொல்லி dmk எதிரானவர்களின் நட்பை அனுதாபத்தை பெற்று கொள்வது .
    • தமிழ்மக்கள் 60 வருசத்துக்கு மேலாக தூர நோக்கோடுதான் வாக்களித்துக்கொண்டிருக்கிறார்கள். இதில் கொடுமை என்னவென்றால் அந்த தூர நோக்கு தனது எல்லையை தொடவில்லை. தொடுவதற்கான அறிகுறியும் கண்ணுக்கெட்டிய தூரம் வரை தெரியவில்லை.
    • பாவம் சிரித்திரன் சுந்தர்.  கல்லறைக்குள் இருந்து நெளிவார் என நினைக்கிறேன். 
    • இதென்ன பிரமாதம்…. நான் ஒரு முடா குடியன் எண்டும்…லண்டனில் ஹரோ பகுதி பப் ஒன்றில் வெறியில் அரசியல் கதைக்கும் ஆள் நான் தான் என்று சத்தியம் செய்ததோடு… அந்த நபரோடு டெலிபோன் தொடர்பை ஏற்படுத்தி…அவரும் ஓம் நான் கோஷாந்தான் என சொல்லி…. இவரை ஒரு சில மாதம் ஓட்டு…ஓட்டு எண்டு ஓட்டி🤣. இன்னும் அந்த மனுசன் இவரை உசுபேத்தி கொண்டு இருக்கோ தெரியாது🤣.   கேட்டா எண்ட சாதகம் மோகனிடம் இருக்கு, நிழலிட்ட இருக்கு என்பார். அந்த தகவலை அவர்கள் தந்தாலும்…அதை வச்சு நான் என்ன செய்யலாம்? கலியாணம் பேசவோ🤣
    • 28 MAR, 2024 | 11:04 AM   நியூமோனியாவினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த 59 வயதுடைய நபரொருவரின் சடலத்தில் மேற்கொள்ளப்பட்ட பிரேத பரிசோதனையின் போது அவரது நுரையீரலில் காணப்பட்ட பல் ஒன்று பலாங்கொடை ஆதார வைத்தியசாலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவர் பல வருட காலமாக நியூமோனியா மற்றும் சிறுநீரக நோயினால் பாதிக்கப்பட்டிருந்ததாக வைத்தியர்கள் தெரிவித்தனர். பலாங்கொடை ஆதார வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரியினால் மேற்கொள்ளப்பட்ட பிரேத பரிசோதனையின்போதே இந்த பல் கண்டுபிடிக்கப்பட்டதாக பலாங்கொடை ஆதார வைத்தியசாலையின் திடீர் மரண விசாரணை அதிகாரி பத்மேந்திர விஜேதிலக தெரிவித்தார். பலாங்கொடை - பின்னவலை பிரதேசத்தை சேர்ந்த எஸ் . கருணாரத்ன என்பவரின் நுரையீரலில் இருந்தே இவ்வாறு பல் கண்டுப்பிடிகக்ப்பட்டுள்ளது. இவர் மதுபானத்துக்கு அடியானவர் என்பதுடன் நியூமோனியா நோயினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளதாக வைத்தியர்கள் தெரிவித்தனர். சில வருடங்களுக்கு முன்னர் இவரது பல் ஒன்று உடைந்துள்ள நிலையில், அந்த பல் நுரையீரலில் சிக்கியிருக்கலாம் என வைத்தியர்கள் சந்தேகிக்கின்றனர். https://www.virakesari.lk/article/179883
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.