Jump to content

நொடி நேர அரை வட்டம் – கல்யாண்ஜி


Recommended Posts

Picture_446__73773_zoom

நான்கு ஆண்டுகளுக்கு முன்பாக  இணையத்தில் தொடர்ந்து எழுத வந்தபோது சக இணைய எழுத்தாளர்கள் மட்டுமே வழிகாட்ட இருந்தார்கள். இங்கே அப்போது பெரிய எழுத்தாளர்கள் என்று பார்த்தால் விரல் விட்டு எண்ணிவிடலாம். இணையம் ஒரு மிரட்டலாகவே பார்க்கப்பட்டது. அப்போது முகநூலில் தொடர்ந்து எழுதி வந்தவர்களில் முக்கியமானவர் அய்யா வண்ணதாசன். கவிதையைத் தேடி தொலைதூரம் போகிறவர் அல்ல அவர். அந்நிய மனிதனின் கைக்குட்டையை நுனி விரலால் பற்றி குப்பைத்தொட்டியில் போடுவோர் நிறைந்த உலகில், பார்க்க வந்த ஒருவர் மேசையில் மறந்து வைத்துவிட்ட கைக்குட்டை காற்று வாங்கும் சுதந்திரத்தை கவிதையாக்கி சேமிக்கிறார். குளத்தின் சலன வட்டங்களை சுருட்டிக் கூட்டில் வைத்து நகரும் நத்தையை நான் இன்னும் எத்தனை வருடங்கள் சென்று கற்பனை செய்ய முடியும் என்று தெரியவில்லை.

நொடி நேர அரைவட்டம் தொகுப்பைப் பார்த்ததும் வாங்காமல் நகர முடியவில்லை. அதில் உள்ள கவிதைகள் பலமுகநூலில் அவர் பக்கத்தில் படித்தவை என்றாலும் அவற்றைத் தொட்டுப் பார்க்கும் ஆசை புத்தகத்தை வாங்க வைத்தது. கையில் கனப்பது கல்யாண்ஜியின் மென்மை என்ற உணர்வு ஒரு மகிழ்ச்சியை அளித்தது. வன்மம் நிறைந்த இந்த உலகில் இப்படியான பஞ்சு மனசுக்காரர்கள் இன்னும் தேவை. அவர்கள் சில மனங்களைக் கொஞ்சமேனும் தளர்த்தி வைத்தால் கூடப் போதுமானது.

என் பாரம் என்ற கவிதையில் கல்யாண்ஜி இப்படி சொல்கிறார்,

“உன்னால் முடியாத பாரம்
என்னால் முடிந்ததாக
இருந்தால் சொல்.
உன்னுடைய பாரத்தை
என்னுடைய பாரத்துடன்
சுமந்து வருகிறேன் சிறிது தூரம்.
ஒன்று தெரிந்து கொள்.
உன்னை என் பாரம் சுமந்து
உதவக் கூறவே மாட்டேன்.
என் பாரம் எனக்கு முக்கியம்.
என் வாழ்வு பிரத்தியேகமாக
எனக்கு அளித்தது அது. ”

இதை இங்கு குறிப்பிடக் காரணம் ஒரு கவிதையில் நம் அனுபவம் தாண்டி, படிப்பவர்களுக்கு என்ன சொல்ல நினைக்கிறோம் என்பது கவிஞனின் மனநிலை பொறுத்து மாறுகிறது. கவிஞர்கள் பலரும் இந்த பாரம் சுமத்தலை முதுகு உடைந்து சீழ் பிடித்து மூக்கில் ரத்தம் சொட்டி புழுதியில் புரண்டு எழுதி விடுகிறார்கள். சோகத்தையும் இருளையும் வலியையும் வேதனையையும் அத்தனை கொண்டாட வேண்டுமா என்பது குறித்து எனக்கு கருத்து வேறுபாடுகள் உண்டு. இதனாலேயே கல்யாண்ஜியின் வெளிச்சமான நடை மீது ஒரு மயக்கம்.

கைதவறி உடைந்து விட்ட ஒரு தேநீர் குவளைக்காக அவர் கேட்கும் மன்னிப்பில் ஒரு குடும்பத்தின் அழகிய பின்னலை சொல்லி விடுகிறார். ஆற்றில் நின்று அசைந்து கொண்டே இருக்கும் படகு கவிதை முடிந்த பின்னும் நம் மனதில் அசைத்து கொண்டிருக்கிறது. கவிதையின் தலைப்பான நொடி நேர அரைவட்டம் கவிதை ஒரு மாஸ்டர் பீஸ். ஒரு நதியைப் பற்றி அத்தனை சுருக்கமாக ஆழமாக சொல்லிவிட நிறைய அனுபவம் வேண்டும். எழுத்திலும் வாழ்க்கையிலும்.

தான் உட்பட இணையத்தில் எழுதும் கவிஞர்களைக் கொண்டாடும் அவரது முன்னுரையில் கவிதைகளைப் பிரசுரிக்க சந்தை இல்லை என்பது குறித்த ஒரு வலி தெரிகிறது. ஒரு மூத்த கவிஞரின் இந்தச் சாடல் கவனிக்கப்படவேண்டிய ஒன்று. ஆனால் இந்த விவாதம் ஒருபுறம் இருக்க முன்னுரையில் என்னுடைய பெயரும் ஒரு ஓரத்தில் வந்திருப்பதை நான் தம்பட்டமிட்டுக் கொள்வதை கல்யாண்ஜி ஒரு புன்னகையுடன் ஏற்றுக்கொள்வார். ஏனென்றால் அதுதான் கல்யாண்ஜி.

-ஷான்.

http://www.kanavudesam.com/myblog/2015/02/09/நொடி-நேர-அரை-வட்டம்-கல்யா/

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
22 hours ago, Athavan CH said:

“உன்னால் முடியாத பாரம்
என்னால் முடிந்ததாக
இருந்தால் சொல்.
உன்னுடைய பாரத்தை
என்னுடைய பாரத்துடன்
சுமந்து வருகிறேன் சிறிது தூரம்.
ஒன்று தெரிந்து கொள்.
உன்னை என் பாரம் சுமந்து
உதவக் கூறவே மாட்டேன்.
என் பாரம் எனக்கு முக்கியம்.
என் வாழ்வு பிரத்தியேகமாக
எனக்கு அளித்தது அது. ”

இதை இங்கு குறிப்பிடக் காரணம் ஒரு கவிதையில் நம் அனுபவம் தாண்டி, படிப்பவர்களுக்கு என்ன சொல்ல நினைக்கிறோம் என்பது கவிஞனின் மனநிலை பொறுத்து மாறுகிறது. கவிஞர்கள் பலரும் இந்த பாரம் சுமத்தலை முதுகு உடைந்து சீழ் பிடித்து மூக்கில் ரத்தம் சொட்டி புழுதியில் புரண்டு எழுதி விடுகிறார்கள். சோகத்தையும் இருளையும் வலியையும் வேதனையையும் அத்தனை கொண்டாட வேண்டுமா என்பது குறித்து எனக்கு கருத்து வேறுபாடுகள் உண்டு. இதனாலேயே கல்யாண்ஜியின் வெளிச்சமான நடை மீது ஒரு மயக்கம்.

அருமையான கவிதை. ஆதவன். 
இதற்கு.... புங்கையூரானின், கருத்தை... எதிர்பார்க்கின்றேன். :)

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ஓம் அண்ணா நானும் இதை முதலில் நம்பவில்லை. உண்மை தானாம். வெளிநாட்டு இலங்கை தமிழர்கள் ஈரானுக்கு அளித்துவருகின்ற மிகபெரும் ஆதரவை கவனத்தில் எடுத்து அவர்களை சந்தோசபடுத்துவதற்காக இவ்வளவு பிரச்சனைகளை மேற்குலகும் இஸ்ரேலும் தந்துகொண்டிருக்கின்ற   நேரத்திலும் இலங்கை சென்று அணைக்கட்டை திறந்துவிட வேண்டும் என்று முடிவு எடுத்திருப்பார்.
    • சன்ரைசர்ஸ் அணி ப‌ல‌ ஜ‌பிஎல்ல‌ சுத‌ப்பின‌து.................இந்த‌ ஜ‌பிஎல்ல‌ ந‌ல்லா விளையாடுகின‌ம்.................வ‌ஸ்சின்ட‌ன் சுந்த‌ருக்கு ஒரு விளையாட்டில் விளையாட‌ வாய்ப்பு கிடைச்ச‌து அதுக்கு பிற‌க்கு கூப்பில‌ உக்க‌ரா வைச்சிட்டின‌ம்...................ந‌ல்ல‌ சுழ‌ல் ப‌ந்து வீச்சாள‌ர் ம‌ற்றும் ஒரு நாள் தொட‌ர் ரெஸ் விளையாட்டி நிலைத்து நின்று ஆட‌க் கூடிய‌ இள‌ம் வீர‌ர்🙏🥰....................................    
    • வ‌ங்கிளாதேஸ்ச‌ சொந்த‌ ம‌ண்ணில் வெல்வ‌து க‌டின‌ம் ஆனால் 20 ஓவ‌ர் தொட‌ரில் இல‌ங்கை வெற்றி ஒரு நாள் தொட‌ரில் வ‌ங்க‌ளாதேஸ் வெற்றி 5நாள் தொட‌ரில் இல‌ங்கை அமோக‌ வெற்றி....................... இப்ப‌ எல்லாம் 5 நாள் விளையாட்டு சீக்கிர‌ம் முடிந்து விடுது  விளையாட்டு ச‌ம‌ நிலையில் முடிய‌னும் என்றால் ம‌ழை வ‌ந்தால் தான் இல்லையேன் ஏதோ ஒரு அணி வெல்லும் இதே 20வ‌ருட‌த்தை முன்னோக்கி பார்த்தா நிறைய‌ விளையாட்டு ச‌ம‌ நிலையில் முடியும்.....................20 ஓவ‌ர் வ‌ந்தாப் பிற‌க்கு ஜ‌ந்து நாள் விளையாட்டை கூட‌ 20ஓவ‌ர் விளையாட்டு போல் அடிச்சு ஆடுகின‌ம்😁.................................
    • சுனில் ந‌ர‌ன் இந்த‌ ஜ‌பிஎல்ல‌ ந‌ல்லா விளையாடுகிறார்🙏🥰.......................
    • வெற்றி பெற‌ வாழ்த்துக்க‌ள் மிஸ்ர‌ர் க‌ட்ட‌த்துரை🙏🥰...........................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.