Jump to content

பாரட்ஸ் உணவுக் குழாய் (Barrett’s Esophagus) சிக்கலை தடுக்க இயலுமா?


Recommended Posts

பாரட்ஸ் உணவுக் குழாய் (Barrett’s Esophagus) சிக்கலை தடுக்க இயலுமா?

 

 

health_news_image_1.jpg

எம்மில் பலரும் தற்போது ஓய்வில்லாமலும், எப்போது வேண்டுமானாலும் பணியாற்றுவதால் அவர்களின் உணவு பழக்க வழக்கம் என்பது முறையாக இருப்பதில்லை. இதனால் அவர்களுக்கு ஆரோக்கிய கேடு ஏற்பட்டு, அதன் காரணமாக நெஞ்செரிச்சல் வந்துவிடுகிறது.

காரமான மற்றும் சூடான உணவுகள், துரித வகை உணவுகள், அளவுக்கு அதிகமாக ஒரே வேளையில் சாப்பிடுவது, சாப்பிட்டவுடன் போதிய ஓய்வு எடுத்துக் கொள்ளாமல் உறங்கச் செல்வது என பல காரணங்களால் நெஞ்செரிச்சல் ஏற்படுகிறது.

இவை ஏற்படுவதற்கு எம்முடைய இரைப்பையில் சுரக்கும் அமிலம் தான் காரணம். உணவுக் குழாயின் தசைகள் காரம் நிறைந்த, சூடான, குளிர்ச்சியான உணவுகளைத் தாங்குமே தவிர, அமிலத்தின் வீரியத்தைத் தாங்கும் சக்தி அவற்றுக்கு இல்லை. இந்த அமில அலைகள் அடிக்கடி மேலேறி வரும்போது, அங்குள்ள திசுப் படலத்தை அரித்துப் புண்ணாக்கிவிடும். இதனால், நெஞ்செரிச்சல் ஏற்படும். 

நெஞ்செரிச்சலை உடனடியாகக் குறைக்க இளநீர், புளிப்பில்லாத மோர், நுங்கு, குளிர்ந்த நீர், அப்பிள் ஆகியவற்றை சாப்பிடலாம். அதே போல அடிக்கடி நெஞ்செரிச்சல் ஏற்பட்டால், மருத்துவரின் ஆலோசனையைப் பெற வேண்டியது முக்கியம். ஏனெனில் சிலருக்கு மாரடைப்பு ஏற்படும்போது அதன் ஆரம்ப அறிகுறியாக, நெஞ்சில் எரிச்சல் மட்டுமே ஏற்படும். எண்டோஸ்கோபி இசிஜி போன்ற பரிசோதனையைச் செய்துகொண்டு, உறுதிப்படுத்திக் கொள்ளவேண்டும். ஒரு சிலருக்கு,  நீண்ட நாள் நெஞ்செரிச்சல் இருக்கும். அவர்களுக்கு உணவுக் குழாய் கீழ்முனைச் சுவரில், குடல் சுவரைப் போன்ற மாறுபாடு உண்டாகும். இதற்கு ‘பாரட்ஸ் உணவுக் குழாய்’ என மருத்துவர்கள் குறிப்பிடுவார்கள். இத்தகைய நிலை ஏற்பட்டவர்களில் நூற்றில் ஒருவருக்குப் புற்றுநோயாக மாறக்கூடிய வாய்ப்பு உள்ளது. அதனால் இதை அலட்சியம் செய்யாமல் பரிசோதனைச் செய்து கொண்டு உறுதிப்படுத்திக் கொள்ளவேண்டும். இதற்கு எண்டாஸ்கோப்பி மூலம் சிகிச்சையளித்து குணப்படுத்தலாம். இருந்தாலும் வெகு எளிதில் இத்தகைய பாதிப்பினை கண்டறிந்து சிகிச்சைப் பெற்று கொள்ளவேண்டும்.

 

டொக்டர் K.கணேசன்

தொகுப்பு அனுஷா.

தகவல் : சென்னை அலுவலகம்

http://www.virakesari.lk/article/14605

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.