Jump to content

டொமினிக்


Recommended Posts

டொமினிக்

 

சிறுகதை: பவாசெல்லதுரை, ஓவியங்கள்: ஸ்யாம்நட்சத்திர எழுத்தாளர்களின் சிறுகதை அணிவகுப்பு

 

p78a.jpg

ரண்டாம் போகம் நெல் விளைந்து முற்றி, நிலம் பொன்னிறமாக உருமாறியிருந்தது. பார்க்கிற எவரையும் வசீகரிக்கும் அழகு. தன் அழகில் தானே பெருமிதம்கொள்ளும் தருணம், அறுவடைக்குக் கொஞ்சம் முந்தைய நாட்களில்தான் ஒரு வயலுக்கு வாய்க்கிறது.

வழக்கத்தைவிட இன்று அதிகாலை விஜயத்தில் எனக்கு நிதானம் கூடியிருந்தது. வரப்புகளில் பனியில் நனைந்த விதவிதமான வண்ணங்களில் புடவைகள். தூரத்தில் இருந்து பார்ப்பவர்களுக்கு அவை வண்ணக்கோடுகள்.

கூர்ந்து கவனிக்கிறேன். எல்லா புடவைகளின் நுனியும் நெல்வயலின் ஒரு மையத்தில் குவிந்திருக்கிறது. இந்தக் கனவின் விரிவு நம்ப முடியாததாகவும் ஆச்சர்யங்களைக் கூட்டிக் கொண்டுபோவதாகவும் இருக்கிறது.

புடவைக் குவியலின் மையத்தில் ஓர் அழகான இளம்பெண் இருக்கவேண்டும் என யாசிக்கிறேன். அத்தனை வண்ணங்களையும் குடித்தெழும் அவள், இதற்கும் அப்பாற்பட்டவளாக, இதுவரை நான் காணாத ஒரு நில தேவதையாக எழவேண்டும் என மனம் முந்துகிறது.

வரப்புகளின் மீது அசையும் புடவைகளின் லயத்துக்கு ஏற்ப அந்த மையம் கூட்டியும் குறைத்தும் விளையாடுகிறது. அதில் ஒரு தேர்ந்த நாட்டியக்காரியின் நளினம் இருக்கிறது. கூடவே ஓர் இதமான டிரம் சத்தம், ஏற்கெனவே இசைத்து வைத்தது மாதிரி ஒலிக்கிறது. எப்போதாவது எங்கேயாவது இப்படி சில அதிசயக் காட்சிகள் விரியும். இன்று அது என் வயலில்.

என் கவனத்தைச் சிதைத்து, சீழ்க்கை ஒலி அதே மையத்தில் இருந்து மேலெழும்புகிறது. புடவைகளின் நுனிகளோடு வரப்பின் கீழ் படுத்திருந்த குழந்தைகள், குபீரென எழுந்து கும்மாளமிடுகின்றனர்.

இப்போதும் குழந்தைகளின் கைகளில் புடவைகளின் நுனி. பனியில் நனைந்து நிற்கும்  குழந்தைகளை இன்னும் நெருங்குகிறேன். எல்லோரும் பக்கத்து இருளக் குடியின் தேவதைகள். இன்று அதிகாலை ஒலித்த டிரம் சத்தம்தான் அவர்களை இங்கு அழைத்திருக்கக்கூடும்.

மையத்தில் இருந்து இப்போது ஒரு பாடல் ஒலிக்கிறது. மொழி புரியாத சங்கீதம். அந்தப் பாடலை உள்வாங்கி, குழந்தைகள் எதிரொலிக் கின்றன. அது முற்றிய கதிர்களில் பட்டுத் தெறிக்கிறது.
வயல் நடுவில் இருந்து எழப்போகும் தேவதைக்கு எதிர்பார்த்திருந்த ஒரு தருணத்தில், மேல்சட்டை அணியாத வெற்றுடம்போடு ஒரு வெள்ளைக்காரன் எழுகிறான். கால்சட்டை அணிந்திருக்கும் அவன் முதுகு லேசாக வளைந்திருப்பதைப் பார்த்தேன்.

குழந்தைகளின் கையில் இருக்கும் புடவை நுனிகளின் மொத்தத்தையும், அவன் தன் இரு கைகளில் தாங்கிப்பிடித்து நிற்கிறான். அவன் வலது தோளில் டிரம் ஒன்று தொங்குகிறது.

அவனைப் பார்த்ததும் குழந்தைகளின் உற்சாகக் கூச்சல் இன்னும் அதிகரிக்கிறது. அதையே தனக்கான பின்னணி இசையாக்கி, அவன் நடனத்தோடு கலக்கிறான். இப்போது புடவை நுனிகள் அவன் கால்களுக்கு அடியில் புதைந்து கொண்டன. குழந்தைகளின் ஆரவாரமும் டிரம்மின் ஓசையும் தூரத்தில் துலங்கும் ஊர் வரை எட்டுகிறது.

தன் வெற்றிலை இடிப்பை நிறுத்தி பெரியத்தாய் ஆயா, குழந்தைகளின் ஆரவாரக் குரலை அருந்துகிறாள். அவள் பொக்கைவாய் சிரிப்பு காலத்தைத் தாண்டி நீள்கிறது.

அந்த வெள்ளைக்காரன், நான் நிற்கும் திசை நோக்கி வருகிறான். குழந்தைகளின் கூச்சல் இன்னும் அதிகரிக்கிறது. அவன் நடனமாடிக் கொண்டே வருகிறான். என் கண் முன்னர் ஒரு கவித்துவக் காட்சி பரந்துவிரிந்து அந்தக் காலையை இன்னும் அழகாக்குகிறது.

ஒரு மாமரத்துக்குப் பின்னால் நான் மறைந்து நின்றுகொள்கிறேன். இப்போது அவர்களின் உலகத்தில் இருந்து மறைந்திருத்தலே நன்று.

என்னைக் கண்டுவிட்ட சந்தோஷத்தோடு அவன், என்னை இன்னும் சமீபிக்கிறான். நான் என்  உடம்பை இன்னும் சுருக்கிக்கொள்கிறேன். அது திமிறுகிறது.

மரத்துக்கு அப்புறம் நின்று தன் வலது கையை மட்டும் நீட்டி, “ஐ'ம் டொம்னிக், ஆனந் ஸ்கரியாஸ் ஃப்ரெண்ட்”  என ஆங்கிலத்தை ரகசியம்போல உச்சரிக்கிறான்.

பதிலுக்கு என் கையை நீட்டாமல் அவன் பக்கமாக நகர்ந்து, அவனை ஒரு பெண்ணைப்போல தழுவிக்கொள்கிறேன். எங்கள் இருவரின் உடல் சூட்டையும் இருவராலும் உணர முடிகிறது. இப்படித்தான் எனக்கும் டொமினிக்குக்குமான அந்த முதல் சந்திப்பு நிகழ்ந்தது.

தோ டொமினிக்குடனான என் இரண்டாம் சந்திப்புக்கு, கார்த்தியோடு போகிறேன். எங்கள் இருவர் முகங்களிலும் பதற்றம் படர்ந்திருக்கிறது. எங்கள் புல்லட் சத்தம் மட்டும் அந்தச் சாலையை நிறைக்கிறது.

பெரிய இரும்பு கேட் போட்ட அந்த வீட்டின் முன்னர் புல்லட் அணைக்கப்படாமல், சத்தம் கூட்டப்படுகிறது. ஹார்ன் ஒலியும் கூடவே அலறுகிறது. காத்திருக்காமல் அந்த கேட் திறக்கப்படுகிறது. யாரையும் பொருட்படுத்தாமல் நானும் கார்த்தியும் உள்ளே நுழைகிறோம். நான் மட்டும் திரும்பிப் பார்க்கிறேன். பத்து பேருக்கும் மேல் அங்கங்கே மிஷ்கின் பட மனிதர்கள் மாதிரி நிற்கிறார்கள். அவர்களுக்கு இடப்பட்ட கோடு களுக்குள் அவர்கள் நின்று அல்லது உட்கார்ந்தி ருக்கிறார்கள். வெய்யில் ஏறிய மத்தியானம்.

ஒரு சிவப்பு வண்ண பிளாஸ்டிக் சேரில் அதன் விட்டத்தில் இருந்து வெளியே பிதுங்கி ஓர் ஆள் உட்கார்ந்திருக்கிறான். எங்கள் வருகை அவனிடம் ஒரு சிறு அசைவையும் உருவாக்கவில்லை என அவனது உடல் மொழி சொன்னது.

‘‘இங்க யாரு சக்திவேலு?’’

ஒரு கறுத்த ஆள் தலை உயர்த்தி என்னைப் பார்த்தான்.

‘‘உனக்கு என்னடா பிரச்னை?’’ என கார்த்தியின் குரல் என்னை முந்துகிறது.

‘‘பொறு, பொறு கார்த்தி.’’

‘‘என்ன பிரச்னை?’’ - அதே வார்த்தைகளை நான் கொஞ்சம் சாந்தமாக உபயோகித்தேன்.

‘‘ஒரு பிரச்னையும் இல்லையே’’ - அவன் மதிற்சுவரின் வடக்கு நோக்கிப் பார்த்தவாறு, யாருக்கோ சொல்வதுபோல சொன்னான். அவன் உடல்வழியே காட்டிய அலட்சியம் யாரையும் வெறியேற்றும்.
கார்த்தி தன் ஆத்திரத்தை என் கைப் புதைப்பில் கரைத்துக்கொண்டிருந்தான்.

நான் டொமினிக்கைத் தேடினேன்.

மதிற்சுவரின் ஒரு மூலையில் சட்டையில்லாமல் ஒரு பெர்முடாஸ் மட்டும் போட்டு திரும்பி நின்றுகொண்டிருந்தவன், என் குரல் கேட்டு எழுந்து திரும்பினான். அவனின் வெள்ளை உடல் எங்கும் விழுந்த அடிகளின் ரத்தவிளாறுகள் படிந்திருந்தன. கன்னம் கன்றியிருந்தது. சற்று முன் உதட்டின் வழி வழிந்த சிறு ரத்தம் உறைந்து கருங்கோடாக நிலைபெற்றிருந்தது. திறந்திருந்த அந்த வீட்டின் ஹாலின் தரையில், அவன் எங்கெங்கோ சேகரித்திருந்த வண்ணப் புடவைகள் தாறுமாறாகக் கலைந்துகிடந்தன.

படிக்கும் தரைக்கும் இடையே புரண்டுகிடந்த டிரம்மின் ஒரு பக்கத் தோல் முற்றிலும் கிழிந்திருந்தது.

டொமினிக் என்னை ஏறெடுத்தான்.

பாம்பின் தலை கடைசியாக நசுக்கப்படுவதை நீங்கள் அருகில் இருந்து பார்த்திருக்கிறீர்களா? அது சாகும் முன்னர் ஒருமுறை தலையை உயர்த்தி யாசிக்கும். டொமினிக் தன் தலையை உயர்த்தி என்னை நோக்கி யாசித்தான்.

நானும் கார்த்தியும் சூழலைக் குடித்துக் கொண்டிருந்தோம்.

நான் அந்தச் சிவப்பு நிற சேரில் உட்கார்ந்திருந்த ஆளை நோக்கிப் போனேன். கூடவே என் ஒரு கை டொமினிக்கைப் பற்றியிழுத்துக்கொண்டிருந்தது.

‘‘என்ன இது?’’

‘‘என்னைக் கேட்டா?’’

‘‘யார் இவரை இப்படி அடிச்சது?’’

அவன் சக்திவேலை நோக்கிப் பார்வையைத் திருப்பினான்.

நானே எதிர்பாராத அந்தக் கணத்தில் கார்த்தி அவனை நோக்கி ஓடி, அவன் முகத்தில் எட்டி உதைத்தான். பின்னால் இருந்த ஓர் அடுக்கு செம்பருத்திச் செடியில் அவன் மல்லாக்க விழுந்தான். அந்தக் கறுத்தப் பெண் ஓடிவந்து அவனைத் தூக்கினாள். அந்தச் சிறுமி திடீரென வீறிட்டு அழுதாள். என் கைப்பற்றி இருந்த டொமினிக்கின் உடல், பயத்தால் உதற ஆரம்பித்தது. கூடுமானவரை என் கை அழுத்தத்தில் அவர் பயத்தை உறிஞ்சிவிட முயன்றேன்.

அவனைத் தூக்கி உட்காரவைத்தவள், உதைத்தவனை ஏறெடுத்தும் பார்க்கவில்லை. அவள் மௌனத்தை என்னால் அளவிட முடியவில்லை.

விளைந்த நெல்வயலின் நடுவே தன் பாடலோடு ஓர் ஆண் தேவதை என காற்றில் மிதந்துவந்த டொமினிக், என் முன் பிம்பமாகத் தோன்றி மறைந்தான்.

இங்கு இருப்பவன்தான் நிஜம். கலைந்த புடவைகள், கிழிந்த டிரம், பாதி வெந்த சோற்றோடு கவிழ்ந்துகிடக்கும் அந்தப் பாத்திரம், இன்று பூத்த மலர்களோடு உடைந்து சரிந்த செம்பருத்திச் செடி, எதற்கும் அசைந்துகொடுக்காத அந்தச் சிவப்பு நாற்காலியில் உட்கார்ந்திருக்கும் வீட்டு உரிமையாளன்.

உன் பாடலுக்கும் வாழ்வுக்குமான தூரம் தெரிகிறதா என் டொமினிக்?

அவனை உற்றுப்பார்த்தேன்.

இப்போதுகூட சற்றுமுன் கரும் ரத்தம் கசிந்த தன் வலிமிகுந்த உடலைப் பஞ்சாக்கி, அப்படியே அவனால் வானில் பறந்துவிட முடியும் எனத் தோன்றியது. எங்கோ ஒரு வயலில் இறங்கி அதனுள் இருந்து ஆடி, பாட முடியும். சட்டையில்லாத கரும்நிறக் குழந்தை களோடு ரயில்வண்டி விளையாட்டில் வெகுதூரம் பயணித்து, வளைந்து வளைந்து ஓடும் காட்டாற்றில் குதித்துவிடவும் முடியும்.

ஆனால், அது எதுவும் முடியாமல், பெருமழையில் நனைந்த ஒரு கோழிக்குஞ்சின் உதறலோடு என் பின்னால் நிற்கிறான் டொமினிக்.

ப்பா கொல்கத்தாக்காரன், அம்மா அயர்லாந்துக் காரி என்பது டொமினிக்குக்குப் புரிய ஆரம்பித்தபோது, அவர்கள் இருவருமே அவனுடன்  இல்லை. மரணம், தொலைதல், விடுபடல், விட்டொழித்தல் இதில் எதுவென அவன் அறிந்துகொள்ளவும் இல்லை. பூர்வீகம் தேடியலையும் வாழ்வு இதுவரை அவனுக்கு வாய்க்கவில்லை. அன்றாடங்கள் அகலவே பெரும் போராட்டம் தேவைப்பட்டது.

கடந்தகால இழிவுகள், பெருமிதங்கள் எல்லாம் ஒருபோதும் நிகழ்காலப் பசியைப் போக்கிவிடுபவை அல்ல என்பதை, டொமினிக்கின் பட்டினிகள் நிறைந்த நாட்கள் அவனுக்கு உணர்த்தியிருந்தன.
இந்தத் தொடர் அலைக்கழிப்பில் அவன் திருவண்ணாமலையை அடைந்தபோது, தன் வாழ்வின் முப்பத்து ஏழு வருடங்களை இழந்திருந்தான்.

ஆஸ்ரம அமைதி, எப்போதாவது அதைக் கீறி எழும் மயில்களின் சத்தம், மதியச் சாப்பாடு, ஃபில்டர் காபி... இவை எதுவும் ஆரம்பம் முதலே அவனுக்கு ஏனோ பிடிக்காமல்போனது. அதன் பின்பக்க வழியே நீளும் மலையேறும் பாதை, விரவிக்கிடக்கும் சரளைக்கற்கள், சிறு குகைகள், எலுமிச்சம்பழ வாசனைகொண்ட மஞ்சள் புல் புதர்கள், சில்லிட்ட நீரூற்றுகள், அழுக்கேறி வாய் நாறும் சாமியார்கள்... எல்லாவற்றில் இருந்தும், அவன் வெகுதூரம் விலகிப்போய்க்கொண்டிருந்தான்.

சமுத்திர ஏரிக்கரையின் மேல் ஊர்க்காவல்போல் நிற்கும் அந்தக் கரிய பனைமரங்கள். கரைக்கும் கீழ் வியாபித்திருக்கும் புளியமர நிழல்கள்தான் அவனை அப்படியே இருத்திக்கொண்டன.
ஏதோ ஓர் உந்துதல்பெற்று அவன் என் கையை விடுவித்து வீட்டுக்கு உள்ளே போனான். எங்கள் எல்லோர் கண்களும் அவன் மீதே இருந்தன. அடுத்த பத்தாவது நிமிடத்தில், ஐஸ்கட்டிகள் ஒட்டியிருந்த எலுமிச்சை பழச்சாறு நிரம்பிய பெரிய கண்ணாடி டம்ளர்களை ஒரு மர ட்ரேயில் அடுக்கிக்கொண்டு வெளிவந்தான். நேராக வந்து, விழுந்து எழுந்து அதன் பின் தரையையே வெறித்துக்கொண்டிருந்த சக்திவேல் முன் நின்று, ‘‘ப்ளீஸ் டேக் இட்’’ என்றான். அவன் முகத்தைக் கவனித்தேன். கருணை ததும்பும் முகம்.

அவன் தலையுயர்த்திப் பார்த்துவிட்டு, பின் கவிழ்ந்துகொண்டான். அந்த வீட்டு ஓனரும், நானும், கார்த்தியும் ஜூஸ் டம்ளர்களைக் கையில் எடுத்தோம். மீதி டம்ளர்கள் ட்ரேயிலேயே இருந்தன. புளியமர நிழல் மனதை நிரப்பி உடலைக் கிடத்தியது. பசியைக் கண்டுகொள்ளவில்லை.

வன் பெரும்பாக்கம் சாலையில் இரும்பு கேட் போட்ட ஒரு பெரிய வீட்டை ஆனந் ஸ்கரியாவின் பண உதவியோடு முன்பணம் தந்து வாடகைக்கு எடுத்தான்.

p78b.jpg

சீஸனுக்கு வரும் வெள்ளைக்காரர்கள் அவனிடம் சுலபமாக வந்துசேர்ந்தார்கள். உணவோடுகூடிய தங்கும் இடம். கூடவே மீந்த விஸ்கியும், சில சமயங்களில் சோர்ந்த வெள்ளைக்காரிகளின் உடம்பும்கூடக் கிடைத்தன.

தனியாக அவனால் சமாளிக்க முடியாதபோதுதான், ராணி தன் ஆறு வயது மகள் சசியோடு உடன் வந்துசேர்ந்தாள். அவனுக்கு ராணி மீது உடல் ஈர்ப்பு எப்போதுமே இருந்தது இல்லை. தன்னைப்போலவே அநாதை என்ற ஒரு கருணை சுரந்தபடியே இருந்தது. அந்தக் குழந்தையை கனந்தம் பூண்டி ரமண மகரிஷி பள்ளியில் சேர்த்தான். அவளைக் கொண்டுபோக, கூட்டிவர சைக்கிள் வாங்கினான். விருந்தினர்களை ராணியும் அவனும் சேர்ந்து கவனித்தார்கள்.

ராணியின் முன்கதையை அவன் ஒருபோதும் கேட்டது இல்லை. ரணங்கள் அதுவாக ஆறிவிடும். ஆனந் கொடுத்த முன்பணம் ஒரே சீஸனில் அடைந்து அவன் முதலானது. பின்னிரவு வரை தூக்கம் இல்லாமல் தவித்த அவன் இரவுகள், வலி நிறைந்தவை. மொட்டைமாடியில் தகரம் அடித்து, தனக்கான அறையை அவனே வேய்ந்துகொண்டான்.

இது பிளாட்பாரத் தங்கலையும், புளியமர நிழலையும் தாண்டிய அடுத்த நிலை. ராணியும் அவளது மகளும் சமையலறையோடு கூடிய கீழ் வீட்டில் இருந்தார்கள். ஒருநாளும் அவர்களோடு உட்கார்ந்து பேச நேரம் இருந்தது இல்லை அவனுக்கு. சசியை சைக்கிள் கேரியரில் உட்கார்த்தி வைத்து ஸ்கூலுக்குக் கூட்டிப்போகும்போது, எதிர்ப்படும் குளிர்காற்றில் அடக்கிவைத்த அத்தனையையும் கொட்டிக் கொண்டே போவான். சசி அதைக் கேட்கிறாளா என ஒருநாளும் கவனித்தது இல்லை. அந்தப் பேச்சில் அவன் நினைவுகள் எப்போதும் ததும்பியது இல்லை. சில சமயம் பாடல்கள், இவை எப்போதும் விசித்திரமாக இருந்தது சசிக்கு.

வெளிக்கசிவு எதுவுமின்றி அந்தச் சிறுபெண் எப்போதும் மௌனத்தால் இறுகியிருந்தாள். அவள் பேச்சற்று இருந்ததே எல்லோரையும் நிறைத்துக்கொண்டதாகத் தெரிந்தது அவனுக்கு.

அந்த இறுக்கம் டொமினிக்குக்குப் பிடித்திருந்தது. அவன் குதூகலமாகிக் காற்றில் மிதக்கும்போது எல்லாம், சசிதான் அவனை எப்போதும் தரைக்கு இழுத்துவந்தவள்.

ன்றும் இல்லாமல் எதற்காக இன்று அதிகாலையிலேயே சக்திவேல் வந்தான்? இவன்தான் என் புருஷன் என ராணிதான் டொமினிக்குக்கு அவனை அறிமுகப்படுத்தினாள். அவனை நோக்கி நீட்டிய டொமினிக்கின் கையை உதறினான் சக்திவேல். அதில் ஒரு முரட்டுத்தனம் இருந்தது.

எதிர்பாராத ஒரு தருணத்தில் டொமினிக் முகத்தில் காறித்துப்பி அந்தக் காலையை வன்மமாகத் தொடங்கினான் சக்திவேல்.

தரையில் சாத்திவைக்கப்பட்டிருந்த டிரம் கிழிந்தது. சரமாரியாக அவ்வப்போது டொமினிக்குக்கு அடி விழுந்தது. ராணி அவனைத் தடுக்க இயலாமல் பதுங்கினாள். சசியின் முகம் மேலும் இறுகி எந்த நேரமும் வெடித்துவிடும்போல ஆனது.

என்ன யோசித்தும் எதற்காக இந்தத் துவம்சம் என டொமினிக்கால் புரிந்துகொள்ள முடியவில்லை, ராணியின் இந்த மௌனத்தையும் சேர்த்து.

புதுசுபுதுசாக யார் யாரோ வந்து உட்கார்ந்தார்கள். டொமினிக்கின் உடல் நடுக்கத்தில் இருந்தது. ரத்தக்கசிவுதான் தாங்க முடியாத வலியைத் தந்தது. என்ன முயன்றும் இது எதனால் என அவனால் யூகிக்கவே முடியாமல்போனது. ராணியையும் சசியையும் யாராலும் டொமினிக்கைவிட அக்கறையோடு கவனித்துக்கொள்ள முடியாது. அத்தனை அக்கறை, அத்தனை ப்ரியம்.

‘‘இன்னும் ஒரு படி மேலே போ டொமினிக்.இன்னும் ஏறு…'' உயரம் சறுக்கியது, ஏறினான்.

டொமினிக்... இன்னொருவன் மனைவி, குழந்தை மீது உனக்கு ஏன் அக்கறை… ப்ரியம்? ஏணிக்கு அருகில் சக்திவேல் நின்றிருந்தான். சட்டெனச் சறுக்கி தரைக்கு வந்தான்.

ஒரு கணத்தில் டொமினிக்குக்கு எல்லாம் புரிந்தன. வாழ்வின் ரகசிய முடிச்சுக்கள் ஏதோ ஓர் எதிர்பாராத தருணத்தில்தான் அவிழ்கிறது. தூக்கிச் சுமந்ததை நழுவவிட்டுத் துறந்தான்.

டொமினிக் லேசானான்... முகம் தெளிந்தது. அவன் திடீரென வீட்டுக்குள் பிரவேசித்தான். போன வேகத்தில் வெளியே வந்தான். மிகச் சிறிய ஒரு டிராவல் பேக் மட்டும் அவன் வலதுபக்கத் தோளில் தொங்கியது.

எதிர்புறம் நின்றிருந்த சக்திவேலை நெருங்கி, வீட்டைக் காண்பித்து, ‘‘நான் போறேன், நீ இருந்துக்கோ” என்று சைகையிலும் தப்புத்தப்பான தமிழிலும் சொன்னான்.

சக்திவேல், முகத்தை வேறு பக்கம் திருப்பிக்கொண்டான். அது மிகச் செயற்கையாக இருந்தது.

ராணி அவனை ஏறெடுத்துப்பார்த்து சட்டெனக் கவிழ்ந்துகொண்டாள். நிமிடத்தில் அவள் பார்வை அவன் மீது பட்டுத் திரும்பியது. சசியை மட்டும் தரையளவு குனிந்து தன்னுள் அணைத்துக்கொண்டான். ஒரு தமிழ் சினிமாவின் உருவாக்கப்பட்ட காட்சிபோல அந்த இடம் விரிந்துகொடுத்தது.

திறந்திருந்த கேட் வழியே டொமினிக் சட்டென வெளியேறினான்.

வெளியே நின்று இருபக்கச் சாலைகளையும் கவனித்தான். அவன் செல்லவேண்டிய திசை சற்றுமுன் தீர்மானிக்கப்பட்ட ஒன்று. அது தெற்கு. அவன் நடக்க ஆரம்பித்தான். எப்போதும் டொமினிக்கின் நடையில் ஒரு நளினம் இருக்கும். இன்று அவன் நடை வேகமெடுத்து ஓட்டமாக மாறியிருந்தது.

வாடகை வீடுதான் எனினும் அது அவன் வீடு. ஒரு கரும்பிசாசு மாதிரி வாசலை அடைத்து நின்றது அவன் புல்லட்.

ஆனந்திடம் இருந்து பெற்ற பணத்தில் இருந்து ஆரம்பித்த உயர்ந்த வாழ்வு சில நிமிடங்களில் அவன் என்ஃபீல்ட் முதுகுக்குப் பின்னால் போய்விட்டது. அவனால் திரும்பிப் பார்க்க முடியாது.
திரும்பினால் சக்திவேல் தெரிவான்; தரையில் உறைந்துபோய் ராணி உட்கார்ந்திருப்பாள்; சசியின் தவிப்பு மீண்டும் அவனை ஈர்க்கும்.

டொமினிக், பெரும்பாக்கம் சாலையில் இன்னும் வேகம் கூட்டி நடந்தான். நடையில் ஒரு தீர்மானம் இருந்தது.

p78c.jpg

அடுத்த நாள் காலை, ஆணாய்பிறந்தானில் கூலி வேலைக்குப்போன பெண்களின் குரல்கள் வியந்து வியந்து பேசிக்கொண்டன.

``வெள்ளக்காரன்டி, கால்சட்டை மட்டுந்தான் போட்டிருக்கான். வெளஞ்ச வெளச்சலுக்கு நடுவால இருந்து எழுந்தான் பாரு... வரப்பு முழுக்கக் கொத்துக்கொத்தா கொழந்தைங்க... அம்மாஞ் சீக்கிரம் எப்படித்தான் நம்மூருக் கொழந்தைங்க முழுக்க அவங்கூட போச்சுங்களோ?”

“நம்ம அம்புட்டுப் பேரு பொடவையும் அதுங்க கையில கலர் கலரா என்னமா அசையுது!”

“வரப்பு மேல குபீர்னு  எழுந்து வந்துச்சுங்க பாரு, எம்மாம் அழகு. அதுங்க கூடவே போயிடலாமுனு இருந்துச்சு!”

http://www.vikatan.com/anandavikatan

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Similar Content

  • Topics

  • Posts

    • நாடாளுமன்றத் தேர்தல் 2024: மின்னம்பலம் மெகா சர்வே முடிவுகள் – ஏப்ரல் 14 முதல்… Apr 13, 2024 18:46PM IST ஷேர் செய்ய :    சூடு பிடிக்கிறது அரசியல் களம்! எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்நாட்டில் எந்தெந்த தொகுதியை யார் கைப்பற்றப் போகிறார்கள், எந்த கூட்டணி பெரும்பான்மையான தொகுதிகளைக் கைப்பற்றப் போகிறது என்ற எதிர்பார்ப்பு எல்லோரிடமும் இருக்கிறது. மக்களின் மனதை வென்ற வேட்பாளர் யார் என்பதைக் கணித்துச் சொல்வதற்கு தமிழ்நாடு முழுவதும் பயணித்து கருத்துக்கணிப்பை மேற்கொண்டது மின்னம்பலம். தமிழ்நாட்டில் ஒவ்வொரு மக்களவைத் தொகுதியும் 6 சட்டமன்றத் தொகுதிகளை உள்ளடக்கியிருக்கிறது. அந்த வகையில் தமிழ்நாடு முழுதும் 39 மக்களவைத் தொகுதிகளில் உள்ள 234 சட்டமன்றத் தொகுதிகளிலும் மின்னம்பலம் சார்பாக மக்களிடம் கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது. புதுச்சேரி மக்களவைத் தொகுதியிலும் மின்னம்பலம் குழுவினர் கருத்துகணிப்பு நடத்தினர். இதைத் தவிர இடைத்தேர்தலை எதிர்கொள்ளும் கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு சட்டமன்றத் தொகுதியிலும் சர்வே மேற்கொள்ளப்பட்டது. ஒரு சட்டமன்றத் தொகுதிக்கு 100 பேர் என்று 6 தொகுதிகளைக் கொண்ட ஒரு மக்களவைத் தொகுதிக்கு 600 பேரிடம் கருத்து கேட்கப்பட்டது. 18-30 வயது வரையிலான வாக்காளர்கள், 30-50 வயது வரையிலான வாக்காளர்கள், 50 வயதிற்கு மேற்பட்ட வாக்காளர்கள் என மூன்றாகப் பிரித்து ஆண்- பெண் என சம விகிதத்தில் இந்த கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது. மொத்தமாக தமிழ்நாடு முழுதும் 23,400 பேரிடம் நடத்தப்பட்ட மின்னம்பலம் மெகா சர்வே முடிவுகள் ஒவ்வொரு தொகுதியாக ஏப்ரல் 14 முதல் தொடர்ந்து வெளியிடப்பட உள்ளது. மொத்தமாக தமிழ்நாட்டில் எந்தெந்த கூட்டணி எத்தனை சதவீத வாக்குகளைப் பெற உள்ளது என்பதையும் மின்னம்பலம் வெளியிட உள்ளது.   https://minnambalam.com/2024-election-mega-survey-results/2024-lok-sabha-election-competition-between-admk-dmk-bjp-ntk-minnambalam-mega-survey/ மின்னம்பலம் மெகா சர்வே: வடசென்னை- வாகை சூடுவது யார்?   தமிழ்நாட்டில் ஏப்ரல் 19ஆம் தேதி ஒரே கட்டமாக மக்களவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. தேர்தல் களம் சூடு பிடித்து அனல் பறந்துகொண்டிருக்கிறது.  தமிழ்நாட்டில் எந்தெந்த தொகுதியை யார்கைப்பற்றப் போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கிறது.  இந்நிலையில் நம் மின்னம்பலம் 40 தொகுதிகளிலும் மக்களைச் சந்தித்து மெகா கருத்துக்கணிப்பு நடத்தியது.  இதில் வட சென்னை மக்களின்  மனதை வென்றவர் யார்? வடசென்னை தொகுதியில் திமுக சார்பில் கலாநிதி வீராசாமி மீண்டும் களமிறங்கியுள்ளார். அதிமுகசார்பில் ராயபுரம் மனோ போட்டியிடுகிறார். பாஜக சார்பில் வழக்கறிஞர் பால் கனகராஜ் போட்டியிடுகிறார். நாம் தமிழர் கட்சியின் சார்பில் அமுதினி போட்டியிடுகிறார். களத்தின் நிலவரம் என்ன..? மக்களின் வாக்குகள் யாருக்கு? என்பதை  நேரடியாக அறிந்து கொள்ளஇதுபற்றிய கருத்துக்கணிப்பை முன்னெடுத்தது மின்னம்பலம்.  உங்கள் மனதை வென்ற வேட்பாளர் யார் என்ற கேள்வியினை பரவலாக வடசென்னை மக்களவைத் தொகுதி மக்களிடம் முன்வைத்தோம்.  இந்த மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஆறு சட்டமன்றத் தொகுதிகளிலும் தலா 100 வாக்காளர்கள் என 600 பேரிடம் ஆய்வு செய்தோம்.  18-30 வயது வரையிலான வாக்காளர்கள், 30-50 வயது வரையிலான வாக்காளர்கள், 50 வயதிற்கு மேற்பட்டவாக்காளர்கள் என மூன்றாகப் பிரித்து ஆண்– பெண் என சம விகிதத்தில் இந்த கருத்துக்கணிப்புநடத்தப்பட்டது.  வடசென்னை நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள  6 சட்டமன்றத் தொகுதிகளான  திருவொற்றியூர்,  டாக்டர் ராதாகிருஷ்ணன் நகர்,  பெரம்பூர், கொளத்தூர்,  திருவிக நகர்(தனி) மற்றும்ராயபுரம் தொகுதிகளில்  நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பின் அடிப்படையில்…  திமுக வேட்பாளர் கலாநிதி வீராசாமி 45% வாக்குகளைப் பெற்று  இரண்டாவது முறையாக வடசென்னைதொகுதியில் முன்னிலையில் நிற்கிறார். அதிமுக வேட்பாளர் ராயபுரம் மனோ 29% வாக்குகளைப் பெற்று இரண்டாம் இடம் பிடிக்கிறார்.  பாஜக வேட்பாளர் பால் கனகராஜ் 19% வாக்குகளைப் பெறுகிறார்.  நாம் தமிழர் கட்சி வேட்பாளர் அமுதினி 6% வாக்குகளைப் பெற்றுள்ளார்.   1% பேர் கருத்து எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ளனர். ஆக… வடசென்னை தொகுதியில் இந்த முறையும் கலாநிதி வீராசாமி வெற்றி பெற்று திமுகவின் கொடி பறக்கவே  பிரகாசமான வாய்ப்புள்ளது. https://minnambalam.com/political-news/dmk-candidate-kalanidhi-veerasamy-is-leading-in-north-chennai-constituency-for-the-second-time-by-getting-45-votes-minnambalam-mega-survey-north-chennai/   மின்னம்பலம் மெகா சர்வே: திருவள்ளூர்… வெற்றிக் கோப்பை யாருக்கு? Apr 14, 2024 09:00AM  தமிழ்நாட்டில் ஏப்ரல் 19ஆம் தேதி ஒரே கட்டமாக மக்களவைத் தேர்தல் நடைபெறுகிறது. எந்தெந்த தொகுதியை யார் கைப்பற்றப் போகிறார்கள்..?  என்ற எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கும் நிலையில்,  நம் மின்னம்பலம் மக்களிடம் மெகா கருத்துக்கணிப்பு நடத்தியது.  இதில் திருவள்ளூர் தொகுதியில் வெற்றி யாருக்கு? திருவள்ளூர் தொகுதியில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சியின் சார்பாக முன்னாள் ஐ.ஏ.எஸ்சசிகாந்த் செந்தில் களமிறங்கியுள்ளார்.  அதிமுக கூட்டணியில் தேமுதிக சார்பில் கு.நல்லதம்பி போட்டியிடுகிறார்.  பாஜக சார்பில் பொன்.பாலகணபதி போட்டியிடுகிறார்.  நாம் தமிழர் கட்சியின் சார்பில் மு.ஜெகதீஷ் சந்தர் போட்டியிடுகிறார். கள நிலவரம் என்ன..? மக்களின் வாக்குகள் யாருக்கு– என்பதை  நேரடியாக அறிந்து கொள்ள இதுபற்றிய கருத்துக்கணிப்பைமுன்னெடுத்தது மின்னம்பலம். உங்கள் மனதை வென்ற வேட்பாளர் யார் என்ற கேள்வியினை பரவலாக திருவள்ளூர் பாராளுமன்றத் தொகுதி மக்களிடம் முன்வைத்தோம்.  இந்த மக்களவை தொகுதிக்கு உட்பட்ட ஆறு சட்டமன்றத்தொகுதிகளிலும் தலா 100 வாக்காளர்கள் என 600 பேரிடம் ஆய்வு செய்தோம்.   18-30 வயது வரையிலான வாக்காளர்கள், 30-50 வயது வரையிலான வாக்காளர்கள், 50 வயதிற்கு மேற்பட்டவாக்காளர்கள் என மூன்றாகப் பிரித்து ஆண்– பெண் என சம விகிதத்தில் இந்த கருத்துக்கணிப்புநடத்தப்பட்டது.  திருவள்ளூர் நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள  6 சட்டமன்றத்தொகுதிகளான கும்மிடிப்பூண்டி, பொன்னேரி (தனி), திருவள்ளூர், பூவிருந்தவல்லி (தனி), ஆவடி மற்றும்மாதவரம் பகுதிகளில்  நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பின் அடிப்படையில்... காங்கிரஸ் வேட்பாளர் சசிகாந்த் செந்தில் 49% வாக்குகளைப் பெற்று திருவள்ளூர் தொகுதியில்முன்னிலையில் நிற்கிறார். தேமுதிக வேட்பாளர் கு.நல்லதம்பி 25% வாக்குகளைப் பெற்று இரண்டாம் இடம் பிடிப்பார் என்றும் பாஜக வேட்பாளர் பொன்.பாலகணபதி 19% வாக்குகளைப் பெறுவார் என்றும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மு.ஜெகதீஷ் சந்தர் 6% வாக்குகளைப் பெறுவார் என்றும் முடிவுகள்தெரிவித்தன. 1% பேர் கருத்து எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ளனர். ஆக, திருவள்ளூர் தொகுதியில் இந்த முறை காங்கிரஸின் சசிகாந்த் செந்தில் வெற்றிக் கோப்பையை கைப்பற்றுகிறார்.  https://minnambalam.com/2024-election-mega-survey-results/minnambalam-mega-survey-congress-candidate-sasikanth-senthil-won-in-thiruvallur-constituency-admk-bjp-are-in-next-places/   மின்னம்பலம் மெகா சர்வே: அரக்கோணம்… அரியணை ஏறுவது யார்? Apr 14, 2024 10:00AM IST ஷேர் செய்ய :    2024 மக்களவை தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில், அரக்கோணம் தொகுதியின் அரியணை ஏறப் போவது யார்  என்ற கேள்விக்கு பதில் தேடி,  நம் மின்னம்பலம் மக்களிடம் மெகா கருத்துக்கணிப்பு நடத்தியது.  இந்த தேர்தலில் அரக்கோணம் தொகுதியில் திமுக சார்பில்  சிட்டிங் எம்.பி.யான ஜெகத்ரட்சகன் மீண்டும்களமிறங்கியுள்ளார். அதிமுக சார்பில் ஏ.எல்.விஜயன் போட்டியிடுகிறார். பாஜக கூட்டணியில் பாமக சார்பில் வழக்கறிஞர் கே.பாலு போட்டியிடுகிறார். நாம் தமிழர் கட்சியின் சார்பில் அப்சியா நஸ்ரின்போட்டியிடுகிறார். திமுக, அதிமுக, பாமக ஆகிய மூன்று வேட்பாளர்களுக்கும் இடையே கடுமையான போட்டி நிலவும் நிலையில், களம் யாருக்கு சாதகமாக இருக்கிறது?  மக்களின் வாக்குகள் யாருக்கு– என்பதை  நேரடியாகஅறிந்து கொள்ள இதுபற்றிய கருத்துக்கணிப்பை முன்னெடுத்தது மின்னம்பலம்.  உங்கள் மனதை வென்ற வேட்பாளர் யார் என்ற கேள்வியினை பரவலாக அரக்கோணம் பாராளுமன்றத் தொகுதி மக்களிடம் முன்வைத்தோம். இந்த மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஆறு சட்டமன்றத்தொகுதிகளிலும் தலா 100 வாக்காளர்கள் என 600 பேரிடம் ஆய்வு செய்தோம்.  18-30 வயது வரையிலான வாக்காளர்கள், 30-50 வயது வரையிலான வாக்காளர்கள், 50 வயதிற்கு மேற்பட்டவாக்காளர்கள் என மூன்றாகப் பிரித்து ஆண்– பெண் என சம விகிதத்தில் இந்த கருத்துக்கணிப்புநடத்தப்பட்டது.  அரக்கோணம் நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள  6 சட்டமன்றத் தொகுதிகளான  அரக்கோணம் (தனி),  திருத்தணி, சோளிங்கர்,  காட்பாடி,  இராணிப்பேட்டை மற்றும் ஆற்காடு பகுதிகளில்  நடத்தப்பட்டகருத்துக்கணிப்பின் அடிப்படையில்…   திமுக வேட்பாளர் ஜெகத்ரட்சகன் 48% வாக்குகளைப் பெற்று மீண்டும் அரக்கோணம் தொகுதி மக்களின் பிரதிநிதியாகிறார்.  அதிமுக வேட்பாளர் ஏ.எல்.விஜயன் 24% வாக்குகளைப் பெற்று இரண்டாம் இடம் பிடிப்பார் என்றும் பாமக வேட்பாளர் வழக்கறிஞர் கே.பாலு 22% வாக்குகளைப் பெறுவார் என்றும்.  நாம் தமிழர் கட்சி வேட்பாளர் அப்சியா நஸ்ரின் 5% வாக்குகளைப் பெறுவார் என்றும் முடிவுகள்கூறுகின்றன. 1% பேர் கருத்து எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ளனர். ஆக…, அரக்கோணம் தொகுதியின் எம்.பி. என்ற அரியணையில் மீண்டும் அமர ஆயத்தமாகிறார் திமுக வேட்பாளர் ஜெகத்ரட்சகன்.    https://minnambalam.com/2024-election-mega-survey-results/minnambalam-mega-survey-arakkonam-constituency-dmk-jagatratchagan-wins-with-48-percentage-vote/   மின்னம்பலம் மெகா சர்வே: கள்ளக்குறிச்சி யாருடைய வெற்றிக் கொடி? Apr 14, 2024 11:00AM IST 2024 மக்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டில் எந்தெந்த தொகுதியை யார் கைப்பற்றப் போகிறார்கள் என்று நம், மின்னம்பலம் மக்களிடம் மெகா சர்வே நடத்தியது. இந்த தேர்தலில் வட தமிழகத்தின் கிராமப்புறங்கள் நிறைந்த கள்ளக்குறிச்சி தொகுதியில் திமுக சார்பில்மலையரசன் களமிறங்கியுள்ளார். அதிமுக சார்பில் குமரகுரு போட்டியிடுகிறார். பாஜக கூட்டணியில் பாமகசார்பில் இரா.தேவதாஸ் உடையார் போட்டியிடுகிறார். நாம் தமிழர் கட்சியின் சார்பில் ஆ.ஜெகதீசன்போட்டியிடுகிறார். திமுக, அதிமுக, பாஜக ஆகிய மூன்று வேட்பாளர்களுக்கும் இடையில் கடுமையான போட்டியிருப்பதாகதகவல்கள் வருகிற நிலையில்,  களத்தின் நிலவரம் என்ன..? மக்களின் வாக்குகள் யாருக்கு– என்பதை  நேரடியாக அறிந்து கொள்ள கருத்துக் கணிப்பை முன்னெடுத்தது மின்னம்பலம். கள்ளக்குறிச்சி மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஆறு சட்டமன்றத் தொகுதிகளிலும் தலா 100 வாக்காளர்கள் என 600 பேரிடம் ஆய்வு செய்தோம்.  18-30 வயது வரையிலான வாக்காளர்கள், 30-50 வயதுவரையிலான வாக்காளர்கள், 50 வயதிற்கு மேற்பட்ட வாக்காளர்கள் என மூன்றாகப் பிரித்து ஆண்– பெண்என சம விகிதத்தில் இந்த கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது.  கள்ளக்குறிச்சி நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள  6 சட்டமன்றத் தொகுதிகளான ரிஷிவந்தியம்,  சங்கராபுரம்,  கள்ளக்குறிச்சி (தனி), கெங்கவல்லி (தனி),  ஆத்தூர் (தனி) மற்றும் ஏற்காடு (தனி)  பகுதிகளில்  நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பின் அடிப்படையில்… திமுக வேட்பாளர் மலையரசன் 42% வாக்குகளைப் பெற்று கள்ளக்குறிச்சி தொகுதியில் முன்னிலையில்நிற்கிறார். அதிமுக வேட்பாளர் குமரகுரு 37% வாக்குகளைப் பெற்று இரண்டாம் இடம் பிடிப்பார் என்றும் பாமக வேட்பாளர் இரா.தேவதாஸ் உடையார் 16% வாக்குகளைப் பெறுவார் என்றும்.  நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ஆ.ஜெகதீசன் 4% வாக்குகளைப் பெறுவார் என்றும் முடிவுகள்வெளியாகியுள்ளன. 1% பேர் கருத்து எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ளனர். ஆக… மலைகள் நிறைந்த கள்ளக்குறிச்சியில் திமுகவின் மலையரசனே மலையேறுகிறார்.  https://minnambalam.com/2024-election-mega-survey-results/minnambalam-mega-survey-2024-dmk-candidate-malayarasan-is-leading-in-kallakurichi-constituency-with-42-votes/   மின்னம்பலம் மெகா சர்வே: திருச்சி… திருப்புமுனை வெற்றி யாருக்கு? Apr 14, 2024 13:00PM IST 2024 மக்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டில் எந்தெந்த தொகுதியை யார் கைப்பற்றப் போகிறார்கள்..? என்று நம் மின்னம்பலம் மக்களிடம் மெகா சர்வே நடத்தியது. இதில் அரசியல் திருப்புமுனைகளுக்கு சொந்த பூமியான மலைக்கோட்டையாம் திருச்சி  தொகுதி முக்கியமானது. திருச்சி தொகுதியில் திமுக கூட்டணியில் மதிமுக சார்பில் துரை வைகோ களமிறங்கியுள்ளார். அதிமுகசார்பில் கருப்பையா போட்டியிடுகிறார். பாஜக கூட்டணியில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் செந்தில்நாதன் போட்டியிடுகிறார். நாம் தமிழர் கட்சியின் சார்பில் ஜல்லிக்கட்டு ராஜேஷ்போட்டியிடுகிறார். மதிமுக, அதிமுக, அமமுக ஆகிய மூன்று வேட்பாளர்களுக்கும் இடையில் கடுமையான போட்டி நிலவுகிற நிலையில்…  களத்தின் இறுதிகட்ட நிலவரம் என்ன..? மக்களின் வாக்குகள் யாருக்கு என்பதை  நேரடியாகஅறிந்து கொள்ள இதுபற்றிய கருத்துக்கணிப்பை முன்னெடுத்தது மின்னம்பலம்.  உங்கள் மனதை வென்ற வேட்பாளர் யார் என்ற கேள்வியினை பரவலாக திருச்சி பாராளுமன்றத் தொகுதிமக்களிடம் முன்வைத்தோம்.  இந்த மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஆறு சட்டமன்றத் தொகுதிகளிலும் தலா 100 வாக்காளர்கள் என600 பேரிடம் ஆய்வு செய்தோம்.   18-30 வயது வரையிலான வாக்காளர்கள், 30-50 வயது வரையிலான வாக்காளர்கள், 50 வயதிற்கு மேற்பட்டவாக்காளர்கள் என மூன்றாகப் பிரித்து ஆண்– பெண் என சம விகிதத்தில் இந்த கருத்துக்கணிப்புநடத்தப்பட்டது.  திருச்சி நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள  6 சட்டமன்றத் தொகுதிகளான  திருச்சிராப்பள்ளி (கிழக்கு),  திருச்சிராப்பள்ளி (மேற்கு), திருவரங்கம், திருவெறும்பூர்,  கந்தர்வக்கோட்டை (தனி) மற்றும் புதுக்கோட்டை பகுதிகளில் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பின் அடிப்படையில்…   மதிமுக வேட்பாளர் துரை வைகோ 44% வாக்குகளைப் பெற்று திருச்சி தொகுதியில் முந்துகிறார். அதிமுக வேட்பாளர் கருப்பையா 33% வாக்குகளைப் பெற்று இரண்டாம் இடம் பிடிப்பார் என்றும் அமமுக வேட்பாளர் செந்தில்நாதன் 17% வாக்குகளைப் பெறுவார் என்றும்.  நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ஜல்லிக்கட்டு ராஜேஷ் 5% வாக்குகளைப் பெறுவார் என்றும் முடிவுகள்கூறுகின்றன. 1% பேர் கருத்து எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ளனர். ஆக…, திருச்சி தொகுதியில் இந்த முறை துரை வைகோவின் தீப்பெட்டியே ஒளிர்கிறது.  https://minnambalam.com/2024-election-mega-survey-results/minnambalam-mega-survey-2024-mdmk-candidate-won-at-trichy-and-admk-ammk-placed-next/
    • ரஷ்ய இராணுவத்தில் பெருமளவு இலங்கையர் : உக்ரேனுக்கு எதிரான போரில் பலர் பலி ரஷ்ய இராணுவத்தில் இணைந்துள்ள இலங்கையர்கள் தொடர்பில் தகவல்களை வழங்குமாறு ரஷ்யாவிலுள்ள இலங்கை தூதரகம் அந்நாட்டு பாதுகாப்பு அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளது. வெளிநாடுகளிலிருந்து ரஷ்ய இராணுவத்திற்கு ஆட்களை இணைத்துக் கொள்வது இன்றைய காலத்தில் வழக்கமான ஒரு விடயமாக காணப்படுவதாக ரஷ்யாவுக்கான இலங்கைத் தூதுவர் ஜனிதா லியனகே என குறிப்பிட்டுள்ளார். இவர்களில் பெரும்பாலானோர் சுற்றுலா விசாவில் ரஷ்யாவுக்கு சென்று இராணுவ பணியில் இணைந்து கொள்வதாக அவர் குறிப்பிட்டுள்ளார். ரஷ்ய இராணுவம் சுற்றுலா விசாவில் இலங்கையர்களும் ரஷ்ய இராணுவத்தில் இணைந்து கொள்வதாக தகவல் கிடைத்துள்ளதாக ஜனிதா லியனகே குறிப்பிட்டுள்ளார். ஆனால் இது தொடர்பான சரியான தகவல்கள் தூதரகத்திடம் இல்லாததால், அந்நாட்டு இராணுவ சேவையில் இலங்கையர்கள் பணியாற்றினால் அது தொடர்பான தகவல்களை வழங்குமாறு ரஷ்ய பாதுகாப்பு பிரதானிகளிடம் தூதரகம் கோரிக்கை விடுத்துள்ளது. இலங்கையர்கள் பலி ரஷ்ய படைகளுடன் இலங்கையர்கள் இணைந்து கொண்டால் அது தொடர்பில் தூதரகத்திற்கு அறிவிக்குமாறு அனைவரும் கேட்டுக் கொள்ளப்படுவதாகவும் ரஷ்யாவுக்கான இலங்கைத் தூதுவர் தெரிவித்துள்ளார். கடந்த சில நாட்களாக ரஷ்ய இராணுவத்தில் இருந்த இலங்கையர்கள் பலர் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்களில் செய்திகள் வெளியாகியிருந்தன. எவ்வாறாயினும், தூதரகத்திடம் தகவல் இல்லாததால், உயிரிழக்கும் இலங்கையர்கள் அல்லது காயமடையும் இலங்கையர்கள் தொடர்பிலும் கண்டுபிடிக்க முடியவில்லை என ஜனிதா லியனகே குறிப்பிட்டுள்ளார்.   https://akkinikkunchu.com/?p=273802
    • பிளவை நோக்கி தமிழரசுக் கட்சி? – பேராசிரியா் அமிா்தலிங்கம் April 16, 2024   ஜனாதிபதித் தோ்தலை நோக்கி நாடு சென்று கொண்டிருக்கும் நிலையில், தமிழ்க் கட்சிகள் சிலவற்றால் முன்வைக்கப்பட்ட தமிழ்ப் பொது வேட்பாளா் என்ற கருத்து, வாதப் பிரதிவாதங்களுக்கு உள்ளாகியுள்ளது. மறுபுறம் தமிழரசுக் கட்சிக்குள் உருவாகியிருக்கும் முரண்பாடு அந்தக் கட்சி பிளவுபடுமா என்ற கேள்வியை எழுப்பியுள்ளது. தமிழ்த் தேசியக் கட்சிகள் அனைத்தையும் ஒரணியில் இணைக்கும் முயற்சிகளையும் இது பலவீனப்படுத்தியுள்ளது. இந்தப் பின்னணியில் கொழும்பு பல்கலைக்கழக பேராசிரியா் கோபாலபிள்ளை அமிா்தலிங்கம் வழங்கிய நோ்காணல். கேள்வி – பொதுத் தோ்தல்தான் முதலில் நடத்தப்பட வேண்டும் என்பதற்கான அழுத்தத்தை பொது ஜன பெரமுன கொடுத்தது. ஆனால் இப்போது ஜனாதிபதித் தோ்தல்தான் முதலில் நடத்தப்படும் என்பது பெருமளவுக்கு உறுதியாகியிருக்கின்றது. இந்த முரண்பாடான போக்கிற்கு காரணம் என்ன? பதில் – பொது ஜன பெரமுனவைப் பொறுத்தவரையில் ஜனாதிபதித் தோ்தலுக்கு முன்னதாக பொதுத் தோ்தலை நடத்த வேண்டும் என்று முயற்சிக்கின்றாா்கள். பொதுத் தோ்தலின் மூலம் சில ஆசனங்களைக் கைப்பற்றி எதிா்கால ஜனாதிபதி தமக்கு எதிரான நடவடிக்கைகளை எடுக்கவிடாமல் தடுக்கலாம் என அவா்கள் சிந்திக்கின்றாா்கள். ஜனாதிபதித் தோ்தல் முதலில் நடைபெற்று அதில் யாா் ஜனாதிபதியாக வந்தாலும், அதன் பின்னா் வரக்கூடிய பாராளுமன்றத் தோ்தலில் பொதுஜன பெரமுன வெற்றிபெறுவது மிகவும் கடினமானது. மிகவும் குறைந்த ஆசனங்களையே அவா்களினால் பெறக்கூடியதாக இருக்கும். அதனைவிட, அவா்களுடைய கட்சியைச் சோ்ந்த சிலா் கூட, ஜனாதிபதியாக வருபவரின் கட்சியுடன் இணைந்துகொள்வதற்கும் வாய்ப்புள்ளது.   அவ்வாறான சந்தா்ப்பத்தில் பாராளுமன்றத்தில் அவா்களுடைய பலம் கடுமையாக வீழ்ச்சியடைந்து எதிா்காலத்தில் வரக்கூடிய அரசாங்கங்கள் தம்மீதான சட்ட நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தலாம் என்று அஞ்சுகிறாா்கள். அதனால் அவா்கள் தங்களைப் பாதுகாப்பதற்கு – தமது எதிா்காலத்தைப் பாதுகாப்பதற்கு பொதுத் தோ்தல் முதலில் நடைபெற வேண்டும் என்று விரும்புகின்றாா்கள். அவ்வாறு நிகழ்ந்தால், பாராளுமன்றத்தில் எந்வொரு கட்சிக்கும் அறுதிப் பெரும்பான்மை கிடைக்காமல் போகலாம். புதிதாக வரப்போகும் ஜனாதிபதிக்கும் இதனால் மிகப் பெரிய சிக்கல் உருவாகும். பாராளுமன்றம் தொங்கு பாராளுமன்றமாக அமையலாம். பாராளுமன்றத்தை நான்கு வருடங்களுக்குக் கலைக்கவும் முடியாது. அது நாட்டில் பாரிய சமூக, அரசியல், பொருளாதாரப் பிரச்சினைகளையும் உருவாக்கும் என்பதையும் ஜனாதிபதி உணா்ந்திருக்கின்றாா். கேள்வி – ஜனாதிபதித் தோ்தலை நோக்கி நாடு சென்றுகொண்டிருக்கும் நிலையில் தமிழ்த் தேசியக் கட்சிகள் மத்தியில் ஒரு குழப்ப நிலை ஏற்பட்டுள்ளது. யாயைாவது ஆதரிப்பதா, பகிஷ்கரிப்பதா என்ற கேள்விகளுக்கு மத்தியில் தமிழ்ப் பொது வேட்பாளா் ஒருவரை களமிறக்குவது என்பது குறித்தும் முக்கியமாகப் பேசப்படுகின்றது. பொதுவேட்பாளா் என்ற விடயத்தைப் பொறுத்தவரையில் உங்கள் பாா்வை என்ன? பதில் – 1931 ஆம் ஆண்டு டொனமூா் அரசியலமைப்பின் படி இலங்கையிலுள்ள அனைவருக்கும் வாக்குரிமை வழங்கப்பட்டு தோ்தல் நடைபெற்ற போது அது தமிழ் மக்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் அது தமிழ் மக்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் என்ற ரீதியில் யாழ். மாவட்ட மக்கள் அந்தத் தோ்தலைப் புறக்கணித்தாா்கள். அன்று முதல் பல்வேறுபட்ட புறக்கணிப்புக்களை தமிழ் மக்கள் செய்திருக்கின்றாா்கள். இப்போது பொதுவேட்பாளா் ஒருவரை நிறுத்துவது என்பதும், நாம் சிங்கள வேட்பாளா்கள் எவருக்கும் வாக்களிக்க மாட்டடோம் என வாக்களிப்பைப் புறக்கணிப்பதற்கு சமமானதுதான். அவ்வாறு பொதுவேட்பாளராக தமிழா் ஒருவரை களமிறக்கும் போது, அவரால் வெற்றிபெற முடியாது என்பதைத் தெரிந்துதான் தமிழ் மக்கள் அவருக்கு வாக்களிக்க வேண்டும். குமாா் பொன்னம்பலம் ஒரு தடவை ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிட்டவா். அவருக்கும் தமிழ்ப் பகுதிகளில் கூட அதிகளவு வாக்குகள் கிடைக்கவில்லை. இந்த விடயத்தைப் பொறுத்தவரையில் இரண்டு விடயங்கள் கவனிக்கப்பட வேண்டியவை. தமிழ்க் கட்சிகள் அனைத்தும் இணைந்து இதற்கான தீா்மானத்தை எடுப்பதற்கான வாய்ப்புக்கள் இல்லை. தமிழரசுக் கட்சி ஒருபுறம் இருக்கிறது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலிருந்து பிரிந்து சென்றவா்கள் மற்றொரு அணியாக இருக்கின்றாா்கள். கஜேந்திரகுமாா் பொன்னம்பலம் மற்றொரு அணியில் இருக்கின்றாா். நீதியரசா் விக்னேஸ்வரனின் அணி மற்றொன்றாக இருக்கின்றது. இந்த நான்கு தரப்புக்களும் இணைந்து ஓரணியாக வரக்கூடிய வாய்ப்புக்கள் இல்லை. வேறுபட்ட முடிவுகளைத்தான் எடுக்கப்போகின்றாா்கள். இதனைவிட பொது வேட்பாளா் எந்தளவுக்குப் பொது வேட்பாளராக இருப்பாா் என்றொரு கேள்வி இருக்கின்றது. என்ன முடிவை எடுத்தாலும் தமிழ் மக்களுக்கு அதனால் ஏற்படக்கூடிய சாதக, பாதக அம்சங்களை அவா்கள் தெளிவாகக்கூற வேண்டும். பொது வேட்பாளரை நாங்கள் நிறுத்துகிறோம். நீங்கள் வாக்களியுங்கள். பெரும்பான்மை இன வேட்பாளா்களை நாங்கள் நிராகரிக்கின்றோம். அதனால் தமிழ் மக்களுக்கு சாதகமானவை என்ன பாதகமானவை என்ன என்பதையெல்லாம் இவா்கள் தெளிவாகச் சொல்ல வேண்டும். கேள்வி – தமிழ் அரசியல் கட்சிகள் தவிா்ந்த சிவில் அமைப்புக்கள் இந்த விடயத்தில் செல்வாக்கு செலுத்தக்கூடியவையாக இருக்குமா? பதில் – சிவில் அமைப்புக்கள் அவ்வாறு கூறலாம். ஆனால் எம்மிடம் அவ்வாறு பலம்பொருந்திய சிவில் அமைப்புக்கள் இருப்பதாகத் தெரியவில்லை. அதேவேளையில், அரசியல் கட்சிகள் ஒரு முடிவை எடுக்க சிவில் அமைப்புக்கள் இன்னொரு முடிவை எடுப்பது போன்றன தமிழ் மக்களால் ஏற்றுக்கொள்ளப்படும் என்று நான் நினைக்கவில்லை. சிவில் அமைப்புக்கள் அரசியல் கட்சிகளை ஒரு குடையின் கீழ் கொண்டு வந்து ஒரு இலக்கை நோக்கி நகா்த்துவதற்கு முயற்சிக்கலாம். ஆனால், இது எவ்வாறு நடைபெறப்போகின்றது என்பதற்கு காலம்தான் பதில் சொல்லப்போகின்றது. கேள்வி – தமிழரசுக் கட்சிக்குள் உருவாகிய முரண்பாடு இன்று ஒரு பிளவாகி நீதிமன்றத்தின் முன்பாகச் சென்றுள்ளது. இந்தப் பிளவு தமிழ் மக்களுடைய அரசியலில் எந்தளவுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும்? பதில் – சம்பந்தன் அரசியலைவிட்டு விலகும் போது, தமிழரசுக் கட்சிக்குள் பாரிய பிளவு ஏற்படும் என்பது முன்னரே அனுமானிக்கப்பட்ட ஒன்றுதான். ஏனெனில் அவா் தனக்கு அடுத்ததாக ஒரு தலைவரை உருவாக்கத் தவறிவிட்டாா். தந்தை செல்வா, அமிா்தலிங்கத்திடம் தலைமையைக் கொடுக்கும் போது தமிழ்த் தலைமை பலமாக இருந்தது. அவ்வாறான ஒன்றை சம்பந்தன் செய்வதற்குத் தவறிவிட்டாா். பலரும் விரும்புகிறாா்களோ இல்லையோ, தமிழரசுக் கட்சி தமிழா்களுக்குத் தேவையான ஒரு முதன்மையான கட்சி. ஆனால், இன்று பலா் ஒதுங்கிவிட்டாா்கள். இலங்கை அரசியலில் செல்வந்தா்கள், கல்விமான்கள் வாக்களிப்புக்குச் செல்வதில்லை. அதேபோல அரசியலுக்கு வருவதற்குப் பலா் பின்னடிக்கின்றாா்கள். ஏனெனில் அரசியல் சிக்கலான ஒன்றாக இருக்கின்றது. அந்தவகையில் பலா் வெளியில் இருக்கின்றாா்கள். தமிழரசுக் கட்சியில் ஜனநாயகம் என்று கதைத்தாலும், அரசியல் கட்சிகளின் தலைவா்கள் வாக்களிப்பின் மூலமாகத் தெரிவு செய்யப்படுவதில்லை. சஜித் பிரேமதாச, ரணில் விக்கிரமசிங்க ஆகியோருக்கு இடையில் போட்டி வந்த போது தோ்தல் நடைபெறவில்லை. அண்மையில் இந்திய காங்கிரஸ் கட்சியில் சசி தருா் தலைமைப் பதவிக்காக தோ்தலில் கேட்க விரும்பினாா். ஆனால், காா்க்கேயைத்தான் காந்தி குடும்பம் தலைமைப் பதவிக்குக் கொண்டுவந்தது. சசி தருா் இளமையானவா் தமக்கு சவாலாக அமையலாம் என அவா்கள் கருதினாா்கள். இருவருக்கும் இடையில் தோ்தல் நடைபெற்றிருந்தால் சில சமயம் சசி தருா் வெற்றி பெற்றிருக்கக்கூடும். அரசியல் கட்சிகள் ஜனநாயகம் குறித்து பேசிக்கொண்டாலும் இவ்வாறு தோ்தல் நடத்தப்படுவதில்லை. ஏனெனில் தோல்வியடைந்த பிரிவினா் எப்போதும் பிரச்சினையாக இருப்பாா்கள். அதனால்தான் ஏகமனதான தெரிவுக்கு அனைத்துக் கட்சிகளுமே முயற்சிக்கின்றன. அதனால், தமிழரசுக் கட்சியில் இடம்பெற்ற தோ்தல் ஜனாநாயகத் தன்மையானது என சிலா் கூறுவதற்கு முற்பட்டாலும், அந்தத் தலைமை தெரிவு செய்யப்பட்ட பின்னா் கட்சி பிளவுபடுவதைக் காணக்கூடியதாக இருக்கின்றது. இதனைத் தவிா்ப்பதற்காகத்தான் ஏகமனதான தெரிவை நோக்கி கட்சிகள் செல்கின்றன. இப்போது பொது வேட்பாளா் விடயத்தை எடுத்துக்கொண்டாலும், இந்த இரண்டு அணியினரும் மாறுபட்ட நிலைப்பாட்டை எடுக்கக்கூடும். ஒரு சிக்கலான நிலைமையில் தமிழினம் இருக்கின்றது என்பது மட்டும் தெளிவாகத் தெரிகின்றது.   https://www.ilakku.org/பிளவை-நோக்கி-தமிழரசுக்-க/
    • மூட நம்பிக்கையால் ஆசிரியையின் உயிர் பறிபோனது! adminApril 15, 2024   பில்லி சூனியம் குணமாக்கல் சிகிச்சைக்காக மத சபையில் தங்க வைக்கப்பட்டிருந்த ஆசிரியை ஒருவர் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை (14.04.24)  உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் ஆனைக்கோட்டையை சேர்ந்த , அராலி முருகமூர்த்தி பாடசாலை ஆங்கில ஆசிரியையான 37 வயதுடைய  கோவிந்தசாமி கல்பனா   என்பவரே உயிரிழந்துள்ளார். குறித்த ஆசிரியைக்கு கடந்த 05ஆம் திகதி முதல் உடல்நல பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதற்கு காரணம் யாரோ பில்லி சூனியம் வைத்து விட்டார்கள் என நம்பியுள்ளனர். அதனால் இளவாலை பகுதியில் உள்ள மத சபை ஒன்றுக்கு சென்ற போது , பில்லி சூனியம் வைக்கப்பட்டுள்ளது அவற்றை அகற்ற, குணமாக்கல் வழிபாடுகள், பரிகாரங்கள் செய்ய வேண்டும் என மத சபையில் தங்க வைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் நேற்றைய தினம் வாந்தியும், வயிற்று வலியும் ஏற்பட்டதை அடுத்து, ஆபத்தான நிலையில் தெல்லிப்பழை வைத்தியசாலையில் மத சபையின் போதகரினால் அனுமதிக்கப்பட்டுள்ளார் அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். உயிரிழப்புக்கான காரணம் தெரியவராத நிலையில் , உடற்கூற்று மாதிரிகள் பரிசோதனைக்காக கொழும்புக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது அதேவேளை சடலத்தை புதைக்குமாறு அறிவுறுத்தி உறவினர்களிடம் சடலம் ஒப்படைக்கப்பட்டது.   https://globaltamilnews.net/2024/201801/
    • வடக்கு-கிழக்கில் தமிழ்த்தேசியம் பலவீனமாக உள்ளது. எதிர்ப்பு அரசியலால் சலித்துப்போனவர்கள் அதிகரித்துள்ளார்கள். பொருளாதார நெருக்கடியில் இருந்து தப்ப வெளிநாடுகளுக்கு ஓடமுயல்கின்றார்கள். இந்த நிலையில் மக்கள் இயல்பாகவே தமது தனிப்பட்ட வாழ்வின் முன்னேற்றத்திற்கு ஸ்திரமான ஆட்சியை யார் தருவார் என்று பார்ப்பார்களே தவிர, ஒரு திரளாக கொள்கைக்கு வாக்களிக்கமாட்டார்கள்.  ஆகவே, சிங்களத் தலைவர்கள்  “தமிழர்கள் தனிநாட்டுக் கோரிக்கையை ஆதரிக்கவில்லை” என்று சொன்னால் அதை மறுதலிக்கமுடியாத நிலைதான் ஒரு பொதுத் தமிழ் வேட்பாளர் மூலம் உருவாகும். அது ஒரு வகையில் தமிழரின் தலைமை இனப்பிரச்சினைக்கு என்ன வகையான தீர்வை முன்னெடுக்கவேண்டும் என்பதை தீர்மானிக்கவும் உதவலாம்!
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.