Jump to content

மொபைல் ஹாட்ஸ்பாட் -ஏன்...எதற்கு...எப்படி? #GadgetTips


Recommended Posts

மொபைல் ஹாட்ஸ்பாட் -ஏன்...எதற்கு...எப்படி? #GadgetTips

 

ஹாட்ஸ்பாட்

ஜென் z தலைமுறை மட்டுமில்லாமல், எல்லாரும் விரும்பும் முக்கியமான ஸ்பாட் ஹாட்ஸ்பாட். மொபைல் டேட்டாவை மற்ற கேட்ஜெட்களுடன் பகிர்ந்து கொள்ள உதவும் டெக்னாலஜியே ஹாட்ஸ்பாட். ஜியோ வந்தபின் மொபைல் மூலமாக இணையத்தை கணினியுடன் இணைப்பவர்கள் அதிகரித்திருக்கிறார்கள்.

ஹாட்ஸ்பாட் என்பது ரேடியோ சிக்னல்கள் கிடைக்கக்கூடிய குறிப்பிட்ட பகுதியாகும்.  3G, 4G சப்போர்ட் செய்யும் மொபைல் இதற்கு ஏதுவானதாக இருக்கும். இதற்கு டெத்தரிங் என்று பெயர். இதற்கு நம்முடைய மொபைலிலும், கணினியிலும் வைபை வசதி இருந்தால் மட்டும் போதுமானது. இதற்கென தனியாக எந்த ஒரு மென்பொருளும் தேவையில்லை.

இந்த வசதிகளை ஆப்பிள், விண்டோஸ், ஆண்ட்ராய்ட் மற்றும் பிளாக்பெர்ரி மொபைல்கள் வழங்குகின்றன. அனைத்து மொபைலிலும் இந்த வசதிகள் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. சில மொபைல்கள் USB கேபிள் வழியாக கணினியை இணையத்துடன் இணைக்க வழி செய்கிறது.

ஹாட்ஸ்பாட்டை ஆன் செய்வதற்கு முன் நம்மிடம் போதுமான அளவில் டேட்டா உள்ளதா என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும். இதற்கு பாஸ்வேர்ட் போட்டு வைப்பதின் மூலம் அடுத்தவர்கள் நம்முடைய இன்டர்நெட்டை பயன்படுத்துவதை தடுக்க முடியும்.

ஆண்ட்ராய்ட் மொபைலில் வைஃபை ஹாட்ஸ்பாட் ஆன் செய்வது எப்படி ?

2.2 இயங்கு தளத்தில் இயங்கும் மொபைல் மற்றும் டேப்லட்களில் இந்த வசதி உள்ளது. இதனைக்கொண்டு 5 பேர் வரை ஹாட்ஸ்பாட்டை பயன்படுத்த இயலும். சுமார் இருபது மீட்டர் வரை இந்த ஹாட்ஸ்பாட் வேலை செய்யும். Settings> Wireless & Networks > Portable WiFi Hotspot சென்று க்ளிக் செய்வதின் மூலம் ஆன் செய்து பயன்படுத்தலாம்.

hotspot1_13596.jpg

ஐ போன் மொபைலில் வைஃபை ஹாட்ஸ்பாட் ஆன் செய்வது எப்படி ?

ஐபோனில் இது personal hotspot என்று அழைக்கப்படுகிறது. Settings> General> Network> Personal Hotspot> WiFi Hotspot சென்று க்ளிக் செய்து பயன்படுத்தலாம்.

Setup-iPhone-as-a-Mobile-hotspot-in-iOS-

விண்டோஸ் மொபைலில் வைஃபை ஹாட்ஸ்பாட் ஆன் செய்வது எப்படி ?

விண்டோஸ் மொபைலில் இது internet sharing என்று அழைக்கப்படுகிறது. Start screen> App List> Settings> Internet sharing சென்று க்ளிக் செய்வதன் மூலமாக பயன்படுத்தலாம்.

பிளாக்பெர்ரி மொபைலில் வைஃபை ஹாட்ஸ்பாட் ஆன் செய்வது எப்படி ?

குறைந்த பட்சம் ஐந்து பேர் வரை இதன் மூலம் இன்டர்நெட்டை பயன்படுத்த முடியும். Manage connections> WiFi> Mobile hotspot செல்வதின் மூலம் ஹாட்ஸ்பாட்டை பயன்படுத்தலாம்.

 ஹாட்ஸ்பாட் பயன்படுத்தும் போது கவனிக்க வேண்டியவை

ஹாட்ஸ்பாட்டை ஆன் செய்யும் போது அதில் Network SSID என்பதில் தங்கள் மொபைலின் பெயர் கொடுக்கப்பட்டிருக்கும். விருப்பத்துக்கு ஏற்ப நம்முடைய பெயரைக்கூட வைத்துக்கொள்ளலாம்.

Security ல்  நம்முடைய இணைப்பை யார் பயன்படுத்தலாம் என்பதை தீர்மானிக்கலாம். எல்லோரும் பயன்படுத்தலாம் என்றால் open என்பதை தெரிவு செய்யலாம். குறிப்பிட்ட நபர்களுக்கு மட்டுமென்றால்  WAP2PSK க்ளிக் செய்து பாஸ்வேர்டு போட்டுக் கொள்ளலாம்.

ஹாட்ஸ்பாட்டை பயன்படுத்தும் போது அதிக இன்டர்நெட் தீரும் என்பதால் சில செயலிகளின் ஆட்டோ அப்டேட்ஸ்களை ஆப் செய்து வைக்க வேண்டும். இது அதிக இன்டர்நெட் பயன்பாட்டினைக் குறைக்கும்.

ஹாட்ஸ்பாட்டை பயன்படுத்தாத நேரங்களில் அதை அனைத்து வைப்பது நல்லது.விரைவில் பேட்டரி குறைவதை இது தடுக்கும்.

http://www.vikatan.com/news/information-technology/76357-how-to-setup-safe-and-secured-mobile-hotspot.art

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நான் நினைக்கின்றேன் அவருக்கு தெரியும் இது புதிது என்று.  ஆனால் பையனின் கருத்தை மட்டும் வைத்து எப்படி சம்பவம் பழையதுதான் என்று அடிச்சு சத்தியம் பண்ணினாரோ தெரியவில்லை. ஓருவர் இங்கு எழுதுவதை மட்டும் வைத்து தனது நிலைப்பாட்டினை மாற்றும் ஆள் அல்ல அவர்.0
    • ஈரான் ஜனாதிபதியின் இலங்கை வருகை : கண்கானிப்பு நடவடிக்கையில் அமெரிக்க உளவுத்துறை. ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசியின் இலங்கை வருகையை இஸ்ரேலின் மொசாட் புலனாய்வு சேவையும், அமெரிக்க எப்.பி.ஐ உளவுத்துறையும் கண்காணித்து வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. உமா ஓயா பல்நோக்கு அபிவிருத்தித் திட்டத்தின் திறப்பு விழாவில் பிரதம அதிதியாக கலந்து கொள்வதற்காக ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி எதிர்வரும் புதன்கிழமை இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார். இந்நிலையில், இலங்கையில் விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் நடைமுறையில் உள்ளதோடு, ஈரானிய சிரேஷ்ட பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் குழுவொன்று அண்மையில் இலங்கைக்கு வருகை தந்து விசாரணைகளை மேற்கொண்டிருந்தது. ஈரான் ஜனாதிபதியின் இலங்கை விஜயம் தொடர்பில் இலங்கை அரசாங்கத்திற்கு அமெரிக்கா எதிர்ப்பு தெரிவித்துள்ளதாகவும், சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அதேவேளை, கொழும்பிற்கு அழைத்து வரப்படும் ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் கலந்துரையாடலில் ஈடுபடவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1379001
    • முற்றிலும் உண்மை ஆனால் மீசாலையில் வ‌சிக்கும் என‌து அத்தை வ‌ய‌தான‌ கால‌த்திலும் சிங்க‌ள‌வ‌னின் அட‌க்கு முறைய‌ தாண்டி த‌மிழ் தேசிய‌ கூட்ட‌மைப்புக்கு தொட‌ர்ந்து ஓட்டு போடுகிறா அதோட‌ அத்தைய‌ ஏதோ ஒரு ச‌ம்ப‌வ‌த்தில் சாலையில் வைச்சு மிர‌ட்டினார்க‌ள் அத்தை அவேன்ட‌ கைய‌ த‌ள்ளி விட்டு வீட்டுக்கு ந‌ட‌ந்து வ‌ந்த‌வா 2009க‌ட‌சியில் ட‌க்கிள‌ஸ்சின் ஆட்க‌ள் வீடு புகுந்து நெஞ்சில் துப்பாக்கிய‌ வைச்சு மிர‌ட்டின‌வை ஆனால் அவ‌ன் ப‌ய‌ப்பிட‌ வில்லை பிற‌க்கு உற‌வுக‌ள் சொல்ல‌ அர‌சிய‌லில் இருந்து முற்றிலுமாய் வில‌கி விட்டான்..............................
    • "ஊசிப் போன வடை" என்று, யாரோ... உருட்டிக் கொண்டு திரிந்தார்கள். 😂 எல்லாம், பொய்யா... கோப்பால். 🤣
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.