Jump to content

கர்நாடகா தமிழர்கள் தமிழகத்துக்கு படையெடுப்பு


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

கர்நாடகா தமிழர்கள் தமிழகத்துக்கு படையெடுப்பு

fpn03dn5.jpg

மேட்டூர்: காவிரி நடுவர் மன்ற இறுதித்தீர்ப்பு வெளியானதை தொடர்ந்து, நிலவும் பதட்டம் மற்றும் அச்சம் காரணமாக கர்நாடகா வாழ் தமிழர்கள் தற்போது தமிழகத்துக்கு படையெடுத்து வருகின்றனர். இந்நிலையில், தமிழக வாகனங்கள் கர்நாடகா மாநிலத்துக்குள் நுழைய அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

கர்நாடகா அரசு காவிரி ஆற்றில் கிடைக்கும் நீரில் ஆண்டுதோறும் 270 டி.எம்.சி., நீரை பயன்படுத்த வேண்டும். தமிழகத்துக்கு 419 டி.எம்.சி., நீரை விடுவிக்க வேண்டும் என காவிரி நடுவர் நீதிமன்றம் நேற்று இறுதித்தீர்ப்பு வழங்கியது. தமிழகத்துக்கு சாதகமாக நடுவர் நீதிமன்றம் தீர்ப்பு கூறியதால், கர்நாடகாவில் கடும் பதட்டம் நிலவுகிறது. கர்நாடகா மாநிலத்தின் தமிழர்கள் அதிகமாக வாழும் பகுதியில் பாதுகாப்புக்காக வெளிமாநில போலீஸார் குவிக்கப்பட்டும், கடும் பதட்டமும், அச்சமும் நீடிக்கிறது. சேலம் மாவட்டம், மேட்டூரில் இருந்து 28 கி.மீ., துõரத்தில் தமிழக கர்நாடகா எல்லையில் உள்ள பாலாறு செக் போஸ்ட்டின் ஒரு பகுதியில் கர்நாடகா போலீஸாரும், மறு பகுதியில் தமிழக போலீஸாரும் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டுள்ளனர். கர்நாடகாவில் நுழையும் தமிழக வாகனங்கள் மீது கன்னடர்கள் தாக்குதல் நடத்தக்கூடும் என்பதால், கர்நாடகாவுக்குள் பஸ்களை இயக்க வேண்டாம் என கர்நாடகா போலீஸார் தமிழக அரசு போக்குவரத்து கழக அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளனர். இதனால்,நேற்று மேட்டூரில் இருந்து பெங்களூரூ, மைசூரூ, கொள்ளேகால், மாதேஸ்வரன் மலை செல்லும் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக பஸ்கள் அனைத்தும் நிறுத்தப்பட்ன. மேலும், தமிழகத்தில் இருந்து மாதேஸ்வரன் மலை மற்றும் மைசூரூக்கு சென்ற தமிழக சுற்றுலா பயணிகளின் பஸ்களை கர்நாடகா போலீஸ் எல்லையில் தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பினர். இதுபோல், தமிழகத்தில் இருந்து கர்நாடகாவுக்கு செல்ல முயன்ற லாரி, வேன், ஜீப், இரு சக்கர வாகனங்கள் என அனைத்தும், கர்நாடகா போலீஸாரால் திருப்பி அனுப்பபட்டன.

அதுபோல், கர்நாடகாவில் உள்ள மாதேஸ்வரன் மலையில் இருந்து தமிழகத்தில் உள்ள கோவிந்தபாடி கிராமத்துக்கு இயக்கப்படும் கர்நாடகா மாநிலத்தை சேர்ந்த பஸ்ஸை தமிழகத்தின் எல்லையிலேயே போலீஸார் தடுத்து நிறுத்தினர். இதனால், கர்நாடகாவில் இருந்து தமிழகத்துக்கு குடும்பத்துடன் வந்த தமிழர்கள் அனைவரும், எல்லையில் இருந்து ஆறு கி.மீ., துõரத்தில் உள்ள கோவிந்தபாடிக்கு நடந்து செல்ல வேண்டிய அவலநிலை ஏற்பட்டது. காவிரி நடுவர் மன்ற இறுதித்தீர்ப்பை தொடர்ந்து, பாலாறு முதல் மேட்டூர் அணை வரை பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. மேட்டூர் அணை மற்றும் பூங்காவுக்குள் பயணிகள் நுழைய தடை விதிக்கப்பட்டது. சேலம் மாவட்ட எஸ்.பி., பாஸ்கரன் மேட்டூரில் தங்கி இருந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டார். மேலும், கர்நாடகா எல்லைப்பகுதி மற்றும் மேட்டூர் அணை ஆகிய இடங்களுக்கு சென்று பாதுகாப்பு பணிகளை பார்வையிட்டார். பின்னர் அவர் கூறுகையில், ""காவிரி தீர்ப்பினால் ஏற்பட்டுள்ள பதட்டம் தணியும் வரை பாதுகாப்பு நீடிக்கும்,'' என மாவட்ட எஸ்.பி., பாஸ்கரன் தெரிவித்தார். இந்நிலையில், காவிரி நடுவர் மன்ற இறுதித்தீர்ப்பு காரணமாக, கர்நாடகாவில் பாதுகாப்பற்ற இடங்களில் வசிக்கும் தமிழர்கள், குடும்பத்துடன் தமிழத்துக்கு வந்த வண்ணம் உள்ளனர். தமிழர்களை ஏற்றி வரும் கர்நாடகா பஸ்கள், தமிழக எல்லையிலேயே நிறுத்தப்படுகிறது. இதனால், தமிழக எல்லைக்குள் நுழையும் தமிழ் குடும்பங்கள் அங்கிருந்து ஆறு கி.மீ., துõரத்தில் உள்ள கோவிந்தபாடி கிராமத்துக்கு நடந்து வந்து பஸ் பிடித்து மேட்டூர் வழியாக தங்கள் சொந்த ஊர்களுக்கு புறப்பட்டு செல்கின்றனர். இதனால், தமிழகத்தின் எல்லையான பாலாறு வரை தமிழக அரசு பஸ்களை இயக்க வேண்டும் என கர்நாடகா தமிழர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

http://www.dinamalar.com/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழன்களுக்கு எங்கும் எப்பவும் நக்குத்தண்ணி வாழ்க்கையாப்பா? :angry:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழன்களுக்கு எங்கும் எப்பவும் நக்குத்தண்ணி வாழ்க்கையாப்பா? :angry:

:angry: :angry:

Link to comment
Share on other sites

போர போக்கைப் பார்த்தால் ஒரு காலத்தில் தமிழீழம் கிடைத்தபின் தமிழீழத்திற்கு கர்நாடகா மற்றும் தமிழக அகதிகளின் வரவை எதிர்பார்க்க முடியுமா?

Link to comment
Share on other sites

மாப்பு

வரும் சகோதரரை வரவேற்போம் எமது சகோதரர்களின் உரிமக்காக குரல் கொடுப்போம் குரலோடு மட்டுமல்ல செய்கையாலும் நன்மை செய்யும் தமீழீழம் தன் தந்தை மண்ணுக்கு

Link to comment
Share on other sites

மாப்பு

வரும் சகோதரரை வரவேற்போம் எமது சகோதரர்களின் உரிமக்காக குரல் கொடுப்போம் குரலோடு மட்டுமல்ல செய்கையாலும் நன்மை செய்யும் தமீழீழம் தன் தந்தை மண்ணுக்கு

நன்றி ஈழவன்

Link to comment
Share on other sites

ஏற்கனவே உச்சநீதி மன்றத்தீர்ப்பை கேரழ அரசு தூக்கி எறிந்துவிட்டு அராஜகம் பண்ணுகிறது, அது சம்பந்தமாக, தமிழ்நாடு அரசினால் தீர்க்கமான எந்த நடவடிக்கையையும் எடுக்க முடியவில்லை. இப்போது காவிரி சம்பந்த்மான தீர்ப்பு, கர்நாடகத்தில் இருந்து தண்ணீரைதிறந்து விடுகின்றதோ என்னவோ தமிழர்களைத்துரத்திவிட்டு இருக்கிறது. அயல் திராவிட மாநிலத்தவர்களே இப்படி திராவிடக்கட்சித்தலைவர்களுக

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழருக்கு என்று குரல் கொடுக்க ஒரு தமிழ் நாடு இந்த உலகில் இல்லையே

6 கோடி தமிழர் இருந்து என்ன 50 லட்ட்சம் தமிழராக இருந்தாலும் தனி நாடாக இருந்து எமது உறவுகளுக்காக குரல் கொடுப்பது இன்றைய தேவை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

யாழ்களத்தில் இளங்கோ சொன்ன மாதிரி தமிழ்நாட்டில் வேறு மொழிக்காரன் வந்தாலும் அவன் அந்த மொழிக்காரனாகவே இருக்கிறான் ஆனா எமது தமிழ்நாட்டு தமிழர்கள் மட்டும் தான்( கிராமத்தை தவிர்த்து) ஆங்கிலம் பேசி பேசி தமிழை மறக்கிறான்.

தமிழ்நாட்டு மக்கள் மட்டும் இல்லை உலகில் இருக்கும் அனைத்து தமிழர்களும் வடுவாக ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும் தமிழ்தேசியம் என்பது தனியே ஈழத்தமிழருக்கு மட்டும் சொந்தம் இல்லை உலகில் உள்ள அனைத்து தமிழரின் தாகம் அது ஈழத்தமிழனுக்கும் குரல் கொடுங்கள் உங்கள் கெளரவமான வாழ்க்கைக்கு போராடுங்கள்..

Link to comment
Share on other sites

போர போக்கைப் பார்த்தால் ஒரு காலத்தில் தமிழீழம் கிடைத்தபின் தமிழீழத்திற்கு கர்நாடகா மற்றும் தமிழக அகதிகளின் வரவை எதிர்பார்க்க முடியுமா?

நினைப்பு தான் புளைப்பை கெடுக்கும்

Link to comment
Share on other sites

நினைப்பு தான் புளைப்பை கெடுக்கும்

அட நல்ல பழமொழியாய் இருக்கிறது. உங்களுக்குத் தெரிந்த தமிழ் பழமொழிகளை சொல்லுங்கள் பார்க்கலாம் பகுதியில் இதை இணைத்துவிடுங்கள்!

Link to comment
Share on other sites

தமிழன் எண்டால் எல்லா இடமும் இழக்காரமாய் போயிட்டுது இதுக்கு எல்லாம் முடிவு இருக்குது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழன் எண்டால் எல்லா இடமும் இழக்காரமாய் போயிட்டுது இதுக்கு எல்லாம் முடிவு இருக்குது.

அப்பிடி முழுக்கமுடிவு கட்டேலாது ஈழவா.நாங்கள் வளர்க்கிற செல்லப்பிராணிகளுக்குள்ளையே எத்தினை ஒட்டுண்ணியள் எங்களுக்கு தெரியாமல் ஒளிச்சிருந்து சேக்கஸ் காட்டுதுயள்? :)

Link to comment
Share on other sites

ஏன் தண்ணீ தர பஞ்சிப்படுறாங்கள் தன் சொந்த நாட்டிலேயே தண்ணீர் இல்லமல் ஏன் தமிழன் கஸ்டப்படவேணும் வேறு வழிகள் இல்லையா சுத்திகரிக்கப்பட்ட கடல் நீர் மாதிரி சிங்கப்பூர் அவுஸ்திரேலியாவில பிறிஸ்பேன் போன்ற பகுதிகளில வெற்றிகரமாக செய்யபடுதே.அரசியல் வாதிகளுக்காக கொழுத்தும் பட்டாசு காசுகளை சேர்த்தால் தமிழ் நாட்டின் தண்ணீர் பஞ்சம் ஒழிந்து விடும் பிறகு எந்த நாயிட்டையும் கொஞ்ச வேண்டியதுமில்லை.தண்ணீர் தராவிட்டால் கர்நாடகத்துக்கு மின்சாரத்தை வழங்குவதில் கொஞ்சம் இறுக்கம் காட்டலாமே முள்ளை முள்ளாலதான் எடுக்கேலும்

Link to comment
Share on other sites

ஏன் தண்ணீ தர பஞ்சிப்படுறாங்கள் தன் சொந்த நாட்டிலேயே தண்ணீர் இல்லமல் ஏன் தமிழன் கஸ்டப்படவேணும் வேறு வழிகள் இல்லையா சுத்திகரிக்கப்பட்ட கடல் நீர் மாதிரி சிங்கப்பூர் அவுஸ்திரேலியாவில பிறிஸ்பேன் போன்ற பகுதிகளில வெற்றிகரமாக செய்யபடுதே.அரசியல் வாதிகளுக்காக கொழுத்தும் பட்டாசு காசுகளை சேர்த்தால் தமிழ் நாட்டின் தண்ணீர் பஞ்சம் ஒழிந்து விடும் பிறகு எந்த நாயிட்டையும் கொஞ்ச வேண்டியதுமில்லை.தண்ணீர் தராவிட்டால் கர்நாடகத்துக்கு மின்சாரத்தை வழங்குவதில் கொஞ்சம் இறுக்கம் காட்டலாமே முள்ளை முள்ளாலதான் எடுக்கேலும்

இலவசக் கலர்TV போன்ற தேர்தல் வாக்குறுதிகள் கொடுக்கும் தலைவர்களும் இது போன்ற சில்லறைத்தனங்களுக்கு விலை போகும் மக்கள் கூட்டமும் ஈழவன் சொல்வதுபோன்ற திட்டங்களைப்பற்றி யோசிக்கவே இன்னும் கனகாலம் பிடிக்கும்.

Link to comment
Share on other sites

கர்நாடகத்திற்கு மின்சாரம் வழங்க முடியாது என்று தமிழ்நாட்டால் சொல்ல முடியாது. மின்சாரம் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் வருகின்ற ஒரு துறை. அதில் மாநில அரசு தலையிட முடியாது

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கர்நாடகாவில் பதற்றம்: ராணுவம் வருகை: முன் எச்சரிக்கையாக 1,000 பேர் கைது

பெங்களூர், பிப்.7-:காவிரி நடுவர் மன்ற இறுதி தீர்ப்பை எதிர்த்து நடைபெறும் போராட்டத்தை ஒட்டி, பெங்களூருக்கு ராணுவம் வரவழைக்கப்பட்டு உள்ளது. முன் எச்சரிக்கை நடவடிக்கையாக, 1,000 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

காவிரி தண்ணீரை பகிர்ந்து கொள்வதற்காக அமைக்கப்பட்ட நடுவர் மன்றம், நேற்று முன்தினம் இறுதி தீர்ப்பை வழங்கியது. தமிழ்நாட்டுக்கு, கர்நாடக மாநிலம் 192 டி.எம்.சி. தண்ணீர் திறந்துவிடவேண்டும் என்று, அந்த தீர்ப்பில் குறிப்பிடப்பட்டு இருந்தது.

தீர்ப்பு வெளியானவுடன், கர்நாடக மாநிலத்தில் தமிழர்கள் வசிக்கும் மாவட்டங்களில், கன்னட அமைப்புகள் ஆங்காங்கே போராட்டங்களில் ஈடுபட்டன. சாலை மறியல், ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. இதனால் அங்கு பதட்டம் நீடித்து வருகிறது. போராட்டம் காரணமாக தலைநகர் பெங்களூரில் கடைகள் அடைக்கப்பட்டு வெறிச்சோடி காணப்பட்டது. பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு இருந்தது.

பெங்களூரில் இருந்து தமிழகத்துக்கு செல்லும் பஸ்கள், மாநில எல்லைப்பகுதியுடன் நிறுத்தப்பட்டன. இதேபோல், தமிழ்நாட்டில் இருந்து பெங்களூர் வந்த பஸ்கள் எல்லைப்பகுதியில் உள்ள தர்மபுரி, கிருஷ்ணகிரி மற்றும் ஓசூர் டெப்போக்களில் நிறுத்தப்பட்டன.

காவிரி பாசன பகுதிகளான மைசூர், மாண்டியா, சாம்ராஜ் நகர் ஆகிய மாவட்டங்களில், நேற்று 2-வது நாளாக, காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை முழு அடைப்பு நடைபெற்றது. கொள்ளேகாலில் விவசாயிகள் சங்கத்தினர் நடத்திய ஆர்ப்பாட்ட ஊர்வலத்துக்கு தமிழ்ச்சங்கத்தினரும் ஆதரவு தெரிவித்தனர்.

கர்நாடக விவசாயிகளுக்கு ஆதரவாக, சிறைக்கைதிகளும் போராட்டத்தில் ஈடுபட்டனர். மாண்டியா சிறைச்சாலையில் அடைக்கப்பட்டு இருந்த 200 கைதிகள் ஆர்ப்பாட்டம் (தர்ணா) நடத்தினார்கள். பிஜப்பூரில் ரெயில் மறியலும் நடைபெற்றது.

இந்த நிலையில் 12-ந் தேதி மாநிலம் முழுவதும் முழு அடைப்பு நடைபெறும் என்று கன்னட அமைப்புகள் அறிவித்துள்ளன. பெங்களூரில் முழு அடைப்பின்போது கலவரம் ஏற்படாமல் இருக்கவும், முன் எச்சரிக்கை நடவடிக்கையாகவும் துணை ராணுவம் வரவழைக்கப்பட்டுள்ளது.

பாதுகாப்பு ஏற்பாடுகள் பற்றி பெங்களூர் மாநகர போலீஸ் கமிஷனர் நீலம் அச்சுதராவ் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

பாதுகாப்பு பணிக்காக 12 பிளட்டூன் மத்திய தொழிலக பாதுகாப்பு படையினர் மற்றும் மத்திய ரிசர்வ் போலீசார் பெங்களூர் வந்துள்ளனர். மேலும் பிஜப்பூர், பெல்காம், தார்வார் போன்ற மாவட்டங்களில் இருந்து போலீஸ் அதிகாரிகள் மற்றும் ஊர்க்காவல் படையினரும் வந்துள்ளனர்.

இது தவிர தமிழக எல்லையில் இருந்து ஒரு பட்டாலியன் துணை ராணுவத்தினரும், ஆந்திராவில் இருந்து 6 பட்டாலியன் துணை ராணுவத்தினரும் பெங்களூருக்கு வந்து இருக்கிறார்கள். இவர்கள் பெங்களூரில் கலவரம் ஏற்பட்டால் அங்கு விரைந்து சென்று பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுவார்கள்.

முன்எச்சரிக்கையாக பெங்களூரில் இதுவரை, 1,000 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் பல்வேறு வழக்குகளில் தேடப்பட்டு வருபவர்களும் அடங்குவர். இதற்கிடையே ஆங்காங்கே கலவரம் நடப்பதாக சிலர் வதந்திகளை பரப்பி வருகிறார்கள். பொது மக்கள் அந்த வதந்திகளை நம்ப வேண்டாம். பெங்களூர் நகரம் அமைதியாக உள்ளது. பொது மக்களின் வாழ்க்கை பாதிக்கவில்லை.

ஆங்காங்கே சில அமைப்புகள் ஆர்ப்பாட்டம், ஊர்வலம், சாலை மறியலில் ஈடுபடுகிறார்கள். பெரிய அளவில் அசம்பாவிதங்கள் நடைபெறவில்லை.

பெங்களூரில் நாளை (இன்று) சர்வதேச விமான கண்காட்சி தொடங்குகிறது. இந்த கண்காட்சியில் பல்வேறு நாடுகள் பங்கேற்கின்றன. எனவே முழு அடைப்புக்காக கண்காட்சி தள்ளி வைக்கப்படும் என்ற பேச்சுக்கே இடம் இல்லை. கண்காட்சி நடைபெறும் பகுதியில் ஊர்வலம், ஆர்ப்பாட்டம் நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

பெங்களூர் மகாலட்சுமி நகரில் ஒரு கார் எரிந்துள்ளது. அது கலவரத்தில் எரிக்கப்பட்டதற்கான ஆதாரம் எதுவும் இல்லை. இரண்டு வாகனங்கள் மோதிக்கொண்டதால் அந்த காரில் தீ பிடித்துள்ளது.

இவ்வாறு போலீஸ் கமிஷனர் நீலம் அச்சுதராவ் கூறினார்.

http://www.vikatan.com/

Link to comment
Share on other sites

கர்டாகாவில் இதுவரை எந்த தமிழரும் தாக்கப்படவில்லை, அப்படி தாக்குதல் நடக்கும் அதை வைத்து இந்தியத்தமிழர்களை தங்களுக்கு சாதகமாக மாற்றிவிடலாம் என்று ஈழத்தமிழர்கள் பகல் கனவு காணவேண்டாம்.

Link to comment
Share on other sites

கர்டாகாவில் இதுவரை எந்த தமிழரும் தாக்கப்படவில்லை, அப்படி தாக்குதல் நடக்கும் அதை வைத்து இந்தியத்தமிழர்களை தங்களுக்கு சாதகமாக மாற்றிவிடலாம் என்று ஈழத்தமிழர்கள் பகல் கனவு காணவேண்டாம்.

எரியுற வீட்டில் நெருப்பு புடுங்கும் பழக்கம் எந்தவொரு உண்மையான தமிழனுக்கும் இல்லை..உம்மை போல் நக்கி திண்ணும் கூலிகலுக்கு தான் உள்ளது!

Link to comment
Share on other sites

கர்டாகாவில் இதுவரை எந்த தமிழரும் தாக்கப்படவில்லை, அப்படி தாக்குதல் நடக்கும் அதை வைத்து இந்தியத்தமிழர்களை தங்களுக்கு சாதகமாக மாற்றிவிடலாம் என்று ஈழத்தமிழர்கள் பகல் கனவு காணவேண்டாம்.

நாங்கள் அதை சாதகமாக்கி சொந்த இரத்தத்தில் வயிரு கழுவும் இழிவானவர்கள் அல்ல எம் உறவுகள் எங்கு தாக்கப்பட்டாலும் வேதனை இருக்கும் உங்களை போல முகமூடியை கிழிக்கிறன் என காழ்புணர்சி உடையவர்கள் அல்ல சிறு வயதிலேயே இரத்தத்தை பார்த்தவர்கள் அதன் வலி என்ன என்பது எமக்கு தெரியும்.

தமிழன் எங்கு தாக்கப்பட்டாலும் வேதனைபடுவான் ஒவ்வொரு தமிழனும் அவன் ஈழத்தவனாக இருக்கட்டும் உலகத்தமிழனாக இருக்கட்டும்

அதாவது சுத்த தமிழன் உம்மை போல நாய்கும் பூனைக்கும் பிறந்திட்டு குரங்கு புத்தியை வச்சிருக்கும் அரைவேக்காடுக்கு அந்த உணர்ச்சி புரியாது :angry:

Link to comment
Share on other sites

rmsachitha,

நீர் நல்ல இந்தியனுமில்லை, மானமுள்ள தமிழீழ மைந்தனுமில்லை.

மொத்தத்தில் நீர் உண்மையான தமிழ்ப் பெற்றோருக்கு பிள்ளையுமில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பெரியாரின் இரத்ததின் இரத்தங்களே தமிழன் ஓடுறான் ஓடிக்கொண்டே இருக்கிறான் வாழ்வில் தமிழ்நாட்டின் விளிம்புவரை.. கூப்பிடுங்கள் பெரியாரை போடுங்கள் பகுத்தறிவு முழக்கம் கர்நாடகத்தில். கர்நாடகம் பெற்றுத்தந்த பகுத்தறிவுச் சிங்கம் கர்நாடகத்துக்கு பகுத்தறிவு புகட்டாமல் உறங்கியதாலா தமிழனுக்கு தண்ணிக்கும் பஞ்சம். பாபா காலில் விழுந்தும் தண்ணீர் இல்லையா..??! காவேரியை திறக்க பெரியார் வழியில் கர்நாடகத்துக்கு பகுத்தறிவு புகட்டுவதே சரியான தீர்வு. காட்டுமிராண்டித் தமிழன் ஏன் இன்னும் அதைத் தொடங்கவில்லை..! :rolleyes::rolleyes:

Link to comment
Share on other sites

பேறுந்து ஓடாததால்தான் இவர்கள் நடந்து வருகிறார்கள்.

(rmsachitha @ Feb 7 2007, 11:28 PM)

கர்டாகாவில் இதுவரை எந்த தமிழரும் தாக்கப்படவில்லை, அப்படி தாக்குதல் நடக்கும் அதை வைத்து இந்தியத்தமிழர்களை தங்களுக்கு சாதகமாக மாற்றிவிடலாம் என்று ஈழத்தமிழர்கள் பகல் கனவு காணவேண்டாம்.

மைசூர்சென்னை சதாப்தி ரயிலை வழிமறித்து

பயணிகள் மீது கன்னட விவசாயிகள் தாக்குதல்

பிப்ரவரி 08, 2007

சென்னை: மைசூலிருந்து சென்னை வந்த சதாப்தி ரயிலை 3 இடங்களில் வழி மறித்த கர்நாடக விவசாயிகள், ரயில் பயணிகள் மீதும், ரயில் என்ஜினின் டிரைவர் மற்றும் ஊழியர்களை தாக்கினர்.

காவி> நடுவர் மன்ற தீர்ப்பை எதிர்த்து மைசூர், மாண்டியா உள்ளிட்ட காவிரிப் பாசனப் பகுதிகளில் தொடர்ந்து விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந் நிலையில் நேற்று பிற்பகல் மைசூரிலிருந்து சென்னைக்கு வந்து கொண்டிருந்த சதாப்தி எக்ஸ்பிரஸ் ரயிலை மாண்டியா மாவட்டத்தில் 3 இடங்களில் கர்நாடக விவசாயிகள் மறித்தனர்.

பின்னர் ரயில் டிரைவர், ஊழியர்கள் மற்றும் பயணிகள் மீது சரமாரியாகத் தாக்குதல் நடத்தினர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. ரயில்வே போலீஸார் தலையிட்டு தாக்குதல் நடத்தியவர்களை கலைந்து போகச் செய்தனர்.

http://thatstamil.oneindia.in/news/2007/02/08/train.html

காவிரிபோராட்டத்தில் குதிக்கும் கன்னட

திரையுலகம்: தலைமைசரோஜா தேவி!

பெங்களூரு: காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பைக் கண்டித்து பழம்பெரும் நடிகை சரோஜா தேவி தலைமையில் பெங்களூரில் பேரணி நடத்த கன்னட திரையுலகம் முடிவு செய்துள்ளது.

காவிரி நடுவர் மன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து கன்னட சங்கங்கள் அறிவித்துள்ள பந்த்துக்கு கன்னட திரையுலகம் முழு ஆதரவு தெரிவித்துள்ளது.

மேலும் பல படங்களில் எம்ஜிஆரோடு ஜோடி போட்டு தமிழ் சினிமாவை 'ஆண்ட' சரோஜா தேவி தலைமையில் பெங்களூரில் பேரணி நடத்தவும் அவர்கள் முடிவு செய்துள்ளனர்.

இந்தப் பேரணியில் மறைந்த ராஜ்குமாரின் மகன் சிவராஜ்குமார் உள்ளிட்ட நடிகர், நடிகைகள், தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள், விநியோகஸ்தர்கள் உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர்.

ஆளுநர் மாளிகையை நோக்கி பேரணி நடத்தவுள்ளனர். இதுதொடர்பாக இன்று கூடி ஆலோசிக்கின்றனர்.

அம்பரீஷ் மிரட்டல்:

இதற்கிடையே, காவிரி பாசனப் பகுதி மாவட்டமான மாண்டியா தொகுதியைச் சேர்ந்த ராஜ்யசபா எம்.பியும், நடிகரும், நடிகர் ரஜினிகாந்த்தின் மிக நெருங்கிய நண்பருமான அம்பரீஷ், தனது மத்திய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்யப் போவதாக எச்சரித்துள்ளார்.

இவர் தற்போது மத்திய தகவல் ஒலிபரப்புத் துறை இணை அமைச்சராக உள்ளார். பெங்களூரில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், கர்நாடகத்திற்கு சாதகமாக தீர்ப்பு இல்லை. இதனால் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்படுவர்.

மாண்டியா விவசாயிகள் போர்க்கொடி உயர்த்தியுள்ளனர். அவர்களுக்கு ஆதரவாக எனது பதவியைத் தூக்கி எறியத் தயார் என்று அவர் கூறியுள்ளார்.

http://thatstamil.oneindia.in/news/2007/02/08/cauvery.html

ஆக நடித்து சம்பாதிக்கும் வரையும் தமிழன் தண்ணி எண்டு வந்தால் தமிழனுக்கே தண்ணி காட்டப்படுது இப்படிபட்ட நட்சத்திரங்களால்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கர்டாகாவில் இதுவரை எந்த தமிழரும் தாக்கப்படவில்லை, அப்படி தாக்குதல் நடக்கும் அதை வைத்து இந்தியத்தமிழர்களை தங்களுக்கு சாதகமாக மாற்றிவிடலாம் என்று ஈழத்தமிழர்கள் பகல் கனவு காணவேண்டாம்.

அட உம்மட கழிவுப்புத்திக்கு இதைவிட ஆழமாய் சிந்திக்க வக்கில்லயோ?

நீர் இந்தியன் என்று சொன்னால் நாம் நம்பிவிடுவோமாக்கும்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • "தைரியமானவள்"     வவுனியாவில் உள்ள  ஒரு குக்கிராமம் இது. இங்கு பெருமளவில் இந்துக்களையும் சிறிய அளவில் கிறித்தவர்களையும் கொண்டுள்ள போதிலும் மக்கள் மதங்களுக்கு அப்பாற்பட்டு ஒரு குடும்பம்போல் வாழ்கின்ற ஒரு சமாதானம் நிலவும் கிராமம் இதுவாகும்.  இக் கிராமமானது அங்கு உள்ள ஒரு பெரும் குளத்தைச் சேர்ந்த நிலங்களைக் காடு வெட்டி துப்புரவு செய்து கமம் செய்து உருவாக்கப்பட்டது என்பது வரலாறு ஆகும்.    அங்கு தான் கமங்களில் கூலிவேலை செய்யும் தாய் தந்தையரின் இளைய மகளாக, அவள் இருந்தாள். கோவலன் கண்ட கண்ணகியின் அழகு கூட இவளுக்கு நிகரில்லை!         "மாயிரும் பீலி மணி நிற மஞ்சை நின் சாயர் கிடைந்து தங்கான் அடையவும் ......... அன்ன நன்னுதல் மென்னடை கழிந்து நன்னீர்ப் பண்ணை நளி மலர் செரியவும் ........... அளிய தாமே சிறு பசுன் கிளியே குழளும் யாழும் அமிழ்துங் குழைத்த நின் மழைக் கிளவிக்கு வருந்தின வாகியும் மட நடை மாது நின் மலர்க்கையீ நீங்காது"   கரிய பெரிய மயில்கள் உன் தோற்றத்தை கண்டு தோற்று அவைகள் கூட்டை சென்று அடைகின்றன .. அன்னப் பறவைகள் உன் மேன்மையுடைய நடைக்கு பயந்து நன்னீர் பூக்கள் பின் சென்று மறைகின்றன .. பசுங் கிளிகள் குழழின் இசையையும், யாழின் இசையையும்,அமிர்த்தத்யும் கலந்த உன் சொற்களுக்கு போட்டி இட முடியாமல் வருந்தி அதனை கற்பதற்காக உன்னை பிரியாமல் உள்ளன என்றான் கோவலன். ஆனால் இவள் அதற்கும் மேலாக, "அரிசந்திர புராணம்" வர்ணிக்கும் பெண்களின் விழி அழகை அப்படியே கொண்டு இருந்தாள்   "கடலினைக் கயலைக் கனையமேன் பினையைக் காவியை கருவிள மலரை வடுவினைக் கொடிய மறலியை வலையை வாழை வெண் ர்ரவுநீன் டகன்று கொடுவினை குடி கொண்டிருபுறம் தாவிக் குமிழையும் குழைyaiயும் சீறி விடமெனக் கறுப்பூர் றரிபரந துங்கை வேலினும் கூறிய விழியால்"   ஒப்புமையில் கடலினையும், மீனையும்,அம்பையும், மென்மையான பெண் மானையும் நீலோற்பல மலரையும் கருவிளம் பூவையும், பார்வையால் ஆடவரை துன்புறுத்தி கவர்வதில் கொடிய எமனையும், வலையையும், வாளையும் வென்று முற்றிலும் செவியளவு நீண்டு அகன்று கண்டார் உயிர் உண்ணும் கொடுந்தொழில் நிலை பெற்று இரண்டு பக்கங்களிலும் தாவி குமிழாம் பூ போன்ற மூக்கும், விசம் போல் கருநிறம் பொருந்தி கூரிய வேலை விட கூர்மையான கண்களை உடையவள் இவள். அதனால்தானோ என்னவோ பெயர்கூட ' மலர்விழி'    காட்டோடு அண்டிய ஒரு இடத்தில், சிறு குடிசை ஒன்றில் பெற்றோருடனும் ஒரு அண்ணனுடனும் வாழ்ந்து வந்தாள். அவள் பாடசாலைக்கு மூன்று மைல் , காட்டோடும்   கமமோடும் நடந்து தான் போவாள். குடிசையும் பெரிய வசதி ஒன்றும் இல்லை. ஆனால், பெற்றோருக்கு  கமத்துக்கு கூலிவேலைக்கு போக வசதியான இடமாக இருந்தது.    அவள் இப்ப பத்தாம் வகுப்பு மாணவி, பெண்மை பூரித்து துள்ளும் வயது. பாடசாலைக்கு அருகில் ஒரு பெரிய பலசரக்கு கடையும், அதனுடன் கூடிய  சிற்றுண்டிச்சாலையும் புடவை கடையும் இருந்தது. இந்த மூன்றுக்கும் முதலாளி ஒருவரே, பெரும் பணக்காரர். அவரின் ஒரு மகன், யாழ் பல்கலைக்கழகத்தில் படித்தவர்,  பரீடசை எடுத்து விட்டு வீட்டில் மறுமொழி வரும் மட்டும் காத்து இருக்கிறார். எனவே அவ்வவ்போது தந்தைக்கு ஓய்வு கொடுத்து, கடையை கவனிக்க தொடங்கினார்.    மலர்விழி தோழிகளுடன், பாடசாலை முடிய கடைப்பக்கம் போவார். ஆனால் தோழிகள் வாங்குவதை, மற்றும் அங்கு உள்ளவற்றை பார்ப்பதை தவிர, மற்றும் படி ஒன்றும் வாங்குவதில்லை. அந்த வசதி ஒன்றும் அவருக்கு இல்லை. அது மட்டும் அல்ல, ஒரு சில வினாடிகளே அங்கு நிற்பார். காரணம் மூன்று மைல் நடந்து வீடு போகவேண்டும். அவருடன் ஒரு சில பிள்ளைகளும் சேர்ந்து நடப்பதால், ஆளுக்கு ஆள் துணையாக.    கம்பனின் மகன் அம்பிகாபதி போல இந்த முதலாளியின் மகன், சங்கரும் அவளை முதல் முதல் பார்த்தவுடன், அவன் கண்ணுக்கு அவள் உருவம் மனித உருவமாகவே தெரியவில்லை. அவன் கற்பனை  கொடியோடும் குளத்தோடும் மீனோடும் உறவாடிற்று    “மைவடிவக் குழலியர்தம் வதனத்தை         நிகர்‘ஒவ்வா மதியே! மானே!! செய்வடிவைச் சிற்றிடையை வேய்தோளைத்         திருநகையைத் தெய்வ மாக இவ்வடிவைப் படைத்தவடி வெவ்வடிவோ         நானறியேன்! உண்மை யாகக் கைபடியத் திருமகளைப் படைத்திவளைப்         படைத்தனன் நல்கமலத் தோனே! ”      பொற்கொடியாளே,  வாடாத உன் தலையில் மழைமேகத்தை சுமந்தவளே. பிறை அணிந்த தாமரை முகத்தாளே, நீ கேட்டாள், உனக்காக  எதையும் தரத் தயாராக உள்ள கற்பகத்தரு போல் நான் நிக்கிறேன் என்று அவன் சொல்லாமல் அவளிடம் சொல்லிக்கொண்டு தன்னை மறந்து நின்றான்.    ஒரு சில நாட்கள் ஓட, அவன் மெல்ல மெல்ல அவளுடன் கதைக்க தொடங்கினான். அவனும் அழகில் கம்பீரத்தில் குறைந்தவன் அல்ல.    "எண் அரும் நலத்தினாள்     இனையள் நின்றுழி, கண்ணொடு கண் இணை     கவ்வி, ஒன்றை ஒன்று உண்ணவும், நிலை பெறாது     உணர்வும் ஒன்றிட, அண்ணலும் நோக்கினான்!     அவளும் நோக்கினாள்."   அழகின் எல்லை இது தான் என்று நினைப்பதற்கும் அரிய அழகுடைய அவளை, ஒருவர் கண்களோடு, மற்றொருவர் கண்கள் கவர்ந்துப் பற்றிக் கொண்டு, ஒன்றை ஒன்று கூடி ஒன்று படவும், அவனும் அவளை பார்த்தான். அவளும் அவனை பார்த்தாள்.  அவளுக்கும் உண்மையில் ஆசை இருந்தாலும், அவளின் நிலைமை, கவனமாக இருக்க வேண்டும் என்று உறுத்தியது. காரணம் இவன் பெரும் பணக்கார பையன், மற்றும் பட்டதாரி ஆகப்போகிறவன். என்றாலும் அவன் வாக்குறுதிகள் நம்பிக்கைகள் கொடுத்து, அவளும் அப்பாவிதானே, நம்பி இருவரும் கொஞ்சம் கொஞ்சம் நெருங்க தொடங்கினார்கள். அவளின் பெற்றோர் கூலி வேலைக்கு போனால், வீடு திரும்ப இரவாகிடும், அண்ணனும் , நண்பர்களுடன் போய்விடுவார். எனவே, சங்கர் இப்ப அவளை தனது மோட்டார் சைக்கிளில் வீட்டில் இறக்குவதும், அப்படியே , அந்த சின்ன குடிசையில் தனிய கதைத்து மகிழ்வதும், சிற்றுண்டிகள், குளிர்பானங்கள் எடுத்துக்கொண்டு போய் இருவரும் அங்கு அவையை அனுபவிப்பதும் என காலம் போகத் தொடங்கியது. அத்துடன் அவன் அவளுக்கு தெரியாத பாடங்களும் படிப்பித்தான். எனவே சிலவேளை பெற்றோர்கள் அறிய வந்தாலும், அது ஒரு சாட்டாகவும் அவர்களுக்கு இருந்தது. ஆனால் அது தான் அவர்களை மேலும் இறுக்கமாக இணைத்ததும் எனலாம்.   "இசை போன்ற மெல்லிய  மொழி இடைவெளி குறைக்க வழி சமைக்க   இறைவி நேரே வந்தது போல  இதயம் மகிழ பாடம் புகட்டினான்! "   "இருசொல் இணைதல் புணர்ச்சி என்று  இரண்டு பொருள்பட இலக்கணம் சொல்லி  இங்கிதமாய் விளக்கி அவளைத் தழுவி  இருவரும் கூடி இன்பம் கண்டனர்!"   மறுமொழியும் வர, அவன் மேற்படிப்புக்கு வெளிநாடு போய்விட்டான் அதன் பிறகு தான் அவளின் வாழ்வில் வெறுமை தோன்ற தொடங்கியது. அவளின் உடலிலும் மாற்றம் தென்பட்டது. அவள் இப்ப ஒரு குழந்தைக்கு தாயென மருத்துவரும் உறுதி செய்து விட்டனர். தந்தை அந்த முதலாளியிடம் நடந்தவற்றை சொல்லி, மகளை மருமகளாக ஏற்கும் படி மற்றும் அவரின் மகனின் விலாசத்தை எடுத்தால், அவனுக்கு செய்தி அனுப்பலாம் என்று போனவர்தான், பின் வீடு திரும்பவே இல்லை. அன்று அங்கு போர்க்காலம். ஆகவே உண்மையில் என்ன நடந்தது என்று யாருக்கும் தெரியாது? அண்ணனும் தந்தையை தேட போனவர், இடையில் ஷெல் பட்டு இறந்துவிட்டார். இப்ப தான் அவள் தன் அப்பாவி தனத்தை உணர்ந்தாள். முன்பு, அவனுடன் பழகும் பொழுது  தைரியமாக இருந்து இருந்தால், இந்த நிலை வந்திருக்காது. நம்பி கெட்டது அவளை வருத்தியது. "சாது மிரண்டால் காடு கொள்ளாது". அவள் துணிந்து விட்டாள். தைரியம் பெற்றாள்.    அவளின் கதை அந்த ஊரில் பரவத் தொடங்கியது. அந்த முதலாளி பணத்தை கொடுத்து சமாளிக்க எத்தனித்தார். கருவை கலைக்கும் படியும் வேண்டினார். ஆனால் அவள் இப்ப தைரியமானாள். அதை ஏற்கவில்லை. அவளின் ஒரே குரல், இவன் உங்கள் பேரன், உங்க மகனின் மகன். அதில் மாற்றம் இல்லை. எந்த பேச்சுக்கும் இனி இடமில்லை, பணத்தை அவள் மதிக்கவே இல்லை. தூக்கி எறிந்தாள். தந்தை, அண்ணன் இருவரையும் இழந்துவிட்டாள். இனி தானே தன் வாழ்வை தீர்க்க தைரியமாக புறப்பட்டாள்!    கண்ணகி அரசசபையில் தைரியம் கொண்டு போனது போல,    ‘தேரா மன்னா! செப்புவது உடையேன்'    ஆராய்ந்து பார்க்காத முதலாளி நான் சொல்வதைக் கேள் என, வாயும் வயிறுமாக முதலாளியின் வீட்டின் கதவில் நின்ற காவலாளியிடம் உரக்க சொன்னாள்.    "வாழ்தல் வேண்டி, ஊழ்வினை துரப்ப, சூழ் கழல் மன்னா! நின் நகர்ப் புகுந்து,"   கூலி செய்து, எம் கையையால் நாமே வாழ்வதற்காக உன் ஊருக்கு வந்தோம். ஊழ்வினை துரத்திக்கொண்டு வர வந்தோம் என்று துணிச்சலாக கூறினாள். அவளின் துணிவு, புத்திகூர்மை, அழகு, கோபத்திலும் அவளின் நளினம், உண்மையான பேச்சு சங்கரின் தாயை நன்றாகவே கவர்ந்தது. சங்கரின் தாய் அவளை உள்ளே வரும் படி அழைத்து, அங்கு முன் விறாந்தையில் இருந்த சோபாவில் அமரச் சொன்னாள். பின் சங்கரின் தந்தையுடன் எதோ கதைத்தார். அவளுக்கு ஒன்றும் புரியவில்லை. எதாவது தந்திரமோ என்று தைரியமாக, எதையும் எதிர்க்க துணிந்து நின்றாள். இந்த இடைவெளியில், அவர்களின் வேலைக்காரி காப்பி கொண்டுவந்து அவளுக்கு கொடுத்தார். ஆனால் அதை அவள் வாங்க மறுத்தார். சிற்றுண்டி பெற்று தானே இன்று இந்த நிலை என்று அவள் மனது கொதித்துக்கொண்டு இருந்தது.   "நெஞ்சே நெஞ்சே துணிந்து விடு நீதியின் கண்களை திறந்து விடு நச்சு பாம்புகள் படமெடுத்தால் அச்சம் வேண்டாம் அழித்து விடு"   "பணிந்து பணிந்து இந்த பூமி வளைந்தது குனிந்து குனிந்து குனிந்த கூனும் உடைந்தது வெள்ளி வெள்ளி காசுக்கு விற்பவன் மகனில்லை ஓர் மகனில்லை"   அவர்களுக்கு அது புரிந்துவிட்டது. தாய் அவள் அருகில் வந்து, மகனுக்கு தொலைபேசி அழைப்பு விட்டுள்ளோம். எமக்கு உண்மை தெரியாது. அது  சரியாக அறிந்ததும் , உன் பிரச்னைக்கு தீர்வு காண்போம் என்றனர். அவளின் துணிந்த பார்வை, தைரியமாக எடுத்த முடிவு, ஒரு பதிலை நோக்கி அசைவதை காண்டாள்.      சங்கரும் கொஞ்ச நேரத்தால் தொலைபேசியில் வந்தும் வராததுமாக, முதலில் மலர்விழியையே கூப்பிட்டான். அவளுடன் ஏதேதோ கதைதான். வீறாப்புடன், தைரியமாக வந்தவள், தன் வேலை முடிந்தது கண்டு, இப்ப ஒரு மணமகள் மாதிரி கால் விரலால் கொடு போட தொடங்கி விட்டாள். பெற்றோருக்கும் விளங்கிவிட்டது. சங்கரும் பின் பெற்றோருடன் எதோ பயந்து பயந்து கூறிக்கொண்டு இருந்தார். எல்லோர் முகத்திலும் நிம்மதி, மகிழ்ச்சி  நிழலிட்டிருந்தது அங்கு ஒரு சுமுக நிலையை ஏற்படுத்தியது.    "தைரியம் என்பது பயம் இல்லாதது அல்ல, அதன் மீதான வெற்றி என்பதை அவள் காண்டாள். தைரியமானவள் பயப்படாதவள் அல்ல, அந்த பயத்தை வெல்பவளே"    நன்றி     [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]     
    • ஒருவர் எழுதும் கருத்துக்களை பொறுத்தே பதில் கருத்துக்களும் வரும் மற்றும்படி தனிப்பட்ட கோபதாபங்கள் எதுவும் இல்லை!
    • "என் அன்பு மகளே"     "யாயே, கண்ணினும் கடுங் காதலளே, எந்தையும், நிலன் உரப் பொறாஅன்;  ‘சீறுடி சிவப்ப, எவன், இல! குறு மகள்!  இயங்குதி! என்னும்;’யாமே,"      தாய் தன் மகளை தன் கண் மாதிரி அன்பு செலுத்துகிறாள் அப்பனோ "என் சிறு மகளே, ஏன் நடந்து உன் அழகிய காலை வருத்துகிறாய்?" என கேட்டு தவிக்கிறார். அப்படித் தான் என் அன்பு மகள் எனக்கு அன்று இருந்தாள். அவள் கடைசி பிள்ளை என்பதால் ஒரு படி மேல் அதிகமாகவே செல்லமாக இருந்தாள். அதன் விளைவு எப்படி வரும் அன்று எனக்கு புரியவில்லை.      வீட்டில் எப்பவும் அவள் செல்லப்பிள்ளை தான். எனவே அவள் இட்டது தான் சட்டம். என்றாலும் அவளுக்கு என்று ஒரு தனிக் குணமும் உண்டு. அது தான் அவளை மேலும் மேலும் செல்லப்பிள்ளை ஆக்கியது. நல்ல புரிந்துணர்வுடன் இனிமையாக மகிழ்வாக பழகுவாள். எமக்கு ஒரு கவலை என்றால், அவளை பார்த்தாலே போய்விடும். அவளின்   குறும்புத்தனம் எவரையும் எந்த நிலையிலும் மகிழ்விக்கும்!     "உள்ளம் களிக்க உடனே சிரிக்க உதிர்மா வேண்டுமம்மா! .     துள்ளித் திரிந்து துயரை மறந்திடத் துளிமா வேண்டுமம்மா!"     அவள் இதை துள்ளி ஆடி பாடும் பொழுது எம்மை அறியாமலே கவலை பறந்திடும். அத்தனை நளினம், தானே கற்று தானே ஆடுவாள்!  அவளுக்கு என்று ஒரு பாணி / போக்கு உண்டு !! படிப்பிலும் சூரி , குழப்படி தான் கொஞ்சம் கூட, அத்துடன் பிடிவாதமும் பிடித்தவள், ஆனால் இரக்கம், அன்பு, மரியாதை எல்லாம் உண்டு. நாளும் ஓட, அவளும் பல்கலைக்கழகம் மிகச் சிறந்த பெறுபேருடன் நுழைந்தாள்.     "இருண்ட மேகஞ்ச்சுற்றி சுருண்டு சுழி எரியுன் கொண்டையாள் குழை ஏறி ஆடி நெஞ்சை சூறையாடும் விழிக் கெண்டையாள் திருந்து பூ முருக்கின் அரும்பு போலிருக்கும் இதழினால் வரிச் சிலையை போல் வளைந்து பிறையை போல் இலங்கு நுதுலினால்"     மேகங்கள் சில சுருண்டு சுழித்தது போன்ற கூந்தலுடன்..  காது வரை நீண்டு ஆடவர் மனதை கொள்ளை கொள்ளும் கெண்டை விழியுடன் ,  அழகான அரும்பை போன்ற இதழுடன், அழகிய வில்லை போல் வளைந்து மூன்றாம் பிறை திங்களை போன்று ஒளி விடும் நெற்றி உடன் அவள் திகழ்ந்தது தான் எமக்கு கொஞ்சம் அச்சத்தை கொடுத்தது. இனி அவள் மிக தூர, வேறு ஒரு நகரத்தில் உள்ள பல்கலைக்கழகம் போகப் போகிறாள். படிப்பை பற்றி பிரச்சனை இல்லை. அது அவளுடன் பிறந்தது. தனிய, அதுவும் இந்த பொங்கி பூரிக்கும் அழகுடன், தந்திரமாக சமாளிப்பாளா என்ற ஒன்று மட்டுமே கொஞ்சம் கவலை அளித்தது. காரணம் அவளுக்கு எல்லாமே நாமே செய்து, எம்மை சுற்றியே பழக்கி விட்டோம் என்பதால். அதுவும் நான் இல்லாமல் எங்கும் தனிய போனதும் இல்லை.  கையை இறுக்க பிடித்துக் கொண்டு தான் போவாள். இப்ப தான் எம் வளர்ப்பின் சில சில தவறுகள் தெரிந்தன. ஆனால் இது நேரம் கடந்த ஒன்று!     "பூக்களின் அழகை வண்டுகள் அறியும் பூங்கா முழுவதும் மயங்கி திரியும்  பூவையரின் அழகை ஆண்கள் அறிவர்  பூரிப்பு கொண்டு மயங்கி திரிவர்"      அவள் எப்படியும் பாடத்தில் கவனம் செலுத்தி, இவை எல்லாம் சமாளிப்பாள் என்று என் நெஞ்சை நானே தேற்றினேன்! . ஆனால் அவளின் சந்தேகமற்ற தூய மனம், பிள்ளைத்தனம் நிறைந்த இயல்பான குணம், இலகுவாக நம்பும் இரக்க தன்மை அவள் வாழ்வை ஏமாற்றி விளையாடி விட்டது அவள் முதலாம் ஆண்டு விடுதலையில் வந்து என் மடியில் இருந்து , என் கைகளால் தன் முகத்தை பொற்றி அழும் பொழுது தான் தெரிந்தது அவளின் வேதனை.!     ஆனால் ஒன்றை கவனித்தேன். இப்ப அவள் நாம் முன்பு கண்ட சின்னப் பிள்ளை அல்ல, அவளின் மற்றும் ஒரு குணமான பிடிவாதம், அவளை நிலைகுலைய  வைக்கவில்லை. தன்னை ஆசைகாட்டி மோசம் செய்தவன், அதே பல்கலைக்கழக, அதே மருத்துவ பீடத்தின் மூன்றாம் வகுப்பு மாணவன். பகிடிவதையில் நண்பர்களாகி, காலப்போக்கில் அவனை உண்மையான காதலன் என் அவள் நம்பியதை, அவன் தந்திரமாக தன் ஆசையை தீர்க்க பாவித்துள்ளான் என்பதை அறிந்தோம். ஆனால், 'நான் பார்த்துக்கொள்வேன்' , கவலை வேண்டாம் அப்பா , அவனை என்னால் திருத்தமுடியும். அவனே உங்கள் மருமகன், எனவே கவலை வேண்டாம் என தைரியமாக மடியில் இருந்து இறங்கி படுக்க போனாள்.     “கற்பும் காமமும் நாற்பால் ஒழுக்கமும் நல்லிதின் புரையும் விருந்து புறந்தருதலும் சுற்றம் ஓம்பலும் பிறவு மன்ன கிழவோள் மாண்புகள்”        என்று கற்பு நிலை, ஒழுக்க நிலை, நன்னெறி, பிறரை உபசரித்தல் பெண்ணின் கடமை என்றனர் அன்று. ஆனால் என் மகள் தான் நினைத்தவனையே , தன்னை ஏமாறியவனையே திருத்தி மனிதனாக்கி , தன் துணைவனாகவும் மாற்ற புறப்பட்டாள்!. கட்டாயம் அவள் வெற்றி பெறுவாள். அவளின் துணிவு, இன்றைய அனுபவம், வாழ்வை அலசும் திறன், இப்ப அவள் செல்லப் பிள்ளை அல்ல, ஒரு முழுமையான அறிவு பிள்ளை!     என் அன்பு மகளே,  தந்தைக்கு உபதேசம் செய்தான் என்கிறது ஒரு புராணம். அது கட்டுக்கதையாக இருந்தாலும், தந்தை மகன் முன் சீடனாகி உபதேசம் கேட்பது என்பது அகந்தை துறந்து மகனின் கருத்து என்ன என்று அறிந்துகொள்ள ஒரு தந்தை தயாராகும் வாழ்க்கைத் தத்துவம் அது. இன்று குடும்பங்களில் பெரும் பிரச்னையாக இருப்பது இந்த சுய அகந்தைதான். வயதில் சிறியவர்கள் பெரியவர்களின் பேச்சைக் கேட்க வேண்டும் என்று அடம்பிடிப்பது. இன்று நீ சொல்லாமலே என் தவறை சுட்டிக்காட்டி விட்டாய். நீ இனி எனக்கு அம்மாவும் கூட! அவளுக்கு இரவு முத்தம் கொடுத்து, முத்தம் வாங்கி நித்திரைக்கு அனுப்பினேன்!      "பிரசம் கலந்த வெண்சுவைத் தீம் பால் விரி கதிர்ப் பொற்கலத்து ஒரு கை ஏந்திப், புடைப்பின் சுற்றும் பூந்தலைச் சிறு கோல் ‘உண்’ என்று ஓக்குபு புடைப்ப தெண் நீர் முத்து அரிப் பொற்சிலம்பு ஒலிப்பத் தத்துற்று,  5 அரி நரைக் கூந்தல் செம் முது செவிலியர் பரி மெலிந்து ஒழிய பந்தர் ஓடி, ஏவல் மறுக்கும் சிறு விளையாட்டி அறிவும் ஒழுக்கமும் யாண்டு உணர்ந்தனள் கொல்"     தேன் கலந்த வெண்மையான சுவையான இனிய பாலைக் கொண்ட விரிந்த ஒளியையுடைய பொற்கலத்தை ஒரு கையில் ஏந்தியவண்ணம், மென்மையான நுனியைக் கொண்ட சிறிய கோலை உயர்த்தி என் மகளை அச்சமூட்டிக் ‘இதைக் குடி’ என்று அவளுடைய மென்மையாக நரைத்த கூந்தலையுடைய செவ்விதான முது செவிலித் தாயார்கள் கூறவும், அதனை மறுத்துத் தெளிந்த நீரின் முத்துக்கள் பரலாக உள்ள தன்னுடைய பொற்சிலம்புகள் ஒலிக்கப் பாய்ந்து அவள் ஓட, நடைத் தளர்ந்து அவள் பின்னால் ஓட முடியாமல் அவர்கள் இருக்க, அவள் எங்கள் இல்லத்திற்கு முன் இருக்கும் பந்தலுக்கு ஓடி விடுவாள்.  இவ்வாறு பாலைக் குடிக்க மறுத்த என்னுடைய விளையாட்டுப் பெண், இப்பொழுது எவ்வாறு அறிவையும் ஒழுக்கத்தையும் அறிந்தாள்? எனக்கு இன்னும் வியப்பாகவே அது இருக்கிறது. அந்த வியப்பான பெண் தான் என் அன்பு மகளே !!      [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]     
    • எல்லா துன்பங்களில் இருந்தும் மீண்டுவர இறைவனை பிரார்த்திக்கிறேன் பையா 🙏 எங்களுக்கும் லண்டனிலை ஸ்லீப்பர் செல்ஸ் இருக்கினம் தெரியுமோ 😜
    • "பெற்றோர் பிள்ளைகளை உருவாக்கலாம்! பிள்ளைகள் பெற்றோரை உருவாக்க முடியாது!" பெற்றோர் பிள்ளைகளை உருவாக்கலாம் என்பதில் ஐயப்பாடு ஒன்றும் இல்லை. புறநானுறு 312 இல் அப்படித்தான் கூறுகிறது.  "ஈன்று புறந்தருதல் என்தலைக் கடனே; சான்றோன் ஆக்குதல் தந்தைக்குக் கடனே;" மகனைப் பெற்று வளர்த்தல் பெண்களின் கடமைகளுள் தலையான கடமையாகும்.அவனைச் சான்றோ னாக்குதல் (வீரன்) தந்தையின் கடமையாகும். இப்படி பெற்றோர் பிள்ளைகளை உருவாக்கலாம். ஆனால் பிள்ளைகள் பெற்றோரை உருவாக்க முடியாது என்பதில் தான் எனக்கு ஒரு சந்தேகம்   [1] நாம் இப்ப சொல்லின் கருத்தை பார்ப்போமா ? பெற்றோர் = தங்கள் வாரிசை(குழந்தை) வளர்க்கும் பாதுகாவலர் என்று கொள்ளலாம். அல்லது = பிள்ளை பெற்றவர்கள் / பெற்றோர் என்று கொள்ளலாம். ஆகவே பெற்றோர் என்ற சொல்லே பிள்ளை இல்லாமல் உருவாகாது.  பிள்ளை = குழந்தை, குட்டி , குஞ்சு  இதில் கவனியுங்கள் பெற்றோர் என்ற சொல் தொடர்பு படுத்தப் படவில்லை [2] மேலும் எப்படி பிள்ளைகளை ஒழுங்காக பெற்றோர்கள் உருவாக்கினார்களோ, அப்படியே, பிள்ளைகள் வளர்ந்து ஒரு நிலைக்கு வந்த பின், கெட்டுப்போன / தீய வழியில் சென்ற பெற்றோர்களை , பிள்ளைகள் நல்லவராக உருவாக்கலாம். இதற்கு உதாரணமாக இரணியன், அவன் மகன் பிரகலாதன் கதையை கூறலாம் ? [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]    
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.