Jump to content

பாலியல் நேற்று இன்று.


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

செக்ஸ் உணர்வு மனிதனுக்கு எப்போது தோன்றியது என்ற கேள்விக்கு நாம் பதில் சொல்லத் தேவையில்லை. ஏனென்றால், செக்ஸ் உணர்வு மனிதன் தோன்றிய ஆதி காலத்தில் இருந்து தோன்றியது. அதில் எந்த மாற்றமுமில்லை. ஆனால், அதன் செயல்பாடுதான் வேறுபட்டுக் கொண்டே போகிறது. அதற்குக் காரணம் என்னவாக இருக்கும்? வேறொன்றும் இல்லை. நமது சமுதாய சூழ்நிலைதான். அப்படியென்றால், இதில் என்ன தவறுநடக்கிறது. கல்ச்சர் (கலாசாரம்) என்ற அடிப்படையில் தவறு செய்கிறோம்.உதாரணத்திற்கு தமிழ்நாடு என்று வைத்துக் கொண்டால், தமிழ்நாட்டில் உள்ள அனைத்து ஊர்களிலும் ஒரே சூழ்நிலை, ஒரே தோற்றம் ஒரே மனநிலையை எதிர்பார்க்க முடியாது. கன்னியாகுமரியில் இருக்கும் ஒருவர் தமிழனாக இருந்தால், அவரது நடை, உடை பாவனை போன்றவற்றில் கேரளா மனம் வீசத்தான் செய்யும். கோயம்புத்தூரில் இருக்கும் ஒருவர் அருகே பாலக்காடு இருப்பதால் அதைப் போலத்தான் நடந்துகொள்வார். நெல்லூர் அருகே இருக்கும் ஒரு தமிழன் வாழ்க்கை முறையில் ஆந்திராவின் சாயல் இருக்கத்தான் செய்யும். ஒவ்வொரு மனிதனுடைய செக்ஸ் உணர்வு அந்தந்த இடத்தைப் பொறுத்து இருப்பதில் தவறில்லை. கலாசாரம் என்பது ஒரே மாதிரியாக இருத்தல் கூடாது. மாற்றம் வேண்டும். அந்தந்த மாற்றத்தையும் ஏற்றுக்கொள்ள வேண்டும். ஒரு காலத்தில் நாம் எழுதிய கடிதம் ஒருவரை சேர சில நாட்களாவது பிடிக்கும். ஆனால், இப்போது அறிவியல் உலகம். அடுத்த நொடியில் உலகத்தின் அனைத்து நடவடிக்கைகளும் உங்கள் கண் முன்னே விரிகிறது. ஏன் நாம் அதில் நமது கலாசாரத்தை விட்டுக் கொடுத்தோம். நாம் நமது கலாசாரம் என்று கட்டி அழுதுகொண்டு இருக்க வேண்டாம். சரி செக்ஸின் செயல்பாடு எப்படி மாறுபடுகிறது. ஒரு காலகட்டத்தில் உள்ள மக்கள் தொகையை எடுத்துக் கொள்வோம். சென்னையின் ஜி.என்.செட்டி சாலையில் நீங்கள் கில்லி அடித்து விளையாடலாம். மக்கள் தொகை அவ்வளவுதான். அப்போது நம் முன்னோர்களுக்கு நிறைய நேரம் கிடைத்தது. இப்போது நீங்கள் துரைசாமி சப்_வேயை கடந்து செல்ல 1 மணி ஆகிறது. நகரத்தின் சாயல் மாறிவிட்டது. நமக்கு ஸ்ட்ரெஸ§ம் கூடிவிட்டது. எங்கே கிடைக்கிறது உங்களுக்கு நேரம். எனவே, உங்களது பிகேவியரும் மாறிவிட்டது. அவசர காலத்திற்கு ஏற்ப அவசரமாகத்தான் எல்லாமே செய்கிறோம். காலையில் சீக்கிரம் ஆபிஸ் கிளம்பவேண்டுமே, சண்டே ஆனா நல்லா தூங்க வேண்டுமே என்ற அவசரமும் சோம்பேறித்தனமும் தான் மேலோங்கி நிற்கிறது. இதுல தப்பு ரைட்ன்னு சொல்றதுல யாருக்குமே லாபம் கிடையாது. நம்மளோட உடல் ஆரோக்கிய நிலையைப் பற்றித்தான் யோசிக்க வேண்டும். ஒரு 1500 வருஷத்துக்கு முன்னாடி பார்க்கலாம். அப்போது உள்ள நமது முன்னோர்களுக்கு உடம்புல நிறைய தெம்பு இருந்தது. நேரம் நிறைய கிடைத்தது. நல்ல உணவு, பழங்கள், வேகவைத்த கிழங்குகள் போன்றவையெல்லாம் கிடைத்தது. இப்போதும் இருக்கிறதே? இருக்கிறது. நிறைய பெயர்களில், நிறைய வண்ணங்களில். ஆனால் நாம் சாப்பிடும் பழங்களில் இருந்து அரிசி வரைக்கும் உள்ள உணவு வகைகளில் கெமிக்கல்தான் அதிகம் இருக்கிறது. தற்போது நாம் உட்கொள்ளும் உணவுகளில் 40 சதவீதம்தான் அந்தப் பொருட்களின் சத்து இருக்கிறது. நம்மைப் போல் நம் உடம்பைப் போல் நாம் உட்கொள்ளும் உணவு வகைகளும் முக்கியம். யோசிக்க நிறைய நேரம் கிடைத்தது. ஈடுபட நிறைய நேரம் கிடைத்தது. மேலும் அப்போது செக்ஸ் என்பது கலையாகத்தான் அவர்களால் பார்க்கப்பட்டது. அதன்பின்பு ஆங்கிலேயர் வந்த கால கட்டங்களைப் பற்றிப் பார்ப்போம். நம் நாட்டிற்கு ஆங்கிலேயர் வந்தபின்பு செக்ஸா! அது மிகவும் தவறான ஒன்று என்பது நம் மக்கள் மனதில் புகுத்தப்பட்டதா அல்லது தானாகவே ஏற்படுத்தப்பட்டதா தெரியவில்லை. ஆனால், நம் மக்கள் மனதில் அப்படியரு எண்ணம் இருந்தது. அதைப்பற்றிப் பேசுவது தவறு என்ற நெகட்டிவ் தாட் ஏற்பட்டது. இது மனதில் நிறைய குற்ற உணர்வுகள் தோன்றக் காரணமாக இருந்தது. அதனால் தான் செக்ஸை பற்றிய அறியாமை அதிகமானது. ராஜாக்கள் காலத்தில் அப்போது இருந்த நிதிஅமைச்சர், போர்ப்படை தளபதிகள் எல்லோரும் பின்னுக்குத் தள்ளப்பட்டு முதலிடத்தில் இருந்தது அந்தாதிகள் (அந்தப்புர அழகியின் தலைவி) தான். உங்களால் நம்பமுடிகிறதா? ஏன் ராஜாக்களின் வாரிசுகளை அவர்களிடம் அனுப்பி ட்ரையினிங் எடுக்கச்சொல்வது உண்டு. காரணம் செக்ஸ் உணர்வுக்கு ஏங்கும் எண்ணம் ராஜாக்களிடமோ, அவர்களின் வாரிசிடமோ ஏற்பட்டால், மன்னன் மண்ணைக் கவ்வவேண்டும். எனவேதான், அந்தாதிகளின் தலைவிக்கென தனி மரியாதை உண்டு. இப்போது இந்த அறியாமை தலைதூக்கி நடப்பதால்தான் நம்மில் பெரும்பாலானோருக்கு குற்ற உணர்வு ஏற்பட்டு, பயத்தில் திக்குமுக்காடுகிறார்கள். காமசூத்ராவில் சொல்லப்பட்ட ஒன்று. நம் எல்லோரையும் கண்டிப்பாக யோசிக்க வைக்கும். அதாவது எவன் ஒருவன், எவள் ஒருத்தி தனது செக்ஸ் உணர்ச்சிகளை அடக்கி வைத்தாலும், தாமதம் பண்ணினாலும் நாளடைவில் அது அவனை, அவளை தவறான பாதைக்குக் கொண்டு செல்லும் என்று சொல்லப்பட்டுள்ளது. 19_ம் நூற்றாண்டில் சிக்மெண்ட் ப்ராய்ட் சொன்னதும் இதைத்தான். அதாவது அடக்கி வைப்பதால் உங்கள் மனது, உடம்பு இரண்டும் பாதிக்கப்படலாம். அதற்கு நாம் என்ன செய்யமுடியும் என்று கேட்காதீர்கள். இந்த நூற்றாண்டில் கொஞ்சம் மாற்றம் ஏற்பட்டு இருக்கிறது. நம் மருத்துவர்கள் இதைப் பற்றிப் படிக்க ஆரம்பித்தனர். ஒரு காலத்தில் இதைப் படித்தவர்கள் செக்ஸ் மனதைச் சார்ந்தது என்று பேசினார்கள். 1960_க்கு பிறகு செய்யப்பட்ட ஆராய்ச்சியில் தான் இது மனதுக்கும் உடம்புக்கும் என்று சொல்லப்பட்டது. சயின்டிஃபிக் டெவலப்மெண்ட் வந்தது. 1999க்குப் பிறகு மீடியாக்களும் இதைப்பற்றி தெளிவாகப் பேச ஆரம்பித்தது. இதை யாரிடம் கேட்பது என்ற தயக்கம் குறையத் தொடங்கியது. ஏனென்றால் நமக்கு மட்டும்தான் அந்த மாதிரி சந்தேகம் ஏற்படுகிறதோ என்ற குழப்பம் எல்லோர் மனதிலும் உச்சாணிக் கொம்பாக முளைத்து நின்றது. நாளடைவில் அது குறைய ஆரம்பித்தது. நம்மை போல் எல்லோருக்கும் அந்தச் சந்தேகம் இருக்கிறது என்ற தைரியம் வளர்ந்தது. உங்கள் ஆரோக்கியம் நன்றாக இருப்பதற்கு செக்ஸ் என்பது மிக மிக முக்கியம். மீண்டும் ஆங்கிலேயர் காலத்திற்கே வருவோம். அப்போது ஒரு மூடநம்பிக்கை பரவிக்கிடந்தது. செக்ஸ் என்பது அனுபவிக்க அல்ல, அது வாரிசுகளை உருவாக்க, குழந்தைகளைப் பெற்றுக் கொள்ள மட்டுமே என்ற நம்பிக்கை மேலோங்கி இருந்தது. அந்தக் காலத்தில் நிறைய குழந்தைகளைப் பெற்று எடுத்தார்கள். நிறைய குழந்தைகளைப் பெற்று எடுத்தாலும் செக்ஸ் எண்ணிக்கை என்பது குறைவுதான். சரி நிறைய குழந்தைகளைப் பெற்றுக் கொள்ள மனைவி அனுமதிக்காதபோது என்ன நடக்கிறது. அப்போதுதான் உறவு முறைகளில் கை வைக்கும் பழக்கம் ஏற்பட்டது. அடுத்த வீடோ, அதற்கு அடுத்த தெருவில் உள்ள வீடோ அனைவருக்கும் சின்ன வீடாக மாறியது. ஆசை நாயகிகள் பவுடர்களில் வலம் வரத் தொடங்கினர். இதையும் மீறி வீட்டு விசேஷங்களுக்கு வரும் சின்னக் குழந்தைகள், பக்கத்து வீட்டுக் குழந்தைகள் என நிறைய குழந்தைகள் செக்ஸ§க்காக ஏமாற்றப்பட்டார்கள். சைல்டு அபூஸ் ஆங்காங்கே நடந்தேறியது. இன்னமும் நமது கிராமப்புறங்களில் பெரிய பெரிய மனிதர்களுக்கு சிறு குழந்தைகளை செக்ஸ§க்காக பயன்படுத்தும் பழக்கம் இருந்து வருகிறது என்ற பேச்சும் உண்டு. எல்லாமே மாற ஆரம்பித்தது. மற்றவர்களின் மேல் குறை கண்டுபிடிக்கப்பட்டது. ஒரே விஷயம் இதில் சரி, தவறு என்று எதைச் சொல்லமுடியும். ஆரோக்கியம், ஆரோக்கியமற்றது, என்று சொல்வது தான் சரி. நம் சமுதாயம் தோன்றிய காலத்தில் இருந்து கல்யாணம் என்ற சடங்கு முறை நாம் ஏற்படுத்தியதுதான். கடவுளின் படைப்பில் மனிதன் படைக்கப்பட்டான். கல்யாணம் என்ற வரைமுறை, சந்ததிகளை வளர்க்கும் முறைகள் மனிதன் ஏற்படுத்தியதுதான். கல்யாணம் முடிந்தபின்னும் என்ன பார்வை அப்படீன்னு கேட்கச் சொல்லுது. அப்போது நாம அடக்கி வைக்கிறதால நாம் மனது ஒரு தவறைத் தேடிப் போகிறது. இப்போ நாம் வாழ்ந்துகிட்டு இருக்குற கால கட்டத்துல நம்ம ஜனங்களுக்கு எது சரி, எது தவறு என்பது தெரியவில்லை என்று தான் சொல்ல வேண்டும். கேட்டால் இயற்கை தருமம் என்று பேசி நேரத்தை வீணடிக்கிறோம். ஒருவன் 13 வயதில் ஆண்மைக்கான முழு தகுதியும் அடைந்து விடுகிறான் என்று வைத்துக் கொள்ளுவோம். என்ன செய்ய முடியும்? வறுமை தாண்டவமாடுகிறது. வயிறு பசி எடுக்கிறது. பாக்கெட்டில் பணம் இல்லை. சரி என்னிடம் பணம் இல்லை என்று உங்கள் வயிறு சும்மா இருக்குமா! இருக்காது. மாறாக, உங்கள் ஜீரணப் பகுதி கெட்டுப்போய்விடும். சாப்பாட்டைத் தேடி ஓடுகிறான். வேலை செய்ய முடிந்தவன் வேலை தேடுகிறான். முடியாதவன் கையை ஏந்துகிறான், அரைசாண் வயிற்றுக்காக. அதைப் போல்தான் உங்கள் செக்ஸ் உணர்வும். வாய்ப்பில்லை வசதியில்லை என்று உங்கள் செக்ஸ் உணர்வு தூங்கிவிடாது. இந்த வெஸ்டெர்ன் சிஸ்டம். என்பது குமாஸ்தாக்களுக்கு பண்ணப்பட்டது. இது ஒரு மெக்கானிக் சிஸ்டம் இப்போது நீங்க 13 வயதில் கல்யாணம் பண்ணமுடியாது. நல்லா படிக்கணும், வேலை வாங்கணும். வேலை வாங்கினா மட்டும் போதாது. ஒரு ஃப்ளாட் வாங்கணும். அப்புறம் எப்படி கல்யாணம் பண்ண முடியும். சரி அதுவரைக்கும் உங்க உடம்பு எப்படி சும்மா இருக்கும்? உங்களுக்குள்ளே கான்ஃபிக்ட் வருது. செய்யலாமே என்று சொல்லி உங்களைத் தூண்டும். இதெல்லாம் தவறு என்று ஒரு பக்கம் சொல்லும். திருடுவது தவறுதான். ஆனால் பசி? இயற்கை ஒரு பக்கம். உங்களோட நேர்மை இன்னொரு பக்கம். எல்லாமே இரட்டை அர்த்தத்தில் உங்கள் முன் உலா வருகிறது. சினிமாக்களின் தரம் உயர்ந்துவிட்டது. நடிகைகளின் கவர்ச்சி உங்களை திக்குமுக்காட வைக்கிறது. என்ன செய்யப் போகிறீர்கள். எப்படி உங்களால் இது சரி தவறு என்று முடிவு பண்ணமுடியும்? உங்கள் மனைவியுடனே நீங்கள் இருக்கவேண்டும் என்றால், மக்கள் தொகை காரணம் காட்டப்படுகிறது. இங்குதான் குழப்பம் வருகிறது இளைஞர்களைத் தவறு என்று சொல்லுவது சரியில்லை. பெற்றோர்கள்தான் சரியான விதத்தில் சூழ்நிலைகளைக் குறித்து வளர்த்து ஆளாகக்வேண்டும். காமசூத்ராவில் சரி என்று சொல்லப்பட்ட ஒன்று, ஆங்கிலேயர் காலத்தில் தவறு என்று கற்பிக்கப்பட்டு, நம் முன்பு இப்போது செக்ஸ் என்பது ஒரு போகப் பொருளாக மாறிவிட்டது. இங்கு தான் செக்ஸ§க்கான அந்தப் பழைய வேல்யூ அடிபட்டுப் போகிறது. நம் உறவு முறைகளுக்கு உண்டான முக்கியத்துவம் குறைந்து விட்டது. மக்கள் தொகை அதிகமானதால், குடும்பக்கட்டுப்பாடு வந்துவிட்டது. ஆனால், இந்த கெஸ்§க்கு மூன்று முகங்கள் உள்ளன.

1. குழந்தை உருவாக 2. சுகத்திற்காக 3. உறவு முறைகள்

இதை நாம் மறந்துவிட்டோம். இது நவீன யுகம். முன்னேற்றம் அடைந்துவிட்டோம். ஆனால் நேரம் இல்லாமல் போய்விட்டது. நகரவாழ்க்கையின் தன்மை மாறிவிட்டது. ஃபைவ் ஸ்டார் ஹோட்டல், பப், காபியர் என்று மாறிவிட்டது. செக்ஸ் என்பது இரண்டாவதாக ஆக்கப்பட்டது. செக்ஸ் மீதான நாட்டம் குறைந்துவிட்டது. அவசரகதியில் அதுவும் ஒரு கதி என்று ஆகிவிட்டது. பெக் ஆஃப் இன்ஃபர்மேஷன் அப்போ, லாட் ஆஃப் இன்பர்மேஷன் இப்போ. எந்த பர்சன்ஜ் விஞ்ஞானபூர்வமானது என்பது சந்தேகமானது. அப்போது சாய்ஸ் கிடையாது. இப்போது நிறைய சாய்ஸ் இருக்கிறது. மனித வாழ்க்கையும், மனித உணவும், மனித உறவு முறையிலும் மதிப்பு குறைந்துவிட்டது. மனித உயிரை விட, மனிதன் இருக்கும் லேண்ட் வேல்யூ அதிகமாகிவிட்டது. ஒழுக்கம், தூண்டுதல், ஒரு பக்கம் நேரமின்மை. குற்றங்கள் அதிகமாக வளருது. முறையற்ற உறவுகள் சொல்லவே தேவையில்லை. தினசரி பத்திரிகைகளைத் தான் தினமும் பார்க்கிறோமே! நோயும் புதுப் புது பெயர்களால் நம்மை பயமுறுத்துகிறது. முன்னேற்றமான காலம் இது என்று நாம் சொன்னாலும் உங்கள் ஆரோக்கியத்தில் நிஜமான முன்னேற்றம் தானா? கண்டிப்பாக சந்தேகிக்க வேண்டிய ஒன்றுதான். ஒரு விஷயத்தைப் பார்ப்போமே. ஒரு காலத்தில் கிராமப் புறங்களில் உள்ள ஒரு முறை இதுதான். அப்போது உள்ள கட்டிலின் உயரம் 6அடி இருக்கும். கீழே ஒரு அடிக்கு மரப்பலகை ஒன்று இருக்கும்.

கட்டிலின் இருபக்கமும் கண்ணாடி இருக்கும். உங்கள் மனைவி கட்டிலின் மேலாகவும் நீங்கள் நின்றுகொண்டு பாதி படுத்துக்கொண்டும் இருப்பதற்காகச் செய்யப்பட்டது. அந்தக் கண்ணாடியில் பிம்பங்கள் தெரியும். தெளிவான முறையில் அவை தெரிவதால் உங்களது செக்ஸில் பயம் இருக்காது. ஆனால், இப்போது 1லு அடி, 2 அடி கட்டிலில் இருப்பதால் என்ன நடக்கிறது என்றே தெரியாமல் செக்ஸை கையாளுகிறோம். எனவே சில பல விஷயங்கள் உங்களால் பார்க்கமுடியாததில் பயம் ஏற்படுகிறது. தடுமாற்றத்துல நீங்கள் திணறித் தவிக்கிறீர்கள். அப்புறம் நீங்கள் வயாக்ரா போட்டால் என்ன? போடாமல் இருந்தால் என்ன? பலன் ஒன்று தானே. காமசூத்ராவில் சொல்லப்பட்ட இன்னொன்று. ஒருவருக்கு செக்ஸில் பிரச்சனை என்று இருந்தால் அவனது ஆகாரம், விகாரம் இரண்டையும் சரிப்படுத்தவேண்டும் என்று சொல்லப்பட்டுள்ளது. இப்போது நாம் அந்த இரண்டையும் விட்டுவிட்டோம். கேட்டால் டெக்னாலஜி என்று சொல்லிக் கொண்டு இருக்கிறோம். செக்ஸ் என்பது தற்போது உறவில் இருந்து மாறி குற்றமாக உருவெடுத்து போகப் பொருளாக மாறிவிட்டது. ஆனால், மீண்டும் பழையநிலைக்கு வரும் என்ற நம்பிக்கை இருக்கிறது. அமெரிக்காக்காரர்கள் தாங்கள் செய்த தவறை திருத்திவிட்டார்கள். ஆனால், நாம் இன்னமும் இந்த விஷயத்தில் ஈஅடிச்சான் காப்பிதான். உலகத்தில் ஆசியாவில் உள்ள புத்தகங்களில் சிறந்த புத்தகம் வேதம்தான். அதுவும் அதுல ரிக்வேதத்தில் செக்ஸ§க்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. ஆங்கிலேயர் வந்த பின்பு செக்ஸ் தேவையில்லாதது என்ற ஃபீலிங் மிகையாக இருந்தது. வயாக்ரா வந்தபோது லக்ஜூரி என்ற எண்ணம் மேலோங்கி இருந்தது. இப்போது மருத்துவர்கள் மேலும் சில விஷயங்களை கவனத்தில் எடுத்துக்கொண்டுள்ளனர். ஒருவனுக்கு செக்ஸ் பிரச்னை என்றால் அதோடு நிறுத்திவிடாமல் அவனது உடலை முழுவதும் டெஸ்ட் செய்யவேண்டும் என்றுதான் அறிவுறுத்துவார்கள். ஏனென்றால், மற்ற உறுப்புகள்தான் முதலில் டேமேஜ் ஆக வாய்ப்பு உள்ளது. அதுதான் உடல் ஒருங்கமைவு. இந்த நிலையில் இதை மனசு சார்ந்தது என்று சொல்வார்கள். ஆனால் சைக்கோமேட்டிக் இரண்டும் சேர்ந்து தான் அதன் வேலையைச் செய்யும். உங்கள் மனசு பிஸினஸ் பற்றி யோசிக்கும் வேளையில், உங்க உடம்பு ஏதாவது நீலப்படம் பார்த்தால் என்ன என்று யோசித்துக் கொண்டு இருக்கும். நான் ஒரு ஆண், ஒரு பெண்ணைப் பார்த்தல் உணர்ச்சிவசப் படுவேன்.

ஆனால் என்தாய், மகள், தங்கையைப் பார்த்தால் அந்த உணர்ச்சி தோன்றாமல் போகிறது. ஏன்? அந்தத் தூண்டுதல் எங்கே போனது. இந்தத் தூண்டுதலின் முதலாளி உங்கள் மூளைதான். அதற்குத் தெரியும், அவள் உன் தங்கை, இவள் நீ தேடும் வேசி என்று. எனவே செக்ஸ் தூண்டுதல் என்பதை உங்கள் மூளை ஏற்றுக்கொள்ளவேண்டும். ஆகையினால், அந்தத் தூண்டுதல் அந்ததந்த காலகட்டத்தைச் சார்ந்து தான் வரும். இன்று எத்தனை பெண்கள் தாவணியும், சேலையும் கட்டிக்கொள்ளவிரும்புகிறார்

Link to comment
Share on other sites

ஒவ்வொரு மனிதனுடைய செக்ஸ் உணர்வு அந்தந்த இடத்தைப் பொறுத்து இருப்பதில் தவறில்லை.
:D

அப்போது நம் முன்னோர்களுக்கு நிறைய நேரம் கிடைத்தது. இப்போது நீங்கள் துரைசாமி சப்_வேயை கடந்து செல்ல 1 மணி ஆகிறது. நகரத்தின் சாயல் மாறிவிட்டது. நமக்கு ஸ்ட்ரெஸ§ம் கூடிவிட்டது. எங்கே கிடைக்கிறது உங்களுக்கு நேரம். எனவே, உங்களது பிகேவியரும் மாறிவிட்டது.

ஆனால் சிலர் பிரயாணம் செய்யும் போதே செக்ஸ்ம் செய்வதாய் கேள்வி! :D

ராஜாக்கள் காலத்தில் அப்போது இருந்த நிதிஅமைச்சர், போர்ப்படை தளபதிகள் எல்லோரும் பின்னுக்குத் தள்ளப்பட்டு முதலிடத்தில் இருந்தது அந்தாதிகள் (அந்தப்புர அழகியின் தலைவி) தான். உங்களால் நம்பமுடிகிறதா?
நிச்சயமாக நம்ப முடிகின்றது! இப்பொழுதும் அதுதானே நடக்கின்றது? :D

ஒருவன் 13 வயதில் ஆண்மைக்கான முழு தகுதியும் அடைந்து விடுகிறான் என்று வைத்துக் கொள்ளுவோம். என்ன செய்ய முடியும்?

சாமர்த்திய வீடு செய்யலாமா? :)

சினிமாக்களின் தரம் உயர்ந்துவிட்டது. நடிகைகளின் கவர்ச்சி உங்களை திக்குமுக்காட வைக்கிறது. என்ன செய்யப் போகிறீர்கள்.
அறைக்கதவைப் பூட்டிவிட்டு, லைட்டையும் அணைத்துவிட்டு தனியாக இருந்து பார்க்கவேண்டியது தானே! :D

ஆனால், இந்த கெஸ்§க்கு மூன்று முகங்கள் உள்ளன. 1. குழந்தை உருவாக 2. சுகத்திற்காக 3. உறவு முறைகள்

அதாவது முறையே சத்யம், சிவம், சுந்தரம் எனக் கூறுங்கள்!

ஒரு விஷயத்தைப் பார்ப்போமே. ஒரு காலத்தில் கிராமப் புறங்களில் உள்ள ஒரு முறை இதுதான். அப்போது உள்ள கட்டிலின் உயரம் 6அடி இருக்கும். கீழே ஒரு அடிக்கு மரப்பலகை ஒன்று இருக்கும். கட்டிலின் இருபக்கமும் கண்ணாடி இருக்கும். உங்கள் மனைவி கட்டிலின் மேலாகவும் நீங்கள் நின்றுகொண்டு பாதி படுத்துக்கொண்டும் இருப்பதற்காகச் செய்யப்பட்டது. அந்தக் கண்ணாடியில் பிம்பங்கள் தெரியும். தெளிவான முறையில் அவை தெரிவதால் உங்களது செக்ஸில் பயம் இருக்காது.
அட இப்படியும் ஒரு சங்கதி இருக்கிறதா? இந்தியாவிலிருந்து இப்படிக் கட்டிலொன்றை வாங்கி எடுப்பிச்சுப் போட்டாப் போகுது! :D

உங்கள் மனசு பிஸினஸ் பற்றி யோசிக்கும் வேளையில், உங்க உடம்பு ஏதாவது நீலப்படம் பார்த்தால் என்ன என்று யோசித்துக் கொண்டு இருக்கும்.

விடை தெரியவில்லை! :D

அதிகாலையில் சென்னை போன்ற நகரங்களில் உள்ள பூங்காக்களில் காலையில் பார்த்தால் வயதான ஆட்கள்தான் நடந்து கொண்டு இருப்பார்கள். இளம்வயது ஜோடிகள் ரொம்ப முக்கியமா எதையோ பேசிக் கொண்டு இருப்பார்கள்.

???? :lol:

செக்ஸ் சம்பந்தமான ஒரு பிரபல தமிழ் சினிமாப் பாடலைக் கேட்பதற்கு இங்கே அழுத்தவும்

Link to comment
Share on other sites

என்ன கு.சா அண்ணா நம்மட ஆட்களின்ற சத்தத்தையே காணவில்லை? வழமையாக வந்து வம்பு செய்கின்ற ஐயா நெடுக்கைகூட காணவில்லை? மகாஜனங்கள் திடீரென்று பக்குவம் அடைந்து ஞான முக்தர்களாகி விட்டார்களோ? இப்படி செய்திகளை யாழ் களத்தின் மற்றைய பகுதிகளிலும் ஒட்டி விட்டால் நன்றாக இருக்குமோ? :huh::huh::huh:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மாப்பு என்ன நடக்குத இங்கே :P

Link to comment
Share on other sites

இந்த கு.சா தாத்தாவுக்கு ஒரு விவஸ்த்தையே இல்லை! :angry: சிவனே என்று தேவாரங்கள், திருவாசகங்கள் என்று பாடி, நிம்மதியா போய் சேர கடவுளை கும்பிடாமல், என்ன ஆராச்சி செய்து கொண்டிருகிரார் பாருங்கோ :lol: ..இந்த வயசில் இவருக்கு இது தேவையா? இதை தான் கலி காலம் என்று சொல்லுறதோ? :P

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த கு.சா தாத்தாவுக்கு ஒரு விவஸ்த்தையே இல்லை! :angry: சிவனே என்று தேவாரங்கள், திருவாசகங்கள் என்று பாடி, நிம்மதியா போய் சேர கடவுளை கும்பிடாமல், என்ன ஆராச்சி செய்து கொண்டிருகிரார் பாருங்கோ :lol: ..இந்த வயசில் இவருக்கு இது தேவையா? இதை தான் கலி காலம் என்று சொல்லுறதோ? :P

கனம், மூக்கி அவர்களே. இத்தால் நான் உங்களுக்கு எச்சரிக்கை விடுகின்றேன்.நீங்கள் நெருப்புடன் விளையாடுகின்றீர்கள்.அது சரி கதையோடை கதையாய் ஒண்டு கேக்கிறன் உங்கடை புத்தி மாறாட்டத்துக்கு இப்பவும் மருந்து மாத்திரையள் பாவிக்கிறனீங்களோ?ஏனெண்டால் நாங்கள் கொஞ்சம் கவனமாய் இருக்கோணுமெல்லோ. B)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்னா இந்த வாரம் செ*** வாரமா??

பின்னுறீங்கப்பா.... :lol:

அது சரி அதென்ன இந்தப்பக்கம் வந்து தடக்குப்படுகுறீர்?ஏன் என்ன இன்னும் காச்சல் குணம் அடங்கேல்லையே? :lol:

Link to comment
Share on other sites

இந்த வாரம் காதலர் தினம் வருகின்றதே தெரியாதா? :P

இதைப்பாரடா விளக்கத்தை... தைப்பொங்கலுக்கு முன்னம் ஏதாவது தை பொங்கல் சம்பந்தமா கதைச்சனியளோ? இல்லை வேனாம், அட்லீஸ் மாட்டுப்பொங்கலுக்காவது?? இதுக்கு மட்டும்தானா? அதுசரி காதலர் தினத்துக்கும், செக்ஸுக்கும் இன்னாளே சம்பந்தம்?? எர்றா அருவாளை... :angry: :angry:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதைப்பாரடா விளக்கத்தை... தைப்பொங்கலுக்கு முன்னம் ஏதாவது தை பொங்கல் சம்பந்தமா கதைச்சனியளோ? இல்லை வேனாம், அட்லீஸ் மாட்டுப்பொங்கலுக்காவது?? இதுக்கு மட்டும்தானா? அதுசரி காதலர் தினத்துக்கும், செக்ஸுக்கும் இன்னாளே சம்பந்தம்?? எர்றா அருவாளை... :angry: :angry:

என்னய்யா விளாஙத்தனமாக கேள்வி கேட்க்கொன்டு :lol: தைப்பொங்கல்

காசு செலவு சம்பந்தப்பட்டது.இது அப்படியா.அது தான்.அது சரி எனக்கு ஒரு சின்ன சந்தேகம்.செக்ஸ்சுக்கும் காதலுக்கும் சம்பந்தம் இல்லையா இதுல எது முதல் வந்தது. :lol: :P

Link to comment
Share on other sites

என்னய்யா விளாஙத்தனமாக கேள்வி கேட்க்கொன்டு :lol: தைப்பொங்கல்

காசு செலவு சம்பந்தப்பட்டது.இது அப்படியா.அது தான்.அது சரி எனக்கு ஒரு சின்ன சந்தேகம்.செக்ஸ்சுக்கும் காதலுக்கும் சம்பந்தம் இல்லையா இதுல எது முதல் வந்தது. :lol: :P

ஆ,, இப்படி யாராவது அறிவு பூர்வமா கேள்வி கேட்கமாட்டாங்களா என்று ஏங்கி தவிச்சன், நேக்கும் இதைப்பற்றிதெரியல்லையப்பு, நாம இரண்டு பேரூம் சேர்ந்து நம்ம யாழ்கள மாத்திரபூதத்திட்ட சா இளங்கோ சாரிட்ட கேட்பமா?? இளங்கோ சார் விளாவாரியா உளக்கி சா விளக்கிவிடுங்கோ பார்ப்பம். :P

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்னய்யா விளாஙத்தனமாக கேள்வி கேட்க்கொன்டு :lol: தைப்பொங்கல்

காசு செலவு சம்பந்தப்பட்டது.இது அப்படியா.அது தான்.அது சரி எனக்கு ஒரு சின்ன சந்தேகம்.செக்ஸ்சுக்கும் காதலுக்கும் சம்பந்தம் இல்லையா இதுல எது முதல் வந்தது. :lol: :P

உந்த குருட்டு கேள்வியள் கேக்கிறதுக்கெண்டு கொஞ்சகூட்டம் அலைஞ்சு கொண்டு திரியுதப்பா :angry:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதிலிருந்து அறியக்கடியது sex is Cheap. எவரும் பண்ணலாம். நமக்கு அது வேணாம். Love is Chief அதுதான் அது தனித் தன்மை பெறுகிறது. அதுதான் வேணும் மனிதருக்கு. :lol:

Link to comment
Share on other sites

இதிலிருந்து அறியக்கடியது sex is Cheap. எவரும் பண்ணலாம். நமக்கு அது வேணாம். Love is Chief அதுதான் அது தனித் தன்மை பெறுகிறது. அதுதான் வேணும் மனிதருக்கு. :lol:

Sex is Cheap! Love is Chief!

ஆகா என்னாமாதிரியெல்லாம் லங்குவேஜ் ஸ்கில்லில் நம்மட ஆட்கள் முன்னேறீட்டாங்கப்பா! ஆனால் தமிழீழம் தான் கிடைக்க மாட்டேங்கிது!

ஐயா நெடுக்கு உது உம்மட சொந்த சரக்கா அல்லது இரவலா? சொந்தச் சரக்கா இருக்குமாயிருந்தா உண்மையில உமக்குள்ள ஒரு குட்டி சேக்ஸ்பியர் குடியிருக்கிறார் என நீர் நினைத்து சந்தோசப்படலாம்!

காலம்பிற வந்த வரத்திலேயே சிக்ஸ் அடிக்கிறீர்! அக்கா ஏதாவது சர்பிரைஸ் தந்தவவோ? :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Sex is Cheap! Love is Chief!

ஆகா என்னாமாதிரியெல்லாம் லங்குவேஜ் ஸ்கில்லில் நம்மட ஆட்கள் முன்னேறீட்டாங்கப்பா! ஆனால் தமிழீழம் தான் கிடைக்க மாட்டேங்கிது!

ஐயா நெடுக்கு உது உம்மட சொந்த சரக்கா அல்லது இரவலா? சொந்தச் சரக்கா இருக்குமாயிருந்தா உண்மையில உமக்குள்ள ஒரு குட்டி சேக்ஸ்பியர் குடியிருக்கிறார் என நீர் நினைத்து சந்தோசப்படலாம்!

காலம்பிற வந்த வரத்திலேயே சிக்ஸ் அடிக்கிறீர்! அக்கா ஏதாவது சர்பிரைஸ் தந்தவவோ? :lol:

சொந்தம் பாதி பிறத்தி பாதி சேர்ந்து செய்த கலவையது.

அக்கா சார்பிறைஸ் தரா எலக்றிக் சார்க் தான் தருவா..! :lol::lol:

Link to comment
Share on other sites

இதிலிருந்து அறியக்கடியது sex is Cheap. எவரும் பண்ணலாம். நமக்கு அது வேணாம். Love is Chief அதுதான் அது தனித் தன்மை பெறுகிறது. அதுதான் வேணும் மனிதருக்கு. :D

மனிதருக்கு அது தான் வேனும் சரி..மனிதர் இல்லாதோருக்கு? :P :rolleyes:

சொந்தம் பாதி பிறத்தி பாதி சேர்ந்து செய்த கலவையது.

அக்கா சார்பிறைஸ் தரா எலக்றிக் சார்க் தான் தருவா..! :D:D

ஓ? அங்க தாற எலெக்ரிக் ஷொக்கில தான் இங்க வந்து கலை ஆடுறனிங்கலோ?..அங்க சொல்ல பயம், இங்க வந்து நிண்டு பெண்களை குத்து, வெட்டு என்றது!..பிறகு பூனை மாதிரி போய் வீட்டில் இருப்பார்களாக்கும் :P

Link to comment
Share on other sites

�“? அங்க தாற எலெக்ரிக் ஷொக்கில தான் இங்க வந்து கலை ஆடுறனிங்கலோ?..அங்க சொல்ல பயம், இங்க வந்து நிண்டு பெண்களை குத்து, வெட்டு என்றது!..பிறகு பூனை மாதிரி போய் வீட்டில் இருப்பார்களாக்கும் :P

:rolleyes:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மனிதருக்கு அது தான் வேனும் சரி..மனிதர் இல்லாதோருக்கு? :P :rolleyes:

ஓ? அங்க தாற எலெக்ரிக் ஷொக்கில தான் இங்க வந்து கலை ஆடுறனிங்கலோ?..அங்க சொல்ல பயம், இங்க வந்து நிண்டு பெண்களை குத்து, வெட்டு என்றது!..பிறகு பூனை மாதிரி போய் வீட்டில் இருப்பார்களாக்கும் :P

அநேக பெண்களே புத்தி சுகமில்லாததுகள் தானே. அதுகள் எப்ப எங்க சார்க் கொடுக்குங்கள் என்று யாருக்கும் தெரியும். தெரிஞ்சால் யாருமே கிட்டப் போகவே மாட்டினமே..! அதுதான் எச்சரிக்கிறமில்ல ஆண்களை.

சம்சாரம் ஒரு மின்சாரம். சார்க் அடிக்கும் அபாயம் மரணம் என்று. உங்களைப் பார்த்தாவே தெரியல்ல. எல்லாம் அபாயமானதென்று. :D:D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அநேக பெண்களே புத்தி சுகமில்லாததுகள் தானே. அதுகள் எப்ப எங்க சார்க் கொடுக்குங்கள் என்று யாருக்கும் தெரியும். தெரிஞ்சால் யாருமே கிட்டப் போகவே மாட்டினமே..! அதுதான் எச்சரிக்கிறமில்ல ஆண்களை.

சம்சாரம் ஒரு மின்சாரம். சார்க் அடிக்கும் அபாயம் மரணம் என்று. உங்களைப் பார்த்தாவே தெரியல்ல. எல்லாம் அபாயமானதென்று. :D:rolleyes:

மின்சாரம்தான் யார் இல்லை என்றது.ஒழுங்கா கையான்டால் பல நன்மைகள் பெறலாம்.தவறாக கயான்டால் அதோ கதி தான். நீங்கள் எப்படியுங்கோ :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஜஙரழவந யெஅநஸ்ரீ'ளயபநஎயn' னயவநஸ்ரீ'குநடி 12 2007இ 10:17 Pஆ' pழளவஸ்ரீ'258436'ஸ

மின்சாரம்தான் யார் இல்லை என்றது.ஒழுங்கா கையான்டால் பல நன்மைகள் பெறலாம்.தவறாக கயான்டால் அதோ கதி தான். நீங்கள் எப்படியுங்கோ :னு

ஜஃஙரழவநஸ

சிலநேரம் கூடிகுறைந்து வருவதால் தானொஏனோ "மின்சாரம்" பற்றிய பயத்தில் இருக்கிறார்கள் சில கள உறுப்பினர்கள்!

எல்லாருக்ககும் மின்சாரம் பற்றிய பாடம் தேவை!

Link to comment
Share on other sites

அநேக பெண்களே புத்தி சுகமில்லாததுகள் தானே. அதுகள் எப்ப எங்க சார்க் கொடுக்குங்கள் என்று யாருக்கும் தெரியும். தெரிஞ்சால் யாருமே கிட்டப் போகவே மாட்டினமே..! அதுதான் எச்சரிக்கிறமில்ல ஆண்களை.

சம்சாரம் ஒரு மின்சாரம். சார்க் அடிக்கும் அபாயம் மரணம் என்று. உங்களைப் பார்த்தாவே தெரியல்ல. எல்லாம் அபாயமானதென்று. :D:lol:

புத்தி சுகமில்லாதவர்கள் தான் விளக்கம் இல்லாமல், மின்சாரத்தை பாவிக்கதெரியாமல், பாவித்து போட்டு வந்து இங்கெ புலம்பி தள்ளுறார்கள் :lol: ..பெண்கள் எப்பவும் மின்சாரம் மாதிரி தெளிவா தான் இருகிறார்கள்! :icon_idea: உங்களுக்கு கைய்யாள அறிவு பத்தாட்டி, அறிவு வளரவிட்டு அதை பாவியுங்கள்..( அது இருந்தால் தானே வளருவதற்க்கு?) :P :D

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இந்தப்பாட்டி காலத்தில் இணைய, முகநூல் வசதியிருந்திருந்தால் எப்படியிருந்திருக்கும்..... கற்பனை பண்ணிப்பார்க்கிறேன். சிறியர்... உங்களுக்கும்  கற்பனை பொறி தட்டியிருக்குமே..... அதை பகிருங்கள் காண ஆவலாக இருக்கிறேன்!
    • மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள். . .
    • இவர்களும் அவ்வப்போது நித்திரையால் எழும்பி கனவு கண்டவர்கள் போல்  குரலெழுப்பி விட்டு மறுபடியும் உறங்கு நிலைக்கு போய் விடுவார்கள். சேர்வதேச விசாரணை இல்லையென்று அடித்துக்கூறிவிட்டார் மாத்தையா, இவர்கள் காதுக்கு இன்னும் எட்டவில்லையோ செய்தி அலறித்துடிக்கிறார்கள். தேர்தலுக்காக இவர்களை யாராவது இயக்குகிறார்களா எனும் சந்தேகமாய் இருக்கு.
    • LSG vs CSK: லக்னௌ விரித்த வலையில் விழுந்த சிஎஸ்கே - ஆட்டத்தை முடித்த 3 விக்கெட் கீப்பர்கள் பட மூலாதாரம்,SPORTZPICS 2 மணி நேரங்களுக்கு முன்னர் வலிமையான பேட்டிங் வரிசை, பந்துவீச்சு பலம் இருந்தும் லக்னௌவின் தொடக்க வரிசையை அசைக்கக்கூட சிஎஸ்கே அணியால் முடியவில்லை. அதேநேரம், சிஎஸ்கே பேட்டர்கள் ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக வியூகம் அமைத்து களத்தில் செட்டில் ஆகவிடாமல் லக்னெள அணி திட்டமிட்டுக் காலி செய்துள்ளது. சிஎஸ்கே அணியை கடினமாகப் போராடி லக்னெள அணி வீழ்த்தவில்லை. கனகச்சிதமான திட்டங்களை முன்கூட்டியே வகுத்து, எந்த பேட்டரை எப்படி வீழ்த்த வேண்டுமெனத் தீர்மானித்து தங்கள் திட்டங்களை வெற்றிகரமாகச் செயல்படுத்தி வெற்றி கண்டுள்ளது. ஆட்டத்தைப் பார்த்தபோது, லக்னெள அணியின் பந்துவீச்சு, ஃபீல்டிங், பேட்டிங்கில் இருந்த ஒழுக்கம், கட்டுக்கோப்பு அனைத்தும் சிஎஸ்கே அணியில் மிஸ்ஸிங். தொடக்க வரிசை பேட்டர்களைகூட வீழ்த்துவதற்கு சிரமப்பட்டது, அதன்பின்பும் நெருக்கடி கொடுக்க முடியாமல் தோல்வியை ஒப்புக்கொண்டுள்ளது. லக்னெள அணியின் 3 விக்கெட் கீப்பர்களான கேப்டன் கே.எல்.ராகுல், குயின்டன் டீ காக், நிகோலஸ் பூரன் ஆகிய 3 பேரும் சேர்ந்து ஒட்டுமொத்த சிஎஸ்கே அணியின் ஆட்டத்தை முடித்துவிட்டனர். லக்னெளவில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 34வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்தது லக்னெள சூப்பர் ஜெயின்ட்ஸ் அணி.   பட மூலாதாரம்,SPORTZPICS முதலில் பேட் செய்த சிஎஸ்கே அணி 6 விக்கெட் இழப்புக்கு 176 ரன்கள் சேர்த்தது. 177 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய லக்னெள அணி 6 பந்துகள் மீதமிருக்கையில் 2 விக்கெட்டுகளை இழந்து 180 ரன்கள் சேர்த்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம், லக்னெள அணி 7 போட்டிகளில் 4 வெற்றி, 3 தோல்வி என 8 புள்ளிகளுடன் 5வது இடத்தில் இருக்கிறது. 8 புள்ளிகள் பெற்றாலும் நிகர ரன்ரேட்டில் 0.123 என்று குறைவாகவே இருக்கிறது. அடுத்தடுத்த போட்டிகளில் பெறும் வெற்றி நிகர ரன்ரேட்டை உயர்த்தும். அதேநேரம், சிஎஸ்கே அணி 7 போட்டிகளில் 4 வெற்றி, 3 தோல்விகள் என 8 புள்ளிகளுடன் 3வது இடத்தில் நீடிக்கிறது. சிஎஸ்கே அணியின் நிகர ரன்ரேட் வலுவாக இருப்பதால், 0.529 எனத் தொடர்ந்து 3வது இடத்தைத் தக்க வைத்துள்ளது. லக்னெள அணியின் வெற்றிக்கு கேப்டன் கே.எல்.ராகுல்(82), டீகாக்(54) முதல் விக்கெட்டுக்கு 134 ரன்கள் சேர்த்து வலுவான அடித்தளம் அமைத்து, இதுதவிர கேப்டனுக்குரிய பொறுப்புடன் கே.எல்.ராகுல் பேட் செய்து 82 ரன்கள் சேர்த்தது முக்கியக் காரணங்களில் ஒன்று. இரு பேட்டர்களும், சிஎஸ்கே பந்துவீச்சாளர்கள் செட்டில் ஆவதை அனுமதிக்காமல் ஷாட்களை அடித்து அழுத்தம் கொடுத்து வந்தனர். நடுப்பகுதி ஓவர்களில் சிஎஸ்கே எப்போதுமே நன்றாகப் பந்துவீசக் கூடியது. இதைத் தெரிந்து கொண்டு ராகுல், டீகாக் நடுப்பகுதி ஓவர்கள் யார் வீசினாலும் அந்த ஓவர்களை குறிவைத்து அடித்ததால், சிஎஸ்கேவின் அந்த உத்தியும் காலியானது. லக்னெள ரன்ரேட்டை குறையவிடாமல் கொண்டு சென்ற ராகுல், டீகாக் ஒரு கட்டத்தில் கவனக் குறைவால் விக்கெட்டை வீழ்த்தினர் என்றுதான் சொல்ல வேண்டும். சிஎஸ்கே பந்துவீச்சு சிறப்பாக இருந்தது எனக் கூறுவது சரியானதாக இருக்க முடியாது. குறிப்பிடப்பட வேண்டிய அம்சமாக, சிஎஸ்கே அணிக்காக லக்னெள அணி “ஹோம் ஓர்க்” செய்து முன்கூட்டியே திட்டமிட்டுக் களமிறங்கியது. அந்தத் திட்டங்களை வெற்றிகரமாகச் செயல்படுத்தியது வெற்றிக்கு முக்கியக் காரணம். ஏனென்றால், லக்னெள அணியின் சரியான திட்டமிடலால்தான், 90 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து சிஎஸ்கே அணி தடுமாறியது. கடைசி 4 ஓவர்களில் லக்னெள பந்துவீச்சாளர்கள் துல்லியமாகப் பந்துவீசியிருந்தால், சிஎஸ்கே அணி 120 ரன்களில் சுருண்டிருக்கும். மொயீன் அலியை ஹாட்ரிக் சிக்ஸ் அடிக்க அனுமதித்தது, தோனியின் கடைசி நேர கேமியோ ஆகியவை சிஎஸ்கே ஸ்கோரை உயர்த்தியது. ஒட்டுமொத்தத்தில் சிஎஸ்கேவுக்கு எதிராக லக்னெள அணி செயல்படுத்திய திட்டங்களை சிஎஸ்கே பேட்டர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை.   பதிலடி கொடுத்த ராகுல்-டீகாக் பட மூலாதாரம்,SPORTZPICS இந்த ஐபிஎல் சீசனில் லக்னெள தொடக்க ஆட்டக்காரர்கள், டீ காக், கே.எல்.ராகுல் இருவரும் பவர்ப்ளே ஓவர்களை சரியாகப் பயன்படுத்தவில்லை, பவர்ப்ளே ஓவர்களுக்குள் ஆட்டமிழந்து விடுகிறார்கள், விரைவாக ரன்களை சேர்ப்பதில்லை என்ற விமர்சனங்கள் எழுந்தன. கடந்த 6 ஆட்டங்களில் பெரும்பாலும் நிகோலஸ் பூரனின் அதிரடியால்தான் பெரிய ஸ்கோர் கிடைத்தது என்று கிரிக்கெட் விமர்சகர்கள் விமர்சித்தனர். ஆனால், நேற்றைய ஆட்டத்தில் கே.எல்.ராகுல், டீகாக் இருவரும் அந்த விமர்சனங்களுக்குப் பதிலடி கொடுத்தனர். முதல் விக்கெட்டுக்கு 134 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். 10.5 ஓவர்களில் இருவரால் லக்னெள அணி 100 ரன்களை தொட்டது. கே.எல்.ராகுல் அதிரடியாக பேட் செய்ய, டீகாக் வழக்கத்துக்கு மாறாக மிகவும் நிதானமாக தேவையான ஷாட்களை மட்டும் ஆடினார். ராகுல் ஷார்ட் பால் வீசப்பட்டால் நம்பிக்கையுடன் பிக்-அப் ஷாட்களை ஆடி சிஎஸ்கே பந்துவீச்சை வெளுத்து வாங்கினார். குறிப்பாக பதீராணா பலமுறை யார்கர் வீச முயன்றும் ராகுல் அவர் பந்துவீச்சை நொறுக்கினார். தீபக் சஹர் வீசிய 2வது ஓவரிலிருந்தே ராகுல் பவுண்டரிகளாக விளாசத் தொடங்கி, மிட்விக்கெட்டில் சிக்ஸரும் அடித்து சிஎஸ்கேவுக்கு அதிர்ச்சி அளித்தார். முஸ்தபிசுர் ரஹ்மான் பந்துவீச வந்தபோதும் அவரையும் ராகுல் விட்டு வைக்கவாமல் பவுண்டரிகளாக விளாசினார். பட மூலாதாரம்,SPORTZPICS பவர்ப்ளேவில் 5வது, 6வது ஓவரில் ராகுல், டீகாக் இருவரும் இணைந்து சிஸ்கர், பவுண்டர்களாக விளாசியதால் விக்கெட் இழப்பின்றி பவர்ப்ளேவில் லக்னெள 54 ரன்கள் சேர்த்தது. ஜடேஜா வீசிய 9வது ஓவரில் டீ காக் அடித்த ஷாட்டை ஷார்ட் தேர்டு திசையில் இருந்த பதீராணா எளிமையான கேட்சை பிடிக்கத் தவறவிட்டார். இந்த கேட்ச் தவறவிட்டதற்கான விலையை கடைசியில் சிஎஸ்கே கொடுக்க நேர்ந்ததது. ஜடேஜாவின் அடுத்த ஓவரில் டீகாக் பவுண்டரியும், ராகுல் பவுண்டரியும் விளாசி, ராகுல் 31 பந்துகளில் அரைசதத்தை எட்டினார். நிதானாமாக ஆடிய டீகாக் 41 பந்துகளில் அரைசதம் அடித்தார். இருவரையும் பிரிக்க முடியாமல் கேப்டன் கெய்க்வாட், தோனி இருவரும் பல பந்துவீச்சாளர்களை மாற்றிப் பயன்படுத்தியும் ஒன்றும் நடக்கவில்லை. முஸ்தபிசுர் வீசிய 15வது ஓவரின் கடைசிப் பந்தில் ஸ்லோ பவுன்ஸரை அடிக்க முற்பட்டு, டீகாக் தேவையின்றி தனது விக்கெட்டை இழந்தார். அடுத்ததாக, பதீராணா பந்துவீச்சில் ராகுல் அடித்த ஷாட்டில் பேக்வேர்ட் பாயின்ட் திசையில் ஜடேஜா அற்புதமான கேட்சை பிடித்தார். இரு விக்கெட்டுகள் விழுந்ததால் சிஎஸ்கே ஏதேனும் மாயம் செய்யும் என ரசிகர்கள் நினைத்தனர். ஆனால், நிகோலஸ் பூரன், ஸ்டாய்னிஷ் ஜோடி அதற்கு இடம் அளிக்கவில்லை. அதிலும் நிகோலஸ் பூரன் ஒரு சிக்ஸர், 3 பவுண்டரிகள் அடித்து சிஎஸ்கே திட்டத்தை உடைத்தெறிந்தார். பூரன் 22 ரன்களிலும், ஸ்டாய்னிஷ் 7 ரன்களிலும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தனர்.   கட்டுக்கோப்பான பந்துவீச்சு பட மூலாதாரம்,SPORTZPICS லக்னெள அணியின் பந்துவீச்சு நேற்றைய ஆட்டத்தில் நேர்த்தியாகவும், கட்டுக்கோப்பாகவும் இருந்தது. யாஷ் தாக்கூர், மோசின்கான், ரவி பிஸ்னோய் 3 பேரும் கடைசி 4 ஓவர்களில்தான் ரன்களை வழங்கினர். மற்ற வகையில் தொடக்கத்தில் சிஎஸ்கே பேட்டர்களுக்கு கொடுத்த நெருக்கடியை விடாமல் பிடித்துச் சென்றனர். நடுப்பகுதி ஓவர்களில் சிஎஸ்கே பேட்டர்கள் விஸ்வரூபம் எடுக்கலாம் என்பதைக் கருதி, குர்ணல் பாண்டியா, ரவி பிஸ்னோய், ஸ்டாய்னிஷ், மாட் ஹென்றி, என வேகப்பந்துவீச்சு, சுழற்பந்துவீச்சு எனக் கலவையாக பந்துவீசி பேட்டர்களை செட்டில் ஆகவிடாமல் தடுத்தனர். இந்த சீசனில் நடுப்பகுதி ஓவர்களில் சிறப்பாக பேட் செய்து வரும் ஷிவம் துபே விக்கெட்டை ஸ்டாய்னிஷ் எடுத்துக் கொடுத்தார். ரூ.8 கோடிக்கு வாங்கப்பட்ட உ.பி. வீரர் சமீர் ரிஸ்வியை பிஸ்னோய் பந்துவீச்சில் ராகுல் ஸ்டெம்பிங் செய்து வெளியேற்றி கட்டுக்கோப்பாகக் கொண்டு சென்றனர். இதனால் பவர்ப்ளே ஓவர்களில் சிஎஸ்கே அணி விக்கெட்டுகளை இழந்து 51 ரன்கள் சேர்த்த நிலையில், அடுத்த 10 ஓவர்களில் 62 ரன்கள் மட்டுமே சேர்த்தது. 7வது ஓவரிலிருந்து 13வது ஓவர் வரை சிஎஸ்கே அணி 36 ரன்கள் மட்டுமே சேர்த்தது. அதில் ஒரு பவுண்டரிகூட அடிக்கவிடாமல் லக்னெள பந்துவீச்சாளர்கள் துல்லியமாகவும், நெருக்கடி தரும் விதத்திலும் பந்துவீசினர். நடுப்பகுதி 10 ஓவர்களில் 5 ஓவர்களை ரவி பிஸ்னோய், குர்ணல் பாண்டியா இருவரும் பந்துவீசி 29 ரன்கள் மட்டுமே கொடுத்தனர். அதிலும் செட்டில் ஆன பேட்டர் ரஹானே விக்கெட்டையும் குர்ணல் பாண்டியா வீழ்த்தினார்.   ஹோம் ஓர்க் செய்ததன் பலன் பட மூலாதாரம்,SPORTZPICS லக்னெள பந்துவீச்சு குறித்து கேப்டன் ராகுல் கூறுகையில், “சிஎஸ்கே போன்ற வலிமையான அணியை எதிர்கொள்ள நாங்கள் திட்டமிட்டுக் களமிறங்கினோம். எங்கள் திட்டங்களைச் சிறிதுகூட தவறுசெய்யாமல் செயல்படுத்தினோம். எந்த பேட்டரையும் செட்டில் ஆகவிடாத வகையில் பந்துவீச வேண்டும் என முடிவு செய்தோம். அதற்கு ஏற்றார்போல் நடுப்பகுதியில் சுழற்பந்துவீச்சு, வேகப்பந்துவீச்சு என மாறி, மாறி பந்துவீசி, ஒரு பந்துவீச்சுக்கு பேட்டர் செட்டில் ஆகாமல் தடுத்தோம். எங்கள் திட்டங்களுக்குத் தக்க வகையில் ஆடுகளம் இருந்தது, சிஎஸ்கே பேட்டர்களும் அதற்கேற்ப எதிர்வினையாற்றியதால் எளிமையாக முடிந்தது. என்ன விதமான உத்திகளைக் கையாள்வது, பந்துவீசுவது, எவ்வாறு பேட் செய்வது, என்பதை முன்கூட்டியே ஆலோசித்து, ஹோம் ஓர்க் செய்துதான் களமிறங்கினோம். வேகப்பந்துவீச்சு, சுழற்பந்துவீச்சு எனக் கலந்து பயன்படுத்த வேண்டும், குறிப்பாக சிஎஸ்கேவின் எந்த பேட்டரையும் செட்டில் ஆகவிடாமல் பந்துவீச முடிவு செய்தோம். ஒவ்வொரு வீரரும் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட பணியை சிறப்பாகச் செய்தனர். குறிப்பாக பந்துவீச்சாளர்கள் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட பணியை சிறப்பாகச் செய்தனர். இல்லாவிட்டால், அணி ஒட்டுமொத்தமாக வீணாகியிருக்கும். திட்டங்களைச் சிறப்பாகச் செயல்படுத்தினோம், தீவிரமாகப் பயிற்சி எடுத்ததன் பலன் கிடைத்தது,” எனத் தெரிவி்த்தார்.   சிஎஸ்கே சறுக்கியது எங்கே? பட மூலாதாரம்,SPORTZPICS சிஎஸ்கே அணியின் மோசமான தொடக்க பேட்டர்கள், நடுப்பகுதி பேட்டர்களின் சொதப்பல், பல் இல்லாத பந்துவீச்சு, மோசமான ஃபீல்டிங் ஆகியவை தோல்விக்கான காரணங்கள். ரச்சின் ரவீந்திரா முதல் இரு போட்டிகளைத் தவிர வேறு எந்த ஆட்டத்திலும் ஜொலிக்கவில்லை. கான்வே இல்லாத வெற்றிடத்தை சிஎஸ்கே நன்கு உணர்கிறது. ரஹானே இதுவரை தொடக்க ஆட்டக்காரராக களமிறங்காத நிலையில் இப்போது வழங்கப்பட்டிருக்கும் பணியால் புதிய பந்தில் பேட் செய்ய முடியாமல் திணறுவது தெரிகிறது. புதிய பந்து நன்றாக ஸ்விங் ஆகும்போது, அதை டிபெண்ட் செய்து ஆடுவதற்கே ரஹானே முயல்கிறாரே தவிர, பவர்ப்ளேவுக்கு ஏற்றார்போல் அடித்து ஆட முடியவில்லை. ஆக சிஎஸ்கே அணியின் தொடக்க வரிசை சிக்கலில் இருக்கிறது. கேப்டன் கெய்க்வாட் நேற்றைய ஆட்டத்தில் ஆங்கர் ரோல் எடுக்காமல் 17 ரன்னில் யாஷ் தாக்கூர் பந்துவீச்சில் அவுட்ஸ்விங்கில் எட்ஜ் எடுத்து ஆட்டமிழந்தது பெரிய பின்னடைவு. பவர்ப்ளே ஓவர்களுக்குள் 51 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்தது, அடுத்த 31 ரன்கள் சேர்ப்பதற்குள் 3 விக்கெட்டுகளை இழந்தது என சிஎஸ்கே பேட்டர்கள் ஒட்டுமொத்தமாகத் தவறு செய்தனர். பட மூலாதாரம்,SPORTZPICS ஜடேஜா 4வது வீரராக களமிறக்கப்பட்டாலும், அவர் சிங்கில், 2 ரன்கள் எடுக்கத்தான் முக்கியத்துவம் அளித்தாரே தவிர, பவுண்டரி, சிக்ஸருக்கு பெரிதாக முயலவில்லை. டி20 போட்டிகளில் பவுண்டரி, சிக்ஸர்தான் அணியின் ஸ்கோரை பெரிதாக உயர்த்தும், ரன்ரேட்டை குறையவிடாமல் கொண்டு செல்லும். அதைச் செய்ய ஜடேஜா, மொயீன் அலி தவறிவிட்டனர். நடுப்பகுதி ஓவர்களில் மொயீன் ஜடேஜா களத்தில் இருந்தபோதிலும் 7வது ஓவரில் இருந்து 13வது ஓவர்கள் வரை ஒருபவுண்டரிகூட சிஎஸ்கே அடிக்காதது ரன்ரேட்டை கடுமையாக இறுக்கிப் பிடித்தது. ஜடேஜா ஆங்கர் ரோல் எடுத்து 34 பந்துகளில் அரைசதம் அடித்தாலும், அவரிடம் இருந்து தேவையான பவுண்டரிகள், சிக்ஸர்கள் அரிதாகவே வந்தன. மொயீன் அலி தொடக்கத்தில் நிதானமாக ஆடி கடைசி நேரத்தில் பிஸ்னோய் ஓவரில் ஹாட்ரிக் சிக்ஸர்கள் அடித்து 30 ரன்களில் ஆட்டமிழந்தார். சிஎஸ்கே அணியில் நேற்று ஜடேஜா, மொசின் அலி என இரு சுழற்பந்துவீச்சாளர்கள் இருந்தும் ஜடேஜாவுக்கு மட்டுமே வாய்ப்பு கிடைத்தது. மொசின் அலி ஒரு ஓவர் வீசி 5 ரன்கள் என சிறப்பாகப் பந்துவீசியும் தொடர்ந்து வாய்ப்பு வழங்கவில்லை. ஆனால், சுமாராகப் பந்துவீசிய தேஷ்பாண்டே, முஸ்தபிசுர் இருவருக்கும் தொடர்ந்து வாய்ப்புகள் வழங்கப்பட்டன. மொசின் அலிக்கு கூடுதலாக சில ஓவர்கள் வழங்கி இருக்கலாம்.   பல் இல்லாத பந்துவீச்சு பட மூலாதாரம்,SPORTZPICS சிஎஸ்கே அணியில் முஸ்தபிசுர் ரஹ்மானை தவிர மற்ற பந்துவீச்சாளர்கள் அனைவரும் பேட்டர்களுக்கு நெருக்கடி தரும் அளவுக்கு அனைத்து ஆடுகளங்களிலும் துல்லியமாகப் பந்துவீசுவோர் அல்ல. பந்துவீச்சில் வேரியேஷன், ஸ்லோ பவுன்ஸர்கள், நக்குல் பால், ஷார்ட் பால், பவுன்ஸர் என வேரியேஷன்களை வெளிப்படுத்தி பேட்டர்களுக்கு நெருக்கடி கொடுக்கும் அளவுக்கு பந்துவீச்சு இல்லை என்பதுதான் நிதர்சனம். சிஎஸ்கே அணி தனது வெற்றியை பந்துவீச்சிலும் சரி, பேட்டிங்கிலும் சரி நடுப்பகுதி ஓவர்களில்தான் எதிரணியிடம் இருந்து கபளீகரம் செய்கிறதே தவிர டெத் ஓவர்களிலோ அல்லது பவர்ப்ளே ஓவர்களிலோ அல்ல. அதிலும் மே 1ஆம் தேதிக்குப் பின் முஸ்தபிசுர் ரஹ்மான் சொந்த நாட்டுக்குத் திரும்புகிறார் என்பதால், சிஎஸ்கே பந்துவீச்சு இன்னும் பலவீனமாகும். கான்வே தொடரிலிருந்து முழுமையாக விலகிவிட்டது பேட்டிங்கில் சிஎஸ்கேவுக்கு பெரிய அடி. அவருக்குப் பதிலாக இங்கிலாந்து வேகப்பந்துவீச்சாளர் ரிச்சார்ட் கிளீசனை சிஎஸ்கே வாங்கியுள்ளது. மே 1ஆம் தேதிக்குப் பின் முஸ்தபிசுர் சென்றபின் அவருக்குப் பதிலாக பந்துவீச்சாளரை வாங்க முக்கியத்துவம் அளிக்குமா அல்லது பேட்டருக்கு முக்கியத்துவம அளிக்குமா என்பது எதிர்பார்ப்பாக இருக்கிறது. பட மூலாதாரம்,SPORTZPICS சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கூறுகையில், “நாங்கள் பேட்டிங்கை நன்றாக ஃபினிஷ் செய்தோம். இன்னும் கூடுதலாக 15 முதல் 20 ரன்கள் சேர்த்திருக்க வேண்டும். பவர்ப்ளேவில் விக்கெட்டுகள் வீழ்த்த முடியாமல் இருக்கும் சிக்கலைத் தீர்க்க வேண்டும். அதற்கு விரைவாகத் தீர்வும் காண்போம். பவர்ப்ளேவில் விக்கெட் வீழ்த்தினால் நிச்சயமாக எதிரணி கவனமாக ஆடுவார்கள், ரன் சேர்ப்பும் குறையும். இந்த ஆட்டத்தில் தொடக்கத்தில் சரியாக பேட்டிங் செய்ய முடியால் திணறியது, 15வது ஓவர் வரை சிரமம் நீடித்தது. சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தோம். இதுபோன்ற ஆடுகளங்களில், இரவு நேர பனிப்பொழிவு இருப்பதால், 190 ரன்களாவது சேர்ப்பது பாதுகாப்பானது,” எனத் தெரிவித்தார். தோனியின் 101 மீட்டர் சிக்ஸர் சிஎஸ்கே அணியின் முன்னாள் கேப்டன் தோனி, இந்த சீசன் முழுவதும் கலக்கி வருகிறார். லக்னௌ ரசிகர்களும் தோனியின் ஆட்டத்தைக் கண்டு ரசித்தனர். 9 பந்துகளைச் சந்தித்த தோனி 2 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகள் என 28 ரன்கள் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்தார். அதிலும் யாஷ் தாக்கூர் வீசிய கடைசி ஓவரில் லாங்-ஆன் திசையில் இமாலய சிக்ஸர் விளாசினார் இந்த சிக்ஸர் 101 மீட்டர் உயரம் சென்றது. இந்த ஐபிஎல் சீசனிலேயே அதிக உயரத்துக்கு அடிக்கப்பட்ட, மிகப்பெரிய சிக்ஸர் இதுதான். தோனியின் கடைசி நேர கேமியோவில் 28 ரன்கள், பிஸ்னோய் ஓவரில் மொயீன் அலி ஹாட்ரிக் சிக்ஸர் உள்பட 30 ரன்களும் இல்லாவிட்டால் சிஎஸ்கே ஸ்கோர் 125 ரன்கள்தான் என்பது குறிப்பிடத்தக்கது. https://www.bbc.com/tamil/articles/cx03y922278o
    • யார் அந்த ஸ்ரீதரன்? சோசல் காசுதரும் அதான் யுனிவேர்சல் கிரடிட் நான்கு பேரில் தரும் புரோக்கரோ?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.