Jump to content

பாலியல் நேற்று இன்று.


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

செக்ஸ் உணர்வு மனிதனுக்கு எப்போது தோன்றியது என்ற கேள்விக்கு நாம் பதில் சொல்லத் தேவையில்லை. ஏனென்றால், செக்ஸ் உணர்வு மனிதன் தோன்றிய ஆதி காலத்தில் இருந்து தோன்றியது. அதில் எந்த மாற்றமுமில்லை. ஆனால், அதன் செயல்பாடுதான் வேறுபட்டுக் கொண்டே போகிறது. அதற்குக் காரணம் என்னவாக இருக்கும்? வேறொன்றும் இல்லை. நமது சமுதாய சூழ்நிலைதான். அப்படியென்றால், இதில் என்ன தவறுநடக்கிறது. கல்ச்சர் (கலாசாரம்) என்ற அடிப்படையில் தவறு செய்கிறோம்.உதாரணத்திற்கு தமிழ்நாடு என்று வைத்துக் கொண்டால், தமிழ்நாட்டில் உள்ள அனைத்து ஊர்களிலும் ஒரே சூழ்நிலை, ஒரே தோற்றம் ஒரே மனநிலையை எதிர்பார்க்க முடியாது. கன்னியாகுமரியில் இருக்கும் ஒருவர் தமிழனாக இருந்தால், அவரது நடை, உடை பாவனை போன்றவற்றில் கேரளா மனம் வீசத்தான் செய்யும். கோயம்புத்தூரில் இருக்கும் ஒருவர் அருகே பாலக்காடு இருப்பதால் அதைப் போலத்தான் நடந்துகொள்வார். நெல்லூர் அருகே இருக்கும் ஒரு தமிழன் வாழ்க்கை முறையில் ஆந்திராவின் சாயல் இருக்கத்தான் செய்யும். ஒவ்வொரு மனிதனுடைய செக்ஸ் உணர்வு அந்தந்த இடத்தைப் பொறுத்து இருப்பதில் தவறில்லை. கலாசாரம் என்பது ஒரே மாதிரியாக இருத்தல் கூடாது. மாற்றம் வேண்டும். அந்தந்த மாற்றத்தையும் ஏற்றுக்கொள்ள வேண்டும். ஒரு காலத்தில் நாம் எழுதிய கடிதம் ஒருவரை சேர சில நாட்களாவது பிடிக்கும். ஆனால், இப்போது அறிவியல் உலகம். அடுத்த நொடியில் உலகத்தின் அனைத்து நடவடிக்கைகளும் உங்கள் கண் முன்னே விரிகிறது. ஏன் நாம் அதில் நமது கலாசாரத்தை விட்டுக் கொடுத்தோம். நாம் நமது கலாசாரம் என்று கட்டி அழுதுகொண்டு இருக்க வேண்டாம். சரி செக்ஸின் செயல்பாடு எப்படி மாறுபடுகிறது. ஒரு காலகட்டத்தில் உள்ள மக்கள் தொகையை எடுத்துக் கொள்வோம். சென்னையின் ஜி.என்.செட்டி சாலையில் நீங்கள் கில்லி அடித்து விளையாடலாம். மக்கள் தொகை அவ்வளவுதான். அப்போது நம் முன்னோர்களுக்கு நிறைய நேரம் கிடைத்தது. இப்போது நீங்கள் துரைசாமி சப்_வேயை கடந்து செல்ல 1 மணி ஆகிறது. நகரத்தின் சாயல் மாறிவிட்டது. நமக்கு ஸ்ட்ரெஸ§ம் கூடிவிட்டது. எங்கே கிடைக்கிறது உங்களுக்கு நேரம். எனவே, உங்களது பிகேவியரும் மாறிவிட்டது. அவசர காலத்திற்கு ஏற்ப அவசரமாகத்தான் எல்லாமே செய்கிறோம். காலையில் சீக்கிரம் ஆபிஸ் கிளம்பவேண்டுமே, சண்டே ஆனா நல்லா தூங்க வேண்டுமே என்ற அவசரமும் சோம்பேறித்தனமும் தான் மேலோங்கி நிற்கிறது. இதுல தப்பு ரைட்ன்னு சொல்றதுல யாருக்குமே லாபம் கிடையாது. நம்மளோட உடல் ஆரோக்கிய நிலையைப் பற்றித்தான் யோசிக்க வேண்டும். ஒரு 1500 வருஷத்துக்கு முன்னாடி பார்க்கலாம். அப்போது உள்ள நமது முன்னோர்களுக்கு உடம்புல நிறைய தெம்பு இருந்தது. நேரம் நிறைய கிடைத்தது. நல்ல உணவு, பழங்கள், வேகவைத்த கிழங்குகள் போன்றவையெல்லாம் கிடைத்தது. இப்போதும் இருக்கிறதே? இருக்கிறது. நிறைய பெயர்களில், நிறைய வண்ணங்களில். ஆனால் நாம் சாப்பிடும் பழங்களில் இருந்து அரிசி வரைக்கும் உள்ள உணவு வகைகளில் கெமிக்கல்தான் அதிகம் இருக்கிறது. தற்போது நாம் உட்கொள்ளும் உணவுகளில் 40 சதவீதம்தான் அந்தப் பொருட்களின் சத்து இருக்கிறது. நம்மைப் போல் நம் உடம்பைப் போல் நாம் உட்கொள்ளும் உணவு வகைகளும் முக்கியம். யோசிக்க நிறைய நேரம் கிடைத்தது. ஈடுபட நிறைய நேரம் கிடைத்தது. மேலும் அப்போது செக்ஸ் என்பது கலையாகத்தான் அவர்களால் பார்க்கப்பட்டது. அதன்பின்பு ஆங்கிலேயர் வந்த கால கட்டங்களைப் பற்றிப் பார்ப்போம். நம் நாட்டிற்கு ஆங்கிலேயர் வந்தபின்பு செக்ஸா! அது மிகவும் தவறான ஒன்று என்பது நம் மக்கள் மனதில் புகுத்தப்பட்டதா அல்லது தானாகவே ஏற்படுத்தப்பட்டதா தெரியவில்லை. ஆனால், நம் மக்கள் மனதில் அப்படியரு எண்ணம் இருந்தது. அதைப்பற்றிப் பேசுவது தவறு என்ற நெகட்டிவ் தாட் ஏற்பட்டது. இது மனதில் நிறைய குற்ற உணர்வுகள் தோன்றக் காரணமாக இருந்தது. அதனால் தான் செக்ஸை பற்றிய அறியாமை அதிகமானது. ராஜாக்கள் காலத்தில் அப்போது இருந்த நிதிஅமைச்சர், போர்ப்படை தளபதிகள் எல்லோரும் பின்னுக்குத் தள்ளப்பட்டு முதலிடத்தில் இருந்தது அந்தாதிகள் (அந்தப்புர அழகியின் தலைவி) தான். உங்களால் நம்பமுடிகிறதா? ஏன் ராஜாக்களின் வாரிசுகளை அவர்களிடம் அனுப்பி ட்ரையினிங் எடுக்கச்சொல்வது உண்டு. காரணம் செக்ஸ் உணர்வுக்கு ஏங்கும் எண்ணம் ராஜாக்களிடமோ, அவர்களின் வாரிசிடமோ ஏற்பட்டால், மன்னன் மண்ணைக் கவ்வவேண்டும். எனவேதான், அந்தாதிகளின் தலைவிக்கென தனி மரியாதை உண்டு. இப்போது இந்த அறியாமை தலைதூக்கி நடப்பதால்தான் நம்மில் பெரும்பாலானோருக்கு குற்ற உணர்வு ஏற்பட்டு, பயத்தில் திக்குமுக்காடுகிறார்கள். காமசூத்ராவில் சொல்லப்பட்ட ஒன்று. நம் எல்லோரையும் கண்டிப்பாக யோசிக்க வைக்கும். அதாவது எவன் ஒருவன், எவள் ஒருத்தி தனது செக்ஸ் உணர்ச்சிகளை அடக்கி வைத்தாலும், தாமதம் பண்ணினாலும் நாளடைவில் அது அவனை, அவளை தவறான பாதைக்குக் கொண்டு செல்லும் என்று சொல்லப்பட்டுள்ளது. 19_ம் நூற்றாண்டில் சிக்மெண்ட் ப்ராய்ட் சொன்னதும் இதைத்தான். அதாவது அடக்கி வைப்பதால் உங்கள் மனது, உடம்பு இரண்டும் பாதிக்கப்படலாம். அதற்கு நாம் என்ன செய்யமுடியும் என்று கேட்காதீர்கள். இந்த நூற்றாண்டில் கொஞ்சம் மாற்றம் ஏற்பட்டு இருக்கிறது. நம் மருத்துவர்கள் இதைப் பற்றிப் படிக்க ஆரம்பித்தனர். ஒரு காலத்தில் இதைப் படித்தவர்கள் செக்ஸ் மனதைச் சார்ந்தது என்று பேசினார்கள். 1960_க்கு பிறகு செய்யப்பட்ட ஆராய்ச்சியில் தான் இது மனதுக்கும் உடம்புக்கும் என்று சொல்லப்பட்டது. சயின்டிஃபிக் டெவலப்மெண்ட் வந்தது. 1999க்குப் பிறகு மீடியாக்களும் இதைப்பற்றி தெளிவாகப் பேச ஆரம்பித்தது. இதை யாரிடம் கேட்பது என்ற தயக்கம் குறையத் தொடங்கியது. ஏனென்றால் நமக்கு மட்டும்தான் அந்த மாதிரி சந்தேகம் ஏற்படுகிறதோ என்ற குழப்பம் எல்லோர் மனதிலும் உச்சாணிக் கொம்பாக முளைத்து நின்றது. நாளடைவில் அது குறைய ஆரம்பித்தது. நம்மை போல் எல்லோருக்கும் அந்தச் சந்தேகம் இருக்கிறது என்ற தைரியம் வளர்ந்தது. உங்கள் ஆரோக்கியம் நன்றாக இருப்பதற்கு செக்ஸ் என்பது மிக மிக முக்கியம். மீண்டும் ஆங்கிலேயர் காலத்திற்கே வருவோம். அப்போது ஒரு மூடநம்பிக்கை பரவிக்கிடந்தது. செக்ஸ் என்பது அனுபவிக்க அல்ல, அது வாரிசுகளை உருவாக்க, குழந்தைகளைப் பெற்றுக் கொள்ள மட்டுமே என்ற நம்பிக்கை மேலோங்கி இருந்தது. அந்தக் காலத்தில் நிறைய குழந்தைகளைப் பெற்று எடுத்தார்கள். நிறைய குழந்தைகளைப் பெற்று எடுத்தாலும் செக்ஸ் எண்ணிக்கை என்பது குறைவுதான். சரி நிறைய குழந்தைகளைப் பெற்றுக் கொள்ள மனைவி அனுமதிக்காதபோது என்ன நடக்கிறது. அப்போதுதான் உறவு முறைகளில் கை வைக்கும் பழக்கம் ஏற்பட்டது. அடுத்த வீடோ, அதற்கு அடுத்த தெருவில் உள்ள வீடோ அனைவருக்கும் சின்ன வீடாக மாறியது. ஆசை நாயகிகள் பவுடர்களில் வலம் வரத் தொடங்கினர். இதையும் மீறி வீட்டு விசேஷங்களுக்கு வரும் சின்னக் குழந்தைகள், பக்கத்து வீட்டுக் குழந்தைகள் என நிறைய குழந்தைகள் செக்ஸ§க்காக ஏமாற்றப்பட்டார்கள். சைல்டு அபூஸ் ஆங்காங்கே நடந்தேறியது. இன்னமும் நமது கிராமப்புறங்களில் பெரிய பெரிய மனிதர்களுக்கு சிறு குழந்தைகளை செக்ஸ§க்காக பயன்படுத்தும் பழக்கம் இருந்து வருகிறது என்ற பேச்சும் உண்டு. எல்லாமே மாற ஆரம்பித்தது. மற்றவர்களின் மேல் குறை கண்டுபிடிக்கப்பட்டது. ஒரே விஷயம் இதில் சரி, தவறு என்று எதைச் சொல்லமுடியும். ஆரோக்கியம், ஆரோக்கியமற்றது, என்று சொல்வது தான் சரி. நம் சமுதாயம் தோன்றிய காலத்தில் இருந்து கல்யாணம் என்ற சடங்கு முறை நாம் ஏற்படுத்தியதுதான். கடவுளின் படைப்பில் மனிதன் படைக்கப்பட்டான். கல்யாணம் என்ற வரைமுறை, சந்ததிகளை வளர்க்கும் முறைகள் மனிதன் ஏற்படுத்தியதுதான். கல்யாணம் முடிந்தபின்னும் என்ன பார்வை அப்படீன்னு கேட்கச் சொல்லுது. அப்போது நாம அடக்கி வைக்கிறதால நாம் மனது ஒரு தவறைத் தேடிப் போகிறது. இப்போ நாம் வாழ்ந்துகிட்டு இருக்குற கால கட்டத்துல நம்ம ஜனங்களுக்கு எது சரி, எது தவறு என்பது தெரியவில்லை என்று தான் சொல்ல வேண்டும். கேட்டால் இயற்கை தருமம் என்று பேசி நேரத்தை வீணடிக்கிறோம். ஒருவன் 13 வயதில் ஆண்மைக்கான முழு தகுதியும் அடைந்து விடுகிறான் என்று வைத்துக் கொள்ளுவோம். என்ன செய்ய முடியும்? வறுமை தாண்டவமாடுகிறது. வயிறு பசி எடுக்கிறது. பாக்கெட்டில் பணம் இல்லை. சரி என்னிடம் பணம் இல்லை என்று உங்கள் வயிறு சும்மா இருக்குமா! இருக்காது. மாறாக, உங்கள் ஜீரணப் பகுதி கெட்டுப்போய்விடும். சாப்பாட்டைத் தேடி ஓடுகிறான். வேலை செய்ய முடிந்தவன் வேலை தேடுகிறான். முடியாதவன் கையை ஏந்துகிறான், அரைசாண் வயிற்றுக்காக. அதைப் போல்தான் உங்கள் செக்ஸ் உணர்வும். வாய்ப்பில்லை வசதியில்லை என்று உங்கள் செக்ஸ் உணர்வு தூங்கிவிடாது. இந்த வெஸ்டெர்ன் சிஸ்டம். என்பது குமாஸ்தாக்களுக்கு பண்ணப்பட்டது. இது ஒரு மெக்கானிக் சிஸ்டம் இப்போது நீங்க 13 வயதில் கல்யாணம் பண்ணமுடியாது. நல்லா படிக்கணும், வேலை வாங்கணும். வேலை வாங்கினா மட்டும் போதாது. ஒரு ஃப்ளாட் வாங்கணும். அப்புறம் எப்படி கல்யாணம் பண்ண முடியும். சரி அதுவரைக்கும் உங்க உடம்பு எப்படி சும்மா இருக்கும்? உங்களுக்குள்ளே கான்ஃபிக்ட் வருது. செய்யலாமே என்று சொல்லி உங்களைத் தூண்டும். இதெல்லாம் தவறு என்று ஒரு பக்கம் சொல்லும். திருடுவது தவறுதான். ஆனால் பசி? இயற்கை ஒரு பக்கம். உங்களோட நேர்மை இன்னொரு பக்கம். எல்லாமே இரட்டை அர்த்தத்தில் உங்கள் முன் உலா வருகிறது. சினிமாக்களின் தரம் உயர்ந்துவிட்டது. நடிகைகளின் கவர்ச்சி உங்களை திக்குமுக்காட வைக்கிறது. என்ன செய்யப் போகிறீர்கள். எப்படி உங்களால் இது சரி தவறு என்று முடிவு பண்ணமுடியும்? உங்கள் மனைவியுடனே நீங்கள் இருக்கவேண்டும் என்றால், மக்கள் தொகை காரணம் காட்டப்படுகிறது. இங்குதான் குழப்பம் வருகிறது இளைஞர்களைத் தவறு என்று சொல்லுவது சரியில்லை. பெற்றோர்கள்தான் சரியான விதத்தில் சூழ்நிலைகளைக் குறித்து வளர்த்து ஆளாகக்வேண்டும். காமசூத்ராவில் சரி என்று சொல்லப்பட்ட ஒன்று, ஆங்கிலேயர் காலத்தில் தவறு என்று கற்பிக்கப்பட்டு, நம் முன்பு இப்போது செக்ஸ் என்பது ஒரு போகப் பொருளாக மாறிவிட்டது. இங்கு தான் செக்ஸ§க்கான அந்தப் பழைய வேல்யூ அடிபட்டுப் போகிறது. நம் உறவு முறைகளுக்கு உண்டான முக்கியத்துவம் குறைந்து விட்டது. மக்கள் தொகை அதிகமானதால், குடும்பக்கட்டுப்பாடு வந்துவிட்டது. ஆனால், இந்த கெஸ்§க்கு மூன்று முகங்கள் உள்ளன.

1. குழந்தை உருவாக 2. சுகத்திற்காக 3. உறவு முறைகள்

இதை நாம் மறந்துவிட்டோம். இது நவீன யுகம். முன்னேற்றம் அடைந்துவிட்டோம். ஆனால் நேரம் இல்லாமல் போய்விட்டது. நகரவாழ்க்கையின் தன்மை மாறிவிட்டது. ஃபைவ் ஸ்டார் ஹோட்டல், பப், காபியர் என்று மாறிவிட்டது. செக்ஸ் என்பது இரண்டாவதாக ஆக்கப்பட்டது. செக்ஸ் மீதான நாட்டம் குறைந்துவிட்டது. அவசரகதியில் அதுவும் ஒரு கதி என்று ஆகிவிட்டது. பெக் ஆஃப் இன்ஃபர்மேஷன் அப்போ, லாட் ஆஃப் இன்பர்மேஷன் இப்போ. எந்த பர்சன்ஜ் விஞ்ஞானபூர்வமானது என்பது சந்தேகமானது. அப்போது சாய்ஸ் கிடையாது. இப்போது நிறைய சாய்ஸ் இருக்கிறது. மனித வாழ்க்கையும், மனித உணவும், மனித உறவு முறையிலும் மதிப்பு குறைந்துவிட்டது. மனித உயிரை விட, மனிதன் இருக்கும் லேண்ட் வேல்யூ அதிகமாகிவிட்டது. ஒழுக்கம், தூண்டுதல், ஒரு பக்கம் நேரமின்மை. குற்றங்கள் அதிகமாக வளருது. முறையற்ற உறவுகள் சொல்லவே தேவையில்லை. தினசரி பத்திரிகைகளைத் தான் தினமும் பார்க்கிறோமே! நோயும் புதுப் புது பெயர்களால் நம்மை பயமுறுத்துகிறது. முன்னேற்றமான காலம் இது என்று நாம் சொன்னாலும் உங்கள் ஆரோக்கியத்தில் நிஜமான முன்னேற்றம் தானா? கண்டிப்பாக சந்தேகிக்க வேண்டிய ஒன்றுதான். ஒரு விஷயத்தைப் பார்ப்போமே. ஒரு காலத்தில் கிராமப் புறங்களில் உள்ள ஒரு முறை இதுதான். அப்போது உள்ள கட்டிலின் உயரம் 6அடி இருக்கும். கீழே ஒரு அடிக்கு மரப்பலகை ஒன்று இருக்கும்.

கட்டிலின் இருபக்கமும் கண்ணாடி இருக்கும். உங்கள் மனைவி கட்டிலின் மேலாகவும் நீங்கள் நின்றுகொண்டு பாதி படுத்துக்கொண்டும் இருப்பதற்காகச் செய்யப்பட்டது. அந்தக் கண்ணாடியில் பிம்பங்கள் தெரியும். தெளிவான முறையில் அவை தெரிவதால் உங்களது செக்ஸில் பயம் இருக்காது. ஆனால், இப்போது 1லு அடி, 2 அடி கட்டிலில் இருப்பதால் என்ன நடக்கிறது என்றே தெரியாமல் செக்ஸை கையாளுகிறோம். எனவே சில பல விஷயங்கள் உங்களால் பார்க்கமுடியாததில் பயம் ஏற்படுகிறது. தடுமாற்றத்துல நீங்கள் திணறித் தவிக்கிறீர்கள். அப்புறம் நீங்கள் வயாக்ரா போட்டால் என்ன? போடாமல் இருந்தால் என்ன? பலன் ஒன்று தானே. காமசூத்ராவில் சொல்லப்பட்ட இன்னொன்று. ஒருவருக்கு செக்ஸில் பிரச்சனை என்று இருந்தால் அவனது ஆகாரம், விகாரம் இரண்டையும் சரிப்படுத்தவேண்டும் என்று சொல்லப்பட்டுள்ளது. இப்போது நாம் அந்த இரண்டையும் விட்டுவிட்டோம். கேட்டால் டெக்னாலஜி என்று சொல்லிக் கொண்டு இருக்கிறோம். செக்ஸ் என்பது தற்போது உறவில் இருந்து மாறி குற்றமாக உருவெடுத்து போகப் பொருளாக மாறிவிட்டது. ஆனால், மீண்டும் பழையநிலைக்கு வரும் என்ற நம்பிக்கை இருக்கிறது. அமெரிக்காக்காரர்கள் தாங்கள் செய்த தவறை திருத்திவிட்டார்கள். ஆனால், நாம் இன்னமும் இந்த விஷயத்தில் ஈஅடிச்சான் காப்பிதான். உலகத்தில் ஆசியாவில் உள்ள புத்தகங்களில் சிறந்த புத்தகம் வேதம்தான். அதுவும் அதுல ரிக்வேதத்தில் செக்ஸ§க்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. ஆங்கிலேயர் வந்த பின்பு செக்ஸ் தேவையில்லாதது என்ற ஃபீலிங் மிகையாக இருந்தது. வயாக்ரா வந்தபோது லக்ஜூரி என்ற எண்ணம் மேலோங்கி இருந்தது. இப்போது மருத்துவர்கள் மேலும் சில விஷயங்களை கவனத்தில் எடுத்துக்கொண்டுள்ளனர். ஒருவனுக்கு செக்ஸ் பிரச்னை என்றால் அதோடு நிறுத்திவிடாமல் அவனது உடலை முழுவதும் டெஸ்ட் செய்யவேண்டும் என்றுதான் அறிவுறுத்துவார்கள். ஏனென்றால், மற்ற உறுப்புகள்தான் முதலில் டேமேஜ் ஆக வாய்ப்பு உள்ளது. அதுதான் உடல் ஒருங்கமைவு. இந்த நிலையில் இதை மனசு சார்ந்தது என்று சொல்வார்கள். ஆனால் சைக்கோமேட்டிக் இரண்டும் சேர்ந்து தான் அதன் வேலையைச் செய்யும். உங்கள் மனசு பிஸினஸ் பற்றி யோசிக்கும் வேளையில், உங்க உடம்பு ஏதாவது நீலப்படம் பார்த்தால் என்ன என்று யோசித்துக் கொண்டு இருக்கும். நான் ஒரு ஆண், ஒரு பெண்ணைப் பார்த்தல் உணர்ச்சிவசப் படுவேன்.

ஆனால் என்தாய், மகள், தங்கையைப் பார்த்தால் அந்த உணர்ச்சி தோன்றாமல் போகிறது. ஏன்? அந்தத் தூண்டுதல் எங்கே போனது. இந்தத் தூண்டுதலின் முதலாளி உங்கள் மூளைதான். அதற்குத் தெரியும், அவள் உன் தங்கை, இவள் நீ தேடும் வேசி என்று. எனவே செக்ஸ் தூண்டுதல் என்பதை உங்கள் மூளை ஏற்றுக்கொள்ளவேண்டும். ஆகையினால், அந்தத் தூண்டுதல் அந்ததந்த காலகட்டத்தைச் சார்ந்து தான் வரும். இன்று எத்தனை பெண்கள் தாவணியும், சேலையும் கட்டிக்கொள்ளவிரும்புகிறார்

Link to comment
Share on other sites

ஒவ்வொரு மனிதனுடைய செக்ஸ் உணர்வு அந்தந்த இடத்தைப் பொறுத்து இருப்பதில் தவறில்லை.
:D

அப்போது நம் முன்னோர்களுக்கு நிறைய நேரம் கிடைத்தது. இப்போது நீங்கள் துரைசாமி சப்_வேயை கடந்து செல்ல 1 மணி ஆகிறது. நகரத்தின் சாயல் மாறிவிட்டது. நமக்கு ஸ்ட்ரெஸ§ம் கூடிவிட்டது. எங்கே கிடைக்கிறது உங்களுக்கு நேரம். எனவே, உங்களது பிகேவியரும் மாறிவிட்டது.

ஆனால் சிலர் பிரயாணம் செய்யும் போதே செக்ஸ்ம் செய்வதாய் கேள்வி! :D

ராஜாக்கள் காலத்தில் அப்போது இருந்த நிதிஅமைச்சர், போர்ப்படை தளபதிகள் எல்லோரும் பின்னுக்குத் தள்ளப்பட்டு முதலிடத்தில் இருந்தது அந்தாதிகள் (அந்தப்புர அழகியின் தலைவி) தான். உங்களால் நம்பமுடிகிறதா?
நிச்சயமாக நம்ப முடிகின்றது! இப்பொழுதும் அதுதானே நடக்கின்றது? :D

ஒருவன் 13 வயதில் ஆண்மைக்கான முழு தகுதியும் அடைந்து விடுகிறான் என்று வைத்துக் கொள்ளுவோம். என்ன செய்ய முடியும்?

சாமர்த்திய வீடு செய்யலாமா? :)

சினிமாக்களின் தரம் உயர்ந்துவிட்டது. நடிகைகளின் கவர்ச்சி உங்களை திக்குமுக்காட வைக்கிறது. என்ன செய்யப் போகிறீர்கள்.
அறைக்கதவைப் பூட்டிவிட்டு, லைட்டையும் அணைத்துவிட்டு தனியாக இருந்து பார்க்கவேண்டியது தானே! :D

ஆனால், இந்த கெஸ்§க்கு மூன்று முகங்கள் உள்ளன. 1. குழந்தை உருவாக 2. சுகத்திற்காக 3. உறவு முறைகள்

அதாவது முறையே சத்யம், சிவம், சுந்தரம் எனக் கூறுங்கள்!

ஒரு விஷயத்தைப் பார்ப்போமே. ஒரு காலத்தில் கிராமப் புறங்களில் உள்ள ஒரு முறை இதுதான். அப்போது உள்ள கட்டிலின் உயரம் 6அடி இருக்கும். கீழே ஒரு அடிக்கு மரப்பலகை ஒன்று இருக்கும். கட்டிலின் இருபக்கமும் கண்ணாடி இருக்கும். உங்கள் மனைவி கட்டிலின் மேலாகவும் நீங்கள் நின்றுகொண்டு பாதி படுத்துக்கொண்டும் இருப்பதற்காகச் செய்யப்பட்டது. அந்தக் கண்ணாடியில் பிம்பங்கள் தெரியும். தெளிவான முறையில் அவை தெரிவதால் உங்களது செக்ஸில் பயம் இருக்காது.
அட இப்படியும் ஒரு சங்கதி இருக்கிறதா? இந்தியாவிலிருந்து இப்படிக் கட்டிலொன்றை வாங்கி எடுப்பிச்சுப் போட்டாப் போகுது! :D

உங்கள் மனசு பிஸினஸ் பற்றி யோசிக்கும் வேளையில், உங்க உடம்பு ஏதாவது நீலப்படம் பார்த்தால் என்ன என்று யோசித்துக் கொண்டு இருக்கும்.

விடை தெரியவில்லை! :D

அதிகாலையில் சென்னை போன்ற நகரங்களில் உள்ள பூங்காக்களில் காலையில் பார்த்தால் வயதான ஆட்கள்தான் நடந்து கொண்டு இருப்பார்கள். இளம்வயது ஜோடிகள் ரொம்ப முக்கியமா எதையோ பேசிக் கொண்டு இருப்பார்கள்.

???? :lol:

செக்ஸ் சம்பந்தமான ஒரு பிரபல தமிழ் சினிமாப் பாடலைக் கேட்பதற்கு இங்கே அழுத்தவும்

Link to comment
Share on other sites

என்ன கு.சா அண்ணா நம்மட ஆட்களின்ற சத்தத்தையே காணவில்லை? வழமையாக வந்து வம்பு செய்கின்ற ஐயா நெடுக்கைகூட காணவில்லை? மகாஜனங்கள் திடீரென்று பக்குவம் அடைந்து ஞான முக்தர்களாகி விட்டார்களோ? இப்படி செய்திகளை யாழ் களத்தின் மற்றைய பகுதிகளிலும் ஒட்டி விட்டால் நன்றாக இருக்குமோ? :huh::huh::huh:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மாப்பு என்ன நடக்குத இங்கே :P

Link to comment
Share on other sites

இந்த கு.சா தாத்தாவுக்கு ஒரு விவஸ்த்தையே இல்லை! :angry: சிவனே என்று தேவாரங்கள், திருவாசகங்கள் என்று பாடி, நிம்மதியா போய் சேர கடவுளை கும்பிடாமல், என்ன ஆராச்சி செய்து கொண்டிருகிரார் பாருங்கோ :lol: ..இந்த வயசில் இவருக்கு இது தேவையா? இதை தான் கலி காலம் என்று சொல்லுறதோ? :P

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த கு.சா தாத்தாவுக்கு ஒரு விவஸ்த்தையே இல்லை! :angry: சிவனே என்று தேவாரங்கள், திருவாசகங்கள் என்று பாடி, நிம்மதியா போய் சேர கடவுளை கும்பிடாமல், என்ன ஆராச்சி செய்து கொண்டிருகிரார் பாருங்கோ :lol: ..இந்த வயசில் இவருக்கு இது தேவையா? இதை தான் கலி காலம் என்று சொல்லுறதோ? :P

கனம், மூக்கி அவர்களே. இத்தால் நான் உங்களுக்கு எச்சரிக்கை விடுகின்றேன்.நீங்கள் நெருப்புடன் விளையாடுகின்றீர்கள்.அது சரி கதையோடை கதையாய் ஒண்டு கேக்கிறன் உங்கடை புத்தி மாறாட்டத்துக்கு இப்பவும் மருந்து மாத்திரையள் பாவிக்கிறனீங்களோ?ஏனெண்டால் நாங்கள் கொஞ்சம் கவனமாய் இருக்கோணுமெல்லோ. B)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்னா இந்த வாரம் செ*** வாரமா??

பின்னுறீங்கப்பா.... :lol:

அது சரி அதென்ன இந்தப்பக்கம் வந்து தடக்குப்படுகுறீர்?ஏன் என்ன இன்னும் காச்சல் குணம் அடங்கேல்லையே? :lol:

Link to comment
Share on other sites

இந்த வாரம் காதலர் தினம் வருகின்றதே தெரியாதா? :P

இதைப்பாரடா விளக்கத்தை... தைப்பொங்கலுக்கு முன்னம் ஏதாவது தை பொங்கல் சம்பந்தமா கதைச்சனியளோ? இல்லை வேனாம், அட்லீஸ் மாட்டுப்பொங்கலுக்காவது?? இதுக்கு மட்டும்தானா? அதுசரி காதலர் தினத்துக்கும், செக்ஸுக்கும் இன்னாளே சம்பந்தம்?? எர்றா அருவாளை... :angry: :angry:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதைப்பாரடா விளக்கத்தை... தைப்பொங்கலுக்கு முன்னம் ஏதாவது தை பொங்கல் சம்பந்தமா கதைச்சனியளோ? இல்லை வேனாம், அட்லீஸ் மாட்டுப்பொங்கலுக்காவது?? இதுக்கு மட்டும்தானா? அதுசரி காதலர் தினத்துக்கும், செக்ஸுக்கும் இன்னாளே சம்பந்தம்?? எர்றா அருவாளை... :angry: :angry:

என்னய்யா விளாஙத்தனமாக கேள்வி கேட்க்கொன்டு :lol: தைப்பொங்கல்

காசு செலவு சம்பந்தப்பட்டது.இது அப்படியா.அது தான்.அது சரி எனக்கு ஒரு சின்ன சந்தேகம்.செக்ஸ்சுக்கும் காதலுக்கும் சம்பந்தம் இல்லையா இதுல எது முதல் வந்தது. :lol: :P

Link to comment
Share on other sites

என்னய்யா விளாஙத்தனமாக கேள்வி கேட்க்கொன்டு :lol: தைப்பொங்கல்

காசு செலவு சம்பந்தப்பட்டது.இது அப்படியா.அது தான்.அது சரி எனக்கு ஒரு சின்ன சந்தேகம்.செக்ஸ்சுக்கும் காதலுக்கும் சம்பந்தம் இல்லையா இதுல எது முதல் வந்தது. :lol: :P

ஆ,, இப்படி யாராவது அறிவு பூர்வமா கேள்வி கேட்கமாட்டாங்களா என்று ஏங்கி தவிச்சன், நேக்கும் இதைப்பற்றிதெரியல்லையப்பு, நாம இரண்டு பேரூம் சேர்ந்து நம்ம யாழ்கள மாத்திரபூதத்திட்ட சா இளங்கோ சாரிட்ட கேட்பமா?? இளங்கோ சார் விளாவாரியா உளக்கி சா விளக்கிவிடுங்கோ பார்ப்பம். :P

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்னய்யா விளாஙத்தனமாக கேள்வி கேட்க்கொன்டு :lol: தைப்பொங்கல்

காசு செலவு சம்பந்தப்பட்டது.இது அப்படியா.அது தான்.அது சரி எனக்கு ஒரு சின்ன சந்தேகம்.செக்ஸ்சுக்கும் காதலுக்கும் சம்பந்தம் இல்லையா இதுல எது முதல் வந்தது. :lol: :P

உந்த குருட்டு கேள்வியள் கேக்கிறதுக்கெண்டு கொஞ்சகூட்டம் அலைஞ்சு கொண்டு திரியுதப்பா :angry:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதிலிருந்து அறியக்கடியது sex is Cheap. எவரும் பண்ணலாம். நமக்கு அது வேணாம். Love is Chief அதுதான் அது தனித் தன்மை பெறுகிறது. அதுதான் வேணும் மனிதருக்கு. :lol:

Link to comment
Share on other sites

இதிலிருந்து அறியக்கடியது sex is Cheap. எவரும் பண்ணலாம். நமக்கு அது வேணாம். Love is Chief அதுதான் அது தனித் தன்மை பெறுகிறது. அதுதான் வேணும் மனிதருக்கு. :lol:

Sex is Cheap! Love is Chief!

ஆகா என்னாமாதிரியெல்லாம் லங்குவேஜ் ஸ்கில்லில் நம்மட ஆட்கள் முன்னேறீட்டாங்கப்பா! ஆனால் தமிழீழம் தான் கிடைக்க மாட்டேங்கிது!

ஐயா நெடுக்கு உது உம்மட சொந்த சரக்கா அல்லது இரவலா? சொந்தச் சரக்கா இருக்குமாயிருந்தா உண்மையில உமக்குள்ள ஒரு குட்டி சேக்ஸ்பியர் குடியிருக்கிறார் என நீர் நினைத்து சந்தோசப்படலாம்!

காலம்பிற வந்த வரத்திலேயே சிக்ஸ் அடிக்கிறீர்! அக்கா ஏதாவது சர்பிரைஸ் தந்தவவோ? :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Sex is Cheap! Love is Chief!

ஆகா என்னாமாதிரியெல்லாம் லங்குவேஜ் ஸ்கில்லில் நம்மட ஆட்கள் முன்னேறீட்டாங்கப்பா! ஆனால் தமிழீழம் தான் கிடைக்க மாட்டேங்கிது!

ஐயா நெடுக்கு உது உம்மட சொந்த சரக்கா அல்லது இரவலா? சொந்தச் சரக்கா இருக்குமாயிருந்தா உண்மையில உமக்குள்ள ஒரு குட்டி சேக்ஸ்பியர் குடியிருக்கிறார் என நீர் நினைத்து சந்தோசப்படலாம்!

காலம்பிற வந்த வரத்திலேயே சிக்ஸ் அடிக்கிறீர்! அக்கா ஏதாவது சர்பிரைஸ் தந்தவவோ? :lol:

சொந்தம் பாதி பிறத்தி பாதி சேர்ந்து செய்த கலவையது.

அக்கா சார்பிறைஸ் தரா எலக்றிக் சார்க் தான் தருவா..! :lol::lol:

Link to comment
Share on other sites

இதிலிருந்து அறியக்கடியது sex is Cheap. எவரும் பண்ணலாம். நமக்கு அது வேணாம். Love is Chief அதுதான் அது தனித் தன்மை பெறுகிறது. அதுதான் வேணும் மனிதருக்கு. :D

மனிதருக்கு அது தான் வேனும் சரி..மனிதர் இல்லாதோருக்கு? :P :rolleyes:

சொந்தம் பாதி பிறத்தி பாதி சேர்ந்து செய்த கலவையது.

அக்கா சார்பிறைஸ் தரா எலக்றிக் சார்க் தான் தருவா..! :D:D

ஓ? அங்க தாற எலெக்ரிக் ஷொக்கில தான் இங்க வந்து கலை ஆடுறனிங்கலோ?..அங்க சொல்ல பயம், இங்க வந்து நிண்டு பெண்களை குத்து, வெட்டு என்றது!..பிறகு பூனை மாதிரி போய் வீட்டில் இருப்பார்களாக்கும் :P

Link to comment
Share on other sites

�“? அங்க தாற எலெக்ரிக் ஷொக்கில தான் இங்க வந்து கலை ஆடுறனிங்கலோ?..அங்க சொல்ல பயம், இங்க வந்து நிண்டு பெண்களை குத்து, வெட்டு என்றது!..பிறகு பூனை மாதிரி போய் வீட்டில் இருப்பார்களாக்கும் :P

:rolleyes:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மனிதருக்கு அது தான் வேனும் சரி..மனிதர் இல்லாதோருக்கு? :P :rolleyes:

ஓ? அங்க தாற எலெக்ரிக் ஷொக்கில தான் இங்க வந்து கலை ஆடுறனிங்கலோ?..அங்க சொல்ல பயம், இங்க வந்து நிண்டு பெண்களை குத்து, வெட்டு என்றது!..பிறகு பூனை மாதிரி போய் வீட்டில் இருப்பார்களாக்கும் :P

அநேக பெண்களே புத்தி சுகமில்லாததுகள் தானே. அதுகள் எப்ப எங்க சார்க் கொடுக்குங்கள் என்று யாருக்கும் தெரியும். தெரிஞ்சால் யாருமே கிட்டப் போகவே மாட்டினமே..! அதுதான் எச்சரிக்கிறமில்ல ஆண்களை.

சம்சாரம் ஒரு மின்சாரம். சார்க் அடிக்கும் அபாயம் மரணம் என்று. உங்களைப் பார்த்தாவே தெரியல்ல. எல்லாம் அபாயமானதென்று. :D:D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அநேக பெண்களே புத்தி சுகமில்லாததுகள் தானே. அதுகள் எப்ப எங்க சார்க் கொடுக்குங்கள் என்று யாருக்கும் தெரியும். தெரிஞ்சால் யாருமே கிட்டப் போகவே மாட்டினமே..! அதுதான் எச்சரிக்கிறமில்ல ஆண்களை.

சம்சாரம் ஒரு மின்சாரம். சார்க் அடிக்கும் அபாயம் மரணம் என்று. உங்களைப் பார்த்தாவே தெரியல்ல. எல்லாம் அபாயமானதென்று. :D:rolleyes:

மின்சாரம்தான் யார் இல்லை என்றது.ஒழுங்கா கையான்டால் பல நன்மைகள் பெறலாம்.தவறாக கயான்டால் அதோ கதி தான். நீங்கள் எப்படியுங்கோ :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஜஙரழவந யெஅநஸ்ரீ'ளயபநஎயn' னயவநஸ்ரீ'குநடி 12 2007இ 10:17 Pஆ' pழளவஸ்ரீ'258436'ஸ

மின்சாரம்தான் யார் இல்லை என்றது.ஒழுங்கா கையான்டால் பல நன்மைகள் பெறலாம்.தவறாக கயான்டால் அதோ கதி தான். நீங்கள் எப்படியுங்கோ :னு

ஜஃஙரழவநஸ

சிலநேரம் கூடிகுறைந்து வருவதால் தானொஏனோ "மின்சாரம்" பற்றிய பயத்தில் இருக்கிறார்கள் சில கள உறுப்பினர்கள்!

எல்லாருக்ககும் மின்சாரம் பற்றிய பாடம் தேவை!

Link to comment
Share on other sites

அநேக பெண்களே புத்தி சுகமில்லாததுகள் தானே. அதுகள் எப்ப எங்க சார்க் கொடுக்குங்கள் என்று யாருக்கும் தெரியும். தெரிஞ்சால் யாருமே கிட்டப் போகவே மாட்டினமே..! அதுதான் எச்சரிக்கிறமில்ல ஆண்களை.

சம்சாரம் ஒரு மின்சாரம். சார்க் அடிக்கும் அபாயம் மரணம் என்று. உங்களைப் பார்த்தாவே தெரியல்ல. எல்லாம் அபாயமானதென்று. :D:lol:

புத்தி சுகமில்லாதவர்கள் தான் விளக்கம் இல்லாமல், மின்சாரத்தை பாவிக்கதெரியாமல், பாவித்து போட்டு வந்து இங்கெ புலம்பி தள்ளுறார்கள் :lol: ..பெண்கள் எப்பவும் மின்சாரம் மாதிரி தெளிவா தான் இருகிறார்கள்! :icon_idea: உங்களுக்கு கைய்யாள அறிவு பத்தாட்டி, அறிவு வளரவிட்டு அதை பாவியுங்கள்..( அது இருந்தால் தானே வளருவதற்க்கு?) :P :D

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • "ஓடம்"   "கற்பகம் என்ற புகழ் பனையின் வளங்கள் - உந்தன்  காலடியில் களஞ்சியமாய்க் கண்ட பலன்கள்  பொற்பதியில் பஞ்சம் பசி பட்டினி தீர்க்கும் - தீராப் போரினிலும் அஞ்சேலென மக்களைக் காக்கும்!"  "கல்வி நிலையங்கள் கோயில் குளங்கள் - குதிரை  காற்றாய்ப் பறந்து செல்லும் நீண்ட வெளிகள் தொல்லை துயரம் தீர்க்கும் மருந்து மூலிகைகள் - உனைத்  தொட்டுக் கண்ணிலே ஒற்றித் தோயும் அலைகள்!"  "தென்னைமர உச்சியிலே திங்கள் தடவும் - கடல்  திசைகளெல்லாம் மணிகளை அள்ளி எறியும் வெள்ளை மணல் துறைகளை அலைகள் மெழுகும் - எங்கள் உள்ளம் அதிலே பளிங்கு மண்டபம் காணும்!" வித்துவான் எஸ் அடைக்கலமுத்து நெடுந்தீவை வர்ணித்தவாறு, நீலப் பச்சை வண்ணம் கொண்ட இரத்தினக் கல் போன்ற  நீர் இலங்கையின் கரையை முத்தமிடும் இந்தியப் பெருங்கடலின் மையத்தில், இலங்கையின் நெடுந்தீவு என்று அழைக்கப்படும் டெல்ஃப்ட் தீவு உள்ளது. இங்கே, கடல் மற்றும் கரடுமுரடான நிலப் பரப்புகளின் காலத்தால் அழியாத அழகுக்கு மத்தியில், நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் இளம் கணித ஆசிரியராக, கூர்மையான பார்வை, முறுக்கு மீசை, வாட்டசாட்டமான உடல்வாகு, வெளிப்படையான பேச்சு என கிராமத்து மனிதர்களின் அத்தனை சாயல்களையும் ஒருங்கே பெற்ற வெண்மதியன் கடமையாற்றிக் கொண்டு இருந்தான். இவர் நெடுந்தீவையே பிறப்பிடமாகவும் கொண்டவர் ஆவார்.  அதுமட்டும் அல்ல, கடல் வாழ்வுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட வரும் ஆவார். அதனால் தனக்கென ஒரு ஓடம் கூட வைத்திருந்தான். போர் சூழலால் வடமாகாணம் அல்லல்பட்டுக் கொண்டு இருந்த தருணம் அது. மகா வித்தியாலயத்தில் ஓர் சில முக்கிய பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்கள் தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள குறிக்கடுவான் ஜெட்டியில் இருந்து தான் வந்து போனார்கள். என்றாலும் படகு சேவை, பல காரணங்களால் ஒழுங்காக இருப்பதில்லை. தான் படித்த பாடசாலை இதனால் படிப்பில் பின்வாங்கக் கூடாது என்ற நல்ல எண்ணத்துடன் தன் ஓடத்திலேயே, வசதிகளை அமைத்து காலையும் மாலையும் இலவச சேவையை, தேவையான நேரங்களில் மட்டும், அவர்களுக்காக, பாடசாலைக்காக தனது ஆசிரியர் தொழிலுடன், இதையும் செய்யத் தொடங்கினான். இதனால் வெண்மதியனை 'ஓடக்கார ஆசிரியர்' என்று கூட சிலவேளை சிலர் அழைப்பார்கள். விஞ்ஞானம் கற்பிப்பதில் ஆர்வம் கொண்ட உற்சாகமான இளம் பெண் எழிற்குழலி, தனது பட்டப் படிப்பை முடித்து, முதல் முதல் ஆசிரியர் தொழிலை யாழ் / நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் பதவியேற் பதற்காக, அன்று குறிக்கடுவான் படகுத்துறைக்கு, மிகவும் நேர்த்தியாக சேலை உடுத்திக் கொண்டு வந்தார். உடையே ஒரு மொழி. அது ஒரு காலாசாரம் மட்டுமல்லாது சமூக உருவாக்கமுமாகும். உடை உடுத்துபரை மட்டுமின்றி பார்ப்பவரின் புரிதல்களையும் பாதிக்க வல்லது. அது மனிதர்களிடையே வேறுபாடுகளை ஏற்படுத்தவும் செய்கிறது. மனிதன் உடுத்தும் உடை அவன் மீது அவனுடன் உறவாடும் மற்ற மனிதர்களின் உள்மனத் தீர்ப்புகளைத் தீர்மானிக்கிறது என்பது கட்டாயம் அவளுக்கு தெரிந்து இருக்கும். அதனால்த் தான், தன் வேலைக்கான முதல்  பயணத்தில், தன்னை இயன்றவரை அழகாக வைத்திருக்க முயன்றால் போலும்!  அன்று வழமையான படகு சேவை சில காரணங்களால் நடை பெறவில்லை. என்றாலும் பாடசாலை ஏற்கனவே அவளுக்கு, தங்கள் பாடசாலை கணித ஆசிரியர், இப்படியான சந்தர்ப்பங்களில், தனது ஓடம் மூலம் உங்களுக்கு பயண ஒழுங்கு செய்வாரென அறிவுறுத்தப் பட்டு இருந்ததால், அவள் கவலையடையவில்லை.  அன்று வழமையாக வரும் மூன்று ஆசிரியர்கள் கூட வரவில்லை. அவள் அந்த கணித ஆசிரியர் ஒரு முதிர்ந்த அல்லது நடுத்தர ஆசிரியராக இருக்கலாம் என்று முடிவுகட்டி, அங்கு அப்படியான யாரும் ஓடத்துடன் நிற்கிறார்களா என தன் பார்வைக்கு எட்டிய தூரம் வரை பார்த்தாள். அவள் கண்ணுக்கு அப்படி யாரும் தெரியவில்லை. அந்த நேரம் ஜெட்டிக்கு ஒரு இளம் வாலிபன் ஓடத்தை செலுத்திக் கொண்டு வந்து, அவளுக்கு அண்மையில் அதை கரையில் உள்ள ஒரு கட்டைத்தூணுடன் [bollard] கட்டி நிறுத்தினான்.  எழிற்குழலி, இது ஒருவேளை கணித ஆசிரியாரோவென, தனது அழகிய புருவங்களை உயர்த்தி, ஒரு ஆராச்சி பார்வை பார்த்துக் கொண்டு இருந்தாள். வெண்மதியன் ஒரு சிறிய புன்னகையுடன், எந்த தயக்கமும் இன்றி, அவள் அருகில் வந்து, நீங்கள் விஞ்ஞான ஆசிரியை எழிற்குழலி தானே என்று கேட்டான். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றியது நம் தமிழ் மட்டும் அல்ல, காதல் உணர்வுகளும் தான் என்பதை அவர்கள் இருவரும் அந்த தருணம் உணரவில்லை. அவளுக்கு இது முதல் உத்தியோகம், தான் திறமையாக படிப்பித்து பெயர், புகழ் வாங்க வேண்டும் என்பதிலேயே மூழ்கி இருந்தாள். அவனோ எந்த நேரம், என்ன நடக்கும் என்ற பரபரப்பில், கெதியாக பாதுகாப்பான நெடுந்தீவு போய்விட வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தான்.  அவர்கள் இருவரும் ஓடத்தில் ஏறினார்கள், வெண்மதியன், எழிற்குழலியை பாதுகாப்பாக இருத்தி விட்டு ஓடத்தை ஜெட்டியில் இருந்து நகர்த்தினான். இது ஒரு சாதாரண பயணம் அல்ல, இருவரின் வாழ்க்கையை என்றென்றும் மாற்றும் ஒரு பயணத்தைத் ஓடத்தில் தொடங்குகிறார்கள் என்பதை அவர்கள் கண்கள், ஒருவரை ஒருவராவர் மௌனத்தில் மேய்ந்து கொண்டு இருந்தது, உண்மையில் சற்று உறக்கச் அவர்களின் இதயத்துக்கு சொல்லிக்கொண்டு இருந்தது. ஆனால் அவர்கள் இருவரும், அதை கவனிக்கும் கேட்கும் நிலையில் இருக்கவில்லை.   “நிலவைப் பிடித்துச் சிறுகறைகள் துடைத்துக் - குறு முறுவல் பதித்த முகம், நினைவைப் பதித்து - மன அலைகள் நிறைத்துச் - சிறு நளினம் தெளித்த விழி .” இந்த அழகுதான் அவனையும் கொஞ்சம் தடுமாற வைத்துக் கொண்டு இருந்தது. அவர்கள் இருவரும், தம்மை சுற்றிய சூழல் மறந்து, ஒவ்வொருவரின் இரண்டு விழிகளும் மௌனமாக பேசின. எத்தனை முறை பார்த்தாலும் விழிகளுக்கு ஏன் தாகம் தணிவதில்லை?  ஆர்பாரிக்கும் பேரலை ஒருபக்கம், அந்த இரைச்சலுக் குள்ளும் அவர்கள் தங்களை தங்களை அறிமுகம் செய்தார்கள். அனுமதியின்றி சிறுக சிறுக சிதறின இருவரினதும் உறுதியான உள்ளம். அவர்களின் உள்ளுணர்வு மிகவும் வித்தியாசமாய் இன்று இருந்தது. அவளின் கண்ணசைவுக்கு பதில் கூறிக் கொண்டிருந்த வெண்மதியன், ஏனோ அவளின் உதட்டசைவிற்கு செவிசாய்க்க முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தான். “ஹலோ” என்று மீண்டும் அவளின் குரல் கேட்க, தன் எண்ணங்களை சட்டென்று விண்ணிலிருந்து கடலிற்கு கொண்டு வந்தான்! " இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு ?", பொதுவாக ஒரு பயணம் 45 நிமிடம் எடுக்கும். இன்று சற்று கூட எடுத்து விட்டது. 15 நிமிடம் என்றான். அதன் பின்பு அவர்கள் இருவரும் மௌனமாக நெடுந்தீவு அடைந்தனர். என்றாலும் அவர்களின் எண்ணங்கள் அவர்களின் ஓடத்தை உலுக்கிய மென்மையான அலைகளைப் போல பின்னிப் பிணைந்தன. அவர்கள் அன்றில் இருந்து ஓடத்தில் பயணம் செய்த போது எல்லாம், எழிற்குழலியும் வெண்மதியனும் ஒன்றாக எதிர்காலத்தை உருவாக்குவதற்கான கனவுகளைப் பகிர்ந்து கொண்டனர். அவர்களின் உரையாடல்கள் சிரிப்பாலும், அபிலாஷைகளாலும் நிரம்பியிருந்தன, அவர்களின் இதயங்கள் கடலின் தாளத்துடன் ஒத்திசைந்து துடித்தன. என்றாலும் இன்னும் அவர்கள் வெளிப்படையாகத் தங்கள் ஆசைகளை ஒருவருக் கொருவர் சொல்ல வில்லை. எது எப்படியாகினும் அவர்களின் சொல்லாத காதலுக்கு ஓடமே சாட்சியாக இருந்தது? அவர்கள் இருவரும் ஒருவருக் கொருவர் தெரியாமல் ஓடத்துக்கு நன்றி தெரிவித்தனர்.  ஓடம் ஒவ்வொரு முறையும், இந்தியப் பெருங்கடலில் ஒரு ரத்தினமாக விவரிக்கப் படும் நெடுந்தீவுக்கு போகும் பொழுது அல்லது அங்கிருந்து திரும்பும் பொழுது, அதன் அழகு அலைகளுக்கு மத்தியில் மின்னும் விலைமதிப் பற்ற கல்லின் அழகு போல அவர்களுக்கு இப்ப இருந்தது. ஓடத்தில் இருந்து, நெடுந்தீவின் கரடு முரடான நிலப்பரப்புகள், காற்று வீசும் சமவெளிகள், நெடுந்தீவுக்கே உரித்தான கட்டைக் குதிரைகள் மற்றும் பெருக்கு மரம் எனப்படும் பாவோபாப் மரம் போன்றவற்றை, பயணித்துக் கொண்டு, அவை மறையும் மட்டும் அல்லது தெரியும் மட்டும் பார்ப்பதில் இருவரும் மகிழ்வு அடைந்தனர். அப்படியான தருணங்களில் இருவரின் நெருக்கமும் எந்த அச்சமும் வெட்கமும் இன்றித், இருவருக்கும் இடையில் உள்ள இடைவெளியை குறைத்துக் கொண்டு வந்தன. "ஓடத்தான் வந்தான் அன்று-விழி ஓரத்தால் பார்த்தான் நின்று சூடத்தான் பூவைத் தந்தான்-பூவை வாடத்தான் நோவைத் தந்தான்!" 'ஓடத்தைக் கைகள் தள்ளும்-கயல் ஓடிப்போய் நீரில் துள்ளும் நாடத்தாம் கண்கள் துள்ளும்-பெண்மை நாணத்தால் பின்னே தள்ளும்!" "வேகத்தால் ஓடஞ் செல்லும்-புனல் வேகத்தைப் பாய்ந்தே வெல்லும் வேகத்தான் வைத்தான் நெஞ்சம்-அந்த வீரத்தான் வரவோ பஞ்சம்!" கவியரசர் முடியரசனின் கவிதை அவளுக்கு ஞாபகம் அடிக்கடி வந்து, தன் வாய்க்குள் மெல்ல மெல்ல முணுமுணுப்பாள். ஒருமுறை எழிற்குழலி, தன் மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்பு எடுக்க வேண்டி இருந்தது. மற்ற மூன்று ஆசிரியர்களும் வழமையான படகு சேவையில் திரும்பி விட்டனர். மறையும் சூரியனின் தங்க நிறங்கள் ஓடத்தின் நிழலை கடல் அலையில் பிரதிபலிக்க, எழிற்குழலியும் வெண்மதியனும் ஓடத்தில் கைகோர்த்து அமர்ந்து இருந்தனர். ஓடத்தில் மோதிய அலைகளின் சத்தம் அவர்களின் அந்தரங்க தருணத்திற்கு ஒரு இனிமையான பின்னணியை வழங்கியது. எழிற்குழலி, வெண்மதியன் மார்பில் சாய்ந்தாள், அவனின் கையை வருடி முத்தமிட்டாள். அவளுடைய கண்கள் வானத்தின் எண்ணற்ற வண்ணங்களைப் பிரதிபலித்தன. "இந்த இடம் முற்றிலும் மூச்சடைக்கக் கூடியது அல்லவா?" அவள் முணுமுணுத்தாள், அவள் குரல் ஒரு கிசுகிசுவுக்கு மேல் தாண்டவில்லை. வெண்மதியன் ஓடத்தை கவனமாக பார்த்து செலுத்திக் கொண்டு, மெல்ல தலையசைத்தான், அவனது பார்வை அவளது கதிரியக்க புன்னகையில் கூடிக் குலாவியது. "இந்த தருணத்தின் அழகை ரசிக்க,  காலமே ஓடாமல் நின்று விட்டது போல் இருக்கிறது" என்று அவன் பதிலளித்தான், அவனது குரலில் ஒரு மயக்கம் நிறைந்து இருந்தது.  அவர்களின் விரல்கள் பின்னிப் பிணைந்தன, அவர்கள் நீலக்கடலின் அழகில் உலாவினர். என்றாலும் அவ்வப் போது அடிவானத்தில் சூரியன் கீழே இறங்குவதைப் பார்த்தார்கள். ஒவ்வொரு நொடியும், அவர்களின் இதயங்கள் ஒருமனதாக துடித்தன, ஒவ்வொரு கணத்திலும் அவர்களின் இணைப்பு மேலும் மேலும் வலுவடைந்தது. ஒரு வார இறுதியில், இருவரும் நெடுந்தீவில் சந்தித்தனர். அங்கே அவர்கள் ஒரு ஒதுக்குப்புற இடத்தை அடைந்ததும், வெண்மதியன் எழிற்குழலியைத் தன் கைகளுக்குள் இழுத்துக் கொண்டான், கடலின் மென்மையான தாளத்தை ரசித்தபடி, அவர்கள் ஒரு மென்மையான இதழுடன் இதழ் முத்தத்தைப் முதல் முதல் பகிர்ந்து கொண்டனர், அதன் பின், நட்சத்திரங்கள் நிரம்பிய வானத்தின் விதானத்தின் [கூரையின்] கீழ், எழிற்குழலியும் வெண்மதியனும், யாழ்பாணத்தை நோக்கி அமைதியான நீரில், நிலவொளியில் ஓடத்தில் பயணம் செய்தனர். இருள் சூழ்ந்திருந்த பரந்து விரிந்திருந்த நிலவின் மென் பிரகாசம், அவர்களின் முகங்களில் ஒளி வீசியது. ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டு, அருகருகே அமர்ந்து, தண்ணீரில் உள்ள நிலவின் மின்னும் பிரதிபலிப்பைப் பார்த்தபடி விரல்கள் பின்னிப் பிணைந்தன. அவர்களுக்கிடையேயான அமைதி, அவர்களின் காதல், சொல்லப்படாத மொழியால் நிரம்பியிருந்தது. "என் வாழ்க்கையில் உன்னைப் பெற்றதற்கு நான் எவ்வளவு உண்மையிலேயே பாக்கியவான் என்பதை இது போன்ற தருணங்கள் எனக்கு உணர்த்துகின்றன," என்று வெண்மதியன் கிசுகிசுத்தான், அவனது குரல் அலைகளின் மென்மையான தாளத்திற்கு மேலே கேட்கவில்லை. எழிற்குழலி தன் தலையை அவன் தோளில் சாய்த்துக் கொண்டாள், அவள் இதயம் உணர்ச்சியால் பொங்கி வழிந்தது. "மற்றும் நான், நீ," அவள் பதிலளித்தாள், அவளுடைய குரல் நேர்மையுடன் மென்மையாக இருந்தது. "இரவின் அழகால் சூழப்பட்ட உங்களுடன் இங்கே இருப்பது ஒரு கனவா? நனவா ?." என்றாள்.  அவர்களின் ஓடம் அலைகளின் குறுக்கே சிரமமின்றி சென்றது, இரவின் இதயத்திற்கு அது அவர்களை மேலும் கொண்டு சென்றது. கடந்து செல்லும் ஒவ்வொரு தருணத்திலும், அவர்களின் காதல் ஆழமடைந்தது, நேரத்தையும் இடத்தையும் தாண்டிய ஒரு பிணைப்பில் அவர்களை ஒன்றாக 'ஓடம்' இணைந்தது!  நன்றி  [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
    • 15/2/24  மூன்று பேர் வைத்தியசாலைக்கு போய் தாமதமானதால் கடையில் வடை மூன்று தேநீர் ஒன்று வாங்கினோம், எண்ணூற்று பத்து ரூபா எடுத்து விட்டு மிகுதி காசைத்தந்தார் ஒரு கடைக்காரர். ஒருவேளை அவர்  கணக்க்கில மட்டோ அல்லது  என்னைப்பார்த்து பரிதாபப்பட்டு தர்மம் இட்டாரோ தெரியவில்லை! இதுக்கு யாரும் நீதிமன்றம் செல்ல எத்தனிக்கக் கூடாது.
    • சென்ரல் கொமாண்டின் மறுப்பு.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.